tag:blogger.com,1999:blog-11227047.post8764933458082879027..comments2023-11-02T22:18:14.522+08:00Comments on குழலி பக்கங்கள்: பெரியாரியத்தை மதமாக்கும் சில பெரியாரிஸ்ட்கள்குழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-11227047.post-51794189185135698902009-11-24T21:21:56.161+08:002009-11-24T21:21:56.161+08:00//கட்டுபாடு, பகுத்தறிவுன்னு ஜல்லி அடிக்கிறிங்களே இ...//கட்டுபாடு, பகுத்தறிவுன்னு ஜல்லி அடிக்கிறிங்களே இது உங்களுக்கே நியாயமா இருக்கா?!//<br /><br /> ஜல்லி அடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை வால்பையன்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-60185287804918477382009-11-20T17:56:35.809+08:002009-11-20T17:56:35.809+08:00//கட்டுப்பாட்டையும், பகுத்தறிதலையும் போட்டுக் குழப...//கட்டுப்பாட்டையும், பகுத்தறிதலையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்<br /><br />We The People //<br /><br /><br />We The People தான் நாங்க மட்டும் ஆடு மாடுன்னா சொன்னோம்!<br /><br />அன்புராஜை தவிர வேறு யாரும் தகுதியானவர்கள் தி.க.வில் இல்லையான்னு ஒரு கேள்வி கேட்டா, கட்டுபாடு, பகுத்தறிவுன்னு ஜல்லி அடிக்கிறிங்களே இது உங்களுக்கே நியாயமா இருக்கா?!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-85290075574499725292009-11-19T15:42:41.100+08:002009-11-19T15:42:41.100+08:00தொடர்ச்சி.....3
மூன்றாவதாக தங்களுடைய பின்னூட்டத்த...தொடர்ச்சி.....3<br /><br />மூன்றாவதாக தங்களுடைய பின்னூட்டத்தில் <br /><br />// நீங்கள்தான் இந்து மதத்தை வெறுப்பவர்கள்ஆயிற்றே....//என்று கூறியிருக்கின்றீர்கள் இது தமிழ் ஒவியா நோக்கி எழுப்பிய வினா அவர் பதிலளித்து விட்டார். இருப்பினும் இந்த வினா இப்படி பலராலும் எழுப்பப்படும் என்பதால் தான் பெரியார் மதம் மாறவில்லை. அவரை மதம் மாறி விடுமாறு கூறியபோதும் இந்த மதத்தில் இருப்பதால் தான் பல சவுகரியங்கள் இருப்பதாக கூறினார். அதையும் விளக்கினார், நாம் இதன் ஒட்டைகளை எடுத்து காட்ட முடியும் இல்லாவிட்டால், உனக்கும் என் மதத்திற்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி இந்து மதத்தினரால் வைக்கப்படும். அவர் சாதுர்யம் இன்றுவரை நிரூபனம் ஆகிக்கொண்டிருக்கின்றது என்பதற்கு உங்கள் கேள்வியே சாட்சி.<br /><br />தவிர இளஞ்சேரன் குறிப்பிட்டதில் தவறொன்றுமில்லை. பிராமாணர்களில் நல்லவர்கள் உள்ளனர் என்ற வாதம் எழுப்பப்பட்டது. அப்பொழுது பிராமணர்கள் மோசமானவர்கள் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டுகின்றது. பாராதியார் தாழ்த்தப்பட்டவருக்கு பூணூல் அணிவித்து அவரை உயர்ந்தவராக்கினார் என்ற பதிலை ஆகா ஒகோ என்று கூத்தாடுபவர்கள் உண்டு. ஏன் தாழ்ந்தவன், உயர்ந்தவன் என்பதை தீர்மானிக்க ஒரு கயறு தேவையா? அதை தூக்கி எறி ஜாதியை உன் அடிமனத்திலிருந்து தூக்கி எறி, உன் ஜாதிய அடையாளங்களை, மத அடையாளங்களைத் தூக்கி எறி அந்த சமத்துவத்தை வலியுறுத்துவதுதான் பெரியாரிசம். அது இன்று வரை எந்த பிராமணரும் கடைப்பிடிக்கவில்லை. ஆனால் நாங்கள் மாறிவிட்டோம் எங்களுக்கும் இடவொதுக்கீடு வேண்டும் என்கின்றனர். இடவொதுக்கீட்டை சலுகை என நினைக்கின்றனர். மிகப்பெரிய தேசிய அரசியல் கட்சி தலைவருக்கே தெரியவில்லை, ஆனால் எப்படியாவது ஆட்சிக்கு மட்டும் வந்து விடவேண்டும். என்ன தான் அப்படி பெரிய படிப்பு படித்தார்களோ தெரியவில்லை.<br /><br />இங்கிருந்து மதம் மாறி செல்கின்றனர் அவர்களும் அந்த மதத்தில் மூடநம்பிக்கைகளை பின்பற்றிக் கொண்டு இந்து மதத்தை பெரியாரை துணைக்கு வைத்து வாதாடுவார்கள் இது பெரியாரிசமில்லை. என் கல்லூரியில் ஒருவர் கிருத்தவராக மாறிவிட்டார் ஆனால் தலித் என்ற பிரிவில் பயன் பெற்று வந்தார் ஆனால் அவர் பிற்படுத்தபட்டவர் (கிருத்தவர் என்பதால்) தலித்தை காரணம் காட்டி மத்திய அரசு வேலை வாங்கி சென்றுவிட்டார் அது வேறு விசயம். அவர் அடிக்கடி இந்து மதத்தை சாடிக்கொண்டிருப்பார் பெரியாரை உதாரணத்திற்கு வைத்து கொண்டிருப்பார். நான் கூட பெருமை பட்டதுண்டு. <br /><br />ஒரு நாள் அவர் தேர்வுத்தாளில் jc என்று குறிப்பிட்டார். அதை பார்த்து கேட்ட பொழுது இந்து மதத்தில் உள்ளவர்கள் பிள்ளையார் சுழி போடுகிறார்களே அதற்காகத் தான் நான் உடனே அப்படி என்றால் இனி பெரியார் பெயரை சொல்லி இந்த செயலை செய்யாதே என்று கூறினேன். பெரியார் கூறியதை உன் இன்னோரு மூடநம்பிக்கைக்கும், மதவெறிக்கும் சாதகமாகப் பயன்படுத்தாதே. இது பெரியாருக்கு இழுக்கு அதற்காகவா பாடுபட்டார். இன்று வரை அவரோடு எந்த தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை. பெரியாரிசத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்கு பெரியார் ஒரு கவசம். ஆம் சுயநலக் கவசம். அதைத்தான் சிலர் பின்பற்றுகின்றனர் சில பிராமணர்கள் கூட பெரியாரிசத்தை ஆதாரிப்பார்கள். அவர்கள் முழு மனதுடன் ஆதரிக்க வில்லை அப்படிபட்டவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களை எதிர்த்தும் கேள்வி கேட்டிருக்கின்றேன். அதற்கு பதில் ஹி ஹி தான்.....