tag:blogger.com,1999:blog-11227047.post116040957527428443..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: அப்சல், தீவிரவாதம், மாறி வரும் போர் முறைகுழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-11227047.post-1160837798705579332006-10-14T22:56:00.000+08:002006-10-14T22:56:00.000+08:00குழலி அவர்களே, ஒரு சிறிய கேள்வி, கிரிகெட் போட்டியி...குழலி அவர்களே, ஒரு சிறிய கேள்வி, கிரிகெட் போட்டியில் யார் வெற்றி பெற்றால் மகிள்ச்சி அடைவிற்கள்?. பாகிஸ்தானா, இந்தியா -வா?. பல இடங்களில் நமது sagotharargal pakistan Vetri pettal pattasu koluthii magingiraalgale, athanaal thana intha kelvi ungalukku.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160564319695892582006-10-11T18:58:00.000+08:002006-10-11T18:58:00.000+08:00குழலி, காஷ்மீர் மாநிலத்திற்கு சில சிறப்பு சலுகைகள்...குழலி, காஷ்மீர் மாநிலத்திற்கு சில சிறப்பு சலுகைகள் தரப்பட்டுள்ளன.அதாவது தெரியுமா உங்களுக்கு. தேசியம் என்பது ஒடுக்குமுறையாக இருக்கக் கூடாது.தேசிய இன உரிமை என்ற<BR/>பெயரில் இன்னொரு நாடு போராட்டத்தினை தூண்டி விட்டால் அதை வரவேற்கவா முடியும்.<BR/>உங்களுக்கெல்லாம் இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிய வேண்டும் என்பதுதான் பிடிக்கும்<BR/>என்றால் அதை நேரடியாகச் சொல்ல வேண்டியதுதானே.எதற்கு இத்தனை பூசி மெழுகல்.<BR/>ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ளதே.அங்கு என்ன நிலை என்று உங்களுக்குத்<BR/>தெரியுமா. அங்கு எத்தகைய ஒடுக்குமுறை நிலவுகிறது என்பதை நீங்கள் எழுத மாட்டீர்கள்.<BR/>ஏனெனில் உங்களைப் பொருத்தவரை அது பிரச்சினையே இல்லை. இந்திய அரசினை,<BR/>இந்திய தேசியத்தினைத் தான் உங்களுக்குப் பிடிக்காது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160563643858799612006-10-11T18:47:00.000+08:002006-10-11T18:47:00.000+08:00கடைசியாக பின்னூட்டமிட்ட அனானி அவர்களுக்கு, ஆவரவர்க...கடைசியாக பின்னூட்டமிட்ட அனானி அவர்களுக்கு, ஆவரவர்களுக்கான உரிமைகளும், பங்கும் அவரவர்களுக்கு வழங்கப்படாவிட்டால் வெவ்வேறு விதத்தில் போராடத்தான் செய்வார்கள், அகிம்சை, ஒத்துழையாமை, ஆயுதம் என அந்த போராட்டங்கள் பலவகையாக இருக்கலாம்.<BR/><BR/>ஒரு இனக் குழுவின் இருப்பை மறுப்பது தான் தேசியமென்றால் ஒரு மொழிக்குழுவின் அடையாளத்தை அழிப்பது தான் தேசியமென்றால் பல்முனை பண்பாட்டை ஒரு முகப்படுத்துவது தான் தேசியமென்றால் ஒருத்தனின் உழைப்பை விழுங்கிதான் இன்னொருவன் வாழ்தல் நியாமென்றால் அந்த தேசியம் எதற்கு?குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160562495429104102006-10-11T18:28:00.000+08:002006-10-11T18:28:00.000+08:00"இன்றைய நிலையில் எல்லா இனக் குழுக்களுக்கும் அவரவர்..."இன்றைய நிலையில் எல்லா இனக் குழுக்களுக்கும் அவரவர்களுக்கான நியாயமான உரிமைகளையும் பங்கையும் கொடுத்தால் மட்டுமே நிம்மதியாக நாட்டு மக்கள் உறங்கும் நிலை, அடக்குமுறைக்கு ஆளாகும்,ஒடுக்கப்படும், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இனக்குழுக்கள் இன்றைய சூழலில் எளிதாக மற்ற மக்களின் நிம்மதியை கெடுக்கும் நிலைப்பாடு உள்ளது."<BR/><BR/>வெடிகுண்டு யார் வேண்டுமானாலும் செய்யல்லாம், யாருக்கு வேண்டுமானாலும் ஆயுதங்கள் கிடைக்கலாம் என்பதால் எந்த அரசும் யார் ஆயுதம் வைத்திருந்தாலும் அவர்களின் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்ற முடியுமா.