பெண்ணாகரம்???

பெண்ணாகரம்???

சில நாட்களுக்கு முன்பு அந்த நண்பர் உரையாடியில் இருந்த போது அவரை அழைத்தேன் நலம் விசாரிக்க, பதிவுலகின் வழியே அறிமுகமாகி இருந்தாலும் சில வருடங்களாக பதிவை தாண்டி சொந்த விசயம் பேசும் அளவிற்க்கு நண்பர், மணிக்கணக்கில் அரசியல் பேசுவோம் முன்பெல்லாம், பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்கு பின் நண்பர் உரையாடியில் எழுதியது தான் இந்த பதிவின் தலைப்பு, நான் சில காலமாகவே உடன்பிறப்புகளுடன் அதிலும் குறிப்பாக அறிவுஜீவி உடன்பிறப்புகளுடன் அரசியல் பேசுவதில்லை, ஏனெனில் இந்த அறிவுஜீவி உடன்பிறப்புகள் கருணாநிதி என்ற இனத்துரோகியின் வாயிலிருந்து விழும் வாந்தியையே நம்மிடம் மீண்டும் மீண்டும் கக்குவதால் இவர்களிடம் அரசியல் பேசுவதை விட வேறு ஏதாவது வேலை பார்க்கலாம் என்பதால் அரசியல் பேசுவதில்லை, இருந்தாலும் நண்பர் பெண்ணாகரம் பற்றி என் வாயால் தெரிந்துகொள்ள நிறைய ஆர்வத்துடன் இருந்தார் போல...

பொதுவாகவே இடைத்தேர்தல் என்பது அந்த தொகுதி மக்களுக்கு அடித்த லக்கிபிரைஸ், ஆளுங்கட்சி எளிதாக வெல்லும், 1989ல் திமுக ஆளுங்கட்சியாக இருந்த போது நடந்த இரண்டு இடைத்தேர்தலில் அதிமுக வென்றதே தமிழகத்தி எதிர்கட்சிகள் இடைத்தேர்தலில் கடைசியாக வென்றது.

சென்ற அதிமுக ஆட்சியில் காஞ்சிபுரம் இடைத்தேர்தலில் ஆரம்பித்த பண பட்டுவாடா திருமங்கலம் இடைத்தேர்தலில் விஸ்வரூபம் எடுத்து பின் தேர்தல் என்பதே பொதுமக்களின் வசூல் என்பதாக மாறிவிட்டது. மேலும் ஆளுங்கட்சி அதிகாரம், பணம் போலிஸ் என்று அனைத்தும் ஆதரவாக இருப்பதால் திமுக எளிதாக எல்லா இடைத்தேர்தல்களிலும் வென்று வருகிறது, மேலும் எதிர்கட்சியான அதிமுக கொட்டை எடுக்கப்பட்ட புளியாக இருப்பதால் இடைத்தேர்தல்கள் எந்த விதமான போட்டியையும் திமுகவுக்கு தருவதில்லை.

சென்ற பொதுத்தேர்தலில் படுதோல்வி அடைந்த பாமக பெண்ணாகரம் இடைத்தேர்தல் களத்தில் பாமக முண்டா தட்டுவதால் பெண்ணாகரம் கொஞ்சம் களம் விறுவிறுப்பாக உள்ளது.


பெண்ணாகரம் தொகுதி ஒக்கேனக்கல் பகுதியை உள்ளடக்கிய ஒரு வறண்ட தொகுதி, குடிநீர் பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினை, ஒக்கனேக்கல் கூட்டு குடிநீர் திட்டம் காங்கிரஸ் கூட்டணி அட்ஜெஸ்ட்மெண்ட்க்காக விட்டுத்தரப்படாமால் நிறைவேறி இருக்குமானால் திமுக இங்கே ஓட்டு கேட்க்க கூட போகத்தேவையிருந்திருக்காது. பெரும்பாலான மக்கள் பெங்களூர் மற்றும் வெளியூர்களில் குடும்பம் குடும்பமாக கூலி வேலை செய்ய சென்றுள்ளார்கள் (20,000 பேர் தேர்தலுக்கு முதல்நாள் வாக்களிக்க பெண்ணாகரம் வந்துள்ளார்கள்).

