போடுங்கய்யா ஓட்டு ரெட்டெலைய பார்த்து...

தேர்தல் என்றால் வாக்காளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஜாலியோ என்னமோ சிறு வயதிலிருந்தே அரசியல் ஆர்வத்தோடு இருக்கும் எனக்கு எப்போதும் குஜாலாக இருக்கும், ஒரு கிரிக்கெட் போட்டியை பார்ப்பது போன்று பத்திரிக்கைகள் படிப்பது, நண்பர்களுடன் அலசுவது, கருத்து கணிப்பு செய்வது என்று ஒரு சுவாரசியமான விசயமாகவே இருந்தது... வலைப்பதிவு எழுத ஆரம்பித்த பின் தளம் இன்னும் விரிவானது, கடந்த சட்டமன்ற தேர்தலில் நிறைய பதிவுகள் தொகுதி நிலவரங்கள் என்று பதிவு செய்திருந்தேன்...

மும்பையில் தீவிரவாதிகள் தாக்கிய அன்று சில மணி நேரங்களில் அந்த செய்திகளை முதலில் வலைப்பதிவுகளில் பார்த்து அதன் பின் இணையத்தில் செய்திகளை தேடினேன், பின் நேரமாகிவிட்டது என தூங்க சென்றுவிட்டேன் காலையில் பார்த்துகொள்ளலாமென்று, பெரிய அளவில் எந்த விதமான பதட்டமோ பதைபதைப்போ எனக்கு இல்லை, அது எனக்கு மற்றுமொரு வருந்த வைத்த செய்தி என்பதை தவிர இந்தியா என்றோ உணர்வுப்பூர்வமாகவோ அது எனக்கு இல்லை.

கிளிநொச்சி முற்றுகை நிலைமை மோசம் என்று உறுதியாக படித்த அன்று இரவு தூக்கமே வரவில்லை அதிகாலை வரை ஒரு ஒரு இணைய தளமாக தேடுகிறேன், அதிர்ச்சியோடும் துக்கத்தோடும் அடுத்த சில நாட்கள் இதே விசயங்களை தேடிக்கொண்டே இருந்தேன், தூக்கம் வரவில்லை, உணவும் இறங்கவில்லை... அன்று ஆரம்பித்தது இன்று வரை தூக்கத்தில் இருந்து அவ்வப்போது விழித்துகொள்வது என நிம்மதியாக தூங்கி பல நாட்கள் ஆயிற்று.

மும்பை தாக்குதல் உணர்வுப்பூர்வமாக என்னை பாதிகவில்லை ஆனால் ஈழம் உணர்வுபூர்வமாக பாதித்துள்ளது இந்திய தேசியம் பற்றி மிக கடைசியாக எஞ்சியிருந்த குழப்பத்தையும் தீர்த்துவைத்தது.

தேர்தல் அறிவுப்புகள் கூட்டணி கூத்துகள் என அல்லோகலப்பட ஆரம்பித்தும் இதில் மனம் ஒட்டவில்லை, தேர்தல் கணிப்புகள் எழுத முக்கியமான அடிப்படை தேவை நாம் எந்த கட்சி வெற்றி பெறவேண்டும் என நாம் நினைப்பதை கணிப்பாக திணிக்க கூடாது, தேர்தல் கணிப்பு எழுதுவது வெறும் கூட்டல் கழித்தல் கணக்கு மட்டுமல்ல. அது ஒரு பக்குவமாக செய்யப்படவேண்டிய கலை முந்தை தேர்தல் புள்ளிவிபரங்கள், கட்சி உள்ளூர் நிலவரங்கள், சாதி, படிநிலை சாதி உருவாக்கிய சமூக தாக்கங்கள், சாதி மத சமூக முரண்கள், என ஏகப்பட்ட விசயங்கள் உள்ளன, இம்முறை தொகுதி மறுசீரமைப்புஅதனால் குறிப்பாக மிக நன்றாக தெரிந்த தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளுக்கு கணிப்பு எழுதுவது "வரும்.... ஆனா வராது..." மாதிரிதான்....

1991,1996 சட்டமன்ற தேர்தலில் தனியாக நின்று சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயங்கொண்டத்தில் தோற்ற பாமக இரண்டாம் இடத்தை பிடித்தது, வெற்றிக்கு வெறும் ஓரிரு ஆயிரம் வாக்குகள் மட்டுமே தேவைப்படும் நிலையில் 2006ல் திமுக கூட்டணியோடு நின்ற போதும் சில ஆயிரம் வாக்குகளில் பாமகவுக்கு மீண்டும் தோல்வி ஏன்? 1999 பாராளுமன்ற தேர்தலில் தொல்.திருமா என்ற வலுவான வேட்பாளரை எதிர்த்து 65ஆயிரம் வாக்குகள் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் பெற்ற பாமக 2001 சட்டமன்ற தேர்தலில் வென்ற போதும் 48 ஆயிரம் வாக்குகளே பெற முடிந்தது ஏன் என்று அலசினால் அது வெறும் கூட்டல் கழித்தல் கணக்கு மட்டுமல்ல, சாதிபடிநிலை இந்த சமூகத்தில் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பது புரியும்.

2001 தேர்தலில் குறிஞ்சிப்பாடியில் பாமக அதிமுக கூட்டணியில் இருந்த போது திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களிலேயே மிக அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் அந்த நேரத்தில் மாநிலமெங்கும் திமுக தோல்வியடைந்திருந்தது, ஆனால் 2006ல் திமுக கூட்டணி மாநிலமெங்கும் வெற்றி பெற்ற போதும் பாமக திமுக கூட்டணியில் இருந்தும் திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெறும் இரண்டாயிரத்து சொச்சம் வாக்குகள் வித்தியாசத்திலே தான் வெற்றிபெற்றார். இதை ஏன் என்று நோண்டினால் உள்குத்து அரசியல், சொந்த சாதிகாரர்களிடம் சம்பாதித்த வெறுப்பு என எக்கச்சக்கமாக வெளிப்படும்.

நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியில் 1996ல் கூட்டணியில்லாமல் பாஜக வெறும் 10,000 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது, 1998ல் எல்லோரும் பாஜகவெற்றி என்று கணித்த போதும் நாகர் கோவிலில் அதிமுக கூட்டணி இருந்தும் அதே 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது, இதையும் நோண்டி பார்த்தால் மதப்பிரச்சினை புரியும்.

