11 மாத பைத்தியகுழந்தை, தற்கொலை முயற்சி....நான் வியர்டா?

சாப்பிட்டிக்கொண்டே புத்தகம் படிப்பது, சோடா ஆர்வம் மற்றும் இன்ன பிற விசயங்கள் பல வலைப்பதிவர்களும் செய்வதாக சொல்வதால் அதெல்லாம் வியர்டே இல்லை என்றாகிவிட்டது.

எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான் ரொம்ப பொறுமைசாலி - ஷார்ட்டெம்பர்டு சரியான முன்கோபி

அல்ட்டவே மாட்டான் - சரியான அல்ட்டாப்பு, தலைக்கணம் பிடித்தவன்

கூட இருந்தா டைம் போறதே தெரியாது சிரிச்சிக்கிட்டே இருக்கலாம் - பேசறதுக்கு காசா கேக்குறாங்க, உம்மனாம் மூஞ்சி

முதல்முறை பாக்கும்போதே நல்லா பேசுறான் - சனியன் புடிச்சவன் ஒரு வருசமா இதே ஆபிஸ்ல இருக்கோம், லிப்ட்ல தனியா ரெண்டு பேர்தானே வரோம் ஒரு ஸ்மைல் கூட இல்லையே

பணத்தை பணமாவா செலவு செய்யறான் தண்ணியா செலவு செய்யறானே - சரியான கருமி, சோறாவது திண்றானா? இல்லையா?

இவைகள் அத்தனையும் என்னுடன் பழகியவர்கள், என் சுற்றுப்புறத்தில் இருந்தவர்கள் சொன்னது.


11மாத பைத்தியக்குழந்தை

பிறந்து பதினோரு மாதமே ஆகியிருந்தேன், கிராமத்தில் என் ஆயா(பாட்டி) என்னை வயலுக்கு தூக்கி சென்றிருந்தார், அங்கே வயல்வேலை செய்ய என்னை மரத்தடி நிழலில் போட்டுவிட்டு நான் விளையாடுவதற்கு அவர் கழுத்தில் இருந்த கயிற்றை கழற்றி கையில் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார், அந்த கயிற்றை சுற்றிக்கொண்டே இருந்திருக்கிறேன், வேலை முடிந்து என்னை தூக்கிய ஆயா கையிலிருந்த கயிற்றை எடுத்தவுடன் கத்த ஆரம்பித்திருக்கிறேன், மீண்டும் கயிற்றை கொடுக்க அதை சுற்றிக்கொண்டிருந்தேன், வீட்டிற்கு சென்ற பின் அம்மா, அப்பா, அண்ணன் என எல்லோருமே கயிற்றை பிடுங்க முயற்சிக்க நான் கத்த அவர்கள் திருமப தர அங்கே ஒரு தொடர் ஓட்டமே நடதிருக்கு, சரி என்று கையில் கயிற்றை கொடுத்துவிட்டு விளக்கை அணைத்துவிட்டு சற்று நேரம் கழித்து மீண்டு சட்டென்று விளக்கை போட அப்போதும் கையில் கயிற்றை வைத்து சுற்றிக்கொண்டிருந்தேனாம், வேறு வழியேயின்றி சில மைல்கள் தள்ளி இருந்த தியாக துருகம் என்ற ஒரு கிராம நகரத்திற்கு வந்து மருத்துவரை அந்த இரவில் பார்க்க அவர் தூக்க மாத்திரை தந்திருக்கிறார் விழிக்க விழிக்க அதை போடுங்கள் என்று சொல்ல, இரண்டு நாட்கள் தொடர் தூக்கத்திற்கு பின் எழுந்து சிரித்தேனாம், என் தந்தையின் மற்றொரு பெயர் "வெறியன்", வெறியன் சாமி என்கிற நாட்டார் தெய்வத்தின் நினைவாக அந்த பெயர் அவருக்கு, எனக்கும் இந்த சம்பவத்திற்கு பின் "வெறியன்" என்று சில சமயம் அழைப்பார்களாம், ஆனால் இந்த வெறியன் சாமி நினைவாக அல்ல, என்னுடைய வெறித்தனத்திற்காக,அதிலிருந்து எனக்கு விளையாட்டு பொருட்கள் என்பதே கிடைக்காமல் போக புத்தகங்களின் பக்கம் ஒதுங்கிவிட்டேன், நான்காவது படிக்கும்போதிலிருந்து ஆரம்பித்தது ஜூனியர் விகடன், ஐந்தாவதிலிருந்து ராணி முத்து, இந்த வயசிலேயே இந்த புத்தகங்கள் படிக்கிறாயா என்று சுற்றத்தார் அறிவுரைசொல்லிக் கொண்டேயிருக்க இது தொடர்ந்து கொண்டே இருந்தது.