இடைத்தேர்தலை புறக்கணியுங்கள், 49 ஓ காமெடிகள் என்று இருந்த மருத்துவர் இராமதாசும் பெண்ணாகரம் தொகுதியில் மட்டும் முண்டா தட்ட சில முக்கிய காரணங்கள் உண்டு.

1991 சட்டமன்ற தேர்தலில் ராஜீவ் படுகொலை அலையிலும் பாமக இரண்டாம் இடத்தை பிடித்து திமுகவை மூன்றாம் இடத்திற்க்கு தள்ளியது, 1996 சட்டமன்ற தேர்தலில் சிபிஐக்கு இரண்டாமிடம் கிடைக்க மூன்றாம் இடத்தில் அதிமுக, 2001 சட்டமன்ற தேர்தலில் பாமகவிலிருந்து வெளியேறிய திரு.பெரியண்ணன் சுயேட்சையாக போட்டியிட பாமக வெற்றிபெற சுயேட்சை பெரியண்ணன் இரண்டாமிடம் பெற திமுகவுக்கு மூன்றாமிடம்.

பெண்ணாகரம் தொகுதியில் முன்பு வீரப்பனார்( ஆம் சந்தனக்கட்டை வீரப்பன் தான், எந்தெந்த பொறுக்கிகளுக்கும், இன துரோகிகளுக்கும் எல்லாம் 'ர்' போடும்போது இறந்து போன அவருக்கு 'ர்' போட்டால் குறைந்தா போய்விடும்) வலம் வந்து செல்வாக்கு செலுத்திய தொகுதியும் கூட.

இது வன்னியர்கள் 65% நிறைந்துள்ள தொகுதி என்பதால் பாமக எளிதாக வெற்றிபெறும் என்றெல்லாம் கணிப்புகள் செய்யலாம் ஆனால் திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு பின் இடைத்தேர்தல் இலக்கணம் மாறிவிட்டது, மேலும் பாமக பாமகவாக இல்லாமல் திமுகவாக மாற முயற்சித்ததும் அதன் செல்வாக்கை வன்னியர்கள் மத்தியில் குறைத்துவிட்டது சென்ற பொதுத்தேர்தலில் வன்னியர்கள் செறிவாக வாழ்ந்த தொகுதிகளிலும் வாக்கு வித்தியாசம் அதிகம் இருந்ததை தெரிவிக்கின்றது.

சென்ற தோல்விக்கு பின் பாமக தன் செல்வாக்கை நிரூபித்தே ஆகவேண்டிய கட்டாயம், அதனால் இம்முறை இங்கே கடும் போட்டியை காண்பிக்கிறார்கள், மூன்று மாதங்களுக்கும் மேலாக மருத்துவர் இராமதாசின் நேரடி கண்காணிப்பில் கடுமையாக வேலை செய்கிறார்கள், 80களின் காலத்தில் வன்னிய கிராமங்களில் நுழைந்து ஒரு சேரை மரத்தடியில் போட்டு அமர்ந்து எல்லோரையும் அழைத்து பேசிய ஸ்டைலில் மீண்டும் ஒரு ரவுண்டு செய்து காட்டியுள்ளார்,

சிட்டி பாலிடிக்ஸ் செய்த பாமக மீண்டும் வன்னிய கோசத்துடன் வில்லேஜ் பாலிடிக்ஸ்னுள் இறங்கியுள்ளது அதெல்லாம் எவ்வளவு பலன் கொடுக்கும் என்பது தேர்தல் முடிவுகளில் தெரியலாம்.இடைத்தேர்தல் ஸ்பெசலிஸ்ட் அழகிரி ஏரியாவாக பெண்ணாகரம் இல்லாமல் போனதும் களத்தில் பாமக காட்டும் கடும் போட்டியும் இடைத்தேர்தலுக்கு பிரச்சாரத்திற்க்கு வராத முதல்வர் கருணாநிதியை பெண்ணாகரம் பிரச்சாரத்திற்க்கு இழுத்துள்ளது.

