தேவடியா மவனே, இழிபிறவி, நாகரிகம், விளிம்புநிலை இன்ன பிற

சிந்து சமவெளி நாகரிகம், மஞ்சளாற்று நாகரிகம், நைல் நதி நாகரிகம் எல்லா நாகரிகத்தையும் விட இப்போ பேசிக்கிட்டு இருக்காங்களே இங்கே நாகரிகம் நாகரீகம் இருக்கே சாமி தாங்கலைடா.... நாகரிகம்னு எதை எதையெல்லாம் சொல்கிறார்கள்.... வழக்கம் போல வெகு சன ஊடகங்களினால் கட்டமைக்கப்பட்டுள்ள அதே பாசாங்கு நாகரிகம், போலித்தன நாகரிகம் இங்கேயும், வார்த்தைகளில் மட்டும் நாகரிகம் இருந்தால் போதும் ஆனால் கருத்தில் இருக்கத்தேவையில்லை இது தான் பச்சை நாகரிகம் இங்கே, "இழிபிறவி" என்று மூத்த பதிவர்கள், வயசில் மூத்த பதிவர்கள் இன்ன பிற நாகரிக கணவான்கள் எல்லாம் எழுதலாம் தப்பில்லை, அதில் எந்த தரக்குறைவும் இல்லை, ஆனால் தேவடியா மவனே என்பது ஆபாசம் அநாகரிகம்.... இழிபிறவியும் தேவடியாமவனேயும் ஒரே பொருள் தானே இந்த எழவில் இழிபிறவி எப்படி நாகரிகமானது, இழிபிறவி நாகரிகமான எழுத்தாக இருக்கும் போது தேவடியாமவனே மட்டும் எப்படி அநாகரிகமானது, வரிக்கு வரி இழிபிறவி என்ற எழுத்துக்களை படிக்கும்போது அதை எப்படி எந்த வித உறுத்தலும் இல்லாமல் படிக்க முடிகிறது? தேவடியாபையா என்ற எழுத்திற்கு எத்தனை அருவெருப்பு படுகிறோமோ அதே அருவெறுப்பு எப்படி இழிபிறவி என்ற எழுத்துகளுக்கு படாமல் நம்மால் தாண்டிப்போக முடிகிறது? எப்படியாக இந்த கட்டமைப்பு உருவானது?

திருநங்கைகளிடம் அசிங்கமாக ஆபாசமாக பார்த்து, பேசி இடுப்பில் கைவைக்கும் கணவான்களை "நண்பரே நீங்கள் செய்வது மிக தவறான செயல், தாங்கள் இப்படியெல்லாம் செய்யக்கூடாது, காந்தியை நினைத்து பாருங்கள், ஸ்ரீராமபிரானை நினைத்து பாருங்கள் அவர்களெல்லாம் எத்தனை ஒழுக்க சீலர்கள், தாங்கள் ஏன் இப்படி தவறுசெய்கிறீர்கள், நாங்களும் மனிதர்கள் தானே, எங்களை மட்டும் ஏன் இப்படி கேவலப்படுத்துகிறீர்கள்" என்று கதாகாலாட்சேபம் செய்தால் அது நாகரிகம் அப்படித்தானே?, அந்த நிலையில் இப்படியான கதாகாலாட்சேபம் செய்ய இயலுமா? "அடிங்கோ தேவடியாபயலே..." என்று வாயில் வருமா? சே... சே.... என்ன இருந்தாலும் அநாகரிகமாக கை வைத்தவனை அதைவிட அநாகரிகமாக தேவடியாபயலே என்று திட்டுவது அநாகரிகத்திலும் அநாகரிகம் என்று சொல்கிறோம், ஒரு வேளை "இழிபிறவி" என்று அறிவுறுத்தியிருந்தால் நாகரிகமாக இருந்திருக்குமோ?

ஏற்கனவே சமூகத்தில் தவறாக உருவகப்படுத்தப்படிருக்கும் திருநங்கைகளை அவர்கல் எல்லாம் பாலியல் தொழில் செய்து பெண்களை வைத்து தொழில் நடத்துகிறார்கள் என்று மொத்தமாக சாணியடித்தால் சாணியடிப்பவரின் ஒழுக்கத்தையும் சந்தி சிரிக்கத்தான் வைப்பார்கள். இதில் என்ன அநாகரிகம்? திருநங்கைகளுக்காவது சமூகத்திலிருந்து ஒதுக்கல், படிப்பு, தொழில் இன்ன பிற என்று எந்த ஒத்துழைப்பும் கிடைக்காமல் சோற்றுக்கே வழியின்றி வேறு வழியின்றி பாலியல் தொழிலில் சமூகமே தள்ளிவிடுகிறதென்றால் கன்னட பிரசாத் போன்றவர்களின் 'தொழில்' மூலாதாரமாக இருக்கும் சிலர் இலட்சக்கணக்கில் வாங்கியவர்களுக்கும்/வாங்குபவர்களுக்கும் என்ன விளிம்புநிலை பிரச்சினை? திருநங்கைகளை பாலியல் தொழிலாளிகளாக மட்டுமே பெரும்பாலும் திரைப்படங்களிலும் காட்சி ஊடகங்களிலும் காண்பிப்பவர்கள் கன்னட பிரசாத் போன்றவர்களின் 'தொழில்' மூலாதாரமான அரிதாரங்களை அப்படி ஒரு படத்திலாவது காண்பித்திருப்பார்களா? காண்பித்துவிடத்தான் முடியுமா? திருநங்கைகள் என்றால் லிவிங் ஸ்மைல் மட்டும் வலைப்பதிவில் வந்து சவுண்டு விடுவார், மிஞ்சி மிஞ்சி போனால் விகடனிலோ ரிப்போர்ட்டரிலோ ஒரு கட்டுரை ஆவேசமாக வரும், ஆனால் சில அவர்களை காண்பித்தால் செருப்படி அல்லவா விழும், திரைப்படத் தொழிலே செய்ய முடியாதே, சோத்துக்கே சிங்கியடிக்கும் நிலைமையாகிவிடும், அதனால் பொத்திக்கொண்டு போக வேண்டியது தான்.

உங்களுடைய(நம்முடைய) நாகரிக கையேட்டையும், நாகரிக பேச்சுகளையும் உங்களுக்கு (நமக்கு) சமமான அல்லது உங்களுக்கு (நமக்கு) மேலிருப்பவர்களிடம் காண்பிக்கலாம், ஆனால் புறக்கணிப்பின் உச்சத்தில் இருப்பவர்களிடமும் விளிம்புநிலை மனிதர்களிடமும் தயவு செய்து உங்கள் நாகரிக கையேட்டையும் அளவுகோலையும் தூக்கிக்கொண்டு ஓடாதீர்கள், நாகரிக கையேட்டை தூக்கிக்கொண்டு அவர்களிடம் ஓடும் முன் அவர்களிடத்தில் உங்களை வைத்து பாருங்கள்..... அந்த நிலையில்
நீங்களோ நானோ இருந்தால் அதையும் விட அநாகரிகமாக பேசுவோம் என்பதை மறந்துவிட வேண்டாம்.


தொடர்புடைய சுட்டிகள்

பத்தினி பதிவிரதை ராதிகா R. சரத்குமாரும், பாதக அலிகளும்

விளிம்புநிலை மாந்தர்களும் ஊடகச் சார்புநிலைகளும்!

புது ப்ளாக்கர்க்கு தமிழ்மண கருவிப்பட்டையை சேர்ப்பது

புது ப்ளாக்கர் அடைப்பலகையில் தமிழ்மண கருவிப்பட்டை நிரலியை எளிதாக சேர்க்கும் விதமாக ஜாவாஸ்கிரிப்ட் பயன்படுத்தி எழுதியுள்ள கருவி இங்கே (www.kuzhali.co.nr) கிடைக்கும், இத்துடன் புது ப்ளாக்கர் பின்னூட்டங்களில் தமிழ் எழுத்துகள் சிதைந்து இருப்பதை சரி செய்யும் ஜெகத் அவர்களின் நிரலியையும் இணைத்துள்ளேன், இது ஏற்கனவே சில பதிவுகளில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை ஏற்கனவே தமிழ்மணத்தில் இருக்கும் ஒன்று தான், கூடுதலாக ஜெகத்தின் தமிழ் எழுத்துகள் சரி செய்யும் நிரலியையும் இணைத்துள்ளேன்.

தேசிய ஜல்லி















தேசிய ஜல்லி

என் மண்னைவுட்டு
மனையைவுட்டு

என் ஊட்டைவுட்டு
காட்டைவுட்டு

என் ஆட்டைவுட்டு
மாட்டைவுட்டு

எங்கோமணத்தை
மட்டும்வுட்டு

கரியெடுத்து
கரெண்டெடுத்து

நாடெல்லாம்
குடுக்கறாங்க

எங் குடுசைக்கும்
பம்பு செட்டுக்கும்
கரெண்டு கேட்டா

தண்ணிகுடுக்காத
சகோதரங்ககூட
பங்கு போட்டது
போவ ஜீரோவாட்ஸ்
பல்புக்கூட
பத்தலையே

சத்தம் போட்டு
கேட்டுப்புட்டா
தடாவும் பொடாவும்

சத்தம்போடாம
கேட்டுப்பாத்தேன்

சுத்தி சுத்தி
கொட்டுறானுங்க

லோடு லோடா
தேசிய ஜல்லி


இவர்களும் இந்தியர்கள்




களைந்(த்)த ஆடைகள்
சொல்லிக் கொள்(ல்)வோம்
இவர்களும் இந்தியர்கள்
உரக்க சொல்வோம்
ஜெய்ஹிந்த்

படத்திற்கு நன்றி விகடன்.காம்


ஒரே இந்தியா







ஒரே இந்தியா

ஒரு ரூபாய்

தொலைபேசி அழைப்பில்

மட்டும்

கர்நாடகா தமிழர்கள் தமிழகத்துக்கு படையெடுப்பு

போதை - குடிகாரர்களும் கவனிக்க


ஆளில்லா மைதானத்திலே
கோல் போட்டு
அலுத்துவிட்டேன்

இன்பம் கூட
வேண்டாம்
துன்பமாவது தா!

இரு கைகளிலும்
வாளேந்தி ஆவேசமாக
சுழற்றிவிட்டேன்

என் வாளில்
வெட்டுபடவும்
என்னை
வெட்டவும் தான்
ஆளில்லை

வெற்றி கூட
வேண்டாம்
தோல்வியாவது தா!

சதுரங்க ஆட்டத்திலே
வெள்ளை காயையும்
கறுப்பு காயையும்
மாற்றி மாற்றி
நகர்த்தி
பிளவாளுமையோ வென
மகிழ்ந்தேன்

மயிராளுமை யென
மட்டுப்படுத்தியது
மனது

என்னை நானே
கீறினேன்

குருதி வழிந்து
வலித்தது
குதூகலித்தேன்

மேலும் மேலும்
கீறினேன்
வலியோ
பழகிவிட்டது

விரல்களை
வெட்டியெறிந்தேன்

விரல்களின்றி
வாழ்ந்தபோது
விரல்களே
வீண்தானோ
என்றேன்

தற்போதொரு
கையில்லா
வாழ்க்கையும்
பழகிவிட்டது

அதனாலென்ன
வெட்டியெறியத்தான்
இன்னமும்
இரு கால்களும்
இரு காதுகளும்
இரு கண்களும்
ஒரு மூக்கும்
மிச்சமுள்ளதே

அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா - காதலர் தின சிறுகதை


"அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ, ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு" பிண்ணனியில் ஓடிக்கொண்டிருக்க கையிலே அன்றைய தினத்தந்தியை வைத்துக் கொண்டு பொங்கிக்கொண்டிருந்தான் ஞாநி வாத்தியார் பையன், இந்த சாதி கட்சி தலைவனுக்கு வேற வேலையே இல்லை, காதலர்தினத்தை கொண்டாடக்கூடாதாம், காதலின் சக்தி தெரியுமா அவனுக்கு காதல் மதத்தை உடைக்கிறது, காதல் சாதியை அழிக்கிறது, காதல் வர்க்க வேறுபாட்டை களைகிறது, காதலைக் கண்டு சாதித்தலைவன் பயப்படறது ஒன்னும் ஆச்சரியமில்லை. சாதி அடிப்படையில் ஓட்டு பொறுக்க முடியாத சிக்கலை காதலும் கலப்பு மணமும் ஏற்படுத்திடுங்கறதாலதான் பயப்படுறானுங்க.

"அழாதடா ராசா என் கண்ணு இல்ல அழாத, இரு தாத்தா முட்டாய் வாங்கித்தரேன், ரெண்டு தேன் முட்டாய் குடுங்க"

முட்டாய் வாய்க்குள் போனதில் அழும் சத்தம் மட்டும் கொறைஞ்சாலும் விசும்பலோடு தாத்தாவோடு ஒட்டிக்கொண்டே போனான் ஒரு வாரம் முன்னாடி டெய்லரோட ஓடிப்போன செல்வி பையன்.

"தேவுடியா முண்ட, புள்ளைய உட்டுட்டு ஓடியிருக்கா பாரு அரிப்பெடுத்தவ"

கடைசி பஃப் புகையை இழுத்துவிட்டு பஞ்சை கீழே போட்டு ஆத்திரத்தோடு மிதித்தேன்

"ஏன் ஓடுனா என்ன? அவ புருசன் கையாலாகாதவனா இருந்திருப்பான் ஏன்டா இப்படி கற்பையும் கலாச்சாரத்தையும் தொடையிடுக்குல தேடுறிங்க"

"என்ன இருந்தாலும் சின்ன புள்ளைய உட்டுட்டு ஓடிட்டா பாரு"

"புள்ளை இருந்துட்டா எல்லாத்தையும் பொறுத்துக்கனுமா? ஆசாபாசம் எதுவும் இருக்க கூடாதா?"

"சரி சரி உடு மச்சான் உங்கிட்ட நம்மால பேச முடியாது, நான் கிளம்புறேன், நாலு நாளா முனிசிபாலிட்டி தண்ணி எங்க தெருவுக்கு வரலை, கவுன்சிலரை பாக்கப்போவணும், நீ ரொம்ப சூடா இருக்க, ஜில்லுனு ஒரு பெப்சி குடிச்சிட்டு போ" நண்பனிடம் சொல்லிட்டு சிகரெட்டுக்கும காசு கொடுத்துட்டு ரெண்டு நிஜாம் பாக்கை பிரிச்சி வாயில போட்டுக்கிட்டு சைக்கிளை எடுத்தேன்...

ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ..... ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு வாய் முனுமுனுத்துக்கொண்டே வந்தது, காதல் மதத்தை ஒழிக்கும், காதல் சாதியை ஒழிக்கும், சைடு எஃபெக்டாடக நண்பன் சொன்னதும் ஒலித்துக்கொண்டே வந்தது.

சைக்கிள் என் தெரு முனையில திரும்பும்போது குறுக்கால ஒரு குட்டிப்பையன் ஓடிவந்தான், ஏய் ஏய் சடக்கென்று பிரேக் அடிச்சி மேலே இடிக்காம வண்டியை நிறுத்தினேன்...

"ஹேய் ராகவ், ராகவ் ஸ்டாப் ஐ சே" சத்தம்போட்டுக்கொண்டே அவனை பிடித்து தூக்கி வைத்துக்கொண்டார்இது கலைச்செல்வி அக்கா கொரல் மாதிரி இருக்கே....

"அக்கா, நீங்க கலைச்செல்வி அக்கா தானே?"

"ஆமான் டா குரு, என்னடா மறந்துட்டியா"

"இல்லக்கா பாத்து ஒரு அஞ்சாறு வருசமிருக்கும், கொஞ்சம் குண்டாயிட்டிங்க, அப்புறம் கலரா வேற ஆயிட்டிங்களா அதான் சட்டுனு அடையாளம் தெரியலை"

சட்டுனு அவங்க முகத்தில ஒரு லேசான பெருமித மின்னலடிச்சது....

"ம்...குரு வீட்ல எல்லாம் சவுக்கியமா? ஆமாம் என்ன பண்ணறே?"

"வி.எஸ்.டில வொர்க்ஷாப்ல தான்க்கா மெக்கானிக்கா இருக்கேன், அக்கா ஸ்டேட்ஸ்லருந்து எப்போ வந்திங்க?"

"ரெண்டுவாரம் ஆகுது, அவர் வீட்டுக்கு போயிட்டு நேத்துதான் இங்க வந்தேன்"

"மாமா வந்துருக்காரா? எப்பிடியிருக்காருக்கா?"

சொந்தக்காரங்க இல்லாம வேற யாரையும் சட்டுனு மாமான்னு கூப்புடமாட்டோம் ஆனா கலைச்செல்வி அக்கா வூட்டுக்காரரை மட்டும் மாமானு சொல்லுவேன், அக்கா லவ் மேரேஜி, அவங்க வீட்டுக்காரர் அய்யிரு, பள்ளிக்கூடத்துலருந்தே அய்யிருபசங்களை மாமானு ஜாலியா கூப்புட்டே பழகிடுச்சா, அதான் சட்டுனு கலைச்செல்வி அக்கா வூட்டுக்காரரையும் மாமானு சொல்லிட்டேன்.

"வந்திருக்காரு டா, நல்லா இருக்காரு, உள்ள வாயன் டா, டீ குடிச்சிட்டு போலாம்"

"இல்லக்கா, அர்ஜென்டா கவுன்சிலரை பாக்க போறேன், நாலு நாளா நம்ம தெருவுல தண்ணிவரலை "

"சரி பாத்துப்போ"

சட்டை போடாம துண்டு மட்டும் கட்டியிருந்த இருந்த ராகவை அக்கா தூக்கிக்கிட்டு உள்ளே போகும்போது தான் கவனித்தேன் ராகவ் முதுகுல குறுக்கால புதுசா போடப்பட்டிருந்த பூணுலை.

