நெடுஞ்சாலையில் ஒரு நாய்க்குட்டி

விடுமுறைக்கு வீட்டுக்கு காலையிலதான் வந்தோம்,
மதியம் சாப்பிட்டுட்டு என் தர்மபத்தினி தூங்குறாங்க,
அவங்களுக்கு பர்சேஸ் பர்சேஸ்னு மூணு நாளா முஸ்தபா சென்ட்டரை சுத்தின அசதி,
பயணக்களைப்பு இருந்தாலும் இன்னைக்கு ராஜ் அ பார்த்துடனம், இல்லைனா இருக்கப்போற ஒரு வாரத்துல இரண்டு நாளைக்கு மாமியார் வீட்டுக்கும், இரண்டு நாளைக்கு தங்கச்சி வீட்டுக்கும் போயிட்டா அப்புறம் டைம் கிடைக்கிறது கஷ்டம்.

“அம்மா கடலூர் வரை போயிட்டு வந்துடறேன்”
“ஏன்டா நீ வந்தா சும்மா இருக்க மாட்டியே உடனே சுத்தப்போற, போயி தூங்குடா”
அவங்களுக்கு எங்க திருட்டு தம் அடிக்கப்போறனோனு கவலை
“இல்லமா போயிட்டு பசங்களை பார்த்துட்டு வந்துடறன்”
“சாயந்திரம் காபிக்கு வந்துடு, நீ பாட்டுக்கும் சுத்திட்டு நைட்டு லேட்டா வராத”

“சரி மா” வண்டிய எடுத்தன்

ராஜோட 3 வயசு பையன், ம் இப்ப 4 வயசு இருக்கும், அவன் அக்காவுக்கும் புடிக்குமேனு சாக்லேட் வாங்கினனே எடுத்துவச்சனானு பிரண்ட்டு கவரை தொட்டு செக் பண்ணிக்கிட்டேன் நல்ல வேளை மறக்கலை.

இப்ப போனாதான் ராஜ் பிரஸ்ல கூட்டம் இருக்காது,
அவன்கிட்ட ப்ரீய பேசலாம், ஆமா ராஜ் பிரஸ்ல ஒரு பொன்னு வேலை பார்த்தாளே ஆக்ட்ரஸ் “அசின்” மாதிரி இருப்பாளா? அவ இன்னும் அங்கதான் இருப்பாளா “டேய் நீ ராஜ்ஜை பார்க்கப்போறியா இல்ல அந்த பொண்ணையா?” இந்த மாதிரி தேவையில்லாமா அடிக்கடி ஒரு குரல் சைட்ல கேட்குது, ஒரு நாள் அது கழுத்த திருகனும், ஒரு போன் பண்ணிட்டு போகலாம், இல்ல நேரா போயி அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சிய குடுக்கலாம். போன வருஷம் விடுமுறைக்கு வந்தப்போ அவன் பிரஸ்க்கு போயி பேசிக்கிட்டு இருந்தப்ப அரைமணி நேரத்துலயே அவனும் அந்த அசின் பொண்ணும் கண் ஜாடை காட்டுறதும், சாக்கிட்டு சாக்கிட்டு நையாண்டியா பேசனதலயுமே தெரிஞ்சிடிச்சு ஏதே மேட்டர் இருக்குனு.

நமக்குதான் இதை தெரிஞ்சிக்கலனா மண்டை வெடிச்சிடுமே, வாடா ராஜ் போயி ஒரு தம் போட்டுட்டு வரலாம்னு டீக்கடைக்கு போயி 2 டீ ஆர்டர் பண்ணி ஒரு தங்கராஜா வடிக்கட்டி புகையிலை சுருட்டை (அதாங்க கோல்ட் ஃபிளேக் பில்ட்டர் கிங்ஸ்) பத்தவச்சி அப்படியே அவன் வாயைகிளறினேன்.

