Showing posts with label இடப்பங்கீடு. Show all posts
Showing posts with label இடப்பங்கீடு. Show all posts

ஏன் வேண்டும் இடஒதுக்கீடு - கட்டுரைகளின் தொகுப்பு

சமூகநீதிக்கு சாவு மணி அடிப்பதே குறிக்கோள் என்று அலையும் உச்ச நீதிமன்ற மனுநீதிமன்றம் 27% இடஒதுக்கீட்டிற்கு நேற்று இடைக்காலத் தடைவிதித்துள்ளது, அதற்கு காரணமாக சொன்னது புள்ளிவிபரங்கள் தேவையான அளவிற்கு இல்லையாம், கைப்புண்ணிற்கு கண்ணாடி கேட்டுள்ளது மனுநீதிமன்றம், இதெல்லாம் இடஒதுக்கீட்டை தள்ளிப்போட்டு அதன் பின் அதை செரித்துவிடும் நடவடிக்கை, முழுபுள்ளிவிபரம் வேண்டுமெனில் மிக எளிதாக ஒரு முறை உள்ளது, தற்போதுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் எத்தனை விழுக்காடு உயர் சாதி மாணவர்கள் உள்ளனர், எத்தனை விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உள்ளனர் என கணக்கெடுக்கட்டும், இந்த கணக்கெடுப்பை ஒரே வாரத்தில் செய்துவிட முடியும்.

எலிமினேஷன் முறையில் இதை செய்யலாம், எஸ்.சி/எஸ்.டி அல்லாத, உயர்சாதி அல்லாத எல்லோரும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் தானே, எனவே மிக எளிதாக உயர்சாதியினர் எத்தனை விழுக்காடு இடங்களை ஆக்கிரமித்துள்ளனர் என்று தெரிந்து விடும், அந்த உயர்சாதியினரின் விழுக்காடு இந்திய சமூகத்தில் அவர்களின் எண்ணிக்கைக்கு சமமா என்று தெரியாதா என்ன?

ஒரு கல்வி நிலையத்தில் 65% உயர்சாதியினர் ஆக்கிரமித்திருந்தால் உயர்சாதியினர் இந்திய சமூகத்தில் இருக்கும் எண்ணிக்கை விழுக்காட்டிற்கு மேலிருப்பதை இடஒதுக்கீட்டிற்கு ஒதுக்கட்டும், ஒரு 10 அல்லது 15% உயர்சாதியினர் எத்தனை இடங்களை ஆக்கிரமித்துள்ளனர், மற்றவர்கள் நிலை என்ன என்று உச்சநீதிமன்றத்திற்கு தெரியாதா என்ன? உயர்சாதிகளுக்கு உதவவே சமூக நீதிக்கு சாவு மணி அடிக்கும் உச்ச நீதிமன்ற மனுநீதிமன்றத்தில் இடஒதுக்கீட்டை செய்து மனுநீதி மன்றத்தை முதலில் நீதிமன்றமாக மாற்ற வேண்டும்.

ஏன் வேண்டும் இடஒதுக்கீடு என்பது தொடர்பாக இது வரை வந்த கட்டுரைகளில் சிலவற்றை தொகுத்துள்ளேன், மேலும் இது தொடர்பான கட்டுரைகள் இருந்தால் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.

இந்த தொகுப்பு ஏன் வேண்டும் இடஒதுக்கீடு என்பது பற்றியது, இன்னமும் இடஒதுக்கீடு- ஊடகங்களின் சார்பு நிலை, இடஒதுக்கீடு - மனு நீதிமன்றங்களின் சார்பு நிலை, இடஒதுக்கீடு - எதிர்ப்பாளர்களின் வாதங்களுக்கா பதில்கள், இடஒதுக்கீடு - வஞ்சகமாக ஏமாற்றப்படும் இடங்கள் என்ற தலைப்பில் தொகுத்துக்கொண்டுள்ளேன் அவைகளை வரும் காலங்களில் வெளியிடுவேன்.

உச்ச நீதிமன்ற மனுநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து நாளை தமிழகத்தில் அடையாள வேலை நிறுத்தம் செய்யும் கட்சிகள் மற்றும் பொதுமக்களை வாழ்த்துகிறேன், நாளை தமிழகத்தில் எழும் முழக்கம், தன் கோவணத்தை உருவிக்கொண்டிருக்கும் உச்ச நீதிமன்ற மனுநீதிமன்றத்தை சொரணை இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கும் இந்தியா முழுவதும் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் காதில் அறையும் எழுச்சி முழக்கமாக இருக்கட்டும்.


இட ஒதுக்கீடு பத்ரி

ரிஸர்வேஷன் டாக்டர்களிடம் போவீர்களா? இராமநாதன்

சாதி ரீதியான இட ஒதுக்கீடு தேவையா? குழலி

இட ஒதுக்கீடு - தலைமுறை தலைமுறையாகவா? குழலி

தலைமுறை வலிகள் குழலி

ஹிந்து கட்டுரை நன்றி சுந்தரமூர்த்தி

இடஒதுக்கீடு பற்றி ஞானி குரல்வலை

இயலாதோருக்கு இடஒதுக்கீடு அனுராதா

இடப்பங்கீடு சில நியாயங்கள்! திரு

ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு… தருமி

நான் கண்ட மண்டல் கமிஷன். தருமி

சாதிகள் இருக்குதடி பாப்பா - முழுக்கட்டுரை தருமி

பூனைக்கு மணிகட்டும் காலம் ஆதவன் தீட்சன்யா

இட ஒதுக்கீடு குறித்து... கோவி.கண்ணன்

இட ஒதுக்கீடு எனும் ஆயுதம் சிவபாலன்

இடஒதுக்கீட்டின் வயது சில ஆயிரம் வருடங்கள் அசுரன் (தினகரன் கட்டுரை)

இடஒதுக்கீடு சில சிந்தனைகள் நேசக்குமார்

இடஒதுக்கீடு இன்னொரு தீண்டாமை ஒழிப்பு மகேந்திரன்.பெ

இடஒதுக்கீடு எவ்வளவு காலத்திற்கு? அறிவானந்தா

இட ஒதுக்கீடு - அச்சு ஊடகங்கள் நச்சு ஊடகங்களா? குழலி

இட ஒதுக்கீடு வேண்டும்! ஏனென்றால், சுந்தரவடிவேல்

இடஒதுக்கீட்டின் கணிதம் ரவிசங்கர் அருணாச்சலம் மொழியாக்கம் : கார்த்திகேயன் இராமசாமி

இடஒதுக்கீடு பிரச்சனை: தலித் - பிற்படுத்தப்பட்டோர்ஒன்றிணைவதற்கான ஓர் அரிய வாய்ப்பு நன்றி கார்த்திகேயன் இராமசாமி

இட ஒதுக்கீடு: நாய்கள்தான் அப்படி நாமளுமா? கல்வெட்டு

தலைமுறை வலிகள்

தமிழ்மணம் விவாதகளத்தில் நான் இட்ட பின்னூட்டம் இன்னும் வெளியாகவில்லை, நான் இட்டு வெகுசில மணி நேரங்களே ஆகியிருந்தாலும் அது வெளி வரும் வரை பொறுமையில்லாததால் இங்கே அவைகள்.

விவாதகளத்தில் இருந்த பின்னூட்டங்களை படித்துவிட்டு வந்தால் எளிதாக புரியும்.

இடஒதுக்கீடு பற்றி ஒரு தவறான புரிதலை தந்துவிட்டு அதை நான் குறிப்பிட்டு எழுதியபோது

//திரு.டோண்டு சொல்லிய மாதிரி,”அவரவர் கவலை அவருக்கு. பாதிக்கப்பட்டவர்தான் அதன் வேதனை உணர்வர்”.நான் பட்ட வலி அவ்வாறு எழதத்தூண்டியது.அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. உங்கள் கருத்தை சொன்னதற்கு நன்றி//

என்று குறிப்பிட்டார்.

அவருக்கு அவர் வலி எழுத தூண்டியதென்றால், எங்களுக்கோ தலைமுறை தலைமுறையான வலி..... என்ன செய்ய தூண்டும்????


இனி என் பின்னூட்டம்

சற்று உணர்ச்சி வசப்படாமல் சொந்த அனுபவங்களை தூரவைத்துவிட்டு சில விடயங்களை பார்ப்போம், ஒரு மாணவன் இன்று இருக்கும் கல்வி முறையில் மதிப்பெண்கள் வாங்குவது என்பது அவனுடைய சொந்த திறமையை மட்டும் பொறுத்ததல்ல, அதற்கு பல காரணிகள் உண்டு

குடும்ப சூழல்
சுற்றுப்புற சூழல்
பெற்றோர்களின் விழிப்புணர்ச்சி மற்றும் அக்கரை
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தும் விழிப்புணர்ச்சி
கல்வி கற்கும் இடம் (நகரம், கிராமம் மற்றும் தரமான பள்ளிகள்)
இதோடு மாணவனின் தனிப்பட்ட திறமை மற்றும் குடும்ப பொருளாதாரம்(+2 மதிப்பெண்களுக்கு குடும்ப பொருளாதாரம் ஒரு சிறிய காரணி மட்டுமே, +2 மதிப்பெண்களுக்கு இது பெரும் முக்கிய காரணியாக இருப்பதில்லை)

இப்படி பல காரணிகள் இருக்குமிடத்தில் மாணவனின் தனிப்பட்ட திறமை தவிர்த்து மற்ற எல்லா
காரணிகளுக்கும் பெரும்பாலும் சாதியே காரணமாக இருக்கின்றது.உங்கள் சுற்றுப்புற சூழலிலிருந்தே உதாரணம் தருகிறேன், தனிப்பட்ட திறமை என்பதை தவிர ஒரே சமூகம், ஒரே பள்ளி, ஒரே மாதிரியான குடும்ப சூழலில் இருந்து உங்கள் தெரு தம்பி(எனக்கு அண்ணா) பத்ரி ஐ.ஐ.டி சென்று படித்துள்ளார், இன்னொருவர் இரு முறை ஐ.ஐ.டிக்கு முயற்சி செய்து இடம் கிடைக்காமல் ஜி.இ.சி. திருநெல்வேலியில் பொறியியல் படித்தார், இன்னும் ஒருவர் அரசு பொறியியல் கல்லூரியில் படித்தார் (இந்த இருவரும் வலைப்பதிவிற்கு தொடர்பில்லை என்பதால் அவர்கள் பெயரை சொல்வதை தவிர்க்கிறேன்), ஒரே மாதிரியான குடும்ப சூழல், சுற்று சூழல், சமூக சூழல் இருந்தும் பத்ரி தொட்ட இடத்தை மற்ற இருவர் தொடவில்லை, மற்ற இருவர் தொட்ட இடத்தை இன்னொருவர் தொடவில்லை என்றால் அது அவரவர்களின் தனிப்பட்ட திறமையில் உள்ள வித்தியாசம்.