நடு இரவு அழுகை....
ஒரு மூன்று வயதிருக்கும், அம்மாவழி தாத்தா வீட்டில் இருந்தோம், வழக்கம்போல இரவில் கத்த ஆரம்பித்தேன் மிகக்கடுமையாக கத்த வீட்டில் எல்லோரும பயந்து போய் அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மாமாவீட்டிற்கு தூக்கி சென்றனர், வழியெல்லாம் கத்திக்கொண்டே வந்தேனாம், மாமா ஆசிரியர் என்றெல்லாம் ஆர்.எம்.பி என்ற மருத்துவம் படித்து அந்த கிராம மக்களுக்கு டாக்டராகவும் இருந்தார், பூச்சிக்கடி, தேள்கடி, காயங்கள் போன்றவற்றிற்கெல்லாம் முதலுதவி செய்து பின் கடலூர் பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பிவைப்பார், ஏதேனும் பூச்சி கடித்துவிட்டதோ என்று பயந்த என் அப்பா அம்மா பதட்டத்தோடு நடு இரவில் என் மாமாவீட்டு கதவை தட்ட சிறிது நேரம் திறக்கப்படவில்லை, அப்போது அழுகையை நிறுத்திவிட்டு "அப்பா மாமா தூங்கறாரு போல வா போலாம் நாம என்றேனாம்...." அதே நேரம் மாமா வீட்டுக்கதவை திறக்க அந்த இரவில் பதட்டத்தை மறந்து எல்லோரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தற்கொலை முயற்சி
நம்பினால் நம்புங்கள் அப்போது வயது வெறும் ஐந்தரை தான், பகல் பதினோரு மணி அளவில் தாத்தாவோடு சைக்கிளில் கொல்லைக்கு(வயலுக்கு) சென்று விட்டு அங்கிருந்த என் மாமா பையனோடு விளையாடிக்கொண்டே மலைக்கு சென்று சுற்றிவிட்டு நான் திரிந்து கொண்டிருக்க என்னையும் அவனையும் காணவில்லை என்று இங்கே அல்லோகலப்பட்டுக்கொண்டிருக்க சாயங்காலம் ஏழு மணி வாக்கில் மீண்டும் மோட்டார் கொட்டாய்க்கு நாங்கள் திரும்ப என் தந்தை எங்களை மிதிவண்டியில் ஏற்றிக்கொண்டு வந்தார், வரும் வழியில் அவர் எதுவுமே பேசவில்லை, கோபமாக இருக்கிறார் என்று புரிந்து கொண்டேன், வீட்டிற்கு சென்ற பின் என் மாமி அவனை அடிக்காதிங்க என்று என் அம்மாவிடம் சொல்ல யாருமே ஒன்றுமே சொல்லாமல் நிற்க சட்டென்று ஒரு வேகம், இனி உயிரோடு இருக்கக்கூடாது என்று கட கடவென தோட்டத்தில் இருந்த கிணற்றிற்கு வேகமாக நடந்தேன், மிகக்குறைந்த உயரமே இருக்கும் அந்த தடுப்புக்கட்டையை தாண்டி எட்டி பார்க்க பயங்கர இருட்டாக இருந்தது, ஒரு நொடி தாமதித்து சரி குதித்துவிடலாமென்று நினைத்த போது அம்மா பின்னால் இருந்து சட்டென்று தூக்கிவிட்டார், என்னடா கெணத்துல உழ போனியா? என்றார். சாவு என்றால் என்ன? தற்கொலை என்றால் என்ன? அந்த வயதில் இது பற்றியெல்லாம் என்ன தெரிந்தது என்பதெல்லாம் சுத்தமாக எனக்கு நினைவில்லை அந்த சம்பவம் மட்டுமே நினைவில் இருக்கிறது. எழுத்தாளர்னா தற்கொலை முயற்சி செய்திருக்கனுமாமே! அப்போ நானும் எழுத்தாளனா?

பிடிவாதம்
பொதுவாக அமைதியானவன், விட்டுக்கொடுப்பவன் ஆச்சி பூச்சி என்று பெயர் சுற்றத்தில் இருந்தாலும் எதிலாவது பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தால் அது முடியும் வரை அதை விட மாட்டேன், பைத்தியம் மாதிரி அதை செய்து கொண்டேயிருப்பேன், கல்லூரியில் படிக்கும் போது பூஞ்சை மாதிரி இருப்பேன், ஆனால் தடகளப்போட்டி பயிற்சி எடுக்க வேண்டுமென வெறித்தனமாக பயிற்சி செய்து சில பதக்கங்களையும் வென்றேன்.

