descent AIIMS and indescent Law college


டீசண்ட்டான எய்ம்ஸ் மாணவர்கள் தாழ்த்தப்பட்ட மாணவர்களை எப்படி டீசண்ட்டாக வெளியேற்றினார்கள்... ஒரு தாழ்த்தப்பட்ட மாணவரின் கதவில் டீசண்ட்டான எய்ம்ஸ் மாணவர்களால் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் பக்கத்தில்

A senior resident doctor, who belongs to the scheduled castes, said: “We are so scared here because the director (P. Venugopal) himself is supporting them (the anti-quota agitators). We have nowhere to go to complain.”

AIIMS rules say a student who fails twice over the five years of study cannot pursue his or her post-graduation.
The students said that for fear of their careers being destroyed they did not want to “get into the bad books of the authorities”.
“The students have no choice but to bear this humiliation quietly and pass out in five years,” said Dr Vikas Bajpai of the Medicos’ Forum for Equal Opportunity, a pro-reservation group.

நம்ம டீசண்ட்டான எய்ம்ஸ் மாணவர்கள் எப்படி சாதி வேற்றுமையின்றி வாழ்கிறார்கள் என்பதை மேலும் படிக்க இங்கே போய் பாருங்கள்




ஆனால் சட்டக்கல்லூரி மாணவர்கள் எவ்வளவு இன் டீசண்ட்டாக இருக்கிறார்கள்....

உடலியன் வன்முறையை கட்டாயம் நானும் எதிர்க்கிறேன், சட்டக்கல்லூரி மாணவர்களின் மிக மோசமான செயலை நாம் எதிர்க்கும் இதே நேரத்தில் உடலியல் வன்முறை அல்லாத மற்ற வன்முறைகளுக்கும் இதே அளவு குரல் கொடுக்க வேண்டியது நம் கடமை....

இட்லிவடை பதிவில் இடஒதுக்கீடு பற்றி எழுதப்பட்டவை உடலியல் வன்முறையையும் விட மோசமான வன்முறை...

இது தொடர்பான என் முந்தைய பதிவு

சட்டக்கல்லூரி - இட்லிவடை வன்முறை என்பது வெறும் வன்முறையின் தெறிப்பா?!

descent AIIMS and indescent Law college


டீசண்ட்டான எய்ம்ஸ் மாணவர்கள் தாழ்த்தப்பட்ட மாணவர்களை எப்படி டீசண்ட்டாக வெளியேற்றினார்கள்... ஒரு தாழ்த்தப்பட்ட மாணவரின் கதவில் டீசண்ட்டான எய்ம்ஸ் மாணவர்களால் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் பக்கத்தில்

A senior resident doctor, who belongs to the scheduled castes, said: “We are so scared here because the director (P. Venugopal) himself is supporting them (the anti-quota agitators). We have nowhere to go to complain.”

AIIMS rules say a student who fails twice over the five years of study cannot pursue his or her post-graduation.
The students said that for fear of their careers being destroyed they did not want to “get into the bad books of the authorities”.
“The students have no choice but to bear this humiliation quietly and pass out in five years,” said Dr Vikas Bajpai of the Medicos’ Forum for Equal Opportunity, a pro-reservation group.

நம்ம டீசண்ட்டான எய்ம்ஸ் மாணவர்கள் எப்படி சாதி வேற்றுமையின்றி வாழ்கிறார்கள் என்பதை மேலும் படிக்க இங்கே போய் பாருங்கள்




ஆனால் சட்டக்கல்லூரி மாணவர்கள் எவ்வளவு இன் டீசண்ட்டாக இருக்கிறார்கள்....

உடலியன் வன்முறையை கட்டாயம் நானும் எதிர்க்கிறேன், சட்டக்கல்லூரி மாணவர்களின் மிக மோசமான செயலை நாம் எதிர்க்கும் இதே நேரத்தில் உடலியல் வன்முறை அல்லாத மற்ற வன்முறைகளுக்கும் இதே அளவு குரல் கொடுக்க வேண்டியது நம் கடமை....

இட்லிவடை பதிவில் இடஒதுக்கீடு பற்றி எழுதப்பட்டவை உடலியல் வன்முறையையும் விட மோசமான வன்முறை...

இது தொடர்பான என் முந்தைய பதிவு

சட்டக்கல்லூரி - இட்லிவடை வன்முறை என்பது வெறும் வன்முறையின் தெறிப்பா?!

சட்டக்கல்லூரி - இட்லிவடை வன்முறை என்பது வெறும் இரத்தத்தின் தெறிப்பா?!

வன்முறை என்பது உடல் சார்ந்தது மட்டுமே என்பது போன்ற கருத்துகள் பலரிடமும் பரவியுள்ளன.

வன்முறை என்பதன் அளவுகோல் உடலளவில் துன்பப்படுத்துவது மட்டுமே என்ற கருத்தை என்னளவில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை, வன்முறை என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல, வன்முறைகளின் வடிவம் பல, அதில் உடல் சார்ந்த வன்முறையும் ஒன்று, ஆனால் பலர் உடல் சார்ந்ததை தவிர மற்றவைகள் வன்முறை என்ற வரையரையில் கொண்டுவரவில்லை.

தீண்டாமை, இரட்டை குவளை முறைகள் வன்முறையில்லையா?, இங்கே இரத்தமில்லை, யாரும் உடலளவில் யாரையும் காயப்படுத்துவதில்லை(சாதிக் கலவரம் வேறு) அதற்காக இந்த தீண்டாமை வன்முறையல்ல என்று கொள்ள முடியுமா?

ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட சிலர் மீது குறிவைத்து நடத்தும் தாக்குதல்கள், பொது மக்களிடம் குறிப்பிட்ட சிலரை பற்றி தவறான உருவகத்தை பதியவைக்க வேண்டும் என்று பத்திரிக்கை தர்மத்தை மீறி வெளியிடும் தவறான தகவல்கள் அதனால் ஏற்படும் சேதம் ஊடகங்களின் வன்முறையல்லவா? நேர்மையற்ற முறையில் ஒரு சில ஊடகங்கள் மூலம் அரசியலதிகாரம் கைப்பற்றப்படுவது ஊடகங்கள் சமுதாயத்தின் மீது நடத்தும் வன்முறையல்லவா, இங்கேயும் கூட கத்தியில்லை, இரத்தமில்லை உடலளவில் துன்பமில்லை, அதற்காக இது ஊடக வன்முறையல்ல என்று உருவகித்துக் கொள்ள இயலுமா?

சனாதானம்,மனு நீதி என்ற பெயரில் கடவுள் குடி கொண்டிருக்கும் கோவில்களிலும் கூட உரிமைகளை மறுப்பது என்பது வன்முறையல்லவா? இங்கும் கூட கத்தி, இரத்தமில்லை தான், அதற்காக இது வன்முறையல்லவா?

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் விமர்சிப்பதும், தீய கருத்துகளை சொல்லி பலரை மனதளவில்,உணர்ச்சிகளை காயப்படுத்துவதும் வன்முறை என்ற அளவீட்டில் அடங்காதவையா?

மொழி திணிப்பு, மொழிகளை நீச மொழி என்பது, தாய்மொழியில் கோவில் குடமுழக்கு நடத்தினால் பாவம் என்பதெல்லாம் மொழிகளின் மீது நடத்தப்படும் மொழி வன்முறையில்லையா? இங்கும் கூடத்தான் உடல் சார்ந்த துன்பப்படுத்துதல் இல்லை.

இராசதந்திரம் என்ற பெயரில் இழைக்கப்படும் துரோகங்கள் எல்லாம் வன்முறையல்லவா? இரத்தம் தெறிக்காமல் இருப்பினும்.

வியாபார தந்திரம் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் சந்தையை கைப்பற்றுதலில் கூட உடல் காயப்படுவதில்லை தான், ஆதலால் இது வன்முறையல்ல என்றாகிவிடுமா?

வன்முறை என்பது வெறுமனே உடல் சார்ந்தது என்று மட்டும் சுருக்கிவிடாதீர்கள், வன்முறையின் ஒரு வடிவம் தான் உடல் சார்ந்த துன்பம், மேற்குறிப்பிட்டது போன்ற வேறு பல வடிவங்களும் வன்முறைக்கு உள்ளன.

எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையான இடஒதுக்கீட்டை கேவலப்படுத்தும் பார்ப்பன உயர்சாதி கும்பல்கள் இதையும் பயன்படுத்திக்கொண்டுள்ளன...

இட்லிவடை சட்டக்கல்லூரி மாணவர்களிடையே நடந்த சாதிக்கலவரத்தை எழுதும்போது மன்னிக்கவும் வெட்டி ஒட்டும் போது இடஒதுக்கீட்டை கேவலப்படுத்தி கொடுத்த குறிப்பு இது...

படிக்க இஷ்டம் இல்லாமல் கோட்டாவில் வரும் சிலர், படிப்பை விட்டுவிட்டு, அராஜகத்திலும் ஜாதி வன்முறையிலும் ஈடுபடுகின்றனர். இது எல்லாருக்கும் கெட்ட பெயரையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இப்படி வன்முறையை இளமையிலேயே நம்பி வாழும் இவர்கள் நாளைக்குக் கோட்டைக்குப் போவார்கள் என்று நினைத்தால்......


இட்லிவடையின் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை மீதான இந்த வன்முறை சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய வன்முறையையும் விட மூர்க்கமானது



பழைய பின்னூட்டங்களுக்கு இங்கே சொடுக்கவும்

சட்டக்கல்லூரி - இட்லிவடை வன்முறை என்பது வெறும் இரத்தத்தின் தெறிப்பா?!

வன்முறை என்பது உடல் சார்ந்தது மட்டுமே என்பது போன்ற கருத்துகள் பலரிடமும் பரவியுள்ளன.

வன்முறை என்பதன் அளவுகோல் உடலளவில் துன்பப்படுத்துவது மட்டுமே என்ற கருத்தை என்னளவில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை, வன்முறை என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல, வன்முறைகளின் வடிவம் பல, அதில் உடல் சார்ந்த வன்முறையும் ஒன்று, ஆனால் பலர் உடல் சார்ந்ததை தவிர மற்றவைகள் வன்முறை என்ற வரையரையில் கொண்டுவரவில்லை.

தீண்டாமை, இரட்டை குவளை முறைகள் வன்முறையில்லையா?, இங்கே இரத்தமில்லை, யாரும் உடலளவில் யாரையும் காயப்படுத்துவதில்லை(சாதிக் கலவரம் வேறு) அதற்காக இந்த தீண்டாமை வன்முறையல்ல என்று கொள்ள முடியுமா?

ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட சிலர் மீது குறிவைத்து நடத்தும் தாக்குதல்கள், பொது மக்களிடம் குறிப்பிட்ட சிலரை பற்றி தவறான உருவகத்தை பதியவைக்க வேண்டும் என்று பத்திரிக்கை தர்மத்தை மீறி வெளியிடும் தவறான தகவல்கள் அதனால் ஏற்படும் சேதம் ஊடகங்களின் வன்முறையல்லவா? நேர்மையற்ற முறையில் ஒரு சில ஊடகங்கள் மூலம் அரசியலதிகாரம் கைப்பற்றப்படுவது ஊடகங்கள் சமுதாயத்தின் மீது நடத்தும் வன்முறையல்லவா, இங்கேயும் கூட கத்தியில்லை, இரத்தமில்லை உடலளவில் துன்பமில்லை, அதற்காக இது ஊடக வன்முறையல்ல என்று உருவகித்துக் கொள்ள இயலுமா?

