தெலுங்கு வருணாசிரம அரசுக்கு காவல் காக்கும் திராவிடம் தமிழர்களின அரசை இகழ்கிறதே

தமிழர்கள் வரலாற்றிலேயே மிக மோசமான காலம் எது என்றால் திராவிட தெலுங்கு பாளையக்கார கும்பல்களின் அராஜக ஆட்சி நடத்திய கால கட்டம் தான்.

சங்க கால தமிழர்கள் ஆட்சியாக இருந்தாலும், அதன்பின் வந்த களப்பிரர்கள் ஆட்சி என்றாலும் அதன் பிறகான பல்லவர் ஆட்சி, பிற்கால சோழர்கள் ஆட்சி, பாண்டியர்கள் ஆட்சி என அனைத்தும் மைய ஆட்சி அதன் பின்பான படிநிலை குறுநில மன்னர்கள், அதன் கீழ் மண்டலங்கள், ஊராட்சிவரை ஒரு அமைப்பு, ஒரு சிஸ்டம் இருந்துள்ளது, வரிவிதிப்புகள் தண்டனைகள் என அனைத்தும் ஒரு அமைப்பாக சிஸ்டமாக இருந்தது, இதில் கட்டிடகலை, போர், நீர்வளம், மருத்துவம், கலை இலக்கியம் என அனைத்தும் செழித்து வளர்ந்தது, என்று தமிழர்களின் ஆட்சி போய் திராவிட தெலுங்கு கும்பல்களின் ஆட்சி வந்ததோ அப்போதிருந்தே தமிழர்கள் அறிவு திட்டமிட்டு அழிக்கப்பட்டது, அதிலும் பாளையக்காரர்கள் என்ற பெயரில் தெலுங்கு கும்பல் ஆட்சி செய்த போது சிறு சிறு பகுதிகளை கொண்டு எந்த விதமான ஒரு அரசு அமைப்புக்குள்ளும் உட்படாமல் ஒரு சிஸ்டமே இல்லாமல் பொறுக்கித்தனமான ஆட்சி நடந்து மக்களை கொடூரமாக நடத்தி விரும்பிய பெண்களை தூக்கிப்போட்டுக்கொண்டு போய் கெடுத்து (நாட்டார் கதைகளில் மிகப்பல ஜமீன்கள் பெண்களை தூக்கியதால் பெண்ணை கொலை செய்த கதைகள், பெண் ஜமீனை கொலை செய்த கதைகள், பெண் தற்கொலை செய்து கொண்ட கதைகள்) காட்டாட்சி செய்தனர் தெலுங்கு திராவிட கும்பல்கள்.

வருணாசிரமத்தை காக்கவே உருவாக்கப்பட்ட மனுதர்ம ஆட்சி நடத்திய இந்து மத(பார்ப்பன) ஆட்சியான விஜயநகர அரசுகளையும் அதன் வழி தமிழகத்தை பல நூறு ஆண்டுகள் சுரண்டிய தெலுங்கு நாயக்க ஆட்சிகள், நாட்டை கூறு போட்டு பாளையக்காரர்கள் என்ற பெயரில் மக்களை கொள்ளையடித்த தெலுங்கர்களை பற்றி ஒருவார்த்தை கூட பேசாத இதே திராவிட புருடாக்கள் தான் தமிழ் மாமன்னர்களை கொச்சை படுத்துகிறார்கள்

