ஈழத்தமிழர் பிரச்சினை மீண்டும் ஒரு தீக்குளிப்பு

‍‍இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக‌ இன்னொரு இளைஞர் தீக்குளிப்பு. என்ற செய்தியை தொடர்ந்து சென்னைக்கு தொடர்பு கொண்ட விசாரித்த போது திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்த ரவி என்ற விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்தவர் தீக்குளித்தது உண்மையென்றும் இவர் மாணவர் என்றும் தெரியவந்துள்ளது.

ஒரு முத்துகுமார் போதும், வேண்டாமே மீண்டும் மீண்டும் இந்த தீக்குளிப்புகள், மிகுந்த துயரத்தை தருகின்றது. முத்துகுமார் தந்த துயரமே தாங்கவில்லை இப்போது ரவியுமா?

தலைவர்களும் தொண்டர்களும் வெவரமாத்தானே இருக்கானுங்க முத்துகுமரா


முத்துக்குமரா போயும் போயும் இந்த ஈன தமிழினத்துக்காக உயிர்விட்டாயே, ஏதோ உணர்ச்சிவசப்பட்டு தெளிவில்லாமல் லூசுத்தனமாக எரித்துக்கொண்டாய் என்று திட்டிக்கொண்டே தான் உன் கடிதத்தை படிக்க ஆரம்பித்தேன், பாதி படிக்கையிலேயே தெரிந்து போனது நீ தெளிவில்லாமல் எரித்துக்கொள்ளவில்லை, அரசியல், சமூகம் உலக வரலாறு என அத்தனையும் தெரிந்தே இருந்திருக்கிறாய் என்று.

தலைவன் கேட்கிறான் நான் ஆட்சி இழந்தால் நாளையே தமிழீழம் கிடைத்துவிடுமா என்று, தொண்டன் கேட்கிறான் நான் பதிவு போட்டா நாளைக்கே தமிழீழம் கிடைக்குமா என்று, நாளையே தமிழீழம் கிடைக்குமென்றால் நான் கத்திக்கொண்டே இருக்க தயார் என்கிறான், இப்படிபட்ட வெவரமான தலைவனும் அந்த தலைவனுக்கேற்ற வெவரமான தொண்டனும் வாழ்கிற நாட்டில் உனக்கு மட்டும் ஏனடா இப்படி கேட்க தோன்றவில்லை, இந்த தலைவனும் தொண்டனும் நாளை கேட்பார்கள் நீ செத்து போனதால் தமிழீழம் கிடைத்துவிட்டதா என்று?

மத்தியில் ஆட்சியின் பங்களியாக இருந்து கொண்டே எல்லா கேபினேட் முடிவுகளுக்கும் தலையாட்டி கொண்டு இங்கே வந்து அறிக்கையில் சத்தத்தையும் பேட்டிகளில் உணர்ச்சி கூச்சல் போடும் தலைவர்கள் தான் தமிழை பாதுகாக்க போகிறாராம் மீனுக்கு வாலும் பாம்புக்கு தலையும் காண்பிக்கும் தமிழ் பாதுகாவலர். எவ்வளவு வெவரமா இருக்காங்க பாருடா முத்துகுமரா.

எந்த தியாகத்துக்கும் தகுதியான இனம் அல்லடா இந்த மானம் கெட்ட தமிழினம். உன்னை ஓரிருநாளில் புதைச்சிருவாங்க, அப்புறம் அடுத்த வருசம் எவனாவது நினைவு வைத்திருந்தால் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தோட ஒரு நினைவு அஞ்சலி வரும், அதுக்கு பின் அதுவும் நின்னு போயிரும்....

ஆனால் உன்னை போன்ற உணர்வாளர்கள் ஆயிரத்தில் ஒருவன் தானடா, உன்னை போன்ற உணர்வோடு ஆழ்ந்த அறிவும் எழுத்தாளுமையும் உடையவர்கள் இலட்சத்தில் ஒருத்தன் தானடா, அடையாளத்திற்காக தமிழை பயன்படுத்தி அதில் பணத்தையும், புகழையும் அறுவடை செய்யும் தலைவர்களும், எழுத்தாள தொண்டர்களும் உள்ள கூட்டத்தில் உன் போன்றவன் கோடியில் ஒருவன் தானடா? ஏன்டா போய்விட்டாய்?

உன் மரண செய்தியை கூட மழுங்கடித்தது கலைஞர் டிவி, ஹிந்து வோ செய்தியாக கூட போடவில்லை, மற்றவர்களும் லேசாக காண்பித்தன. போதும்டா முத்துகுமரா போய்ட்டு வா... ஆனால் ஒன்று எந்த தியாகத்துக்கும் தகுதியான இனம் அல்லடா இந்த மானம் கெட்ட தமிழினம்.

முத்துகுமாரின் கடைசி கடிதம் "விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை... " படிக்க இங்கே செல்லுங்கள்

கெஞ்சி பிழைக்கும் தமிழினத்துக்கு குடியரசு தினம் ஒரு கேடா?

இம்மாதிரியான ஒரு நிலை தமிழினத்துக்கு எப்போதும் வந்ததில்லை, இதற்கு முன் எத்தனையோ சோதனைகள் வந்திருந்த போதும் அந்த நேரத்தில் இனப்போராட்டங்கள் நடத்த முடியுமென்ற நம்பிக்கையும் தன்னலமில்லா தலைமையும் இருந்தன.

நம் முன் இன்று இரண்டு முக்கிய விசயங்கள், இந்தியாவில் தமிழகத்தின் பங்கென்ன? தமிழகத்தில் தமிழ் இன அரசியல் எப்படியுள்ளது?

தமிழனனின் கச்சத்தீவு நிலங்களும் உடைமைகளும் இந்திய அரசினால் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது மட்டுமின்றி தேவிகுளம்,பீர்மேடு, கோலார், சித்தூர், திருப்பதி என கர்நாடகா, கேரளா, ஆந்திரம் என சுற்றியுள்ள அனைத்து பிற தேசிய இன மாநிலங்களுக்கும் இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.

நிலம் மட்டுமின்றி நீர் ஆதாரங்களும் இயற்கை அளித்த நிலக்கரி தமிழ்நிலத்தின் தாது வளங்களும் இந்தியாவினால் சுரண்டப்படுகிறது.அன்று கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட போதும் இந்திய அரசிடம் கெஞ்சல், இன்று தமிழினம் அழிக்க உதவிசெய்யாதே என்றும் வெறும் கெஞ்சல்.

தண்ணீருக்கு கெஞ்சல், மீனவர்களை கொல்வதை தடுக்க கெஞ்சல், பெரியாறு அணைக்கு கெஞ்சல், கண்ணகி கோவில் வழிபாட்டுரிமைக்கு கெஞ்சல்,கெஞ்சுவதும், பிச்சையெடுப்பதும், கோரிக்கை வைத்துமே ஒரு தமிழ் தேசிய இனம் வாழும் இலட்சணத்துக்கு குடியரசும் சனநாயகமும் தான் ஒரு கேடா?

இதற்கு முன்பு இந்திய அரசில் எந்த வலுவும் பிடியுமில்லாமல் இருந்த நிலை, ஆனால் எந்த தேசிய கட்சிக்கும் பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் இப்போது இந்திய அரசின் உச்சிகுடுமியே தமிழகத்தின் கையில், ஆனால் ஈழத்தமிழர்களின் மீது நடத்தப்படும் இன அழிப்பை தடுக்க இந்திய தலைமைக்கு எந்த அழுத்தத்தையும் தர சுயநல தமிழக தலைமைகள் தயாராக இல்லை.முன்பு தமிழினம் அழிவை எதிர்நோக்கிய போதெல்லாம் குறைந்தது போராடமுடியுமென்றும் அதற்கான போர்வாளாக தமிழின தலைமைகள் இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது, ஆனால் இன்றோ தமிழின தலைமைகள் துரு பிடித்த போர்வாள்களாக பயனற்று உள்ளன. தம்மால் முடிந்த ஒரு அழுத்தத்தை தம் தயவால் இருக்கும் அரசுக்கு தமிழினத்துக்காக தரமுடியாத சுயநல தலைமைகள்.

தமிழினத்துக்கு எதிரான தலைமைகளும் கட்சியும் எப்போதும் ஏதோ ஒரு பெயரில் இருக்கவே செய்யும், அதை எதிர்க்க சுயநலமில்லா, புள்ளை குட்டிகளின் பதவிக்காக கோமணத்தையும் கழற்றி தராத, அதிகாரத்துக்காக தம் இனத்தை அழிவை தடுக்காத தலைமையை தேர்ந்தெடுப்போம், துரு பிடித்த போர்வாள்களை தூக்கி எறிவோம்.

அடப்போய்யா லூசு குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகள்னு நாலு படம் போட்டிருக்காங்க, நடிகைகளின் சிறப்பு பேட்டிகள் டிவியில் அதை பார்ப்போமான்னா இல்லாம சும்மா கத்திக்கினு.... வந்தே மாதரம்....

ஈழத்தமிழனா? புலிகள் அழிந்து போகட்டும் - கருணாநிதியின் கடுப்பு

நாளை ஈழம் உருவாகுமென்றால் ஆட்சியையே இழக்க தயாரென்று மற்றுமொரு காமெடியை ஆரம்பித்து வைத்துள்ளார் தமிழின தலைவர்(?) மு.கருணாநிதி.