சனாதானம்,மனு நீதி என்ற பெயரில் கடவுள் குடி கொண்டிருக்கும் கோவில்களிலும் கூட உரிமைகளை மறுப்பது என்பது வன்முறையல்லவா? இங்கும் கூட கத்தி, இரத்தமில்லை தான், அதற்காக இது வன்முறையல்லவா?

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் விமர்சிப்பதும், தீய கருத்துகளை சொல்லி பலரை மனதளவில்,உணர்ச்சிகளை காயப்படுத்துவதும் வன்முறை என்ற அளவீட்டில் அடங்காதவையா?

மொழி திணிப்பு, மொழிகளை நீச மொழி என்பது, தாய்மொழியில் கோவில் குடமுழக்கு நடத்தினால் பாவம் என்பதெல்லாம் மொழிகளின் மீது நடத்தப்படும் மொழி வன்முறையில்லையா? இங்கும் கூடத்தான் உடல் சார்ந்த துன்பப்படுத்துதல் இல்லை.

இராசதந்திரம் என்ற பெயரில் இழைக்கப்படும் துரோகங்கள் எல்லாம் வன்முறையல்லவா? இரத்தம் தெறிக்காமல் இருப்பினும்.

வியாபார தந்திரம் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் சந்தையை கைப்பற்றுதலில் கூட உடல் காயப்படுவதில்லை தான், ஆதலால் இது வன்முறையல்ல என்றாகிவிடுமா?

வன்முறை என்பது வெறுமனே உடல் சார்ந்தது என்று மட்டும் சுருக்கிவிடாதீர்கள், வன்முறையின் ஒரு வடிவம் தான் உடல் சார்ந்த துன்பம், மேற்குறிப்பிட்டது போன்ற வேறு பல வடிவங்களும் வன்முறைக்கு உள்ளன.

எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையான இடஒதுக்கீட்டை கேவலப்படுத்தும் பார்ப்பன உயர்சாதி கும்பல்கள் இதையும் பயன்படுத்திக்கொண்டுள்ளன...

இட்லிவடை சட்டக்கல்லூரி மாணவர்களிடையே நடந்த சாதிக்கலவரத்தை எழுதும்போது மன்னிக்கவும் வெட்டி ஒட்டும் போது இடஒதுக்கீட்டை கேவலப்படுத்தி கொடுத்த குறிப்பு இது...


படிக்க இஷ்டம் இல்லாமல் கோட்டாவில் வரும் சிலர், படிப்பை விட்டுவிட்டு, அராஜகத்திலும் ஜாதி வன்முறையிலும் ஈடுபடுகின்றனர். இது எல்லாருக்கும் கெட்ட பெயரையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இப்படி வன்முறையை இளமையிலேயே நம்பி வாழும் இவர்கள் நாளைக்குக் கோட்டைக்குப் போவார்கள் என்று நினைத்தால்......


இட்லிவடையின் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை மீதான இந்த வன்முறை சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய வன்முறையையும் விட மூர்க்கமானது



பழைய பின்னூட்டங்களுக்கு இங்கே சொடுக்கவும்

எச்சரிக்கை, சாரு பெயரில் ஏமாற்றியது போன்ற ஏமாற்று மெயில் காசு கொடுத்து ஏமாறாதீர்கள்

சாருநிவேதிதா அவர்கள் பெயரில் ஏமாற்றி மின்மடல் அனுப்பி வெஸ்ட்டர்ன் யூனியன் மூலமாக பணம் பெற்றதை போன்ற ஒரு மெயில் இப்போது உலவுகிறது உஷார்...



fromNazeer Ahmed <ahnazeer19@yahoo.co.in>

to mailto:tabdull_83@hotmail.com
dateSat, Nov 8, 2008 at 2:35 PM

subjectEmergency!! I need your helpsigned-byyahoo.co.in


Hello,I am sorry I didn't inform you about my traveling for a program called Empowering Youth to Fight Racism, HIV/AIDS, and Lack of Education. The program took place in three major countries in Africa which are South Africa, Ghana and Nigeria. I am presently in Nigeria. I misplaced my wallet on my way to the hotel where my money, and other valuables were kept. I will like you to assist me with a soft loan urgently.The total sum of money that i would need would be $3,200US Dollars to sort-out my hotel bills and get myself back home. I will appreciate whatever you can afford, i'll pay you back as soon as i return,Let me know if you can assist me so that i can send you the details to use when sending the money through western union.Regard,

Nazeer Ahmed

எங்கே போனது இறையாண்மை? - தகிக்கும் தாமரை!


விகடனில் வெளியான கவிஞர் தாமரையின் செவ்வி...

காசு கொடுத்து படிக்கும் விகடன் பக்கங்களை அப்படியே முழுக்க மீள்பதிவு செய்வது தவறு தான்... இருந்தாலும் இந்த செவ்வி பேசும் பொருளின் முக்கியத்துவம் கருதி பதிப்பிக்கிறேன்... என்ன ஒரு ஆயிரம் பேர் என்பதிவு வழியாக இதை படிப்பதால் விகடனுக்கு எந்தவித நட்டமும் வந்துவிடாது என்றே எண்ணுகிறேன்...

