OPML பகிர்வு, ip , திரட்டி அரசியல், டெக்னாலஜி பிதாமகன் ரவிசங்கரின் டெக்னிக்கல் தவறுகள் மற்றும் இன்ன பிற...

சமீப காலமாக ரவிசங்கர் 'தமிழ்' திரட்டிகளை சாராமல் இருக்க கூடியதான நிலைப்பாட்டை வலியுறுத்தி தொடர் பதிவுகள் எழுதி வருகிறார், ரவிசங்கர் அவர்கள் ஏன் எதற்கக இப்படி எழுதிவருகிறார் என ஆரம்பித்தால் அவரின் டெக்னாலஜி பிதாமகன் என எல்லோரும் புகழ வேண்டுமென்ற ஆசையா, நான் சொன்னேன் செய்யலை என்று ஆரம்பிக்கும் அவரின் ஈகோ வா? அல்லது தமிழ்வலைப்பதிவுலகில் எல்லாம் தன் ஆலோசனையின் கீழ் தான் நடக்கவேண்டுமென்ற தன் முனைப்பா என்பதிலிருந்து சென்னையில் நடந்த வலைப்பதிவு பட்டடறை அரசியல், புதுச்சேரி வலைப்பதிவு பட்டறை அரசியல் என ஆரம்பித்து ஒரு வருடம் இனி பட்டறை நடத்த தேவையில்லை என்று கூறும் அத்தாரிட்டியிலிருந்து ரவிசங்கரின் முன்னுக்குபின் முரணான கொள்கை முரண்பாட்டிலிருந்து தானியங்கியாக பதிவுகளை திரட்டும்
'தமிழ்' திரட்டிகளை விட ஒரு குழுவிற்கு பிடித்த பதிவுகளை மட்டும் காண்பித்து கொண்டிருக்கும் மனித திரட்டிகளுக்கு அவர் தரும் முக்கியதுவத்தின் அரசியலில் இருந்து ஏகப்பட்ட விசயங்கள் பேச வேண்டியிருக்கும் என்பதால் அந்த விடயங்களை விவாதிக்கும் அளவிற்கு எமக்கு நேரமில்லை என்பதாலும் ரவிசங்கர் டெக்னிக்கலாக தந்து கொண்டிருக்கும் தவறான விசமங்களையும் மற்றும் சில விசயங்களை மட்டும் இங்கே சொல்கிறேன்...

1. தமிழ் திரட்டிகள் வெறும் தானியங்கி திரட்டிகள் மட்டுமல்ல, தமிழ் திரட்டிகள் என்று நான் குறிப்பிட்டதற்கு காரணம் டெக்னோரைட், கூகிள் ரீடர் போன்றவை பொதுவான திரட்டிகள், ஆனால் தமிழ்மணம், தமிழ்வெளி, தேன்கூடு, தமிழ்பதிவுகள் போன்றவைகள் தமிழ்மொழியில் எழுதப்படும் வலைப்பதிவுகளுக்காக உருவாக்கப்பட்ட திரட்டிகள், ரவிசங்கர் மூச்சுக்கு முன்னூறு முறை திரட்டிகளை சாராமல் திரட்டிகளை சாராமல் என்று சொல்வது என்ன வென்றால் 'தமிழ்' திரட்டிகளை சாராமல் என்று பொருள் ஏனென்றால் இவர் தமிழ் திரட்டிகளை சாராமல் இருக்கலாம் அப்போது வலைப்பதிவர்கள் கூகிள் ரீடர் திரட்டியையோ டெக்னோரைட் திரட்டியையோ அல்லது வேறு எந்த திரட்டியையோ சார்ந்து இருப்பதாகும்... சரி இவர் தமிழ் திரட்டிகளை சாராமல் இருக்க சொல்வதற்கான காரணங்களாக சிலவற்றை வைக்கின்றார். அதில் முதன்மையானது கட்டற்ற சுதந்திரம், பாதுகாப்பு என்று சில விடயங்களை முன் வைக்கிறார்... அதற்கு முன் இந்த திரட்டிகள் வெறும் பதிவு, பின்னூட்டம் திரட்டுவது என்று மற்ற திரட்டிகள் போலில்லாமல் ஒரு வலைப்பதிவு சமூகமாக இருந்து வருகின்றது, நட்சத்திரம், பூங்கா, சுடர் விளையாட்டு என தமிழ் வலைப்பதிவர்களின் பங்கேற்ப்பை ஊக்குவிக்கின்றது, information காலத்தை தாண்டி இப்போது நாம் Participatipon காலத்தில் இருக்கிறோம். அதானாலேயே சர்ச்சைகளும் அதிகமாக உள்ளது.

கட்டற்ற சுதந்திரம்:
ஆபாச பதிவுகள், ஆபாச பின்னூட்டங்கள் என்று தமிழ்மணம் அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்த போது அந்த ஆபாசங்களை எழுத்துவடிவில் எழுத இடம் கொடுத்த ப்ளாக்கருக்கு மின்மடல் அனுப்பி அதை

தடைசெய்ய சொன்னதை விட தமிழ்மணம் அதை காட்டக்கூடாது என்று எழுந்த கோரிக்கைகளும் அதை வைத்து தமிழ்மணத்தை தாக்கிய நிகழ்வுகளுமே நடந்தது, அந்த பதிவுகளை எல்லாம் தமிழ்மணம்

நீக்கியது, பின்னூட்ட மட்டுறுத்தல் செய்தால் தான் தமிழ்மணம் பின்னூட்டத்தை காண்பிக்கும் என்ற நிலைக்கு தமிழ்மணத்தை தள்ளியது யார்? தமிழ்மணமா? அல்லது வலைப்பதிவர்களா? இந்த பிரச்சினையில் எழுத இடம் கொடுத்த கூகிளை நோண்டியவர்களை விட தமிழ்மணத்தை தாக்கியதே அதிகம், சில மாதங்களுக்கு முன் பின்னூட்ட மட்டுறுத்தல் இல்லையென்றாலும் பதிவுகளின் பின்னூட்டம் காட்டப்படும் என்ற போதும் இதோ இந்த நொடி வரை ரவிசங்கரின் பதிவுகளில் பின்னூட்ட மட்டுறுத்தல் உள்ளதே என்ன காரணம், அவர் பதிவு மட்டுமல்ல எத்தனையோ பதிவுகளில் இன்னமும் பின்னூட்ட மட்டுறுத்தல் உள்ளது, ஏனென்றால் இங்கே அப்படியிருக்கு நிலைமை...

ரி தமிழ் திரட்டிகளில் தான் சுதந்திரம் இல்லை, கூகிளில் என்ன நிலைமை, ஒரு ஆபாச போலி ப்ரொபைலை சர்வேசன் பதிவில் வைத்து புகார் மேல் புகார் வைத்து குத்தோ குத்தென்று குத்தி முடக்கவில்லையா? புகார் மேல் புகார் அனுப்பியதில் இன்னொரு வலைப்பதிவை திறக்கும் போதே ப்லாக்கர் இந்த பதிவில் அவதூறுகள் உள்ளதாக புகார் வந்துள்ளது பார்க்க விருப்பமெனில் உள்ளே செல்லுங்கள் என்று எச்சரித்ததே அதெல்லாம் கட்டற்ற சுதந்திரமா?

கட்டற்ற சுதந்திரம் என்ற பெயரில் தமிழ் திரட்டிகளை புறக்கணிக்க சொல்வதன் காரணம் என்ன? அதன் பின் ஏதேனும் அரசியல் இருக்கா? என்ன அரசியல் அது?

ஒரு நாள் ஒரே ஒரு நாள் சுதந்திரமாக வலைப்பதிவுகளை தானாக இணைக்க அனுமதித்தால் இங்கே என்ன நடக்கும்? திரட்டியில் வந்து இணைத்து அதை வேலை, வீட்டுப்பிரச்சினைகள், புள்ளைகுட்டியோடு நேரம் செலவழிப்பு அதன் பிறகு ஏகப்பட்ட இன்ன பிற வேலைகளுக்கு பின் இந்த பதிவுகளை எல்லாம் படித்து இதெல்லாம் திரட்டியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இருக்கிறதா என பார்த்து பிறகு சேர்க்கும் போதே ஏகப்பட்ட பிரச்சினைகள் வருகிறது இதில் கட்டற்ற சுதந்திரமாக இணைக்கவிட்டால்?

பொது OPML உருவாக்குவதற்கான வரைமுறையாக ரவிசங்கர் முன்னெடுத்த விசயத்தில் எந்த பதிவுகளை சேர்க்கலாம் எதை சேர்க்க கூடாது என சொல்லியுள்ளது இங்கே

வெர்சன் 1 Dec -14 :எந்த மாதிரி பதிவுகளைத் தவிர்ப்பது?

பதிவுகள் பெரும்பாலும் தமிழில் எழுதப்படுவதாக இருப்பது முக்கியம். சாதி, மத, இன, மொழி வெறுப்புணர்வூட்டும் பதிவுகள், விளம்பரப் பதிவுகள், ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பார்க்கத் தகாத பதிவுகளைத் :) தவிர்க்கலாம். வேற பெரிய வரையறை ஏதும் இல்லை.

கட்டற்ற சுதந்திரம் பற்றி பேசுபவர் எந்த மாதிரி பதிவுகளை தவிர்க்க வேண்டுமென சொல்லியுள்ளார் பாருங்கள், டிசம்பர் 20 ம் தேதி வரை 7 முறை அடித்தல் திருத்தல் செய்த போது இருந்த இந்த தணிக்கை டிசம்பர் 20ம் தேதி கடைசியாக அடித்து திருத்தி எழுதிய போது இல்லை, திடீரென ஞானோதயம் வந்துவிட்டதோ என்னமோ....

2. OPML பகிர்வு
OPML என்பது ஒரு திரட்டியின் சொத்து, ஏன் அதை சொத்து என சொல்கிறேன் என்றால் அது ஒரு திரட்டியின் டேட்டா, எத்தனை பேர் அந்த திரட்டியில் இணைந்துள்ளார்கள் என்பதுவே அது தான், தமிழ்மணத்தின் பலம் அதில் இணைந்துள்ள 2400+ பதிவர்கள், அதை வெளியிட சொல்லி வேண்டுகோள் மட்டுமே விடுக்கலாம், கட்டாயப்படுத்த முடியாது, மீண்டும் சொல்கிறேன் அதை வெளியிட சொல்லி வேண்டுகோள் மட்டுமே விடுக்கலாம், கட்டாயப்படுத்த முடியாது... அது தான் தமிழ்மணத்தில் பதிவர் பட்டியல் இருக்கே அங்கேயிருந்து எடுத்துக்கொள்ளவேண்டியது தானே என்றால் அங்கே காப்பிரைட் பிரச்சினை உண்டு OPML ஆக வெளியிட்டால் அந்த பிரச்சினையில்லை அதனால் தான் ரவிசங்கர் OPML ஆக வெளியிட சொல்கிறார், தமிழ்மணம் OPML வெளியிடும் உதாரணத்திற்கு ரவிசங்கரே ஒரு திரட்டியை உருவாக்குகிறார் என வைத்துக்கொள்ளுங்களேன் தமிழ்மணம் மூன்றாண்டுகளுக்கு மேலாக கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து வைத்திருக்கும் அவர்களின் சொத்தை நோகாமல் நோன்பு கும்பிட ரவிசங்கர் உருவாக்குகிற(ஒரு உதாரணத்திற்கு மட்டுமே ரவிசங்கர் பெயரை பயன்படுத்தியுள்ளேன்) புது திரட்டியில் உபயோகப்படுத்தி கொள்ளலாம் பாருங்கள். மீண்டும் சொல்கிறேன் OPML வெளியிட சொல்லி வேண்டுகோள் மட்டுமே விடுக்கலாம், கட்டாயப்படுத்த முடியாது. அந்த வேண்டுகோளை புறந்தள்ள தமிழ்மணத்திற்கோ மற்ற திரட்டிகளுக்கோ உரிமை உண்டு.

OPML பகிர்வில் மேலும் சில சிக்கல்கள் உண்டு, ஒரு வலைப்பதிவர் ஒரு திரட்டியில் இணைகிறார் அந்த திரட்டியின் சட்டதிட்டங்களுக்கு இணங்க தம் பதிவை திரட்டியில் சேர்க்கிறார், அதை OPML ஆக வெளியிடும் உரிமை அந்த திரட்டிக்கு உண்டு, OPML பயன் படுத்தி இன்னொரு திரட்டியில் அந்த பதிவர் அவருக்கு தெரியாமலேயே இணைக்கப்படுகிறார், இப்போது புதிதாக வந்த திரட்டியின் சட்ட திட்டங்களுக்கு அவர் கட்டுப்பட்டவரா?

தமிழ்மணம் தங்களின் Terms And Conditions ல் பதிவுகளின் உள்ளடக்கம் எப்படி தமிழ்மணத்தால் பயன்படுத்தப்படுவதை வெறும் preview என்ற அளவில் மட்டுமே வைத்திருக்கிறது இதற்கு இணங்கி தமிழ்மணத்தில் ஒரு பதிவர் சேர்கிறார், தமிழ்மணத்தின் OPML மூலமாக அதே பதிவர் இன்னொரு திரட்டியில் இணைக்கப்படும் போது அந்த திரட்டியில் வலைப்பதிவு எழுத்துகள் காப்பிரைட் பிரச்சினையில்லாமல் மறுபதிப்பு, லைசன்ஸ் ஃப்ரீ என்றெல்லாம் இருந்தால் அந்த பதிவர் நிலை என்ன? அவராக சென்று அந்த திரட்டியில் இணைக்கவில்லை, இப்போது அந்த புது திரட்டியின் சட்ட திட்டங்களுக்கு இவர் கட்டுப்பட்டவரா?
அதற்கு கட்டுப்படாமல் அவர் இருக்க விரும்புகிறார் எனில் அவர் புது திரட்டிக்கு தெரிவிக்க வேண்டும், ஆனால் அவர் அந்த திரட்டியில் இருப்பதே அவருக்கு தெரியாதென்றால் என்ன செய்யலாம்? கிரெடிட்

கார்டு வழங்குபவர்கள் வழக்கமாக ஒரு வித்தையை செய்வார்கள், நாங்கள் மாதம் 20 ரூபாய் இந்த இன்சூரன்ஸ்க்காக, அந்த இன்சூரன்ஸ்க்காக பிடித்துக்கொள்வோம் உங்களுக்கு விருப்பமில்லையென்றால் லெட்டர் போடுங்கோ, போன் செய்யுங்கோன்னு, இதென்னடா கூத்து எனக்கு அதில் விருப்பமில்லையென்றால் நான் சொல்ல வேண்டுமாம், விருப்பம் இருப்பவனை மட்டும் சேர்த்துக்கொள், லெட்டர் போட்டு எவனுக்கு விருப்பமிருக்கோ அவன் பணத்தை மட்டும் எடுத்துக்கோ, அதே கதைதான் இங்கேயும் இதே மாதிரியான ஒரு காமெடியை ரவிசங்கரும் செய்துள்ளார், அவர் tamil-blogs-open-opml திட்டத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்

"ஒரு வேளை, சில பதிவர்களுக்கு இப்படி இந்த OPMLல் இடம்பெறுவதில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். இந்தக் கணக்கு பொதுவில் இருப்பதால் வேண்டாதவர்கள் தாமாகவே நுழைந்து பெயர்களை நீக்கிக் கொள்ளலாம். ஒரு வரி padhivu@gmail.comக்கு எழுதிப் போட்டால் நாம் அவற்றைப் பொது வெளியீடுகளின் போது கவனம் எடுத்து நீக்கலாம்."

இவுங்க சேர்த்துப்பாங்களாம், வேணாமுன்னா நாம போய் எனக்கு விருப்பமில்லைன்னு எழுதி போடணுமாம்.... சேர்க்கும் முன் அனுமதி பெற்று சேர்ப்பதே சரியானது, அதைத்தான் திரட்டிகள் செய்து வருகின்றன.

ஒரு வலைப்பதிவருக்கு ஒரு திரட்டியில் சேர்திருப்பார், இன்னொரு திரட்டியின் அரசியல் பிடிக்காமல் அதில் சேர விரும்பாமல் இருக்கலாம், மற்றொரு திரட்டியை நடத்துபவரை பிடிக்காமல் அதில் சேராமல் இருக்கலாம், ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் இதெல்லாம் பதிவரின் சுதந்திரம், அதில் தலையிட யார் கொடுத்தது அதிகாரம்? இதை சொன்னால் உடனே தமிழ்மணம் தேன்கூட்டிற்கு OPML கொடுத்ததே என்றால் தமிழ்மணத்தின் சேர்க்கை விதிகளிலேயே இருக்கின்றது அவர்கள் விரும்பினால தரலாமென, அதை ஒத்துக்கொண்டு தான் தமிழ்மணத்திலேயே சேர்கின்றார்கள் என்னும் போது தப்பில்லை.


கடைசியாக ரவிசங்கர் அவர்கள் பொறுப்பு துறப்பு என்று எழுதியிருக்கும் விசயமென்னவென்றால் பொறுப்புத் துறப்பு:

"இது திட்டமிட்டு தணிக்கை செய்ய முற்படாத ஒரு பட்டியல். எனவே இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பதிவுகள், தளங்கள் தரும் உள்ளடக்கம் தரமானதாகவும் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்புடையதாகவும் இருக்கும் என்று உறுதி அளிக்க இயலாது. இப்படியலில் தங்களுக்கு ஒவ்வாத தளங்களை நீக்கிப் பயன்படுத்த வேண்டியது பயனரின் பொறுப்பாகும் என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்."

இவர் துறந்த பொறுப்பை தான் திரட்டிகள் தானாக முன்னமேயே செய்துவருகின்றன.... ரவிசங்கர் எப்படி மூக்கைத்தொடுவார் நேரடியாகவா? அல்லது காதை சுற்றியா என்று தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளது.

கட்டற்ற சுதந்திரம் என்ற காரணத்தை சொல்லி 'தமிழ்' திரட்டிகளை துறக்க சொல்லும் ரவிசங்கருக்கு ப்லாக்கர், டெக்னோரைட்டில் ஆரம்பித்து எதிலுமே கட்டற்ற சுதந்திரம் கிடையாது என்பதே ஆபாச போலி பதிவுகளையும் புரொபைல்களையும் குத்தோ குத்தென்று குத்தி மூட வைத்த விசயத்தினால் தெரிந்திருக்கும்


குட்டிப்பையன் தூங்கி எழுந்து சத்தம் கொடுத்துக்கொண்டே என் லாப்டாப்பை தட்ட வந்தான், இனி அவனை பார்க்கவில்லையென்றால் ரகளை தான் மிச்சத்தை அடுத்து எப்போது நேரம் கிடைக்குமோ அப்போது....

தவறான தகவல்கள் தரும் டெக்னாலஜி பிதாமகன் ரவிசங்கர்

டெக்னாலஜி பிதாமகன் அவதாரம் எடுக்க முனையும் ரவிசங்கர் அவர்களின் சமீபத்திய இந்த பதிவில் ஒரு தவறான தகவலை தந்துள்ளார்...

//தமிழ்மணம் வழங்கி செயல் இழந்தாலோ தளப் பராமரிப்பு வேலைகளுக்காகத் தளத்தைத் தமிழ்மணம் தற்காலிகமாக முடக்கி வைத்தாலோ, அது தமிழ்மணக் கருவிப்பட்டைச் சேவையைப் பெறும் 2000+ பதிவுகளையும் சேர்த்து முடக்கும். முடக்கும் என்றால் தமிழ்மணம் வழமைக்குத் திரும்பும் வரை 2000+ பதிவுகளின் ஒரு பக்கத்தையும் யாரும் திறக்கவும் படிக்கவும் முடியாது.//

இது தவறான தகவல், தமிழ்மணம் வழமைக்கு திரும்பும் வரை தமிழ்மணம் வழியாக படிக்க முடியாதே தவிர நேரடியாகவோ பிற திரட்டிகள் வழியாகவோ படிக்க்க முடியும்... கடந்த காலங்களில் தமிழ்மணம் செயல்படாத நேரங்களில் பிற திரட்டிகள் வழியாக படித்துள்ளார்கள்....

சாஃப்ட்வேர் எஞ்சினியரிங்கில் எந்த ஒரு டிசைனும் எல்லா இடங்களுக்கும் பொறுந்தும் என்பது கிடையாது என்பது மற்றவர்களை விட துறையில் வேலை செய்பவர்களுக்கு தெரியும்....

உங்களின் நீண்ட இந்த தொடர்களுக்கு வரிக்கு வரி எம்மால் பதிலளிக்க இயலும்(இதற்கு முந்தைய பதிவுகளையும் சேர்த்து).... உங்களின் நிறைய சுய முரண் கொள்கை முரன் என்பதில் ஆரம்பித்து உங்களின் டெக்னாலஜி புரிந்துணர்வில் உள்ள ஓட்டைகள் வரை நிறைய எழுத முடியும்ம்....

