பிரபல நடிகை ZZZ கற்பழிப்பு



பிரபல நடிகை ZZZ கற்பழிப்பு


இன்று காலை சென்னையில் உள்ள பிரபல உள்ளரங்கு படப்பிடிப்பு தளத்தினுள் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
------------------------------------
------------------------------------
--------------------------------
பிரபல நடிகை ZZZ கற்பழிப்பு காட்சியில் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை, இதனால் இயக்குனருடன் சச்சரவு ஏற்பட்டு படப்பிடிப்பு நடைபெறவில்லை என நமது ஓநாயார் செய்தி தந்தார்.

செய்திக்கும் தலைப்பிற்கும் என்ன தொடர்பு? செய்தியை திரிக்கும் ஒரு சோமாறித்தனம், உத்தி என திட்டுபவர்களே ஒரு நிமிடம் சிந்திக்கவும், பதிவு என் பதிவு , தலைப்பை நிர்ணயிப்பது ஆசிரியர். இதில் எந்த சோமாறித்தனத்தையும் நான் காணவில்லை.மேலும் தலைப்பு, செய்தியின் ஒரு வரி என்பதை இங்கே குறிப்பிட்டு சொல்ல விரும்புகின்றேன்.

சோ அவர்கள் ஆசிரியராக இருக்கும் துக்ளக் வார இதழில் பதிப்பிக்கப்பட்ட ஒரு செய்தி.

அதன் தலைப்பு

"மாணவர்கள் ஆங்கிலப்புலமை பெற வேண்டும்" - மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணியின் மனைவி எழுதிகிறார்...

ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம் புது டெல்லியில் CBSE மற்றும் ICSE என இரண்டு வகை கல்வித்திட்டங்கள் மட்டுமே உள்ளன, ஆதலால் CBSE பாடதிட்டத்தில் குழந்தைகளை சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

டெல்லி தமிழ்ப் பள்ளி ஆண்,பெண் இரு பாலரும் படிக்கும் பள்ளி, மிகவும் புதிய சூழ்நிலையில் வளரும் பெண் குழந்தைகளை பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்து 'மேடர்-டே' என்ற பெண்களி பள்ளிக்கூடத்தில் சேர்த்தோம்.

என் மகள்களின் பெயர்,நகராட்சி அலுவலகம்... என்று மெனக்கெட்ட நீங்கள், இன்னும் கொஞ்சம் சிரமம் எடுத்து துருவி துருவி ஆராய்ந்திருந்திருக்கலாம்.

இங்கு பொதுவாக எல்லா பள்ளி கூடத்திலும் முதல் மொழிப் பாடம் ஆங்கிலம், இரண்டாம் மொழிப்பாடம் ஹிந்தி, மூன்றாம் மொழிப்பாடம் ப்ரெஞ்ச் அல்லது சமஸ்கிரதம்.

தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் இரண்டாம் மொழிப் பாடமாக இருப்பினும் ஹிந்தி கட்டாயம் படிக்கவேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் இரா.அன்புமணி ஆவர்கள் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 'மேடர்-டே' பள்ளியின் முதல்வர் சகோதரி டோரினாவாஸ் அவர்கள், சிறப்பு சலுகையாக என் மகள்கள் இருவரும் அவர்களின் தாய்மொழியான தமிழை மூன்றாம் மொழிப்பாடமாக அனுமதி அளித்தார்கள். இவர்கள் இருவருக்காக மட்டுமே தமிழாசிரியை ஒருவரை நியமிக்க முடியாத காரணத்தினால் லோதி எஸ்டேட்டில் உள்ள டெல்லி தமிழ்ப் பள்ளியில் படிக்க சிறப்பு அனுமதி அளித்துள்ளார்கள்.

தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் வெளியிடும் ஏழாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு உரைநடை, செய்யுள் பகுதி கொண்ட பாடபுத்தகங்களைத்தான் இவர்கள் படிக்கிறார்கள். மூன்றாம் மொழித் தேர்வு சமயம் கேள்வித்தாள்கள் தயாரித்து திருத்தி மதிப்பெண்களை 'மேடர்-டே' பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விடும்படி ஒரு புது ஏற்பாடு செய்யப்படிருக்கிறது.

இத்தனை சிரமும் எதற்காக? குழந்தைகள் தமிழைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் தான், ஏதோ துக்ளக் கேள்வி கேட்டு விட்டது என்பதற்காகவோ, தமிழ் பாதுகாப்பிற்காக போராடுகிறோம் என்பதற்காகவோ அல்ல, குடும்பமே தமிழின் மேல் உள்ள பற்றினால் பாசத்தினால் ஏப்ரல் மாதமே சிறப்பு அனுமதி வாங்கி விட்டோம்.

குழந்தைகள் மற்ற பாடங்களை விட தமிழில் எப்போதுமே எடுத்திருக்கிறார்கள். தாய்மேல் பாசத்தை காட்ட மற்றவர் சொல்லித் தரவேண்டியதில்லை, தமிழ்ப்பற்றை நீங்கள் சொல்லித் தந்து நாங்களோ நாங்களொ எங்கள் பிள்ளைகளோ தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

டெல்லியில் ஹிந்தி மொழியை படிக்காமல் ஒருவர் பள்ளி கூட படிப்பைக் கூட முடிக்க முடியாது, ஆனால் தமிழ் மொழியை படிக்காமல் தமிழ்நாட்டில் ஒருவர் பள்ளி,கல்லூரி படிப்பை முடிக்க முடியும்.

எல்லோருக்கும் இருக்கும் தாய் மொழிப்பற்று ஏன் தமிழனுக்கு இருப்பதில்லை? அதை உணர்த்துவதற்குதான் மருத்துவர் ஐயா அவர்கள் தமிழ்ப் பாதுகாப்பு போராட்டங்களை நடத்துகிறார்.

ஆங்கிலம் வேண்டாம் என்று கூறவில்லை. ஆங்கிலத்தை 12-ஆம் வகுப்புக்குள் ஒரு மொழிப்பாடமாக கற்று மாணவர்கள் ஆங்கில புலமை பெற வேண்டும். அதே சமயம் கட்டாயம் தமிழையும் பிழையின்றி பிற மொழிக் கலப்பில்லாமல் தெளிவாக பேச வேண்டும் என்பதே அவரின் அவா. அந்த உண்மையை புரிந்து கொள்ளக் கூடிய மனப் பக்குவம் தங்களுக்கு இல்லையா? அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறீர்களா?

ஒரு பிரபல பத்திரிக்கையாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தங்களுடைய பத்திரிக்கையில் தவறான தகவல்களை தந்திருப்பது எங்களுக்கு அதிர்ச்சியையும் மனவருத்தத்தையும் அளித்துள்ளது. ஆகவே என்னுடைய இந்த மறுப்பு கடித்தையும் வெளியிடுவீர்கள் என நம்புகின்றோம்.
- சௌமியா அன்புமணி
ஆசிரியர், பசுமை தாயகம் - சுற்று சூழல் சென்னை-34.

என்ன ஒரு அருமையான தலைப்பு, ஆசிரியரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
டோண்டு அய்யாவின் ஜோவின் கேள்விக்கான பதில் கீழே
//டோண்டு ஐயா,
உங்களுக்கு பிடித்த துக்ளக்-கின் இந்த வார இதழில் வெளிவந்துள்ள அன்புமணியின் துணைவியாரின் கடிதத்தை படியுங்கள் .அதோடு அதற்கு தலைப்பு கொடுத்திருக்கும் விதத்தில் சோ(மாரி)த்தனத்தை கொஞ்சம் கவனியுங்கள்.நன்றி!
# posted by ஜோ : July 30, 2005 8:57 PM

தலைப்பில் என்ன தவறை கண்டீர்கள் ஜோ அவர்களே?
"மாணவர்கள் ஆங்கிலப் புலமை பெற வேண்டும்" என்று அன்புமணி அவர்களின் மனைவி கூறியது உண்மைதானே? தலைப்பை நிர்ணயிப்பது ஆசிரியர். இதில் எந்த சோமாறித்தனத்தையும் நான் காணவில்லை.//

துக்ளக் ஆசிரியர் 'சோ' அவர்கள் கீழ் காணும் தலைப்புகளைக் கூட இந்த கடித்திற்கு தேர்ந்தெடுத்திருக்கலாம்.

1.இரண்டாம் மொழிப்பாடம் ஹிந்தி, மூன்றாம் மொழிப்பாடம் ப்ரெஞ்ச் அல்லது சமஸ்கிரதம் - மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணியின் மனைவி எழுதிகிறார்...

2.ஹிந்தி கட்டாயம் படிக்கவேண்டும் - மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணியின் மனைவி எழுதிகிறார்...

3.புரிந்து கொள்ளக் கூடிய மனப் பக்குவம் தங்களுக்கு இல்லை - மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணியின் மனைவி எழுதிகிறார்...

இன்னும் என்ன என்ன தலைப்பு வைக்கலாம் என ஒரு போட்டி வைப்போம் எல்லாம் நம் திறமையை காண்பிப்போம்.

டோண்டு அய்யாவின் இந்த பதிவிற்கான சில விளக்கங்கள்

//வலைப்பூ பாவிக்கும் பல அன்புமணி தாங்கிகள் இதைப் புரிந்து கொள்ளாமல் அவர் செயலுக்கு நியாயம் கற்பிக்கின்றனர்//
மேலே உள்ள தலைப்பு அதற்கு நியாயம் கற்பிக்கும் 'சோ'வின் தாங்கிகள் அன்புமணி தாங்கிகள் என கூறுவது வியப்பொன்றுமில்லை. 'சோ'வின் தாங்கிகள் என நான் குறிப்பிட முக்கிய காரணம் முதலில் அன்புமணி தாங்கி என்பதைப்போல 'சோ' தாங்கி என எழுதினால் 'சோ' விற்கும் 'தாங்கி' இடையில் உள்ள வெற்றிடம் காணமல் போய் வேறு அர்த்தம் கற்பிக்கப் படலாம், மேற்கண்ட தலைப்பிற்கே நியாயம் கற்பிக்கும் போது இது நடக்காது என என்னால் உறுதியாக கூற முடியாததால் எச்சரிக்கையாக 'சோவின்' என மாற்றிவிட்டேன்.

//தமிழ்நாட்டில் இருந்திருந்தால் தன் குழந்தைகளை தமிழ் பள்ளியிலேயே படிக்க வைத்திருப்பாராம். அப்பதிவாளரின் போறாத காலம் தில்லியில் இருபது வருடங்கள் இருந்து தன் பெண்ணை அப்பள்ளிகளில் ஒன்றில் படிக்க வைத்த என்னிடம் போய் அதைக் கூறினார். அவருக்கு அப்போதே தேவையான பதில் கூறினேன்.
//
சிறிது நாட்களுக்கு பிறகு இதற்கு பதிலாக நான் கூறியது தில்லியிலிருக்கும் நண்பருடன் பேசியபோது மேடர் டே பள்ளியின் உள் கட்டமைப்பு,ஆசிரியர்கள், தரம் ஆகியவற்றை பற்றி யும் மற்ற தமிழை ஒரு மொழிப்பாடமாக கற்றுத்தரும் பள்ளியின் தரம் பற்றி ஒப்பிட்டு பார்த்தால் மேடர் டே சிறந்த பள்ளி என்றார், எனவே வசதியாக தமிழை இரண்டாம் சொல்லித்தரும் பள்ளிகளின் கல்வி கட்டணம் குறைவு என்று கூறிய நீங்கள் தரத்தைப் பற்றி சொல்லவில்லை என்ற போது தான் தமிழ் கற்றுத்தரும் சிறந்த பள்ளிகள் தரமான பள்ளிகள் என்றார் வசதியாக மேட்டர் டே பள்ளியின் தரம் அந்த பள்ளிகளைவிட மேல் என மறுக்காமல், தமிழகத்திலே இருந்தால் நல்ல தமிழ் பள்ளிக்கூடத்தில் படிக்க வைத்திருப்பார் என கூறிய போது அந்த குழந்தைகளின் தாத்தாவிற்கு(மருத்துவர் இராமதாசு) தமிழ்நாட்டிலே தானே இருக்கின்றார் அவரிடத்திலில்லாத ஆள்,அம்பு படை பலமா அந்த குழந்தைகள் தமிழகத்திலேயே இருக்கலாமே, (அதாவது சிறிய குழந்தைகள் பெற்றோரை விட்டு பிரிந்திருக்க வேண்டும் அவர்களின் தந்தை, தாத்தா தமிழ் பற்றி பேசினால் ) இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது, விவாதம் வேறு திசைக்கு சென்றதால் இனி பேசிப் புண்ணியமில்லை என்று அந்த பதிவிலிருந்து ஒதுங்கிவிட்டேன்.

தரம் என்பது ஆளுக்கு ஆள் இடத்திற்கு இடம் மாறுபடும், உதாரணத்திற்கு அரசு ஊழியரின் குழந்தைக்கு நகராட்சிப் பள்ளியை விட கிறுத்துவ திருச்சபைகள் இலவசமாக நடத்தும் பள்ளிகள் தரமானது, பொறியாளருக்கு அதைவிட மேம்பட்ட பள்ளிகள், பொறியாளர் தரம் என்று நம்புவதையும் விட மேம்பட்ட பள்ளிகள் இல்லையா என்ன?

மேடர்-டே பள்ளியின் தரத்திற்கான ஒரு சிறிய உதாரணம்

Mater Dei school
AD-Venture

Beats

Indian Music Competition
roup song(Sr.)


Best Team
Over-all Best School

1st Position

http://www.dpsrkp.net/links/activity.htm

அய்யா கூறிய பள்ளி மேற்கண்ட சுட்டியில் எங்கே உள்ளது என எனக்கு தெரியாமல்.

(ஹைய்யா இனி மேடர்-டே பள்ளியின் இணைய கொ.ப.ச. குழலில் தான் என கேள்விகேட்கலாம் என நினைப்பவர்களே நான் ஓடிவிட்டேன்)

நான் பள்ளிகளின் தரம் பற்றி கூறியது கூட நண்பருடன் பேசியதின் அடிப்படையில் அமைச்சர் அன்புமணியுடன் பேசியதின் அடிப்படை என கூறவில்லை.

//இல்லாவிட்டால் தொண்டன் அடிபட்டு சாவான், அன்புமணிகள் மந்திரிகளாவார்கள்.//
தலைவன் கல்லடியும் சொல்லடியும் தலைமறைவு வாழ்க்கையயும் நடத்தி உயிரையும் பணயம் வைத்து தொண்டர்களை மட்டுமல்ல என் போன்ற சாதாரணரையும் வாழ வைத்ததால் தான் இன்று அன்புமணி அமைச்சராக உள்ளார், தலைவனுக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் அன்புமணி தந்தை இல்லாத பிள்ளையாகத் தான் வளர்ந்திருப்பார், எனவே அமைச்சராக அன்புமணியிருப்பதில் எங்களுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை.