உதாரணத்திற்கு நீங்கள் எடுத்த மதிப்பெண்களே எடுத்திருந்த ஒரு தாழ்த்தப்பட்ட அல்லது மிக பிற்படுத்தப்பட்ட மாணவன் எடுத்து அவருக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்த தனக்கு கிடைக்கவில்லை என்றால் அந்த தாழ்த்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மாணவனின் குடும்ப சூழல், சமூக சூழல், இடம் , பொருளாதாரம், பெற்றோர்களின் விழிப்புணர்ச்சியும் அதே மதிப்பெண்கள் எடுத்த உயர்சாதி மாணவனின் குடும்ப சூழல், சமூக சூழல், இடம் , பொருளாதாரம், பெற்றோர்களின் விழிப்புணர்ச்சியும் ஒன்றா?(ஒரு சில விதிவிலக்குகள் தவிர்த்து) இல்லையே, அப்போது மாணவனின் குடும்ப சூழல், சமூக சூழல், இடம் , பொருளாதாரம், பெற்றோர்களின் விழிப்புணர்ச்சியில் தாழ்வு இருக்கும்போது ஒரு உயர்சாதி மாணவன் வாங்கும் அதே மதிப்பெண்களை ஒரு தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட மாணவன் வாங்குகிறான் என்றால் இவ்விரு மாணவர்களின் திறமையும் சமமா? இல்லையே திறமைய் தவிர்த்து மற்ற சூழல்களில் குறைபாடு உள்ளவர்களை சமப்படுத்த தான் இடஒதுக்கீடு.

45கிலோ எடை உள்ளவன் 100கிலோ பளுதூக்கி 45கிலோ பிரிவில் தங்கம் வாங்கியவனை பார்த்து, 100கிலோ எடையுள்ளவன் ஹெவிவெயிட் பிரிவில் 100கிலோ பளு தூக்கி 10வது இடம் பிடித்து மெடல் வாங்காதவன் நானும் 100கிலோ தூக்கினேன், அவனும் 100கிலோ தூக்கினான் அவனுக்கு மட்டும் தங்கப்பதக்கம், எனக்கும் ஒன்றுமில்லையே என் வலி எனக்கு தான் தெரியும் என்று புலம்புவது சரியான செயலாகுமா?

இந்த பின்னூட்டத்தை எடிட் செய்து விடாதீர்கள் அல்லது நிறுத்திவிடாதீர்கள், "நான் பட்ட வலி அவ்வாறு எழதத்தூண்டியது.அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை." என்று சொன்னதாலேயே அவரின் ஊர் நண்பர்களை உதாரணம் காட்டி பேசவேண்டியதாகிவிட்டது.

ஐஐடி இடஒதுக்கீடு: புதிய சதி திட்டம்

நம் நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த ஐஐஎம், ஐஐடிகளின் இயக்குனர்கள், வெளிநாட்டு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி மனித வளத்துறை அமைச்சகத்தை நெருக்கி வருகின்றனர் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

திண்டிவனத்தில் தனது தோட்டத்தில் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,

ஐஐடி, ஐஐஎம் ஆகிய உயர் கல்வி நிலையங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த அந்த கல்வி நிலையங்களின் இயக்குனர்கள் இப்போது வெளிநாட்டு மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இது பிற்பட்டவர்களுக்கு எதிரான அவர்களது மன நிலையை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

நம் நாட்டைச் சேர்ந்த பிற்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர்கள், வெளிநாட்டு மாணவர்களுக்காக கொடி பிடிப்பது ஏன்?

இந்தக் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஆனால், அந்த ஒப்புதல் கிடைக்கும் முன்பே அவசர அவசரமாக நுழைவுத் தேர்வை நடத்தி முடிக்க ஐஐஎம், ஐஐடி நிறுவன இயக்குனர்கள் முயன்று வருகின்றனர்.

சட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால் இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டியிருக்கும் என்பதால் இந்த அவசரத்தைக் காட்டுகிறார்கள். இதனால் ஜனாதிபதியில் ஒப்புதல் கிடைத்து சட்டம் அதிகாரப்பூர்வமான பின்னர் தான் நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும்.

நன்றி
தட்ஸ்தமிழ்

கருத்தடை டாட் காம்

பொதுவாகவே பாமரனின் எழுத்தில் நக்கல் நையாண்டி கொஞ்சம் விளையாடும்.... தங்களுடைய ஆதிக்கத்தை தக்கவைக்க எந்த அளவிற்கும் செல்வார்கள் என்பதை சமீபத்திய தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் வெளியிட்ட புள்ளிவிபரத்தை பற்றி விழிப்புணர்வு இதழில் எழுதியுள்ளார் பாமரன், கீற்று இணையதளத்தில் வெளிவந்துள்ள இந்த கட்டுரை உங்களின் பார்வைக்கு.

"பொதுவாக புளுகுகளை இப்படிப் பிரிக்கலாம். ஒன்று : அண்டப்புளுகு. அடுத்து ஆகாசப்புளுகு. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி மாபெரும் புளுகு ஒன்றும் இருக்கிறது. அதுதான் புள்ளிவிவரப் புளுகு."
- காட்கோ வாலிஸ்

மொத்தத்தில் ஒரு இனமே கூட்டம் கூட்டமாக செத்துப் போயிற்றா அல்லது காணாமல் போயிற்றா என்கிற பெரும் குழப்பத்தைத் தோற்றுவிக்கிறது ஒரு புள்ளி விவரம். பல கணித மேதைகளையே விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகின்ற ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டிருக்கிறது தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் அதாவது---

இதை ஒவ்வொரு முறையும் தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் என நீட்டி முழக்க இயலாது. ஆகையால் இனி அது தே.மா.க.க என்று அழைக்கக்கடவதாக. அப்படி என்னதான் புள்ளி விவரத்தைச் சொல்லித் தொலைத்தது அது? என நீங்கள் அவசரப்படுவது புரிகிறது. ஆனால் தே.மா.க.க. கணக்குப்படி ஒன்று நீங்கள் சொந்த செலவில் செத்துப் போனவராக இருக்க வேண்டும் அல்லது எங்காவது தொலைந்து போயிருக்க வேண்டும்.

அதாவது நீங்கள் பிற்படுத்தப்பட்டவர் என்றால்....

ஆம் இந்த ஒரு மாதிரியான கணக்கெடுப்பின் மூலம் அப்புள்ளி விவரம் சொல்வது இதுதான் :

இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை வெறும் 41 சதவீதமோ 31 சதவீதமோ எதுவாயிருந்தால் என்ன?

கிடைப்பது கிடைத்தால் சரி என எவராவது தேமே என்று இருந்தால் வந்தது வம்பு என்ற அர்த்தம்.

ஏனென்றால் இந்தப் புள்ளி விவரம் வெளிவந்திருக்கும் நேரம் அப்படி. நேரம் என்றதும் எந்த ஜோசியக்காரனையும் தேடிக் கொண்டு ஓட வேண்டியதில்லை. சமீப காலமாக உச்ச நீதிமன்றம் உதிர்த்து வரும் முத்துக்களைக் கூர்ந்து கவனித்தால் போதும்.

தே.மா.க.க வின் இந்தக் கண்டுபிடிப்பு வெளிவந்திருக்கும் நேரம் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு அளிப்பதா கூடாதா?

அளிப்பதாக இருந்தால் அந்த 27 ஐயும் 9+9+9 என்று மூன்றாண்டுகளுக்கு பிரித்து அளிக்கலாமா?

அல்லது

3+3+3+3+3+3+3+3+3 என்று ஒன்பதாண்டுகளுக்கு ஜவ்வாய் இழுத்து பிரித்துக் கொடுக்கலாமா?

பிரித்துக் கொடுப்பதற்குள் இருக்கின்ற அரசின் ஆயுள் காலம் முடிந்து விடாதா?

ஒரு வேளை முடிந்து தொலைத்தால் வருகின்ற அரசாவது பிற்படுத்தப்பட்டோருக்கு சரியான விதத்தில் ஆப்பு வைக்கும் அரசாக அமையுமா?

என்று உச்ச நீதி மன்றம் தன் உச்சிக் குடுமியை உசுப்பிக் கொண்டிருக்கிற நேரம் இது.

1931 கணக்கெடுப்பின்படி பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 52 சதவீதம். ஆக இந்தக் கணக்கை முன் வைத்தே 70% இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என்றது காக காலேல்கர் கமிட்டி. 52 சதவீத மக்கள் தொகைக்கு 70% கிடைக்காவிட்டால் போகிறது. ஆனால் கிடைப்பதே 27 சதவீதம்தானே என்று எவரும் அங்கலாய்த்து விடக் கூடாதே என்பதற்காகத்தான் தே.மா.க.க.வின் இந்தப் புதிய கணக்கெடுப்பு இதன்படி பார்த்தால் இருப்பதற்கும் வந்திருக்கிறது ஆப்பு என்பது தான் உள்ளார்த்தம். 52க்கு 27சதவீதம் ஒதுக்கீடு என்றால்... இப்புதிய கண்டுபிடிப்பின்படி 41 சதவீதம்தான் பிற்படுத்தப்பட்டவர்கள் என்கிறபோது கிடைக்கவேண்டியது கூடுமா? குறையுமா? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.