இதற்கு முன் இரு முறை ஆட்சியை கருணாநிதி ஏன் இழந்தார் என்பதை நாக.இளங்கோவன் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார் இங்கே

தமிழின உணர்வாளர்களிலிருந்து எல்லோருக்கும் கலைஞரின் அமைதியை கண்டு ஆச்சரியமும் ஆவேசமும் குழப்பமும் அடைந்துள்ளார்கள், ஈழப்போராட்டத்தின் பிரச்சினைகளுக்கு முதல்வர் கருணாநிதி இப்போது புதிய கண்டுபிடிப்பாக சொல்லிக்கொண்டிருப்பது பிற போராளி இயக்கங்களுடனான புலிகளின் மோதல் என்றும் அதையே கிளிப்பிள்ளை போல பல உடன்பிறப்புகள் நம்புவதும் கருணாநிதிக்கும் திமுகவிற்கு இவர்கள் வாழ்க்கைப்பட்டவர்கள்(நன்றி அறிவுமதி) என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள்.

இதற்கும் மேல் யாராவது உண்ணாநிலை போராட்டம், போராட்டம் என்றால் அய்யகோ... ஆரிய சதியை பாரீர் என்று போலி கூச்சல் வேறு.

தயாநிதி மாறனுக்கு கேபினேட் மந்திரி பதவி வாங்குவதற்கும், டிஆர்ஸ் சந்திரசேகருக்கு அளிக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து துறையை அடம்பிடித்து மீண்டும் வாங்கிய கருணாநிதிக்கு ஈழத்திற்காக சோனியாவிடம் ஒரு துரும்பை கூட தூக்கி போடமுடியாததன் காரணம் என்ன? கருணாநிதியால் முடியது என உடன்பிறப்புகள் தொடர்ந்து நினைக்கலாம், ஆனால் கருணாநிதி யின் புலிகளின் மீதான "ஈகோ" ஈழத்தமிழருக்காக எதையுமே செய்ய நினைக்கவில்லை என்பதே காரணம்.

கருணாநிதி எந்த காலத்திலும் ராஜீவ்காந்தி கொலைக்கு முன்பு பின்பு என எக்காலத்திலும் விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக இருந்ததில்லை, ஏனெனில் விடுதலைப்புலிகளின் காட் ஃபாதராக திகழ்ந்தது எம்ஜிஆர் அவர்கள். மேலும் இன்றைக்கும் ஈழத்தமிழர்களின் குறிப்பாக புலி ஆதரவு பகுதியில் எம்ஜிஆர் தான் ஹீரோ, அங்கே கலைஞர் வெறும் ஜீரோ தான்.

80களின் மத்தியில் ஈழத்தமிழ் போராளி இயக்கங்களுக்காக கருணாநிதி திரட்டியபோது(இதுவும் கூட எம்ஜிஆருக்கு போட்டியாக)கருணாநிதியிடமிருந்து நிதி பெறக்கூடாது என பிரபாகரனுக்கு எம்ஜிஆர் தெரிவித்தார்.

போராளிகள் தமிழகத்தில் இருந்த காலகட்டங்களில் எத்தனையோ தலைவர்களோடு பழகிய புலிகள் கருணாநிதியுடன் எந்த நெருக்கத்திலும் இருந்ததில்லை.

எம்ஜிஆருக்கு புலிகள் செல்லபிள்ளைகள் என்றால் கருணாநிதியின் செல்லபிள்ளைகள் டெலோ, இந்த டெலோ இப்போது இருக்குமிடம் தெரியாமல் உள்ளது, ஈழப்போராளிகள் எம்ஜிஆரா கருணாநிதியா என்றால் கருணாநிதி பக்கம் என்ற அமிர்தலிங்கத்தை கொலை செய்தது புலிகள் என்பதாலும் தற்போது ஈழத்தமிழர்கள் அழிவு என்றால் அதில் புலிகளும் சேர்ந்ததே என்பதுமே கருணாநிதியின் கனத்த மவுனத்தின் பிண்ணனி காரணங்கள்.

புலிகள் சரியா தவறா என்பதை விட புலிகளை அழிக்கிறோமென மொத்த ஈழத்தமிழர்களையும் அழிக்கும் சிங்கள, இந்திய அரசாங்கங்களுக்கும், தன் ஈகோவிற்காக ஈழத்தமிழினமே அழிந்தாலும் பரவாயில்லை புலிகள் அழிந்து போகட்டும் என அமைதிகாக்கும் தமிழின தலைவர்(?) கருணாநிதியும் காரணமே.

தன் இனத்திற்காக அதன் மேன்மைக்காக, அதன் சுதந்திரத்திற்காக உயிரையும் தர தயாரக உள்ள, தந்த தமிழர்கள் எங்கே? தன் சொந்த ஈகோவிற்காக தமிழீழ இனமே அழிந்தாலும் பரவாயில்லை என இருக்கும் தமிழினதலைவர் எங்கே.

பார்பனியத்திற்கு எதிர்ப்பு, ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு என்று கூறி அரசு, அதிகாரம், தொழில்,மகன், மகள், சொந்தம் பந்தமென எல்லாவற்றிற்காகவும் மேலும் சொந்த ஈகோவுக்காகவும் தம் இனத்தை அழிக்கும் செயலுக்கு உடைந்தையாக உள்ள தலைமை வேண்டுமா?

தமிழின உணர்வாளர்களே அடையாளம் காண்பீர்கள் புதிய தமிழின தலைமைய, தன் இனத்திற்காக தம் உயிரை தர தயாராகும், இளைய தலைமையாக இருக்கட்டும். தன் புள்ளைகுட்டிகளின் மந்திரி பதவிக்காக எம் இனத்தை அடகு வைக்காத தலைமையாக இருக்கட்டும்.

ராஜீவ்காந்தி சிலைக்கு செருப்பு மாலை, உடைக்கப்பட்ட புனித பிம்பம்

தமிழகத்திலே உயிரிழந்த ஒரே காரணத்திற்காக யாராலும் விமர்சிக்கப்படாத புனித பிம்பமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் ராஜீவ்காந்தி.

ராஜீவ்காந்தியின் எழவுக்கு பின் எந்த அரசியல்வாதியாலும் எந்த பத்திரிக்கையாலும் விமர்சிக்கப்படாதது மட்டுமின்றி ராஜீவ்காந்தி மரணத்தை வைத்து தமிழர்கள் மத்தியில் ஒரு குற்ற உணர்ச்சியும் ஊட்டப்பட்டது.

தமிழக மக்களுக்கு செக்கசெவேலென எவனாவது இருந்தால் அவனை நல்லவனாகவும் புனிதனாகவும் கருதும் கேவலம் உண்டு, ராஜீவ்காந்தி செக்கச்செவேல் என்று இருப்பதலாயே நல்லவரோ புனிதரோ அல்ல, சீக்கியர்களை காங்கிரஸ்காரர்கள் கொன்று குவித்த போது மரம் விழுந்தால் சில அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும் என்று சீக்கியர்களின் மீதான கொலைகளை நியாயப்படுத்தியவர்தான் ராஜீவ்காந்தி.

குசு குசு என்று பலராலும் ஓரிருவரால் ஓங்கியும் விமர்சிக்கப்பட்டு கொண்டிருந்த ராஜீவ்காந்தியின் புனித பிம்பத்தை வெளிப்படையாக செருப்பு மாலை போட்டு உடைத்திருக்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள். இதை ராஜீவுக்கு செய்யப்பட்ட அவமரியாதை என்பதை விட, ராஜீவ் மரணத்தின் பெயரால் தமிழர்களிடையே கட்டமைக்கப்பட்டிருக்கும் புனித பிம்பத்தையும், எண்ணத்தையும் மவுனத்தையும் உடைக்கும் நிகழ்ச்சியே, இந்த செருப்புமாலை நிகழ்ச்சி பெரியார் பிள்ளையாரை செருப்பால் அடித்த அதே அதிர்ச்சி வைத்தியத்துக்கு இணையானதே என்று கருதுகிறேன்.

ராஜீவ்காந்தி மரணத்தை பற்றிய விவாதத்தை மே 21, 1991இல் சோனியா அறுத்த தாலியில் இருந்து ஆரம்பிக்க கூடாது, ஈழத்தமிழ்போராளிகளை சுற்றி வளைத்து கையெழுத்து வாங்கியதிலிருந்து (அ)ஹிம்சை நாடான இந்தியராணுவம் ஈழத்தில் அறுத்த தாலிகளின் எண்ணிக்கையிலிருந்தும் தான் ஆரம்பிக்க வேண்டும். ராஜீவ்காந்தியின் மரணம் பற்றி மீண்டும் ஒரு விவாதமும் கட்டுடைப்பும் நடத்த பட வேண்டும்.

இங்கே பதவிக்காக வேட்டி துண்டு என்று மட்டுமல்ல கோமணத்தையே கழற்றி தந்திருக்கும் கட்சிகளின் மத்தியின் தொல்.திருமாவின் போராட்டங்கள் புதிய நம்பிக்கை அளிக்கின்றன.

கட்சத்தீவு மீட்பு - உச்சநீதிமன்ற நோட்டிஸ் - நன்றி செல்வி.ஜெயலலிதா


கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்கும் நடவடிக்கைக்காக மத்திய அரசிற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது, முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலே இம்மாதிரியான நடவடிக்கையை உச்சநீதிமன்றம் எடுத்துள்ளது...

கச்சத்தீவின் ஒப்பந்த நடைமுறைகளை இலங்கை அரசு சரியாக பின்பற்றாததினால் உலக நீதிமன்றத்தின் படியேறி கச்சத்தீவை திரும்பவும் பெறும் வாய்ப்பிருந்தாலும் தமிழனை கொல்லும் இலங்கை அரசுக்கு பொருளுதவி, இராணுவ உதவிகளும் மட்டுமின்றி ஆட்காட்டி வேலையையும் செய்து வரும் தமிழர் விரோத மத்திய அரசு(அதில் பங்களித்துக்கொண்டிருக்கும் தமிழர் கட்சிகளையூம் சேர்த்ததே மத்திய அரசு) கச்சத்தீவை மீட்கும் எந்த முயற்சியையும் எடுக்குமா என்பது சந்தேகமே...

