இப்படம் இன்றே கடைசி - மணற்கேணி 2010 போட்டி இறுதிநாள்

மணற்கேணி 2010

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
- திருக்குறள் - 396


சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் இணைந்து நடத்தும் கருத்தாய்வு போட்டி மணற்கேணி 2010ற்கான போட்டி ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் இன்று. உங்கள் கட்டுரைகளை இன்றே அனுப்பி போட்டியில் பங்களிக்க வேண்டுகிறது மணற்கேணி 2010 நிர்வாகக் குழு.

இது பற்றிய முழு தகவல்கள் பெற இங்கே சுட்டவும் http://www.sgtamilbloggers.com/

மணற்கேணி போட்டியில் கலந்து கொள்ள இறுதிநாட்கள் நெருங்குகின்றது...

சிங்கை வலைப்பதிவர்களும் தமிழ்வெளியும் இணைந்து நடத்தும் மணற்கேணி 2010க்கான கட்டுரை அனுப்ப இறுதி நாளுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன...

உங்கள் கட்டுரைகளை விரைந்து அனுப்பி ஒரு வார சிங்கப்பூர் சுற்றுலாவை வெல்லுங்கள்




மேலும் விபரங்களுக்கு http://www.sgtamilbloggers.com/

போட்டித் தலைப்புகள்

பிரிவு-1: அரசியல் / சமூகம் (அச)


இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் politics@sgtamilbloggers.com

1. களப்பிரர் காலம்

2. இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் - நன்மை தீமைகள்

3. எல்லா சாதிகளும் ஒடுக்கப்பட்ட உணர்வு கொண்டிருப்பது ஏன்?

4. இந்திய கூட்டமைப்பில் தமிழர் நிலை

5. தமிழகத்தில் நகரமயமாக்கலும் விளைவுகளும்

6. கருத்துரிமை சுதந்திரம், ஊடகங்களின் வணிக நோக்கம், மாற்று ஊடகங்கள்

7. ஈழத்தமிழர் நிலை நேற்று இன்று நாளை

8. சமச்சீர் கல்வி

9. கூட்டாண்மை(Corporate) அரசியல் - நவீன சுரண்டல்

10. புலம் பெயர்ந்த தமிழர்களிடத்தில் தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டு விழுமங்கள் - நேற்று இன்று நாளை

பிரிவு-2: தமிழ் அறிவியல் (அறி)


இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் science@sgtamilbloggers.com


1.மரபுசாரா ஆற்றல் வளம்

2,தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி அறிவியல் கட்டுரை

3.தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை

4.அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும்

5.கணித்தமிழ்


பிரிவு-3: தமிழ் மொழி / இலக்கியம் (இல)


இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் literature@sgtamilbloggers.com

1. பழந்தமிழ் இலக்கியங்களில் ஒடுக்கப்பட்டோர் குரல்கள்

2. உலகத்தமிழ் செம்மொழி மாநாடு

3. நாட்டுப்புற இலக்கியங்கள்

4. சேரர்கள்

5. உரையாசிரியர்கள்

6. தமிழ் விக்கிப்பீடியா

7. மெல்லத்தமிழினி வாழும்

8. எழுத்துச் சீர்திருத்தம்


தமிழிலக்கியங்களில் ஒடுக்கப்பட்டோர் குரல்

மன்னர்களின் பெருமைகளையும் போர்களையும், பட்டப்பெயர்களையும் அவர்களின் அந்தப்புர காம களியாட்டங்களையுமே நாம் வரலாறு என்று படித்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் குடிமக்களின் வாழ்க்கை தான் உண்மையான வரலாறு என்பார் பெரியார்தாசன் அவர்கள், பெரும்பாலுமான நமது பைந்தமிழ் இலக்கியங்களும் போர்ப்பரணிகளையும் இதிகாசங்களையும் மன்னர் தம் பெருமைகளையும் உயர்குடிக்களின் வாழ்க்கையையும் மதங்களையுமே கொண்டிருக்கும், ஆனால் அதிலும் ஒடுக்கப்பட்டோர்களின் குரல்களாக ஓங்கி ஒலித்த இலக்கியங்களும் உண்டு... குறவஞ்சியும் சித்தர் பாடல்களுமாகவும் பல்வேறு குலசாமிகளின் கதையுமாகவும், நாட்டுப்புற பாடல்களிலும்,நாட்டார் கதைகளாகவும் பல்வேறு இலக்கியங்களில் ஆங்காங்கேயும் ஒடுக்கப்பட்டோர் குரல் ஒலிப்பு நம் தமிழ் இலக்கியங்களிலும் உண்டு... பல இடங்களில் வாழ்க்கைமுறையாகவும், நையாண்டியாகவும் அதிகாரத்துக்கெதிரான குரலாகவும் ஒலிக்கும் இந்த குரல்கள் பற்றிய ஒரு தேடல் இருந்தால் அது தொடர்பான ஆர்வமிருந்தால் உங்கள் கட்டுரைகளை மணற்கேணி 2010 போட்டிக்கு எழுதி அனுப்புங்கள்



"பழந்தமிழ் இலக்கியங்களில் ஒடுக்கப்பட்டோர் குரல்கள்" என்ற தலைப்பு உட்பட பல்வேறு தலைப்புகளில் அரசியல்/குமுகாயம், தமிழ் அறிவியல் மற்றும் தமிழ் இலக்கியங்கள் என்ற பிரிவுகளில் சிங்கப்பூர் வலைப்பதிவர்களும் தமிழ்வெளி இணையதளமும் இணைந்து இரண்டாம் ஆண்டாக நடத்தும் மணற்கேணி 2010 போட்டியில் கலந்து கொள்ளுங்கள், பிரிவுக்கு ஒருவராக வெற்றிபெறுபவர்கள் மொத்தம் மூன்று பேர் சிங்கப்பூர் வந்து ஒருவாரம் தங்கி இருந்து தமிழ் சார்ந்த நிகழ்வுகளிலும் விழாக்களிலும் கலந்து கொள்வார்கள்...

கட்டுரை அனுப்பவேண்டிய இறுதி நாள் டிசம்பர் 31, 2010 மேலும் தகவல்களுக்கு பாருங்கள் http://www.sgtamilbloggers.com/

தோழர் சீமான் விடுதலைக்கு வாழ்த்துகள்

நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான் அவர்கள் கருணாநிதியின் அராஜக அடக்குமுறை ஆட்சியினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது விடுதலையாகியிருக்கும் தோழருக்கு வாழ்த்துகள்...

வெகுசில நாட்கள் சிறையில் இருந்துவிட்டு அதுவும் தொண்டர்களின் அரவணைப்பிலே சிறையில் இருந்துவிட்டு பாம்புக்கும் பல்லிக்கும் நடுவினிலே பாளையங்கோட்டை சிறையினிலே என்று ஓங்கிய குரலில் பாட்டு போட்டு பம்மாத்து செய்யும் கேவலமான தலைவர்களை பார்த்த இனத்திலே தனிமைச்சிறையில் வதைபட்டு வெளிவந்திருக்கும் தோழர் சீமான் முடிக்கவும் கடக்கவும் வேண்டிய பணி நிறைய உள்ளது... ஏற்கனவே ஏமாற்றிய எம் ஈனத்தலைவர்களை போல அல்லாமல் கொண்ட கொள்கையை கடைபிடித்து நெஞ்சின் உறுதியோடு தலைமையேற்று பணி முடிக்க அன்புத்தம்பியாக வாழ்த்துகிறேன்

"மைனா" திரைப்படம் கதை - வலைப்பதிவிலிருந்து திருடப்பட்டது

வலைப்பதிவுலகிலிருந்து ஒரு கதை திருடப்பட்டு "மைனா" என்ற பெயரில் வெளியாகி அந்த படம் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் புகழையும் கோடிகளையும் அள்ளிக்கொடுத்துள்ளது...



"மைனா" படம் பார்த்த பலரும் சொன்னது காவல்துறையினர் படும் சிரமங்களை புது கோணத்தில் சொல்லியிருப்பதாகவும் படத்தில் தீபாவளி அன்று தப்பித்து ஓடிப்போன கைதியை பிடித்து வர அவர்கள் படும் சிரமத்தையும் சொல்வதாகவுமான அணுகுமுறைய பாராட்டியிருப்பார்கள், காட்சி களன், காட்சி நகர்வுகள், படத்தின் முக்கிய இழையே வலைப்பதிவில் எழுதப்பட்ட பதிவிலிருந்து திருடப்பட்டுள்ளது...

"அரசு ஊழியர்கள் - பகுதி - 3." அப்படிபோடு கற்பகம் அக்கா என்றழைக்கும் கற்பகம் அவர்கள் 2005ம் ஆண்டில் எழுதிய சிறுகதை போலான இந்த வலைப்பதிவு உள்ளடக்கமே காட்சிகளாகவும் படமாகவும் மைனாவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது... கதையின் ஒன் லைனர் ஒத்து போவது போல அல்ல இது... மைனா படத்தின் கதையையும் இந்த கதையும் படித்து பார்த்து சொல்லுங்கள்...

இந்த கதை திருட்டை அம்பலப்படுத்தி மின் மடல் அனுப்பியவருக்கு மிகவும் நன்றி, நிறைய விவரித்து எழுத வேண்டும் என நினைத்தேன், ஆற்றாமையாலும் உடனே வெளிப்படுத்த வேண்டுமென்றும் சுருக்கமாக சொல்லியுள்ளேன்...


கீழே பதிவிலிருந்து சில பத்திகள் மட்டும் முழு பதிவையும் படிக்க "அரசு ஊழியர்கள் - பகுதி - 3." சுட்டியை அழுத்துங்கள்...

**** அந்தநாள்., விடிந்தால் தீபாவளி*** ***அன்று இரவும் ஏதோ வாக்குவாதம் நடந்து கொண்டிருக்க., வெளியில் காவலர் விசில் ஊதும் சத்தம் கேட்டது., நான் முதலில்., சின்னப் பசங்க விளையாடிட்டு இருக்காங்கன்னு நினைச்சுட்டு இருக்கும் போது ஒரு எண்ணம் விடிஞ்சா தீபாவளி., பட்டாச, கிட்டாச வெடிக்காம., இது என்ன?ன்னு நினைச்சுக்கிட்டே வெளிய வந்து பார்த்தா உண்மையிலேயே போலீஸ் பட்டாளம்தான். எங்க ஏரியா மிக அமைதியான ஏரியா. எதுக்கு வந்திருக்காங்கன்னு பார்த்திட்டு இருக்கும் போதே ரெண்டு பேர் எங்க வீட்ட நேக்கி வந்தாங்க. எங்க பக்கத்து வீட்டுல., ஒரு குடும்பம் வாடகைக்கு இருந்தார்கள். நம்ம வீட்டுலயே சத்திரம் மாதிரி ஆளுக இருக்கறதுனால பக்கத்து வீட்டயெல்லாம் கவனிச்சதே இல்ல. ஆனா., அந்த வீட்டுல சமீபத்தில் ஒரு திருமணம் நடந்தது தெரியும். வந்த காவலர்கள் கேட்டார்கள் "பாப்பா... உங்க வீட்டுல ஏதாவது திருடு போயிருக்கா?"., "இல்லங்க., என்ன ஆச்சு?"., விதயம் இதுதான் அந்த வீட்டில் மணமாகி வந்த மாப்பிள்ளை., எங்கையாவது ரோட்டுல அனாமத்தா கிடக்கிற, அல்லது யார் வீட்டுலயாவது பயன்படுத்தாம இராத்திரில நிக்கிற ஹீரோ ஹோண்டா., யமாஹா போன்ற வாகனங்களை பத்திரமா அவர் வீட்டுல கொண்டு வந்து வச்சுக்குவாராம். இதுல ஒரு ஆச்சரியம் என்னன்னா., எங்க வீட்டுக்கும் அவங்க வீட்டுக்கும் இடையில் இருக்கும் சந்தில்தான் என் தம்பி எப்போதும் அவனுடைய யமஹாவை வைத்திருப்பான். அவரைப் பிடிக்க வந்த பட்டாளம் அவருடைய மனைவியின் குடும்பத்தை கேள்வியால் துளைத்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் புது மணப்பெண் அழுத அழுகை மனதை என்னவோ செய்தது. ஆனால் விதயம் தெரிந்து மாப்பிள்ளை எஸ்கேப். அவரைப் பிடிக்க வந்த காவலர்கள்., அந்தக் காவலர் கூட்டத்திலேயே ஒல்லியாக, நிற்க சத்தில்லாத நிலையில் இருந்த இரு கவலர்களை பார்த்து "வந்தா விட்றாதிங்கய்யா!" என்று கூறிவிட்டு கலைந்து சென்றார்கள்.
*
அந்த இரு காவலர்களும் இரவு 7.30 மணியிலிருந்து 10 மணி வரை சாலையிலேயே நின்று கொண்டிருந்தார்கள். வானம் வேறு தூறிக்கொண்டிருந்தது. எங்கோ சென்று விட்டு வந்த என் அப்பாவிடம் எல்லாவற்றையும் விளக்கினோம்., அவர் இரண்டு நாற்காலி மற்றும் டீ அவர்களுக்கு தரச் சொன்னார். நள்ளிரவு 1.30 மணிவரை அவர்கள் இருந்ததைப் பார்த்தோம். பின்பு படுக்கச் சென்று விட்டோம். காலை நாற்காலிகள் எங்கள் வீட்டின் முன் இருந்தது எப்போது சென்றார்கள் என்பது தெரியவில்லை. அவர்களுடைய அந்தத் தீபாவளி எப்படி இருந்திருக்கும்? காவலர்களுக்கு குடும்பம்., குழைந்தைகள் இருக்குமல்லவா., அவர்கள் மனநிலை எப்படியிருந்திருக்கும்?.
*
ஊடகங்களில் அதிகம் தாக்கப்படுபவர்கள்., கேலிக்குள்ளாக்கப் படுபவர்கள் காவலர்களே., ஒரு அரசியல்வாதி ரோட்டில் பவனி வர 2, 3 மணிநேரம் இவர்கள் வெயிலில் காயவும், மழையில் நனையவும் வேண்டியிருக்கிறது. அரசியல் கொலைகளில் பலியான முகம் தெரியாத காவலர்கள் எத்தனை பேர்?., அரசியல்வாதிகளின் பாதுகாப்பு என்ற பெயரில் இவர்கள் சந்திக்கும் சிக்கல்கள்..., எல்லாவற்றுக்கும் மேலாக குற்றவளிக்களுக்கும் பாதுகாப்பு பணிபுரிய வேண்டிய நிலை. ********

இதை காப்பியடித்தது போல் அப்படியே கிளைமாக்சை மட்டும் மாற்றி (அக்கியூஸ்ட் புதுசா கல்யாணம் ஆனவர் மைனால போலிஸ்காரனுக்கு தலை தீபாவளி). இப்பதிவுடன், படத்தின் முற்பாதிக்கு சமிபத்தில் வெளியான 'வெளுத்துக்கட்டு' படத்தின் சில காட்சிகளையும் வைத்து எடுத்ததுபோல் உள்ளது "மைனா" படம்.

