திமுக தலைவர் பதவி பத்தாவது முறையாக ரெனியூ செய்யப்பட்டது



இன்று திமுக தலைவர் பதவி வழக்கம் போல பத்தாவது முறையாக ரெனியூ செய்யப்பட்டது...

என்ன இருந்தாலும் திமுக வின் உட்கட்சி சனநாயகம் சும்மா தூள் தான், இதே பாருங்க அதிமுகனா பொதுச்செயலாளர் பதவி நிரந்தரமா செல்வி ஜெயலலிதாவுக்கு, பாமக தலைவர் பதவி முதலில் தீரன் அப்புறம் கோ.க.மணி அது யாரா இருந்தாலும் மருத்துவரய்யா கை காண்பிப்பவருக்கு தான், ஆனா பாருங்க திமுக தான் உட்கட்சி சனநாயகத்தை பேணும் ஒரே கட்சி, கலைஞரை எதிர்த்து தலைவர் பதவிக்கு யாரும் மனுதாக்கல் செய்யலைன்னா கலைஞர் என்னங்க செய்வார்... எப்படியோ உட்கட்சி சனநாயகத்தை காப்பாத்திட்டாங்க...

ஆமாம் மூணு வருசம் முன்னால தலைவர் தேர்தல் அன்னைக்கு அறிவாலயம் பரபரப்பா இருந்ததாமே? சேலம் வீரபாண்டியாரால... இன்னைக்கு ஒன்றுமில்லையா?

படிக்க தட்ஸ்டமில் செய்திகள்





சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவின் தலைவராக 10வது முறையாக முதல்வர் கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக அன்பழகனும், புதிய பொருளாளராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டனர்.

திமுக உள்கட்சித் தேர்தல்கள் நடந்து வருகின்ரன. இன்று தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்வு நடைபெற்றது.

தலைவர் பதவிக்கு கருணாநிதி, பொதுச் செயலாளர் பதவிக்கு அன்பழகன், பொருளாளர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் ஆகியோரது பெயர்களில் மட்டும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இன்று காலை 10 மணிக்கு திமுக பொதுக்குழு கூட்டம் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் கூடியது. கூட்டத்தில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.




அதில், தலைவராக கருணாநிதி, பொதுச் செயலாளராக அன்பழகன், பொருளாளராக ஸ்டாலின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து மூன்று பேருக்கும் ஆளுயர மாலைகள் அணிவிக்கப்பட்டன. முதல்வர் கருணாநிதிக்கும், அமைச்சர் அன்பழகனுக்கும், மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி ஆசி பெற்றார்.

பின்னர் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், திமுக முன்னணியினர், இயக்குநர் பாக்யராஜ், போட்டி மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் நின்று மூன்று தலைவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.

மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம், அமை‌ச்ச‌ர் கோ.‌சி.ம‌ணி ஆ‌கியோ‌ர் கா‌லி‌ல் ‌விழு‌ந்து ஆ‌சி பெ‌ற்றா‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன்.

கலைஞரை நம்பினார் கைவிடப்படார்?

கலைஞரை நம்பினார் கைவிடப்படார்?



இன்று

கலைஞர் டிவி சரத் ரெட்டி....















நாளை

ஆ.... ராசா??






????







என்னது நேற்றா? ஸாரி லிஸ்ட் போட்டு மாளாது.... அவ்ளோ இருக்கு

கலாச்சார பாசிஸ்ட்களின் டிவியில் சாருநிவேதிதா

ஒன்னுமில்லை சாருநிவேதிதா மக்கள் தொலைகாட்சியில் வரும் புத்தாண்டு தினத்தன்று காலை பத்து மணிக்கு சாரு நிவேதிதா, தமிழ்ச் சமூக, கலாச்சார, இலக்கியச் சூழல் பற்றிப் பேசுவார் என்று அவர் தளத்தில் அறிவுப்பு வந்துள்ளது...

பாமக வின் கொள்கைகள் தாலிபான் கொள்கைகள் என்றும் மருத்துவர்.இராமதாசு அவர்களின் குடி பற்றிய எதிர்ப்புக்கும் இன்ன சில கொள்கைகளுக்கும் கலாச்சார பாசிஸ்ட்(மிகசரியாக இந்த வார்த்தையை சாரு பயன்படுத்தினாரா என்று நினைவில்லை ஆனால் அவர் இணையத்தில் நேரமெடுத்து தேடினால் கிடைக்கும் எந்த வார்த்தையை பயன்படுத்தினார் என்று) என்றும் கூறியவர்களின் இடத்திலேயே சென்று பேசப்போகிறார், என்ன பேசியிருக்கிறார் என்ற ஆவலுடன் பார்க்க உள்ளேன்...

