காமெடி+ செண்ட்டிமெண்ட் கோவி.கண்ணனின் அழுகாச்சி காவியம்(கடிதம்)

சில மாதங்களாக கடுமையான அலுவலக வேலை, என் குட்டி பையனோடு ஆட்டம், எனக்கு உருப்படி என தோன்றும் வேறு சில வேலைகள் அட எல்லாத்துக்கும் மேல பல நேரங்களில் யாருக்கு எழுதறோம்னே தெரியாமா ஜார்ஜ்புஷ்ஷூக்கு ஒரு கேள்வி, பில் கிளிண்டனுக்கு ஒரு சவால்ங்கற அளவுக்கு தி.நகர் முக்குட்டு சந்தில் நின்று கொண்டு ஜார்ஜ்புஷ்ஷீக்கு சவால் விடும் அளவிலேயே பல நேரங்களில் வலைப்பதிவு கட்டுரை எழுதுவதால் எல்லா எழவுக்கும் கருத்து சொல்ல நினைத்தாலும் அப்படியே எழுதாமல் போய்விடுவதுண்டு என்றாலும் பதிவுகளை கொஞ்சம் கொஞ்சம் தொடர்ந்து படித்து வரும் போது பல நேரங்களில் நமுட்டு சிரிப்போடு(எழுதுபவரின் ஹிப்போக்கிரசி எழவு தெரிந்து தொலைவதால்) படித்துவிட்டு கடந்து சென்றாலும் சில நேரம் எழுத தூண்டுகிறது.அப்படியாக எழுத தூண்டிய ஒரு விசயம் தான் விடாது கருப்பு குழுமத்திற்கு அண்ணன் கோவி.கண்ணன் எழுதிய காமெடி+ செண்ட்டிமெண்ட் கலந்த அழுகாச்சி காவியம்(கடிதம்).... ஹா ஹா அதில் கொஞ்சம் ஆக்ஷனும் காதலும் இருந்துவிட்டால் ஒரு மசாலா படம் பார்த்த திருப்தி இருந்திருக்கும்....

அண்ணன் கோவியாருக்கு வேண்டுமானால் அது எதிர்பாராத கிளைமாக்ஸ் ஆக இருக்கலாம், ஆனால் என்னை பொறுத்தவரை இப்படியாகத்தான் முடிவடையும் இந்த படம் என்று தெரிந்த கிளைமாக்ஸ் தான்....

அண்ணன் கோவி.கண்ணன் கடிதம் ஆரம்பமே செம காமெடி விடாது கருப்பு பதிவை படிச்சிதான் கோவி அண்ணன் பெரியாரை தெரிஞ்சிக்கிட்டாராம், அய்யோ அய்யோ தாங்கலை (சந்திரமுகி பிரபு ஸ்டைலில் உச்சரிக்கவும்)என்ன கொடுமை கோவியாரே.... நல்ல வேளை இதையெல்லாம் கேட்க பெரியார் உயிரோடு இல்லை.... பெரியாரையும் கருப்பு மூர்த்தியையும் வச்சி காமெடி கீமெடி பண்ணலையே.... கோவி அண்ணே கருப்பு பதிவுக்கு இன்னொரு சர்ட்டிபிகேட் கொடுத்து இருக்கார் அது படா காமெடி...அந்த சர்ட்டிபிகேட்டை கீழே தந்திருக்கேன்...

//இன்றைய தேதிகளில் பெரியாரின் கொள்கைகளை, சமுக நீதி, பகுத்தறி, மூடப்பழக்கங்களைச் சாடுபவர்களாகவும், எண்ணற்றோர் எழுதுகிறார்கள். நீங்கள் எழுதிய காலங்களில் அப்படி எழுதுவர்கள் மிகச் சிலரே இருந்தனர். ஆதிக்கச் சக்திகளுக்கு எதிராக பார்பனியம் குறித்து எழுதினால் தங்களை முத்திரை குத்திவிடுவார்கள் என்று பலர் இலைமறை காயாக தொட்டு எழுதியவற்றை, நீங்கள் உடைத்தே எழுதினீர்கள்//

கோவி அண்ணே விடாது கருப்பு பதிவில் என்னன்னே இருக்கு, ஒரு முறை நன்னா ரீவைண்ட் செய்து பாருங்கன்னே.... விடாது கருப்பு பதிவு பல பதிவர்களின் சாதியை சொல்லியும் அவர்கள் அம்மா குடும்பத்தை திட்டுவதற்குமே பயன்பட்டது, இணையத்தில் கிடைக்கும் விடுதலை, உண்மை, கீற்று தளங்கள், இது தான் உண்மை மற்றும் சில வலைப்பதிவுகளிலிருந்து திராவிட தொடர்பான கட்டுரைகளை காப்பி பேஸ்ட் முறையில் ஒட்டப்பட்டுள்ளது, இதற்கு பின்னாலும் ஒரு அரசியல் ஏற்கனவே என்னோட பதிவில் சொன்னது தான்

//முதன்முறையாக இரண்டாண்டுகளுக்கு முன் தமிழ்மணத்திலிருந்து மூர்த்தி நீக்கப்பட்ட போது ஒரு சிறு சலசலப்பும் இல்லாமல் கேட்க நாதியில்லாமல் வெளியேற்றப்பட்டான் மூர்த்தி, கடந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போலி மூர்த்தி பிரச்சினை நடந்து கொண்டிருந்த போதும் விடாது கருப்புவாக வலைப்பதிவுலகின் மூர்த்தியின் ரீ-எண்ட்ரி தனது சொந்த அரிப்பை தீர்த்துக்கொள்ள பெரியார் பெயரை சொல்லிக்கொண்டும் பெரியாரின் தொண்டனாகவும் நடந்தேறியது.

