சுகுணா, அ.மார்க்ஸ்... கேளுங்கள் கற்பழிப்பே ஒடுக்குமுறையின் உச்சகட்ட சாட்சி...

கற்பழிப்பு என்பது காம வெறியால் மட்டுமே நடைபெறுகிறதா? காம வெறி மட்டுமே கற்பழிப்பை நடத்துகிறதா? 50-60-70 வயது பெண்களிடம் என்ன காமத்தை பெறப்போகிறார்கள் கற்பழிப்பாளர்கள்?

கற்பழிப்பினால் காமம் தீருமா?காமமே கற்பழிப்பின் ஒற்றை காரணமெனில் ரோட்டில் ஒரு பெண் கூட நடமாட முடியாது, எவ்வளவு காமவெறி இருந்தாலும் அந்த காமத்தை கற்பழிப்பு அளவுக்கு கொண்டு செல்வது உட்சபட்ச ஆதிக்க அதிகாரம் மட்டுமே.

முற்போக்காளர்கள்/பெண்ணியவாதிகள் கற்பழிப்பு என்ற வார்த்தையை நான் பயன்படுத்துவதற்கு மன்னிக்கவும், இன்றைய ஆணாதிக்க சூழலில் வன்புணர்வு என்ற வார்த்தை கண் முன் நிறுத்தும் கொடூரத்தைவிட கற்பழிப்பு என்ற வார்த்தை அந்த நிகழ்வை விளக்குவது அதிகம். எனவே தான் கொடூரத்தை விளக்க வேண்டிய இடத்தில் இந்த வார்த்தையை போட வேண்டியுள்ளது.

ஒடுக்குமுறைகள் நடைபெறும் எல்லா இடங்களிலும் கற்பழிப்பு நடைபெறும் என்று பொருள் அல்ல, ஆனால் கற்பழிப்பு நடை பெறும் எல்லா இடங்களிலும் உச்சபட்ச அதிகார ஆளுமை அதன் மூலம் உச்சபட்ச ஒடுக்குமுறை நடைபெறுகிறது என்று பொருள். மண்ணின் மீதான உரிமையை அறிவிக்க கொடி நாட்டுவது போல உட்சபட்ச ஆதிக்க அதிகார ஆளுமையை அறிவிக்க செய்வதே அந்த மண்ணின் பெண்களின் மீதான கற்பழிப்பும்.

ஆணாதிக்க சமுதாயத்தில் மண்ணின் மீதான ஆதிக்கத்தையும் அதன் குறியீடாக பெண்ணையும் பாதுகாப்பதே பெரும் கடமையாக உள்ளது, அதற்காக பல மாதிரியான உத்திகளை கடைபிடிப்பார்கள், ஆதிக்கத்தின் குறியீடாக பெண்ணை கவருவது அமைவதால் எதிரி மண்னை பிடித்துவிட்டால் ராஜபுத்திர பெண்கள் கூட்டமாக தீயிட்டு தற்கொலை செய்துகொள்ளுதல் என இருந்தது இதன் மூலம் பெண்ணை தொடும் உட்ச பட்ச அதிகாரத்தை எதிரியின் ஆளுமையை அவர்கள் அழிக்கிறார்கள்.

"பாப்பத்தியோடு படுத்தால் பாவம்" என்று வாய்வழியாக தலைமுறையாக பரப்பப்பட்டிருக்கும் கருத்தாக்கத்தை கேள்விப்படிராதவர்கள் அரிது, இதுவும் கூட பார்ப்பன பெண்களை எவ்விதமாகவும் பிற சாதியினர் தொடக்கூடாது அதன் மூலம் பார்ப்பனர்கள் மீதான மற்றவர்கள் ஆதிக்கம் செய்யாமலிக்கும் குறியீடு பாதுகாக்கப்படுகிறது. இதெல்லாமே தம் மீதான ஆதிக்கத்தை எதிர்ப்பதையும் அதிகாரத்தை எதிர்ப்பதையும் பெண்களை பாதுகாப்பதன் மூலமான குறியீடாக வைத்துள்ளார்கள். கற்பழிப்பு என்றல்ல காதல் மூலமாகவும் பெண்களை வேறு சாதி/இனம்/மதம்/மொழி ஆட்கள் தொடுவதை தம் மீதான ஆக்கிரமிப்பாகவும் அதிகாரமாகவும் பார்ப்பதால் நடைபெறுவதே "ஹானர்" கொலைகள்.