நன்றி. <br /><br />முற்றும்.நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-51506280604504948162009-11-19T15:40:16.147+08:002009-11-19T15:40:16.147+08:00தொடர்ச்சி....1
//எப்படி மதத்தை பின்பற்றுபவர்கள் தங...தொடர்ச்சி....1<br />//எப்படி மதத்தை பின்பற்றுபவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் மதத்தை சிறு வயதிலிருந்தே திணிக்கின்றார்களோ அதே போல பல பெரியாரிஸ்ட்கள் குடும்பங்களில் சிறு வயதிலிருந்தே கடவுள் இல்லையென்றும் பெரியாரியமும் திணிக்கப்படுகின்றது,....//<br /><br />ஒரு குழந்தையை எந்த மதத்திணிப்பும், கடவுள் நம்பிக்கையும் இல்லாமல் வளர்த்தாலே அது பகுத்தறிவுவாதியாக வளர்ந்து விடும் அதற்கு பெரியாரிஸ்டு என்ற போர்வைத் தேவையில்லை. அது சாத்தியமில்லை காரணம் குழந்தைகள் செய்யும் குறும்புகளை, தவறுகளை தடுப்பதற்காக முதலில் கடவுளை நம்மையும் அறியாமல் திணிக்கின்றோம் அப்படியில்லையென்றால் பூச்சாண்டிகளையும், தற்காலத்தில் காவலர்களை காட்டி இதுவும் மூடநம்பிக்கை தான். அவர்களை அடிக்காமல், துன்புறுத்தாமல் பணியவைக்க மனிதர்கள் பயனபடுத்தி வரும் சுலபவழி. இது ஆழப்பதிந்து விடுகின்றது. என் குழந்தைக்கும் இந்த மாதிரி பெரியாரை காட்டி அவன் செய்த தவறுக்காக பெரியார் உன்னை மன்னிக்கமாட்டார் என்று கூறினேன் அன்று முதல் பெரியாரின் உருவத்தைப் பார்த்து பயப்பட ஆராம்பித்தான் (அவர் தாடியுடன் இருந்ததை பார்த்து) அவன் மனதில் வேறொரு முகமாக உருவகப்படுத்தி கொண்டான். இதற்கு முன் விவேகானந்தரை காட்டினேன். அவரையும் இப்படி ஒரு தனி சக்தியாக உருவகப்படுத்திகொண்டான். இதன் விளைவு அவர்கள் அவன் கணவில் வந்து மிரட்டினர். எதை நினைத்து கொண்டு படுக்கின்றோமோ அதுதான் கனவாக வருகின்றது. அய்யோ பெரியார் என்னை பார்க்கின்றார் அவரின் படத்தை திருப்பி வையுங்கள், விவேகானந்தர் பார்க்கின்றார் நான் தவறு செய்யவில்லை திருப்பி வையுங்கள் என்று நடுஇரவில் எழுந்த அலர ஆரம்பித்து விட்டது. இவைகளை மனோத்துவ ரிதியில் அனுகவேண்டியது நம் கடமையாகிவிட்டது. இதற்குப் பிறகு பெரியாரிசம் என்பது என்ன? அதை அவன் வளர வளர போதிக்கவேண்டியது கல்வி நிறுவனங்களின் கடமையாகும் அதை கண்டிப்பாக பல கல்வி நிறுவனங்கள் செய்யாது மாறாக இன்னும் மூடநம்பிக்கைகளையே கல்வி நிறுவனங்களும் சரி சமூகங்களும் சரி கடவுள் என்ற உருவகத்தையே அவன் மனதில் ஆழப்பதிய வைத்துவிடும் என்னதான் பகுத்தறிவை (பெற்றோர்கள் சிறிதளவே புகுத்தமுடியும்) மீண்டும் சமூகம் மூடநம்பிக்கைகளை வேரூன்றிவிடும். பெற்றோர் எண்ணிக்கை இருநபர்கள் ஆனால் சமூகம் பெரும் எண்ணிக்கை இதிலிருந்து விழித்தெழ கல்வி நிறுவனங்கள் பெரியாரிசத்தை சொல்லித்தருவதில் என்ன தவறு இருக்கமுடியும். மூடநம்பிக்கைகளை சொல்லித்தருவதற்கு நிறுவனங்கள் இருக்கும் பொழுது, பெரியாரிசத்தை புகட்டுவதற்கு ஒரு சில மிகச் சொற்ப கல்வி நிறுவனங்களே உள்ளன. கிருத்துவத்தை ஒரு சில கிருத்துவ கல்வி நிறுவனங்கள் பாரபட்சமில்லாமல் சொல்லிக் கொடுக்கவில்லையா? இதில் மட்டும் திணிப்பு எங்கிருந்து வந்தது. இதில் தான் பகுத்தறிவு வந்துவிடுகின்றதே, வேறு எதிலும் பகுத்தறிவு வருவதில்லையே. என்னை பொருத்தவரை ஏன் எல்லோருக்கும் இதுதான் பகுத்தறிவாக இருக்கும் ஏன், எதற்கு, எப்படி... என்று ஆங்கிலத்தில் WH Questions அடங்கியவையே பகுத்தறிவு அது பெரியாரிசத்தில் நிறைய உண்டு.<br /><br />தொடரும்....2நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-3247429918871517712009-11-19T15:37:55.019+08:002009-11-19T15:37:55.019+08:00குழலி பின்னூட்டங்களை தடை செய்திருப்பதாக அறிவித்திர...குழலி பின்னூட்டங்களை தடை செய்திருப்பதாக அறிவித்திருந்தார் இருந்தாலும் இதை அந்த கருத்தோடு ஒப்பிட்டு சிலவற்றை குறிப்பிட விரும்புகின்றேன்.