மிக மேலோட்டமான மொக்கையான விவாதகளங்கள் நடத்தி வரும் காட்சி ஊடகங்களாக இருந்தாலும் சரி, அச்சு ஊடகங்களாக இருந்தாலும் சரி வெகுசன ஊடகங்கள் திராவிட, சபால்ட்டர்ன் கதையாடல்களுக்கு எந்த விதமான இடமும் அளிக்காமல், தம் இனத்தின் நலனுக்கான, தம் சாதிக்கான கருத்தாக்கங்களை, வேறு யாரும் ஊடகத்துறையில் வந்தாலும் கட்டமைக்கப்பட்ட ஊடக ஒழுக்கத்தை மீற முடியாதவாறு பொதுப்புத்தியாக மக்கள் மனதில் புகுத்திக்கொண்டிருக்கும், இருக்கின்ற இந் நிலையில் இந்த இணைய வெளி ஏற்படுத்தியிருக்கும் சுதந்திரவெளியில் மிகப்பெரிய தொடர் விவாதங்கள், உரையாடல்கள், கதையாடல்கள் எல்லாம் நடந்து கொண்டிருந்த சூழலில் பார்ப்பனர்களை எதிர்க்கிறேன் பேர்வழி என்று ஆபாசமாக பேசி வெகுசன ஊடகங்கள் மறுத்திருக்கும் ஒரு விவாத களத்தை

இணையத்தில் சாத்தியமாக்கியிருக்கும் விவாத, உரையாடல் சூழலை நாசமாக்கும் மூர்த்தியின் போலி செயல்பாடுகள் விடாது கருப்பு பதிவில் நடந்தேறியதே....கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் இணைய ஊடகத்தில் பெரியார் சிந்தனைகள் மற்றும் வெகுசன ஊடகத்தில் பேசப்படாத விடயங்கள் பலராலும் பேசப்பட ஆரம்பித்த நேரத்தில் கருப்பு என்ற பெயரில் எல்லோரையும் ஆபாசமாக எழுத ஆரம்பித்த மூர்த்தியினால் பார்ப்பன சனாதான வாதிகள் பெரியார் பெயர் சொல்லிக்கொண்டு ஆபாச களஞ்சியமாக திகழ்ந்த மூர்த்தியின் பின்னால் ஒளிய ஆரம்பித்தார்கள், இணைய ஊடகத்தில் வெகுசன ஊடகத்தினால் மறுக்கப்பட்ட மாற்று சிந்தனைகள் பரவிக்கொண்டிருந்த நேரத்தில் ஆபாச தாக்குதல்கள் நடத்தி இவர்கள் இப்படித்தான் என்று பலரையும் நினைக்க வைத்து மாற்று கருத்தாளர்களின் மீது ஒரு சந்தேகத்தை விளைவித்தது மூர்த்தியின் ஆபாச கூத்துகள் என்றால் அது மிகையாகாதா..... இப்படிப்பட்ட கருப்பு மூர்த்திக்கு அண்ணன் கோவியார் கொடுத்த சர்ட்டிபிகேட் தான் அது....


அடுத்ததாக கோவி அண்ணன் கடிதத்தில் ஒரு ஃப்ளாஷ்பேக்
//முன்னாள் பதிவரும் (திரு மூர்த்தி) அதில் உறுப்பினராக இருக்கிறார் என்பதை முன்பே ஒரு பதிவர் சொன்னபோது தெரிந்து கொண்டேன். என்னுடன் விடாது கருப்பு பதிவு சார்பாக பேசியவர் பதிவர் அவர்தான் என்பது பின்பு தான் தெரிந்தது. நண்பர் ஒருவரின் அறிமுகத்தால் அவரை நான் சந்தித்திருக்கிறேன். அதன் பிறகு அவரும் என்னுடன் சாட்டில் உரையாடி இருக்கிறார்.
//

//போலி விவகாரத்தில் எனது கருத்தையும் வெளிப்படையாகவே தெரிவித்து இருந்தேன். //
கோவி அண்ணன் போலிவிவகாரத்தில் வெளிப்படையாக என்ன கருத்து சொல்லியிருந்தாருன்னு ஒரு சின்ன ப்ளாஷ் பேக் போயிடலாமா?

http://govikannan.blogspot.com/2007/09/blog-post.html

பாதிக்கப்பட்ட நண்பர்கள் சிலர், முத்தமிழ்மன்ற மூர்த்தி தான் போலி என்று சொல்கிறார்கள். தம்மீது குற்றம் இல்லையென்று மூர்த்தியோ, அவரை குற்றம் சொல்லும் எனது நண்பர்களோ ஆதாரங்களை எடுத்துக் கொண்டு காவல் துறை உதவியை நாடி இந்த பிரச்சனையை முடித்துக் கொள்ளவேண்டும் என்றே விரும்புகிறேன்.

இதில் கோவி அண்ணனுக்கு மூர்த்தி தான் போலி என்று சிலர் சொல்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.... அதற்கு அடுத்தபடியாக செல்லா பதிவில் மூர்த்தியின் 'நாத்த' தமிழ் ஆடியோ வெளியிடப்பட்டது...., நண்பர்களை ஆதாரங்களை எடுத்துக்கொண்டு காவல்துறை உதவியை நாட சொல்லியிருக்கும்(காவல்துறையை நாடுவதில் என்னென்ன நடைமுறை சிக்கல்கள் என கோவி அண்ணனே அந்த பதிவில் சொல்லியிருக்கிறார் என்பது வேறு விசயம்) இந்த ஆடியோ ரிலீஸில் ஆபாச பேச்சு பேசிய மூர்த்தியின் குரலை பலமுறை மூர்த்தியோடு போனில் உரையாடியிருக்கும் கோவி அண்ணனால் கண்டுபிடிக்க இயலவில்லையா?, மூர்த்தியின் குரலை கண்டு பிடிப்பது ஒன்றும் பெரிய விசயமில்லை, ஒரே ஒரு முறை கேட்டால் போதும் எப்போதும் மூர்த்தியின் குரலை கண்டு கொள்ள இயலும், மூர்த்தியின் குரல் கொஞ்சம் கீச்சு குரலாக சின்ன பையன் குரலா அல்லது கொஞ்சம் கொஞ்சம் பெண் குரலா என்று கண்டுபிடிக்க இயலாத அளவிற்கான ஒரு குரல் மூர்த்தியின் குரல், மூர்த்தியின் குரலை குறை சொல்ல வேண்டுமென்றோ குறிக்க வேண்டுமென்றோ நான் இதை சொல்லவில்லை, மூர்த்தியின் குரலை ஒரு முறை கேட்டிருந்தாலே போதும் பிறகு எப்போதும் மிக எளிதாக மூர்த்தியின் குரலை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாமென்பதற்காக சொன்னேன்.....

