தேவடியா மவனே, இழிபிறவி, நாகரிகம், விளிம்புநிலை இன்ன பிற
சிந்து சமவெளி நாகரிகம், மஞ்சளாற்று நாகரிகம், நைல் நதி நாகரிகம் எல்லா நாகரிகத்தையும் விட இப்போ பேசிக்கிட்டு இருக்காங்களே இங்கே நாகரிகம் நாகரீகம் இருக்கே சாமி தாங்கலைடா.... நாகரிகம்னு எதை எதையெல்லாம் சொல்கிறார்கள்.... வழக்கம் போல வெகு சன ஊடகங்களினால் கட்டமைக்கப்பட்டுள்ள அதே பாசாங்கு நாகரிகம், போலித்தன நாகரிகம் இங்கேயும், வார்த்தைகளில் மட்டும் நாகரிகம் இருந்தால் போதும் ஆனால் கருத்தில் இருக்கத்தேவையில்லை இது தான் பச்சை நாகரிகம் இங்கே, "இழிபிறவி" என்று மூத்த பதிவர்கள், வயசில் மூத்த பதிவர்கள் இன்ன பிற நாகரிக கணவான்கள் எல்லாம் எழுதலாம் தப்பில்லை, அதில் எந்த தரக்குறைவும் இல்லை, ஆனால் தேவடியா மவனே என்பது ஆபாசம் அநாகரிகம்.... இழிபிறவியும் தேவடியாமவனேயும் ஒரே பொருள் தானே இந்த எழவில் இழிபிறவி எப்படி நாகரிகமானது, இழிபிறவி நாகரிகமான எழுத்தாக இருக்கும் போது தேவடியாமவனே மட்டும் எப்படி அநாகரிகமானது, வரிக்கு வரி இழிபிறவி என்ற எழுத்துக்களை படிக்கும்போது அதை எப்படி எந்த வித உறுத்தலும் இல்லாமல் படிக்க முடிகிறது? தேவடியாபையா என்ற எழுத்திற்கு எத்தனை அருவெருப்பு படுகிறோமோ அதே அருவெறுப்பு எப்படி இழிபிறவி என்ற எழுத்துகளுக்கு படாமல் நம்மால் தாண்டிப்போக முடிகிறது? எப்படியாக இந்த கட்டமைப்பு உருவானது?
திருநங்கைகளிடம் அசிங்கமாக ஆபாசமாக பார்த்து, பேசி இடுப்பில் கைவைக்கும் கணவான்களை "நண்பரே நீங்கள் செய்வது மிக தவறான செயல், தாங்கள் இப்படியெல்லாம் செய்யக்கூடாது, காந்தியை நினைத்து பாருங்கள், ஸ்ரீராமபிரானை நினைத்து பாருங்கள் அவர்களெல்லாம் எத்தனை ஒழுக்க சீலர்கள், தாங்கள் ஏன் இப்படி தவறுசெய்கிறீர்கள், நாங்களும் மனிதர்கள் தானே, எங்களை மட்டும் ஏன் இப்படி கேவலப்படுத்துகிறீர்கள்" என்று கதாகாலாட்சேபம் செய்தால் அது நாகரிகம் அப்படித்தானே?, அந்த நிலையில் இப்படியான கதாகாலாட்சேபம் செய்ய இயலுமா? "அடிங்கோ தேவடியாபயலே..." என்று வாயில் வருமா? சே... சே.... என்ன இருந்தாலும் அநாகரிகமாக கை வைத்தவனை அதைவிட அநாகரிகமாக தேவடியாபயலே என்று திட்டுவது அநாகரிகத்திலும் அநாகரிகம் என்று சொல்கிறோம், ஒரு வேளை "இழிபிறவி" என்று அறிவுறுத்தியிருந்தால் நாகரிகமாக இருந்திருக்குமோ?
ஏற்கனவே சமூகத்தில் தவறாக உருவகப்படுத்தப்படிருக்கும் திருநங்கைகளை அவர்கல் எல்லாம் பாலியல் தொழில் செய்து பெண்களை வைத்து தொழில் நடத்துகிறார்கள் என்று மொத்தமாக சாணியடித்தால் சாணியடிப்பவரின் ஒழுக்கத்தையும் சந்தி சிரிக்கத்தான் வைப்பார்கள். இதில் என்ன அநாகரிகம்? திருநங்கைகளுக்காவது சமூகத்திலிருந்து ஒதுக்கல், படிப்பு, தொழில் இன்ன பிற என்று எந்த ஒத்துழைப்பும் கிடைக்காமல் சோற்றுக்கே வழியின்றி வேறு வழியின்றி பாலியல் தொழிலில் சமூகமே தள்ளிவிடுகிறதென்றால் கன்னட பிரசாத் போன்றவர்களின் 'தொழில்' மூலாதாரமாக இருக்கும் சிலர் இலட்சக்கணக்கில் வாங்கியவர்களுக்கும்/வாங்குபவர்களுக்கும் என்ன விளிம்புநிலை பிரச்சினை? திருநங்கைகளை பாலியல் தொழிலாளிகளாக மட்டுமே பெரும்பாலும் திரைப்படங்களிலும் காட்சி ஊடகங்களிலும் காண்பிப்பவர்கள் கன்னட பிரசாத் போன்றவர்களின் 'தொழில்' மூலாதாரமான அரிதாரங்களை அப்படி ஒரு படத்திலாவது காண்பித்திருப்பார்களா? காண்பித்துவிடத்தான் முடியுமா? திருநங்கைகள் என்றால் லிவிங் ஸ்மைல் மட்டும் வலைப்பதிவில் வந்து சவுண்டு விடுவார், மிஞ்சி மிஞ்சி போனால் விகடனிலோ ரிப்போர்ட்டரிலோ ஒரு கட்டுரை ஆவேசமாக வரும், ஆனால் சில அவர்களை காண்பித்தால் செருப்படி அல்லவா விழும், திரைப்படத் தொழிலே செய்ய முடியாதே, சோத்துக்கே சிங்கியடிக்கும் நிலைமையாகிவிடும், அதனால் பொத்திக்கொண்டு போக வேண்டியது தான்.
உங்களுடைய(நம்முடைய) நாகரிக கையேட்டையும், நாகரிக பேச்சுகளையும் உங்களுக்கு (நமக்கு) சமமான அல்லது உங்களுக்கு (நமக்கு) மேலிருப்பவர்களிடம் காண்பிக்கலாம், ஆனால் புறக்கணிப்பின் உச்சத்தில் இருப்பவர்களிடமும் விளிம்புநிலை மனிதர்களிடமும் தயவு செய்து உங்கள் நாகரிக கையேட்டையும் அளவுகோலையும் தூக்கிக்கொண்டு ஓடாதீர்கள், நாகரிக கையேட்டை தூக்கிக்கொண்டு அவர்களிடம் ஓடும் முன் அவர்களிடத்தில் உங்களை வைத்து பாருங்கள்..... அந்த நிலையில்
நீங்களோ நானோ இருந்தால் அதையும் விட அநாகரிகமாக பேசுவோம் என்பதை மறந்துவிட வேண்டாம்.
தொடர்புடைய சுட்டிகள்
பத்தினி பதிவிரதை ராதிகா R. சரத்குமாரும், பாதக அலிகளும்
விளிம்புநிலை மாந்தர்களும் ஊடகச் சார்புநிலைகளும்!





