Showing posts with label jayalalitha. Show all posts
Showing posts with label jayalalitha. Show all posts

கட்சத்தீவு மீட்பு - உச்சநீதிமன்ற நோட்டிஸ் - நன்றி செல்வி.ஜெயலலிதா


கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்கும் நடவடிக்கைக்காக மத்திய அரசிற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது, முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலே இம்மாதிரியான நடவடிக்கையை உச்சநீதிமன்றம் எடுத்துள்ளது...

கச்சத்தீவின் ஒப்பந்த நடைமுறைகளை இலங்கை அரசு சரியாக பின்பற்றாததினால் உலக நீதிமன்றத்தின் படியேறி கச்சத்தீவை திரும்பவும் பெறும் வாய்ப்பிருந்தாலும் தமிழனை கொல்லும் இலங்கை அரசுக்கு பொருளுதவி, இராணுவ உதவிகளும் மட்டுமின்றி ஆட்காட்டி வேலையையும் செய்து வரும் தமிழர் விரோத மத்திய அரசு(அதில் பங்களித்துக்கொண்டிருக்கும் தமிழர் கட்சிகளையூம் சேர்த்ததே மத்திய அரசு) கச்சத்தீவை மீட்கும் எந்த முயற்சியையும் எடுக்குமா என்பது சந்தேகமே...

இலங்கை பத்திரிக்கையில் வெளிவந்துள்ள இந்த செய்தி இன்னும் எந்த இந்திய ஊடகங்களிலும் தமிழ் ஊடகங்களிலும் வெளிவராதது இந்த பிரச்சினையில் எவ்வளவு அலட்சியமாக இந்திய தமிழ் ஊடகங்கள் நடந்து கொள்கிறது என்பது தெளிவாகிறது.

மீனவன் செத்தாலும் ஈழத்தவன் செத்தாலும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது.... தமிழர்களின் நிலத்தை தமிழர்களை இந்தியர்கள் இலங்கைக்கு வாரிவழங்கியதிலிருந்தே தமிழ்மண்ணின் மீதான இந்தியர்களின் எண்ணம் புரிந்ததே

இந்த பிரச்சினையை உச்சநீதிமன்றம் எடுத்து சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் மத்திய அரசிற்கு கட்சத்தீவை மீட்கும் நடவடிக்கைக்காக நோட்டிஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றத்திற்கும் நன்றி