தவறான தகவல்களை தர வேண்டாம்.... இப்படி நீங்கள் தவறான தகவல்கள் டெக்னிக்கல் விசயங்களில் தந்தால் டெக்னாலஜி பிதாமகன் அல்லது டெக்னாலஜி குரு என்று பெயர் எடுக்க விரும்பும் உங்களுக்கு அது பின்னடைவையே ஏற்படுத்தும் :-)))))))

பிற்சேர்க்கை:
தமிழ்மணம் கருவிப்பட்டை க்கான நிரலி இந்த டெம்ப்ளேட்டில் அப்படியே இருக்கின்றது அதில் ஒரு சிறிய மாற்றம் செய்துள்ளேன்...services.thamizmanam.com என்பதற்கு பதில் services.thamizmanam1.com என்று மாற்றியுள்ளேன்... இது தமிழ்மணம் சர்வர் செயலிழந்து இருக்கும் போது இருக்கும் நிலை... இப்போது என் பதிவு உங்களுக்கு தெரிகிறதா?

< language="'javascript'" src="'http://services.thamizmanam1.com/jscript.php'" type="'text/javascript'">


தெரிந்தால் ரவிசங்கர் சொல்வது சரியல்ல.... இடது மூலையில் ஒரே ஓரு ஜாவா ஸ்கிரிப்ட் பிழை செய்தி வருகிறதா? அவ்வளவே...

பிற்சேர்க்கை 2:
நண்பர்கள் சிலர் சோதித்து பார்த்துவிட்டு தமிழ்மணப்பட்டை தளத்தை முடக்குவதில்லை என்று கூறியுள்ளதால் என் பதிவில் நான் செய்த டெம்ப்ளேட் மாற்றத்தை சரி செய்து கொள்கிறேன்

மாஞ்சோலை பிரச்சினை பற்றி புதியதமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் பேட்டி தொடர்ச்சி தமிழ்வெளியில்...

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டம், அதன் சாதனைகள், வேதனைகள், பின்னடைவுகள் பற்றியும் 90%ம்மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற காரணத்தினாலேயே கட்சிகளினால் புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டுடன் இடதுசாரி இயக்கங்கள் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் பிரச்சினையின் போது ஒத்துழைக்காதது, இடது சாரி இயக்கங்களின் அடிப்படை பிரச்சினைகள் என விவரிக்கின்றார் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.. இந்த பேட்டி தமிழ்வெளி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

இந்த பேட்டியின் முதல் பகுதி ஓசை செல்லா அவரின் பதிவில் வெளியிடப்பட்டுள்ளது

அத்துமீறு - தடம் மாறுகிறதா விடுதலை சிறுத்தைகள் அமைப்பு?


பொத்தாம்பொதுவானதாக கம்யூனிஸ்ட் கட்சி இருக்க முடியாது. அது பறையன், பள்ளன் கட்சி என்று அதன் எதிரிகளால் மிகச்சரியாகவே இதற்கு முன் விளிக்கப் பட்டது. சரியாகச் சொல்வதெனில் அதை அருந்ததியர் கட்சியெனச் சாதிவெறியர்களும், பெண்களின் கட்சியென ஆணாதிக்கரும் இழித்துரைக்கும் நிலையை நோக்கி அக்கட்சி இன்னும் வேகமாக தலைகுப்புற வர வேண்டும் என்பதே ஒடுக்கப்பட்ட மக்களின் பெரு விருப்பம்.இப்படியான கருத்துகள் ஆதவன் தீட்சன்யா அவர்களின் "புதுவிசை" இதழின் தலையங்கம் சொல்கிறது

"அடங்கமறு, அத்துமீறு, திருப்பி அடி" என்ற முழக்கத்தோடு தலித் விடுதலைக்காகவும் தலித் சமூக மாற்றத்திற்காகவும் உருவான விடுதலை சிறுத்தைகள் அமைப்பு இன்று தலித்கள் கட்சி என்ற வட்டத்தை விட்டு வெளிவந்து எல்லோருக்குமான கட்சி என்ற பெயர் வாங்க கட்சியின் மொத்த அமைப்பையும் கலைத்துவிட்டார்கள்.

எல்லா சாதியினருக்கும் பொதுவான கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாற வேண்டிய சூழல் வந்துவிட்டதா? அதாவது தலித் விடுதலை பெற்றாகிவிட்டது இனி தலித்தாக பிறந்துவிட்டதனால் மற்ற சாதிவெறி நாய்களால் செய்யப்பட்ட கொடுமைகள் நீங்கி எங்கும் ஒரே சமத்துவம் நிலவுகின்றது ஆதலால் இனி தலித் அடையாளத்துடனான தலித் கட்சி தேவையில்லை என்ற சூழல் நமது சமூகத்தில் உருவாகிவிட்டதா?

அல்லது மற்ற எல்லா அரசியல் கட்சிகளிலும் தலித் சமூகத்தினர் பெரும் பங்கை பிடித்துவிட்டார்கள் பாவம் மற்ற சாதியினர் அவர்களுக்கு அரசியல் கட்சிகளில் பங்களிப்பே இல்லை அதனால் தலித் கட்சியை பொதுக்கட்சியாக்கி அதனால் பிற சாதியினருக்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் சேர்த்து அவர்களுக்கான பங்களிப்பை தர முயலும் நிலைமை உருவாகிவிட்டதா?

இரண்டுமே இல்லையே, இங்கே தலித் அல்லாதவர்களுக்கான கட்சிகளுக்கா பஞ்சம்? பிறகு ஏன் கட்சியின் அமைப்பை கால் மணி நேரத்தில் காலி செய்துவிட்டு எல்லோருக்கும் கதவை திறந்துவிட்டிருக்கின்றீர்கள்? விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் இப்போதும் கூட எத்தனையோ தலித் அல்லாதவர்களும் பொறுப்பில் உள்ளார்களே, சோழன் நம்பியாரில் ஆரம்பித்து எத்தனையோ பேர் மாநில மாவட்ட அளவில் பொறுப்பில் இருக்கின்றார்களே, இவர்களெல்லாம் கொள்கை பிடிப்போடும் தலித் இயக்கம் என்று தெரிந்தே தானே சேர்ந்தார்கள், அழைப்பில்லாமலேயே அவர்கள் எல்லாம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருக்கும் போது இப்போது எல்லோருக்கும் பொதுவான கட்சியென்று யாருக்கு அழைப்பு விடுக்கின்றீர்கள்?

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் இரண்டாம் முறையாக போட்டியிட்டபோது தொகுதியின் மொத்த தலித் வாக்காளார்களின் எண்ணிக்கையையும் விட பதினைந்தாயிரம் வாக்குகள் அதிகம் பெற்றாரே (குறைந்தது ஐம்பதாயிரம் வாக்குகள் தலித் அல்லாத சமூகத்தினரின் வாக்குகள் என கணிக்கப்பட்டது), அப்போதெல்லாம் தலித் விடுதலை, தலித் எழுச்சிக்கான உங்கள் குரலில் எந்த சமரசமும் இல்லாமலேயே நீங்கள் தலித் அல்லாதவர்களின் மனங்களில் ஊடுறுவித்தானே இருந்தீர்கள்.

அதிகாரத்தை நோக்கிய பயணத்தையோ, சமரசமற்ற அரசியலையோ யாம் எப்போதுமே மறுப்பதில்லை, அரசியலில் சமரசம் தேவை, இன்றைய நிலைப்பு தன்மை மிக முக்கியம், இந்த நிலைப்பு தன்மை மட்டுமே வருங்காலத்தில் தம் ஒடுக்கப்பட்ட மக்களுக்குகான நன்மைகள் செய்ய இயலும், ஆனால் எதை சமரசம் செய்ய முனைகிறோம் என்பது முக்கியமல்லவா?

கொள்கைப்பிடிப்பு இல்லாமல், அல்லது விடுதலை சிறுத்தைகளின் நோக்கங்களை ஏற்றுக்கொள்ளாத ஆதிக்க சாதியினர் கட்சியில் புகுந்துவிட்ட பின் தலித்களின் மீதான வன்கொடுமை தாக்குதல்கள் நடத்தபடும் இடங்களில் விடுதலை சிறுத்தைகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

இன்றைக்கு மாதிரியே "அத்துமீறு" "அடங்கமறு" "திருப்பி அடி" என்ற வீரியத்தோடே இருக்குமா? அல்லது நம்ம கட்சி காரர்தான் பேசிக்கலாம் வாங்க என்றோ நம்ம மா.செ.வோட அண்ணன் பையன் தான்பா உக்காந்து பேசலாம் வாங்க என்று கட்சி கணக்கு ஓட்டு கணக்கு என சமரச கணக்கு போட வேண்டியதாக இருக்குமா?

இப்படி சொல்வதாலேயே யாம் எல்லா நேரமும் எதிர் கலவரம் செய்யவேண்டுமென்று பொருள் படுத்தவில்லை, பாமக - விடுதலை சிறுத்தைகள் அமைப்புகளின் ஊடான முட்டல் மோதல்கள் மறைந்து ஒரு இணக்கமான சூழல் அமைந்த போது அது தலித்-வன்னியர் இணைப்பாக அந்த நிலை வரவேண்டுமென விரும்பிய எத்தனையோ உள்ளங்களின் யாமும் ஒன்று, என்ற போதிலும் எம்முடைய சந்தேகம் ஏன் கவலையும் கூட என்னவென்றால் தலித் கட்சியாக இல்லாமல் பொதுக்கட்சியாக விடுதலை சிறுத்தைகள் அமைப்பு மாறும் போது தலித்களுக்கு எதிரான சமூக இழி செயல்களை எப்படியான சமரசத்துடன் எதிர்கொள்ளும்?

திரு.தொல்.திருமாவின் இந்த முடிவுக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம், மாயாவதி அவர்களின் உ.பி. அரசியலை கணக்கில் கொண்டும் இருக்கலாம், அல்லது விடுதலை சிறுத்தைகள் அமைப்பிற்கு தலித்களில் வெறும் 20% மட்டுமே வாக்களிப்பதால் (இதே நிலைதான் பாமகவிற்கும், வன்னியர்களின் 20% மட்டுமே பாமகவிற்கு வாக்களிக்கின்றனர்) அரசியலில் சில உயரங்களை எட்ட முடியாத நிலையில் அமைப்பின் பலத்தை கூட்ட முயற்சிக்க கூட இப்படி முடிவெடுத்திருக்கலாம்.

எது எப்படியானாலும் திரு.திருமாவின் இந்த முடிவு அரசியலில் திருமா மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு சில உயரங்களை எட்டவும் ஒரு முக்கிய சக்தியாக அரசியலில் விளங்கவும் உதவி புரியலாம்! ஆனால் தலித் மக்களின் எழுச்சி? அவர்களின் பிரதிநிதித்துவம்? அவர்களின் அரசியல்? அவர்களின் சமூக நிலைக்கு இந்த சமரச அரசியல் உதவி புரியுமா என்பது சந்தேகமே

போலி மூர்த்தி- திராவிட ஆஃப் பாயில் குஞ்சுகள் - சுகுணாதிவாகர்

கடைசியாக எழுதியபோது போலி மூர்த்தி தொடர்பான விவகாரங்களை ஆஃப் லைனில் எடுத்து சென்றுவிடுகின்றோம் என்றேன், டோண்டு முரளி மனோகர் என்ற பெயரில் எழுதி மாட்டிக்கொண்டபோது எத்தனையோ பேர் கும்மு கும்மென்று கும்மினார்கள், அதில் எத்தனையோ பேர் மூர்த்தி பிரச்சினையில் அமைதியாக வேடிக்கைப்பார்த்தனர், அட எதற்கு கருத்து சொல்லனும், எப்போது சொல்லனும் என்ன சொல்லனுமென்பது அவரவர்கள் விருப்பம், அதை கேள்வி கேட்கும் அதிகாரமோ உரிமையோ எவருக்குமில்ல விமர்சனத்தை தவிர.

சுகுணாதிவாகர் போலி தொடர்பாக ஒரு பதிவு எழுதியிருந்தார், அதில் அவர் அள்ளித்தெளித்த கருத்துகளுக்கு பேசாமல் மூடிக்கொண்டே இருந்திருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதில் அவர் அள்ளித்தெளித்த கருத்துகளில் ஒன்று

"முதலில் நான் போலியை ஆதரிக்கவில்லை. ஆனால் அதேநேரத்தில் நான் போலியை எதிர்ப்பதெல்லாம் அவர் ஒரு ஆதிக்கச் சாதி வெறியராகவும் ஆணாதிக்கப் பாசிஸ்ட்டாகவும்
இருக்கிறார் என்பதாலுமே தவிர மற்றபடி அவர் கெட்டவார்த்தைகளில் திட்டுகிறார் என்பதற்காக அல்ல. இது என் வீட்டிலுள்ள பெண்களை நாளை அவர் கெட்டவார்த்தையில்
திட்டினால் அதற்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.ஆனால் இப்போது போலியை எதிர்ப்பவர்களுக்கும் சரி இதற்கு முன்னால் போலியை எதிர்ப்பவர்களுகும் சரி இப்படியான
நிலைப்பாடுகள் எதுவும் கிடையாது."

"போலியை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் சித்தாந்தம், அறம் என ஒரு புண்ணாக்கும் கிடையாது. தன்முனைப்பு, தனிமனித அரிப்பு, அப்போது யாரை எதிரியாய் வரித்துக்கொண்டோமோ அந்த
எதிரியை ஒழித்துக்கட்டும் வெறி இது மட்டும்தான் இரண்டுதரப்பிற்குமான அடிப்படை."


மற்றவர்களின் நிலைப்பாடு காரணங்கள் என்னவோ ஏதோ ஆனால் இதோ இப்போது வெளிப்படையாக சொல்கின்றேன், மூர்த்தி அசிங்கமாக என் குடும்பத்தையெல்லாம் கேவலமாக எழுதியபோதும் மின் மடல் அனுப்பிய போதும் தொடக்க காலங்களில் எனக்கு கோபம் வந்தது உண்மை, ஆனால் தொடர்ந்து அவன் மின் மடல்கள் வந்த போது மிக சாதாரணமாக அதை முழுவதும் படிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டேன்,

தொடர்ந்து அவன் அனுப்பிய மடல்களால் மரத்து போனது ஒரு காரணமெனில் தி.க. தலைவர் வீரமணி அவர்கள் சொன்னது அவரை திட்டி வரும் கடிதங்களில் சில "விபச்சாரி மகனே" என்று தான் ஆரம்பிக்கும் என்றும் ஆனால் அவைகளாலெல்லாம் காயப்படாமல் அவர் செயல்படுவதாகவும் பேசினார், அப்போதே ஆபாச மடல்களுக்கு உணர்ச்சி வயப்படும் நிலை குறைந்துவிட்டது.

போலி மூர்த்தியை எதிர்ப்பதற்கு எனக்கு சித்தாந்த புண்ணாக்கு எதுவுமில்லையென்றாலும் சில காரணங்கள் உண்டு....

1. மிக மேலோட்டமான மொக்கையான விவாதகளங்கள் நடத்தி வரும் காட்சி ஊடகங்களாக இருந்தாலும் சரி, அச்சு ஊடகங்களாக இருந்தாலும் சரி வெகுசன ஊடகங்கள் திராவிட, சபால்ட்டர்ன் கதையாடல்களுக்கு எந்த விதமான இடமும் அளிக்காமல், தம் இனத்தின் நலனுக்கான, தம் சாதிக்கான கருத்தாக்கங்களை, வேறு யாரும் ஊடகத்துறையில் வந்தாலும் கட்டமைக்கப்பட்ட ஊடக ஒழுக்கத்தை மீற முடியாதவாறு பொதுப்புத்தியாக மக்கள் மனதில் புகுத்திக்கொண்டிருக்கும், இருக்கின்ற இந் நிலையில் இந்த இணைய வெளி ஏற்படுத்தியிருக்கும் சுதந்திரவெளியில் மிகப்பெரிய தொடர் விவாதங்கள், உரையாடல்கள், கதையாடல்கள் எல்லாம் நடந்து கொண்டிருந்த சூழலில் பார்ப்பனர்களை எதிர்க்கிறேன் பேர்வழி என்று ஆபாசமாக பேசி வெகுசன ஊடகங்கள் மறுத்திருக்கும் ஒரு விவாத களத்தை இணையத்தில் சாத்தியமாக்கியிருக்கும் விவாத, உரையாடல் சூழலை நாசமாக்கும் மூர்த்தியின் போலி செயல்பாடுகளினால் இந்த மாதிரியான தளம் வீணாவதை தடுக்க போலி மூர்த்தியை எதிர்ப்பதற்கான முதல் காரணம்.

2. நான் முதன் முதலில் தமிழ் வலைப்பதிவுலகிற்கு வந்த போது
தங்கமணி, சுந்தரவடிவேல், ரோசாவசந்த், சுந்தரமூர்த்தி மற்றும் பலர் பதிவுகள் படித்த போது பெரியார் கொள்கைகள் பற்றி நிறைய புரிதல்கள் ஏற்பட்டன, இவர்கள் பெரியார் சித்தாந்த வெளிப்பாட்டு பதிவாளர்களாக இனம் காணப்பட்டனர், இவர்களின் எழுத்து மேலும் பலரை பெரியார் பற்றி அறிந்து கொள்ளவும் சித்தாந்தத்தை புரிந்து கொள்ளவும் தூண்டியது. இவர்களின் பதிவுகள் ஒரு எல்லையில் ஒரு கோட்பாட்டில் சிக்கிக்கொண்டு சிந்திக்காமல் பரந்துபட்ட சிந்தனை வெளியை காண்பித்தது

முதன்முறையாக இரண்டாண்டுகளுக்கு முன் தமிழ்மணத்திலிருந்து மூர்த்தி நீக்கப்பட்ட போது ஒரு சிறு சலசலப்பும் இல்லாமல் கேட்க நாதியில்லாமல் வெளியேற்றப்பட்டான் மூர்த்தி, கடந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போலி மூர்த்தி பிரச்சினை நடந்து கொண்டிருந்த போதும் விடாது கருப்புவாக வலைப்பதிவுலகின் மூர்த்தியின் ரீ-எண்ட்ரி தனது சொந்த அரிப்பை தீர்த்துக்கொள்ள பெரியார் பெயரை சொல்லிக்கொண்டும் பெரியாரின் தொண்டனாகவும் நடந்தேறியது.

விடாது கருப்பு மூர்த்தி போன்ற போலி பொறுக்கிகளும், பார்ப்பன எதிர்ப்பிற்கும் ஆளைஎதிர்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் தெரியாத மூர்த்தியின் ஓரிரு அல்லக்கை ஆஃப் பாயில் திராவிட குஞ்சுகள் எல்லாம் பெரியார் தொண்டர்களாகவும் பெரியார் சித்தாந்த வெளிப்பாட்டு பதிவர்களாகவும் கருதப்படுகின்ற நச்சு சூழல் ஒழிக்கப்பட வேண்டுமென்றது இரண்டாம் காரணம்.

3. பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு பொறுக்கி மூர்த்தியும் அவனுடைய அல்லக்கை ஆஃப் பாயில்களும் நடத்தும் போலி கூத்தில் திராவிட சிந்தனை உடையவர்களே இப்படித்தான் என்று நடத்தப்படும் தவறான பிரச்சாரத்திற்கு மூலக்காரணமே இந்த போலி மூர்த்தியும் அவனுடைய அல்லக்கை ஆஃப் பாயில் களும் என்பதால் எதிர்க்கின்றேன்.

4. மேலும் மேலும் புதியவர்கள் இணைய வலைப்பதிவு உலகில் வர வர வெகு சன ஊடகங்கள் திணித்திருக்கும் கட்டமைத்திருக்கும் பொதுப்புத்தி உடைக்கப்படும் ஆனால் அதற்கான சூழலை நாசம் செய்யும் இம்மாதிரியான செயல்களை எதிர்க்கின்றேன்.

5. நமக்கு தெரிந்து நம் வட்டத்தில் நம் முன்னே நடந்து கொண்டிருக்கும் ஒரு அராஜக ஆபாச அத்துமீறல்களை தைரியமும் திராணியுமல்லாமல் கேள்வி கேட்கவோ எதிர்க்காமல் அதிகாரத்துவத்துக்கு எதிரான கலகக்குரல், மனித உரிமை மீறல்களை எதிர்க்கும் குரல், அரஜாகத்துக்கு எதிரான குரல் என்றெல்லாம் நாமே சொல்லிக்கொள்வதும் அபத்தமாக தோன்றியது.

6. தலித் கம்னாட்டி(பல இடங்களில் இதையும் விட மோசமாக), என்றெல்லாம் எழுதுபவனும் பேசுபவனுமெல்லாம் சாதி ஒழிப்பாளன், சாதியத்தின் எதிரி என்பது போன்ற தோற்றத்தை விடாது கருப்பு மூர்த்தி சிலரிடம் உருவாக்கி வைத்திருந்தான், அவர்களுக்கெல்லாம் மூர்த்தி என்கிற பொறுக்கியின் உயர் சாதி செயல்பாடுகளை தோலுரிக்கவும் எதிர்த்தேன்... விடாது கருப்புவின் இந்த பதிவில் வெளியான சில பின்னூட்டங்கள்

வெங்காயம் said...
இத்தனைநாள் தீண்டாத் தகாதவனா பாப்பான் வெச்சிருந்தான்.
நீங்க இந்த அளவுக்கு இறங்கி வந்து இவன்களுக்காக போராடுகிறீர்களே அதுவே பெரிய விஷயம்.நீங்க போங்க சார். அவனுங்க பாப்பானிடம் அடிபட்டு மிதிபட்டு செருப்படி வாங்கினால்தான் திருந்துவானுங்க

அழகரசன் said...
இந்த தலித்து நாதாரிக்காக நீங்க இவ்ளோ தூரம் இறங்கி வந்திருக்க வேண்டாம். உங்க ஜாதி என்ன இந்த பரதேசியின் ஜாதி என்ன? நீங்க இவனுக்காக போராடினால் இவன் டோண்டுகூட தொடுப்பு வெச்சிருக்கான்.

