பாக்கிஸ்தானில் இந்துக்கள் அமோகமாக வாழ்கிறார்கள்
பாக்கிஸ்தான் தலைமை நீதிபதியாக ஹிந்து நியமணம் தட்ஸ்டமில் செய்தி தெரிவிக்கின்றது, ஆக இதனால் தெரிவது என்னவென்றால் மத அடிப்படைவாத நாடு என்று பொய்யாக இழித்தும் பழித்தும் சொல்லப்படும் பாக்கிஸ்த்தானில் இந்துக்கள் எத்தனை சுக வாழ்வு வாழ்கிறார்கள் என்பது புலப்படும் இந்துக்கள் அங்கே தலைமை நீதிபதியாக முடிகின்றதென்றால் அங்கே நிலைமை எப்படி இருக்கின்றது பாருங்கள்... இந்துக்கள் எத்தனை உயர்ந்த வாழ்க்கையோடும் உரிமைகளோடும் வாழ்கிறார்கள் என்பதற்கு ஒரு இந்து தலைமை நீதிபதியானதே சான்று.
அய்யகோ இந்த இந்திய ஊடகங்களும் மேற்கு ஊடகங்களும் தான் பாக்கிஸ்தானை மத அடிப்படை வாத நாடு அங்கு பிற இனத்தவருக்கு எந்த உரிமையும் இல்லை என்கிறார்கள், பாருங்கள் இந்துக்களின் சுக வாழ்வை, கோவிலில் கும்பாபிசேகம் செய்கிறார்கள், தலைமை நீதிபதியாகிறார்கள்.... இனியாவது பாக்கிஸ்தான் மத அடிப்படைவாத நாடு என்று சொல்லாதிர்கள், இந்துக்கள் சுகவாழ்வு வாழும் நாடு பாக்கிஸ்தான், யூசுப் யுகானா போன்ற கிறுத்துவர்கள் பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளனர், இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்துவர்கள் என எல்லா மதத்தினரும் சுமுகமாக சுகவாழ்வு வாழும் நாடு தான் பாக்கிஸ்தான்.
பின்குறிப்பு
இந்தியாவில் ஒரு தலித் தலைமை நீதிபதியாகவும் ஒரு முஸ்லீம் குடியரசு தலைவராகவும் இருக்கின்றனர்


