ஏன் வேண்டும் இடஒதுக்கீடு - கட்டுரைகளின் தொகுப்பு

சமூகநீதிக்கு சாவு மணி அடிப்பதே குறிக்கோள் என்று அலையும் உச்ச நீதிமன்ற மனுநீதிமன்றம் 27% இடஒதுக்கீட்டிற்கு நேற்று இடைக்காலத் தடைவிதித்துள்ளது, அதற்கு காரணமாக சொன்னது புள்ளிவிபரங்கள் தேவையான அளவிற்கு இல்லையாம், கைப்புண்ணிற்கு கண்ணாடி கேட்டுள்ளது மனுநீதிமன்றம், இதெல்லாம் இடஒதுக்கீட்டை தள்ளிப்போட்டு அதன் பின் அதை செரித்துவிடும் நடவடிக்கை, முழுபுள்ளிவிபரம் வேண்டுமெனில் மிக எளிதாக ஒரு முறை உள்ளது, தற்போதுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் எத்தனை விழுக்காடு உயர் சாதி மாணவர்கள் உள்ளனர், எத்தனை விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உள்ளனர் என கணக்கெடுக்கட்டும், இந்த கணக்கெடுப்பை ஒரே வாரத்தில் செய்துவிட முடியும்.

எலிமினேஷன் முறையில் இதை செய்யலாம், எஸ்.சி/எஸ்.டி அல்லாத, உயர்சாதி அல்லாத எல்லோரும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் தானே, எனவே மிக எளிதாக உயர்சாதியினர் எத்தனை விழுக்காடு இடங்களை ஆக்கிரமித்துள்ளனர் என்று தெரிந்து விடும், அந்த உயர்சாதியினரின் விழுக்காடு இந்திய சமூகத்தில் அவர்களின் எண்ணிக்கைக்கு சமமா என்று தெரியாதா என்ன?

ஒரு கல்வி நிலையத்தில் 65% உயர்சாதியினர் ஆக்கிரமித்திருந்தால் உயர்சாதியினர் இந்திய சமூகத்தில் இருக்கும் எண்ணிக்கை விழுக்காட்டிற்கு மேலிருப்பதை இடஒதுக்கீட்டிற்கு ஒதுக்கட்டும், ஒரு 10 அல்லது 15% உயர்சாதியினர் எத்தனை இடங்களை ஆக்கிரமித்துள்ளனர், மற்றவர்கள் நிலை என்ன என்று உச்சநீதிமன்றத்திற்கு தெரியாதா என்ன? உயர்சாதிகளுக்கு உதவவே சமூக நீதிக்கு சாவு மணி அடிக்கும் உச்ச நீதிமன்ற மனுநீதிமன்றத்தில் இடஒதுக்கீட்டை செய்து மனுநீதி மன்றத்தை முதலில் நீதிமன்றமாக மாற்ற வேண்டும்.

ஏன் வேண்டும் இடஒதுக்கீடு என்பது தொடர்பாக இது வரை வந்த கட்டுரைகளில் சிலவற்றை தொகுத்துள்ளேன், மேலும் இது தொடர்பான கட்டுரைகள் இருந்தால் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.

இந்த தொகுப்பு ஏன் வேண்டும் இடஒதுக்கீடு என்பது பற்றியது, இன்னமும் இடஒதுக்கீடு- ஊடகங்களின் சார்பு நிலை, இடஒதுக்கீடு - மனு நீதிமன்றங்களின் சார்பு நிலை, இடஒதுக்கீடு - எதிர்ப்பாளர்களின் வாதங்களுக்கா பதில்கள், இடஒதுக்கீடு - வஞ்சகமாக ஏமாற்றப்படும் இடங்கள் என்ற தலைப்பில் தொகுத்துக்கொண்டுள்ளேன் அவைகளை வரும் காலங்களில் வெளியிடுவேன்.