குறைந்தபட்ச புள்ளிவிபர அலசல், அரசியல் மற்றும் சமூகத்தின் நிகழ்வுகள் ஏற்படுத்தும் மாற்றங்களை தொடர்து நோக்குவது என்று கூட இல்லாமல் டேபிள் கருத்துகணிப்புகள் எழுதிய சிலரின் பதிவுகளை பார்த்தபோது எழுத வேண்டும் என்று கை அரித்தது என்றாலும் ஈழ வேதனையில் தேர்தல் கும்மிகளில் நாமும் கலந்து கொண்டு ஈழவேதைனையை மறைக்க என்பதிவுகளும் உதவ வேண்டாமென தொடர்ச்சியாக ஒதுங்கியே நின்றேன்.

சென்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவை விட திமுகவே மேல் என்று திமுக கூட்டணி வெற்றிபெற வேண்டுமென விரும்பி அதை ஆதரித்து பதிவுகளும் பலரிடம் தொலைபேசி திமுக கூட்டணிக்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டேன், சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியின் முதல் இடியாக

நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக முன்பு செய்தது போன்றே திமுக செய்த அடாவடி ரவுடியிசம், அதை தொடர்ந்து மாமன் மச்சான் குடும்ப பிரச்சினையில் அதிமுகவினர் தர்மபுரிவாலாபாக் படுகொலை போலவே மதுரையில் அப்பாவிகள் மூன்று பேரை எரித்து கொன்றது என திமுக தாம் அதிமுகவை விட எந்த விதத்திலும் வித்தியாசப்படவில்லை என்று காட்டியது.

சீமான், கொளத்தூர்மணி போன்றோரை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே தள்ளி தமக்கு எதிராக கருத்து சொல்பவர்களை கைது செய்யும் பாசிச போக்கை கடைபிடித்து ஜெயலலிதாவிற்கும் தமக்கும் எந்த வித்தியாசமுமில்லை என்று காட்டினார் கருணாநிதி.

முத்துக்குமார் செந்தழலில் வெந்து போனதை கூட தம் ஊடக வலிமையால் மறைக்க முயன்றதும் இன்றைக்கு ஈழப்பிரச்சினை தேர்தல் பிரச்சினையல்ல என்று இன்றும் தன் அடிபொடி ஜால்ராக்களின் மூலம் முழுங்குவதும் ஈழ எழுச்சியை ஒடுக்க முயல்வதும் திமுகவிடம் எதிர்பாராத ஒன்று.

சமீப காலமாக ஜெயலலிதாவின் ஈழ ஆதரவும் கோத்தாபய ராஜபக்சே, கபில்சிபிலுக்கு கொடுத்த மறு அடி பதில்களையும் ஜெயலலிதாவின் தேர்தல்கால நாடகமாக எடுத்து கொண்டாலும் கருணாநிதியின் கபட நாடகங்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல.

எது எப்படியாயினும் தேர்தலுக்காகவேனும் ஈழ ஆதரவு பேச்சு பேச வேண்டுமென்ற நிலை எல்லோருக்கும் ஏற்பட்டது மிக்க மகிழ்ச்சியே. அதிலும் குறிப்பாக ஜெவின் ஈழ ஆதரவு பேச்சு அதன் தொடர்ச்சியாக

தேர்தல் கள நிலை முழுக்க ஈழத்தை மையம் கொண்டது தமிழின அரசியலை ஒதுக்கிவிட்டு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.

அதிமுகவை விடுத்து தமிழின அழிப்பை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசிற்கு ஆதரவும் உதவியும் தரும் காங்கிரஸ் கட்சியை தன் தோள்மேல் தாங்கிக்கொண்டு தமிழின எழுச்சியை அடக்க முயலும் திமுகவை ஆதரிக்கும் அளவிற்கு திமுக எந்த விதத்தில் அதிமுகவை விட மேலானதாக இல்லை... சமதூரத்தில் இரண்டும் இருக்கும் போது தற்போது காங்கிரசை ஆதரிக்காத அதிமுக கூட்டணியை தேர்ந்தெடுக்கும் நிலை.

மேலும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைக்கும் படுதோல்வி தமிழின அரசியலை முன்னெடுக்காததற்கு ஈழப்படுகொலைகளை நிறுத்தாததற்கு கிடைக்கும் தண்டனையாக அமையும்.


இன்றைய நிலையில் ஈழம் விசயத்தில் காங்கிரஸ் என்பது கோப்பை முழுக்க நிரம்பிய விஷம், திமுக என்பது விஷம் கலந்த தேநீர், அதிமுக என்பது பழைய தேநீர், பழைய தேநீர் குடித்தால் ஃபுட் பாய்சன் ஆகாதா என்றால் இந்த மூன்றில் எதையாவது ஒன்றை எடுக்க வேண்டுமெனில் , நாளைக்கு ஃபுட்பாய்ஸன் ஆயிடுமோ என பீதியடைந்து கோப்பை விஷத்தையோ, விஷம் கலந்த தேநீரையோ எடுக்க மாட்டேன்....

காங்கிரசு சிறையில்

திராவிடச் சிங்கம்
என்ற பதிவில் முத்துகுமார் நான் எழுத நினைத்தவைகளையே எழுதியுள்ளார்...

தமிழின உணர்வாளர்களை அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க தள்ளியது கருணாநிதியே... இதை புரிந்து கொள்ளாமல் வலைப்பதிவாளர்கள் சூ... வில் சுண்ணாம்பு என்றெல்லாம் கொக்கரித்தால் (சொல்லி வாயை மூடும் முன் பொய் செய்தியை பரப்பி உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டு சுண்ணாம்பு தடவிட்டார் என்று சொன்னவர்களுக்கெல்லாம் சுண்ணாம்பு தடவினார் கருணாநிதி) வன்னியர் ஒற்றுமை ஓங்குக என அனானியாக பின்னூட்டம் போட்டு காலத்தை ஓட்டலாம்.

Test

Test

கருணாநிதியின் நண்பரா பிரபாகரன்? என் பதிவும் ஜூவி கட்டுரையும்

கட்டுரைகளுக்காக தொடர்ச்சியாக ஈழ‌ம் குறித்து சில விசயங்களை ஆராய்ந்த போது கிடைத்த ஒரு விசயம் கருணாநிதி எப்போதுமே புலிகள் இயக்கத்திற்கு கருணாநிதி எந்த காலத்திலும் ராஜீவ்காந்தி கொலைக்கு முன்பு பின்பு என எக்காலத்திலும் விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக இருந்ததில்லை என்பதை குறித்து ஜனவரி மாதத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதே கருத்துகளோடு ஜூவியில் வந்திருக்கும் கட்டுரை இங்கே....