இலங்கை பத்திரிக்கையில் வெளிவந்துள்ள இந்த செய்தி இன்னும் எந்த இந்திய ஊடகங்களிலும் தமிழ் ஊடகங்களிலும் வெளிவராதது இந்த பிரச்சினையில் எவ்வளவு அலட்சியமாக இந்திய தமிழ் ஊடகங்கள் நடந்து கொள்கிறது என்பது தெளிவாகிறது.

மீனவன் செத்தாலும் ஈழத்தவன் செத்தாலும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது.... தமிழர்களின் நிலத்தை தமிழர்களை இந்தியர்கள் இலங்கைக்கு வாரிவழங்கியதிலிருந்தே தமிழ்மண்ணின் மீதான இந்தியர்களின் எண்ணம் புரிந்ததே

இந்த பிரச்சினையை உச்சநீதிமன்றம் எடுத்து சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் மத்திய அரசிற்கு கட்சத்தீவை மீட்கும் நடவடிக்கைக்காக நோட்டிஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றத்திற்கும் நன்றி

அடுத்த என்கவுண்டர் நக்சலைட் சுந்தரமூர்த்தியா?


வழக்கம் போல அடுத்த என்கவுண்டருக்கு ஒத்திகை நடக்கிறதோ என்ற சந்தேகம் இந்த வார ஜூவி யில் வெள்ளத்துரையும் வெடிக்கும் சர்ச்சையும்... ''சுடப்போறாங்க சுந்தரமூர்த்தியை!'' என்ற கட்டுரையை படிக்கும் போது தோன்றுகிறது.


சுந்தரமூர்த்தி, சுமார் 18 ஆண்டுகள் தலைமறைவுக் குற்றவாளியாக இருந்து 2006-ம் ஆண்டு திருப்பூரில் கைது செய்யப் பட்ட நக்சலைட்...



டி.எஸ்.பி வெள்ளைத்துரை, அய்யோத்திகுப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்ததிலிருந்து வீரப்பன் கொலை வரை வெள்ளைத்துரையின் கை இருப்பது தெரிந்தது, இப்போது வெள்ளைத்துரை சுந்தரமூர்த்தியின் பாதுகாப்பு எஸ்கார்ட்டாக செல்வது மிகுந்த சந்தேகத்திற்குரியது மட்டுமல்லாமல் அந்த பேட்டியில் "இதே சுந்தரமூர்த்தி தப்பிக்க முயற்சிசெஞ்சு, என்கவுன்ட்டர் செய்யறதுக்கான சூழ்நிலை அமைஞ்சா, கண்டிப்பா சுடுவேன்!'' என்று வெள்ளைத்துரை சொல்லியிருப்பதும் என்கவுண்டர் சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.


நக்சலைட்டுகள் ரவுடிகள் போன்றவர்கள் அல்ல, அவர்கள் அரசியல் கைதிகள், அவர்கள் அரசியல் கைதிகளாக நடத்தப்பட வேண்டியவர்கள், அவர்கள் ரவுடிகளை போன்றவர்கள் அல்ல...


நக்சலைட்டுகள் உருவாகக்கூடாதென்றால் அதற்கான சமூக, பொருளாதார, அரசியல் சூழலை உருவாக்க வேண்டும், அடக்குமுறையும் துப்பாக்கிகள் தூக்குவதும் நிச்சயம் எந்த பலனையும் தருவதில்லை...


என்கவுண்டர்கள் எப்போதும் ஆதரிக்கப்படக்கூடாதவைகள்....


என்கவுண்டர்கள் நடந்தன, என்கவுண்டர்கள் நடக்கின்றன, என்கவுண்டர்கள் நடக்கும், ஆனால் ரவுடிகள் பிறந்து இறந்து கொண்டேயிருப்பார்கள், இறந்து பிறந்து கொண்டே இருப்பார்கள், எந்த என்கவுண்டர்களும் ரவுடிகளின் பிறப்பை தடுப்பதில்லை.


ரவுடிகளை சரியான முறையில் கைது செய்யமுடியததை, சரியான முறையில் வழக்கு நடத்தமுடியாததை, சரியான முறையில் தண்டனை வாங்கித்தரமுடியாததை, சரியான சிறை தண்டனை சூழல் அமைக்க முடியாததை எல்லாம் கண்டிக்க முடியாது அதனால் அரசு துப்பாக்கி தூக்குவதையும் கண்டிக்க முடியாது எனலாம், ஆனால் நியாயமான போராட்டங்களையும் கூட அடக்க போலீஸ் ஸ்டேசன் என்றால் என்ன என்றே தெரியதவர்களுக்கும் கூட நள்ளிரவு கைதுகளை அரசாங்கத்தால் உணர வைக்க முடிந்தது, பத்திரிக்கையாளனை பொடாவில் போட முடிந்தது, போராட்டத்தை அடக்க சாதிக்கலவரத்தை தூண்டமுடிந்தது.


நமக்கு பிடிக்காதவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக அரசாங்க அத்துமீறல்களை நாம் கைதட்டி வரவேற்றால், அரசாங்கத்திற்கு பிடிக்காத அரசாங்கத்தால் சமாளிக்க முடியாத நபர்களின் நியாயமான பிரச்சினைகளுக்காக போராடுபவர்களை நோக்கி(அது நீங்களாக கூட இருக்கலாம்) அதே முறையற்ற அரசாங்க அத்து மீறல்கள் திரும்பும்போது நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.


இது தொடர்பான என் முந்தைய பதிவு "முட்டைரவி இன்னுமொரு என்கவுண்டர்"

தயவு செய்து போரை நிறுத்தாதீர்கள்

கிளிநொச்சி விழுந்துவிட்டது, தயவு செய்து போரை நிறுத்தாதீர்கள் மிச்ச சொச்ச தமிழனையும் அழிச்சி முடிச்சிடுங்க...

உலக தமிழினத்தின் ஒரே தலைவருக்கும், தமிழ்பாதுகாவலருக்கும் இன்னுமொரு தர்ம சங்கடம் வரக்கூடாது...

தயவு செய்து போரை நிறுத்தாதீர்கள் மிச்ச சொச்ச தமிழனையும் அழிச்சி முடிச்சிடுங்க...

திமுக தலைவர் பதவி பத்தாவது முறையாக ரெனியூ செய்யப்பட்டது



இன்று திமுக தலைவர் பதவி வழக்கம் போல பத்தாவது முறையாக ரெனியூ செய்யப்பட்டது...

என்ன இருந்தாலும் திமுக வின் உட்கட்சி சனநாயகம் சும்மா தூள் தான், இதே பாருங்க அதிமுகனா பொதுச்செயலாளர் பதவி நிரந்தரமா செல்வி ஜெயலலிதாவுக்கு, பாமக தலைவர் பதவி முதலில் தீரன் அப்புறம் கோ.க.மணி அது யாரா இருந்தாலும் மருத்துவரய்யா கை காண்பிப்பவருக்கு தான், ஆனா பாருங்க திமுக தான் உட்கட்சி சனநாயகத்தை பேணும் ஒரே கட்சி, கலைஞரை எதிர்த்து தலைவர் பதவிக்கு யாரும் மனுதாக்கல் செய்யலைன்னா கலைஞர் என்னங்க செய்வார்... எப்படியோ உட்கட்சி சனநாயகத்தை காப்பாத்திட்டாங்க...

ஆமாம் மூணு வருசம் முன்னால தலைவர் தேர்தல் அன்னைக்கு அறிவாலயம் பரபரப்பா இருந்ததாமே? சேலம் வீரபாண்டியாரால... இன்னைக்கு ஒன்றுமில்லையா?

படிக்க தட்ஸ்டமில் செய்திகள்





சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவின் தலைவராக 10வது முறையாக முதல்வர் கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக அன்பழகனும், புதிய பொருளாளராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டனர்.

திமுக உள்கட்சித் தேர்தல்கள் நடந்து வருகின்ரன. இன்று தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்வு நடைபெற்றது.

தலைவர் பதவிக்கு கருணாநிதி, பொதுச் செயலாளர் பதவிக்கு அன்பழகன், பொருளாளர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் ஆகியோரது பெயர்களில் மட்டும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இன்று காலை 10 மணிக்கு திமுக பொதுக்குழு கூட்டம் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் கூடியது. கூட்டத்தில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.




அதில், தலைவராக கருணாநிதி, பொதுச் செயலாளராக அன்பழகன், பொருளாளராக ஸ்டாலின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து மூன்று பேருக்கும் ஆளுயர மாலைகள் அணிவிக்கப்பட்டன. முதல்வர் கருணாநிதிக்கும், அமைச்சர் அன்பழகனுக்கும், மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி ஆசி பெற்றார்.

பின்னர் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், திமுக முன்னணியினர், இயக்குநர் பாக்யராஜ், போட்டி மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் நின்று மூன்று தலைவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.

மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம், அமை‌ச்ச‌ர் கோ.‌சி.ம‌ணி ஆ‌கியோ‌ர் கா‌லி‌ல் ‌விழு‌ந்து ஆ‌சி பெ‌ற்றா‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன்.

கலைஞரை நம்பினார் கைவிடப்படார்?

கலைஞரை நம்பினார் கைவிடப்படார்?



இன்று

கலைஞர் டிவி சரத் ரெட்டி....















நாளை

ஆ.... ராசா??






????







என்னது நேற்றா? ஸாரி லிஸ்ட் போட்டு மாளாது.... அவ்ளோ இருக்கு

கலாச்சார பாசிஸ்ட்களின் டிவியில் சாருநிவேதிதா

ஒன்னுமில்லை சாருநிவேதிதா மக்கள் தொலைகாட்சியில் வரும் புத்தாண்டு தினத்தன்று காலை பத்து மணிக்கு சாரு நிவேதிதா, தமிழ்ச் சமூக, கலாச்சார, இலக்கியச் சூழல் பற்றிப் பேசுவார் என்று அவர் தளத்தில் அறிவுப்பு வந்துள்ளது...