கடைசியாகக் கணக்கெடுத்தது 1931ல். அதுவும் வெள்ளையர்களது ஆட்சிக் காலத்தில், நல்ல வேளையாக சுதந்திர இந்தியாவில் கணக்கெடுப்பு நடக்காதது ஒரு விதத்தில் நல்லதுதான். ஆக நமது கேள்விகளெல்லாம் இதுதான்.

1931ல் 52 சதவீதமாக இருந்த பிற்படுத்தப்பட்டோர் 2005இல் 41 சதவீதமாகக் குறைந்தது எப்படி...?

விவசாயிகளின் ஒட்டு மொத்தத் தற்கொலைகள் மாதிரி பிற்படுத்தப்பட்டோர் எங்காவது கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொண்டார்களா?

(52-41=11) இந்த 11 சதவீத மக்கள் எங்காவது ஒட்டுமொத்தமாகத் தொலைந்து போனார்களா....?

ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுகிறதே என்கிற விரக்தியில் அவர்கள் வந்த கைபர் போலன் கணவாய் வழியாக இவர்கள் எவனாவது வெளியேறிவிட்டார்களா...?

சரி இந்த சர்வே - சப்வே எல்லாம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும்தானா....?

பிற சாதியினரின் கணக்கை யார் முஷாரப்பா வந்து எடுப்பார்....?

கணிப்பொறியின் ஒரு சுவிட்சைத் தட்டினாலேயே கண்ணிமைக்கும் நேரத்தில் கடலில் விழக்கூடிய ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் இந்தியர்களுக்கு இதில் மட்டும் என்ன சிக்கல்...?

ஆனால் அப்படியும் எடுத்தார்கள் ஒரு கணக்கை. இன்றல்ல 1961ல் தலித் மக்களது கணக்கை. அந்தக் கணக்கும் 45 ஆண்டுகளுக்கு முன்னமே 25 சதம் என்று காட்டியது. ஆனால் இன்றுவரை தலித் மக்களுக்கு கிடைத்துவரும் ஒதுக்கீடோ வெறும் 22.5%...

இந்த 22.5 சதவீதத்தையும் எந்த லட்சணத்தில் நிரப்புகிறார்கள் என்பது தெரிந்தவர்கள் இந்த நாடு கடலில் மூழ்கட்டும் என்று மனதார வாழ்த்துவார்கள்.

ஆக இன்றுவரை இந்த சுதந்திர இந்தியாவில் ஆகா ஓகோ என்று ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும்தான். அதனால் அவர்களுக்கு மட்டும் இந்தக் கணக்கெடுப்பு மற்றவர்களெல்லாம் பாவம் மடிப்பிச்சை ஏந்தித்தான் வயிறு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் பார்த்து ஏதாவது அவர்களுக்குக் கூட்டி கொடுத்தால்தான் அவர்கள் வாழ்க்கையில் விடிவு பிறக்கும். என்ன செய்ய...?

இதே தே.ம.க.க.வின் 1999 கணக்கெடுப்பு பிற்படுத்தப்பட்டோர் 35.8% என்கிறது. 1999 இல் இந்தக் கணக்கெடுப்பைக் கண்டுணர்ந்த பிற்படுத்தப்பட்டவர்கள் கருக்கலைப்பு செய்யாமல் பெற்றெடுத்ததன் விளைவு 41%மாக எண்ணிக்கை உயர்ந்ததுதான்.

ஆக ஐந்து வருடத்தில் ஐந்து சதவீத வளர்ச்சியைக் காட்டிய இம்மக்கள் 1931லிருந்து 1999 வரை இப்படி ஏடாகூடமான கருத்தடையைக் கடைப்பிடித்திருக்கக் கூடாதுதான்.

சரி எப்படித்தான் கண்டெடுத்தார்கள் இந்தப் புள்ளிவிவரங்களை என்று கேட்டால் குழப்பத்தில் தே.மு.தி.க.வையும் மிஞ்சிவிடும் போலிருக்கிறது இந்த தே.மா.க.க

79306 நகர்ப்புற வீடுகளிலும்

45377 கிராமப்புற வீடுகளிலும்

இந்த சர்வே நடத்தினோம் என்பவர்களிடம் சர்வே சரி....

எந்த நாட்டில்....

எந்த மாநிலத்தில்....

எந்த நகரத்தில்....

எந்த கிராமத்தில்....

நடத்தினீர்கள்? என்றால் பதிலாக வெறும் காத்துதாங்க வருது.

தங்களது அகண்டபாரதக் கனவில் பிரிக்கப்படாததற்கு முன்பிருந்த இந்தியப் பகுதிகளில் ஏதேனும் நடத்தியிருப்பார்களோ இந்தக் கணக்கெடுப்பை?

வாய்ப்பில்லை.

ஒருவேளை இந்தக் கணக்கெடுத்த மகான்கள் முன்னொரு காலத்தில் ஆடு, மாடு மேய்த்துத் திரிந்த தங்களது பூர்வீக மத்திய ஆசியாவின் கணக்கைத்தான் தவறுதலாக மாற்றிச் சொல்லிவிட்டார்களோ என்னவோ....?
யாமறியோம் பராபரமே.

காட்கோ வாலிஸ்... பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்பெயின் தேசத்தில் வாழ்ந்த புள்ளியியல் நிபுணர் என்று சொன்னால் நீங்களும் நம்பத்தான் போகிறீர்கள். ஆனால் உண்மையில் இந்த காட்கோ வாலிஸ் யாரென்பது எனக்கும் தெரியாது என்பதுதான் உண்மை.

நன்றி
கீற்று

உயர் சாதி க்ரீமிலேயரே தயாரா?

உயர் சாதியிலிருந்து க்ரீமி லேயரை ஆரம்பிப்போம்

1994 அரசு பொறியியல் கல்லூரியில் ஓராண்டிற்கான கல்விக்கட்டணம் ரூ.2500, இன்றும் கூட ரூ.17,000 கட்டணம், ஆனால் 1994லேயே ஒரு பொறியாளரை உருவாக்க அரசாங்கம் செய்யும் செலவாக எங்களுக்கு ஒரு கூட்டத்தில் சொல்லப்பட்டது இரண்டு இலட்சம், அன்று ஒரு மருத்துவ படிப்புக்கு அரசாங்கம் செலவு செய்வதாக சொல்லப்பட்ட தொகை ரூபாய் ஐந்து இலட்சம், ஆனால் கல்விக்கட்டணம் க்ரீமிலேயர், க்ரீமி இல்லாத லேயர் என எல்லோருக்குமே ரூ.2500 அப்போது, இப்போது ரூ.17,000 இரண்டு இலட்சம் படிப்புக்கு மொத்தம் மாணவர் செலுத்தியது ரூ.10,000. மட்டுமே.

இடஒதுக்கீடு இன்னும் இரண்டாம் தலைமுறையை எட்டாத நிலையில் (இது தொடர்பான என்னுடைய முந்தைய பதிவு இடஒதுக்கீடு தலைமுறை தலைமுறையாகவா?)இப்போதே க்ரீமிலேயருக்காக அழும் ஆட்கள் முதலில் க்ரீமிலேயரை உயர்சாதியிலிருந்து ஆரம்பிப்போம், ஒரு 5 அல்லது 10 ஆண்டுகள் பரிசோதனை அளவில் செயல்படுத்தலாம், பிறகு மற்றவர்களுக்கும் அதை செயல்படுத்தலாம், இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயருக்காக அழும் ஆட்களின் முரண்பாடு என்னவென்றால் இவர்கள் இடஒதுக்கீடே வேண்டாமென்பவர்கள்.

க்ரீமிலேயர் தொடர்பான ஆலோசனைகள்

1. க்ரீமிலேயருக்கு அரசு நிதியில் நடைபெறும் அல்லது அரசாங்க நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இடம் இல்லை, அவர்கள் வேண்டுமெனில் தனியார், சுயநிதிக்கல்லூரிகளில் படித்துக்கொள்ளட்டும்.

2. அப்படியே அரசு கல்வி நிறுவனங்களில் சேர்ந்தாலும் க்ரீமிலேயர் கட்டணங்களுக்கு அரசு மானியம் எதுவும் தரப்படக்கூடாது, அவர்களுக்கான முழுக்கல்வி செலவையும் அவர்களே ஏற்கவேண்டும், அதாவது ஒரு மருத்துவ படிப்புக்கு அரசாங்கம் பத்து இலட்சம் செலவு செய்கிறதென்றால் பத்து இலட்சமும் க்ரீமிலேயர் மாணவர்களிடமிருந்தே வசூலிக்கப்படவேண்டும். க்ரீமிலேயருக்கு ஏன் மானியங்கள் ?

க்ரீமிலேயருக்கு எப்படி அரசு ரேசன் கடை அரிசி தேவையில்லையோ அதே போல அரசாங்க கல்வி கூடங்களிலும் அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களிலும் மட்டும் எதற்கு இவர்களுக்கு படிக்க இடம் தரவேண்டும்?

இடஒதுக்கீட்டில் கிரீமிலேயரை விலக்கும்போது எப்படி அதன் கீழுள்ளவர்கள் பயன்பெறுவார்கள் என்று சொல்லப்படுகின்றதோ அதே போல உயர்சாதியில் க்ரீமிலேயரை அரசு கல்வி நிறுவனங்களில் இடமளிக்காமல் இருந்தால் பணமில்லாத ஏழை உயர்சாதி மாணவர்கள் எளிதாக இந்த கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவார்களே....

இதை பரிசோதனை முறையில் உயர்சாதியிலிருந்து ஆரம்பிப்போம், பிறகு அதை மற்ற சாதிகளுக்கும் விரிவுபடுத்தலாம்.

உயர் சாதி க்ரீமிலேயரே தயாரா?, உயர் சாதி க்ரீமிலேயரே நீங்கள் தயாரா சொல்லுங்கள்.