<br /><br />//ஒரு பெரியாரிஸ்ட் என சொல்லிக்கொள்பவர் காலையில் எக்காரணம் கொண்டும் குளிக்க மாட்டார் மாலையில் தான் குளிப்பார், காலையில் குளிப்பது நம் பழக்கமில்லை என்பார்....//<br /><br />பெரியார் சில வழக்கமான பின்பற்றல்களை மூடநம்பிக்கைகளை வளர்க்கின்றது என்பதற்காக அவர் அதை மாற்றிக்காட்டினார். பெரியவர்களிடம் காலில் விழுந்து வணங்குவது இதையும் அவர் விலக்கி வைத்தார். மரியாதை மனதில் இருந்தால் போதும் என்ற நம்பிக்கையை வலியுறுத்துவதற்காக. தன் காலில் ஒரு தொண்டர் விழுந்த பொழுது எடுத்த புகைப்பட பதிவை அழித்தார் என்பது வரலாறு. இது முன்னூதாரணத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தினால். நாம் செய்த காரணத்தால் மூடநம்பிக்கையான பின்பற்றல் நடைபெறக்கூடாது, என்பதற்காக. அதுபோலத்தான் காலையில் குளிப்பதை மாற்றிக்காட்டினார். <br /><br />சிலருக்கு காலையில் குளிக்காவிட்டால் ஒரு மாதிரியாக சோர்வாக இருக்கும் அத்ற்காக காலையிலேயே குளிப்பார்கள் இதை பெரியாரிஸ்டுகள், பெரியாஸ்டு அல்லாதவர்கள் என்று பிரித்து கொள்ள தேவையில்லை. அவரவர் வியர்வையின் தன்மை தோல் தன்மைக்கேற்றமாதிரி இதை மாற்றி கொள்ளலாம் இதனால் எந்தவித கொள்கை மாற்றமும் அல்லது தடுமாற்றமும் வந்துவிடப்போவதில்லை. சில நேரங்களில் சோம்பேறித்தனத்திற்காகவும் குளிப்பதில்லை. இப்படியெல்லாம் இருப்பதினால் கடவுள் அணுக்கிரகம் கிடைக்காது என்று கூறிவந்தவர்களையும், ஆரோக்கியமில்லை என்று கூறிவந்தவர்களையும் முட்டாளுக்குவதற்காக நடைமுறைப் படுத்தினார். இதையெல்லாம் கண்டிப்பாக கடைப்பிடித்துதான் பெரியாரிஸ்டாக வாழவேண்டும் என்ற அவசியமில்லை. நான் சொல்லுவதையே பகுத்தறிவுடன் சிந்தித்து பார்த்து எது சிறந்தது என்று ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியவர் தான் பெரியார் ஆகையாலேயே அவரை பெரியார் என்கின்றோம்.<br /><br />தொடரும்.......நம்பிhttps://www.blogger.com/profile/04398736672467495092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-76363626019989817702009-11-18T15:11:16.012+08:002009-11-18T15:11:16.012+08:00இது உட்கட்சிப் பூசல் என்று நினைக்கின்றேன். ஒகே. ஆஜ...இது உட்கட்சிப் பூசல் என்று நினைக்கின்றேன். ஒகே. ஆஜர் அண்டு அப்பீட்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-66142989467718542052009-11-16T22:59:40.881+08:002009-11-16T22:59:40.881+08:00கட்டுப்பாட்டையும், பகுத்தறிதலையும் போட்டுக் குழப்ப...கட்டுப்பாட்டையும், பகுத்தறிதலையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்<br /><br /> We The Peopleதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-86181412546203336692009-11-14T23:41:38.047+08:002009-11-14T23:41:38.047+08:00தமிழ் ஓவியா,
பெரியார் பேட்டிகளை எந்த contextயில் ...தமிழ் ஓவியா,<br /><br />பெரியார் பேட்டிகளை எந்த contextயில் சொன்னது என்று தெரியாமல் எல்லா இடத்திலும் உபயோபிப்பதா பகுத்தறிவு??<br /><br />இதையா உங்க குழந்தைக்கு சொல்லித்தருகிறீர்கள்?? உங்கள் குழந்தையை வீரமணியின் பேரனுக்கு அடிமையா வளர்க்கிறேன் சொல்லுங்க, அதுவே சால சிறந்ததாக இருக்கும்!! தயவு செய்து பகுத்தறிவு ஊட்டி வளர்க்கிறேன் என்று சொல்லாதீர்கள்!!<br /><br />ஒரு இயக்கத்தில் சுயமாக சிந்திக்காமல், பகுத்தறிவை உபயோகிக்காமல் இருக்கும் தொண்டன் எக்காலத்திலும் தலைவனாக முடியுமா?? முடியும் என்றால் எப்படி என்று சொல்லமுடியுமா??<br /><br />இல்லை இயத்தில் தலைவன் இருக்கிறான், அவருக்கு பிள்ளைகள் இருக்கின்றன, அவர்கள் தான் தலைவனாக வரவேண்டும் என்பது தான் நீங்கள் சொல்லவரும் கட்டுப்பாடா??We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-84070473327045666672009-11-14T15:29:24.707+08:002009-11-14T15:29:24.707+08:00//நான் ஒரு கிரிமி லேயர், பிற்படுத்தப்பட்ட சாதியில்...//நான் ஒரு கிரிமி லேயர், பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்தவன். இட ஒதுக்கீடு, எம் குழந்தைகளுக்கும் சட்டப்ப்படி உண்டு. இன்னும் எத்தனை தலைமுறைக்கு இது தேவை ?//<br /><br />உங்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லையென்றால் அதுக்குறிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுங்கள். பிரச்சினை முடிந்து விடும். <br />அதைவிடுத்து நம்முடைய முதல் த்லைமுறை இப்போதுதான் தட்டுத் தடுமாறி எழுந்து நிற்கிறது. அதையும் குறுக்குச் சால் ஓட்டி கெடுக்கிறீரே<br /><br />அதுவும்கூட மைய்ய அரசில் இன்னும் முழுமையாக்க படவில்லை.