தமிழ் படைப்பாளிகள் என்னும் திமுக ஃபேஸ்புக் அணி

தமிழ்ப் படைப்பாளிகளும் கல்வியாளர்களும் என்ற பெயரில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையும் என் எதிர்வினையும்.

இனி அறிக்கைக்கான என் எதிர்வினை சிவப்பு வண்ணத்தில்...

ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போது எல்லாம் முந்தைய ஆட்சியின் திட்டங்களை மாற்றுவது வழக்கமாகிவிட்டது. காப்பீட்டுத் திட்டத்தை மாற்றுவது, இலவசத் திட்டங்களை நிறுத்தி வைப்பது அல்லது பெயரை மாற்றுவது, தலைமைச்செயலகத்தை அரசு மருத்துவமனையாக அறிவிப்பது என்று தொடரும் திட்டங்களில்

SO WHAT?
ஊழலுக்காக அதுவும் இதற்க்கு முன் ஒரு பாலிசி கூட இல்லாத ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்க்கு பல்லாயிரம் கோடி இன்சூரன்ஸ் பாலிசியாக மக்கள் வரிப்பணத்தை கொடுத்து கொள்ளையடிக்க தரப்பட்ட காப்பீட்டு ஊழல் திட்டத்தை மாற்றுவதும், விதான் செளதா போன்று ஐகானிக் கட்டிடமாக இருக்கபோகின்ற தலைமை செயலகத்தை ஊழலே செய்தாலும் குறைந்த தமிழ், திராவிட கட்டட கலையையாவது கொண்டிருக்குமேயென்று பார்த்தால் தண்ணி தொட்டி போன்ற இந்த தலைமைசெயலகத்தையும் மாற்றும் செயலுக்காகவெல்லாம் பொங்கி போராட தேவை இல்லை.

தமிழ்ப் படைப்பாளிகளும் கல்வியாளர்களும். என்று அறிக்கையின் அடியில் இருக்கின்றதே, இவர்களெல்லாம் யார்? யார்? இந்த அறிக்கையில் சிலபகுதிகளை ஏற்றுக்கொள்ள முடியாத படைப்பாளிகளுக்கும் கல்வியாளர்களுக்கும் நீங்கள் சொல்லும் இந்த தமிழ்படைப்பாளிகள் லிஸ்ட்டில் இடமிருக்கின்றதா?

ஜெயலலிதாவின் ஆட்சிகாலத்தில் இது வரை வந்ததெல்லாம் வெறும் டிரெயிலர் தான் இன்னும் மெயின் பிச்சரே ஆரம்பிக்கவில்லை இவ்வளவு விரைவாக தமிழ்மான போராட்டத்தை ஆரம்பித்துவிட்டீர்களே இன்னும் மெயின் பிக்சரின் போது போராட சக்தி வேண்டாமா?


இப்போது அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைக் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றும் அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். இதற்கு எதிராக எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையாணையும் ஜெயலலிதாவின் திட்டத்தை ஒத்திப்போட்டிருக்கிறது.

நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவது என்கிற அறிவிப்பு, ஏதோ எல்லாவற்றையும் மாற்றியமைக்கிற எதேச்சதிகாரப் போக்கு என்றோ பழைய ஆட்சியின் சாதனைகளாகச் சொல்லப்படுபவற்றின் மீதான சேறு வாரியிறைப்பு என்றோ இருபெரும் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான அதிகாரப்போர் என்றோ மட்டும் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது. ஏனெனில் ‘தை முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு’ என்ற முந்தைய அரசின் அறிவிப்பை மாற்றி ‘சித்திரை முதல்நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு’ என்று அறிவித்தது, சமச்சீர்க்கல்வியை நிறுத்திவைத்தது, தலைமைச்செயலகத்தில் இருந்த நூலகத்தை முடக்கிப்போட்டது, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவது என்பவை எல்லாம் அறிவுத்தளத்தின் மீது நடத்தப்படும் வன்முறை, கலாச்சாரத் தாக்குதல், சிறிய அளவிலான மாற்று அரசியல் முன்னெடுப்புகளையும் சிதைப்பது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

அப்படியெல்லாம் எல்லோரும் அறிவுத்தளத்தின் மீதான தாக்குதல் மண்ணாங்கட்டி என்று புரிந்து கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை, இதெல்லாம் மிகைப்படுத்தும் செயல.