பிற்சேர்க்கை:

ஏன் இந்த க்ரீமிலேயரை உயர்சாதியிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமென்பதற்கான என் பதில்


தினமலர் செய்தியில் பொறியியல் படிப்பில் காலியாக உள்ள 16,440 இடங்களில் பெரும்பாலும் MBC, SC, ST யாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

http://www.annauniv.edu/tnea06/rama21.doc

CATEGORY OC BC MBC SC ST
ANNA UNIVERSITY 0 0 0 0 0
GOVT. & GOVT AIDED 0 0 0 0 1
SELF FINANCING 2839 4757 3804 4569 434

இலட்சக்கணக்கில் பணத்தை அழுது படிக்க வேண்டிய சுயநிதிக்கல்லூரிகளில் மட்டும் தான் இடம் நிரம்பாமல் உள்ளது,

31% OC யில் 2839 இடங்கள் மட்டுமே காலி ஆனால் 30% BC யில் 4757 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 70% அதிக காலியிடங்கள்)

20% MBC யிலோ 3804 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 107% அதிக காலியிடங்கள்)

18% SC யிலோ 4569 இடங்கள் காலி, (OCயை விட கிட்டத்தட்ட 177% அதிக காலியிடங்கள்)

இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் காலியிடங்கள் MBCயைவிட அதிகம்.

வர்ணாசிரம அடுக்கு முறை ஏற்படுத்திய ஏழ்மைக்கு இந்த புள்ளிவிபரம் ஒரு உதாரணம்.

அதாவது குறைந்த கட்டணத்தில் அரசு கல்லூரிகள் இடமில்லையென்றாலும் OCயில் பணம் கொடுத்து சுயநிதிக்கல்லூரிகளில் படிக்கும் சக்தி மற்ற அனைத்து பிரிவினரையும் விட அதிகம், அதனால் தான் இதை முதலில் OCயில் ஆரம்பித்தால் உயர்சாதி ஏழை மாணவர்களுக்கு பயன்படும் அல்லவா.

உயர்சாதி க்ரீமிலேயர் பற்றி ஞானியின் கருத்து...

http://www.keetru.com/dheemtharikida/sep06/gnani_5.html
2. இட ஒதுக்கீடு பெற்றுள்ள சாதிகளில் வசதி படைத்த மேட்டுக்குடியினரே (கிரீமி லேயர்) அதிக இடங்களைச் சுருட்டிக்கொள்வதைப் பற்றி எல்லாரும் மழுப்புவது ஏன்?

அரசியல், கல்வி, தொழில் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், துளியும் பண பலம் இல்லாதவர்களைவிட, ஓரளவேனும் பண பலம் உள்ளவர்கள் தான் முதலில் நுழையவும், நுழைந்த பின் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடியும் என்பதும், வசதி யற்றவர்கள் முண்டியடித்து, முட்டி மோதித்தான் தங்கள் இடத்தைப் பிடிக்க முடியும் என்பதும்தான் நீண்ட காலமாக சமூகத்தின் நிலை. ராஜாஜி, பெரியார், நேரு என்று அரசியலில் பெரும் தாக் கத்தை 20&ம் நூற்றாண்டில் ஏற்படுத்திய பலர், வசதியான பின்னணியில் இருந்து வந்தவர்கள்தான். அவர்களுடைய சமூக அக்கறைகள் தெளிவாக இருந்ததனால் தான், அவர்களைப் பின்பற்றி வந்த வசதியற்றவர்களான சத்தியமூர்த்தி, காமராஜர், அண்ணா போன்றவர்கள் தங்களுக்குரிய இடத்தைப் பெற முடிந்தது. சமூகப் பார்வையில் தெளிவும், தனக்குச் சமமான கூர்மையும் உடைய ஏங்கல்ஸ் போன்ற பணக்கார நண்பர் இருந்திரா விட்டால், வசதி குறைந்தவரான கார்ல் மார்க்ஸ் இன்னும் அதிக சிரமப்பட்டு இருப்பார்.

எனவே, இட ஒதுக்கீட்டிலும், அந்தந்த சாதியில் ஓரளவு வசதியுள்ளவர்களே முதல்கட்டத்தில் உயர் கல்வி வரை வர முடியும். அப்படி வருபவர்களில் அக்கறை உள்ளவர்கள்தான் மற்றவர்களை அரசி யல் படுத்தித் திரட்ட முடியும். அந்த நிலைக்கு வருவதற்கு அந்தந்த சாதி ஏழைகள் முதலில் அடிப்படைக் கல்விக் கான வசதியைப் பெற்றாக வேண்டும்.

தவிர, இட ஒதுக்கீடு என்பது பொருளா தார ஏற்றத் தாழ்வைச் சரி செய்ய வந்த திட்டம் அல்ல. சாதிகளிடையே ஏற்றத் தாழ்வைச் சரி செய்யவும், எல்லாச் சாதிகளுக்கும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொடுக்கவும் மட்டுமே ஏற்படுத்தப்பட்ட திட்டம். வறுமை ஒழிப்புக்கும் வர்க்க சமத்துவத்துக்கும் வேறு திட்டங் களைத்தான் நாம் உருவாக்க வேண்டும்.

இட ஒதுக்கீட்டில் அந்தந்த சாதிக்கான இடங்களில் முதல் தலைமுறையாகப் படிப்போர், ஏழைகளுக்கு முன்னுரிமை தருவது சரிதான். ஆனால், அதை ரிசர்வேஷன் இடங்களில் மட்டும் செய்வது சரியாகாது. ஓப்பன் கோட்டாவிலும் அதே போல ஏழைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.சமையல்கார பிராமணர், சவுண்டி பிராமணர், டிரைவர் முதலியார் ஆகியோரின் குழந்தைகளுக்கு முன்னு ரிமை தர, மூன்று தலைமுறையாக வக்கீல்களாக இருக்கும் அய்யர்களும், ஆடிட்டர்களாக இருக்கும் அய்யங் கார்களும், டாக்டர்களாக இருக்கும் முதலியார்களும் முன்வருவார்களானால், மற்ற சாதிகளிடமும் இது குறித்து நாம் விவாதிக்கலாம்.

O.C - Open Competition OR Other Castes

சிவபாலன் அவர்கள் வெளியிட்டிருந்த ஐ.ஏ,ஸ், ஐ.பி.எஸ். தேர்வுகளில் மாபெரும் அநீதி... என்ற பதிவில் அய்யா டோண்டு ஒரு பின்னூட்டமிட்டிருந்தார், அவர்களுக்கு தெரியாதது அல்ல, அதனால் நிச்சயம் இந்த விளக்கம் அவருக்கானது அல்ல, ஆனால் அவர் ஒரு குழப்பி குழப்பி விட்டு சென்றிருக்கும் போது அதை பார்த்து மற்றவர்களும் குழம்பக்கூடாது அல்லவா அதனால் தான்....

தமிழக அரசில் இட ஒதுக்கீடு மொத்தம் 69% அதில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18%, மிகப்பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20%, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30% பழங்குடியினருக்கு 1% மற்றவர்களுக்கு 31%, இதில் அனைவரும் அடங்குவர்.

அதாவது பிற்படுத்தவப்படவர்கள் 69 இடங்களில் நிச்சயம் 30 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும், டோண்டு அய்யா சொல்வது போல 100 இடங்களில் 30 இடங்கள் அல்ல...

இப்போது தரவரிசை கீழ்கண்டவாறு இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

1 - இதர வகுப்பினர்
2 - இதர வகுப்பினர்
3 - தாழ்த்தப்பட்டவர்
4 - பிற்படுத்தப்பட்டவர்
5 - மிகப்பிற்படுதப்பட்டவர்
6 - இதர வகுப்பினர்
7 - பிற்படுத்தப்பட்டவர்
8 - இதர வகுப்பினர்
9 - பிற்படுத்தப்பட்டவர்
10 - மிகப்பிற்படுத்தப்பட்டவர்

11 - பிற்படுத்தப்பட்டவர்
12 - இதர வகுப்பினர்
13 - இதர வகுப்பினர்
14 - பிற்படுத்தப்பட்டவர்
15 - மிகப்பிற்படுத்தப்பட்டவர்
16 - தாழ்த்தப்பட்டவர்
17 - மிகப்பிற்படுத்தப்பட்டவர்
18 - பிற்படுத்தப்பட்டவர்
19 - பிற்படுத்தப்பட்டவர்
20 - இதர வகுப்பினர்

21 - தாழ்த்தப்பட்டவர்
22 - பிற்படுத்தப்பட்டவர்
23 - இதர வகுப்பினர்
24 - மிகப்பிற்படுத்தப்பட்டவர்
25 - தாழ்த்தப்பட்டவர்
26 - இதர வகுப்பினர்
27 - மிகப்பிற்படுத்தப்பட்டவர்
28 - பிற்படுத்தப்பட்டவர்
29 - தாழ்த்தப்பட்டவர்
30 - பிற்படுத்தப்பட்டவர்

பட்டியல் எண்ணிக்கை - 30

(O.C) இ.வ. - 9
(B.C) பி.வ. - 10
(M,B.C) மி.பி.வ. - 6
(S.C) தா.வ - 6

இடங்களின் எண்ணிக்கை - 20
O.C 31% 6 இடங்கள்
B.C 30% 6 இடங்கள்
M.B.C 20% 4 இடங்கள்
S.C/S.T 18+1% 4 இடங்கள்

கிண்டி பொறியியல் கல்லூரியில் மொத்தமே 10 இடங்கள் தான் மீதமுள்ள 10 இடங்கள் மற்ற பொறியியல் கல்லூரிக்கு எனக்கொள்வோம்

இட ஒதுக்கீட்டில் எல்லா பொறியியல் கல்லூரிக்கும் (20 இடங்களில் )சேர்த்து இடஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படும் இடங்கள் 14, பொது ஒதுக்கீடு 6

இதன் படி முதல் 6இடங்கள் (OC-3,B.C-1,M.B.C-1,S.C.-1) மற்ற இடங்கள் இடஒதுக்கீட்டில் வரும் மொத்தமாக பார்த்தால்

இடங்களின் எண்ணிக்கை - 20

O.C 31% 6 இடங்கள் (OC-3,B.C-1,M.B.C-1,S.C.-1) F.C - 3

B.C 30% 6 இடங்கள் 6+1(O.C) = 7

M.B.C 20% 4 இடங்கள் 4+1(O.C) = 5

S.C/S.T 18+1% 4 இடங்கள் 4+1(O.C) = 5

இது வரை எல்லாம் சரிதான் ஆனால் இனிமேல் சொல்லப்போகும் கணக்கு தான் O.C (Open Competition) என்பதை Other Castes என்று மாற்றப்போவது.

