சே குவேராவின் பிறந்த நாள்


சே குவேராவின் பிறந்த நாள்.

காந்தியாகினும், ஃபிடல் காஸ்ட்ரேவாகினும், ஹிட்லர் ஆனாலும் உலகின் மாபெரும் தலைவர்கள், போராளிகள் யாராகினும் அவர்கள் மக்களுக்காக, நாட்டுக்காக மட்டும் தான் போராடியுள்ளார்கள், ஆனால் நாடு கடந்து, இனம் கடந்து, மொழி கடந்து போராடிய ஒரே போராளி  சே குவேரா தான்.

மோட்டார் சைக்கிளின் டைரி குறிப்புகள் என்ற ஒரு நூல் சே வை உணரச்செய்தது, அதை படிக்கும் ஒவ்வொருவனும் தானும் போராளி ஆக வேண்டும் என்று ஒரு நிமிடமாவது நினைப்பான். மூச்சுத்திணறல் நோயால் பாதிக்கப்பட்டும் போராடியவர் இவர், நோய்கள் போராளிகளின் போராட்டத்தை தடை செய்யாது என்று நிரூபித்தவர்

இந்த படம் எடுக்கப்பட்டது பாலித்தீவில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் நின்வாக எழுப்பட்ட நினைவிடத்தின் முன்பு.

தமிழ்நாட்டில் சீமான் வேறு இவர் படத்தை பனியனில் போட்டுக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தார், அதனால் சே குவேரா தமிழ்நாட்டில் என்ன கதி ஆனாரோ என கொஞ்சம் பயமாக உள்ளது


0 பின்னூட்டங்கள்: