"மைனா" திரைப்படம் கதை - வலைப்பதிவிலிருந்து திருடப்பட்டது

வலைப்பதிவுலகிலிருந்து ஒரு கதை திருடப்பட்டு "மைனா" என்ற பெயரில் வெளியாகி அந்த படம் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் புகழையும் கோடிகளையும் அள்ளிக்கொடுத்துள்ளது...



"மைனா" படம் பார்த்த பலரும் சொன்னது காவல்துறையினர் படும் சிரமங்களை புது கோணத்தில் சொல்லியிருப்பதாகவும் படத்தில் தீபாவளி அன்று தப்பித்து ஓடிப்போன கைதியை பிடித்து வர அவர்கள் படும் சிரமத்தையும் சொல்வதாகவுமான அணுகுமுறைய பாராட்டியிருப்பார்கள், காட்சி களன், காட்சி நகர்வுகள், படத்தின் முக்கிய இழையே வலைப்பதிவில் எழுதப்பட்ட பதிவிலிருந்து திருடப்பட்டுள்ளது...

"அரசு ஊழியர்கள் - பகுதி - 3." அப்படிபோடு கற்பகம் அக்கா என்றழைக்கும் கற்பகம் அவர்கள் 2005ம் ஆண்டில் எழுதிய சிறுகதை போலான இந்த வலைப்பதிவு உள்ளடக்கமே காட்சிகளாகவும் படமாகவும் மைனாவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது... கதையின் ஒன் லைனர் ஒத்து போவது போல அல்ல இது... மைனா படத்தின் கதையையும் இந்த கதையும் படித்து பார்த்து சொல்லுங்கள்...

இந்த கதை திருட்டை அம்பலப்படுத்தி மின் மடல் அனுப்பியவருக்கு மிகவும் நன்றி, நிறைய விவரித்து எழுத வேண்டும் என நினைத்தேன், ஆற்றாமையாலும் உடனே வெளிப்படுத்த வேண்டுமென்றும் சுருக்கமாக சொல்லியுள்ளேன்...


கீழே பதிவிலிருந்து சில பத்திகள் மட்டும் முழு பதிவையும் படிக்க "அரசு ஊழியர்கள் - பகுதி - 3." சுட்டியை அழுத்துங்கள்...