பொறியியல் கல்லூரிகள் கிண்டி பொறியியல் கல்லூரி தரத்தில் முதலிடம், எனவே அதற்கு விருப்பப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகம்

இதே கிண்டி பொறியியல் கல்லூரியில் பொது இடங்கள் 3, இடஒதுக்கீட்டில் 7 இடங்கள்

கீழ்கண்ட பட்டியியலில் முதல் மூன்று பேருக்கு (O.C.-2, S.C-1) பொதுப்பட்டியியலில் கிண்டி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கும்

1 - இதர வகுப்பினர்
2 - இதர வகுப்பினர்
3 - தாழ்த்தப்பட்டவர்
4 - பிற்படுத்தப்பட்டவர்
5 - மிகப்பிற்படுதப்பட்டவர்
6 - இதர வகுப்பினர்
7 - பிற்படுத்தப்பட்டவர்
8 - இதர வகுப்பினர்
9 - பிற்படுத்தப்பட்டவர்
10 - மிகப்பிற்படுத்தப்பட்டவர்

நான்காவதாக வந்தவர் பிற்படுத்தப்பட்டவர்
எல்லா கல்லூரிகளுக்கும் சேர்த்து உள்ள 20 பொறியியல் இடங்களில் பொதுப்பிரிவில் வருவார், ஆனால் அவர் கிண்டி பொறியியல் கல்லூரிக்கு விருப்பப்படுகிறார் என்றால் அவர் பொதுப்பிரிவிலிருந்து விலகி பிற்படுத்தப்பட்ட பட்டியியலில் சேர்வார், அவர் பொதுப்பிரிவில் நான்காவது ஆனால் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியியலில் முதல் இடம், 5வதாக வந்த மிகப்பிற்படுத்தப்பட்டவர் கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர முனைவார் அப்போது அவரும் பொதுப்பட்டியியலில் இருந்து விலகி மிகப்பிற்படுத்தப்பட்டியியலில் சேர்வார், இப்போது 6ஆக இருக்கும் இதரவகுப்பினர் பொதுப்பட்டியலில் 4ம் இடத்த்ற்கு செல்வார்... 7வதாக இருக்கும் பிற்படுத்தப்பட்டவர் கிண்டிபொறியியல் கல்லூரிக்காக பிற்படுத்தப்பட்டியலில் சேர்வார்...

இப்படி கிண்டி கல்லூரிக்காக போடப்பட்டியலில்



தற்போது 6ம் இடத்திலிருக்கும் ஒரு O.C. 4ம் இடத்திற்கு வருகிறார், அடுத்து 8ம் இடத்திலிருக்கும் ஒரு O.C. 5ம் இடத்திற்கு வருகிறார், சட்டப்படி பொதுப்பிரிவில் முதல் 6 ரேங்க் உள்ளவர்களுக்கு மட்டுமே இடம், 8ம் இடத்திலிருக்கும் பொதுப்பிரிவை சேர்ந்த அவருக்கு பொறியியலில் இடம் இல்லை, ஆனால் அவருக்கு முந்தைய தரமான மாணவர்கள் கிண்டி கல்லூரிக்காக இடஒதுக்கீட்டிற்கு போனதால் 8ம் இடத்திலிருக்கும் O.C. க்கு இடம் கிடைக்கின்றது அதற்கு கீழுள்ள கல்லூரியில் இடம் கிடைக்கின்றது.

இப்போது கிண்டி கல்லூரியிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் O.C.க்கு ஒரு இடம் மட்டுமே என்றாள் 3ம் இடத்திலிருக்கும் S.C.மாணவர் கம்ப்யூட்டர் சயின்ஸ்க்காக S.C. இடஒதுக்கீட்டில் நுழைவார் அப்போது அந்த மூன்றாமிடமும் பொதுப்பிரிவில் காலியாகும், அப்போது 6ம் இடத்திலிருந்து 4க்கு வந்த O.C. மாணவர் இப்போது 3ம் இடத்துக்கு வருவார், அவர் மூன்றாமிடமென்றால் கிண்டி கல்லூரியில் பொதுப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவராகிவிடுவார்...



ஆக இப்போது கிண்டி பொறியியல் கல்லூரியில் பொதுப்பிரிவில் வந்த மூவருமே O.C (OTHER CASTES) ஆனால் அந்த மூன்றாவது ஆளின் ரேங்க் 6....

இப்படியாக முன்னேறி முன்னேறி கடைசியில் பொதுப்பிரிவில் 3 F.Cகள் இருக்க வேண்டியதற்கு பதில் 6 F.C. கள் இருப்பார்கள்

இடங்களின் எண்ணிக்கை - 20,

பட்டியல் கீழ் கண்டவாறு இருக்க வேண்டும்


ஆனால் இருப்பதோ இப்படி கீழ்கண்டவாறு


பொதுப்பிரிவில் 3 FC மாணவர்களுக்கு பதில் 6 FC மாணவர்கள் நுழைகின்றனர், FC மாணவர்களுக்கு கிடைக்கும் மற்றைய 3 இடங்களும் அவர்களை விட தரமான மற்ற பிரிவு மாணவர்கள் இடஒதுக்கீடு பிரிவிற்கு தள்ளியதால் கிடைத்த இடங்கள்

இப்படி பார்த்தால் இடஒதுக்கீடே சுத்தமாக இல்லையென்றாலும் முதல் 20 இடங்களில் உள்ள 7 எஃப்.சி. மாணவர்களுக்கு இடம் கிடைக்கும், இட ஒதுக்கீடு 69% இருந்தாலும் கூட 6 எஃப்.சி. மாணவர்களுக்கு இடம் கிடைத்துவிடுகின்றது, இது தான் நிலவரம்.

மொத்தமாக பொறியியல் கல்லூரி தரப்பட்டியல் தயாரித்து பொறியியல் (அல்லது எந்த படிப்பாயினும் ) இடங்கள் முதல் 31% இடங்கள் எந்த ஒதுக்கீடும் பார்க்காமல் எடுத்து அவர்கள் அனைவரும் பொதுப்பிரிவு என கணக்கெடுத்து, அதன் பிறகு S.C., B.C, M.B.C, தரப்பட்டியல் படி கல்லூரி / துறை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் இட ஒதுக்கீட்டின் பலன் முழுமையாக சென்றடையும், இல்லையென்றால் O.C. என்பது Open Competion ஆக இல்லாமல் Other Castes ஆகத்தான் இருக்கும், இப்போது இப்படித் தான் இருக்கின்றது.

இதையே தான் UPSC IAS,IPS,IFS வரிசைக்காக செய்கிறது என கருதுகிறேன், அதனால் தான் எவ்வளவு தானென்றாலும் இடஒதுக்கீட்டு சதவீதத்தை தாண்டி வெற்றிபெருபவர்களின் எண்ணிக்கை அமைவதில்லை.

ஜாதியற்ற சமுதாயம் வேண்டுமென்று.....

ஜாதியற்ற சமுதாயம் வேண்டுமென்று சொல்லும் நீங்கள், ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மருத்துவ மாணவர்கள் டாக்டர்கள் போராட்டத்தை ஆதரிப்பதுதானே நியாயம்?

அருணகிரி ராமநாதன், மின்னஞ்சல்

இட ஒதுக்கீடு கோட்பாடு ஜாதி ஒழிப்புக்கான வழிமுறையும் அல்ல. ஜாதியை நீடிப்பதற்கான வழியும் அல்ல. ஜாதி அடிப்படையில் சமூகத்தில் இருந்து வரும் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வதற்கான ஒரு ஏற்பாடு. எனவே ஜாதி ஒழிப்பாளர்கள் அதை எதிர்க்க வேண்டியதில்லை.

போராட்டம் நடத்திய டெல்லி மருத்துவ மாணவர்களும் டாக்டர்களும் ஜாதி ஒழிப்பாளர்கள் அல்ல. இட ஒதுக்கீடு வந்துவிட்டால் தாங்களெல்லாம் செருப்பு தைக்கவும் ஷீ பாலீஷ் போடவும் மாடு மேய்க்கவும் போக வேண்டி வரும் என்று கோபமாகவும் கிண்டலாகவும் சொன்னார்கள். அதாவது அந்த வேலைகளுக்கு ஏற்கனவே இவர்கள் இட ஒதுக்கீடு அளித்துவிட்டார்கள். அதைச் செய்பவர்கள் அதையே செய்து கொண்டிருக்கட்டும் என்ற மேல் சாதி மனப்பான்மை அருவெறுப்பாக இருக்கிறது.

அதே போல ஏழை- பணக்காரன் வாதத்தைக் காட்டி ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதும் தந்திரமானது. இப்போது ஏழைகளைப் பற்றிக் கவலைப்படும் இவர்கள், இதுவரை பணக்காரர்களுக்கென்றே இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் தனியாரின் டொனேஷன் கல்லூரிகளுக்கு எதிராக ஒரு போராட்டமும் செய்ததில்லை.

மிச்சத்தை தீம்தரிகிடவில் மனிதனின் பதில்களில் படிக்கவும்

இட ஒதுக்கீடு - தலைமுறை தலைமுறையாகவா?

இட ஒதுக்கீடு தொடர்பாக என் முந்தைய பதிவின் தொடர்ச்சியாக இந்த பதிவு.

இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களால் வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு இட ஒதுக்கீட்டை பயன் படுத்தி முன்னேறியவர்களே மீண்டும் மீண்டும் அதை பயன்படுத்துகிறார்கள், சரியாக வார்த்தைகளை கவனிக்கவும் பயன்படுத்துகிறார்கள் பயன்படுத்துவார்கள் என சொல்லவில்லை, பயன்படுத்துகிறார்கள் என்று கூறுகின்றனர்.

