தெனாலி பல்சுவை தளம் - அறிமுகம்

தெனாலி ராமன் ஒரு அதி புத்திசாலியான நகைச்சுவை தூக்கலாக சாதுரியமாக செயலாற்ற கூடிய ஒரு பல்செயல் ஆளுமை...

அந்த தெனாலி ராமன் போன்றே தெனாலி இணைய தளமும்..

தெனாலி தளம் அசத்தலான வடிவமைப்பு, சமூக சிந்தனைகளோடு கூடிய கட்டுரைகள் ஸ்பெஷல்ஸ் பகுதியில்(கண்ணீர் தேசம் போர் என்ன செய்யும், இந்தியாவிடமிருந்து சுதந்திரம் வாங்கிய 50 கிராமங்கள்! என செவிட்டில் அறையும் கட்டுரைகள்...)

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, சினிமா என்ற தலைப்புகளின் கீழ் செய்திகள்...


பிரகாஷ்ராஜ் எழுதும் பெர்சனல் தொடர், திரைப்பட கேலரி , அரசியல் நையாண்டி, ரகசிய தெனாலி(கிசு கிசு??), திரை விமர்சனம் என ஒரு பல்சுவை இணைய தளத்திற்கான அத்தனை அம்சங்களுடன் கலக்கலான தெனாலி தளம்...

பொதுவாக பல்சுவை இணையதளங்கள் தினம் தினம் புதுப்பிக்கப்படாது, ஆனால் தெனாலி தளம் தினம் தினம் நிறைய புதியவைகள் பதியப்படுகின்றன...

உங்களின் படைப்புகளையும் தெனாலிக்கு அனுப்பலாம்...

ஏற்கனவே கலக்க ஆரம்பித்திருக்கும் "தெனாலி" தமிழ் இணையத்தில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க வாழ்த்துகள்..
http://www.thenaali.com/

தமிழ் விக்கிபீடியா - வருந்துகிறேன்

ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ள விக்கிபீடியாவை ஏன் நான் ஆதரிப்பதில்லை என்று ஒரு பதிவிட்டிருந்தேன், விக்கிபீடியாவில் எமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையும் செய்தியையும் சொல்லியிருந்தேன், ஆனால் தமிழ்விக்கிபீடியாவா ஆங்கில விக்கிபீடியாவா என்ற குழப்பத்தில் அது தமிழ்விக்கிபீடியாவில் ஏற்பட்டது போன்ற பொருள் தொனித்துவிட்டது... நான் குறிப்பிட்ட இரண்டும் தமிழ்விக்கிபீடியாவில் ஏற்பட்ட அனுபவம் இல்லை என்பதால் அம்மாதிரி பொருள் தரும் வகையில் எழுதியதற்கு வருந்துகிறேன்...

ஆனால் விக்கிபீடியாவின்(இதில் தமிழும் உண்டு) விதிகள், நடைமுறை பிரச்சினைகள், நிர்வாகியின் கூடுதல் அதிகாரங்கள், எளிதில் குழுக்களால் ஆக்கிரமிக்க படும் அளவிற்கு பலவீனமாக உள்ள விதிகள், குழு பிரச்சினைகள் குறித்தான விமர்சனங்கள் அப்படியே இருக்கின்றன... வேறென்ன விக்கிபீடியா மாதிரி இருக்கிறது காண்பியுங்கள் என்று தான்சொல்ல இயலுகிறதே தவிர இதற்கான களைதலை சொல்ல இயலவில்லை..

ஒரு குழுமம் நடத்துவதோ, ஒரு நிறுவனம் நடத்துவதற்கும் விக்கிபீடியா என்பதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு, ஒரு செய்தி முரசொலியில் வருவதற்கும் நமது எம்ஜியாரில் வருவதற்கும் தினமலரில், தினகரனில் வருவதற்கும் தினமணியில் வருவதற்கும் அதன் உண்மை தன்மைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு, முரசொலி, நமது எம்ஜிஆர், தினமலர் இன்ன பிற தாள்களை படிக்கும் போது செய்திகளோடு சேர்ந்து அந்த நிறுவனத்தின் நிலைப்பாடும் அது எப்படி அதன் செய்தி சேவையில் எதிரொலிக்கும் என்பதை அறிந்தே பகுத்துணர்ந்தே படிப்பார்கள், அது போல ஒரு கலைகளஞ்சியம் ஒரு குழுமத்தாலோ ஒரு நிறுவனத்தாலோ நடத்தப்பட்டால் அதன் சார்புகள் நடைமுறைகள் எல்லாம் கணக்கில் கொள்ளப்பட்டே அது படிக்கப்படும் அதன் தாக்கமும் இருக்கும், ஆனால் பொதுப்படையான பெயரில் இயங்கும் (ஆங்கில)விக்கிபீடியா குழுமத்தின் கட்டுப்பாட்டில் பக்க சார்புடையதாக இருந்தாலும் reference என்றால் அதிலிருந்தே காட்டுகின்றனர்.