திமுகவின் அமைச்சர் பிரியாணி ஸ்பெசலிஸ்ட் ஏ.வி.வேலுவின் களவேகமும் மருத்துவர் இராமதாசை கடுமையாக விமர்சிக்காமல் "நான் மிகவும் மதிக்கும் அய்யா ராமதாஸ்" என்றே ஒவ்வொரு இடத்திலும் வலிக்காமல் கத்தி சொறுகுவதும் மறைந்த உறுப்பினரும் ஏற்கனவே பாமகவில் இருந்து விலகி போட்டியிட்டு இரண்டாமிடம் பெற்றவருமான பெரியண்ணனின் மகன் திமுக சார்பில் போட்டியிடுவதும் திருமங்கலத்தையெல்லாம் தாண்டி அள்ளிவீசப்படும் பணமும் ஆளுங்கட்சி அதிகாரமும் அடிதடி மற்றும் போலிஸ் பலமும் உள்ளூரில் பாமக நிர்வாகிகளை உறுவியதுமென தெம்பாக இருக்கிறார்களாம்.

தர்மபுரி பகுதியை சேர்ந்த பதிவரிடம் பெண்ணாகரம் பற்றி கேட்ட போது பாமக மாடு கழுவறாங்க, திமுக ஆட்கள் 500 ரூபாயால் தான் குண்டி துடைக்கிறாங்க என்றார், இரண்டு கட்சிகளும் அதன் வேலைகளை சரியாக செய்திருந்தால் மாடும் கழுவியிருக்க தேவையில்லை, ரூபாய்களை அள்ளி தெளித்திருக்கவும் தேவையில்லை.

பணத்தை விழுங்கும் பலம் இனத்துக்கும்
இனத்தை விழுங்கும் பலம் பணத்துக்கும்
உண்டு என்பதால் பார்க்கலாம் யாரை யார் விழுங்குகிறார்கள் என்று.

என்னது அதிமுக, விஜயகாந்த் கட்சி பற்றியா? அவங்கலாம் போட்டியிடுறாங்களா என்ன?


இடைத்தேர்தலில் வெற்றி பெறவில்லையென்றாலும் கடும் போட்டியையும் கணிசமான வாக்குகளும் பெற்றால் பாமக ஒரு புதிய ஃபார்முலாவை முயற்சிக்கலாம், எப்படியும் திமுக-அதிமுக எதனுடன் கூட்டணி வைத்தாலும் 20+ தொகுதிகளும் முழுக்க வெற்றி பெற்றாலும் 20 எம்.எல்.ஏக்கள் தான் கிடைக்கும் வாய்ப்புண்டு, அதற்க்கு பதில் வலுவாக உள்ள 40 தொகுதிகளை தேர்ந்தெடுத்து முழு பலத்தையும் காண்பித்து வேலை செய்தால் அதே 15-20 தொகுதிகளை பெற வாய்ப்புண்டு, முக்கியமாக பணம் செலவு செய்ய வேண்டும், பணம் செலவு செய்யவில்லையென்றால் எல்லாம் வீணாகிவிடும், அட முதலீடென்று ஒன்று உண்டு இல்லையா?

பின் குறிப்பு: காலையிலேயே ஆரம்பித்துவிட்ட மண்டை உடைப்புகள் மறியல்கள் அடிதடிகளுடன் இரவு 7:30 மணியளவில் 82.34% வாக்குப்பதிவுடன் உள்ளது பெண்ணாகரம் தொகுதி

16 பின்னூட்டங்கள்:

said...

அப்ப முன்னால் ஆளும் கட்சி ஒத்து நாயனம் தானோ!?

காந்திய ரிலீஸ் பண்ணுறாங்களா இல்ல அடைச்சு வச்சிருக்கிறாங்க!

பாவம் காந்தி, செத்த பிறகும் எத்தனை தடவ அவர சிறையில் அடைக்கிறதும் ரிலீஸ் பண்றதுமா இருக்காங்க நம் அரசியல் வாதிகள்!

said...

1989ல் திமுக ஆளுங்கட்சியாக இருந்த போது நடந்த இரண்டு இடைத்தேர்தலில் அதிமுக வென்றதே தமிழகத்தி எதிர்கட்சிகள் இடைத்தேர்தலில் கடைசியாக வென்றது.//

மதுரை கிழக்கு, மருங்காபுரி?