"காதல் சாதியை ஒழிக்கும், காதல் மதத்தை ஒழிக்கும்" நண்பன் சொன்னது ஸ்டீரியோ எஃபெக்டில் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.... வாய் மட்டும் அண்ணிச்சையாக முனுமுனுத்தது "அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ..... ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு"

அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கலாம், சரி அய்யிரு பையன் மீன் வாங்கப்போயிருப்பானா? ராகவ் முதுகுல போட்டுருந்த பூணுலை பார்த்த பிறகு அந்த நம்பிக்கையில்லை... பாட்டெழுதனவங்கிட்ட கேட்கனும் அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்திருந்தப்ப அது பேரு என்ன? ஷகீராவானு?

லவ் சிம்பல் போட்டு காதலர் தின வாழ்த்து சொல்லி போஸ்ட்டர் ஒட்டியிருந்துருக்கானுங்க விஜய் ரசிகர் மன்ற பசங்க, இவ்ளோ நாள் நியூ இயர்க்கு போஸ்ட்டர் ஒட்டுனானுங்க இப்போ காதலர் தினத்துக்குமா... ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்.... போஸ்டரை பாத்தவுடன் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோசம்....

அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ..... ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு.......

கவுன்சிலர் வீட்டை நெருங்கிய போது மெலிதான விசும்பல் சத்தம் வந்தது கூலிக்கு கை காலெடுக்கும் "லெஃப்ட்" கிருஷ்ணாவோடு ஓடிப்போன வசந்தா வீட்லருந்து......

கவுன்சிலரிடம் காத்திருந்து பேசிவிட்டு வீட்டுக்கு போய் சேரும் வரை அந்த மெலிதான விசும்பல் சத்தம் மட்டும் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது..... வசந்தா பேசாம 40 இலட்சத்துக்கு வீடு, நல்ல வேலை, ஊருல நல்லபேருனு இருக்குற ஞாநி வாத்தியார் பைய் மாதிரி பசங்களோட ஓடியிருக்கனும்.......இல்லனா வசந்தா மட்டுமாவது அந்த சாதிக்கட்சி தலைவர் சொல்றதை கேட்டிருக்கலாம், நினைத்துக்கொண்டே அப்போது தான் கவனித்தேன்
"அய்யிரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்னு தெரிஞ்சிக்கோ..... ஜிங் சக்கு சக்கு சக்கு ஜிங் சக்கு சக்கு சக்கு....... " என்று முனுமுனுப்பதை என் வாய் நிறுத்தியிருந்ததை.

பின்குறிப்பு:
கதாசிரியர் காதலுக்கோ, கலப்பு திருமணத்திற்கோ எதிரானவர் இல்லையாம்.... கதாசிரியரே 11 முறை காதலித்தவர் தானாம்... (ஆனால் அவரைத்தான் யாரும் காதலிக்கவில்லை என்பது கதாசிரியர் எப்போதுமே வெளியே சொல்லாத ஒன்று.)

படம் உதவிக்கு நன்றி wwp.saint-valentines.co.uk

சாகரனுக்கு அஞ்சலி

தேன்கூடு திரட்டியை உருவாக்கியவரும் நமது சக வலைப்பதிவாளருமான சாகரன் கல்யாண் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள், அவரது குடும்பம் இந்த இழப்பை தாங்குவது மிக கடினம் என்ற போதிலும் அவரின் குடும்பத்திற்கு என் அனுதாபங்கள்.

சென்னையில் லக்கிலுக்கை சந்தித்தபோது அவர் சாகரனுடன் பேசியதையும் சாகரனைப்பற்றியும் கூறியுள்ளார், மேலும் ஒருமுறை லக்கிலுக்குடன் ஜிசாட்டில் பேசிக்கொண்டோம், அப்போது லக்கியிடம் சாகரனுடம் பேசவேண்டுமென்று கூறியிருந்தேன், இது தவிர சாகரனுடன் நேரடி தொடர்போ மின்மடல் தொடர்போ இருந்ததில்லை, இனியும் இருக்காது என்று நினைக்கும் போது மிக வருத்தமாக உள்ளது.

முகமூடிக்கு ஜூரி(நடுவர்?!)யாக இருக்க தகுதி உண்டா?

யார் எப்படி போனா எனக்கென்ன என்று இருந்தேன், ஆனால் என்னையும் இருவர் இன்டிப்ளாக்கீஸ் அவார்டுக்கு முன்மொழிய (முன்மொழிந்தவர்களுக்கு நன்றி) வேறுவழியின்றி இதை பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, ஏனெனில் இன்டிப்ளாக்கீஸ் ஜூரி குழுவில் அனாமதேய வலைப்பதிவர் முகமூடி அவர்கள் ஜூரியாக(நடுவர்?!) இருக்கின்றார்.

இதில் கூட அவர் லாஸ் ஏஞ்செல்சில் இருக்கிறார் என்பதைத்தவிர அவர் யாரென்பதற்கான எந்த விபரங்களும் இல்லை, சரி அவரது பதிவிலாவது பார்க்கலாமென்று அவரின் வலைப்பதிவில் தேடியபோது அதிலும் இதே நிலைமை, ஆக இணையத்தில் யாரென்று அடையாளம் காட்டிக்கொள்ளாத ஒருவர் ஆயிரத்து எண்ணூறுக்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகளில் போட்டியில் கலந்துகொள்ள முன்மொழியப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வலைப்பதிவாளர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்போவது தம்மை யாரென்று தெரிவித்துக்கொள்ளாத ஒரு அனாமதேய பதிவர், தங்களை யாரென்று இன்டிப்ளாக்கிஸ் குழுவிற்கு தெரிந்தால் மட்டும் போதும் கலந்து கொள்பவர்களுக்கு தெரிய தேவையில்லை என்று ஜூரியும் இன்டிப்ளாக்கிஸ் குழுவும் கருதுவார்களெனில்(நான் கருதுகிறார்கள் என சொல்லவில்லை, கருதுவார்கள் எனில் என்று தான் கூறியுள்ளேன்) போட்டியில் கலந்து கொண்ட பல வலைப்பதிவாளர்கள் தங்களை எடை போடப்போவது யாரென்றே அறியாமல் ஒரு அனாமதேயத்தால் அவர்களின் வலைப்பதிவுகளின் தகுதிகள் அலசப்படும் ஒரு நிலை, அந்த நிலை சிலருக்கு இழிவாகக்கூடத் தோன்றலாம், எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

அடுத்தபடியாக இன்டிப்ளாக்கிஸ் விருதுக்காக தமிழ் வலைப்பதிவை தேர்ந்தெடுக்கப் போகும் இந்த 'முகமூடி' என்பவர் என்னையும் என் கருத்துகளையும், என் வலைப்பதிவையும் அவரின் வலைப்பதிவு மற்றும் பல இடங்களில் பல நேரங்களில் அப்யூஸ் செய்துள்ளார், நேரடியாக பெயர் குறிப்பிட்டும் என் வலைப்பதிவின் சுட்டி கொடுத்தும் அப்யூஸ் செய்த அவரின் பதிவுகளின் ஒன்று தமிழ் வலைப்பூ சர்க்கஸ் லிமிடெட், இது மட்டுமின்றி பல பதிவுகளிலும் இடங்களிலும் என் பெயரிலும் என் அடையாளங்களிலும் சில சிறிய மாற்றங்களை செய்து படிப்பவர்களுக்கு நான் தான் என்று எளிதாக புரியுமளவில் குறிப்பிட்டு அப்யூஸ் செய்துள்ளார், அந்த பதிவுகளையெல்லாம் எடுத்து போடலாம் என்றாலும் சொல்ல வந்த செய்தி சென்று சேர்ந்தால் போதும் என்பதால் அதை தற்போதைக்கு செய்யவில்லை என்றாலும் தேவைப்பட்டால் செய்யத்தயாராக உள்ளேன்.

இப்படியான அனாமதேய வலைப்பதிவர் முகமூடியால் நான் மட்டுமின்றி மேலும் பலரும் அப்யூஸ் செய்யப்பட்டுள்ளார்கள், அவரவர்களே அதன் சுட்டியை அளிப்பது, வெளிசொல்வது, சொல்லாமலிருப்பது இன்ன பிற விசயங்களே அவர்களே முடிவு செய்துகொள்ளட்டும் என நான் கருதுவதால் அதைப்பற்றி தற்போது நான் எழுதவில்லை.

மேலும் முகமூடி சில வலைப்பதிவர்களை ஸ்டாராக அறிவித்துள்ளார், அதே சமயம் அதில் "நிரந்தர பரமார்த்த குரு" என்ற பெயரில் முத்து (தமிழினி) பெயரும் உள்ளது இது பாராட்டா? நக்கலா?

இப்படியான ஒரு ஜூரி(நடுவர்?!) முன்பு என் வலைப்பதிவு வரும்போது எப்படியாக என்(மற்றும் பல) வலைப்பதிவு எடைபோடப்படும்? விருப்பு வெறுப்பின்றி தேர்வு முடிவுகள் இருக்குமா என்ற சந்தேகம் வந்துள்ளது? இந்த சந்தேகத்தை இன்டி ப்ளாக்கீஸ்க்கும் எழுதியுள்ளேன்.

தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் 2006ன் சிறந்த பதிவர் வாக்கெடுப்பு நடத்திய சர்வேசன் பதிவிலும் அதை எதிர்த்து என் பதிவை விலக்கிக்கொண்டேன், அந்த பதிவில் நான் எழுதிய பின்னூட்டம்

நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன், அப்போ நீங்க?

பின்குறிப்பு
முகமூடி எல்.ஏ.ராம் ஆக இருக்க முடியாது என்பது எல்.ஏ.ராம் அவர்களின் கருத்து, பார்க்க

மற்றுமொரு பின்குறிப்பு
இந்த பதிவையும் கிண்டலடித்து வரப்போகும் பதிவுகளை என் முடிக்கு சமானமாக கூட கருதப்போவதில்லை என்று கூற மாட்டேன், ஏனெனில் என் முடியை தினமும் வாருகிறேன், அதிகமாக வளர்ந்தால் வெட்டிக்கொள்கிறேன், அதற்கு எண்ணெய், க்ரீம் எல்லாம் போட்டு என் முடியை பராமரிக்கிறேன்.

ஒரே இந்தியா






ஒரே இந்தியா

ஒரு ரூபாய்

தொலைபேசி அழைப்பில்

மட்டும்

கர்நாடகா தமிழர்கள் தமிழகத்துக்கு படையெடுப்பு

தலைமுறை வலிகள்

தமிழ்மணம் விவாதகளத்தில் நான் இட்ட பின்னூட்டம் இன்னும் வெளியாகவில்லை, நான் இட்டு வெகுசில மணி நேரங்களே ஆகியிருந்தாலும் அது வெளி வரும் வரை பொறுமையில்லாததால் இங்கே அவைகள்.

விவாதகளத்தில் இருந்த பின்னூட்டங்களை படித்துவிட்டு வந்தால் எளிதாக புரியும்.

இடஒதுக்கீடு பற்றி ஒரு தவறான புரிதலை தந்துவிட்டு அதை நான் குறிப்பிட்டு எழுதியபோது

//திரு.டோண்டு சொல்லிய மாதிரி,”அவரவர் கவலை அவருக்கு. பாதிக்கப்பட்டவர்தான் அதன் வேதனை உணர்வர்”.நான் பட்ட வலி அவ்வாறு எழதத்தூண்டியது.அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. உங்கள் கருத்தை சொன்னதற்கு நன்றி//

என்று குறிப்பிட்டார்.

அவருக்கு அவர் வலி எழுத தூண்டியதென்றால், எங்களுக்கோ தலைமுறை தலைமுறையான வலி..... என்ன செய்ய தூண்டும்????


இனி என் பின்னூட்டம்

சற்று உணர்ச்சி வசப்படாமல் சொந்த அனுபவங்களை தூரவைத்துவிட்டு சில விடயங்களை பார்ப்போம், ஒரு மாணவன் இன்று இருக்கும் கல்வி முறையில் மதிப்பெண்கள் வாங்குவது என்பது அவனுடைய சொந்த திறமையை மட்டும் பொறுத்ததல்ல, அதற்கு பல காரணிகள் உண்டு

குடும்ப சூழல்
சுற்றுப்புற சூழல்
பெற்றோர்களின் விழிப்புணர்ச்சி மற்றும் அக்கரை
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தும் விழிப்புணர்ச்சி
கல்வி கற்கும் இடம் (நகரம், கிராமம் மற்றும் தரமான பள்ளிகள்)
இதோடு மாணவனின் தனிப்பட்ட திறமை மற்றும் குடும்ப பொருளாதாரம்(+2 மதிப்பெண்களுக்கு குடும்ப பொருளாதாரம் ஒரு சிறிய காரணி மட்டுமே, +2 மதிப்பெண்களுக்கு இது பெரும் முக்கிய காரணியாக இருப்பதில்லை)

இப்படி பல காரணிகள் இருக்குமிடத்தில் மாணவனின் தனிப்பட்ட திறமை தவிர்த்து மற்ற எல்லா
காரணிகளுக்கும் பெரும்பாலும் சாதியே காரணமாக இருக்கின்றது.உங்கள் சுற்றுப்புற சூழலிலிருந்தே உதாரணம் தருகிறேன், தனிப்பட்ட திறமை என்பதை தவிர ஒரே சமூகம், ஒரே பள்ளி, ஒரே மாதிரியான குடும்ப சூழலில் இருந்து உங்கள் தெரு தம்பி(எனக்கு அண்ணா) பத்ரி ஐ.ஐ.டி சென்று படித்துள்ளார், இன்னொருவர் இரு முறை ஐ.ஐ.டிக்கு முயற்சி செய்து இடம் கிடைக்காமல் ஜி.இ.சி. திருநெல்வேலியில் பொறியியல் படித்தார், இன்னும் ஒருவர் அரசு பொறியியல் கல்லூரியில் படித்தார் (இந்த இருவரும் வலைப்பதிவிற்கு தொடர்பில்லை என்பதால் அவர்கள் பெயரை சொல்வதை தவிர்க்கிறேன்), ஒரே மாதிரியான குடும்ப சூழல், சுற்று சூழல், சமூக சூழல் இருந்தும் பத்ரி தொட்ட இடத்தை மற்ற இருவர் தொடவில்லை, மற்ற இருவர் தொட்ட இடத்தை இன்னொருவர் தொடவில்லை என்றால் அது அவரவர்களின் தனிப்பட்ட திறமையில் உள்ள வித்தியாசம்.

உதாரணத்திற்கு நீங்கள் எடுத்த மதிப்பெண்களே எடுத்திருந்த ஒரு தாழ்த்தப்பட்ட அல்லது மிக பிற்படுத்தப்பட்ட மாணவன் எடுத்து அவருக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்த தனக்கு கிடைக்கவில்லை என்றால் அந்த தாழ்த்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மாணவனின் குடும்ப சூழல், சமூக சூழல், இடம் , பொருளாதாரம், பெற்றோர்களின் விழிப்புணர்ச்சியும் அதே மதிப்பெண்கள் எடுத்த உயர்சாதி மாணவனின் குடும்ப சூழல், சமூக சூழல், இடம் , பொருளாதாரம், பெற்றோர்களின் விழிப்புணர்ச்சியும் ஒன்றா?(ஒரு சில விதிவிலக்குகள் தவிர்த்து) இல்லையே, அப்போது மாணவனின் குடும்ப சூழல், சமூக சூழல், இடம் , பொருளாதாரம், பெற்றோர்களின் விழிப்புணர்ச்சியில் தாழ்வு இருக்கும்போது ஒரு உயர்சாதி மாணவன் வாங்கும் அதே மதிப்பெண்களை ஒரு தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட மாணவன் வாங்குகிறான் என்றால் இவ்விரு மாணவர்களின் திறமையும் சமமா? இல்லையே திறமைய் தவிர்த்து மற்ற சூழல்களில் குறைபாடு உள்ளவர்களை சமப்படுத்த தான் இடஒதுக்கீடு.

45கிலோ எடை உள்ளவன் 100கிலோ பளுதூக்கி 45கிலோ பிரிவில் தங்கம் வாங்கியவனை பார்த்து, 100கிலோ எடையுள்ளவன் ஹெவிவெயிட் பிரிவில் 100கிலோ பளு தூக்கி 10வது இடம் பிடித்து மெடல் வாங்காதவன் நானும் 100கிலோ தூக்கினேன், அவனும் 100கிலோ தூக்கினான் அவனுக்கு மட்டும் தங்கப்பதக்கம், எனக்கும் ஒன்றுமில்லையே என் வலி எனக்கு தான் தெரியும் என்று புலம்புவது சரியான செயலாகுமா?

இந்த பின்னூட்டத்தை எடிட் செய்து விடாதீர்கள் அல்லது நிறுத்திவிடாதீர்கள், "நான் பட்ட வலி அவ்வாறு எழதத்தூண்டியது.அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை." என்று சொன்னதாலேயே அவரின் ஊர் நண்பர்களை உதாரணம் காட்டி பேசவேண்டியதாகிவிட்டது.

கேசவன் சார் - கோட்டா கதை


"சார், ஏ.பி. சார்"

குரல் கேட்டு கதவை திறந்தார் அப்பா, கேசவ் சார் குரல்தான் அது, அப்பாவோட ஸ்கூல்ல ஒன்னா வேலை செய்யிற மேக்ஸ் வாத்தியார், அவர் பையன் கூட எங்க ஸ்கூல்தான், இங்கிலிஷ் மீடியம் அவன்.

"வாங்க வாங்க கேசவ் சார், உட்காருங்க"

அம்மா வந்து வரவேற்றார்

"வாங்க சார், டீ சாப்புடுங்க"

"இல்லமா இப்போதான் சாப்புட்டு வந்தேன்"

பொதுவாக யார் வேண்டாமென்றாலும் வற்புறுத்தி எல்லோரையும் டீ சாப்பிட சொல்லும் அம்மா கேசவ் சாரை அதுக்கு மேல ஒரு தடவை கூட டீ சாப்பிட சொல்லலை.