இனி தாமரையின் செவ்வி

நீரலை மேல் பச்சை இலைகள் படர்ந்திருக்க... நீர்ப் பரப்புக்கு மேல் சற்றே தலைநீட்டி இதழ் விரித்துச் சிரிக்கும் தாமரை மலர்கள்... ஆனால், ஒரு தாமரை சீறிப் பார்த்திருக்கிறீர்களா? அப்படிச் சீறியிருக்கும் தாமரை, மலரல்ல; திரைப் பாடலாசிரியை தாமரை!

கடந்த 5-ம் தேதி இலங்கைத் தமிழர்களுக்காக சென்னையில் திரைப்படத் தொழிலாளர்கள் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட தாமரை, ''ஈழத் தமிழர்களின் பெயரைச் சொல்லி தமிழக அரசு திரட்டும் நிவாரண நிதிக்குப் பணம் கொடுக்காதீர்கள். நான் ஒரு பைசாகூடக் கொடுக்க மாட்டேன்!'' என்று சீறியிருப்பது, பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. தாமரையை சந்தித்தோம்.

''நிதி கொடுக்கக் கூடாது என்று நீங்கள் சொல்லக் காரணம் என்ன?''

''இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டும் என்ற நம்முடைய குரல், எந்த அரசின் செவிக்கும் எட்டவில்லை. ஆனால், போரால் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு நிதி திரட்டுகிறார்களாம். ஒரு பக்கம் குண்டு... மறு பக்கம் தொண்டா? ஆட்டுக்கிடைக்குள் நுழைந்திருக்கும் ஓநாயிடம் புல்லையும் செடிகொடிகளையும்



கொடுத்து ஆடுகளைக் காப்பாற்றச் சொல்வது போலத்தான் இந்த நிதி வசூல்! செஞ்சிலுவைச் சங்கமும் இன்னபிற சேவை நிறுவனங்களும் சிங்கள அரசால் துரத்தி அடிக்கப்பட்டுவிட்ட நிலையில், இங்கே திரட்டப்படும் நிதி யார் மூலம் ஈழத் தமிழர்களைப் போய்ச் சேரும்? (இதற்கிடையில் தமிழக அரசு திரட்டிய நிவாரணப் பொருட்களை தமிழக முதல்வர் மற்றும் செஞ்சிலுவை சங்க நிர்வாகி ஆகியோர் பார்வையிட்டு, இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடைபெறுகின்றன) ராஜபக்ஷே மூலமாகவா? உண்மையாகவே நாம் கொடுக்கிற நிதி, சிங்கள அரசின் அக்கிரம வேலைகளுக்குத்தான் பயன்படப் போகிறது! பாமர மக்களுக்குக் கூட இது தெரிந்திருப்பதால்தான், பெரிய அளவில் நிதி சேரவில்லை. இல்லாவிட்டால், இந்நேரம் எத்தனையோ கோடிகள் குவிந்திருக்கும். நம்முடைய நிதியால் நம்முடைய இனமே அழிந்துவிடக் கூடாது என்பதால்தான் நிதி கொடுக்காதீர்கள் என்கிறேன்.''

[நானு இதே காரணங்களுக்காக இதே முடிவு தான் எடுத்துள்ளேன்]


''ஈழ மக்களுக்காக நம்முடைய அரசு எவ்விதமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்கிறீர்கள்?''

''சில மாதங்களுக்கு முன்பாக ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ஆயுத வாகனத்தை, புலிகளுடையது என்றெண்ணி போலீஸ் மடக்கிப் பிடித்தது. ஆனால், அந்த வாகனத்தை அனுப்பிவைத்ததே மத்திய அரசுதான் என்பது பிறகே தெரிந்தது. தமிழகம் வழியாகவே சிங்கள அரசுக்கு உதவி செய்யும் மத்திய அரசு, எப்படி தமிழர்களைக் காக்கும்? ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஒவ்வொரு முறையும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் முறையிடுவார். அவரும் 'கண்டிப்பாக இலங்கைக்கு உதவ மாட்டோம்' என உறுதி கொடுப்பார். ஆனாலும், நம்முடைய விரலைக் கொண்டே நம் கண்ணைக் குத்துகிற வேலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது! கொள்கை, கோட்பாடுகளை எல்லாம் தூக்கி வீசிவிட்டுத் துடிக்கவேண்டிய தமிழக அரசியல்வாதிகள், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாகக் குட்டையைக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசின் சட்டையைப் பிடித்துத் தமிழக அரசு, சிங்களப் போரைத் தடுக்கச் சொல்ல வேண்டும். அதைவிட்டுவிட்டு, உண்டியல் குலுக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது? நம்முடைய குடும்பத்தில் ஒருவர் குண்டடிபட்டால், நாம் என்ன செய்வோமோ... அதைத்தான் ஈழத் தமிழர்கள் விஷயத்திலும் செய்யவேண்டும்!''

''ஈழ விவகாரத்தில் தி.மு.க. அரசின் ஒட்டுமொத்த நிலைப்பாடு பற்றி...''

''தி.மு.க., அ.தி.மு.க. என்ற பேதங்களைத் தூர வீசுங்கள்... எந்தக் கட்சி இங்கே உண்மையான உணர்வோடு செயல்படுகிறது? அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஆறு தீர்மானங்களில் முதன்மையானது, இலங்கையில் போர்நிறுத்தம் செய்யவேண்டும் என்பது. இன்றளவும் அப்படி செய்யப்படாத நிலையில், தமிழக எம்.பி-க்கள் ராஜினாமா செய்ய வேண்டியதுதானே? இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே பாக்கி இருக்கும் பதவி யைக்கூட தூக்கியெறிய எந்தக் கட்சியும் தயாராக இல்லையே? முதல்வர் கலைஞரோ, 'எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டால், இப்போது இலங்கைத் தமிழர்களுக்காக மேற்கொள்கிற கொஞ்சநஞ்ச உதவிகளையும் செய்ய முடியாமல் போய்விடும்!' என்கிறார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றியபோது, இந்த விஷயம் அவருக்குத் தெரியாமல் போனது ஏன்?