அப்பல்லாம் மதுரப்பக்கம் தலப்பாக்கட்டு பிரியாணி பேமசு கிடையாது!

காந்தி இருந்துச்சா?(காந்திய அது, இதுன்னு சொல்ல வச்சுட்டானுகளே!)

said...

ஓட்டுப்பது விழுக்காடு நிறைவாக இருப்பதால், எது வெற்றி பெறும்?

கெழங்கெட்டையெல்லாம் கைப்பத்தலா தூக்கியாந்து ஓட்டை போட்டுக் கொண்டிருப்பார்கள் என்பது தெரிகிறது!

said...

//மேலும் பாமக பாமகவாக இல்லாமல் திமுகவாக மாற முயற்சித்ததும் //

தோடா.. இப்போதான் முயற்சிக்கிதாக்கும்.. அவௌக இவுகளாட்டம் ஆயி ரொம்ப வருஷமாச்சிங்க்ணா.. கோபாலபுரம் = தைலாபுரம்..

//என்னது அதிமுக, விஜயகாந்த் கட்சி பற்றியா? அவங்கலாம் போட்டியிடுறாங்களா என்ன?//

இந்தப் பதிவை 20 நாளைக்கு முன்னாடி எழுதி இருந்தால், இந்த வரிகள் சரி தான்.. ஆனால் இப்போ நிலைமை வேறு என்று தான் சொல்கிறார்கள்.. செங்கோட்டையன் களத்தில் இறங்கியப் பின் வேகம் பிடித்துவிட்டார்கள்.. 2ஆம் இடம் வாய்ப்புண்டு.. மருத்துவர் ஐயாவுக்கு தான் பெரிய ஆப்பு இருக்கும் போல..

said...

//தோடா.. இப்போதான் முயற்சிக்கிதாக்கும்.. அவௌக இவுகளாட்டம் ஆயி ரொம்ப வருஷமாச்சிங்க்ணா.. கோபாலபுரம் = தைலாபுரம்..
//
சஞ்சய் நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டீர், பாமக யாருக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதை விட்டுவிட்டு தமிழ் தமிழர்கள் என்று போக ஆரம்பித்தது, ஆனால் அதை தமிழர்கள் என்பவர்களும் நம்பவில்லை யாருக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அவர்களும் ஆகா இவங்க நமக்காக இல்லையா என்று கைவிட சென்ற முறை வாங்கி கட்டிக்கொண்டது.

இதையே திருமாவும் செய்து கொண்டிருக்கிறார் பாமக வாங்கிக்கட்டிக்கொண்டது போலவே திருமாவும் சீக்கிரம் வாங்கிக்கட்டிக்கொள்வார், தமிலர்களுக்கு பாடுபட கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்திலிருந்து ஏகப்பட்ட பேர் கட்சி ஆரம்பிப்பார்கள் ஆனால் தலித்களுக்கு பாடுபட திருமா மாதிரி ஆட்களால் மட்டும் தான் முடியும் ஆனால் இதைவிட்டுவிட்டு இவர்களும் தமிழர்களுக்கு பாடுபட ஆரம்பித்தால்?

said...

//மருத்துவர் ஐயாவுக்கு தான் பெரிய ஆப்பு இருக்கும் போல..
//
சஞ்சய் உங்க ஃப்லீங்க்ஸ் புரியுது :-) ஆனா யாரு டீலிங் ஒர்க் அவுட் ஆச்சின்னு முடிவுகள் வரும்போது தான் தெரியும்

said...

//
கோபாலபுரம் = தைலாபுரம்..
//
இளைஞர் காங்கிரஸ் தேர்தல்ல புரளும் கோடிகளைப் பார்த்தால்.....
அறிவாலயம் = சத்தியமூர்த்தி பவன்
ன்னு சொல்லலாமோ....

said...

கருணாநிதியின் நல்லாட்சிக்கு சான்றாக பெண்ணாகரத்தில் திமுக முண்ணனி :-)

said...

ஐய்யோ கடவுளே எங்க ச.ம.உ சீக்கீரம் சாவ ஏற்பாடுபன்னு ஒனக்கு கோட்டர் கிடாய் படையல் உண்டு

said...