அந்த மண்ணை ஆக்கிரமிக்க அந்த அதிகாரத்தை கைப்பற்ற விரும்புபவர்கள் அந்த மண்ணை ஆக்கிரமித்து அந்த பெண்களை கற்பழிப்பதன் மூலம் அந்த மண்ணின் அதிகாரமும் ஆளுமையும் எங்களுடையது என்று அறிவிக்கிறார்கள். அதனாலேயே வயது வித்தியாசமெல்லாம் கற்பழிப்புகளுக்கு இருப்பதில்லை. அதனால் தான் கோத்தபாய ராஜபக்சேவால் தமிழ் ஆண்களை வெட்டி கடலில் போடுங்கள் பெண்களை உங்களுக்கு விருந்தாக்கிக்கொள்ளுங்கள் என சொன்னான்.

ஒரு சிங்க கூட்டத்தின் (வயதான)தலைவனை இன்னொரு (இளம்)சிங்கம் தலைமை பொறுப்பிற்காக சண்டையிட்டு அடித்து வீழ்த்தினால் முதலில் வெற்றிபெற்ற சிங்கம் செய்வது அந்த பழைய தலைவனின் மனைவிகளான கிழ பெண் சிங்கங்களை வரிசையாக உட்காரவைத்து புணருகிறேன் என இரண்டு குத்து குத்திவிட்டு போகும், அதன் பின்னே தனக்கான புதிய இளம் பெண் சிங்கங்களை தேர்ந்தெடுக்கும். கிழசிங்கங்களை பின்னால் குத்தியது புணர்ச்சிக்காக அல்ல, தன்னுடைய ஆளுமையை, தன் உட்சபட்ச அதிகாரத்தை தெரிவிக்கவே இப்படி செய்தது.

எந்த ஒரு பிரச்சினையென்றாலும் பெண்கள் கற்பழிக்கப்படுவது இதனால் தான், காவிரி பிரச்சினையில் தமிழ் ஆண்களை கொலை செய்தும் போதாதென்று கன்னட வெறியர்களால் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டதுவும் இங்கே கன்னடர்களான நாங்கள் தான் ஆதிக்கம் செலுத்துவோம், உச்சநீதிமன்றத்தின் ஆதிக்கம் இங்கே இல்லை என நிரூபிக்க செய்யப்பட்டது. முசல்மான்களின் குறிகளை வெட்டுவோம் பீவிகளின் இறுகிய யோனிகளை பிளப்போம் என்றெல்லாம் கோஷமெழுப்பி குஜராத் இந்து மதவெறியர்கள் செய்தது காமத்துக்காக மட்டுமல்ல, தங்களின் அதிகாரத்தின் குறியீடாகவும் முஸ்லீம்களின் மீதாக அதிகபட்ச ஒடுக்குமுறையாலுமே நடந்தன அந்த கற்பழிப்புகள்

இந்திய அமைதி(?)படை ஈழத்தில் வயதான தமிழ்பெண்களை கற்பழித்ததும் இங்கே நாங்கள் தான் உட்ச அதிகாரம் படைத்தவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என சொலவதற்கே. சிங்கள இராணுவ கூலிபடையினர் தமிழர்களின் மீதான தம் அதிகாரத்தை காண்பிக்கவே போரிட்டு இறந்த பெண் புலிகளின் உடல்களை நிர்வாண படுத்தி அதை படம் எடுத்து ரசித்ததும், தமிழ்பெண்களின் மீதான கற்பழிப்பை நடத்துவதும்.

