Showing posts with label tamil pechu engal moochu. Show all posts
Showing posts with label tamil pechu engal moochu. Show all posts

தமிழ் ஆயுதத்தை கொண்டு மக்களை இழிவு படுத்தும் தமிழ்கடல் கண்ணன் & குழு


மிகை உணர்ச்சிகளை நீக்கிவிட்டு வரலாற்றுக் கண் கொண்டு பார்த்தால், இரண்டு விஷயங்களை விளங்கிக் கொள்ள முடியும்:

1.தமிழ் அறிவு என்பது ஒரு சமநிலைச் சமூகத்திற்கான (egalitarian society) விழைவை நோக்கி இட்டுச் செல்லும் ஒன்று
2.தமிழ் உணர்வு என்பது அதிகாரத்திற்கெதிரான, குறிப்பாக -வலியார் சிலர் எளியோர் தமை வதை செய்குவதை- போர்க் குணத்தை அளிப்பது. (anti -establishment)

தமிழ் உணர்வு தமிழ் அறிவு இவற்றிடையே திட்டவட்டமான வேலிகள் கிடையாது. ஒன்றிலிருந்து கிளைப்பது மற்றொன்று. ஒன்று மற்றொன்றுக்கு இட்டுச் செல்வது.


மேலே குறிப்பிடப்பட்டவைகள் மாலன் அவர்களின் பதிவிலிருந்து....

தமிழ் உணர்வும் தமிழறிவும் தமிழும் அதிகாரத்திற்கெதிரான, மக்களை சிறுமை படுத்துவதற்கெதிரான, ஒரு ஆயுதமாகவே வரலாற்றில் இருந்திருக்கின்றது... இன்றும் இருந்து கொண்டிருக்கின்றது, தமிழே பார்ப்பனியத்திற்கு எதிரான கலக குரலாக அடையாளப்படுத்தப்படுகிறது, தமிழே சமத்துவத்தை எதிர்ப்பவர்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது...

ஆனால் தமிழ்கடல் கண்ணன் என்ற மனப்பாடப்புகழ் கண்ணன் அவர்கள் நடுவராக இருந்து நடத்தும் "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" என்ற விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் என்ற சமத்துவத்தை எதிர்ப்பவர்களுக்கு எதிரான ஆயுதம் மக்களை இழிவுபடுத்துவர்களுக்கு எதிரான இந்த தமிழ் ஆயுதம் மக்களை இழிவு படுத்தவும் சமத்துவத்துக்கு எதிராகவும் பயன் படுத்தப்படுகின்றது.

தன்னம்பிக்கையின் பெயர் தமிழ் என்று விளம்பரப்படுத்தப்பட்ட தமிழ்பேச்சு எங்கள் மூச்சில் "சுயமரியாதை" என்பது பெயரளவில் கூட இல்லை என்பது சில போட்டியாளர்களை நடுவர்(?) மனப்பாடபுகழ் கண்ணன் அவமானப்படுத்தியதிலே தெரிகின்றது, போட்டியாளர் பிரசன்னாவை அவமானப்படுத்தியதில் ஆரம்பித்து ஒரு கல்லூரி விரிவுரையாளர்(பெயர் நினைவில் இல்லை) அவமானப்படுத்தப்பட்டது வரை நிறைய ஒளிபரப்பானது, ஒளிபரப்பாகாதது எத்தனையோ?

எப்போதெல்லாம் எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் இடஒதுக்கீட்டை இழித்தும் பழித்தும் பேசுவதும் தேவையென்றால் ஆவேசமாகவும் சில நேரங்களில் அழுது பரிதாபத்தை ஏற்படுத்தும் வகையிலுமான உத்தி பார்ப்பனர்களாலும் உயர்த்தப்பட்ட சாதியினராலும் அரங்கேற்றப்படுகின்றது, இதே விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா வில்
ஒரு பார்ப்பனர் தாம் மருத்துவராக ஆசைப்பட்டதாகவும் "Being a Brahamin" அப்படியென்று கூறி அழுதார், உடனே நிகழ்ச்சி நெறியாளர் கோபியும் உங்கள் வேதனை புரிகிறது என்றார்... என்னே நாடகம் என்னே நாடகம்!!! (மருத்துவர் ஆகவில்லையென்றாலும் ஐந்து மொழியில் பேசுவதாகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும் பெருமையடித்துக்கொண்டார்), "Being a Backward, most backward, scedule caste" எத்தனை எத்தனை அநியாயங்கள் நிகழ்த்தப்படுகின்றது, எத்தனை வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றது, இடஒதுக்கீடின்றி வாய்ப்பு மறுக்கப்பட்டால் அந்த பார்ப்பனர் அடைந்த நிலையை இவர்களால் அடைய முடியுமா? அம்மாதிரியான வாய்ப்புகள் எத்தனை பேருக்கு அமைகிறது? அந்த உணர்வுகளெல்லாம் கோபியால் புரிந்து கொள்ளப்பட்டதா?(இடஒதுக்கீடு பற்றி பல நேரங்களில் பேசியாகிவிட்டது, தொடர்ந்தும் பேசப்பட்டு வருகின்றது இந்த பதிவில் அதை பேசாமல் பதிவு தொடும் விசயத்தை தொடரலாம்)