இந்த விடயத்தில் பத்திரிக்கைகளின் பங்கு
பத்திரிக்கைகள் மிக சாதுரியமாக இந்த விடயத்தில் நடந்து கொண்டன, தினமலரும், குமுதமும் செய்தியாகவோ கட்டுரையாகவோ மேடர்-டே அன்புமணி குழந்தைகள் பற்றி குறிப்பிடவில்லை, வாசகர் கடிதம், இது உங்கள் இடம், அந்துமணி வாசகர் கேள்வி பதில்கள் என வாசகர்கள் பெயரை சொல்லிதான் எழுதின, ஏனென்றால் நாளை இந்த செய்தி பொய் என தெரிந்தால் எச்சரிக்கையாக வாசகர்கள் எழுதியது இது பத்திரிக்கை செய்தி இல்லையே இது என கூறிவிடலாம், வழக்கு என்று போனால் கூட தப்பிவிடலாம்.

எத்தனை முறை இந்த கடிதங்களை பிரசுரித்தனர் (உதவி ஆசிரியர்களே வாசகர்களின் பெயரில் கடிதம் எழுதியிருக்கலாம்), ஒரே ஒரு முறையாவது அன்புமணியிடம் செய்தியை உறுதி செய்து கொண்டனரா? எத்தனை முறை இந்த பிரச்சினைக்கு பிறகு அன்புமணியும் மருத்துவர் இராம்தாசுவிம் பேட்டியளித்தனர், ஒரே ஒரு முறையாவது இதைப் பற்றி கேள்விகேட்டனரா? (நமது எம்ஜியாரிலிருந்தும் முரசொலியிலிருந்தும் வரும் செய்திகளை தயவு செய்து உதாரணத்திற்கு காட்டாதீர்கள்), ஏன் அன்புமணியோ, மருத்துவர் இராமதாசுவோ சொல்லியிருக்கலாமே என கேள்வி கேட்பார்கள் உடனே, இப்படி வாசகர் கடிதங்களுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தால் மத்திய அமைச்சர் அன்புமணி , மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு வாசகர் கடிதங்களுக்கு பதில் சொல்வது மட்டுமே முழு நேர வேலையாக இருக்கும், இங்கே இணையத்திலே நான் சொல்லிக்கொண்டிருப்பது போல.

தின மலரும், குமுதமும் துக்ளக்கும் அமைச்சர் அன்புமணியின் மனைவியின் கடிதத்திற்கு பிறகு தங்களின் தவறான செய்தி மற்றும் பிரச்சாரத்திற்கு மன்னிப்பு கேட்பார்களா அவர்களின் பத்திரிக்கையில், இது பத்திரிக்கைகளுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தான்.

பத்திரிக்கைகள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன அவர்களுக்கு பாமக மீதும் அமைச்சர் அன்புமணி மீதும் மருத்துவர் இராமதாசுவின் மீதுமான காழ்ப்புணர்ச்சியை.

நான் வலைப்பதிய வந்ததன் முக்கிய நோக்கம் பாமகவைப்பற்றி எழுத அல்ல, ஆனால் பாமக மீதான நச்சு பிரச்சாரம் வலைப்பூக்களில் ஓங்கியிருந்த போது அதைப்பார்த்தும் எனக்கு தெரிந்த உண்மைகளை கருத்துகளை சொல்லாமல் இருந்தால் அது நான் செய்யும் துரோகம். அது மட்டுமின்றி prejudice மனப்பான்மையுள்ளவர்களிடம் எத்தனை எடுத்துக் கூறினாலும் மாற்ற முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும், பத்திரிக்கைகள் சில வலைப்பதிவர்களின் பாமக விரோத மனப்பாண்மை போக்கினால் பரப்பட்ட விடயங்கள் நடுநிலையாளர்களிடத்தில் படிந்திருக்கும், அவர்களுக்கு பாமக வின் மற்றொரு பக்கத்தையும் கோணத்தையும் காண்பிப்பது தான் என் நோக்கம், நடுநிலையாளர்கள் தான் என்னுடைய டார்கெட் ஆடியன்ஸ், அதில் பெருமளவு வெற்றியும் பெற்றேன் சிலருக்கு இதெல்லாம் எனக்கு தெரியாதே இப்போது தான் புரிந்தது என்றனர், தனி மடல்கள் நேரடி பேச்சுகள் மூலமாக எனக்கு இதெல்லாம் தெரியவந்தது. என் நோக்கமும் நிறைவேறியது.

பாமக வோ, மருத்துவர் இராமதாசுவோ, மத்திய அமைச்சர் அன்புமணியோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல, அவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று எங்கேயும் நான் குறிப்பிடவுமில்லை, நடுநிலையான எல்லோருக்கும் கடைபிடிக்கும் அளவுகோலோடு விமர்சனம் செய்யுங்கள், சோவின் தாங்கிகளாகவோ, வேறு எவரின் தாங்கிகளாகவோ இருந்து கொண்டு அன்புமணி தாங்கிகளை கேள்வி கேட்கும்முன் ஒரு நிமிடம் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள் அது சொல்லும்.

நான் வலைப்பதிய வந்ததன் முக்கிய நோக்கம் பாமகவைப்பற்றி எழுத அல்ல, என் எழுத்துக்கள் இதுவரை ஒரு 20 என்ற எண்ணிக்கையிலான நட்பு வட்டாரத்தில் இருந்தது அதை 200, 500 என விரிவாக்கிக் கொள்ளத்தான் இங்கே வந்தேன், இந்த பதிவிற்கு இத்தனை பெரிய விளக்க பதிவு எழுத வேண்டுமென்ற எண்ணமில்லை, ஆனால் என்னிடம் பதிலில்லாததால் தான் விளக்கம் தரவில்லை என்று குறிப்பிடப் படலாம் என்பதால் தான் எழுதினேன்.

இப்படி பதில் சொல்லிக்கொண்டே போக வேண்டியது தான், முடிவில்லா விவாதம் என் மற்ற எழுத்துக் களையும் பாதிக்குமென்பதால் இத்துடன் பாமக தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வேலையை நிறுத்துகின்றேன்.

பாமக பற்றி மீண்டும் அதே செட் கேள்விகளுடன் வந்தால் என் முந்தைய பதிவுகளில் இருக்கும் அதற்கான விடைகள், புதிய கேள்விகள் வந்தால் நேரம் கிடைத்தால் பதிலிறுக்கின்றேன்.

நன்றி : துக்ளக்
நன்றி : டோண்டு ராகவன் அய்யா
நன்றி : இத்தனை பொறுமையாக படித்த உங்களுக்கும்

எழுத்து பிழையிருப்பின் மன்னிக்கவும் இரண்டு மணி நேரங்கள் தட்டச்சு செய்தேன், நள்ளிரவிற்கு மேலாகிவிட்டதாலும் நாளை வேலைநாள் என்பதாலும் மீண்டும் படித்து பார்த்து சரி செய்ய முடியவில்லை

நன்றி

பல்லவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி

பல்லவர்கள் கி.பி.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் வட பகுதியையும் தற்போதைய ஆந்திர மாநிலத்தின் சில பகுதியையும் தக்கான பீடபூமி (தற்போதைய கர்நாடகாவில்)யின் சில பகுதியையும் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள்.

Image hosted by Photobucket.com

தமிழகத்தின் இருண்ட காலமாக சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கும் களப்பிரர்களின் ஆட்சிகாலத்தில் தமிழும் தமிழ்ப் புலவர்களுக்கும் விரட்டி விரட்டி கொல்லப்பட்டனர், மத சுதந்திரமில்லாத நிலை. இந்த இருண்ட ஆட்சியை விரட்டி பலம்மிக்க அரசமைத்தனர் பல்லவர்களும் பாண்டியர்களும்.

ஆறு நூற்றாண்டுகள் தமிழகத்தில் நல்லாட்சி புரிந்தனர் ஆனால் இவர்கள் பெயர் தமிழக பேரரசர்களின் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டு மூவேந்தர் என சேர சோழ பாண்டியர்களின் பெயர்கள் மட்டுமே எப்போதும் கூறப்படுகின்றது.

சேர(ல)ர்கள் கேரளர்கள் ஆகி பின் மலையாளிகள் ஆன பின்பும் இன்னமும் விடாமல் தமிழகத்தின் மூவேந்தர்களின் பட்டியலில் முதல் வேந்தர்களாக கூறுகின்றோம்.

சோழ,பாண்டிய மன்னர்களின் காலங்களில் இருந்த கலைகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் பல்லவர்களின் காலத்தில் கலை மிகவும் சிறந்தது விளங்கியது, யுவான் சுவாங் என்ற சீனப் பயணி பல்லவ ஆட்சிப் பற்றியும் கலைப் பற்றியும் மிகப் பெருமையாக குறிப்பிட்டுள்ளார், கம்போடியா,ஜாவா நாடுகளின் பல புகழ்பெற்ற கோவில்கள் பல்லவர்களின் கட்டிட கலையை சார்ந்தவைகள், உலக அதிசயமான ஆங்கர்-வாட்டை(கம்போடியா) உருவாக்கிய சூரியவர்மன் II மற்றும் ஜெயவர்மன் என்ற அரசர்கள் பல்லவர் வழி வந்தவர்கள் என சில குறிப்புகள் வரலாற்றாசிரியர்கள் சிலரால் தரப்படுகின்றன, வரலாற்றில் தமிழகத்தின் கலைகளின் பொற்காலம் என குறிப்பிடப்படுவது பல்லவர்களின் காலம் தான்.

மாமல்லபுரம், காஞ்சி கோவில்கள் எல்லாம் அவர்களின் கட்டிட கலைக்கான சான்றுகள்,
மாமல்லபுர குகைக் கோயில்கள் சிற்பங்கள் உலகின் தலை சிறந்த கட்டிட கலைக்கான சான்றுகள்.

















மாமல்லபுரம்கம்போடியா
Image hosted by Photobucket.comImage hosted by Photobucket.com
Image hosted by Photobucket.comImage hosted by Photobucket.com
Image hosted by Photobucket.comImage hosted by Photobucket.com


வீரத்திலும் யாருக்கும் குறைந்தவர்களில்லை, மொத்த தமிழினமும் களப்பிரர்களிடம் அடிமைபட்டிருந்த போது அதிலிருந்து மீட்டதில் பெரும் பங்கு பல்லவர்களுக்கு.
ஆறாம் நூற்றாண்டில் சிம்ம விஷ்ணு என்ற பல்லவ அரசன் இலங்கையையும் மற்ற பிற தென் மாநில அரசுகளையும்( சோழர்களையும் சேர்த்து) வெற்றி கொண்டு பல்லவ பேரரசின் கீழ் கொண்டு வந்தார்,எல்லையிலிருந்த சாளுக்கியர்களுடன் நடந்த போர்களும் பாண்டியர்களுடன் நடந்த போர்களில் பெற்ற வெற்றியும் பல்லவர்களின் வீரத்தை பறைசாற்றுகின்றன, யாராலும் முறியடிக்கப்படமுடியாமலிருந்த இரண்டாம் புலிகேசி (ஹர்ஷவர்த்தனர் என்ற வட நாட்டு பேரரசரே இவரிடம் தோல்வியுற்றார்) நரசிம்ம வர்மருடனான வாதாபி போரில் உயிரையும் இழந்து வாதாபி நகரே தீக்கிரையானது.

கலைகளில் சிறந்து விளங்கினர், வீரத்தில் சிறந்து விளங்கினர், பின் ஏன் சேர சோழ பாண்டியர்களுக்கு தரப்பட்டுள்ள இடம் இவர்களுக்கில்லை?

சோழ பாண்டியர்களின் ஆட்சியில் சைவ மதத்தின் ஆதிக்கம் அதிகம், இந்த ஆட்சிகள் சைவ மதத்தின் ஆட்சியாகவே நடந்தது, ஆனால் உண்மையான மத சார்பற்ற ஆட்சி பல்லவர்களின் காலத்தில் தான், சைவம்,வைணவம் மட்டுமின்றி பௌத்த மதமும், ஜைன மதமும் சமமாக மதிக்கப்பட்டு நடத்தப்பட்டது, எல்லா மத்தினரின் வளர்ச்சிக்கும் அரசின் ஆதரவு கிடைத்தது, பல பௌத்த மடங்கள் காஞ்சியிலிருந்தன.

சமய சார்பற்ற கொள்கை கடைபிடித்த பல்லவர்களுக்கு ஏன் சேர சோழ பாண்டியர்களுக்கு தமிழக வரலாற்றில் தரப்பட்ட முக்கியதுவம் தரப்படவில்லை.

சேர சோழ பாண்டியர்களை மூவேந்தர்கள் என்று குறிப்பிடும் சொல்லாட்சி சென்ற நூற்றாண்டில்தான் அதிகளவில் புழக்கத்தில் வந்தது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து சென்ற நூற்றாண்டுவரையிலான தமிழ் நூல்களில் எந்த இடத்திலும் சேர சோழ பாண்டியர்களை மூவேந்தர்களாக குறிப்பிட்ட நூல்கள் எதுவுமில்லை. பின் எப்படி திடீரென சேர சோழ பாண்டியர்களுக்கு தரப்பட்ட உயரிய இடம் பல்லவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது, இதற்கான காரணமென்ன?

சமகாலத்திலும் இதற்கு முந்தைய அரை நூற்றாண்டிலும் தமிழ் வேந்தர்களெனில் சேர சோழ பாண்டியர்கள் என்ற புகழ் பிரச்சாரம் நடத்தப்பட்டது, மக்களுக்கும் தமிழ் வேந்தர்களெனில் சேர சோழ பாண்டியர்கள் தான் முதலில் நினைவுக்க வருவர்,

இதற்கென்ன காரணம்,

நான் அந்த கால கட்டத்தை சேர்ந்தவனில்லை என்பதால் என் சிற்றறிவுக்கு இன்னமும் சரியான காரணம் புலப்படவில்லை, பல முறை வரலாற்று புத்தகங்களில் முயற்சித்து பார்த்தும் சரியான பதில் கிடைக்கப்படவில்லை.

