பிரபல பதிவர்களுக்கு சமர்ப்பணம்

"டேய் நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலைடா" என்று வரும் இடத்தோடு இந்த வீடியோவை நிறுத்த ஆசைப்பட்டேன், ஆனால் அதையும் தாண்டி சில காமெடி வருது எஞ்சாய்ய்ய்ய்ய்ய்....



லேபிள்: புனைவு

மணற்கேணி வெற்றியாளர்களுடன் இரண்டு நிகழ்ச்சிகள் தொகுப்பு

சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்களும் தமிழ்வெளி இணையதளமும் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியில் வெற்றிபெற்ற திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம் அவர்கள் தற்போது சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தில் உள்ளனர்.


சிங்கை வலைப்பதிவர்களின் பதிவுகளின் தொகுப்பு புத்தகமாக "மணற்கேணி" என்ற பெயரில் தமிழ் அலை இசாக் மூலம் அச்சிடப்பட்டு கேபிள் சங்கர் அவர்கள் அந்த புத்தகங்களை மே 21 இரவு சென்னை விமான நிலையத்தில் வெற்றியாளர்களிடம் தந்துதவினார்.

கீழுள்ள படம் இடமிருந்து வலம் தேவன்மாயம், தருமி, பிரபாகர், வெற்றிக்கதிரவன் எ விஜயபாஸ்கர்,முகவை ராம், குழலி, ஜெகதீசன், ஜோ மில்டன் மற்றும் கோவி.கண்ணன்

மே 22 காலை 6 மணி அளவில் திரு.தருமி மற்றும் பிரபாகர் சிங்கப்பூர் வானூர்தி நிலையம் வந்திறங்கினர், காலை 8 மணியளவில் திரு.தேவன்மாயம் அவர் மனைவியுடன் வந்திறங்கினார், சிங்கை வலைப்பதிவர்கள் அவர்களை வரவேற்று தங்குமிடம் அழைத்து சென்றனர்.

மே22 மாலை 5:00 மணிக்கு சிங்கப்பூர் அங்மோக்கியா நூலகத்தின் தக்காளி அறையில் சிங்கப்பூர் "வாசகர் வட்டம்" சார்பில் கலந்துரையாடல் மற்றும்
கட்டுரைகள் மீதான திறனாய்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, சிங்கை வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர் வட்டம் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறப்பாக நடைபெற்ற இந்த கூட்டம் பற்றி தனியாக விவரமாக பதிவிடுகிறோம்.

(கீழுள்ள படம் BBQ ஆரம்பிக்கும் முன் சுத்தமாக உள்ள அடுப்பு)
மே 23 அன்று மாலை 4:30 மணியளவில் வெஸ்ட்கோஸ்ட் பார்க் (West coast Park) BBQ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, ஓரிருவர் தவிர கிட்டத்தட்ட சிங்கப்பூரின் அனைத்து வலைப்பதிவர்களும் கலந்து கொண்டனர் ஜெகதீசன், கோவி.கண்ணன், கிஷோர், சிவா, டொன்லீ மற்றும் சிலர் BBQ விற்க்கு தேவையான பொருட்களுடன் வந்து ஆரம்பித்தனர், முதலில் கிழங்கு சோளம் , காலிஃபிளவர் வகைகள் சுட்டு உண்ணப்பட்டன அதன் பின் சிங்கை நாதன், விஜய் ஆனந்த், நிஜமா நல்லவன் பாரதி மூவரும் BBQ கோழி கறியுடன் வந்து சேர்ந்தனர்...

கீழுள்ள படம் சிவா மும்மரமாக கோழி வறுத்தல்
தம்பி கிஷோர், சிவா, டொன்லீ,வெற்றிக்கதிரவன் மற்றும் பலர் BBQ வறுத்து தந்தனர்








கீழுள்ள படம் ரோஸ்விக் சுடச்சுட பதிவிடுதல்
ரவிச்சந்திரன், அறிவிலி ராஜேஷ், முகவை ராம், ஜோசப் பால்ராஜ், ஜோ மில்டன் மற்றும் அனைவரும் வெற்றியாளர்களுடன் கலந்துரையாடிக்கொண்டிருந்தனர், தருமி அவர்கள் அரசியல் பற்றி ஏன் தற்போது எழுதுவதில்லை என்று கேட்டார், ரவிச்சந்திரன் சீனா வளர்ச்சி பற்றி நேரடியாக அறிந்ததை பகிர்ந்து கொண்டார், கல்வி, அரசியல் என போய்க்கொண்டிருந்தது, நமது வெற்றியாளர் பிரபாகர் பல நெடுந்தொடர்களுக்கும் குறும்படங்களுக்கும் இசையமைத்தவர் என்பதால் இசைப்பற்றி பேசும் போதெல்லாம் தகவல்கள்கள் மற்றும் சிறப்பு செய்திகளால் நம்மை வியப்படைய வைக்கிறார்.



