தமிழை வாழ வைத்தவர்களை அழித்த பின் மறைக்க நடத்தப்படும் செம்மொழி மாநாட்டு படங்கள்...

என் மகனுக்கு தூயத் தமிழ் பெயர் வைக்க பெயர் புத்தகங்களை புரட்டினேன் தமிழ்பெயர் என்ற பெயரில் ஆகாஷ்ம், ரமேஷும், சுரேஷும் கொட்டிக்கிடந்தது அந்த புத்தகமெங்கும் ஆனால் அட்டையில் சொன்னது அழகிய தமிழ் பெயர்கள் என்று. இணையமெங்கும் தேடினேன், இங்கும் இதே கதைதான்... இந்நிலையில் நிதித்துறை.காம் என்றொரு வலைத்தளம் தேடலில் சிக்கியது பல்லாயிரக்கணக்கான தனித் தமிழ் பெயர்கள் ஆண், பெண் குழந்தைகளுக்கென தொகுத்து வைக்கப்பட்டிருந்தது... டியூப்லைட் முழுக்க உபயம் பெயர் எழுதும் கடைசியாக சிறிய அளவில் குறிக்கப்பட்டிருந்தது அவர்களின் நிதி நிர்வாக தளமென்று.... தமிழ் பல்கலைகழகங்கள் இதை செய்யவில்லை, தமிழ் தமிழ் என சொல்லி இன்னும் பல யுகங்களுக்கு சொத்தும் அதிகாரமும் சேர்த்த ஈனத்தலைவர்களும் அவர்களின் அடிவருடிகளும் செய்யவில்லை இதை... ஆனால் அவர்கள் செய்திருந்தார்கள் அந்த 5 வருடங்களில்... அவர்களைப்போலவே தற்போது அந்த தளமும் இயங்கவில்லை, அதை படி(காப்பி) எடுத்தும் வைக்கவில்லை.. யாரேனும் படி எடுத்து வைத்திருந்தால் மீண்டும் இணையத்தில் ஏற்றி வையுங்கள்... உங்களுக்கு புண்ணியமாக போகும்.

இடையறாத போராட்டத்தில் இழந்து போன இலக்கண இலக்கியங்களை முறைப்படி கற்காமல் விட்டுப்போன தமிழ் இலக்கண இலக்கியங்களை தாய் தமிழகத்திலிருந்து புலமைபெற்ற ஆசிரியர்களை தருவித்து கற்றுக்கொண்டனர் அந்த ஐந்த ஆண்டுகளில்... அவர்கள் வீழ்ந்த பின் வெகு சன ஊடகங்களில் பெயர்பலகையெங்கும், அரசு எங்கும் அதிகாரமெங்கும், பள்ளியெங்கும் அந்த தரணியெங்கும் அவர்கள் தனித்தமிழ் வளர்த்திருந்த செய்தி வெளியானபோது வீழ்ந்தது அவர்கள் மட்டுமல்ல தமிழும் சேர்ந்தே வீழ்ந்தது என்று புரிந்தது... அந்த மாநிலம் முழுக்க தமிழ் வளர்த்த அவர்கள் எங்கே... சன் , ரெட்ஜெயண்ட்ஸ் மூவிஸ், நைன் க்ளவுட்ஸ் கிரியேஷன்ஸ் என்று தமிழ் தாத்தாவின் பேரன்ஸ்கள் தமிழ் வளர்க்க செம்மொழி மாநாடு நடத்தும் இவர்கள் எங்கே...

அவர்கள் ஆண்ட போது அந்த மண்ணில் கசிப்பு(சாராயம்) இல்லையாம், ஆனால் இங்கோ டாஸ்மார்க் சாராயத்துக்கு செம்மொழி மாநாட்டின் 5 நாளில் மூன்று மாத விற்பனையை பெற வேண்டுமாம் சேல்ஸ் டார்கெட் வைக்கிறார்கள்...