**** அந்தநாள்., விடிந்தால் தீபாவளி*** ***அன்று இரவும் ஏதோ வாக்குவாதம் நடந்து கொண்டிருக்க., வெளியில் காவலர் விசில் ஊதும் சத்தம் கேட்டது., நான் முதலில்., சின்னப் பசங்க விளையாடிட்டு இருக்காங்கன்னு நினைச்சுட்டு இருக்கும் போது ஒரு எண்ணம் விடிஞ்சா தீபாவளி., பட்டாச, கிட்டாச வெடிக்காம., இது என்ன?ன்னு நினைச்சுக்கிட்டே வெளிய வந்து பார்த்தா உண்மையிலேயே போலீஸ் பட்டாளம்தான். எங்க ஏரியா மிக அமைதியான ஏரியா. எதுக்கு வந்திருக்காங்கன்னு பார்த்திட்டு இருக்கும் போதே ரெண்டு பேர் எங்க வீட்ட நேக்கி வந்தாங்க. எங்க பக்கத்து வீட்டுல., ஒரு குடும்பம் வாடகைக்கு இருந்தார்கள். நம்ம வீட்டுலயே சத்திரம் மாதிரி ஆளுக இருக்கறதுனால பக்கத்து வீட்டயெல்லாம் கவனிச்சதே இல்ல. ஆனா., அந்த வீட்டுல சமீபத்தில் ஒரு திருமணம் நடந்தது தெரியும். வந்த காவலர்கள் கேட்டார்கள் "பாப்பா... உங்க வீட்டுல ஏதாவது திருடு போயிருக்கா?"., "இல்லங்க., என்ன ஆச்சு?"., விதயம் இதுதான் அந்த வீட்டில் மணமாகி வந்த மாப்பிள்ளை., எங்கையாவது ரோட்டுல அனாமத்தா கிடக்கிற, அல்லது யார் வீட்டுலயாவது பயன்படுத்தாம இராத்திரில நிக்கிற ஹீரோ ஹோண்டா., யமாஹா போன்ற வாகனங்களை பத்திரமா அவர் வீட்டுல கொண்டு வந்து வச்சுக்குவாராம். இதுல ஒரு ஆச்சரியம் என்னன்னா., எங்க வீட்டுக்கும் அவங்க வீட்டுக்கும் இடையில் இருக்கும் சந்தில்தான் என் தம்பி எப்போதும் அவனுடைய யமஹாவை வைத்திருப்பான். அவரைப் பிடிக்க வந்த பட்டாளம் அவருடைய மனைவியின் குடும்பத்தை கேள்வியால் துளைத்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் புது மணப்பெண் அழுத அழுகை மனதை என்னவோ செய்தது. ஆனால் விதயம் தெரிந்து மாப்பிள்ளை எஸ்கேப். அவரைப் பிடிக்க வந்த காவலர்கள்., அந்தக் காவலர் கூட்டத்திலேயே ஒல்லியாக, நிற்க சத்தில்லாத நிலையில் இருந்த இரு கவலர்களை பார்த்து "வந்தா விட்றாதிங்கய்யா!" என்று கூறிவிட்டு கலைந்து சென்றார்கள்.
*
அந்த இரு காவலர்களும் இரவு 7.30 மணியிலிருந்து 10 மணி வரை சாலையிலேயே நின்று கொண்டிருந்தார்கள். வானம் வேறு தூறிக்கொண்டிருந்தது. எங்கோ சென்று விட்டு வந்த என் அப்பாவிடம் எல்லாவற்றையும் விளக்கினோம்., அவர் இரண்டு நாற்காலி மற்றும் டீ அவர்களுக்கு தரச் சொன்னார். நள்ளிரவு 1.30 மணிவரை அவர்கள் இருந்ததைப் பார்த்தோம். பின்பு படுக்கச் சென்று விட்டோம். காலை நாற்காலிகள் எங்கள் வீட்டின் முன் இருந்தது எப்போது சென்றார்கள் என்பது தெரியவில்லை. அவர்களுடைய அந்தத் தீபாவளி எப்படி இருந்திருக்கும்? காவலர்களுக்கு குடும்பம்., குழைந்தைகள் இருக்குமல்லவா., அவர்கள் மனநிலை எப்படியிருந்திருக்கும்?.
*
ஊடகங்களில் அதிகம் தாக்கப்படுபவர்கள்., கேலிக்குள்ளாக்கப் படுபவர்கள் காவலர்களே., ஒரு அரசியல்வாதி ரோட்டில் பவனி வர 2, 3 மணிநேரம் இவர்கள் வெயிலில் காயவும், மழையில் நனையவும் வேண்டியிருக்கிறது. அரசியல் கொலைகளில் பலியான முகம் தெரியாத காவலர்கள் எத்தனை பேர்?., அரசியல்வாதிகளின் பாதுகாப்பு என்ற பெயரில் இவர்கள் சந்திக்கும் சிக்கல்கள்..., எல்லாவற்றுக்கும் மேலாக குற்றவளிக்களுக்கும் பாதுகாப்பு பணிபுரிய வேண்டிய நிலை. ********

இதை காப்பியடித்தது போல் அப்படியே கிளைமாக்சை மட்டும் மாற்றி (அக்கியூஸ்ட் புதுசா கல்யாணம் ஆனவர் மைனால போலிஸ்காரனுக்கு தலை தீபாவளி). இப்பதிவுடன், படத்தின் முற்பாதிக்கு சமிபத்தில் வெளியான 'வெளுத்துக்கட்டு' படத்தின் சில காட்சிகளையும் வைத்து எடுத்ததுபோல் உள்ளது "மைனா" படம்.

முதற்பத்தியில் (முழு பதிவில்) சொல்லியிருப்பது கூட படத்தில் போலீஸ்காரன் பொண்டாட்டி போனில் சொல்வதாக சேர்த்துவிட்டு, அந்த கேரட்டர வில்லியாக்கிருக்காய்ங்க....