குடும்பத்திற்க்கு பத்தாயிரம் ரூபாய் கிடைக்க வேண்டியதை இழந்தும் பாமக, அதிமுக, தேமுதிக விற்க்கு ஓட்டு போட்ட ஏமாளி வாக்காளர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...

said...

//ஐய்யோ கடவுளே எங்க ச.ம.உ சீக்கீரம் சாவ ஏற்பாடுபன்னு ஒனக்கு கோட்டர் கிடாய் படையல் உண்டு
//
ரொம்ப பேரு இப்படி வேண்டுறாங்க :-) முதல்வரையும் பிரதமரையும் நாமளே நேரடியா தேர்ந்தெடுக்குற மாதிரி இருந்தா எப்புடி இருக்கும்?

said...

உடன்பிறப்பு ஒன்றின் பதிவை படித்த எஃபெக்ட்:

பெண்ணாகரம் தேர்தல் முடிவுகள்

பாமகவுக்கு வாக்களித்த 41,285 சாதிவெறியர்கள்

அதிமுகவுக்கு வாக்களித்த 26,787 மானங்கெட்டவர்கள்

தேமுதிகவுக்கு வாக்களித்த 11,406 சினிமா பைத்தியங்கள்

மற்றும்

திமுகவுக்கு வாக்களித்த 77,669 கலைஞரின் நல்லாட்சியை விரும்பும் திராவிட தமிழர்கள்

said...

பிரியாணி ஸ்பெசலிஸ்ட் ஏ.வி.வேலு...
இடைத்தேர்தல் ஸ்பெசலிஸ்ட் அழகிரி...
மருத்துவர் அய்யா எதில் ஸ்பெசலிஸ்ட் ?

said...

//பிரியாணி ஸ்பெசலிஸ்ட் ஏ.வி.வேலு...
இடைத்தேர்தல் ஸ்பெசலிஸ்ட் அழகிரி...
மருத்துவர் அய்யா எதில் ஸ்பெசலிஸ்ட் ?
//
வேறெதுல அதான் மருத்துவராச்சே ஊசி போடறதுல தான் ஸ்பெசலிஸ்ட்...

said...

//திமுகவுக்கு வாக்களித்த 77,669 கலைஞரின் நல்லாட்சியை விரும்பும் திராவிட தமிழர்கள்//

அந்த உடன் பிறப்பு ஒன்னு அரசு ஊழியரின் பையனா இருப்பான், இல்ல அடுத்த சாத்திய திட்டுற சாதி வெறியனா இருப்பான்.


கருணாநிதி குடும்பம் ஆட்சியில் இருக்கும் வரை தமிழ் நாடு உருப்பட வாய்ப்பே இல்லை.

சொந்த புத்தி உள்ள எவனும் கருணாநிதிய சப்போர்ட் பண்ண மாட்டான்.

said...

பெண்ணாகரம் பாமகவிற்க்கு கணிசமான வாக்குகளோடு இரண்டாவது இடம் கிடைத்தால் தனித்து போட்டியிட்டு ஒரு புதிய ஃபார்முலா உருவாக்கலாம் என்று கணித்து எழுதியிருந்தேன் அதுவே அன்புமணி அவர்களின் பேட்டியில் வெளிப்படுகிறது...

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?NT=5

சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும் தனித்து போட்டியிடலாம் என்கிற தைரியத்தை கொடுத்திருக் கிறதா பென்னாகரம்?

டாக்டர் அன்புமணி : நிச்சயமாக தனித்து போட்டியிடும் தைரியம் எங்கள் தொண்டர்களுக்கு இருக்கிறது. தனித்துப் போட்டியிடவும் தயார். வேலை பார்க்கவும் தொடங்கிவிட்டோம். இதற்காக மைக்ரோ பிளானிங் திட்டத்தினை 90 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்த இருக்கிறோம். பென்னாகரம் ஃபார் முலா ஒர்க் அவுட் ஆகும். அதே நேரத்தில் தேர்தல் நேரத்தில் அமையும் நிலைமையும் தனித்துப் போட்டியா, கூட்டணியில் போட்டியா என்பதையும் தீர்மானிக்கும்.