பி(பு)ன்னூட்ட பாலா எப்போது கோவி அண்ணன் பதிவில் பின்னூட்டம் போட்டாலும் "ஜெயராமன்" "ஜெயராமன்" என்று பி(பு)ன்னூட்ட பாலா விளிக்கும் அண்ணன் கோவியாருக்கு அந்த ஆடியோ ரிலீஸ்க்கு பிறகும் மூர்த்தி தான் அதை பேசியது என்று தெரியாமல் போய்விட்டதோ? ஏகப்பட்ட கருத்துகளை சொல்லும் கோவி அண்ணன் ஒரு இடத்தில் கூட போலி மூர்த்தி பற்றி பேசவில்லையே? இப்போது கேட்கிறேன் அந்த ஆடியோவில் இருக்கும் குரலும் உங்களோடு பேசிய விடாதுகருப்பு(எ)சதீஷ்குமார்(எ)போலி மூர்த்தியின் குரலும் ஒன்றா இல்லையா? என்பது பற்றி உங்கள் கருத்து என்ன? கோவி அண்ணன் மூர்த்தியின் குரலும் அந்த நாத்த தமிழ் ஆடியோவில் இருக்கும் குரலும் ஒன்று என ஒத்துக்கொள்வாரோ என்னமோ ஆனால் மூர்த்தியின் வீட்டில் அந்த ஆடியோவை சில நிமிடங்கள் மட்டுமே கேட்டு ஆமாம் மூர்த்திதான் அது என்று ஒத்துக்கொண்டு சில நிமிடங்களுக்கு மேல் ஆடியோவை கேட்க முடியாமல் நிறுத்தி விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்!


http://karuppupaiyan.blogspot.com/2007/07/blog-post_4473.html
என்ற பதிவிலும் மேலும் பல விடாது கருப்புவின் பதிவுகளிலும் தலித்களின் மீது மிக மோசமான சாதி வெறி தாக்குதல் பின்னூட்டங்களில் நடத்தப்பட்டிருக்கும்.... அதில் சில கீழே

வெங்காயம் said...
இத்தனைநாள் தீண்டாத் தகாதவனா பாப்பான் வெச்சிருந்தான்.
நீங்க இந்த அளவுக்கு இறங்கி வந்து இவன்களுக்காக போராடுகிறீர்களே அதுவே பெரிய விஷயம்.நீங்க போங்க சார். அவனுங்க பாப்பானிடம் அடிபட்டு மிதிபட்டு செருப்படி வாங்கினால்தான் திருந்துவானுங்க

அழகரசன் said...
இந்த தலித்து நாதாரிக்காக நீங்க இவ்ளோ தூரம் இறங்கி வந்திருக்க வேண்டாம். உங்க ஜாதி என்ன இந்த பரதேசியின் ஜாதி என்ன? நீங்க இவனுக்காக போராடினால் இவன் டோண்டுகூட தொடுப்பு

வெச்சிருக்கான்.

சிவா said...
தியாகு என்ற பரபோக்கி நாதாரி

செந்தில் said...
சார்,
உயர்ந்த ஜாதியான நீங்க ஏன் இந்த பர நாய்களுக்காக கஷ்டப்படுறீங்க? அவனுங்க பாப்பானிடம் ....

தனக்கு தானே போட்டுக்கொண்ட பின்னூட்டமோ அல்லது இந்த மாதிரி பின்னூட்டங்களை அனுமதிப்பதன் மூலம் மூர்த்தியின் ஆதிக்க சாதி பொறுக்கித்தனம் வெளிப்படையாக தெரிகிறதே இதற்கு அண்ணன் கோவியார் என்ன கருத்து சொல்ல விழைகிறார்? விடாது கருப்பு பதிவில் இதையெல்லாம் படித்து தான் கோவி அண்ணன் பெரியாரை பற்றி தெரிந்து கொண்டார் போலும் "என்ன கொடுமை கோவியாரே"( சந்திரமுகி பிரபு ஸ்டைலில் உச்சரிக்கவும்)


செல்லாவை தலித் கம்ணாட்டி என்று மூர்த்தி திட்டியபோது அவர் வெளியேறுகிறேன் என்று போட்ட பதிவில் நீங்கள் இட்டம் பின்னூட்டம்
ஆகா அற்புதம்...

"ஒருவரை 'பாப்பானே' என்று விளிப்பது கூட இழிவு சொல் ஆகிவிட்டது என்று புரிந்தால் சரி.
நீங்கள் வேண்டுமானால் ஒரு பிராமணரை 'பாப்பான்' என்று சொல்லிப் பாருங்க நிச்சயம் கோவப்படுவாங்க."


இதுக்கு என்னாங்கன்னா அர்த்தம்? தலித் கம்னாட்டி என்பதும் பார்ப்பான் என்பதும் ஒன்றுதான் கண்டுக்காதே போ என்றா? எழவு எனக்கு ஒரு மாதிரி குன்சா புரிஞ்சிருக்கு நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு தெரிஞ்சிக்கிட்டா நான் புரிஞ்சிக்கிட்டதுல எதும் மாற்றம் இருந்தா மாத்திக்கிடலாம் பாருங்கண்ணே...

அடுத்ததா கோவி அண்ணன் கடிதத்தின் செண்ட்டிமெண்ட் மற்றும் லேட்டஸ்ட் ட்ரெண்ட் பகுதி வருது

//என் பிறப்பை இழிவு செய்யும் படி குறிப்பிட்டு தாறுமாறாக எழுதி இருந்தாலும் நான் வருத்தப்பட்டு இருக்கமாட்டேன். ஆனால் அதில் எனது சாதி இதுவென்று ஊகமாக குறிப்பிட்டு, அதுவும் சில நண்பர்களிடம் நெருக்கமாக பழகுவதால் இந்த சாதியைச் சேர்ந்தவனாகத்தான் இருப்பான் என்பது போல் எழுதப்பட்டு இருந்தது மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது.
//
ஏய் என்னாங்கப்பா இது அம்மாவை பத்தி திட்டினா கவலைப்படமாட்டேன் ஆனா என் மேல சாதி முத்திரை குத்தினா மட்டும் காயப்பட்டுடுவேங்கறது என்னாங்கய்யா சீன் மேல சீன் போடுறாங்க இதென்ன புது ட்ரெண்டா?