"என்னப்பா படிச்சிக்கிட்டு இருக்க, லீவ் நாள்ல கூட படிக்கிற"

"என்ட்ரன்ஸ் எக்சாமுக்கு படிக்கிறேன் சார்"

"ம்.... என்ட்ரன்ஸ்லாம் டஃப்பா இருக்கும், நல்லா படி"

"சொல்லுங்க சார், நல்லா சொல்லுங்க, கோச்சிங் க்ளாஸ் போயிட்டு வர்ற நேரம் போக மீதி நேரம் பூரா கிரிக்கெட்டு கிரிக்கெட்டு தான் சார் இவனுக்கு"

அப்பா எப்பவும் இப்படித்தான் ஊட்டுக்கு வர்றவங்ககிட்ட என் மானத்தை வாங்குறதே வேலை இவுருக்கு, எவ்ளோ நேரம் கஷ்டப்பட்டு படிச்சாலும் வர்றவங்ககிட்ட கொறை சொல்றதே வேலை.

அடிபட்ட அவமானமாக அம்மாவை பார்த்தேன், இதென்ன புதுசா, எப்பவும் நடக்கறது தானே கண்டுக்காத என்பது போல அம்மா பரிவாக பார்த்தார்.

சென்ட்டர்ல வக்கிற மாடல் டெஸ்ட்ல பர்ஸ்ட் ரெண்டு ரேங்க்ல வந்தா பேரை போர்டுல எழுதிப்போடுவாங்க, இந்த வாட்டியும் மணிமேகலைக்கிட்ட பர்ஸ்ட் ரேங்க்கை உட்டுறகூடாது எப்பிடியாவது பர்ஸ்ட்டு வந்துடனும், வைராக்கியத்தோடு ரூம்ல போய் படிக்கலாம்னாலும் ஹால்ல என்ன பேசிக்கிறாங்கங்கறதுலயே ஆர்வம் இருக்கு

"எந்த கோச்சிங் சென்ட்டர்க்கு போறான் பையன்"

"முனிசிபால்ட்டி ஸ்கூல்ல அசோசியேசன்ல நடத்துறாங்களே அங்க தான் சார் போறான், ஒங்க பையனும் +2 தானே, எங்க சேத்துருக்கிங்க"

"மெட்ராஸ்ல எக்ஸெல் கோச்சிங் சென்ட்டர்ல சேத்துருக்கேன், அய்யாயிரம் ஃபீஸ் புடுங்கிட்டாங்க, அண்ணன் வீட்லருந்து கோச்சிங் போறான்"

"இவனும் சொன்னான், ஆனா அவ்ளோ பணமும் கட்ட முடியாது, மெட்ராஸ்ல தங்கி படிக்கவும் யாருமில்லை, இவன் எப்பிடியாவது படிச்சி இஞ்சினியர் ஆயிட்டான்னா என் கடனே தீர்ந்துடும் சார்"

"ஒங்குளுக்கு என்ன சார் கொறச்சல், எங்கள மாதிரியா, அதான் கெவர்மெண்ட்டே கோட்டா குடுக்குதே அப்புறம் என்ன சார்"

அம்மா மட்டும் சரேலென உள்ளே சமயலறைக்கு சென்றார், அப்பாவோ மேலே என்ன பேசுறதுனு தெரியாம தெகச்சி போயிட்டார்.

"சரி அத உடுங்க சார், என்ன இந்த பக்கம் காத்து அடிக்குது"


"ஒன்னுமில்ல, உண்ணாமலை யுனிவர்சிட்டி செட்டியார் பி.ஏ. கஜேந்திரன் ஒங்க சொந்தக்காரர்தானே"


"நெருங்கிய சொந்தமெல்லாம் இல்லை, எங்க மச்சான் பொண்ணெடுத்த ஊருல ஏதோ சொந்தம்"

"இல்ல, என் பையனுக்கு உண்ணாமலையில ஒரு பி.இ. சீட்டு வாங்கனும், அதான் செட்டியார் பி.ஏ.வை வச்சி சீட்டு வாங்கிடலாம்னு"

"அட அங்க எல்லாமே காசுதான் சார், யாரை புடிச்சாலும் நடக்காது, நம்ம சொந்தகாரன், ஜாதிகாரன் இருந்தா கூட எவனும் ஹெல்ப் பண்ணமாட்டாங்க"

"அது தெரியுங்க, நம்பகமா காசு தந்து சீட் கன்ஃபார்ம் பண்ணனுமில்லை, வேற யாரு மூலமாவது போயி காசும் போயி சீட்டும் கெடைக்கலைனா"

"நான் வேணா என் மச்சான்கிட்ட சொல்றேன் சார், அந்த லிங்க்ல செட்டியார் பி.ஏ.வை புடிக்க முடியுதானு பாப்போம், ஆனா நான் என் பையன்கிட்ட சொல்லிட்டேன் ஃப்ரீ சீட்டு கெடைச்சாதான் படிக்க வைப்பேன் இல்லனா பாலிடெக்னிக்குல சேத்துடுவன்னு"

"அட ஒங்குளுக்குதான் கோட்டாவே இருக்கு, நீங்க எதுக்கு சார் பேமெண்ட் சீட்டுக்கு போகப்போறிங்க"

அம்மா உள்ளே பாத்திரத்தை உருட்டும் சத்தம் அதிகமாகவே கேட்டது

கேசவ் சார் போன பிறகு அம்மா அப்பாவிடம் சண்டைக்கு போனார்,

"அதான் மொதல்லயே ஒங்களுக்கு கோட்டா இருக்கு கோட்டா இருக்குனு குத்தி காமிச்சாரே, அப்புறமும் எதுக்கு ஃப்ரீ சீட்டு கெடைச்சாதான் படிக்க வைப்பேன்னு சொன்னிங்க, திரும்பவும் கோட்டா இருக்கு கோட்டா இருக்குனு சொல்லிட்டு போறாரே, நீங்க எப்பவும் இப்புடித்தான் எகனை மொகனையா வாயவுட்டு வாங்கிக்கட்டிக்கறது"

"அட விடு சுந்தரா, இவர் ஸ்கூல்லயே இப்படித்தான் என்னையும் பி.கே. சாரையும் சொல்லுவாரு, ஒங்களுக்கு என்னா சார் கோட்டா இருக்கு கோட்டா இருக்குனு சொல்லுவாரு"

ஏதோ மொனவிக்கிட்டே அம்மா உள்ள போனாங்க

------------------

மூச்சிரைக்க சைக்கிள நிறுத்திட்டு உள்ள ஓடிவந்தேன்

அம்மா வாசல்லயே இருந்தாங்க, என்னை பார்த்துட்டு சைக்கிள் நிறுத்துற நேரம் கூட பொறுக்க முடியாம கேட்டாங்க

"என்னடா எவ்ளோ மார்க்கு?"

அம்மா பாஸானு கூட கேக்கலை, எனக்கு பாஸ் பண்றதுலாம் ஒரு மேட்டரேயில்லைனு அம்மாவுக்கு தெரியும்

"தொள்ளாயிரத்து தொண்ணுத்தி ரெண்டுமா"

சட்டென்று அம்மா முகம் இருண்டது

"என்னடா ஆயிரம் மார்க்கு கூட வாங்கலையா? இந்த மார்க்குக்கு சீட்டு கெடைக்குமாடா"

என் சத்தம் கேட்டு அப்பாவும் தங்கச்சியும் வந்தாங்க

"அம்மா நீ டென்ஷனாகாத, தமிழ், இங்கிலிஷ்லதான் மார்க்கு கம்மி, சப்ஜெக்ட்ல எல்லாத்துலயும் நூத்தி எண்பதுக்கும் மேல, மேக்ஸ்ல நூத்தி எண்பத்தஞ்சி"

அம்மா, அப்பா, தங்கச்சி என எல்லார் மொகத்திலயும் அப்போதான் நிம்மதி வந்துச்சி

"சரி சரி செவப்புகோடு வாங்குன கதையா இதுல மார்க்கு வந்துருக்குனு என்ட்ரன்ஸ்ல உட்டுடாத"

அப்பாவுக்கு எப்பவும் திருப்தி இருக்காது, நாலாவதுல ஒரு தடவை ரொம்ப வெளையாட்டுத்தனமா இருந்து ஃபெயிலாயி ரேங்க்கார்டுல மார்க்குக்கு அடியில செவப்பு கோடு போட்டு இருந்ததை இன்னும் சொல்லிகாமிச்சிக்கிட்டே இருப்பார்

"அப்பா"

"என்னடா?"

"கேசவன் சாரை பார்க்கும்போது சொல்லுங்க, கணக்குல பெயிலா போனா கோட்டா இல்லைனாலும் இஞ்சினியர் சீட்டு கெடைக்காதுன்னு"

"என்னடா சொல்லுற"

"கேசவன் சார் பையன் கணக்குல ஃபெயிலு"

அன்றைக்கு தெரியாது கோட்டா ஜல்லியடிக்கிற நிறைய கேசவன் சாருங்களை வாழ்க்கையில பாக்கப்போறேன்னு

இந்த கதையை குமுதம் வெளியிடுமா?

சுஜாதா எழுதிய அய்யோத்திய மண்டபம் கதையின் அடுத்த பகுதியான "ஸ்ரீரங்கம்" என்ற தலைப்பில் நான் எழுதிய இந்த சிறுகதை குமுதத்தில் வெளியிடப்படுமா? இந்த கதையை குமுதத்திற்கு அனுப்ப என்ன செய்யவேண்டும், விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

குமுதத்தில் சுஜாதாவின் அய்யோத்தியா மண்டபம் கதையை படிக்க முடியாதவர்கள் பாலாவின் சேமிப்பில் இங்கே படிக்கலாம்.

ஸ்ரீரங்கம்

"அங்க அம்மாவாசை தர்ப்பணம் பண்ணி வெக்கறவா யாராவது நம்மவா இருக்காளா? விஜாரி, தர்ப்பையைத் தூக்கிண்டு வந்துர்றேன். என்னால இனிமே அடி தாங்கமுடியாது" என்றார். கலைச்செல்வியின் கண்ணீர் அவர் மணிக்கட்டில் உருண்டது.

அடிதாங்க முடியாத பிராமண மாமனாரை என்னி கண்ணீர் விட்ட கலைச்செல்வியின் கைத்தொலைபேசி சிணுங்கியது

"ஹலோ"

"கலை, அப்பா பேசுறம்மா, நல்லா இருக்கியா"

"நல்லா இருக்கேன் பா"

"என்னமா ஏர்போர்ட்லயா இருக்க"

"இல்லப்பா, இங்க மாமாக்கு அடிப்பட்டுடிச்சி, அதான் ஒரு வாரம் தள்ளிப்போட்டுட்டோம், என்னப்பா ஏர்போர்ட்லயா இருக்கிங்க"

"இல்லமா? நாங்க ஏர்போர்ட்டுக்கு வரலை"

"ஓ, இன்னைக்கு நாங்க கிளம்புறதா சொன்னதால ஏர்போர்போர்ட்டுக்கு வந்திங்களோனு நினைச்சேன், அடுத்த வாரம் வந்துடுங்கப்பா"

"நாங்க ஏர்போர்ட்டுக்கு வரலைனு சொல்ல தான்மா போன் பண்ணேன்"

"ஏன்பா, என்ன ஆச்சி, ஒடம்பு எதும் சரியில்லையா? என்ன ஆச்சி"

"அதெல்லாம் ஒண்ணுமில்லைமா, இந்த கட்டை நல்லா தான் இருக்கு, மனசு தான் சரியில்லை"

"தூரமா போறோமேனு வருத்தப்படுறிங்களா? ரெண்டு வருஷம் தான்பா அப்புறம் இங்க வந்துடுவோம், நான், நீங்க, மாமா எல்லாம் ஒண்ணாவே இருக்கலாம் பா, இதுக்கு மேலயும் நீங்க கஷ்டப்படவேண்டாம் பா"

"ரெண்டு வருஷத்திலயே இங்க வந்துடாதிங்கன்னு சொல்ல தான் போன் பண்ணேன்"

"ஏன்பா, அந்த சம்பாத்தியம் இங்க கிடைக்காதுனு பாக்குறிங்களா? இப்போலாம் சாப்ட்வேர்ல அங்க வாங்குற சம்பளத்துக்கு சமமா இங்கயும் கிடைக்கும் பா"

"பணம் வந்து என்னமா செய்யப்போவுது, மரியாதை, உரிமையில்லாத ஊருல அது ஒன்னுக்கும் ஒதவாது, ஆனா ஒனக்கு நல்ல சான்ஸ் கெடச்சிருக்கு கெட்டியா புடிச்சிக்கோ"

"என்னப்பா சொல்றிங்க ஒன்னுமே புரியலையே"

"அய்யிரு பையனை கல்யாணம் செய்திருக்க, இனிமே நம்ம ஜாதி பேரை எங்கயும் சொல்லிக்காத, மடிசார் கட்ட கத்துக்கோ, ஆத்துக்காரர் தோப்பனாருனு அய்யிரு பாஷை பேச கத்துக்கோ"

"அதை ஏன்பா நான் கத்துக்கணம், எப்பவுமே சுயமா இருக்கனும் சொல்ற நீங்களே இப்படி சொல்றிங்க"

"உன் பசங்களுக்கு வாய்ப்பாட்டு, கர்நாடக சங்கீதம், பரதநாட்டியமெல்லாம் உனக்கு பொறக்கபோற கொழந்தைகளுக்கு சொல்லி குடு"

"ஏன்ப்பா பேசுறிங்க, நான் அய்யிரை கல்யாணம் பண்ணிக்கிட்டதுல ஒங்களுக்கு எதும் சங்கடமா"

"அய்யய்யோ அதெல்லாம் இல்லமா, நீ அய்யிர கல்யாணம் பண்ணிக்கிட்டதை சாமி குடுத்த வரமா பாக்குறேன் அதனால தான் சொல்றேன் உனக்கு பொறக்க போற பையனுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து சொல்லிதரயோ இல்லியோ, திருக்குறள் சொல்லிதரயோ இல்லியோ ஆனா காயத்திரி மந்திரமும், சந்தியா வந்தனமும் கத்துக்க வை, மறக்காம பூணுல் போட்டுவுட்டுடு"

"என்னப்பா இப்படி பேசுறிங்க, மனசனுக்குள்ள வேறுபாடு பாக்ககூடாதுனு சொன்ன நீங்களே பூணுல் போட சொல்லுறிங்க"

"இந்த ரெண்டு வருசம் கழிச்சி ஊருக்கு வர்றதுலாம் வேண்டாம் மா, இங்க நெலமை அப்படியாயிடுச்சி, நாயும், பூனையும் நடந்த தெருவுல நம்மள மாதிரி ஜனங்க நடக்க உரிமையில்லாம இருந்துச்சி, கோயில்லுக்குள்ள போக வக்கில்லாம இருந்துச்சி, இதுக்கெல்லாம் போராடி உரிமை வாங்கித்தந்த பெரியார் தலையையே ஸ்ரீரங்கத்துல எடுத்துட்டாங்க, அத எதுத்து போராடனவங்களுக்கும் போலிஸ் அடி, ஜெயில் இப்பவே இந்த நெலமை இங்க, போக போக என்ன ஆகுமோ"

"ம்... நானும் பேப்பர்ல படிச்சேன்பா"

"ஏற்கனவே சாமியை தொடமுடியாது, சாமிகிட்ட போவ முடியாது, இனிமே கோயிலுக்கும்கூட போக முடியாத நெலமை வந்துடும், ஒழவு மாட்டவித்து ஒன்ன ஐ.ஐ.டி.ல எம்.டெக் படிக்க வச்சேன், ஆனா பி.இ. கோட்டால தான் படிச்ச, நம்மள மாதிரி படிப்புவாசனையே அறியாத ஜனங்களுக்கு இனி கோட்டாவும் இருக்காது, இங்க படிப்பில்லாம, மரியாதையில்லாம, உரிமையில்லாம ஈனபிறவியா அடிமையா தன்மானத்து உட்டுட்டு வாழுறதுக்கு சாகலாம் கலை, செத்துடலாம், ஆனா நீ அய்யிரு பையனை கல்யாணம் செய்துக்கிட்டதை நான் சாமி குடுத்த வரமாத்தான் பாக்குறேன்"

அதிர்ந்து போன கலைச்செல்வி தன் தந்தை பேசுவதை கண்ணீரோடு கேட்டுக்கொண்டிருந்தால்

"கலை அதனால தான் சொல்றேன், இங்க வராத, உயர்வுனு இந்த சமுதாயம் எதெல்லாம் மதிக்குதோ அதெல்லாம் கத்துக்கோ, உன் பசங்களுக்கும் கத்துகுடு, தமிழ் பாட்டு வேண்டாம் தெலுங்கு கீர்த்தனை கத்துகுடு, பரதநாட்டியம் கத்துகுடு, அத்திம்பேர்னு பேச கத்துகுடு, மடிசார் கட்ட கத்துக்கோ, ஆனா எப்புடி இருந்தாலும் ஒன் கலர் ஒன்னை காட்டி குடுத்துடும் அதுக்காக யார் என்ன பேசனாலும் கவலைப்படாத, உன் மானம், சுயமரியாதை முக்கியமில்லை உன் புள்ளைங்க மரியாதை தான் முக்கியம், ஒன்னை அய்யிரு ஜாதியில ஏத்துக்கலைனாலும் ஒன் புள்ளைங்களை ஏத்துப்பாங்க, முக்கியமா ஒன் புள்ளைங்களுக்கு தமிழ்ல பேரு வச்சிடாத, ஏதாவது சமஸ்கிரத சாமி பேரா பார்த்துவை, கலை இன்னொன்னு சொல்றேன் கேட்டுக்கோ"

"சொல்லுங்கப்பா"