ஒரு சில வரலாற்று ஆசிரியர்கள் வழியாக கிடைத்த ஒரே ஒரு கருத்து, பல்லவர்கள் தமிழர்கள் அல்ல,

இவர்களுடைய பூர்வீகம் எது என்று பல விவாதங்கள் நடந்தன. ஆனால் இவர்கள் தமிழர்கள் என்ற முடிவுதான் பல ஆராய்ச்சியாளர்களால் பல ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது, ஆங்காங்கே சில வரலாற்று ஆசிரியர்கள் இந்த கருத்தை எதிர்த்தாலும். இவர்கள் தமிழர்களல்ல என்றும் வட நாட்டு பிராமணர்கள் என கூறும் சில வரலாற்று ஆசிரியர்களின் முக்கிய வாதம் பல்லவர்கள் அசுவமேதயாகம் செய்தனர் என்பதும் இவர்களின் சில செப்பேடுகள்,கல்வெட்டுகள் வட மொழியிலுள்ளன என்பது, இதை மற்ற சில வரலாற்று ஆசிரியர்கள் அசுவமேத யாகம் பிராமணர்கள் மட்டும் செய்வதல்ல பல சத்திரிய அரசர்களும் செய்தனர், இரண்டாவதாக பல்லவர்கள் தெலுங்கர் என்ற கருத்திற்கு ஆதாரமாக தெலுங்கிலும் வட மொழியிலும் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் வெளியிட்டுள்ளது, இதற்கான காரணம் பல்லவர்கள் தெலுங்கு அரசின் கீழ் சிற்றரசர்களாக இருந்தவர்கள் அந்த கால கட்டத்தில் வட மொழியின் ஆதிக்கம் அரசுகளில் இருந்தது (ஆதாரமாக சேர சோழ பாண்டியர்களின் சில கல்வெட்டுகள் வட மொழி, தெலுங்கில் இருந்ததை காண்பிக்கின்றனர்) எனவே தான் தெலுங்கும் வட மொழியில் ஆட்சி மொழியில் கலந்திருந்தது அதுவும் கூட தொடக்கத்தில் மட்டுமே பிற்காலத்தில் முழுக்க முழுக்க தமிழே ஆட்சி மொழியாக இருந்தது, தற்போது ஆங்கிலேயர்கள் வெளியேறிவிட்டாலும் இன்னமும் ஆங்கிலேயர்களின் சட்டத்தையும் மொழியையும் கடைபிடிக்கின்றோமே என்ற உதாரணத்துடன் பல்லவர்கள் தெலுங்கர்களோ, வட நாட்டு பிராமணர்களோ அல்ல என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர், மேலும் பல்லவ பேரரசு வீழ்ந்த பின் அரையர்(சம்புவரையர்),வென்று மண் கொண்ட உடையார், காஞ்சிவரத்தான் என்ற பட்ட பெயர்களுடன் ஆங்காங்கே குறுநில மன்னர்களாக ஆட்சி செய்தனர்

12ம் நூற்றாண்டில் பல்லவர்களின் வழிவந்த செங்கண்ணன் என்ற அரைய அரசன் படைவீடு (தற்போது படவேடு என்றழைக்கப்படும் ஊர்) என்ற ஊரை தலைநகராகக் கொண்டு சுயாட்சி புரிந்தார், சாளுக்கிய நாட்டிற்கு தப்ப முயன்ற சோழ மன்னனை போரிட்டு சிறைபிடித்தார், அவரைப்பற்றிய பல பாடல்கள் அவர் பல்லவ வழி வந்ததாக கூறுகின்றது. இவரைப்பற்றி வேறொரு பதிவில் விரிவாக பார்ப்போம்.

ஆக சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பிய போதும் பல்லவர்கள் தமிழர்கள் என்பதை நம்புகின்றனர்.

காரணம்-1*
கடந்த அரை நூற்றாண்டு காலமாக வரலாறு, கதைகள் வழியாகத்தான் சமூகத்திற்கு சென்றடைந்தது, சில வரலாற்று புனைக்கதை எழுத்தாளர்கள் மிக அழகாக எழுதினர், அதில் முதன்மையானவர் கல்கி, பொன்னியின் செல்வன் நாவல் வழியாகத்தான் பலருக்கும் சோழர்கள் பற்றி ஒரு பெரிய தாக்கம் வந்தது. சிவகாமியின் சபதம் படித்துதான் நரசிம்ம வர்ம பல்லரும் நாகநந்தியும் புலிகேசியும் பெரிய தாக்கமமேற்படுத்தியது மக்களின் மனதில்.

பொன்னியின் செல்வனில் முக்கிய கதை மாந்தர்களாக அருள்மொழிவர்மன்(ராஜ ராஜ சோழன்), வந்தியத் தேவன்,குந்தவை, ஆதித்த கரிகாலன் மற்றும் பலர், இதில் குறிப்பிட்டவர்கள் வரலாற்றில் வாழ்ந்தவர்கள், கதை படிக்கும் போது அதை கதையாக படிக்காமல் வரலாற்று நிகழ்ச்சியாக படித்தனர் மக்கள், அதனால் சோழ அரசர்களின் மீது ஒரு பிடிப்பு வந்தது.


சிவகாமியின் சபதத்தில் முக்கிய கதை மாந்தர்களாக நரசிம்ம வர்மர், சிவகாமி(முழுக்க கற்பனை பாத்திரம்), நாக நந்தி மற்றும் பலர், பொன்னியின் செல்வன் படிக்கும்போது சோழ அரசர்கள் மீது படியும் ஒரு பிரமிப்பு சிவகாமியின் சபதத்தில் பல்லவர்களின் மேல் வருவதில்லை மேலும்
விஜயாலய சோழன், ஆதித்த கரிகாலன், சுந்தர சோழன், மதுராந்த்தக சோழன் (இந்த பாத்திரம் முழுக்க முழுக்க கற்பனை, பெயரைத்தவிர, இதை கல்கி அவர்களே குறிப்பிட்டுள்ளார்) இவர்களின் வீரத்தை,புகழை புகழ்ந்து கூறப்பட்டதை போல சிம்ம வர்மன்,விஷ்ணு வர்மன், ஸ்கந்ட்த வர்மன், நந்தி வர்மன், புத்த வர்மன் பற்றியும், மகேந்திர வர்மர் மற்றும் முந்தைய பல்லவ வேந்தர்களின் புகழ் பாடப்படவில்லை, மேலும் கதையே பல்லவர்கள் அடைந்த தோல்விக்கு பழிவாங்குவதற்காக ஒன்பதாண்டுகள்** கடினப்பட்டு படை சேர்த்து சாளுக்கியர்களை வென்றது, இங்கே வந்தியத்தேவனும் அருள்மொழிவர்மனு காட்டிய அளவிற்கான ஹீரோயிசம் இந்த கதையில் இல்லை, எனவே ஒரு விதமான ஆச்சரிய மனப்பான்மையோடு படிக்கவில்லை, விளைவு இதன் எண்ணம் பல்லவர்களைப் பற்றிய உண்மையான கருத்துகளின் மீதும் இதே நிழல் படிந்தது.

காரணம்-2 ***
சோழர்களும் பாண்டியர்களும் பல இடங்களில் தேவர் என்ற பெயரில் விளிக்கப்படுகின்றனர், இதன் விளைவாக தமிழ் நாட்டில் தேவர்கள் என்ற பெரும் எண்ணிக்கையிலுள்ள சாதியினர் இவர்களை தன் மூதாதையர்கள் என்றெண்ணி பெருமை அடைந்தனர், அதன் பிறகு புகழ் பரப்பப்பட்டது.

வரலாற்று குறிப்புகள் சென்னை பல்கலை கழகத்தின் இளங்கலை, முதுகலை பட்டத்திற்கான தமிழக வரலாறு பாடத்திட்டத்திற்கான புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டு என் நினைவிலிருந்ததை கொண்டு எழுதப்பட்டது, புத்தக ஆசிரியரின் பெயர், பதிப்பகம், பக்க குறிப்புகள் நினைவிலில்லை, பிறகு அந்த புத்தகங்களை பார்த்து குறிப்பு தருகின்றேன்.

* - கல்கியின் மீதான விமர்சனமாக வைக்கவில்லை, என் பார்வை, புரிதலாகத்தான் இதை வைக்கின்றேன்.

** - சரியான வருட கணக்கு தெரியவில்லை

*** - எந்த சாதியையும் விமர்சித்து எழுதவில்லை, என் சந்தேகமே இது, இல்லை என்பதற்கான சரியான விளக்கமோ ஆதாரங்களோ தரப்பட்டால் என் புரிதலை மாற்றிக் கொள்கின்றேன்.

கருவாகி உருவாகி - நம்பிக்கை கவிதை



Image hosted by Photobucket.comImage hosted by Photobucket.com




கருவாகி உருவானதே
கடும் போட்டியில்தானே
களைத்து தளர்வதேன் ?

வாலும் தலையும் வைத்து
வாகை சூடினாயே
வாட்டமேன் முழு ஆளாய்?

வீறுகொண்டெழு, காத்திருக்கிறாள்
வெற்றி தேவதை உன் வழியில்

பின்குறிப்பு

ஊக்கத்திற்கு நன்றி

திரு.நாராயணன் வெங்கிட்டு அவர்களின் நம்பிக்கை கவிதை பதிவு

மூன்றாவது முறை

ஆர்வ கோளாறு 30
எனக்கு இன்று மின்னஞ்சலில் வந்த மின் மடலையும் அது தொடர்பான பிற மடல்களையும் இங்கே பதிவிட்டுள்ளேன், ஆனால் இரகசியம் கருதி (நண்பர்கள் அடிக்க வந்து விடுவர்) மின் அஞ்சல் முகவரிகள் நீக்கப்பட்டுள்ளன...

ஆனாலும் தமிழ்மணம் தொடர்ந்து திரட்ட மாட்டேன் என அடம் பிடிப்பதால் என்ன செய்வது அதனால் இங்கே சுட்டுங்கள் ஆர்வ கோளாறு 30

ஆர்வ கோளாறு 30

எனக்கு இன்று மின்னஞ்சலில் வந்த மின் மடலையும் அது தொடர்பான பிற மடல்களையும் இங்கே பதிவிட்டுள்ளேன், ஆனால் இரகசியம் கருதி (நண்பர்கள் அடிக்க வந்து விடுவர்) மின் அஞ்சல் முகவரிகள் நீக்கப்பட்டுள்ளன...

From:
Sent: Thursday, July 28, 2005 2:34 PM
To:
Subject: TOP 100!! box office film collections(look at place 30)



Look at the New York Times Statistics:

Check out the rank 30

really amazing ... isn't it..






New York Times


|----+---------------------------------------------------+----------------|
| Ran| Title | Worldwide Box|
| k | | Office|
|----+---------------------------------------------------+----------------|
| 1.| Titanic (1997) |$1,835,300,000|
|----+---------------------------------------------------+----------------|
| 2.| The Lord of the Rings: The Return of the King |$1,129,219,252|
| | (2003) ||
|----+---------------------------------------------------+----------------|
| 3.| Harry Potter and the Sorcerer's Stone (2001) |$968,600,000|
|----+---------------------------------------------------+----------------|
| 4.| Star Wars: Episode I - The Phantom Menace (1999) |$922,379,000|
|----+---------------------------------------------------+----------------|
| 5.| The Lord of the Rings: The Two Towers (2002) |$921,600,000|
|----+---------------------------------------------------+----------------|
| 6.| Jurassic Park (1993) |$919,700,000|
|----+---------------------------------------------------+----------------|
| 7.| Shrek 2 (2004) |$880,871,036|
|----+---------------------------------------------------+----------------|
| 8.| Harry Potter and the Chamber of Secrets (2002) |$866,300,000|
|----+---------------------------------------------------+----------------|
| 9.| Finding Nemo (2003) |$865,000,000|
|----+---------------------------------------------------+----------------|
| 10.| The Lord of the Rings: The Fellowship of the Ring |$860,700,000|
| | (2001) ||
|----+---------------------------------------------------+----------------|
| 11.| Independence Day (1996) |$811,200,000|
|----+---------------------------------------------------+----------------|
| 12.| Spider-Man (2002) |$806,700,000|
|----+---------------------------------------------------+----------------|
| 13.| Star Wars (1977) |$797,900,000|
|----+---------------------------------------------------+----------------|
| 14.| Harry Potter and the Prisoner of Azkaban (2004) |$789,458,727|
|----+---------------------------------------------------+----------------|
| 15.| Spider-Man 2 (2004) |$783,577,893|
|----+---------------------------------------------------+----------------|
| 16.| The Lion King (1994) |$783,400,000|
|----+---------------------------------------------------+----------------|
| 17.| E.T. the Extra-Terrestrial (1982) |$756,700,000|
|----+---------------------------------------------------+----------------|
| 18.| The Matrix Reloaded (2003) |$735,600,000|
|----+---------------------------------------------------+----------------|
| 19.| Forrest Gump (1994) |$679,400,000|
|----+---------------------------------------------------+----------------|
| 20.| The Sixth Sense (1999) |$661,500,000|
|----+---------------------------------------------------+----------------|
| 21.| Star Wars: Episode III - Revenge of the Sith |$660,390,871|
| | (2005) ||
|----+---------------------------------------------------+----------------|
| 22.| Pirates of the Caribbean: The Curse of the Black |$653,200,000|
| | Pearl (2003) ||
|----+---------------------------------------------------+----------------|
| 23.| Star Wars: Episode II - Attack of the Clones |$648,200,000|
| | (2002) ||
|----+---------------------------------------------------+----------------|
| 24.| The Incredibles (2004) |$624,037,578|
|----+---------------------------------------------------+----------------|
| 25.| The Lost World: Jurassic Park (1997) |$614,300,000|
|----+---------------------------------------------------+----------------|
| 26.| The Passion of the Christ (2004) |$604,370,943|
|----+---------------------------------------------------+----------------|
| 27.| Men in Black (1997) |$587,200,000|
|----+---------------------------------------------------+----------------|
| 28.| Star Wars: Episode VI - Return of the Jedi (1983) |$572,700,000|
|----+---------------------------------------------------+----------------|
| 30.| Chandramuki (2005) |$560,320,050|
|----+---------------------------------------------------+----------------|
| 31.| Armageddon (1998) |$554,600,000|
|----+---------------------------------------------------+----------------|
| 32.| Mission: Impossible II (2000) |$545,300,000|
|----+---------------------------------------------------+----------------|
| 33.| Home Alone (1990) |$533,800,000|
|----+---------------------------------------------------+----------------|
| 34.| Star Wars: Episode V - The Empire Strikes Back |$533,800,000|
| | (1980) ||
|----+---------------------------------------------------+----------------|
| 35.| Monsters, Inc. (2001) |$528,900,000|
|----+---------------------------------------------------+----------------|
| 36.| The Day After Tomorrow (2004) |$527,939,919|
|----+---------------------------------------------------+----------------|
| 37.| Ghost (1990) |$517,600,000|
|----+---------------------------------------------------+----------------|
| 38.| Terminator 2: Judgment Day (1991) |$516,800,000|
|----+---------------------------------------------------+----------------|
| 39.| Aladdin (1992) |$501,900,000|
|----+---------------------------------------------------+----------------|
| 40.| Indiana Jones and the Last Crusade (1989) |$494,800,000|
|----+---------------------------------------------------+----------------|
| 41.| Twister (1996) |$494,700,000|
|----+---------------------------------------------------+----------------|
| 40.| Toy Story 2 (1999) |$485,700,000|
|----+---------------------------------------------------+----------------|
| 41.| Troy (2004) |$481,228,348|
|----+---------------------------------------------------+----------------|
| 42.| Saving Private Ryan (1998) |$479,300,000|
|----+---------------------------------------------------+----------------|
| 43.| Jaws (1975) |$470,600,000|
|----+---------------------------------------------------+----------------|
| 44.| Pretty Woman (1990) |$463,400,000|
|----+---------------------------------------------------+----------------|
| 45.| Bruce Almighty (2003) |$458,900,000|
|----+---------------------------------------------------+----------------|
| 46.| The Matrix (1999) |$456,300,000|
|----+---------------------------------------------------+----------------|
| 47.| Gladiator (2000) |$456,200,000|
|----+---------------------------------------------------+----------------|
| 48.| Shrek (2001) |$455,100,000|
|----+---------------------------------------------------+----------------|
| 49.| Mission: Impossible (1996) |$452,500,000|
|----+---------------------------------------------------+----------------|
| 50.| Pearl Harbor (2001) |$450,400,000|
|----+---------------------------------------------------+----------------|
| 51.| Ocean's Eleven (2001) |$444,200,000|
|----+---------------------------------------------------+----------------|
| 52.| The Last Samurai (2003) |$435,400,000|
|----+---------------------------------------------------+----------------|
| 53.| Tarzan (1999) |$435,200,000|
|----+---------------------------------------------------+----------------|
| 54.| Meet the Fockers (2004) |$432,667,575|
|----+---------------------------------------------------+----------------|
| 55.| Men in Black II (2002) |$425,600,000|
|----+---------------------------------------------------+----------------|
| 56.| Die Another Day (2002) |$424,700,000|
|----+---------------------------------------------------+----------------|
| 57.| Dances with Wolves (1990) |$424,200,000|
|----+---------------------------------------------------+----------------|
| 58.| The Matrix Revolutions (2003) |$424,000,000|
|----+---------------------------------------------------+----------------|
| 59.| Cast Away (2000) |$424,000,000|
|----+---------------------------------------------------+----------------|
| 60.| Mrs. Doubtfire (1993) |$423,200,000|
|----+---------------------------------------------------+----------------|
| 61.| The Mummy Returns (2001) |$418,700,000|
|----+---------------------------------------------------+----------------|
| 62.| Terminator 3: Rise of the Machines (2003) |$418,200,000|
|----+---------------------------------------------------+----------------|
| 63.| The Mummy (1999) |$413,300,000|
|----+---------------------------------------------------+----------------|
| 64.| Batman (1989) |$413,200,000|
|----+---------------------------------------------------+----------------|
| 65.| Rain Man (1988) |$412,800,000|
|----+---------------------------------------------------+----------------|
| 66.| The Bodyguard (1992) |$410,900,000|
|----+---------------------------------------------------+----------------|
| 67.| Signs (2002) |$407,900,000|
|----+---------------------------------------------------+----------------|
| 68.| X2 (2003) |$406,400,000|
|----+---------------------------------------------------+----------------|
| 69.| Robin Hood: Prince of Thieves (1991) |$390,500,000|
|----+---------------------------------------------------+----------------|
| 70.| Gone with the Wind (1939) |$390,500,000|
|----+---------------------------------------------------+----------------|
| 71.| Raiders of the Lost Ark (1981) |$383,900,000|
|----+---------------------------------------------------+----------------|
| 72.| Grease (1978) |$379,800,000|
|----+---------------------------------------------------+----------------|
| 73.| Beauty and the Beast (1991) |$378,300,000|
|----+---------------------------------------------------+----------------|
| 74.| Ice Age (2002) |$378,300,000|
|----+---------------------------------------------------+----------------|
| 75.| Godzilla (1998) |$375,800,000|
|----+---------------------------------------------------+----------------|
| 76.| What Women Want (2000) |$370,800,000|
|----+---------------------------------------------------+----------------|
| 77.| The Fugitive (1993) |$368,700,000|
|----+---------------------------------------------------+----------------|
| 78.| True Lies (1994) |$365,200,000|
|----+---------------------------------------------------+----------------|
| 79.| Die Hard: With a Vengeance (1995) |$365,000,000|
|----+---------------------------------------------------+----------------|
| 80.| Notting Hill (1999) |$363,000,000|
|----+---------------------------------------------------+----------------|
| 81.| Jurassic Park III (2001) |$362,900,000|
|----+---------------------------------------------------+----------------|
| 82.| Hitch (2005) |$361,175,142|
|----+---------------------------------------------------+----------------|
| 83.| There's Something About Mary (1998) |$360,000,000|
|----+---------------------------------------------------+----------------|
| 84.| Planet of the Apes (2001) |$358,900,000|
|----+---------------------------------------------------+----------------|
| 85.| The Flintstones (1994) |$358,500,000|
|----+---------------------------------------------------+----------------|
| 86.| Toy Story (1995) |$358,100,000|
|----+---------------------------------------------------+----------------|
| 87.| Minority Report (2002) |$358,000,000|
|----+---------------------------------------------------+----------------|
| 88.| A Bug's Life (1998) |$357,900,000|
|----+---------------------------------------------------+----------------|
| 89.| The Exorcist (1973) |$357,500,000|
|----+---------------------------------------------------+----------------|
| 90.| My Big Fat Greek Wedding (2002) |$356,500,000|
|----+---------------------------------------------------+----------------|
| 91.| Basic Instinct (1992) |$352,700,000|
|----+---------------------------------------------------+----------------|
| 92.| The World Is Not Enough (1999) |$352,000,000|
|----+---------------------------------------------------+----------------|
| 93.| GoldenEye (1995) |$351,500,000|
|----+---------------------------------------------------+----------------|
| 94.| Ocean's Twelve (2004) ||*&*&^*&^*^&*&
|----+---------------------------------------------------+----------------|