இதில் தமிழ் மாமன்னர்களை பற்றி மிக மோசமாக பேசி பேசி நானும் கூட திராவிட மாயையில் சில ஆண்டுகளுக்கு முன் எம் முன்னோர்கள் என்னத்தை கண்டுபிடித்தார்கள் என்று கேட்டிருக்கிறேன், அவன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டிடம் நிற்கிறது, கடலில் நீரோட்டத்தில் வழி கண்டு நாகப்பட்டினத்திலிருந்து மலாக்காவிற்குள் கப்பல்களில் நுழைந்திருக்கிறான், ஒரே நேரத்தில் துறைமுகங்களில் நுழைந்து தாக்கி சீனாவுக்கான வியாபர பாதையான பட்டு பாதையை  கட்டுப்படுத்தி தெற்காசியாவை 250 ஆண்டுகள் ஆண்டிருக்கிறான், இன்றைக்கு சிக்ஸ் சிக்மா வைத்துக்கொண்டு ஒரு சேஞ்ச் ரெக்வெஸ்ட்டுக்கு 4 முறை ரீ பேஸ்லைன் செய்யும் காலத்தில் ஒற்றை பாறையில் கோயில்கள் செதுக்கியுள்ளான் ஒரே ஒரு தவறு கூட இல்லாமல், இவ்வளவு அறிவையும் அழித்து மறைத்து எங்களையே எம்ம முன்னோர்கள் என்னத்தை கண்டுபிடித்தார்கள் என்று கேட்க வைத்தது திராவிடம்.

திராவிடமாயையை ஒழிக்க வேண்டும், தமிழகத்தில் தெலுங்கு திராவிட கும்பல்களின் அரசியல் அழிவில் தான் தமிழர்களின் வரலாறும், அதிகாரமும் மீண்டு வரும்.

ஆரிய பூச்சாண்டி காட்டி தமிழர்களை ஏமாற்றும் திராவிட புரட்டுகளை அறிந்து கொள்வோம்.

ஆரிய பூச்சாண்டி காட்டி தமிழர்களை ஏமாற்றும் திராவிட புரட்டுகளை அறிந்து கொள்வோம்.

வீரமணி என்கிற ஜால்ரா மணி அவர்கள் தமிழ் மாமன்னன் ராசேந்திர சோழன் மீதும் சோழ அரசர்கள் மீதும் புழுதி வாரி இறைத்து அவர்கள் புகழுக்கு களங்கம் விளைவிக்குமாறு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

முதலில் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், ஒழுக்கம், நெறிகள், சரி தவறுகள், உயர் கோட்பாடுகள் என்பது அந்த காலகட்டத்துக்கும் வேறுபட்டது, அன்று ஒழுக்கமாகவும் உயர் கொள்கையாகவும் கருதப்பட்டது இன்று தவறாக கருதப்படலாம், இன்று ஒழுக்க நெறியாக உயர் கொள்கையாக கருதப்படுவது நாளை தவறக கருதப்படலாம், இந்த அறிவு எதுவும் இன்றி ஜால்ரா மணி அவர்கள் இன்றைய கோட்பாடுகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுடன் இணைத்துள்ளார்.

பல வரலாற்று தகவல்களை திரித்து வெட்டி ஒட்டி அது அம்மன்னனுக்கு களங்கம் விளைவிக்குமாறு அறிக்கையில் சேர்த்திருந்தார், இது திராவிட கும்பல்களுக்கே கைவந்த கலை, அதில் முக்கியமான ஒன்று சோழ மாமன்னன் ராசேந்திரன்  பார்ப்பனர்களுக்கு நிலங்களை தானமாக கொடுத்து அவைகளுக்கு வரிவிலக்கு செய்திருந்தான்(ர்) என்பதும் பார்ப்பனர்களுக்கு மாமன்னர்கள் காவல் காத்து வருணாசிரமத்தை காத்தார்கள் என்றும் கூறியுள்ளார்.

ஒரு அரசன் எந்த மதத்தை சார்ந்திருந்தாலும் அவன் அனைத்து மதங்களுக்கும் பொதுவானதாகவே செயல்பட வேண்டும், பெரியாரையே எடுத்துக்கொண்டாலும் கூட அவர் அவர் இந்து சமயத்தை கடவுளை விமர்சித்திருந்தாலும் அவர் கோவில்களுக்கு அறங்காவலராக இருந்துள்ளார்.