முறையற்ற,நியாயமற்ற கோரிக்கைகளுக்காக<BR/>ஆயுதம் ஏந்திப் போராடினால் பதிலுக்கு அரசும் ஆயுதம் கொண்டுதான் அடக்கும். <BR/>காஷ்மீர் இந்தியாவை விட்டு பிரிந்து போவதில் அல்லது பாகிஸ்தான் அதை<BR/>விழுங்குவதில் அல்லது அது ஜிகாதிகளின் கட்டுப்பாட்டில் வருவதில் உங்களுக்கு அப்படி என்ன மகிழ்ச்சி. இப்போது தேசிய இனம் என்று எழுதுகிறீர்கள்.<BR/>இனி அடுத்து வன்னியர் பெரும்பான்மையாக வாழும் மாவட்ட்ங்களைச் சேர்த்து வன்னிய மாநிலம்<BR/>வேண்டும் என்று எழுதுவீர்களா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160531843962018012006-10-11T09:57:00.000+08:002006-10-11T09:57:00.000+08:00குழலி, இந்தியா போன்ற பல கலாச்சாரங்களை கொண்ட நாடு...குழலி,<BR/><BR/> இந்தியா போன்ற பல கலாச்சாரங்களை கொண்ட நாடுகள் உலகில் மிக குறைவு. அதிலும் நாடு முழுதும் மத , சாதி பிரிவினைகளை வைத்துக் கொண்டு சனநாயக ரீதியாக நடக்கும் நாடுகள் மிக குறைவு.<BR/><BR/> இன ரீதியாக இந்தியாவை பிரிக்க குரல் கொடுக்க நினைக்கும் இடத்தில் இன பிரிவோடு இந்திய பிரிவுகள் முடிகிறதென நினைக்கிறீர்களா? இனத்துக்குள் ஆயிரம் சாதி, சாதிக்குள் பிரிவுகள் என பல கூத்து உண்டு. ஒரு ஆயுத போராட்டம் விடை கொடுக்கையில் அதை முன்னுதராமாக கொண்டு மற்ற பிரிவுகள் களமிறங்காதென்பதற்கு என்ன உத்தரவாதம். அந்த நிலையில் ஆயுதமெடுத்தவனெல்லாம் புரட்சிகாரன்தான்.<BR/><BR/>இப்படி போகும் நிலையில் எனது தேசமும், எனது பக்கத்து வீட்டுகாரர் தேசமும் கழிவு நீர் எங்கே போக வேண்டுமென யுத்தம் நிகழ்த்தி கொண்டு இருக்க வேண்டியதுதான்<BR/><BR/> அகிம்சை போராட்டங்கள் எதிரிகளின் தயவிலும், ஆயுதமேந்திய போராட்டங்கள் இயல்பாக நடப்பதாகவும் கூறியுள்ளீர்கள்.<BR/><BR/>இது பட்டென ஒரு வார்த்தையில் சொன்னால் கேட்க உண்மை போல் தோன்றும்.<BR/><BR/>ஆனால் உண்மையில் பார்த்தால் ஆயுத போராட்டங்களுக்கும் அரசின் தயவும், இரக்கமும் வேண்டும். <BR/><BR/>தனி நாடு போராட்டங்கள் சீனத்தில் சில பகுதிகளில் தலையெடுத்த போது சீன அரசின் செயல்பாட்டை நீங்கள் கண்டிருப்பீர்கள்<BR/><BR/>ஈராக்கின் பெரும்பான்மை பிரிவினர் சதாமுக்கு எதிராக புரட்சியில் விழைந்த போது என்ன நடந்தது என்றும் உங்களுக்கு தெரியும்<BR/><BR/>பொது இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்களை பகடை காயாக உபயோகித்து நிகழ்த்தும் ஆயுதமேந்திய போராட்டக்காரர்களை சந்திக்க உலக அமைப்புகளை மதிக்காத விதிகளை புறத்து எறிந்த(ஆயுதம் ஏந்திய போராட்டகாரர்களை ஒத்த) வலுவான அரசு இருந்தால் ஆயுத போராட்டத்தின் கதி என்னவாகும் என்று நீங்களே யுகித்து கொள்ளுங்கள்.<BR/><BR/>இந்தியாவின் உலக அரங்கில் தன்னை நிலைநாட்டிக் கொள்ள நினைக்கும் நினைப்பும், இரக்கமும், அரசியலமைப்பின் மரியாதையும்தான் இந்த இடத்திற்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது.<BR/><BR/>ஒரு நாட்டின் பலமாக எவை இருக்க வேண்டுமோ அதை பலவீனமாக பயன்படுத்தி ஆயுத போராட்டங்கள் நிகழ்கிறன.<BR/><BR/>20000 மக்கள் சொந்த நாட்டில் புலம் பெயரும் கொடுமை நடக்கையில் எந்த நாடும் இவ்வளவு பொறுமையாக இருக்குமா என தெரியவில்லை.<BR/><BR/>மத சாயம் பூசும் அத்வானியும், மோடியும்,முல்லாக்களும் இருக்கும் தேசத்தில்தான் அம்பேத்காரும் இருந்தார். நல்ல விழிப்புணர்வு காட்டாத தலைவர்கள் இல்லாத்து குறைதான். ஆனால் சிறிது சிறிதாக இந்தக் குறை களையப்படுமென நம்பிக்கை உண்டு.