அன்று யாழிலே நடந்த உலகத்தமிழ் மாநாடு, அதை சீர்குலைக்க சிங்கள அரசும் தமிழ் துரோக கைக்கூலிகளும் முயற்சிகள் எடுத்த போதும் மாநாட்டில் வரிசையாக வந்து "தள்ளாடாமல்" எந்த தள்ளுமுள்ளும் இல்லாமல் கலந்து கொண்டார்கள்... இன்றும் செம்மொழி மாநாட்டில் கோவை மாநகரமே டாஸ்மார்க்கின் சேல்சினால் தள்ளாடுகிறதாம்...


வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டுமென்று சொல்லி சொல்லியே வீழ்த்திட்டானுங்களேயா தமிழையும் தமிழனையும்...














தமிழையும் தமிழரையும் வாழவைத்த அந்த தரணியெங்கும் சிங்களமும் அவன் சிதைக்கும் தமிழும் தட்டியிலிருக்க... தமிழையும் வாழவைக்காமல் தமிழரையும் வாழவைக்காமல் எம்மொழியே செம்மொழியே என்று ஏனடா தட்டி வைக்கிறீர்கள்..






















இல்லாத தெய்வங்களுக்கு இங்கே வரிசையாக காவல்காக்கும் சிலைகள், ஆனால் அங்கேயோ உயிர்கொடையளித்த காவல்தெய்வங்கள் துயிலுமிடமே சிதைக்கப்பட்டு கொள்ளை போகிறது...



வரிசை வரிசையாய் உங்கள் வண்டிகள் புத்தம் புதுசாய்... மாநாட்டுக்கா? மாநாட்டின் அலங்கரிக்கப்பட்ட நாடக மேடையை காணவா? அதோ அவர்களின் சொந்த வண்டிகள் மண்மூடி சிதைந்து கிடக்க அதன் உரிமையாளர்கள் பிச்சைக்காரர்களாய் முகாம்களில்














நம் பிள்ளைகள் இங்கே கும்மியடிக்க செத்துபோன இந்த பிள்ளைகளுக்கு இந்நேரம் தெவசமே கொடுத்திருப்பார்கள்

வாழிய செம்மொழி... வாழ்க செம்மொழி காவலர்கள்

ரத்தத்தை கழுவுகிறான் நரிச்சிரிப்புடன்

வெறுப்பாய் இருக்குது தமிழே!
நெருப்பாய் இல்லாத தமிழனால்!
உன் மீதே 
வெறுப்பாய் இருக்குது தமிழே!

ஆரிய அடக்குமுறைக்கு எதிரான
ஆயுதமாய் இருந்தாயே! தமிழே 

சமத்துவம், சமதர்மம் என கொள்கைகளை
பறக்கவிட்ட சமணமுனிகளின் சாம்ராஜ்யத்தை 
சரித்த ஆயுதமாய் இருந்தாயே! தமிழே

பார்ப்பன பரவலுக்கு எதிரானவர்களின்
ஆயுதமாய் இருந்தாயே! தமிழே 

சிங்கள வெறியர்களின் உச்சந்தலையில் ஓங்கியடித்தவர்களின்
ஆயுதமாய் இருந்தாயே! தமிழே 

வரலாறு எங்கும் கொட்டிக்கிடக்கிறதே
நீ யாருடைய ஆயுதமென்று

ஆரிய அதிகாரத்துக்கெதிரான
சமணர்கள் ஆயுதம் தமிழ்

சமணமுனிகளின் கொடூரத்திற்க்கெதிரான
பக்தியக்கத்தின் ஆயுதம் தமிழ்

பார்ப்பன அதிகாரத்துக்கெதிரான
ஒடுக்கப்பட்டோரின் ஆயுதம் தமிழ்

இந்திவெறியர்களின் ஆதிக்கபரவலுக்கெதிரான
தமிழர்களின் ஆயுதம் தமிழ்

சிங்களவெறியர்களின் கொடூரத்துக்கெதிரான
ஈழத்தமிழர்களின் ஆயுதம் தமிழ்

வரலாறு எங்கும் கொட்டிக்கிடக்கிறதே
நீ யாருடைய ஆயுதமென்று

ஆனால் இன்றோ
துரோகிகள் சொல்கிறார்கள் தமிழே
நீ அவர்கள் கையிலாம்...