முதற்பத்தியில் (முழு பதிவில்) சொல்லியிருப்பது கூட படத்தில் போலீஸ்காரன் பொண்டாட்டி போனில் சொல்வதாக சேர்த்துவிட்டு, அந்த கேரட்டர வில்லியாக்கிருக்காய்ங்க....

---------------------
இப்போ சொல்லுங்கய்யா காப்பி பேஸ்ட் என்றும் எதையும் எழுத தெரியாதவர்கள் என்றெல்லாம் தட்ஸ்டமில் ஆரம்பித்து பல ஊடகங்களிலும் வலைப்பதிவர்கள் பற்றி தவறாக எழுதும் மயிராண்டிகளா வலைப்பதிவர்களின் கதைகளையும் பிரபலமான வசனங்களையும் திருடி படங்களில் பயன்படுத்தி புகழையும் கோடிகளையும் அள்ளும் அளவிற்க்கு உள்ளது...

இயக்குனர் மிஸ்டர் பிரபு சாலமன் இது உங்களுக்கே நியாயமா?

வ.கெளதமன் இயக்கத்தில் சீமான் நடிப்பில் இன்று வெளியாகும் மகிழ்ச்சி திரைப்படம்

இயக்குனர் வ.கௌதமனனின் மகிழ்ச்சி திரைப்படம் இன்று மிகுந்த போராட்டங்களுக்கிடையில் வெளியாகிறது...

அட என்னய்யா போராட்டம் அப்படிங்கறீங்களா, புரொடியூசர் பிரச்சினையா? படம் எடுத்து முடியலையா? டப்பிங் பேசாம ஹீரோயின் ஊருக்கு போயிட்டாங்களா என்றால் அதெல்லாம் ஒன்னுமில்லையாம்.... அட தமிழ்நாட்டுல கருணாநிதி குடும்ப பேனர்ல வெளியாகுற படம் தவிர மற்ற எல்லா படங்களுக்கும் தியேட்டர் கிடைத்து வெளியாவதே பெரிய போராட்டம் தானுங்களே, படம் எப்போதோ தயாராகியும் தீபாவளிக்கு வெளியிட தியேட்டர் கிடைக்காமல் கருணாநிதி குடும்பத்தின் தீபாவளி தியேட்டர் ஆக்கிரமிப்பிற்க்கு பின் தற்போது தான் வெளியாகிறது...



எழுத்தாளர் நீல.பத்மநாபன் 1968 எழுதிய தலைமுறைகள் நாவலையே இயக்குனர் வ.கெளதமன் படமாக எடுத்துள்ளார்... இது மட்டுமின்றி படத்தில் செட்டியார் இனத்தை சேர்ந்த பெண்ணை தலித் ஆண் திருமணம் செய்வதாக வருகின்றதாம், அதனால் நம் இனத்துக்கு இழுக்கு என்று சில செட்டியார் இனத்துக்காரர்கள் இந்த படத்திற்க்கு திரையரங்கு தரக்கூடாது என சிலர் வேலை பார்க்க அதே செட்டியார் இனத்துக்கார திரையரங்க உரிமையாளர்களே இந்த மாதிரி சில்லுண்டி வேலை பார்த்தவர்களை போய்யா வேலைய பார்த்துக்கொண்டு என்று துரத்திவிட்டார்களாம்...

செந்தமிழன் சீமானும் இந்த படத்தில் நடித்திருக்கிறார், நீண்ட நாட்களாக திரைப்படங்களுக்கு பாடல் எழுதாமல் இருந்த பாவலர் அறிவுமதி அவர்கள் பாடல் எழுதியுள்ளார்...

இவர் ஏற்கனவே கனவே கலையாதே என்ற படத்தையும் இயக்கியுள்ளார்... சந்தனக்காடு தொலைக்காட்சி தொடர் இவர் இயக்கிய ஒரு புகழ்பெற்ற தொடர்...

பிரிவியூவில் பார்த்த நண்பர்களுக்கு படம் பிடித்திருக்கிறதாம், எதார்த்தமான திரைப்படமாக சிறப்பாக வந்துள்ளது என்கிறார்கள்...

இந்த படம் வெற்றிபெற இயக்குனர் கெளதமனை வாழ்த்துகிறேன்...



அனுஷ்கா கொடுத்தாலும் வாங்க கூடாதது எது?


அனுஷ்கா கொடுத்தாலும் வாங்க கூடாதது எது?

1. முத்தம்
2. கிஸ்
3. பர்ஸ் / பை

இதற்கான விடையை நாம் கடைசியில் பார்க்கலாம்... ஹலோ எக்சூச்மி பதிவை ஸ்க்ரோளை பிடித்து இழுத்து கீழே போவதற்கு முன் கொஞ்சம் பதிவையும் படியுங்க...






சிங்கப்பூர் பூவுலகின் சொர்க்கம், அழகின் உச்சம், மனிதனின் சாதனை நகரம், உலகின் சுற்றுலா ரசிகர்களின் முக்கிய இடம் இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம், ஃபைன் சிட்டி(fine city) என்று இரட்டை அர்த்தத்தில் சொல்லப்படும்... ஒன்று அழகான சிட்டி என்றும் இன்னொன்று அபராதம் விதிக்கப்படும் சிட்டி என்றும் இரட்டை பொருளில் சொல்லப்படும்...

உலகில் குடிசைப்பகுதியில்லாத(slum) ஒரே நாடு, சிங்கப்பூரின் பெரும்பாலான குடிமகன்களுக்கு சொந்தவீடு, எங்கெங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பதையே பார்த்துள்ள நமக்கு ஊழல் என்பது கிட்டத்தட்ட இல்லாத(nil) நாடாகவும் குற்றச்செயல்கள் என்பதும் மிகக்குறைந்த அளவிலேயே இருக்கும் நாடு சிங்கப்பூர்...

இரவு 12 மணிக்கு உடல்முழுக்க நகையணிந்து தனியே ஒரு பெண் செல்லும் நாள் என்னும் காந்தி கனவை தினம் தினம் நனவாக்கி கொண்டிருக்கும் நாடு...

என் மொழியை மட்டுமே படிக்கவேண்டும் என் மதம் மட்டுமே இருக்க வேண்டும் என் இனம் மட்டுமே என்று இனவெறி பிடித்தலையும் கொலைகார நாடுகளை பார்த்துக்கொண்டிருக்கும் உலகில் அவரவர் தாய் மொழியை படியுங்கள், அவரவர் தாய்மொழியை மதியுங்கள், அவரவர் மதங்கள் அவரவர்களுக்கு என்று பல்தேசிய மக்களும் ஒன்றிணைந்து வாழும் சிங்கப்பூர் உலகின் அதிசயங்களில் ஒன்று...

சிங்கப்பூர் சிறிய நாடு என்பது பெரும்பாலும் அறிந்ததே, சிறியது என்றால் தமிழ்நாடு அளவு இருக்குமா? இலங்கை அளவு இருக்குமா என்றுதான் முதலில் நினைத்தேன், அதனினு சிறிது கிட்டத்தட்ட பாதி பெங்களூர், கால்வாசி சென்னை அவ்வளவுதான்.


சிங்கப்பூரின் கடைக்குட்டியான சிங்கப்பூர் ஃப்ளையர் எனப்படும் உலகின் மிக உயரமான Observation wheel என்பதிலிருந்து சிங்கப்பூரின் பழமையை காண்பிக்கும் புலாவுபின் தீவு வரை எக்கச்சக்கமான சுற்றுலா தளங்கள்...

சென்னை 2 சிங்கப்பூர் செல்ல நிறைய வானூர்திகள் உள்ளன, விசா நடைமுறைகளும் ஓரளவுக்கு எளிதானவையே... சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணை தூதரகத்திலேயே சுற்றுலா விசா பெற்றுக்கொள்ளலாம், டூரிஸ்ட் விசா எனப்படும் விசிட் விசா, இது தொடர்பான நடைமுறை விதிகள் இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

டூரிஸ்ட் விசா பெற மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது
1. உங்களுடைய கடவுச்சீட்டு(Passport) குறைந்த ஆறுமாதத்திற்காவது(at least 6 months validity) இருக்க வேண்டும்

2.சிங்கப்பூர் சென்று மீண்டும் திரும்பி வருவதற்கான வானூர்தி சீட்டு இருக்க வேண்டும்(A confirmed onward/return ticket),

3. உள்ளூர்(சிங்கப்பூர்) அழைப்பாளர்(sponsor) இல்லாத நிலையில் சில நூறு அமெரிக்க / சிங்கப்பூர் டாலர்கள் அல்லது கடன் அட்டை(credit card) காண்பிக்கப்பட வேண்டும்.

இவைகளுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் சிங்கப்பூர் விசாவுக்கான படம்(அறிவுறுத்தப்பட்ட அளவுகளில்)கொடுத்தால் மூன்றிலிருந்து நான்கு வேலை நாட்களுக்குள் விசா கிடைத்துவிடும்.

விசா வாங்கியாச்சா? பாஸ்போர்ட் தயாரா? அப்புறமென்ன கிளம்புங்க சென்னை 2 சிங்கப்பூர்...

நண்பர்கள் வெளிநாடு செல்லும் பொது ஸ்வெட்டர் எல்லாம் தாங்காது Thermal wear அப்போதே 5000 ரூபாய் கொடுத்து வாங்கியதை பார்த்து ஆனைக்கு அர்ரம்னா பூனைக்கு புர்ரம் அப்படிங்கற மாதிரி மேலாளரிடம் போய் முதன்முதலில் சிங்கப்பூர் அலுவலகவேலையாக வரும் முன் எங்கள் அலுவலக மேலாளரிடம் போய் ஸ்வெட்டர், Thermal wear லாம் எத்தனை வாங்க வேண்டுமென்றேன், ஏற இறங்க பார்த்தார்.

சிங்கப்பூர் சென்னை கிளைமேட் என்றார் நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன், அடடே நூடுல்ஸ்ன்னவுடனே ஞாபகம் வருது, சிங்கப்பூர்ல விதம் விதமா நூடுல்ஸ் சாப்பிடலாம், ம் நம்ம மேகி நூடுல்ஸ் சாப்பிட்டு இங்கே வந்து அதே மாதிரி நூடுல்ஸ் என்று நினைத்தால் அவ்ளோதான்...


நூடுல்ஸ் பத்தி பேசிக்கிட்டே பாருங்க மீனம்பாக்கம் கெளம்ப லேட்டாயிரும், வானூர்தி கிளம்புவதற்கு மூன்று மணி நேரம் முன்னாலேயே வானூர்தி நிலையத்தில் இருப்பது நல்லது. மீனம்பாக்கத்தில் வானூர்தி நிலையத்திலேயே உணவுகிடைக்கும், நிலையத்தின் உள்ளே அடையாறு ஆனந்தபவன் இனிப்பகம் இருக்கு, புத்தகக்கடை இருக்கு ஆனால் எல்லாம் கொள்ளை விலை.