தமிழ்புத்தாண்டு தொடர்பான விசயத்தில் தமிழ் தேசிய மொழியாக இருக்கும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு கூட இந்த தமிழ்புத்தாண்டு மாற்றத்தை முறைப்படி கூட அறிவிக்காத வெற்று அறிவிப்பு மட்டும் வெளியிட்டு தமிழ் மக்களிடத்தில் தம்மிடமிருக்கும் ஊடகம் வழியாகவாவது அதற்க்கான மனமாற்றத்தை செய்யாமல் சித்திரை திருநாளென்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி காமெடி செய்துகொண்டே புத்தாண்டு அறிவிப்பதெல்லாம் வெயிட் வெயிட் எனக்கு தமிழ்துரோகி பட்டம் எதுவும் கொடுக்கும் முன் கருணாநிதி தை ஒன்றை தமிழ் புத்தாண்டாக அறிவிப்பதற்க்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நான் தை ஒன்றை தான் தமிழ்புத்தாண்டாக கருதி புத்தாண்டு வாழ்த்துகள் சொல்கிறேன்.


கருணாநிதியின் வரலாறு முக்கியம் அமைச்சரே என்ற ரீதியிலான அரசு ஆணைகள், "பப்புலிசிட்டி பரமசிவமாக" செய்த செயல்களுக்கெல்லாம் தமிழ் கவசத்தை போர்த்திக்கொண்டு போராட கிளம்ப வேண்டாம்

இன்னொருபுறம் தலித் மக்களின் தலைவர் இமானுவேல்சேகரனின் நினைவுநாளில் பரமக்குடியில் ஏழு தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட போலீஸ் வன்முறையும் துப்பாக்கிச்சூடும் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் சாதியச்சார்பையும் மனித உரிமைகளைக் கிஞ்சிற்றும் மதிக்காத மனப்போக்கையுமே காட்டுகிறது. தங்கள் முன்னோடிக்கு அஞ்சலி செலுத்துவதற்காகக் கூடிய தலித் மக்களின் மீது தாக்குதல் நடத்தியது, ‘கலவரம் நடக்கும்’ என்று காரணம் சொல்லி தலித் தலைவர் ஜான்பாண்டியனைப் பரமக்குடிக்கே செல்லவிடாமல் தடுத்து கைது செய்தது ஆகியவை ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானது. இன்னொருபுறம் மற்ற ஆதிக்கசாதித் தலைவர்களின் விழாக்களுக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிற அரசு, இமானுவேல் சேகரனின் நினைவுநாளை இனி வரும் காலங்களில் மரணத்தின் கரும்நாளாக அடையாளப்படுத்துவது, கலவர பீதியூட்டி தலித்மக்களைக் கட்டுப்படுத்துவது ஆகியவை தொடரத்தான் போகின்றன.
தலித்கள் மீதான பரமக்குடி தாக்குதல்கள் தொடர்பான கண்டனங்களையும் கோரிக்கைகளையும் நான் மதிக்கிறேன், ஆதரிக்கிறேன்.


எல்லா ஆட்சிகாலத்திலும் தலித்துகளின் மீதான அரச ஒடுக்குமுறை நடந்துவருகின்றது இதற்க்கு கருணாநிதி ஆட்சி என்றோ ஜெயலலிதா ஆட்சியென்றோ எந்த வேறுபாடுமில்லை, இது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலே நடைபெறுவதாக சித்தரிப்பது கருணாநிதியை காப்பாற்றி அவருக்கு கூஜா தூக்கும் செயலே.