பாமக வின் கொள்கைகள் தாலிபான் கொள்கைகள் என்றும் மருத்துவர்.இராமதாசு அவர்களின் குடி பற்றிய எதிர்ப்புக்கும் இன்ன சில கொள்கைகளுக்கும் கலாச்சார பாசிஸ்ட்(மிகசரியாக இந்த வார்த்தையை சாரு பயன்படுத்தினாரா என்று நினைவில்லை ஆனால் அவர் இணையத்தில் நேரமெடுத்து தேடினால் கிடைக்கும் எந்த வார்த்தையை பயன்படுத்தினார் என்று) என்றும் கூறியவர்களின் இடத்திலேயே சென்று பேசப்போகிறார், என்ன பேசியிருக்கிறார் என்ற ஆவலுடன் பார்க்க உள்ளேன்...

சிங்கையில் மக்கள் தொலைகாட்சி வருவதில்லை எனவே யாராவது அன்பு நண்பர்கள் பதிந்து வெளியிட்டால் மிக்க மகிழ்ச்சி

அமைச்சர்கள் முதல் அடிமட்டம் வரை திமுகவினரின் நிலபறிப்பு ரவுடியிசம்

ஒவ்வொரு முறை திமுகவுக்கு எதிராகவும் அதிமுகவிற்கு ஆதரவாகவும் வைக்கப்படும் ஒரு முக்கிய விமர்சனம் திமுக வந்தால் ரவுடியிசம் தலைதூக்கிவிடுமென்பது, என்னமோ அதிமுகவிலோ பிற கட்சிகளிலோ ரவுடிகளே இல்லாத மாதிரி, அப்போதெல்லாம் எதிர்வாதமாக வைப்பதென்னவோ திமுக காலத்தில் என்கவுண்டர்கள் செய்யப்பட்ட ரவுடிகளின் எண்ணிக்கை அதிமுக காலத்தில் செய்யப்பட்ட என்கவுண்டர்களை விட அதிகம், என்கவுண்டர்கள் மீதான கடும் விமர்சனமிருந்தாலும் திமுகவினர் காலத்தில் ரவுடியிசம் என்று சொல்வதெல்லாம் பார்ப்பன சதி, எட்செட்ரா எட்செட்ரா என நம்பியிருந்தவர்களில் நானும் ஒருவன்.

முதலில் அமைச்சர் என்.கே.கே.பி ராஜா மீதான நிலபறிப்பு ஆட்கடத்தல் மோசடி வழக்கு, 50 கோடி சொத்தை ஆட்டைய போட நினைத்த அமைச்சர், தொடர்ந்து நீதிமன்றத்தை நாடிய எதிர்தரப்பு(தகவல்கள் எல்லாம் அவர்கள் எந்த வம்புதும்புக்கும் போகாதவர்களாகவே தெரிகின்றது)அதை தொடர்ந்து அமைச்சர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

அடுத்ததாக வீரபாண்டி ஆறுமுகம் மீதான நிலபறிப்பு மோசடி , வழக்கு, அதை எதிர்கொள்ள பேரம்பேசப்பட்டது, இரு அமைச்சர்கள் விசயத்தில் எதிர்தரப்பால் மிரட்டல்கள் எல்லாம் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போன வாரம் நக்கீரனில் திமுக எம்.எல்.ஏ வும் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளருமான செங்குட்டுவன் 2 கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலத்தை அடியாட்கள் துணையோடு 23 இலட்சத்திற்கு ஆட்டைய போட்டுள்ளார் என குற்றசாட்டு.


வலைப்பதிவிலும் கூட கோ.ராகவன் சென்னையில் நிலம் திருடும் பெரிய குடும்பத்துப் பேரன்கள் அவரது சொந்தக்காரர்கள் நிலத்தை பெரிய இடத்து பேரன்கள் ஆட்டையை போட்டது பற்றி இப்படி எழுதியுள்ளார்
...
சினிமாவில் வருவது போல.. ஒரு குடிசை.. ஒரு மாருதி வேன். கொஞ்சம் அடியாட்கள் (மதுரையிலிருந்தாம்)....இப்பிடி இருக்கிறதாம் காட்சி.

காவல்துறையில் புகார் கொடுக்கப் போனாலும் அவர்கள் எந்தப் புகாரையும் ஏற்க மறுக்கிறார்களாம். தமிழகத்தின் பிரபல அரசியல் தலைவரின் மகன் இந்த விஷயத்தில் இருப்பதால் புகார் வேண்டாம் என்று காவல் துறையினரே "நல்லது" சொல்லி அனுப்புகிறார்களாம்.
...


அமைச்சர்கள் 50 கோடி ரூபாய் நிலத்தை ஆட்டைய போட்டால் எம்.எல்.ஏ 2 கோடி ரூபாய் நிலத்தை அபகரித்துள்ளார்கள், இதெல்லாம் கோடி ரூபாய் விசயங்கள் மேலும் அமைச்சர் எம்.எல்.ஏ க்கள் தொடர்பானவை எனவே பத்திரிக்கையில் வந்துள்ளன.

ஆனால் கவுன்சிலர் தொடங்கி இன்னும் ந.செ., கி.செ, வ.செ என திமுகவின் ஏதோ ஒரு 'செ'வை போட்டுக்கொண்டு நடுத்தரவர்கத்தினர்கள் சிறுக சிறுக சேர்த்து ஒரே சொத்தாக இருக்கும் சில இலட்ச ரூபாய் வீட்டு மனைகளை ஆட்டையை போட ஆரம்பித்துள்ளனர், காவல்துறைக்கு சென்றால் கேஸ் கொடுக்க 5,000 ரூபாயில் ஆரம்பித்து ஒரு 20ஆயிரம் ரூபாய் செலவுக்கு பின் திமுக கவுன்சிலர்கள் முன்னிலையில் ஒரு முப்பது பேருடன் கட்டைப்பஞ்சாயத்து நடக்கும், பிறகென்ன கால்வாசிக்கும் குறைவான சொற்ப விலையில் நிலத்தை பறிகொடுத்து அந்த நடுத்தர வர்கத்தினர் மேலும் தொல்லைகள் வராமல் இருந்தால் போதும் என நொந்து வருவார், இவைகள் எல்லாம் எங்கோ கேள்விப்பட்டோ பத்திரிக்கையில் படித்தோ சொல்லவில்லை, எனக்கு தெரிந்த இடங்களிலேயே நடந்துள்ளது. மேற்கொண்டு வேறு தளங்களில் பிரச்சினையை எடுத்து செல்ல உதவ தயாராக இருந்தும் அவர்கள் போதுங்க இதற்கே ரொம்ப பிரச்சினையாகிவிட்டது சனியன் இதோட போனா போதும் என்று அவர்கள் எதற்கும் தயாராக இல்லை.

அரசியல்வாதிகள் அரசு நிலத்தையும் பொறம்போக்கு நிலத்தையும் தான் ஆக்கிரமிப்பார்கள் என்றிருந்தது, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பணக்கார தனியார் நிலங்கள், பிரச்சினைக்குறிய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது ஆனால் இப்போது கருணாநிதியின் திமுக ஆட்சியில் அமைச்சர்கள் முதல் அடிமட்டம் வரை எந்த வில்லங்கமும் இல்லாமல் பக்கா டாக்குமெண்ட்டுகளோடு இருக்கும் தனியார் நிலங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளனர்.

50கோடி சொத்தை 5 கோடி செலவு செய்தாவது காப்பாற்றிடலாம் என்பவர்கள் வழக்கு பத்திரிக்கை என செல்கிறார்கள், 5 இலட்ச ரூபாய் சொத்துக்கு வெறும் சாபம் மட்டுமே கொடுக்க முடிந்த, அதுவும் சத்தம் போட்டு சாபம் கொடுக்க முடியாமல் வாய்க்குள்ளேயும் வீட்டுக்குள்ளேயும் வெறும் சாபம் மட்டுமே கொடுக்க முடிந்த சாதாரண நடுத்தரவர்கத்தின் சேமிப்பு நிலங்களை பிடுங்கி தின்னும் இந்த பிணம் தின்னும் ஈனத்தொழிலுக்கு
இவர்கள் எல்லாம் ஏதாவது -----(Fill in the blanks).

ஆனாலும் என்ன பார்ப்பனிய எதிர்ப்பு என்ற பெயரில் திமுகவினரின் இந்த ரவுடித்தனத்தையும் மறைக்கலாம் வாங்க....

அறிவுகெட்ட முண்டம் செந்தழல் ரவி - ரொம்ப நல்லவரால் பால்ய நண்பனுக்கே அந்த கதி...


எத்தனை தடவை ரொம்ப நல்லவருங்க டவுசரை கழட்டுவ, உனக்கு இதுக்கெல்லாம் நேரமிருக்கு, நான் சில மாதங்களுக்கு முன்னால ஒரு விசயம் கேட்டிருந்தேனே அதை செய்து தர மட்டும் நேரமில்லையா?

உனக்கு போன் அடிக்கலாம்னு பார்த்தா காலிங் கார்டுலயே 2 வெள்ளிக்கு 5 நிமிசம் தான் பேசமுடியுமாம்!...

