தோழர் சீமான் விடுதலைக்கு வாழ்த்துகள்
நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான் அவர்கள் கருணாநிதியின் அராஜக அடக்குமுறை ஆட்சியினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது விடுதலையாகியிருக்கும் தோழருக்கு வாழ்த்துகள்...
வெகுசில நாட்கள் சிறையில் இருந்துவிட்டு அதுவும் தொண்டர்களின் அரவணைப்பிலே சிறையில் இருந்துவிட்டு பாம்புக்கும் பல்லிக்கும் நடுவினிலே பாளையங்கோட்டை சிறையினிலே என்று ஓங்கிய குரலில் பாட்டு போட்டு பம்மாத்து செய்யும் கேவலமான தலைவர்களை பார்த்த இனத்திலே தனிமைச்சிறையில் வதைபட்டு வெளிவந்திருக்கும் தோழர் சீமான் முடிக்கவும் கடக்கவும் வேண்டிய பணி நிறைய உள்ளது... ஏற்கனவே ஏமாற்றிய எம் ஈனத்தலைவர்களை போல அல்லாமல் கொண்ட கொள்கையை கடைபிடித்து நெஞ்சின் உறுதியோடு தலைமையேற்று பணி முடிக்க அன்புத்தம்பியாக வாழ்த்துகிறேன்