'பிரபாகரன் எனக்கு உற்ற நண்பர். அவர் தீவிர வாதி இல்லை' என்று கருணாநிதி தனியார் சேனலுக்குப் பேட்டி கொடுத்ததாகவும் பின்னர் மறுத்ததாகவும் தமிழக அரசியல் களம் அதிர்ந்து கிடக்கிறது!

இந்நிலையில், பிரபாகரனின் பழைய நண்பர்கள் பற்றி அறியும் முயற்சியாக ஈழ ஆதரவாளர்கள் சிலரி டம் பேசினோம். ''பிரபாகரன் தமிழகத்தில் காலடி வைத்தபோது, அவருடைய பெயர் கரிகாலன்.

'தமிழ் நியூ டைகர்ஸ்' என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகத் தமிழகம் வந்த பிரபாகரன், எழுபதுகளின் இறுதியில் நெடுமாறனோடு தங்கினார். தமிழகத்தில் பிரபாகரனுக்கு முதல் நண்பர் நெடுமாறன்.

பின்னர் ம.தி.மு.க-வின் ராதாகிருஷ்ணனோடு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் ரூம் மேட்டாக இருந்தார்கள். அந்த சமயத்தில் தமிழ் நியூ டைகர்ஸ் அமைப்பைச் சேர்ந்த முகுந்தனுக்கும் பிரபாகரனுக்கும் பிரச்னை வர, பாண்டிபஜாரில் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

துப்பாக்கி சூடு சம்பவம் பிரபாகரனுக்குப் பின்ன டைவைக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் பேசினார் நெடுமாறன். மற்ற தமிழகத் தலைவர்களிடம் அந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கச் சொன்னார் எம்.ஜி.ஆர்.! பிரபாகரன் சார்பாக பேபி சுப்பிரமணியமும், ராதாகிருஷ்ணனும் கருணாநிதியை சந்தித்தார்கள். 'இதெல்லாம் இப்போ முக்கியமில்லை. இதுக்காக என் நேரத்தைச் செலவிட முடியாது!' என்று பிரபாகரன் தூதர்களைத் திருப்பி அனுப்பினார் கருணாநிதி.

அப்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த நெடுமாறன், ஈழப் பிரச்னையை இந்திரா காந்தி யின் கவனத்துக்குக் கொண்டுசென்றார். இந்திரா காந்தியும் பயிற்சிக் களம் அமைத்துக் கொடுத்து உதவி னார். கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளில் பயிற்சித் தளங்களை உருவாக்கினார்கள்.

தி.அழகிரிசாமி என்பவர் சிறுமலையில் இருக்கும் தன்னுடைய தோட்டத்தில் புலிகளுக்காக பயிற்சித் தளத்தை அமைத்துக் கொடுத் தார். இதற்கெல்லாம் எம்.ஜி.ஆர். ரொம்பவே உதவியாக இருந்தார். அந்த சமயத்தில் ஒருநாள் எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்துக்குவரும்படி பிரபாகரனை அழைத்திருந்தார் எம்.ஜி.ஆர். காலை நேரத்தில் நடந்த அந்த சந்திப்பின்போது பிரபாகரன் இடியாப்பம் பாயா சாப்பிட்டார். அப்போது, 'உங்களுக்காக மட்டன் செய்து வைத்திருக்கிறேன். எலும்புகளைக் கடியுங்கள். அதிலிருக்கும் மஜ்ஜைகளில் போராட்டத்துக்குத் தேவையான உணர்வு கிடைக்கும்' என்று பிரபாகரனுக்கு அசைவ அயிட்டங்களை சாப்பிடக் கொடுத்தார்.

கிட்டத்தட்ட இதே சமயத்தில் பிரபாகரனை சந்திக்க விரும்பினார் கருணாநிதி. ஆனால், அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. 86-ம் வருடம் தன்னுடைய பிறந்தநாளில் வசூலான தொகையை ஈழப் போராளிக் குழுக்களுக்கு தலா ஐம்பதாயிரமாகப் பிரித்துக் கொடுத்தார் கருணாநிதி. அதைப் புலிகள் வாங்க மறுத்துவிட்டனர். அதன்பிறகு ஈழப் போராளி களுக்குள் சண்டை மூள, சபாரத்தினத்தைக்கொன்று விட வேண்டாம் என்று புலிகளிடம் கருணாநிதி வேண்டுகோள் வைத்தார். ஆனால், சபாரத்தினம் கொல்லப்பட்டார்.

தி.மு.க. புலிகளைக் கொஞ்சம் தள்ளி வைத்துப் பார்த்த சமயத்தில்தான், தி.மு.க-வில் இருந்த வைகோவுக்கு புலிகளுடன் நெருக்கம் ஏற்பட்டது. ராஜீவ் தயார்செய்த இலங்கை ஒப்பந்தத்தில் புலிகளைக் கையெழுத்திடச் சொல்லி இந்தியா நெருக்கடிகள் கொடுத்தபோது, பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய புலித் தலைவர்கள் தமிழகத்திலிருந்து ஈழத்துக்குப் போய்விட்டார்கள்.

அப்போது பிரபாகரனை சந்திக்க வைகோ வன்னிக்காட்டுக்குப் போனார். அதனைத் தொடர்ந்து, 'புலிகளால் கலைஞர் உயிருக்கு ஆபத்து. இதில் வைகோவுக்கும் தொடர்பு' என்று தமிழக அரசின் உளவுத்துறை எச்சரிக்கை செய்ததாக பேராசிரியர் அன்பழகன் அறிக்கைவிட, வைகோ கட்சியிலிருந்து பிரிந்து வந்தார். அதன்பிறகு, புலிகளின் நட்பு வட்டாரத்தில் தி.மு.க. என்றுமே இருந்ததில்லை!'' என்றார்கள் அவர்கள்.


- எஸ்.சரவணகுமார்
- Junior Vikatan

மெளனசாட்சி


உலகத்தின்
பெருந்துயரக்காரன்
யதேச்சையாக எதிர்பட்டான்

உலர்ந்து
பிளந்திருந்த உதடுகளில்
உட்கார்ந்திருந்தது
விரக்தியும் பரிதவிப்பும்...