சிவா said...
தியாகு என்ற பரபோக்கி நாதாரி

செந்தில் said...
சார்,
உயர்ந்த ஜாதியான நீங்க ஏன் இந்த பர நாய்களுக்காக கஷ்டப்படுறீங்க? அவனுங்க பாப்பானிடம் ....


தனக்கு தானே போட்டுக்கொண்ட பின்னூட்டமோ அல்லது இந்த மாதிரி பின்னூட்டங்களை அனுமதிப்பதன் மூலம் மூர்த்தியின் ஆதிக்க சாதி பொறுக்கித்தனம் வெளிப்படையாக தெரிந்தாலும் இதையும் மீறி அவனையெல்லாம் ஒரு சாதி எதிர்ப்பாளன் என்று நம்பிக்கொண்டிருக்கும் சில புண்ணாக்குகளுக்கு அம்பலப்படுத்த வேண்டியதேவை இருந்ததால் எதிர்க்கின்றேன். இந்த மாதிரியான பின்னூட்டங்களை அனுமதித்ததற்காகவே மூர்த்தியை "வன் கொடுமை தடுப்பு சட்ட்த்தின்" கீழ் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம்.

6. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், எந்த சித்தாந்த புண்ணாக்கும் தேவைப்படாமலேயே பொறுக்கி மூர்த்தியின் போலி செயல்பாடுகள் தவறானவை, அத்துமீறல்கள் என்று தெரிந்ததால் எதிர்க்கின்றேன்.

ஒன்றரையாண்டிற்கு முன்பே போலியை எதிர்த்து நான் போட்ட பதிவில் ஆரம்பித்த நாளிலிருந்தே ஆபாச பின்னூட்டங்கள், மின் மடல்கள் வர ஆரம்பித்தது, தொடக்கத்தில் கோபம் வந்த போதும் பிறகு அவைகளை சுலபமாக தாண்டி போக ஆரம்பித்துவிட்டேன், பலருக்கும் அவனைப்பற்றி எச்சரித்ததிலிருந்து அவனது போலி செயல்பாட்டுக்கு எதிராக என்னென்ன வேலைகள் செய்தேன் என போலியை எதிர்க்க என்னோடு தொடர்புகொண்ட பலருக்கும் தெரியும், இத்தனை காரணங்களுக்கும் பிறகே என் குடும்பத்தை ஆபாசமாக பேசினான் என்ற காரணமும்....

சுகுணாதிவாகர் மட்டுமே போலியை அவர் ஒரு ஆதிக்கச் சாதி வெறியராகவும் ஆணாதிக்கப் பாசிஸ்ட்டாகவும் எதிர்க்கிறாராம் மற்றவர்களெல்லாம் தனி மனித அரிப்புக்காகவும், தன் முனைப்புக்காகவும் தான் என்கிற வார்த்தைகளில் சுகுணாதிவாகர் தம்மை தாமே ஒரு புனித பீடத்தில் ஏற்றி வைத்துக்கொண்டு போலியை எதிர்க்கும் மற்றவர்களை பார்த்து ஏளனம் செய்யும் அந்த வரிகள் ஒரு கலகக்காரனுக்கான செயலாக தெரியவில்லை... நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்டது போல நான் ஒஸ்தி நீ மட்டம் என்ற வார்த்தைகள் அங்கே மிதக்கின்றன.

பச்சையாக சொல்லவா சுகுணா? நீங்கள் ஒரு அடி உயரத்தில் மிதந்து கொண்டிருக்கின்றீர், அது மாதிரி மிதப்பவர்களுக்கு பதின்ம வயது நிலை, பணம், புகழ் போதை, என பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் நீங்கள் மிதந்து கொண்டிருப்பதற்கான காரணம் இவைகள் இல்லையென்றாலும் நண்பர் கூறியது போல உங்களை நீங்களே ஒரு புனித பீடத்தில் ஏற்றிவைத்திருப்பதுவே என கருதுகின்றேன், நக்சல்கள், போராளிகள் பின்னாலான உளவியல் காரணங்கள்(சமூக காரணங்களை சொல்லவில்லை) அவர்கள் தம்மை பற்றி இப்படியான ஒரு உயர்ந்த புனித எண்ணத்தில் இருப்பதுவும் என சில இடங்களில் படித்திருக்கின்றேன். சுகுணா திவாகர் ஒரு தோழனாக சொல்கிறேன் நீங்கள் சுய ஆய்வு செய்ய வேண்டும், உங்களை நீங்களே சுய ஆய்வுக்குட்படுத்தும் நேரம் இது...

நான்காம் நாளாக தொடரும் பழ.நெடுமாறன் அவர்களின் உண்ணாநோன்பு போராட்டம்

ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை உடனடியாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்து வரும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களின் போராட்டம் இன்று நான்காம் நாளாக தொடர்கின்றது.

நேற்றே உடல் சோர்வடைந்த அய்யா நெடுமாறன் அவர்கள் இன்று மிகவும் சோர்வாக காணப்படுவதாகவும் பல்ஸ் குறைந்து கொண்டிருப்பதாகவும் மன உறுதியினாலேயே நலமாக இருப்பதாக நெடுமாறன் அய்யா அவர்கள் சொல்லிக்கொண்டு போராட்டத்தை கைவிட மறுப்பதாகவும் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்கள்...

இலங்கைக்கு எம் தமிழின மக்களை கொன்று குவிக்கும் சிங்கள இனவெறி அரசின் இராணுவத்திற்கு ராடார் மற்றும் ஆயுதங்கள் அளித்த மானங்கெட்ட மத்திய அரசும், இப்பிரச்சினையில் பாராமுகமாக இருக்கும் மானங்கெட்ட தமிழக அரசுக்கும் எம் கண்டனங்கள்...

அய்யா பழ.நெடுமாறன் அவர்களின் போராட்டம் வெற்றிகாண வாழ்த்துகிறேன்...

போராட்டம் தொடர்பான தட்ஸ்டமில்.காம் இன் செய்தி இங்கே

இன்னா நக்கலுப்பா நாராயணனுக்கு

உருப்படாத நாராயணன் நக்கல் நையாண்டியோடு சமூக அவலங்களையும் அதிகார பீடத்தையும் எழுத்தால் துகில் உரிப்பவர், திமுக வின் ஓராண்டு ஆட்சியை முகமது பின் துக்ளக் - வெர்ஷன் 2.0 என்று கலாய்த்தவர், கில்லிக்காக எலக்கியசம் (அ) என் பெயர் கோவாலு என்று எழுதியதை படித்து ரசித்து சிரித்தேன்... நக்கல் நையாண்டியோடு அறிவுசீவி போலித்தனம் செய்பவர்களை சுளுக்கெடுத்திருப்பார் நாராயணனன்....

முதலில் டிஸ்கெள்யமர்: இந்த கட்டுரையில் வரும் மனிதர்கள், விஷயங்கள் எல்லாமே கற்பனையே. யாரையும் தனிப்பட்டு குறிப்பிடுவன அல்ல

தேசாங்கி தெரியுமா உங்களுக்கு ? தெரியாதா. அப்போது நீங்கள் தமிழில் வரும் எந்த பத்திரிக்கையும் படிக்கவில்லை என்று தெரிகிறது. காலச்சுவடிலிருந்து குமுதம் வரை தமிழில் வரும் எல்லா இதழ்களிலும் தேசாங்கியின் கதை, கட்டுரை, கவிதைகள் இடம்பெறும். தமிழின் முண்ணணி எழுத்தாளர்களில் ஒருவர். சூரிச்சில் நடந்த 37வது உலக தமிழ் மாநாட்டில் தமிழகத்தில் இருக்கும் 10 தமிழ் ஐகான்களில் விஷாலுக்கு பிறகு தேசாங்கிக்குதான் இரண்டாம் இடம்.

தேசாங்கியின் கட்டுரைகளில் பொறி பறக்கும். கவிதைகளில் காதலும், காமமும் மயக்கும். கதைகளில் நையாண்டி தெறிக்கும். எல்லாரையும் படிக்க சொல்லும் மனிதநேயம் மிதக்கும். தமிழ் சினிமாவில் இளங்கோவிற்கு பிறகு நறுக்கென வசனங்கள் எழுதியது தேசாங்கி மட்டுமே. தேசாங்கியின் “பிஞ்சமட்ட” நாவல் முன்னொரு காலத்தில் வைரமுத்து என்கிற கவிஞன் எழுதி, பில்ட்-அப் கொடுத்து கவியரசு வாங்கியதை விட, செம பில்ட்-அப்பான கவி-கதை-கட்டுரை. புலிட்சர் விருதினை தவிர வேறெந்த விருதையும் வாங்க மாட்டேன் [யாரும் தரமாட்டார்கள் ] என்கிற வைராக்கியதோடு இருக்கும் தன்மான தமிழ்சிங்கம் தேசாங்கி. தமிழ்நாட்டில் எங்கே கூட்டம் நடந்தாலும், தேசாங்கியின் பாதச்சுவடுகள் இன்றி எதுவும் நடக்காது. தமிழகத்தின் அரசியல்வாதிகள், சினிமா, இலக்கியம், நவீனம், வகையறா, வகையறா எல்லாவற்றிலும் தேசாங்கி இருக்கிறார். கொஞ்ச நாட்களுக்கு முன் கலைஞர் டிவியின் சமையல் சமையல் நிகழ்ச்சியில் கூட தேசாங்கியின் வலைப்பதிவிலிருந்து எடுக்கப்பட்ட சமையல் குறிப்புகள் நேயர்களுக்கு ஸ்பெஷல் போனாஸாக அறிவிக்கப்பட்டன. தேசாங்கியினை பற்றிய பாடங்கள் வருங்கால தமிழ் வரலாற்றில் இருக்கவேண்டும் என்று கலாச்சார துறை அமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார். இவ்வளவு சொன்னாலும், இந்த கட்டுரை தேசாங்கியினை பற்றியது அல்ல.

கோவாலு.
நாயே.
டவுசரு.
குமாங்கி.
தவுடு பார்ட்டி.
ஜூமாகா.
பண்டலு.
பொறை மச்சான்.
தேங்காநாய்.
சிலுக்கான்.
விலாயி.

மேலே சொன்னவை ஒரு அட்டெண்டஸ் ரிஜிஸ்டர் எழுதுமளவுக்கு இருந்ததிலிருந்து பொறுக்கியெடுத்த கோவாலுவின் பெயர்கள். உங்களுக்கு இஷ்டப்பட்ட பெயரில் நீங்கள் கோவாலுவினை அழைக்கலாம், நான் கோவாலு என்று தான் கூப்பிடப்போகிறேன்.
மீதியை அவர் பதிவில் படித்துக்கொள்ளுங்கள்

மசோகிஸ்ட் டோண்டுவை தமிழ்மணத்தை விட்டு நீக்க கோரிக்கை...

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் போலி பிரச்சினை முடியும் தருவாயை ஒவ்வொரு முறை எட்டும் போதும் அதை எப்பாடு பட்டேனும் கலைக்கும் வேலையை டோண்டு செய்து கொண்டிருப்பார், சைக்கோ போலி மூர்த்தியினை பட்டவர்த்தனமாக அடையாளம் காட்டி சில நாட்களாக சேற்றிலே இறங்கி பன்றியை துரத்த போராடிக்கொண்டிருக்கும் நண்பர்கள் முயற்சியை வீணடிக்கும் விதமாக சமீபத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார், புண்ணை சொறிந்து சொறிந்து அதை ஆறவிடாத முயற்சியாகவே இதை பார்க்கின்றேன், இது ஆரம்பித்த அன்றே டோண்டு அவர்களின் போலி ஜெயராமனுக்கு வக்காலத்து வாங்கி பின்னூட்டம் போட்டு பிரச்சினையை திசை திருப்ப நினைத்த போதே டோண்டுவுக்கு மின் மடல் அனுப்பி உமக்கு என்ன பிரச்சினை முடியவேண்டுமென்ற என்னமில்லையா என்ற கருத்து தொணிக்க மடல் அனுப்பி போலி பற்றி பேசாமல் சற்று அமைதியாக ஒதுங்கி இருங்கள் என்றும் சொன்னேன்... பொதுப்படையாக போலி மூர்த்தியை அடையாளம் காட்டியும் ஆகிவிட்டது, அவன் சைக்கோ பேச்சையும் பொதுவில் காட்டியாகிவிட்டது, இனியும் அந்த சைக்கோ மூர்த்திக்கு உதவி செய்பவர்களுக்கும் அவனது அல்லக்கைகளுக்கும் என்ன மரியாதை கொடுக்கப்பட வேண்டுமோ அதை பதிவுலகம் பார்த்துக்கொள்ளும், மேலும் இதை தொடர்ந்து பொதுவில் பேசாமல் சைக்கோ மூர்த்தி மற்றும் அவன் அல்லக்கைகளுக்கு சட்டப்படியாகவும், மனசாட்சிபடியாகவும் என்ன செய்ய வேண்டுமோ அவைகளை ஆஃப் லைனில் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு பதிவு போட்டு போலி பிரச்சினையை எங்கே முடிந்து விடுமோ என்ற பதட்டத்தில் சொறிந்து விட்டுள்ளார் டோண்டு, போலி டோண்டு மூர்த்திக்கும் ஒரிஜினல் டோண்டு ராகவன் அவர்களுக்கும் என்ன தான் அப்படி ஒரு பந்தமோ, போலி டோண்டு மூர்த்தி இல்லாமல் ஒரிஜினல் டோண்டு வாழவே முடியாது போல.... சே....

தமிழ்மணத்தினால் எழுத ஆரம்பித்தவர்கள் ஏராளம், வெகுசன ஊடகங்கள் திணிப்பது மட்டுமே மக்கள் பார்வை என்றிருந்ததை குறைந்த இணைய பயன்பாட்டாளர்களுக்காவது வெகுசன ஊடகங்களுக்கு மாற்று ஏற்படுத்தியது தமிழ்மணம், அது நீடிக்கவும் மேலும் மேலும் பயனாளர்கள் எழுதும் ஆரோக்கிய சூழலை உருவாக்கவும் போலி மூர்த்திக்கு முடிவு கட்டுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு தேவை மசோகிஸ்ட்(pleasure in being abused or dominated : a taste for suffering ) டோண்டு அவர்களையும் தமிழ்மணத்திலிருந்து நீக்குவது, எப்போதோ சில நண்பர்கள் பன்றி துரத்தும் வேலையில் இறங்கியிருக்க வேண்டியது ஆனாலும் அப்போதெல்லாம் போலியை துரத்துவதை விட டோண்டுவுக்கும் வேறு சிலருக்கும் திராவிட சிந்தனையுள்ள பதிவர்கள் மீது பழி போட்டுக்கொண்டே இருந்ததே நண்பர்களையும் என்னையும் இந்த பன்றி துரத்தும் நிலையிலிருந்து ஒதுங்கியே இருக்க செய்தது...

இணைய சுதந்திரம் லொட்டு லொசுக்கு என்பதை தாண்டி, தமிழ்மணம் மீண்டும் மணம் வீச, ஆரோக்கிய சூழல் மீண்டு வர, தமிழ்மணத்திலிருந்து டோண்டுவை நீக்க கோரி தமிழ்மணம் நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கின்றேன்.... உங்களுக்கும் அதுவே தோன்றினால் ஒரு மின்மடல் தமிழ்மணத்திற்கு அனுப்புங்கள்.... இணைய சுதந்திரத்திற்கும் அராஜகத்திற்கும் வித்தியாசமுள்ளது, தமிழ்மணம் இணைய சுதந்திரம் என நினைக்காமல் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி ஒரிஜினல் மற்றும் போலி டோண்டுகளின் தொல்லையிலிருந்து தமிழ்மணத்தை விடுவிக்குமாறு வேண்டுகின்றேன்...

கிராஸ் ஃபயரில் அடிபட்டு சாகாதிங்க....

மூர்த்தி என்ற போலி பொறம்போக்கை வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இவ்வளவு நாட்களாக எங்கேயே போயிருந்த கவிதாயினிகளும், புத்தன்களும் திடீரென முளைக்கின்றார்கள், எந்த வித வரைமுறையுமில்லாமல் போலி மூர்த்தி அத்தனை வசவுகளையும் பொது இடங்களில் பொழிந்து கொண்டிருக்கின்றான்,ஆனால் கவிதா அவர்களுக்கோ இம்புட்டு நாள் இல்லாத கவிதை இப்போது மட்டும் பீறிட்டுக்கொண்டு வருகின்றது, எரியறதை பிடுங்கினால் கொதிக்கிறது தானா அடங்கும் சும்மா அவன் இவன் மலேசியா வில் இருக்கும் ஒருவன் மூவில் ஆரம்பித்து தியில் முடியும் என்றெல்லாம் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடாமல் நேரடியாக அந்த போலி மூர்த்தியை அம்பலப்படுத்திய செல்லா,ரவி என அதை தொடர்ந்து போலி மூர்த்திக்கு ஆப்பு அடிக்க நடந்து கொண்டிருக்கும் இந்த வேலையில் இந்த முயற்சிகளுக்கு தடை ஏற்படுத்தும் விதத்தில் எவர் செயல்பட்டாலும் அவர்களும் சேர்ந்தே அம்பலப்பட்டே போவார்கள்...

போலி மூர்த்தி மட்டுமல்ல அவன் செயல்களுக்கு நேரடி மற்றும் மறைமுக ஆதரவு கொடுக்கும் எந்த சொறி நாயாக இருந்தாலும், எந்த சாதி சொறி நாயாக இருந்தாலும் விலக்கப்பட வேண்டியவர்களே, போலி மூர்த்திக்கு ஆள் காட்டி கொடுக்கும் அல்லக்கையாக இருந்தாலும் சரி, நேரடி மற்றும் மறைமுக ஆதரவு கொடுக்கும் எந்த சொறிநாயாக இருந்தாலும் சரி தானாகவே பொதுவில் அம்பலப்பட்டு போவார்கள்.

அய்யா புத்தி சொல்லும் புத்தர்களே(?) இப்போது குறுக்கே வராதீர்கள், புத்த பிக்குகளின் பணியெல்லாம் சண்டை முடிந்த பிறகு தான் கலிங்கப்போரின் போதும் சண்டை முடிந்த பின் தான் புத்த பிக்குகளின் பணி ஆரம்பமாயின, சண்டையின் போது கிடையாது... எனவே உங்கள் புத்தர் கருணை கதைகளையும், கவிதைகளையும் இப்போது தூக்கிக்கொண்டு வராதீர்கள் முடிந்த பின் வாருங்கள், பொறுமையாக நேரமிருந்தால் கேட்கிறோம்....

கதைகளும் கவிதைகளும் மற்ற ஆளுக்கு சொல்லும் போது சரியாகத்தான் தோன்றும் ஆனால் தனக்கென்று வந்தாலோ அல்லது தனக்கென்று வந்தபோதோ எந்த நிலை எடுத்தோம், எடுக்கின்றோம் எடுப்போம் என அவரவர்கள் மனசாட்சியிடம் கேட்டால் சொல்லும்....




இப்போதைக்கு சொல்லிக்க விரும்புவது....

No Rulers Required, No Fixed Game Turns, இந்த ஆட்டம் அதன் போக்கில் போய் கொண்டிருக்கின்றது எனவே கிராஸ் ஃபயரில் அடிபட்டு சாகாதிங்க....

மூர்த்திக்கு ஆப்பு'ரேசன் ஆரம்பம்....

முன்கதை சுருக்கம் எல்லாம் எல்லோருக்கும் தெரியும், யாருக்கேனும் மூர்த்தியும், போலி டோண்டுவும், விடாது கருப்புவும் ஒன்றா வேறு வேறா என்று சந்தேகமே வேண்டாம் எல்லா பொறம்போக்குகளும் ஒன்றே தான், அவனோட படம் இருக்கு, விடாது கருப்பு என்று சொல்லிக்கொண்டு அவன் சிலரை பார்த்திருக்கிறான், அவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.





அவன் அப்பா பெயர் எஸ்.மருதமுத்து, ஊர் கீழ்திருப்பாலக்குடி, மன்னார்குடி, அம்மா பெயர் சந்திரா

மாமனார் வி.சோமசுந்தரம், மாமியார் சரோஜினி, நெ.33/47, பிள்ளையார் கோவில் தெரு, அரக்கோணம் - 2

எல்லாம் அவன் திருமண பத்திரிக்கையிலிருந்து எடுத்தது...