ஒரு தலைமுறைக்கு 33 ஆண்டுகள், இட ஒதுக்கீடு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றது, சரியாக சொல்லப்போனால் முதல் தலைமுறையில் அதன் பலன் தெரியவில்லை, ஏனெனில் தொழிற் கல்விகளுக்கான(professional courses) (உதாரணம் பொறியியல்,மருத்துவம்,சட்டம் மற்ற கல்விகள்) அடிப்படை தகுதிகள் பெறும் அளவிற்கு கூட அந்த கட்டத்தில் பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை, மேலும் தொழிற்கல்விகள் படிக்க முனைந்தவர்கல் மிக மிகக்குறைவே, மேலும் அன்றைய காலகட்டத்தில் மிகக்குறைந்த அளவிலேயே தொழிற்கல்வி கல்லூரிகள் இருந்தன, மேலும் SSLC, PUC முடித்தவுடன் அரசாங்கம் அளித்த கடைநிலை ஊழியர்கள், எழுத்தர்கள், ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியர்கள் என்று தான் அவர்களால் செல்லமுடிந்ததே தவிர பெரும் எண்ணிக்கையில் அவர்களால் முன்னேற முடியவில்லை, ஆதலால் கிட்டத்தட்ட ஒரு தலைமுறை இட ஒதுக்கீட்டினால் பெரிய பலன் அடையவில்லை.

இரண்டாம் தலைமுறை, அதாவது எண்பதுகளின் இறுதியில் தான் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அதிக எண்ணிக்கையில் தொழிற்கல்லூரிகளினுள் அடியெடுத்து வைத்தனர்,
கிட்டத்தட்ட கடந்த பதினைந்து பதினாறு ஆண்டுகளாகத்தான் இடஒதுக்கீடு அதன் பலனை தந்து கொண்டிருக்கின்றது, இட ஒதுக்கீட்டை அனுபவித்துள்ள இந்த தலை முறையின் சந்ததிகள் இன்னமும் கல்லூரி நிலையை எட்டியிருப்பார்களா என்பது சந்தேகமே... அதற்குள் தலைமுறையாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு சாரரே இட ஒதுக்கீட்டை பயன் படுத்துகின்றனர் என்பது எத்தனை அப்பட்டமான பொய்.

எழுபதுகளில் தொழில்கல்லூரியில் இடஒதுக்கீட்டில் பயனுற்றவர்கள் மிக மிக குறைவே அவர்களின் சந்ததிகளின் எண்ணிக்கையும் விழுக்காடு அளவில் மிகக்குறைவே என்பது கண்கூடு, இருந்தாலும் இப்படி ஒரு பொய் பிரச்சாரம் இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களால் வைக்கப்படுகின்றது, இட ஒதுக்கீட்டு சட்டத்தில் திருத்தம் தேவை ஆனால் அதன் தேவை இன்றே என்ற அளவில் இல்லை,

தலைமுறை தலைமுறையாக இட ஒதுக்கீட்டை ஒரு சிலரே பயன்படுத்துகிறார்கள் என்பது அப்பட்டமான பொய் பிரச்சாரம், இட ஒதுக்கீட்டை பயன்படுத்திய/பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற முதல் தலைமுறை தான் இப்போது உள்ளது.

தலைமுறை தலைமுறையாக இட ஒதுக்கீட்டை ஒரு சிலரே பயன்படுத்துகிறார்கள் என்று கவலைப்படும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் அதன் காரணத்தால் இட ஒதுக்கீட்டையே நிறுத்த சொல்வது வினோதமான ஒன்று.

இட ஒதுக்கீடு - அச்சு ஊடகங்கள் நச்சு ஊடகங்களா?

இடஒதுக்கீடு விடயத்தில் அச்சு ஊடகங்கள் பெரும்பாலும் இடஒதுக்கீட்டுற்கு எதிர்ப்பு நிலையையே எடுத்துள்ளன, இதற்கு விகடனும் விலக்கல்ல என்பதை 'குழப்பும் அரசு, கொந்தளிக்கும் மாணவர்கள் - இட ஒதுக்கீடு' என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை முழுக்க முழுக்க உயர் சாதி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் நாடு முழுவதும் ஒரு விதமான பரபரப்பான அசாதாரண சூழல் இருப்பது போலவுமான தோற்றத்தை தருமாறு கட்டுரை எழுதப்பட்டுள்ளது, இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பாக சில மாணவர்களிடம் பேட்டி எடுத்து எழுதியவர்கள் பிரச்சினையின் இன்னொரு முக்கிய பக்கத்தை இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவானவர்களிடமிருந்து எதையும் பதிவு செய்யவில்லை.

இடஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டத்தில் குதித்த டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகம் தவிர்த்த மற்ற மாநில மாணவர்களும் களம் இறங்கியிருக்கின்றனர் என்றும் ஜீனியர் விகடனில் குறிப்பிட்டுள்ளனர். இதை வைத்தே புரிந்து கொள்ளலாம் திராவிட கட்சிகள் தமிழகத்தில் செய்துள்ள சமூகப் புரட்சியை.

கீழே உள்ள படத்தை பெரிதாக்க படத்தின் மேல் சுட்டவும்.



கிட்டத்தட்ட எல்லா இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களும் வைக்கும் அதே கேள்விகளை முன் வைத்துள்ள இந்த மாணவர்களின் கேள்விகளுக்காவது கருத்து தளத்தில் பதிலளிக்கும் விதமாக கூட இட ஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் யாரிடமும் கேட்காமல் இப்படி ஒரு கட்டுரை எழுதியுள்ளது , எல்லா கட்டுரைகளுக்கும் பெட்டி செய்தியாகவேனும் மற்ற கருத்தை வெளியிடும் விகடன் இந்த முறை அது கூட செய்யாதது பத்திரிக்கை தர்மமாக தெரியவில்லை.

திறமை திறமை என கூறும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களுக்கு சில கேள்விகள்

திறமை ஒருவரின் பிறப்பினால் அமைவதாக கருதுகின்றீர்களா? அப்படியெனில் உங்களுக்கு பதில் இங்கே

திறமை ஒருவரின் பிறப்பினால் அமைவதில்லை என்னும் போது சமுதாயத்தில் எண்ணிக்கையில் மிகக்குறைவே உள்ள முற்பட்ட சாதியினர் கல்வி கூடங்களில் பெரும்பாலன இடங்களை பெறும் அளவில் உள்ளது எதனால்? சமுதாயத்தில் எண்ணிக்கையில் மிகஅதிகமாக உள்ள மற்ற சாதியினர் கல்வி கூடங்களில் குறைவான இடங்களை பெறும் அளவில் உள்ளது எதனால்? குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்கள் விகிதாச்சார அளவில் கல்வி இடங்களில்அதிகமாகவும் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் விகிதாச்சார அளவில் கல்வி இடங்களில் குறைவான இடங்களும் பெறுவது எந்த விகிதாச்சாரத்திற்கும், எந்த கணக்கிற்கும் எந்த விதிக்கும் பொருந்தாமல் உள்ளதே….. இது வித்தியாசமாக தெரியவில்லையா? இதற்கு காரணம் என்ன? மேலும் தகுதி என்பது எதை வைத்து நிர்ணயிக்கப்படுகின்றது, தேர்வுகளில் வாங்கும் மதிப்பெண்கள் தான் திறமை என்றால் அந்த திறமைக்கு காரணம் வெறுமனே அந்த மாணவனின் புத்திசாலித்தனம் மட்டும் காரணமில்லை, அந்த மாணவனுக்கு கிடைக்கும் சூழல், பெரும் பங்காற்றும் இந்த சூழல் பற்றிய என் முந்தைய பதிவு இங்கே, உயர் சாதி மாணவர்களுக்கு மிக எளிதாக கிடைக்கும் அந்த சூழல் மற்றைய மாணவர்களுக்கு கிடைப்பதில்லை(சில விதிவிலக்குகள் தவிர்த்து) எல்லாம் ஒன்றுதான் என்னும் போது ஒரு மாணவனுக்கு கிடைக்கும் சாதக சூழ்நிலை மற்ற மாணவனுக்கு கிடக்கவில்லை என்னும் போது அது சமூக அநீதி அல்லவா? சாதகமற்ற சூழலில் 80% மதிப்பெண்கள் வாங்குபவன் ஒருவனுக்கு சாதக சூழ்நிலை அமைந்தால் சாதக சூழலில் படிக்கும் ஒரு மாணவன் வாங்கும் மதிப்பெண்களுக்கு இணையாக அதை விட அதிகமாகவே வாங்குவார்கள், அப்போ சாதகமற்ற சூழலில் சற்று குறைவாக மதிப்பெண்கள் வாங்கும் மாணவன் திறமை குறைந்தவனா?.

பொருளாதாரத்திற்கும் இந்த சாதக சூழலுக்கும் சற்றும் தொடர்பில்லை, நல்ல பொருளாதாரத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் கூட உருவாக்கி தரமுடியாத சாதக சூழலை ஒரு மத்தியதர வருமானமுடைய உயர்சாதி குடும்பத்தால் உருவாக்கி தரமுடியும், இதற்கு எது காரணம்?

உதாரணத்திற்கு இட ஒதுக்கீட்டில் படித்து இன்று தகவல் தொழில்நுட்பத்துறையில் உலகமெங்கும் சென்று வேலைசெய்து தம் திறமைகள் நிரூபித்துக்கொண்டிருக்கும் இந்த இளைய தலைமுறையை பார்த்தாவது இட ஒதுக்கீட்டினால் திறமை பாதிக்கப்படுவதில்லை என்பது புரிந்து கொள்ளப்படுமா?

இட ஒதுக்கீட்டுக்கு மாற்றாக வேறு திட்டங்கள் ஏதும் கொடுக்கப்படாத நிலையில் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் முன் வைக்கும் ஒரு தீர்வாக பள்ளி கல்வியை மேம்படுத்துதல், நிச்சயமாக செய்யப்பட வேண்டிய ஒன்று, இன்றைக்கு இதை செய்தாலும் இது பலன் கொடுக்க 12 ஆண்டுகள் ஆகும், மேலும் வெறும் பள்ளி கல்வியையும் தாண்டி குடும்ப சூழல், சமூக சூழல் எல்லாமே காரணிகளாக இருக்கும் இந்த நிலையில் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் சமுதாய சமநிலைக்கு என்ன திட்டத்தை முன்னெடுக்கின்றனர்?