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-69361855985424761282009-11-14T15:24:36.020+08:002009-11-14T15:24:36.020+08:00//தேவர்கள், கவுண்டர்கள், வன்னியர்களின் ஆதிக்க சாதி...//தேவர்கள், கவுண்டர்கள், வன்னியர்களின் ஆதிக்க சாதி வெறியும் பார்பானியம் தான். அதுதான் இன்று தலித்துகளை நசுக்கும் வெறியாக தொடர்கிறது. சில பார்பனர்களின் பார்பானியத்தை ‘மட்டும்’ தொடர்ந்து திட்டிக்கொண்டிருந்தால் போதுமா ?//<br /><br />அதியமான் இது தொடர்பாக பல நூல்கள் வெளிவந்து விட்டது. பெரியார் தொண்டர்களாலும் முற்போக்குச் சிந்தனையாளர்களாலும் உண்மையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட அந்த நூல்களைப் படியுங்கள்.<br /><br />தமிழ் ஓவியா வலைப்பதிவில் பெரியார்-தலித் சுட்டியை சுட்டுங்கள் மேலும் விபரங்கள் கிடைக்கும்.<br /><br />ஒரு உதாரணம்<br />தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்ப்ட்டவர்களும் அண்ணன் தம்பிகள். இவர்களிடம் பகையை மூட்டி அதில் குள்ர்காய்ந்து வருபவர்கள் பார்ப்பனர்கள். இது குறித்து அம்பேத்கர் விரிவாக எழுதியுள்ளார். இது குறித்த செய்திகளும் தமிழ் ஓவியா வலைப் பதிவில் கிடைக்கும். <br /><br />படியுங்கள்! தெளியுங்கள்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-78294525875549227422009-11-14T15:08:39.414+08:002009-11-14T15:08:39.414+08:00//தோழர் குழலி
நீங்கள் தான் விவாதத்திற்கு அழைத்தீர...//தோழர் குழலி <br />நீங்கள் தான் விவாதத்திற்கு அழைத்தீர்கள்.ஆனால் நீங்களும் மற்றவர்களைப்போல் தான் விவாதம் செய்வீர்கள் என்றால் உங்களிடம் விவாதத்தை தவிர்த்துக் கொள்கிறேன்.<br />//<br />அய்யா உங்கள் மீது மிகுந்த மதிப்புடனும் மேலும் பல விசயங்களை அறிந்துகொள்ளவும் எல்லோரும் தெளிவடையவும் தான் இந்த விவாதமே, சில நேரங்களில் கடுப்பேற்றுவது போன்ற தொனியில் சில கேள்விகளை வீசுவதுண்டு, அதற்கு காரணம் சில பதில்களை உங்கள் வாயாலே கொண்டு வருவதற்காகத்தான்... என் பதிவில் பெயரோடும் உண்மையான அடையாளங்களோடும் வருபவர்களின் கருத்துகளை மட்டுறுத்துவதில்லை ஏனெனில் அவர்களே அதற்கு பொறுப்பு என்பதல், விவாதம் தடம் மாறுவதால் இப்போதை அதையும் மட்டுறுத்துகிறேன்<br />மிச்சம் சாப்பிட்டு விட்டு வருகிறேன்குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-50847904612118206772009-11-14T14:52:19.299+08:002009-11-14T14:52:19.299+08:00பதிவு விவாதம் வேறு கோணத்தில் திரும்புவதை அடுத்து அ...பதிவு விவாதம் வேறு கோணத்தில் திரும்புவதை அடுத்து அது தொடர்பான சிலரின் பின்னூட்டங்கள் நிறுத்தப்படுகின்றன...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-63606641414503850972009-11-14T14:49:46.660+08:002009-11-14T14:49:46.660+08:00தோழர் குழலி
நீங்கள் தான் விவாதத்திற்கு அழைத்தீர்க...தோழர் குழலி <br />நீங்கள் தான் விவாதத்திற்கு அழைத்தீர்கள்.ஆனால் நீங்களும் மற்றவர்களைப்போல் தான் விவாதம் செய்வீர்கள் என்றால் உங்களிடம் விவாதத்தை தவிர்த்துக் கொள்கிறேன்.<br /><br />விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் -அப்பாற்பட்டவைகள் உலகத்தில் இல்லை.யாரும் யாரையும் விமர்சிக்கலாம்.<br /><br /> இடம் பொருள்.காலம் சூழலைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அதச் செய்ய வேண்டும்.<br /><br />இழவு வீட்டிற்கு துக்கம் விசாரிக்க போனவனைப் பற்றி பெரியார் சொன்ன உவமைதான் எனக்கு நினைவுக்கு வருகிறது.<br /><br />//நீங்கள் தான் இந்து மதத்தை பின்பற்றாதவர்களாயிற்றே பின் ஏன் இந்து மதத்தை விமர்சிக்கின்றீர்கள்?//<br /><br />நான் இந்து மதத்தைப் பின்பற்றாதவன் மட்டுமல்ல உலகில் மதங்களே ஒழிய வேண்டும் என்ற கொள்கை யுடைவன் தான்.<br /><br /> நான் அப்படியிருந்தும் இந்த இல்லாத இந்து மதம் என்னையும் இந்து என்ற வரையரையில் வைத்துள்ளது. நாத்திகர்களும் இந்து தான். இந்து யார்? என்ற வரையரையைப் படிக்கவும். அல்லது சட்டப்படி நாம் இன்னும் சூத்திரரே என்ற நூலை படிக்க வேண்டுகிரேன் தோழரே.<br /><br />என் கேள்விக்கு விடை சொல்ல் விருப்பமில்லாவிட்டால் சொல்ல வேண்டாம். அந்தக் கேள்விய நான் வேண்டுகோளாகத்தான் வைத்துள்ளேன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-74410872579482081422009-11-14T14:48:41.405+08:002009-11-14T14:48:41.405+08:00இளஞ்சேரன்,