உன் மகன்கள் அங்கே 
அம்மணமாக்கப்பட்டு 
தலையில் சுடப்படுகிறார்கள்

உன் மகள்கள் அங்கே 
அம்மணமாக்கப்பட்டு 
இடையில் சுடப்படுகிறார்கள்

உன் மகன்கள் கருமாதியில்
உன் மருமகள்கள் தாலியறுக்க
உனக்கோ இங்கே துரோகிகள்
நடத்துகிறார்களாம்
அறுபதாம் கல்யாணம்

அதிகாரத்துக்கு அருகில்
இடம்பிடிக்க 
ஓடுகின்றதொரு கூட்டம்

புறங்கைய நக்குவதில் 
பங்கேதேனும் கிடைக்குமாயென
எச்சிலொழுக பார்க்கிறதொரு கூட்டம்

ஆனால் வெறும் பிரியாணி
துண்டுக்கே 
குலைக்கிறதொரு கூட்டம்

அந்த பிரியாணியில்
கிடக்கும் கால்களை
மெதுவாக கடியுங்கள்
அது எம் தமிழனின் கால்கள்

அந்த பிரியாணியில்
கிடக்கும் நெஞ்செலும்பை
மெதுவாக பிய்யுங்கள்
அது எம் தமிழனின் நெஞ்செலும்பு

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே 
நம்பிக்கைதுரோகி 
தம் கையிலிருக்கும் தமிழனின்
ரத்தத்தை கழுவுகிறான்
நரிச்சிரிப்புடன்

--------------------
ஏதோ ஒரு பதிவிலே படித்தேன்... கீழ்கண்ட வரிகளை
நெஞ்சை உலுக்கிய உண்மை அது

ஈழத்தில் கொல்லப்பட்ட 
தமிழர்களின் கல்லறைகளில் 
எழுதுங்கள்
இவர்கள் தாய்மொழி தமிழென்பதால் 
கொல்லப்பட்டவர்கள் என்று

தமிழனின் மானம் காத்த ராவணன் திரைப்படத்தை ஆதரிப்போம்


ராவணன் ஆம்... இந்த ஒரு படம் தோற்றுக்கொண்டிருக்கும் தமிழனின் மிக மிக சிறிய வெற்றிக்கு காரணம், இரத்தவெறி இந்திய அரசு வாங்கிக்கொடுத்து சிங்கள இனவெறி அரசு கொழும்பில் நடத்திய இந்திய ஆஸ்கார் எனப்படும் IIFA வின் விருது வழங்கும் விழா சொதப்பியது, ராவணன் படம் மட்டும் தயாரிப்பில் இல்லையென்றால் மீண்டும் ஒரு முறை தமிழன் தோற்கடிக்கப்பட்டிருக்கும்.

இந்திய சூப்பர்ஸ்டார் அமித்தாப்பச்சனின் மகன் மற்றும் மருமகள் நடித்தப் படம், தமிழகத்தில் அமிதாப்பின் மருமகள் ஐஸ்வர்யாராய் படம் பிரச்சினைக்குள்ளாகக்கூடாது என்பது மட்டுமின்றி இனி தமிழ்திரையுலகத்தின் கதவு ஐஸ்வர்யாராய்க்கு அடைபட்டுவிட்டு விடக்கூடாது என்பதாலும் அமிதாப்,அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராய் கொழும்பில் நடைபெற்ற இஃபாவை புறக்கணிக்க அதன் தொடர்சியாக இஃபா விழா சொதப்பலானது...