"முடிஞ்சா ஒன் பேரை கூட சரஸ்வதி, லஷ்மினு மாத்தி வச்சிக்கோயேன், விசாரிச்சேன் அது ஈசி தானாம், கெஜட்ல மாத்திடலாமாம், இனி எங்களுக்கு போன் பேசாத, ஒன் ஊரை மறந்துடு, ஒன் சாதியை மறந்துடு, மீன், கறி சாப்பாடுற பழக்கத்தை மறந்துடு, ஒன் பேச்சு வழக்கை மறந்துடு, எல்லாத்தையும் மறந்துடு இப்போ நீ ஒரு அய்யிருக்கு பொண்டாட்டி, அதை மட்டும் ஞாபகத்துல வச்சிக்கோ, எங்களை விட, ஒன்னை விட ஒனக்கு பொறக்க போற கொழந்தைங்க மரியாதை முக்கியம், அவங்க உரிமை முக்கியம், நாயைவிட பூனையைவிட பொறப்பால கேவலமா என் பேரப்பசங்க இருக்க கூடாது, எங்களை பத்தி கவலைப்படாத கலை, எம் பேரப்புள்ளைங்க அய்யிரு சாதியாயிடுங்கற சந்தோசத்துல நாங்க இப்படியே இருந்துட்டு செத்துடுவோம், நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சிக்கோ, நல்லா இரு கலை, நல்லா இரும்மா கலை"

போன் கட்டாகிவிட கதறி கதறி அழ ஆரம்பித்தாள் தற்போதைய கலைச்செல்வியான வருங்கால சரஸ்வதி

இது தொடர்பான பாலபாரதியின் பதிவு

இன்னொரு வேணுகோபால்




இந்த பதிவில் அனானி பினூட்டங்கள் அனுமதிக்கப்படாது, அவரவர்கள் பின்னூட்டங்களுக்கு அவரவர்களே பொறுப்பு

e.b.c.r.a - லஞ்சஊழல் ஒழிப்புப் புரட்சிப்படை

ஊழலை ஒழிக்கப்போறோம், ஊழலை ஒழிக்கப்போறோம், திமுக அசிங்கம், அதிமுக அசிங்கம், பாமக அசிங்கம், எல்லா கட்சியும் ஊழல், எல்லாம் அசிங்கம் எல்லாம் அசிங்கம் எல்லாத்துலயும் ஊழல்னு குணா கமல் ரேஞ்சுக்கு பாட்டு படிச்சிக்கிட்டு இருந்தார் நம்ம ACF 'ரமணா' புகழ் விஜயகாந்த், அதுக்காக தேமுதிகனு ஒரு கட்சி கூட ஆரம்பிச்சார், ஆகா ஊழல் ஒழிப்பு ரட்சகனே, மாற்றம் தரும் பிதாமகனே என்று பத்திரிக்கைகளும் எலவச வெளம்பரம் தந்தாங்க, அப்படிப்பட்ட சரியாக இன்கம்டாக்ஸ் கட்டும், மக்களுக்காக மண்டபத்தையே தரும் இருக்கும் கொடை வள்ளல் , சரியாக சொத்து மதிப்பை காட்டும், தம் சாதி என்பதால் தெலுங்கு நாயக்கர் சாதிக்கு வெறும் 14 பதினான்கு மாவட்ட செயலாளர்களை மட்டுமே தந்திருக்கும் சாதி பார்க்கா சிங்கம் விஜயகாந்த் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தேமுதிக கட்சியிலிருப்பவர்களால் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த e.b.c.r.a - லஞ்சஊழல் ஒழிப்புப் புரட்சிப்படை.

அடடே நல்ல விசயம் தானே, ACFனு படத்துல மட்டும் படம்காமிக்காம EBCRAனு நெசத்துலயும் செய்யறாங்களே, இந்த EBCRA கெவுருமெண்ட்டு, தனியார்னு எங்கெல்லாம் ஊழல் இருக்கோ அங்கெல்லாம் அதை ஒழிக்க போறாங்க டோய்னு சந்தோசமா பார்த்தா... படா தமாசாகீதுப்பா மேட்டரு... யின்னா தமாசா இந்த EBCRA எதுக்குனா "இது தே.மு.தி.க.வுக்குள் நடக்கும் ஊழலை ஒழிப்பதற்கான இயக்கமாம்" அட்றா அட்றா அட்றா... ஊளலை ஒளிக்க பிறந்த இயக்கத்தில் உள்ள ஊளலை ஒளிக்க இயக்கமா... புச்சா கீதேப்பா....சரி யாருடா விஜயகாந்த்தா ஆரம்பிச்சாரு அது கூட பரவாலேது, சொந்த கட்சியை சீர்படுத்தறாருன்னா விஜயகந்த் பாவா இல்லியாம் இதை ஆரம்பிச்சது, பாவா கட்சியில பாதிக்கப்பட்ட ராஜேந்திரன்னு ஒருத்தராம், இன்னா ராசானு கேட்டதுக்கு அவுரு சொன்னாராம் மாநாட்டுக்கு மூனு இலட்சம் செலவு செய்ததிலிருந்து கட்சி பதவி, தேர்தல்னு ஏகப்பட்ட வசூலாம், சரி பாவாகிட்ட சொல்லலாமேனா "கேப்டனிடம் இதுபற்றி முறையிடலாம் என்றால், அவரைச் சுற்றியிருப்பவர்கள் எங்களை அண்ட விடவில்லை. கட்சியின் தலைமை அலுவலகத்திற்குப் பலமுறை ஃபேக்ஸ் அனுப்பினோம். அது நேராக குப்பைக் கூடைக்குத்தான் போகும் என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டோம்." அப்புடிங்கறார், இவுரை பத்தி தேமுதிக மாநில நிர்வாகிகிட்ட கேட்டா அவரு திமுக கைகூலியாம் அப்புடிங்கறாரு.... என்னமோ போங்கப்பா ஒன்னியும் பிரியலை...


அது சரி ரட்சகன், பிதாமகன்னு தூக்கிவுட்ட ஊடக பூடகங்கள் யின்னாத்துக்கு பாவா இப்போ ஒன்னிய கவுக்கறாங்க, சப்பை பய எனக்கு தெரியுது நான் சொன்னேன் விஜயகாந்த், இனி ஊடகங்கள் பாவா நீங்க கலைஞருக்கும் திமுகவுக்கும் மங்களம் பாடுவிங்கனு நெனச்சா நீங்க ஜெயலலிதாவுக்கும் அதிமுகவுக்கும் மங்களம் பாடுறிங்க, சொந்த ரத்தம் உட்டுடுமா? அதான் தூக்கி புடிச்ச ஒங்களையே இப்போ கவுக்குறாங்க, நீ என்னானா இவுனுங்களை நம்பி எங்க மேட்டருங்களை கைவுட்டுட்ட, வச்சாங்களா ஆப்பு... பாவா உன் இமேஜை டேமேஜாக்க உடமாட்டானுங்க, நாங்க ஒன்னும் செய்யமுடியாது பாவா.... வேடிக்கை தான் பாக்கனும்....

இவ்ளோதான் நம்ம மேட்டரு, அப்பாலிக்கா இதுக்குமேல குமுதம் ரிப்போர்ட்டர்ல வந்தது, அட நம்ம வலைப்பதிவு பத்திரிக்கை வெட்டி ஒட்டு புகழ் இட்லிவடை போடுவாரா இல்லையானு தெர்ல, அதான் நாமளே போட்டுட்டோம்........

குமுதம் கவர்ஸ்டோரி

ஊழலை ஒழிப்பதற்காக தனி இயக்கமொன்று தே.மு.தி.க.வில் தலை தூக்கியிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. போன்ற மற்ற கட்சிகளில் புரையோடிப் போயிருக்கும் ஊழல் புண்ணை அகற்றுவதற்காகத்தான் இந்த இயக்கம் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள். இது தே.மு.தி.க.வுக்குள் நடக்கும் ஊழலை ஒழிப்பதற்கான இயக்கமாம். இதனால் திகிலடித்துப் போய் நிற்கிறது தே.மு.தி.க.

‘ஊழலை ஒழிக்கப் போகிறேன்’ என்று ஒவ்வொரு சினிமாவிலும் டயலாக் பேசி நடிப்பவர் நடிகர் விஜயகாந்த். அதற்காகவே தே.மு.தி.க. என்ற கட்சியை அவதரிக்க வைத்தார் அவர். அந்த, ‘தே.மு.தி.க.வுக்குள்ளே ஊழலை ஒழிக்கப் போகிறோம்’ என்று, ஓர் அமைப்பினர் ஓங்கிக் குரல் கொடுத்திருப்பதால், தொண்டைக்குள் மீன்முள் சிக்கியதைப் போல துவண்டு நிற்கிறார்கள் தே.மு.தி.க. கட்சியினர்.

ஈரோடு, கோவை மாவட்ட எல்லையில் உள்ள தாசர்பட்டியில்தான் இப்படியரு புதிய இயக்கம் பூத்திருக்கிறது. தாராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட இந்தத் தாசர்பட்டியில் கடந்த ஏழாம் தேதியன்று (ஞாயிறு) மாலையில், அந்த ஏரியாவைச் சேர்ந்த தே.மு.தி.க.வினர், 'e.b.c.r.a' என்ற புதிய இயக்கத்தை ஆரம்பித்திருக்கின்றனர். "லஞ்சஊழல் ஒழிப்புப் புரட்சிப்படை" என்பது இதன் விரிவாக்கமாம்.

தாசர்பட்டிக்கு வெளியே ஒரு சோளக்காட்டை வெட்டிச் சமமாக்கி, அதில் மேடை போட்டு, ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி அதில் இப்படியரு இயக்கத்தை அறிவித்துள்ளனர் தே.மு.தி.க.வினர். இந்தத் திடீர் இயக்கத்தின் தலைவர் ராஜேந்திரன் என்பவர்.

‘‘பொதுக்கூட்ட மேடைக்கு தாரை தப்பட்டையுடன் மேளதாளம் முழங்க வந்த ராஜேந்திரனிடம், அவரது புதிய இயக்கம் பற்றி ‘என்ன இது திடீர் கலாட்டா’ என்று கேட்டோம்.

ராஜேந்திரன் சீரியஸாகப் பேச ஆரம்பித்தார். ‘‘சும்மா காமெடிக்காக இந்த இயக்கத்தை ஆரம்பிக்கவில்லை. எங்களின் செயல்பாடுகள் சிலபேருக்கு காமெடி போலத்தான் தெரிகிறது. ஆனால், அதைப்பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை.

எங்க தலைவர் விஜயகாந்த், கட்சி ஆரம்பித்தபோதே சிலபேர் அதை காமெடியாத்தான் நினைச்சு சிரிச்சாங்க. ஆனால், இப்போ தலைவரைப் பார்த்து அலறிக்கிட்டிருக்காங்க.

கட்சிக்குள்ளே இப்படியரு ஊழல் ஒழிப்பு இயக்கத்தை நாங்க ஆரம்பிக்கக் காரணமே, எங்க கட்சிக்காரங்கதான். கேப்டனுக்கு லஞ்சம் என்கிற வார்த்தையே பிடிக்காது. ஆனால், கட்சிக்குள்ளே பல இடங்களில் லஞ்சம் புகுந்து விளையாடுது. அதுக்கு ஒரு சரியான உதாரணம் தாராபுரம் தொகுதிதான்.

தலைவர் கட்சி ஆரம்பிச்சப்போ, இந்தத் தாசர்பட்டியிலிருந்து கிட்டத்தட்ட மூன்று லட்ச ரூபாயை மதுரை மாநாட்டுக்காகச் செலவு செய்தோம். தலைவர் எனக்கு தாராபுரம் ஒன்றியச் செயலாளர் பதவியைத் தந்தார். நானும் வெறியோடு உழைக்க ஆரம்பித்தேன். ஆனால், கொஞ்ச நாளில் எனக்கு அதிருப்தி ஏற்படத் தொடங்கியது.

இங்கே தாராபுரம் நகர தே.மு.தி.க. நிர்வாகிகள், தொட்டதற்கெல்லாம் பணம் பறிக்கிறார்கள். குறிப்பாக, நகரத் தலைவராயிருக்கிற விஜயகுமார் மேலே ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் குவிய ஆரம்பித்தது.

இவர்கள் எல்லைமீறி என்னுடைய ஒன்றியத்துக்குள்ளும் நுழைந்து, கைவேலையைக் காட்ட ஆரம்பித்தார்கள். கட்சி உறுப்பினர் படிவத்தைக் கூட இரண்டாயிரம் ரூபாய், ஐந்தாயிரம் ரூபாய்னு விற்றுக் காசு பார்க்க ஆரம்பித்தார்கள். கட்சியின் பேர் பயங்கரமாக கெட்டுப் போக ஆரம்பித்தது.

இதனால், தே.மு.தி.க. கட்சிக்குள் காலை வைக்கவே பயப்படும் நிலை உருவானது. சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் சீட் கேட்டவர்களிடம் எல்லாம் சரியான சில்லறை வசூல் நடந்தது.

எங்கள் கட்சி ஊழல் நிர்வாகிகள், தேர்தல் வேளையில் தி.மு.க., அ.தி.மு.க.காரர்களிடம் கைநீட்டிக் காசு வாங்கி கட்சியைக் காட்டிக் கொடுக்கும் வேலையையும் செய்தார்கள். மாற்றுக் கட்சிக்காரர்களிடம், ‘நம்ம கட்சிக்கு வந்திடுங்க, கேப்டனிடம் சொல்லி பெரிய பதவி வாங்கித் தருகிறோம்’னு பீலா விட்டு வசூல்வேட்டை நடத்தினார்கள். பணம் வாங்கிய பின் கட்சியில் சேர்த்து, பதவி வாங்கித் தராதது தனிக்கதை.

ஈரோடு மாவட்ட நிர்வாகிகளிடம் இதுபற்றிப் புகார் செய்தோம். அவர்கள் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அங்கே தாராபுரம் நிர்வாகிகள் காசை வீசி காரியத்தைச் சமாளித்து விட்டார்கள் என்று பிறகுதான் தெரிந்தது.

சரி, கேப்டனிடம் இதுபற்றி முறையிடலாம் என்றால், அவரைச் சுற்றியிருப்பவர்கள் எங்களை அண்ட விடவில்லை. கட்சியின் தலைமை அலுவலகத்திற்குப் பலமுறை ஃபேக்ஸ் அனுப்பினோம். அது நேராக குப்பைக் கூடைக்குத்தான் போகும் என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டோம்.

உள்கட்சியில் நடக்கும் இந்த ஊழல் பிரச்னையை எப்படிக் கழுவிக் களைவது என்று உட்கார்ந்து யோசித்தோம். அப்போது உதயமானதுதான் இந்த ஊழல் ஒழிப்பு இயக்கம் என்ற ஐடியா.

தே.மு.தி.க.வில் உள்ள ஊழல் பெருச்சாளிகளை ஒழிப்பதுதான், இந்த இயக்கத்தின் முதல் வேலை. கட்சியை முதலில் சரி செய்த பிறகு, ஊரைத் திருத்தும் நோக்கத்தோடு இந்த இயக்கம் நகர ஆரம்பிக்கும்.

இந்த இயக்கம் கண்டிப்பாக கேப்டனின் கவனத்திற்குப் போகும். அவர் எங்களிடம் விசாரிக்கும்போது, ஊழல் செய்தவர்களின் ஒட்டுமொத்த பட்டியலையும் அவரிடம் ஆதாரங்களோடு காட்டுவோம். எங்கள் ஒன்றியத்திற்குள் மட்டுமல்ல, இந்த ஈரோடு மாவட்டத்திற்குள், எங்கள் கட்சிக்குள், எங்கே ஊழல் நடந்தாலும் அதைப் பட்டியலிடுவோம். அதற்கான ஆதாரங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறோம்.

இது கேப்டனுக்கு எதிரான இயக்கமில்லை. அவருக்குத் துணை புரியப் போகும் ஓர் இயக்கம். நாங்களும் தே.மு.தி.க.வினர்தான். கேப்டன் எங்களைப் புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

அப்படியே தப்பித் தவறி எங்கள் மீது நடவடிக்கை எடுத்து, கட்சியை விட்டு வெளியே தள்ளினாலும் கூட, ஊழல் பெருச்சாளிகளின் பட்டியலை அவரிடம் காட்டுவோம். ‘இந்த மாதிரி ஊழல் பேர்வழிகள் இருந்தால் கட்சி எப்படி உருப்படும் தலைவா?’ என்று கேட்டுவிட்டு, கட்சியை விட்டு காலை வெளியே எடுத்து வைப்போம்’’ என்றார் நெத்தியடியாக.

ஈரோடு மாவட்ட தே.மு.தி.க.வுக்குள் இப்படியரு எரிமலை வெடிக்க, இதற்கு மற்ற மாவட்ட தே.மு.தி.க.வினரும் மறைமுக ஆதரவு தெரிவித்து வருகிறார்களாம்.

‘‘பூனைக்கு யார் மணி கட்டுவது என்று நினைத்தோம். நீங்கள் துணிந்து மணி கட்டி விட்டீர்கள். உங்கள் வழியில் நாங்களும் எங்கள் மாவட்ட ஊழல் நிர்வாகிகளை எதிர்க்கப் போகிறோம்’’ என்கிறார்களாம் உற்சாகமாக.

இந்தத் திடீர் இயக்கம் பற்றி தே.மு.தி.க. மாநில நிர்வாகிகளிடம் கேட்டோம்.

"ராஜேந்திரனை, தாராபுரம் ஒன்றியச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி நாளாகி விட்டது. அவர் இப்போது தே.மு.தி.க.வில் இல்லை. தி.மு.க.வின் கைக்கூலியாகி விட்டார். அவரைப் பற்றிப் பேசி அவரைப் பெரிய ஆளாக்க நாங்கள் விரும்பவில்லை!" என்றனர் படுகாட்டமாக.

ஒரு பக்கம் கொஞ்சம் காமெடியாகத் தெரிந்தாலும், இந்தத் திடீர் இயக்கம் தே.மு.தி.க. க்குள் ஒரு திகிலையும், கலக்கத்தையும் கிளப்பியிருக்கிறது என்பதே நிஜம்!

கடைசிச் செய்தி : ஈரோட்டில் பூனைக்கு மணி கட்டியதை மகிழ்ச்சியோடு ஆமோதித்திருக்கும் மற்ற மாவட்ட நிர்வாகிகள், நடந்தவை யாவும் நிஜம் என்பதை நிரூபிக்கும் வகையில், கட்சிப் பதவிகளைப் பெறுவதற்காக தலைமை கழக நிர்வாகிகள் இருவருக்கு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மூலமாகத் தாங்கள் இதுவரை செலுத்திய பல லட்ச ரூபாய்களுக்கான ஆதாரங்களை தலைமைக்கு சரம் சரமாக அனுப்பி வருகிறார்கள்.

