Showing posts with label A.Raja Nira Radia tape. Show all posts
Showing posts with label A.Raja Nira Radia tape. Show all posts

மத்திய மந்திரிசபை லாபி ராசா, கருணாநிதி குடும்பம் மர்மம் உடைந்ததா?

மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் லாபி செய்து தொலைத்தொடர்பு துறை பெற்றாராம், இது தொடர்பாக ராசா மற்றும் நீரா ராடியா என்ற பெண்மணிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் வெளியிடப்பட்டுள்ளது, சரி லாபி செய்து பெற்றதாகவே இருக்கட்டும் ஆனால் கார்ப்பரேட் லாபிக்கு அடிபணிந்து பதவி கொடுத்த சோனியாவும், நலிந்த வீக்கான பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரசிடமும் தான் இதற்க்கு முதலில் பதில் சொல்லவேண்டும்.


சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் மிக மோசமாக நடந்துகொண்டார், நீரா ராடியாவிடம் பேசியது அவரா இல்லையா என்ற கேள்வி, பதட்டப்படாமல் சொல்லலாம், மேலும் அவரின் ஆட்கள் பத்திரிக்கையாளர்களை வீட்டுக்கு பாதுகாப்பா போக மாட்டே என்று மிரட்டும் அளவுக்கு இறங்கியிருக்கின்றார்கள்...

ஆ.ராசா ரொம்பத்தான் மோசம் ஊழல், லாபி செய்யறது என மத்ததெல்ல்ல்ல்ல்ல்ல்லாம் அவாங்ககிட்ட இருந்து கத்துக்கிட்ட ராசா இன்னும் கோபத்தை அடக்கி சிரிச்சிக்கிட்டே பதில் சொல்ல கத்துக்கலை... ஆமா ஆங்கில மீடியா ஆட்கள் தானே நோண்டுறாங்க விகடன், நக்கீரன் குமுதமெல்லாம் என்னா ஆனாங்க... ஓ சாரி எல்லாம் கலைஞர் பாராட்டுவிழாவுக்கு போயிட்டாங்களா?

நீராராடியா ஆ.ராசா உரையாடல்

A.Raja : My case is clear a?

Nira Radia: your is cleared yeah, your case is cleared last night only, no butuuuu what is happening with daya

A.Raja : aang?

Nira Radia: Daya?

A.Raja: Then the rest of the thing is textile or fertilizers

Nira Radia: Not for daya

A.Raja: either one

Nira Radia: But alagiri or daya only one can come a?

A.Raja: No two, two can come

Nira Radia: both

A.Raja: Balu will be problem I hope

Nira Radia: I think it will be difficult for the leader to justify three family members.

A.Raja: ha ha , ya but everybody knows


மூன்று பேர் மினிஸ்டரியில், ஆ.ராசா, அழகிரி, மாறன்... அழகிரி மாறன் ஓகே கருணாநிதி குடும்பம், இதுல ஆ.ராசா எப்படி குடும்பத்துல ஒருத்தர்? கருணாநிதி சொல்றது போல கழகம் தான் குடும்பம், குடும்பம் தான் கழகமா? அல்லது ஒரு வேளை நாஞ்சில் சம்பத்தை கேட்டா விலாவாரியா சொல்வாரா?

ஏ மக்களே பாருங்கள் எங்கள் தலைவர் கருணாநிதியை குடும்பத்துக்காக செயல்படுகிறார் என்கின்றீர்களே, தனது மகன் அழகிரிக்கும் பேரன் தயாநித்க்கும் எந்த துறை என்பது ராசாவுக்கு முடிவு செய்த பின் தான் என்றால் எப்படி குடும்ப உறுப்பினர்களை நடத்துகிறார் என்று தெரிகிறது.