இந்த வணிக பயம், தமிழர்கள் விரும்பாத எதையும் செய்ய முற்பட்டால் பொருளாதார இழப்பு ஏற்படும் என்ற வணிக பயம் ஏற்படுத்தப்பட வேண்டும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களுக்கும் இதை ஏற்படுத்த வேண்டும்...

இதைப்போலவே தமிழனின் நலனுக்கு எதிராக செயல்பட்டு துரோகமிழைக்கும் இனத்துரோகி அரசியல்வாதிகளுக்கும் அதிகார இழப்பு என்ற பயம் ஏற்படுத்தப்படவேண்டும், அதற்க்கு தடைகல்லாக இருக்கும் துரோக தலைமை, அதற்க்கு சப்பை கட்டுகட்டும் துரோகி தொண்டர்களையெல்லாம் அம்பலப்படுத்த வேண்டும்.

அதே சமயம் பிரியாணிக்காகவும் குவார்ட்டரையும் சில்லறை காசுகளையும் வாங்கிக்கொண்டு தமிழினத்துரோகி கருணாநிதி போன்றவர்களுக்கு ஓட்டு போடும் காசுக்காக தமிழினனின் ஓட்டை விற்க்கும் சில பல நவீன விபச்சார வாக்காளர்களும், இனத்துரோகத்தை மறைத்து குவார்ட்டர் பிரியாணியை ஏற்பாடு செய்து தந்து விபச்சார புரோக்கர்களாக செயல்படும் துரோக அரசியல்கட்சிகளின் தொண்டர்களும் இதை உணரும் நாளில் தமிழன் மீண்டும் தலை நிமிருவான்

மாபலி விருந்து அழைப்பு! - இனத்துரோகியின் செம்மொழி மாநாடு

மாபலி விருந்து அழைப்பு! - மாலதி மைத்ரி கவிதை

ன்றோரே சான்றோரே
பேரரறிஞர்களே மூதறிஞர்களே
கவிஞர்களே கலைஞர்களே
அரசு ஊழியர்களே
என் உயிரினும் உயிரான தமிழர்களே
நாம் சுவாசித்தது ஒரே காற்று
நாம் பேசியது ஒரே மொழி
நாம் நடத்தியது ஒரே பேரம்
நாம் விதித்தது ஒரே விலை
நாம் விற்றது ஒரே இனம்
காட்டிக்கொடுக்க நீண்டதும்
நம் ஒரே விரல்
நாம் செய்ததும் ஒரே துரோகம்
இம்மாபெரும் வரலாற்றை
நாம் சாதித்த ஓராண்டின் நிறைவைக்
கொண்டாடும்
விருந்துக்கு அழைக்கிறேன்
உலகே தமிழ் மண்ணில் திரளட்டும்
விரோதி வருடம்
சித்திரை ஐந்தாம் நாள்
வங்கக் கடல் தீவில்
சிங்கப் படைகள்
சில லட்சம் மக்களைக் கொன்றொழித்து
சீர்மிகு வரலாறு படைத்த
மாபலி நாளின்
மாண்பினைப் போற்றும் வகையில்
இச்சித்திரை மாதம்
பௌர்ணமி தினத்தில்
மனிதகுலமே கண்டிராத வகையில்
மாபெரும் விருந்து நடக்கிறது
அனைவரும் கலந்துகொண்டு
விருந்தினைச் சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்
அறுக்கப்பட்ட மென்முலைகள்போன்ற
இட்லியுடன் பிள்ளைக்கறி பிசைந்த
செவ்வரிசிச் சோறு
மதுவருந்தும் கவிஞர்களுக்கு மட்டும்
நுரை பொங்கும் செங்குருதியுடன்
மூளை வறுவல் வழங்கப்படும்
இதிலுள்ளவை தவிர்த்து
சிறப்புணவு தேவையெனில்
மூன்று தினங்களுக்கு முன்
எங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்தால்
தீவிலிருந்து
தனி விமானத்தில்
தருவித்துத் தர ஏதுவாக இருக்கும்
உலகச் சமூகமே வியந்து நிற்க
உலகத் தமிழர்கள் ஒன்றாய் நின்று
இப்பலி விருந்தைச் சிறப்பிக்கும்படி
கேட்டுக்கொள்கிறேன்.