<BR/><BR/>பல ஊழல்கள் புரிந்த லாலு இந்திய ரயில்வேயை திறம்பட நிர்வகிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இது போன்று ஒவ்வொரு துறையிலும் மாற்றம் வரலாம். நாளாகலாம். ஆனால் சமூக அக்கறையும், பகுத்தறிவும் நாட்டின் குடிகளிடம் வளர்கையில் இது சாத்தியமே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160527802050465582006-10-11T08:50:00.000+08:002006-10-11T08:50:00.000+08:00உங்களின், சசியின் பதிவுகளைப் படித்தேன். இவற்றிலிரு...உங்களின், சசியின் பதிவுகளைப் படித்தேன். இவற்றிலிருந்தும் நான் சில செய்திகளை அறிந்துகொள்கிறேன். நன்றி.<BR/><BR/><BR/><BR/>////தனிமனித தாக்குதல்கலை புறந்தள்ளி செல்கிறேன்///<BR/>இது நல்ல முடிவு குழலி.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160494454472163982006-10-10T23:34:00.000+08:002006-10-10T23:34:00.000+08:00//சப்ரஜித் சிங்கை தூக்கிலிடக்கூடாது என்று பாகிஸ்தா...//சப்ரஜித் சிங்கை தூக்கிலிடக்கூடாது என்று பாகிஸ்தானில் போராட்டம் நடந்ததா? இங்கு அப்சலுக்கு இருக்கும் ஆதரவு அங்கு சப்ரஜித் சிங்கிற்கு இருந்ததா?<BR/>//<BR/>பாக்கிஸ்த்தானிலிருந்த சில மனித உரிமை ஆர்வல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததாக படித்த நினைவு, சரி பாக்கிஸ்தானில் இப்படி பட்ட போராட்டங்கள் நடந்திருந்தால் தான் இதற்கு தெரிவிக்க இயலுமா? நீங்கள் சொல்லுங்கள் சப்ரஜித் சிங் தூக்கு தண்டனை பற்றி என்ன நினைக்கின்றீர்குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160494143456213992006-10-10T23:29:00.000+08:002006-10-10T23:29:00.000+08:00//இப்போது அப்சாலைத் தூக்கில் போட்டே ஆக வேண்டும் என...//<BR/>இப்போது அப்சாலைத் தூக்கில் போட்டே ஆக வேண்டும் என்று தாண்டிக்குதிப்பவர்கள் அப்போது சிங் விவகாரத்தில் மட்டும் கள்ளமவுனம் சாதித்தது ஏன்?<BR/>//<BR/><BR/>இதே கேள்வியை நானும் உங்களுக்குக் கேட்கலாம்...<BR/><BR/>சிங் விவகாரத்தில் பாகிடம் போய் இதே மாதிரி sit in dharna செய்ய வேண்டியது தானே என்று? <BR/><BR/>யாரும் கள்ள மவுனம் சாதிக்கவில்லை. இந்தியத் திருனாட்டில் தூக்கு தண்டனைகள் பல நடந்துள்ளன, அப்பொழுதெல்லாம் "மௌனம்" சாதித்துவிட்டு தீவிரவாதிக்குத் தூக்கு என்றவுடன் பல உலக ஞாயங்கள் பேசும் நீங்கள் அன்று செய்தது தான் "கள்ள மௌனம்".வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160493917017519472006-10-10T23:25:00.000+08:002006-10-10T23:25:00.000+08:00//ரியோ, இந்தியாவை சேர்ந்த சப்ரஜித் சிங் தூக்கை எதி...//ரியோ, இந்தியாவை சேர்ந்த சப்ரஜித் சிங் தூக்கை எதிர்நோக்கி பாக்கிஸ்தான் சிறையில் இருக்கிறாரே அவரின் தூக்கு தண்டனை சரிதானா? என்ன செய்யலாம் நீங்கள் சொல்லுங்கள், சப்ரஜித்சிங்கிற்கு தூக்கு தண்டனை தரக்கூடாது என்று கூறிய பாக்கிஸ்தான் மனித உரிமையாளர்களை நீங்கள் என்ன சொல்லுவீர்கள்?? //<BR/>சப்ரஜித் சிங்கை தூக்கிலிடக்கூடாது என்று பாகிஸ்தானில் போராட்டம் நடந்ததா? இங்கு அப்சலுக்கு இருக்கும் ஆதரவு அங்கு சப்ரஜித் சிங்கிற்கு இருந்ததா?ரியோhttps://www.blogger.com/profile/05956000429552153148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160493696775286632006-10-10T23:21:00.000+08:002006-10-10T23:21:00.000+08:00ரியோ, இந்தியாவை சேர்ந்த சப்ரஜித் சிங் தூக்கை எதிர்...