கடைசி ஈரத்தையும்
தொலைத்துவிட்டு
கடுந்தீயாய்
விழிகளில்
கனன்று தெறித்தது கங்கு...

கண்முன்னாலேயே
மொத்தத்தையும்
வாரிகொடுத்த ஈழக்கோபம்...
உக்கிரச் சிரிப்பாகி
ஊர் மேல் விழுந்தது!

"நாசமாப் போவீங்கடா"வென‌
அடிவயிற்று வலி இழுத்து
முகம் சிலுப்பி
தூற்றிய சாபம்
கடைசி டத் துளி விஷமாய்
நெஞ்சறுக்க....
குற்றவுணர்வில்
கட்டிக்கொள்கிறேன்
என் குழந்தைகளை...!

நானும்
வேடிக்கை பார்த்தவர்களில்
ஒருவன்!

-‍‍
இரா.சரவணன்
ஜூனியர் விகடன்

நக்கிப்பிழைப்பவை நாய்கள்தான் போராளிகள் அல்ல!

நக்கிப் பிழைப்பவை
நாய்கள்தான்
போராளிகள் அல்ல!

கக்கித் தின்பவை
பூனைகள் தான்
புலிகள் அல்ல!

ஆரிய பார்ப்பான்
அலறி சொன்னான்
நீ போய்
சேரலையேயென்று

வாய் சண்டையிட்டோம்..
அட்டை கத்தி சுழற்றினோம்

கத்தினோம் கதறினோம்
உள்ளே புன்முறுவிக்கொண்டே

உன் நினைப்பே
அவர்களை அறுக்குதென்று...

உன் உயிர்ப்பே
அவர்களை உருக்குதென்று...

கத்தினோம் கதறினோம்
உள்ளே புன்முறுவிக்கொண்டே

போன வருசமே
போய் சேர்ந்திருதால்

போன வருசமே
போய் சேர்ந்திருதால்

கண்ணீர் விட்டு
கதறியிருப்போம்...

இனி இல்லை ஒரு சொட்டு
கண்ணீரும் உனக்கு

இனி இல்லை ஒரு சொட்டு
கண்ணீரும்

ஆரிய பார்ப்பான்
ஆரிய பார்ப்பான்
என்றாய்
நீயே
சூத்திர பார்ப்பானாகி
எம்மினம் குடித்தாயே!

கொள்ளையிட்டு சேர்த்த
சொத்து காக்க நீ
கொள்கை விற்று சேர்த்த
சொத்துக் காக்க
கொள்ளைபோச்சே என்
இனம்...

அய்யோ போச்சே
அய்யோன்னு போச்சே!

நக்கிப்பிழைப்பவை
நாய்கள்தான்
போராளிகள் அல்ல!

கக்கித்தின்பவை
பூனைகள் தான்
புலிகள் அல்ல!

மே13க்கு முன்
வந்தால் கெட்ட செய்தி
அது உமக்கும்
கெட்ட செய்தியே!

நீ நம்பாத கடவுளை
வேண்டிக்கொள்
எதுவும் மே13க்கு
பிறகே என்று

பதவி துண்டு
கொள்கை வேட்டி
அரசியல் வியாபாரிக்கு
வெறும் பேச்சு
போராளிகளுக்கு
அதுவே மூச்சி


அல்லக்கைக்கே
அமைச்சர் பதவியெனில்
'ரோ'ட்டில் விற்றிருந்தால்
தங்கதட்டில் தின்றிருக்கலாம்
ஆனால் நக்கிதான்...

சேகுவேரா
தங்கத்தட்டில் நக்கிதின்று
கடற்கரையில் சமாதியாகவில்லை
அகோர சாவென்றாலும்
அவன் சாவு
போராளி சாவு
அது அவன்
கெளரவ சாவு


நக்கியும் கக்கியும்
நீ தின்றுகொள்!

சொத்தையும் சொந்தத்தையும்
நீ காத்துகொள்!

இனி உனக்கில்லை
ஒரு சொட்டு கண்ணீர்!

இனி உனக்கில்லை
எம்மிடம்
ஒரு சொட்டு கண்ணீர்!

சீக்கியரும் தமிழரும்! - ஓர் இனமான ஒப்புமை

சீக்கியரும் தமிழரும்! - ஓர் இனமான ஒப்புமை
சர்தார்ஜி ஜோக்குகள் மூலம் முட்டாளாக வர்ணிக்கப்படும் சீக்கியர்கள், நிஜத்தில் புத்திசாலிகள். சக சீக்கியனை கஷ்டத்தில் வைத்துப் பார்க்க விரும்பமாட்டார்கள். அவ்வளவு சகோதரத்துவம் உள்ளவர்கள். ஆனால் சீக்கியர்கள் கோபப்பட்டால்? 25 ஆண்டுகள் ஆனாலும் அது ஆறாமல் அப்படியே இருக்கும் என்பதைத் தமிழரான(?) ப.சிதம்பரம் தன் மீதான "காலணி" வீச்சு சம்பவத்தால் உணர்ந்த அடுத்த சில மணி நேரங்களில் இந்தியாவே உணர்ந்தது.

அந்த சம்பவம் உணர்த்தும் சேதி? அந்த உணர்வை அப்படியே உள்வாங்கி, நம் "தன்மான"(?!)த் தமிழனத்தைத் திரும்பிப் பார்த்தால்..?

சீக்கியர்களுக்கு எதிரான கேவலமான திட்டமிட்டு நடத்தப்பட்ட அந்த மாபாதகச் செயல்கள் உண்மையாகவே கொடுரமான இன் வெறித்தாக்குதல். கண்டிக்க வேண்டிய காட்டுமிராண்டித்தனம். மறுக்கவே முடியாது.