“என்னடா நடக்குது, பிரஸ்லயே ரூட் போடுறியா? அந்த பொண்ணோட நீ பேசுற பேச்சுலாம் ஒரு மாதிரியா இருக்கு”
“இல்ல மாப்பிளை நானா ஒன்னும் பேசலை, ஒன்னும் பண்ணலை, அந்த பொண்ணாதான் ஆரம்பிச்சா, சரி போறவரைக்கும் போகட்டும்னு விட்டுட்டேன் அப்படியே போயிக்கிட்டிருக்கு”
“இப்போ எந்த அளவுள இருக்கு”
“ம்.... பெங்களூர் டூர் போயிட்டு வந்த அளவுள இருக்கு”
“அடப்பாவி.......”
உடனே உள்ளிருந்து ஒரு குரல் “டேய் அட்வைஸ் பண்ணு அட்வைஸ் பண்ணுடா”னு கத்துது,

“இங்க பாரு உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயி இரண்டு புள்ளைங்க வேற இருக்கு வேண்டாம் எதும் ஏடா கூடமா ஆயிடப்போகுது, நிறுத்திக்கோ”

“அதான் சொல்றன்ல, நானா எதும் ஆரம்பிக்கலை, அந்த பொண்ணாதான் விருப்பமா பேசுனா,ஆரம்பிச்சா, இதுல என் தப்பு என்ன?”

“இல்லடா, இப்போ ஹைவேஸ்ல வேகமா கார்ல போற, திடீர்னு ஒரு நாய்க்குட்டி குறுக்க ஓடி வந்துடுத்து, அது உன் தப்பு இல்லதான், அத அடிச்சிட்டு போனா யாரும் கேட்கப்போறது இல்லதான், இருந்தாலும் பிரேக் போடுவயில்ல, அதுமாதிரிதான் ”

பேசிக்கிட்டு இருக்கும்போதே சிங்கப்பூர்ல அவனுக்கு வேலை கிடைக்குமா அது இதுனு பேச்சை மாத்திட்டான், அவன் கில்லாடி எப்படி பேசனும், எப்படி மாத்தனும்னு தெரியும்.

இப்போ எந்த ஸ்டேஜ்ல இருக்குனு தெரியலை அவன் மேட்டரு.
எங்க அவன் கிட்ட பேசியே ரொம்ப நாள் ஆகுது, ஒரு ஒரு மாசமும் வீட்டுக்கு பேசறதுக்கு காலிங்கார்டுக்கே 200 வெள்ளி செலவாகுது, இதுல எங்க பிரண்ட்ஸ்களோட பேசுறது.

அவன் பிரஸ்க்கு முன்னாடி வண்டிய நிறுத்தி உள்ள போனா அவனைக்காணாம்.

கடைப்பையன் தான் இருந்தான்

“அண்ணே வாங்க, எப்போ வந்திங்க ஊர்லருந்து”
“காலையிலதான் வந்தேன், எங்க போயிருக்கான் ராஜ்”
“ராஜ்ண்ணன் இல்ல”
“வேற யாரு கடையில?”
“சார் தான் இருந்தாரு, இப்போதான் டாக்டரை பார்க்க போயிருக்காரு”
சார் வேற யாருமில்லை ராஜோட அப்பாதான், சக்கரை வியாதிக்காரரு,
தாசில்தாரா இருந்த்து ரிட்டையராயிட்டாரு

“அவர் ஏண்டா இங்கலாம் வராரு உடம்பு சரியில்லாமா?”
சொல்லிக்கிட்டே அப்படியே பிரஸ்ஸை ஒரு நோட்டம் விட்டன்
அந்த “அசின்” இருக்கானு, ம்... காணாம், வேலையை விட்டு நின்னுருப்பாலா?

“இல்லண இப்போ பிரஸ்சை சார்தான் பார்த்துக்குறாரு, ராஜண்ணன்”

“ஏண்டா வர்ரது இல்ல?”


“உங்களுக்கு மேட்டர் தெரியாதானே?”

இந்த பொண்ணையும் காணாம், அவனும் இல்ல, எங்கயாவது அந்த பொண்ணோட ஓடிப்போயிட்டானானு கணக்கு போட்டது மனசு.


“இல்ல சொல்லு என்ன மேட்டரு?”