இது போன்ற சபை நாகரீகமற்ற பேச்சுக்ககளைத...இளஞ்சேரன்,<br /><br />இது போன்ற சபை நாகரீகமற்ற பேச்சுக்ககளைதான் சொன்னேன். கருத்துக்களை சொல்லும் முறை பற்றிதான் நான் சொன்னது. கருத்துவேறுபாடுகள் பற்றி அல்ல.<br />ஜெயந்த்திர்ர் குற்றவாளிதான் என்று பல பார்பனர்களும் நம்புகிறார்கள். சும்மா வார்த்தைகளை விட வேண்டாம். ஓ.கே. உன்னை விட கீழ்தரமாக பேச எமக்கும் தெரியும்.<br /><br />தமிழ் ஓவியா,<br /><br />வீரமணிக்கு யான் மடல் இடுவது எம் உரிமை. அவரின் நேரத்தை நான் வீணாக்குகிறேன் என்று நீர் சொல்வதுதான் ஃபாசிசம், மதவாதம்.<br />இது போன்ற கேள்விகளுக்கு தக்க பதில் அளிப்பது அவர் கடமை. அதற்காகத்தால் பெரியார் அவரை செய்லாளராக நியமித்தார்.<br /><br />பெரியாரின் கருத்துகளுக்கு நீங்க மட்டும் தான் ‘உரிமையாளரா’ என்ன ? ஃபாசிச மதவாதம் போல் பேசுகிறீர்கள்.<br /><br />நான் ஒரு கிரிமி லேயர், பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்தவன். இட ஒதுக்கீடு, எம் குழந்தைகளுக்கும் சட்டப்ப்படி உண்டு. இன்னும் எத்தனை தலைமுறைக்கு இது தேவை ? இதைதான் கேட்டேன். இதை விட முக்கிய விசியம் வேறு என்ன இருக்க முடியும். சும்மா பார்பானியம், பூணுல் என்று பேசிக்கொண்டு. <br /><br />பார்பானியத்தை எதிர்க்க கிடைத்த மிக மிக முக்கியமான ஆயுதம், இட ஒதுக்கீடு. அதை நேர்மையான, சரியான முறையில் செயல்படுத்துவதே பெரியாருக்கு செய்யும் மரியாதை. பிற்பட்டோரில் உள்ள கிரிமி லேயர்களை்கக்குளைந்து, உண்மையில் அவர்களில் பிற்பட்டொருக்கு மட்டும் சலுகைகள் கிடைக்க செய்ய வேண்டும். இதை பற்றி தான் விவாதிக்க முயன்றேன்.<br /><br />வினவு தளத்தில் எழுதபடும், ஆதிக்க சாதி வெறியர்களின் அடக்குமுறைகள் பற்றிய பதிவுகள் போல் ஏன் எழுத மாட்டேங்கிறீங்க ? தேவர்கள், கவுண்டர்கள், வன்னியர்களின் ஆதிக்க சாதி வெறியும் பார்பானியம் தான். அதுதான் இன்று தலித்துகளை நசுக்கும் வெறியாக தொடர்கிறது. சில பார்பனர்களின் பார்பானியத்தை ‘மட்டும்’ தொடர்ந்து திட்டிக்கொண்டிருந்தால் போதுமா ?K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-29641455860431941462009-11-14T14:43:41.076+08:002009-11-14T14:43:41.076+08:00என்னால் பதிவு திசை திரும்ப வேண்டாம்.. உங்கள் விவாத...என்னால் பதிவு திசை திரும்ப வேண்டாம்.. உங்கள் விவாதங்கள் தொடரட்டும்.. கவனிக்கிறேன்..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-63476417426127297632009-11-14T14:36:50.035+08:002009-11-14T14:36:50.035+08:00//தோழர் குழலி
இந்த மாதிரி ஆளுக,ஒரு சில பயளுக அடிக...//தோழர் குழலி<br /><br />இந்த மாதிரி ஆளுக,ஒரு சில பயளுக அடிக்கடி மூக்கு சொறிந்து விடுவார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிரே<br />//<br />அய்யா அதியமான் அவர்களை எப்போதுமே கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை, சரி பெயரோடு போட்டிருக்காரே, அனானியாக இல்லாமல் அவரை பலருக்கும் தெரியும் அதனால் அவரோட கருத்துக்கு அவரே சொந்தக்காரர் என்பதால் தான் அவர் பின்னூட்டத்தை கருத்துசுதந்திரத்தை முன்னிட்டு வெளியிட்டேன்...குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-60357139605885835152009-11-14T14:34:32.082+08:002009-11-14T14:34:32.082+08:00//பார்பன சாதியில் பிறந்த நண்பர்கள் பலரும் தமிழ்மணத...//பார்பன சாதியில் பிறந்த நண்பர்கள் பலரும் தமிழ்மணத்தில் உள்ளனர். அவர்களில் பலரும் பாரபனீயத்தை எதிர்பவர்கள்தாம். அதாவது சாதியத்தை ஏற்க்காதவர்கள் தாம்.<br />ஆனால் இவரின் தலைப்புகள் அவர்களையும் alienate செய்கிறது.//<br /><br />பார்ப்பனர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு இருப்பதைப் பார்க்கும் போது பார்ப்பனர்கள் உங்களை உச்சி மோந்து மெச்சுவார்கள் .நீங்கள் வேண்டுமானால் அவர்கள் பசப்பு வார்த்தைகளில் மயங்கி ஆட்டம் போடுங்கள். ஆனால் பெரியார் சிந்தனைகளை கற்று வளர்ந்தவன் என்று சொல்லாதீர்கள்.<br /><br />இன்னும் எங்களின் நம்முடைய இழிவு ஒழிக்கப் படவில்லை. அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு தடையாய் இருப்பவர்கள் யார் பார்ப்பனர்களா? ஆதிக்க தமிழர்களா?.<br /><br />அசலுக்கும் போலிக்கும் வேறுபாடு தெரியாமல் குழம்பிப்போய் உள்ள உங்களை நினைத்தால் பரிதாமாகத்தான் இருக்கிறது.விதிவிலக்குகளை விதியாக கொண்டு செயல்படாதீர்கள் அதியமான்.