எளிதாக பெறப்படாத நடுநிலைபெயர். எளிதில் கிடைக்காத பொதுவானவை என்ற அங்கீகாரம் விக்கிபீடியாவிற்கு எளிதில் கிடைக்கும் போது அதன் நடைமுறைகள் விதிகள் நிர்வாகி அதிகாரங்கள் எல்லாம் இத்தனை குழப்பமாகவும், எளிதில் குழு ஆக்கிரமிப்புக்குள்ளாகும் வகையிலும் நிர்வாகிகள் நினைத்தால் எளிதில் எதையும் தூக்கலாம்(அப்புறம் போராடி பெற வழி உண்டு என்றாலும்) என்னும் போது நிச்சயம் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். இன்று நான் நாளை வேறு யாரேனும் விமர்சனம் செய்வார்கள்.

எனக்கு மின்மடலிலும் பின்னூட்டங்களிலும் மறுமொழிந்த அனைவருக்கும் நன்றி...

இந்தியாவிடமிருந்து சுதந்திரம் வாங்கிய 50 கிராமங்கள்!


ராணுவத்தை அனுப்பி, சொந்த தேசத்து மக்கள்மீதே கொலைவெறித் தாக்குதல் நடத்தும் கொடூரம் ஈழத்தில் நடந்தபோது அதைக் கண்டித்த, கொதித்தெழுந்த மனிதாபிமானிகள் பலர் இப்போது மேற்கு வங்காளத்தில் நடப்பது என்ன என்பதை குறைந்தபட்சம் தெரிந்துகொள்ளக்கூட விரும்பவில்லை. ‘அது மாவோயிஸ்ட் வன்முறை...’ அவ்வளவுதான்! வழக்கம்போல் இந்த இங்கிலீஷ் மீடியா, போர்க்களத்தில் நின்று செய்தி சேகரிப்பது போல சாகசத்தனங்களில் ஈடுபட்டிருக்கிறது. ஏதோ எல்லையில் இந்திய ராணுவமும் பாகிஸ்தான் ராணுவமும் சண்டையிடுவதை வர்ணிப்பது போல் இருக்கிறது அவர்களின் செய்கைகள். லால்கர் என்ற நடுத்தரமான நகரில் இருக்கும் ஆள்நடமாட்டமில்லாத ஒரு போலீஸ் ஸ்டேஷனைப் பிடித்ததும், பரபரப்பான ஃபிளாஷ் நியூஸ்! ஏதோ போரில் சீன வீரர்களை துரத்திவிட்டு சீனப் பெரும்சுவரைக் கைப்பற்றியது போன்ற கூக்குரல்கள்! மாநில முதல்வர் உடனடியாக போலீசுக்கும் துணை ராணுவப் படைக்கும் வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார். இந்த ஆரவாரங்களுக்கு நடுவே சந்தாலி பழங்குடியினரின் கூக்குரல்கள் யார் காதுகளிலும் விழவில்லை...

மேலும் படியுங்கள் இங்கே அழுத்தி

செந்தழல்ரவியிடம் கேளுங்கள்


செந்தழல் ரவி க்கு அறிமுகம் எதுவும் பெருசாக தேவையில்லை, ஜூன் 18, வியாழன் அன்று பிற்பகல் 2.00-4.00 இந்திய நேரத்தில் தமிழ்வெளி தளத்தின் உரையாடியில்(chat) டேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடுகிறார்... டேட்டா எண்ட்ரி தொழில் மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றிய உங்கள் சந்தேகங்கள், விபரங்களை அவரிடம் கேளுங்கள்...

செந்தழல்ரவியிடம் கேளுங்கள்


செந்தழல் ரவி க்கு அறிமுகம் எதுவும் பெருசாக தேவையில்லை, ஜூன் 18, வியாழன் அன்று பிற்பகல் 2.00-4.00 இந்திய நேரத்தில் தமிழ்வெளி தளத்தின் உரையாடியில்(chat) டேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடுகிறார்... டேட்டா எண்ட்ரி தொழில் மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றிய உங்கள் சந்தேகங்கள், விபரங்களை அவரிடம் கேளுங்கள்...

ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ள விக்கிபீடியாவை ஏன் நான் ஆதரிப்பதில்லை

விக்கிப்பீடியா என்பது ஒரு ரெஃபரன்ஸ் தளமாக பயன்படுத்தப்படும் அளவிற்கு எதைப்பற்றியும் அதை மேற்கோள் காட்டி சொன்னால் அது சரியானதாக இருக்கும் என்று நம்ப தகுந்த அளவிற்கு செல்வாக்கு செலுத்த கூடிய ஒரு தளம், அப்படியென்றால் அந்த தளம் எத்தனை தூரம் நடுநிலையாக இருக்க வேண்டும்? எத்தனை தூரம் எந்த குழுவின் ஆதிக்கமும், தனி நபர்களின் ஆதிக்கம் இல்லாமல் இருக்க வேண்டும்? ஆனால் அப்படி இருக்கின்றதா தமிழ் விக்கி பீடியா தளம்?

இது பற்றியெல்லாம் எதுவுமே இல்லாமல் விக்கிபீடியா என்பது ஏற்கனவே அதில் உள்ளே புகுந்த ஒரு குழுவின் ஆதிக்கத்தில் இருப்பது மிக மோசமானது...

சில ஆண்டுகளுக்கு முன் விக்கிபீடியாவில் தகவல்களை தேடியபோது அதிர்ச்சியே மிஞ்சியது... உதாரணத்திற்கு பாமக அன்புமணி அவர்களை பற்றி எழுதியிருந்த தகவல் உண்மைக்கு புறம்பானது, அது என்ன தகவல் என்றால் அன்புமணி அவர்கள் ஒரு பிராமண பெண்ணை அந்த பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக கடத்திக்கொண்டு திருமணம் செய்து கொண்டார் என இருந்தது, அன்புமணி ராமதாஸ் அவர்கள் திருமணம் செய்து கொண்டவர் கிருஷ்ணசாமி என்கிற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரின் மகள், அவர் சிவப்பு நிறமாக இருப்பார் என்பதாலோ என்னவோ அவரை பிராமண பெண், கடத்திக்கொண்டு திருமணம் செய்துவிட்டார் என்றெல்லாம் இருந்தது, இதை நான் திருத்தி விட்டு வந்தால் மறுநாளே என் திருத்தம் அங்கே இல்லை, மீண்டும் பழைய கதையே அங்கே இருந்தது, பிரபலமான அரசியல் வாதி காங்கிரஸ் தலைவர், எம்.பி என்றெல்லாம் இருக்கும் ஒரு அரசியல்வாதியின் மகளை திருமணம் செய்திருந்த போதே இம்மாதிரி செய்திகளை விக்கிபீடியா தளத்தில், அதை மாற்றம் செய்தாலும் மீண்டும் மீண்டும் அங்கே வருகிறது.

பெரியார் பற்றியும் விக்கிபீடியாவில் எழுதப்பட்டிருந்த அவதூறுகளை திரு அவர்களும் அருள் போன்றோரும் மாற்றி மாற்றி எழுதி சலித்தே போய்விட்டார்கள், முதல்நாள் இவர்கள் மாற்றுவார்கள் மறுநாளே இவர்கள் மாற்றியது இருக்காது... காரணம் ஏற்கனவே அதில் உள்ளே புகுந்தவர்களின் ஆதிக்கத்தில் இருப்பதுவே, இன்றைக்கு விக்கிபீடியாவில் சேருபவருக்கு இருப்பதை விட முன்பே அதில் இணைந்தவர்களுக்கு பிரிவிலேஜ் அதிகம் என நினைக்கிறேன்.

டோண்டு போன்றவர்கள் வலைப்பதிவில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மதிவதினையை கடத்தி திருமணம் செய்துகொண்டாரா என்று தானே கேள்வி தானே பதில் போன்ற தம் வலைப்பதிவில் எழுதினால் யாருக்கும் பிரசிச்னையில்லை ஏனெனில் டோண்டு போன்றோரின் பக்க சார்புகளும் விருப்பு வெறுப்புகளும் நன்றாகவே வாசகர்களுக்கு தெரியும், ஆனால் விக்கிபீடியா ஒரு நடுநிலை தளமாக அதை மேற்கோள் காட்டும் தளமாக நம்(இணையத்தில் உள்ளவர்கள்) உழைப்பில் உருவாக்கி அதன் பின் அதில் இம்மாதிரி உண்மைக்கு புறம்பான தகவல்களை திருத்தி எழுதிணாலும் ஏற்கனவே அதில் நடுநிலைதளமாக பெயர் எடுத்துக்கொண்டு ஒரு சிலருக்கு ஒத்த மாதிரியான கருத்துகள் மட்டுமே அதில் வெளியாகும். நாம் எவ்வளவு மாற்றினாலும் மறுநாளே நம் மாற்றம் திருத்தப்படும்.