எந்த குழந்தையும் பிறந்த உடன் அது உடனடியாக அரசாங்க காப்பகத்தில் விடப்பட்டவேண்டும் எந்த பெற்றோருக்கு பிறந்தது என்று கூட தெரியாமல் மற்ற குழந்தைகளுக்கு கிடைக்கும் அதே உணவு, உடை, உறையுள், சூழல் எல்லாம் அளிக்கப்பட வேண்டும், இப்படி ஒரு சமுதாயம் அமைய வேண்டுமென ஓஷோ ஆசைப்பட்டார், அந்த மாதிரியான சமூகம் அமையும் போது இடஒதுக்கீடு நிச்சயம் தேவைப்படாது.

அச்சு ஊடகங்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உருவாக்க முயலும் நச்சு சூழலை முறியடிக்க வேண்டும், இட ஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் தங்கள் கருத்துகளை எல்லா பத்திரிக்கைகளுக்கும் வாசகர் கடிதம், கட்டுரைகள் என அனுப்பலாம் (தினமலர் உட்பட) .

இட ஒதுக்கீடு தொடர்பான சிலரின் பதிவுகள்

சுந்தர மூர்த்தியின் முதல் தலைமுறையில் படித்து வந்த OBC நண்பர்கள் கவனத்திற்கு

பத்ரியின் இடஒதுக்கீடு

மனசாட்சியின் நான் ஏமாளியா? - பிற்பட்டோர் இடஒதுக்கீடு



இட ஒதுக்கீடு தொடர்பான என்னுடைய பிற பதிவுகள்

சாதிரீதியான இடஒதுக்கீடு தேவையா?
இப்படித்தான் பதில் சொல்லனுமோ?

இப்படி தான் பதில் சொல்லனுமோ?

இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த நாகரீகம் இந்த முறை வெகுவாக குறைந்துவிட்டது.


தாழ்த்தப்பட்ட சாதி என்று கூட எழுதாமல் தாழ்ந்த சாதி, கீழ் சாதி என்று தம் மன அழுக்கை காட்டியுள்ளனர் மேலும்

சிலந்திவலை என்ற வலைப்பதிவில்

//குறைந்த மதிப்பெண் பெற்ற சில பிற்படுத்தப்பட்ட(முதலில் தாழ்ந்த ஜாதி என்று எழுதி சிலர் சு(தி)ட்டி காட்டிய பிறகு பிற்பட்ட என்று மாற்றினார் ) ஜாதி மாணவர்களை அவர்கள் தகுதிக்கு மீறிய கல்விக்கூடங்களில் சேர்த்துவிட்டால் போதுமா?// என்று விடத்தை கக்கிவிட்டு பிறகு

//ஜாதி வித்தியாசம் இல்லாமல் எல்லா ஜாதியிலும் அறிவில் சிறந்த மாணவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள். அவர்களுக்கு இத்தகைய கல்விக்கூடங்களில் சேர்வதற்கு ஒதுக்கீடு எதுவும் தேவையில்லை.// இப்படியும் எழுதியுள்ளார்

// இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்கள் பாதிப்பேர் எப்படியோ சமாளிக்கிறார்கள் என்று வைத்துகொண்டாலும், 25% தேர்ச்சி பெறக்கூட முடியாதவர்களாக போனால் //
என மொத்தமாக கேவலப்படுத்துகின்றார்

அந்த விடம் கக்கிய பதிவின் சில பின்னூட்டங்கள்

//இட ஒதுக்கீடு என்ற பெயரில் சீட் வாங்கிவிட்டு ஒரு சிலர் அடித்த கூத்துகளை பார்க்கும்பொழுது வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது. மொத்த ஸ்காலர்ஷிப் பணத்தையும்(பெற்றோர்கள் பணக்காரர்கள்)
வாங்கி மது,மாது என்று அமோகமாக வாழ்ந்தார்கள்.
//

இனி இட்லி வடையின் பதிவில்

//அவர்களின் சிறுசிறு தவறுகள் கூட ஒதுக்கீட்டைச் சொல்லி ஏளனப்படுத்தப் படுகின்றன. 'ரிசர்வேஷன்ல படிச்சுட்டு வந்து விஷயமும் தெரியாம நம்ப தாலியை அறுக்குறானுக!' என்று சொல்லியிருக்கிறோம், அலுவலகங்களில் கேட்டே வருகிறோம்.
//

//கிட்டத்தட்ட LKG, UKG யிலிருந்து ஆரம்பித்து 14 வருடங்கள் ஒரே கல்விநிறுவனத்தில் படித்தும், அத்தனை வருட இடைவெளியில்கூட சக மேல்சாதி(என்றழைக்கப்படுகின்ற) மாணவனுக்குச் சரியாக தன்னை வளர்த்துக்கொள்ள முடியாமல் +2 முடித்ததும் மேலே படிக்க இட ஒதுக்கீடு வேண்டுமானால் இவர்கள் எதை சாதிக்கப் போகிறார்கள்?
//

//49.5 இட ஒதுக்கீட்டை மத்திய அரசு இத்துடன் நிறுத்திவிட கூடாது - ரானுவம், பாராளுமன்றம், சட்டசபை, அமைச்சர்கள், இந்திய கிரிக்கேட் அணி ஏன் வலைப்பதிவில் கூட கொண்டு வர வேண்டும்
//
எத்தனை விடம் தோய்த்த கேலி

இனி சில பின்னூட்டங்கள்

//வலைப்பதிவு... ஹி.. ஹி... நாங்க திறமை காமிச்சாதான் கிடைக்கும்னு இருக்கச் சொல்ல தான் ஒதுக்கீடு கேப்போம். வலைப்பதிவு ஆத்தோட தண்ணி; நீயும் குடி, நானும் குடி, அள்ளிக் குடி மேட்டரு. . . அதுக்கெல்லாம் ஒன்னும் வேணாம் போ!

வேணும்னா, மேல்குடி இவ்ளோ சனம்தான் பதிவு வெக்கலாம்னு ஒரு லிமிடேசன் ரூல் வெக்கிலாம். அப்பவும் இந்த முகமூடிகளை எந்த கணக்குல சேர்க்க?..
//

//இப்படி எல்லாவற்றிற்கும் 'அவாளையே' குத்தம் சொல்லிக் கொண்டிராமல், கொஞ்சம் தன்நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, அநாவசிய ஆத்திரங்களைக் குறைத்தால், இட ஒதுக்கீடும் வேண்டாம்; ரத்த அழுத்தமும் வராது.

தவறாக எண்ண வேண்டாம்.
//
//
I challenge the concerned jokers to go ahead with 50% Reservation for not only students but also for teaching staff. Its better that Government builds one more IIT and IIM and call them RIIT and RIIM (R stands for you know what) and let others live in peace and maintain their standards. RIIT and RIIM may be put under AICTE for added glory. It will be wiser for the government to offer the best of education from primary education and make them face the world rather than give them feel of artificial security by reservation.

Naam Arjun Raknewala sab Yudh nahi jeeet saktein
aur IIT IIM koi Kurushetra bi nahi hein
Na is Arjun ke paas koi Krishn bhi hai
Paritranaya sadhunam vinasaya Sathuskratham
Dharma samsdha banarthaya sambavami yuge yuge
Tora Tora Tora
//

என்று தனியும் இந்த பிரச்சாரம் என்ற என் பின்னூட்ட பதிவில் வந்த சில பின்னூட்டங்கள்

At 9:18 PM, அப்பாவித்தமிழன் said…

//மிக்க நன்றி இதனால் இழப்பு அந்த நிறுவனத்திற்கு தான், திறமையில்லாமல் இட ஒதுக்கீட்டில் படித்தவர்கள் தான் இன்று உலகம் பூராவும் மென்பொருள் தகவல் தொழில்நுட்பத்துறையில் புகுந்து விளையாடுகின்றனர் என்பது அன்னாத்தைக்கு பிரியுமோ இல்லையோ//

ண்ணா, சூப்பர்ங்ணா. அப்புறம் யாரை ஏமாத்தறதுக்குங்க்ணா இன்னும் இட ஒதுக்கீடு? 'புகுந்து விளையாடறவங்க' ஏங்ணா சைட்லயே புகுந்து விளையாடணும்?

இன்னும் எந்தெந்த பதிவில் எந்தெந்த பின்னூட்டங்களில் எத்தனை விடங்கள் கக்கப்பட்டுள்ளதோ!

தயிர் சாத குடும்ப சூழல் என்று நான் அடித்த நக்கலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்.


தாழ்ந்த சாதி, கீழ் சாதி, Reservation IIT, தகுதிக்கு மீறிய கல்வி என்றெல்லாம் பேசுபவர்களிடமும் நக்கல், நையாண்டி செய்பவர்களிடமும் எத்தனை விவாதம் செய்தாலும் ஆகாது....

அவர்களுக்கான பதில் கீழ்கண்டவாறு தான் இருக்க வேண்டும் போல

மேல்சாதியினர் புத்திசாலித்தனத்தினால் பெறுகிறார்கள் என்றால் மற்றையவர்கள் அவர்களின் அரசியல் பலத்தினால் பெறுகின்றனர், மேல் சாதியினருக்கு புத்திசாலி தனம் பலமென்றால் மற்றவர்களுக்கு அரசியல் பலம், இட ஒதுக்கீட்டு சட்டத்தை அரசியல் ரீதியாக ஒழிக்க முடிந்தால் ஒழித்து கொள்ளுங்கள்....

மேலே நான் சொன்னது தாழ்ந்த சாதி, கீழ் சாதி, Reservation IIT, தகுதிக்கு மீறிய கல்வி என்றெல்லாம் பேசுபவர்களுக்கும் நக்கல், நையாண்டி செய்பவர்களுக்கும் மட்டுமே... மற்றபடி இதை வைத்து திரித்தல், சொறிதல் செய்பவர்கள் தாராளமாக செய்து கொள்ளலாம்

சாதி ரீதியான இட ஒதுக்கீடு தேவையா?