நம்முடைய தயவில்தான் மத்திய அரசின் நாற்காலி ஆடாமல் நிற்கிறது. நம் இனத்துக்கு உதவாத அந்த அரசு இருந்தால் என்ன... கவிழ்ந்தால் என்ன? தமிழக எம்.பி-க்கள் ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டபோது, அனைத்துக் கட்சிக் கூட்டத் தில் கலந்துகொள்ளாத கட்சிகள்கூட அதனை வரவேற்றன. அந்த ஒருமித்த குரல் இப்போது வலுவிழந்து போய்விட்டது. தமிழக அரசின் மூலம் ஈழத் தமிழனுக்கு விடிவு கிடைத்துவிடும் என எண்ணிய என்னைப் போன்ற சாதாரண மக்களின் நம்பிக்கை இன்று வேரறுந்துவிட்டது.''

'' 'ஈழ விவகாரத்தில் இறையாண்மைக்கு உட்பட்டுதான் தீர்வு காணமுடியும்' எனத் தமிழகத்தைச் சேர்ந்த சிலரே வாத மிடுகிறார்களே?''

''இறையாண்மையைக் காரணம் காட்டி ஈழப் பிரச்னையை வேடிக்கை பார்ப்பவர்கள்- தமிழின துரோகிகள், மன்னிக்க முடியாத அயோக்கியர்கள்! நமது அனுமதி இல்லாமல் கச்சத்தீவை மத்திய அரசு, இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததே... மின் தட்டுப்பாட்டால் தமிழகமே வெந்து புழுங்கும் வேளையிலும், தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு போகும் மின்சாரம் மட்டும் எந்த பாதிப்புமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறதே... [அதானே!]இது மட்டுமல்லாமல் தண்ணீர் பிரச்னைகளில் கர்நாடகா, கேரள மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தையே மதிக்காமல் தமிழகத்தின் உரிமைகளைக் காலில் போட்டு நசுக்கிக் கொண்டிருக்கின்றனவே... அப்போதெல்லாம் எங்கே போனது இந்த இறையாண்மை? அப்பாவி மீனவன் குண்டடிபட்டுச் சாவதைத் தடுக்க முடியாத நாம், இறையாண்மை பற்றிப் பேசுவது சகிக்க முடியாத கேவலம்! இந்தியாவின் இறையாண்மையைக் காக்கும் பொறுப்பு தமிழகத்துக்கு மட்டும்தானா? மற்ற மாநிலங் களுக்குக் கிடையாதா? ஈழப் பிரச்னையில் மட்டும் இறையாண்மையின் பெயரைச் சொல்லி தமிழகத்தின் வாயை அடைப்பது எந்த விதத்தில் நியாயம்''

''இறையாண்மை பாதிக்கப்படுவதாகச் சொல்லி வைகோ, கண்ணப்பன், அமீர், சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த அதிரடிப் பேச்சுகளின் பலனாக உங்கள் மீதும் சட்ட நடவடிக்கைகள் பாய்ந்தால்..?''

''அமீரும் சீமானும் கேள்வி கேட்டதால் உள்ளே தள்ளப்பட்டார்கள். ஆனால், அவர்களது கேள்விக்கு இன்று வரை தமிழக அரசு பதில் சொல்லவில்லை! மாறாக, கேள்வி கேட்பவர்களுக்கு வாய்ப்பூட்டு போடப் பார்க்கிறது அரசு. 'தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுவதே தவறாகிவிடாது' என உச்ச நீதிமன்றமே பட்டவர்த்தனமாகச் சொல்லி விட்டது. அதையும் தாண்டி அடக்குமுறையை மேற்கொண்டு ஒரு தாமரையைக் கைது செய்தால், அதன் பின்னணியில் ஓராயிரம் தாமரைகள் முளைப்பார்கள்.

[அரசியல்வாதிகளை அடித்த கூத்தில் நொந்து போன மனதுக்கு சீமானும், அமீரும், மன்சூர் அலிகானும் இப்போ தாமரையுமே மருந்திட்டுள்ளார்கள்]

நான் சாதாரண குடிமகள்தான். தமிழ் மக்களின் அடிமனதில் கிளர்ந்தெழும் தகிப்பாகத்தான் என் குரல் ஒலிக்கிறது. மொத்தத்தில், தன்மானத்தை விட்டுவிட்டு இந்தியப் பேரரசுக்குக் கப்பம் கட்டும் அடிமைத்தனத்தின் எடுத்துக்காட்டாக விளங்கும் தெம்பற்ற குறுநில அரசாகத்தான் தமிழகம் இருக்கிறது. இதைச் சொல்வதற்காக என்னைக் கைது செய்வார்களேயானால், இப்போதே சிறைக்குப் போகத் தயாராக இருக்கிறேன். என்னை எப்போது வேண்டுமானாலும் கைது செய்யட்டும். ஆனால், என் கேள்விகள் அப்படியேதான் இருக்கும்! தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் டெல்லியின் எடுபிடி களாக இருக்கும்வரை ஈழத்துத் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, உலகில் இருக்கும் எந்த தமிழனுக்கும் விடிவு கிடைக்கப் போவதில்லை!'' [நெத்தியடி]