என் புத்தாண்டு ஆசைகள்

இந்த புத்தாண்டில் நிறைவேற வேண்டுமென்ற என் ஆசைகள்

1. தலித் - பிற்படுத்தப்பட்டோர் இணைப்பு சமூக, அரசியல் நிலைகளில் ஏற்படவேண்டும், இவர்களுக்கிடையேயான புரிந்துணர்வு மேலும் மேலும் மேம்பட வேண்டும்.

2. சாதிவாரியான முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற வேண்டும், இது பல விடயங்களை தெளிவு படுத்தும், சமூக, அரசியல், பொருளாதார மத உரிமைகளிலும் பங்களிப்பிலும் யார் யாருக்கு எவ்வளவு உள்ளது என்று தெளிவாக தெரிந்து கொள்ளலம், முக்கியமாக சமீபகாலமாக தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆய்வின் அடிப்படையில் கிடைத்த புள்ளிவிபரங்களை ஆதாரமாகக் கொண்டு அடிக்கப்படும் ஜல்லிகளுக்கு முடிவுகட்டலாம். 1931 கணக்கெடுப்பின்படி 52% இருந்த பிற்படுத்தப்பட்டவர்கள் 1999ல் தே.மா.க.க ன் புள்ளிவிபரப்படி 38.5%மாக குறைந்து உடனே 5 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டவர்கள் 41%மாக உயரும் அதிசய காட்சிகளை தவிர்க்கலாம்.(ஏனிந்த சாதிவாரியான கணக்கெடுப்பு வேண்டுமென்று பின்பு விளக்கமாக எழுதுகிறேன்)

3.ம.தி.மு.க வும் வைகோவும் அ.தி.மு.க. வில் இணைய வேண்டும் (ஏன் இதற்கு ஆசைப்படுகின்றேன் என்று விளக்கமாக பிறகு எழுதுகிறேன்)

4. எனக்கு நல்ல ஊதிய உயர்வு கிடைக்க வேண்டும்.

5. சென்ற ஆண்டின் இறுதியில் மருத்துவர் இராமதாசுவை சந்தித்தது போல இந்த ஆண்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அண்ணன் தொல்.திருமாவை சந்தித்து உரையாட வேண்டும்.

6. தமிழகத்தில் சட்டமன்ற பாராளுமன்ற தேர்தல் எதுவும் இந்த ஆண்டு நடைபெற வேண்டாம்.

7. சபால்ட்டர்ன் கதைகள் என்ற என் மற்றொரு பதிவில் குறைந்தது இருபது கதைகளாவது எழுத வேண்டும்.

8. தமிழ்மணம் மேலும் மேலும் வளர்ந்து புதிய தளங்களை பதிவர்களுக்கு அமைத்து தரவேண்டும்.

9. இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு இந்த ஆண்டே முழுவதும் அமல் செய்யப்படவேண்டும்.

இதல்லாமல் மேலும் பல ஆசைகள் உள்ளன, நேரம் கிடைக்கும் போது உங்களிடம் சொல்கிறேன்

ஐஐடி இடஒதுக்கீடு: புதிய சதி திட்டம்

நம் நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த ஐஐஎம், ஐஐடிகளின் இயக்குனர்கள், வெளிநாட்டு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி மனித வளத்துறை அமைச்சகத்தை நெருக்கி வருகின்றனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

திண்டிவனத்தில் தனது தோட்டத்தில் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,

ஐஐடி, ஐஐஎம் ஆகிய உயர் கல்வி நிலையங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த அந்த கல்வி நிலையங்களின் இயக்குனர்கள் இப்போது வெளிநாட்டு மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இது பிற்பட்டவர்களுக்கு எதிரான அவர்களது மன நிலையை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

நம் நாட்டைச் சேர்ந்த பிற்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர்கள், வெளிநாட்டு மாணவர்களுக்காக கொடி பிடிப்பது ஏன்?

இந்தக் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஆனால், அந்த ஒப்புதல் கிடைக்கும் முன்பே அவசர அவசரமாக நுழைவுத் தேர்வை நடத்தி முடிக்க ஐஐஎம், ஐஐடி நிறுவன இயக்குனர்கள் முயன்று வருகின்றனர்.

சட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால் இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டியிருக்கும் என்பதால் இந்த அவசரத்தைக் காட்டுகிறார்கள். இதனால் ஜனாதிபதியில் ஒப்புதல் கிடைத்து சட்டம் அதிகாரப்பூர்வமான பின்னர் தான் நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும்.

நன்றி
தட்ஸ்தமிழ்

தமிழிசை - விகடன் தலையங்கம்

27-12-2006 வெளியான ஆனந்த விகடன் இதழின் தலையங்கம் தமிழிசை பற்றி எழுதப்பட்டுள்ளது, டிசம்பர் மேடைகளில் தமிழ்ப் பாட்டு 'துக்கடா' தான்!
என்று ஆதங்கத்தோடு வெறும் தலையங்கம் எழுதுவதோடு விகடன் நின்றுவிடாமல் தமிழிசை பற்றிய செய்திகளுக்கும் விமர்சனங்களுக்கும் டிசம்பர் மாத கச்சேரிகளுக்கு பக்கம் பக்கமாக இடம் ஒதுக்கி நிகழ்ச்சி விமர்சனங்கள், கர்நாடக சங்கீத பாடகர் பாடகிகளின் பேட்டிகள் , நிகழ்ச்சி நிரல்கள் போன்றவற்றை வெளியிடுவது போல தமிழிசைக்கும், தமிழிசை கலைஞர்களுக்கும் விகடன் செய்யவேண்டும், விகடன் தருமா தமிழிசைக்கு இடம்? காத்திருக்கிறோம் தமிழிசை தலையங்கத்தோடு நிற்கிறதா? உள் பக்கங்களிலும் செல்கிறதா என்று, விகடனின் இந்த தலையங்கத்திற்கு முதலில் நன்றி


தமிழிசையை முன்னிறுத்திக் கச்சேரிகள் நடக்க வேண்டும் என உருக்கமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

காலகாலமாகக் காற்றில் கலந்துவரும் ஆதங்கக் குரல் இது. ஆனாலும், டிசம்பர் மேடைகளில் தமிழ்ப் பாட்டு 'துக்கடா'தான்!

வயிற்றுப் பசிக்கு வழியில்லாதவர்கள் வேறு வீட்டில் கையேந்தலாம். அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமல்லவா நம் தமிழ்!

தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை தராத மயக்கத்தை வேறு எந்த மொழிப் பாடல் தந்துவிடும்? சங்க காலம் தொட்டு சுப்ரமணிய பாரதி காலம் வரை... தெய்வ பக்திப் பாடல் தொடங்கி தேச பக்திப் பாடல் வரை... ஊனுக்கும் உயிருக்கும் இன்பம் சேர்க்கும் பாடல் வரிகளுக்கா பஞ்சம்?

பல்லவி, அனு பல்லவி, சரணம் என்ற கட்டுக்கோப்பான மேடைக் கச்சேரி வடிவத்தின் முன்னோடியான முத்துத்தாண்டவர் பாடல்களை எங்கே தொலைத்தோம்? "ஆடிக் கொண்டார் & அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ" என்ற அவரது பாடலைக் கேட்டால் ஆடாத தலையும் இருக்க முடியுமா, என்ன?

மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர், ஊத்துக்காடு வேங்கட சுப்பையர், பாபநாசம் சிவன் ஆகியோரின் வார்த்தை மகுடிகளை எடுத்து ஊதினால் மயங்காத இதயம் எது?

தமிழ் விளக்கை சுடர்விடச் செய்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை, குணங்குடி மஸ்தான் சாகிபு, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் பாடல்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாமே..!

இசை தாகம் கொண்ட எவருக்கும் மொழிகளைத் தாண்டிய நாட்டம் இருப்பது இயல்புதான். ஆனால், மண்ணின் மொழியாம் தமிழைத் தள்ளி வைத்தால் நிஜமான தாகம் எப்படித் தணியும்?

சிந்தனை செய் மனமே..!

சிங்கப்பூரில் பொங்குதமிழ்ப் பண்ணிசை விழா

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழில் இசையை நடுவில் வைத்து அழகு பார்த்தது தமிழ், ஆனால் இன்று தமிழர்களிடத்திலே இசையில் தமிழில்லாமல் வேற்று மொழிகள் ஆக்கிரமித்து விட்டன, இந்த நிலையை மாற்றி 'ஆதி' இசையான தமிழிசை மீண்டும் புத்துயிர் பெற்று வருவதற்கு முக்கிய காரணம் மருத்துவர் இராமதாசு அவர்கள் நிறுவனராக இருக்கும் "பொங்குதமிழ்ப் பண்ணிசை மன்றம்" சார்பில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழிசை விழாக்கள். இவ்விழாக்கள் தமிழகமெங்கும் மற்றும் இந்தியாவின் பெரு நகரங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது, கடல் கடந்து வெளிநாடுகளில் முதன் முதலாக சிங்கப்பூரில் இயேசு பிறந்த நன்னாளாம் கிறிஸ்த்துமஸ் தினமான டிசம்பர் 25 அன்று மாலை காலாங் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

கடந்த சில நாட்களாக சிங்கப்பூர் தமிழ் நாளேடான "தமிழ் முரசு"விலும் சிங்கப்பூர் வானொலியிலும் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன, மாலை ஆறு மணி சில நிமிடங்களில் மருத்துவர் இராமதாசு இந் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அரங்கினுள் நுழைந்தார், ஆதி இசையாம் தமிழிசை மழையில் நனைய வான் மழையும் வந்து சேர்ந்ததால் தமிழிசை நிகழ்ச்சி ஆரம்பிக்க சிறிது நேரமானது, கவிஞரும் எழுத்தாளருமான பிச்சினிக்காடு இளங்கோ அவர்களும் அவரோடு இணைந்து சிங்கப்பூர் வானொலி சேவை ஒலி 96.8ன் அறிவிப்பாளர் திருமதி மீனாட்சி சபாபதி அவர்களும் இந் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.

கவிஞர் இனியதாசனின் தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடலோடு விழா இனிதாக ஆரம்பித்தது, திருமதி.மீனாட்சி சபாபதி அவர்கள் தமிழிசை பற்றிய பல தகவல்களோடும் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ இன்றைக்கு கர்நாடக சங்கீதத்தில் உள்ள கீர்த்தனைகளுக்கு முன்னோடியாக தேவாரப்பாடல்கள் அமைந்தன என்றும், ராகங்கள் என்று அழைக்கப்படுபனவையெல்லாம் தமிழிசையிலே முன்பே இருந்தவை என்றும் அவைகள் யாழ்,பண்,பாலை என்றழைக்கப்பட்டன, இரண்டாம் நூற்றாண்டில் அரும்பாலை என்று கோவலன் வாசித்ததுன் இன்று சங்கராபரணம் என்று வழங்கப்படுகிறது என்றும் மேலும் பல தமிழிசை பற்றிய தகவல்களோடு நிகழ்ச்சியை சுவையோடும் பொருளோடும் தொகுத்து வழங்கினார்கள்.

பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் தலைவர் திரு.ஜே.வி.கண்ணன் அவர்களின் தொடக்க உரையை தொடர்ந்து தேவார இசைமணி பழனி சண்முகசுந்தர தேசிகர் மற்றும் தேவார இசைமணி கரூர் சுவாமிநாதன் அவர்களின் மூவர் தேவாரம், திருவாசகப்பாடல்கள் அரங்கிலுள்ளோர் உள்ளம் உருகப் பாடினார்கள்.





திருமதி டி.கே.கலா திருவருட்பா பாடல்களையும் பாரதியார் பாடல்களையும் அரங்கம் ரசிக்க பலத்த கைதட்டல்களோடு பாடினார்.









சித்தர் பாடல்களில் உள்ள அறிவியல், திருமூலத்தில் சொல்லப்பட்டிருக்கும் யோகாசனக்கலை பற்றிய பல அரிய தகவல்களோடு பண்ணிசைப்பாணர் மா.கோடிலிங்கம் அவர்கள் திவ்யபிரபந்தம், சித்தர் பாடல்கள், குனங்குடி மஸ்தான் பாடல்களை பாடினார், "ஆடு பாம்பே" பாடல் பலத்த ஆரவாரத்தை ஏற்படுத்தியது.



தமிழிசையில் ஆய்வு செய்திருக்கும், லால்குடி ஜெயராமன் அவர்களின் மாணவியுமான திருமதி.சங்கரி கிருஷ்ணன் அவர்கள் மும்மூர்த்திகளின் முன் மூர்த்திகளான முத்துத்தாண்டவர், அருணாச்சலக் கவிராயர் மற்றும் கோபாலகிருஷ்ண பாரதியார் கீர்த்தனைகள் பாடினார்

பெரும்பாண நங்கை பட்டம் பெற்றவரும், திருச்சி காவேரி நுண்கலை கல்லூரியின் முதல்வருமான அருட்சகோதரி மார்கரெட் பாஸ்டின் குழுவினர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை மற்றும் வீரமாமுனிவர் பாடல்களை பாடினார்

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக மக்கள் இசையான நாட்டுப்புற இசையை பாடினார் இசையில் முனைவர் பட்டம் பெற்ற திரு.மதுரை சந்திரன், இவரின் பாடல்கள் அரங்கத்தில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது, கிராமிய காதல் பாடல்கள், காசு பணம் பற்றிய பாடல்களோடு "கத்திரிக்காய்க்கு குடை பிடிக்க கத்துக்கொடுத்தது யாரு" என்று தொடங்கும் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாடல்களும், நம் நெஞ்சில் நீங்க துயராக இருக்கும் கும்பகோணம் பள்ளி எரிந்தது மற்றும் இயற்கை பேரிடரான சுனாமி சோகத்தையும் பற்றிய பாடல்கள் நெஞ்சைப்பிழிய வைத்தன.

நிகழ்ச்சியின் இறுதி கட்டமாக தலைவர்களின் உரை அமைந்தது, பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் பொதுச்செயலாளர் வரவேற்புரை வழங்கினார், அவரைத்தொடர்ந்து திரு.ஜே.வி.கண்ணன், திரு.எஸ்.எம்.ஃபாருக், திரு.எஸ்.குலாம், பேராசிரியர் திருமிகு.திண்ணப்பன், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்தியத்தொடர்வண்டித்துறை முன்னாள் அமைச்சர் திருமிகு.ஆ.கி.மூர்த்தி மற்றும் திருமிகு.கணேஷ் கண்ணன் ஆகியோர் உரையாற்றினார்.

இறுதியாக பொங்குதமிழ்ப் பண்ணிசை மன்றத்தின் நிறுவனரும் விழாவின் சிறப்பு விருந்தினருமான மருத்துவர் இராமதாசு அவர்கள் சிறப்புரையாற்றினார், இயேசு பிரான் அவதரித்த நன்னாள் வாழ்த்து கூறி தன் உரையை ஆரம்பித்தார்,தமிழிசையின் தற்போதைய நிலை அதன் பெருமைகளை மீட்டெடுக்கும் செயல்பாடுகள் பற்றி விரிவாக தம் பேச்சில்

பல்வேறு இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் அனைவருக்கும் அவரவர்கள் உரிமையை கொடுத்து அவரவர்கள் மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் நல் அரசாக இருக்கும் சிங்கப்பூர் அரசை மக்கள் அரசு என்று பாராட்டினார்.

இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பொக்கிஷங்களை உள்ளடக்கிய தேவாரம் திருவாசகம் பாடல்கள் இன்றைய இளைஞர்களை சென்று சேராததற்கு காரணம் நம்முடைய பெரியவர்கள் அதை நம் இளைஞர்களுக்கு படிப்பிக்காததுவேயாகும் அதனால் வரும் தலைமுறைக்கு உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு இவைகளை கற்றுக்கொடுங்கள், அவர்களுக்கு இந்த பண்ணிசையை சேர்ப்பியுங்கள் என்றார்.

6 வயதிலிருந்து ஏன் 4 வயதிலிருந்து பண்ணிசையை தமிழிசையை குழந்தைகளுக்கு படிப்பியுங்கள், 6 வயதிலிருந்து +2 வரை தமிழிசை ஒரு கட்டாயப்பாடமாக வைக்கப்பட வேண்டும் அதற்கு நூறு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டுமென்று கூறினார். ஐரோப்பா மற்றும் கனடாவில்உள்ள ஈழத்தமிழர்கள் சனி, ஞாயிறுகளிலே தமிழ்ப்பண்ணிசையை அவர்களே பள்ளிக்கூடங்கள் வைத்து பயிற்றுவிக்கின்றனர், அதனாலேயே ஈழத்தமிழர்களுக்கு இதில் மிக்க ஆர்வம் இருக்கின்றது, இதே போல் இங்கிருக்கும் தமிழர்களும் செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ்ப்பண்ணிசையை இங்கே அறிமுகப்படுத்தியதற்கு காரணம் இங்கே யார் யாரோ வந்து இசை என்ற பெயரிலே ஆடியிருப்பார்கள், பாடியிருப்பார்கள் அதனால் இப்படியான இசையை அறிமுகப்படுத்த விரும்பினோம்.