------------------------------------------------------
என் பதில்
From:
Sent: Thursday, July 28, 2005 2:38 PM
To:
Subject: RE: TOP 100!! box office film collections(look at place 30)


Where did you find this information??

Donot try to make others fool

I will give you exact statistics

-------------------------------------------------
From:
Sent: Thursday, July 28, 2005 2:39 PM
To:
Subject: RE: TOP 100!! box office film collections(look at place 30)

enakku vera vela illa paaarunga..itha ukkanthu analyse panna...
enakku vanthathaa ungalakku forward paani irukein..thats it...
---------------------------------------------------
From:
Sent: Thursday, July 28, 2005 3:26 PM
To:
Subject: RE: TOP 100!! box office film collections(look at place 30)



OKOK but see my analysis



The total population of Tamilians all over the world 7 crores



deduct 0.5 crore of Old (age above 65) and 0.5 crore of children(age between 0-7), remaining 6 crores



if consider 50% of the people seen this movie then viewers are 3 crores



each ticket is Rs.50 (this is high amount, actually Rs.25 to Rs.30) 3*50 = 150 crores



150,00,00,000 / 43 = USD 3,488,372



if consider 100% of the people seen this movie then 6 crores



300,00,00,000 / 43 = USD 6,976,744



That would be the maximum collection (even rajini fans won't believe my calculation)



The Fack information spreaded is Chandramuki (2005) |$560,320,050



Which site you got this info, tell me I want to send a mail to that site



Thanks

-------------------------------
மற்றொரு குசும்பு நண்பர்

From:
Sent: Thursday, July 28, 2005 3:48 PM
To:
Subject: RE: TOP 100!! box office film collections(look at place 30)



Oru thadava partha nooru thadava partha mathri..



so..USD 6,976,744 X 100 = USD 697, 674,400



Kooti kalichu paru... kanakku sariya varum........... :) ha ha ha...
---------------------------------------------------------
From:
Sent: Thursday, July 28, 2005 5:22 PM
To:
Subject: RE: TOP 100!! box office film collections(look at place 30)

Find the following URL for TOP 50!! Box office film collections J



http://www.boxofficeguru.com/blockbusters.htm
------------------------------------------------------------

ஹி ஹி அங்கே பார்த்தால் முப்பதாவது படம்

30 How The Grinch Stole Christmas Nov 00 Universal 260.0

செக்கூலரிசம் - 8 வரி கவிதை



பிராமண எதிர்பென எத்தனை நாள் ஜல்லியடிப்பீர் நீங்கள்
மரம் வெட்டியென எப்போதும் ஜல்லியடிப்போம் நாங்கள்

திருமாவின் சிங்கப்பூர் பயணம் லூஸ்மோகனின் கோயம்பேடுபயணம்
அத்வானியின் பாக்கிஸ்தான் பயணம் மூச்...

அன்புமணியின் அரசியல் பிரவேசம் பேசுவோம்
தினகரனின் அரசியல் பிரவேசம் மூச்...

ஷங்கர் அன்னியனில் கற்பனையாக காண்பித்தால் கலையாக பார் என்போம்
பத்மா பார்த்ததை எழுதினால் கும்பலாக வந்து குதிப்போம்

பின்குறிப்பு
இந்த கவிதை(யா?)! எல்லோரையும் குறிவைத்து எழுதவில்லை
ஒரு குறிப்பிட்ட 5 , 6 பேரின் செக்கூலரிசம் நினைவுக்கு வந்தது எழுதிவிட்டேன்
மற்ற யாரையும் குறிப்பிடுவன இல்லை...
யாரையேனும் புண்படுத்தினால் என்னை மன்னிக்கவும்

பாபரும் ரகுபதியும்

பாபரென்றாலே வழக்கமாக நினைவுக்கு வருபவை/வர்கள் மசூதியும்,இராமரும் அத்வானியும் தான் கி.பி.1483 லே துருக்கியில் பிறந்து வாழ்நாள் முழுவதும் போர் போரென வாழ்ந்தவர், கி.பி 1526 லே பானிப்பட்டில் இப்ராஹிம் லோடியுடனான போரில் அரை நாளிலே இப்ராஹிம் லோடியையும் அவரின் படைவீரர்கள் 15,000 பேர்களையும் கொன்று கனுக்காலளவு ஓடிய குருதி வெள்ளத்திலே நடந்து தில்லி சிம்மாசனம் ஏறினார்.

கோவை உடையாம்பாளையம் எம்.ஜி.ஆர் வீதியில் வசிக்கும் ரகுபதிக்கு சொந்தமான சாப்பாட்டுக்கடை உள்ளது, கி.பி.2003 ல் சந்திரகலா என்ற பெண்மனியுடன் திருமணம் நடந்தது

பாபருக்கு ஹிமாயூன் என்கிற புத்திரன், சரியாக சொல்ல வேண்டுமென்றால் நோஞ்சான் பிள்ளை அவர், பிறந்ததிலிருந்து பலமுறை நோய்வாய்பட்டு சாவின் விளிம்பை தொட்டு வந்தவர்.
காந்தகாரில் எதிரிகளின் தாக்குதலிலிருந்து தன் உயிரை பணயம் வைத்து ஹிமாயூனை காப்பற்றி வந்தார் பாபர்

ரகுபதிக்கு விக்னேஷ் என்ற ஆண் குழந்தை பிறந்தது,சாப்பாட்டுக்கடையில் வியாபாரம் சரியில்லை, குடிப்பதற்கு பணம் இல்லை, இதெல்லாம் பிள்ளையினால் தான் என சோதிடர்கள் சொல்ல பிள்ளையை மாமியார் வீட்டில் விட்டு வரவேண்டுமென மனைவியை கொடுமை படுத்தினான்

ஹிமாயூனை கடுமையான நோய் பீடித்து படுக்கையில் வீழ்த்தியது, இந்த முறை அத்தனை மருத்துவர்களும் கை விட்டுவிட்டனர், இளவரசரின் உயிர் பிரியும் நொடியை எதிர்பார்த்து இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்ய காத்திருந்தனர்

தாய்பாசம் இழுக்க சந்திரகலா தன் ஒன்பது மாத பச்சைக் குழந்தையை மீண்டும் வீட்டிற்கு தூக்கிக் கொண்டு வந்தாள்

பாபர் உள்ளம் கலங்கினார், இறைவனிடம் வேண்டினார், இறைவா என் உயிரை எடுத்துக் கொள் என் மகன் ஹிமாயூனை பிழைக்க வை என மனமுருகி வேண்டினார், அன்ன ஆகாரமின்றி நாட் கணக்கில் தொழுதார்

குழந்தையை மீண்டும் பார்த்தவுடன் கொதித்தான் ரகுபதி, என்னை கொல்ல வந்த எமனே என்று குழந்தையை பிடுங்கிக் கொண்டு அறையினுள் ஓடி தாழிட்டுக்கொண்டான்

பாபரின் குரலுக்கு இறைவன் செவி சாய்த்தார், படுக்கையிலிருந்த ஹிமாயூன் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேற பாபர் நோயுற்று படுக்கையில் விழுந்தார்

ஒன்பது மாத பச்சை குழந்தையை தன் மகனை அடித்த அடியில், சந்திரகலாவின் அலறலை கேட்டும் எம்.ஜி.ஆர் நகர் மக்கள் திரண்டு அந்த குடிகார கொடுமைக்கார தந்தையிடமிருந்து குழந்தையை பிடுங்கினர்.

ஹிமாயூன் முழுவதும் குணமடைந்த போது பாபர் இறந்திருந்தார், தன் மகனை காப்பாற்றி விட்டோம் என்ற முழு மகிழ்ச்சியோடுதான் அவர் மரணத்தை வரவேற்றிருப்பார்

ஆனால் மருத்துவனை போவதற்குள் குழந்தை விக்னேஷ் இறந்து விட்டான், அப்பன் ரகுபதியோ அடிச்சே செத்துபோச்சி, என் உயிரை எடுக்க வந்தான் அதான் நான் அவன் உயிரை எடுத்துட்டேன் என கொஞ்சம் கூட குற்ற உணர்வின்றி காவலர்களிடம் வாக்குமூலம் கொடுத்தான்

போர்,ரத்தம், அரைநாளில் 15,000 உயிர்களை குடித்த சாவுக்கு அஞ்சாத ஒரு அரசர், தன் மகனுக்காக தன் உயிரை கொடுத்தார், குடிக்க பணமில்லை, வியாபாரம் சரியாக நடக்கவில்லை என்று தன் மகன் உயிரை குடித்தான் ரகுபதி

தன் பிள்ளைகளுக்காக, தன் உடல், பொருள், ஆவியனைத்தையும் அவர்களுக்கே செலவிட்டு பிள்ளைகள் சிரித்தால் சிரிப்பது அழுதால் அழுவதுமாகவும் கடவுள் நம்பிக்கையே இல்லாத தந்தைகள் தன் மகன்/மகள் உடல் நிலை சரியாக வேண்டுமென திருப்பதியிலே மொட்டை போட வரிசையில் நிற்கும் நவீன பாபர்கள் வாழும் இந்த பூமியில் ரகுபதியும் வாழ்கின்றான்...

லகலகலக - Original Risk Analysis



பிளஸ் பாயிண்ட்

சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பு (சொந்த தயாரிப்புனா பல பிரச்சினைகள் வருமே)

ஏற்கனவே இரண்டு மொழிகளில் மெகா ஹிட்டான மகா பாதுகாப்பான கதை

அரசியல் தலைவரிடம் சமரசம் செய்து கொண்டது

சமரசத்திற்காக பஞ்(சர்)ச் டயலாக் பேசாதது

சமரசத்திற்காக அரசியலை தாக்கும் வசனங்களை வைக்காமல் பாதுகாப்பான வசனங்கள் வைத்தது

சமரசத்திற்காக ஸ்டைலாக புகை பிடிக்கும், தண்ணியடிக்கும் காட்சிகள் வைக்காதது

20 வயது கதாநாயகி

ஜோதிகாவின் முட்டை கண் மற்றும் நடிப்பு

நகைச்சுவை புயல்

நாயகனுக்காக கதை என்பதை கதைக்காக நாயகன் என்ற வியூகம்

திரைவெளிச்சத்திலே தலைவனைத் தேடும் தமிழர்கள்

நிழலுக்கும் நிசத்துக்கும் வித்தியாசம் தெரியாத தமிழர்கள்

மற்றும்

ரஜினிகாந்த்



மைனஸ் பாயிண்ட்

படத்தை ஹிட் ஆக்கியே தீரவெண்டுமென புகுத்தப்பட்ட இரட்டை அர்த்த நகைச்சுவைகள்

மற்றவைகள் பல பதிவுகளில் விமர்சிக்கப்பட்டு விட்டது

பின்குறிப்பு

சை... கடைசியில் என்னையும் சந்திரமுகி பற்றி எழுத வைத்து விட்டனரே

பாமக - Risk Analysis



மைனஸ் பாயிண்ட்ஸ்

சாதிக் கட்சி என்று குத்தப்பட்ட முத்திரை

மரம் வெட்டி கட்சி என்று குத்தப்பட்ட முத்திரை

பத்திரிக்கைகளின் ஊடகவன்முறை

திரைப்பட வெளிச்சத்தில் தலைவனைத் தேடும் தமிழர்கள்

வாரிசு அரசியல்

வட மாவட்டங்களில் மட்டுமேயான செல்வாக்கு

சாணக்கியனைப் போல் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத தலைவர்

மக்களை கவரும் பேச்சாற்றல் இல்லாத தலைமை

கேமராவின் முன்னால் மட்டுமின்றி பின்னாலும் நடிக்கத் தெரியாத தலைவர்


ப்ளஸ் பாயிண்ட்

Image hosted by Photobucket.com

பின்குறிப்பு
அது சரி அந்த காந்த் நடிகர்களின் எதிர்ப்பெல்லாம் ப்ளஸ் சா? மைனசா? என நீங்கள் கேட்பது புரிகின்றது...