இங்க வேலைக்கிருந்த அக்கா மண்ணைண்னை ஊத்திக்கிட்டு செத்துட்டாங்க,
அதிலருந்து ராஜ் அண்ணன் பிரஸ்க்கு வரது இல்ல

விபரீதம் புரிந்தது எனக்கு
“ஏண்டா மண்ணைண்னைய ஊத்திக்கிச்சி”
“அந்த அக்காக்கும் இவருக்கும் கணக்ஷன், ரெண்டுபேரு வீட்லயும் தெரிஞ்சி பிரச்சினையாயிடுச்சி”
“ஓ இப்போ எங்கடா இருக்கான்”

“வீட்ல இருப்பாருனா”

“சரி , சார் வந்தா சொல்லு நான் வந்துட்டுபோனன்னு”

வண்டியை நேரா ராஜ் வீட்டுக்கு ஓட்டினேன்

“வாப்பா ” சுரத்தே இல்லாமல் கூப்பிட்டார் ராஜ் அம்மா

“ம் வரன்மா”

“வீட்டில, அம்மா எல்லாம் எப்படி இருக்காங்க ”

“ம் நல்லா இருக்காங்க”

வீடே மயான அமைதியிலிருந்தது,

“சாந்தி டீ போடுமா. சந்திரன் வந்திருக்கு”

“ராஜ் எங்கமா?”

“ம் இருக்கான், முன் ரூம்ல தான் இருக்கான், மூணு மாசமாச்சு, அந்த ரூம்லயேதான் முடங்கி கிடக்குறான், என்ன கேள்விப்பட்டியா?”

“ம்... விடுங்கமா போக போக தெளிஞ்சிடுவான்”

“எல்லாம் எங்க தலையெழுத்து, இப்படிலாம் கேவலப்படணும், பாவப்படனும்னு”

“உணக்கு முன்னாடியே தெரியுமா?”

“இல்லமா இப்போதான் பிரஸ்ல பையன் சொன்னான்”

“அதில்ல அந்த பொண்ணுக்கும் ராஜுக்கும் தொடுப்பு இருந்ததுனு”

“இல்ல, ஜாடைமாடையா தெரியும்”

“அடப்பாவிகளா, எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு, எங்குடும்பத்துக்கு விஷயம் முத்துனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, என்கிட்ட ஒரு வார்த்தை அவன் இப்படிபண்றான் பாத்துக்குங்கனு சொல்ல கூடாதா நீ”

ஒன்றும் சொல்லாமல் குற்ற உணர்ச்சியில் மவுனித்திருந்தேன்...

ராஜின் மனைவி 2 டம்ளர் காபி எடுத்துக்கிட்டு வந்து, ஒன்றை என்னிடம் கொடுத்துவிட்டு முன் அறையிலிருந்தவனிடம் இன்னொன்றை கொடுத்தார்,

காபி டம்ளரோடு உள்ளே சென்று அவனை பார்த்தேன்.

“வா எப்ப வந்த” சுரத்தையேயில்லாமல் கூப்பிட்டான்

அங்கிருந்த அசாதாரணமான அமைதியை கலைக்கலாம்னு.

“சரி விடு ராஜ் நடந்ததையே நினைச்சிக்கிட்டிருந்தா எப்படி, தெளிவாயி வேலையப்பாரு”

என் முகத்தைக்கூடப்பார்க்காமல் தலையை குனிந்தவாறூ இருந்தான்.

“சரி விடு”

“இல்லடா தப்பு பண்ணிட்டேன்”

“பாவி பாவி அந்த பொண்ணு வாழ்க்கையையும் உன் பொண்டாட்டி வாழ்க்கையையும் சேர்த்து கெடுத்துட்டியேடா” னு மனசுக்குள்ள திட்டிக்கொண்டே
“இங்க பாரு நடந்தது நடந்துடுச்சி, இதுல உன்மேல ஒன்னும் பெரிய தப்பு இல்ல”

“இல்லடா நிச்சயமா பாவம் பண்ணிட்டேன்”

“இல்லடா, இப்போ ஹைவேஸ்ல வேகமா கார்ல போற, திடீர்னு ஒரு நாய்க்குட்டி குறுக்க ஓடி வந்துடுத்து, அடிச்சிட்ட அதுக்கு கொஞ்சநேரம் வருத்தப்பட்டுட்டு விட்டுடனும், இனிமே ஜாக்கிரதயா வண்டிய ஓட்டிக்கிட்டு போகனும், அதுமாதிரிதான் ”

“இல்லடா உதாரணம் ரொம்ப தப்புடா, ரொம்ப தப்பு, நான் பண்ணது ஒன்னும் ஹைவேஸ்ல நாய்க்குட்டிய அடிச்சிட்டு போறமாதிரி சாதாரண விஷயம் இல்ல”

“அந்தப்பொண்ணையே நம்பி இருந்த அவங்க அப்பா,அம்மா உடைஞ்சிட்டாங்க”
“எங்க விஷயம் தெரிஞ்சி அவ அப்பா அம்மா என்னையை கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க, என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சி அவ மாட்டிகிற அளவுக்கு போயிட்டா, அன்னிக்கி அவளை காப்பாத்துனதே பெரியவிஷயம்”

“ம்...”