அட ஆமாம் கோவி அண்ணே இப்போதான் ஒன்று நினைவுக்கு வருது, மேட்டர் என்னனா போலி பிரச்சினை நடக்கும் போது "என் நண்பர்களின் தாயும் என் தாய் போலத்தான் நினைக்கிறேன்னு" சொல்லியிருந்தீங்க.... அட எத்தனையோ மின் மடல் மூர்த்தி என்னை வன்னிய தே. மகனே என்று ஆரம்பித்து தான் எழுதியிருப்பான்(CC யில் நீங்களும் உண்டு என்பதை கடிதத்திலேயே பெயர் குறிப்பிடாமல் சொல்லியிருந்தீரே) அப்போதெல்லாம் நீங்கள் மூர்த்தியை என்ன கடிந்து கொண்டீர்கள் என்றோ ஏன் சமாதானமாக போ என்று சொன்னார் அதுக்கப்பறமும் பேட்ச்சப் வேலை பார்த்தார் ஆனால் இங்கே என்னடான்னா "என் நண்பர்களின் தாயும் என் தாய் போலத்தான் நினைக்கிறேன்னு" வேற டயலாக் விடுறாரே அப்போ ஏன் அவருக்கு ஒன்றும் ஆகலையா என்று நினைத்திருந்தேன்,குழம்பினேன் இப்போ புரிந்துவிட்டது உங்க பிறப்பை இழிவு செய்யும் படி குறிப்பிட்டு தாறுமாறாக எழுதி இருந்தாலே நீங்கள் கவலைப்பட மாட்டீங்கங்கற போது மத்தவன் குடும்பத்தை பற்றி எழுதியதெல்லாம் உங்களுக்கு ஒரு மேட்டரா என்ன?

மாயவரத்தான் மாயவரத்தான்னு ஒரு பதிவர் இருந்தாரே தெரியுமான்னே, அவருக்கும் நமக்கும் பதிவு உலகில் ஏழாம் பொறுத்தம், அப்படியே எல்லாத்துக்குமே எனக்கு ஏட்டிக்குப்போட்டியான கருத்து கொண்டவர் இந்த விடாது கருப்பு தான் மூர்த்தி என்று தெரிவதற்கு முன்னால் விடாது கருப்பு திராவிட தமிழர்கள் குழுமத்தில் இணைந்து பின் ஓரிரு முறை என்னிடம் ஜிடாக்கில் பேசினான், மாயவரத்தானை பற்றி மிக அசிங்கமாக பேசினான், அப்போதே அவனை எச்சரித்துவிட்டு அவனுடைய சாட் ஐடியை ப்ளாக் செய்துவிட்டேன்...

கடைசியாக கிளைமாக்ஸ் படத்துலலாம் ஹீரோ வசனம் பேசுவாரே? அது மாதிரி அண்ணன் கேள்விக்கணைகளால் துளைத்திருப்பார்....

//நானாக இதுவரை எந்த பதிவரிடமும் என் சாதி 'இது' என குறிப்பிட்டது இல்லை. விடாது கருப்பு பதிவில் என்னை சாதி சொல்லி இழிவு படுத்தியது ஏன் ? இன்னும் பல பதிவர்களுடன் பழகுகிறேன். அவர்களில் இருவர் ஒரே சாதியைச் சேர்ந்தவராக இருந்தால் நானும் அவர்களின் சாதியை சேர்ந்தவர் என்பீர்களா ?//

//நண்பர் மகேந்திரன் மீது திடீரென்று சாதி வெறி என்று முத்திரை எழுதியது ஏன் ? என்று விளக்கம் கேட்க கருப்பு குழுவை தொடர்பு கொண்டேன். //

இதோ இந்த பதிவில் இந்த இடம் வரை நானும் நீங்களும் பொதுவில் வைத்தவைகளை பற்றி மட்டுமே பேசியிருக்கேன், தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டதையோ நீங்கள் வெளிப்படுத்தாத எதைப்பற்றியும் நான் பேசவில்லை (அப்படி தனிப்பட்ட முறையில் சில சொந்த கதைகளை தவிர பெரிய ரகசியம் எதுவும் பேசவில்லை என்பது வேறு கதை).... எனக்கு தனிப்பட்ட முறையில் கேட்க நினனத்த விசயங்கள் சந்தேகங்கள் என எந்த ஒரு விசயத்தையும் இந்த பதிவில் பேசவில்லை ஆனா இந்த மகேந்திரன் விசயத்துக்கு மட்டும் கொஞ்சம் நாம தனிப்பட்டு பேசிக்கொண்ட ஒரு விசயத்தை சொல்றேன்.....

கோவி அண்ணே உண்மையாவே உங்களுக்கு மகேந்திரன் மேல சாதி வெறி என்று முத்திரை எழுதியது ஏன்னு தெரியலையா? இதுக்கு விடையை சில மாசத்துக்கு முன்ன நாம பேசிக்கிட்டு இருந்த போது

சொன்னேனே..... ஹா ஹா கோவி அண்ணா கொஞ்சம் ப்ளாஷ் பேக் சக்கரத்தை சுற்றிவிடுங்க..... ட்ரொய்ங்ங்ங்ங்ங்

ஹலோ ஸ்டாப் ஸ்டாப்...இடம் வந்தாச்சி.....

"உங்கள் முன்னால் நண்பர் மகேந்திரனை வன்னியனாக பார்க்கவில்லையே"

(கோவி அண்ணனுக்கு எப்பவுமே என்னன மூர்த்தியின் முன்னாள் நண்பர் என்று சொல்வதில் அலாதி பிரியம் ஹா ஹா அதில் என்ன 3 தடவை ஹாய் சொல்லி சில நிமிடங்கள் பேசியிருந்தா நண்பன்னா )நான் சந்தித்தவர்கள் அனைவருமே என் நண்பர்கள் தான்) சரி அதைவிடுவோம் மேட்டருக்கு வருவோம் "உங்கள் முன்னால் நண்பர் மகேந்திரனை வன்னியனாக பார்க்கவில்லையே" என்று நீங்கள் கேட்டதற்கு நான் சொன்ன பதிலை கொஞ்சம் பாருங்க

"me: அதைத்தான் நாணும் சொல்றேன் போலி பிரச்சினையிலும் டோண்டு பிரச்சினையிலும் மூர்க்கமாக நான் எதிர்க்கிறேன் மகியை போலியை திட்டியும் டோண்டுவை போலி பிரச்ச்னைய்ல் ஆதரித்தும் ஒரே ஒரு பதிவு போட சொல்லுங்கள் அப்போதே மகி வன்னிய பொறம்போக்கு என்று வசைபாடப்படுவார்"

என்று மூர்த்திக்கும் மகிக்கும் முட்டிக்குதோ அன்னைக்கு மகி ஜாதிவெறியன் என்று வசைபாடப்படுவார் என்று சொல்லியிருந்தேன் அப்போ நம்பலை நீங்க! இப்போ?