வெற்றியாளர்கள் சிங்கப்பூர் பதிவர்களுக்கு கிருஷ்ணா இனிப்புகள் ஊரிலிருந்து வாங்கிவந்தனர், மேலும் வெட்டிவேரால் ஆன பிள்ளையார் உருவம் மற்றும் சாவிக்கொத்துகளை சிங்கை பதிவர்களுக்கு வழங்கினார்கள், குழுப்படம் எடுத்துக்கொண்டோம்.

(கீழுள்ள படம் BBQ முடிந்த பின் நாங்கள் சுத்தம் செய்த அடுப்பு)

இது தான் தலைப்பு இது பற்றி பேச வேண்டும் என்றில்லாமல் இரவு 9:00 வரை பூங்காவில் இருந்தோம், பின் அப்படியே வெளியேறி மேலும் அரை மணி நேரம் பேருந்து நிறுத்தத்தில் பேசி பின் அவரவர்கள் இருப்பிடம் அடைந்தோம்.

சிங்கப்பூரில் மணற்கேணி வெற்றியாளர்களுடன் மே 22 அன்று திறனாய்வு கூட்டம்


சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்களும் தமிழ்வெளி இணையதளமும் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியில் 50க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் தரமான கட்டுரைகளை அனுப்பி கலந்து கொண்டனர்.


அரசியல் / சமூகம் பிரிவில் திரு.தருமி அவர்கள் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின்* பலமும் பலவீனமும் கட்டுரை முதலிடம் பிடித்தது

தமிழ் அறிவியில் பிரிவில் திரு.தேவன்மாயம் அவர்களின் கட்டுரை ஏமக்குறைநோய்(A I D S) - தேவன் மாயம் அவர்களும்

தமிழ் இலக்கியம் பிரிவில் திரு.பிரபாகர் அவர்களின் தமிழர் இசை தொடர்பான கட்டுரையும் வெற்றிபெற்றனர்

மணற்கேணி 2009 போட்டியில் கலந்து கொண்ட அனைத்து கட்டுரைகளையும் வாசிக்க இங்கே அழுத்துங்கள்

வெற்றியாளர்கள் மூவரும் மே22 முதல் மே 29 வரையான நாட்களில் சிங்கப்பூரில் நடைபெறும் கலந்துரையாடல்கள் மற்றும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர்.

நாளை (சனிக்கிழமை மே 22 அன்று மாலை 5மணி அளவில் வாசகர் வட்டத்தில் சிங்கை வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைந்து நடத்தும் வெற்றியாளர் கட்டுரைகளின் மீதான திறனாய்வு கலந்துரையாடல் நடைபெறுகின்றது. சிங்கப்பூரில் உள்ள பதிவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

இடம் : தக்காளி அறை(Tomato Room) அங் மோக்கியா நூலகம்
நேரம் : மாலை 5:00 மணி
நாள் : சனிக்கிழமை, மே 22 - 2010

மணற்கேணி வெற்றியாளர்கள் திரு.தருமி, திரு. பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம் அவர்கள் கலந்துரையாடலில் கலந்து கொள்கின்றனர்

ஆம் முத்துக்குமார் தீவிரவாதிதான்...

முத்துக்குமாருக்கு சிலை திறப்பாம்
கொளுத்திக்கொண்டவனுக்கு எவ்வளவு திமிர்
காதல் தோல்வியால் தற்கொலை
வேலை கிடைக்காதவிரக்தியில் தற்கொலை
சம்பளம் பத்தாமல் தற்கொலை
சொல்லியிருப்போம் ஆயிரம் கதை

நாசமாப்போனவன்
கடிதம் எழுதிக்கொடுத்து விட்டு
கொளுத்திக்கொண்டான் திமிர் பிடித்தவன்
கடிதம் எழுதிய பொறம்போக்கு
பாப்பாத்தியை பற்றி மட்டும்
எழுதிவிட்டுப்போக வேண்டியது தானே
ஐம்பது ஆண்டுகாலம் கட்டியெழுப்பிய
தமிழ் இனத்தலைவனையும்
காட்டிக்கொடுத்துவிட்டானே

உடலை கைப்பற்றி
உணர்ச்சியை ஊட்டி
ஊரெங்கும் தம் பிணம் சுமந்து
புரட்சி செய்ய சொன்னானே
இவன் தீவிரவாதி இல்லையா?
இவனுக்கு எப்படி சிலை எழுப்ப முடியும்?