சிங்கையில் மக்கள் தொலைகாட்சி வருவதில்லை எனவே யாராவது அன்பு நண்பர்கள் பதிந்து வெளியிட்டால் மிக்க மகிழ்ச்சி

அமைச்சர்கள் முதல் அடிமட்டம் வரை திமுகவினரின் நிலபறிப்பு ரவுடியிசம்

ஒவ்வொரு முறை திமுகவுக்கு எதிராகவும் அதிமுகவிற்கு ஆதரவாகவும் வைக்கப்படும் ஒரு முக்கிய விமர்சனம் திமுக வந்தால் ரவுடியிசம் தலைதூக்கிவிடுமென்பது, என்னமோ அதிமுகவிலோ பிற கட்சிகளிலோ ரவுடிகளே இல்லாத மாதிரி, அப்போதெல்லாம் எதிர்வாதமாக வைப்பதென்னவோ திமுக காலத்தில் என்கவுண்டர்கள் செய்யப்பட்ட ரவுடிகளின் எண்ணிக்கை அதிமுக காலத்தில் செய்யப்பட்ட என்கவுண்டர்களை விட அதிகம், என்கவுண்டர்கள் மீதான கடும் விமர்சனமிருந்தாலும் திமுகவினர் காலத்தில் ரவுடியிசம் என்று சொல்வதெல்லாம் பார்ப்பன சதி, எட்செட்ரா எட்செட்ரா என நம்பியிருந்தவர்களில் நானும் ஒருவன்.

முதலில் அமைச்சர் என்.கே.கே.பி ராஜா மீதான நிலபறிப்பு ஆட்கடத்தல் மோசடி வழக்கு, 50 கோடி சொத்தை ஆட்டைய போட நினைத்த அமைச்சர், தொடர்ந்து நீதிமன்றத்தை நாடிய எதிர்தரப்பு(தகவல்கள் எல்லாம் அவர்கள் எந்த வம்புதும்புக்கும் போகாதவர்களாகவே தெரிகின்றது)அதை தொடர்ந்து அமைச்சர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

அடுத்ததாக வீரபாண்டி ஆறுமுகம் மீதான நிலபறிப்பு மோசடி , வழக்கு, அதை எதிர்கொள்ள பேரம்பேசப்பட்டது, இரு அமைச்சர்கள் விசயத்தில் எதிர்தரப்பால் மிரட்டல்கள் எல்லாம் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போன வாரம் நக்கீரனில் திமுக எம்.எல்.ஏ வும் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளருமான செங்குட்டுவன் 2 கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலத்தை அடியாட்கள் துணையோடு 23 இலட்சத்திற்கு ஆட்டைய போட்டுள்ளார் என குற்றசாட்டு.


வலைப்பதிவிலும் கூட கோ.ராகவன் சென்னையில் நிலம் திருடும் பெரிய குடும்பத்துப் பேரன்கள் அவரது சொந்தக்காரர்கள் நிலத்தை பெரிய இடத்து பேரன்கள் ஆட்டையை போட்டது பற்றி இப்படி எழுதியுள்ளார்
...
சினிமாவில் வருவது போல.. ஒரு குடிசை.. ஒரு மாருதி வேன். கொஞ்சம் அடியாட்கள் (மதுரையிலிருந்தாம்)....இப்பிடி இருக்கிறதாம் காட்சி.

காவல்துறையில் புகார் கொடுக்கப் போனாலும் அவர்கள் எந்தப் புகாரையும் ஏற்க மறுக்கிறார்களாம். தமிழகத்தின் பிரபல அரசியல் தலைவரின் மகன் இந்த விஷயத்தில் இருப்பதால் புகார் வேண்டாம் என்று காவல் துறையினரே "நல்லது" சொல்லி அனுப்புகிறார்களாம்.
...


அமைச்சர்கள் 50 கோடி ரூபாய் நிலத்தை ஆட்டைய போட்டால் எம்.எல்.ஏ 2 கோடி ரூபாய் நிலத்தை அபகரித்துள்ளார்கள், இதெல்லாம் கோடி ரூபாய் விசயங்கள் மேலும் அமைச்சர் எம்.எல்.ஏ க்கள் தொடர்பானவை எனவே பத்திரிக்கையில் வந்துள்ளன.