சகோதர யுத்தம் பற்றி கலைஞரும் அதற்கு ஈழத்தமிழன் பதிலும்

இலங்கை: என்னால் தனித்து ஏதும் செய்ய முடியாது- என்று அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் கருணாநிதி... நல்லா பாருங்க நல்லா பாருங்க கையாலாகதவர்னு சொல்லலை, தனித்து எதுவும் செய்ய முடியாதுன்னு தான் சொல்லியிருக்கார், அப்புறம் கலைஞரை கையாலாகாதவர்னு சொன்னா கலைஞர் மனைவி துணைவி மகன் மகள் கணக்கெல்லாம் காண்பிக்க வந்துடுவாரு பொன்முடி, நெறைய மனைவிகளும் நிறைய புள்ளைகளும் பெத்துக்கிட்டவங்கதான் கையாலாகவறங்க மத்தவங்க கையாலாகாதவங்கன்னா பொன்முடி கணக்குப்படி பெரியாரும், அறிஞர் அண்ணாதுரையும் எம்ஜியாரும் கையாலாகாதவர்களா?


அந்த அறிக்கையில் புலிகளின் சகோதர யுத்தம் பற்றி இப்படியாக விமர்சித்திருந்தார்...

தமிழர்க்கு உரிமை பெற்றுத் தர போர்க்கோலம் பூண்டவர்கள், பகைவர்கள் மீது பாய்ந்திடாமல்; சகோதர யுத்தம் நடத்துவதிலேயும் அவற்றில் மாண்டு மடியும் தமது பழைய களத் தளபதிகளுக்கு சமாதிகள் அமைத்திடும் பணியிலேயும் காட்டிய விறுவிறுப்பை இன ஒற்றுமையில் காட்டத் தேவையில்லையென்றே கருதிச் செயல்பட்டு;
தமது இனம் அறவே செத்து மடிவது குறித்து அக்கறையற்றே இருந்து விட்டனர்.

அதற்கு Eela Thamilan என்பவர் கொடுத்த பின்னூட்டம் பளார் பளார்னு உட்ட மாதிரி இருந்தது, அது உங்கள் பார்வைக்கு இங்கே...

பதிவு செய்தவர்: Eela Thamilan பதிவு செய்தது: 06 Nov 2008 10:55 pm

உனது பிள்ளைக்கும் உற்றார் உறவினருக்க உன் குடும்ப துதிபாடிகளுக்கும் கீழ்சபையில் எம்பி பதவியும் மத்தியில் அமைச்சர் பதவியும் உன்னால் தனித்து நின்று மத்தியரசிடம் வாங்கி கொடுக்கமுடியும் ஆனால் எந்த இனத்தின் பெயாரால் பிழைப்பு நடத்துகிறாயோ அந்த இனத்திற்கு எதாவது நன்மைசெய்யதான் உன்னால் முடியாது.
விடுதலைப்புலிகள் தமிழினபகைவர்களான சிறிலங்கா படையுடன் மோதமால் வாளதிருக்க. 50 000 மேற்ப்பட்ட சிங்களபடை வாந்திபேதி கண்டா தமிழீழமண்ணில் அழிந்தது! 1500 இந்திபடை தமிழீழத்தில் எப்படி மடிந்தது!
தமிழை தாய் மொழியாக பேசிகொண்டு தமிழினத்தை கருவறுப்பவர்களை தமிழின துரோகிகள் என்று சொல்லாது தமிழர்களின் சகோதரர்கள் என்று உங்களைவிட்டால் எந்த முட்டாளாலும் சொல்ல மாட்டான். விடுதலைபுலிகளுடன் டெலோ தமிழரசுகட்சி தமிழ்காங்கிரஸ் ஈபிஆர்எல்எப் ஈரோஸ் என 5கட்சிகள் புலிகளுடன் கூட்டமைத்திருப்பதை தெரிந்து கொண்டும் ஏன்தான் பொய் பேசுகிறீர்கள்.23 வடகிழக்கு தமிழ்நாடளமன்ற உறுப்பினர்களில் 22 பேர் புலிகளை நிபந்தனையின்றி ஆதரிப்பதை தெரிந்து கொண்டும் ஏன்தான் பொய் பேசுகிறீர்கள்.இது உங்களுக்கு மாபெரும் ஒற்றுமையாக தெரியவில்லையா!
அண்ணா காலத்தில் திமுக வாக இருந்தது உன் காலத்தில் அதிமுக மதிமுக தேதிமுக இதிமுக........ இப்படி சிதறிப்போனாது கூட நீ புலிகளிடம் எதிர்பார்க்கும் ஒற்றுமையால்தானா!.
மகன் ஸ்ராலினிற்கும் அழகிரிக்கும் இடையிலுள்ள உலகமகா ஒற்றுமை தமிழரிடத்தில் இல்லையென்ற சொல்கிறீர். அல்லது மாறன் குடும்பத்திற்கும் கலைஞர் குடும்பத்திற்கும் இடையிலுள்ள இனிய ஒற்றுமையையா புலிகளிடம் எதிர்பார்க்கிறீர்கள்.
மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி விழுந்த வீரமறவர்களுக்கு மாவீரர்களிற்கு செய்யும் ஒரு சிறியமரியாதையே கொச்சைபடுத்தும் கேவலம் கெட்ட உன்னை நேற்றுவரை தமிழின தலைவனாக நினைத்தது மதித்தது என் தப்புதான். உயிரோடு இருக்கும் உன்பெயரில் சாலைகளும் கிராமங்களும் (காலனிகளும்) விருதுகளும் உருவச்சிலைகளும் அமைத்து மகிழும் போது அந்த இழிவான சுயதம்பட்டம் உனக்கு உறைக்கவில்லையா? மாவீரர் கல்லறைகளையும் அவர்தன் ஈகத்தையும் இந்த கார்த்திகை மாதத்தில் கொச்சை படுத்திய உனக்கும் சிங்களஇனவெறியர்களிற்கும் இடையே எந்தவொரு வேறுபாட்டையும் என்னால் பார்க்கமுடியவில்லை

கெட்ட வார்த்தையில் வெரைட்டி தேடிய சுகுணா இவ்ளோதானா?