ரியோ, இந்தியாவை சேர்ந்த சப்ரஜித் சிங் தூக்கை எதிர்நோக்கி பாக்கிஸ்தான் சிறையில் இருக்கிறாரே அவரின் தூக்கு தண்டனை சரிதானா? என்ன செய்யலாம் நீங்கள் சொல்லுங்கள், சப்ரஜித்சிங்கிற்கு தூக்கு தண்டனை தரக்கூடாது என்று கூறிய பாக்கிஸ்தான் மனித உரிமையாளர்களை நீங்கள் என்ன சொல்லுவீர்கள்??குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160493451070518152006-10-10T23:17:00.000+08:002006-10-10T23:17:00.000+08:00காஷ்மீர் பிரச்சனையில் என்ன தீர்வென்பது இருக்கட்டும...காஷ்மீர் பிரச்சனையில் என்ன தீர்வென்பது இருக்கட்டும். இப்போது நம்மைத்தாக்கிய தீவிரவாதியை என்ன செய்யலாம் என்பது தானே பிரச்சனை. இந்தியாவில் இருக்கும் நாம் அப்சலைக்காப்பாற்றி காஷ்மீர் தீவரவாதிகளுக்கு ஏன் உதவ வேண்டும்? <BR/><BR/>மேலும் இந்தியாவில் இருந்துகொண்டு புல்லுருவிகளாய் பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கும் உதவுபவர்களை, பேசுபவர்களை கேள்வி கேட்டால் என்ன தப்பு?<BR/><BR/>காஷ்மீர் போராட்டத்தில் உங்களுக்கு நியாயம் இருப்பதாகத் தெரிந்தால், இன்னொரு குண்டுவெடிப்பு நிகழ்த்த தீவிரவாதிகளுக்கு உதவுவீர்களா? தீவிரவாதியை கொன்று இந்தியர்களை காப்பாற்ற ஆதரவு தெரிவிப்பீர்களா? இந்தியா செய்வது தவறேன்றால் அதைத் திருத்திக்கொள்வது வேறு, இப்போது இந்தியர்களை கொல்ல முனையும் தீவிரவாதிகளை அழிப்பது வேறு.<BR/><BR/>சீக்கியர்களின் நியாயமான தனி நாடு கோரிக்கை நசுக்கப்பட்டது என்று கூறுவீர்களா?ரியோhttps://www.blogger.com/profile/05956000429552153148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160493290814754852006-10-10T23:14:00.000+08:002006-10-10T23:14:00.000+08:00சுவனப்பிரியன் பின்னூட்டத்திற்கு நன்றி, இந்த நொடிவர...சுவனப்பிரியன் பின்னூட்டத்திற்கு நன்றி, இந்த நொடிவரை அப்சலுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நம்பமுடியாது, இந்த பதிவு அப்சல் நிரபராதி என்றோ, நாடாளுமன்ற தாக்குதலில் அப்சலின் பங்கு என்ன என்பதை பற்றியதல்ல...<BR/><BR/>நன்றிகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160487707698674302006-10-10T21:41:00.000+08:002006-10-10T21:41:00.000+08:00அப்சலுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ரத்து செய்துவ...அப்சலுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ரத்து செய்துவிடுவோம்.ரத்து என்ன,விடுதலையே செய்துவிடுவோம்.ஆனால் ஒரு கண்டிஷன்!<BR/><BR/>அன்று இந்திய பாரளுமன்ற தாக்குதலில் கொல்லப்பட்ட 5 நமது வீரர்களின் உயிர் திரும்பவேண்டும்.முடியுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160487487633841972006-10-10T21:38:00.000+08:002006-10-10T21:38:00.000+08:00பாராளுமன்றத் தாக்குதலில் அஃப்ஸலின் பங்கு!'சிறப்புக...பாராளுமன்றத் தாக்குதலில் அஃப்ஸலின் பங்கு!