---------------------
இப்போ சொல்லுங்கய்யா காப்பி பேஸ்ட் என்றும் எதையும் எழுத தெரியாதவர்கள் என்றெல்லாம் தட்ஸ்டமில் ஆரம்பித்து பல ஊடகங்களிலும் வலைப்பதிவர்கள் பற்றி தவறாக எழுதும் மயிராண்டிகளா வலைப்பதிவர்களின் கதைகளையும் பிரபலமான வசனங்களையும் திருடி படங்களில் பயன்படுத்தி புகழையும் கோடிகளையும் அள்ளும் அளவிற்க்கு உள்ளது...

இயக்குனர் மிஸ்டர் பிரபு சாலமன் இது உங்களுக்கே நியாயமா?

வ.கெளதமன் இயக்கத்தில் சீமான் நடிப்பில் இன்று வெளியாகும் மகிழ்ச்சி திரைப்படம்

இயக்குனர் வ.கௌதமனனின் மகிழ்ச்சி திரைப்படம் இன்று மிகுந்த போராட்டங்களுக்கிடையில் வெளியாகிறது...

அட என்னய்யா போராட்டம் அப்படிங்கறீங்களா, புரொடியூசர் பிரச்சினையா? படம் எடுத்து முடியலையா? டப்பிங் பேசாம ஹீரோயின் ஊருக்கு போயிட்டாங்களா என்றால் அதெல்லாம் ஒன்னுமில்லையாம்.... அட தமிழ்நாட்டுல கருணாநிதி குடும்ப பேனர்ல வெளியாகுற படம் தவிர மற்ற எல்லா படங்களுக்கும் தியேட்டர் கிடைத்து வெளியாவதே பெரிய போராட்டம் தானுங்களே, படம் எப்போதோ தயாராகியும் தீபாவளிக்கு வெளியிட தியேட்டர் கிடைக்காமல் கருணாநிதி குடும்பத்தின் தீபாவளி தியேட்டர் ஆக்கிரமிப்பிற்க்கு பின் தற்போது தான் வெளியாகிறது...



எழுத்தாளர் நீல.பத்மநாபன் 1968 எழுதிய தலைமுறைகள் நாவலையே இயக்குனர் வ.கெளதமன் படமாக எடுத்துள்ளார்... இது மட்டுமின்றி படத்தில் செட்டியார் இனத்தை சேர்ந்த பெண்ணை தலித் ஆண் திருமணம் செய்வதாக வருகின்றதாம், அதனால் நம் இனத்துக்கு இழுக்கு என்று சில செட்டியார் இனத்துக்காரர்கள் இந்த படத்திற்க்கு திரையரங்கு தரக்கூடாது என சிலர் வேலை பார்க்க அதே செட்டியார் இனத்துக்கார திரையரங்க உரிமையாளர்களே இந்த மாதிரி சில்லுண்டி வேலை பார்த்தவர்களை போய்யா வேலைய பார்த்துக்கொண்டு என்று துரத்திவிட்டார்களாம்...

செந்தமிழன் சீமானும் இந்த படத்தில் நடித்திருக்கிறார், நீண்ட நாட்களாக திரைப்படங்களுக்கு பாடல் எழுதாமல் இருந்த பாவலர் அறிவுமதி அவர்கள் பாடல் எழுதியுள்ளார்...

இவர் ஏற்கனவே கனவே கலையாதே என்ற படத்தையும் இயக்கியுள்ளார்... சந்தனக்காடு தொலைக்காட்சி தொடர் இவர் இயக்கிய ஒரு புகழ்பெற்ற தொடர்...

பிரிவியூவில் பார்த்த நண்பர்களுக்கு படம் பிடித்திருக்கிறதாம், எதார்த்தமான திரைப்படமாக சிறப்பாக வந்துள்ளது என்கிறார்கள்...

இந்த படம் வெற்றிபெற இயக்குனர் கெளதமனை வாழ்த்துகிறேன்...



அனுஷ்கா கொடுத்தாலும் வாங்க கூடாதது எது?


அனுஷ்கா கொடுத்தாலும் வாங்க கூடாதது எது?