இம்மாதிரியான ஒரு தளமமைப்பு தமிழ் பேச்சு எங்கள் மூச்சில் நடந்து கொண்டுள்ளது, தொடக்க சுற்றில் ஒரு பெண்மணி சாதிஒழிப்பு பற்றி பேசிக்கொண்டிருந்தார், அப்போது மனப்பாட புகழ் கண்ணன் குறுக்கிட்டு சாதியெல்லாம் ஒழியாதும்மா என்று கூறிவிட்டு அதற்கு காரணமாக சாதி சர்ட்டிபிகேட்டையும் இடஒதுக்கீட்டையும் கூறினார்,

BCக்கும் MBCக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? வெறும் 500ரூபாய் தான், 500ரூபாய் கூட கொடுத்தால் MBC சர்ட்டிபிகேட், குறைத்து கொடுத்தால் BC சர்ட்டிபிகேட் என்றார், சொல்லிவிட்டு நான் FC என்றார்,

போட்டியாளர்கள் ஆங்கில சொற்களை கலக்கும் போது கண்ணன் அவர்கள் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு தமிழிலே பேசுங்கள் என்பார், ஆனால் அவர் மட்டும் தான் FC என்று ஆங்கிலத்தில் சொன்னார், இது எப்படித்தெரியுமா? தமிழில் குண்டி என்று சொல்லாமல் "Butt" என்று சொன்னால் அந்த தாக்கம் குறைவாக இருக்குமே, அது போல நான் "உயர்சாதி" என்றும் BC, MBC, SC யை பிற்படுத்தப்பட்ட சாதி, தாழ்த்தப்பட சாதி என்று சொல்லியிருந்தால் பளிச்சென்று பார்வையாளர்கள் மண்டையில் உட்கார்ந்துவிடும் அவரின் நோக்கமும் புரிந்துவிடும், அதனாலேயே தமிழ்கடல் கண்ணன் உயர்சாதி என்று தமிழை பயன்படுத்தாமல் FC என்று ஆங்கிலத்தை பயன்படுத்தினார்.


நான் "FC" என்று சொல்கிறாரே கலர் காம்பினேசன் ஒத்துவரலையே என்றால் பிறகு தான் தெரிய வந்தது தமிழ்கடல் கண்ணன் "சைவப்பிள்ளை"யாம் தமிழ் சமூகத்தில் பார்ப்பனர் இடத்தில் இருக்கும் உயர் சாதி, அப்படி போடு அறுவாளை அதான் தமிழையே சமத்துவத்திற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறார்.


தமிழ்கடல் மனப்பாட புகழ் கண்ணன் சொன்னது போல BC க்கும் MBCக்கும் மான 500ரூபாய் வித்தியாசம் உலகின் புராதான தொழிலில் வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் நிதர்சனத்தில் அதையும் தாண்டியது. அந்த வித்தியாசத்தை பக்கத்தில் அமர்ந்திருந்த MBC அறிவுமதி அண்ணனிடம் கேட்டிருந்தாலே சொல்லியிருப்பார்,ஆனால் இதையெல்லாம் அறிவுமதி அண்ணன் கேட்டுக்கொண்டு சும்மாவே உட்கார்ந்திருந்தது மிகவும் வருத்தத்திற்குறியது,

தாழ்த்தப்பட்டவர்களிலிருந்து தீண்டாமை என்பதைத் தவிர சமூக, பொருளாதார, கல்வி, விழிப்புணர்வில் பெரிய வேறுபாடில்லாத சமூகங்கள் தான் MBC, சொன்னது நானில்லை தலித் எழுத்தாளர் ஆதவன் தீட்சன்யா, தமிழ்கடல் கண்ணன் தயாரென்றால் MBC களின் வாழ்க்கை தரத்தையும் இன்ன பலவற்றின் வித்தியாசங்களை நேரடியாக காண்பிக்க தயாராக இருக்கிறோம்.

விஜயன் என்றொரு போட்டியாளர், வைகோவை பிரதியெடுத்து பேசுபவது போல பேசுபவர் ஒரு முறை பேசுகிறார் "உயர் குடியில் பிறந்தார்கள் என்பதற்காக அவர்களுக்கு கல்வி மறுக்கப்படுவது அநியாயம்" என்றார், அடி செருப்பால இடஒதுக்கீட்டுக்கு தகுதியில்லாத பார்ப்பனர்களோ உயர்த்தப்பட்ட சாதிகளோ உயர்குடிகள் என்றால் மற்றோரெல்லாம் தாழ்ந்த குடியா?