<br /><br />ஐ ஐ டி யில் என்ன நிலைமை என்பதஎல்லாம் தெரிந்து தான் பேசுகிறீர்களா?<br /><br />ஐ டி ஐ வேண்டுமானால் நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கலாம். <br /><br />மணியடிக்கும் வேலை மட்டும் பரம்பரையாக அவாளுக்கு மட்டும் ரிசர்வேசன் செய்வது எப்படி?<br /><br />கிருமிலேயர் பற்ரியெல்லாம் பல பதிவுகளில் விளக்கியாகி விட்டது. வீரமணிக்கு மடல் எழுதி அவர் நேரத்தையும் கணினியையும் வீணடித்திருக்கிரீர்கள் அதியமான்.<br /><br />தோழர் குழலி<br /><br /> இந்த மாதிரி ஆளுக,ஒரு சில பயளுக அடிக்கடி மூக்கு சொறிந்து விடுவார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிரேன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-35542552655244656432009-11-14T14:23:32.333+08:002009-11-14T14:23:32.333+08:00//தோழர் குழலி
உங்களுடன் உரையடியில் உரையாடிய தோழர்...//தோழர் குழலி<br /><br />உங்களுடன் உரையடியில் உரையாடிய தோழர்கள் எத்தனை பேர் பெரியாரியலை சரியாக கடைபிடிப்பவர்கள் என்று சொல்ல முடியுமா?(இது வேண்டுகோள் தான்)<br /><br />குறைந்த பட்சம் பெரியாரின் அடிப்படைக் கொள்கையான ஜாதி ஒழிப்புக்காக ஜாதி ஒழிந்த திருமணங்கள் செய்துள்ளார்கள்?.<br /><br />அல்லது பெரியார் கொள்கை அடிப்படையில் அவர்களின் செயபாடுகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.<br /><br />---------விவாதிப்போம்<br />//<br />நீங்கள் தான் இந்து மதத்தை பின்பற்றாதவர்களாயிற்றே பின் ஏன் இந்து மதத்தை விமர்சிக்கின்றீர்கள்?குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-66951195036928762462009-11-14T14:21:01.638+08:002009-11-14T14:21:01.638+08:00//கொள்கை முடிவுக்கும் குடும்ப உறவுகளுக்கும் எபப்டி...//கொள்கை முடிவுக்கும் குடும்ப உறவுகளுக்கும் எபப்டி முடிச்சி போட்டு ஒப்பிட முடியும்?<br />//<br />சரி விடுங்க இதில் வேண்டாம், நம் பாரத பிரதமர் இராணுவத்தினரிடம் உரையாற்றும் போது கொள்கை முடிவாக எதிரிகள் உள்ளே வந்தால் சுட்டுக்கொள்ளுங்கள் என்கிறார், இங்கே கட்சிக்கூட்டத்தில் வந்து எதிரிகளை நாம் வன்முறையால் எதிர்கொள்ளகூடாது, நாம் விவாதத்தில் எதிர்கொள்வோம் என்கிறார் இரண்டும் ஒன்றா? ஏன் அங்கே எதிர்களை கொல்ல சொல்கிறார், இங்கே எதிரிகளோடு விவாதிக்க சொல்கிறார்? சந்தர்ப்பவாதமாக இல்லையா பிரதமர் பேசுவது, அது போலத்தான், இராணுவத்தினரிடம் பேசும்போது எதிரிகள் என்பது நாட்டை ஆக்கிரமிக்க துடிக்கும் எதிரிகள், கட்சிக்கூட்டத்தில் எதிரிகள் என்பது எதிர் கட்சிகள் எதிர் கருத்துடையவர்கள்... அது போலத்தான் உலகில் எப்போதும் எல்லோருக்கும் எல்லா காலத்திலும் பொதுவான கருத்து என்ற ஒன்று இல்லவே இல்லைகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-56130808358862574772009-11-14T14:17:46.856+08:002009-11-14T14:17:46.856+08:00தோழர் குழலி
உங்களுடன் உரையடியில் உரையாடிய தோழர்க...தோழர் குழலி<br /><br /> உங்களுடன் உரையடியில் உரையாடிய தோழர்கள் எத்தனை பேர் பெரியாரியலை சரியாக கடைபிடிப்பவர்கள் என்று சொல்ல முடியுமா?(இது வேண்டுகோள் தான்)<br /><br /> குறைந்த பட்சம் பெரியாரின் அடிப்படைக் கொள்கையான ஜாதி ஒழிப்புக்காக ஜாதி ஒழிந்த திருமணங்கள் செய்துள்ளார்கள்?.<br /><br />அல்லது பெரியார் கொள்கை அடிப்படையில் அவர்களின் செயபாடுகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.<br /><br /> ---------விவாதிப்போம்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-35648030358445691832009-11-14T14:16:31.072+08:002009-11-14T14:16:31.072+08:00//--------------1948- இல் நடந்த தூத்துக்குடி மாகாண...//--------------1948- இல் நடந்த தூத்துக்குடி மாகாண மாநாட்டில் தலைமையுரை, "குடிஅரசு" - 29-05-1948.//<br />இதில் 1948 என்பதை அடிக்கோடிட வேண்டும்... 1948 என்பதை நினைவுபடுத்த வேண்டும் 1949ல் திகவிலிருந்து பிரிந்து திமுக உருவானது என்பதையும் நினைவில் நிறுத்த வேண்டும்... இதைத்தான் context என்பதுகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-1950557826761484342009-11-14T14:16:03.373+08:002009-11-14T14:16:03.373+08:00The problem is not with Veeramani or DK.It starts ...The problem is not with Veeramani or DK.It starts with Periyar and it just continues.So dont blame the followers, blame the one who started that.In Periyar's DK if you disagree with him either you agree and continue, or you leave the DK, or be expelled.There is no scope for having a difference of opinion with high command and still continue in DK.It is as good as anyother sect where the leader's word is the word of the God.Tamiloviya has no problem with that.In DK it is Periyar->Maniammai->Veeramani. If you disagree with Veeramani you cannot remain in DK even if you claim that you follow Periyars philosophy 100% because following 100% means obeying Veeramani.