ஆம் முத்துக்குமார் தீவிரவாதிதான்...

முத்துக்குமாருக்கு சிலை திறப்பாம்
கொளுத்திக்கொண்டவனுக்கு எவ்வளவு திமிர்
காதல் தோல்வியால் தற்கொலை
வேலை கிடைக்காதவிரக்தியில் தற்கொலை
சம்பளம் பத்தாமல் தற்கொலை
சொல்லியிருப்போம் ஆயிரம் கதை

நாசமாப்போனவன்
கடிதம் எழுதிக்கொடுத்து விட்டு
கொளுத்திக்கொண்டான் திமிர் பிடித்தவன்
கடிதம் எழுதிய பொறம்போக்கு
பாப்பாத்தியை பற்றி மட்டும்
எழுதிவிட்டுப்போக வேண்டியது தானே
ஐம்பது ஆண்டுகாலம் கட்டியெழுப்பிய
தமிழ் இனத்தலைவனையும்
காட்டிக்கொடுத்துவிட்டானே

உடலை கைப்பற்றி
உணர்ச்சியை ஊட்டி
ஊரெங்கும் தம் பிணம் சுமந்து
புரட்சி செய்ய சொன்னானே
இவன் தீவிரவாதி இல்லையா?
இவனுக்கு எப்படி சிலை எழுப்ப முடியும்?


உதயக்குமாரை உண்டு ஏப்பம்
விட்டவர்களுக்கு
முத்துக்குமாரை முழுங்க
தெரியாதாடா முட்டாப்பயலே

கோர்ட்டு தீர்ப்புக்கும்
கருத்துக்கணிப்புக்கும்
அடுத்தவன் உயிரை
இழக்கவைக்கும் ஊரில்
இனத்துக்காக தன் உயிரை
இழக்கிறானாம்
இவன் தீவிரவாதி இல்லையா?
இவனுக்கு எப்படி சிலை எழுப்ப முடியும்?

டாஸ்மாக்கில் பாஸ்மார்க்கு
வாங்கிக்கொண்டிருக்கும்
எம் இனத்திற்க்கு
மானாட மயிலாடவில்
மயிங்கிக்கொண்டிருக்கும்
எம் இனத்திற்க்கு
பிரியாணி குஞ்சுகள் போதும்
எங்களுக்கு வேண்டாம்
முத்துக்குமார் போன்ற தீவிரவாதிகள்

9 பின்னூட்டங்கள்:

said...

//டாஸ்மாக்கில் பாஸ்மார்க்கு
வாங்கிக்கொண்டிருக்கும்
எம் இனத்திற்க்கு
மானாட மயிலாடவில்
மயிங்கிக்கொண்டிருக்கும்
எம் இனத்திற்க்கு
பிரியாணி குஞ்சுகள் போதும்
எங்களுக்கு வேண்டாம்
முத்துக்குமார் போன்ற தீவிரவாதிகள்//

அருமை அருமை இம்மாதிரி சவுக்கடி பட்டாவது உணரட்டும் நம் மக்கள் :-(

said...

நெஞ்சு எரிகிறது... வேறென்ன சொல்ல?

said...

உண்மைதான் நண்பரே... துரோகிகளின் கைகளில் அரசாங்கமும் அதிகாரமும். அதனால் தான் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. முதலில் நாம் ஒழிக்க வேண்டியது துரோகிகளைதான்...

said...

:(

முத்துக்குமாருக்கு சிலை வைத்தால், தான் செய்த இன துரோகத்தின் செதில்கள் ஆண்டாண்டு காலத்துக்கு சாலையில் செல்பவர்களுக்குத் தெரியும் என்றுதான்

said...

வழிமொழிகிறேன்.

இப்படிப்பட்ட சொரணையற்ற ஒரு கூட்டத்தில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட பித்துக்குளி அவன்.

என்று விடியப்போகிறதோ தமிழ் சமூகத்துக்கு.

said...

எது எப்படியோ அவரை இழந்த குடும்பம் படும் அவஸ்த்தை யாருக்கு தெரிய போகுது??

எல்லாமே இங்கு அரசியலாக்க படுகிறது

said...

வெறுப்புதான் மிஞ்சுகிறது!

:(

said...

தமிழனின் தீபாவளி எப்ப வரும் ன்னு கொஞ்சம் கணிச்சி சொல்லுங்க.

said...

சாட்டையடி வலிப்பது எமக்கு. சம்பந்தப்பட்டவர்கல்ல.

யாழ்