பிரான்சிலிருந்து நண்பன் எடுத்துவந்த ஒரு வீணாப்போன செல்போனின் பேட்டரி வாங்க ஒரு நாள் முழுக்க பெங்களூரை சுற்றி பைக்கில் வெறி பிடித்த மாதிரி சுற்றி சுற்றி வந்து, கடைசியாக இரவு 10.00 மணிக்கு பர்மாபஜாரில் ஆயிரம் ரூபாய் கொடுத்து பழைய பேட்டரியை வாங்கிவந்தேன், அந்த பேட்டரியும் வேலை செய்யாம போயி வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டது வேறு கதை.

ஒரு ஜெராக்ஸ் எடுக்க இரவு 1 மணி வரை செகந்தராபாத்தை சுற்றி வந்தேன், இப்படியாக இப்ப இப்பவே முடிக்கனும்னு இப்ப ராமசாமியா திரிவது இன்னமும் முழுசா நிற்கலை.

என் தந்தை அடிக்கடி சொல்வார், என்னை எவனும் 'பள்ளி'சாதியென்றே சொல்லா மாட்டான், எல்லோரும் என்னை என்ன சார் நீங்க ரெட்டியாரா, முதலியாரா என்று தான் கேட்பார்கள் என்று. அப்போது அவரது முகத்தில் ஒரு பெருமிதம் தோன்றும், 'பள்ளி' சாதியில் பிறந்துவிட்டோமே என்று தாழ்வுமனப்பாண்மையாலோ அல்லது ரெட்டியார், முதலியார் உயர்சாதி என்று தம்மை நினைக்கிறார்கள் என்றோ அல்ல, 'பள்ளி' சாதியை சேர்ந்தவர்கள் என்றாலே குடிப்பார்கள், சீட்டாடுவார்கள், குடும்பத்தை கவனிக்க மாட்டார்கள், ஊர் சுற்றுவார்கள் இந்த சாதி ஆட்கள் இப்படித்தான் என்ற பிம்பத்தை உடைத்துவிட்டேன் என்ற பெருமிதம் தான் அவர் முகத்தில், வர்ணாசிரமத்தின் முகத்தில் அவரால் இயன்ற அளவிற்கு அறைந்துள்ளார். பத்தாம் வகுப்பில் ஓரளவுக்கு நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தேன் எங்கள் பள்ளியில் அந்த மதிப்பெண்ணிற்கு பயாலஜி குரூப் எளிதாக கிடைக்கும், அப்பா எவ்வளவோ சொல்லியும் அதற்கு அடுத்தபடியாக இருந்த கப்யூட்டர் சயின்ஸ் தான் எடுப்பேன் என்றேன், அவரும் பலரிடம் போய் ஆலோசனை கேட்டுவிட்டு சொன்னார், அதெல்லாம் மாமி வீட்டு பசங்களுக்கு தான் சரியாக வருமாம் பாம்பே, டில்லின்னு தான் வேலைக்கு போகனும் அதனால வேண்டாம்னு *** சார் சொன்னார் என்றார், அப்போது எரிய ஆரம்பித்தது தான், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ன மாமி வீட்டு பசங்களுக்கு மட்டும் தான் சொந்தமா, நான் போறேன் பார் என்று, எங்கள் கல்லூரியில் மெக்கானிக்கல் படித்தாலும் என் வேலை கம்ப்யூட்டர் தான் என்றிருந்தேன் உறுதியாக. நடுவில் அதில் சிறிய தொய்வு வந்த போதும் என் சீனியர் ஒருவர் மீண்டும் அதை தூண்டிவிட்டார், இன்று என் சொந்தமும் சுற்றமும் அவர்கள் குழந்தைகளிடம் மாமி வீட்டு பசங்களுக்கு தான் அது சரி வரும் என்று அவர்கள் குழந்தைகளை பயமுறுத்துவதில்லை, மாறாக என் பெயரை சொல்லி சொல்கிறார்கள்...