இவ்விருந்தை வழங்குபவர்கள்

ஹைடு அண்ட் சீக் வேர்ல்டு விஷன்
ஹனி டியூ அண்ட் ஸ்பிரிங் பிரிவரிஸ்,
ஆன்ட்டி வார் அண்ட் பீஸ் ஹன்டர்ஸ்,
வேர்ல்டு நைட்ரோ கெமிக்கல்ஸ்,
இன்டர்நேஷனல் வார் கிரிமினல்ஸ் அசோஸியேஷன்.

குறிப்பு: தவிர்க்க இயலாத காரணத்தால் ஆங்கிலத்திலேயே அயல் நாட்டு நிறுவனங்களின் பெயர்கள் அச்சிடப்பட்டு உள்ளன. இதைப் பிழையாகக் கருதி தமிழ்ப் பற்றாளர்கள் விருந்துக்கு வராமல் இருந்துவிடக் கூடாது. இது எங்கள் அன்புக் கட்டளை!

நன்றி
ஆனந்தவிகடன்

எம் இனத்தை கொன்றவர்களுக்கு உதவியாகவும் அவர்களின் நாற்காலிக்கு வலிமையூட்டியும் இருந்த இனத்துரோகி தன் மேலிருக்கும் நம் இனத்தின் இரத்தத்தை கழுவ எடுக்கும் இந்த செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கிறேன்...

ஓணாண்டி புலவர்கள் துரோகியை வாழ்த்திப்பாடட்டும், என்ன செய்ய அவர்களுக்கும் பிழைப்பு என்று ஒன்றுள்ளதே...

பதிவுலகில் வினவு என்கிற அரசியல் ரவுடிகளை நாட்டாமை செய்ய அனுமதிக்காதீர்கள்

எக்காரணம் கொண்டும் சந்தனமுல்லைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக எழுப்பப்படும் குரல்களை எக்காரணம் கொண்டும் பலவீனப்படுத்தவோ அல்லது மையப்பிரச்சினையிலிருந்து வேறுபகுதிக்கு பிரச்சினை திரும்ப கூடாது என்றுமே வினவுவின் சில செயல்பாடுகள் குறித்து எமக்கு கருத்துவேற்றுமை இருந்தாலும் பொறுமை காத்து அடுத்தவாரத்திற்க்கு அதைப்பற்றி விவாதிக்கலாம் என தள்ளிவைத்திருந்தேன்.

சந்தனமுல்லைக்கு நீதி வழங்குகின்றோம் பேர்வழி என்று வினவு நாட்டாமைகள் சொம்பை தூக்கிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பதிவுலகை ஆக்கிரமிக்க முயற்சித்து பதிவுலகை தம் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயல்கின்றார்களோ என்கிற சந்தேகம் உண்டு...

இங்கே வலையுலகில் மிகதைரியமாக கருணாநிதியையும், ஜெயலலிதாவையும், ராமதாஸையும், திருமாவையும் இன்னபிறரையும் கடுமையாக விமர்சிக்க இயலுகிறது என்றால் விமர்சிப்பவர்கள் வீராதி வீரர்கள், புரட்சிகர சூரர்கள் என்று பொருள் அல்ல, இவர்களெல்லாம் நம் பக்கம் பார்வையை திருப்பவில்லை அல்லது கண்டுகொள்ளவில்லை என்று பொருள். அமைச்சர் ஆ.ராசாவும் வலைப்பதிவு வைத்திருக்கிறார், எஸ்.வீ.சேகரும் வலைப்பதிவு வைத்திருக்கிறார், அதற்காக அவர்கள் நம்மை போன்ற பதிவர்கள் ஆகிவிடுவார்களா? ரேடான் டிவியும் தான் வலைப்பதிவு வைத்திருக்கிறார்கள்... இவர்கள் எல்லாம் அரசியல்வாதிகள், தொழில்காரர்கள் தங்கள் வலைப்பதிவுகளில் தங்கள் அரசியலையும் தொழிலையும் வளர்க்க பயன்படுத்துகிறார்கள்.