<BR/><BR/>'சிறப்புக் காவல் படையினர் என் கணவரிடம் முஹம்மத் என்பவரை கஷ்மீரிலிருந்து டெல்லிக்கு அழைத்து வர வேண்டும் எனக் கட்டாயப் படுத்தினார்கள். என்னுடைய கணவர் இந்த முஹம்மத் என்பவரையும், தாரிக் என்பவரையும் சிறப்புக் காவல் படையின் கஷ்மீர் முகாமில் வைத்தே சந்தித்தார். இவர்களைப் பற்றி என்னுடைய கணவருக்கு எதுவும் தெரியாது. அதே போல் ஏன் இப்படியொரு பணியைச் (கஷ்மீர் சிறப்புக் காவல் படையின் முகாமிலிருந்து இவர்களை டெல்லிக்கு அழைத்து வரும் பணியை) செய்யச் சொல்கிறார்கள் என்பதும் என் கணவருக்குத் தெரியாது. '<BR/><BR/>'இவற்றை எல்லாம் என் கணவர் நீதி மன்றத்தில் விரிவாக எடுத்துச் சொன்னார். ஆனால் நீதி மன்றமோ பாதியை எடுத்துக் கொண்டது. மீதியை எடுத்துக் கொள்ள மறுத்து விட்டது. என்னுடைய கணவர் முஹம்மதை காஷ்மீரிலிருந்து டெல்லிக்கு அழைத்து வந்தார் என்பதை எடுத்துக் கொண்டது. ஆனால் முஹம்மதை சிறப்புக் காவல் படைதான் தன் முகாமிலிருந்து டெல்லிக்கு அழைத்துச் செல்லும்படி பணித்தது என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தது.'<BR/><BR/>'கீழ் நீதி மன்றங்களில் அஃப்ஸல் என்ற என் கணவருக்கு வாதாட யாரும் இல்லை. நீதி மன்றம் ஒரு வழக்கறிஞரை நியமித்தது. அவரோ என் கணவரிடம் என்ன நடந்தது என்பதை எப்போதும் கேட்டதில்லை. அதே போல் அவருக்கு எதிராகச் சாட்சியம் சொன்னவர்களைக் குறுக்கு விசாரணையும் செய்யவில்லை. அந்த வழக்கறிஞர் என் கணவரை வெறுத்தார். நீதிபதி திங்காரா அவர்களிடம் என்னுடைய கணவர் 'அந்த வழக்கறிஞர் எனக்காக வாதாட வேண்டாம் ' என்று எவ்வளவோ சொன்னார். ஆனால் நீதிபதி திங்காரா அதைக் கண்டு கொள்ளவே இல்லை. உண்மையில் என் கணவர் கீழ் நீதி மன்றத்தில் தனது தரப்பில் எதையும் எடுத்துச் சொல்லிட இயலவில்லை. என்னுடைய கணவர் எதையேனும் சொல்லிட முற்படும் போதெல்லாம் நீதிபதி அதைக் கேடக மறுத்து விட்டார். அவர் தன்னுடைய துவேஷங்களை வெளிப்படையாகவே நீதி மன்றத்தில் காட்டினார்.'<BR/><BR/>'உயர் நீதி மன்றத்தில் ஒருவர் மனித உரிமை வழக்கறிஞர் எனக் கூறிக் கொண்டு என்னுடைய கணவருக்காக வாதாட முன் வந்தார். என் கணவரும் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் என் கணவருக்காக வாதிடவில்லை. மாறாக நீதி மன்றத்திடம் என் கணவரைத் தூக்கிலிட்டுக் கொலை செய்யக் கூடாது: விஷ ஊசியைப் போட்டுத்தான் சாகடிக்க வேண்டும் என வாதாடினார். என் கணவருக்காக ஒரு வழக்கறிஞரை வைத்திடும் வாய்ப்பு எனக்கிருக்கவில்லை. எனக்கு டெல்லியில் யாரையும் தெரியாது. வேறு வழியின்றி என் கணவர் எஸ்.ஏ.ஆர் ஜீலானியைக் காப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட வழக்கறிஞர் குழுவுக்கு கடிதம் எழுதினார். இந்தக் குழு 'சுசில்குமார்' என்ற வழக்கறிஞரை வைத்தது. ஆனால் இவரால் உச்ச நீதிமன்றம் சாட்சியங்களுக்குள் செல்ல முடியாது. அதனால் என் கணவருக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை.'<BR/><BR/>'என் கணவரைத் தூக்கில் போட்டு விடக் கூடாது என்றும் அவருடைய வழக்கை நியாயமாக நீதியாக விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.தன்னுடைய தரப்பு வாதத்தைச் சொல்லிட வாய்ப்பளிக்கப்படாத ஒருவரை நீங்கள் (உச்சநீதி மன்றம்) தூக்கிலிட மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். சம்பவம் நடந்தவுடன் காவல் துறையினர் என் கணவரை ஊடகங்களின் மூலம் ஒப்புதல் வாக்கு மூலம் தந்திட கட்டயப் படுத்தினார்கள். இது வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னரே நடைபெற்றது. <BR/><BR/>'காவல் துறையினர் அவரை அவமானப் படுத்தினார்கள். அடித்தார்கள். சித்திரவதை செய்தார்கள்.அவருடைய வாயில் மூத்திரத்தைப் பெய்தார்கள்.'