நேரடியாக கேள்வியினுள் நுழையும் முன் நாம் சில விடயங்களை பார்ப்போம் நமது சமூகத்தில் சாதி எப்படி பேணப்பட்டு வருகின்றது? அதன் முக்கியத்துவம் என்ன?

தற்போது சாதிப்பற்றி சொல்லப்பட்டு வரும் கருத்தாக்கம் (தியரி)என்னவெனில்நீண்ட நெடும் காலங்களுக்கு முன் செய்த தொழிலினால் மக்களை பிரித்துஅவர்களுடைய சந்ததியினர் தொடர்ந்து அந்த தொழிலை செய்து வருகின்றனர்,இது தொழிலினால் சாதி வந்து பின் பிறப்பினால் என்ற கட்டத்தை அடைந்தது

மற்றொரு கருத்தாக்கம் (தியரி), கடவுளின் உடலின் பல பாகங்களிலிருந்து பிறந்ததாகவும் அதன் மூலம் அவர்கள் செய்யும் தொழில்கள் பிரிக்கப்பட்டதாகவும்,இது பிறப்பினால் சாதி வந்து சாதியினால் தொழில்கள் பிரிக்கப்பட்டு தற்போது தொழிலுக்கும் சாதிக்கும் தொடர்பில்லலயெனினும் பிறப்பினால் சாதி என்ற கட்டத்தை அடைந்தது

எந்த தியரி ஆனாலும் தற்போது பிறப்பினால் தான் சாதி என்ற கட்டத்தை நம் சமுதாயம் எட்டிவிட்டது.

இங்கே இட ஒதுக்கீடு என்பது மேட்டை வெட்டி பள்ளத்தில் போட்டு சமன் படுத்துவது,சின்ன கோட்டையும் பெரிய கோட்டையும் சமமாக்குகின்றோம் என்றுபெரிய கோட்டை அழிக்கின்றனர் என்கிற உதாரணங்களுக்குள் அடங்காது

அது மட்டுமின்றி பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் சாதிய ஏற்றத்தாழ்வுகளும்வெவ்வேறு தளங்களில் உள்ள பிரச்சினைகள் இரண்டையும் ஒரே தளத்திலுள்ள பிரச்சினைகளாக காணக்கூடாது

இன்றைய(எந்த) காலக்கட்டத்தில் பொருளாதார உயர்வு என்பது சாதிய விழுமங்களில்மாற்றம் ஏற்படுத்துவதில்லை,

பிறக்கும் போது எல்லோரும் சமமான அறிவுடன் தான் தான் பிறக்கின்றனர், வளர்கின்ற காலத்தில் சமூக சூழ்நிலை, குடும்ப சூழ்நிலை, சுற்றுச்சூழல் , இன்ன பிறவும் சேர்ந்துதான் மாற்றம் ஏற்படுத்துகின்றன.

பத்து கிலோமீட்டர் தூரம் மிதிவண்டியிலே, நடந்தோ பள்ளிக்கூடம் வந்து பின் வீடு சென்று வயலில் சிறு வேலைகள் பார்த்தோ அல்லது வீட்டில் வேலைகள் பார்த்துவிட்டுதினம் அரை மணி நேரம் கூட வீட்டில் படிக்கமுடியாமல் இருக்கும் ஒரு மாணவன் 70 விழுக்காடு வாங்குவதற்கும் நகரத்திலே தரமான பள்ளியில் படித்து படிப்பை மட்டுமேவேலையாக கொண்டு படிக்கும் மாணவன் 90விழுக்காடு எடுப்பதாலும் 70 விழுக்காடு எடுத்த மாணவன் 90 விழுக்காடு எடுக்கும் மாணவனைவிட அறிவில் குறைந்தவன் என்று சொல்வது நியாயமாக இருக்குமா?

படிப்பதும் அதிக மதிப்பெண்கள் வாங்குவதும் வெறுமனே ஒரு மாணவனின் அறிவுத்திறனை கொண்டு மட்டும் வருவதில்லை, அவன் இருக்கும் சூழலும் இதில் பெறும் பங்காற்றுகின்றது. அதிக மதிப்பெண்கள் பெறுவதில் பொருளாதார வசதி இரண்டாமிடத்தில் தானிருக்கும் மிக முக்கியமான இடம் குடும்ப சூழல், மற்றும் சமூக சூழல் தான்.

தந்தை தான் செய்யும் வேலைக்காக குடித்துவிட்டு பின் அதே பழக்கமாகி வீட்டில் சண்டை சச்சரவுகளோடு நிம்மதியின்றி படிக்கும் மாணவன், சில மாணவர்கள் வீட்டில் பிரச்சினையில்லையென்றாலும் அவர்களை சுற்றியுள்ள இடங்களில் நடக்கும் பிரச்சினைகள்,இதெல்லாவற்றையும் விட காலம் காலமாக படிப்பு அவனுக்கு ஒதுக்கப்பட்டதல்ல,அது மற்ற சிலருக்காக, என்ற மனப்பாங்கிலிருக்கும் ஒரு சமூகத்திலிருந்து படித்து வருபவனின் மதிப்பெண்களும், காலம் காலமாக கல்வி, கேள்விகள் எமக்கு மட்டுமே சொந்தமென்று இருக்கும் ஒரு சமூகத்திலிருந்து படித்து வரும் மாணவன் எடுக்கும் மதிப்பெண்களும் ஒரே அளவீட்டில் வைத்து பார்க்க வேண்டுமென்பது எந்த விதத்தில் நியாயமென எனக்குப்புரியவில்லை.

ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து முதல் தலைமுறை படிக்க வரும்போது எந்த ஒரு வழிகாட்டியும், வழிகாட்டுதலும் அவனுக்கு கிடைப்பதில்லை அவன் எத்தனை பொருளாதார வசதியுடனிருந்தாலும், அதே சமயம் காலம் காலமாக படித்த சமுதாயத்திலிருந்து வரும் ஒருவனுக்கு அவனுடைய மொத்த சமுதாயமும் வழிகாட்டியாக உள்ளது, இவர்கள் இருவரின் அறிவுத்திறனையும் அவர்கள் வாங்கிய மதிபெண்களை ஒரே தட்டில் வைத்து எடை போடுவது சரியென நான் நினைக்கவில்லை.

இவர்களை யார் அப்படியிருக்க சொன்னது என அடுத்த கேள்வி விழும்,

யார் அப்படி அவர்களை காலம் காலமாக இருக்க வைத்தது?

இந்த சமூகம் தானே?

அதற்கான பரிகாரத்தையும் இந்த சமூகம் தான் செய்ய வேண்டும்.

ஓஷோ அவர்களின் கருத்தின்படி எல்லா குழந்தைகளையும் பிறந்த உடன் பொது காப்பகத்தில் விடவேண்டும், அங்கே யாருடைய குழந்தைகள் என பெற்றோருக்கும்யார் பெற்றோர்கள் என குழந்தைக்கும் தெரியாமல் வளர்க்கவேண்டும், இந்த நிலையில்எந்த சாதி, எந்த மதத்தில் பிறந்த குழந்தையானாலும் ஒரே மாதிரியான சூழ்நிலை, ஒரே மாதிரியான கல்வி மற்றும் வழிகாட்டுதல் கிடைக்கும், இந்த நிலையில் இடஒதுக்கீடு என்பது தேவையில்லை, ஆனால் நமது சமூகம் இப்படி ஒரு சமமான நிலையை எல்லா குழந்தைகளுக்கும் வழங்குகின்றதா?

எனது கல்லூரியில் தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வந்தவர்களில் பலர், மற்ற இட ஒதுக்கீட்டிலும் O.C. பிரிவில் வந்தவர்களையும் விட அதிக மதிப்பெண்கள் பெற்றனர், ஒரே மாதிரியான கல்வி, ஒரே மாதிரியான விடுதி சூழல் ஒரே மாதிரியான சுற்றுச்சூழல் தான் இவர்களை இப்படி மதிப்பெண்கள் எடுக்க வைத்தது, இதே மாணவனுக்கு இட ஒதுக்கீடு முறை கூடாது என கூறி அவனுக்கு பொறியியல் இடம் கொடுக்காமல் இருந்திருந்தால் அது இந்த சமூகம் அவனுக்கு இழைத்த அநீதியல்லவா??

பளுதூக்கும் போட்டிகளில் எல்லா வீரர்களையும் ஒரே பிரிவில் மோத அனுமதிப்பதில்லை,45 கிலோ, 65 கிலோ, 75 கிலோ என பலபிரிவுகள் உள்ளன, ஆனால் எந்த பிரிவினில் முதலாவதாக வந்தாலும் தங்கப்பதக்கம் தான் தரப்படுகின்றன

இதில் 75கிலோ பிரிவில் நான்காவதாக வருபவர், 45 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வாங்கியவரைவிட நான் அதிக பளு தூக்கியுள்ளேன்ஆனால் அவருக்கு தங்கப்பதக்கம் கொடுத்துள்ளீர்களே என கேட்டால் நீங்கள் எப்படி நகைப்பீர்கள்? அது அவரது அறியாமையல்லவா?இதே வரைமுறைதான் சாதிரீதியிலான இட ஒதுக்கீட்டிற்கும் பொருந்தும்.

இதற்காக தற்போதுள்ள இட ஒதுக்கீடு முறையில் ஓட்டை இல்லை என சொல்ல வரவில்லை, ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து படித்து வெளிவரும் தலைமுறை நன்றாக படிக்கக்கூடிய ஒரு சூழலை தங்கள் வாரிசுகளுக்கு தந்துவிட்டு மீண்டும் அவர்களின் வாரிசுகள் இடஒதுக்கீட்டை பயன்படுத்தும் நிலை உள்ளது, இந்த ஓட்டையை மட்டும் அடைத்துவிட்டு இட ஒதுக்கீட்டை தொடரலாம்.... எது வரை தொடரலாம்?, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பிறப்பினால் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், பிறப்பினால் ஏற்படுகின்ற சமூக உரிமை மறுப்புகள் அழியும் வரை, பொருளாதார அளவில் மட்டுமின்றி சமூக அளவிலும் எல்லோரும் சமம் என்ற நிலை வரும் வரை எல்லாருக்கும் சம உரிமை கிடைக்கும் வரை இது தொடரலாம்.