ரொம்ப நல்லவர் தன் பால்ய ஸ்நேகிதனுக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்தார், அந்த பால்ய ஸ்நேகிதனும் அதை எல்லோரிடமும் சொல்லுவார், அது மட்டுமல்லாம அந்த பால்ய ஸ்நேகிதர் தனியா தொழில் அப்படி இப்படின்னு நல்ல நிலைக்கு போயிட்டுருக்கார், அவ்வப்போது அந்த பால்ய ஸ்நேகிதர் நம்ம ரொம்ப நல்லவர்கிட்ட தன் தொழில் நல்ல நிலையில் போகுதுன்னு சொல்லிக்கிட்டுருப்பார், ஒரு நாள் நம்ம ரொம்ப நல்லவர் இந்தியா போனப்ப பால்ய ஸ்நேகிதரை பார்க்கனும்னு சொன்னப்ப அந்த பால்ய ஸ்நேகிதர் போன் செஞ்சிட்டு வான்னு சொல்லியிருக்கார், அதுக்காக அந்த பால்ய ஸ்நேகிதரை நன்ற் மறந்தவன், என்னை வெறுப்பேத்தனும்னே அவன் தொழில் வெற்றிகளை சொல்றான் அது இதுன்னு பால்ய ஸ்நேகிதரை வில்லனாக்கி ஒரு கதை எழுதி நம்ம ப்லாக்ல போட்டுட்டார், என்ன கொடுமைன்னா அந்த பால்ய ஸ்நேகிதரும் பதிவு படிக்கிறவர்தான். அந்த பால்ய ஸ்நேகிதர் பதிவு படிப்பாருன்னு தெரிஞ்சே அவரை வில்லனாக்கி இல்லாததை பொல்லாததை எழுதி கதை எழுதுறாருன்னா புரிஞ்சிக்கோ மாம்ஸ்

அப்புறம் இன்னொரு கதையில நம்ம ரொம்ப நல்லவர் ஆபிஸ்ல வேலை செய்யுற நண்பர் மோட்டார் சைக்கிள்ல லிப்ட் கொடுக்கலையோ ஏதோ, அந்த கடுப்புல அந்த மோட்டார் சைக்கிள் நண்பரை வில்லனாக்கி ஒரு கதை, எழவு அந்த மோட்டார் சைக்கிள் நண்பர் பதிவெல்லாம் படிக்கிறாரோ என்னமோ தெரியலை.

பால்ய ஸ்நேகிதனுக்கே அந்த ட்ரீட்மெண்ட்ன்னா பதிவு ஸ்நேகிதர்களுக்கு என்னா ட்ரீட்மெண்ட்டு கிடைக்கும்? அப்போ எதிரிகளுக்கு இன்னும் என்னா ட்ரீட்மெண்ட் கிடைக்கும்? யோசிச்சி பாரு...

ரொம்ப நல்லவர்கிட்ட பழகனா பழகிட்டு போகட்டும், நீ ஒன்னும் சொல்ல வேண்டாம், அவங்கவங்க பட்டு தெரிஞ்சிகிட்டும் மாம்ஸ்... உனக்கென்ன ஆச்சி?


மாம்ஸ் பழகுறாங்கனா பழகிட்டு போறாங்க, எல்லாம் அனுபவிக்கும் போது தெரிஞ்சிக்கிட்டுபோறானுங்க, 'காலம்' எனக்கு புரியவைக்கலையா? அது போல அதே 'காலம்' அவங்களுக்கு புரியவைக்கும்....

மாம்ஸ் உன்னால இன்னைக்கு பலரும் வேலையில் இருக்காங்க, உன்னால பல நல்ல விசயங்கள் நடந்திருக்கு, இன்னும் கேட்டா பதிவுலகின் சாக்கடையில் இறங்கி அதை சுத்தபடுத்தியவர்களின் ஒருவன் நீ, அதனால் உனக்கு ஏற்பட்ட மன உளைச்சல், உன் குடும்பத்திற்கு ஏற்பட்ட உளைச்சல்கள், பண விரயங்கள், நேர விரயங்கள், கேரியர் செட் பேக் எல்லாவற்றிற்கும் மேலே நீ எதிர்நோக்கிய கொலை மிரட்டல்கள் என பல விசயங்களை தோளில் போட்டு இந்த பதிவுலகின் சாக்கடையை சுத்தம் செய்தவனில் ஒருவன், மற்ற பேசுறவனுங்களுக்கு என்னா மயிரா போச்சி? மிஞ்சி போனா நெட்டுல உக்காந்து வீட்லயும் அலுவலகத்திலும் கிடைக்கும் வெட்டி நேரத்தில் பதிவு போட்டுட்டு போவானுங்க, அவனுங்களுக்கு ஒரு நட்டமும் கிடையாது....

மாம்ஸ் உன்னால வேலை கிடைத்து, உன் உதவியால் தொழில் தொடங்கியவர்கள் என உன் அளவிற்கு உன் வயதிற்கு உன் பண வசதிக்கு நீ பிறருக்கு உன் நேரம், பணம் எல்லாம் செலவு செய்து உதவியது நிச்சயம் பெரிய விசயம். உன் நேரம் பொன்னானது.

ஒரு போலியாக இருப்பதற்கு தேவையான ஓய்வு நேரமும் இணையமும் அதற்கான மனநிலையும் சிலருக்கு இங்கே இருக்கு அதனால் அவனுங்களை அவனுங்க போக்கில் விட்டுவிடு மாம்ஸ், நீ பிறருக்கு உதவுவதை தொடர்ந்து செய்.

இத்தனையும் மீறி நீ டவுசர் கழட்டும் நடவடிக்கையில் தொடர்ந்தால் "அறிவு கெட்ட முண்டம் செந்தழல் ரவி, எவன் எப்படி போன உனக்கென்ன?"

descent AIIMS and indescent Law college


டீசண்ட்டான எய்ம்ஸ் மாணவர்கள் தாழ்த்தப்பட்ட மாணவர்களை எப்படி டீசண்ட்டாக வெளியேற்றினார்கள்... ஒரு தாழ்த்தப்பட்ட மாணவரின் கதவில் டீசண்ட்டான எய்ம்ஸ் மாணவர்களால் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் பக்கத்தில்

A senior resident doctor, who belongs to the scheduled castes, said: “We are so scared here because the director (P. Venugopal) himself is supporting them (the anti-quota agitators). We have nowhere to go to complain.”

AIIMS rules say a student who fails twice over the five years of study cannot pursue his or her post-graduation.
The students said that for fear of their careers being destroyed they did not want to “get into the bad books of the authorities”.
“The students have no choice but to bear this humiliation quietly and pass out in five years,” said Dr Vikas Bajpai of the Medicos’ Forum for Equal Opportunity, a pro-reservation group.

நம்ம டீசண்ட்டான எய்ம்ஸ் மாணவர்கள் எப்படி சாதி வேற்றுமையின்றி வாழ்கிறார்கள் என்பதை மேலும் படிக்க இங்கே போய் பாருங்கள்




ஆனால் சட்டக்கல்லூரி மாணவர்கள் எவ்வளவு இன் டீசண்ட்டாக இருக்கிறார்கள்....

உடலியன் வன்முறையை கட்டாயம் நானும் எதிர்க்கிறேன், சட்டக்கல்லூரி மாணவர்களின் மிக மோசமான செயலை நாம் எதிர்க்கும் இதே நேரத்தில் உடலியல் வன்முறை அல்லாத மற்ற வன்முறைகளுக்கும் இதே அளவு குரல் கொடுக்க வேண்டியது நம் கடமை....

இட்லிவடை பதிவில் இடஒதுக்கீடு பற்றி எழுதப்பட்டவை உடலியல் வன்முறையையும் விட மோசமான வன்முறை...

இது தொடர்பான என் முந்தைய பதிவு

சட்டக்கல்லூரி - இட்லிவடை வன்முறை என்பது வெறும் வன்முறையின் தெறிப்பா?!

descent AIIMS and indescent Law college


டீசண்ட்டான எய்ம்ஸ் மாணவர்கள் தாழ்த்தப்பட்ட மாணவர்களை எப்படி டீசண்ட்டாக வெளியேற்றினார்கள்... ஒரு தாழ்த்தப்பட்ட மாணவரின் கதவில் டீசண்ட்டான எய்ம்ஸ் மாணவர்களால் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் பக்கத்தில்

A senior resident doctor, who belongs to the scheduled castes, said: “We are so scared here because the director (P. Venugopal) himself is supporting them (the anti-quota agitators). We have nowhere to go to complain.”

AIIMS rules say a student who fails twice over the five years of study cannot pursue his or her post-graduation.
The students said that for fear of their careers being destroyed they did not want to “get into the bad books of the authorities”.
“The students have no choice but to bear this humiliation quietly and pass out in five years,” said Dr Vikas Bajpai of the Medicos’ Forum for Equal Opportunity, a pro-reservation group.

நம்ம டீசண்ட்டான எய்ம்ஸ் மாணவர்கள் எப்படி சாதி வேற்றுமையின்றி வாழ்கிறார்கள் என்பதை மேலும் படிக்க இங்கே போய் பாருங்கள்




ஆனால் சட்டக்கல்லூரி மாணவர்கள் எவ்வளவு இன் டீசண்ட்டாக இருக்கிறார்கள்....

உடலியன் வன்முறையை கட்டாயம் நானும் எதிர்க்கிறேன், சட்டக்கல்லூரி மாணவர்களின் மிக மோசமான செயலை நாம் எதிர்க்கும் இதே நேரத்தில் உடலியல் வன்முறை அல்லாத மற்ற வன்முறைகளுக்கும் இதே அளவு குரல் கொடுக்க வேண்டியது நம் கடமை....

இட்லிவடை பதிவில் இடஒதுக்கீடு பற்றி எழுதப்பட்டவை உடலியல் வன்முறையையும் விட மோசமான வன்முறை...

இது தொடர்பான என் முந்தைய பதிவு

சட்டக்கல்லூரி - இட்லிவடை வன்முறை என்பது வெறும் வன்முறையின் தெறிப்பா?!

சட்டக்கல்லூரி - இட்லிவடை வன்முறை என்பது வெறும் இரத்தத்தின் தெறிப்பா?!