ஹலோ ஹலோ என்ன பாக்கெட்ல, சிகரெட் பாக்கெட்டா?, பேக்கிங்கில எதுவும் சிகரெட் பாக்கெட்டுங்க இருக்கா? ப்ளீஸ் தயவு செய்து எடுத்து வெளியில போட்டுறுங்க, சென்னை 2 சிங்கப்பூர் வானூர்தியில் புகைப்பிடிக்க அனுமதியில்லை, மேலும் சிங்கப்பூரில் வெளியூரிலிருந்து எடுத்து வரும் சிகரெட்டுகளுக்கு அனுமதியில்லை, அதற்கு முறையாக சுங்கவரி கட்டி தான் பயன்படுத்த வேண்டும், அப்படியே ஏமாற்றி கொண்டு வந்தாலும் சிங்கப்பூரின் உள்ளே விற்பனையாகும் அத்தனை சிகரெட்டுகளிலும் ஒவ்வொரு சிகரெட்டிலும் SDPC என்று அச்சாகியிருக்கும், அப்படியில்லாத சிகரெட்டுகளை புகைப்பதும் விற்பனை செய்வதும் வைத்திருப்பதும் குற்றம்.

உங்கள் பைகளை சோதனை முடித்து போட்டுவிட்டு கையில் வைத்திருக்க விரும்பும் பையை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் பயணச்சீட்டை தந்து போர்டிங் பாஸ் எடுத்துக்கொள்ளுங்கள், அங்கே ஒரு விண்ணப்ப படிவம் தருவார்கள் அதை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்..

தெரியாத யாராவது எதையாவது கொடுத்து சிங்கப்பூரில் இதை கொடுத்துடுங்க உங்களுக்கு காசு தரேன், அல்லது ரொம்ப பாவமாக உங்களுக்கு பேக்கேஜ் வெயிட் கம்மியா தானே இருக்கு என் பேக்கேஜை உங்களுடையதில் போட்டுக்கொள்ளுங்க பைசா தரேன் என்றால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் மறுத்துவிடுங்கள்...

அனுஷ்கா மாதிரி ஒரு அழகான பெண் மும்தாஜ் குரலில் "ஹல்லோ ப்ளீஸ் இந்த பையை கொஞ்சம் தூக்கிட்டு வந்து ஹெல்ப் பண்றீங்களா" என்றால், கபால்னு பாய்ந்து போய் பையை வாங்காதிங்க, நயன் ஸ்வீட்டி செல்லம் ஒங்களை வேணா தூக்கிட்டு வரேன், ஒங்க பையை எல்லாம் தூக்கிட்டு வரமுடியாது என்று சொல்லிடுங்க, இமிகிரேசன் முடித்துவிட்டு வாருங்கள்...

சிங்கப்பூரில் போதைபொருள் கடத்தலுக்கு மரணதண்டனை, வாய்தா, அப்புறம் வாய்தாவுக்கு வாய்தா முன் ஜாமீன் பின் ஜாமீன் என்றெல்லாம் கிடையாது, போதைப்பொருள் கடத்தினால் விரைவாக கேசை 'முடித்து' விடுவார்கள்... எனவே மிகுந்த எச்சரிக்கை.

ஹலோ அங்கே என்ன பாக்குறிங்க "மெய்புல அறைகூவலர்"னு எழுதியிருப்பதா ஹா ஹா physically chllange என்பதைத்தான் தமிழ்'படுத்தி' இருக்கிறாங்க...

திரும்பவும் வரிசையில் நின்று இன்னொருமுறை சோதனை, முடிச்சி பின் உள்ளே போய் வானூர்திக்காக காத்திருக்கும் நேரத்தில் புத்தக கடையில் ஏதாவது புத்தகம் வாங்கலாமென்றால் அதற்கு யானை எதுவாவது இருந்தால் வாங்கலாம் அவ்வளவு விலை...

ஏறக்குறைய நாலு மணிநேரம் பயணம், சரக்கு சாப்பாடு எல்லாம் நாம போற வானூர்திக்கு ஏற்ற மாதிரி இருக்கும், நாலு பேர் வந்து நம்ம போற வண்டியில திடீர்னு காத்து பத்தலைன்னா ஆக்சிஜன் மூடியை மூஞ்சில வச்சிக்கிங்க, கடலுக்குள்ள விழபோச்சின்னா இப்புடி தான் லைஃப் ஜாக்கெட் போட்டுக்கனும் அதுல இப்படித்தான் காத்து ஊதனும்னு பயமுறுத்துவாங்க...

ஒரு வெள்ளை அட்டை கொடுப்பாங்க, அதை நிரப்பிடுங்க, முக்கியமா எங்க தங்கப்போறிங்க அப்படிங்கறதை நிரப்பிடுங்க, இந்த வெள்ளை அட்டை முக்கியம் திரும்ப சிங்கப்பூரை விட்டு கிளம்பும்போது இந்த வெள்ளை அட்டையை கேட்பாங்க, அப்புறம் வண்டி கிளம்பிய பிறகு கொஞ்ச நேரத்துல சாப்பிட்டு தூங்க ஆரம்பிச்சா கொஞ்ச நேரத்துலயே சிங்கப்பூர் வந்துரும்... கொஞ்சம் கண் அசருங்க..

ஓகே சிங்கப்பூர் வந்தாச்சி, நம்ம ரிட்டர்ன் டிக்கெட், வெள்ளை அட்டை, பாஸ்போர்ட் கொடுத்தால் அங்கிருக்கும் அலுவலர் நமக்கு எத்தனை நாள் தங்கலாமென அனுமதி தருவார், அதிகபட்சமாக 90 நாட்கள் மட்டுமே விசிட் பாஸ்ல் தங்க இயலும், அவர்கள் கொடுத்திருக்கும் நாட்களை நாம் Immigiration checkpoint Authority என்ற துறையில் நம் தங்கும் அனுமதி நாட்களை நீட்டிக்கொள்ளலாம், நம்ம பேக்கேஜை எடுத்துவிட்டு வாருங்கள் சிங்கப்பூர் உங்களை இனிதே வரவேற்கிறது, இன்னும் ஏழு நாள்... பல இடங்கள் சிங்கப்பூரில் சுற்றி பார்க்கலாம்... காத்திருங்கள்...

சிங்கப்பூர் வரனுமா உங்கள் எழுத்து திறமையை காண்பியுங்கள், சென்னை 2 சிங்கப்பூர் ஒரு வார சுற்றுலாவை அனுபவியுங்கள்.. சுற்றுலாவோடு தமிழும் தமிழர்களையும் தமிழறிஞர்களையும் சந்திக்கலாம்... போட்டி தொடர்பான விபரங்கள் இங்கே



பின்குறிப்பு:
எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கா? கண்டிப்பா படிச்சிருப்பிங்க போன வருசம் இதே கட்டுரையை நயன்தாரா கொடுத்தாலும் வாங்க கூடாதது எது? என்று போட்டிருந்தேன், இப்போ நயன்தாரா பழசாயிட்டாங்களா? அப்புறம் தாடிக்காரர் வேற கோச்சிக்கிட்டார்னா என்னா செய்றது அதான் அனுஷ்கா

மணற்கேணி போட்டி தலைப்பு - தமிழ் விக்கிப்பீடியா

சிங்கப்பூர் வலைப்பதிவர்களும் தமிழ்வெளி இணையதளமும் இரண்டாம் ஆண்டாக இணைந்து நடத்தி வரும் "மணற்கேணி 2010" கருத்தாய்வு போட்டியின் கடைசி நாள் டிசம்பர் 31க்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது...


இதில் தமிழ் மொழி / இலக்கியம் என்ற பிரிவில் "தமிழ் விக்கிப்பீடியா" என்ற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது, அன்றாடம் நாம் தகவல்கள் தேடும்போது தினமும் ஒருமுறையாவது இந்த தமிழ் விக்கிப்பீடியா தளத்தை பார்த்து செல்வோம், தமிழ் விக்கிப்பீடியா என்ற தலைப்பு எளிமையானதும் சிறப்பானதுமான ஒரு தலைப்பு.



தமிழ் விக்கிப்பீடியா தளம் தமிழின் மிக முக்கியமானதொரு தளம், அந்த தளம் தொடர்பாக அளிக்கப்படும் சிறப்பான கட்டுரைகள் வருங்காலங்களில் தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பான பங்களிப்பிற்க்கு உதவலாம்...

மணற்கேணி போட்டி தொடர்ச்சியாக இணைய எழுத்துக்களுக்கு ஒரு அங்கீகாரம் அளிக்கும் பொறுட்டும் இணைய எழுத்துக்களிலிருந்து சிறப்பானதை பெறும் பொருட்டும் சிங்கப்பூர் வலைப்பதிவர்களால் ஆர்வமுடன் நடத்தபெறுகின்றது... வலைப்பதிவர்களும் மற்றவர்களும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொள்வதே எங்களுக்கு மிகுந்த ஊக்கமளிப்பதுவும் தொடர்ச்சியாக இம்மாதிரியான நிகழ்வுகளை மேற்கொள்ள செய்யவும் ஊக்கமளிக்கும்...

மணற்கேணி 2010 போட்டியில் கலந்துகொள்ளுங்கள், வெல்லுங்கள் ஒரு வாரம் சிங்கப்பூர் பயணத்தை மேற்கொண்டு வாருங்கள் உங்களை சந்திக்க சிங்கை வலைப்பதிவர்கள் ஆவலுடன் உள்ளோம்...

மற்ற தலைப்புகளை இங்கே அழுத்தி காணுங்கள்

என்.எல்.சி தொழிலாளர் போராட்டம் பற்றிய விபரங்கள் மற்றும் துரோகம் செய்யும் திமுக தொழிற்சங்கம்

கொஞ்சம் பெரிய பதிவு, என்.எல்.சி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் அந்த நிறுவனம் நெய்வேலியில் உருவாக்கிய மாற்றங்கள் பற்றியும் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம், தொழிற்சங்கங்கள் பற்றியும் சற்று நீளமாக விவரிக்கும் பதிவு...

விமானநிலைய விரிவாக்க திட்டம், அணைகட்டுதல், துணைநகரத்திட்டம், கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக தொழிற்பேட்டைகள், டாடா கம்பெனி திட்டம் இம்மாதிரியான திட்டங்களுக்கு நிலம் தராமல் அழிச்சாட்டியம் செய்தால் நாடு எப்படி முன்னேறும் என்று பேசும் மிடில்கிளாஸ் அறிவுஜீவி மயிராண்டிகள் ஒருமுறையேனும் போய் பார்க்க வேண்டிய இடம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்.நெய்வேலி கடலூர் மாவட்டத்தில் உள்ளது, இந்த மாவட்டத்தில் பெரும்பாண்மையானவர்கள் வன்னியர் மற்றும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள், இந்த இடத்தில் ஒரு சில ஜமீன் பரம்பரை ஆட்களை தவிர்த்த மீதி அனைவரும் 3-4 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்த குறுவிவசாயிகள் மற்றும் விவசாய கூலிகளே, இவர்களின் ஒரே வாழ்வாதாரம் இந்த நிலங்களும் விவசாயக்கூலியும் தான். இவர்களிடமிருந்து நிலம் ஊரெல்லாம் மின்சாரம் கொடுத்து விளக்கெரிக்க நெய்வேலி பழுப்புநிலக்கரி நிறுவனத்திற்காக அரசால் பிடுங்கப்பட்டது, பிடுங்கும்போது நிலம் கொடுத்தவர்களுக்கு நிலக்கரி நிறுவனத்தில் நிரந்தர வேலை நிலத்திற்கான இழப்பீட்டு தொகை என்று அரசாங்கம் உறுதியளித்திருந்தது, ஆனால் 30-40 ஆண்டுகளுக்கும் மேலாக பலருக்கும் எந்த இழப்பீட்டு தொகையும் தரப்படவில்லை, மேலும் வேலையும் தரப்படவில்லை இப்படியான நிலையில் நாட்டு முன்னேற்றம் பற்றி பேசும் எந்த அறிவுஜீவி மயிராண்டியாவது அவனுடைய ஒரு செண்ட் நிலத்தையாவது அரசுக்கு தருவானா? இந்த லட்சணத்தில் ஜெயங்கொண்டத்தில் நிலமெடுக்க போகிறார்களாம் சுரங்கம் தோண்ட.



தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து கொண்டே தான் உள்ளன, அவ்வப்போது நாய்க்கு கொஞ்சம் போடுவது போல கொஞ்சம் கொஞ்சம் போடுகிறார்கள் என்பதை தாண்டி இன்றளவும் 30-40 ஆண்டுகளுக்கு முன்பு பிடுங்கிய நிலங்கள் என்னும் வாழ்வாதாரத்துக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.

என்.எல்.சி நிறுவனம் இந்திய படிமுறை சமூகத்திற்க்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது, அடிமட்ட கூலித்தொழிலாளிகளாக மிகப்பிற்படுத்தப்பட்ட சமூகமான வன்னியர்கள் மற்றும் தலித்கள் பெரும்பாலும் உள்ளனர், அதற்க்கு மேல் உள்ள இடங்கள் (தற்போது ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் தவிர்த்து), நோகாமல் நோன்பு கும்பிடும் அலுவலக வேலைகள் தமிழகத்தின் பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனர்கள் அல்லாத பிற உயர் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களும், ஆந்திர கும்பலும் அதற்க்கு ம் மேல் உள்ள உயர் பதவிகள் பவர் செண்டர்கள் எல்லாம் வடநாட்டு கும்பலுமாக ஒரு இந்திய சமூகத்தின் அதிகாரத்துவ படிநிலை எப்படி இருக்கும் என்பதன் அச்சு அசலாக என்.எல்.சி நிறுவனம் உள்ளது.