<br />If you dont understand this I pity you. If you understand this you should start your criticism with Periyar.<br /> <br /><br />The only difference is Periyar is not god in DK.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-29405463146211103472009-11-14T14:12:15.676+08:002009-11-14T14:12:15.676+08:00பெரியாரின் விளக்கம் தொடர்கிறது:-
"ஒரு எஜமான்...பெரியாரின் விளக்கம் தொடர்கிறது:-<br /><br />"ஒரு எஜமான் வேலைக்காரனைப் பார்த்து, 'அந்தப் பெட்டியைக் கொஞ்சம் எடப்பா' என்று கூறினால், 'என் மனசாட்சி என்னை அதற்கு அனுமதிக்கவில்லையே' என்று கூறினால், அது முறையாகுமா? ஒரு டிஸ்டிரிக் சூப்ரண்டென்டெண்ட் 'சுடு!' என்று போலீஸ்காரனுக்கு உத்தரவுபோட, அவன் 'என் மனசாட்சி அதற்கு இடங்கொடுக்கவில்லையே' என்று கூறினால் அந்த சூப்ரண்டென்டெண்ட் கதி என்னாவது? கசாப்புக்கடையில் வேலை பார்க்க ஒப்புக் கொண்டவன், 'அந்த ஆட்டை வெட்டுடா' என்று எஜமான் உத்தரவு விடும்போது, 'அய்யோ என் மனசாட்சி மாட்டேன் என்கிறதே நான் என்ன செய்யட்டும்?' என்று கூறினால், 'ஏண்டா மடப்பயலே! முன்னாடியே உனக்கு இது தெரியாமற் போனதேனடா? அப்போது உன் மனச்சாட்சி எங்கேயடா போயிருந்தது?' என்று கேட்பானா, இல்லையா அவனை? <br /> <br />ஆகவே, மனச்சாட்சியோ, சொந்தப் பகுத்தறிவோ, கழகக் கொள்கையை ஒப்புக் கொள்ள மறுக்குமானால், உடனே விலகிக் கொள்வது தான் முறையே ஒழிய, உள்ளிருந்து கொண்டே குதர்க்கம் பேசித் திரிவது என்பது 'விஷமத்தனமே' ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.<br /> <br />சிலருக்கு நான் ஏதோ சர்வாதிக்காரம் நடத்த முற்படுகிறேன் என்று தோன்றலாம். இது ஓரளவுக்குச் சர்வாதிகாரம்தான் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், தோழர்களே நீங்கள் சிந்திக்க வேண்டும். "இந்தச் சர்வாதிகாரம் எதற்குப் பன்படுகிறதென்று? என்னுடைய சர்வாதிகாரத்தைக் கழக இலட்சியத்தின் வெற்றிக்காக; பொது நன்மைக்காகப் பயன்படுத்துகிறேனே ஒழிய, எந்த சிறு அளவுக்கும் எனது சொந்தப் பெருமைக்காகவோ, ஒரு கடுகளவாவது எனது சொந்த நன்மைக்காகவோ பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன். <br /> <br />--------------1948- இல் நடந்த தூத்துக்குடி மாகாண மாநாட்டில் தலைமையுரை, "குடிஅரசு" - 29-05-1948.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-76283390118224583842009-11-14T14:11:57.151+08:002009-11-14T14:11:57.151+08:00//பாத்ரூமில் அவுத்துப்போட்டுட்டு குளிப்பது போல ரோட...//பாத்ரூமில் அவுத்துப்போட்டுட்டு குளிப்பது போல ரோட்டில் அவுத்து போட்டு நடக்க முடியுமா? பொண்டாட்டியுடன் பேசுவது போல அம்மாவிடம் பேசமுடியுமா? இதெல்லாம் சந்தர்ப்பவாதம் என்று உங்களால் சொல்ல முடியுமா? //<br /><br />ஒரு தலைவர் தன் இயக்கத் தொண்டர்களுக்கு சொல்லும் கருத்தை நீங்கள் சொல்லும் விஷயங்களுடன் என்னால் ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை குழலி. கொள்கை முடிவுக்கும் குடும்ப உறவுகளுக்கும் எபப்டி முடிச்சி போட்டு ஒப்பிட முடியும்?<br /><br />இலங்கைக்கு சென்று பல்லிளித்துவிட்டு இந்தியா வந்து தினம் ஒரு அறிக்கை விட்டு தன் தவறை நியாயமாக்கும் முயற்சியில் இருக்கும் திருமாவளவன் நிலையில் தான் இன்று பெரியாரிஸ்ட்கள் இருப்பது போல் தெரிகிறது. <br /><br />தொண்டர்கள் அடிமைகளாக இருக்க வேண்டும் , கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது என பெரியார் சொன்னார் என்று ஒரு தரப்பு சொல்கிறார்கள். அடிமைன்னா அது அடிமை இல்லை, இது வேற என்று சமாளிக்கும் முயற்சியில் இன்னொரு தரப்பு. பாவம் தான் பெரியார். இயக்கம் என்றில்லாமல் தனி மனிதராகவே பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்திருக்கலாம். <br />இயக்கம் - கட்டுப்பாடு - நிலைப்பாடு - மரணம் - கொலை. <b>பெரியாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்</b>Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-11227047.post-51343927201619324792009-11-14T14:11:03.624+08:002009-11-14T14:11:03.624+08:00//ராமசாமி சொல்றான்னு நான் சொல்ற எதையும் அப்படியே ஏ...