வினவு யார்? வலைப்பதிவரா? ம.க.இ.க.வா? குழுப்பதிவா? குழுப்பதிவென்றால் அதை ஆரம்பித்தவர் யார்? ஏன் ராஜ்வனஜ்,தியாகு போன்ற முகம் காட்டிய தோழர்களாக இல்லாமல் முகம் காட்டாத அசுரன்,அரைடிக்கெட்டு இன்னும் என்னென்னமோ பெயரில் வருகிறார்கள்? வலைப்பதிவில் அரசியல் உண்டு, ஆனால் வலைப்பதிவே அரசியலுக்காக என்றில்லை...

நான் ம.க.இ.க வை விமர்சிக்கும்போது எனக்கு வந்த மிரட்டல் போன்களுக்கு நியாயம் கேட்க யாரிடம் போவது? தியாகுவிற்க்கு வந்த மிரட்டல்களுக்கு எங்கே போவது? வினவிடமா? பதிவுலகில் இன்று வெறும் மிரட்டல்களோடு நிற்கும் இந்த வினவு கும்பல் நாளை மகஇக வை விமர்சித்து எழுதுபவர்களுக்கு வேறுவிதமான தொல்லை தந்தால் என்ன செய்வது? ஒருவேளை ஒருவேளை தான் சொல்கிறேன் ம.க.இ.க வை எதிர்கொள்ளும் அளவிற்க்கு ஆற்றலுடைய கட்டப்பஞ்சாயத்து ஆட்களையோ அல்லது வினவு கும்பலையும் விட அதிகமான பலமுள்ள விடுதலைசிறுத்தைகள்,பாமக,திமுக,அதிமுக கட்சிகளின் ஆட்களையோ முடிந்தால் அழைத்துக்கொண்டு பேசப்போகலாமா?

அப்போ இப்போதிருக்கும் பதிவுலக சுதந்திரம் என்ன ஆகும்? வேண்டாம் இந்த வினவு அரசியல் ரவுடி கும்பலை நாட்டாமை செய்ய அனுமதித்தால் ஒட்டகம் கூடாரத்தில் புகுந்த கதையாகிவிடும்...

இன்னும் லீனாமணிமேகலை பற்றி வினவின் ரவுடித்தனம், சந்தனமுல்லையையும் விட மூர்க்கமாக சித்திரவதைகளை அனுபவித்த போலி பிரச்சினையின் போது கள்ள மெளனம் காத்த வினவு கும்பல், அப்போது அது தொடர்பாக ஒரு தோழரிடம் கேட்டபோது நானும் கேட்டேன் தோழர் இது பற்றி எழுதினால் உலகில்வேறு பிரச்சினையே இல்லையா என்பது மாதிரி ஆகிவிடும் அதனால் வேண்டாம் என்றார்கள் என கூறியது, மேலும் விரிவாக பலவிடயங்களை அடுத்த வாரத்திற்க்கு வைத்திருந்தேன் ஆனால் தற்போது அதையெல்லாம் எழுத நேரமின்றி பதிவு போடும் நிலை.

பிரச்சினையில் தொடர்புடையவர்கள் என்ன செய்வது என்று முடிவு செய்துகொள்ளட்டும், இல்லையென்றால் காவல்துறையை அணுகட்டும், அதைவிடுத்து கட்டப்பஞ்சாயத்துகளுக்கு அனுமதிப்பது பதிவுலகிற்க்கு பெரும் கேடு விளைவிக்கும் என்று அச்சப்படுகிறேன்...