1. முத்தம்
2. கிஸ்
3. பர்ஸ் / பை

இதற்கான விடையை நாம் கடைசியில் பார்க்கலாம்... ஹலோ எக்சூச்மி பதிவை ஸ்க்ரோளை பிடித்து இழுத்து கீழே போவதற்கு முன் கொஞ்சம் பதிவையும் படியுங்க...






சிங்கப்பூர் பூவுலகின் சொர்க்கம், அழகின் உச்சம், மனிதனின் சாதனை நகரம், உலகின் சுற்றுலா ரசிகர்களின் முக்கிய இடம் இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம், ஃபைன் சிட்டி(fine city) என்று இரட்டை அர்த்தத்தில் சொல்லப்படும்... ஒன்று அழகான சிட்டி என்றும் இன்னொன்று அபராதம் விதிக்கப்படும் சிட்டி என்றும் இரட்டை பொருளில் சொல்லப்படும்...

உலகில் குடிசைப்பகுதியில்லாத(slum) ஒரே நாடு, சிங்கப்பூரின் பெரும்பாலான குடிமகன்களுக்கு சொந்தவீடு, எங்கெங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பதையே பார்த்துள்ள நமக்கு ஊழல் என்பது கிட்டத்தட்ட இல்லாத(nil) நாடாகவும் குற்றச்செயல்கள் என்பதும் மிகக்குறைந்த அளவிலேயே இருக்கும் நாடு சிங்கப்பூர்...

இரவு 12 மணிக்கு உடல்முழுக்க நகையணிந்து தனியே ஒரு பெண் செல்லும் நாள் என்னும் காந்தி கனவை தினம் தினம் நனவாக்கி கொண்டிருக்கும் நாடு...

என் மொழியை மட்டுமே படிக்கவேண்டும் என் மதம் மட்டுமே இருக்க வேண்டும் என் இனம் மட்டுமே என்று இனவெறி பிடித்தலையும் கொலைகார நாடுகளை பார்த்துக்கொண்டிருக்கும் உலகில் அவரவர் தாய் மொழியை படியுங்கள், அவரவர் தாய்மொழியை மதியுங்கள், அவரவர் மதங்கள் அவரவர்களுக்கு என்று பல்தேசிய மக்களும் ஒன்றிணைந்து வாழும் சிங்கப்பூர் உலகின் அதிசயங்களில் ஒன்று...

சிங்கப்பூர் சிறிய நாடு என்பது பெரும்பாலும் அறிந்ததே, சிறியது என்றால் தமிழ்நாடு அளவு இருக்குமா? இலங்கை அளவு இருக்குமா என்றுதான் முதலில் நினைத்தேன், அதனினு சிறிது கிட்டத்தட்ட பாதி பெங்களூர், கால்வாசி சென்னை அவ்வளவுதான்.


சிங்கப்பூரின் கடைக்குட்டியான சிங்கப்பூர் ஃப்ளையர் எனப்படும் உலகின் மிக உயரமான Observation wheel என்பதிலிருந்து சிங்கப்பூரின் பழமையை காண்பிக்கும் புலாவுபின் தீவு வரை எக்கச்சக்கமான சுற்றுலா தளங்கள்...

சென்னை 2 சிங்கப்பூர் செல்ல நிறைய வானூர்திகள் உள்ளன, விசா நடைமுறைகளும் ஓரளவுக்கு எளிதானவையே... சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணை தூதரகத்திலேயே சுற்றுலா விசா பெற்றுக்கொள்ளலாம், டூரிஸ்ட் விசா எனப்படும் விசிட் விசா, இது தொடர்பான நடைமுறை விதிகள் இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

டூரிஸ்ட் விசா பெற மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது
1. உங்களுடைய கடவுச்சீட்டு(Passport) குறைந்த ஆறுமாதத்திற்காவது(at least 6 months validity) இருக்க வேண்டும்

2.சிங்கப்பூர் சென்று மீண்டும் திரும்பி வருவதற்கான வானூர்தி சீட்டு இருக்க வேண்டும்(A confirmed onward/return ticket),

3. உள்ளூர்(சிங்கப்பூர்) அழைப்பாளர்(sponsor) இல்லாத நிலையில் சில நூறு அமெரிக்க / சிங்கப்பூர் டாலர்கள் அல்லது கடன் அட்டை(credit card) காண்பிக்கப்பட வேண்டும்.

இவைகளுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் சிங்கப்பூர் விசாவுக்கான படம்(அறிவுறுத்தப்பட்ட அளவுகளில்)கொடுத்தால் மூன்றிலிருந்து நான்கு வேலை நாட்களுக்குள் விசா கிடைத்துவிடும்.

விசா வாங்கியாச்சா? பாஸ்போர்ட் தயாரா? அப்புறமென்ன கிளம்புங்க சென்னை 2 சிங்கப்பூர்...

நண்பர்கள் வெளிநாடு செல்லும் பொது ஸ்வெட்டர் எல்லாம் தாங்காது Thermal wear அப்போதே 5000 ரூபாய் கொடுத்து வாங்கியதை பார்த்து ஆனைக்கு அர்ரம்னா பூனைக்கு புர்ரம் அப்படிங்கற மாதிரி மேலாளரிடம் போய் முதன்முதலில் சிங்கப்பூர் அலுவலகவேலையாக வரும் முன் எங்கள் அலுவலக மேலாளரிடம் போய் ஸ்வெட்டர், Thermal wear லாம் எத்தனை வாங்க வேண்டுமென்றேன், ஏற இறங்க பார்த்தார்.

சிங்கப்பூர் சென்னை கிளைமேட் என்றார் நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன், அடடே நூடுல்ஸ்ன்னவுடனே ஞாபகம் வருது, சிங்கப்பூர்ல விதம் விதமா நூடுல்ஸ் சாப்பிடலாம், ம் நம்ம மேகி நூடுல்ஸ் சாப்பிட்டு இங்கே வந்து அதே மாதிரி நூடுல்ஸ் என்று நினைத்தால் அவ்ளோதான்...


நூடுல்ஸ் பத்தி பேசிக்கிட்டே பாருங்க மீனம்பாக்கம் கெளம்ப லேட்டாயிரும், வானூர்தி கிளம்புவதற்கு மூன்று மணி நேரம் முன்னாலேயே வானூர்தி நிலையத்தில் இருப்பது நல்லது. மீனம்பாக்கத்தில் வானூர்தி நிலையத்திலேயே உணவுகிடைக்கும், நிலையத்தின் உள்ளே அடையாறு ஆனந்தபவன் இனிப்பகம் இருக்கு, புத்தகக்கடை இருக்கு ஆனால் எல்லாம் கொள்ளை விலை.

ஹலோ ஹலோ என்ன பாக்கெட்ல, சிகரெட் பாக்கெட்டா?, பேக்கிங்கில எதுவும் சிகரெட் பாக்கெட்டுங்க இருக்கா? ப்ளீஸ் தயவு செய்து எடுத்து வெளியில போட்டுறுங்க, சென்னை 2 சிங்கப்பூர் வானூர்தியில் புகைப்பிடிக்க அனுமதியில்லை, மேலும் சிங்கப்பூரில் வெளியூரிலிருந்து எடுத்து வரும் சிகரெட்டுகளுக்கு அனுமதியில்லை, அதற்கு முறையாக சுங்கவரி கட்டி தான் பயன்படுத்த வேண்டும், அப்படியே ஏமாற்றி கொண்டு வந்தாலும் சிங்கப்பூரின் உள்ளே விற்பனையாகும் அத்தனை சிகரெட்டுகளிலும் ஒவ்வொரு சிகரெட்டிலும் SDPC என்று அச்சாகியிருக்கும், அப்படியில்லாத சிகரெட்டுகளை புகைப்பதும் விற்பனை செய்வதும் வைத்திருப்பதும் குற்றம்.

உங்கள் பைகளை சோதனை முடித்து போட்டுவிட்டு கையில் வைத்திருக்க விரும்பும் பையை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் பயணச்சீட்டை தந்து போர்டிங் பாஸ் எடுத்துக்கொள்ளுங்கள், அங்கே ஒரு விண்ணப்ப படிவம் தருவார்கள் அதை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்..