பழைய குப்பைதான் கிளற வேண்டாம் தான் நாறும் தான், வேறு எவனாவதென்றால் கிளறியிருக்க மாட்டேன், சுகுணா மீதான தனிப்பட்ட மதிப்பும் சுகுணாவின் கொள்கை பிடிப்பும் தான் இதை கிளறவைத்துள்ளது....

பதிவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தை கேவலமாக மிக ஆபாசமாக சில பதிவுகளில் எழுதப்பட்டு இருந்த காலத்தில் அதை எதிர்த்து பரவலாக விவாதங்கள் நடந்து கொண்டிருந்த போது சுகுணா திவாகர் உதிர்த்த பொன்மொழிகள் தான் அந்த ஆபாச பதிவுகளை நான் அதாவது சுகுணா தற்போதெல்லாம் படிப்பதில்லை ஏனென்றால் அந்த பதிவுகளில் உள்ள கெட்ட வார்த்தைகளில் வெரைட்டி இல்லை என்று உதிர்த்தார்.... மேலும் தான் மிகுந்த வித்தியாசமானவராகவும் பொதுப்புத்தியில் அடங்காதவராகவும் தன்னை காண்பிக்கவோ என்ன எழவோ என் குடும்பத்தாரையோ அல்லது என்னை தேவடியா மகனே என்று எழுதினால் கூட கண்டுகொள்ள மாட்டேன்(அதே வார்த்தைகள் இல்லையென்றாலும் இவர் அப்போது உதிர்த்த பொன்மொழி இது தான்) என்று கூறியவர் இன்று ஏதோ ஒரு பதிவில் (அது என்ன எழவு பதிவு என்றோ அதில் என்ன எழவு எழுதியிருந்தது என்றும் எனக்கு தெரியாது) அவரது மனைவியை அவள் இவள் என்று பின்னூட்டி விட்டார்கள் என்று வருத்தப்பட்டிருக்கிறார்... இதோ அவரின் வார்த்தைகளிலேயே அது கீழே

ஆனால் இந்த சர்ச்சையில் எனக்கு ஒரே ஒரு வருத்தம். என் மனைவி ஜெயந்தியை அவள், இவள் என்றெல்லாம் ஏகவசனத்தில் பின்னூட்டமிட்டுக்கொண்ட ஒரு பதிவு. (ஏற்கனவே திருமணமான புதிதில் வந்த நள்ளிரவு தொலைபேசி மிரட்டல்களுக்கு அடுத்து இது மன உளைச்சலை ஏற்படுத்தியது)


நிச்சயமாக சுகுணாவின் மனைவியை பற்றி எழுத எந்த நாய்க்கும் உரிமையில்லை அதை கண்டிக்கிறோம்...

அவள் இவள் என்று உமது அன்புக்குறியவரை எந்த நாயோ எழுதியதற்கே வருத்தப்படும் உம்மால் கெட்ட வார்த்தையில் வெரைட்டி இல்லை என்று எழுதிய போது ஏற்கனவே மன உலைச்சலில் இருந்தவர்களுக்கு எப்படியிருக்கும்? அந்த அளவிற்கு பேசிய சுகுணாவால் இன்றைக்கு அவள் இவள் என்ற வார்த்தைகளுக்கே எப்படி மனவருத்தமும் உளைச்சலும் ஏற்படுகிறது?

இது சுகுனாவுக்கு மட்டுமில்லை, அறிவுரை முற்போக்கு புரட்சி புண்ணாக்கு எல்லாம் மற்றவர்களுக்கு பேசும்போது நல்லா தான் இருக்கும், தமக்கும் அதே சூழல் வரும் போது எப்படியாக இருக்கும் என்பதற்கான ஒரு நிகழ்வு தான்...

காத்திருந்து மாட்டுனியாடா மகனே என்று நேரம் கிடைக்கும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போது குத்தி காட்டுகிறாயா என்று கேட்பீர்களானால் ஆமாம் காத்திருந்து சரியான வாய்ப்பு கிடைக்கும் போது சொன்னால் தான் உணர்வு பூர்வமாக புரியும் இல்லையென்றால் அப்போதும் முற்போக்கு மூளைக்கு சரியாக புரியாது...

இந்த பதிவு விடயத்தை சுகுணா திவாகருக்கு மட்டும் தெரிவிக்க வேண்டுமெனில் சுகுணாவுக்கு ஒரு மின் மடலோ அவரின் கைபேசியில் அழைத்தோ சொல்லியிருப்பேன், ஆனா இது சுகுணாவுக்கு மட்டுமல்ல, சுகுணாவை போன்று எண்ணமிருக்கும் சில முற்போக்குவாதிகளுக்கும் இந்த செய்தி போக வேண்டுமென்பதால் இது பதிவாகவே ஆனது.