மயக்கம் அடித்து விழும் வரை வேலை செய்வது

விளையாட்டுத்தனம், கால் தரையில் படாமல் மிதந்த காலகட்டம் அது, ஏகப்பட்ட அரியர்கள், நான் எஞ்சினியரிங் முடிக்கவே மாட்டேன் என்று முடிவு செய்தவர்களில் எங்கள் கல்லூரி விரிவுரையாளரும் அடங்குவார், கடைசி ஆண்டு ஏழாவது செமஸ்ட்டர் இதிலே தூக்குறேன் எல்லாவற்றையும் என்று முடிவு செய்து தேர்வுக்கு 10 நாட்கள் முன்பு ஆரம்பித்து பகல், இரவு தூக்கமில்லாமல் படித்து எழுதினேன், 5 நாட்களில் காலை மாலை என 9 தேர்வுகள், பலரும் ஒன்டே மேட்ச் ஆட நான் மட்டும் 5 டே மேட்ச் ஆடிக்கொண்டிருந்தேன், முழு பலத்தையும் பயன்படுத்தி தேர்வு எழுதினேன், தேர்வு மையத்திற்கு நடக்க கூட வலுவில்லை, தூக்கமின்மை அழுத்தங்களால் ஒரு தேர்வில் தேர்வாரம்பித்த அரை மணி நேரத்தில் மயக்கமடைந்து விழுந்துவிட்டேன், அந்த ஒரு தேர்வை தவிர மற்ற அனைத்து அரியர்களையும் ஏழாவது செமஸ்ட்டரிலேயே முடித்து கல்லூரியை ஆச்சரியப்படவைத்தேன், எட்டாவது செமஸ்ட்டரில் மிச்சமிருந்த அந்த ஒரு தாளையும் முடித்துவிட்டு வந்தேன்

வேலைக்கு சேர்ந்து ப்ராஜெக்ட் செய்யும் போது என்னை நம்பி பணி இருந்த கட்டத்தில் மயக்கம் அடித்து விழும் வரை இரவு பகலாக வேலை செய்வேன். பல முறை அலுவலகத்தில் இரவுகளில் யாருமில்லா நேரத்தில் மயங்கி டேபிளில் தலை சாய்த்து படுத்து நானே எழுந்து ஒரு காபி குடித்துவிட்டு மீண்டும் வேலை செய்வேன். இப்போதெல்லாம் அந்தளவிற்கு செய்ய முடியவில்லை.

பயமின்மை
ராஜினாமா கடிதத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அலைபவன்(ஒரு உவமானத்திற்கு தான் சொன்னேன், ஆனால் எந்த நேரமும் வேலையைவிட்டு வெளியேற தயாராகவே இருப்பேன்), சாப்ட்வேரில் முதலில் நுழைந்த போது இருந்த வேலையின்மை பற்றிய பயமெல்லாம் சில காலங்களிலேயே போய்விட்டது, தவறு என்று நான் கருதினால் என் சுயமரியாதைக்கு இழுக்கு வந்தால் அதை நேரடியாக கூட்டங்களிலேயே சொல்வேன், எனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதினால் நேரடியாக பேசுவேன், அதையும் மீறினால் உடனே ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு வந்துவிடுவேன், சில ஆண்டுகளுக்கு முன் அதிக சம்பளம், பணி நிரந்தர வாய்ப்பு, இங்கிலாந்து செல்லும் வாய்ப்பு என்று என் எதிரில் இருந்த அனைத்தையும் விட்டுவிட்டு சிலவாரங்களிலேயே வெளிவந்தேன் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றிலிருந்து.

மெக்கானிக்கல் துறையிலிருந்து சாப்ட்வேர் மாறும்போது என் குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் தவிர மற்ற பலரும் கூறினார்கள் இருப்பதைவிட்டு விட்டு பறக்க ஆசைப்படாதே என்று, AS400 லிருந்து வெப்க்கு மாறியபோதும் இதே தான், Perl, PHP,ஜாவா என மாறிய போது நல்லா தெரிந்ததை விட்டுவிட்டு ஏன் போகிறாய் என்றார்கள்.

ஒவ்வொரு மாறுதலும் ஒவ்வொரு புதுவிசயமும் எனக்கு நல்லதாகவே அமைந்தது. இன்று ஜாவாவிலிருந்து ஒரு காவாவுக்கு மாறவும் சாப்ட்வேர் துறையே இல்லையென்றால் வேறு துறைக்கு மாறவும் தயாராகவே உள்ளேன், மெக்கானிக்கல் துறையிலிருந்து சாப்ட்வேர் துறைக்கு மாறாமல் நமக்கு தெரிந்ததையே செய்வோம் என்றிருந்திருந்தால் கடலூர் சிப்காட்டில் ஏதாவது ஒரு கம்பெனியில் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. சிபாரிசில் வேலை செய்துகொண்டிருந்திருப்பேன்.