ஆனால், அந்தக் கலவரத்தில் எந்தப் பெண்ணும் கற்பழிக்கப்படவில்லை.(சீக்கியர்கள் மன்னிக்க!) சீக்கியக் குழந்தைகளின் அனாதை இல்லங்களில் குண்டு போடவில்லை. தன் குடும்பத்தார் கொலை செய்யப்படுவதைப் பார்த்து அழுத "மாபெரும்" தவறுக்காக எந்த சீக்கிய பெண்ணும் வன்புணர்ச்சி செய்யப்படவில்லை. (மீண்டும் மன்னிக்க) கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்து எந்தக் குழந்தையும் கத்தியால் கிழித்து எடுக்கப்பட்டு, காலணியால் சதைக்குழம்பாக ஆக்கப்படவில்லை. கிளஸ்டர் குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகள், பல்முனையில் பாய்ந்து தாக்கும், கொடிய குண்டுகள் சீக்கியர்கள் மேல் போடப்படவில்லை. விச வாயு செலுத்தி அப்பாவி சீக்கிய மக்கள் கொல்லப்படவில்லை.

அந்த மாபாதகத்தைச் செய்தவர்களுக்கு அன்றைய காங்கிரஸ் அரசு ஆயுதம் வழங்கவில்லை. வட்டியில்லாக் கடன் கொடுத்து கத்தி வாங்கச் சொல்லவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும் நிவாரணம் அவர்களுக்குக் கிடைக்காமல், அதையும் வன்முறையாளர்களுக்கே தரவில்லை. அப்பாவி சீக்கியர்களை கொடூரமாக அழிக்க வதை முகாம்கள் அமைக்கச் செய்யவில்லை.

நல்ல வேளை, நம் சீக்கிய சகோதர, சகோதரிகளுக்கு இந்தக் கொடுமைகள் நடக்கவில்லை. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு இது எல்லாம் நடக்கிறது. இதற்கு மேலும் நடக்கிறது. எழுதக்கூடாததும் நடக்கிறது.

சீக்கியர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டது நேற்றல்ல... போன வருடம் அல்ல...பத்து வருடம் முன்பு கூட அல்ல..1984-ல், அதாவது 25 வருடங்களுக்கு முன்பு! பொதுவாக நம் குடும்பத்தில் யாராவது ஒரு ரத்த உறவு.. ஒரே ஒரு ரத்த உறவு அநியாயமாகக் கொல்லப்பட்டால், நாமும் சீறி எழுவோம். எவ்வளவு நாட்களுக்கு? சில பல வருடங்கள்? ஐந்து வருடங்கள் ஆகிவிட்டால் மனைவி நம்மிடம், " நடந்தது நடந்துப் போச்சு பழிக்குப் பழி வாங்கணும்னு போய் வங்களை அனாதையாக்கிடாதீங்க" என்பாள். பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டால் அதே விசயத்தை மகனோ, மகளோ சொல்வார்கள். பாரம் கடவுள் மேல் போடப்படும்.

ஆனால் பொதுவில் தமிழனைவிட பக்தி நிறைந்த சீக்கியர்கள்? 25 என்ற நீண்ட கால் இடைவெளி அவர்களது மீசையில் உள்ள ஒரு முடியைக்கூட அசைக்கவில்லை. அசைக்க முடியவில்லை. செருப்பு வீசிய அன்றே சோனியா வீடு முற்றுகை, செருப்பு சீக்கிய நிருபரைத் தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைக்க முயற்சிகள்!

ஆனால் ஈழத்தில்..?

சீக்கியர்கள் டெல்லியில் தாக்கப்பட்ட 1984-ம் ஆண்டுக்கு ஒரு வருடம் முன்பு 1983-லேயே இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கொதிக்கும் தார் பீப்பாய்களில் குழந்தைகளைத் தூக்கிப்போட்டது...கசாப்புக் கடைகளில் தமிழனின் உடலை உறித்து ஆட்டுக்கறி போலத் தொங்கவிட்டு, "தமிழனின் ரத்தம் இங்கே கிடைக்கும்" என்று எழுதி வைத்தது...என்னென்னவோ நடந்தது...
தொடர்ந்து நடந்தது...நடந்துகொண்டே இருந்தது...இருக்கிறது. இன்னும்...இப்போதும்... இந்த நிமிடமும் நடக்கிறது.

ஆனால் தமிழன்?

ஆம்! 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அநியாயத்துக்கு எதிராக - இன்று நடந்ததுபோல் பொங்கி எழுகிறது சீக்கிய இனம். ஆனால் 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்துகொண்டே..இருக்கிற கொடுமைகளுக்கு எதிராக, இன்றுவரை ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாமல், சுயநல அரசிரல்வாதிகளின் கபட நாடக அரசியல் வேசித்தனத்தை நம்பி ஏமாந்து கொண்டுள்ளது தமிழினம்.
சீக்கியர்களிடம் மட்டும் ஆளும்கட்சி, எதிக்கட்சி, கூட்டணிக் கட்சிகள்... இவரைக் கவிழ்க்க அவரின் சதி, அவரைக் கவிழ்க்க இவரின் சதி இவை எல்லாம் இல்லையா? அங்கும் உண்டு. ஆனாலும் உலகின் எந்த மூலையில் ஒரு சீக்கியன் பாதிக்கப்பட்டாலும் இன்னொரு சீக்கியன் சும்மாயிருக்க மாட்டான்.

ஆனால் சீக்கியர்களின் கோபத்திலும் ஒரு கண்ணியம். அந்த நிருபர் ப.சிதம்பரத்தை "காலணி"யால் அடிக்கவேண்டும் என்று நினைத்திருந்தால், மிக அருகில் இருந்த அவரின் அடியில் நிலைமை விபரீதம் ஆகியிருக்கும். ஆனால், அவர் காலணியை தூக்கிப்போட்டார். மிகச் சரியான லட்சியம் உள்ள, ஆக்கபூர்வமான, உணர்ச்சிவசமில்லாதத் திட்டமிட்டு செலுத்தப்பட்ட கோபம்! அதுதான் கோபத்தின் அழகு! (இச்செயல் கண்டனத்துக்குரியது என்றாலும்).
ஆனால் இழங்கைத் தமிழனுக்கு ஆதரவான தமிழனின் கோபம்?
ஒரு நாள் உண்ணாவிரத்தில் உட்கார்ந்து, தொண்டை வறளக் கத்திவிட்டு, தமிழினத் துரோகம் செய்யும் நமது அரசியல்வாதிகளில் பிடிக்காதவர்களை மட்டும் கரித்துக்கொட்டிவிட்டு, தனக்கு எலும்புத்துண்டு போடுகிற இன்னொரு தமிழினத் துரோக அரசியல் தலைவனுக்கு ஆரத்தி எடுத்து, பூசி மெழுகி, மழுப்பி உண்ணாவிரதம் உட்கார்ந்ததன் நோக்கத்தைத் தானே கெடுத்து அழித்துவிட்டு...இரவில் சாராய போதையிலோ அல்லது தனது மன்க்கொதிப்புக்கு ஒரு தற்காலிக மருந்து கிடைத்துவிட்ட சமாதான போதையிலோ தூங்கிவிடுவது. என்ன அசிங்கமான கோபம்! இது எங்கே உருப்படும்?