தமிழ்நாட்டுச் செப்பேடுகள் தொகுதி - 1 என்ற நூலில் இருந்து இந்த தகவல்களை அளித்துள்ளேன். சோழர் செப்பேடுகள் பக்கம் 280 ல் இருந்து பக்கம் 363 வரை 83 பக்கங்கள் உள்ளன, அதில் நான் பக்கம் 280ல் இருந்து 296 வரை 17 பக்கங்கள் மட்டுமே படித்துள்ளேன், அதிலே சைவ வைணவ வேதியர்கள்(பார்ப்பனர்கள்) மட்டுமின்றி பெளத்த, சமண மற்றும் நாட்டார் கள் வரை பலருக்கும் நிலங்களும் வரிவிலக்குகளும் சோழ மன்னர்கள் அளித்துள்ளனர்.

அன்பில் பகுதியை சேர்ந்த‌அனிருத்த பிரம்மராயன் என்று ஒரு முக்கியமான பார்ப்பன மந்திரி ராஜராஜசோழனுக்கு இருந்துள்ளார், ராஜராஜசோழனிடம் இருந்த பல்வேறு மந்திரிகளுள் இருந்த ஒரே பார்ப்பன மந்திரி அனிருத்த பிரம்மராயன், இவர் அரசனிடம் முறையாக விண்ணப்பித்து நிலங்களை தானமாக பெற்று அந்த செப்பேடு அன்பில் பகுதியில் வீடு கடைக்கால் தோண்டும் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது, இந்த செப்பேட்டை போல இன்னும் பல செப்பேடுகள் இருக்கலாம், அவைகள் எல்லாம் கிடைக்காமல் உள்ளது, அதில் பல்வேறு இறையிலி நிலங்கள் குறித்த தகவல்கள் இருக்கும், ஆனால் புரட்டு திராவிடம் அனிருத்த பிரம்மராயன் ஊரில் கிடைத்த செப்பேட்டை வைத்து சதிராடுகிறது, என்றாலும் மேலும் பல இடங்களில் கிடைத்த செப்பேடுகள் சோழர்கள் பல்வேறு சமயத்தவருக்கும் அளித்த தானங்கள் கிடைத்துள்ளன, சோழர்கள் சமன, பெளத்த பள்ளிகளுக்கு கொடுத்த தானங்கள் குறித்து சொல்லாமல் பார்ப்பனர்களுக்கு அளித்ததை மட்டும் அறிக்கையில் சொல்லி சோழர்களை பார்ப்பன கைக்கூலிகள் போல் காட்டியுள்ளர் ஜால்ரா மணி.

மேலும் தமிழ் மொழியை மதிக்காதவர்கள் என்பது போன்ற பிரச்சாரத்தை திராவிட இயக்கங்கள் சோழர்கள் மீது சுமத்துகின்றன, தான விவரங்கள் தமிழ் பகுதியில் தான் உள்ளன, தமிழே அலுவல் மொழியாக இருந்துள்ளது, மெய்கீர்த்தனைகள் அரசர்  வம்ச விவரங்கள் தான் வட மொழியில் இருந்துள்ளன, அவைகளே தமிழிலும் இருந்துள்ளன‌

இந்த நூலில் வெறும் 17 பக்கங்களிலேயே பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்கு இவ்வளவு தானங்கள் வழங்கிய தகவல்கள் இருக்கும் போது இன்னும் மீதியுள்ளா 67 பக்கங்களிலும் கிடைக்காத ஆயிரக்கணக்கான செப்பேடுகளிலும் எவ்வளவு இருக்கும்.

ஆரிய பூச்சாண்டி காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள் திராவிட பூச்சாண்டிகள் என்பதற்கு ஜால்ரா மணியின் அறிக்கையைவிடவும் சான்று எதுவும் வேண்டுமா?

ஒரே படமாகவும் இணைத்துள்ளேன், தனித்தனியாக படிக்க ஏதுவாகவும் இணைத்துள்ளேன்.