சேரனின் மாயக்கண்ணாடிகள் நம்மை சுற்றி இருந்து கொண்டே தான் இருக்கும் வாழ்க்கை முழுக்க, அந்த மாயக்கண்ணாடிகளை உடைத்து தான் வரவேண்டும் மாயக்கண்ணாடிகளை பார்த்து நாம் பயந்தால் இருக்கும் நிலையிலேயே இருக்க வேண்டியது தான்.

கோபம்

அத்தனை எளிதில் யாரிடமும் கோப்படமாட்டேன், பொதுவாக எல்லோரும் பொறுமையானவன் என்பார்கள் ஆனால் குடும்பத்தினர், மிக நெருங்கிய நண்பர்கஆள் இவர்களிடம் மட்டும் கோபம் சட் சட்டென்று வரும், யாரிடம் எனக்கு அதிக உரிமையிருக்கின்றதோ அவர்களிடம் மட்டுமே எனக்கு கோபம் வரும், என் கோபத்தால் உறவு பாதிக்கப்படாது, என்னை புரிந்து கொள்வார்கள் என்று நினைப்பவர்களிடம் மட்டுமே கோபப்படுவேன், நான் இப்படியாக நினைத்துக்கொண்டு யாரிடமாவது உரிமையெடுத்து அவர்கள் என்னை தவறாக நினைத்துவிட்டால் அத்துடன் அந்த உறவின் நெருக்கம் முடிவுக்கு வரும், அதன் பின் அவர்களிடம் நெருக்கம் பாராட்ட மாட்டேன், மற்றவர்களிடம் அத்தனை சுலபமாக கோபப்படமாட்டேன், ஆனால் என்னை கோபப்படுத்தும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக அதிகரிக்க அதிகரிக்க அதை வெளியே காட்டாமலே இருப்பேன் ஒரு நாள் வெடிக்கும் எரிமலையாக... அன்று பார்ப்பவர்கள் நிச்சயம் என்னை அப்படி கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள்....

நாலு, ஆறு என அழைத்த நண்பர்கள் மன்னிக்கவும் என்னால் பதிவிட இயலவில்லை, வியர்டுக்கு அழைத்த நண்பர்களுக்கு நன்றி, தாமதமானாலும் இப்போது போட்டுவிட்டேன்

18 பின்னூட்டங்கள்:

said...

வியர்டுகளின் மொத்த உருவம் என்று சொல்லலாம் போல அவ்வளவு வியர்டுத்தனம்...

சர்வேசன் சர்வேயில முதல் இடமே கிடைச்சிருக்கும்

said...

:) :) :) :)

said...

//சேரனின் மாயக்கண்ணாடிகள் நம்மை சுற்றி இருந்து கொண்டே தான் இருக்கும் வாழ்க்கை முழுக்க, அந்த மாயக்கண்ணாடிகளை உடைத்து தான் வரவேண்டும் மாயக்கண்ணாடிகளை பார்த்து நாம் பயந்தால் இருக்கும் நிலையிலேயே இருக்க வேண்டியது தான் //

I can not agree with your vision . but i can agree to this :-)

said...

இங்கு சொன்னது, //தவறு என்று நான் கருதினால் என் சுயமரியாதைக்கு இழுக்கு வந்தால் அதை நேரடியாக கூட்டங்களிலேயே சொல்வேன், எனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதினால் நேரடியாக பேசுவேன், அதையும் மீறினால் உடனே ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு வந்துவிடுவேன், சில ஆண்டுகளுக்கு முன் அதிக சம்பளம், பணி நிரந்தர வாய்ப்பு, இங்கிலாந்து செல்லும் வாய்ப்பு என்று என் எதிரில் இருந்த அனைத்தையும் விட்டுவிட்டு சிலவாரங்களிலேயே வெளிவந்தேன் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றிலிருந்து.//