<BR/><BR/>'இவற்றை எல்லாம் வெளிப்படையாகச் சொல்வதற்கு வெட்கமாகவெ இருக்கின்றது. ஆனால் சூழ்நிலைகள் என்னைக் கட்டாயப் படுத்தியதால்தான் இவற்றை எல்லாம் சொல்லிட வேண்டியதாயிற்று. இவற்றை எல்லாம் எழுத்தில் வடிப்பதற்கு மிகையான தைரியம் தேவைப்பட்டது. இப்பொது ஆறு வயதாகி விட்ட என் மகனின் தந்தையைக் காப்பாற்றிடுவதற்காக நான் இவற்றை எல்லாம் சொல்லிட வேண்டியதாயிற்று.'<BR/><BR/>'என்னுடைய கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக உச்ச நீதி மன்றம் பேசுமா? என் சார்பில் நீங்கள் பேசுவீர்களா?நான் என் கணவருக்காகவும் என் மகனின் தந்தைக்காகவும் வாதாடுகிறேன் என்பது உண்மைதான். அதே நேரத்தில் கஷ்மீரில் வாடும் என்னைப் போன்ற பெண்களுக்காகவும் வாதாடுகின்றேன்.'<BR/><BR/>இந்த மொத்த விவகாரத்திலும் நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எஸ்.டி.எஃப் என்ற சிறப்புப் பாதுகாப்புப் படையின் கண்காணிப்பில் நீண்ட நாட்கள் இருந்தவர்கள் என்பது புலப்படும். இதனால்தான் விருப்பு வெறுப்பற்ற ஒரு விசாரணை நாடாளுமன்றத் தாக்குதலில் மேற் கொள்ளப் பட வேண்டும் என ஜன நாயக உரிமைகளுக்கான மக்கள் குழுமம் கேட்கிறது.<BR/><BR/>-நாடாளுமன்ற தாக்குதலில் சம்பந்தம் உள்ளதாக அப்ஸல் என்ற கஷ்மீரி கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.மாவட்ட தலைமை நீதிபதி திங்காரா அவர்களாலும், பின்னர் உச்ச நீதி மன்றத்தாலும் தண்டிக்கப் பட்டவர். இந்த தண்டனையைப் பற்றி அஃப்ஸலின் மனைவி தபஸ்ஸூம் தான் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் தமிழாக்கத்தைத்தான் நாம் மேலே பார்த்தது.<BR/><BR/>Source : Annexe 18 of : December, 13, Terror Over Democracy By Nirmalangshu Mukherji: A Wifes Appeal for justice : <BR/>Published by Promilla & co, New Delhi.<BR/><BR/>Mr ezhil!<BR/><BR/>நல்ல பதிவு.சிந்திக்க வைக்கும் கேள்விகள். <BR/><BR/> உங்கள் பதிவுக்கு மேலதிக விபரங்கள் அஃப்ஸலின் மனைவியின் கடிதம் மூலம் கிடைக்கும் என்பதால் அந்த கடிதத்தின் ஒரு பகுதியை அனுப்பியுள்ளேன். பார்த்துக் கொள்ளவும்.<BR/><BR/>என்றும் அன்புடன்<BR/>சுவனப்பிரியன்suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160483157086956232006-10-10T20:25:00.000+08:002006-10-10T20:25:00.000+08:00குழலி, சர்பஜத்சிங் விவகாரத்தை நினைவுபடுத்தியதற்கு ...குழலி, சர்பஜத்சிங் விவகாரத்தை நினைவுபடுத்தியதற்கு நன்றி. இப்போது அப்சாலைத் தூக்கில் போட்டே ஆக வேண்டும் என்று தாண்டிக்குதிப்பவர்கள் அப்போது சிங் விவகாரத்தில் மட்டும் கள்ளமவுனம் சாதித்தது ஏன்? நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு விழுக்காடு சரி. இந்து என்னும் இழிவைச் சுமக்கும் நம்மையே இந்த விவகாரத்தில் தேசவிரோதக்குற்றம் சாட்டுகிறவர்கள், முஸ்லீம் பிளாக்கர்கள் இந்த விவகாரத்தில் கருத்து சொல்லியே ஆக வேண்டும் என்று மிரட்டுவது தனிமனித வக்கிரமும் பாசிசமும் அல்லாமல் வேறு என்ன? இன்றளவும் காஷ்மீரில் விடுதலை குறித்து வாக்கெடுப்பு நடத்த வக்கற்ற இந்தியாவும் அதன் அடிவருடிகளும் காஷ்மீர்ப்பிரச்சினை குறித்தோ , இன்னும் சொல்லப்போனால் பாகிஸ்தான் குறிதோ கூட விமர்சிப்பதற்கு அருகதையற்றவர்கள்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160481401259806142006-10-10T19:56:00.000+08:002006-10-10T19:56:00.000+08:00செல்வனுடைய பதிவுகளையெல்லாம் சீரியஸாகப் படிப்பவர்கள...