கோவியாரை ஒருமையில் பேசிவிட்டு வைத்துவிட்டானாம்... கோவி அண்ணன் வருத்தப்பட்டு எழுதியிருக்கார் போலும் அண்ணன் கோவியாருக்கு வேண்டுமானால் அது எதிர்பாராத கிளைமாக்ஸ் ஆக இருக்கலாம், ஆனால் என்னை பொறுத்தவரை இப்படியாகத்தான் முடிவடையும் இந்த படம் என்று தெரிந்த கிளைமாக்ஸ் தான்.... மூர்த்தியை பொறுத்தவரை பழகியவன் பழகாதவன் தெரிந்தவன் தெரியாதவன் என்று எந்த கணக்குமில்லை.... முட்டிக்கொண்டால் அம்மாவின் நலம் விசாரிக்க ஆரம்பித்துவிடுவான்....

சரி படம்னா ஒரு மெசேஜ் வேணுமில்லையா? கோவி அண்ணன் அதையும் வச்சிருந்தார்


//அந்த நண்பருக்கும் எனக்கும் தனிப்பட்ட பகைமை எதுவும் இல்லை, இருந்தாலும் கருப்பு குழுவுடன் தொடர்பு இருந்ததால் என்னுடன் நட்பு பாராட்ட முடியாது என்று நினைத்திருக்கலாம். அவருக்கு எனது இரட்டை நிலைப்பாடு பிடிக்கவில்லை என்பதால் அவரது செயலில் இருப்பது அவரளவில் ஞாயம் என்றே நினைக்கிறேன். கோவிலில் இருக்கும் கடவுளுக்கு முன்பு நல்லவர் கெட்டவர் சமம் என்பார்கள். அது ஒருபக்க ஞாயம் ? நல்லவனும் கெட்டவனும் உனக்கு ஒன்றா ? என்று எந்த கடவுளையும் யாரும் கேட்பதில்லை. நான் கடவுள் இல்லை. கடவுள் தன்மை என்று கற்பனையாக கூறப்படுவையில் ஓரளவு சாத்வீகமும் இருக்கிறது, அந்த தன்மை எனக்குள்ளும் வளர்த்துக் கொள்ள முயன்று வருகிறேன்.
//

சமமான இரண்டை சமமற்று நடத்துவது எத்தனை அய்யோக்கியத்தனமோ அத்தனை அய்யோக்கியத்தனம் சமமற்ற இரண்டடை சமமாக நடத்துவதும்..... அது கடவுளாகவே இருந்தாலும்.... நீங்கள் எல்லோரையும் சமமாக நடத்தி நன்றாக இருங்கள்?


எழவு இந்த போலி மூர்த்தி பிரச்சினையில் ஏற்கனவே நண்பர் சுகுணாவுக்கு கடிதம் எழுதினேன், இப்போ உங்களுக்கு.... இந்த வேலையில்லாத வெட்டி வேலையில் இன்னும் யாருக்கும் பதிவு,கடிதம் எழுத வேண்டிய நிலைக்கு என்னை ஆளாக்கும் சூழ்நிலை வர வேண்டாமென மிகவும் ஆசைப்படுகிறேன்....

பெரியார் சொன்னதில் முதன்மையானது சுயமரியாதை.... முதலில் சுயமரியாதையோடு இருக்கலாம் பிறகு பார்ப்பனியத்தில் ஆரம்பித்து மற்ற எல்லாவற்றையும் சிக்கு சிக்கு சிக்குன்னு புடுங்கலாம்....


வேலை அதிகம் பின்னூட்டமெல்லாம் உடனே உடனே வெளியிட இயலாது..... பார்ப்போமா!!!!!!! பை..........

'தை' இது கவி'தை' திருவிழா - தை இதழ் இணையத்தில் வெளியீடு



'தை' இது கவி'தை' திருவிழா...

உழைப்புக்கவுச்சியற்ற ஒரு சொல்லும்
கவிதை தராது
தமிழ்நெடுக உழைப்புக்கவுச்சி
இன்னும் இன்னும் அது கவிதை தரும், தந்து
கொண்டேயிருக்கும்...


'தை' இது கவி'தை' திருவிழா, பாவலர் அறிவுமதி அவர்களின் 'தை' காலாண்டிதழின் மூன்றாம் இதழ் தமிழ்வெளி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

OPML பகிர்வு, ip , திரட்டி அரசியல், டெக்னாலஜி பிதாமகன் ரவிசங்கரின் டெக்னிக்கல் தவறுகள் மற்றும் இன்ன பிற...

சமீப காலமாக ரவிசங்கர் 'தமிழ்' திரட்டிகளை சாராமல் இருக்க கூடியதான நிலைப்பாட்டை வலியுறுத்தி தொடர் பதிவுகள் எழுதி வருகிறார், ரவிசங்கர் அவர்கள் ஏன் எதற்கக இப்படி எழுதிவருகிறார் என ஆரம்பித்தால் அவரின் டெக்னாலஜி பிதாமகன் என எல்லோரும் புகழ வேண்டுமென்ற ஆசையா, நான் சொன்னேன் செய்யலை என்று ஆரம்பிக்கும் அவரின் ஈகோ வா? அல்லது தமிழ்வலைப்பதிவுலகில் எல்லாம் தன் ஆலோசனையின் கீழ் தான் நடக்கவேண்டுமென்ற தன் முனைப்பா என்பதிலிருந்து சென்னையில் நடந்த வலைப்பதிவு பட்டடறை அரசியல், புதுச்சேரி வலைப்பதிவு பட்டறை அரசியல் என ஆரம்பித்து ஒரு வருடம் இனி பட்டறை நடத்த தேவையில்லை என்று கூறும் அத்தாரிட்டியிலிருந்து ரவிசங்கரின் முன்னுக்குபின் முரணான கொள்கை முரண்பாட்டிலிருந்து தானியங்கியாக பதிவுகளை திரட்டும்
'தமிழ்' திரட்டிகளை விட ஒரு குழுவிற்கு பிடித்த பதிவுகளை மட்டும் காண்பித்து கொண்டிருக்கும் மனித திரட்டிகளுக்கு அவர் தரும் முக்கியதுவத்தின் அரசியலில் இருந்து ஏகப்பட்ட விசயங்கள் பேச வேண்டியிருக்கும் என்பதால் அந்த விடயங்களை விவாதிக்கும் அளவிற்கு எமக்கு நேரமில்லை என்பதாலும் ரவிசங்கர் டெக்னிக்கலாக தந்து கொண்டிருக்கும் தவறான விசமங்களையும் மற்றும் சில விசயங்களை மட்டும் இங்கே சொல்கிறேன்...