எனது பதிவு ஒன்றில் பின்னூட்டமிட்டது, //வேலையிடத்தில் நடைபெறும் பல அரசியலை பார்த்துள்ளேன்.
எனக்கு வேலை அனுபவம் ஏழு ஆண்டுகள் மட்டுமே, இருந்தாலும் எந்த இடத்திலும் நான் அலட்சியப்படுத்தப்படுவதை அனுமதிக்க மாட்டேன்.மிகக்கடுமையாக வேலை செய்பவன் நான். சில கான்செப்ட்களை நிறுவன அளவில் அறிமுகப்படுத்தியவன், தனியாளாக ஒரு புது கான்செப்ட்டை டிசைன் செய்து துனைத்தலைவரிடம் அதை விளக்கி அனுமதிப்பெற்று ஒரு குழு உருவாக்கி அந்த ப்ராடக்டை இரவு பகல் பாராமல் உழைத்து உருவாக்கினேன். அலுவலகக்கூட்டங்களில் மேலதிகாரிகளுக்கு பயப்படாமல் பிரச்சினைகளை நேரடியாக பேசுவேன் ஆனால் என்னுடைய மேலதிகாரிகளிடம் தேவையின்றி அலுவலக விடயம் தவிர்த்த வேறு விடயங்களை பேசும் வழக்கமில்லாதவன்
இந்த நிலையில் பதவியுர்வு கிட்டவில்லை.ஆனால் வேலையில் சாதிக்காத மேலதிகாரிக்கு ஜிங்ஜாங் போட்ட சிலருக்கு பதவியுர்வு, சரி பதவியுர்வு இல்லையென்றால் பரவாயில்லை, எதற்கு தேவையின்றி வேலைப்பளுவை, அதிக பொறுப்பை ஏற்றிக்கொள்ளவேண்டும், ஆறு மணியானால் வீட்டிற்கு போகலாம் என எண்ணாமல் நேரடியாக பிரச்சினையை மேலிடத்துக்கு எடுத்துச்சென்றேன், போராடினேன். அதன்பின் எல்லாம் சுமுகமானது.

என்றுமே நாம் சரியாக இருக்கும்போது அலட்சியப்படுத்தப்படுத்தப்படுவதை போராடாமல் ஏற்றுக்கொள்தல் எனக்கு உடன்பாடில்லா விடயம்.//
பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_26.html

இரண்டு விதமாகவும் செயல்பட்டுள்ளீர்கள், பலே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//இரண்டு விதமாகவும் செயல்பட்டுள்ளீர்கள், பலே.
//
இரண்டும் இரண்டு நிறுவனங்களில் நடந்தது, பிரச்சினைகள் என்றால் அமைதியாக இருக்காமல் மேலிடம் எடுத்துச்செல்வேன், அப்படியும் வேலைக்காகவில்லை என்றால் பாக்கெட்டில் இருக்கும் கடிதத்தை எடுத்துக்கொடுத்துவிடுவேன்....

சாப்ட்வேர் துறையில் பிரச்சினையென்றால் பெரும்பாலும் சத்தம்போடாமல் ராஜினாமா கடிதம் கொடுத்துவிடுவார்கள் அல்லது அமைதியாக ஏற்றுக்கொள்வார்கள்
ஆனால் நான் பிரச்சினைகளை பேசாமல் இருக்கவே மாட்டேன்.... இரண்டு மாதிரி செயல்படவில்லை, ஒரே மாதிரிதான் ஒரு இடத்தில் மேலிடம் பிரச்சினைகளை புரிந்து கொண்டது, மற்றொரு இடத்தில் அப்படியில்லை... அதனால் வெளியேறிவிட்டேன்...

said...

////சேரனின் மாயக்கண்ணாடிகள் நம்மை சுற்றி இருந்து கொண்டே தான் இருக்கும் வாழ்க்கை முழுக்க, அந்த மாயக்கண்ணாடிகளை உடைத்து தான் வரவேண்டும் மாயக்கண்ணாடிகளை பார்த்து நாம் பயந்தால் இருக்கும் நிலையிலேயே இருக்க வேண்டியது தான் //

I can not agree with your vision . but i can agree to this :-)
//
அனானி அய்யா என்ன சொல்றிங்க புரியலையே

said...

எங்க டோண்டு சார் எல்லாத்தையும் நியாபகம் வச்சு அப்பப்ப இப்படி கேப்பாரு. கோச்சுக்காதீங்க குழலி

said...

வியர்டு பதிவு லேட்டா போட்டாலும் லேட்டஸ்டா போட்டு இருக்கிங்க!

உங்களோட தன்னம்பிக்கை ரொம்ப வியர்டுத்தனம்தான் ஒரு துறையிலிருந்து மற்ற துறைக்கு மாற பலமுறை யோசித்து மாறமுடியாமல் விட்டவர்களை பாத்திருக்கிறேன். நீங்க சட் சட்னு மாறிட்டிங்க வியப்பா இருக்கு.

நீங்க அஞ்சு ஒருநாள் போட்டி எழுதினிங்க நானும் நாலு ஒருநாள் போட்டி தொடர்ந்தாப்புல எழுதினேன் ஆனா எல்லாமே கடைசி செமஸ்டர்ல ஆச்சரியமான விஷயமென்னன்னா பாஸ் பண்ணதுதான். :)

ஒரிஜினல் வியர்டுக்காரர்தான் குழலி நீங்க!

said...