திருடர்கள் கற்பழிப்பதும் இப்படியான ஒன்றே, ஆளில்லாத நாளில் கன்னம் வைத்து பூட்டை உடைத்து கொள்ளையடித்து போவது ஒருவகை...அவர்கள் பொருளை மட்டுமே திருடுகிறார்கள், ஆனால் ஒரு வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து கணவன்,மகனை அடித்து கட்டி வைத்து பின் மனைவி மற்றும் மகளை கற்பழித்ததுவும் மிகவும் கொடூரமானது, அதற்க்கு காமம் மட்டும் தான் காரணமென்றால் அந்த வீட்டில் கொள்ளையடித்த பணத்தை வைத்து வேறு எங்காவது அந்த காமத்தை அவர்கள் வாங்கியிருக்கலாம், ஆனால் அன்றைய இரவில் அந்த வீட்டின் உட்சபட்ச ஆளுமையையும் அதிகாரத்தையும் அந்த கொள்ளையர்கள் கையில் எடுத்துக்கொண்டார்கள் அதனால் அந்த வீட்டினரின் மீதான ஒடுக்குமுறையை பொருட்களை கொள்ளையடிப்பதன் மூலம் மட்டுமின்றி கற்பழிப்பின் ஊடாகவும் நடத்தினார்கள்.

வெள்ளைக்கார டூரிஸ்ட் பெண்களை கற்பழிக்கும் இந்தியர்களுக்கும் இதே மாதிரியான காரணம் தான்...

கற்பழிப்பு என்பது உட்சபட்ச ஒடுக்கு முறையின் கொடூரமான சாட்சி, ஒரு இடத்தில் கற்பழிப்பு நடந்தால் அந்த இடத்தில் உட்ச பட்ச ஒடுக்குமுறை நடக்கிறது என்று அர்த்தம், அது தவிர வேறு எந்த வியாக்கியானமும் சாட்சியும் அங்கு நடைபெறும் உட்ச பட்ச ஒடுக்குமுறையை அறிவிக்க தேவையேயில்லை.


அ.மார்க்ஸ் இன் அரைலூசு பேட்டி என்ற என் முந்தைய பதிவில் "மட்டகளப்புகாரர்கள் என்பதற்காக யாழ் அல்லது வன்னி பிரதேச ஆட்கள் மட்டக்களப்பு பெண்களை கற்பழித்தார்களா? ஆனால் தமிழன் என்பதற்காக சிங்கள வெறியர்கள் தமிழ் பெண்களை கற்பழிக்கிறார்களே??" என்ற என் கேள்விக்கு ஆக மொத்தம் "கற்பழிப்பு"தான் உங்களுக்கு ஒடுக்குமுறைக்கான அளவுகோலா? பார்ப்பனர்கள் யாரும் தலித் பெண்களைக் 'கற்பழிக்கவில்லை". எனவே பார்ப்பனர்கள் தலித்துகள் நண்பர்கள் என்று கூட ஒரு சூத்திரம் போடலாமே! என்று கேட்டிருந்தார்... சுகுணா திவாகர்.

சுகுணா திவாகருக்கும் அதற்கு ஆமாம் போட்ட சஞ்சய்க்கும் சிங்கள-தமிழ் இன முரண்களுக்கும் தமிழ்-தமிழ் பிரதேச முரண்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் அரை லூசுத்தனமாக உளறும் அ.மார்க்ஸ்க்கும் இக்கட்டுரை சில பதில்களை சொல்லியிருக்கலாம்.

வித்தியாசங்களின் அரசியல் பேசிய அ.மார்க்ஸின் அரை லூசு பேட்டியும் சில எதிர்வினைகளும்

புலிகளை மட்டுமே வைத்து பிரச்சனைகளை அணுகுவதை சற்றே ஒத்தி வைப்போம் என்று கீற்றில் வெளியான "புதிய புத்தகம் பேசுது" இதழில் ஒரு செவ்வி வழங்கியிருக்கிறார் அ.மார்க்ஸ்.

பேட்டி முழுக்க தம் இலக்கிய சகா "ஷோபா சக்தி"யை போல முழுக்க பேசியிருப்பது புலிகளின் மீதான விமரசனங்கள் மட்டுமே, காங்கிரஸ்காரர்களும் புலி எதிர்ப்பாளர்களும், திடீரென ஞானோதயம் பெற்ற திருவாளர் மு.கருணாநிதி யும் அவரவர்கள் பாணியில் செய்யும் புலியெதிர்ப்பு என்பதன் ஊடக தமிழர் போராட்டங்களை சிறுமைபடுத்தும் வேலையை இங்கே அ.மார்க்ஸ் தம் அறிவுஜீவி பாணியில் செய்திருக்கிறார்.

வித்தியாசங்களின் அரசியல் பேசியவர் அ.மார்க்ஸ், இன்னமும் கேட்டால் அ.மார்க்ஸ் என்னை கவர்ந்த இடம் அவரின் "வித்தியாசங்களின் அரசியல்" பற்றிய எழுத்துகளுக்கு பின் தான்.... ஆனால் அந்த வித்தியாசங்களின் அரசியலை வக்கனையாக பேசிவிட்டு, தமிழ் - சிங்கள இன வித்தியாசம், தமிழ் - சிங்கள இனங்களுக்கிடையான முரண்பாடுகள், சிங்கள இனம் தமிழினத்தின் மீதான அழிப்பு என கடும் முரண்களோடு இருக்கும் தமிழ்-சிங்கள இன முரண்பாடும், கிழக்கு-வடக்கு மற்றும் மலையக தமிழர்களுக்கிடையேயான வேறுபாடுகள், யாழ்மேலாதிக்கம் பற்றி பேசுதல் என்பதும் ஒன்றா? நிச்சயமாக இல்லை, இந்த இரண்டு வித்தியாசங்களும், முரண்களும் வெவ்வேறான தாக்கங்கள், வெவ்வேறான சீரியஸ்னஸ் உள்ள பிரச்சினைகள்... ஆனால் வித்தியாசங்களின் அரசியல் பேசிய அ.மார்க்ஸ் தமிழ்-சிங்கள இனப்பிரச்சினையையும் தமிழர்களுக்கிடையேயான பிரதேச வாதப்பிரச்சினையையும் ஒன்று போல காட்ட முயலுகிறார். மட்டகளப்புகாரர்கள் என்பதற்காக யாழ் அல்லது வன்னி பிரதேச ஆட்கள் மட்டக்களப்பு பெண்களை கற்பழித்தார்களா? ஆனால் தமிழன் என்பதற்காக சிங்கள வெறியர்கள் தமிழ் பெண்களை கற்பழிக்கிறார்களே? கிழக்கு-வடக்கு-மலையக தமிழர்களுக்கிடையேயான பிரச்சினைகள் சென்னை-மதுரை பிரச்சினை மாதிரியானது, வட தமிழ்நாடு தென் தமிழ்நாடு என பிரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறார்களே சிலர், அம்மாதிரியான பிரச்சினை(வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் சீரியஸாகவும் கூடுதலாகவும் இருக்கலாம்) ஆனால் அ.மார்க்ஸ்க்கு தமிழ்-சிங்கள இன பிரச்சினையும் தமிழர்களுக்குள்ளான பிரச்சினையும் ஒன்றோ? மேலும் அரசியல் பிரச்சினைகளில் Priority Politics என்பதுவே மற்ற எதையும் விட முக்கியமானதில்லையா? Priority Politics படி இந்த இரண்டு பிரச்சினைகளில் எவை அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதும் அழிவை ஏற்படுத்துவதுமானது? எவை எல்லாவற்றிற்கும் முன்பாக தீர்க்கப்படவேண்டியது.. இல்லை இல்லை இரண்டும் சமமென சொல்வாரா அ.மார்க்ஸ்? இரண்டும் சமமென சொன்னால் பிறகென்ன வித்தியாச அரசியல்?

அதிலும் குறிப்பாக "வடக்கிலிருந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இன்னும் அவர்கள் நாடு திரும்ப இயலவில்லை." என்று கூறும் அ.மார்க்ஸ் குறைந்த பட்சம் யாழ்பாணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் கடந்த 12 ஆண்டுகளாக இல்லை, இருந்தும் ஏன் இன்னும் முஸ்லீம்கள் யாழ்பாணத்தில் மீள் குடியேற்றப்பட வைக்கப்படவில்லை? அதன் பின்னுள்ள அரசியல் என்ன? என்ற கேள்வி எழவில்லையா இந்த அறிவுஜீவி அ.மார்க்ஸ்க்கு

அடுத்ததாக தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவாக பேசுபவர்களை புலிமுகவர்கள் என்று சிறுமை படுத்தி முத்திரை குத்துவது, அப்போ புலியை விமர்சிப்பவர்கள் எல்லாம் சிங்கள ராஜபக்சே முகவர்கள் என்று முத்திரை குத்தலாமா? அப்போ அ.மார்க்ஸ் சிங்கள முகவரா?