தெரியாத யாராவது எதையாவது கொடுத்து சிங்கப்பூரில் இதை கொடுத்துடுங்க உங்களுக்கு காசு தரேன், அல்லது ரொம்ப பாவமாக உங்களுக்கு பேக்கேஜ் வெயிட் கம்மியா தானே இருக்கு என் பேக்கேஜை உங்களுடையதில் போட்டுக்கொள்ளுங்க பைசா தரேன் என்றால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் மறுத்துவிடுங்கள்...

அனுஷ்கா மாதிரி ஒரு அழகான பெண் மும்தாஜ் குரலில் "ஹல்லோ ப்ளீஸ் இந்த பையை கொஞ்சம் தூக்கிட்டு வந்து ஹெல்ப் பண்றீங்களா" என்றால், கபால்னு பாய்ந்து போய் பையை வாங்காதிங்க, நயன் ஸ்வீட்டி செல்லம் ஒங்களை வேணா தூக்கிட்டு வரேன், ஒங்க பையை எல்லாம் தூக்கிட்டு வரமுடியாது என்று சொல்லிடுங்க, இமிகிரேசன் முடித்துவிட்டு வாருங்கள்...

சிங்கப்பூரில் போதைபொருள் கடத்தலுக்கு மரணதண்டனை, வாய்தா, அப்புறம் வாய்தாவுக்கு வாய்தா முன் ஜாமீன் பின் ஜாமீன் என்றெல்லாம் கிடையாது, போதைப்பொருள் கடத்தினால் விரைவாக கேசை 'முடித்து' விடுவார்கள்... எனவே மிகுந்த எச்சரிக்கை.

ஹலோ அங்கே என்ன பாக்குறிங்க "மெய்புல அறைகூவலர்"னு எழுதியிருப்பதா ஹா ஹா physically chllange என்பதைத்தான் தமிழ்'படுத்தி' இருக்கிறாங்க...

திரும்பவும் வரிசையில் நின்று இன்னொருமுறை சோதனை, முடிச்சி பின் உள்ளே போய் வானூர்திக்காக காத்திருக்கும் நேரத்தில் புத்தக கடையில் ஏதாவது புத்தகம் வாங்கலாமென்றால் அதற்கு யானை எதுவாவது இருந்தால் வாங்கலாம் அவ்வளவு விலை...

ஏறக்குறைய நாலு மணிநேரம் பயணம், சரக்கு சாப்பாடு எல்லாம் நாம போற வானூர்திக்கு ஏற்ற மாதிரி இருக்கும், நாலு பேர் வந்து நம்ம போற வண்டியில திடீர்னு காத்து பத்தலைன்னா ஆக்சிஜன் மூடியை மூஞ்சில வச்சிக்கிங்க, கடலுக்குள்ள விழபோச்சின்னா இப்புடி தான் லைஃப் ஜாக்கெட் போட்டுக்கனும் அதுல இப்படித்தான் காத்து ஊதனும்னு பயமுறுத்துவாங்க...

ஒரு வெள்ளை அட்டை கொடுப்பாங்க, அதை நிரப்பிடுங்க, முக்கியமா எங்க தங்கப்போறிங்க அப்படிங்கறதை நிரப்பிடுங்க, இந்த வெள்ளை அட்டை முக்கியம் திரும்ப சிங்கப்பூரை விட்டு கிளம்பும்போது இந்த வெள்ளை அட்டையை கேட்பாங்க, அப்புறம் வண்டி கிளம்பிய பிறகு கொஞ்ச நேரத்துல சாப்பிட்டு தூங்க ஆரம்பிச்சா கொஞ்ச நேரத்துலயே சிங்கப்பூர் வந்துரும்... கொஞ்சம் கண் அசருங்க..