//இரண்டு மாதிரி செயல்படவில்லை, ஒரே மாதிரிதான் ஒரு இடத்தில் மேலிடம் பிரச்சினைகளை புரிந்து கொண்டது, மற்றொரு இடத்தில் அப்படியில்லை... அதனால் வெளியேறிவிட்டேன்...//
இரண்டு விதமாக நீங்கள் செயல்பட்டது என்று நான் சொன்னது ஒன்றில் அதே கம்பெனியில் இருந்தீர்கள் இன்னொன்றில் இல்லை என்பதை குறிக்கவே.

மற்றப்படி நிஜமாகவே உங்கள் துணிவை வியந்துதான் பின்னூட்டமே இட்டேன். உங்களை சங்கடப்படுத்தும் நோக்கத்தில் அல்ல. அவ்வாறு பொருள் வந்திருந்தால் மன்னிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//அவ்வாறு பொருள் வந்திருந்தால் மன்னிக்கவும்.
//
அய்யய்யோ டோண்டு அய்யா என்னங்க பெரிய வார்த்தையெல்லாம்... பல நேரங்களில் சொல்ல நினைத்த கோணமும் புரிந்து கொள்ளப்படும் கோணமும் வேறு வேறாகிவிடுகின்றது அவ்வளவு தான்.... வேறொன்றுமில்லை

said...

நான் படித்த வியர்டு பதிவுகளில், நல்ல வியர்டு பதிவு இதுதான்.

very interesting content.

அமக்களம்.

AS400 லேருந்து, Java, Java லேருந்து Kawa போறதெல்லாம் மாயக்கண்ணாடி உடைத்தல் இல்லை. It is a necessity.

உங்களுக்கு நல்ல backup இருந்தா, மாயக்கண்ணாடி என்ன, இரும்புக் கண்ணாடியே உடைக்கலாம்.

backup இல்லாத உழைக்கும் வர்கத்துக்கு, மாயக்கண்ணாடி உடைப்பதர்க்கு முன், நல்ல ஆராய்தலும், யோசனையும் தேவை.


தன்னை நம்பி யாரும் இல்லாதவர்கள் என்ன ரிஸ்க் வேணா எடுக்கலாம். தன்னை நம்பி ஒரு வட்டம் இருக்கும்போது, leaving comfort zone is a very big risky step! hope you agree!

மத்தபடி, 'மாமி' பசங்கதான் படிக்கணும் என்று சொன்ன சாரின் முகத்தில் கரியை பூசியது மிக நன்று.

அங்கயும் பாத்தீங்கன்னா, உங்களுக்கு சரின்னு பட்டத செய்ய முடிஞ்சுது. சார் மாதிரி வாழ்க்கைல பல பேர் எதிர்ல நிப்பாங்க. அது 'மாமீயம்' அடிப்படையில் மட்டுமல்ல. அலுவலகத்திலும், 'மாமீயத்துக்கும்' மேல், தெலுங்கர், தமிழர், மலையாளத்தான், சீனன், தொர, கருப்பன், நார்த் இந்தியன், சௌத் இந்தியன், பாக்கிஸ்தானி - இப்படி பல 'மாமீயம்' இருக்கு. துவளாமல் எல்லாத்தையும் எதிர்கொள்ள சின்ன வயசுலயே, அந்த 'சார்' உங்களுக்கு உதவியிருக்காரு :))))

செ.ரவி, சொன்ன மாதிரி 'மிதக்கும் வெளி' பின்னுக்கு தள்ளி 1st place வர மாதிரி ஒரு வியர்டு மேட்டர் பதிவுல இல்ல. ஆனா, 'நல்ல வியர்டு' பதிவுக்கு வேணா 1st place வந்திருக்கும் :)

said...

சுவாரசியமான பதிவு.

நடுவிலே காம்ப்ரமைஸ் பண்ணிக்காம, எப்பவும் இதே டெம்போவையே மெய்ன்டெய்ன் பண்ணுங்க

said...

