"ஐ" ஷ‌ங்கர் போட்ட காஸ்ட்லி மொக்கை

"ஐ" ஷ‌ங்கர் போட்ட காஸ்ட்லி மொக்கை

அன்னியன் பட ஸ்க்ரிப்ட்டை முதலில் ஷங்கரிடமிருந்து பிடுங்குங்கப்பா, 5 கதையே ஒரே மாதிரி எடுத்தா அது பாலா, ஒரே கதையை 5 மாதிரி எடுத்தா அது ஷங்கர்னு சொல்வாங்க, ஆனா இப்போது அதுவும் போயிரும் போல பொய் காதல், அப்புறம் அதுவே உண்மை காதல் ஆவது, வில்லன்களை பழிவாங்குதல், கூடவே உதவுப‌வர் வில்லனாவது என ஒரு மொக்கை திருப்பம் கூட இல்லாத பழைய ஸ்க்ரீன் ப்ளே.

ஏதோ அந்த காலத்து படத்துல அசோகன், நம்பியார் எல்லாம் சுற்றி நின்று ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ என்று எம்ஜிஆரை கீழே தள்ளி உன்னை நாங்க என்ன செய்தோம் தெரியுமா என்று சுற்றி நின்று சிரிப்பது போன்ற ஒரு சீன் அதுவும் மிக முக்கியமாக நாட் ஓப்பன் செய்யற சீனை போய் இவ்வளவு பழசா யோசித்திருக்கிறாரே ஷங்கர்.

 கருடபுராணம் போல ஒரு ஒரு வில்லனையும் புதுவிதமாக பழிவாங்குகிறாராம், பூனை மாதிரி மீசை வைத்துக்கொண்டு ஒரு பாட்டு வருமே அது வரும் போதெல்லாம் கொட்டாவியே விட்டேன், படம் முடிந்துவிட்டது என்று நினைக்கும் போது தான் இடைவேளையே, செகண்ட் ஆஃப் செம மொக்கை.

மியூசிக் ஏ.ஆர்.ஆர் ஆம், சொல்லவே யில்லை, மெர்சலாயிட்டேன் பாட்டை தவிர மற்றதெல்லாம் நிக்கவே யில்லை, ஷங்கரோட படம் பார்க்கும்போது அதுக்கு முந்தைய படமே இதைவிட பரவாயில்லை என்று தோன்றும் அது போல இந்த படத்தை பார்க்கும் போது எந்திரன் தரத்தில் பாதிக்கூட இல்லை.

ஒரே நெகட்டிவ்வா இருக்கே பாசிட்டிவா என்ன இருக்கு என்றால்

நிச்சயமாக முதல் பாதி போரடிக்காமல் நன்றாக தான் செல்கிறது, கேமரா சூப்பர், ஸ்டண்ட் ஓகே அதுவும் ஜிம் ஃபைட் சூப்பர், காமெடி சந்தானம் வழக்கம் போல சரவெடி, அட பவர் ஸ்டார் கூட கலக்கியிருக்கார், ஏமி ஜாக்சன் சூப்பரா இருக்கார், இவரு நல்லா நடிக்கிறாரா இல்லையான்னே சொல்ல முடியலை ஒரே கன்பியூசிங். சீனா லொக்கேசன்ஸ் சூப்பர், ஆனால் அதில் வரும் காட்சிகள் சுத்தமாக இண்ட்ரெஸ்ட்டிங்காக இல்லை.

விக்ரம் இந்த ஒருவருக்காக‌ இந்த படத்தை நாலு முறை கூட பார்க்கலாம், என்னா உழைப்பு, என்னா அப்பியரன்ஸ், மிஸ்டர் தமிழ்நாடு வடசென்னை பையனா, அல்ட்ரா மாடலா, அகோரமாக உருமாறிய கூனனா, அதற்கு முன்பு ஒல்லியாகி வரும் சீனா எல்லாவற்றிலும் கலக்கியிருக்கார்.

விக்ரம் மட்டும் இந்த படத்தில் இல்லையென்றால் 100கோடி செலவுக்கு 1 கோடி கூட வசூல் ஆகியிருக்காது. ஷங்கரை பாராட்ட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயத்துக்காக பாராட்டலாம், திருநங்கைகளுக்கு காதல் வரும், அந்த காதலுக்காக அவர்கள் ஏங்குகிறார்கள், காதலுக்காக பழிவாங்கவும் கிளம்புவார்கள் என்று திருநங்கைகளுக்கும் காதல் உணர்வு உண்டு என்று எடுத்து சொல்வதற்காக வேண்டுமானால் பாராட்டலாம்.

படம் பிரம்மாண்டமா இருக்கு, படம் ரிச்னெஸ் சான்சே இல்லை, எவ்வளவு செலவு செய்துள்ளார்கள் தெரியுமா என்றெல்லாம் சொல்வீர்களேயானால் யானை போட்ட விட்டை பெருசாத்தான் இருக்கும், பெருசா இருக்கு என்பதாலேயே அது விட்டை இல்லையென்றாகிவிடாது.