உதயக்குமாரை உண்டு ஏப்பம்
விட்டவர்களுக்கு
முத்துக்குமாரை முழுங்க
தெரியாதாடா முட்டாப்பயலே

கோர்ட்டு தீர்ப்புக்கும்
கருத்துக்கணிப்புக்கும்
அடுத்தவன் உயிரை
இழக்கவைக்கும் ஊரில்
இனத்துக்காக தன் உயிரை
இழக்கிறானாம்
இவன் தீவிரவாதி இல்லையா?
இவனுக்கு எப்படி சிலை எழுப்ப முடியும்?

டாஸ்மாக்கில் பாஸ்மார்க்கு
வாங்கிக்கொண்டிருக்கும்
எம் இனத்திற்க்கு
மானாட மயிலாடவில்
மயிங்கிக்கொண்டிருக்கும்
எம் இனத்திற்க்கு
பிரியாணி குஞ்சுகள் போதும்
எங்களுக்கு வேண்டாம்
முத்துக்குமார் போன்ற தீவிரவாதிகள்

சிங்கப்பூரில் முனைவர்.மு.இளங்கோவன், இரத்தின புகழேந்தி உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி


தமிழ் வலைப்பதிவரும் தொடர்ச்சியாக கல்லூரிகளிலும் மற்றும் பல இடங்களிலும் இணையப்பயிலரங்கு நடத்தி வருபவருமான முனைவர்.மு.இளங்கோவன் அவர்கள் சிங்கப்பூருக்கு மே15,16 களில் வருகை புரிகின்றார்... மேலும் கிராமத்து சூழல், பாடல்கள் மற்றும் தமிழ் சார்ந்த, மண் சார்ந்த விசயங்களில் ஆராய்ச்சிகள் செய்தும் எழுதியும் வரும் திரு இரத்தின புகழேந்தி அவர்களும் சிங்கப்பூர் வருகின்றார்.

இவர்களுடனான ஒரு கலந்துரையாடல் வரும் ஞாயிறு மாலை 6:30 மணியளவில் இலக்கம் 42,கேம்ப்பல் லேன் என்ற முகவரியில் உள்ள மருதப்பர் உணவகத்தில் நடைபெற உள்ளது... வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

இது தொடர்பாக என்னை தொடர்புகொள்ள +65 81165721 என்ற எண்ணில் அழையுங்கள்

தேனிலவு(ஹனிமூன்) கொண்டாட கிளம்புறிங்களா? சில டிப்ஸ்



இது திருமணங்கள் நிறைய நடைபெறூம் நேரம், புதிதாக திருமணம் ஆன / ஆகப்போகும் தம்பதியர்கள் ஹனிமூன் கொண்டாட கிளம்புவார்கள் அதனால் உங்களுக்கான சில சின்ன சின்ன டிப்ஸ்கள், இது இரண்டாம் ஹனிமூன் கொண்டாடுபவர்களுக்கும் பொருந்தும்

தேனிலவு என்பது திருமண வாழ்க்கையின் மிக முக்கியமான, சுவாரசியமான ஒன்று ஒரு முறை தவறவிட்டால் அடுத்த முறை செகண்ட் ஹனிமூன் வேறு அனுபவங்களை தான் தருமேயொழிய முதல் தேனிலவு அனுபவத்தை தராது... அலுவலக வேலை உடனே போக வேண்டும் அது இது என்று எத்தனை நெருக்குதல்கள் வந்தாலும் முதல் தேனிலவை மட்டும் தவறவிடாதீர்கள்.