வன்முறை என்பது உடல் சார்ந்தது மட்டுமே என்பது போன்ற கருத்துகள் பலரிடமும் பரவியுள்ளன.

வன்முறை என்பதன் அளவுகோல் உடலளவில் துன்பப்படுத்துவது மட்டுமே என்ற கருத்தை என்னளவில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை, வன்முறை என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல, வன்முறைகளின் வடிவம் பல, அதில் உடல் சார்ந்த வன்முறையும் ஒன்று, ஆனால் பலர் உடல் சார்ந்ததை தவிர மற்றவைகள் வன்முறை என்ற வரையரையில் கொண்டுவரவில்லை.

தீண்டாமை, இரட்டை குவளை முறைகள் வன்முறையில்லையா?, இங்கே இரத்தமில்லை, யாரும் உடலளவில் யாரையும் காயப்படுத்துவதில்லை(சாதிக் கலவரம் வேறு) அதற்காக இந்த தீண்டாமை வன்முறையல்ல என்று கொள்ள முடியுமா?

ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட சிலர் மீது குறிவைத்து நடத்தும் தாக்குதல்கள், பொது மக்களிடம் குறிப்பிட்ட சிலரை பற்றி தவறான உருவகத்தை பதியவைக்க வேண்டும் என்று பத்திரிக்கை தர்மத்தை மீறி வெளியிடும் தவறான தகவல்கள் அதனால் ஏற்படும் சேதம் ஊடகங்களின் வன்முறையல்லவா? நேர்மையற்ற முறையில் ஒரு சில ஊடகங்கள் மூலம் அரசியலதிகாரம் கைப்பற்றப்படுவது ஊடகங்கள் சமுதாயத்தின் மீது நடத்தும் வன்முறையல்லவா, இங்கேயும் கூட கத்தியில்லை, இரத்தமில்லை உடலளவில் துன்பமில்லை, அதற்காக இது ஊடக வன்முறையல்ல என்று உருவகித்துக் கொள்ள இயலுமா?

சனாதானம்,மனு நீதி என்ற பெயரில் கடவுள் குடி கொண்டிருக்கும் கோவில்களிலும் கூட உரிமைகளை மறுப்பது என்பது வன்முறையல்லவா? இங்கும் கூட கத்தி, இரத்தமில்லை தான், அதற்காக இது வன்முறையல்லவா?

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் விமர்சிப்பதும், தீய கருத்துகளை சொல்லி பலரை மனதளவில்,உணர்ச்சிகளை காயப்படுத்துவதும் வன்முறை என்ற அளவீட்டில் அடங்காதவையா?

மொழி திணிப்பு, மொழிகளை நீச மொழி என்பது, தாய்மொழியில் கோவில் குடமுழக்கு நடத்தினால் பாவம் என்பதெல்லாம் மொழிகளின் மீது நடத்தப்படும் மொழி வன்முறையில்லையா? இங்கும் கூடத்தான் உடல் சார்ந்த துன்பப்படுத்துதல் இல்லை.

இராசதந்திரம் என்ற பெயரில் இழைக்கப்படும் துரோகங்கள் எல்லாம் வன்முறையல்லவா? இரத்தம் தெறிக்காமல் இருப்பினும்.

வியாபார தந்திரம் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் சந்தையை கைப்பற்றுதலில் கூட உடல் காயப்படுவதில்லை தான், ஆதலால் இது வன்முறையல்ல என்றாகிவிடுமா?

வன்முறை என்பது வெறுமனே உடல் சார்ந்தது என்று மட்டும் சுருக்கிவிடாதீர்கள், வன்முறையின் ஒரு வடிவம் தான் உடல் சார்ந்த துன்பம், மேற்குறிப்பிட்டது போன்ற வேறு பல வடிவங்களும் வன்முறைக்கு உள்ளன.

எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையான இடஒதுக்கீட்டை கேவலப்படுத்தும் பார்ப்பன உயர்சாதி கும்பல்கள் இதையும் பயன்படுத்திக்கொண்டுள்ளன...

இட்லிவடை சட்டக்கல்லூரி மாணவர்களிடையே நடந்த சாதிக்கலவரத்தை எழுதும்போது மன்னிக்கவும் வெட்டி ஒட்டும் போது இடஒதுக்கீட்டை கேவலப்படுத்தி கொடுத்த குறிப்பு இது...

படிக்க இஷ்டம் இல்லாமல் கோட்டாவில் வரும் சிலர், படிப்பை விட்டுவிட்டு, அராஜகத்திலும் ஜாதி வன்முறையிலும் ஈடுபடுகின்றனர். இது எல்லாருக்கும் கெட்ட பெயரையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இப்படி வன்முறையை இளமையிலேயே நம்பி வாழும் இவர்கள் நாளைக்குக் கோட்டைக்குப் போவார்கள் என்று நினைத்தால்......


இட்லிவடையின் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை மீதான இந்த வன்முறை சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய வன்முறையையும் விட மூர்க்கமானது



பழைய பின்னூட்டங்களுக்கு இங்கே சொடுக்கவும்

சட்டக்கல்லூரி - இட்லிவடை வன்முறை என்பது வெறும் இரத்தத்தின் தெறிப்பா?!

வன்முறை என்பது உடல் சார்ந்தது மட்டுமே என்பது போன்ற கருத்துகள் பலரிடமும் பரவியுள்ளன.

வன்முறை என்பதன் அளவுகோல் உடலளவில் துன்பப்படுத்துவது மட்டுமே என்ற கருத்தை என்னளவில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை, வன்முறை என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல, வன்முறைகளின் வடிவம் பல, அதில் உடல் சார்ந்த வன்முறையும் ஒன்று, ஆனால் பலர் உடல் சார்ந்ததை தவிர மற்றவைகள் வன்முறை என்ற வரையரையில் கொண்டுவரவில்லை.

தீண்டாமை, இரட்டை குவளை முறைகள் வன்முறையில்லையா?, இங்கே இரத்தமில்லை, யாரும் உடலளவில் யாரையும் காயப்படுத்துவதில்லை(சாதிக் கலவரம் வேறு) அதற்காக இந்த தீண்டாமை வன்முறையல்ல என்று கொள்ள முடியுமா?

ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட சிலர் மீது குறிவைத்து நடத்தும் தாக்குதல்கள், பொது மக்களிடம் குறிப்பிட்ட சிலரை பற்றி தவறான உருவகத்தை பதியவைக்க வேண்டும் என்று பத்திரிக்கை தர்மத்தை மீறி வெளியிடும் தவறான தகவல்கள் அதனால் ஏற்படும் சேதம் ஊடகங்களின் வன்முறையல்லவா? நேர்மையற்ற முறையில் ஒரு சில ஊடகங்கள் மூலம் அரசியலதிகாரம் கைப்பற்றப்படுவது ஊடகங்கள் சமுதாயத்தின் மீது நடத்தும் வன்முறையல்லவா, இங்கேயும் கூட கத்தியில்லை, இரத்தமில்லை உடலளவில் துன்பமில்லை, அதற்காக இது ஊடக வன்முறையல்ல என்று உருவகித்துக் கொள்ள இயலுமா?

சனாதானம்,மனு நீதி என்ற பெயரில் கடவுள் குடி கொண்டிருக்கும் கோவில்களிலும் கூட உரிமைகளை மறுப்பது என்பது வன்முறையல்லவா? இங்கும் கூட கத்தி, இரத்தமில்லை தான், அதற்காக இது வன்முறையல்லவா?

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் விமர்சிப்பதும், தீய கருத்துகளை சொல்லி பலரை மனதளவில்,உணர்ச்சிகளை காயப்படுத்துவதும் வன்முறை என்ற அளவீட்டில் அடங்காதவையா?

மொழி திணிப்பு, மொழிகளை நீச மொழி என்பது, தாய்மொழியில் கோவில் குடமுழக்கு நடத்தினால் பாவம் என்பதெல்லாம் மொழிகளின் மீது நடத்தப்படும் மொழி வன்முறையில்லையா? இங்கும் கூடத்தான் உடல் சார்ந்த துன்பப்படுத்துதல் இல்லை.

இராசதந்திரம் என்ற பெயரில் இழைக்கப்படும் துரோகங்கள் எல்லாம் வன்முறையல்லவா? இரத்தம் தெறிக்காமல் இருப்பினும்.

வியாபார தந்திரம் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் சந்தையை கைப்பற்றுதலில் கூட உடல் காயப்படுவதில்லை தான், ஆதலால் இது வன்முறையல்ல என்றாகிவிடுமா?

வன்முறை என்பது வெறுமனே உடல் சார்ந்தது என்று மட்டும் சுருக்கிவிடாதீர்கள், வன்முறையின் ஒரு வடிவம் தான் உடல் சார்ந்த துன்பம், மேற்குறிப்பிட்டது போன்ற வேறு பல வடிவங்களும் வன்முறைக்கு உள்ளன.

எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையான இடஒதுக்கீட்டை கேவலப்படுத்தும் பார்ப்பன உயர்சாதி கும்பல்கள் இதையும் பயன்படுத்திக்கொண்டுள்ளன...

இட்லிவடை சட்டக்கல்லூரி மாணவர்களிடையே நடந்த சாதிக்கலவரத்தை எழுதும்போது மன்னிக்கவும் வெட்டி ஒட்டும் போது இடஒதுக்கீட்டை கேவலப்படுத்தி கொடுத்த குறிப்பு இது...


படிக்க இஷ்டம் இல்லாமல் கோட்டாவில் வரும் சிலர், படிப்பை விட்டுவிட்டு, அராஜகத்திலும் ஜாதி வன்முறையிலும் ஈடுபடுகின்றனர். இது எல்லாருக்கும் கெட்ட பெயரையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இப்படி வன்முறையை இளமையிலேயே நம்பி வாழும் இவர்கள் நாளைக்குக் கோட்டைக்குப் போவார்கள் என்று நினைத்தால்......