உச்ச நீதிமன்ற மனுநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து நாளை தமிழகத்தில் அடையாள வேலை நிறுத்தம் செய்யும் கட்சிகள் மற்றும் பொதுமக்களை வாழ்த்துகிறேன், நாளை தமிழகத்தில் எழும் முழக்கம், தன் கோவணத்தை உருவிக்கொண்டிருக்கும் உச்ச நீதிமன்ற மனுநீதிமன்றத்தை சொரணை இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கும் இந்தியா முழுவதும் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் காதில் அறையும் எழுச்சி முழக்கமாக இருக்கட்டும்.


இட ஒதுக்கீடு பத்ரி

ரிஸர்வேஷன் டாக்டர்களிடம் போவீர்களா? இராமநாதன்

சாதி ரீதியான இட ஒதுக்கீடு தேவையா? குழலி

இட ஒதுக்கீடு - தலைமுறை தலைமுறையாகவா? குழலி

தலைமுறை வலிகள் குழலி

ஹிந்து கட்டுரை நன்றி சுந்தரமூர்த்தி

இடஒதுக்கீடு பற்றி ஞானி குரல்வலை

இயலாதோருக்கு இடஒதுக்கீடு அனுராதா

இடப்பங்கீடு சில நியாயங்கள்! திரு

ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு… தருமி

நான் கண்ட மண்டல் கமிஷன். தருமி

சாதிகள் இருக்குதடி பாப்பா - முழுக்கட்டுரை தருமி

பூனைக்கு மணிகட்டும் காலம் ஆதவன் தீட்சன்யா

இட ஒதுக்கீடு குறித்து... கோவி.கண்ணன்

இட ஒதுக்கீடு எனும் ஆயுதம் சிவபாலன்

இடஒதுக்கீட்டின் வயது சில ஆயிரம் வருடங்கள் அசுரன் (தினகரன் கட்டுரை)

இடஒதுக்கீடு சில சிந்தனைகள் நேசக்குமார்

இடஒதுக்கீடு இன்னொரு தீண்டாமை ஒழிப்பு மகேந்திரன்.பெ

இடஒதுக்கீடு எவ்வளவு காலத்திற்கு? அறிவானந்தா

இட ஒதுக்கீடு - அச்சு ஊடகங்கள் நச்சு ஊடகங்களா? குழலி

இட ஒதுக்கீடு வேண்டும்! ஏனென்றால், சுந்தரவடிவேல்

இடஒதுக்கீட்டின் கணிதம் ரவிசங்கர் அருணாச்சலம் மொழியாக்கம் : கார்த்திகேயன் இராமசாமி

இடஒதுக்கீடு பிரச்சனை: தலித் - பிற்படுத்தப்பட்டோர்ஒன்றிணைவதற்கான ஓர் அரிய வாய்ப்பு நன்றி கார்த்திகேயன் இராமசாமி

இட ஒதுக்கீடு: நாய்கள்தான் அப்படி நாமளுமா? கல்வெட்டு

பாக்கிஸ்தானில் இந்துக்கள் அமோகமாக வாழ்கிறார்கள்

பாக்கிஸ்தான் தலைமை நீதிபதியாக ஹிந்து நியமணம் தட்ஸ்டமில் செய்தி தெரிவிக்கின்றது, ஆக இதனால் தெரிவது என்னவென்றால் மத அடிப்படைவாத நாடு என்று பொய்யாக இழித்தும் பழித்தும் சொல்லப்படும் பாக்கிஸ்த்தானில் இந்துக்கள் எத்தனை சுக வாழ்வு வாழ்கிறார்கள் என்பது புலப்படும் இந்துக்கள் அங்கே தலைமை நீதிபதியாக முடிகின்றதென்றால் அங்கே நிலைமை எப்படி இருக்கின்றது பாருங்கள்... இந்துக்கள் எத்தனை உயர்ந்த வாழ்க்கையோடும் உரிமைகளோடும் வாழ்கிறார்கள் என்பதற்கு ஒரு இந்து தலைமை நீதிபதியானதே சான்று.