நாங்க சின்ன பசங்களாக இருந்த போது திருமணம் முடிந்த உடன் அந்த ஜோடியுடன் மொத்த குடும்பமுமே மெட்டேடார் வேன் எடுத்துக்கொண்டு 10 நாட்கள் கோவில் கோவிலாக சுத்துவார்கள் இப்பொது அந்த திருமண ஜோடிகளை நினைத்தால் பாவமாக இருக்கின்றது...ம் அவங்க கொடுத்துவச்சது அவ்வளவு தான்...


தேனிலவை உள்ளூரிலோ அல்லது உங்களுக்கு மிக மிக பழக்கமான ஊரிலோ வைக்காதீர்கள், தேனிலவு என்பது என்னமோ வெறும் அறைக்குள் நடக்கும் அந்தரங்கம் மட்டுமல்ல, அது துணையின் கைபிடித்து நடப்பது, உணவு உண்பது, வள வளவென்று பேசுவது என உங்களின் எல்லா இனிமையான பொழுதுகளும் அடக்கம், அந்த நேரத்தில் உள்ளூரிலோ அல்லது பழக்கமான இடத்திலோ தேனிலவு கொண்டாடினால் உங்களுக்கு திருமணம் முடிந்ததை அறியாத ஒருவர் உங்கள் தந்தையிடமே சென்று உங்க பையன் ஒரு பொண்ணோட சுத்திக்கிட்டிருக்கானே என்னா விசயமென கேளுங்க என்பார்.

தேனிலவில் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இரண்டு விசயங்கள் Feel Free and Feel Safe... உங்களுடைய பிரைவசி(அந்தரங்கம்) மற்றும் உங்களுடைய பாதுகாப்பு.

தேனிலவுக்கு போகும் வலைப்பதிவர்கள், வேலை வேலை என அலையும் வேலை பைத்தியங்கள் எல்லாம் முதலில் துறக்க வேண்டியது லேப்டாப் மற்றும் இணையம், அவசர தொடர்பு தவிர வேறெதற்க்கும் கைத்தொலைபேசியை திறந்து கூட பார்க்காதீர்கள்...

1) திருமணத்திற்க்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே போகவேண்டிய இடத்த முடிவு பண்ணிடுங்க.

2) தேனிலவுதான அதுனால கொஞ்சம் கஞ்சத்தனம் பாக்கம செலவு பண்ணி நல்ல ரூம் புக் பண்ணுங்க. விலை கம்மியா புக்பண்ணினா சுகாதரக்குறைவாத்தான் இருக்கும், இல்லாட்டி வசதிகள் குறைவாகத்தான் இருக்கும்.

உதாரணத்திற்க்கு ஆலப்புழை(குமரகம்) மாதிரியான படகு வீடுகளுக்கு போகின்றீர்கள் என்றால் ஒரு படுக்கை அறை அல்லது இரு படுக்கை அறை கொண்ட தனி படகு புக் செய்யுங்கள், விலை மிகக்குறைவாக இருக்கிறதே என்று பேக்கேஜ் தருபவர்கள் பல நேரங்களில் ஒரே படகில் உள்ள அறைகளில் ஒன்றை உங்களுக்கு தந்துவிடுவார்கள் இதனால் உங்களுக்கு தனி அறை கிடைத்தாலும் ஒரே படகை பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும், இதனால் உங்கள் ப்ரைவசி கெடும்.

3) முடிஞ்ச அளவுக்கு நீங்க தங்குற இடம் நகரத்துகுள்ளேயோ அல்லது நகர எல்லைக்கு உள்ளேயோ இருக்கும் படி பாத்துக்கோங்க. மிகத்தனிமையான எங்கோ ஒரு ஆள் நடமாட்டமேயில்லாத இடங்களில் தங்காதீர்கள்.

4) நீங்க தங்கும் ஹோட்டலின் தொலைப்பேசி எண்களை குறித்து வைத்து கொள்ளுங்கள், அதை ஊரிலும் தெரிவித்து விடுங்கள், கைத்தொலைபேசி வேலை செய்யவில்லையென்றாலோ சிக்னல் கிடைக்கவில்லையென்றாலோ ஏற்படும் தேவையற்ற மன உளைச்சலை தவிர்க்கலாம்.

5) பக்கத்தில் உள்ள மருத்துவமனை அல்லது மருத்துவர் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

7) மலைபகுதிக்கு தேனிலவு செல்பவர்கள், சூழ்நிலைக்கு தக்கவாறு ஆடைகளை கொண்டு செல்லுங்கள்.

8) மலைப்பாதைகளில் தனிமையை தேடி தனியாக செல்லவேண்டாம்.