இட்லிவடையின் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை மீதான இந்த வன்முறை சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய வன்முறையையும் விட மூர்க்கமானது



பழைய பின்னூட்டங்களுக்கு இங்கே சொடுக்கவும்

எச்சரிக்கை, சாரு பெயரில் ஏமாற்றியது போன்ற ஏமாற்று மெயில் காசு கொடுத்து ஏமாறாதீர்கள்

சாருநிவேதிதா அவர்கள் பெயரில் ஏமாற்றி மின்மடல் அனுப்பி வெஸ்ட்டர்ன் யூனியன் மூலமாக பணம் பெற்றதை போன்ற ஒரு மெயில் இப்போது உலவுகிறது உஷார்...



fromNazeer Ahmed <ahnazeer19@yahoo.co.in>

to mailto:tabdull_83@hotmail.com
dateSat, Nov 8, 2008 at 2:35 PM

subjectEmergency!! I need your helpsigned-byyahoo.co.in


Hello,I am sorry I didn't inform you about my traveling for a program called Empowering Youth to Fight Racism, HIV/AIDS, and Lack of Education. The program took place in three major countries in Africa which are South Africa, Ghana and Nigeria. I am presently in Nigeria. I misplaced my wallet on my way to the hotel where my money, and other valuables were kept. I will like you to assist me with a soft loan urgently.The total sum of money that i would need would be $3,200US Dollars to sort-out my hotel bills and get myself back home. I will appreciate whatever you can afford, i'll pay you back as soon as i return,Let me know if you can assist me so that i can send you the details to use when sending the money through western union.Regard,

Nazeer Ahmed

எங்கே போனது இறையாண்மை? - தகிக்கும் தாமரை!


விகடனில் வெளியான கவிஞர் தாமரையின் செவ்வி...

காசு கொடுத்து படிக்கும் விகடன் பக்கங்களை அப்படியே முழுக்க மீள்பதிவு செய்வது தவறு தான்... இருந்தாலும் இந்த செவ்வி பேசும் பொருளின் முக்கியத்துவம் கருதி பதிப்பிக்கிறேன்... என்ன ஒரு ஆயிரம் பேர் என்பதிவு வழியாக இதை படிப்பதால் விகடனுக்கு எந்தவித நட்டமும் வந்துவிடாது என்றே எண்ணுகிறேன்...

இனி தாமரையின் செவ்வி

நீரலை மேல் பச்சை இலைகள் படர்ந்திருக்க... நீர்ப் பரப்புக்கு மேல் சற்றே தலைநீட்டி இதழ் விரித்துச் சிரிக்கும் தாமரை மலர்கள்... ஆனால், ஒரு தாமரை சீறிப் பார்த்திருக்கிறீர்களா? அப்படிச் சீறியிருக்கும் தாமரை, மலரல்ல; திரைப் பாடலாசிரியை தாமரை!

கடந்த 5-ம் தேதி இலங்கைத் தமிழர்களுக்காக சென்னையில் திரைப்படத் தொழிலாளர்கள் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட தாமரை, ''ஈழத் தமிழர்களின் பெயரைச் சொல்லி தமிழக அரசு திரட்டும் நிவாரண நிதிக்குப் பணம் கொடுக்காதீர்கள். நான் ஒரு பைசாகூடக் கொடுக்க மாட்டேன்!'' என்று சீறியிருப்பது, பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. தாமரையை சந்தித்தோம்.

''நிதி கொடுக்கக் கூடாது என்று நீங்கள் சொல்லக் காரணம் என்ன?''

''இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டும் என்ற நம்முடைய குரல், எந்த அரசின் செவிக்கும் எட்டவில்லை. ஆனால், போரால் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு நிதி திரட்டுகிறார்களாம். ஒரு பக்கம் குண்டு... மறு பக்கம் தொண்டா? ஆட்டுக்கிடைக்குள் நுழைந்திருக்கும் ஓநாயிடம் புல்லையும் செடிகொடிகளையும்



கொடுத்து ஆடுகளைக் காப்பாற்றச் சொல்வது போலத்தான் இந்த நிதி வசூல்! செஞ்சிலுவைச் சங்கமும் இன்னபிற சேவை நிறுவனங்களும் சிங்கள அரசால் துரத்தி அடிக்கப்பட்டுவிட்ட நிலையில், இங்கே திரட்டப்படும் நிதி யார் மூலம் ஈழத் தமிழர்களைப் போய்ச் சேரும்? (இதற்கிடையில் தமிழக அரசு திரட்டிய நிவாரணப் பொருட்களை தமிழக முதல்வர் மற்றும் செஞ்சிலுவை சங்க நிர்வாகி ஆகியோர் பார்வையிட்டு, இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடைபெறுகின்றன) ராஜபக்ஷே மூலமாகவா? உண்மையாகவே நாம் கொடுக்கிற நிதி, சிங்கள அரசின் அக்கிரம வேலைகளுக்குத்தான் பயன்படப் போகிறது! பாமர மக்களுக்குக் கூட இது தெரிந்திருப்பதால்தான், பெரிய அளவில் நிதி சேரவில்லை. இல்லாவிட்டால், இந்நேரம் எத்தனையோ கோடிகள் குவிந்திருக்கும். நம்முடைய நிதியால் நம்முடைய இனமே அழிந்துவிடக் கூடாது என்பதால்தான் நிதி கொடுக்காதீர்கள் என்கிறேன்.''

[நானு இதே காரணங்களுக்காக இதே முடிவு தான் எடுத்துள்ளேன்]


''ஈழ மக்களுக்காக நம்முடைய அரசு எவ்விதமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்கிறீர்கள்?''

''சில மாதங்களுக்கு முன்பாக ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ஆயுத வாகனத்தை, புலிகளுடையது என்றெண்ணி போலீஸ் மடக்கிப் பிடித்தது. ஆனால், அந்த வாகனத்தை அனுப்பிவைத்ததே மத்திய அரசுதான் என்பது பிறகே தெரிந்தது. தமிழகம் வழியாகவே சிங்கள அரசுக்கு உதவி செய்யும் மத்திய அரசு, எப்படி தமிழர்களைக் காக்கும்? ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஒவ்வொரு முறையும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் முறையிடுவார். அவரும் 'கண்டிப்பாக இலங்கைக்கு உதவ மாட்டோம்' என உறுதி கொடுப்பார். ஆனாலும், நம்முடைய விரலைக் கொண்டே நம் கண்ணைக் குத்துகிற வேலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது! கொள்கை, கோட்பாடுகளை எல்லாம் தூக்கி வீசிவிட்டுத் துடிக்கவேண்டிய தமிழக அரசியல்வாதிகள், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாகக் குட்டையைக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசின் சட்டையைப் பிடித்துத் தமிழக அரசு, சிங்களப் போரைத் தடுக்கச் சொல்ல வேண்டும். அதைவிட்டுவிட்டு, உண்டியல் குலுக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது? நம்முடைய குடும்பத்தில் ஒருவர் குண்டடிபட்டால், நாம் என்ன செய்வோமோ... அதைத்தான் ஈழத் தமிழர்கள் விஷயத்திலும் செய்யவேண்டும்!''

''ஈழ விவகாரத்தில் தி.மு.க. அரசின் ஒட்டுமொத்த நிலைப்பாடு பற்றி...''

''தி.மு.க., அ.தி.மு.க. என்ற பேதங்களைத் தூர வீசுங்கள்... எந்தக் கட்சி இங்கே உண்மையான உணர்வோடு செயல்படுகிறது? அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஆறு தீர்மானங்களில் முதன்மையானது, இலங்கையில் போர்நிறுத்தம் செய்யவேண்டும் என்பது. இன்றளவும் அப்படி செய்யப்படாத நிலையில், தமிழக எம்.பி-க்கள் ராஜினாமா செய்ய வேண்டியதுதானே? இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே பாக்கி இருக்கும் பதவி யைக்கூட தூக்கியெறிய எந்தக் கட்சியும் தயாராக இல்லையே? முதல்வர் கலைஞரோ, 'எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டால், இப்போது இலங்கைத் தமிழர்களுக்காக மேற்கொள்கிற கொஞ்சநஞ்ச உதவிகளையும் செய்ய முடியாமல் போய்விடும்!' என்கிறார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றியபோது, இந்த விஷயம் அவருக்குத் தெரியாமல் போனது ஏன்?

நம்முடைய தயவில்தான் மத்திய அரசின் நாற்காலி ஆடாமல் நிற்கிறது. நம் இனத்துக்கு உதவாத அந்த அரசு இருந்தால் என்ன... கவிழ்ந்தால் என்ன? தமிழக எம்.பி-க்கள் ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டபோது, அனைத்துக் கட்சிக் கூட்டத் தில் கலந்துகொள்ளாத கட்சிகள்கூட அதனை வரவேற்றன. அந்த ஒருமித்த குரல் இப்போது வலுவிழந்து போய்விட்டது. தமிழக அரசின் மூலம் ஈழத் தமிழனுக்கு விடிவு கிடைத்துவிடும் என எண்ணிய என்னைப் போன்ற சாதாரண மக்களின் நம்பிக்கை இன்று வேரறுந்துவிட்டது.''

'' 'ஈழ விவகாரத்தில் இறையாண்மைக்கு உட்பட்டுதான் தீர்வு காணமுடியும்' எனத் தமிழகத்தைச் சேர்ந்த சிலரே வாத மிடுகிறார்களே?''