“ஒரு நாள் சரி ரீஸ்டாபிஸ் போயி கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டேன்”

“என்கிட்ட சண்டை போட்டதுமில்லாம என் பொண்டாட்டி அவ கிட்ட தினம் தினம் அழுதுருக்கா”

“ம்...”

“இதுல வேற என் பையன் பிரஸ்க்கு வர்ரப்ப ஆண்டி ஆண்டினு அந்த பொண்னோட பாசமா இருப்பான்”

“ஒரு நாள் என் பொண்டாட்டி நீங்க விலகலைனா பசங்களையும் கொன்னுட்டு நானும் மாட்டிப்பேன்னு அழுதிருக்கா! ”

“அவங்க வீட்டில அப்பா,அம்மா கல்யாணம் பண்ணிக்கோடினு டார்ச்சர், என் பொண்டாட்டி மாட்டிப்பேன்னு டார்ச்சர், மனுஷி மண்ணைண்னைய ஊத்திக்கிட்டு போயிட்டா”

“அன்னிக்கு என் பையன் ஆண்டி ஆண்டினு அழுதான், இப்பவும் ஆண்டி ஆண்டினு பேசும்போது எனக்கு சுருக் சுருக்குனுது ”

“சரி அதுக்காக இப்போ என்ன பண்றது, தெளிஞ்சிவந்து பிரஸ்ச பாரு, உங்கப்பா கஷ்டப்படுறாரு பாரு”

“இப்போதைக்கு என்னால ஒன்னும் பண்ண முடியாது நடக்கறது நடக்கட்டும்”

“சரி நான் கிளம்பறன் அப்புறம் வரன்டா”

கொதிக்க கொதிக்க காபி குடிப்பவனின் காபி ஒரு ஓரமாக ஆறிப்போயிருந்தது

வண்டிய எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வரும்போது மனசு கணத்து இருந்தது,

அன்னைக்கே ஹைவேஸ், நாய்க்குட்டினு எங்கயோ படிச்சதையெல்லாம் உதாரணமா சொல்லாம நறுக்குனு நேரடியான பிரச்சனையை சொல்லி கட் பண்ண சொல்லியிருந்திருக்கனும்,

ஆமா நாம அப்படியே சொன்னா கூட கேட்கப்போறானா அவன்...... எல்லாம் அவன் தலையெழுத்துனு நினைச்சிகிட்டே

வண்டிய வீட்டில நிறுத்தனப்போ

“என்னடா அதிசயமா சொன்ன மாதிரி காபிக்கு வந்துட்ட”

“உடனே எங்கயும் சுத்த கிளம்பிடாதா உன்னைய பாக்க அத்தை வர்றதா சொன்னாங்க......”

“ம்...சரி. மா..எங்கயும் போகலை” னு அடுத்த வேலைய பார்க்க ஆரம்பித்தேன்

பின் குறிப்பு

முதல்முறையாக ஒரு சிறுகதை முயற்சி செய்துள்ளேன்,
நிறை குறைகளைதெரிவியுங்கள்.

7 பின்னூட்டங்கள்:

said...

The story is lengthy one, you may shorten this.

-Ravi-

said...

நாடோடி மற்றும் ரவியின் பின்னூட்டங்களுக்கு நன்றி, வரும் காலங்களில் கதையின் நீளத்தை குறைக்கின்றேன்.

said...

நல்லா வந்திருக்கு! இது ஆரம்பம்தானே?
போகப் போக சரியாயிடும்.
வாழ்த்துக்கள்!!!!

என்றும் அன்புடன்,
துளசி.

said...

gr8, keep it up...

said...

Good!

said...

Nalla irukku.

said...

நல்ல முயற்சி குழலி... நானும் கொஞ்சம் spelling mistake கோட தான் எழுதுவேன். :-) எனக்கே சில சின்ன தவறுகள் தெரிஞ்சது. அதை மட்டும் திருத்திடுங்க!