ஆனால் கவுன்சிலர் தொடங்கி இன்னும் ந.செ., கி.செ, வ.செ என திமுகவின் ஏதோ ஒரு 'செ'வை போட்டுக்கொண்டு நடுத்தரவர்கத்தினர்கள் சிறுக சிறுக சேர்த்து ஒரே சொத்தாக இருக்கும் சில இலட்ச ரூபாய் வீட்டு மனைகளை ஆட்டையை போட ஆரம்பித்துள்ளனர், காவல்துறைக்கு சென்றால் கேஸ் கொடுக்க 5,000 ரூபாயில் ஆரம்பித்து ஒரு 20ஆயிரம் ரூபாய் செலவுக்கு பின் திமுக கவுன்சிலர்கள் முன்னிலையில் ஒரு முப்பது பேருடன் கட்டைப்பஞ்சாயத்து நடக்கும், பிறகென்ன கால்வாசிக்கும் குறைவான சொற்ப விலையில் நிலத்தை பறிகொடுத்து அந்த நடுத்தர வர்கத்தினர் மேலும் தொல்லைகள் வராமல் இருந்தால் போதும் என நொந்து வருவார், இவைகள் எல்லாம் எங்கோ கேள்விப்பட்டோ பத்திரிக்கையில் படித்தோ சொல்லவில்லை, எனக்கு தெரிந்த இடங்களிலேயே நடந்துள்ளது. மேற்கொண்டு வேறு தளங்களில் பிரச்சினையை எடுத்து செல்ல உதவ தயாராக இருந்தும் அவர்கள் போதுங்க இதற்கே ரொம்ப பிரச்சினையாகிவிட்டது சனியன் இதோட போனா போதும் என்று அவர்கள் எதற்கும் தயாராக இல்லை.

அரசியல்வாதிகள் அரசு நிலத்தையும் பொறம்போக்கு நிலத்தையும் தான் ஆக்கிரமிப்பார்கள் என்றிருந்தது, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பணக்கார தனியார் நிலங்கள், பிரச்சினைக்குறிய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது ஆனால் இப்போது கருணாநிதியின் திமுக ஆட்சியில் அமைச்சர்கள் முதல் அடிமட்டம் வரை எந்த வில்லங்கமும் இல்லாமல் பக்கா டாக்குமெண்ட்டுகளோடு இருக்கும் தனியார் நிலங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளனர்.

50கோடி சொத்தை 5 கோடி செலவு செய்தாவது காப்பாற்றிடலாம் என்பவர்கள் வழக்கு பத்திரிக்கை என செல்கிறார்கள், 5 இலட்ச ரூபாய் சொத்துக்கு வெறும் சாபம் மட்டுமே கொடுக்க முடிந்த, அதுவும் சத்தம் போட்டு சாபம் கொடுக்க முடியாமல் வாய்க்குள்ளேயும் வீட்டுக்குள்ளேயும் வெறும் சாபம் மட்டுமே கொடுக்க முடிந்த சாதாரண நடுத்தரவர்கத்தின் சேமிப்பு நிலங்களை பிடுங்கி தின்னும் இந்த பிணம் தின்னும் ஈனத்தொழிலுக்கு
இவர்கள் எல்லாம் ஏதாவது -----(Fill in the blanks).

ஆனாலும் என்ன பார்ப்பனிய எதிர்ப்பு என்ற பெயரில் திமுகவினரின் இந்த ரவுடித்தனத்தையும் மறைக்கலாம் வாங்க....

அறிவுகெட்ட முண்டம் செந்தழல் ரவி - ரொம்ப நல்லவரால் பால்ய நண்பனுக்கே அந்த கதி...


எத்தனை தடவை ரொம்ப நல்லவருங்க டவுசரை கழட்டுவ, உனக்கு இதுக்கெல்லாம் நேரமிருக்கு, நான் சில மாதங்களுக்கு முன்னால ஒரு விசயம் கேட்டிருந்தேனே அதை செய்து தர மட்டும் நேரமில்லையா?

உனக்கு போன் அடிக்கலாம்னு பார்த்தா காலிங் கார்டுலயே 2 வெள்ளிக்கு 5 நிமிசம் தான் பேசமுடியுமாம்!...

ரொம்ப நல்லவர் தன் பால்ய ஸ்நேகிதனுக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்தார், அந்த பால்ய ஸ்நேகிதனும் அதை எல்லோரிடமும் சொல்லுவார், அது மட்டுமல்லாம அந்த பால்ய ஸ்நேகிதர் தனியா தொழில் அப்படி இப்படின்னு நல்ல நிலைக்கு போயிட்டுருக்கார், அவ்வப்போது அந்த பால்ய ஸ்நேகிதர் நம்ம ரொம்ப நல்லவர்கிட்ட தன் தொழில் நல்ல நிலையில் போகுதுன்னு சொல்லிக்கிட்டுருப்பார், ஒரு நாள் நம்ம ரொம்ப நல்லவர் இந்தியா போனப்ப பால்ய ஸ்நேகிதரை பார்க்கனும்னு சொன்னப்ப அந்த பால்ய ஸ்நேகிதர் போன் செஞ்சிட்டு வான்னு சொல்லியிருக்கார், அதுக்காக அந்த பால்ய ஸ்நேகிதரை நன்ற் மறந்தவன், என்னை வெறுப்பேத்தனும்னே அவன் தொழில் வெற்றிகளை சொல்றான் அது இதுன்னு பால்ய ஸ்நேகிதரை வில்லனாக்கி ஒரு கதை எழுதி நம்ம ப்லாக்ல போட்டுட்டார், என்ன கொடுமைன்னா அந்த பால்ய ஸ்நேகிதரும் பதிவு படிக்கிறவர்தான். அந்த பால்ய ஸ்நேகிதர் பதிவு படிப்பாருன்னு தெரிஞ்சே அவரை வில்லனாக்கி இல்லாததை பொல்லாததை எழுதி கதை எழுதுறாருன்னா புரிஞ்சிக்கோ மாம்ஸ்