அய்யகோ இந்த இந்திய ஊடகங்களும் மேற்கு ஊடகங்களும் தான் பாக்கிஸ்தானை மத அடிப்படை வாத நாடு அங்கு பிற இனத்தவருக்கு எந்த உரிமையும் இல்லை என்கிறார்கள், பாருங்கள் இந்துக்களின் சுக வாழ்வை, கோவிலில் கும்பாபிசேகம் செய்கிறார்கள், தலைமை நீதிபதியாகிறார்கள்.... இனியாவது பாக்கிஸ்தான் மத அடிப்படைவாத நாடு என்று சொல்லாதிர்கள், இந்துக்கள் சுகவாழ்வு வாழும் நாடு பாக்கிஸ்தான், யூசுப் யுகானா போன்ற கிறுத்துவர்கள் பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளனர், இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்துவர்கள் என எல்லா மதத்தினரும் சுமுகமாக சுகவாழ்வு வாழும் நாடு தான் பாக்கிஸ்தான்.

பின்குறிப்பு
இந்தியாவில் ஒரு தலித் தலைமை நீதிபதியாகவும் ஒரு முஸ்லீம் குடியரசு தலைவராகவும் இருக்கின்றனர்

பாக்கிஸ்தானில் இந்துக்கள் அமோகமாக வாழ்கிறார்கள்

பாக்கிஸ்தான் தலைமை நீதிபதியாக ஹிந்து நியமணம் தட்ஸ்டமில் செய்தி தெரிவிக்கின்றது, ஆக இதனால் தெரிவது என்னவென்றால் மத அடிப்படைவாத நாடு என்று பொய்யாக இழித்தும் பழித்தும் சொல்லப்படும் பாக்கிஸ்த்தானில் இந்துக்கள் எத்தனை சுக வாழ்வு வாழ்கிறார்கள் என்பது புலப்படும் இந்துக்கள் அங்கே தலைமை நீதிபதியாக முடிகின்றதென்றால் அங்கே நிலைமை எப்படி இருக்கின்றது பாருங்கள்... இந்துக்கள் எத்தனை உயர்ந்த வாழ்க்கையோடும் உரிமைகளோடும் வாழ்கிறார்கள் என்பதற்கு ஒரு இந்து தலைமை நீதிபதியானதே சான்று.

அய்யகோ இந்த இந்திய ஊடகங்களும் மேற்கு ஊடகங்களும் தான் பாக்கிஸ்தானை மத அடிப்படை வாத நாடு அங்கு பிற இனத்தவருக்கு எந்த உரிமையும் இல்லை என்கிறார்கள், பாருங்கள் இந்துக்களின் சுக வாழ்வை, கோவிலில் கும்பாபிசேகம் செய்கிறார்கள், தலைமை நீதிபதியாகிறார்கள்.... இனியாவது பாக்கிஸ்தான் மத அடிப்படைவாத நாடு என்று சொல்லாதிர்கள், இந்துக்கள் சுகவாழ்வு வாழும் நாடு பாக்கிஸ்தான், யூசுப் யுகானா போன்ற கிறுத்துவர்கள் பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளனர், இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்துவர்கள் என எல்லா மதத்தினரும் சுமுகமாக சுகவாழ்வு வாழும் நாடு தான் பாக்கிஸ்தான்.

பின்குறிப்பு
இந்தியாவில் ஒரு தலித் தலைமை நீதிபதியாகவும் ஒரு முஸ்லீம் குடியரசு தலைவராகவும் இருக்கின்றனர்