இந்நிறுவனத்தின் அடிமட்ட தொழிலாளர்கள் மூன்று வகையான முறையில் உள்ளவர்கள், எம்ப்ளாயி எனப்படும் என்.எல்.சி நிறுவனத்தின் நிரந்தர நேரடி தொழிலாளர்கள், சொசைட்டி எனப்படும் கூட்டுறவு தொழிலாளர்கள், காண்ட்ராக்ட் எனப்படும் ஒப்பந்த தொழிலாளர்கள். செய்யும் வேலை இம்மூவருக்குமே ஒன்று தான் ஆனால் சம்பளம் மற்றும் பிற உரிமைகள் சலுகைகள் வெவ்வேறானதாகும். ஒப்பந்த தொழிலாளர்கள் மாதம் ரூபாய் 5200 என்ற அளவிலேயே சம்பளம் பெறுகிறார்கள், இதில் பெரும்பாலானவர்கள் நிலம் கொடுத்தவர்கள் வாரிசுகள் மிகப்பிற்படுத்தப்பட்ட வன்னியர் மற்றும் தலித் சமூகத்தினர். 240 நாட்கள் தொடர்ந்து வேலை செய்பவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவேண்டும் என்பது அரசாங்கத்தின் விதிமுறை, ஆனால் இவர்கள் எப்போதிருந்து வெறும் ஒப்பந்த தொழிலாளர்களாகவே வேலை செய்கிறார்கள் தெரியுமா? கடைசியாக பணிநிரந்தரம் செய்யப்பட்ட பின் 1993லிருந்து கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக, இதோ பணிநிரந்தரம் கிடைத்துவிடும் அதோ பணிநிரந்தரம் கிடைத்துவிடும் என்றும் வேலையை விட்டுவிட்டு போகவும் முடியாமல் மிகக்குறைவான சம்பளம் எப்போது நிரந்தரம் செய்வார்கள் என்று எந்த உறுதியான சூழலும் இல்லாமல் இவர்களால் வேலையைத்தொடரலாமா வேண்டாமா என்று பதைபதைப்பிலும் தடுமாற்றத்திலுமாக தொடர்கிறார்கள்.

ஆண்டுக்கு 1500 கோடி லாபம் கிடைக்கும் நிறுவனம், ஸ்க்ராப் காண்ட்ராட்டுகளிலேயே கோடி கோடியாக பணம் புழக்கம் உள்ள நிறுவனம் என இருந்தும் தொழிலாளர்களுக்கு இந்த கொடுமையான நிலை.

இது மட்டுமின்றி CISF(Central Industrial Security Force) என்ற பாராமிலிட்டரி படையை என்.எல்.சி நிறுவனத்தின் பாதுகாப்பிற்காக என்று சொல்லி நிறுத்தப்பட்டுள்ளது, ஆனால் இந்த சி.ஐ.எஸ்.எஃப் காவலர்கள் தொழிலாளர்களுடன் மோதல் போக்கை மேற்கொள்ளுவதும் நெய்வேலி அருகில் இருக்கும் கிராமங்களில் தகராறு செய்வதுமென உள்ளனர், இது தொடர்பாக நிறைய போராட்டங்கள் மோதல்கள் நடந்துள்ளன. திருட்டை தடுக்க என்று சொல்லிக்கொண்டு வந்து நிறுத்தப்பட்ட CISF இருக்கும்போதே நான் 15 நாட்கள் பயிற்சிக்கு சென்ற ஆட்டோ யார்ட் இலிருந்து லாரி ஆக்சில்ஸ் காணாமல் போய்விட்டது, லாரி ஆக்சில்ஸ் என்ன சட்டைபையில் மறைத்து எடுக்க கூடிய பொருளா அல்லது காம்பவுண்ட் சுவர் தாண்டி எறியக்கூடிய பந்தா? ஒரு பொருள் மூவ்மெண்ட்டிற்க்கு எத்தனை கையெழுத்துகள் எத்தனை செக்போஸ்ட் சோதனைகள் இதையெல்லாம் தாண்டி லாரி ஆக்சில்ஸ் காணாமல் போகிறது என்றால் CISF என்ன பிடுங்கிக்கொண்டுள்ளதா? அல்லது அதற்க்கும் பங்கு உண்டா? இங்கே CISF கொண்டு வந்து நிறுத்தப்பட்டதே தொழிலாளர்களுக்கு பிரச்சினை கொடுப்பதற்க்கே என்ற என்.எல்.சி தொழிலாளர்களின் ஆதங்கப்படுவதில் உள்ள உண்மையை மறுக்க இயலாது.

இந்நிறுவனத்திலேயும் அனைத்துகட்சிகளுக்கும் தொழிற்சங்கங்கள் உண்டு, திமுகவின் தொமுச , கம்யூனிஸ்ட்களின் ஏஐடியூசி, பாட்டாளி மக்கள் கட்சியின் பிடிஎஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகளின் டிபிஐ தொழிற்சங்கங்களே இங்கே வலுவான தொழிற்சங்கங்கள். பாமக, டிபிஐ தொழிற்சங்கங்கள் வருவதற்க்கு முன்பிருந்தே திமுகவின் தொமுசவு ஏஐடியூசியும் தொழிலாளர்களிடம் செல்வாக்கு பெற்ற தொழிற்சங்கங்கள், இந்நிலையில் வன்னியர் சங்கமாக இருந்த காலத்திலும் அதன் பின் பாமக ஆரம்பிக்கப்பட்ட காலத்திலும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் வேலை வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகளோடு என்.எல்.சி தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியது பாமக. அதில் பாமக ஸ்டைல் போராட்டங்களும் நடைபெற்றது உண்டு.

பெரும்பாண்மையான அடிநிலை தொழிலாளர்களாக வன்னியர்கள் உள்ள நிறுவனம் என்பதாலும் பாமக போராட்டங்களால் கிடைத்த நன்மைகளும் பாட்டாளி தொழிற்சங்கத்திற்க்கு வலுவான நிலையை ஏற்படுத்தியது என்றாலும் திமுகவின் தொமுசவிலேயே 10,000க்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்டு பெரும்பலத்தில் இருந்தது. அதன் பின் ஏஐடியூசி, பிறகு டிபிஐ அதன் பின்னே தான் பாட்டாளி தொழிற்சங்கம் என்ற நிலை. தொழிற்சங்க தேர்தலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் தொழிற்சங்கங்களே என்.எல்.சி மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், இந்த இரு தொழிற்சங்கங்கள் மட்டுமே எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டால் மட்டுமே செல்லும். இதுவரை வாக்கு பெரும்பாண்மை அடிப்படையில் தொமுச மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக இருந்தது, இந்நிலையில் இரண்டாண்டுகளுக்கு முன் என்.எல்.சி தொழிற்சங்க தேர்தல் நடைபெற்றது. தொமுச வழக்கம்போல வெற்றிபெறும், இரண்டாமிடம் ஏஐடியூசி அல்லது டிபிஐ என்று பலரும் எதிர்பார்த்திருக்க பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் பாமக வேல்முருகன் அவர்கள் களத்தில் இறங்க பாட்டாளி தொழிற்சங்கம் இரண்டாமிடம் பெற்று அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமானது, இதில் குறிப்பாக கவனிக்க வேண்டியது பாட்டாளி தொழிற்சங்கம் பெற்ற கூடுதல் வாக்குகள் அனைத்தும் திமுகவின் தொமுச பெற்ற வாக்குகளில் குறைந்துவிட்டது. எந்த ஒப்பந்தமும் வெறும் தொமுசவின் கைகளில் மட்டுமல்ல பிடிஎஸ்சும் கையெழுத்திட வேண்டும், இந்த நிலை மட்டும் சென்ற தொழிற்சங்க தேர்தலில் ஏற்படாமல் வெறும் திமுகவின் தொமுச மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக இருந்திருந்தால் 10ம் தேதியே என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை புதைத்து பாலூற்றியிருப்பார்கள்.

இரண்டாண்டுகளுக்கு முன் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கூடுதல் ஊதியமும் பணிநிரந்தர வாய்ப்பும் வழங்க கோரி நடைபெற்ற போராட்டம் மற்றும் பேச்சுவார்த்தைகளில் விரைவில் நடைமுறைப்படுத்தப்படுமென உறுதி வழங்கப்பட்டு ஒப்பந்தமும் போடப்பட்டது என்.எல்.சி நிறுவனத்தால். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படாததால் சென்ற மாதத்திலிருந்து ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 5000 சம்பளத்தை 9000 ஆக்க கோரியும் பணி நிரந்தரம் கோரியும் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டன. ஒப்பந்த தொழிலாளர்களின் மத்தியில் திமுகவின் தொமுசவிற்க்கு வெறும் 300 உறுப்பினர்களே, ஆனாலும் நிரந்தர தொழிலாளர்கள் ஆளுங்கட்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் என்பதால் திமுகவின் தொமுச கையில் தலைமை பொறுப்பளிக்கப்பட்டு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஒப்பந்த தொழிலாளார்கள் மத்தியில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்கமும்(ஏஐடியூசி) பிடிஎஸ் மற்றும் டிபிஐ யே வலுவானவைகள்.ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தினால் மின்சார தடை ஏற்படும் அளவிற்க்கு (இனி தான் புதுசா மின் தடை தமிழகத்தில் ஏற்படப்போகுதா என்ன?) சென்றவுடன் அக்டோபர் 10ம் தேதி ஆயிரத்து நாற்பது ரூபாய்(1,040) சம்பள உயர்வு மட்டுமே வேறு பணிநிரந்தரம் தொடர்பான எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் திமுகவின் தொமுச என்.எல்.சி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு கையெழுத்தும் போட்டுவிட்டது, ஆனால் பாமகவின் பாட்டாளி தொழிற்சங்கம் பிடிஎஸ் கையெழுத்து போடாமல் அந்த ஒப்பந்தத்தை நிராகரிக்க திமுகவின் தொமுச போராட்டகளத்திலிருந்து விலகிக்கொண்டது மட்டுமின்றி தொழிலாளர் விரோதப்போக்கை ஆரம்பித்தது, ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தை பிசு பிசுக்க வைக்கும் முயற்சியில் இறங்கியது, தொமுச விலகிக்கொண்ட பின்னும் போராட்டம் மேலும் தீவிரமாக போக கடலூர் மாவட்டத்தில் கடையடைப்பில் ஆரம்பித்து மறியல் முற்றுகை என போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. ஆனால் இதுவே திமுகவின் தொமுசவின் ஆத்திரத்தை கிளப்பியுள்ளது, தாங்கள் விலகியும் போராட்டம் வலுவாக செல்வதா என்ற ஆத்திரத்தில் திமுகவின் தொமுச தொழிலாளர் விரோத நடவடிக்கையில் இறங்கி அதை குலைக்க முயற்சித்தது. மத்திய அரசு தொடர்பான எதிலும் சிறு நெருக்கடி கூட ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள முதல்வர் கருணாநிதி அக்டோபர் 10ம் தேதி தொமுச தொழிலாளர் விரோத ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பின்னும் அக்டோபர் 16ம் தேதி கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார், ஈழத்திற்க்கு கடிதம் எழுதி எழுதி எழவு விழுந்த பின்னும் நிறுத்தாமல் கடிதம் எழுதித்தள்ளும் கருணாநிதி இங்கேயும் கடிதம் எழுதும் ஏமாற்று வேலையை ஆரம்பித்துவிட்டார்.

கடலூர் மாவட்டத்தில் நடந்த கடையடைப்பு போராட்டத்திற்க்கு வணிகர்சங்கங்கள் ஆரம்பித்து பலரும் ஆதரவு தெரிவிக்க அமைதியாக நடைபெற்றதில் திமுகவை சேர்ந்தவர்கள் கடைகளையும் வணிக நிறுவனங்களையும் திறக்க சொல்லி வற்புறுத்தினர், தனியார் பேருந்துகளை ஓட்ட கோரினர், விளைவு சில தனியார் பேருந்துகள் போராட்டகாரர்களால் நொறுக்கப்பட்டன. தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டம் தோல்வி என்று அறிக்கைவிட திமுகவிற்க்கு என்ன அவசியம்? தொழிற்சங்கங்கள் நடத்திய கடையடைப்பு போராட்டத்தை தோல்வியடையச்செய்ய திமுக ஏன் தொழிலாளர்கள் போராட்டத்தை தோற்கடிக்க அத்தனை முயற்சிகளை மேற்கொண்டது? அப்படியென்றால் திமுகவும் அதன் தொழிற்சங்கமும் யார் பக்கம் நிற்கிறார்கள்? போராட்டகளத்தில் இருக்கும் தொழிலாளர்களை போலிசை கொண்டு தாக்குதல், மறியல் போராட்டத்தில் இருப்பவர்களை கைது செய்து அவர்களின் மீது கடும் வழக்கு தொடுத்தல் என அடக்குமுறைகளை ஏவி விடுகின்றது என்றால் திமுக யார் பக்கம் நிற்கிறது?