உண்மையில் இப்பிரச்சினையில் இந்த படைப்பாளிகளுக்கு அக்கறை இருக்குமெனில் பரமக்குடி துப்பாக்கி சூட்டை மட்டுமே முன்னிருத்தி ஒரு போராட்டம் நடத்தியிருக்கவேண்டுமேயொழிய இதில் கொண்டுவந்து ஊழல் இன்சூரன்ஸ் திட்ட எதிர்ப்பு பப்புலிசிட்டி பரமசிவமான கருணாநிதியின் ஊழல் மற்றும் பப்புலிசிட்டி திட்டங்களை நீக்குவதை எதிர்ப்பதையும் இதில் இணைத்து ஒரு விதமான இந்த திமுக ஆதரவு ஜால்ரா குழுவின் போராட்டத்தை எதிர்ப்பவர்களை பலவீனப்படுத்தும் முகமாக இணைக்கப்பட்ட அஜெண்டாவோ என்றே சந்தேகப்பட வைக்கிறது.


நேரடியாகப் போலீஸ் தலித் மக்களின் மீது நடத்திய தாக்குதலைத் தமிழக முதல்வரே ‘இது ஒரு இன மோதல்’ என்று வர்ணித்தது சமூகமாற்றத்தை விரும்பும் எழுத்தாளர்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் நடந்துமுடிந்த துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணக் கமிஷன் அமைப்பதற்கே மறுத்த ஜெயலலிதா, பிறகு எதிர்க்கட்சிகளின் அழுத்தங்களுக்குப் பிறகு ஒப்புக்கு ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணைக்கமிஷனை அமைத்துள்ளது. இதுவரை தமிழக அரசுகளால் நியமிக்கப்பட்ட எல்லா ஓய்வுபெற்ற நீதிபதிகளின் விசாரணைக்கமிஷன்களுமே அரசுக்குச் சாதகமான அறிக்கைகளையே அளித்துள்ளன. அதிலும் தொடக்கத்திலேயே போலீஸைக் காப்பாற்றும் மனோபாவத்தோடும் நோக்கத்தோடும் ‘இன மோதல்’ என்று வர்ணித்த ஒரு முதல்வரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்கமிஷன் நீதி வழங்கும் என்பதில் பாதிக்கப்பட்ட தலித் மக்களைப்போல எங்களுக்கும் நம்பிக்கையில்லை. எனவே அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவினை எதிர்த்தும் பரமக்குடியில் தலித் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அரசு வன்முறையைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தும் நாங்கள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

* வாக்களித்தபடி குழந்தைகளுக்கான சர்வதேசத் தரத்திலான மருத்துவமனையைத் தமிழக அரசு வேறு இடத்தில் கட்டித்தர வேண்டும்.

* அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைக் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றும் அறிவிப்பைத் தமிழக அரசு கைவிட வேண்டும்.

* சமச்சீர்க்கல்வி, தமிழ்ப்புத்தாண்டு, நூலகம் போன்ற உணர்வு ரீதியிலான பண்பாட்டு விஷயங்களில் எதேச்சதிகாரப் போக்கை மேற்கொள்வதைத் தமிழக அரசு நிறுத்த வேண்டும்.

* தலித் மக்களின் முன்னோடி இமானுவேல் சேகரனின் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.

* மனித உரிமைகளையும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளையும் மீறி பரமக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

* கண்துடைப்பு சம்பத் கமிஷன் கலைக்கப்பட வேண்டும்.

* பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைச் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்.

* துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பத்து லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும்.

* துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்.