தேவடியா மவனே, இழிபிறவி, நாகரிகம், விளிம்புநிலை இன்ன பிற

சிந்து சமவெளி நாகரிகம், மஞ்சளாற்று நாகரிகம், நைல் நதி நாகரிகம் எல்லா நாகரிகத்தையும் விட இப்போ பேசிக்கிட்டு இருக்காங்களே இங்கே நாகரிகம் நாகரீகம் இருக்கே சாமி தாங்கலைடா.... நாகரிகம்னு எதை எதையெல்லாம் சொல்கிறார்கள்.... வழக்கம் போல வெகு சன ஊடகங்களினால் கட்டமைக்கப்பட்டுள்ள அதே பாசாங்கு நாகரிகம், போலித்தன நாகரிகம் இங்கேயும், வார்த்தைகளில் மட்டும் நாகரிகம் இருந்தால் போதும் ஆனால் கருத்தில் இருக்கத்தேவையில்லை இது தான் பச்சை நாகரிகம் இங்கே, "இழிபிறவி" என்று மூத்த பதிவர்கள், வயசில் மூத்த பதிவர்கள் இன்ன பிற நாகரிக கணவான்கள் எல்லாம் எழுதலாம் தப்பில்லை, அதில் எந்த தரக்குறைவும் இல்லை, ஆனால் தேவடியா மவனே என்பது ஆபாசம் அநாகரிகம்.... இழிபிறவியும் தேவடியாமவனேயும் ஒரே பொருள் தானே இந்த எழவில் இழிபிறவி எப்படி நாகரிகமானது, இழிபிறவி நாகரிகமான எழுத்தாக இருக்கும் போது தேவடியாமவனே மட்டும் எப்படி அநாகரிகமானது, வரிக்கு வரி இழிபிறவி என்ற எழுத்துக்களை படிக்கும்போது அதை எப்படி எந்த வித உறுத்தலும் இல்லாமல் படிக்க முடிகிறது? தேவடியாபையா என்ற எழுத்திற்கு எத்தனை அருவெருப்பு படுகிறோமோ அதே அருவெறுப்பு எப்படி இழிபிறவி என்ற எழுத்துகளுக்கு படாமல் நம்மால் தாண்டிப்போக முடிகிறது? எப்படியாக இந்த கட்டமைப்பு உருவானது?

திருநங்கைகளிடம் அசிங்கமாக ஆபாசமாக பார்த்து, பேசி இடுப்பில் கைவைக்கும் கணவான்களை "நண்பரே நீங்கள் செய்வது மிக தவறான செயல், தாங்கள் இப்படியெல்லாம் செய்யக்கூடாது, காந்தியை நினைத்து பாருங்கள், ஸ்ரீராமபிரானை நினைத்து பாருங்கள் அவர்களெல்லாம் எத்தனை ஒழுக்க சீலர்கள், தாங்கள் ஏன் இப்படி தவறுசெய்கிறீர்கள், நாங்களும் மனிதர்கள் தானே, எங்களை மட்டும் ஏன் இப்படி கேவலப்படுத்துகிறீர்கள்" என்று கதாகாலாட்சேபம் செய்தால் அது நாகரிகம் அப்படித்தானே?, அந்த நிலையில் இப்படியான கதாகாலாட்சேபம் செய்ய இயலுமா? "அடிங்கோ தேவடியாபயலே..." என்று வாயில் வருமா? சே... சே.... என்ன இருந்தாலும் அநாகரிகமாக கை வைத்தவனை அதைவிட அநாகரிகமாக தேவடியாபயலே என்று திட்டுவது அநாகரிகத்திலும் அநாகரிகம் என்று சொல்கிறோம், ஒரு வேளை "இழிபிறவி" என்று அறிவுறுத்தியிருந்தால் நாகரிகமாக இருந்திருக்குமோ?