நேற்று வரை தில்லியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன, 13,000 ஒப்பந்த தொழிலாளர்களின் 36 நாள் போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்து என்.எல்.சியின் நிரந்தர ஊழியர்களும் பாட்டாளி தொழிற்சங்கமும் மற்ற ஒன்பது தொழிற்சங்கங்களும் நேற்று அக்டோபர் 25 அன்று ஸ்ட்ரைக் நோட்டிஸ் கொடுத்துள்ளன, நிரந்தர தொழிலாளர்களிடம் செல்வாக்குள்ள தொமுசவில் தான் பாதியளவான நிரந்தர தொழிலாளர்கள் உள்ளனர், மீதி பாதி அளவில் பிடிஎஸ் மற்றும் மற்ற தொழிற்சங்கங்களில் உள்ளனர் ஆனால் இதில் தொழிலாளர் விரோத திமுக தொழிற்சங்கம் தொமுச இதில் கலந்துகொள்ளவில்லை.

விடுதலை சிறுத்தைகளின் டிபிஐ தொழிற்சங்கம் இந்த அரசியல் இழுப்புகளுக்குட்படாமல் இன்னமும் போராட்டத்தில் தொடர்கிறது என்றாலும் அவர்கள் பிற தொழிற்சங்கங்களுடன் இணைந்து கூட்டுப்போராட்டமாக நடத்தாமல் தனியாக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே என்.எல்.சியில் தன் பிடிமானத்தை இழக்க ஆரம்பித்துள்ளா திமுகவின் தொமுச இம்மாதிரியான தொழிலாளர் விரோத நடவடிக்கையினால் என்.எல்.சி தொழிலாளர்கள் மத்தியில் தம் செல்வாக்கை இழந்து நிற்கப்போவது நிச்சயம்.தொழிலாளர் விரோத திமுக தொழிற்சங்கம் தொமுச விலகியும் திமுக அடக்குமுறைகளை ஏவியும் இன்னும் போராட்டம் தொடர்கிறது இந்த போராட்டம் எல்லா துரோக தடைகளையும் உடைத்து வெற்றியடைய வாழ்த்துகிறோம்.

இது தொடர்பான செய்திகள் ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன் மற்றும் தமிழக அரசியல் பத்திரிக்கைகளில் வந்துள்ளன. ஆனால் ஒரு வலைப்பதிவிலும் வந்தது போல தெரியவில்லை... ஆமாமா எந்திரன் பட ரிலீஸ் அளவிற்க்கு இது ஒன்றும் முக்கியமான ஒன்று அல்ல தானே.

என் ஹீரோவுக்கு வீர வணக்கங்கள்

எந்திரன் திரைவிமர்சனம் - படம் பார்க்கும்போதே எழுதியது

திரைப்படம் பார்த்துவிட்டு வீட்டிற்க்கு செல்வதற்க்குள் படம் பற்றிய விமர்சனம் எழுதுபவர்களிடம் படம் பார்க்கும்போதே விமர்சனம் எழுதினாயா என்பார்கள், சரி ஏன் நாம் படம் பார்க்கும்போதே விமர்சனம் எழுதக்கூடாது என்ற எண்ணத்தில் 14 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக திரையரங்கில் பார்க்கும் ரஜினி படமான எந்திரனுக்கு எழுதலாம் என்று நினைத்து டிவிட்டரில் காட்சிக்கு காட்சி எழுத ஆரம்பித்தேன், இதுக்கு முன்னால யாரும் செய்திருக்காங்களா?


2:45 பிற்பகல் ஆரம்பிச்சி 5:22 பிற்பகல் வரை திரையரங்கில் உட்கார்ந்து 37 டிவிட்டு போட்டிருக்கேன் :-)



நான் டிவிட்டர் தளத்தில் எழுதியதை முடிந்த அளவு மொழி பெயர்த்து இங்கே போடுகிறேன்...

கொஞ்சம் காமெடியாகவும் மீதி மொக்கையாகவும் உள்ளது காதல் அணுக்கள் பாடல் வரை

சந்தானம் எல்லோரையும் விட ஸ்மார்ட்டாக உள்ளார்

குப்பத்தில் படையப்பாவாக தோன்றுமிடம் நல்ல கிராபிக்ஸ்

சில வசனங்களில் சுஜாதா டச்

ரயில் சண்டை செம காமெடி

AIRD எவால்யூவேசன் டுபுக்காட்டம் இருக்கு

தீ விபத்து கிராபிக்ஸ் நன்றாக உள்ளது

நல்லதொரு இடத்தில் இடைவேளை விடப்பட்டுள்ளது

கொசு காமெடி செம காமெடி :-)

இரும்பிலே இதயம் முளைக்குதோ! இரும்பிலே வேறு ஏதோ முளைச்சமாதிரி இருக்கு :-)

இந்த பாடலின் போது பலரும் வெளியே செல்கிறார்கள்

ஐஸ் இந்த பாடலில் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறார்

மின்னல் அடித்த பின் உணர்ச்சி வருவது கடவுள் நம்பிக்கை? #சந்தேகம்

ரோபா ரஜினி பாடும்போது இன்னொரு ரஜினி காட்டும் முகபாவம் சிறப்பாக உள்ளது

செக்ஸ் இல்லைனா வாழ்க்கையே இல்லையா? ஐஸ்: சீ சீ , எவன் எழுதின வசனம்?

எந்த டூப் நடிகர் ரஜினிக்கு பதிலாக இதில் ஆடினார்?

கணிப்பொறியையும் காதலிக்க வைக்கும் கன்னிப்பொறி ஹாஹா

ராணுவ நேர்முகத்தேர்வின் இறுதியில் சிறப்பாக இருக்கிறது

கலாபவன் மணி கலக்குறாரு

ரஜினி பயந்து ஓடுறாரு :-)

கிளிமஞ்சாரோ பாடலை விட குலுவாலியே பாடல் எல்லா விதத்திலும் சிறப்பாக உள்ளது குலுக்குவது உட்பட

அப்கிரேடட் வெர்சன் 2.0 நல்ல வசனம் :-)

சலிப்பூட்டும் சேசிங் காட்சிகள், இதில் வரும் சண்டைகள் ரஜினி ரோபோவாக இல்லாமலிருந்தாலும் செய்வார்.

துப்பாக்கி கிராபிக்ஸ் சிறப்பாக உள்ளது

ரோபோ வில்லன் ரஜினி கலக்கல்

ஏன் ரஜினியும் ஐஸ்ஸும் ஒரே மாதிரி நடக்கிறார்கள்

அறிவோம் பாடல் பலரும் வெளியே செல்கிறார்கள்

எல்லா ரோபோக்களும் கீழே விழுதல், ஏற்கனவே ஆங்கிலப்படத்தில் உள்ளதே

ரோபோக்கள் கோள வடிவத்தில் வருதல் மெய்மறக்க செய்துவிட்டது டிவிட் செய்ய மறந்துவிட்டேன்

கடைசில கோர்ட் சீனா?

ஹீரோக்கு தண்டனை இல்லை

படம் முடிந்து 10 நிமிடமாகியும் ஏன் மொக்கைய போடுறாங்க?

இன்னும் உச் உச் என்று சத்தம், ரோபோ கழற்றப்படுகிறதாம்

ஒரு முறை படம் பார்க்கலாம்

-----------------------

kuzhalipuru
Worth to see one time in theater #enthiran
Sat Oct 02 2010 17:22:44 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Innum ouch ouch nu sound robo dismantle aakudham #enthiran
Sat Oct 02 2010 17:09:10 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Padan mudijum 10 nimishama mokkai #enthiran
Sat Oct 02 2010 17:08:23 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Hero kku punishment illai #enthiran
Sat Oct 02 2010 17:06:21 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Kadisila court scene a? #enthiran
Sat Oct 02 2010 17:05:11 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Robo sphere stunned forgot to tweet #enthiran
Sat Oct 02 2010 16:57:16 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
All robo falling down same us one English movie #enthiran
Sat Oct 02 2010 16:50:58 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Arivom song many people going out#enthiran
Sat Oct 02 2010 16:45:08 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Why rajini and aish walk similarly #enthiran
Sat Oct 02 2010 16:42:30 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Robo villain rajini kalakkal #enthiran
Sat Oct 02 2010 16:34:44 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

senthilnath
@kuzhalipuru enna live tweeting frm theatre a? where? JP?
Sat Oct 02 2010 16:29:45 (Malay Peninsula Standard Time) via Mobile Web in reply to kuzhalipuru

kuzhalipuru
Gun graphics good#enthiran
Sat Oct 02 2010 16:27:25 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Bore chasing scene all these stunts rajini will do even not as robo #enthiran
Sat Oct 02 2010 16:24:43 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Upgraded Version 2.0 good dialogue :-)
Sat Oct 02 2010 16:22:55 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Kuluvali ye song is better than kilimanjora in all expects including shaking #enthiran
Sat Oct 02 2010 16:15:13 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Rajini bayanthu oduraaru :-) #enthiran
Sat Oct 02 2010 16:09:42 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Kalamani kalakuraaru #enthiran
Sat Oct 02 2010 16:07:28 (Malay Peninsula Standard Time) via Twitter for iPhone

kuzhalipuru
Pinnadi ucchu kotturanga when the robo broken #enthiran
4:05 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Ending in army interview good #enthiran
4:03 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Kaniporium kathalikka vaikkum kanni pori ha ha #enthiran
4:02 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Sex illaina vaazhkai illaiy aish chee chee Evan ezhudhina vasanam? #enthiran
3:59 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Which dupe dance for rajini he is good #enthiran
3:55 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Rajini reaction in car when robo rajini sing the song #enthiran
3:53 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Minnal aticha pin unarchi vauvadhu kadavul nambikkai #doubt #enthiran
3:50 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Aish looks great in this song#enthiran
3:48 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Many people go out for break in this song #enthiran
3:46 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Irumppile idhaym mulaikudho irumpil Vera edo mulai cha maadhiri irukku :-) #enthiran
3:45 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Kosu comedy sema comedy :-) #enthiran
3:43 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Intermission in good place # enthiran
3:39 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Thee vibathu graphics excellent #enthiran
3:27 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Aird evaluation dubukku aatam iruku but last piece is good #enthiran
3:22 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
# train fight sema comedy #enthiran
3:09 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Some dialogues sujatha touch #enthiran
3:05 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Excellent graphics at kappam padiyappa scene #enthiran
3:03 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Santhanam looks smarter than hero # enthiran
2:45 PM Oct 2nd via Twitter for iPhone

kuzhalipuru
Konjam comedy meedhi mokkai until kadhal anukal song #enthiran
2:45 PM Oct 2nd via Twitter for iPhone

அழகிய தமிழ் பெயர் தேவை

நண்பரின் ஆண் குழந்தைக்கு அழகிய தூய தமிழ்பெயர் தேவை, ஆங்கில எழுத்து P,N ஆகியவைகளில் ஆரம்பிப்பது போல இருந்தால் மிக்க சிறப்பு...

நித்திலன் என்ற பெயரின் பொருள் தெரிந்தாலும் யாரேனும் கூறுங்கள்

நன்றி

வலைப்பதிவர் சவுக்கு கைதுக்கு கண்டனங்கள்

சவுக்கு வலைப்பதிவில் ஆதாரங்களுடன் ஊழலுக்கு எதிராக தம் சவுக்கை சொடுக்கியிருப்பார்கள், இதில் திரு சங்கர் அவர்கள் எழுதியுள்ளார், உளவுத்துறை ஐஜி மற்றும் உயர் அதிகாரங்கள், நக்கீரன் பத்திரிக்கையின் முக்கிய பிரமுகர் காமராஜ் ஆகியோர் பற்றியும் எழுதியுள்ளார், சவுக்கு சங்கர் அவர்கள் மீது பொய்வழக்கு போட்டு கைது செய்துள்ளதை கடுமையாக கண்டிக்கிறேன், இது தொடர்பாக பதிவர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவியுங்கள் இந்நிலை நாளை எந்த வலைப்பதிவருக்கும் வரும் அபாயம் உள்ளது.

தோழர் சீமான் கைதுக்கு கண்டனங்கள்

தோழர் சீமான் கைதுக்கு எமது கடும் கண்டனங்கள், அவர் பேசியது தொடர்பாக விவாதத்தை முன்னெடுக்க வேண்டும், அப்பாவி பொது மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பது சிங்களனுக்கு மட்டும் பொறுந்துவதில்லை தமிழனுக்கும் பொறுந்துமே... தமிழக மீனவர்களை சுட்டபோது இது நாள் வரை புலிகளுக்கு டீசல் கடத்துகிறார்கள் பெட்ரோல் கடத்துகிறார்கள் பேரிங் கடத்துகிறார்கள் பேரிக்காய் கடத்துகிறார்கள் என்றார்கள் இப்போது தான் புலிகள் என்ற இயக்கமே இல்லை என்கிறார்களே இப்போது ஏன் சுடுகிறார்களாம்.