தமிழகத்திலிருக்கும் இளைஞர்களிடம் இன்று இயல் என்றால் திரைப்பட வசனங்கள், இசை என்றால் திரைப்பட இசை, நாடகமென்றால் திரைப்படங்கள், ஓவியமென்றால் திரைப்பட விளம்பர சுவரொட்டிகள், கலாச்சாரம், வாழ்க்கை நெறி எல்லாமே திரைப்படங்கள் தான் என்ற நிலை இருக்கின்றது, எதிர்கால தமிழகத்தை உயர்த்தி பிடிக்க வேண்டிய இளைஞர்கள், பொக்கிசமாக இருக்க வேண்டிய இளைஞர்கள் திரைப்பட மோகத்தில் எங்கோ தறிகெட்டுப்போய் கொண்டிருக்கின்றார்கள், இந்த நிலை மாற வேண்டும், இளைஞர்கள் நல்வழிப்பட வேண்டுமென்று தொடர்ந்து கூறிவருகின்றோம், பொங்குதமிழ் அறக்கட்டளையின் ஒரு அங்கமாக பொங்குதமிழ் பண்ணிசை மணி மன்றம் அமைத்து மற்றவர்களிடமிருந்து தமிழிசையை மீட்டுக்கொண்டிருக்கின்றோம், தமிழகத்திலே சென்னையிலே 150 சபாக்கள் உள்ளன, ஆனால் அங்கேயெல்லாம் தெலுங்கு பாடல்களும் வடமொழிப்பாடல்களும் பாடப்படுகின்றன, தமிழ் பாடல்கள் வெறும் துக்கடாவாக பாடப்படுகின்றன, அந்த நிலை மாற வேண்டுமென்றார், பண்ணிசை ஆய்வுகள் பற்றிய கருத்துகள் ஒரு நாள் அல்லது அரை நாள் வரும் காலங்களில் பட்டறையாக நடத்தப்படுமென்றார். பிறப்பிலிருந்து இறப்புவரை நம்மோடு இருக்கும் தமிழிசை அழிந்து வருவதற்கு இன்றைய திரைப்படங்களே முக்கிய காரணமாக இருக்கின்றன, இதிலிருந்து தமிழிசையை மீட்டெடுக்கின்றோம் என்றார், மக்களின் மனங்களை பண்படுத்த வேண்டும், திரைப்படத்தின் தாக்கம் இல்லாமல் மக்களுக்காக மக்கள் தொலைக்காட்சியை நடத்தி வருகின்றோம், மேலும் நல்ல தமிழிற்கு தமிழோசை பத்திரிக்கையை நடத்தி வருகின்றோம் என்று பேசினார், தமிழிசை விழாவை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் நன்றி கூறி தம் உரையை முடித்தார்.

மேலும் படங்கள் இந்த சுட்டியில்

இது தொடர்பான பிற சுட்டிகள்

கோவிக்கண்ணன் சிங்கப்பூரில் பொங்குதமிழ் பண்ணிசை பெருவிழா

தமிழ் இசைக்காக சிங்கப்பூர் வரும் மருத்துவர் இராமதாசு

ஹரிகரனின் (ட)தமிழி(ளி)(லி)சை வாங்கலியோ சாமி

தமிழ் இசைக்காக சிங்கப்பூர் வரும் மருத்துவர் இராமதாசு

இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழ்களில் நாடகத்தை இன்றைய தொலைக்காட்சி, திரைப்பட வியாபார, கலாச்சார சீரழிவுகளிடம் காவு கொடுத்துவிட்டு இருக்கிறோம், இசையையோ கர்நாடக சங்கீதத்திடமும், டிசம்பர் மாத கச்சேரி கான சபைகளிடமும் பறி கொடுத்துவிட்டு அங்கே புரியாத மொழிகள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்க நாமோ அய்யோ தமிழில் பாடுங்கள் என்று கெஞ்சி, கதறிக்கொண்டிருந்தோம், அது தான் துக்கடா பாடுகிறோமே அது போதாதா என்று திமிரெடுக்க பேசிக்கொண்டிருக்கின்றார்கள் அந்த கும்பல். இசையில் தமிழின் இடம் தமிழகத்திலேயே துக்கடாவாகிப்போனது.

தமிழ் மண்ணின் இசை போராட்டங்களுக்கான இசை, வலியோர் தம்மை எதிர்த்து போராடும் சக்தியை அளிக்கும் இசை, ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தூண்டும் இசை, பறை முழக்கம் எழுப்பிவிடும் போராட்ட சக்தி வேறெந்த தோல்கருவிக்கு இருக்கின்றது? கொம்பு முழக்கம் ஏற்படுத்தும் உணர்சி கொதிப்பு வெறெந்த கருவிக்கு இருக்கின்றது? போராட்டங்களே வாழ்க்கையாகிப்போன எம் மக்களின் இசையும் இப்போது போராடிக்கொண்டிருக்கின்றது ஆதிக்க சக்திகளோடு.

ஆண்மீகத்திற்கு தேவாரம், திருவாசகம், திருவருட்பா, திவ்யபிரபந்தம், மனதை மயக்கும் காவடிச்சிந்து, காதல், வீரம், வாழ்க்கை, போராட்டம் என நாட்டுப்புறப்பாடல்கள், பாரதி, பாரதிதாசனின் சமூக பாடல்கள் என அத்தனையும் இருக்கும் எம் தமிழை துக்கடாவாக்கி வைத்திருக்கும் டிசம்பர் கச்சேரி கும்பலிடமிருந்து மீட்டெடுக்கும் போராட்டம் இப்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்திலே மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் நிறுவிய "பொங்கு தமிழ் பண்ணிசை மணி மன்றம்" சார்பில் தமிழிசை விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன, துக்கடாவாகிப்போன எம் மண்ணின் இசை மீட்கப்பட்டுக்கொண்டிருகின்றது, வழக்கம்போல புரியாமல் தலையாட்டும் டிசம்பர் மாத கச்சேரி கான சபைகளுக்கு பக்கம் பக்கமாக ஒதுக்கும் பத்திரிக்கைகள் தமிழிசை விழாக்களுக்கு துக்கடா இடமே தருகின்றன, இதையெல்லாம் மீறித்தான் தமிழிசை விழாக்கள் இன்று மக்களின் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் நிறுவிய "பொங்கு தமிழ் பண்ணிசை மணி மன்றம்" சார்பில் இந்தியாவிற்கு வெளியே முதன்முறையாக சிங்கப்பூரில் பண்ணிசைப்பெருவிழா நடைபெறவிருக்கின்றது, டிசம்பர் மாதம் 25ம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் காலாங் அரங்கில் நடைபெறும் பண்ணிசைப்பெருவிழாவில் மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

சிங்கப்பூரின் இன்றைய தமிழ்முரசு இதழிலிருந்து விழாவை பற்றிய குறிப்புகள்
தமிழகத்துக்கு வெளியே பொங்குதமிழ்ப் பண்ணிசை மணி மன்றத்தின் பண்ணிசை பெருவிழா வெளிநாட்டில் சிங்கப்பூரில் நடை பெறுவது இதுவே முதல் முறை.நிகழ்ச்சியைப் பற்றி கருத்துரைத்த பிச்சினிக்காடு இளங்கோ, "தமிழ் இசையை முதன்மைப்படுத்துவதே நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். தொன்மைமிகு தமிழ் இசைதான் இன்றைய கர்நாடக இசைக்கு அடிப்படை" என்றார்.

தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம், திருவருட்பா போன்ற பாடல்கள் தமிழிசையில் பாடப்படும், கேட்போரை மயங்கவைக்கும் காவடிச்சிந்து பாடல்கள் அன்றைய நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக இருக்கும். பாரதி, பாரதிதாசன் பாடல்களை திரைப்படப்பாடகி டி.கே.கலா பாடுகிறார், மக்கள் வாழ்க்கையோடு இணைந்த நாட்டுப்புறப் பாடல்களை வைகை பிரபா குழுவினர் பாடுகின்றார்கள். வீரமாமுனிவர் பாடல்கள், குணங்குடி மஸ்தான் மெய்ஞானபாடல்கள் மூலம் திரு இராஜா முகம்மது மெய்மறக்கச் செய்வார். தமிழிசைக்கு முழுக்க முழுக்க தமிழ் இசைக் கருவிகள் பயன்படுத்தப்படும்.

இதுவரை சிங்கப்பூரில் நடைபெறாத புதுமையான இசை நிகழ்ச்சியாகவும் இந் நிகழ்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரின் இன்டர்நேஷனல் மீடியா கன்சல்டன்சி என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் தமிழ் இசை நிகழ்ச்சியில் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பல பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் என்று அந்நிறு வனத்தின் நிகழ்ச்சி நிர்வாகி திரு டேவிட் மார்ட்டின் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச் சீட்டு களுக்கு இன்டர்நேஷனல் மீடியா கன்சல் டன்சி( 6377 1980), புளூ டைமண்ட் உண வகம், கோமள விலாஸ் அல்லது சங்கம் டெக்ஸ்டைல்சுடன் தொடர்பு கொள்ளலாம்.

மருத்துவர் அய்யா இராமதாசுவுடன் மேலும் 15 சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

டிசம்பர் மாத கச்சேரி கும்பலிடமிருந்து தமிழிசையை மீட்டெடுக்கும் மருத்துவர் அய்யா இராமதாசு கலாச்சார சீரழிவு தொலைக்காட்சிகள், திரைப்படங்களிடமிருந்து நாடகத்தமிழையும் மீட்டெடுக்கும் விதமாக "மக்கள் தொலைக்காட்சி"யை உருவாக்கி நடத்திக்கொண்டிருக்கின்றார், மருத்துவர் அய்யா இராமதாசின் தமிழ்ப்பணியும் அடிமைபட்டுப்போன தமிழை மீட்டெடுக்கும் களப்போராட்டமும் வெற்றி முகம் காண ஆரம்பித்துள்ளது, மருத்துவர் அய்யா இராமதாசுவின் இப்பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகின்றேன்.

நேரம் : மாலை 6.00 மணி
நாள் : திங்கள் 25 டிசம்பர் 2006
இடம் : காலாங் அரங்கம், சிங்கப்பூர்

தமிழ் இசைக்காக சிங்கப்பூர் வரும் மருத்துவர் இராமதாசு

இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழ்களில் நாடகத்தை இன்றைய தொலைக்காட்சி, திரைப்பட வியாபார, கலாச்சார சீரழிவுகளிடம் காவு கொடுத்துவிட்டு இருக்கிறோம், இசையையோ கர்நாடக சங்கீதத்திடமும், டிசம்பர் மாத கச்சேரி கான சபைகளிடமும் பறி கொடுத்துவிட்டு அங்கே புரியாத மொழிகள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்க நாமோ அய்யோ தமிழில் பாடுங்கள் என்று கெஞ்சி, கதறிக்கொண்டிருந்தோம், அது தான் துக்கடா பாடுகிறோமே அது போதாதா என்று திமிரெடுக்க பேசிக்கொண்டிருக்கின்றார்கள் அந்த கும்பல். இசையில் தமிழின் இடம் தமிழகத்திலேயே துக்கடாவாகிப்போனது.

தமிழ் மண்ணின் இசை போராட்டங்களுக்கான இசை, வலியோர் தம்மை எதிர்த்து போராடும் சக்தியை அளிக்கும் இசை, ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தூண்டும் இசை, பறை முழக்கம் எழுப்பிவிடும் போராட்ட சக்தி வேறெந்த தோல்கருவிக்கு இருக்கின்றது? கொம்பு முழக்கம் ஏற்படுத்தும் உணர்சி கொதிப்பு வெறெந்த கருவிக்கு இருக்கின்றது? போராட்டங்களே வாழ்க்கையாகிப்போன எம் மக்களின் இசையும் இப்போது போராடிக்கொண்டிருக்கின்றது ஆதிக்க சக்திகளோடு.

ஆண்மீகத்திற்கு தேவாரம், திருவாசகம், திருவருட்பா, திவ்யபிரபந்தம், மனதை மயக்கும் காவடிச்சிந்து, காதல், வீரம், வாழ்க்கை, போராட்டம் என நாட்டுப்புறப்பாடல்கள், பாரதி, பாரதிதாசனின் சமூக பாடல்கள் என அத்தனையும் இருக்கும் எம் தமிழை துக்கடாவாக்கி வைத்திருக்கும் டிசம்பர் கச்சேரி கும்பலிடமிருந்து மீட்டெடுக்கும் போராட்டம் இப்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்திலே மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் நிறுவிய "பொங்கு தமிழ் பண்ணிசை மணி மன்றம்" சார்பில் தமிழிசை விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன, துக்கடாவாகிப்போன எம் மண்ணின் இசை மீட்கப்பட்டுக்கொண்டிருகின்றது, வழக்கம்போல புரியாமல் தலையாட்டும் டிசம்பர் மாத கச்சேரி கான சபைகளுக்கு பக்கம் பக்கமாக ஒதுக்கும் பத்திரிக்கைகள் தமிழிசை விழாக்களுக்கு துக்கடா இடமே தருகின்றன, இதையெல்லாம் மீறித்தான் தமிழிசை விழாக்கள் இன்று மக்களின் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் நிறுவிய "பொங்கு தமிழ் பண்ணிசை மணி மன்றம்" சார்பில் இந்தியாவிற்கு வெளியே முதன்முறையாக சிங்கப்பூரில் பண்ணிசைப்பெருவிழா நடைபெறவிருக்கின்றது, டிசம்பர் மாதம் 25ம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் காலாங் அரங்கில் நடைபெறும் பண்ணிசைப்பெருவிழாவில் மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

சிங்கப்பூரின் இன்றைய தமிழ்முரசு இதழிலிருந்து விழாவை பற்றிய குறிப்புகள்
தமிழகத்துக்கு வெளியே பொங்குதமிழ்ப் பண்ணிசை மணி மன்றத்தின் பண்ணிசை பெருவிழா வெளிநாட்டில் சிங்கப்பூரில் நடை பெறுவது இதுவே முதல் முறை.நிகழ்ச்சியைப் பற்றி கருத்துரைத்த பிச்சினிக்காடு இளங்கோ, "தமிழ் இசையை முதன்மைப்படுத்துவதே நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். தொன்மைமிகு தமிழ் இசைதான் இன்றைய கர்நாடக இசைக்கு அடிப்படை" என்றார்.

தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம், திருவருட்பா போன்ற பாடல்கள் தமிழிசையில் பாடப்படும், கேட்போரை மயங்கவைக்கும் காவடிச்சிந்து பாடல்கள் அன்றைய நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக இருக்கும். பாரதி, பாரதிதாசன் பாடல்களை திரைப்படப்பாடகி டி.கே.கலா பாடுகிறார், மக்கள் வாழ்க்கையோடு இணைந்த நாட்டுப்புறப் பாடல்களை வைகை பிரபா குழுவினர் பாடுகின்றார்கள். வீரமாமுனிவர் பாடல்கள், குணங்குடி மஸ்தான் மெய்ஞானபாடல்கள் மூலம் திரு இராஜா முகம்மது மெய்மறக்கச் செய்வார். தமிழிசைக்கு முழுக்க முழுக்க தமிழ் இசைக் கருவிகள் பயன்படுத்தப்படும்.

இதுவரை சிங்கப்பூரில் நடைபெறாத புதுமையான இசை நிகழ்ச்சியாகவும் இந் நிகழ்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரின் இன்டர்நேஷனல் மீடியா கன்சல்டன்சி என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் தமிழ் இசை நிகழ்ச்சியில் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பல பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் என்று அந்நிறு வனத்தின் நிகழ்ச்சி நிர்வாகி திரு டேவிட் மார்ட்டின் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச் சீட்டு களுக்கு இன்டர்நேஷனல் மீடியா கன்சல் டன்சி( 6377 1980), புளூ டைமண்ட் உண வகம், கோமள விலாஸ் அல்லது சங்கம் டெக்ஸ்டைல்சுடன் தொடர்பு கொள்ளலாம்.

மருத்துவர் அய்யா இராமதாசுவுடன் மேலும் 15 சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

டிசம்பர் மாத கச்சேரி கும்பலிடமிருந்து தமிழிசையை மீட்டெடுக்கும் மருத்துவர் அய்யா இராமதாசு கலாச்சார சீரழிவு தொலைக்காட்சிகள், திரைப்படங்களிடமிருந்து நாடகத்தமிழையும் மீட்டெடுக்கும் விதமாக "மக்கள் தொலைக்காட்சி"யை உருவாக்கி நடத்திக்கொண்டிருக்கின்றார், மருத்துவர் அய்யா இராமதாசின் தமிழ்ப்பணியும் அடிமைபட்டுப்போன தமிழை மீட்டெடுக்கும் களப்போராட்டமும் வெற்றி முகம் காண ஆரம்பித்துள்ளது, மருத்துவர் அய்யா இராமதாசுவின் இப்பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகின்றேன்.

நேரம் : மாலை 6.00 மணி
நாள் : திங்கள் 25 டிசம்பர் 2006
இடம் : காலாங் அரங்கம், சிங்கப்பூர்

கருத்தடை டாட் காம்

பொதுவாகவே பாமரனின் எழுத்தில் நக்கல் நையாண்டி கொஞ்சம் விளையாடும்.... தங்களுடைய ஆதிக்கத்தை தக்கவைக்க எந்த அளவிற்கும் செல்வார்கள் என்பதை சமீபத்திய தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் வெளியிட்ட புள்ளிவிபரத்தை பற்றி விழிப்புணர்வு இதழில் எழுதியுள்ளார் பாமரன், கீற்று இணையதளத்தில் வெளிவந்துள்ள இந்த கட்டுரை உங்களின் பார்வைக்கு.

"பொதுவாக புளுகுகளை இப்படிப் பிரிக்கலாம். ஒன்று : அண்டப்புளுகு. அடுத்து ஆகாசப்புளுகு. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி மாபெரும் புளுகு ஒன்றும் இருக்கிறது. அதுதான் புள்ளிவிவரப் புளுகு."
- காட்கோ வாலிஸ்

மொத்தத்தில் ஒரு இனமே கூட்டம் கூட்டமாக செத்துப் போயிற்றா அல்லது காணாமல் போயிற்றா என்கிற பெரும் குழப்பத்தைத் தோற்றுவிக்கிறது ஒரு புள்ளி விவரம். பல கணித மேதைகளையே விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகின்ற ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டிருக்கிறது தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் அதாவது---

இதை ஒவ்வொரு முறையும் தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் என நீட்டி முழக்க இயலாது. ஆகையால் இனி அது தே.மா.க.க என்று அழைக்கக்கடவதாக. அப்படி என்னதான் புள்ளி விவரத்தைச் சொல்லித் தொலைத்தது அது? என நீங்கள் அவசரப்படுவது புரிகிறது. ஆனால் தே.மா.க.க. கணக்குப்படி ஒன்று நீங்கள் சொந்த செலவில் செத்துப் போனவராக இருக்க வேண்டும் அல்லது எங்காவது தொலைந்து போயிருக்க வேண்டும்.