இது மாதிரியான ஒரு தளத்துக்கு நம் உழைப்பை தர வேண்டுமெனில் அதன் குறைகள், முன்பு சேர்ந்தவன் பின்பு சேர்ந்தவன் என்ற பிரிவிலேஜ், நடுநிலை கட்டுரை என முத்திரை குத்துவதும் பக்க சார்பு கட்டுரை என லேபில் ஒட்டுவதுமான குறைகள் எல்லாம் திருத்தப்படாமல் விக்கிபீடியாவுக்கு ஆதரவு அளிப்பது என்பது மிக தவறான ஒரு தகவலை பரப்புவதற்கு நாமும் காரணமாகிவிடும்.

எனவே தான் ஒரு சிலரின் ஆதிக்கத்தில் இருக்கும் விக்கிபீடியாவிற்கு நடுநிலை பெயர் கொடுத்து, உழைப்பை கொடுத்து அந்த சிலருக்கு சாதகமான கருத்துகளே நடுநிலை கருத்துகள், ரெஃபரன்ஸ் க்கு தகுந்தவை என்று கொண்டு போகப்படும் நிலைக்கு நானும் ஒரு காரணமாக இருக்க விரும்பவில்லை... அதனால் நான் விக்கி பீடியாவை ஆதரிப்பதில்லை...
தொடர்புள்ள பதிவுகள்
கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: தமிழ் விக்கிபீடியா

வலைப்பதிவர்கள் விக்கிப்பீடியாவுக்கு ஆற்றக்கூடிய பங்களிப்புகள்

விடுபட்டவை » இன்று பதிவர்களுக்கான ...

தமிழகமும், தமிழர்களும் புறக்கணிப்படுகின்றனர்-ஆகா தலைவர் எதுக்கோ அடிபோடுறார்.

தமிழகமும், தமிழர்களும் புறக்கணிப்படுகின்றனர்-மக்களவையில் திமுக காரசாரம்...

சென்னை: ஈழத் தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் சம உரிமை கொடுக்க வேண்டும். ஜனாதிபதி உரையில் தமிழ்நாடும், தமிழர்களும் புறக்கணிக்கப்பட்டதாக நாங்கள் உணர்கிறோம் என திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன் காரசாரமாக பேசினார்....

தட்ஸ்டமில் செய்தி

உடன்பிறப்பு1: இன்னுமாடா இந்த உலகம் நம்மை நம்புது? கனிமொழி என்னு தமிழச்சிக்கு இன்னும் கேபினேட் அமைச்சர் கொடுக்காமல் தமிழகத்தை புறக்கணிக்கின்றது...

உடன்பிறப்பு2: விடுங்க உடன்பிறப்பே, அதான் தலைவர் கலைஞர் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறதுன்னு அடி போட்டுட்டாரில்லையா கனிமொழிக்கு கண்டிப்பா கேபினேட் கிடைச்சிரும்

தரணி இயக்கத்தில் கலைஞர் கருணாநிதியின் தூள் நடிப்பு

தரணி இயக்கத்தில் கலைஞர் கருணாநிதியின் 'தூள்' நடிப்பில் பட்டைய கிளப்பிய நாடகம்... எத்தேச்சையாக பார்த்தபோது அசந்துவிட்டேன், 'தூள்'படம் எடுக்கப்பட்டு வெளிவந்த‌ போது இந்த காட்சியை கடுமையாக விமர்சித்தேன், இது தமிழ் உணர்வாளர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவது போன்றது என்று நண்பர்களிடம் பேசும்போது பகிர்ந்து கொண்டேன்... தரணி இயக்கட்தில் தூள் படத்தில் வந்தது ஃப்ரேமுக்கு ப்ரேம் வரிக்கு வரி, வசனத்துக்கு வசனம் அப்படியே கலைஞர் கம் நடிகர் கருணாநிதி நடித்ததில் அப்போது நான் தரன் மீது வைத்த விமர்சனத்தை திரும்ப பெற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக என்ன நடக்கும் என்பதை அன்றே படமெடுத்த தரணி பாராட்டுகிறேன்...

மைடியர் உடன்பிறப்பு பிரியாணி குஞ்சுகள் இதை பார்த்துவிட்டு என்னை திட்டுவதற்கு பதில் அறிவாலயத்தில் மொத்த குடும்பத்தினரும் தின்றுவிட்டு துப்பிய மிஞ்சிய எலும்பு துண்டை பொறுக்க ஓடவும்