1. தமிழ் திரட்டிகள் வெறும் தானியங்கி திரட்டிகள் மட்டுமல்ல, தமிழ் திரட்டிகள் என்று நான் குறிப்பிட்டதற்கு காரணம் டெக்னோரைட், கூகிள் ரீடர் போன்றவை பொதுவான திரட்டிகள், ஆனால் தமிழ்மணம், தமிழ்வெளி, தேன்கூடு, தமிழ்பதிவுகள் போன்றவைகள் தமிழ்மொழியில் எழுதப்படும் வலைப்பதிவுகளுக்காக உருவாக்கப்பட்ட திரட்டிகள், ரவிசங்கர் மூச்சுக்கு முன்னூறு முறை திரட்டிகளை சாராமல் திரட்டிகளை சாராமல் என்று சொல்வது என்ன வென்றால் 'தமிழ்' திரட்டிகளை சாராமல் என்று பொருள் ஏனென்றால் இவர் தமிழ் திரட்டிகளை சாராமல் இருக்கலாம் அப்போது வலைப்பதிவர்கள் கூகிள் ரீடர் திரட்டியையோ டெக்னோரைட் திரட்டியையோ அல்லது வேறு எந்த திரட்டியையோ சார்ந்து இருப்பதாகும்... சரி இவர் தமிழ் திரட்டிகளை சாராமல் இருக்க சொல்வதற்கான காரணங்களாக சிலவற்றை வைக்கின்றார். அதில் முதன்மையானது கட்டற்ற சுதந்திரம், பாதுகாப்பு என்று சில விடயங்களை முன் வைக்கிறார்... அதற்கு முன் இந்த திரட்டிகள் வெறும் பதிவு, பின்னூட்டம் திரட்டுவது என்று மற்ற திரட்டிகள் போலில்லாமல் ஒரு வலைப்பதிவு சமூகமாக இருந்து வருகின்றது, நட்சத்திரம், பூங்கா, சுடர் விளையாட்டு என தமிழ் வலைப்பதிவர்களின் பங்கேற்ப்பை ஊக்குவிக்கின்றது, information காலத்தை தாண்டி இப்போது நாம் Participatipon காலத்தில் இருக்கிறோம். அதானாலேயே சர்ச்சைகளும் அதிகமாக உள்ளது.

கட்டற்ற சுதந்திரம்:
ஆபாச பதிவுகள், ஆபாச பின்னூட்டங்கள் என்று தமிழ்மணம் அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்த போது அந்த ஆபாசங்களை எழுத்துவடிவில் எழுத இடம் கொடுத்த ப்ளாக்கருக்கு மின்மடல் அனுப்பி அதை

தடைசெய்ய சொன்னதை விட தமிழ்மணம் அதை காட்டக்கூடாது என்று எழுந்த கோரிக்கைகளும் அதை வைத்து தமிழ்மணத்தை தாக்கிய நிகழ்வுகளுமே நடந்தது, அந்த பதிவுகளை எல்லாம் தமிழ்மணம்

நீக்கியது, பின்னூட்ட மட்டுறுத்தல் செய்தால் தான் தமிழ்மணம் பின்னூட்டத்தை காண்பிக்கும் என்ற நிலைக்கு தமிழ்மணத்தை தள்ளியது யார்? தமிழ்மணமா? அல்லது வலைப்பதிவர்களா? இந்த பிரச்சினையில் எழுத இடம் கொடுத்த கூகிளை நோண்டியவர்களை விட தமிழ்மணத்தை தாக்கியதே அதிகம், சில மாதங்களுக்கு முன் பின்னூட்ட மட்டுறுத்தல் இல்லையென்றாலும் பதிவுகளின் பின்னூட்டம் காட்டப்படும் என்ற போதும் இதோ இந்த நொடி வரை ரவிசங்கரின் பதிவுகளில் பின்னூட்ட மட்டுறுத்தல் உள்ளதே என்ன காரணம், அவர் பதிவு மட்டுமல்ல எத்தனையோ பதிவுகளில் இன்னமும் பின்னூட்ட மட்டுறுத்தல் உள்ளது, ஏனென்றால் இங்கே அப்படியிருக்கு நிலைமை...

ரி தமிழ் திரட்டிகளில் தான் சுதந்திரம் இல்லை, கூகிளில் என்ன நிலைமை, ஒரு ஆபாச போலி ப்ரொபைலை சர்வேசன் பதிவில் வைத்து புகார் மேல் புகார் வைத்து குத்தோ குத்தென்று குத்தி முடக்கவில்லையா? புகார் மேல் புகார் அனுப்பியதில் இன்னொரு வலைப்பதிவை திறக்கும் போதே ப்லாக்கர் இந்த பதிவில் அவதூறுகள் உள்ளதாக புகார் வந்துள்ளது பார்க்க விருப்பமெனில் உள்ளே செல்லுங்கள் என்று எச்சரித்ததே அதெல்லாம் கட்டற்ற சுதந்திரமா?

கட்டற்ற சுதந்திரம் என்ற பெயரில் தமிழ் திரட்டிகளை புறக்கணிக்க சொல்வதன் காரணம் என்ன? அதன் பின் ஏதேனும் அரசியல் இருக்கா? என்ன அரசியல் அது?

ஒரு நாள் ஒரே ஒரு நாள் சுதந்திரமாக வலைப்பதிவுகளை தானாக இணைக்க அனுமதித்தால் இங்கே என்ன நடக்கும்? திரட்டியில் வந்து இணைத்து அதை வேலை, வீட்டுப்பிரச்சினைகள், புள்ளைகுட்டியோடு நேரம் செலவழிப்பு அதன் பிறகு ஏகப்பட்ட இன்ன பிற வேலைகளுக்கு பின் இந்த பதிவுகளை எல்லாம் படித்து இதெல்லாம் திரட்டியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இருக்கிறதா என பார்த்து பிறகு சேர்க்கும் போதே ஏகப்பட்ட பிரச்சினைகள் வருகிறது இதில் கட்டற்ற சுதந்திரமாக இணைக்கவிட்டால்?

பொது OPML உருவாக்குவதற்கான வரைமுறையாக ரவிசங்கர் முன்னெடுத்த விசயத்தில் எந்த பதிவுகளை சேர்க்கலாம் எதை சேர்க்க கூடாது என சொல்லியுள்ளது இங்கே

வெர்சன் 1 Dec -14 :எந்த மாதிரி பதிவுகளைத் தவிர்ப்பது?