செல்வனுடைய பதிவுகளையெல்லாம் சீரியஸாகப் படிப்பவர்களைச் சிந்திக்க வைக்கிறது உங்களின் இந்தப் பதிவு. அதை நிரூபிக்கிறது நீங்கள் பின்னூட்டத்தில் தந்துள்ள செல்வனின் 'கருத்து'க்களும்.வாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160467058806715742006-10-10T15:57:00.000+08:002006-10-10T15:57:00.000+08:00தேசபக்தி செல்வனின் சில கருத்துகள் இங்கே தொகுப்பாக....தேசபக்தி செல்வனின் சில கருத்துகள் இங்கே தொகுப்பாக...<BR/><BR/>http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_116045705507778226.html<BR/><BR/>http://muthuvintamil.blogspot.com/2006/10/blog-post_10.html<BR/><BR/>கேள்வி:ஈழம் பெறுவது உங்களுக்கு உடன்பாடா என்று மட்டும் சொலலுங்கள் செல்வன்.மற்றதை பிறகு பார்ப்போம். <BR/><BR/>பதில்: ஈழம் அமைந்து ஈழத்தமிழர் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. முத்தையா முரளிதரன் தலைமையிலான தமிழீழம் கிரிக்கட் அணியை திராவிட் தலைமையில் உள்ள கிரிக்கட் அணி யாழ்ப்பாணத்தில் மோதி ஜெயிக்க வேண்டும். அதை நான் கண்குளிர பார்க்க வேண்டும்:-)<BR/><BR/>மேலும் இதற்கு பதில் பின்னூட்டம்<BR/><BR/>தலைப்பை பார்த்ததும் பகீரென்றது. என்னை தீவிரவாதி என்பதெல்லாம் நியாயமா?:-)<BR/><BR/>ஏதோ பெரிய பொறி வைத்திருக்கிறீர்கள் போலிருக்கு:)<BR/><BR/>//1.பொதுவாக தேசியவாதிகளின் ஜல்லி இலங்கை அரசியல் சட்டத்திற்குட்பட்டு இலங்கை தமிழர் பிரச்சினை தீரவேண்டும் என்பதாக இருக்கும்.நீங்கள் ஈழம அமையவேண்டும் என்று ஆசைப்பட்டால் நீங்கள் தமிழ் தீவிரவாதியா?//<BR/><BR/>"பொதுவாக தேசியவாதிகள்" என்பதெல்லாம் எனக்கு தெரியாது. அது உங்கள் பார்வை, உங்கள் கருத்து. எனக்கு தெரிந்த தேசியவாதிகள் காமராஜர், கக்கன், எம்ஜிஆர் மாதிரி பெரியவர்கள் தான். சரி அதை விடுங்கள்....<BR/><BR/>தமிழீழம் அமையவேண்டும் என ஆசைப்பட்டால் எப்படி தீவிரவாதி ஆவேன்?ஆயுதம் ஏந்தி அப்பாவிகளை கொன்றால் தான் தீவிரவாதி ஆவேன். ஆக முதல் கேள்வி தப்பு<BR/><BR/>2.இரண்டாம் கேள்விக்கு பதில் அவ்வளவு விவரமாக ஈழம் பிரச்சனை பற்றி எனக்கு தெரியாது, ஏன் புலிகள் ஆயுதம் தூக்கினர் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. இலங்கை ஏன் புலிகளுடன் பேசுகிறது என கேட்டால் அதுவும் தெரியாது. சமாதானம் ஏற்பட பேசுவதாகவோ அல்லது நார்வே நிர்பந்தத்தில் பேசுவதாகவோ இருக்கலாம்.<BR/><BR/>3.<B>இலங்கையின் இறையாண்மை எக்கேடு கெட்டால் எனக்கென்ன?இந்திய ஒருமைப்பாடு பற்றி தான் கவலைப்பட முடியுமே அன்றி இலங்கை, ஜப்பான், கொரியா இறையாண்மை குறித்தேல்லாம் எனக்கு எந்த கவலையும் கிடையாது.தமிழன் வாழவேண்டும், இந்தியன் உயரவேண்டும் அவ்வளவுதான்.<BR/></B>குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160453538605497902006-10-10T12:12:00.000+08:002006-10-10T12:12:00.000+08:00நிதானமான பதிவு குழலி.நிதானமான பதிவு குழலி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160453381782349942006-10-10T12:09:00.000+08:002006-10-10T12:09:00.000+08:00அண்ணா!தெளிவா எழுதியிருக்கீங்க. யோசிக்கவும் வச்சு இ...அண்ணா!<BR/>தெளிவா எழுதியிருக்கீங்க. யோசிக்கவும் வச்சு இருக்கீங்க. யோசிக்கிறேன். அனேகமா நீங்க சொல்றது சரியாத் தான் இருக்கும். பார்வை வேறுபாடும்-னு சொன்னீங்க பாருங்க. நூத்துக்கு நூறு சரிங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160452613361894392006-10-10T11:56:00.000+08:002006-10-10T11:56:00.000+08:00இன்று மரணதண்டனை ஒழிப்பு தினம், தவறுதலாக மரண தண்டனை...