அதாவது நீங்கள் பிற்படுத்தப்பட்டவர் என்றால்....

ஆம் இந்த ஒரு மாதிரியான கணக்கெடுப்பின் மூலம் அப்புள்ளி விவரம் சொல்வது இதுதான் :

இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை வெறும் 41 சதவீதமோ 31 சதவீதமோ எதுவாயிருந்தால் என்ன?

கிடைப்பது கிடைத்தால் சரி என எவராவது தேமே என்று இருந்தால் வந்தது வம்பு என்ற அர்த்தம்.

ஏனென்றால் இந்தப் புள்ளி விவரம் வெளிவந்திருக்கும் நேரம் அப்படி. நேரம் என்றதும் எந்த ஜோசியக்காரனையும் தேடிக் கொண்டு ஓட வேண்டியதில்லை. சமீப காலமாக உச்ச நீதிமன்றம் உதிர்த்து வரும் முத்துக்களைக் கூர்ந்து கவனித்தால் போதும்.

தே.மா.க.க வின் இந்தக் கண்டுபிடிப்பு வெளிவந்திருக்கும் நேரம் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு அளிப்பதா கூடாதா?

அளிப்பதாக இருந்தால் அந்த 27 ஐயும் 9+9+9 என்று மூன்றாண்டுகளுக்கு பிரித்து அளிக்கலாமா?

அல்லது

3+3+3+3+3+3+3+3+3 என்று ஒன்பதாண்டுகளுக்கு ஜவ்வாய் இழுத்து பிரித்துக் கொடுக்கலாமா?

பிரித்துக் கொடுப்பதற்குள் இருக்கின்ற அரசின் ஆயுள் காலம் முடிந்து விடாதா?

ஒரு வேளை முடிந்து தொலைத்தால் வருகின்ற அரசாவது பிற்படுத்தப்பட்டோருக்கு சரியான விதத்தில் ஆப்பு வைக்கும் அரசாக அமையுமா?

என்று உச்ச நீதி மன்றம் தன் உச்சிக் குடுமியை உசுப்பிக் கொண்டிருக்கிற நேரம் இது.

1931 கணக்கெடுப்பின்படி பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 52 சதவீதம். ஆக இந்தக் கணக்கை முன் வைத்தே 70% இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என்றது காக காலேல்கர் கமிட்டி. 52 சதவீத மக்கள் தொகைக்கு 70% கிடைக்காவிட்டால் போகிறது. ஆனால் கிடைப்பதே 27 சதவீதம்தானே என்று எவரும் அங்கலாய்த்து விடக் கூடாதே என்பதற்காகத்தான் தே.மா.க.க.வின் இந்தப் புதிய கணக்கெடுப்பு இதன்படி பார்த்தால் இருப்பதற்கும் வந்திருக்கிறது ஆப்பு என்பது தான் உள்ளார்த்தம். 52க்கு 27சதவீதம் ஒதுக்கீடு என்றால்... இப்புதிய கண்டுபிடிப்பின்படி 41 சதவீதம்தான் பிற்படுத்தப்பட்டவர்கள் என்கிறபோது கிடைக்கவேண்டியது கூடுமா? குறையுமா? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.

கடைசியாகக் கணக்கெடுத்தது 1931ல். அதுவும் வெள்ளையர்களது ஆட்சிக் காலத்தில், நல்ல வேளையாக சுதந்திர இந்தியாவில் கணக்கெடுப்பு நடக்காதது ஒரு விதத்தில் நல்லதுதான். ஆக நமது கேள்விகளெல்லாம் இதுதான்.

1931ல் 52 சதவீதமாக இருந்த பிற்படுத்தப்பட்டோர் 2005இல் 41 சதவீதமாகக் குறைந்தது எப்படி...?

விவசாயிகளின் ஒட்டு மொத்தத் தற்கொலைகள் மாதிரி பிற்படுத்தப்பட்டோர் எங்காவது கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொண்டார்களா?

(52-41=11) இந்த 11 சதவீத மக்கள் எங்காவது ஒட்டுமொத்தமாகத் தொலைந்து போனார்களா....?

ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுகிறதே என்கிற விரக்தியில் அவர்கள் வந்த கைபர் போலன் கணவாய் வழியாக இவர்கள் எவனாவது வெளியேறிவிட்டார்களா...?

சரி இந்த சர்வே - சப்வே எல்லாம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும்தானா....?

பிற சாதியினரின் கணக்கை யார் முஷாரப்பா வந்து எடுப்பார்....?

கணிப்பொறியின் ஒரு சுவிட்சைத் தட்டினாலேயே கண்ணிமைக்கும் நேரத்தில் கடலில் விழக்கூடிய ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் இந்தியர்களுக்கு இதில் மட்டும் என்ன சிக்கல்...?

ஆனால் அப்படியும் எடுத்தார்கள் ஒரு கணக்கை. இன்றல்ல 1961ல் தலித் மக்களது கணக்கை. அந்தக் கணக்கும் 45 ஆண்டுகளுக்கு முன்னமே 25 சதம் என்று காட்டியது. ஆனால் இன்றுவரை தலித் மக்களுக்கு கிடைத்துவரும் ஒதுக்கீடோ வெறும் 22.5%...

இந்த 22.5 சதவீதத்தையும் எந்த லட்சணத்தில் நிரப்புகிறார்கள் என்பது தெரிந்தவர்கள் இந்த நாடு கடலில் மூழ்கட்டும் என்று மனதார வாழ்த்துவார்கள்.

ஆக இன்றுவரை இந்த சுதந்திர இந்தியாவில் ஆகா ஓகோ என்று ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும்தான். அதனால் அவர்களுக்கு மட்டும் இந்தக் கணக்கெடுப்பு மற்றவர்களெல்லாம் பாவம் மடிப்பிச்சை ஏந்தித்தான் வயிறு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் பார்த்து ஏதாவது அவர்களுக்குக் கூட்டி கொடுத்தால்தான் அவர்கள் வாழ்க்கையில் விடிவு பிறக்கும். என்ன செய்ய...?

இதே தே.ம.க.க.வின் 1999 கணக்கெடுப்பு பிற்படுத்தப்பட்டோர் 35.8% என்கிறது. 1999 இல் இந்தக் கணக்கெடுப்பைக் கண்டுணர்ந்த பிற்படுத்தப்பட்டவர்கள் கருக்கலைப்பு செய்யாமல் பெற்றெடுத்ததன் விளைவு 41%மாக எண்ணிக்கை உயர்ந்ததுதான்.

ஆக ஐந்து வருடத்தில் ஐந்து சதவீத வளர்ச்சியைக் காட்டிய இம்மக்கள் 1931லிருந்து 1999 வரை இப்படி ஏடாகூடமான கருத்தடையைக் கடைப்பிடித்திருக்கக் கூடாதுதான்.

சரி எப்படித்தான் கண்டெடுத்தார்கள் இந்தப் புள்ளிவிவரங்களை என்று கேட்டால் குழப்பத்தில் தே.மு.தி.க.வையும் மிஞ்சிவிடும் போலிருக்கிறது இந்த தே.மா.க.க

79306 நகர்ப்புற வீடுகளிலும்

45377 கிராமப்புற வீடுகளிலும்

இந்த சர்வே நடத்தினோம் என்பவர்களிடம் சர்வே சரி....

எந்த நாட்டில்....

எந்த மாநிலத்தில்....

எந்த நகரத்தில்....

எந்த கிராமத்தில்....

நடத்தினீர்கள்? என்றால் பதிலாக வெறும் காத்துதாங்க வருது.

தங்களது அகண்டபாரதக் கனவில் பிரிக்கப்படாததற்கு முன்பிருந்த இந்தியப் பகுதிகளில் ஏதேனும் நடத்தியிருப்பார்களோ இந்தக் கணக்கெடுப்பை?

வாய்ப்பில்லை.

ஒருவேளை இந்தக் கணக்கெடுத்த மகான்கள் முன்னொரு காலத்தில் ஆடு, மாடு மேய்த்துத் திரிந்த தங்களது பூர்வீக மத்திய ஆசியாவின் கணக்கைத்தான் தவறுதலாக மாற்றிச் சொல்லிவிட்டார்களோ என்னவோ....?
யாமறியோம் பராபரமே.

காட்கோ வாலிஸ்... பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்பெயின் தேசத்தில் வாழ்ந்த புள்ளியியல் நிபுணர் என்று சொன்னால் நீங்களும் நம்பத்தான் போகிறீர்கள். ஆனால் உண்மையில் இந்த காட்கோ வாலிஸ் யாரென்பது எனக்கும் தெரியாது என்பதுதான் உண்மை.

நன்றி
கீற்று

சிலைகளுக்கு வலிப்பதில்லை ஆனால்...

சில நாட்களுக்கு முன் நடை பெற்ற அம்பேத்கார் சிலை உடைப்பு பற்றியும் அதை தொடர்ந்து எழுந்த கலவரங்களும் வலைப்பதிவில் பெரிதான விவாதத்தை ஏற்படுத்தவில்லை, வெகு சில பதிவுகள் மட்டுமே அதைப்பற்றி வெளிவந்தன, இது வழக்கம் போல வெறும் இன்னொரு சிலை உடைப்பு என்றளவிலேயே இங்குள்ள மக்களால் எடுத்துக்கொள்ளப்பட்டதோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது, ஆனால் இது வெறும் இன்னொரு சிலை உடைப்பு அல்ல, சமூகம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்த/செய்கின்ற அநீதிகளுக்கு கொடுக்கும் விலை, இந்த சமூக அமைப்பு மாறதவரை இந்த மாதிரியான விலைகளை நாம் கொடுத்துக்கொண்டே இருப்போம், இது கலவரமல்ல, இது ஒரு எதிர் கலவரம், சமூகம் தொடுத்த தாக்குதலுக்கு ஒரு சிறிய பதிலடி, பொதுவாக இது மாதிரியான நிகழ்ச்சிகளின் போது வெகுசன ஊடகங்கள் மிக மேலோட்டமான ஒரு செய்தியையும் கட்டுரையையும் அளிக்கும், ஆனால் ஜீனியர் விகடனில் ஜென்ராம் அவர்கள் எழுதிய கட்டுரை ஒரு புதிய கோணத்தை மக்களுக்கு எடுத்து சென்றிருக்கும், அந்த கட்டுரையின் சில கருத்துகளில் எனக்கு மாறுபாடு இருந்தாலும் அந்த கட்டுரையை இங்கே பதிவிடுகின்றேன், ஜீனியர்விகடனில் வெளியாகும் ஜென்ராமின் கட்டுரைகள் மிக ஆழ்ந்த சிந்தனைகளோடும் பிரச்சினையின் உண்மையான காரணங்களையும் பேசுகின்றது. ஜென்ராம் நமது சக வலைப்பதிவாளரான ஸ்டேஷன் பெஞ்ச் ராம்கி அவர்களுக்கு வாழ்த்துகள்.

வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட கப்பலில் ஒரு சிறிய தீப்பொறி விழுந்தாலே போதும்; கப்பல் எரிந்து சாம்பலாகிவிடும். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சில தலித் இளைஞர் களின் மனநிலையும் கிட்டத்தட்ட அந்தக் கப்பலின் நிலையில் இருந்திருக்கிறது. அதனால்தான் உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் கான்பூரில் உள்ள அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட செய்தி வந்தவுடன், மகாராஷ்டிர மாநிலத்தின் பல நகரங்களில் வன்முறை வெடித்திருக்கிறது. இரண்டு ரயில்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. ஏராளமான பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கும்பலைக் கலைப்பதற்கு காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலியாகியிருக்கிறார்கள்.


"ஒரு சிலைக்கு ஏற்படுத்தப்படுகின்ற சேதம் பெரும் வன்முறைக்குக் காரணமாகலாமா? பெரும் கலவரத்துக்குக் காரணமாகும் அளவுக்கு சிலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா?" &நகர்ப்புறத்தில் இருக்கும் பெரும்பாலான படித்த, நடுத்தர மக்களின் கேள்வி இதுவாகத் தான் இருக்கிறது. "தேர்தல் வந்துவிட்டால் பகுத்தறிவு, சமதர்மம், தர்க்க நியாயம் என்ற அனைத்துப் பண்புகளும் காற்றில் கரைந்து காணாமல் போய்விடுகிறது... மக்களுக்கு முக்கியமில்லாத ஒரு பிரச்னையை மிகவும் அவசியமான ஒரு பிரச்னையாகப் பெரிதாக்கி, கொந்தளிக்கும் நிலையை அரசியல்வாதிகள் உருவாக்கி விடுகிறார்கள்" என்ற கருத்தும் அவர்களிடம் பரவலாக உள்ளது. இந்த எண்ணம் தற்போது ஊடகங்கள் மூலமாக சாதாரண மக்களிடத்திலும் படிப் படியாக வேகமாகப் பரவி வருகிறது. இதில் உண்மை இல்லை என்று எப்படி முழுமையாக உதறித் தள்ளிவிட முடியாதோ அதேபோல் இந்தக் கருத்தை முழுமையாக அப்படியே ஏற்றுக் கொள்வதும் இயலாது.

முதலில் சிலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியைப் பலர் முன்வைக்கிறார்கள். சோவியத் யூனியன் சிதறும்போது ஆங்காங்கே இருந்த லெனின் சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இராக்கில் பாக்தாத் நகரம் அமெரிக்க ஆங்கில கூட்டுப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன், சில இராக்கியர்கள் சதாம் உசேனின் சிலையை அகற்றினார்கள். ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலையைத் தாலிபான்கள் தகர்த்தார்கள். ‘பண்பாட்டுப் புரட்சி’ என்ற பெயரில் காந்தி சிலைகளுக்கு இடதுசாரி தீவிரவாதிகள் குண்டு வைத்தனர்.

சென்னையில் ஓர் ஆட்சியில் அகற்றப்பட்ட கண்ணகி சிலை, அடுத்த ஆட்சியில் மீண்டும் நிறுவப்பட்டது. தாங்கள் வணங்கும் தெய்வங்களின் சிலைகள் சிலருக்கு முக்கியம். அதேபோல சில வரலாற்று நாயகர்களின் சிலைகள் வேறு சிலருக்கு முக்கியம். ஏனெனில், தாங்கள் மானத்துடனும் மரியாதையுடனும் வாழ்வதற்கான அடித்தளத்தை இந்தத் தலைவர்கள்தான் போராட்டங்களின் மூலமாகப் பெற்றுத் தந்தார்கள் என்று மக்கள் அவர்களைப் போற்றுகிறார்கள்.

சிலைகளுக்குச் சேதம் ஏற்பட்டால் கலவரம் வெடிக்கிறது. எனவே சிலைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் காவல்துறை பாதுகாக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் ஏராளமான சிலைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது காவல்துறைக்கு கடினமான செயல் என்பதால், சிலைகளை எல்லாம் ஊருக்கு வெளியே ஒரு பொதுவான இடத்தில் வைக்கலாம் என்று சிலர் யோசனை சொல்கிறார்கள். ஆனால், இவர்கள் வாழ்ந்து மறைந்த அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களுடைய சிலைகளுக்கு மட்டுமே இத்தகைய பரிந்துரையை வழங்குகிறார்கள். அனைத்து மத கடவுள்களின் சிலைகளையோ அல்லது வழிபாட்டுத் தலங்களையோ ஊருக்கு வெளியே ஒரு பொதுவான இடத்தில் கட்டி பாதுகாப்பளிக்கலாம் என்று இவர்கள் பேசுவதில்லை.

கான்பூரில் சேதப்படுத்தப்பட்ட சிலைக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் ஏன் கலவரம் நடக்கிறது? தொழில்துறையில் வளர்ச்சி பெற்ற இந்திய மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரம் என்றழைக் கப்படும் மும்பை, இந்த மாநிலத்தின் தலைநகர். அதிக அளவிலான முதலீடும், தொழில் வளர்ச்சியும், அதிசய உலகங்களும் இந்த மாநிலத்தில் உள்ளன. இருந்தும் இங்கு அவ்வப்போது நிகழும் வன்செயல்கள் இதுபோன்ற வளர்ச்சியைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. இந்த மாநிலத்தில் உள்ள தலித் மக்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நன்றாக அறிந்து கொள்கிறார்கள். சட்டங்கள் எத்தனை வந்தாலும் நடைமுறையில் இன்னும் தாங்கள் மற்றவர்களுடன் சமமாக நடத்தப்படவில்லை என்ற புரிதல் அவர்களுக்கு இருக்கிறது. இந்த அறிவு அவர்களிடம் அடக்கப்பட்ட கோபமாக எப்போதும் கனன்று கொண்டே இருக்கிறது.

கடந்த 2006-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று மகராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவியான சுனிதா பாபுராவ் என்ற பெண்மணியால் அவரது கிராமத்தில் தேசியக் கொடியை ஏற்ற முடியவில்லை. இவர் பிறப்பால் தலித் என்பதே இதற்குக் காரணம். இப்படி ஏற்கெனவே சமூகரீதியாக பல பிரச்னைகளைச் சந்தித்து வரும் தலித் இளைஞர்களிடம், அரசாங்கத்தின் செயலற்ற தன்மை அல்லது அரசாங்கத்தின் ஒருபக்க சார்பு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயல்பான கோபத்தை ஜனநாயகரீதியில் பிரதிபலிப்பதற்கு தலித் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் அரசியல் தலைமை தவறுகிறது. மற்ற அரசியல் கட்சிகளைப் போலவே தலித் அரசியல் கட்சித் தலைமையிலும் சுயநலமும் சந்தர்ப்பவாதமும் தலைதூக்கியுள்ளன. இதன் காரணமாக தலித் இயக்கம் பல குழுக்களாகப் பிரிந்து நிற்கின்றன. வழிகாட்டுவதற்கு சரியான தலைமை இல்லாத நிலையில், இளைஞர்கள் தங்கள் கோபத்துக்கு வடிகாலாக வன்செயல்களில் இறங்குகிறார்கள்.