9) இருட்டும் வேளைகளில் வெளியே செல்வதை முடிந்த அளவிற்க்கு தவிர்த்து விடுங்கள்.

10) மலைவிளிம்புகளில் நின்று சாகசம் செய்வதை (புகைப்படம் எடுப்பதை ) தவித்து விடுங்கள்.

11) பயணத்தில் புதிய நபர்களை சந்திக்க நேர்ந்தால் சீக்கீரம் பேச்சை முடித்து விடுங்கள்.

12) மிகவும் முக்கியமானது விலை உயர்ந்த பொருட்களையோ அல்லது நகைகளையோ அறவே தவிர்த்துவிடுங்கள். ஒரு சிறிய பொருள் தொலைந்தாலும் செண்டிமெண்ட்டாகவும் வருத்தம் ஏற்பட்டு ஹனிமூன் மூடையே கெடுத்துவிடும்

13) சில தேவையான மருத்துகளையாவது கைவசம் வைத்திருப்பது நல்லது, அதே போல கொஞ்சமாவது உலர் உணவுகள் பிஸ்கெட், ப்ரெட் போன்றவைகளை வைத்திருப்பதும் நல்லது.

14) நீங்கள் தேனிலவு செல்ல ஏற்ப்பாடு செய்து தரும் நிறுவனம் நல்ல நிறுவனமா அவர்களின் சேவைகள் என்ன என்ன , எத்தனை வருடமாக தொழில் செய்கிறார்கள், முதலில் அவர்கள் நம்பிகையானவர்களா என்றும் ஆராய்ந்து அதன்பின் அவர்களிடம் புக் செய்யுங்கள்

15) சிறிய சிறிய ஏற்பாட்டு குறைபாடுகளும் உங்களின் ஹனிமூன் மூடை கெடுத்துவிடும் என்பதால் நம்பிக்கையான, தெரிந்த நிறுவனங்கள் வழியாக ஹனிமூன் புக் செய்யுங்கள். முக்கியமாக ஏதேனும் ஏற்பாட்டு குறைபாடுகள் ஏற்பட்டால் உடனடியாக மாற்று ஏற்பாடுகள் அவர்களால் செய்து தர இயலுமா என்று பாருங்கள்

16) வெளிநாடுகள் அல்லது சுற்றுலா தளங்களில் ஹனிமூன் கொண்டாடுபவர்கள் கவனிக்க வேண்டியது, எல்லா டூரிட்ஸ் அட்ராக்சன் இடங்களையும் பார்க்க வேண்டுமென காலையிலிருந்து நள்ளிரவு வரை சுற்றோ சுற்றென்று சுற்றாதீர்கள், ஆமாம் நீங்கள் காசு செலவழித்து தான் வந்திருக்கின்றீர்கள் ஆனால் நீங்கள் வந்திருப்பது தேனிலவுக்கு என்பதை மறக்காதீர்கள், சுற்றுங்கள் ஆனால் களைப்படைந்து விழும் வரை சுற்றாதீர்கள். நிறைய நிறைய கவர் செய்ய வேண்டுமென்று சுற்றாதீர்கள், மிக நெரிசலான இடங்களை தவிர்த்து அமைதியான இடங்களை தேர்ந்தெடுங்கள். உதாரணமாக மலேசியா வந்தால் பெட்ரோனஸ் டவர் கீழ் நின்று போஸ் கொடுப்பதற்காக சுற்றுவதை விட தியோமென் தீவு, லங்காவி, ஜென்டிங் ஹைலேண்ட் என்று சற்று ரிலாக்ஸ் ஆக இருங்கள்...

17) ஹனிமூன் காலத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பதை ஓரளவு முன்பே தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் தயார் செய்யுங்கள்.

18) நண்பர்களுக்கு திருமணம் ஆகின்றதா? அவர்களுக்கு மறக்க முடியாத பரிசு தரணும் என நினைக்கின்றீர்களா? அவர்களுக்கு ஹனிமூன் பேக்கேஜ் ஒன்றை திருமணப்பரிசாக புக் செய்து தாருங்கள்.

இன்னும் ஒரே ஒரு டிப்ஸ் பாக்கி இருக்கு, வெளிப்படையாக இங்கே சொல்லமுடியாது வேண்டுமெனில் என்னை ஜிடாக்கில் தொடர்பு கொள்ளுங்கள் சொல்கிறேன்...