அடுத்ததாக கம்யூனிச இயக்கங்களுக்கு தன் ஜால்ராவை ஓங்கி ஒலிக்க தட்டும் போது "இரு தரப்பிலும் இடதுசாரிகள் தான் ஓரளவு நடுநிலையுடன் இனவெறிகளுக்கு அப்பால் நின்று இந்தப் பிரச்சினையை அணுகி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் சொல்ல மறக்கக் கூடாது. சமீபத்தில் தமிழகமெங்கும் மக்களைச் சந்தித்துப் பேசிய இலங்கையில் உள்ள ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சிரீதுங்க ஜெயசூர்யாவின் பேச்சை நீங்கள் கேட்டிருப்பீர்கள் தானே." என்று சொல்லும் அ.மார்க்ஸ்க்கு சிரீதுங்க ஜெயசூர்யாவை ஞாபகம் வைத்தும் சொல்லும் அ.மார்க்ஸ்க்கு இடதுசாரி ஜேவிபியின் தமிழர்களுக்கு எதிரான அகோர கொலைவெறி எதிர்ப்பை மறந்துவிட்டாரோ...

மறைமுக பார்ப்பன போலி கம்யூனிச இயக்கமான மகஇகவை குறிப்பிட்டு சொல்லும் போது "ம.க.இ.க முதலிய அமைப்புகள் புலிகளைப் பாசிஸ்ட் இயக்கம் என்றே கூறுகின்றனர்" என்று கூறுகிறார், அ.மார்க்ஸ் அண்ணே ம.க.இ.கவையும் ஈ.பி.ஆர்.எல்.எஃப்பையும் இணைக்கும் சங்கிலி "ரோ ரோ ரோ ரோட்டில் கட்டுண்டு கிடக்குதாமே? அது பற்றி எதுவும் உங்கள் நக்சல் தோழர்களிடம் விசாரிச்சி சொல்லுங்களேன்...

சந்தடி சாக்கில் தமிழ் தேசிய கருட்துடையவர்களை பார்ப்பன ஆதரவாளர்கள் போன்ற தொரு தோற்றம் தரவைக்கும் முயற்சி, "திராவிட" பார்ப்பனிய எதிர்ப்பையும் திராவிடத்தையும் மறுவாசிப்புக்குள்ளாக்க வேண்டிய சூழல் உள்ளது, நன்றாக ஆய்ந்து பார்த்தால் தமிழனை கெடுத்தது பார்ப்பனர்கள் மட்டுமா அல்லது அடுத்தவனும்(அதாவது அடுத்துள்ளவனும் அதவாது பக்கத்தில் இருக்கும் தேசிய இனங்களும் இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் தெலுங்கர்களும், கன்னடர்களு, மலையாளிகளும்) சேர்ந்து கெடுத்தானா என்று ஆராயவேண்டியுள்ளது.


முற்போக்கு கருத்துகள், சிந்தனைகள் என்பவைகள் எல்லாம் இவர்களுக்கு இடத்துக்கு இடம் மாறும் போல....

ஈழம் இன்னும் எத்தனை பேரின் முகமூடியையும் முற்போக்கு வேசங்களையும் கலைக்கப்போகிறதோ தெரியலையே!!!

வன்னியர் நலவாரியம், முதலியாருக்கு இடஒதுக்கீடு

வன்னியர் நல வாரியம் அமைப்பு - முதல்வர் கருணாநிதி அறிவிப்பு

முதலியாருக்கு இடஒதுக்கீடு கோரி மாநாட்டுக்கு அழைக்கிறார் புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சன்முகம்

'இலங்கை' தமிழர் பிரச்சினையை தீர்க்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஜெயலலிதா உண்ணாவிரதம்.

கொங்கு நாடு முன்னேற்ற பேரவை - புதிய கட்சி ஆரம்பம்


-- அடேடே தேர்தல் வந்துருச்சா?