மலேசியாவில் அவன் வேலை செய்யும் இடம் ஜோகூர் பாரு (Johur Bahru)

பார்ப்பனர்களின் பூணுலை அறுக்க பேசும் இந்த பொறம்போக்கின் தந்தை பூணுல் போட்டிருப்பவர், ஆசாரி, இதைத்தான் தானும் பூணுல் போடும் உயர்சாதியென்று "வழிப்போக்கன்" என்ற பெயரில் டோண்டுவிடம் சொல்லிச்சென்றவன். திராவிட தமிழர்கள் குழுமம் ஆரம்பிக்கும் போது ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்கிறானாம், திரட்டி ஆரம்பித்தால் ஏன் சொல்லவில்லை என்கிறானாம், இவரு பெரிய புடுங்கி இவரிடம் சொல்லிவிட்டு தான் எல்ளாவற்றையும் செய்யனுமாம் , இவனுக்கு திருமணம் ஆனதே ஊரில் பாதி பேருக்கு தெரியாதாம், +2 முடித்தவுடன் சிலருக்கு திருட்டு தேர்வு எல்லாம் எழுதி கொடுத்திருக்கிறான் இவன், இவன் ஊருக்கு போவதே எப்போதாவது தான், அப்படி போனால் கூட யாருக்கும் தெரியாமல் திருட்டப்பயல் மாதிரி சில நாட்கள் இருந்துவிட்டு ஓடி வந்துவிடுவான்.... ஆயி அப்பனுக்கு பணம் தருவதில்லை இந்த வயசிலும் வேலை செய்து பசியாறுகிறார் இவனோட தந்தை. பச்சையா சொன்னா வீட்டுக்கு அடங்காதவன்

போலி ஒழியபோலி ஒழிய வேண்டும் அவ்வளவு தான் அது எந்த போலியாக இருந்தாலும் தான்... பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதோர் என்று எந்த வித்தியாசமும் கிடையாது...போலி பிரச்சினையில் மூர்த்தியை காலி செய்வதால், அவன் எல்லோரையும் கேவலமாக பேசுகிறான் பார்ப்பனர் அல்லாத நீங்கள் இப்படி அடித்துக்கொண்டால் பார்ப்பனர்களுக்கு தான் சந்தோசம் என்று சிலர் சொல்கிறார்கள், பொறுமையாக போங்கள், அவனை இக்னோர் செய்யுங்கள், அவன் திட்டி மெயில் போட்டால் டெலிட் செய்துட்டு போங்க என்று பஞ்சாயத்து பேசுகிறார்கள், ஆனால் பேசுபவர்கள் எல்லாம் நம்மிடம் தான் நொட்டுவார்கள், இக்னோர்ட் செய்வது எல்லாம் சரிதான் பார்ப்பனர்களுக்கு சந்தோசம் அவனும் நீங்களும் அடித்துக்கொண்டால் என பொளந்து கட்டும் இவர்களுக்கு பெரியார் சொல்லியது முதலில் சுயமரியாதை, சுயமரியாதையை ஒருவன் கேள்விக்குறியாக்கும் போது அவன் பார்ப்பனர்களுக்கு எதிரி அதனால் பார்ப்பனர்களுக்கு கொண்டாட்டம் அதனால் அமைதியாக இரு என்று பஞ்சாயத்து பேசுபவர்களே சுயமரியாதையை இழந்து பிறகு என்ன மசுரு பார்ப்பனிய எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பே சுயமரியாதைக்காகத்தான், ஆனால் பார்ப்பனிய எதிர்ப்பிற்காக சுயமரியாதையை பலியிட சொல்லும் இந்த பஞ்சாயத்து பேசுபவர்களின் குடும்பத்தை இழுத்து அவன் பேசினால் அப்போது சுயமரியாதை பார்க்காமல் பார்ப்பானுக்கு கொண்டாட்டமாகிவிடுமென பொத்திக்கொண்டு இருப்பார்களா என்று பார்க்கவேண்டும்....


இந்த விசயத்தில் அட்வைஸ் மழை பொழிந்த ஒருவருக்கே எவனோ அசிங்க பின்னூட்டம் போட்டவுடன் பொங்கி எழுந்து திட்டி தீர்த்தார் ஒரு நல்லவர், இவ்வளவு தான் அவர்களின் so called பொறுமை.

பொதுவாக தெரிந்தவர்கள் என்றால் நாம் கோபமாக பேச யோசிப்போம், ஆனால் இந்த சைக்கோ மூர்த்திக்கு அந்த பழக்கமே கிடையாது முட்டிக்கொண்டால் தெரிந்தவர்கள், பழகியவர்கள் பேசியவர்கள் ஆண்கள் பெண்கள்(அவன் மனைவி பக்கத்தில் இருந்தால் ஆபாசமாக பேசமாட்டானாம் தகவல் கிடைத்தது, அப்போ அவன் மனைவிக்கு மட்டும் நாகரீகம் மற்ற பெண்களுக்கு இலையா) என்று எந்த வித்தியாசமும் கிடையாது.... நல்லவர்களே நண்பர்களாக பழகுகிறான் எனக்கும் அவனுக்கும் என்ன சண்டை என்பவர்களுக்கு இது எச்சரிக்கை, மூர்த்தியோடு முட்டிக்கொண்டால் தெரிந்தவர்கள், பழகியவர்கள் பேசியவர்கள் ஆண்கள் பெண்கள்என்று எந்த வித்தியாசமும் கிடையாதுஅவனுக்கு அவனோடு நன்கு பழகிய நண்பர் ஒருவருக்கே போன் செய்து டார்ச்சர் செய்தவன்....

மூர்த்தி மட்டுமல்ல அதன் அல்லக்கைகளுக்கும் சேர்த்தே ஆப்பு வைக்கப்படும், மூர்த்தி, கருப்பு, போலி என்ற பெயரில் அவன் பலருடன் பேசியிருக்கலாம் ஆனால் அவனின் மொள்ளமாறித்தனத்திற்கு உதவி செய்த அல்லக்கைக்கும் சேர்த்தே ஆப்பு வைக்கப்படும்


தொடர்புடைய சுட்டிகள்
விடாதுமூர்த்தியும் தமிழ் வலைப்பதிவும்
போலி டோண்டு = மலேசியா மூர்த்தி

பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?

திமுக ஆட்சிக்கு வந்தால் ஐந்து ஆண்டுகளுக்கு அதிமுக எலி வலையில் புகுந்து கொள்ளும், அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுக எலி வலையினுள் புகுந்து கொள்ளும், அம்மாவுக்கு ஒரு பிரச்சினை என்றாலோ அய்யாவை தூக்கி உள்ளே வைத்தாலோ மட்டுமே ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் என்று தூள் பறக்கும், மற்ற நேரங்களில் திமுக ஆட்சியில் அதிமுக என்று ஒன்று இருப்பதோ அதிமுக ஆட்சியில் திமுக என்று ஒன்று இருப்பதோ பெரும்பாலும் தெரியவே வருவதில்லை.

தற்போது நடந்துவரும் திமுக ஆட்சிகாலத்தில் வழக்கம் போல அதிமுக எலி வலையினுள் புகுந்து கொள்ள தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருந்தது பாமகவும் விஜயகாந்த்தும் மட்டுமே....

ஏகோபித்த கர கோச ஊடக வெளிச்சத்தில் உலா வந்த மாற்றத்தை தருவேன் என்று வந்த விஜயகாந்த்தோ அற்புதமான ஒரு மாற்றத்தை உருவாக்கினார், தமிழகத்தில் இப்போதும் தனிப்பட்ட முறையில் வலுவான கட்சிகள் பட்டியலில் ஒரு சிறிய வித்தியாசத்தில் அதிமுக திமுகவை விட முன்னால் உள்ளது, ஆனால் அந்த கட்சியின் தலைவியோ அல்லது வலுவான திமுக வின் தலைவர்களின் வீட்டிலோ வருமானவரி முதல் இன்ன பிற எத்தனையோ சோதனைகள் நடந்த போதும் எந்த தொண்டனும் கூடிவந்தோ கூட்டி வந்தோ அதிகாரிகளை கேரோ செய்வதோ வழிமறித்ததோ நடந்ததில்லை, ஆனால் விஜயகாந்த் வீட்டில் வருமாணவரி சோதனைக்கு வந்த அதிகாரிகள் மறிக்கப்பட்டதும் கேரோ செய்ததும் வீட்டின் முன் தொண்டர்கள் கூடியது அல்லது கூட்டப்பட்டதும் நடந்தது, அதன் பின் அதை அப்படியே அட்டர் காப்பி அடித்து செல்வி.ஜெயலலிதா வீட்டில் வருமானவரி சோதனை என்றவுடன் ஆயிரக்கணக்கான தொண்டர் படைகளுடன் செங்கோட்டையன்களும் ஜெயக்குமார்களும் வீட்டையும் கட்சி அலுவலகத்தையும் பாதுகாத்தனர், ஆகா நல்ல மாற்றத்தை உருவாக்கிவிட்டார் விஜயகாந்த், இனி தமிழகத்தின் எந்த அரசியல் தலைவன் வீட்டிலும் வருமான வரிசோதனையோ எந்த சோதனையுமோ போடமுடியாத மாற்றத்தை உருவாக்கினார் விஜயகாந்த்.

விஜயகாந்த்தின் சத்தங்களும் குரல்களும் பெரும்பாலும் அவரது திருமண மண்டபத்தை சுற்றியே வந்தது, காரைக்குடி குரூப்ல கூப்டாங்க, தஞ்சாவூர் குரூப்ல கூப்டாங்க, என்ற அளவிற்கு என்னை கூட்டணிக்கு கூப்பிட்டாங்க மிரட்டினாங்க என்ற அளவிலேயே நின்று போனது அவரது சத்தங்கள்....

சென்ற ஆட்சியிலும் சரி இந்த ஆட்சியிலும் சரி மக்கள் போராட்டங்கள் ஓரளவிற்கு கம்யூனிஸ்ட் மற்றும் பாமக கட்சியினரால் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன(தேவைக்கதிகமாக எதிர்வினை புரியப்பட்ட குஷ்பு பிரச்சினை தவிர்த்த மற்றவைகள் மக்கள் பிரச்சினைகளை மையமாக வைத்தே இருந்தன) , சென்ற ஆட்சியின் தான் தோன்றித்தனமான தலைமை இருந்ததும், மேலும் ஆட்சிக்கு எந்த விதத்திலும் நெருக்கடி கொடுக்க முடியாத சட்டமன்ற பெரும்பாண்மை அதிமுக விற்கு இருந்ததுமான சூழலையும் ஒப்பு நோக்க வேண்டும்.

இந்த ஆட்சி ஆரம்பத்திலிருந்தே அதிமுக அம்மாவிற்கு பிரச்சினை என்றால் மட்டுமே வெளிவருவோம் என்று பதுங்கிகொண்ட நிலையில், காங்கிரஸ் கமுக்கமாக இருக்க தோழமைகட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக செயல்பட ஆரம்பித்தது பாமக. துனை நகரம் திட்டம், விமான நிலைய விரிவாக்கம் என்பதில் ஆரம்பித்து பாலாற்றில் அணைகட்டுவது தொடர்பாக அரசை எச்சரித்தும் பயனின்றி ஆந்திர அரசு கட்டும் அணைப்பற்றி சட்டமன்றத்திலேயே அது துடுப்பணை தடுப்பணை என்று சால்ஜாப்பு சொன்னார் அமைச்சர் துரை முருகன், நேரடியாக அணைகட்டும் இடத்திற்கே சென்று பாமக ஆர்பாட்டங்கள் செய்ய ஆந்திர அரசின் காவல்துறை மட்டுமின்றி அந்த ஊர் மக்களிடமும் உதைபட்டு வந்தனர் பாமகவினர், அதன் பின்பே இது தொடர்பாக கொஞ்சம் போல தீவிர நடவடிக்க எடுக்க ஆரம்பித்தது திமுக அரசு.

தனியார் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளை கொண்டிருக்கும் பெற்றோர்கள் சற்றேனும் மூச்சு விடும்படி நடந்திருக்கின்ற விடயம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை தாண்டி அதிகமகா கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சட்ரிக்கைகள், இப்பிரச்சினையை முதலில் பாமக இராமதாசு அவர்கள் கிளப்பியபோது சும்மா அதிகமாக வசூலிக்கின்றார்கள் என்று சொன்னால் போதாது ஆதாரம் வேண்டும், யாருமே புகார் கொடுக்கவில்லையே எனவே ஒன்றும் செய்ய முடியாது என்று எல்லாம் கிட்டத்தட்ட தனியார்கல்லூரிகளின் சங்க செயலாளர் போன்று பேசிய முதல்வர் அவர்கள் அதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான காழ்ப்புணர்சியே இப்படியான போராட்டத்தை பாமக நடத்துகிறது என்று காரணமெல்லாம் சொன்ன முதல்வர் தற்போது முதல்வருக்கு அமைச்சர் பொன்முடியின் மீது என்ன காழ்ப்புணர்வோ அல்லது அமைச்சர் பொன்முடியை நாடுகடத்த முடியவில்லையே என்று முதல்வருக்கு ஏதேனும் ஏக்கமோ தெரியவில்லை, அரசாங்கமே நான்கு குழுக்கள் அமைத்து பல கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து பல கல்லூரிகளில் சோதனை நடத்தும் குழுக்களெல்லாம் இப்போது இந்த அரசாங்கம் அமைத்துள்ளது, இதுவும் கூட பாமக ஸ்டைலில் நேரடியாக களத்தில் இறங்குவோம் கைப்பேசி எண் கொடுத்து கல்லூரியில் அதிக கட்டணம் வசூலித்தால் கைப்பேசி எண்ணுக்கு தெரிவியுங்கள் பாமக அந்த கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து போராடுவோம் என்று கிட்டத்தட்ட மிரட்டிய பின்பே குழுக்கள் அமைப்பது, புகார்களை பெறுவது, சோதனை என்றெல்லாம் அரசாங்கம் இறங்கியுள்ளது.

பாமகவும் மருத்துவர் இராமதாசும் நடத்தும் போராட்டங்களை சில கட்சிகள் தங்களை வளர்த்துக்கொள்ளவேண்டுமென்று போராட்டங்களை தூண்டுகிறார்கள் என்று பேசும் முதல்வர் எந்த கட்சியாக இருந்தாலும் ஒரு பிரச்சினையென்றால் அந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்த்து தங்களை வளர்த்துக்கொள்வதில் என்ன தவறு? இந்தி திணிப்பு எதிர்ப்பும் மொழிப்போராட்டமும் முடிந்த பின் என்ன திமுகவை கலைத்துவிட்டார்களா என்ன? அல்லது திமுக இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக போராடியதால் கிடைத்த ஆதரவு எதுவும் திமுகவிற்கு வேண்டாமென்று சொல்லிவிட்டார்களா? இல்லையே பின் ஏன் பாமக மீது மட்டும் இந்த விமர்சனம்? வெளியூர் அண்ணாச்சிகளுக்காக இரிலையன்சை எதிர்ப்பதும், உள்ளூர் அண்ணாச்சிகளுக்காக டாட்டாவை எதிர்ப்பது என்று இந்த போராட்டங்களுக்கு காரணம் கூறலாம், அண்ணாச்சிகளின் தயவைத் தெற்கே வளர்த்துக் கொள்ள இந்த தந்திரம் என்று சொன்னாலும் இந்த எதிர்ப்பில் இறங்குவதில் என்ன தவறு?

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்துவதும் அதன் வழியாக கட்சி வளர்ப்பதிலும் என்ன தவறு? அல்லது இப்படி பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடி கட்சி வளர்த்த வரலாறு தமிழகத்திலே இல்லையா என்ன?

அட கட்டிங்கிற்கு தான் பா இப்படியெல்லாம் போராடுகிறார்கள், அட ர்செண்ட்டேஜ்க்காகத்தான் பா போராடுகிறார்கள் என பச்சையாக பாமகவின் போராட்டங்கள் மீது எச்சில் துப்புபவர்கள் கமுக்கமாக இருக்கும் காங்கிரசும், கம்முன்னு இருக்கும் காம்ரேட்டுகளும், அமுக்கி வாசிக்கும் அதிமுகவும் அமைதியாக இருப்பதற்கு கட்டிங்கும் பர்செண்ட்டேஜூம் சரியாக கிடைத்துவிட்டது தான் காரணம் என்பார்களோ? இப்படியாக கொச்சை படுத்துவதென்றால் எந்த கட்சியின், எந்த தனிமனிதரின், எந்த சமூகத்தின், எந்த அமைப்பின் எந்த போராட்டங்களையும் கொச்சைப்படுத்தலாம்.

டாடா மினரல் ஆலை வந்தால் தென்மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும் என்று பேசிக்கொண்டிருப்பவர்கள் ஒரு முறை கடலூர் சிப்காட் வளாகத்தை பார்த்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன், 20 ஆண்டுகளுக்கு முன் சிப்காட்டிற்காக கிட்டத்தட்ட 17 கிலோமீட்டர் நீளம் வரை விளை நிலங்களையும் மானவாரி நிலங்களையும் அரசாங்கம் கையகப்படுத்திய போது கொடுக்கப்பட்ட உறுதி மொழிகளும் இன்னும் 10 ஆண்டுகளில் கடலூரில் வேலை இல்லாத பேச்சே இருக்காது என்று நீட்டி முழங்கியவர்களின் குரல்கள் இன்னும் என்னுள் ஒலித்துக்கொண்டிருக்கின்றது, சிறு குறு விவசாயிகள் நிலத்தை கொடுத்துவிட்டே கிடைத்த காசை இரண்டே ஆண்டுகளில் அழித்துவிட்டு அதே சிப்காட்டில் கூலித்தொழிலாளிகளாக சென்று அந்த இரசாயன ஆலைகளில் கடைநிலை வேலைகள் செய்துவிட்டு (மேல்மட்ட வேலைகள் முழுக்க வெளியூர் ஆட்கள், கடைசி சில வருடங்களில் கீழ்நிலை வேலைகளுக்கும் கூட குஜராத்திலிருந்து குடும்பம் குடும்பமாக வந்து வேலை செய்தார்கள்) சிறு நிலக்கிழார்களாக இருந்தவர்கள் கூலிகளாக வேலை செய்து இராசயன ஆலைகளால் மண், நீர், காற்று என அத்தனையும் மாசுபட்டு 17 அடி ஆழத்தில் கிடைத்த நீர் இப்போது 100 அடிக்கு கீழே போனாலும் கிடைக்கவில்லை என்பதால் ஆலைகளை மூடிவிட்டு செல்ல இப்போது மண் நீர் காற்று உடல்நலம் என அத்தனையும் கெட்டுப்போய் கூலி வேலையும் இல்லாமல் நிற்கும் அவலநிலை கடலூர் சிப்காட்டால்....

மாறன் சகோதரர்கள் கள்ள சாராயம் காய்ச்சியோ சூதாட்ட கிளப் நடத்தியோ பணம் சம்பாதித்துக்கொண்டில்லை அதை அவர்கள் செய்துகொண்டிருந்தால் இன்னேரம் அரசாங்கம் மாறன் சகோதரர்களுக்கு போட்டியாக கள்ளசாராம் காய்ச்சிக்கொண்டோ சூதாட்ட கிளப் நடத்தவோ ஆரம்பித்திருக்கும், கலைஞர் டிவி நடத்தும் அளவிற்கு பணமும் பலமும் இருக்கும் கலைஞர் குடும்பத்தால் கேபிள் இணைப்பு வழங்கும் நிறுவனம் நடத்துமளவிற்கு பணமோ பலமோ இல்லையோ என்னவோ அரசாங்கம் கேபிள் இணைப்பு வழங்கும் நிறுவனம் நடத்த முனைகிறது, நல்லவேளையாக கேபிள் இணப்பு, தொலைக்காட்சி நடத்துதல் என்று மாறன் சகோதரர்கள் நிறுத்திகொண்டதால் அரசாங்கம் கேபிள் இணைப்பு வழங்கும் நிறுவனம் நடத்துவதோடு நிறுத்திக்கொள்கிறது.

சாராயாத்தை அட சீமசரக்குதாங்க அந்த குடியை அரசாங்கமே ஊற்றிக்கொடுக்க ஆளெடுத்து நடத்துகிறது, கேளிக்கை கேபிள் இணைப்புகளை அரசாங்கம் நடத்துகிறது ஆனால் ஒரு மினரல் ஆலையை தென்மாவட்ட மக்களுக்கு ஏகத்திற்கும் வேலைவாய்ப்பையும் நன்மையையும் விளைவிக்க போவதாக சொல்லப்படும் ஒரு ஆலையை அரசாங்கம் நடத்த முடியவில்லையோ டாடா வந்து நடத்தப்போகிறதாம்? சில ஆயிரம் கோடி கொட்டி இலவச தொலைக்காட்சி வழங்கும் அரசால் ஓராயிரம் கோடி போட்டு இந்த ஆலையை நடத்த முடியலையோ?இதை எதிர்த்தால் கட்சி வளர்க்க பிரச்சினைகளை பயன்படுத்துகிறார்கள் என பாமக மீது பாய்கின்றனர் அப்போ என்ன அரசாங்கம் சாராயம் ஊற்றி கொடுப்பதையும் மாறன் சகோதரர்களின் தொழிலை மட்டுப்படுத்தும் தொழில்களையும் மட்டும் தான் அரசாங்கம் செய்யுமா? பாமக பிரச்சினைகளில் தலையிட்டு கட்சியை வளர்த்துக்கொள்ளுமளவிற்கு அரசாங்கம் ஏனப்பா பிரச்சினைகளை உருவாக்குகிறது அல்லது பிரச்சினைகளை பாமக வந்து தலையிட்டு அவர்கள் கட்சியை வளர்த்துக்கொள்ளும் அளவிற்கு பிரச்சினைகளில் ஏன் அலட்சியமாக இருக்கின்றது?

அரசாங்கமே நடத்தும், எ.எல்.சி. கார்ப்பரேஷனால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் பலருக்கு பணம் கிடைக்காமல், நிலம் கொடுத்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்பதும் பலருக்கு கிட்டாமல் போக 90 களில் டி.ஜி.எம்(டெப்புடி ஜெனரல் மேனேஜர் - என்.எல்.சிஅதிகாரவர்க்கத்தின் பவர் செண்ட்டர்கள்)கள் கேரோ செய்யப்பட்டு அலுவலகங்களில் முற்றுகையிடப்பட்டு மற்றும் பல பாமக ஸ்டைல் போராட்டங்களினால் பணமும் வேலையும் பலருக்கு கிடைத்தது, ஆனால் அதற்கான காலம் 30 ஆண்டுகளுக்கும் மேல், இப்போது கூட ஜெயங்கொண்டத்தில் நிலமெடுக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பிரச்சினைகள் ஆகின்றன (பின்ன இதற்கு பணமும் வேலையும் கிடைக்க இன்னொரு 30 ஆண்டுகள் யார் காத்திருப்பது) அரசாங்கம் நடத்தும் நிறுவனத்திலேயே இந்த நிலை என்றால் தனியார் நடத்தும் நிறுவனத்தில் எந்த அளவிற்கு நிவாரணமும் மற்றவைகளும் கிடைக்கும்? டாடா ஆலை தொடர்பாக நிறைய கேள்விகள் இருக்கின்றன, அதை வேறொரு சமயத்தில் எழுதலாம்.

நான் தலையிட்டதால் துணை நகரம் நிறுத்தப்பட்டது, நான் தலையிட்டதால் இது ஆனது, அது ஆனது என்று மருத்துவர் இராமதாசு சொல்கிறாராம், ஒவ்வொரு பிரச்சினைகளின் போதும் அவர்கள் தலையிட்டதால் என்ன வெற்றி கிடைத்தது என்பதை சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள், அரசாங்கமே அதன் சாதனைகளை அரசு விளம்பரங்கள் மூலம் செய்து கொண்டு தானே இருக்கின்றன, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் வெற்றிக்கு இன்றுவரை உரிமை கொண்டாடுகிறது திமுக, சுதந்திரம் பெற்று தந்ததற்கு காங்கிரஸ் உரிமை கொண்டாடுகிறது, அந்தந்த ஊர்களில் ஆலை வந்ததற்கும் ரோடு போட்டதற்கும் காரைக்குடி தண்ணீர் பிரச்சினை தொடர்பாக பழ.கருப்பையா அவர்களுமாக பிரச்சினைகளில் அவரவர்களின் வெற்றியை சொல்லிக்கொள்வது என்ன புதுசா? இராமதாசு மட்டும் 16 வயதினிலே பரட்ட சொல்வது போல "இது எப்படியிருக்கு" என்று சொல்கிறார் என விமர்சனம்.

கூட்டணியில் இருந்து கொண்டே விமர்சிக்கலாமா? இது சூழ்ச்சி அரசியல் என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது, சூழ்ச்சி அரசியலா அல்லது இராச தந்திர அரசியலா என்று சொல்வது ஆளைப்பொறுத்து பலருக்கும் மாறும், சிலர் செய்தால் சூழ்ச்சியரசியல், அதையே வேறு சிலர் செய்தால் இராசதந்திர அரசியல் சரி அதை விடுங்க.

தமிழகத்திலே கூட்டணி நிலை கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்படுத்தும், நடப்பது கூட்டணி கட்சி அல்ல, கூட்டணி கட்சிகளின் ஆதரவால் நடக்கும் திமுகவின் தனியாட்சி, அரசாங்கத்தின் இரண்டு ரூபாய் அரிசி திட்டமாக இருந்தாலும் வேறு நல்ல திட்டங்களுக்கும் கிடைக்கும் ஆதரவு திமுகவிற்கு மட்டுமே, அதில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு இல்லை, அரசு அதிகாரத்திலும் பங்கு இல்லை, ஆனால் மக்கள் பாதிப்படையும் பிரச்சினைகளால் ஏற்படும் கெட்ட பெயர் திமுகவிற்கு மட்டுமல்ல கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்தே, மக்கள் மன்றத்தில் செல்லும்போது அன்னைக்கு திமுக தான் காரணம் நாங்கள் அல்ல என்றால் அன்னைக்கு நீங்களும் தானே திமுகவோடு வாயை மூடிக்கொண்டு இருந்தீர்கள் என்பார்கள். அதே எதிர்கட்சியாக இருந்தால் வாயை திறக்காமல் இருந்தால் கூட அரசாங்கத்தின் கெட்ட பெயர்களுக்கு பங்காளிகளாக மாட்டார்கள், எனவே எதிர்கட்சியாக இருப்பதை விட தனியாட்சி நடத்தும் கட்சிக்கு கூட்டணி கட்சியாக இருப்பது மிகவும் சங்கடமானது, எதிர்கட்சியாக இருக்கும் போது அரசை விமர்சிப்பதை விட ஆளும் கட்சிக்கு கூட்டணிகட்சியாக இருக்கும் போது அரசின் பிரச்சினைக்குறிய மக்கள் விரோத செயல்பாடுகளை கடுமையாக எதிர்க்க வேண்டும். அந்த நிலைதான் பாமகவிற்கு இப்போது.

பாமக என்றால் முன்பு சிலருக்கு எப்போதும் எரியும், அவர்களுக்கு பாமக மட்டுமல்ல, திமுக என்றாலும் எரியும் அவர்களை விட்டுத்தள்ளுங்க, இப்போது பாமக மற்றும் மருத்துவர் இராமதாசு விசயத்தில் முதல்வரின் பதட்டத்தையும், மற்ற சிலரின் பதட்டமும் பாமக எதை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கின்றது என்பதை நன்றாகவே காட்டுகின்றது.

தொடர்புடைய சுட்டி: இராமதாசின் பரட்டை அரசியல்!

பிற்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு தந்தால் என்ன தவறு?: உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி

பிற்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு தந்தால் என்ன தவறு?: உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி

டெல்லி: நாட்டில் 52 சதவீதம் வசிக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உயர் கல்வி நிலையங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன, அதில் என்ன தவறு இருக்கிறது என அதிரடியாய் கேள்வி எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.

இட ஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் அரிஜித் பசாயத், தாக்கர், ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணை நேற்றும் நடந்தது. அப்போது பிற்படுத்தப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை குறித்த சென்சஸ் விவரங்கள் கூட அரசிடம் இல்லை என இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் ஒருவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதாடினார்.

அப்போது இடைமறித்த நீதிபதி ரவீந்திரன், அப்படிப்பட்ட சென்சஸ் எதற்கு. பிரச்சனை கணக்கில் இல்லை. உங்களிடம் தான் உள்ளது. இப்படிப்பட்ட கணக்கெடுப்பு நடந்து முடியும் வரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்கிறீர்களா. இதற்காக வருடக்கணக்கில் அரசு காத்திருக்க வேண்டுமா. இடைக்கால நிவாரணமாக 27 சதவீத இட ஒதுக்கீட்டை தருவதில் என்ன தவறு என்றார்.

மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், நீங்கள் அமெரிக்காவை உதாரணம் காட்டுகிறீர்கள். அங்கே 80 சதவீதத்தினர் வெள்ளையர்கள். 20 சதவீதத்தினர் தான் கருப்பர்களும் பிற இனத்தினரும். இந்தியாவில் நிலைமை அப்படியே தலைகீழ். இங்கே பரம்பரை பரம்பரையாக ஒரு குறிப்பிட்ட 20 சதவீதத்தினர் தான் நாட்டின் எல்லா பலன்களையும் அனுபவித்து வருகின்றனர்.

இப்போது மற்ற 80 சதவீதத்தினரும் பலன்களை அனுபவிக்கட்டுமே.. அதை அனுமதிப்பதில் என்ன தவறு. நாட்டில் பல மாநிலங்களில் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு அமலில் இருக்கத்தானே செய்கிறது. இதை மத்திய அரசும் அமலாக்கினால் என்ன தவறு என்றார்.

அப்போது பேசிய வழக்கறிஞர் சால்வே, யார் யாருக்கு இந்த இட ஒதுக்கீடு என்ற அறிவியல்பூர்வமான விவரம் கூட இல்லை என்றார்.

அப்போது இடைமறித்த தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் தந்த சாதிகளின் பட்டியலின் அடிப்படையில் தான் இந்த இட ஒதுக்கீடு அமலாக்கப்படவுள்ளது என்றார்.

மாநில அரசுகள் உருவாக்கிய பட்டியலை வைத்து இட ஒதுக்கீடு தருவது அர்த்தமில்லாதது என வழக்கறிஞர் சால்வே கூற, அவருக்கு பதிலளித்த நீதிபதி ரவீந்திரன், நாளை இந்த அரசு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்தால் அனைத்து ஏழைகள் குறித்த கணக்கெடுப்பும் முடியும் வரை இட ஒதுக்கீடே கூடாது என்பீர்களா, எத்தனை சதவீத ஏழை மக்கள் உள்ளனர் என்ற விவரம் இருக்கும்போது அது தொடர்பான அறிவியல்பூர்வமான பட்டியலுக்கு அவசியம் என்ன வந்தது என்றார்.

நன்றி தட்ஸ்டமில்.காம்

புரட்சி நாளை காலை எட்டரை மணிக்கு வருது

ஊரே பரபரப்பாக இருக்கின்றது, எந்த பக்கம் திரும்பினாலும் புரட்சி பற்றிதான் பேச்சே, தினசரி, வார மாத பத்திரிக்கையில் எல்லாம் புரட்சி வருவதை பற்றி தான் பேச்சே புரட்சியை ஆதரித்தும் எதிர்த்தும் வாத பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றது...

ஆமா "சுதந்திரம்" வந்து எல்லாத்தையும் புடுங்கிடுச்சி, மீதியை புரட்சி வந்து தாம் புடுங்கப்போவுது சலித்துக்கொண்டார் டீக்கடை பாய்


சுதந்திரம் வந்து என்ன புரட்சி வந்து என்ன? எல்லாம் பணம் இருக்கிறவனுக்கு தாம்பா, நம்மளை மாதிரி ஏழைபாழைங்களுக்கு உழைச்சாதான் அரை வயிறு தின்னலாம், போப்பா போயி வேலையைப்பாருங்கப்பா கும்பலாக புரட்சி வருவதை பற்றி பேசிக்கொண்டிருந்த சிவப்பு சட்டை போட்ட "போர்ட்டர்" தோழர்களை விரட்டிக்கொண்டிருந்தார் ஹெ.எம்.எஸ் கோபால்


அரசியல் தலைவர்களிலும் கூட புரட்சியை ஆதரித்தும் எதிர்த்தும் அறிக்கைகள் விடப்பட்டுக்கொண்டிருந்தது


புரட்சி வருவதை யாராலும் தடுக்க முடியாது - திமுக தலைவர் உதயநிதி அறிவிப்பு

புரட்சியை ஆதரித்தால் தமிழ்நாடு உருப்படாது, புரட்சியை எதிர்த்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி அறிக்கை

புரட்சியை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை, - மாதிமுக(மாறன் திமுக) தலைவர்

நாங்கள் வித்தியாசமானவர்கள், மதுரைக்கு வடக்கே புரட்சிக்கு ஆதரவும் மதுரைக்கே தெற்கே எதிர்ப்பும் தெரிவிப்போம் மதுரையில் ஆதரவோ எதிர்ப்போ செய்யமாட்டோம், இளைய புரட்சி கலைஞர் பிரபாகரன் தலைமையை ஏற்கும் வரை நான் தேமுதிக வின் தலைமை பொறுப்பில் இருப்பேன், இளைய புரட்சி கலைஞர் பிரபாகரன் அவர்கள் தலைமை ஏற்கும் நாளுக்காக காத்திருக்கிறோம், அதன் பின் ஒரு தொண்டனாக தேமுதிகவில் தொடருவேன் - தேமுதிக தலைவர்(பொறுப்பு) சுதீஷ் பரபரப்பு பேட்டி


புரட்சி பற்றி முடிவு செய்ய புரட்சித்தலைவியின் ஆணைக்காக காத்திருக்கின்றோம், புரட்சி தலைவி கனவில் வந்து ஆணையிட தயாராக இன்றிலிருந்து புரட்சி வரும் நாள் வரை தூங்கப்போகிறோம், புரட்சி தலைவர் நாமம் வாழ்க, புரட்சி தலைவி புகழ் ஓங்குக - அதிமுக பொதுச்செயலாளர் ஏகாம்பரம் பேட்டி

புரட்சி உழைக்கும் மக்களை சுரண்டும் பொறுக்கிகளின் கொண்டாட்டம், உழைக்கும் மக்களை உடனடி பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் செயலே புரட்சி இதோ வருது புரட்சி அதோ வருது என்கிற நாடகம், புரட்சி வருது வருது என்று இத்தனை நாட்களாக மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள் புரட்சியை ஆதரிக்கும் தரகு முதலாளிகள் - தோழர் கிச்சா என்கிற கிருஷ்ண மூர்த்தி அய்யங்கார் - ம க இ க செயலாளர் - புதிய ஜனநாயகம் பத்திரிக்கையில் வெளியிட்ட அறிக்கை தோழர் "தீவிர அசுரனின்" வலைப்பதிவில்...


கரகம், காவடி மேள தாளங்களோடு பீர் விஸ்கி கைகளோடு புரட்சியை வரவேற்க ஊர் எல்லையிலேயே காத்திருந்தார்கள் இளைஞர்கள்....

"ஏம்பா கி.பி. 2000த்துலயே ஒரு புரட்சி வந்து ஊத்திக்கிச்சாமே தெரியுமா?"

"ஆமாம் நானும் கேள்விப்பட்டேன், நெட்ல கூட அது டீட்டெய்ல்ஸ் தேடினேன், 2000ல புரட்சி வந்ததுன்னு தகவல் இருக்கு ஆனா அதுக்கு மேல வேற ஒண்ணும் தகவல் இல்லை"

"ரொம்ப வருசம் கழிச்சி இந்த புரட்சி வந்திருக்கு, ஏற்கனவே சுதந்திரம் ஊத்திக்கிச்சி, இந்த புரட்சியும் ஊத்திக்கிச்சினா அவ்ளோதான் நம்ம கனவெல்லாம் வீணாயிடும்"

ஏய் புரட்சி வந்துருச்சி புரட்சி வந்துருச்சி, கத்திக்கொண்டே அந்த காரை நோக்கி ஓடினார்கள் இளைஞர்கள்....

தாரை தப்பட்டை முழங்க காரை சுற்றி சுற்றி வந்தார்கள்...

முகத்தை தொங்க போட்டபடி இறங்கினார் ....

எல்லோரிடமும் அப்போது ஒரே கேள்வி தான் புரட்சி வந்துருச்சா?? ஒரு வேளை முதலாளி புரட்சி வராம இருக்க சதி செய்துட்டாரா?, அவருக்கு புரட்சி வருவதில் விருப்பமேயில்லை, அவர் பையன் தான் புரட்சி வரவைக்க ஆர்வமாக இருந்தார்...

"அண்ணே புரட்சி வந்துருச்சா? "

"அட என்னப்பா திடீர்னு கூட 50 லட்சம் கூட குடுத்தாதான் புரட்சியை கொடுப்பேன்னு சொல்றானுங்க, அதான் பணம் பொறட்டிக்கிட்டு போக வந்துருக்கேன், பயப்படாதிங்க நாளைக்கு காலையில எட்டரை மணிக்குள்ள புரட்சி வந்துடும்"

புரட்சி - சென்ற மாதம் தான் அறுபதாம் கல்யாணம் செய்த சூப்பர் ஸ்டார் "விஜய்" - பழம் பெரும் நடிகை ஸ்ரேயாவின் பேத்தி சுரேயா நடிக்க 200 கோடி ரூபாய் செலவில் தயாரான தமிழ் திரைப்படம்

தமிழகத்தை ஆண்ட சாதிகளின் கதை(யல்ல நிஜம்)

தமிழகத்திலே ஆண்ட சாதிகளின் கணக்கையெடுப்பதை விட ஆளாத சாதிகளின் கணக்கை எடுப்பதுவே சுலபம், ஒவ்வொரு சாதிக்காரர்களிடமும் கேளுங்கள் அவர்களின் குலப்பெருமைகளையும் ஆண்ட கதைகளையும் சொல்வார்கள், மீனவர்களை செம்படவர்கள் என்று அழைப்பது உண்டு, அவர்களை போய் செம்படவன் என்று அழைத்து பாருங்கள் செருப்பால் அடிப்பார்கள், தாங்கள் பரதவ குலமென்றும் பரதவ குல ராசாக்கள் ஆண்ட கதைகள் உங்களுக்கு சென்னையிலிருந்து குமரிவரை நீண்டிருக்கும் கிழக்கு கடற்கரை ஊர்கள் முழுவதிலும் கிடைக்கும், மதுரைக்கு சென்றால் அறிவாணந்த "பாண்டிய" நாடார் சுவர்களில் சிரித்துக்கொண்டிருப்பார்.

சமீபத்தில் விகடனில் விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர் எழுத்தாளர் ரவிக்குமார் நாடார்கள் பற்றி எழுதியதற்கு நாடார் சங்கதலைவர் ஒருவர் நாடார்கள் எப்படி சங்க காலங்களிலும் மற்றைய காலங்களிலும் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருந்தார்கள் என்று மறுப்பு எழுதினார்.

ஊரெல்லாம் கொச சாதி (குயவர்கள்) என்று கூறினாலும் தம்மை "மண் உடையார்கள்" என்றும் சோழ மன்னரின் உயிரை காப்பாற்றியதற்காக சோழர்கள் பல ஊர்களை கொடுத்ததாகவும் அதை ஆண்டு வந்ததாகவும் சொல்லிக்கொள்வார்கள் நாங்கள் வசிக்கும் பகுதியின் மண்ணின் மைந்தர்கள், ஊரை பிரிக்கும் சாலைக்கு தெற்கு பக்கம் ஒரு குடிமக்களும் வடக்கு பக்கம் மற்றொரு குடி மக்களும் வாழ்ந்தார்கள்.

"ஊரின் பவிசு கோவிலில் தெரியும்
குலத்தின் பவிசு குல சாமியிடம் தெரியும்" என்பார்கள்,

ஊர் எத்தனை வளமாக இருக்கிறது என்பதை ஊரில் உள்ள கோவிலின் வளமையிலும் ஒரு குலம் எத்தனை வளமாக உள்ளது என்பதை அவர்களின் குல தெய்வ கோவிலும் அந்த சாமிக்கு எடுக்கும் விழா கொண்டாட்டங்களிலும் தெரியும் என்பார்கள், எனக்கு தெரிந்த இருபது ஆண்டுகளில் இரண்டே முறை குலசாமிக்கு அவர்கள் படையல் எடுத்தனர், அவர்களின் குல தெய்வத்திற்கு கோவில் என்று எதுவுமில்லை, சாமி சிலை கும்பத்தோடு அந்த பரம்பரை வழி ஒருவரின் வீட்டு சாமிமாடத்தில் இருக்கும், பூசையின் போது மட்டும் வெளிக்கொண்டுவந்து வேப்பமரத்தடியில் வைப்பார்கள். இவர்களும் ஆண்ட சாதி தான்.
அதே பகுதியில் ஒதுக்கு புறமாக (ஊர் விரிவடைந்ததில் இப்போது அந்த இடம் மையமாகிவிட்டது) பன்றி மேய்த்து பிழைப்பவர்கள் பல குடும்பங்கள் இருந்தனர், ஊரே அவர்களை பன்னி குறவன் என்றாலும் அவர்கள் "காட்டு நாயக்கர்கள்" என்றே குறிப்பிடுவார்கள், எஸ்.டி. சான்றிதழுக்காக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வரும் இவர்களுக்கு அது இது வரை கிடைக்கவில்லை, அவர்களை எஸ்.சி. என்றே மாவட்ட நிர்வாகம் குறிப்பிடுகிறது, நாங்கள் என்ன "பறையர்களா" எஸ்.சி. என்று சொல்ல என்று எதிர்க்கிறார்கள், "காட்டு நாயக்கர்களான" நாங்கள் காட்டு ராஜாக்கள் என்கின்றனர், இவர்களும் ஆண்ட சாதி தான்.

வன்னியர்கள் படையாட்சிகள் என்று எங்கள் பகுதிகளில் அழைக்கப்படுவார்கள், படைகளை ஆட்சி செய்தவர்கள் என்று பெருமை பேசும் படையாட்சிகளை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுவேன் நான்.

"படையாட்சியின் குடிசையில்
பன்றிகளின் ஆட்சி
போங்கடா போங்க"

பல்லவ பரம்பரை நாங்க என்பவர்களிடம்

" பல்லவ குல தோன்றல்கள்
பன்றி குடிசைகளில்"


தேவர் என்பது அரசர்களின் பட்டப்பெயர்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்லியுள்ளனர், முக்குலத்தோர் , தேவர், கள்ளர், மறவர் என்றும் இன்னும் பல பல பெயர்களில் சேர, சோழ, பாண்டிய பரம்பரை ஆண்ட பரம்பரை என்பார்கள், பல்லவன் எங்கள் சாதி, சோழன் எங்கள் சாதி நாங்கள் ஆண்ட சாதிகள் என்பவர்களிடம் உங்க சாதிக்காரங்க எல்லோரும் நரசிம்ம வர்ம பல்லவன், ராஜ ராஜ சோழனின் மனைவிக்கும் ஆசை நாயகிகளுக்கும் பிறந்தவர்களா? அந்த ராஜாக்களுக்கு அத்தனை மனைவிமார்களும் ஆசை நாயகிகளுமா? இல்லையே பின் ஏனிந்த வெட்டிபெருமை....