அப்புறம் இன்னொரு கதையில நம்ம ரொம்ப நல்லவர் ஆபிஸ்ல வேலை செய்யுற நண்பர் மோட்டார் சைக்கிள்ல லிப்ட் கொடுக்கலையோ ஏதோ, அந்த கடுப்புல அந்த மோட்டார் சைக்கிள் நண்பரை வில்லனாக்கி ஒரு கதை, எழவு அந்த மோட்டார் சைக்கிள் நண்பர் பதிவெல்லாம் படிக்கிறாரோ என்னமோ தெரியலை.

பால்ய ஸ்நேகிதனுக்கே அந்த ட்ரீட்மெண்ட்ன்னா பதிவு ஸ்நேகிதர்களுக்கு என்னா ட்ரீட்மெண்ட்டு கிடைக்கும்? அப்போ எதிரிகளுக்கு இன்னும் என்னா ட்ரீட்மெண்ட் கிடைக்கும்? யோசிச்சி பாரு...

ரொம்ப நல்லவர்கிட்ட பழகனா பழகிட்டு போகட்டும், நீ ஒன்னும் சொல்ல வேண்டாம், அவங்கவங்க பட்டு தெரிஞ்சிகிட்டும் மாம்ஸ்... உனக்கென்ன ஆச்சி?


மாம்ஸ் பழகுறாங்கனா பழகிட்டு போறாங்க, எல்லாம் அனுபவிக்கும் போது தெரிஞ்சிக்கிட்டுபோறானுங்க, 'காலம்' எனக்கு புரியவைக்கலையா? அது போல அதே 'காலம்' அவங்களுக்கு புரியவைக்கும்....

மாம்ஸ் உன்னால இன்னைக்கு பலரும் வேலையில் இருக்காங்க, உன்னால பல நல்ல விசயங்கள் நடந்திருக்கு, இன்னும் கேட்டா பதிவுலகின் சாக்கடையில் இறங்கி அதை சுத்தபடுத்தியவர்களின் ஒருவன் நீ, அதனால் உனக்கு ஏற்பட்ட மன உளைச்சல், உன் குடும்பத்திற்கு ஏற்பட்ட உளைச்சல்கள், பண விரயங்கள், நேர விரயங்கள், கேரியர் செட் பேக் எல்லாவற்றிற்கும் மேலே நீ எதிர்நோக்கிய கொலை மிரட்டல்கள் என பல விசயங்களை தோளில் போட்டு இந்த பதிவுலகின் சாக்கடையை சுத்தம் செய்தவனில் ஒருவன், மற்ற பேசுறவனுங்களுக்கு என்னா மயிரா போச்சி? மிஞ்சி போனா நெட்டுல உக்காந்து வீட்லயும் அலுவலகத்திலும் கிடைக்கும் வெட்டி நேரத்தில் பதிவு போட்டுட்டு போவானுங்க, அவனுங்களுக்கு ஒரு நட்டமும் கிடையாது....

மாம்ஸ் உன்னால வேலை கிடைத்து, உன் உதவியால் தொழில் தொடங்கியவர்கள் என உன் அளவிற்கு உன் வயதிற்கு உன் பண வசதிக்கு நீ பிறருக்கு உன் நேரம், பணம் எல்லாம் செலவு செய்து உதவியது நிச்சயம் பெரிய விசயம். உன் நேரம் பொன்னானது.

ஒரு போலியாக இருப்பதற்கு தேவையான ஓய்வு நேரமும் இணையமும் அதற்கான மனநிலையும் சிலருக்கு இங்கே இருக்கு அதனால் அவனுங்களை அவனுங்க போக்கில் விட்டுவிடு மாம்ஸ், நீ பிறருக்கு உதவுவதை தொடர்ந்து செய்.

இத்தனையும் மீறி நீ டவுசர் கழட்டும் நடவடிக்கையில் தொடர்ந்தால் "அறிவு கெட்ட முண்டம் செந்தழல் ரவி, எவன் எப்படி போன உனக்கென்ன?"