''இறையாண்மையைக் காரணம் காட்டி ஈழப் பிரச்னையை வேடிக்கை பார்ப்பவர்கள்- தமிழின துரோகிகள், மன்னிக்க முடியாத அயோக்கியர்கள்! நமது அனுமதி இல்லாமல் கச்சத்தீவை மத்திய அரசு, இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததே... மின் தட்டுப்பாட்டால் தமிழகமே வெந்து புழுங்கும் வேளையிலும், தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு போகும் மின்சாரம் மட்டும் எந்த பாதிப்புமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறதே... [அதானே!]இது மட்டுமல்லாமல் தண்ணீர் பிரச்னைகளில் கர்நாடகா, கேரள மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தையே மதிக்காமல் தமிழகத்தின் உரிமைகளைக் காலில் போட்டு நசுக்கிக் கொண்டிருக்கின்றனவே... அப்போதெல்லாம் எங்கே போனது இந்த இறையாண்மை? அப்பாவி மீனவன் குண்டடிபட்டுச் சாவதைத் தடுக்க முடியாத நாம், இறையாண்மை பற்றிப் பேசுவது சகிக்க முடியாத கேவலம்! இந்தியாவின் இறையாண்மையைக் காக்கும் பொறுப்பு தமிழகத்துக்கு மட்டும்தானா? மற்ற மாநிலங் களுக்குக் கிடையாதா? ஈழப் பிரச்னையில் மட்டும் இறையாண்மையின் பெயரைச் சொல்லி தமிழகத்தின் வாயை அடைப்பது எந்த விதத்தில் நியாயம்''

''இறையாண்மை பாதிக்கப்படுவதாகச் சொல்லி வைகோ, கண்ணப்பன், அமீர், சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த அதிரடிப் பேச்சுகளின் பலனாக உங்கள் மீதும் சட்ட நடவடிக்கைகள் பாய்ந்தால்..?''

''அமீரும் சீமானும் கேள்வி கேட்டதால் உள்ளே தள்ளப்பட்டார்கள். ஆனால், அவர்களது கேள்விக்கு இன்று வரை தமிழக அரசு பதில் சொல்லவில்லை! மாறாக, கேள்வி கேட்பவர்களுக்கு வாய்ப்பூட்டு போடப் பார்க்கிறது அரசு. 'தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசுவதே தவறாகிவிடாது' என உச்ச நீதிமன்றமே பட்டவர்த்தனமாகச் சொல்லி விட்டது. அதையும் தாண்டி அடக்குமுறையை மேற்கொண்டு ஒரு தாமரையைக் கைது செய்தால், அதன் பின்னணியில் ஓராயிரம் தாமரைகள் முளைப்பார்கள்.

[அரசியல்வாதிகளை அடித்த கூத்தில் நொந்து போன மனதுக்கு சீமானும், அமீரும், மன்சூர் அலிகானும் இப்போ தாமரையுமே மருந்திட்டுள்ளார்கள்]

நான் சாதாரண குடிமகள்தான். தமிழ் மக்களின் அடிமனதில் கிளர்ந்தெழும் தகிப்பாகத்தான் என் குரல் ஒலிக்கிறது. மொத்தத்தில், தன்மானத்தை விட்டுவிட்டு இந்தியப் பேரரசுக்குக் கப்பம் கட்டும் அடிமைத்தனத்தின் எடுத்துக்காட்டாக விளங்கும் தெம்பற்ற குறுநில அரசாகத்தான் தமிழகம் இருக்கிறது. இதைச் சொல்வதற்காக என்னைக் கைது செய்வார்களேயானால், இப்போதே சிறைக்குப் போகத் தயாராக இருக்கிறேன். என்னை எப்போது வேண்டுமானாலும் கைது செய்யட்டும். ஆனால், என் கேள்விகள் அப்படியேதான் இருக்கும்! தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் டெல்லியின் எடுபிடி களாக இருக்கும்வரை ஈழத்துத் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, உலகில் இருக்கும் எந்த தமிழனுக்கும் விடிவு கிடைக்கப் போவதில்லை!'' [நெத்தியடி]

சகோதர யுத்தம் பற்றி கலைஞரும் அதற்கு ஈழத்தமிழன் பதிலும்

இலங்கை: என்னால் தனித்து ஏதும் செய்ய முடியாது- என்று அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் கருணாநிதி... நல்லா பாருங்க நல்லா பாருங்க கையாலாகதவர்னு சொல்லலை, தனித்து எதுவும் செய்ய முடியாதுன்னு தான் சொல்லியிருக்கார், அப்புறம் கலைஞரை கையாலாகாதவர்னு சொன்னா கலைஞர் மனைவி துணைவி மகன் மகள் கணக்கெல்லாம் காண்பிக்க வந்துடுவாரு பொன்முடி, நெறைய மனைவிகளும் நிறைய புள்ளைகளும் பெத்துக்கிட்டவங்கதான் கையாலாகவறங்க மத்தவங்க கையாலாகாதவங்கன்னா பொன்முடி கணக்குப்படி பெரியாரும், அறிஞர் அண்ணாதுரையும் எம்ஜியாரும் கையாலாகாதவர்களா?


அந்த அறிக்கையில் புலிகளின் சகோதர யுத்தம் பற்றி இப்படியாக விமர்சித்திருந்தார்...

தமிழர்க்கு உரிமை பெற்றுத் தர போர்க்கோலம் பூண்டவர்கள், பகைவர்கள் மீது பாய்ந்திடாமல்; சகோதர யுத்தம் நடத்துவதிலேயும் அவற்றில் மாண்டு மடியும் தமது பழைய களத் தளபதிகளுக்கு சமாதிகள் அமைத்திடும் பணியிலேயும் காட்டிய விறுவிறுப்பை இன ஒற்றுமையில் காட்டத் தேவையில்லையென்றே கருதிச் செயல்பட்டு;
தமது இனம் அறவே செத்து மடிவது குறித்து அக்கறையற்றே இருந்து விட்டனர்.

அதற்கு Eela Thamilan என்பவர் கொடுத்த பின்னூட்டம் பளார் பளார்னு உட்ட மாதிரி இருந்தது, அது உங்கள் பார்வைக்கு இங்கே...

பதிவு செய்தவர்: Eela Thamilan பதிவு செய்தது: 06 Nov 2008 10:55 pm

உனது பிள்ளைக்கும் உற்றார் உறவினருக்க உன் குடும்ப துதிபாடிகளுக்கும் கீழ்சபையில் எம்பி பதவியும் மத்தியில் அமைச்சர் பதவியும் உன்னால் தனித்து நின்று மத்தியரசிடம் வாங்கி கொடுக்கமுடியும் ஆனால் எந்த இனத்தின் பெயாரால் பிழைப்பு நடத்துகிறாயோ அந்த இனத்திற்கு எதாவது நன்மைசெய்யதான் உன்னால் முடியாது.
விடுதலைப்புலிகள் தமிழினபகைவர்களான சிறிலங்கா படையுடன் மோதமால் வாளதிருக்க. 50 000 மேற்ப்பட்ட சிங்களபடை வாந்திபேதி கண்டா தமிழீழமண்ணில் அழிந்தது! 1500 இந்திபடை தமிழீழத்தில் எப்படி மடிந்தது!
தமிழை தாய் மொழியாக பேசிகொண்டு தமிழினத்தை கருவறுப்பவர்களை தமிழின துரோகிகள் என்று சொல்லாது தமிழர்களின் சகோதரர்கள் என்று உங்களைவிட்டால் எந்த முட்டாளாலும் சொல்ல மாட்டான். விடுதலைபுலிகளுடன் டெலோ தமிழரசுகட்சி தமிழ்காங்கிரஸ் ஈபிஆர்எல்எப் ஈரோஸ் என 5கட்சிகள் புலிகளுடன் கூட்டமைத்திருப்பதை தெரிந்து கொண்டும் ஏன்தான் பொய் பேசுகிறீர்கள்.23 வடகிழக்கு தமிழ்நாடளமன்ற உறுப்பினர்களில் 22 பேர் புலிகளை நிபந்தனையின்றி ஆதரிப்பதை தெரிந்து கொண்டும் ஏன்தான் பொய் பேசுகிறீர்கள்.இது உங்களுக்கு மாபெரும் ஒற்றுமையாக தெரியவில்லையா!
அண்ணா காலத்தில் திமுக வாக இருந்தது உன் காலத்தில் அதிமுக மதிமுக தேதிமுக இதிமுக........ இப்படி சிதறிப்போனாது கூட நீ புலிகளிடம் எதிர்பார்க்கும் ஒற்றுமையால்தானா!.
மகன் ஸ்ராலினிற்கும் அழகிரிக்கும் இடையிலுள்ள உலகமகா ஒற்றுமை தமிழரிடத்தில் இல்லையென்ற சொல்கிறீர். அல்லது மாறன் குடும்பத்திற்கும் கலைஞர் குடும்பத்திற்கும் இடையிலுள்ள இனிய ஒற்றுமையையா புலிகளிடம் எதிர்பார்க்கிறீர்கள்.
மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி விழுந்த வீரமறவர்களுக்கு மாவீரர்களிற்கு செய்யும் ஒரு சிறியமரியாதையே கொச்சைபடுத்தும் கேவலம் கெட்ட உன்னை நேற்றுவரை தமிழின தலைவனாக நினைத்தது மதித்தது என் தப்புதான். உயிரோடு இருக்கும் உன்பெயரில் சாலைகளும் கிராமங்களும் (காலனிகளும்) விருதுகளும் உருவச்சிலைகளும் அமைத்து மகிழும் போது அந்த இழிவான சுயதம்பட்டம் உனக்கு உறைக்கவில்லையா? மாவீரர் கல்லறைகளையும் அவர்தன் ஈகத்தையும் இந்த கார்த்திகை மாதத்தில் கொச்சை படுத்திய உனக்கும் சிங்களஇனவெறியர்களிற்கும் இடையே எந்தவொரு வேறுபாட்டையும் என்னால் பார்க்கமுடியவில்லை