இது தொடர்பாக இண்ஸ்டண்ட் குற்றச்சாட்டாக சாதிவெறியன், ஆணாதிக்க திமிர் என்றெல்லாம் பட்டம் கொடுக்க வேண்டாம் வேறு ஏதேனும் புதுசாக கொடுக்கவும்

பிற்சேர்க்கை
-----------
சந்தனமுல்லை அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடுவதில் பங்கு வகித்த வினவுவின் நடவடிக்கைகளை சந்தனமுல்லை விசயத்தில் நிச்சயம் நான் ஆதரிக்கிறேன்... இந்த பிரச்சினையை நான் வேறு திசையில் திருப்ப கூடாது என்பதால் இன்னும் ஒரு வாரம் காத்திருக்கிறேன்... அடுத்த வாரம் வினவு ஆணாதிக்கம் பற்றி பேச இருக்கும் தகுதிகள், லீனா மணிமேகலையிடம் மகஇக கும்பல் நடந்துகொண்ட ரவுடித்தனம், வலையுலகிலிருந்து பல்வேறு பெண்பதிவர்களை விரட்டியடித்த போலி பிரச்சினையின் போது திருட்டு மவுனம் காத்த வினவு கும்பல் பற்றியெல்லாம் விரிவாக பேசுவோம்...

பதிவர் ஜோக்ஸ் அண்ட் பஞ்ச்ஸ்

பல மர்ம முடிச்சிகளோடும் சற்றும் எதிர்பாராத திடுக்கிடும் திருப்பங்களோடும் இடைவேளை விட்டு பிறகு மீண்டும் ஓடிக்கொண்டிருக்கும் பதிவர் சண்டையின் போது சிலரின் பஸ்ஸ்ஸ், டிவிட்டர், ஜிடாக் ஸ்டேட்டஸ் மெசேஜ் கமெண்ட்டுகள் மற்றும் சில ஜோக்குகள் உங்கள் பார்வைக்கு....

நானும் ஏற்கனவே இம்மாதிரி சீரியசான சீரியல் சண்டை போட்டுள்ளதால் எனக்கும் அந்த வலிகளும் எரிச்சலும் தெரியும், ப்ளீஸ் இது சும்மா லைட்டாக்குவதற்க்கே, யாரையும் புண்படுத்த அல்ல...

1.பாலபாரதி: வஜ்ரா வண்டி, RPF, போலிஸ் கமிஷனர்கிட்டலாம் சொல்லியாச்சு ஏற்பாடெல்லாம் முடிஞ்சிருச்சி?


குழலி: எதுக்கு தல?

பாலபாரதி: எதுக்கா அட அதாங்க ஜூன் 5 பதிவர் சந்திப்புக்குதான்

2.மனைவி: வாக்கிங் போறேன் ஜாக்கிங் போறேன்னு அஞ்சாம் தேதி மட்டும் மெரீனா பக்கம் போயிறாதிங்க

கணவர் : ஏன் டியர்?

மனைவி : அங்க தான் பதிவர் சந்திப்பு நடக்கப்போவுதாம்...

3. ஜ்யோராமும் பைத்தியக்காரனும் சேர்ந்தா?
உலகப்படம்

பிரிஞ்சா ?
கலகப்படம்

4. ஏய்ய்ய்ய்ய்ய் இதுவரைக்கும் நீ பாத்தது மொழி விளையாட்டு.. இனிமே நீ பாக்கப்போறது கிழி விளையாட்டு

5. ஜூன் 5 மெரீனாவில் வலைப்பதிவர் சந்திப்பு - டாக்டர் புரூனே SMS

குழலி: டாக்டர் ஒரு சந்தேகம், வலைப்பதிவர் வினவு வருவாரா?

6. செல்லமுத்து குப்புசாமி ஜிடாக் மெசேஜ்

இன்னும் ஒரு வாரம் பதிவர் சண்டை ஓடினாலே சாதிவாரி கணக்கெடுப்பு முடிஞ்சுரும் போல

மிச்சம் மீதி ஜோக்ஸ் பஞ்ச் இருந்தா பின்னூட்டத்துல போடுங்க...