- தமிழ்ப் படைப்பாளிகளும் கல்வியாளர்களும்.
ஏனிந்த அறிக்கையில் 13,000 மக்கள் நலப்பணியாளர்களை நீக்கியதை விட்டு விட்டார்கள் இந்த தமிழ்படைப்பாளிகளும் கல்வியாளர்களும்? எந்தவிதமான தகுதியும் இன்றி(வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, தேர்வுகள், டிஎன்பிஎஸ்சி என எதுவுமே இல்லாமல்) வெறும் கட்சிக்காரனுக்காகவும் கட்சிகாரன் சிபாரிசுக்காகவுமே உருவாக்கப்பட்டு போடப்பட்டிருந்த திமுக நலப்பணியாளர்களை நீக்கியதை விட்டுவிட்டார்களே... கட்சிக்காக அறிக்கை விடும் போது அவர்களை மட்டும் கழற்றிவிடுவது பாவமில்லையா?


கிறித்துவர்களுக்கான உள் ஒதுக்கீடு, பிறகு கிறித்துவர்களே வந்து எங்களுக்கு உள் ஒதுக்கீடு வேண்டாமென்று அறிவித்த பின் திரும்ப பெற்றுக்கொண்டது என வரலாறு முக்கியம் அமைச்சரே என்ற ரீதியில் கருணாநிதியின் செயல்பாடுகளின் முக்கியமானது "சோ கால்ட்" சமச்சீர் கல்வி,

சென்ற ஆண்டு 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு மாற்றப்பட்ட புத்தகங்கள் இந்த ஆண்டு வழக்கம் போல 2,7ம் வகுப்புகளுக்கு மாற்றி1,2,6,7 என 4 வகுப்பு மாணவர்கள் படிக்க இந்த பாட திட்ட மாற்றம் ஒரு தொடர்ச்சியாக வரும், ஆனால் வரலாறு முக்கியம் என்கிற ரீதியில் ஆட்சி பறிபோகும் நேரத்தில் சாகும் போது சங்கரா சங்கரா என்று எல்லா வகுப்பு பாடங்களையும் மாற்றியதின் விளைவு புதிய பாடத்திட்டத்தில் தொடர்ச்சியற்று இருக்கிறது.


இது மட்டுமின்றி உள்கட்டமைப்பு, ஆசிரியர் பயிற்றுவிப்பி திறன், ஆசிரியர் மாணாக்கர்கள் விகிதம், பயிற்றுவிப்பு முறைகள் அதன் பின் பொது பாடத்திட்டம் என பல்வேறு படிநிலை மாற்றங்கள் எதுவும் செய்யாமல் வெறும் "பொதுப்பாடத்திட்டத்தை" சமச்சீர் கல்வி என்று சொல்வதே ஒரு ஏமாற்று வேலை, பொது பாடத்திட்டத்தை சமச்சீர் கல்வி என சொல்வது உண்மையான சமச்சீர் கல்வி எது என்பதை அறியவிடாமல் இருந்தால் உண்மையான சமச்சீர் கல்வியை மக்களுக்கு கிடைக்க விடாமல் செய்துவிடும்.


இந்த படைப்பாளிகளும் கல்வியாளர்களும் உண்மையிலேயே தமிழ் உணர்வோடும் மக்களுக்காகவும் போராட வேண்டுமெனில் போராட்டத்தை முதலில் போலி தமிழ், போலி முற்போக்கு பேசும் கருணாநிதியையும் அவரது கட்சி திமுகவையும் எதிர்ப்பதிலிருந்து ஆரம்பிக்கட்டும், இவ்வளவு நாளும் டீக்குடிக்க போயிருந்தார்களோ இந்த படைப்பாளிகளும் கல்வியாளர்களும். இல்லையில்லை ஜெயலலிதா ஆட்சியை எதிர்க்க தானென்றால் தமிழ் படைப்பாளர்களும், கல்வியாளார்களும் என்ற பெயரில் அறிக்கை தராமல் திமுக இணைய அணி, திமுக ஃபேஸ்புக் அணி என ஏதேனும் ஒரு பெயரில் அறிக்கையை அனுப்புங்கள் சிரித்து விட்டு சென்று கொண்டே இருப்போம்.