பதிவுகள் பெரும்பாலும் தமிழில் எழுதப்படுவதாக இருப்பது முக்கியம். சாதி, மத, இன, மொழி வெறுப்புணர்வூட்டும் பதிவுகள், விளம்பரப் பதிவுகள், ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பார்க்கத் தகாத பதிவுகளைத் :) தவிர்க்கலாம். வேற பெரிய வரையறை ஏதும் இல்லை.

கட்டற்ற சுதந்திரம் பற்றி பேசுபவர் எந்த மாதிரி பதிவுகளை தவிர்க்க வேண்டுமென சொல்லியுள்ளார் பாருங்கள், டிசம்பர் 20 ம் தேதி வரை 7 முறை அடித்தல் திருத்தல் செய்த போது இருந்த இந்த தணிக்கை டிசம்பர் 20ம் தேதி கடைசியாக அடித்து திருத்தி எழுதிய போது இல்லை, திடீரென ஞானோதயம் வந்துவிட்டதோ என்னமோ....

2. OPML பகிர்வு
OPML என்பது ஒரு திரட்டியின் சொத்து, ஏன் அதை சொத்து என சொல்கிறேன் என்றால் அது ஒரு திரட்டியின் டேட்டா, எத்தனை பேர் அந்த திரட்டியில் இணைந்துள்ளார்கள் என்பதுவே அது தான், தமிழ்மணத்தின் பலம் அதில் இணைந்துள்ள 2400+ பதிவர்கள், அதை வெளியிட சொல்லி வேண்டுகோள் மட்டுமே விடுக்கலாம், கட்டாயப்படுத்த முடியாது, மீண்டும் சொல்கிறேன் அதை வெளியிட சொல்லி வேண்டுகோள் மட்டுமே விடுக்கலாம், கட்டாயப்படுத்த முடியாது... அது தான் தமிழ்மணத்தில் பதிவர் பட்டியல் இருக்கே அங்கேயிருந்து எடுத்துக்கொள்ளவேண்டியது தானே என்றால் அங்கே காப்பிரைட் பிரச்சினை உண்டு OPML ஆக வெளியிட்டால் அந்த பிரச்சினையில்லை அதனால் தான் ரவிசங்கர் OPML ஆக வெளியிட சொல்கிறார், தமிழ்மணம் OPML வெளியிடும் உதாரணத்திற்கு ரவிசங்கரே ஒரு திரட்டியை உருவாக்குகிறார் என வைத்துக்கொள்ளுங்களேன் தமிழ்மணம் மூன்றாண்டுகளுக்கு மேலாக கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து வைத்திருக்கும் அவர்களின் சொத்தை நோகாமல் நோன்பு கும்பிட ரவிசங்கர் உருவாக்குகிற(ஒரு உதாரணத்திற்கு மட்டுமே ரவிசங்கர் பெயரை பயன்படுத்தியுள்ளேன்) புது திரட்டியில் உபயோகப்படுத்தி கொள்ளலாம் பாருங்கள். மீண்டும் சொல்கிறேன் OPML வெளியிட சொல்லி வேண்டுகோள் மட்டுமே விடுக்கலாம், கட்டாயப்படுத்த முடியாது. அந்த வேண்டுகோளை புறந்தள்ள தமிழ்மணத்திற்கோ மற்ற திரட்டிகளுக்கோ உரிமை உண்டு.

OPML பகிர்வில் மேலும் சில சிக்கல்கள் உண்டு, ஒரு வலைப்பதிவர் ஒரு திரட்டியில் இணைகிறார் அந்த திரட்டியின் சட்டதிட்டங்களுக்கு இணங்க தம் பதிவை திரட்டியில் சேர்க்கிறார், அதை OPML ஆக வெளியிடும் உரிமை அந்த திரட்டிக்கு உண்டு, OPML பயன் படுத்தி இன்னொரு திரட்டியில் அந்த பதிவர் அவருக்கு தெரியாமலேயே இணைக்கப்படுகிறார், இப்போது புதிதாக வந்த திரட்டியின் சட்ட திட்டங்களுக்கு அவர் கட்டுப்பட்டவரா?

தமிழ்மணம் தங்களின் Terms And Conditions ல் பதிவுகளின் உள்ளடக்கம் எப்படி தமிழ்மணத்தால் பயன்படுத்தப்படுவதை வெறும் preview என்ற அளவில் மட்டுமே வைத்திருக்கிறது இதற்கு இணங்கி தமிழ்மணத்தில் ஒரு பதிவர் சேர்கிறார், தமிழ்மணத்தின் OPML மூலமாக அதே பதிவர் இன்னொரு திரட்டியில் இணைக்கப்படும் போது அந்த திரட்டியில் வலைப்பதிவு எழுத்துகள் காப்பிரைட் பிரச்சினையில்லாமல் மறுபதிப்பு, லைசன்ஸ் ஃப்ரீ என்றெல்லாம் இருந்தால் அந்த பதிவர் நிலை என்ன? அவராக சென்று அந்த திரட்டியில் இணைக்கவில்லை, இப்போது அந்த புது திரட்டியின் சட்ட திட்டங்களுக்கு இவர் கட்டுப்பட்டவரா?
அதற்கு கட்டுப்படாமல் அவர் இருக்க விரும்புகிறார் எனில் அவர் புது திரட்டிக்கு தெரிவிக்க வேண்டும், ஆனால் அவர் அந்த திரட்டியில் இருப்பதே அவருக்கு தெரியாதென்றால் என்ன செய்யலாம்? கிரெடிட்

கார்டு வழங்குபவர்கள் வழக்கமாக ஒரு வித்தையை செய்வார்கள், நாங்கள் மாதம் 20 ரூபாய் இந்த இன்சூரன்ஸ்க்காக, அந்த இன்சூரன்ஸ்க்காக பிடித்துக்கொள்வோம் உங்களுக்கு விருப்பமில்லையென்றால் லெட்டர் போடுங்கோ, போன் செய்யுங்கோன்னு, இதென்னடா கூத்து எனக்கு அதில் விருப்பமில்லையென்றால் நான் சொல்ல வேண்டுமாம், விருப்பம் இருப்பவனை மட்டும் சேர்த்துக்கொள், லெட்டர் போட்டு எவனுக்கு விருப்பமிருக்கோ அவன் பணத்தை மட்டும் எடுத்துக்கோ, அதே கதைதான் இங்கேயும் இதே மாதிரியான ஒரு காமெடியை ரவிசங்கரும் செய்துள்ளார், அவர் tamil-blogs-open-opml திட்டத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்

"ஒரு வேளை, சில பதிவர்களுக்கு இப்படி இந்த OPMLல் இடம்பெறுவதில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். இந்தக் கணக்கு பொதுவில் இருப்பதால் வேண்டாதவர்கள் தாமாகவே நுழைந்து பெயர்களை நீக்கிக் கொள்ளலாம். ஒரு வரி padhivu@gmail.comக்கு எழுதிப் போட்டால் நாம் அவற்றைப் பொது வெளியீடுகளின் போது கவனம் எடுத்து நீக்கலாம்."