அதையெல்லாம் நாங்கள் எந்த கணக்கிலும் எடுப்பதில்லை

பாபா - Risk Analysis

ப்ளஸ் பாயிண்ட்ஸ்

ரஜினிகாந்த்

அரசியல் வசனங்கள்

பஞ்(சர்)ச் வசனங்கள்

பாபா கவுண்ட் கத்தி

பட்டம்(மாங்காய்?!) விழும் மந்திரங்கள்

நடந்தாலே தீப்பொறி பறக்கும் ஷீக்கள்

படம் பூசை போட்டதிலிருந்தே பத்திரிக்கைகள் கொடுத்த இலவச விளம்பரம்

வயசான கதாநாயகனுக்கு வயசான கதாநாயகி என்ற எதார்த்தமான நடிகர்கள் தேர்வு

நீண்ட நாட்களுக்கு பிறகு படம் வெளியாவதால் இருந்த ரசிகர்களின் உற்சாகம்

திரைக்கு வெளியில் காண்பித்துக் கொண்டிருக்கும் ஆன்மீக பாத்திரப் படைப்பை திரையிலும் காண்பிக்கும் கதையமைப்பு

மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் ஜோசியம், தெய்வீக ஜாதகம் கொண்ட நாயக பாத்திர படைப்பு

மேடத்தின் நேரடிப் பார்வையில் தயாரிப்பு மற்றும் விளம்பரம்

பாபா முத்திரைக்கு பேடண்ட் செய்து யாரும் அந்த இரண்டு விரலை தூக்க விடாமல் செய்த விளம்பர உத்தி

பலரும் விரும்புவதாக சொல்லப்படும் ஸ்டைலாக சிகெரெட் பிடிப்பது, தண்ணியடிப்பது போன்ற காட்சியமைப்புகள்

மைனஸ் பாயின்ட்

Image hosted by Photobucket.com

கம்யூனிஸ்ட்,திமுக கூட்டணிகளின் இரட்டை வேடம்

கம்யூனிஸ்ட்,திமுக கூட்டணிகளின் இரட்டை வேடம்

தற்போதைய மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி
நாற்காலியின் ஒரு காலாக கம்யூனிஸ்ட்களும்
மற்றொரு காலாக திமுக கூட்டணியும்
மற்ற இரு கால்களாக காங்கிரசும் உள்ளன

காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம், பதவியேற்ற
ஓராண்டிற்குள் நான்கு முறை பெட்ரோல்
விலை ஏற்றிவிட்டது, ஆனால் மத்திய அரசை
முட்டுக்கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட்களும்,
திமுக கூட்டணியும் அரசுக்கு ஆதரவு தந்து கொண்டே
பெட்ரோல் விலையேற்றத்தை எதிர்க்கின்றன
போராட்டம் நடத்துகின்றன, கம்யூனிஸ்ட்களாலும்
திமுக கூட்டணிக்கும் உண்மையிலேயே
பெட்ரோல் விலையேற்றத்தை உண்மையிலேயே
தடுக்க வேண்டுமென்றால் அவைகள் விலையேற்றினால்
அரசுக்கு தரும் ஆதரவை திரும்பப் பெற்று விடுவோம்
என மிரட்டினால் அரசு விலையேற்றி விடுமா என்ன??
இதெல்லாம் கம்யூனிஸ்ட் மற்றும் திமுக கூட்டணி
கட்சிகளின் நாடகம், இரட்டை வேடம்

இது மாதிரியான கருத்துகள் ஒவ்வொரு முறையும்
பெட்ரோல் விலையேற்றத்தின் போதும் அதை
எதிர்த்து கம்யூனிஸ்ட் மற்றும் திமுக கூட்டணி
கட்சிகளின் போராட்டத்தின் போதும் ஊடகங்களால்
அதுவும் முக்கியமாக தினமலர் என்ற பத்திரிக்கையில்
அந்துமணி, நொந்தமணி, இது உங்கள் இடம்,
வாசகர் கடிதம் என எல்லா இடங்களிலும்
ஏதோ ஒரு பெயர் ஊருடன் வாசகர்களின்
கடிதம் என்ற பெயரில் அந்த பத்திரிக்கையின்
உதவி ஆசிரியர்களே(?!) எழுதி இந்த கம்யூனிஸ்ட்களும்,
திமுக கூட்டணியும் இரட்டை வேடம் போடுவதாக
மக்களிடம் பரப்பி வருகின்றனர்,

அந்த பத்திரிக்கைகளுக்கு என்ன வேண்டும்,
பெட்ரோல் விலையேற்றத்தை எதிர்த்து
கம்யூனிஸ்ட்களும், திமுக கூட்டணியும் மத்திய
அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்று
மத்திய அரசு கவிழ வேண்டும். இது தான் அவர்களின்
விருப்பமா?

விலையேற்றம் தவிர்க்க முடியாது என அரசு
முடிவெடுக்கின்றது, அதே சமயம் அதன் கூட்டணி
கட்சிகளுக்கு அதில் விருப்பமில்லை, அதற்காக
ஆட்சியை கவிழ்த்து விட வேண்டுமா??
பலமான வில்லனிடம் அடிபட்ட கதாநாயகன்
செத்து போய் படத்தை பாதியிலேயே முடிக்க வேண்டும்
என்பதுதான் அவர்கள் விருப்பமா?


விலையேற்றத்தை விரும்பாத அந்த கட்சிகள்
போராட்டங்கள் மூலம் தன் எதிர்ப்பை தெரிவிக்கின்றன,
ஒரு குடும்பத்திலே,ஒரு நிர்வாகத்திலே தமக்கு
விருப்பமில்லா ஒரு முடிவெடுக்கப்படும்போது அதை
எதிர்த்து அந்த நிர்வாகத்தைவிட்டோ அந்த குடும்பத்தை
விட்டோ வெளியேறி விடமுடியுமா?? அதற்காக விரும்பாத
ஒரு முடிவை குடும்பத்திலே எடுக்கும் போது பட்டினி
கிடந்து எதிர்ப்பதில்லையா?? கோபமாக இருப்பதில்லையா?
அது மாதிரிதான் இதுவும்.

தமிழகத்திலே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவிருந்தால் ஏன் வைகோ
தோற்கின்றார் என என்னமோ தமிழக மக்கள் ஈழத்தமிழர் ஆதரவு
என்கிற ஒரு அம்சத்தை வைத்து வாக்களிப்பது போல
அந்த பத்திரிக்கையில் எழுதுவார்கள், அதே போல
பெட்ரோல் விலையேற்றம் என்ற ஒரே ஒரு அம்சத்திலா
மத்திய ஆட்சி நடக்கின்றது இல்லையே பின் ஏனிந்த கூப்பாடு?

ஆனால் இதெல்லாம் தெரிந்தும் குறிப்பிட்ட சில
பத்திரிக்கைகளுக்கு தற்போது நடக்கும் அரசாங்கம்
கவிழ வேண்டும், கம்யூனிஸ்ட், திமுக கூட்டணி
கட்சிகளை தாக்க வேண்டும், இந்த விலையேற்றத்தை
அரசை கவிழ்த்து கம்யூனிஸ்ட், திமுக கூட்டணிகளால் தடுக்கமுடியும்,
ஆனால் சுய நலமாக அதை செய்யாமல் போராடுகின்றோம்
என இரட்டை வேடமிடுகின்றனர் என மக்கள் தவறாக
எண்ண வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக
பத்திரிக்கை தர்மத்தையெல்லாம் மீறி
ஒரே நடுநிலை நாளிதழ் என ஜல்லியடித்துக்கொண்டே
கண்மூடித்தனமாக தாக்குகின்றனர்.

என்றுதான் இந்த பத்திரிக்கை(கள்) திருந்துமோ

காத்திருந்தேன் உனக்காக



Image hosted by Photobucket.com

காத்திருந்தேன் உனக்காக
காதலுடன் வருவாயென
கால்கடுக்க நின்றிருந்தும்
காணவில்லை உன்னை

உனக்காக ஒரு ரோசா
வைத்திருந்தேன் வாடியது
எழுதிவைத்த கவிதையெல்லாம்
எங்கேயோ ஓடியது

எங்கே போனாயென
ஏங்கி இருந்தபோது
ஏக்கம் தீர்க்கவந்தாய்
என்னிடம் நீ கண்ணே!

வாடிய ரோசாவை
வாசமுடன் நான் நீட்ட
வைத்திருந்த ரோசாவை
வான் நோக்கி நீ எறிய
வானரப்படையாக நான்மாறி
அதை பிடிக்க

வழக்கம்போல் வீசினாயே
வசந்தப் புன்னகையை
அதைப்பிடிக்க என்னால்
இயலவில்லை கண்ணே

நீ பேசுவாயென
நான் மவுனிக்க
நான் பேசுவேனென
நீ மவுனிக்க
இருளும் மவுனமும்
இறுகிக் கொண்டிருந்தது

எனக்காக நீபேச
உதடுபிரிக்க
உனக்காக நான்பேச
உதடுபிரிக்க

எழுந்திருடா
மணியேழு
என்றான்
என் அறைத்தோழன்

ஆவிகளின் புரிதல் (எ) ஷியங் - தொடர் -1

"உயிர் பிரிந்து வானலுகமேறின் இனம்,மதம்,மொழியில்லை ஆவிகளுக்கு"
- சூ வெங் டாங் (ஆவியுலக ஆராய்ச்சியாளர்)

இன்னும் பட படப்பு அடங்கவில்லை,
பேருந்தின் சன்னலோரமாக ஒரு இருக்கையை பிடித்து அமர்ந்து
ஆசுவாசப்படுத்திக்கொண்டு யோசித்த போது குழப்பம் தீர
வைத்தீஸ்வரன் கோவில் வந்ததில் அதிர்ச்சிதான் கூடியது

அப்படியே காலையிலிருந்து நடந்ததையெல்லாம் யோசிக்க யோசிக்க

"சார் வாங்க சார் வாங்க, நாடி பாக்கனுமா வாங்க"

"இருப்பா கோவிலுக்கு போகனும் முதல்ல"

சின்ன வயசுல குமார் அண்ணன் கல்யாணத்துக்கு வந்தது இங்க
அதுக்கப்புறமா இப்போதான் வரேன்,
வர்ற வழியிலேயே வீட்டுக்கு வீடு அகத்தியர் நாடி,
சுகர் நாடி, அந்த நாடி இந்த நாடினு போர்டு பாக்கும்போதே
வைத்தீஸ்வரன் கோவில் வந்துட்டோம்னு புரிந்தது.

"சார் நீங்களா எப்போ சார் வந்தீங்க,
டேய் சார் நம்ம ரெகுலர் கஸ்டமர் டா"

அள்ளித்தெளித்துக்கொண்டிருந்தார் ஒருவர்

இந்த புரோக்கருங்க திருபுவனத்துக்கு போன ஒரிஜினல் சொசைட்டி
பட்டு இங்கதான் கிடைக்கும்னு கைய புடிச்சி இழுப்பாங்க
இங்க வைதீஸ்வரன் கோவில்ல ஒரிஜினல்
அகத்தியர் நாடி பார்க்க இழுக்கறாங்க

பூசை தட்டு வாங்கிக்கொண்டு கோவிலுக்கு போனேன்,

சாமி தரிசனம் முடித்து மண்டபத்துல உட்கார்ந்திருந்த

ஒரு பெரியவரிடம்

"சார் இங்க நாடி ஜோசியம் சொல்றாங்களே அது..."

"நீங்க பாக்க போறிங்களா?"

"ம்... இல்ல, சார் அது உண்மையா சார்"

"நம்பிக்கை இருக்குறவங்க நம்புறாங்க,
இந்த ஈஸ்வரனுக்கு மேல வேற யார நம்புறது? "

"சரி, இங்க நாடி யாரு நல்லா பார்ப்பாங்க"

"ம்... மெயின்ரோட்டுல ஒரு டர்ன் வரும்
அங்க சாமிநாதன்னு ஒருத்தரு பார்க்கிறாரு, அங்கே பாருங்க"

"ரொம்ப நன்றி சார்"

பிரகாரத்தை விட்டு வெளியில் வந்த போது மீண்டும் புரோக்கர்கள்
தொல்லை,

மெல்ல நடந்து அந்த பெரியவர் சொன்ன சாலை வலைவில்
'நாடி ஜோதிட கண்மனி சாமிநாதன், எம்.ஏ,
ஒரிஜினல் அகத்தியர் நாடி பார்க்கப்படும்'

ஆகா ஒரிஜினல் தென்னமரக்குடி எண்ணெய் போல
ஒரிஜினல் அகத்தியர் நாடியா? என நினைத்துக்கொண்டே
எனக்கு விடை கிடைக்குமா என்ற ஆர்வத்தில் உள்ளே
போனேன்

சந்தன நிற ஜிப்பா, பட்டு கரை போட்ட சந்தன நிற வேட்டி
எண்ணெய் விட்டு நடு வகிடெடுத்து வழித்து சீவிய தலையுடன்
நெற்றி நிறைய விபூதியும் நடுவில் குங்குமமும் வைத்த
ஐம்பதை நெருங்கிக்கொண்டிருக்கும் ஒருவர் இருந்தார்

"சார் இங்க சாமிநாதன்னு?"

"நான் தான் சொல்லுங்க"

"நாடி பார்க்கனும், கோவில்ல பெரியவர் சொல்லி அனுப்பினாரு"

"யாருக்கு பார்க்கனும்?"

"எனக்கு தான், பீஸ் எவ்வளவுங்க?"

"ஒரு காண்டத்துக்கு 150 ரூபாய்"

"காண்டம்னா?"

"உங்க வாழ்க்கை பல காண்டமாக இருக்கும்,
முதல்ல பொது காண்டம் படிப்போம்,
பிறகு தொழில்,திருமணம்,உடல்நலம் அப்படினு மொத்தம்
ஏழு காண்டமிருக்கு "

"150 ரூபாய் அதிகமா இருக்கே"

"இல்ல சார், ஒரு காண்டத்துக்கு 150 ரூபாய்தான் ரேட்டு,
வேணும்னா பொது காண்டத்துக்கு 150ரூபாய்,
மத்த காண்டத்துக்கு 100 ரூபாய் போட்டுக்கலாம்"

"சரி..."