அன்று சீக்கிய கலவரத்துக்குக் காரணமாக இருந்துவிட்டு, இன்று "சீக்கியர்கள் நடத்தும் போராட்டத்தில் சீக்கியருக்கு ஆதரவாக நானும் கலந்துகொள்கிறேன்" என்று ஜெகதீஸ் டைட்லரோ அல்லது கலவரத்துக்குக் காரணமான வேறு யாருமோ, 25 ஆண்டுகள் ஆனபிறகும்கூட சொல்ல முடியாது. நடப்பதே வேறு. கிழிந்துவிடும்.

ஆனால், சிங்கள அரசுக்கு ரேடாரும், வட்டியில்லாக் கடனும், உயிர்க்கொல்லி ஆயுதங்களும், ராணுவ வீரர்களையும் வழங்கும்போது, அதற்குத் துணை போய்விட்டு, "இலங்கை அரசைக் கண்டித்து மாபெரும் பேரணிக்கு வாரீர்..." என்று கூவி, கலைஞரும், தங்கபாலுவும் பேரணியே நடத்த முடியும்.
ஏன், சோனியா காந்தியே வந்து நடத்தினாலும் தமிழன் வேடிக்கைப்பார்ப்பான். 1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் கொல்லப்பட்ட சீக்கியர்கள் சுமார் நான்காயிரம் பேர். அந்தக் கோபம் எட்டுக்கோடி தன்மானச் சிங்கங்களின் கோபமாக இன்று சீக்கிய இனத்தில் பொங்கிப் பாய்கிறது. ஆனால் ஈழத்தில் தினசரி நான்காயிரம் பேர் கொல்லப்பட்டாலும்கூட, ஏழுகோடி தாயகத்தமிழர்களும், அரசியல் வியாபாரிகளின் வாய்ப் பந்தல் பேச்சில் மயங்கி சுரணையில்லாமல், தங்களுக்குள் கட்சி ரீதியாக அடித்துக்கொண்டு நிற்கின்றனர்.

இந்திரா கொல்லப்பட்டதும், பிரதமராகப் பதவி ஏற்ற "பைலட்" ராஜிவ்காந்தி அரசியல் விவரம் புரியாமல், அல்லது மனிதாபிமானமின்றி - சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்தும் விதத்தில் - ஒரு பெரிய ஆலமரம் சாயும்போது, சுற்றியுள்ள நிலத்தில் அதிர்வுகளை ஏற்படுவது சகஜம்தானே" என்று பேசினார்.

ஆனால் 1984-ம் ஆண்டு ராஜிவ் பேசிய பேச்சை சீக்கிய இனம் கடைசிவரை மன்னிக்காததன் விளைவாக 1998-ம் ஆண்டு 14 வருடம் கழித்து கணவரின் பேச்சுக்காக மனைவி சோனியா மன்னிப்புக் கேட்டார். அது சீக்கியரின் இனமான உணர்வு. ஆனால், இங்கே கலைஞர் தூக்கும் காங்கிரஸ் பல்லக்குகளின் விளைவாக, உணர்வுபூர்வமாக நடக்கும் சில போராட்டங்களும்கூட வலுவிழந்தும் அர்த்தமற்றும் போய்விடுகின்றன.
டெல்லியில் நடந்த, அந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தைக் கண்டித்து, பல சிறுகதைகள், நாவல்கள் வந்தன. தமிழில்கூட பல டெல்லிவாலா எழுத்தாளர்கள் "குருத்து குருத்தாக" சிறுகதை எழுதினார்கள். அது சிக்கிய இனத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாக இருந்தது.

ஆனால் அப்படி சீக்கியர்கள் பரிதாபம் பற்றி தமிழில் பிலாக்கனமாக எழுதிய எழுத்தாளர்களே-ஈழத்தில் பொழியப்படும் குண்டு மழைகளுக்கு நடுவே தன் கைக்குழந்தையை தன் உடலுக்குக் கீழே மறைத்து தரையோடு தரையாகத் தவழ்ந்து செல்லும் பாச வீரத் தாய்மார்களைப் பற்றி ஒரு குட்டிக்கதை எழுதக்கூடத் தயாரில்லை.

ப.சிதம்பரம் மீது பத்திரிகையாளர் காலணி வீசிய சம்பவத்தைச் சிறு பொறியாகக் கொண்டு எரியத் தொடங்கிய சீக்கிய வீரத்தின் வெம்மையில் பொசுங்கி அலறிய சோனியாவின் ஆணவம்...இந்தத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஜெகதீஷ் டைட்லரையே வாபஸ் வாங்கிக் கொண்டது.
1984-ல் சீக்கியனுக்குச் செய்த தவறின் பலனை இன்னும் காங்கிரஸ் அனுபவிக்கிறது. இன்னும் 25 ஆண்டுகள் போனாலும் அது அனுபவிக்கும். ஒரு சீக்கியரை ஐந்து வருடம் பிரதமராக வைத்திருந்து, இன்னும் ஐந்து வருடம் பிரதமராக வைக்க தயார் என்று காங்கிரஸ் கூறியும் அதனால் விலை போகாத சுத்தமான் தன்மானம் சீக்கியனுக்குச் சொந்தமானது.

ஆனால் இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர். ஆகியோரின் மறைவிற்குப் பின்பு, 1988-ல் இருந்தே இலங்கையில் தமிழினத்துக்கு எதிரான துரோகச் செயலை இந்திய மத்திய அரசுகள் மிக அதிகமாக காங்கிரஸ் அரசுகள் செய்துதான் வருகின்றன. அதுவும் ஈழப்பிரச்சனையில தமிழினத்திற்கு ஆதரவாகப் பேசிய அத்தனை பேரையும் கைது செய்து சிறையில் போட்ட அத்தனை பிள்ளைப் பிடிப்பவர்களும், இதோ காங்கிரஸ் வேட்பாளர்களாக - அந்தக் கூட்டணி வேட்பாளராகப் பவனி வரப்போகிறார்கள்.