வேட்டை சமூகம் வேளாண்மை சமூகம் ஆனபோது அரசு செய்த முதல் செயல் மக்களிடமிருந்த ஆயுதங்களை களைந்து அதை படைகளிடம் தந்தது, மக்களின் பாதுகாப்பை படைகள் ஏற்றுக்கொண்டதாக பொருள் ஆனால் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை இந்திய படைகள் ஏற்கவில்லை என்னும் போது தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதையெல்லாம் கவனிக்க வேண்டிய மானங்கெட்ட கருணாநிதி(முன்பு ஜெயலலிதா அரசும்) அரசு மீண்டும் கடிதம் எழுதும் வேலையில் இறங்கும்.

கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பதால் மிக சுருக்கமாக எழுதியுள்ளேன், குடிமக்கள் ஏந்தவேண்டிய ஆயுதம், அப்பாவி பொதுமக்கள் என்பவர்கள் யார், எம்மாதிரியான காலகட்டத்தில் சீமான் பேச்சுமுக்கியத்துவம் பெறுகிறது என விரிவாக எழுதுகிறேன்.

தற்போதைய தேவை கடிதம் எழுதும் கையாலாகாதவர்கள் அல்ல, தமிழ் பாசிஸ்ட்களின் தேவையை இந்திய, தமிழக, இலங்கை அரசுகள் ஏற்படுத்தியுள்ளன

தமிழை வாழ வைத்தவர்களை அழித்த பின் மறைக்க நடத்தப்படும் செம்மொழி மாநாட்டு படங்கள்...

என் மகனுக்கு தூயத் தமிழ் பெயர் வைக்க பெயர் புத்தகங்களை புரட்டினேன் தமிழ்பெயர் என்ற பெயரில் ஆகாஷ்ம், ரமேஷும், சுரேஷும் கொட்டிக்கிடந்தது அந்த புத்தகமெங்கும் ஆனால் அட்டையில் சொன்னது அழகிய தமிழ் பெயர்கள் என்று. இணையமெங்கும் தேடினேன், இங்கும் இதே கதைதான்... இந்நிலையில் நிதித்துறை.காம் என்றொரு வலைத்தளம் தேடலில் சிக்கியது பல்லாயிரக்கணக்கான தனித் தமிழ் பெயர்கள் ஆண், பெண் குழந்தைகளுக்கென தொகுத்து வைக்கப்பட்டிருந்தது... டியூப்லைட் முழுக்க உபயம் பெயர் எழுதும் கடைசியாக சிறிய அளவில் குறிக்கப்பட்டிருந்தது அவர்களின் நிதி நிர்வாக தளமென்று.... தமிழ் பல்கலைகழகங்கள் இதை செய்யவில்லை, தமிழ் தமிழ் என சொல்லி இன்னும் பல யுகங்களுக்கு சொத்தும் அதிகாரமும் சேர்த்த ஈனத்தலைவர்களும் அவர்களின் அடிவருடிகளும் செய்யவில்லை இதை... ஆனால் அவர்கள் செய்திருந்தார்கள் அந்த 5 வருடங்களில்... அவர்களைப்போலவே தற்போது அந்த தளமும் இயங்கவில்லை, அதை படி(காப்பி) எடுத்தும் வைக்கவில்லை.. யாரேனும் படி எடுத்து வைத்திருந்தால் மீண்டும் இணையத்தில் ஏற்றி வையுங்கள்... உங்களுக்கு புண்ணியமாக போகும்.

இடையறாத போராட்டத்தில் இழந்து போன இலக்கண இலக்கியங்களை முறைப்படி கற்காமல் விட்டுப்போன தமிழ் இலக்கண இலக்கியங்களை தாய் தமிழகத்திலிருந்து புலமைபெற்ற ஆசிரியர்களை தருவித்து கற்றுக்கொண்டனர் அந்த ஐந்த ஆண்டுகளில்... அவர்கள் வீழ்ந்த பின் வெகு சன ஊடகங்களில் பெயர்பலகையெங்கும், அரசு எங்கும் அதிகாரமெங்கும், பள்ளியெங்கும் அந்த தரணியெங்கும் அவர்கள் தனித்தமிழ் வளர்த்திருந்த செய்தி வெளியானபோது வீழ்ந்தது அவர்கள் மட்டுமல்ல தமிழும் சேர்ந்தே வீழ்ந்தது என்று புரிந்தது... அந்த மாநிலம் முழுக்க தமிழ் வளர்த்த அவர்கள் எங்கே... சன் , ரெட்ஜெயண்ட்ஸ் மூவிஸ், நைன் க்ளவுட்ஸ் கிரியேஷன்ஸ் என்று தமிழ் தாத்தாவின் பேரன்ஸ்கள் தமிழ் வளர்க்க செம்மொழி மாநாடு நடத்தும் இவர்கள் எங்கே...

அவர்கள் ஆண்ட போது அந்த மண்ணில் கசிப்பு(சாராயம்) இல்லையாம், ஆனால் இங்கோ டாஸ்மார்க் சாராயத்துக்கு செம்மொழி மாநாட்டின் 5 நாளில் மூன்று மாத விற்பனையை பெற வேண்டுமாம் சேல்ஸ் டார்கெட் வைக்கிறார்கள்...

அன்று யாழிலே நடந்த உலகத்தமிழ் மாநாடு, அதை சீர்குலைக்க சிங்கள அரசும் தமிழ் துரோக கைக்கூலிகளும் முயற்சிகள் எடுத்த போதும் மாநாட்டில் வரிசையாக வந்து "தள்ளாடாமல்" எந்த தள்ளுமுள்ளும் இல்லாமல் கலந்து கொண்டார்கள்... இன்றும் செம்மொழி மாநாட்டில் கோவை மாநகரமே டாஸ்மார்க்கின் சேல்சினால் தள்ளாடுகிறதாம்...


வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டுமென்று சொல்லி சொல்லியே வீழ்த்திட்டானுங்களேயா தமிழையும் தமிழனையும்...














தமிழையும் தமிழரையும் வாழவைத்த அந்த தரணியெங்கும் சிங்களமும் அவன் சிதைக்கும் தமிழும் தட்டியிலிருக்க... தமிழையும் வாழவைக்காமல் தமிழரையும் வாழவைக்காமல் எம்மொழியே செம்மொழியே என்று ஏனடா தட்டி வைக்கிறீர்கள்..






















இல்லாத தெய்வங்களுக்கு இங்கே வரிசையாக காவல்காக்கும் சிலைகள், ஆனால் அங்கேயோ உயிர்கொடையளித்த காவல்தெய்வங்கள் துயிலுமிடமே சிதைக்கப்பட்டு கொள்ளை போகிறது...



வரிசை வரிசையாய் உங்கள் வண்டிகள் புத்தம் புதுசாய்... மாநாட்டுக்கா? மாநாட்டின் அலங்கரிக்கப்பட்ட நாடக மேடையை காணவா? அதோ அவர்களின் சொந்த வண்டிகள் மண்மூடி சிதைந்து கிடக்க அதன் உரிமையாளர்கள் பிச்சைக்காரர்களாய் முகாம்களில்














நம் பிள்ளைகள் இங்கே கும்மியடிக்க செத்துபோன இந்த பிள்ளைகளுக்கு இந்நேரம் தெவசமே கொடுத்திருப்பார்கள்

வாழிய செம்மொழி... வாழ்க செம்மொழி காவலர்கள்

ரத்தத்தை கழுவுகிறான் நரிச்சிரிப்புடன்

வெறுப்பாய் இருக்குது தமிழே!
நெருப்பாய் இல்லாத தமிழனால்!
உன் மீதே 
வெறுப்பாய் இருக்குது தமிழே!

ஆரிய அடக்குமுறைக்கு எதிரான
ஆயுதமாய் இருந்தாயே! தமிழே 

சமத்துவம், சமதர்மம் என கொள்கைகளை
பறக்கவிட்ட சமணமுனிகளின் சாம்ராஜ்யத்தை 
சரித்த ஆயுதமாய் இருந்தாயே! தமிழே

பார்ப்பன பரவலுக்கு எதிரானவர்களின்
ஆயுதமாய் இருந்தாயே! தமிழே 

சிங்கள வெறியர்களின் உச்சந்தலையில் ஓங்கியடித்தவர்களின்
ஆயுதமாய் இருந்தாயே! தமிழே 

வரலாறு எங்கும் கொட்டிக்கிடக்கிறதே
நீ யாருடைய ஆயுதமென்று

ஆரிய அதிகாரத்துக்கெதிரான
சமணர்கள் ஆயுதம் தமிழ்

சமணமுனிகளின் கொடூரத்திற்க்கெதிரான
பக்தியக்கத்தின் ஆயுதம் தமிழ்

பார்ப்பன அதிகாரத்துக்கெதிரான
ஒடுக்கப்பட்டோரின் ஆயுதம் தமிழ்

இந்திவெறியர்களின் ஆதிக்கபரவலுக்கெதிரான
தமிழர்களின் ஆயுதம் தமிழ்

சிங்களவெறியர்களின் கொடூரத்துக்கெதிரான
ஈழத்தமிழர்களின் ஆயுதம் தமிழ்

வரலாறு எங்கும் கொட்டிக்கிடக்கிறதே
நீ யாருடைய ஆயுதமென்று

ஆனால் இன்றோ
துரோகிகள் சொல்கிறார்கள் தமிழே
நீ அவர்கள் கையிலாம்...

உன் மகன்கள் அங்கே 
அம்மணமாக்கப்பட்டு 
தலையில் சுடப்படுகிறார்கள்

உன் மகள்கள் அங்கே 
அம்மணமாக்கப்பட்டு 
இடையில் சுடப்படுகிறார்கள்

உன் மகன்கள் கருமாதியில்
உன் மருமகள்கள் தாலியறுக்க
உனக்கோ இங்கே துரோகிகள்
நடத்துகிறார்களாம்
அறுபதாம் கல்யாணம்

அதிகாரத்துக்கு அருகில்
இடம்பிடிக்க 
ஓடுகின்றதொரு கூட்டம்

புறங்கைய நக்குவதில் 
பங்கேதேனும் கிடைக்குமாயென
எச்சிலொழுக பார்க்கிறதொரு கூட்டம்

ஆனால் வெறும் பிரியாணி
துண்டுக்கே 
குலைக்கிறதொரு கூட்டம்

அந்த பிரியாணியில்
கிடக்கும் கால்களை
மெதுவாக கடியுங்கள்
அது எம் தமிழனின் கால்கள்

அந்த பிரியாணியில்
கிடக்கும் நெஞ்செலும்பை
மெதுவாக பிய்யுங்கள்
அது எம் தமிழனின் நெஞ்செலும்பு

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே 
நம்பிக்கைதுரோகி 
தம் கையிலிருக்கும் தமிழனின்
ரத்தத்தை கழுவுகிறான்
நரிச்சிரிப்புடன்

--------------------
ஏதோ ஒரு பதிவிலே படித்தேன்... கீழ்கண்ட வரிகளை
நெஞ்சை உலுக்கிய உண்மை அது

ஈழத்தில் கொல்லப்பட்ட 
தமிழர்களின் கல்லறைகளில் 
எழுதுங்கள்
இவர்கள் தாய்மொழி தமிழென்பதால் 
கொல்லப்பட்டவர்கள் என்று

தமிழனின் மானம் காத்த ராவணன் திரைப்படத்தை ஆதரிப்போம்


ராவணன் ஆம்... இந்த ஒரு படம் தோற்றுக்கொண்டிருக்கும் தமிழனின் மிக மிக சிறிய வெற்றிக்கு காரணம், இரத்தவெறி இந்திய அரசு வாங்கிக்கொடுத்து சிங்கள இனவெறி அரசு கொழும்பில் நடத்திய இந்திய ஆஸ்கார் எனப்படும் IIFA வின் விருது வழங்கும் விழா சொதப்பியது, ராவணன் படம் மட்டும் தயாரிப்பில் இல்லையென்றால் மீண்டும் ஒரு முறை தமிழன் தோற்கடிக்கப்பட்டிருக்கும்.

இந்திய சூப்பர்ஸ்டார் அமித்தாப்பச்சனின் மகன் மற்றும் மருமகள் நடித்தப் படம், தமிழகத்தில் அமிதாப்பின் மருமகள் ஐஸ்வர்யாராய் படம் பிரச்சினைக்குள்ளாகக்கூடாது என்பது மட்டுமின்றி இனி தமிழ்திரையுலகத்தின் கதவு ஐஸ்வர்யாராய்க்கு அடைபட்டுவிட்டு விடக்கூடாது என்பதாலும் அமிதாப்,அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராய் கொழும்பில் நடைபெற்ற இஃபாவை புறக்கணிக்க அதன் தொடர்சியாக இஃபா விழா சொதப்பலானது...

இந்த வணிக பயம், தமிழர்கள் விரும்பாத எதையும் செய்ய முற்பட்டால் பொருளாதார இழப்பு ஏற்படும் என்ற வணிக பயம் ஏற்படுத்தப்பட வேண்டும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களுக்கும் இதை ஏற்படுத்த வேண்டும்...

இதைப்போலவே தமிழனின் நலனுக்கு எதிராக செயல்பட்டு துரோகமிழைக்கும் இனத்துரோகி அரசியல்வாதிகளுக்கும் அதிகார இழப்பு என்ற பயம் ஏற்படுத்தப்படவேண்டும், அதற்க்கு தடைகல்லாக இருக்கும் துரோக தலைமை, அதற்க்கு சப்பை கட்டுகட்டும் துரோகி தொண்டர்களையெல்லாம் அம்பலப்படுத்த வேண்டும்.