தென் தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி "பள்ளர்கள்", ஆனால் பள்ளர் சாதியினர் "பெரியோர் பள்ளர்", "சான்றோர் பள்ளர்" என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதையும், பல இடங்களில் பள்ளர் இன தலைவர்களும் தலைவிகளும் பெரும் செல்வந்தர்களாக ஊர் ஆண்டவர்களாக புலவர்களுக்கு வாரி வழங்கியிருப்பதை சங்க இலக்கிய சான்றுகளுடன் சொல்கின்றார்கள் தாங்கள் ஆண்ட கதையை.

தமிழகத்திலே ஆளாத சாதிகளைவிட ஆண்ட சாதிகள் அதிகம், ஆளாத சாதியென்றால் அதில் முதலிடம் பிடிப்பவர்கள் பார்ப்பனர்கள் தான் (பல்லவர்கள் பார்ப்பனர்கள் என்று சொல்லப்படுவதை தவிர்த்து) ஆனால் சமூகநிலையில் ஆளாதா சாதி பார்ப்பனர்களும் ஆண்ட சாதி குயவர்கள், வன்னியர்கள் , தேவர்கள், பள்ளர்களும் ஒன்றா? அந்த சாதிகாரன் ஒருவன் ஆண்டதாலேயே அந்த சாதிகாரர்கள் அனைவரும் ஆண்ட சாதியாகிவிடுவார்களா? அந்த சாதிகாரன் ஒருவன் ஆண்டதாலேயே அந்த சாதிகாரர்கள் அனைவரும் கல்வி, செல்வம், அதிகாரம் என எல்லாம் பெற்றவர்கள் ஆகிவிடுவார்களா?

கலைஞர் கருணாநிதி தான் இன்று தமிழகத்தை ஆள்கிறார், கலைஞர் கருணாநிதி பிறந்த சாதி இசை வேளாளர்(முடிதிருத்தும் அல்லது நாதஸ்வரம் வாசிக்கும் சாதி என்று சொல்லப்படுவது) அவரை மேடைக்கு மேடை வாழ்த்து வாலியோ பார்ப்பனர், அதனால் இசை வேளாளர் சாதியை வாழ்த்தி பிழைக்குது பார்ப்பனர் சாதி என்று சொல்லமுடியுமா? கலைஞர் கருணாநிதி தான் இன்று தமிழகத்தை ஆள்கிறார் கலைஞர் கருணாநிதி பிறந்த இசை வேளாளர் சாதி உயர்ந்த நிலையில் இருக்கிறது என்றா சொல்ல முடியும்?

ஒரு சாதியில் பிறந்த ஒருவன் ஆண்டதாலேயே அந்த சாதி சமூகத்தில் உயர்நிலையில் இருந்ததா? ஆண்ட சாதிகள் சமூகத்தில் எந்த நிலையில் இருக்கின்றன? ஆண்டவர்கள் எல்லோரும் பார்ப்பன சமூகத்தின் பிடியிலேயே ஆண்டிருக்கிறார்கள், ராஜ குருக்களாகவும், ஆச்சாரிகளாகவும், மந்திரிகளாகவும், அதிகாரிகளாகவும் இந்த நாட்டை ஆண்டுகொண்டிருந்தது பார்ப்பன சாதி ஆட்களா? அல்லது ஆண்ட சாதி என்று சொல்லிக்கொள்ளும் இந்த சாதிகளா?

பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு ஆண்ட சாதிகள் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் ம க இ க தோழர்கள், சற்று யோசித்து பார்க்க வேண்டும், இடஒதுக்கீடு புள்ளிவிபரங்கள் சொல்வது இந்த ஆண்ட சாதிகள் எத்தனை சதவீத இடங்களை பிடித்துள்ளனர், பார்ப்பனர்களோடு சேர்ந்து இவர்களும் சுரண்டுபவர்கள் என்றால் பார்ப்பனர்களும் இவர்களும் இணையாகவோ அல்லது ஓரளவிற்காவது நிரம்பியிருக்க வேண்டுமே, ஆனால் இடஒதுக்கீட்டிற்கு முன் இவர்கள் நிரம்ப வில்லையே ஏன்?

ஏனென்றால் இவர்கள் வர்ணாசிரமத்தை காக்கும் காவல் நாய்கள் மட்டுமே, அதற்காக கிடைக்கும் எலும்புத்துண்டு ஆண்ட சாதி என்கிற பெயர் எதற்கும் உதவாத சாதிப்பெருமை, காவல் நாய்களுக்கு அரியாசனம் மட்டுமல்ல சரியாசனம் கூட கிடைப்பதில்லை, ஆனால் இந்த ஆண்ட சாதிகள், தலித்கள் என அத்தனை ஆட்களின் பங்கையும் சேர்த்து உயர்த்தப்பட்ட சாதிக்காரர்கள் தின்று கொண்டிருக்கின்றார்கள். உண்மை என்னவென்றால் தலித்களுக்கும் இந்த ஆண்ட சாதிகளும் சமூக பொருளாதார வாழ்க்கை முறைகளில் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை, அதனாலேயே இடஒதுக்கீடு பல ஆய்வுகளின் முடிவில் வழங்கப்படுகிறது. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்றாலும் பல ஆய்வு மற்றும் புள்ளிவிபரங்களுக்கு பிறகே இவைகள் வழங்கப்படுகின்றன.

எழுத்தாளர் சமூக நீதி ஆர்வலர் ஆதவன் தீட்சண்யா பூனைக்கு மணி கட்டும் காலம் என்ற கட்டுரையில் சொல்லியுள்ள சில பகுதிகள் இங்கே இவர் தலித்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையையும் கடைபிடிக்கும் மனவியாதியிலிருந்து பிற்பட்ட சாதியினர் விடுபடவேண்டும். என்றும் மிக கடுமையாகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் ஒடுக்குமுறைகளை சாடியிருந்தாலும் அவர்களுக்கான இடஒதுக்கீட்டை அவர் நிராகரிக்கவில்லை, எதிர்க்கவில்லை. ஆனால் ம க இ க நிராகரிக்கின்றது.

-----------
இந்திய சமூகத்தில் நடைபெற்ற ஒரேயொரு இடஒதுக்கீடு வர்ணாசிரமக் கோட்பாடு தான். தொழில் அடிப்படையில் பிரிந்திருந்தாலும் உயர்வு தாழ்வு, தீட்டு புனிதம் என்ற பாகுபாடு அற்றிருந்த இந்திய சமூகத்தை இந்த வர்ணாசிரமக் கோட்பாடுதான் இணக்கம் காண முடியாத வர்ணங்களாக பிரித்தது. வர்ணங்களை கிடைமட்டமாக சமதளத்தில் வைக்காமல் ஒன்றின் கீழ் ஒன்றான படிவரிசையில் தாழ்த்தியது. ஆகச்சிறந்த அனைத்தையும் பார்ப்பனர்களுக்கே - அதாவது பார்ப்பன ஆண்களுக்கே - என்று ஒதுக்கீடு செய்தது. எடுத்தயெடுப்பில் அது இங்கேயே எல்லா வர்ணத்துப் பெண்களையும் புனிதமற்றவர்கள் என்று கீழ்மைப்படுத்தி எல்லாவற்றிலிருந்தும் ஒதுக்கி வைத்ததன் மூலம் போட்டியாளர்களில் ஒரு பெரும்பகுதியை ஒழித்துக் கட்டியது. பிறகு அது ஆண் போட்டியாளர் பக்கம் திரும்பியது. பார்ப்பனர்களைத் தவிர்த்த அனைவரையும் பார்ப்பனர்களுக்கு அடிமைச் சேவகம் செய்யுமாறு பணித்தது. இந்த நியதி மீறப்படாமல் இருப்பதற்கான சட்டங்களை இயற்றியது. எதிர்ப்புகளையும் மீறல்களையும் ஒடுக்கும் கடும் தண்டனைகள் நடைமுறைக்கு வந்தன.

தமக்கான பிரதிநிதித்துவம் அரசியல் சட்டத்திலேயே உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற மிதப்பில் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு குறித்து அக்கறை கொள்ளாத சில தலித் அறிவுஜீவிகளையும் அமைப்புகளையும்கூட இப்போது தெருவுக்கு இழுத்துவிட்டுள்ளது உச்சநீதி மன்றம். சமூகநீதியை தக்கவைக்கவும் பரந்த தளத்திற்கு முன்னெடுக்கவும் தலித்களும் பழங்குடியினரும் பிற்பட்டோரும் ஒன்றிணைந்து போராடும் நெருக்கடியை ஆதிக்கசாதியினர் உருவாக்கிவிட்டனர். நாம் எப்படி யாருடன் இணைந்து போராடவேண்டும் என்பதை நமது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.


இடஒதுக்கீட்டிலுள்ள சமூகநீதியை ஒப்புக்கொள்ளும் நெருக்கடியை- புத்தித் தெளிவை அவர்களுக்கு உருவாக்காமலே நடைபெறும் எந்த விரிவாக்கமும் பயனற்றவையே என்பதை உணர்த்தும் இயக்கமாக, உழைக்கும் மக்களில் பெரும்பான்மையினராகிய பார்ப்பனரல்லாத தலித், பழங்குடி மற்றும் பிற்பட்டோரும், சாதி மறுப்பாளர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தடையாக உள்ள சிறு கருத்தும் செயலும் இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்களுக்கே சாதகமாக அமையும். பார்ப்பனரல்லாதவர்களின் ஒற்றுமையில் நீடிக்கும் ஊனங்களால்தான் பார்ப்பனீயம் இன்னும் நீடிக்கிறது என்பதை யாவரும் உணரவேண்டியுள்ளது.
-------------

பிற்படுத்தப்பட்டவர்களில் குறிப்பிட்ட சாதியினரே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கின்றனர் என்பவர்களுக்கு தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு தொடர்பாக சட்டநாதன் கமிஷன் வைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் 1987 வன்னியர் சங்க போராட்டத்திற்கு பின் அமல் செய்யப்பட்டு மிகபிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு பிற்படுத்தப்பட்டோரிலேயே மற்றோரு பிரிவு உருவாக்கப்பட்டு அதில் இடஒதுக்கீட்டால் பலன் கிட்டாத சாதிகள் இணைக்கப்பட்டன, தற்போது தலித் ஒதுக்கீட்டிலேயே அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு தொடர்பாக பேசப்பட்டு வருகின்றது, இது போல அவ்வப்போது இடஒதுக்கீடு அதன் பாதையில் சரியாக சென்று பலன் தருகின்றதா என கவனிக்கப்பட்டு வருகின்றன, ஆனால் திமுகவில் உடன்பிறப்புகளே என்றும், அதிமுகவில் ரத்தத்தின் ரத்தங்களே என்று அழைப்பதை போல "அன்பார்ந்த உழைக்கும் மக்களே" என்று ஆரம்பிக்கும் ம க இ க விற்கு ஆண்ட சாதிகளின் உழைக்கும் மக்கள் கண்ணுக்கு தெரியவில்லையா?

நேர்மையாக சொல்ல சொல்லுங்கள் ம க இ க வினரை BC/MBC/DNC பட்டியல் இதில் உள்ளது, ஆண்ட சாதி, மோண்ட சாதி என்று சொல்லாமல் இந்த 285 சாதிகளில் எந்தெந்த சாதிகளை இடஒதுக்கீடு பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமென குறிப்பிட்டு சொல்லுங்கள் முதலில் அடுத்ததாக நீங்கள் சொல்லும் அந்த சாதிகள் இடஒதுக்கீடு பட்டியலிலிருந்து நீக்கப்படும் வரை இப்போதிருக்கும் இடஒதுக்கீட்டை தொடரலாமா? கூடாதா? இவவ இரண்டுக்கும் பத்தி பத்தியாக பக்கம் பக்கமாக எழுதாமல் ஈழப்பிரச்சினைக்கு சொன்னீர்கள் பாருங்கள் அது மாதிரி 'நச்' சென்று பதில் சொல்லுங்கள் தோழர்களே....

பிற்படுத்தப்பட்டோரும் தலித்களும் தண்டவாளம் போன்றவர்கள் இவர்களின் மீது தான் பார்ப்பன உயர்சாதி ரயில் ஓடிக்கொண்டிருக்கும், இந்த தண்டவாளங்கள் இணையும் போது பார்பன உயர்சாதி ரயில் கவிழ்ந்துவிடும், இந்த தண்டவாளங்கள் இணையாமல் இருக்க வேண்டியதை பார்ப்பன உயர்சாதியினர் செய்துகொண்டே உள்ளார்கள், உண்மையில் சமுதாய விடுதலைக்காக பாடுபடவேண்டியவர்கள் செய்ய வேண்டிய

முதல் விசயம், எல்லா தளங்களிலும் தலித்-பிற்படுத்தப்பட்டோர் ஒருங்கிணைப்பை உருவாக்குவதே, பெரும்பாண்மயான இவ்விரு மக்களும் அடித்துக்கொள்ள ரத்தம் குடிக்கும் சிறுபான்மை பார்ப்பன உயர்சாதியினர் அதற்கு விடமாட்டார்கள், அதற்காக பகையாளி குடியை உறவாடி கெடு என்று கூட வருகிறார்கள், மீண்டும் ஆதவன் தீட்சண்யாவின் வரிகளை மேற்கோள் காட்டுகிறேன் "உழைக்கும் மக்களில் பெரும்பான்மையினராகிய பார்ப்பனரல்லாத தலித், பழங்குடி மற்றும் பிற்பட்டோரும், சாதி மறுப்பாளர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தடையாக உள்ள சிறு கருத்தும் செயலும் இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்களுக்கே சாதகமாக அமையும். பார்ப்பனரல்லாதவர்களின் ஒற்றுமையில் நீடிக்கும் ஊனங்களால்தான் பார்ப்பனீயம் இன்னும் நீடிக்கிறது என்பதை யாவரும் உணரவேண்டியுள்ளது."

பார்ப்பன தலைமையின் கீழ் இயங்கும் ம க இ க பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோருக்கிடையே ஒற்றுமையை உருவாக்குகிறதா? அடித்துக்கொள்ள தூண்டுகிறதா?, இவர்கள் அடித்துக்கொள்வதால் ம க இ க வின் தலைமை பொறுப்பிலுள்ள பார்ப்பனர் சார்ந்திருக்கும் சாதி அமோகமாக வாழும்....

"நாமக்கட்டி வருது பாரு உஷாரு" ன்னு ம க இ க மேடைகளில் பாடும் நேரத்தில்

"காவிக்கொடி வருது பாரு உஷாரு
அது சிவப்பு வர்ணம் பூசி வருது உஷாரு
"
ன்னு பாட வேண்டிய நிலையும் உள்ளது என்பது வேதனைக்குறிய விடயம்...

பிணங்கள் புரட்சி செய்யாது - தமிழீழம் - மகஇக நிலைப்பாடு

எச்சரிக்கை இந்த படம் மிக கோரமானது, படத்தை பெரிதாக பார்க்க அதன் மேல் சுட்டவும்


பிணங்கள் புரட்சி செய்யாது
பாட்டாளி முதலாளி கள்
முதலில் உயிருடன்
வேண்டும்
புரட்சி புண்ணாக்குகள்
நடைபெற

சிங்கள் பேரினவாதத்தால்
தமிழினமே கருவறுக்கப்பட்ட பின்
பாட்டாளி புரட்சி
புண்ணாக்கை எதன் மேல்
நடத்துவாய்?
தமிழ் பாட்டாளி
தமிழ் முதலாளி பிணங்களின் மீதா?

தனி தமிழீழம் உருவாவதை ஆதரிக்கின்றீர்களா? எதிர்க்கின்றீர்களா? தனி தமிழீழம் உருவாவதை ஆதரிக்காவிட்டால் ஈழப்பிரச்சினைக்கு உங்கள் தீர்வு தான் என்ன? ஈழப்பிரச்சினையில் ம க இ க வின் நிலைப்பாடு என்ன? இவ்ளோதானேப்பா கேட்டோம் இதையும் கேட்டுவிட்டு தமிழ்பாட்டாளிகளும் சிங்கள பாட்டாளிகளும் சேர்ந்து தமிழ் சிங்கள முதலாளிகளுக்கு எதிராக வர்க்க புரட்சி நடத்த வேண்டும் என்று சொல்லி காமெடி கீமெடி செய்து விடாதீர்கள் என்று வேறு சொன்னோம்.....

தோழர்கள் இங்கே இது தொடர்பாக எந்த பதிலையும் தராமல் புலிகள், சிங்கள அரசு இரண்டும் மக்களை பிரித்து ஏகாதிபத்திய சேவை செய்வதில் மட்டும் ஒன்றிணைந்துள்ளனர் என்றும் பன்னாட்டு, தரகு முதலாளிகள் இலங்கையின் வளங்களை சுரண்டுவதற்க்கும் புலிகளும் சரி, இலங்கை தேசிய வெறி கும்பலும் சரி எந்தவொரு இடைஞ்சலும் செய்வதில்லை. என்றும் சொல்லியுள்ளார் ஆனால் கடைசி வரை இலங்கை பிரச்சினையில் தனி தமிழீழம் உருவாக வேண்டுமா? இல்லையா? என்பதற்கு பதிலில்லை என்பது மட்டுமல்ல புலிகளுக்கு சி.ஐ.ஏ. உதவுகிறது என்று வேறு காமெடியில் இறங்கிவிட்டார்கள் தோழர்கள்.....

ஆமாம் புலிகள் பகுதியில் மின்சாரம் முதல் எதுவுமே இல்லாமல் வளங்கள் எதுவுமில்லாமல் மீன் பிடிப்பு மற்றும் சிறு விவசாயம் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள், அங்கிருந்து இப்போதைக்கு என்ன வளத்தை சுரண்ட பண்ணாட்டு நிறுவனங்கள் அங்கே இருக்கிறதாம்? திரிகோணமலை இராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொன்னால் கூட பரவாயில்லை புலிகளின் ஆட்சி பரப்பிலிருந்து என்ன வளத்தை சுரண்ட முடியும் இப்போது என்பது புரியவே இல்லை. இந்த சி.ஐ.ஏ, புலிகளின் ஆட்சி பகுதியில் ஏகாதிபத்திய சுரண்டல் இதற்கெல்லாம் என்ன ஆதாரமென்றால் அய்யோ ஆதாரம் என்பது தோழர்களை பொறுத்தவரை கெட்டவார்த்தை, தோழர்களுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை "ஆதாரம்"

இலங்கையில் தமிழர்களின் உயிர் போகும் முதல் பிரச்சினை இனப்பிரச்சினையா? வர்க்க பிரச்சினையா? முதலில் தமிழ் பாட்டாளிகளும் தமிழ் முதலாளிகளும் சிங்கள பேரினவாத தமிழினவொழிப்பிலிருந்து உயிருடன் பிழைக்கட்டும் அதன் பின் தமிழ் பாட்டாளிகள் புரட்சி நடக்கட்டும் ஏனென்றால் பாட்டாளி புரட்சி நடக்க தமிழ் பாட்டாளிகளும் முதலாளிகளும் உயிருடன் வேண்டும், தமிழ் பாட்டாளி - முதலாளி பிணங்கள் புரட்சியை நடத்தாது.

இராசீவ்காந்தி கொலையின் போது ம க இ க தோழர்கள் சிலர் கைது செய்யப்பட்டார்களாம். ம க இ க மட்டுமல்ல திமுக, திக என பல்வேறு கட்சியிலிருந்தும் கைது செய்யப்பட்டிருந்தார்கள், தற்போது கூட பெரியகுளம் பகுதியில் பிடிபட்ட நக்சல் தீவிரவாதிகள் என கூறி சிலர் கைது செய்யப்பட்டனர் அதில் ம க இ க மாவட்ட அளவில் உள்ள ஒரு பொறுப்பாளரும் உள்ளார் அப்படியென்றால் அந்த நக்சல் இயக்கத்தின் கொள்கைகளை ஏற்கிறார்கள் என்றோ அதற்கு ம க இ க முழுவதும் அதற்கு பொறுப்பு என்றோ கூறலாமா? அட வைகோவை தூக்கி உள்ளே வைத்தார்களே அது மாதிரி ஏதோ தோழர் மருதையன் (எ) ருக்மாங்கத் அய்யர் (ஏம்பா பெயர் சரியா சொல்லியிருக்கேனா?) விடுதலை புலிகளுக்கு ஆதரவு தருகிறார் என கைது செய்யப்பட்டிருந்தால் ஏதாவது இவர்கள் சொல்வதில் கொஞ்சமாவது பொருள் இருக்கும்

தோழர்களே மிக எளிமைப்படுத்தி கேள்வி கேட்கிறேன், சுற்றி வளைத்து முதலாளி - பாட்டாளி ஏகாதிபத்தியம், இலங்கை - புலிகள் பாசிசம் லொட்டு லொசுக்கு என்றெல்லாம் பதில் வேண்டாம்.... அது எங்களை போன்ற அறிவிலிகளுக்கு புரியாது எளிமையாக சும்மா 'நச்' சுன்னு ஒத்தை வரியில் சொல்லுங்க கேள்வி இது தான்

1. தனி தமிழீழம் உருவாதை ஆதரிக்கின்றீர்களா? - ஆம் / இல்லை என்று ஏதாவது ஒரு பதில், ஆம் என்றால் அடுத்த கேள்விக்கு போகவே வேண்டாம், இல்லை என்றால் அடுத்த கேள்விக்கு போங்கள்

2.இலங்கையின் தமிழர்கள் இனப்பிரச்சினைக்கு உங்கள் தீர்வென்ன? தமிழர்கள் கொல்லப்படுவதை எப்படி தடுப்பது? தமிழ் பாட்டாளிகளும் தமிழ் முதலாளிகளும் எப்படி சிங்கள பேரினவாத அடக்கு முறையிலிருந்து உயிர் பிழைப்பது?