இன்று மரணதண்டனை ஒழிப்பு தினம், தவறுதலாக மரண தண்டனை பெற்ற சிலர் பட்டியல் <A HREF="http://www.dinamalar.com/2006oct10/general_ind8.asp" REL="nofollow">இன்றைய தினமலரில்</A>குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160452408549505722006-10-10T11:53:00.000+08:002006-10-10T11:53:00.000+08:00/வலையுலக அரசியலில் கணக்கு தீர்க்கும் முகமாக ராமதாஸ.../வலையுலக அரசியலில் கணக்கு தீர்க்கும் முகமாக ராமதாஸ் சட்டகத்தில் அடைக்க முயன்றவர்களில் ஆரம்பித்து மூடிக்கொண்டிரு என்று கூறியவர்கள் வரை என் மீது தனிமனித தாக்குதல் நடத்தியவர்களுக்கு இந்த பதிவு எழுத ஆரம்பிக்கும் முன் பதில் சொல்ல வேண்டுமென்ற மனநிலை இருந்தது, ஆனால் அது தற்போது இல்லை என்பதால் அந்த தனிமனித தாக்குதல்கலை புறந்தள்ளி செல்கிறேன்.//<BR/><BR/><BR/>அதுதான் தேவையும் கூட. :)<BR/><BR/>அற்புதமாக வந்திருக்கிறது இந்தப் பதிவு.<BR/><BR/>சில பகுதிகள், படிப்பவர்களின் சிந்தனையையும் அதற்கான பதிலையும் கோரி நிற்கிறது.<BR/><BR/>வாழ்த்துக்கள் குழலி.Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160449693585162932006-10-10T11:08:00.000+08:002006-10-10T11:08:00.000+08:00//எங்கள் தலைவர் செல்வன் இதற்கு பாயிண்ட் டூ பாயிண்ட...//எங்கள் தலைவர் செல்வன் இதற்கு பாயிண்ட் டூ பாயிண்ட் பதில்<BR/>தருவார்.அவர் கோழை அல்ல.காத்திரும் குழலி//<BR/><BR/>சபாஷ்,<BR/><BR/>சரியான போட்டி..<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160445495128820532006-10-10T09:58:00.000+08:002006-10-10T09:58:00.000+08:00எங்கள் தலைவர் செல்வன் இதற்கு பாயிண்ட் டூ பாயிண்ட் ...எங்கள் தலைவர் செல்வன் இதற்கு பாயிண்ட் டூ பாயிண்ட் பதில்<BR/>தருவார்.அவர் கோழை அல்ல.காத்திரும் குழலி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160445087742651682006-10-10T09:51:00.000+08:002006-10-10T09:51:00.000+08:00//வலையுலக அரசியலில் கணக்கு தீர்க்கும் முகமாக ராமதா...//வலையுலக அரசியலில் கணக்கு தீர்க்கும் முகமாக ராமதாஸ் சட்டகத்தில் அடைக்க முயன்றவர்களில் ஆரம்பித்து மூடிக்கொண்டிரு என்று கூறியவர்கள் வரை என் மீது தனிமனித தாக்குதல் நடத்தியவர்களுக்கு இந்த பதிவு எழுத ஆரம்பிக்கும் முன் பதில் சொல்ல வேண்டுமென்ற மனநிலை இருந்தது, ஆனால் அது தற்போது இல்லை என்பதால் அந்த தனிமனித தாக்குதல்கலை புறந்தள்ளி செல்கிறேன்.//<BR/><BR/>குழலி,, அற்புதம். <BR/><BR/>இது ஒரு நல்ல முடிவு. து[ற்றுவார் து[ற்றலும் போற்றுவார் போற்றலும் போகட்டும் கண்ணனுக்கே (கண்ணன் என்பதை.. இயேசு, அல்லா, ராமர், இன்னும் எத்தனை கடவுள்கள் உள்ளனரோ, அவர்கள் பெயரைப் போட்டுக் கொள்ளவும்) என்பது ஒரு உயரிய நிலை. இதைக் கடைபிடியுங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்.திருவடியான்https://www.blogger.com/profile/00976285284880248429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1160436042047511352006-10-10T07:20:00.000+08:002006-10-10T07:20:00.000+08:00விட்டுத்தள்ளுங்கள் குழலி,அவர்கள் ஒரு மானசீக முடிச்...விட்டுத்தள்ளுங்கள் குழலி,<BR/><BR/>அவர்கள் ஒரு மானசீக முடிச்சில் மாட்டித் தவிக்கிறார்கள்!வாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.com