முந்தைய பதிவு
---------------------------
மலம் அள்ளும் கொடூரத்தையும் தேவதாசி வழக்கத்தையும் தமிழகத்துக்கு இறக்குமதி செய்ததே வந்தேறி திராவிடர்கள் தான்
https://www.facebook.com/photo.php?fbid=10205002166004006&set=a.1674151063785.90834.1537700703&type=1&theater

மலம் அள்ளும் கொடூரத்தையும் தேவதாசி வழக்கத்தையும் தமிழகத்துக்கு இறக்குமதி செய்ததே வந்தேறி திராவிடர்கள்

உண்மையில் சொல்லப்போனால் மனிதன் மலத்தை மனிதனே அள்ளும் அவலத்தையும் தேவதாசி என்ற பெயரில் பாலியல் சுரண்டலையும் ஆரம்பித்து வைத்ததே திராவிடர்களான தெலுங்கர்களின் ஆட்சியில் தான்.

வீட்டிற்குள் மலம் கழிக்க ஆரம்பித்ததும் அதை அள்ளுவதுமான சாதியினர் பேசிய மொழி என்ன? தமிழர்கள் கட்டிடக்கலையிலும் கட்டிடங்கள் அரண்மனைகளிலும் எங்கேயாவது கழிவறைகள் இருந்திருக்கிறதா? வீட்டிற்குள் மலம் கழிப்பது என்பது எங்கேயாவது தமிழ் இலக்கியங்களிலோ தமிழ் சுவடிகளிலோ கல்வெட்டுகளிலோ செப்பேடுகளிலோ இருந்துள்ளதா? வீட்டிற்குள் மலம் கழிக்கும் வழக்கம் தமிழர்களிடம் இருந்ததில்லை.

வீட்டுக்குள் மலம் கழிக்கும் வழக்கம் எவனிடம் இருந்ததோ அவனுக்கு தான் மலத்தை அள்ளி போடும் தேவையும் இருந்தது அதை கொண்டுவந்தது தமிழ் மன்னர்களின் ஆட்சிக்கு பின் வந்த திராவிட தெலுங்கு வந்தேறி அரசர்கள் தான். மலம் அள்ள பயன்படுத்தப்பட்ட அருந்ததி சாதியினர் பேசிய மொழியும் தெலுங்கு தான்.

பாலியல் சுரண்டலின் முக்கிய காரணமாக இருந்த பொட்டுகட்டும் வழக்கம் ஒரு குறிப்பிட்ட சாதியில்(சின்ன மேளம்) இருந்தது, அந்த சாதியினரின் தாய்மொழியும் தெலுங்கு தான், அதை கொண்டுவந்ததும் இதே திராவிட மன்னர்கள் தான் இப்படி மனித மலத்தை மனிதனே அள்ளும் வழக்கத்தையும் ஒரு குறிப்பிட்ட சாதியினரை பாலியல் சுரண்டலுக்காக தேவதாசிகள் ஆக்கியதும் ஆக சாதியை ஆக கீழ்த்தரமாக கொடூரமாக திராவிட அரசர்களான தெலுங்கு வந்தேறிகள் பயன்படுத்திவிட்டு தெற்காசியாவினை கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்ட தமிழ் மாமன்னர் ராஜேந்திர சோழனை ஆர்.எஸ்.எஸ் சை விமர்சிக்கிறேன் பார்ப்பன அடிவருடியாக‌ ராஜேந்திர சோழரை திராவிடர் கழக தலைவர் வீரமணி விமர்சித்துள்ளார்.

வந்தேறி திராவிடர்கள் செய்த கொடூரத்துக்கு தமிழ் மா மன்னன் ராசேந்திரன் மீது பழி போடுவதா?

ஆரிய ஓநாய்களின் சதியும் திராவிட நரிகளின் தந்திரமும் தமிழ் சாதிகளுக்கு நன்றாகவே தெரியும், இனியும் வேண்டாம் இந்த கீழ்த்தர சதி வேலை அய்யா வீரமணி அவர்களே.