நமது நண்பர் இளையகவி அவர்களின் S-Teamholidays நிறுவனம் பல ஆண்டுகளாக ஹனிமூன் பேக்கேஜ் டூர்கள் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து தருகிறார்கள், நீங்கள் முதல் ஹனிமூன் செகண்ட் ஹனிமூன் போவதாக இருந்தாலும் நண்பர்களுக்கு ஹனிமூன் டிரிப் பரிசளிப்பதாக இருந்தாலும் அவரை தொடர்பு கொள்ளுங்கள்.

B.Ganeshkumar
+ 91 98949 16242
+ 91 90432 16661
gtalk :- contact.s.teamholidays(at)gmail.com
Yahoo:- steam.holidays(at)yahoo.com
Msn :- steam.holidays(at)hotmail.com

மத்திய மந்திரிசபை லாபி ராசா, கருணாநிதி குடும்பம் மர்மம் உடைந்ததா?

மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் லாபி செய்து தொலைத்தொடர்பு துறை பெற்றாராம், இது தொடர்பாக ராசா மற்றும் நீரா ராடியா என்ற பெண்மணிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் வெளியிடப்பட்டுள்ளது, சரி லாபி செய்து பெற்றதாகவே இருக்கட்டும் ஆனால் கார்ப்பரேட் லாபிக்கு அடிபணிந்து பதவி கொடுத்த சோனியாவும், நலிந்த வீக்கான பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரசிடமும் தான் இதற்க்கு முதலில் பதில் சொல்லவேண்டும்.


சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் மிக மோசமாக நடந்துகொண்டார், நீரா ராடியாவிடம் பேசியது அவரா இல்லையா என்ற கேள்வி, பதட்டப்படாமல் சொல்லலாம், மேலும் அவரின் ஆட்கள் பத்திரிக்கையாளர்களை வீட்டுக்கு பாதுகாப்பா போக மாட்டே என்று மிரட்டும் அளவுக்கு இறங்கியிருக்கின்றார்கள்...

ஆ.ராசா ரொம்பத்தான் மோசம் ஊழல், லாபி செய்யறது என மத்ததெல்ல்ல்ல்ல்ல்ல்லாம் அவாங்ககிட்ட இருந்து கத்துக்கிட்ட ராசா இன்னும் கோபத்தை அடக்கி சிரிச்சிக்கிட்டே பதில் சொல்ல கத்துக்கலை... ஆமா ஆங்கில மீடியா ஆட்கள் தானே நோண்டுறாங்க விகடன், நக்கீரன் குமுதமெல்லாம் என்னா ஆனாங்க... ஓ சாரி எல்லாம் கலைஞர் பாராட்டுவிழாவுக்கு போயிட்டாங்களா?

நீராராடியா ஆ.ராசா உரையாடல்

A.Raja : My case is clear a?

Nira Radia: your is cleared yeah, your case is cleared last night only, no butuuuu what is happening with daya

A.Raja : aang?

Nira Radia: Daya?

A.Raja: Then the rest of the thing is textile or fertilizers

Nira Radia: Not for daya

A.Raja: either one

Nira Radia: But alagiri or daya only one can come a?

A.Raja: No two, two can come

Nira Radia: both

A.Raja: Balu will be problem I hope

Nira Radia: I think it will be difficult for the leader to justify three family members.

A.Raja: ha ha , ya but everybody knows


மூன்று பேர் மினிஸ்டரியில், ஆ.ராசா, அழகிரி, மாறன்... அழகிரி மாறன் ஓகே கருணாநிதி குடும்பம், இதுல ஆ.ராசா எப்படி குடும்பத்துல ஒருத்தர்? கருணாநிதி சொல்றது போல கழகம் தான் குடும்பம், குடும்பம் தான் கழகமா? அல்லது ஒரு வேளை நாஞ்சில் சம்பத்தை கேட்டா விலாவாரியா சொல்வாரா?

ஏ மக்களே பாருங்கள் எங்கள் தலைவர் கருணாநிதியை குடும்பத்துக்காக செயல்படுகிறார் என்கின்றீர்களே, தனது மகன் அழகிரிக்கும் பேரன் தயாநித்க்கும் எந்த துறை என்பது ராசாவுக்கு முடிவு செய்த பின் தான் என்றால் எப்படி குடும்ப உறுப்பினர்களை நடத்துகிறார் என்று தெரிகிறது.