அமைச்சர்கள் முதல் அடிமட்டம் வரை திமுகவினரின் நிலபறிப்பு ரவுடியிசம்
ஒவ்வொரு முறை திமுகவுக்கு எதிராகவும் அதிமுகவிற்கு ஆதரவாகவும் வைக்கப்படும் ஒரு முக்கிய விமர்சனம் திமுக வந்தால் ரவுடியிசம் தலைதூக்கிவிடுமென்பது, என்னமோ அதிமுகவிலோ பிற கட்சிகளிலோ ரவுடிகளே இல்லாத மாதிரி, அப்போதெல்லாம் எதிர்வாதமாக வைப்பதென்னவோ திமுக காலத்தில் என்கவுண்டர்கள் செய்யப்பட்ட ரவுடிகளின் எண்ணிக்கை அதிமுக காலத்தில் செய்யப்பட்ட என்கவுண்டர்களை விட அதிகம், என்கவுண்டர்கள் மீதான கடும் விமர்சனமிருந்தாலும் திமுகவினர் காலத்தில் ரவுடியிசம் என்று சொல்வதெல்லாம் பார்ப்பன சதி, எட்செட்ரா எட்செட்ரா என நம்பியிருந்தவர்களில் நானும் ஒருவன்.
முதலில் அமைச்சர் என்.கே.கே.பி ராஜா மீதான நிலபறிப்பு ஆட்கடத்தல் மோசடி வழக்கு, 50 கோடி சொத்தை ஆட்டைய போட நினைத்த அமைச்சர், தொடர்ந்து நீதிமன்றத்தை நாடிய எதிர்தரப்பு(தகவல்கள் எல்லாம் அவர்கள் எந்த வம்புதும்புக்கும் போகாதவர்களாகவே தெரிகின்றது)அதை தொடர்ந்து அமைச்சர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
அடுத்ததாக வீரபாண்டி ஆறுமுகம் மீதான நிலபறிப்பு மோசடி , வழக்கு, அதை எதிர்கொள்ள பேரம்பேசப்பட்டது, இரு அமைச்சர்கள் விசயத்தில் எதிர்தரப்பால் மிரட்டல்கள் எல்லாம் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போன வாரம் நக்கீரனில் திமுக எம்.எல்.ஏ வும் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளருமான செங்குட்டுவன் 2 கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலத்தை அடியாட்கள் துணையோடு 23 இலட்சத்திற்கு ஆட்டைய போட்டுள்ளார் என குற்றசாட்டு.
வலைப்பதிவிலும் கூட கோ.ராகவன் சென்னையில் நிலம் திருடும் பெரிய குடும்பத்துப் பேரன்கள் அவரது சொந்தக்காரர்கள் நிலத்தை பெரிய இடத்து பேரன்கள் ஆட்டையை போட்டது பற்றி இப்படி எழுதியுள்ளார்
...
சினிமாவில் வருவது போல.. ஒரு குடிசை.. ஒரு மாருதி வேன். கொஞ்சம் அடியாட்கள் (மதுரையிலிருந்தாம்)....இப்பிடி இருக்கிறதாம் காட்சி.
காவல்துறையில் புகார் கொடுக்கப் போனாலும் அவர்கள் எந்தப் புகாரையும் ஏற்க மறுக்கிறார்களாம். தமிழகத்தின் பிரபல அரசியல் தலைவரின் மகன் இந்த விஷயத்தில் இருப்பதால் புகார் வேண்டாம் என்று காவல் துறையினரே "நல்லது" சொல்லி அனுப்புகிறார்களாம்.
...
அமைச்சர்கள் 50 கோடி ரூபாய் நிலத்தை ஆட்டைய போட்டால் எம்.எல்.ஏ 2 கோடி ரூபாய் நிலத்தை அபகரித்துள்ளார்கள், இதெல்லாம் கோடி ரூபாய் விசயங்கள் மேலும் அமைச்சர் எம்.எல்.ஏ க்கள் தொடர்பானவை எனவே பத்திரிக்கையில் வந்துள்ளன.
ஆனால் கவுன்சிலர் தொடங்கி இன்னும் ந.செ., கி.செ, வ.செ என திமுகவின் ஏதோ ஒரு 'செ'வை போட்டுக்கொண்டு நடுத்தரவர்கத்தினர்கள் சிறுக சிறுக சேர்த்து ஒரே சொத்தாக இருக்கும் சில இலட்ச ரூபாய் வீட்டு மனைகளை ஆட்டையை போட ஆரம்பித்துள்ளனர், காவல்துறைக்கு சென்றால் கேஸ் கொடுக்க 5,000 ரூபாயில் ஆரம்பித்து ஒரு 20ஆயிரம் ரூபாய் செலவுக்கு பின் திமுக கவுன்சிலர்கள் முன்னிலையில் ஒரு முப்பது பேருடன் கட்டைப்பஞ்சாயத்து நடக்கும், பிறகென்ன கால்வாசிக்கும் குறைவான சொற்ப விலையில் நிலத்தை பறிகொடுத்து அந்த நடுத்தர வர்கத்தினர் மேலும் தொல்லைகள் வராமல் இருந்தால் போதும் என நொந்து வருவார், இவைகள் எல்லாம் எங்கோ கேள்விப்பட்டோ பத்திரிக்கையில் படித்தோ சொல்லவில்லை, எனக்கு தெரிந்த இடங்களிலேயே நடந்துள்ளது. மேற்கொண்டு வேறு தளங்களில் பிரச்சினையை எடுத்து செல்ல உதவ தயாராக இருந்தும் அவர்கள் போதுங்க இதற்கே ரொம்ப பிரச்சினையாகிவிட்டது சனியன் இதோட போனா போதும் என்று அவர்கள் எதற்கும் தயாராக இல்லை.
அரசியல்வாதிகள் அரசு நிலத்தையும் பொறம்போக்கு நிலத்தையும் தான் ஆக்கிரமிப்பார்கள் என்றிருந்தது, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பணக்கார தனியார் நிலங்கள், பிரச்சினைக்குறிய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது ஆனால் இப்போது கருணாநிதியின் திமுக ஆட்சியில் அமைச்சர்கள் முதல் அடிமட்டம் வரை எந்த வில்லங்கமும் இல்லாமல் பக்கா டாக்குமெண்ட்டுகளோடு இருக்கும் தனியார் நிலங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளனர்.
50கோடி சொத்தை 5 கோடி செலவு செய்தாவது காப்பாற்றிடலாம் என்பவர்கள் வழக்கு பத்திரிக்கை என செல்கிறார்கள், 5 இலட்ச ரூபாய் சொத்துக்கு வெறும் சாபம் மட்டுமே கொடுக்க முடிந்த, அதுவும் சத்தம் போட்டு சாபம் கொடுக்க முடியாமல் வாய்க்குள்ளேயும் வீட்டுக்குள்ளேயும் வெறும் சாபம் மட்டுமே கொடுக்க முடிந்த சாதாரண நடுத்தரவர்கத்தின் சேமிப்பு நிலங்களை பிடுங்கி தின்னும் இந்த பிணம் தின்னும் ஈனத்தொழிலுக்கு
இவர்கள் எல்லாம் ஏதாவது -----(Fill in the blanks).
ஆனாலும் என்ன பார்ப்பனிய எதிர்ப்பு என்ற பெயரில் திமுகவினரின் இந்த ரவுடித்தனத்தையும் மறைக்கலாம் வாங்க....