பொங்கி எழுந்து - அப்படிப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒருவரையாவது வாபஸ் பெற்றுக்கொள்ளும் நிலைமையை டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு ஏற்படுத்தும் தெம்போ, திராணியோ, இன உணர்வோ தமிழனுக்கு உண்டா? ஓட்டுக்குப் பணம் வாங்கும் மந்தையால் எப்படி முடியும்?
இந்திராகாந்தியைச் சுட்டுக்கொன்ற பியாந்த் சிங் மனைவியை சுயேச்சையாகத் தேர்தலில் நிறுத்தி மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தவர்கள் சீக்கியர்கள். மாமியாரைக் கொன்ற அந்த இனத்தைப் பாராட்டிதான் அதற்குப் பரிசாக ஒரு சீக்கியரை பிரதமர் ஆக்கினார் மருமகள் சோனியா. இதோ இப்போது சிதம்பரம் மீது காலணி வீசியவரை நாடாளுமன்றத்தேர்தலில் வேட்பாளராக ஆக்கத் தீர்மானித்துள்ளனர் சீக்கியர்கள்.

ஆனால் ஈழத்தமிழருக்கு ஆதரவாகப் பேசும் எல்லோரையும், அட, தேர்தலில் நிற்க வைத்து ஜெயிக்க வைக்க வேண்டாம்...ஜெயிலில் உட்கார வைத்துக் களி திங்க விடாமல் தூங்குவதில்லை என்று கங்கணம் கட்டியதா தமிழினம்?
சீக்கியர்களுக்கு எதிராக நடந்த அந்த 1984 கலவரத்தில் ஜெகதீஷ் டைட்லர் குற்றமற்றவர் என்று தற்போது சி.பி.ஐ.-யால் விடுவிக்கப்படுவதற்கு முன்பு பஞ்சாபில் சில் இடங்களிலாவது காங்கிரஸ் வெற்றிபெறும். இப்போது அதுக்கூட இல்லை என்கின்றனர். பிரதமர் பதவியைக் கொடுத்தும் அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை.

அப்படி பார்த்தால் அதே வகையில் ஈழத்தமிழர்கள் மற்றும் சுட்டுக்கொல்லப்பட்ட 450 ராமேஸ்வரம் மீனவர்கள் விசயங்களில் தமிழனுக்கு நியாயமான சூடு, சுரணை, மானரோசம், கோபம் இருந்தால் காங்கிரஸ் தமிழகத்தில் ஒரு தொகுதியிலகூட டெபாசிட்டை மீட்கக் கூடாது. ஆனால் பிரதமர் பதவி எல்லாம் தேவையில்லை. சில ஆயிரங்களைப் பிச்சையாகப் போட்டே, தமிழனின் ஓட்டுகளைப் பெற்றுவிட முடியும். எனவேதான் கரன்சி வாசத்தில் "நாற்பதும் நமதே" என்கின்றனர்.

மொத்தத்தில் காலம்காலமாக "சிங்"குகளைக் கொண்ட சீக்கிய இனம் சிங்க இனமாகவே உள்ளது. ஆனால் அரசியல் நயவஞ்சகர்களின் வாய்ச்சவடால்களை நம்பிய தமிழினம் அசிங்க இனமாகி விட்டது.

-நன்றி- 17.04.09 - 23.04.09 அன்று வெளிவந்த வார இதழ் "தமிழக அரசியல்"-ல் திருமொழி எழுதிய கட்டுரை

ஓட்டு என்னும் செருப்பால் திமுக-காங்கிரசை அடிக்க நான் தயார்...

இம்முறை வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தோற்க வேண்டுமென்பதற்காக அதற்கு எதிராக என் வாக்கு என்னும் செருப்பால் அந்த கட்சிகளை அடிக்க தயாராகிறேன்.

காங்கிரஸ் புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் ஏன் திமுக? திமுகவை மட்டும் செருப்பால் அடிப்பதேன்? திமுக மட்டும் தான் குற்றவாளியா? கடைசி நாள் வரை காங்கிரசோடு இழைந்துவிட்டு ஓடிப்போன பாமக, ஈழத்தமிழர்களுக்கு எதிராக கருத்து கூறிய அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள மதிமுக இவர்களையெல்லாம் எதால் அடிப்பது?

இயல்பாக எழும் கேள்விகள் தான்! ஏன் திமுக என்றால் தமிழ் பெயரை சொல்லி ஓட்டு வாங்கி தின்றது திமுக தான்

பாமக என்ற கட்சி ஒரு சாதிகட்சியாக வன்னியர் கட்சியாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது, அல்லது
அப்படியாக நடந்துகொள்கிறது! அதற்கான விளைவாக வன்னியர் அல்லாத பிற சாதியினர் பெரும்பாலும் பாமகவுக்கு வாக்களிப்பதில்லை, அதன் நிலைப்பாட்டுக்கான பின் விளைவை அது பெறுகின்றது... அதே போன்றே விடுதலை சிறுத்தைகள் கட்சியும்.

அதிமுக தலைமையின் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்காக தமிழர் ஆதரவு நிலைப்பாட்டுடன் இருப்பவர்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பதில்லை. முற்போக்காளர்கள் பெரும்பாலும் அதிமுகவிற்கு எதிராகவே உள்ளனர். அதிமுக தலைமையின் நிலைப்பாட்டிற்க்கு அது அதன் பின் விளைவை எதிர்கொள்கிறது.

பாமக, விடுதலை சிறுத்தைகள், அதிமுக என அத்தனை கட்சிகளும் அதன் நிலைப்பாட்டிற்கான பின் விளைவுகளை எதிர்கொள்ளும் போது தமிழ், தமிழர், முற்போக்கு மற்றும் தமிழர் பாதுகாப்பு என்ற காரணத்திற்காக தமிழ் இன ஆதரவு நிலைப்பாடு மற்றும் முற்போக்காளர்கள் திமுக ஆதரவு எடுத்திருந்தனர்கள் (கலைஞரின் ரசிக கண்மணிகள், கழக பிரியாணி குஞ்சுகள், கழகத்தின் சார்பில் காண்ட்ராக்ட் பெற்று வாழும் உடன்பிறப்புகளையெல்லாம் இந்த கணக்கில் சேர்க்கவில்லை) இவர்களின் வாக்குகளையும் எவ்வித பலனும் எதிர்பாராமல் இவர்கள் செய்கின்ற திமுக ஆதரவு பிரச்சாரங்களை(சென்ற முறை நானே பல கட்டுரைகள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் திமுக ஆதரவு பேச்சுகளை செய்தேன்) இது நாள் வரை பெற்று வந்த திமுக ஈழத்தமிழர்களை அழித்துக்கொண்டிருக்கும் பாசிச காங்கிரஸ் இயக்கத்துடன் கூட்டணி சேர்ந்து அக்கூட்டணியை தாங்கி பிடித்து ஈழத்தமிழ் போராட்டத்தை கொச்சை படுத்திக்கொண்டிருக்கும் திமுகவுக்கு என்ன செய்ய போகிறோம்.