//விளையாட்டுத்தனம், கால் தரையில் படாமல் மிதந்த காலகட்டம் அது, ஏகப்பட்ட அரியர்கள், நான் எஞ்சினியரிங் முடிக்கவே மாட்டேன் என்று முடிவு செய்தவர்களில் எங்கள் கல்லூரி விரிவுரையாளரும் அடங்குவார், கடைசி ஆண்டு ஏழாவது செமஸ்ட்டர் இதிலே தூக்குறேன் எல்லாவற்றையும் என்று முடிவு செய்து தேர்வுக்கு 10 நாட்கள் முன்பு ஆரம்பித்து பகல், இரவு தூக்கமில்லாமல் படித்து எழுதினேன், 5 நாட்களில் காலை மாலை என 9 தேர்வுகள், பலரும் ஒன்டே மேட்ச் ஆட நான் மட்டும் 5 டே மேட்ச் ஆடிக்கொண்டிருந்தேன், முழு பலத்தையும் பயன்படுத்தி தேர்வு எழுதினேன், தேர்வு மையத்திற்கு நடக்க கூட வலுவில்லை, தூக்கமின்மை அழுத்தங்களால் ஒரு தேர்வில் தேர்வாரம்பித்த அரை மணி நேரத்தில் மயக்கமடைந்து விழுந்துவிட்டேன், அந்த ஒரு தேர்வை தவிர மற்ற அனைத்து அரியர்களையும் ஏழாவது செமஸ்ட்டரிலேயே முடித்து கல்லூரியை ஆச்சரியப்படவைத்தேன், எட்டாவது செமஸ்ட்டரில் மிச்சமிருந்த அந்த ஒரு தாளையும் முடித்துவிட்டு வந்தேன்//

இதைப் படிக்கும்போது என்னுடன் கணினித்துறையில் படித்த பண்ருட்டியைச் சேர்ந்த என் நண்பன் நினைவுக்கு வருகிறான். பள்ளியில் படித்த காலத்தில் நன்றாகப் படித்த அவன், கல்லூரிக்கு வந்த பிறகு சரிவர படிக்கவில்லை, தேர்வுகள் எழுதவில்லை. ஒரு முறை கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக மறியல் வேறு. ஆனால் ஏழாவது செமஸ்டரில் மீதம் வைத்திருந்த அனைத்து பேப்பரையும் எழுதி பாஸ் செய்தான். ஒரே ஒரு ப்ராக்டிகல் தேர்வில் மட்டும் கல்லூரி நிர்வாகத்தின் மூலமாக ஃபெயில் ஆனான் (முன்னால் ஒரு முறை செய்த மறியலின் விளைவு). 60 சதவீதத்திற்கு மேல் எடுத்திருந்த அவன் எட்டாவது செமஸ்டரில் எல்லா பேப்பரும் முடித்து முதல் வகுப்பில் வெளியில் வருவான் என்று எங்கள் மொத்த வகுப்புமே நம்பி இருக்க, கல்லூரி நிர்வாகம் மீண்டும் ஒரு முறை அவனை அதே ப்ராக்டிகல் தேர்வில் ஃபெயிலாக்கி அவனை இரண்டாம் வகுப்பில் வெளியில் செல்லுமாறு ஆக்கியது.

said...

//நடுவிலே காம்ப்ரமைஸ் பண்ணிக்காம, எப்பவும் இதே டெம்போவையே மெய்ன்டெய்ன் பண்ணுங்க
//
தல வருங்காலத்தில் கொஞ்சம் கடினம் தான்னு நினைக்கிறேன்..... :-(((

said...

அடுத்தமுறை தொலைபேசியிலோ நேரிலோ பேசும்போது, கவனமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ;) ;)

said...

Though u have got good qualities, I saw a bad quality in you. You always think others are fool. I hope u may not take it harsh & will treat this a genuine critic.

said...

குழலி,
டோண்டுசார் summarize பண்ணி இருக்கும் இரண்டு சம்பவங்களும் படித்த போது எனக்கு என்னுடைய பழைய பணியிடங்கள் நினைவுக்கு வந்தது :) கிட்டத் தட்ட இதே போன்ற அனுபவங்கள் என்னுடையது.. "இதே மாதிரி போனால் எவனுமே தொடர்ந்து வேலை கொடுக்க மாட்டான்" என்று வீட்டில் சொன்னாலும் ஏதோ, நம்மை மாதிரி இன்னொரு ஆள் இருப்பது கொஞ்சம் reassuringஆக இருக்கு :)))

said...

குழலி,

// 5 நாட்களில் காலை மாலை என 9 தேர்வுகள், பலரும் ஒன்டே மேட்ச் ஆட நான் மட்டும் 5 டே மேட்ச் ஆடிக்கொண்டிருந்தேன் //

நானெல்லாம் ஒரு ஒண்டே வெளையாண்டதுக்கே கண்ணுல ரத்தம்வர இருந்த ஆளு! நீங்க எல்லாம் தெய்வமண்ணே! :))

நீங்க விடாக்கண்டன்னு தெரியும்! ஆனா 11 மாசத்துல இருந்தே அப்படின்னு இப்பத்தான் தெரியும்... :)