"முருகேசா, இங்க வந்து சார் ரேகை எடு"

நீள மூக்கும், மா நிறத்துடன் நெற்றியில் பட்டையோடு
ஒரு முப்பது வயது ஒடிசலான தேகம் கொண்ட இளைஞன்
நக்கலா, புன்சிரிப்பா என இனம் பிரித்தறிய முடியாத முக பாவத்தோடு
ஒரு வெள்ளைத்தாளில் இடது கை பெரு விரல் ரேகையை
எடுத்துச்சென்றான்

"சார் ஒரு பத்து நிமிஷம் உட்காருங்க,
உங்க ரேகைக்கான கட்டு எடுத்துக்கிட்டு வரோம்"

தினத்தந்தியை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்,
ஜோசியரின் பேச்சைக்கேட்டு 9 மாதக்குழந்தையை
தரையில் அடித்துக்கொன்ற கணவன் கைது
என்ற செய்தியை படித்த போது
என்ன மூடத்தனமா இருக்கான்,
ஜோசியக்காரன் சொன்னா நம்பிடறதா என திட்டினேன்

அரை மணி கழித்து சாமிநாதன் குரல்

"சார் உங்க ரேகைக்கு எங்க கிட்ட கட்டு கிடைக்கல"

"அய்யய்யோ, சார் நல்லா பார்த்திங்களா,
சார் எனக்கு எப்படியாவது பார்க்கனுமே இன்னைக்கே"

"ஒன்னு செய்யுங்க, உங்க பிறந்ததேதி நட்சத்திரம், நாள்,கிழமை,நேரம் குறிச்சி
குடுங்க, கிடைக்குதான்னு பார்க்கிறேன்"

எல்லாவற்றையும் குறித்து கொடுத்தேன்,

இருபது நிமிடம் கழித்து, அறையினுள் கூப்பிட்டார் சாமிநாதன்

"உள்ள வாங்க சார், முருகேஸ் அந்த ஃபேனை சார்பக்கம் திருப்பிட்டு,
கேசட்டை எடுத்துக்கிட்டு வா, ரெக்கார்டு பண்ணனும்"

"சார் கேசட்டுக்கும் 30 ரூபாய் எக்ஸ்ட்ரா குடுத்துடுங்க"

"சரி தரேன்"

கையிலிருந்த ஓலைக் கட்டை எடுத்து

"தென்னடுடைய சிவனேப் போற்றி"

"முதலெழுத்தாம் முவண்ணாவில் தொடங்கி,
சார் உங்க பேரு முவண்ணா வில ஆரம்பிக்குதா"

"இல்ல..."

அந்த ஓலையை தள்ளி அடுத்த ஓலையை படிக்க ஆரம்பிக்கின்றார்

இப்படியே ஆவண்ணாவா? ஏவண்ணாவா வென சில ஓலைகளை
தள்ளிய பின்

"மொழிக்கரசன் அவனும் தானே..." என ராகம் போட்டு பாடினார்
"உங்க பேரு தமிழரசனா?"

"ஆமாம் சார்"

இப்படியே என் தாய்,தந்தை பெயர் பிறந்த தேதி எல்லாம் கூறிவிட்டார்
சாமிநாதன்

என் தாய் பெயர் சொன்னது தான் ஆச்சரியம், எளிதில் யூகிக்க முடியாத
பெயரை சொன்னது பெரிய ஆச்சரியம்

"சரி சார் இது தான் உங்க ஓலை, பொது காண்டம் படிக்கிறேன் கேளுங்க"

"ஆனைமுகத்தான் சிரம் தன்னில் வீங்கிய இடம் தன்னில ஜனித்த"

"திருச்சியில பிறந்திங்களா?"

"ஆமாம் சார்"

அது எப்படி நம்ம பேரையும், நம்ம அப்பா பேரையும் நம்ம வாயிலிருந்தே
புடுங்கினாரு, அம்மா பேரையும் பிறந்த இடத்தையும் சொல்றாரே!
ஒரு சிறிய நம்பிக்கை பிறந்தது.

"இரும்பையும் ஈயத்திலும் எந்திரம் செய்தே"

"நீங்க படிச்சது இரும்பு சம்மந்தப்பட்டதா?"

"அப்படினா என்னங்க? புரியலையே"

"இந்த ஐடிஐ, பாலிடெக்னிக், எஞ்சினியர், மெக்கானிக்கு
அப்படி படிச்சிங்களா?"

"ஆமாம்"

அடடா நாம மெக்கானிக்கல் எஞ்சினியரிங்க படிச்சது ஓலையில இருக்கா?

ஆர்வம் அதிகரித்தது,

"உங்க கூட பிறந்தது ஒரு ஆணு, ஒரு பொண்ணு,நீங்க நடுலவரு, சரியா?"

"ஆமாம் சரிதான்"

"அவங்க ரெண்டு பேருக்குமே திருமணம் ஆகிவிட்டது"

"ஆமாம்"

மேலே ஏதோ முனகிக்கொண்டே படித்தவர்,

திடீரென

"சாரி சார், இது உங்க கட்டு இல்ல"

"எப்படி சொல்றீங்க, நீங்க இதுவரை சொன்னதெல்லாம்
சரியாத்தானே இருக்கு"

கட்டை மூடி அதை நூலால் கட்டியபடியே

"இல்ல சார் இது உங்க கட்டு இல்ல"

"அதான் எப்படி சொல்றீங்க"

"இந்த ஏட்டுக்குறியவர் இறந்து எட்டு வருஷமாச்சினு நாடில வருது"

"என்ன சார் சொல்றீங்க?" அதிர்ச்சியுடன் ஏறிட்டேன்

"சார் நீங்க குறிச்சி குடுத்த பிறந்த நேரம் தப்பா இருக்கனும்,
அந்த நேரக்கணக்குப்படி எடுத்த நாடியில ஏட்டுக்குறியவர் இறந்து
எட்டு வருஷமாச்சினு வருது"

"அப்போ என்ன சார் செய்யிறது..."

"உங்க போன் நம்பர் குடுங்க, உங்க ரேகை இருக்குதில்லையா
அதை வச்சி நாங்க உங்க கட்டு தேடி பார்க்கிறோம்,
இருந்தா உங்களுக்கு போன் செய்து சொல்றோம்"

"எனக்கு இனி இங்க வர டைம் இல்லையே"

"பரவாயில்ல, நாங்க கேசட்ல பதிவு செஞ்சி போஸ்டல்ல
அணுப்புறோம்"

150 ரூபாய் கொடுத்துவிட்டு எல்லாம் கரெக்டா வந்துச்சி
நாடியில, அப்புறம் எப்படி ரத்தமும் சதையுமா
இருக்கும்போது எட்டு வருசம் முன்னாடி செத்துப்போனதா
வருது....

நம்ம சுத்தி நடக்கிற பல புரியாத விசயங்களைப்பத்தி
தெரிஞ்சிக்க வந்தா இங்க இப்படி ஒரு குண்டு

எப்போ தெரிய வந்துச்சி இந்த பிரச்சினை
எல்லாம் அந்த 'ஷியாங்' அப்படின்ற
அந்த ஒரு வார்த்தையில ஆரம்பிச்சிது...

அன்னையிலிருந்து இன்னிக்கு வரை ஒரே குழப்பம் தான்

நினைவலைகள் இன்னும் பின்னோக்கி செல்ல

பத்தாண்டுகளுக்கு முன் ஒரு திங்கட்கிழமை காலை வேலையில்

மருது பாண்டியர் பேருந்தில் ஏறி காரைக்குடிக்கு ஒரு

சீட்டு வாங்கிக்கொண்டு ஜீனியர் விகடனை கீரனூர் வரும் முன்பே
படித்தாகிவிட்டது, புதுக்கோட்டை யில் 10 நிமிடம் வண்டி நிற்க,
PLAல வந்தாலாவது பாட்டு போடுவாங்க, நம்ம காலேஜ் பிகருங்க
கூட கடலை போட்டுக்கொண்டே வந்தா ரெண்டு மணி நேரம்
போறதே தெரியாது, சே... ஒரு 5 நிமிசம் லேட்டா வந்ததுல
மிஸ் பண்ணிட்டேன், இன்னும் ஒரு மணி நேரம் காரைக்குடி போக
என்ன செய்வது என தம்மடித்துக்கொண்டே அந்த டீ கடையில்
தொங்க விட்டிருந்த புத்தகங்களை பார்த்தபோது ஒரு புத்தகம்
கவர்ந்தது "ஆவி உலகம்" ஆசிரியர் விக்கிரவாண்டி இரவிச்சந்திரன்...

- தொடரும்

உள்ளம் கேட்குமே லைலாவும் ராதிகாவும்

ஆகா கெளம்பிட்டான்யா கெளம்பிட்டான் என கூவுவதும்,
திரைப்படங்களை விமர்சிப்பவன் எழுதும் பதிவைப்பாரு
என முனகுவதும் நன்றாகவே கேட்கிறதுங்கோ!

திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதும், நடிகர்களின் நடிப்புத்திறனை
அலசும் அளவிற்கு நான் இல்லை, திரைப்படங்களில் கதாபாத்திரங்கள்
அழும்போது நானும் அழுது சிரிக்கும் போது நானும் சிரித்து திரையில்
பார்த்ததின் தாக்கத்தில் சில மணி நேரங்களை கடக்கும் சாதாரண ஒரு ரசிகனே.

சரிவிடுங்க ஏதோ எழுதிக்கொண்டு....

கேணையாக நடிப்பதில் சிறந்தவர் யார்? லைலாவா ? ராதிகாவா?






Image hosted by Photobucket.com
Image hosted by Photobucket.com


லைலாவிற்கு முன் வரை அப்பாவி கதாபாத்திரத்தில், இல்லை இன்னும்
சரியாக சொல்லப்போனால் கேணைச்சி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு
ராதிகாவை விட்டால் ஆளில்லை என்ற எண்ணத்தில் தான் இருந்தேன்

இன்று போய் நாளை வா, பிரதாப்போத்தனுடன் நடித்தாரே ஒரு படம்
ஹப்பி என்று கூறிக்கொண்டு அந்த படங்களெல்லாம் பார்த்தபோது
ராதிகாவை விட சிறப்பாக கேணைச்சி பாத்திரத்தில் பிரகாசிப்பவர்
யாருமில்லை என நான் நினைத்ததை முற்றிலும் பொய்யாக்கியவர் லைலா.

ஆரஞ்சு நிற மாத்திரையை காண்பித்து பச்சை நிறம் என சொல்வதெயெல்லாம்
அப்பாவி அல்லது கேணை கதாபாத்திரத்தில்
பிச்சி உதறவுதாக கணக்கிலெடுப்பதில்லை.

முதன் முதலில் நந்தாவில் ஓரிரு காட்சிகளில் லைலாவின் நடிப்பை கண்டு
அசந்து போனேன், அடுத்ததாக பிரபுதேவாவுடன் நடித்தாரே ஒரு படம்
(என்ன படம்பா அது மறந்துவிட்டேன்) அதில் கேணச்சி கதாபாத்திரத்தில்
அசத்தியிருப்பார்.

அதையெல்லாம் விட உள்ளம் கேட்குமே என்று சமீபத்தில் வெளியான படம்.
என் தற்போதைய கனவுக்கன்னி அசின் இரண்டாம் கனவுக்கன்னி பூஜா இருவரும்
நடித்துள்ளனர் என்ற ஆர்வத்தில்தான் படம் பார்க்க ஆரம்பித்தேன்

என் கனவு கன்னிகள்
Image hosted by Photobucket.com

ஆனால் படத்தின் ஆரம்பித்திலிருந்தே சதங்கை கட்டி ஆடியவர் லைலாதான்

முதலில் லைலா அல்லாமல் வேறெந்த நடிகையும் இந்த பாத்திரத்தில் நடிக்க
ஒத்துக்கொள்வார்களா என்பது சந்தேகமே, ஏனெனில் படம் முழுவதும்
ஒரு விதமான கீலாத்தனமான பாத்திரவடிவமைப்பு அது மட்டுமின்றி மற்ற
இரு நாயகிகளும் நல்ல விதமான பாத்திரத்தில் வழக்கமான கதாநாயகிகளின்
பாத்திரத்தில் நடித்திருக்கும்போது ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை வரக்கூடிய
பல்லில் கிளிப் மாட்டிக்கொண்டு கனவுக்கன்னி, கவர்ச்சிக்கன்னி என்ற உருவாக்கத்தை
உடைக்கும் பாத்திர படைப்பில் நடித்துள்ளார்.

இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமெனில் நீண்ட நாட்களுக்குப்பிறகு
ஒரு நல்லப்படத்தை பார்த்த திருப்தி எனக்கு.

யாரேனும் படம் பார்த்துவிட்டு வந்து என்னை திட்டாதீர்கள்,
கல்லூரியிலோ அல்லது பள்ளிப்பருவத்திலோ ஒரு குழுவாக,
தரையில் கால்படாமல் ஒரு அரையடி தரைக்கு மேலே
மிதந்தவரா நீங்கள், அப்படியெனில் உங்களுக்கு
பல நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு படம்.

கண்ணை உறுத்தும் கிராபிக்ஸ் இல்லாமல் காதை உறுத்தும்
பாடல்களில்லாமல் பாடல் காட்சிகள், இரண்டு மூன்று முறை
பாடலை கேட்டால் நாள் முழுவதும் முணுமுணுக்க வைக்கும்
பாடல்கள்.

மூன்று இளம் கதாநாயகிகள், கல்லூரி கதைக்களம்
இத்தனையும் இருந்தும் மிக எளிதாக கதைக்களத்தை
சதைக்களமாக்கும் சூழல் இருந்தும் அதிக கவர்ச்சியில்லாமல்
நகைச்சுவையில் ஆபாசத்தை கலக்காமல் எடுத்திருக்கும்
இயக்குனர் பாராட்டுக்குறியவர்.

ஒரு சாதாரண கதைக்கருவை நேர்த்தியான திரைக்கதையாலும்
அளவெடுத்து வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்களுடன், மிக சாதாரணமாக்
எதார்த்த வாழ்க்கையில் நாம் பேசும் வசனங்களையும்,
பொறுத்தமான நடிகர்களை வைத்து சிறப்பாக எடுக்கப்பட்ட படம்
அதிலும் லைலாவின் நேர்த்தியான நடிப்பினால்
மொத்தப்படத்தையும் தன் தோளில் தாங்குகின்றார்.

தான் காதலிப்பவன் தன்னிடம் வேறொரு பெண்ணை காதலிப்பதாக
சொல்லும்போது சிரிப்பையும் அழுகையையும் நொடிக்கு நொடிக்கு
மாற்றி மாற்றி காண்பித்த லைலாவின் நடிப்பை அன்னியனில்
அம்பியாகவும் அன்னியனாகவும் மாறி மாறி நடிப்பை காண்பிக்கும்
விக்ரமையும் ஒப்பிடும்போது விக்ரம் வாங்கிய கூலிக்கும் அதிகமாகவே
கூவியது போன்றே தோன்றுகின்றது.

பிளாஷ்பேக் திரைப்படங்களில் முடிவு முடிச்சி முன்பே
அவிழ்ந்துவிடுவதால் ஒரு சிறிய சுவாரசியக்குறைவிருக்கும்

ஆனால் இந்த படத்தில் கடைசியிலும் ஒரு எதிர்பார்ப்பை
உருவாக்கி படத்தை முடித்துள்ளனர்

எல்லாவற்றிற்கும் மேலே இந்த படம் கல்லூரி கனவுலகை மட்டும்
காண்பிக்காமல் அதன் பின்னான நிதர்சனத்தையும் காண்பிக்கின்றது.

Image hosted by Photobucket.com

ஒரு படத்தை பார்க்கும் போது சில இடங்களில் ஒரு வினாடிக்கும்
குறைவான நேரமே வந்து போகும் காட்சிகளை மீண்டும் மீண்டும்
பார்க்கும் வழக்கமுடையவன், வசூல்ராஜா MBBS ல் "அய்யோ நம்மால முடியாது"
என சினேகா கூறும் போது காட்டும் முகபாவத்தையும், மாயவியில் "யாருடா நீ" என்று
ஜோதிகா சொல்லும் காட்சியும், அலைபாயுதேவில் செப்டம்பர் மாதம் பாடலில்
ஒரு சிறிய முகபாவமும், காதல் பிசாசே பாடலில் சில வினாடிகளே வரும்
மீராவின் நடனமும், ஜித்தனில் "குங்கமப்பூவே" பாடலில் பூஜாவின் நடன அசைவும்
அய்யோ பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது இந்த சில வினாடி காட்சிகளை
மீண்டும் மீண்டும் பார்த்து ரசிப்பவன், அது போல இந்த படத்திலும் மீண்டும் மீண்டும்
பார்க்க முனைந்த போது ஒவ்வொருமுறையும் பாதிப்படம் பார்த்துவிட்டேன்.

மன அழுத்தம், சோர்வு தாக்கும் நேரத்தில் இந்த படத்தை
பார்க்கும்போது ஒரு உற்சாகம் வருகின்றது .

போதை

ஆளில்லா மைதானத்திலே
கோல் போட்டு
அலுத்துவிட்டேன்

இன்பம் கூட
வேண்டாம்
துன்பமாவது தா!

இரு கைகளிலும்
வாளேந்தி ஆவேசமாக
சுழற்றிவிட்டேன்

என் வாளில்
வெட்டுபடவும்
என்னை
வெட்டவும் தான்
ஆளில்லை

வெற்றி கூட
வேண்டாம்
தோல்வியாவது தா!

சதுரங்க ஆட்டத்திலே
வெள்ளை காயையும்
கறுப்பு காயையும்
மாற்றி மாற்றி
நகர்த்தி
பிளவாளுமையோ வென
மகிழ்ந்தேன்

மயிராளுமை யென
மட்டுப்படுத்தியது
மனது

என்னை நானே
கீறினேன்

குருதி வழிந்து
வலித்தது
குதூகலித்தேன்

மேலும் மேலும்
கீறினேன்
வலியோ
பழகிவிட்டது

விரல்களை
வெட்டியெறிந்தேன்

விரல்களின்றி
வாழ்ந்தபோது
விரல்களே
வீண்தானோ
என்றேன்

தற்போதொரு
கையில்லா
வாழ்க்கையும்
பழகிவிட்டது

அதனாலென்ன
வெட்டியெறியத்தான்
இன்னமும்
இரு கால்களும்
இரு காதுகளும்
இரு கண்களும்
ஒரு மூக்கும்
மிச்சமுள்ளதே

குழலி பக்கங்கள் - சிறிய விடுமுறை

அன்புள்ள இணைய நண்பர்களுக்கு,

குழலி பக்கங்களின் புதுப்பதிவுகள் பதிப்பிப்பதை சிறிது காலம் நிறுத்தி வைத்துள்ளேன்

வலைப்பக்கங்களில் ஒரு நல்ல சூழ்நிலை வரும் வரையிலும்

மேலும் கடந்த மூன்று மாதங்களாக போதைக்கு அடிமையானது போன்று

வலைப்பூக்களில் நேரங்காலமின்றி சுற்றி திரிந்ததால் சொந்த வேலைகளில்

ஏற்பட்ட சில சுணக்கங்களாலும் என்னை மீட்டுக்கொள்ளும் முயற்சியாகவும்

தற்காலிகமாக வலைப்பூக்களில் பின்னூட்டமிடுவதையும் பதிவிடுவதையும் நிறுத்தியுள்ளேன்...

எதிர்மறைக்கருத்தானாலும் நாகரீகமாகவும் நயமாகவும் பதிவுகளிலும் பின்னூட்டங்களையும்

தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி ஒரு சிறிய இடைவேளைக்குப்பிறக்கு

நல்ல ஒரு சூழலில் மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில் செல்கின்றேன்....

தொடர்ந்து வலைப்பூக்களை படித்துக்கொண்டு ஒரு பார்வையாளனாக இருப்பேன்...

நரி, சிறுத்தை மற்றும் சிங்கம்

ஒரு காட்டுல ஒரு சிங்கம், ஒரு சிறுத்தை ஒரு நரி இருந்துச்சாம்,
சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் உடம்புல பலம் இருக்குற அளவுக்கு
குறுக்கு புத்தியில்லையாம், நரிக்கு உடம்புல பலம் இல்லைனாலும்
குறுக்கு புத்தியிருந்துதாம் அதனால எப்போ பார்த்தாலும் சிங்கத்துக்கும்
சிறுத்தைக்கும் இடையே கோலிமூட்டி விட்டுக்கிட்டே இருக்குமாம்
சிங்கமும் சிறுத்தையும் புர்... புர்... னு மோதிக்கிட்டே இருக்குமாம்
இதனால எப்போதுமே அந்த காட்டுலே நரியோட நாட்டமைதானாம்
இப்படியே பல தலைமுறையா நரியோட நாட்டாமைதான்...

இப்படியிருந்த சமயத்துல சிங்க கூட்டத்துல எல்லாருக்கும் வைத்தியம்
பாக்குற ஒரு சிங்கம் யோசிச்சிதாம், நாம நரிய விட பலமாயிருக்கோம்
அப்புறம் என்ன நரியிங்க நாட்டாமை செய்யுதுனு, இது தெரிஞ்ச நரி
காவல் நாய்களை ஏவி விட்டது சிங்கத்துமேல, சொந்த பலம் தெரியாம
இருந்த சிங்கங்களுக்கு கொஞ்சம் அடிதான் இந்த நாய்ங்க குதறனதுல.

ஆனா சிங்க கூட்டத்துக்கு பலம் என்னனு தெரிஞ்சிடுச்சி அதனால நரியை
எங்க பார்த்தாலும் ரவுண்டு கட்ட ஆரம்பிச்சிடுச்சி, சண்டை போட்டுகிட்டு இருந்த சிங்கமும் சிறுத்தயும் பழசையெல்லாம் மறந்து கூட்டணி வச்சிக்கிச்சாம், ஏற்கனவே சிங்கம் முழிச்சிக்கிட்ட அடியையே நரியால தாங்க முடியல, இப்போ சிறுத்தை வேற சிங்கத்தோட கூட்டணியானு நரிக்கு கலங்கிடுச்சி, அதனால நரி உடனே நாய் வேசம் போட்டுக்கிச்சாம்,

நரிய காணோமேனு சிங்கம் தேடிக்கிட்டு இருந்தப்ப நரி நாய் வேசம் போட்டது தெரிஞ்சிடுச்சாம், சிங்கமா போன நாய் வேசத்துல இருக்குற நரி உசாராயிடுமினு சிங்கமும் குரங்கு வேசம் போட்டுகிட்டு நரிய ஃபாலோ செஞ்சிதாம்.

ஒரு நாள் நாய் வேசம் போட்ட நரிய சிறுத்தை ஒன்னு தன்னை நெருங்கறத கண்டுச்சி. சிறுத்த கிட்ட மாட்னா காலின்னு நாய்க்கு தெரியாதா என்ன... தப்பிக்கறதுக்கு இப்ப என்னடா பண்ணலாம்னு யோசிச்ச நாய், பக்கத்துல கொஞ்சம் எலும்புத்துண்டுங்க கெடக்கறத பாத்திச்சி... உடனே சிறுத்தைக்கு தன் பின்புறத்தை காட்டி உக்காந்து எலும்பை கடிக்க ஆரம்பிச்சிது... சிறுத்தை நெருங்கவும், 'ங்கொக்கமக்கா... சிறுத்த கறி ருசியாத்தான் இருக்கு, இன்னிக்கி இன்னொரு சிறுத்த கெடச்சா கூட நல்லாத்தான் இருக்கும்' ன்னுச்சி... இத கேட்டவுடனே 'அடடா ஆழம் தெரியாம கால வுட இருந்தேனே... நல்ல வேளையா நூலிழையில தப்பிச்சோம்டா சாமி, மாட்டியிருந்தா என்னா ஆகியிருக்கும்'னு நினைச்சி சிறுத்தை நைசா சைடுல ஒதுங்கிகிச்சி......

இந்த கூத்தயெல்லாம் மரத்துல உக்காந்து குரங்கு வேசம் போட்ட சிங்கம் கவனிச்சிகிட்டே இருந்திச்சி... இந்த சிறுத்தகிட்ட நரியோட நாய் வேசத்தை கிழிக்க இதான் சான்சுனு உடனே அது சிறுத்தய பாக்க ஓடிச்சி... குரங்கு சும்மாகாச்சிக்கும் அம்மணமா ஓடாதேன்னு நாய்க்கு தோனிச்சி... பாவம் அந்த நாய் வேசம் போட்ட நரிக்கு அது குரங்கு வேசம் போட்ட சிங்கம்னு தெரியல சீக்கிரமே சிறுத்தய வளச்சிடுச்சி...

அந்த நாய் வேசம் போட்ட நரிய உண்டு இல்லையின்னு ஆக்கிபுடுறேன்'னு சொல்லி ரெண்டு பேரும் கெளம்பினாங்க...குரங்குவேசம் போட்ட சிங்கமும் சிறுத்தையும் கூட்டணி போட்டு வர்றத நாய் வேசம் போட்ட நரி பாத்துச்சி... இதுங்க ரெண்டும் சேந்து வேற வருதுங்களே, இப்ப நமக்கு ஆப்பாச்சே, எப்படி தப்பிக்கலாம்னு சட்னு ஒரு யோசனை பண்ணிச்சி... உடனே பழைய மாதிரியே அதுங்களுக்கு எதிர்ப்பக்கமா உக்காந்துகிட்டு "எங்க அந்த அறிவு கெட்ட குரங்கு... ஒரு சிறுத்தைய புடிச்சிகிட்டு வர்றதுக்கு இவ்ளோ நேரமா" ன்னு சவுண்ட் விட்டுச்சி...

அப்படியே சிங்கமும் சிறுத்தையும் ஆளுக்கு ஒரு பக்கமா போயி அந்த நாய் வேசம் போட்ட நரியோட இரண்டு கண்ணத்திலயும் பொளேர்னு அடி போட்டுச்சிங்க. நல்லா பாரு இது குரங்க்கா சிங்கம்டா சிங்கம், நீ என்ன தான் நாய் வேசம் போட்டாலும் உன் புத்தி நரி புத்தினு எங்களுக்கு தெரியாதா என்ன? ஓடிப்போயிடு இந்த காட்டைவிட்டுனு அடிச்ச அடியில நரி ஊளையிட்டுக்கிட்டே காட்டை விட்டு ஊருக்குள்ளார ஓடிடுச்சாம், அங்க போயி தான் தான் அந்த காட்டுக்கே ராசானு கதை உட்டுக்கிட்டு திரியுதாம், இந்த கதையெல்லாம் சிங்கமும் சிறுத்தையும் ஊருக்குள்ள வர வரைக்கும் தான்னு அதுக்கு தெரியாதா என்ன?

முகமூடியின் நாய், சிறுத்தை மற்றும் குரங்கு என்ற பதிவிற்கும் இதற்கும் எந்த தொடர்புமில்லை, இது முழுக்க முழுக்க கற்பனையே,

ஒலிக்கும் பறை உங்க வேலையை நான் எடுத்துக்கிட்டேன்... மன்னிச்சிகோங்க...

சிலுக்கு ஸ்மிதாவும்.... - களந்தை பீர்முகமது

சிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும் - களந்தை பீர்முகமது

சமீபத்தில் நான் படித்த புத்தகம், உண்மையை சொல்ல வேண்டுமெனில் புத்தகத்தின் பெயர்தான் என்னை சுண்டியிழுத்தது, யாமறிந்த வரையில் பெரும்பாலும் இசுலாமிய சமூகத்தின் வாழ்க்கை முறைகளையும் அதிலுள்ள பிரச்சினைகளயும் குர்ரான், வஹியைத்தொடமால் எழுதியவர்கள் மிகக்குறைவு, அந்த பிரிவில் வருவது இந்த நூல்.

இது ஒரு சிறுகதை தொகுப்பு, ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பரிணாமத்தை காண்பிக்கின்றன. எல்லா கதைகளும் பேசும் பிரச்சினகளும் எல்லா சமுதாயத்திலும் நடைபெறும் விடயங்கள், கதைக்களம் மட்டுமே இசுலாமிய குடும்பங்கள்.

சிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும் என்ற சிறுகதையில் ஒரு ஹாஜியார் எத்தேச்சையாக சிலுக்கு ஸ்மிதாவை சந்தித்ததும் அது தொடர்பாக ஊரில் பேசிய பேச்சுகளும் மிக அழகான நடையில் படைப்பாளி விளக்கியுள்ளார்.

//ஹாஜியாரை சுற்றி நின்றவர்கள் சோகம் திரள சன்னமான குரலில் பலதும் சொன்னார்கள், "அவளா சாகல்ல. எல்லாருமா சேர்ந்து கொன்னுட்டோம்"//
// பெரும் பெரும் நடிகர்கள்,நடிகைகள் இன்றி, புகழ்மிக்க இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இன்றி, உறவினர் இன்றி நகர்ந்த சிறியதான இறுதியாத்திரையில் சோகத்தால் முழுமையாக ஆளப்பட்ட நிலையில் சுலைமான் ஹாஜியார் நடந்து சென்றதை காணமுடிந்தது//

என்ற வரிகள் நடிகைகளின் வாழ்க்கையை விளக்கும் சுருக்கமான வரிகள்

எமக்கு இசுலாமிய சமுதாயத்தினர்களின் வீட்டினுள் வளைய வந்த அனுபவமில்ல(பாய் மாமா வீட்டைத்தவிர), ஆனால் இந்த தொகுப்பில் ஒவ்வொரு கதையும் இசுலாமிய குடும்பங்களினுள் ஊடுறுவி வாழ்க்கையை பார்த்த அனுபவத்தை தருகின்றன.

கிளை நதிகள் கதை ஒரு இழவு வீட்டில் ஒரு ஏழை பெண்ணின் மன ஓட்டத்தை அருமையாக காட்டுகின்றது.

தூரத்து வெள்ளம் கதையை படிக்கும் போது பாய் மாமாவும் அரபி அக்காவும் தான் என் கண் முன் வந்து போனார்கள்

காலவேர்கள் கதையில் எதிர்பாராத சமயத்தில் உருவான கரு, பொருளாதார பிரச்சினையால் அதை கலைக்கமுற்படுவதும் அதனால் அந்த பெண்ணிற்கு ஏற்படும் பிரச்சினைகளயும், அந்த பெண்ணின் மன வேதனையையும் விளக்கியுள்ளார்.

இளஞ்சிறகுகள் கதை தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த ஒருவரை ஒரு இசுலாமியப்பெண் காதலித்து வீட்டை விட்டு வெளியேறும் போது ஏற்படக்கூடிய மன ஓட்டத்தை ஒரு மூன்றாம் மனிதனின் பார்வையிலிருந்து கூறியுள்ளார்.