அதே சமயம் பிரியாணிக்காகவும் குவார்ட்டரையும் சில்லறை காசுகளையும் வாங்கிக்கொண்டு தமிழினத்துரோகி கருணாநிதி போன்றவர்களுக்கு ஓட்டு போடும் காசுக்காக தமிழினனின் ஓட்டை விற்க்கும் சில பல நவீன விபச்சார வாக்காளர்களும், இனத்துரோகத்தை மறைத்து குவார்ட்டர் பிரியாணியை ஏற்பாடு செய்து தந்து விபச்சார புரோக்கர்களாக செயல்படும் துரோக அரசியல்கட்சிகளின் தொண்டர்களும் இதை உணரும் நாளில் தமிழன் மீண்டும் தலை நிமிருவான்

மாபலி விருந்து அழைப்பு! - இனத்துரோகியின் செம்மொழி மாநாடு

மாபலி விருந்து அழைப்பு! - மாலதி மைத்ரி கவிதை

ன்றோரே சான்றோரே
பேரரறிஞர்களே மூதறிஞர்களே
கவிஞர்களே கலைஞர்களே
அரசு ஊழியர்களே
என் உயிரினும் உயிரான தமிழர்களே
நாம் சுவாசித்தது ஒரே காற்று
நாம் பேசியது ஒரே மொழி
நாம் நடத்தியது ஒரே பேரம்
நாம் விதித்தது ஒரே விலை
நாம் விற்றது ஒரே இனம்
காட்டிக்கொடுக்க நீண்டதும்
நம் ஒரே விரல்
நாம் செய்ததும் ஒரே துரோகம்
இம்மாபெரும் வரலாற்றை
நாம் சாதித்த ஓராண்டின் நிறைவைக்
கொண்டாடும்
விருந்துக்கு அழைக்கிறேன்
உலகே தமிழ் மண்ணில் திரளட்டும்
விரோதி வருடம்
சித்திரை ஐந்தாம் நாள்
வங்கக் கடல் தீவில்
சிங்கப் படைகள்
சில லட்சம் மக்களைக் கொன்றொழித்து
சீர்மிகு வரலாறு படைத்த
மாபலி நாளின்
மாண்பினைப் போற்றும் வகையில்
இச்சித்திரை மாதம்
பௌர்ணமி தினத்தில்
மனிதகுலமே கண்டிராத வகையில்
மாபெரும் விருந்து நடக்கிறது
அனைவரும் கலந்துகொண்டு
விருந்தினைச் சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்
அறுக்கப்பட்ட மென்முலைகள்போன்ற
இட்லியுடன் பிள்ளைக்கறி பிசைந்த
செவ்வரிசிச் சோறு
மதுவருந்தும் கவிஞர்களுக்கு மட்டும்
நுரை பொங்கும் செங்குருதியுடன்
மூளை வறுவல் வழங்கப்படும்
இதிலுள்ளவை தவிர்த்து
சிறப்புணவு தேவையெனில்
மூன்று தினங்களுக்கு முன்
எங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்தால்
தீவிலிருந்து
தனி விமானத்தில்
தருவித்துத் தர ஏதுவாக இருக்கும்
உலகச் சமூகமே வியந்து நிற்க
உலகத் தமிழர்கள் ஒன்றாய் நின்று
இப்பலி விருந்தைச் சிறப்பிக்கும்படி
கேட்டுக்கொள்கிறேன்.

இவ்விருந்தை வழங்குபவர்கள்

ஹைடு அண்ட் சீக் வேர்ல்டு விஷன்
ஹனி டியூ அண்ட் ஸ்பிரிங் பிரிவரிஸ்,
ஆன்ட்டி வார் அண்ட் பீஸ் ஹன்டர்ஸ்,
வேர்ல்டு நைட்ரோ கெமிக்கல்ஸ்,
இன்டர்நேஷனல் வார் கிரிமினல்ஸ் அசோஸியேஷன்.

குறிப்பு: தவிர்க்க இயலாத காரணத்தால் ஆங்கிலத்திலேயே அயல் நாட்டு நிறுவனங்களின் பெயர்கள் அச்சிடப்பட்டு உள்ளன. இதைப் பிழையாகக் கருதி தமிழ்ப் பற்றாளர்கள் விருந்துக்கு வராமல் இருந்துவிடக் கூடாது. இது எங்கள் அன்புக் கட்டளை!

நன்றி
ஆனந்தவிகடன்

எம் இனத்தை கொன்றவர்களுக்கு உதவியாகவும் அவர்களின் நாற்காலிக்கு வலிமையூட்டியும் இருந்த இனத்துரோகி தன் மேலிருக்கும் நம் இனத்தின் இரத்தத்தை கழுவ எடுக்கும் இந்த செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கிறேன்...

ஓணாண்டி புலவர்கள் துரோகியை வாழ்த்திப்பாடட்டும், என்ன செய்ய அவர்களுக்கும் பிழைப்பு என்று ஒன்றுள்ளதே...

பதிவுலகில் வினவு என்கிற அரசியல் ரவுடிகளை நாட்டாமை செய்ய அனுமதிக்காதீர்கள்

எக்காரணம் கொண்டும் சந்தனமுல்லைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக எழுப்பப்படும் குரல்களை எக்காரணம் கொண்டும் பலவீனப்படுத்தவோ அல்லது மையப்பிரச்சினையிலிருந்து வேறுபகுதிக்கு பிரச்சினை திரும்ப கூடாது என்றுமே வினவுவின் சில செயல்பாடுகள் குறித்து எமக்கு கருத்துவேற்றுமை இருந்தாலும் பொறுமை காத்து அடுத்தவாரத்திற்க்கு அதைப்பற்றி விவாதிக்கலாம் என தள்ளிவைத்திருந்தேன்.

சந்தனமுல்லைக்கு நீதி வழங்குகின்றோம் பேர்வழி என்று வினவு நாட்டாமைகள் சொம்பை தூக்கிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பதிவுலகை ஆக்கிரமிக்க முயற்சித்து பதிவுலகை தம் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயல்கின்றார்களோ என்கிற சந்தேகம் உண்டு...

இங்கே வலையுலகில் மிகதைரியமாக கருணாநிதியையும், ஜெயலலிதாவையும், ராமதாஸையும், திருமாவையும் இன்னபிறரையும் கடுமையாக விமர்சிக்க இயலுகிறது என்றால் விமர்சிப்பவர்கள் வீராதி வீரர்கள், புரட்சிகர சூரர்கள் என்று பொருள் அல்ல, இவர்களெல்லாம் நம் பக்கம் பார்வையை திருப்பவில்லை அல்லது கண்டுகொள்ளவில்லை என்று பொருள். அமைச்சர் ஆ.ராசாவும் வலைப்பதிவு வைத்திருக்கிறார், எஸ்.வீ.சேகரும் வலைப்பதிவு வைத்திருக்கிறார், அதற்காக அவர்கள் நம்மை போன்ற பதிவர்கள் ஆகிவிடுவார்களா? ரேடான் டிவியும் தான் வலைப்பதிவு வைத்திருக்கிறார்கள்... இவர்கள் எல்லாம் அரசியல்வாதிகள், தொழில்காரர்கள் தங்கள் வலைப்பதிவுகளில் தங்கள் அரசியலையும் தொழிலையும் வளர்க்க பயன்படுத்துகிறார்கள்.

வினவு யார்? வலைப்பதிவரா? ம.க.இ.க.வா? குழுப்பதிவா? குழுப்பதிவென்றால் அதை ஆரம்பித்தவர் யார்? ஏன் ராஜ்வனஜ்,தியாகு போன்ற முகம் காட்டிய தோழர்களாக இல்லாமல் முகம் காட்டாத அசுரன்,அரைடிக்கெட்டு இன்னும் என்னென்னமோ பெயரில் வருகிறார்கள்? வலைப்பதிவில் அரசியல் உண்டு, ஆனால் வலைப்பதிவே அரசியலுக்காக என்றில்லை...

நான் ம.க.இ.க வை விமர்சிக்கும்போது எனக்கு வந்த மிரட்டல் போன்களுக்கு நியாயம் கேட்க யாரிடம் போவது? தியாகுவிற்க்கு வந்த மிரட்டல்களுக்கு எங்கே போவது? வினவிடமா? பதிவுலகில் இன்று வெறும் மிரட்டல்களோடு நிற்கும் இந்த வினவு கும்பல் நாளை மகஇக வை விமர்சித்து எழுதுபவர்களுக்கு வேறுவிதமான தொல்லை தந்தால் என்ன செய்வது? ஒருவேளை ஒருவேளை தான் சொல்கிறேன் ம.க.இ.க வை எதிர்கொள்ளும் அளவிற்க்கு ஆற்றலுடைய கட்டப்பஞ்சாயத்து ஆட்களையோ அல்லது வினவு கும்பலையும் விட அதிகமான பலமுள்ள விடுதலைசிறுத்தைகள்,பாமக,திமுக,அதிமுக கட்சிகளின் ஆட்களையோ முடிந்தால் அழைத்துக்கொண்டு பேசப்போகலாமா?

அப்போ இப்போதிருக்கும் பதிவுலக சுதந்திரம் என்ன ஆகும்? வேண்டாம் இந்த வினவு அரசியல் ரவுடி கும்பலை நாட்டாமை செய்ய அனுமதித்தால் ஒட்டகம் கூடாரத்தில் புகுந்த கதையாகிவிடும்...

இன்னும் லீனாமணிமேகலை பற்றி வினவின் ரவுடித்தனம், சந்தனமுல்லையையும் விட மூர்க்கமாக சித்திரவதைகளை அனுபவித்த போலி பிரச்சினையின் போது கள்ள மெளனம் காத்த வினவு கும்பல், அப்போது அது தொடர்பாக ஒரு தோழரிடம் கேட்டபோது நானும் கேட்டேன் தோழர் இது பற்றி எழுதினால் உலகில்வேறு பிரச்சினையே இல்லையா என்பது மாதிரி ஆகிவிடும் அதனால் வேண்டாம் என்றார்கள் என கூறியது, மேலும் விரிவாக பலவிடயங்களை அடுத்த வாரத்திற்க்கு வைத்திருந்தேன் ஆனால் தற்போது அதையெல்லாம் எழுத நேரமின்றி பதிவு போடும் நிலை.

பிரச்சினையில் தொடர்புடையவர்கள் என்ன செய்வது என்று முடிவு செய்துகொள்ளட்டும், இல்லையென்றால் காவல்துறையை அணுகட்டும், அதைவிடுத்து கட்டப்பஞ்சாயத்துகளுக்கு அனுமதிப்பது பதிவுலகிற்க்கு பெரும் கேடு விளைவிக்கும் என்று அச்சப்படுகிறேன்...

இது தொடர்பாக இண்ஸ்டண்ட் குற்றச்சாட்டாக சாதிவெறியன், ஆணாதிக்க திமிர் என்றெல்லாம் பட்டம் கொடுக்க வேண்டாம் வேறு ஏதேனும் புதுசாக கொடுக்கவும்

பிற்சேர்க்கை
-----------
சந்தனமுல்லை அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடுவதில் பங்கு வகித்த வினவுவின் நடவடிக்கைகளை சந்தனமுல்லை விசயத்தில் நிச்சயம் நான் ஆதரிக்கிறேன்... இந்த பிரச்சினையை நான் வேறு திசையில் திருப்ப கூடாது என்பதால் இன்னும் ஒரு வாரம் காத்திருக்கிறேன்... அடுத்த வாரம் வினவு ஆணாதிக்கம் பற்றி பேச இருக்கும் தகுதிகள், லீனா மணிமேகலையிடம் மகஇக கும்பல் நடந்துகொண்ட ரவுடித்தனம், வலையுலகிலிருந்து பல்வேறு பெண்பதிவர்களை விரட்டியடித்த போலி பிரச்சினையின் போது திருட்டு மவுனம் காத்த வினவு கும்பல் பற்றியெல்லாம் விரிவாக பேசுவோம்...

பதிவர் ஜோக்ஸ் அண்ட் பஞ்ச்ஸ்

பல மர்ம முடிச்சிகளோடும் சற்றும் எதிர்பாராத திடுக்கிடும் திருப்பங்களோடும் இடைவேளை விட்டு பிறகு மீண்டும் ஓடிக்கொண்டிருக்கும் பதிவர் சண்டையின் போது சிலரின் பஸ்ஸ்ஸ், டிவிட்டர், ஜிடாக் ஸ்டேட்டஸ் மெசேஜ் கமெண்ட்டுகள் மற்றும் சில ஜோக்குகள் உங்கள் பார்வைக்கு....

நானும் ஏற்கனவே இம்மாதிரி சீரியசான சீரியல் சண்டை போட்டுள்ளதால் எனக்கும் அந்த வலிகளும் எரிச்சலும் தெரியும், ப்ளீஸ் இது சும்மா லைட்டாக்குவதற்க்கே, யாரையும் புண்படுத்த அல்ல...