தோழர்களில் வாதங்களில் வலுவானவர்கள் என்று தெரியும், மொத்தமாக எல்லாவற்றையும் பேசினால் டிங்கிரி டிய்யாலோ டிங்காரே டிங்கிரி டிய்யாலோ தான், அதனால் தான் நேற்று மொத்தமாக கேட்டதை இப்போது ஒவ்வொன்றாக கேட்கிறோம் முதலில் இதற்கு சொல்லுங்கள் பிறகு ஒவ்வொன்றாக வாதிப்போம், அட 'நச்'சுன்னு புரியற மாதிரி பதில் சொன்னிங்கன்னா சரியான முறையில் நாங்கள் 'கன்வின்ஸ்' செய்யப்பட்டால் நாங்களே கூட உம்மை ஆதரிப்போம், அப்படி இல்லையென்றால் ராஜ்வனஜ் ஆர்.எஸ்.எஸ்.லிருந்து வெளியேறியது போல நீங்கள் கூட உங்கள் ம க இ க ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டாலும் கொள்ளலாம்....

ஆதலால் மொத்தமா போட்டு கூட்டு பொறியல் செய்யாம ஒவ்வொரு பதார்த்தமா எதார்த்தமா பேசுவோம் சரியா தோழர்களே......

மகஇக சில கேள்விகள்?

பார்ப்பனீயத்திற்கு எதிராகவும், மக்களுக்கான அரசியல் என்றும் செயல்பட்டு வரும் மகஇக (மக்கள் கலை இலக்கிய கழகம்) அமைப்பின் தலைமையின் மேலும் அந்த அமைப்பின் சில செயல்பாடுகளின் மீதும் சில கேள்விகள் உள்ளன.

இடஒதுக்கீட்டிற்கு எதிரான மகஇகவின் நிலைப்பாடு
இடஒதுக்கீட்டிற்கு வேட்டு வைக்கும் மகஇகவின் நிலைப்பாடு இடஒதுக்கீடு விடயத்தில் மகஇகவும் அதன் இணை துணை அமைப்புகளும் சி.பி.எம். (கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் மனுதர்மா)மின் குரலிலேயே பேசினால் கூட பரவாயில்லை அதையும் விட மோசமான பார்ப்பனீய ஆதரவு குரலில் பேசுகின்றன(பார்ப்பனீயத்திற்கு எதிராக பேசுவது போன்ற தோற்றமளிக்கும் ஆனால் செயல்முறையில் பார்ப்பனீயத்துக்கு ஆதரவான குரல் தான் அது) இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினிய பார்வை என்ற புத்தகத்தை படிக்கும் வரை இடஒதுக்கீடு பற்றிய இவர்களின் கருத்துகளை இந்திய சமூக சூழலில் மண்டியுள்ள சாதிய சமூக தாக்கங்களை பார்க்காமல் வெறுமனே எதையும் வர்க்க வேறுபாட்டோடு மட்டுமே பார்க்கும் கம்யூனிஸ்ட்களின் பார்வையே என்று நினைத்திருந்தேன், ஆனால் இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினிய பார்வை என்ற புத்தகத்தை படித்த போது தான் இவர்கள் கம்யூனிஸ் பார்ட்டி ஆஃப் மனுதர்மாவை விட ஆபத்தான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது, அதையும் விட ஆபத்தானது இவர்களின் நிலைப்பாட்டை எதிர்க்க போகும் போது அதை எதிர்ப்பவர்களை மிக எளிதாக தீண்டாமையை ஆதரிப்பவர்களாக காண்பிக்க இயலும் என்பதே இதில் மிகவும் ஆபத்தானது.


இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினிய பார்வை என்ற புத்தகத்தின் ஒவ்வொரு வரிக்கும் என்னால் மறுப்பு எழுத இயலும் (இடஒதுக்கீடு பற்றி சில புத்தகங்கள், சில நேரடி அனுபவங்கள், சில கட்டுரைகள் எழுதிய என்னாலேயே முடியும் போது) இடஒதுக்கீட்டு ஆதரவு அறிவு ஜீவிகள் அவர்களின் வாதங்களை நொடிப்பொழுதில் தூளாக்க முடியும்.இடஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீட்டின் நியாயங்களை Reverse Descrimination, Revenge என்பதுவே என்பது போன்ற கருத்தியலை முன் வைத்துக்கொண்டிருக்கும் பார்ப்பன அறிவு ஜீவிகள், ஊடகங்கள் வாதத்தை வலுப்படுத்தும் விதமாகவே இவர்களின் தர்க்கம் அமைகின்றது.

முதலாளி தொழிலாளி என்று இரட்டை வர்க்கங்களை மட்டுமே உலகில் உள்ளன என்பவர்கள் போலும் இவர்கள், இந்திய சமூகத்தில் முதலாளி, தொழிலாளி வர்க்கப்பிரிவு முதல்நிலை வர்க்கப்பிரிவு அல்ல, சாதிய வர்ணப்பிரிவு தான் முதல் நிலை பிரிவு, அதுவும் கூட முதலாளி தொழிலாளி என்ற சரியான கோடு இழுத்து பிரிக்கப்பட்டதல்ல இந்த சாதிய வர்ணப்பிரிவுகள், சாதிய வர்ணப்பிரிவு என்பது படிநிலை , அடுக்குமுறை சமூகநிலை, எனக்கு கீழே நீ, உனக்கு கீழே இவன், இவனுக்கு கீழே அவன் இப்படியாக பிரிக்கப்பட்டுள்ள இந்த படிநிலை சமூகத்தில் நமக்கு கீழ் இருப்பவனை மேலே வராமல் பார்த்துக்கொண்டிருப்பதிலே மோதிக்கொண்டிருப்பதிலே எல்லாவற்றிற்கும் மேலே இருப்பவர்கள் பார்த்து ரசித்துக்கொண்டே மற்றவர்களின் பங்கையும் சேர்த்து சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். இந்த படிநிலை அடுக்குமுறை சமூகத்தில் மூன்றாம் இடத்தில் இருப்பவனும் முதலிடத்தில் இருப்பவனும் ஒன்றா? ஒன்று தான் என்கிறது மார்க்சிய லெனினிய பார்வை, மிக மிக மோசமான ஒன்றையும், மோசமான ஒன்றையும் சமம் என்று கூறுவது மிக மிக மோசமானதற்கு சாதகமாகவே அமையும், படிநிலை அடுக்கின் மேலே இருப்பவனும் மூன்றாம் நிலையில் இருப்பவனும் ஒன்றா? மேலே இருப்பவன் செய்யும் செயலின் பிண்ணனியும் மூன்றாம் இருப்பவனின் செயலில் பிண்ணனியும் ஒன்றா? எதற்காக இத்தனை தூரம் தலையை சுற்றி மூக்கை தொடுகிறேன் என்றால் நேரடியாக அவர்கள் கூறும் விடயத்தை எதிர்த்தால் மிக எளிதாக என்னை தீண்டாமையின் சாதிக்கொடுமையின் ஆதரவாளனாகவும் முத்திரை குத்த இயலும், நேரடியாக இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களை மிக எளிதாக சமாளிக்க இயலும், ஆனால் இடஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் என்ற போர்வையில் அதே இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை சமாளிப்பது

மிக கடினமான ஒன்று அவர்களின் வேடத்தை களைப்பதற்கு கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டும், அப்படி என்ன சொல்கிறார்கள் என்றால் தீண்டாமையை சாதி மேலாதிக்கம் செய்யும் சாதிக்கு இடஒதுக்கீடு கொடுக்க கூடாது, அட நியாயமாத்தானே சொல்லியிருக்காங்க என்று உடனே தோன்றினாலும் இந்திய அடுக்கு முறை படிநிலை சமூகத்தில் இப்படியான ஒரு காரணியின் மூலம் இடஒதுக்கீடு நிறுத்தப்பட வேண்டுமெனில் தலித்களுக்கு கூட இடஒதுக்கீடு அளிக்கப்படாது, பள்ளர்கள், பறையர்கள் வேறு பாடு உயர்வு தாழ்வு, அருந்ததியர்களின் மீதான உயர்சாதி தலித்களின் தீண்டாமை அதே அருந்ததிய சாதியினர் அவர்களுக்கு துணி துவைத்து போடும் மற்றொரு சாதியினர் மீது நடத்தும் வன்கொடுமை என தலித்களுக்கே கூட இடஒதுக்கீடு கிடைக்காது. யாருக்குமே இடஒதுக்கீடு தர தகுதியில்லாத நிலைவந்தால் யாருக்கு இலாபம், யோசித்து பாருங்கள் யாருக்கு இலாபம்? உயர்த்தப்பட்ட சாதியினருக்குதானே? பார்ப்பனர்களுக்கு தானே? மகஇக சொல்வது போல செய்தால் யாருக்குமே இடஒதுக்கீடு கிடைக்காது.

தமிழ்தேசியம், இந்திய தேசியம் நிலைப்பாடுகள்
மகஇகவும் அதன் இணை துணை அமைப்புகளும் தேசியத்தை ஆதரிக்கின்றன, அதாவது இந்திய தேசியத்தை ஆதரிக்கின்றன, தமிழ் தேசியம் என்பதோ, மொழி வாரியான தேசியங்களோ, இனவாரியான தேசியங்களோ அவர்களை பொறுத்தவரை கெட்ட வார்த்தைகள் ரொம்ப கெட்ட வார்த்தைகள். புலவர் கலியபெருமாள் போன்றவர்கள் கம்யூனிச பாதையிலிருந்து பிரிந்து தமிழ் தேசியத்திற்காக போராட ஆரம்பித்ததே அவர்கள் சார்ந்திருந்த கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி மொழி இன வாரியான தேசியத்தை ஆதரிக்காதது, தேசியம் என்பது அந்தந்த இனக்குழுக்கள் உரிமைகள் கிடைக்கவில்லை என்றோ அல்லது எதற்காகவோ பிரிந்து செல்ல விரும்பினால் பிரிந்து செல்வது அவர்களின் உரிமை, பிரிந்து செல்லக்கூடாது என்பது சர்வாதிகார அடக்குமுறை என்றார் அவர், அடக்குமுறைக்கு எதிரானதாகவும் அடக்குமுறைக்கு எதிராக போராடுபவர்கள் என்பவர்களும் தேசியம் என்ற அடக்குமுறைக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மேலும் இந்திய தேசியம் யாருக்கு ஆதரவான தேசியம்? பெரியார்தாசன் மகஇக கூட்டத்திலே பேசியதை அவர்களே கவனித்திருக்கின்றார்களா? வெவ்வேறு இனம் மொழி கலாச்சாரத்தில் இருக்கும் இந்திய தேசியத்தை ஒன்றாக இணைப்பது பார்ப்பனர்களின் பூணுல் என்றார். மேலும் தமிழ் தேசியத்தை கருத்தளவில் ஆதரிக்காதவர்களை தமிழ் தேசியத்தை கருத்தளவில் கூட எதிர்ப்பவர்களை நாங்கள் ஆதரிக்க தயாராக இல்லை.

தமிழீழ நிலைப்பாடு
இது பற்றிய மிகப்பெரிய கள்ள மௌனமே சாதிக்கின்றது மகஇக, இவர்கள் தமிழீழத்தை ஆதரிக்கிறார்களா? தமிழீழம் இலங்கையிலிருந்து பிரிந்து செல்வதை ஆதரிக்கிறார்களா?(அவர்களுடைய தேசிய அரசியல்படி பார்த்தால் தமிழீழம் பிரிவதை எதிர்ப்பார்கள் என்றே கணிக்க தோன்றுகின்றது) அப்படி எதிர்க்கிறார்கள் என்றால் தமிழர்கள் மீதான இன அழிப்பை மேற்கொள்ளும் சிங்கள இனவாதம் பற்றிய நிலைப்பாடு என்ன? அப்படி சிங்கள இனவாதத்தை எதிர்க்கிறார்கள் என்றால் தமிழீழம் தனியாக பிரிவதை தவிர வேறு என்ன தீர்வை தமிழர்களுக்காக வைத்திருக்கிறார்கள்? (சிங்கள பாட்டாளிகளும் தமிழ் பாட்டாளிகளும் இணைந்து தமிழ்-சிங்கள் முதலாளிகளுக்கு எதிராக போராட வேண்டுமென்று கோரிக்கை எதுவும் வைத்து காமெடி கீமெடி செய்துவிடப்போகிறார்கள் - இதை சொன்ன வலைப்பதிவாளருக்கு நன்றி) தமிழீழ விடயத்தில் கள்ள மௌனம் சாதிப்பவர்களை எப்படி நம்புவது?

தமிழ் மொழி, தமிழ் இனம்
மகஇக தமிழ்மொழி, தமிழினம், மொழியரசியல், மொழி உணர்வு, மொழி உரிமை, வேற்று மொழியாதிக்கம் பற்றியெல்லாம் பேசியதாக தெரியவில்லை, அல்லது ஈனக்குரலில் பேசியிருக்கும், ஆனால் தமிழிசை விழா மட்டும் ஆண்டு தோறும் எடுக்கப்படும், தமிழ்மொழி , தமிழினம் இல்லாமல் எங்கிருந்து தமிழிசை மட்டும் வந்தது? மொழி வேண்டாம், இனம் வேண்டாம் அந்த மொழியின் இசை மட்டும் வேண்டும், இதன் பிண்னனி மிக ஆபத்தானது மொழியரசியல், மொழி உணர்வு, மொழி உரிமைகள், தமிழின உணர்வு (தமிழ் மொழியையும் தமிழினத்தையும் பிரித்து பார்க்க முடியாது)கள் தமிழிசையை விட பார்ப்பனியத்துக்கு மிக ஆபத்தானது. தமிழ்மொழி இன உணர்வோடு தமிழிசையையும் செயல்படுத்துவதே சரியானதாக இருக்கும், அதை விடுத்து தமிழ்மொழி இனத்தை புறக்கணித்து விட்டு தமிழிசையை மட்டும் முன்னெடுப்பது பெரும் சந்தேகத்துக்குறியதே.

கனிமொழி இசை விழா நடத்தியதை இவர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். இவர்கள் நடத்தினால் அது பெருமை.அடுத்தவர் நடத்த கூடாதா?(அந்த விமர்சனத்தை பற்றி அவர்கள் கூறியது என்னவென்றால் அந்த இசைவிழா பழமையை போற்றி நிகழ்காலத்தை மறக்க வைக்கிறது என்பதாக இருந்தது)



திராவிட ஆரிய கருத்தாக்கம்
திராவிடம் ஆரியம் என்ற பேச்சையே ஆரம்பிக்க கூடாது தோழர்களிடம், உடனே சொல்வார்கள் அதெல்லாம் இப்போ எங்கே? அப்படியாகவே இருந்திருந்தா கூட பல ஆயிரம் ஆண்டுகால இனக்கலப்பில் அதெல்லாம் இல்லையே போயிந்தே, இட்ஸ் கான் என்பார்கள், அப்புறம் ஏனய்யா உயர்த்தப்பட்ட சாதிக்கும் இடையில் உள்ள சாதிகளுக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கும் இடையே தோல் நிறத்திலேயே வேறு பாடு இருக்கிறதே, ஒரே மாதிரியான காற்று, நீர், வெப்பநிலை ஆனால் வர்ணம் மட்டும் மாறுபட்டு இருக்கிறதே என்றால் மொத்தமாக வாயை பூட்டு போட்டு மூடிக்கொள்வார்கள் இவர்கள் திராவிடம் என்ற வார்த்தையை கேட்டாலே அலறுவதற்கு கண்டிப்பாக திராவிட கட்சிகளே காரணம், திராவிடம் என்ற வார்த்தையை புறக்கணிப்பதன் மூலம் திராவிட கட்சிகளை திராவிட அரசியலை ஏற்காதது, திராவிட கட்சிகளை அட கட்சிகள் கூட வேண்டாம் திராவிட அரசியலை மக்கள் ஏற்காமல் இருக்க செய்வதன் மூலம் மறைமுகமாக பார்ப்பனீயத்திற்கு ஆதரவாக இருக்குமோ என்று சந்தேகம் எழுகிறது. ஏனெனில் மற்றெதையும் விட திராவிடம் என்ற வார்த்தையே பார்ப்பனீயத்துக்கு எதிரான பெரும் கலகச்சொல், திராவிடம் பார்ப்பனியத்திற்கு ஏற்படுத்தும் கிலியை வேறெதுவும் ஏற்படுத்தாது, ஏற்படுத்தியதில்லை.

பார்ப்பனியத்தை எதிர்க்கும் கட்சிகளின் மீதான கடும் விமர்சனங்கள்

மிக மிக மோசமான ஒன்றையும் மோசமான ஒன்றையும் சமமென்று ஒப்புமைபடுத்துவது மிக மிக மோசமானதற்கு ஆதரவாகவே அமையும், பார்ப்பனியத்தை எதிர்க்கும் மற்ற கட்சிகள் இயக்கங்களின் சில முரண்பாடுகளை வைத்து அக்கட்சிகளின் மீதும் தலைவர்களின் சில தவறுகளை வைத்து அவர்களின் எல்லா நோக்கங்களையும் முயற்சிகளையும் வரைமுறையற்று ஆதாரமற்று தாக்குவதும் விமர்சிப்பதும் அவர்கள் எதிர்க்கும் பார்ப்பனியத்துக்கு ஆதரவாகவே அமையும் என்பது தெரியாதா மகஇக வின் தலைமைக்கு? ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக கொள்கையில் நீர்த்துக்கொண்டிருக்கும் கட்சிகளுக்கு கொள்கை பிடிப்பானவர்கள் மேலும் அதில் உள்ளே செல்லாமல் தடுப்பதன் மூலம் அந்த கட்சிகளை முழுமையாக நீர்க்க செய்தால் அது பார்ப்பனியத்துக்கு ஆதரவாகவே அமையும் அதனால் கொள்கைபிடிப்பானவர்கள், தீவிரமாக இயங்கக்கூடியவர்களை அந்த கட்சிகளினுள் செல்வதை தடுத்து நிறுத்தும் முயற்சியாகவே இதை சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது, ஏனென் இப்படியான சந்தேகமெனில் வீரியம் மிக்கவர்கள் கொள்கை பிடிப்புள்ளவர்கள் இருந்தும் 1990லிருந்து இப்போதுவரை 17 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இயக்கம் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையே ஏன்? தீவிரமான செயல்திறன் மிக்கவர்களை வெகுசன இயக்கங்களில் இணைந்து பங்களிப்பு செய்யாமல் இருப்பதை தடுத்து இந்த இயக்கத்தில் அமுக்கி இந்த இயக்கமும் ஒன்றும் செய்யாமல் இருப்பதற்காகவே
பார்ப்பனியத்தை எதிர்க்கும் மாற்று கட்சிகளின் மீதான இந்த வரைமுறையற்ற கடும் தாக்குதல் என்று சந்தேகபடலாமே? கொள்கை விமர்சனங்கள் என்பதை தாண்டி மேலே சேறடிக்கும் சவுக்கடிகளை விமர்சனங்கள் என்ற வரையறையிலா எடுக்க முடியும்?

மிடில் கிளாஸ் அறிவுஜீவி தலைமை
இந்த மிடில் கிளாஸ் அறிவுஜீவி தலைமைகளை கண்டாலே எமக்கு ஒவ்வாது, புலவர் கலியபெருமாள் மற்றும் பல போராளிகள் களத்திலே இறங்கி போராடிக்கொண்டிருந்தபோது கம்யூனிஸ்ட்(மா.லெ.) மற்றும் இணை துணை கம்யூனிச குழுக்களில் கோலோச்சிய இந்த மாதிரியான மிடில் கிளாஸ் அறிவு ஜீவி குழுக்கள் தான் இவர்களை தாறுமாறாக விமர்சித்துக்கொண்டும், யார் இயக்கத்தில் இருக்க வேண்டும் இருக்கக்கூடாது என்று கட்டளையிட்டு அதிகாரம் செய்து கொண்டுமிருந்தார்கள், இவர்களை பற்றி எஸ்.வி.இராஜதுரை தெளிவாக பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார், அப்படியான ஒரு மிடில் கிளாஸ் அறிவு ஜீவி தலைமை தான் இன்று மகஇக வில் அமர்ந்து கொண்டுள்ளார்கள்.மக்கள் போர் படை (PWG) கணபதி போன்றவர்கள் மகஇக தலைமையை இந்திய ஏஜென்சிகளின் கையாட்கள் என்றே விமர்சித்துள்ளதாகவும் அதற்கான காரணங்களையும் சொல்லியிருப்பதாகவும் படித்திருக்கிறேன், அது தொடர்பான கட்டுரைகள் எங்கேயாவது கிடைக்கிறதா என்று நண்பர்களிடம் கேட்டுள்ளேன்.