தீயின் விளிம்புகள் என்ற கதையில் ஜமாத் ஹாரம் கட்டுப்பாடு என்று மத்தின் பெயரைச்சொல்லி ஊரில் அடக்குமுறை செய்து கொண்டிருக்கும் ஒரு பணக்கார வர்கத்தின் போலித்தனத்தை கிழிக்கும் நிகழ்வுகளை கூறியுள்ளார் அந்த கதையிலிருந்து சில வரிகள்
// வந்து சேரவேண்டியவர்களெல்லாம் தங்கள் தங்கள் பந்தாவைக் காப்பாற்றுவதற்காகத் தாமதமாய் வருவதே சங்கைக்குறியது என்று கருதிக்கொண்டவர்களாய் சபையில் இந்த நிமிஷம் வரையில் ஆஜர் ஆகாமல் இருந்தார்கள்//

//'ஷரீ அத்'களையும் இதர பிற மார்க்க சம்பந்தமான நூல்களையும் தாங்கள் கரைத்துக் குடித்திருப்பதாகவே இவர்கள் சொல்லிக்கொண்டிருந்தாலும் அது உண்மைதான் என ஊர் ஜனங்களும் அப்பீலே அன்றி ஏற்றுக்கொண்டிருப்பதாலும் வழக்கமான கொடுமைகட்கெள்ளாம் மத முத்திரைகள் குத்தப்பட்டு அங்கீகரிக்கப்படும்//

என்ன ஒரு சத்தியமான வார்த்தைகள் இது மற்ற சமயத்தினருக்கும் பொருந்தும்,

// பொம்பளைங்களை எப்பாடு பட்டாவது அடக்கியே வக்கணும்னு நினைக்கிறதாலதான் நீங்க இப்படியெல்லாம் அனாவசியமா பேசுறிங்க//
என்று ஆணாதிக்க எண்ணத்திற்கு ஒரு குத்து விடுகின்றார்

மனவிழி என்ற கதையில் நகைச்சுவையை இழையோட விட்டுள்ளார் படைப்பாளி

விசை என்றொரு கதை, திருமணம் ஆனதும் பெண்களின் நட்பு வட்டாரம் சுருங்கி தன் கணவனின் நண்பர்கள், அவர்களின் மனைவிகள் என்று ஆகின்றது, ஆனால் அவர்களுடைய பள்ளி, கல்லூரி தோழர்கள் மறக்கப்படுகின்றனர், கணவரின் நட்பு வட்டத்திற்கு அளிக்கப்படும் விருந்தோம்பல்கள் மனைவியின் நட்பு வட்டத்திற்கு அளிக்கப்படுவதில்லை...
// "ஏம்மா இந்த மாமா உங்ககூடவா படிச்சாரு?"
"ஆமா"
" அப்போ ஏம்மா இவங்களைப்பத்தி இதுவரை சொல்லவே இல்ல?"//
// "நீ அந்த மாமாவை நம்ம வீட்டுக்கு வாங்கனு ஒரு வார்த்தை கூட சொல்லலியே ஏம்மா? "
இது சாதாரணமாக சமுதாயத்திலே நடந்து கொண்டிருக்கின்ற விடயம், இதை மிக அழகாக விளக்கியுள்ளார் படைப்பாளி

மொத்தத்தில் சமுதாயத்தின் பல பிரச்சினனகளை கடுமையான வார்த்தைகள் கொண்டு சாடாமல் இயல்பான இசுலாமிய குடும்பங்களை கதைக்களமாகக் கொண்ட ஒரு நல்ல படைப்புதான் களந்தை பீர்முகம்மதுவின் இந்த சிறுகதை தொகுப்பு

ரசிகர் மன்றங்கள் ஒரு பார்வை -1

ரசிகர் மன்றங்கள் ஒரு பார்வை -1

இந்த பதிவு தனிப்பட்ட எந்த ஒரு ரசிகர் மன்றத்தையும்
குறிவைத்து எழுதப்பட்டதல்ல.... ஆரோக்கியமான
ஒரு விவாதம் மட்டுமே, ஆரோக்கியமான, நாகரிகமான கருத்துகளை
எதிர்பார்க்கின்றேன். இதில் பல விடயங்களில் எமக்கு நேரடி அனுபவமுன்டு

திரைப்படங்கள் என்பது தமிழகத்தில் வெறும் பொழுது போக்கு அம்சமாக
மட்டுமிருப்பதில்லை, இங்கே சாதாரண பொது மக்களுக்கு தான் செய்ய முடியாத
விடயங்களை ஒருவர் திரையில் அரங்கேற்றும் போது ஒரு விதமான மகிழ்ச்சி
ஏற்படுகின்றது, அங்கே திரையில் நாயகனுக்கு பதில் தன்னை வைத்துப்பார்க்கின்றான்.

வட்டாச்சியர் அலுவலகத்தில்(மட்டுமல்ல மற்ற பல இடங்களிலும்) ஒரு சான்று வாங்கும்போது எல்லா நிலைகளுக்கும் லஞ்சம் கொடுக்கும்போது அந்த சாதாரண
மனிதனால் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் காசை கொடுத்துவிட்டு மனதிற்குள்
ஒரு இயலாமையான கோபம் மட்டுமே படமுடியும் அந்த கோபத்தைகூட அங்கே வெளியில் காட்டமுடியாது, இந்த நிலையில் இதை தட்டிகேட்டு ஒரு தாத்தா இந்தியன்
படத்தில் வரும்போது அங்கே நாயகனின் இடத்தில் தன்னையும் எதிர்நாயகனிடத்தில்
தன் எதிரியையும் வைத்துப்பார்க்கின்றான். தன்னால் செய்யமுடியாத ஒன்றை திரைப்படத்தில் காணும்போது உணர்ச்சி வசப்படுகின்றான், கை தட்டுகின்றான்,
ஆர்ப்பரிக்கின்றான், படம் முடிந்து வெளியில் வரும்போது அது அத்தனையும்
மறந்து தன் வேலையைப்பார்க்கின்றான், ஆனால் இன்னமும் அந்த படத்தையே
நினைத்துக்கொண்டிருப்பவன் அந்த நாயகனை நம்ப ஆரம்பிக்கின்றான்,

அந்த திரை நாயகனும் ஒரு சாதாரண மனிதரே, அவரும் நம்மை மாதிரிதான்,
நாம் எப்படி வேலை செய்கின்றோமோ அது மாதிரி அவருக்கும் நடிப்பது
ஒரு தொழில் அவ்வளவே என்று எண்ணாமல் திரையில் தெரியும் நாயகன் உண்மையென நினைக்கின்றான் விளைவு திரையில் நாயகன் செய்வது
பேசுவது எல்லாம் உண்மை என நினைக்க ஆரம்பிக்கின்றான்,
அதன் விளைவால் நிழலை மட்டுமின்றி நிஜத்தையும் ஆராதிக்கின்றான்.

திரையில் மட்டுமே நூறு பேரை அடிப்பது சாத்தியம் உண்மையில் சாத்தியமில்லை என்று நம்பும் அதே ரசிகன் திரையில் பேசும் வசனங்களும் பாத்திரமும் உண்மை என நம்புவது ஏன் என புரியவில்லை!!!

ஒரு குறிப்பிட்ட நடிகரை விரும்ப ஆரம்பித்தப்பின் அதே நடிப்பை வேறொருவர் திரையில் செய்யும் போது மனம் ஏற்றுக்கொள்வதில்லை, அந்த நடிகரின் மீது
காழ்புணர்ச்சிகொள்கின்றான், அவனுடைய விருப்ப நடிகர் திரையில் செய்யும்
விடயங்களை ஏற்றுக்கொள்ளும் மனம் மற்றொரு நடிகர் செய்யும் போது ஏற்றுக்கொள்ள
மறுக்கின்றது, ஏனெனில் நிழலையும் தான்டி நிசத்திலும் அந்த நடிகரை ஆராதிக்க ஆரம்பித்து விட்டான்.

இதில் குறிப்பிட்ட அளவிற்கு நடிகர்களின் பங்களிப்பும் உண்டு, மனித மனம் எப்போதும் புகழை விரும்பும், மற்றவர்கள் தம்மை பின் தொடர்வதை விரும்பும், திரையில் கிடைத்த புகழை நிசத்திற்கும் பயன்படுத்த விரும்புகின்றனர், விளைவு இரசிகர்களை தெய்வம் அது இது என்று புகழ ஆரம்பிக்கின்றனர் விளைவு ரசிகன் மேலும் போதை கொள்கின்றான்.

தமிழகத்திலே திரைத்துறையை சேர்ந்தவர்கள் முதல்வரானதும், திரைத்துறையில்
உள்ளோரின் அரசியல் பிரவேசமும் பல நடிகர்களை அடுத்த முதல்வர்
பதவிக்கு கணவுகாண வைக்கின்றது, பத்திரிக்கைகளும் திரைத்துறை
தொடர்பான விடயங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றன.

தன்னைப்போன்றே ஒரு குறிப்பிட்ட நடிகரை ஆராதிக்கும் சிலருடன்
சேர்ந்து மன்றம் தொடங்குகின்றனர் ரசிகர்கள், இது வளர்ந்த நடிகர்களுக்கு
மட்டுமே, தொடக்ககாலங்களில் நடிகர்களே பணம் தந்து சொந்தங்களின்
மூலம், தெரிந்தவர்கள் மூலம் ரசிகர் மன்றங்கள் திறக்கின்றனர்.

ரசிகர் மன்றங்கள் திறக்கும் அல்லது அதில் இருப்பவர்களின்
முக்கிய நோக்கம் ஊரிலோ அல்லது தாமிருக்கும் பகுதியிலோ
தமக்கென்று ஒரு அடையாளம் வேண்டும் இது தான் முதல் காரணி
இதன் பிறகுதான் நடிகரின் மேலுள்ள பாசமெல்லாம்.

பெரும்பாலான நடிகர்கள் ரசிகர் மன்றங்களை ஒரு அரசியல் கட்சி
மாதிரியே உருவாக்கிக்கொண்டுள்ளனர், மாநில (அகில உலக:-)) ) தலைமை
மாவட்டத்தலைமை என ஒரு அரசியல் கட்சி போன்றே நடத்துகின்றனர்
அரசியல் கட்சியாக மாறும்போதும் அமைப்பு ரீதியாக இது உதவுமென்பதால்.

அகில உலகத்தலைமை எப்போதும் ஒரு சாதாரண ரசிகராக இருக்க மாட்டார்
ஒன்று நடிகரின் சொந்தக்காரராக அல்லது நெருங்கிய நண்பராக இருப்பார்.
இதில் நடிகரின் மனைவிக்கும் அகில உலகத்தலைமை ரசிகர் மன்றத்தலைவருக்கும்
மன்றங்களை கட்டுப்படுத்துவதில் குழு மோதல் ஏற்படும்(இதைப்பற்றி விரிவாக பிறகு பார்ப்போம்), இப்படியாக மன்றங்கள் எப்போதும் சொந்தங்களின் கட்டுப்பாட்டில்தான்
இயங்கும், மன்றங்கள் கூட சொந்தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தான்
படத்திலும் நேரிலும் வாரிசு,குடும்ப அரசியலை எதிர்த்து கூப்பாடு போடுவர்,
என்னே ஒரு பார்வை!!!

சரி மன்றங்களின் அடையாளம் என்ன?

ஒரே ஒரு பெயர் பலகை.

பெரும்பாலான மன்றங்கள் ஒரு சிலரின் முயற்சியால் தான் ஆரம்பிக்கப்படும்
ஆனால் பெயர் பலகையில் பெயர் போடவேண்டுமே,
தலைவர்,துணைத்தலைவர், செயளாலர், துனை செயளாலர், இணை செயளாலர்,
பொருளாளர், துனை பொருளாளர், இணை பொருளாளர், கௌரவ தலைவர்,
கௌரவ செயளாலர் இது மட்டுமின்றி உறுப்பினர்கள்,

எங்கே செல்வர் இத்தனை பேருக்கும், எனவே மன்றம் ஆரம்பிப்போரின்
நண்பர்கள், சகோதரர்கள், மாமன், மச்சான்கள் பெயரெல்லாம் அவர்கள்
அந்த நடிகரின் ரசிகர்கள் இல்லையென்றாலும் ஒவ்வொரு
பதவியோடு மன்றப்பலகையில் அலங்கரிக்கும், பெயருக்கு முன் கட்டாயம்
நடிகரின் பெயர் இடம்பெற வேண்டும். இங்கேதான் பெரும்பாலான நடிகர்கள்
கோட்டை விடுகின்றனர், ரசிகர் மன்றம், உறுப்பினர்கள் கணக்கெல்லாம் போடும் போது
இவர்களெல்லாம் நடிகரின் தீவிர ரசிகர்களின் கணக்கில் வருகின்றனர், ஆனால் உண்மையில் அப்படியல்ல.


பெரும்பாலான மன்றங்களுக்கு இந்த பெயர்பலகையைத்தவிர வேறொன்றுமிருக்காது,
குறைந்தபட்சம் ஒரு கொட்டகைக்கூட இருக்காது. பெயர் பலகை வைத்தவுடன்
மன்றத்தை பதிவு செய்யும் சடங்கு உள்ளது, மன்றத்தின் பெயரை தலைமை மன்றத்திடம் பதிவுசெய்வது மிக அவசியம், அப்போதுதான் நாளை அரசியல் இயக்கமாக மாறும்போது அங்கீகாரம் கிடைக்கும், இதைவிட முக்கிய விடயமென்றால்
தலைமையிடமிருந்து ரசிகர் மன்றங்களுக்காக பணம் தரப்படுவது பதிவு செய்யப்பட்ட
மன்றங்களுக்கு மட்டுமே, மன்றங்களை பதிவு செய்யும் போது குறைந்தது 25 நபர்கள்
ரசிகர்களாக கணக்கு காட்டப்படவேண்டும், எனவே பல பெயர்களை தாமாகவே எழுதி
கையெழுத்தும் போட்டு அனுப்பவர் மன்ற நிர்வாகிகள், இந்த பெயர் பட்டியலையும்
பார்த்து தம் ரசிகர்களின் பலத்தை தவறாக கணிப்பர் நடிகர்கள்.

அகில உலகத்தலைமையிடமிருந்து பணம் மாவட்ட தலைமைக்கு அனுப்பப்படும்
அங்கிருந்து பணம் நகரத்தலைமைக்கும் அங்கிருந்து ஒவ்வொரு மன்றத்துக்கும்
தரப்படும். ஆனால் இந்த பணத்தை பிரித்துக்கொள்வதில் மன்றங்களுக்குள்
பெரிய குழு மோதலே நடக்கும். இந்த பணத்தை வைத்து நடிகர்களின் படம்
வெளியாகும்போது கட்-அவுட் வைப்பதும், சுவரொட்டி அடிப்பதும், பேனர்கள்
கட்டுவதும் நடக்கும், இந்த கட்-அவுட், தோரணங்கள், சுவரொட்டி
களை வண்ணப்படம் எடுத்து தலைமைக்கு அனுப்பிவைப்பர், இது அவர்கள்
பெற்ற பணத்திற்கு செய்த செலவிற்கான கணக்கு காண்பிப்பதற்காக,
எல்லா நடிகர்களின் தலைமை மன்றங்களும் ரசிகர் மன்றங்களுக்கு பணம் அனுப்பவதில்லை, அந்த மாதிரி நடிகர்களின் மன்றங்களுக்கு கட்-அவுட் வைக்க,
சுவரொட்டி அடிக்க, கொடித்தோரணம் கட்ட செலவு செய்ய பணம் எப்படி கிடைக்கின்றது.

அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.