வேறு வழியில்லை இருப்பதில் இவர் பரவாயில்லை என்று மீண்டும் சூரியனுக்கும் கைக்கும் ஓட்டு குத்தி கலைஞர் செய்தவைகளுக்கு அங்கீகாரம் வழங்க போகிறோமா? அல்லது தமிழர்கள் பெயரை சொல்லி வாக்கு வாங்கி தமிழர்களுக்கு எதுவும் செய்யாமல் தமிழர்களின் உரிமை பறிபோனபோது அதிகாரத்தை மட்டும் சுவைத்து கொண்டிருந்த மலேசிய இந்தியன் காங்கிரசுக்கு தமிழ் மக்கள் அடையாள தோல்வி தந்ததை போல கலைஞருக்கும் திமுக-காங்கிரசுக்கு தோல்வியை தரப்போகிறோமா?

தமிழ் பெயரை சொல்லி ஓட்டுவாங்கி தின்ற திமுக அதே தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது எனில் மோகன் கந்தசாமி பாணியில் சொல்வதென்றால் விபச்சாரியிடம் படுத்துவிட்டு காசு கொடுக்காமல் ஓடுவதற்கு சமம்.

பின்குறிப்பு
--------------
வழக்கம்போல இதற்கும் என் சாதி முத்திரையும் பாமக ஆதரவு முத்திரையும் குத்தப்படும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பல சந்தர்ப்பங்களில் இம்மாதிரியான முத்திரைகள் வாங்கித்தான் இணையத்தில் வளையவருகிறேன். என்ன ஒவ்வொரு முறையும் யாருக்கு ஒவ்வாத கருத்தை சொல்கிறேனோ அவர்கள் குத்துவார்கள்.

எனக்கு ஓகேப்பா சாதி முத்திரை கட்சி முத்திரை குத்துவிங்க, கலைஞரை கிழி கிழியென்று கிழித்த தியாகி முத்துகுமாருக்கு என்ன முத்திரை குத்தப்போறிங்க?

பாரி.அரசு அவரின் ஒரு பதிவில் சொல்லியுள்ளார் கலைஞரை தாக்கும் அளவிற்கு இராமதாசை தாக்காததற்கு இணைய புரட்சியாளர்கள் பலரும் வன்னியர் என்பதனால் என்று, கிட்டத்தட்ட மக்கள் தொகையில் 20% வன்னியர் சாதி(உள்ளதாக சொல்லப்படும்) என்பதால் கொலைகாரன்களில் 20% மொள்ளமாறிகளில் 20% குடிகாரன்களில் 20%(குடிகாரன்களில் இதற்கும் மேலாக இருக்கும்) இருப்பதை போல இணைய புரட்சியாளர்களில் 20% இராமதாஸ் வாங்கி கொடுத்த இடஒதுக்கீட்டில் படித்து இணையத்தை நோண்டுபவர்களாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

மருத்துவர் இராமதாசை தாக்கி இந்த விசயத்தில் நான் எழுதிய கட்டுரைகள்

கலைஞர், மக்கள் தொலைகாட்சி உரிமையாளர்கள்

ஈழத்தமிழர் பிரச்சினை தொடரும் பாமகவின் இரட்டை வேடம்

கலைஞரின் ரசிக குஞ்சாக, கழக பிரியாணி குஞ்சாக, காண்ட்ராக்ட் பெற்று வயிறு வளர்க்கும் உடன்பிறப்பாக இல்லாமல் கலைஞரையும் திமுகவையும் தமிழுக்காக, தமிழ் இனத்திற்க்காக ஆதரிப்பவர்களே ஒரு நிமிடம் யோசியுங்கள் தமிழினத்தை கை கழுவிய திமுகவை என்ன செய்ய போகிறீர்கள் இந்த தேர்தலில்?

தமிழன் என்று எவனாவது ஓட்டு கேட்டால் செருப்பால் அடியுங்கள்

மனசும் உடம்பும் சரியில்லை.... செய்திகள் எல்லாம் முடிந்ததாகவே சொல்கிறது... இனி பேசுவதற்கும் செய்வதற்கும் எதுவும் இருப்பதாக தெரியவில்லை...

தேர்தல் திருவிழா வருகிறது... சாதிக்காக, மதத்துக்காக, சாராயத்துக்காக, பிரியாணிக்காக, அல்லது தலைவன் மேல் இருக்கும் ரசிக மனோபாவத்துக்காக எதுக்காக வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள் ஆனால் எவனாவது தமிழனுக்காக என்று கேட்டால் செருப்பால் அடியுங்கள்...

ஒருத்தர் முதல்வர் பதவிக்காக, ஒருத்தர் மகனின் பதவிக்காக என்றால் இன்னொருவரோ ரெண்டு எம்.பி. சீட்டுக்காக என அத்தனை பேரும் விற்று தின்றுவிட்டார்கள் தமிழனை.

ஆரிய பார்ப்பானாக, சூத்திர பார்ப்பானாக, முற்போக்கு திமுக காரனாக, பிற்போக்கு அதிமுக காரனாக, வன்னிய சாதி பாமக காரனாக, தலித் விசியாக, தலித் புதியதமிழகத்துக்காரனாக அல்லது எதுவுமே இல்லாத இலம்பாடிகளாக இருந்துவிட்டு போவோம்...

இனி தமிழனாக மட்டும் இருக்கவே வேண்டாம்...

நாலு மந்திரிக்க்காக ஈழத்தமிழனை காட்டி கொடுத்தவர்கள், ஆறு மந்திரிக்காக தமிழக தமிழனை கூட்டி கொடுப்பார்கள் என்பதால் தமிழனாக மட்டும் இருக்க வேண்டாம்