இந்த பதிவுக்கு பொட்டீகடை சத்யா வந்து Piss off kuzhali... What the fuck u really want from others? என்று பின்னூட்டமிட்டாலும் எமக்கு கவலையில்லை ஏனெனில் இந்த பதிவு பொட்டீக்கும் சேர்த்து தான்.என்ன எழவு சுகுணாவுக்கு இப்போ புரிஞ்சதுனா பொட்டீக்கு இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி புரியும் அம்புட்டுதான்

கெட்ட வார்த்தையில் வெரைட்டி தேடிய சுகுணா இவ்ளோதானா?

பழைய குப்பைதான் கிளற வேண்டாம் தான் நாறும் தான், வேறு எவனாவதென்றால் கிளறியிருக்க மாட்டேன், சுகுணா மீதான தனிப்பட்ட மதிப்பும் சுகுணாவின் கொள்கை பிடிப்பும் தான் இதை கிளறவைத்துள்ளது....

பதிவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தை கேவலமாக மிக ஆபாசமாக சில பதிவுகளில் எழுதப்பட்டு இருந்த காலத்தில் அதை எதிர்த்து பரவலாக விவாதங்கள் நடந்து கொண்டிருந்த போது சுகுணா திவாகர் உதிர்த்த பொன்மொழிகள் தான் அந்த ஆபாச பதிவுகளை நான் அதாவது சுகுணா தற்போதெல்லாம் படிப்பதில்லை ஏனென்றால் அந்த பதிவுகளில் உள்ள கெட்ட வார்த்தைகளில் வெரைட்டி இல்லை என்று உதிர்த்தார்.... மேலும் தான் மிகுந்த வித்தியாசமானவராகவும் பொதுப்புத்தியில் அடங்காதவராகவும் தன்னை காண்பிக்கவோ என்ன எழவோ என் குடும்பத்தாரையோ அல்லது என்னை தேவடியா மகனே என்று எழுதினால் கூட கண்டுகொள்ள மாட்டேன்(அதே வார்த்தைகள் இல்லையென்றாலும் இவர் அப்போது உதிர்த்த பொன்மொழி இது தான்) என்று கூறியவர் இன்று ஏதோ ஒரு பதிவில் (அது என்ன எழவு பதிவு என்றோ அதில் என்ன எழவு எழுதியிருந்தது என்றும் எனக்கு தெரியாது) அவரது மனைவியை அவள் இவள் என்று பின்னூட்டி விட்டார்கள் என்று வருத்தப்பட்டிருக்கிறார்... இதோ அவரின் வார்த்தைகளிலேயே அது கீழே

ஆனால் இந்த சர்ச்சையில் எனக்கு ஒரே ஒரு வருத்தம். என் மனைவி ஜெயந்தியை அவள், இவள் என்றெல்லாம் ஏகவசனத்தில் பின்னூட்டமிட்டுக்கொண்ட ஒரு பதிவு. (ஏற்கனவே திருமணமான புதிதில் வந்த நள்ளிரவு தொலைபேசி மிரட்டல்களுக்கு அடுத்து இது மன உளைச்சலை ஏற்படுத்தியது)


நிச்சயமாக சுகுணாவின் மனைவியை பற்றி எழுத எந்த நாய்க்கும் உரிமையில்லை அதை கண்டிக்கிறோம்...

அவள் இவள் என்று உமது அன்புக்குறியவரை எந்த நாயோ எழுதியதற்கே வருத்தப்படும் உம்மால் கெட்ட வார்த்தையில் வெரைட்டி இல்லை என்று எழுதிய போது ஏற்கனவே மன உலைச்சலில் இருந்தவர்களுக்கு எப்படியிருக்கும்? அந்த அளவிற்கு பேசிய சுகுணாவால் இன்றைக்கு அவள் இவள் என்ற வார்த்தைகளுக்கே எப்படி மனவருத்தமும் உளைச்சலும் ஏற்படுகிறது?

இது சுகுனாவுக்கு மட்டுமில்லை, அறிவுரை முற்போக்கு புரட்சி புண்ணாக்கு எல்லாம் மற்றவர்களுக்கு பேசும்போது நல்லா தான் இருக்கும், தமக்கும் அதே சூழல் வரும் போது எப்படியாக இருக்கும் என்பதற்கான ஒரு நிகழ்வு தான்...

காத்திருந்து மாட்டுனியாடா மகனே என்று நேரம் கிடைக்கும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போது குத்தி காட்டுகிறாயா என்று கேட்பீர்களானால் ஆமாம் காத்திருந்து சரியான வாய்ப்பு கிடைக்கும் போது சொன்னால் தான் உணர்வு பூர்வமாக புரியும் இல்லையென்றால் அப்போதும் முற்போக்கு மூளைக்கு சரியாக புரியாது...

இந்த பதிவு விடயத்தை சுகுணா திவாகருக்கு மட்டும் தெரிவிக்க வேண்டுமெனில் சுகுணாவுக்கு ஒரு மின் மடலோ அவரின் கைபேசியில் அழைத்தோ சொல்லியிருப்பேன், ஆனா இது சுகுணாவுக்கு மட்டுமல்ல, சுகுணாவை போன்று எண்ணமிருக்கும் சில முற்போக்குவாதிகளுக்கும் இந்த செய்தி போக வேண்டுமென்பதால் இது பதிவாகவே ஆனது.

இந்த பதிவுக்கு பொட்டீகடை சத்யா வந்து Piss off kuzhali... What the fuck u really want from others? என்று பின்னூட்டமிட்டாலும் எமக்கு கவலையில்லை ஏனெனில் இந்த பதிவு பொட்டீக்கும் சேர்த்து தான்.என்ன எழவு சுகுணாவுக்கு இப்போ புரிஞ்சதுனா பொட்டீக்கு இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி புரியும் அம்புட்டுதான்