பின்குறிப்பு
தேவரடியார்கள் வேறு, தேவதாசிகள் வேறு, இரண்டும் வெவ்வேறு காலகட்டங்களில் இருந்த வழக்கங்கள்.

தமிழ் மாமன்னர் இராசேந்திர சோழனின் ஆயிரமாவது பட்டமேற்பு விழாவிற்கு கண்டனம் தெரிவித்து தமிழ் மாமன்னர் ராசேந்திரனை விமர்சித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கையை அடுத்து விமர்சித்து எழுதியது

பிற்சேர்க்கை
பார்ப்பனர்களுக்கு மட்டுமே தானம் வழங்கினார்கள் சோழர்கள் எண்ற திராவிட புரட்டுகளை உடைக்கும் சோழர்கள் பார்ப்பனர்கள் அல்லாத சமண, பெளத்த மதங்கள் நாட்டார்களுக்கு வழங்கிய நில தானங்கள் குறித்த கட்டுரை.
https://www.facebook.com/kuzhalipuru/posts/10205053293282156?pnref=story

கி.வீரமணியின் அறிக்கை


யட்சினி - 2

யட்சினி

அகால வேளையில் கதவை தட்டமால் திறந்துவிட்டேன்
யாரோ ஒரு சின்ன பையனை புணர்ந்து கொண்டிருந்தாள்
அவள் நிர்வாணம் எனக்கொன்றும் புதுசு இல்லை தான்
பயம் போலும் அந்த பொடியனுக்கு
கண்களை இறுக்க மூடி இருந்தான்
மேலே முயங்கி கொண்டிருந்தவளோ
அறுபதடிக்கும் மேலான‌ உயரத்திற்கு இருந்தாள்
சத்தம் காட்டாமல் ஹாலில் உட்கார்ந்தேன்
தெரிந்திருக்கும் அவர்களுக்கு நான் வந்தது
பையன் பூனை போல் பதுங்கி ஓடினான்
கொண்டை போட்டுக்கொண்டு நைட்டியோடு வந்தவள்
என்ன இந்நேரத்தில் என்பது போல்
கண்ணால் கேட்டுக்கொண்டு பாத்ரூம் நோக்கி போனாள்

யட்சினி

அவளை எனக்கு ரொம்ப காலமாக தெரியும்
அவளுக்கு கூச்சமே இருக்காது
நூறு பேர் கூட்டத்திலும் மாமா மாமா என்று
புருசனை கூப்பிடுவாள்
டிவிஎஸ்50ல் சல சலவென பேசிக்கொண்டே புருசனுடன் போவாள்
இப்போதெல்லாம் அவள் புருசனோடு பேசி யாரும் பார்க்கவில்லை

இப்போதும் கல்யாணம் காட்சிக்கு புருசனுடன் பைக்கில் போயிருக்கிறாள்
விசாரித்ததில் தான் தெரிந்தது பக்கத்து வீட்டு சின்ன பெண்ணை ஏறிவிட்டான் என்று
அழுகை, ஆர்பாட்டம், பஞ்சாயத்து எதுவுமில்லை
இப்போதெல்லாம் அவள் புருசனோடு பேசி யாரும் பார்க்கவில்லை

அன்றொரு காலை
அவள் வீட்டில் வயசுக்கு வந்த பெண் சத்தம் போடாமல் கிளம்பினால்
கண் விழித்து பார்த்தவளுக்கு எல்லாம் புரிந்தது
ஒருக்களித்து படுத்து கண்ணை மூடினாள்
கத்தியை தூக்கிக்கொண்டு சுற்றி சுற்றி வந்தான் புருசன்
எல்லாம் இந்த தேவடியாவால தான் என்று கையை ஓங்கி அடிக்க வந்தான்
கிட்ட வந்தவன் கையை இறக்கி பம்மி பின்னால் சென்றான்
அப்போதும் கூட அவள் பேசவில்லை.

அவள் புருசன் செத்த மறுநாள் துக்கம் விசாரிக்க போனேன்
வா புருசோத்து நல்லா இருக்கியா? என்றாள்