//ராமசாமி சொல்றான்னு நான் சொல்ற எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள், நீங்கள் உங்கள் பகுத்தறிவைக்கொண்டு ஆராய்ந்து பாருங்கள் என்று சொன்ன பெரியாரை ஒரு சர்வாதிகாரி போன்றும் மாற்று கருத்துகளுக்கு மதிப்பளிக்காதவராகவும் போன்ற தோற்றம் அளிக்கும் வகையில் தமிழ் ஓவியா பெரியாரின் கருத்துகளை எடுத்து போட்டுள்ளார்.//<br /><br />தோழர் குழலி <br /><br />பொதுமக்களுக்கும்,<br /><br /> இயக்கத் தொண்டர்களுக்காகவும்<br /><br />பெரியார் சொன்னதை பகுத்துப் பார்க்காததால் உங்களுக்கு அப்படித் தோன்றியிருக்கிறது. பெரியார் சர்வாதிகாரியா? இது குறித்து பெரியார் தரும் தகவல் இதோ:-<br /><br />"என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டுமென்ற கவலை எனக்கு ஒரு சிறிதும் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து என் லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய ஆட்கள் தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா? முட்டாள்களா? பைத்தியக்காரர்களா? கெட்டிக்காரர்களா? என்பதுபற்றி எனக்குக் கவலை இல்லை.<br /> <br />இந்தச் சந்தர்ப்பத்தில் எனது மதிப்பிற்குரிய நண்பர் பா.வே. மாணிக்கநாயக்கர் அவர்கள் கூறியது எனது ஞாபகத்திற்கு வருகிறது. அவர் ஈரோட்டில் எக்சிகியூட்டிவ் எஞ்சினீயராய் இருந்தபோது அவர் எங்கள் வீட்டில் குடியிருந்தார். மாடுகளுக்குச் சுலபமாய் இழுக்கக்கூடிய புதுமாதிரியான கவலை ஒன்று செய்யத் தனக்கு இரண்டு கொல்லர்களைத் தருவித்துக் கொடுக்கும்படி சொன்னார். நான் யோசித்து இரண்டு கெட்டிக்காரக் கொல்லர்களின், அதாவது துப்பாக்கி செய்யக் கூடியவர்கள் பெயரைக் குறிப்பிட்டு அவர்களை அழைத்து வரும்படி என் காரியஸ்தர்களுக்குக் கூறினேன்.<br /> <br />அப்போது அவர் சொன்னார், "கொல்லன் கெட்டிக்காரன் என்பவர்களை அனுப்பி வைப்பாயானால், அவர்கள் இருவருக்குள்ளும் கெட்டிக்காரத்தனப் போட்டி வேலையைக் கெடுத்துவிடும். அவர்களே எனக்கு யோசனை சொல்ல முந்துவார்கள். என் திட்டம் ஆட்டம் கொடுத்து வேலை நடவாது. ஆகவே, சொல்வதைப் புரிந்து கொண்டு அதன்படி வேலை செய்யக்கூடிய ஒரு படிமானமுள்ள சொன்னபடி நடக்கக்கூடிய, இரண்டு சம்மட்டியும், கத்தியும் பிடித்துப் பழகிய ஆளை அனுப்பி வைத்தால் போதுமானது. அவர்கள் முட்டாள்களாயிருந்தாலும் சரி; அவர்களைக் கொண்டு சுலபத்தில் வேலையை முடித்து விடலாம் என்று கூறினார். <br /> <br />புத்திசாலிகள் சண்டையிட்டுக் கொள்வது எப்போதுமே இயற்கைதான். ஆகவேதான், நான் நீடாமங்கலம் மாநாட்டின் போதே மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறேன்.<br /><br /> என்னைப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டுமென்று. யாராவது ஒருத்தன்தான் நடத்தக்கூடியவனாக இருக்க முடியுமே தவீர, எல்லோருமே தலைவர்களாக இருக்க முடியாது. மற்றவாகள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள்தான். தோழர்களே! நான் இப்போது கூறுகிறேன். நீடாமங்கலத்தைவிட ஒருபடி மேல் செல்லுகிறேன். <br /> <br />நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல, உங்கள் மனசாட்சி என்பதைக் கூட நீங்கள் கொஞ்சம் மூட்டைக் கட்டி வைத்துவிட வேண்டியதுதான். கழகத்தில் சேரு முன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம். என்னுடன் வாதாடலாம். உங்கள் மனசாட்சி என்ன கூறுகிறது என்றும், என்னுடைய தன்மை எப்படிப்பட்டது என்றும் நீங்கள் எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் ஆர அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம்!<br /> <br />ஆனால், எப்போது உங்கள் மனசாட்சியும், பகுத்தறிவும் இடங் கொடுத்து நீங்கள் கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்துவிட்டீர்களோ; அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச்சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு கழகக் கோட்பாடுகளைக் கண்மூடிப் பின்பற்றி நடக்க வேண்டியதுதான் முறை. <br /> <br /> --------பெரியாரின் விளக்கம் அடுத்த பின்னூட்டத்தில் தொடரும்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com