இப்படியான மக்களுக்கெதிரான சமத்துவத்துக்கெதிரான பார்ப்பன சிந்தனைகளோடு பேசும் விஜயனைத்தான் கட்டித்தழுவி புகழ்ந்திருக்கிறார் மனப்பாட புகழ் கண்ணன்(என்ன எழவு விஜயன் பேசினாரென்று இந்த வாரம் தான் தெரியும்- இங்கே விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒரு வாரதாமதத்தில் ஒளிபரப்பப்படும்)

சென்ற வார நிகழ்ச்சியில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக ஒருவரை நிற்கவைத்து சக போட்டியாளர் "அவாள்" பெண் ஒருவர்,சைவப்புள்ளை மனப்பாடப்புகழ் கண்ணன் மற்றும் பட்டிமன்ற ராஜா (இந்த ராஜா சமயம் கிடைக்கும் போதெல்லாம் இடஒதுக்கீட்டிற்கு எதிராக தகுதி தகுதி என்று உளறுவார், ஏற்கனவே சில பட்டிமன்றங்களில் நகைச்சுவையாக பேசுகிறேன் என்று இடஒதுக்கீட்டை கேவலப்படுத்தும் போது கைதட்டி ஆரவாரித்த சொரனை கெட்ட பிறவிகளாகவே இருந்தனர் அங்கிருந்த பார்வையாளர்கள் அதில் பெரும்பாலும் ராஜா கேவலப்படுத்தும் இடஒதுக்கீட்டின் உரிமையாளர்கள்).

கோபமெல்லாம் வேகமாக என்றொரு கவிதை தமிழ்கடல் கண்ணன் அவர்கள் வலைப்பதிவில்

செஞ் சீனம் ஜப்பான் கொரியா ரஷியா

ஜெர்மனி மேலும் சில நாடுகளே

தஞ்சம் என்று கறுப்பினத்தை நாடி இன்று

தங்கங்கள் குவிக்கவில்லை போட்டியிலே

வஞ்சகர்கள் தம் நாட்டில் அவர்களையே

வதை செய்து வாழ்வொழித்த நாட்டிற்கெல்லாம்

கொஞ்சமல்ல தங்கங்கள் குவிப்ப தெல்லாம்

குன்றாத மனம் கொண்ட கறுப்பினமே

பசித் துன்பம் ஒழியாத கறுப்பர் நாட்டார்

பாய்ந்து ஒடி தங்கங்கள் பெறுகையிலே

வசிப்பதற்கு வழியின்றி வறுமைத் துன்பம்

வாட்டையிலும் வெல்லுகின்ற அவரைப் பார்த்தால்

கசியவில்லை கண்ணிரண்டும் கண்ணீரையே

கார் மழையாய்ப் பொழிகின்றது அவ்வினத்தின்

பசியதனைத் தீர்க்காத இறைவன் மீது

பாய்கிறது கோபமெல்லாம் வேகமாக

ஒடுக்கப்பட்ட கறுப்பர்களுக்காக இறைவன் மீது கோபம் கொண்டு இப்படி உருகி உருகி கவிதை வடித்திருக்கும் தமிழ்கடல் கண்ணன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இதுநாள் வரை(இன்னமும் கூட) பார்ப்பனர்களுக்கும், சைவப்புள்ளைகளுக்கும் இன்னும் உயர்த்தப்பட்ட சாதிகளுக்கும் உழைத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இருக்கும் இடஒதுக்கீட்டை தாக்குவதில் இடஒதுக்கீட்டை கேவலப்படுத்துவதில் தெரிகிறது இவரின் போலித்தனம். கறுப்பர்களுக்காக கண்ணீர் வடிக்கிறாராம்? யாரை ஏமாற்றுகிறார் தமிழ்கடல் கண்ணன்? அவருக்காவது அவர் உண்மையாக இருக்கட்டும்.


மொத்தத்தில் தமிழ் எதன் அடையாளமாக பயன் படுத்தப்படுகிறதோ எதற்கான ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறதோ அதற்கு எதிராகவே தமிழ்பேச்சு எங்கள் மூச்சில் தமிழ் பயண்படுத்தப்படுகின்றது. ஆனால் இந்த நுண்ணரசியல் தெரியாமலிருக்க அறிவுமதி, சுப.வீ போன்ற தமிழ் ஆர்வலர்களும் இந்த களத்தில் பயன் படுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதே வேதனை.

தமிழைக்கொண்டு மக்களை இழிவு படுத்தப்படுமெனில் அந்த தமிழையே தூக்கி எறியவும் தயங்கமாட்டோம்....
தமிழுக்கெதிராக பெரியார் உதிர்த்த கருத்துகள் எந்த சூழலில் உதிர்த்திருப்பார் என்பதை மிக அனுபவப்பூர்வமாக இப்போது உணர்கிறோம்.

தமிழ்கடலாகவே இருந்தாலும் குடிக்க பயனில்லா உப்பாக இருக்குமெனில் அந்த தேவையில்லாத ஒன்று தான், அது போல தமிழ்கடல் கண்ணன் மக்களுக்கு எதிரான, சமத்துவத்துக்கு எதிரான, சாதியத்துக்கு ஆதரவான செயல்களில் இருப்பதால் அவர் தமிழை கடல் போல கற்றிருந்தாலும் அவரின் தமிழறிவு குப்பைக்கு சமம்...

தமிழ்பேச்சு எங்கள் மூச்சு - ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதத்தை கொண்டு ஒடுக்கப்பட்டவர்களையே இழிவுபடுத்தும் ஒரு களம்