1.பாலபாரதி: வஜ்ரா வண்டி, RPF, போலிஸ் கமிஷனர்கிட்டலாம் சொல்லியாச்சு ஏற்பாடெல்லாம் முடிஞ்சிருச்சி?


குழலி: எதுக்கு தல?

பாலபாரதி: எதுக்கா அட அதாங்க ஜூன் 5 பதிவர் சந்திப்புக்குதான்

2.மனைவி: வாக்கிங் போறேன் ஜாக்கிங் போறேன்னு அஞ்சாம் தேதி மட்டும் மெரீனா பக்கம் போயிறாதிங்க

கணவர் : ஏன் டியர்?

மனைவி : அங்க தான் பதிவர் சந்திப்பு நடக்கப்போவுதாம்...

3. ஜ்யோராமும் பைத்தியக்காரனும் சேர்ந்தா?
உலகப்படம்

பிரிஞ்சா ?
கலகப்படம்

4. ஏய்ய்ய்ய்ய்ய் இதுவரைக்கும் நீ பாத்தது மொழி விளையாட்டு.. இனிமே நீ பாக்கப்போறது கிழி விளையாட்டு

5. ஜூன் 5 மெரீனாவில் வலைப்பதிவர் சந்திப்பு - டாக்டர் புரூனே SMS

குழலி: டாக்டர் ஒரு சந்தேகம், வலைப்பதிவர் வினவு வருவாரா?

6. செல்லமுத்து குப்புசாமி ஜிடாக் மெசேஜ்

இன்னும் ஒரு வாரம் பதிவர் சண்டை ஓடினாலே சாதிவாரி கணக்கெடுப்பு முடிஞ்சுரும் போல

மிச்சம் மீதி ஜோக்ஸ் பஞ்ச் இருந்தா பின்னூட்டத்துல போடுங்க...

பிரபல பதிவர்களுக்கு சமர்ப்பணம்

"டேய் நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலைடா" என்று வரும் இடத்தோடு இந்த வீடியோவை நிறுத்த ஆசைப்பட்டேன், ஆனால் அதையும் தாண்டி சில காமெடி வருது எஞ்சாய்ய்ய்ய்ய்ய்....



லேபிள்: புனைவு

மணற்கேணி வெற்றியாளர்களுடன் இரண்டு நிகழ்ச்சிகள் தொகுப்பு

சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்களும் தமிழ்வெளி இணையதளமும் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியில் வெற்றிபெற்ற திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம் அவர்கள் தற்போது சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தில் உள்ளனர்.


சிங்கை வலைப்பதிவர்களின் பதிவுகளின் தொகுப்பு புத்தகமாக "மணற்கேணி" என்ற பெயரில் தமிழ் அலை இசாக் மூலம் அச்சிடப்பட்டு கேபிள் சங்கர் அவர்கள் அந்த புத்தகங்களை மே 21 இரவு சென்னை விமான நிலையத்தில் வெற்றியாளர்களிடம் தந்துதவினார்.

கீழுள்ள படம் இடமிருந்து வலம் தேவன்மாயம், தருமி, பிரபாகர், வெற்றிக்கதிரவன் எ விஜயபாஸ்கர்,முகவை ராம், குழலி, ஜெகதீசன், ஜோ மில்டன் மற்றும் கோவி.கண்ணன்

மே 22 காலை 6 மணி அளவில் திரு.தருமி மற்றும் பிரபாகர் சிங்கப்பூர் வானூர்தி நிலையம் வந்திறங்கினர், காலை 8 மணியளவில் திரு.தேவன்மாயம் அவர் மனைவியுடன் வந்திறங்கினார், சிங்கை வலைப்பதிவர்கள் அவர்களை வரவேற்று தங்குமிடம் அழைத்து சென்றனர்.

மே22 மாலை 5:00 மணிக்கு சிங்கப்பூர் அங்மோக்கியா நூலகத்தின் தக்காளி அறையில் சிங்கப்பூர் "வாசகர் வட்டம்" சார்பில் கலந்துரையாடல் மற்றும்
கட்டுரைகள் மீதான திறனாய்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, சிங்கை வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர் வட்டம் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறப்பாக நடைபெற்ற இந்த கூட்டம் பற்றி தனியாக விவரமாக பதிவிடுகிறோம்.

(கீழுள்ள படம் BBQ ஆரம்பிக்கும் முன் சுத்தமாக உள்ள அடுப்பு)
மே 23 அன்று மாலை 4:30 மணியளவில் வெஸ்ட்கோஸ்ட் பார்க் (West coast Park) BBQ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, ஓரிருவர் தவிர கிட்டத்தட்ட சிங்கப்பூரின் அனைத்து வலைப்பதிவர்களும் கலந்து கொண்டனர் ஜெகதீசன், கோவி.கண்ணன், கிஷோர், சிவா, டொன்லீ மற்றும் சிலர் BBQ விற்க்கு தேவையான பொருட்களுடன் வந்து ஆரம்பித்தனர், முதலில் கிழங்கு சோளம் , காலிஃபிளவர் வகைகள் சுட்டு உண்ணப்பட்டன அதன் பின் சிங்கை நாதன், விஜய் ஆனந்த், நிஜமா நல்லவன் பாரதி மூவரும் BBQ கோழி கறியுடன் வந்து சேர்ந்தனர்...

கீழுள்ள படம் சிவா மும்மரமாக கோழி வறுத்தல்
தம்பி கிஷோர், சிவா, டொன்லீ,வெற்றிக்கதிரவன் மற்றும் பலர் BBQ வறுத்து தந்தனர்








கீழுள்ள படம் ரோஸ்விக் சுடச்சுட பதிவிடுதல்
ரவிச்சந்திரன், அறிவிலி ராஜேஷ், முகவை ராம், ஜோசப் பால்ராஜ், ஜோ மில்டன் மற்றும் அனைவரும் வெற்றியாளர்களுடன் கலந்துரையாடிக்கொண்டிருந்தனர், தருமி அவர்கள் அரசியல் பற்றி ஏன் தற்போது எழுதுவதில்லை என்று கேட்டார், ரவிச்சந்திரன் சீனா வளர்ச்சி பற்றி நேரடியாக அறிந்ததை பகிர்ந்து கொண்டார், கல்வி, அரசியல் என போய்க்கொண்டிருந்தது, நமது வெற்றியாளர் பிரபாகர் பல நெடுந்தொடர்களுக்கும் குறும்படங்களுக்கும் இசையமைத்தவர் என்பதால் இசைப்பற்றி பேசும் போதெல்லாம் தகவல்கள்கள் மற்றும் சிறப்பு செய்திகளால் நம்மை வியப்படைய வைக்கிறார்.



வெற்றியாளர்கள் சிங்கப்பூர் பதிவர்களுக்கு கிருஷ்ணா இனிப்புகள் ஊரிலிருந்து வாங்கிவந்தனர், மேலும் வெட்டிவேரால் ஆன பிள்ளையார் உருவம் மற்றும் சாவிக்கொத்துகளை சிங்கை பதிவர்களுக்கு வழங்கினார்கள், குழுப்படம் எடுத்துக்கொண்டோம்.

(கீழுள்ள படம் BBQ முடிந்த பின் நாங்கள் சுத்தம் செய்த அடுப்பு)

இது தான் தலைப்பு இது பற்றி பேச வேண்டும் என்றில்லாமல் இரவு 9:00 வரை பூங்காவில் இருந்தோம், பின் அப்படியே வெளியேறி மேலும் அரை மணி நேரம் பேருந்து நிறுத்தத்தில் பேசி பின் அவரவர்கள் இருப்பிடம் அடைந்தோம்.

சிங்கப்பூரில் மணற்கேணி வெற்றியாளர்களுடன் மே 22 அன்று திறனாய்வு கூட்டம்


சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்களும் தமிழ்வெளி இணையதளமும் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியில் 50க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் தரமான கட்டுரைகளை அனுப்பி கலந்து கொண்டனர்.


அரசியல் / சமூகம் பிரிவில் திரு.தருமி அவர்கள் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின்* பலமும் பலவீனமும் கட்டுரை முதலிடம் பிடித்தது

தமிழ் அறிவியில் பிரிவில் திரு.தேவன்மாயம் அவர்களின் கட்டுரை ஏமக்குறைநோய்(A I D S) - தேவன் மாயம் அவர்களும்

தமிழ் இலக்கியம் பிரிவில் திரு.பிரபாகர் அவர்களின் தமிழர் இசை தொடர்பான கட்டுரையும் வெற்றிபெற்றனர்

மணற்கேணி 2009 போட்டியில் கலந்து கொண்ட அனைத்து கட்டுரைகளையும் வாசிக்க இங்கே அழுத்துங்கள்

வெற்றியாளர்கள் மூவரும் மே22 முதல் மே 29 வரையான நாட்களில் சிங்கப்பூரில் நடைபெறும் கலந்துரையாடல்கள் மற்றும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர்.

நாளை (சனிக்கிழமை மே 22 அன்று மாலை 5மணி அளவில் வாசகர் வட்டத்தில் சிங்கை வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைந்து நடத்தும் வெற்றியாளர் கட்டுரைகளின் மீதான திறனாய்வு கலந்துரையாடல் நடைபெறுகின்றது. சிங்கப்பூரில் உள்ள பதிவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

இடம் : தக்காளி அறை(Tomato Room) அங் மோக்கியா நூலகம்
நேரம் : மாலை 5:00 மணி
நாள் : சனிக்கிழமை, மே 22 - 2010

மணற்கேணி வெற்றியாளர்கள் திரு.தருமி, திரு. பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம் அவர்கள் கலந்துரையாடலில் கலந்து கொள்கின்றனர்

ஆம் முத்துக்குமார் தீவிரவாதிதான்...

முத்துக்குமாருக்கு சிலை திறப்பாம்
கொளுத்திக்கொண்டவனுக்கு எவ்வளவு திமிர்
காதல் தோல்வியால் தற்கொலை
வேலை கிடைக்காதவிரக்தியில் தற்கொலை
சம்பளம் பத்தாமல் தற்கொலை
சொல்லியிருப்போம் ஆயிரம் கதை

நாசமாப்போனவன்
கடிதம் எழுதிக்கொடுத்து விட்டு
கொளுத்திக்கொண்டான் திமிர் பிடித்தவன்
கடிதம் எழுதிய பொறம்போக்கு
பாப்பாத்தியை பற்றி மட்டும்
எழுதிவிட்டுப்போக வேண்டியது தானே
ஐம்பது ஆண்டுகாலம் கட்டியெழுப்பிய
தமிழ் இனத்தலைவனையும்
காட்டிக்கொடுத்துவிட்டானே

உடலை கைப்பற்றி
உணர்ச்சியை ஊட்டி
ஊரெங்கும் தம் பிணம் சுமந்து
புரட்சி செய்ய சொன்னானே
இவன் தீவிரவாதி இல்லையா?
இவனுக்கு எப்படி சிலை எழுப்ப முடியும்?


உதயக்குமாரை உண்டு ஏப்பம்
விட்டவர்களுக்கு
முத்துக்குமாரை முழுங்க
தெரியாதாடா முட்டாப்பயலே

கோர்ட்டு தீர்ப்புக்கும்
கருத்துக்கணிப்புக்கும்
அடுத்தவன் உயிரை
இழக்கவைக்கும் ஊரில்
இனத்துக்காக தன் உயிரை
இழக்கிறானாம்
இவன் தீவிரவாதி இல்லையா?
இவனுக்கு எப்படி சிலை எழுப்ப முடியும்?

டாஸ்மாக்கில் பாஸ்மார்க்கு
வாங்கிக்கொண்டிருக்கும்
எம் இனத்திற்க்கு
மானாட மயிலாடவில்
மயிங்கிக்கொண்டிருக்கும்
எம் இனத்திற்க்கு
பிரியாணி குஞ்சுகள் போதும்
எங்களுக்கு வேண்டாம்
முத்துக்குமார் போன்ற தீவிரவாதிகள்

சிங்கப்பூரில் முனைவர்.மு.இளங்கோவன், இரத்தின புகழேந்தி உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி


தமிழ் வலைப்பதிவரும் தொடர்ச்சியாக கல்லூரிகளிலும் மற்றும் பல இடங்களிலும் இணையப்பயிலரங்கு நடத்தி வருபவருமான முனைவர்.மு.இளங்கோவன் அவர்கள் சிங்கப்பூருக்கு மே15,16 களில் வருகை புரிகின்றார்... மேலும் கிராமத்து சூழல், பாடல்கள் மற்றும் தமிழ் சார்ந்த, மண் சார்ந்த விசயங்களில் ஆராய்ச்சிகள் செய்தும் எழுதியும் வரும் திரு இரத்தின புகழேந்தி அவர்களும் சிங்கப்பூர் வருகின்றார்.

இவர்களுடனான ஒரு கலந்துரையாடல் வரும் ஞாயிறு மாலை 6:30 மணியளவில் இலக்கம் 42,கேம்ப்பல் லேன் என்ற முகவரியில் உள்ள மருதப்பர் உணவகத்தில் நடைபெற உள்ளது... வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

இது தொடர்பாக என்னை தொடர்புகொள்ள +65 81165721 என்ற எண்ணில் அழையுங்கள்