ஓகே சிங்கப்பூர் வந்தாச்சி, நம்ம ரிட்டர்ன் டிக்கெட், வெள்ளை அட்டை, பாஸ்போர்ட் கொடுத்தால் அங்கிருக்கும் அலுவலர் நமக்கு எத்தனை நாள் தங்கலாமென அனுமதி தருவார், அதிகபட்சமாக 90 நாட்கள் மட்டுமே விசிட் பாஸ்ல் தங்க இயலும், அவர்கள் கொடுத்திருக்கும் நாட்களை நாம் Immigiration checkpoint Authority என்ற துறையில் நம் தங்கும் அனுமதி நாட்களை நீட்டிக்கொள்ளலாம், நம்ம பேக்கேஜை எடுத்துவிட்டு வாருங்கள் சிங்கப்பூர் உங்களை இனிதே வரவேற்கிறது, இன்னும் ஏழு நாள்... பல இடங்கள் சிங்கப்பூரில் சுற்றி பார்க்கலாம்... காத்திருங்கள்...

சிங்கப்பூர் வரனுமா உங்கள் எழுத்து திறமையை காண்பியுங்கள், சென்னை 2 சிங்கப்பூர் ஒரு வார சுற்றுலாவை அனுபவியுங்கள்.. சுற்றுலாவோடு தமிழும் தமிழர்களையும் தமிழறிஞர்களையும் சந்திக்கலாம்... போட்டி தொடர்பான விபரங்கள் இங்கே



பின்குறிப்பு:
எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கா? கண்டிப்பா படிச்சிருப்பிங்க போன வருசம் இதே கட்டுரையை நயன்தாரா கொடுத்தாலும் வாங்க கூடாதது எது? என்று போட்டிருந்தேன், இப்போ நயன்தாரா பழசாயிட்டாங்களா? அப்புறம் தாடிக்காரர் வேற கோச்சிக்கிட்டார்னா என்னா செய்றது அதான் அனுஷ்கா

மணற்கேணி போட்டி தலைப்பு - தமிழ் விக்கிப்பீடியா

சிங்கப்பூர் வலைப்பதிவர்களும் தமிழ்வெளி இணையதளமும் இரண்டாம் ஆண்டாக இணைந்து நடத்தி வரும் "மணற்கேணி 2010" கருத்தாய்வு போட்டியின் கடைசி நாள் டிசம்பர் 31க்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது...


இதில் தமிழ் மொழி / இலக்கியம் என்ற பிரிவில் "தமிழ் விக்கிப்பீடியா" என்ற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது, அன்றாடம் நாம் தகவல்கள் தேடும்போது தினமும் ஒருமுறையாவது இந்த தமிழ் விக்கிப்பீடியா தளத்தை பார்த்து செல்வோம், தமிழ் விக்கிப்பீடியா என்ற தலைப்பு எளிமையானதும் சிறப்பானதுமான ஒரு தலைப்பு.



தமிழ் விக்கிப்பீடியா தளம் தமிழின் மிக முக்கியமானதொரு தளம், அந்த தளம் தொடர்பாக அளிக்கப்படும் சிறப்பான கட்டுரைகள் வருங்காலங்களில் தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பான பங்களிப்பிற்க்கு உதவலாம்...

மணற்கேணி போட்டி தொடர்ச்சியாக இணைய எழுத்துக்களுக்கு ஒரு அங்கீகாரம் அளிக்கும் பொறுட்டும் இணைய எழுத்துக்களிலிருந்து சிறப்பானதை பெறும் பொருட்டும் சிங்கப்பூர் வலைப்பதிவர்களால் ஆர்வமுடன் நடத்தபெறுகின்றது... வலைப்பதிவர்களும் மற்றவர்களும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொள்வதே எங்களுக்கு மிகுந்த ஊக்கமளிப்பதுவும் தொடர்ச்சியாக இம்மாதிரியான நிகழ்வுகளை மேற்கொள்ள செய்யவும் ஊக்கமளிக்கும்...

மணற்கேணி 2010 போட்டியில் கலந்துகொள்ளுங்கள், வெல்லுங்கள் ஒரு வாரம் சிங்கப்பூர் பயணத்தை மேற்கொண்டு வாருங்கள் உங்களை சந்திக்க சிங்கை வலைப்பதிவர்கள் ஆவலுடன் உள்ளோம்...

மற்ற தலைப்புகளை இங்கே அழுத்தி காணுங்கள்