மகாராஷ்டிர மாநிலத்தின் நகரங்களில் நடந்தவை மட்டுமே வன்முறை அல்ல. கான்பூரில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதும் ஒரு வன்செயலே. எவ்வளவுதான் நியாயமான காரணங்கள் இருந்தாலும் வன்முறையை ஒரு வழிமுறையாக நாகரிக சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாது. நியாயமில்லாத நிலைப்பாட்டில் இருப்பவர்களே முதன்முதலில் வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள். ஒரு சக மனிதனை ஆயுதத்தால் தாக்குவது மட்டுமே வன்முறை அல்ல; அவனை சாதி, மதம், மொழி, இனம், பொருளாதார நிலை போன்ற எந்தக் காரணம் கொண்டும் வெறுப்பதும் வன்முறைதான். அப்படி மனதளவில்கூட வன்முறை எண்ணம் இல்லாமல் இருப்பதே அஹிம்சை தத்துவத்தின் உயிர்நாடி.

மக்கள், சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதை எந்த அரசாங்கமும் அரசமைப்புச் சட்டமும் ஆதரிப்பதில்லை. மிகுந்த நம்பிக்கையோடு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளில் சிலர்கூட ஆளுவோருடன் அணி சேர்ந்து நிற்கும்போது, அவர்களது கவனத்தைத் தங்கள் பிரச்னைகளின் பக்கம் இழுப்பதற்கு வன்முறையைத் தவிர வேறு வழியில்லை என்று கருதி விடுகிறார்கள். ஒருவேளை, வன்முறை மூலம் சமூகத்தில் நீதி நிலைநாட்டப் பட்டாலும் அது அநீதியான முறையில் கிடைத்த நீதியாகவே கருதப்படும். வன்செயலும் கலவரமும் அராஜகமும் யாரால் நிகழ்த்தப்பட்டாலும் அவை கண்டிக்கத்தக்கவையே. ஏனெனில், ஒரு சமூகத்துக்கு வன்முறையால் கிடைக்கும் நன்மை தற்காலிகமானது; ஆனால், அதனால் சமூகத்துக்கு இழைக்கப்படும் தீங்கோ நிரந்தரமானது!

செல்போன் விற்கும் கைப்புள்ள - 1



சங்கத்து சிங்கமெல்லாம் கைப்புள்ள தலைமையில் சங்கத்தில் ஒன்று கூடுகின்றனர்.

சங்கத்து சிங்கம் 1: தல என்ன தல கூப்புட்டிங்க, சொல்லு தல ரெண்டுல ஒண்ணு பாத்துடுவோம்

கைப்புள்ள: யேய் யேய் என்ன என்ன இப்போ ஓவரா சலும்புற, தல நான் இருக்கன்ல, ஏன் வாலு ஆடுது?

ச.சி. 1:(சசினு படிச்சிப்புடாதிங்கப்பு, சங்கத்து சிங்கத்தத தான் சுருக்கி ச.சி. அப்புடினு சொல்றோம், நல்லா பாருங்கப்பு "ச"க்கும் "சி"க்கும் நடுவுல புள்ளிவச்சிருக்கு) ஸாரி தல, தல நீயே சொல்லு தல

கைப்புள்ள: ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா, முடியலைடா இந்த சங்கத்தை வச்சிக்கிட்டு மாரடிக்க முடியலை, இப்போலாம் நாம காட்டுற படத்தையும் எவனும் பாக்க மாட்டேங்குறானங்க, அதான் நம்ம சங்கத்து சிங்கங்க ஒங்களை நம்பி ஒங்களை நம்பி

ச.சி.2: எங்களை நம்பி கட்சி ஆரம்பிக்கப்போறிங்களா?

கைப்புள்ள: அஹ்ஹ்ஹா அஹ்ஹா, நீ ஒருத்தனே போதும் டா, என்னிய குளோஸ் பண்றதுக்கு என்னிய குளோஸ் பண்றதுக்கு

ச.சி.1 : அப்போ வேற என்னதான் தல, சீக்கிரம் சொல்லுங்க

கைப்புள்ள: சங்கத்து சிங்கங்க ஒங்களை நம்பி செல்போன் கடைவைச்சி பிசுனஸ் பண்ணப்போறேன் டா பிசுனசு

ச.சி.2: சூப்பர் தல, சூப்பர், ஆமா எனக்கு ஒரு சந்தேகம்

கைப்புள்ள: சொல்றா சொல்றா சொல்றா

ச.சி.2: தல ஏற்கனவே நம்மூர்ல 4 செல்போன் கடை இருக்கு, ஒருத்தரு கேமரா செல்போனை விக்குறாரு, ஒருத்தரு கேமராவோட வீடியோவும் சேத்து விக்குறாரு, இன்னொருத்தரு ரேடியோ செல்போன் விக்குறாரு, ஒரு அக்கா வெறும் சொல்போனை விக்குது, நீங்க எப்புடி தல விக்கப்போறிங்க

கைப்புள்ள: வாடா என் வென்று தல இதை கூட யோசிக்காம இருப்பனா? இப்போ கேமரா செல்போனு வெல அதிகம், வீடியோ செல்போனு வெலையும் அதிகம், வெயிட்டும் அதிகம், ரேடியோ செல்போனு ரேடியோ கேக்குறவங்க மட்டும்தேன் வாங்குறாங்க, இந்த அக்கா விக்குதே செல்போனு அதுல ரிஜப்சன் ரொம்ப கம்மி, அது மட்டுமில்லை, அந்த கேமரா செல்போன்காரனை புடிக்காதவங்கள்ளாம் இந்த அக்கா கடைக்கு தான் வருவாங்க.

ச.சி.1: சரி தல அது இருக்கட்டும் நம்ம செல்போனை எப்படி விக்கப்போறோம், எல்லாருமே ஏதோ ஒரு குருப்பை கவர் பண்ணிட்டாங்களே, நீங்க என்ன பண்ணப்போறிங்க

கைப்புள்ள: செல்போன் எதுக்கு? எதுக்கு?

ச.சி.1:எதுக்கு தல

கைப்புள்ள: ஹைய்யோ ஹைய்யோ, இது கூட தெரியலையா, செல்போன் பேசுறதுக்கு.

ச.சி.2(மனதினுள்): ஆகா தலைக்கு ஏறிடுச்சி டோய், இனி பிச்சி ஒளறப்போவுது.

கைப்புள்ள: ஹேய் என்ன என்ன லுக்கு

ச.சி.2: ஒண்ணுமில்லை தல நீங்க சொல்லுங்க

கைப்பு: ஆங்.... அது....அந்த செல்போன் விக்குற எதுலயுமே ரிஜப்ஷன் சரியில்லை, எல்லா செல்போனும் வெயிட்டு அதிகம், வெலையும் அதிகம்.

ச.சி.1: தல சூப்பர் தல

கைப்பு: இப்போ நாம மத்த செல்போனை விட வெயிட்டு கம்மியா, நல்ல ரிஜப்ஷன் வர்றமாதிரி, வெலையும் கம்மியா செல்போன் விக்கப்போறோம். எப்புடி நம்ம ஐடியா?

ச.சி.2: தல சூப்பர் தல, ஆனா அப்புடி ஒரு செல்போன் வச்சிருக்கியா தல

கைப்பு: அது எவன்கிட்ட இருக்கு, அரைலோடு செங்கக்கட்டி தான் இருக்கு

ச.சி.1: தல செல்போனு இல்லைனா எப்புடி தல விப்ப

கைப்பு: சும்மா அப்புடி சொல்லி செங்கக்கட்டிய வித்துட்டா அப்புறம் 50 வருசத்துக்கு எவனும் நம்ம கடையை உட்டு வேற கடையில வாங்கமாட்டான்.

ச.சி.2: சூப்பர் தல சூப்பர், தல இப்புடி கலக்குறிங்களே, எல்லாம் அண்ணி ஐடியா தானே?

கைப்பு: டாய் யார்ராவன், நீ என்ன கட்டதொரை ஆளா? ஒனக்கும் கட்டம் சரியில்லை சொல்லிப்புட்டேன், ஆமாம், "வாழ்க்கையில எல்லா வகையிலும் துணையா நிக்கற மனைவிக்கிட்ட ஐடியா கேட்காம வேற ஒருத்தர் கிட்ட எப்படி ஐடியா கேட்க முடியும்? இதுக்காக ஒரு வைப்பாட்டியை ஏற்பாடு பண்ணி ஐடியாகேட்க முடியுமா இல்ல வேற பொண்ணுங்க கிட்ட ஐடியா கேட்க முடியுமா?..."

கைப்பு சொல்லி முடிக்கும் முன் கைப்பு மூஞ்சியில மேல இருந்து இரண்டு அழுகிய தக்காளி வீசப்பட்டது, கொஞ்சம் ஆளுங்க கோபத்தோடு கத்த


கைப்பு: ஏய் ஏய் யாரு அது மேல இருந்து எம்மேல தக்காளி எறியறது? ஹேய் ஹேய் வேணாம் அழுதுடுவேன், நான் சொன்னா மட்டும் எல்லாம் கோவப்படுறிங்க, நம்ம கேப்டன் விஜயகாந்த்தும் இதைத்தானே சொன்னாரு

கேப்டன் விஜயகாந்த் பெயரை சொன்னவுடன் கூட்டம் அமைதியாக.

கைப்பு: (மனதினுள் ஆங் கேப்டன் பேரை சொன்னாதான்பா அடங்குறாங்க) ராஸ்கல்ஸ் என்ன இது சின்னபுள்ளத்தனாமா? மேல எறிஞ்சிக்கிட்டு, அதை கையில குடுங்க சூசு வச்சி குடிக்கிறேன், இல்ல சட்னி அரைச்சு சாப்புடறேன்,

(கூட்டம் அமைதியானதை பார்த்து கேப்டன்ங்கற பெயரை தானும் வைத்துக்கொள்ளனும்னு கைப்புவுக்கு ஆசை வந்துடுச்சி.)

கைப்பு: என் சங்கத்து சிங்கங்களா, இனிமே என்னை தல தலனு கூப்புடாதிங்க, சிலுக்குவார்பட்டி கிட்டிப்புள்ளு டீம் கேப்டனா இருந்ததால எல்லாருமென்னை கேப்டன் கேப்டன்னு கூப்புடுங்க

ச.சி.1: சரி தல, ஸாரி ஸாரி, சரி கேப்டன்.

கைப்பு என்கிற கேப்டன்: அஹ்ஹா அஹ்ஹா, நாளைக்கு எல்லாம் மதுர மார்க்கெட்டுக்கு வந்துடுங்க, அங்கே தான் நம்ம கடையை ஆரம்பிக்கறோம்.....

பின்குறிப்பு:
மக்களே நாளைக்கும் மறக்காம இங்க வந்துடுங்க, நம்ம கேப்டன் கைப்பு செல்போன் விக்கபோறது நேரடி கவரேஜ் பாக்கலாம்

பொய் சொல்லும் விஜயகாந்த், பாராட்டும் இட்லிவடை

இட்லிவடை பதிவில் விஜயகாந்த் பத்திரிக்கைகளுக்கு அளித்திருந்த பேட்டியை படித்தேன்.

அதில் ஒரு கேள்வி பதில்.

கே:- உங்கள் திருமண மண்டபம் இடிப்பு பற்றி நீங்கள் கட்சி தொடங்கும் முன்பே தகவல் சொல்லி விட்டதாக டி.ஆர்.பாலு கூறி விட்டரே?

ப:- அது தவறான தகவல். நான் கட்சி தொடங்கும் முன்பு கூறி இருந்தால் கலைஞரையே நான் பார்த்து இருப்பேன். டி.ஆர்.பாலு சொல்வது பொய்.என் திருமண மண்டபத்தில் எந்த அளவு இடிப்பு ஏற்படும் என்று முறையாக கேட்டும் இதுவரை பதில் சொல்லவில்லை.

கேப்டன்(?!) விஜயகாந்த் செப்டம்பர் 19, 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கினார், அதற்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பே நெடுஞ்சாலை விரிவாக்க பணித்தொடர்பாக அவரது மண்டபமும் அதனோடு சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்களும் இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன் பிறகு 2005 மே மாதத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியுடன் விஜயகாந்த் ஒரு சந்திப்பு நடத்தினார், இது தொடர்பாக மே 30, 2005 அன்று இரண்டு காந்த்களும் இரண்டு மண்டபங்களும் என்று ஒரு பதிவெழுதியிருந்தே.

அதிலிருந்து சில வரிகள் (நினைவில் கொள்ளுங்கள் கீழ் கண்ட வரிகள் எழுதப்பட்டது மே-30, 2005)


நெடுஞ்சாலைத்துறை மண்டபத்தை கையகப்படுத்தும்போது இடிக்கும் போது ஒரு பெரிய
மறியல் போராட்டம் நடத்தி மிக அட்டகாசமான ஒரு ஓப்பனிங்கோடு அரசியலுக்கு
வந்திருக்கலாம், தவறவிட்டுவிட்டீர்களே விஜி.



கட்சி தொடங்கியது செப்டம்பர் 14, 2005 மேற்கண்ட பதிவு எழுதப்பட்டது மே 30, 2005, மண்டபம் இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு கலைஞருடன் சந்திப்பு மே 2005ல் நடந்துள்ளது.

ஆனால் இப்படி கூசாமல் ஒரு பொய்யை சொல்லியுள்ளார் விஜயகாந்த், இப்படிபட்ட பதில்களை பாராட்டி இட்லிவடை நல்ல பதில்கள், நிச்சயம் இவர் வரவேண்டும் என்று நினைக்கிறேன் என்று சான்றிதழ் வேறு வழங்கியுள்ளார். பாவம் இட்லிவடை ஒலகம் அறியாத(?!) புள்ளையா இருக்கார்.

சிறுவர் போர்னோகிராபி

நீண்டு போன நேற்றைய இரவில் டிஸ்கவரி சேனலில் நம்மோடு பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் உயிரினங்களைப் பற்றிய படங்களை பார்த்துக்கொண்டிருந்தபோது சட்டென்று அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒரு அதில் வந்த ஒரு விளம்பரம்,அது சிறுவர் போர்னோகிராபி பற்றிய விளம்பரம். அதில் சில புள்ளிவிபரங்கள்.

* கடந்த பத்து ஆண்டுகளில் சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் இணையத்தில் 1,500% அதிகரித்துள்ளது.

* இன்றைய அளவில் ஒரு இலட்சம் சிறுவர் போர்னோகிராபி தளங்கள் இணையத்தில் உள்ளன, வருங்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும்.

* சிறுவர் போர்னோகிராபி தளங்களில் ஒரு நாளைக்கு இருபதாயிரம் சிறுவர்கள் வரை காண்பிக்கப்படுகின்றனர்.

* ஒவ்வொரு வாரமும் நான்கு முதல் ஐந்து வரையான புதிய சிறுவர்கள் வருகின்றனர்.

* The victims keep getting younger

* அத்துமீறல்கள் மேலும் மேலும் மோசமடைகின்றன.

* சிறுவர் போர்னோகிராபியில் பயன்படுத்தப்படுபவர்களின் சராசரி வயது ஒன்பது

* மூன்று வயதிற்கு குறைந்த குழந்தைகளும் இதில் பாதிக்கப்படுகின்றனர்.

* ஆன்லைன் சிறுவர் போர்னோகிராபி ஒரு மல்ட்டி பில்லியின் டாலர் வியாபாரம், இது ஆன்லைன் இசை விற்பனையை விட பல மடங்கு அதிகம்.

இந்த விளம்பரத்தில் உங்களின் பணம் எங்களுக்கு தேவையில்லை, உங்களது ஆதரவே எங்களுக்கு தேவை என்று கோரிக்கை வைக்கின்றனர்.

நம் ஆதரவை காண்பிக்க lightamillioncandles.com என்ற இணையதளம் சென்று ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்.

விளம்பரப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இட்லிவடை கருத்து கணிப்பு முடிவுகள்

கள்ள ஓட்டு, இலவசத்துக்கு ஓட்டு, காசுக்கு ஓட்டு, வன்முறை ஓட்டு, சாதி ஓட்டு, அந்த சாதிக்கு எதிர் ஓட்டு, கட்சி ஓட்டு, அந்த கட்சிக்கு எதிர் ஓட்டு, கூட்டணி ஓட்டு, சொந்தக்காரங்க ஓட்டு, தெரிஞ்சவங்க ஓட்டு, புடிச்ச ஆளுக்கு ஓட்டு, புடிக்காத ஆளுக்கு எதிர் ஓட்டு இந்த ஓட்டெல்லாம் அரசியல் கட்சிகள் பங்கு பெறும் படிக்காத சிந்திக்காத மக்களுக்குத்தான் என்று நம்புவோம், படித்த, பண்பான, உலக அரசியலையே அலசிப்போடும் சிந்தனை செல்வங்கள் நிறைந்த வலைப்பதிவுலகில், இங்கே "மனசாட்சி" ஓட்டு மட்டும் தான்னு சொல்லத்துடிக்குது மனசு.

இட்லிவடை வலைப்பதிவை பற்றிய கருத்து கணிப்பில் இட்லிவடையின் பதிவு சூப்பர் பதிவு என்று 45% வாக்குகள் விழுந்துள்ளன, அதாவது பதிவான 272 வாக்குகளில் 123 வாக்குகள் இட்லிவடையின் வலைப்பதிவு சூப்பர் என வாக்களித்துள்ளனர். அவருக்கு எம் மனமார்ந்த வாழ்த்துகள்.... மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

வாக்கு விவரங்களை இந்த சுட்டியில் காணலாம்



இந்த கருத்துக்கணிப்பிற்கு இவ்வளவு பேர் ஆர்வமாக வந்து வாக்களித்தமைக்கு நன்றி, இந்த ஆதரவு மேலும் மேலும் இது போன்ற வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்கிற ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

உங்களின் பேராதரவிற்கு நன்றி.... எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வாக்குப்பதிவிற்கு தன் மேலான ஆதரவையும் அளித்து, விளம்பரமும் அளித்த வலைப்பதிவர் இட்லிவடைக்கு என் மேலான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.