ஏற்கனவே சமூகத்தில் தவறாக உருவகப்படுத்தப்படிருக்கும் திருநங்கைகளை அவர்கல் எல்லாம் பாலியல் தொழில் செய்து பெண்களை வைத்து தொழில் நடத்துகிறார்கள் என்று மொத்தமாக சாணியடித்தால் சாணியடிப்பவரின் ஒழுக்கத்தையும் சந்தி சிரிக்கத்தான் வைப்பார்கள். இதில் என்ன அநாகரிகம்? திருநங்கைகளுக்காவது சமூகத்திலிருந்து ஒதுக்கல், படிப்பு, தொழில் இன்ன பிற என்று எந்த ஒத்துழைப்பும் கிடைக்காமல் சோற்றுக்கே வழியின்றி வேறு வழியின்றி பாலியல் தொழிலில் சமூகமே தள்ளிவிடுகிறதென்றால் கன்னட பிரசாத் போன்றவர்களின் 'தொழில்' மூலாதாரமாக இருக்கும் சிலர் இலட்சக்கணக்கில் வாங்கியவர்களுக்கும்/வாங்குபவர்களுக்கும் என்ன விளிம்புநிலை பிரச்சினை? திருநங்கைகளை பாலியல் தொழிலாளிகளாக மட்டுமே பெரும்பாலும் திரைப்படங்களிலும் காட்சி ஊடகங்களிலும் காண்பிப்பவர்கள் கன்னட பிரசாத் போன்றவர்களின் 'தொழில்' மூலாதாரமான அரிதாரங்களை அப்படி ஒரு படத்திலாவது காண்பித்திருப்பார்களா? காண்பித்துவிடத்தான் முடியுமா? திருநங்கைகள் என்றால் லிவிங் ஸ்மைல் மட்டும் வலைப்பதிவில் வந்து சவுண்டு விடுவார், மிஞ்சி மிஞ்சி போனால் விகடனிலோ ரிப்போர்ட்டரிலோ ஒரு கட்டுரை ஆவேசமாக வரும், ஆனால் சில அவர்களை காண்பித்தால் செருப்படி அல்லவா விழும், திரைப்படத் தொழிலே செய்ய முடியாதே, சோத்துக்கே சிங்கியடிக்கும் நிலைமையாகிவிடும், அதனால் பொத்திக்கொண்டு போக வேண்டியது தான்.

உங்களுடைய(நம்முடைய) நாகரிக கையேட்டையும், நாகரிக பேச்சுகளையும் உங்களுக்கு (நமக்கு) சமமான அல்லது உங்களுக்கு (நமக்கு) மேலிருப்பவர்களிடம் காண்பிக்கலாம், ஆனால் புறக்கணிப்பின் உச்சத்தில் இருப்பவர்களிடமும் விளிம்புநிலை மனிதர்களிடமும் தயவு செய்து உங்கள் நாகரிக கையேட்டையும் அளவுகோலையும் தூக்கிக்கொண்டு ஓடாதீர்கள், நாகரிக கையேட்டை தூக்கிக்கொண்டு அவர்களிடம் ஓடும் முன் அவர்களிடத்தில் உங்களை வைத்து பாருங்கள்..... அந்த நிலையில்
நீங்களோ நானோ இருந்தால் அதையும் விட அநாகரிகமாக பேசுவோம் என்பதை மறந்துவிட வேண்டாம்.


தொடர்புடைய சுட்டிகள்

பத்தினி பதிவிரதை ராதிகா R. சரத்குமாரும், பாதக அலிகளும்

விளிம்புநிலை மாந்தர்களும் ஊடகச் சார்புநிலைகளும்!

புது ப்ளாக்கர்க்கு தமிழ்மண கருவிப்பட்டையை சேர்ப்பது

புது ப்ளாக்கர் அடைப்பலகையில் தமிழ்மண கருவிப்பட்டை நிரலியை எளிதாக சேர்க்கும் விதமாக ஜாவாஸ்கிரிப்ட் பயன்படுத்தி எழுதியுள்ள கருவி இங்கே (www.kuzhali.co.nr) கிடைக்கும், இத்துடன் புது ப்ளாக்கர் பின்னூட்டங்களில் தமிழ் எழுத்துகள் சிதைந்து இருப்பதை சரி செய்யும் ஜெகத் அவர்களின் நிரலியையும் இணைத்துள்ளேன், இது ஏற்கனவே சில பதிவுகளில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை ஏற்கனவே தமிழ்மணத்தில் இருக்கும் ஒன்று தான், கூடுதலாக ஜெகத்தின் தமிழ் எழுத்துகள் சரி செய்யும் நிரலியையும் இணைத்துள்ளேன்.