இவுங்க சேர்த்துப்பாங்களாம், வேணாமுன்னா நாம போய் எனக்கு விருப்பமில்லைன்னு எழுதி போடணுமாம்.... சேர்க்கும் முன் அனுமதி பெற்று சேர்ப்பதே சரியானது, அதைத்தான் திரட்டிகள் செய்து வருகின்றன.

ஒரு வலைப்பதிவருக்கு ஒரு திரட்டியில் சேர்திருப்பார், இன்னொரு திரட்டியின் அரசியல் பிடிக்காமல் அதில் சேர விரும்பாமல் இருக்கலாம், மற்றொரு திரட்டியை நடத்துபவரை பிடிக்காமல் அதில் சேராமல் இருக்கலாம், ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் இதெல்லாம் பதிவரின் சுதந்திரம், அதில் தலையிட யார் கொடுத்தது அதிகாரம்? இதை சொன்னால் உடனே தமிழ்மணம் தேன்கூட்டிற்கு OPML கொடுத்ததே என்றால் தமிழ்மணத்தின் சேர்க்கை விதிகளிலேயே இருக்கின்றது அவர்கள் விரும்பினால தரலாமென, அதை ஒத்துக்கொண்டு தான் தமிழ்மணத்திலேயே சேர்கின்றார்கள் என்னும் போது தப்பில்லை.


கடைசியாக ரவிசங்கர் அவர்கள் பொறுப்பு துறப்பு என்று எழுதியிருக்கும் விசயமென்னவென்றால் பொறுப்புத் துறப்பு:

"இது திட்டமிட்டு தணிக்கை செய்ய முற்படாத ஒரு பட்டியல். எனவே இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பதிவுகள், தளங்கள் தரும் உள்ளடக்கம் தரமானதாகவும் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்புடையதாகவும் இருக்கும் என்று உறுதி அளிக்க இயலாது. இப்படியலில் தங்களுக்கு ஒவ்வாத தளங்களை நீக்கிப் பயன்படுத்த வேண்டியது பயனரின் பொறுப்பாகும் என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்."

இவர் துறந்த பொறுப்பை தான் திரட்டிகள் தானாக முன்னமேயே செய்துவருகின்றன.... ரவிசங்கர் எப்படி மூக்கைத்தொடுவார் நேரடியாகவா? அல்லது காதை சுற்றியா என்று தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளது.

கட்டற்ற சுதந்திரம் என்ற காரணத்தை சொல்லி 'தமிழ்' திரட்டிகளை துறக்க சொல்லும் ரவிசங்கருக்கு ப்லாக்கர், டெக்னோரைட்டில் ஆரம்பித்து எதிலுமே கட்டற்ற சுதந்திரம் கிடையாது என்பதே ஆபாச போலி பதிவுகளையும் புரொபைல்களையும் குத்தோ குத்தென்று குத்தி மூட வைத்த விசயத்தினால் தெரிந்திருக்கும்


குட்டிப்பையன் தூங்கி எழுந்து சத்தம் கொடுத்துக்கொண்டே என் லாப்டாப்பை தட்ட வந்தான், இனி அவனை பார்க்கவில்லையென்றால் ரகளை தான் மிச்சத்தை அடுத்து எப்போது நேரம் கிடைக்குமோ அப்போது....

தவறான தகவல்கள் தரும் டெக்னாலஜி பிதாமகன் ரவிசங்கர்

டெக்னாலஜி பிதாமகன் அவதாரம் எடுக்க முனையும் ரவிசங்கர் அவர்களின் சமீபத்திய இந்த பதிவில் ஒரு தவறான தகவலை தந்துள்ளார்...

//தமிழ்மணம் வழங்கி செயல் இழந்தாலோ தளப் பராமரிப்பு வேலைகளுக்காகத் தளத்தைத் தமிழ்மணம் தற்காலிகமாக முடக்கி வைத்தாலோ, அது தமிழ்மணக் கருவிப்பட்டைச் சேவையைப் பெறும் 2000+ பதிவுகளையும் சேர்த்து முடக்கும். முடக்கும் என்றால் தமிழ்மணம் வழமைக்குத் திரும்பும் வரை 2000+ பதிவுகளின் ஒரு பக்கத்தையும் யாரும் திறக்கவும் படிக்கவும் முடியாது.//

இது தவறான தகவல், தமிழ்மணம் வழமைக்கு திரும்பும் வரை தமிழ்மணம் வழியாக படிக்க முடியாதே தவிர நேரடியாகவோ பிற திரட்டிகள் வழியாகவோ படிக்க்க முடியும்... கடந்த காலங்களில் தமிழ்மணம் செயல்படாத நேரங்களில் பிற திரட்டிகள் வழியாக படித்துள்ளார்கள்....

சாஃப்ட்வேர் எஞ்சினியரிங்கில் எந்த ஒரு டிசைனும் எல்லா இடங்களுக்கும் பொறுந்தும் என்பது கிடையாது என்பது மற்றவர்களை விட துறையில் வேலை செய்பவர்களுக்கு தெரியும்....

உங்களின் நீண்ட இந்த தொடர்களுக்கு வரிக்கு வரி எம்மால் பதிலளிக்க இயலும்(இதற்கு முந்தைய பதிவுகளையும் சேர்த்து).... உங்களின் நிறைய சுய முரண் கொள்கை முரன் என்பதில் ஆரம்பித்து உங்களின் டெக்னாலஜி புரிந்துணர்வில் உள்ள ஓட்டைகள் வரை நிறைய எழுத முடியும்ம்....

தவறான தகவல்களை தர வேண்டாம்.... இப்படி நீங்கள் தவறான தகவல்கள் டெக்னிக்கல் விசயங்களில் தந்தால் டெக்னாலஜி பிதாமகன் அல்லது டெக்னாலஜி குரு என்று பெயர் எடுக்க விரும்பும் உங்களுக்கு அது பின்னடைவையே ஏற்படுத்தும் :-)))))))

பிற்சேர்க்கை:
தமிழ்மணம் கருவிப்பட்டை க்கான நிரலி இந்த டெம்ப்ளேட்டில் அப்படியே இருக்கின