பார்ப்பனீயத்தை எதிர்க்கும் இயக்கத்தின் தலைமை பார்ப்பனரல்லாதோராக இருந்தால் அவர்கள் 100 % சந்தேகத்திற்கிடமின்றி இருந்தாலே போதுமானது, ஆனால் பார்ப்பனீயத்தை எதிர்க்கும் இயக்கத்தின் தலைமையே பிறப்பால் பார்ப்பனராக இருந்தால் அந்த தலைமை 200 % சந்தேகத்திற்கிடமின்றி இருக்க வேண்டும், ஆனால் மேற் குறிப்பிட்ட சந்தேகங்களினால் மகஇக தலைமை 50% கூட சந்தேகத்திற்கு இடமின்றி இருக்கவில்லை என்பது சர்வ நிச்சயம். மேலும் ம க இ கவின் செயல்பாடுகள், செயல்திட்டங்கள், எதை நோக்கி செல்கிறார்கள் என்பதெல்லாம் வெளிப்படையாக இல்லை. இதுவே இன்னமும் அதிகமாக சந்தேகப்பட வைக்கின்றது.

மகஇக தோழர்களுக்கு
தோழர்கள் கோபப்பட்டு எனக்கு ஐ.எஸ்.டி போனெல்லாம் போட்டு காசு செலவு செய்ய வேண்டாம், அப்படியும் போன் செய்யவேண்டுமென்று ஆசைப்பட்டால் வரவனை செந்திலிடம் என் கை பேசி எண் இருக்கின்றது வாங்கிக்கொள்ளுங்கள்.

சும்மா அதுருதுல்ல பேரை கேட்டா....

உடன்பிறப்புகளுக்கு வெட்கமில்லை

ஒரு கருத்து திணிப்பு அதை தொடர்ந்து ஒரு கலவரம், சன் தொலைக்காட்சி மற்றும் தினகரன் அலுவலகம் மதுரையில் கொளுத்தப்படுகின்றது உள்ளே உயிரை விடுகின்றனர் மூவர்.... கருத்தை திணித்தது மச்சான் பொங்கியெழுந்தது மாமன், ஆனால் செத்ததோ மாச சம்பளம் வாங்கும் அப்பாவிகள்.... அதன் தொடர்ச்சியாக வலைப்பதிவுகளில் விவாதம், இதற்காகவே காத்திருந்தது மாதிரியான இட்லிவடைகளும் சட்னி சாம்பார்களும், முகமூடிகளும் கெட்ட ஆட்டம் போட்டன, இவர்கள் எதற்காக இந்த ஆட்டம் என்பது தெரிந்ததுவே, மூன்றுக்கு பதில் முப்பதாக இருந்திருந்தால் இன்னும் கூட சந்தோசம் பொங்கியிருந்தாலும் பொங்கியிருக்கும், இதையும் எதிர்பார்த்தே இருந்ததால் பெரிதாக பாதிக்கவில்லை, ஆனால் அதன் பிறகு வெளிவந்த சில பதிவுகள் புரட்டி போட்டன.


யோக்கியவான் எடுக்கட்டும் முதல் கல்லை என்றார் வரவனையன், அதிலே அழகிரியின் அணுக்கம் எளிமை இன்ன பிற விசயங்களை புளங்காகிதப்பட்டு கூறியிருக்கிறார், சரி இருக்கட்டுமே, அதற்காக மூன்று பேரை உயிரோடு கொளுத்த யார் கொடுத்தது அதிகாரம்?

"எந்த பதவியும் வேண்டாமென்று இருக்கும் ஒரு நபரை, களத்திலேயே இல்லாத ஒரு நபரை தோற்றுபோனதாய் அறிவிப்பது போக்கிலித்தனமின்றி வேறென்ன." சரி தான் போக்கிரித்தனம் தான், ஒரு கட்சி பதவியில் கூட இல்லாத, ஒரு கார்ப்பரேசன் கவுன்ஜிலராக கூட இல்லாத "அஞ்சா நெஞ்சன்" அழகிரியின் பெயர் கருத்து கணிப்பில் வந்துள்ளது இது நியாயமா? இது நீதியா? எல்லாம் சரிதான் பிறகேன் இந்த அஞ்சா நெஞ்சனின் வீட்டு முற்றத்தில் கிடக்கின்றது தென்மாவட்ட திமுக?

அழகிரியின் அல்லக்கை அட்டாக் பாண்டி சுமோவில் 18 பேரை ஏற்றிக்கொண்டு மதுரை தினகரன் அலுவலகம் போனதற்கு பதிலாக நேராக வண்டியை அறிவாலயத்துக்கு ஓட்டி தயாநிதி மாறனையோ கலாநிதிமாறனையோ ரெண்டு போடு போட்டிருந்தால் "அஞ்சா நெஞ்சன்" அழகிரி தாம்லே ஒத்துக்கறோம், அட அந்த கலாநிதி மாறன் மதுரை கோட்டைக்கே தான் ப்ளைட்டு புடிச்சி வந்தாரே அப்போ என்ன கிழித்தார்கள்? அதைவிட்டுவிட்டு அப்பாவிகள் 3 பேருக்கு மோட்சம் தந்தது எந்தவிதத்தில் நியாயம், ஊடகங்கள் தங்கள் பேனா முனையால் வன்முறை செய்யும்போது அதை உருட்டை கட்டையால் வேணுமானாலும் எதிர்கொள், பெட்ரோல் பாமினால் வேணுமானாலும் எதிர்கொள் ஆனால் கொளுத்தும் முன் அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு கொளுத்து....

பொதுவாக அழகிரி ஆதரவு பதிவுகள், சிலர் இட்ட பின்னூட்டங்கள் சொல்ல விழைந்தது இதன் பின்னால் பார்ப்பனியம் இருக்கிறது, மாறன்களின் பதவி ஆசை இருக்கிறது, குட்டையை குழப்புகிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டதே தவிர (இந்த காரணங்களையெல்லாம் நான் மறுக்கவில்லை என்ற போதும்) அழகிரியின் ரவுடித்தனம் மூன்று அப்பாவிகள் கொல்லப்பட்டது குறித்து மூச்சு விடவில்லை, ஏன் இதை எழுதினால் ஆட்டோ வந்துவிடுமா? அல்லது திமுக மாவட்டசெயலாளர் பதவி பறிபோய்விடுமா? இந்த 3 அப்பாவிகள் கொல்லப்பட்டதில் எந்த விதமான சலனமும் இல்லையா? அப்படி சலனம் இருந்தால் அதை காட்டாமல் எழுதுவது மனசாட்சிக்கு விரோதமானதாகாதா?

ஜெயலலிதாவிற்காக பஸ்ஸை கொளுத்தியதில் அடிமட்ட தொண்டனையோ அல்லது ஜெயலலிதாவிற்காக காதறுத்துக்கொண்டவனையோ கேட்டுப்பாருங்கள் சொல்வான், அந்த நாசமா போன கருணாநிதி அம்மா மேல வேணுமின்னே கேசை போட்டு ஜட்ஜ்ங்களை மெரட்டி தண்டனை வாங்கி கொடுத்துட்டான் என்று சாபம் விடுவார்கள், அந்த மாதிரியான தொண்டனுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லையா?

ஒரு இயக்கத்தின் கோட்பாடுகளில் நம்பிக்கை இருக்கிறது, ஒரு இயக்கத்தின் தலைவனை பிடித்திருக்கிறது என்பதற்காக அந்த இயக்கத்தின் எல்லா இழி செயல்களுக்கும் முட்டு கொடுக்க வேண்டுமென்ற அவசியமெதுவுமில்லையே..... இந்த ஒரு காரணத்திற்காகவே அந்த இயக்கத்தின் மீதான பிடிப்பையோ, அதன் செயல்பாடுகளுக்கு எதிராகவோ செல்ல வேண்டுமென்றில்லைதான்.

விஜய் டிவியின் நீயா? நானா? என்றொரு நிகழ்ச்சியின் விளம்பரத்தில் சொல்லப்படுவது "உங்களின் கருத்துகள் உங்களுக்கு சரியானதாகவே இருக்கலாம், அது குடும்பத்திற்கெதிராக இருக்கலாம், சமுதாயத்திற்கு எதிராக கூட இருக்கலாம், ஏன் நாட்டிற்கே கூட எதிராக இருக்கலாம் ஆனால் மனித நேயத்திற்கு எதிராக இருக்கக்கூடாது" இதையே தான் நான் வலியுறுத்த விரும்புவதும்

தமிழகத்தின் சேகுவேராவுக்கு கண்ணீர் அஞ்சலி


தமிழகத்தின் சேகுவேரா, தமிழ் தேசிய இயக்கங்களின் குரு என கருதப்படும் புலவர் கலியபெருமாள் மறைந்துவிட்டார், இது தொடர்பான மகேந்திரனின் பதிவு இங்கே, புலவர் கலியபெருமாள் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்குகிறேன்....

சந்திக்க நினைத்து, இனி சந்திக்கவே முடியாமல் போய்விட்டதே....

கண்ணீருடன்
குழலி

புலவர் கலியபெருமாள் அவர்கள் எழுதிய மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்... என்ற நூலைபடித்த உடனே எழுதிய பதிவு, ஒரு பகுதி மட்டும் எழுதினேன் இன்னொரு பகுதியை எழுதுவதை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன், அவரின் மரண செய்திக்கு பின் தான் அதை பதிவிடும் நிலை வரும் என நினைக்ககூடவில்லை.... கண்ணீருடன் இந்த பதிவை புலவருக்கு சமர்ப்பிக்கின்றேன்....

தமிழகத்தின் சேகுவேரா புலவர் கலியபெருமாள்

புலவர் கலியபெருமாள், தமிழகத்திலே வர்க்கப்போராட்டங்களை ஆரம்பித்து பின் தனித்தமிழ்நாட்டு போராட்டமாக உருவெடுத்ததன் ஆரம்பப்புள்ளியாக இருந்தவர், இந்த புத்தகத்தை பரவசத்துடனே படிக்க ஆரம்பித்தேன், பரவசத்திற்கு பலகாரணமென்றாலும் முதல் காரணம் 1984ல் ஒரு நாள் நாங்கலெல்லாம் என் தாத்தா வீட்டில் இருந்தபோது வீட்டிலிருந்தவர்கள் எல்லாம் ஒரு ஜீனியர் விகடன் புத்தகத்தை வைத்து ஆர்வமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தனர், அதில் கல்யாணம், புலவர் கலியபெருமாள் என்ற பெயர்களெல்லாம் அடிபட்டுக்கொண்டிருந்தது, என்ன பேசிக்கொண்டார்கள் என்பதெல்லாம் நினைவில்லை, ஆனால் புலவர் கலியபெருமாள், கல்யாணம் என்பது மட்டுமே நினைவிலிருந்த, பிறகு எங்கள் வீட்டிற்கு வந்தபோது அந்த ஜீவியை படித்தேன், அதில் என்ன படித்தேன் என்றும் நினைவிலில்லை ஆனால் நான் முதன்முதலில் ஜீனியர் விகடன் படித்த நினைவு அது தான்.

+2 படித்துக்கொண்டிருக்கும் போது குமுதத்தில் காய்கறி விற்கும் தீவிரவாதி என்ற அட்டைபடத்தோடு புலவர் கலியபெருமாள் பற்றிய ஒரு கட்டுரை வந்திருந்து, அதை நண்பன் வீட்டில் வைத்து படித்து பேசிக்கொண்டிருந்தபோது நண்பன் சொன்னான், இவர் எனக்கு தாத்தா முறை வேண்டுமென்று, அதன் பின் அவன் அவரோடு பேசிக்கொண்டிருந்ததையும் அவர் தன் அனுபவங்களை கதைபோல சொன்ன தையும் என்னிடம் கூறினான். வீட்டிற்கு வந்து அம்மாவிடம் நண்பனின் பெயரை சொல்லி புலவர் கலியபெருமாள் அவனோட தாத்தாவாம்மா என்றேன், எங்கள் தூரத்து உறவினர் ஒருவரின் பெயர் சொல்லி அவங்களுக்கு நெருங்கிய சொந்தம், அவருக்கு புலவர் மாமா முறை வேண்டுமென்றார், அதன் பிறகு ஜெயிலர் மாமா ஒரு முறை புலவரைப்பற்றி சொன்னார், நண்பன் புலவர் சொன்னதாக கதை போல விவரித்த சில விடயங்கள் தற்போது நினைவில் இல்லையென்றாலும் அவன் சொன்னமுறை இதோ இந்த புத்தகத்தை படிக்கும் போது புலவர் நம் அருகிலிருந்து தம்மை பற்றி சொல்லுவது போன்ற ஒரு காட்சிப்படமாக மனதில் விரிகின்றது, நிச்சயமாக இவைகளெல்லாம் சேர்ந்துதான் புலவரின் புத்தகத்தை படிக்கும் போது ஏற்பட்ட பரவசத்திற்கு காரணம் என நினைக்கிறேன்.

இந்த புத்தகம் எழுதப்பட்டதின் நோக்கம் பதிப்புரையில் கொடுக்கப்பட்டுள்ளது. "புலவர் கலியபெருமாள் அவர்கள் தம் வாழ்க்கைச் சுவடுகளைப் பதிவு செய்யவேண்டும் என்பது பலரின் விருப்பம் மட்டும் அல்லாமல் தேவையும் ஆகும். படிப்பினை என்ற வகையில் அது தமிழ்க் குமுகத்திற்கு பெரும் தேவைக்குறியது", புத்தகத்தை படித்து முடித்தவுடன் "படிப்பினை என்ற வகையில் அது தமிழ்க் குமுகத்திற்கு பெரும் தேவைக்குறியது" என்பது எத்தனை சத்தியமான வார்த்தைகள் என்பது புரியும்.

புலவர் கலியபெருமாள், தமிழ்தீவிரவாதிகளின்(?) காட்ஃபாதர் என ஜீனியர் விகடனால் குறிக்கப்பட்டவர், தமிழ் தேசிய சிந்தனை உள்ளவர்களின் மானசீக ஆசானாக கருதப்படுபவர், பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கம்யூனிச கொள்கைகளினால் ஆட்கொள்ளப்பட்டு ஆயுதப்போராட்டமே விளிம்புநிலை மக்களின் விடுதலைக்கு வழிவகுக்கும் என நம்பியவர். தூக்குதண்டனை விதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கி பணிரெண்டு ஆண்டுகள் கொடுஞ்சிறைவாசம் கண்டு பின் மக்கள் போராட்டங்களினாலும் சட்டப்போராட்டங்களினாலும் விடுதலையடைந்தவர்.


புலவர் பட்டம் பெற்று ஆசிரியர் பணி, வீடு, நிலபுலன்கள் என்று ஓரளவிற்கு வளமையான வாழ்க்கையும் அவரின் குடும்பத்திற்கு ஒரு வளமான எதிர்காலமும் இருந்த நிலையில் ஏழைகளின் மீதான சுரண்டலையும், அடக்குமுறையையும் அதிகார பகிர்தல் மறுக்கப்பட்டதையும் எதிர்த்து வர்க்கப்போராட்டத்திலும் தனித்தமிழ்நாட்டு விடுதலை போராட்டத்திலும் ஈடுபட்டு தான் மட்டுமன்றி தன் மனைவி, மகன், மகள், சொந்தக்காரர்கள் என அத்தனை பேரும் அரசாங்கத்தின் அடக்குமுறையையும் கொடுங்கோலையும் எதிர்கொண்டவர்கள் தொழில் ,திரைப்படம், அரசியல் என அத்தனையும் வாரிசுகளால் ஆக்கிரமிக்கப்படுகின்றன, வாரிசுகள் மந்திரிகளாகவும், வாரிசுகள் கதாநாயகர்களாகவும் ஆக்கப்படுகின்றனர், ஆனால் பண்ணிரண்டு ஆண்டு கால சிறைவாசத்தையும் அரசாங்கத்தின் அடி உதைகளையும் கொடும் அடக்குமுறையையும் மட்டுமே தன் வாரிசுகளுக்கு வழங்கிவிட்டார் புலவர் கலியபெருமாள், இத்தனைக்கும் இவர்கள் வறுமையில் வாடியவர்கள் இல்லை. வளமையான எதிர்காலம் இக்குடும்பத்திற்கு இருந்தது.

இந்த பதிவு புலவர் கலியபெருமாள் அவர்களைப்பற்றி விரிவாக எழுதுவது பற்றியதல்லாததால் இனி அவர் எழுதிய புத்தகத்தைப் பற்றி பேசலாம்.

சரளமான எழுத்து, இலக்கிய(?) தரம் வாய்ந்த நடை என்று எந்த சுவாரசியமுமில்லாமல் இருக்கலாம், ஆனால் புத்தகத்தை படிக்க ஆரம்பித்த சில பக்கங்களிலேயே புலவர் கலியபெருமாள் அவர்கள் அருகிலிருந்து பேசுவது போன்ற ஒரு உணர்வு படிப்பவர்களுக்கு எழுந்துவிடும், இவைகள் எல்லாவற்றையும் விட புத்தகத்தில் இருக்கும் நேர்மை, அதாவது தன் செயல்களை நியாயப்படுத்தியோ தன் செயல்களுக்கான நீள நீளமான விளக்கங்கள் எதையும் சொல்லவோ இல்லாமல் வெறும் தன் வாழ்க்கை சம்பவங்களை எடுத்து கூறுகிறார், பெரும்பாலான இடங்களில் மிக வெளிப்படையாக பேசினாலும் வெகு சில இடங்களில் சில விடயங்களை தொட்டும் தொடாமலும் சென்றுவிடுகிறார். பதிப்புரையிலேயே "காலம், அகவை வழி முதுமையைக் கொடுத்ததால் தொடர்ச்சியாக செய்திகள் பதிவுறாமல் போனதோடு சில விடுபாடுகளுடனுமே இவ் வரலாறு பதிவானது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தது ஈராயிரம் பக்கங்களிலாவது பதிவு செய்ய வேண்டியவைகள் வெறும் 168 பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் முழு நிறைவு ஏற்படாதது என்னமோ உண்மைதான்.

இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு அணிந்துரையும் மிக நன்றாக அதே சமயம் நேர்மையாக எழுதப்பட்டுள்ளன. அணிந்துரை, புத்தகம் பற்றி அடுத்த பதிவில்.

நானும் பெரிய ஆள் ஆயிட்டேன் - பதிவர்கள் கவனிக்க

நானும் பெரிய ஆள் ஆயிட்டேன், ஆமாங்க வலைப்பதிவர்களே என் பெயரிலும் போலிப்பதிவு வெளியாகிவிட்டது, நான் பதிவுகள் எதற்கும் பின்னூட்டம் போடப்போவதில்லை சில நாட்களுக்கு, அப்படியே போட்டாலும் http://kuzhalifeedbacks.blogspot.com என்ற என் பின்னூட்ட சேகரிப்பில் இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்ளவும். இதையும் தாண்டி வெளியிடப்படும் போலி பின்னூட்டங்களுக்கு எந்த பதிலும் விளக்கமும் மாய்ந்து மாய்ந்து சொல்லிக்கொண்டிருக்க என்னால் இயலாது.

பெரியார் ஒரு உணர்ச்சி காவியப் பதிவு....


சிங்கையில் யீஷூன் திரையரங்கில் பெரியார் திரைப்படம் வெளியாகியுள்ளது, நண்பர்கள், நான் முன்னாள் சென்றுவிட கோவி.கண்ணன் திரையரங்கில் வந்து இணைந்து கொண்டார், பெரியார் திரைப்படம் பார்க்கப்போகும் முன் இந்த படத்தில் சத்யராஜ் நடிக்காமல் வேறு புது முகம் யாரேனும் நடித்திருக்கலாம், பெரியார் தெரிவதற்கு பதில் சத்யராஜ் தான் நம் முன் வந்து நிற்பார் என்றேன், அதற்கு என் நண்பன் கூறினான், படத்தில் சத்யராஜ் தெரியமாட்டார், ஏனெனில் பெரியார் சத்யராஜை விட பவர்ஃபுல், சத்யராஜை விஞ்சி பெரியார் தான் படத்தில் தெரிவார் பார் என்றான், படம் பார்க்கும் போதே என் நண்பன் சொன்ன உண்மை புரிந்தது.

தொண்ணூற்று ஐந்து ஆண்டுகால வாழ்க்கை, ஐம்பதாண்டுகளுக்கும் மேலான சமூகப்பணி கொண்டவரின் வாழ்க்கையை இரண்டரை மணி நேரத்தில் அடக்குவது இயலாத காரியம், அதனால் பெரும்பாலுமான காட்சிகள் நீளமாகவும் ஆழமாகவும் இல்லாமல் மேலோட்டமாகவே இருந்தன, இடைவேளை வரை படம் வேகமாகவே நகர்ந்தது, இடைவேளைக்கு முன் அதிகமாக நமக்கு அறிமுகப்படாத காட்சிகள் இருந்ததால் படம் சுவாரசியமாகவும் இருந்தது, இடைவேளைக்கு பின் வந்த காட்சிகள் பலவும் நாம் அறிந்த விடயங்கள்.

தமிழ் மொழி, தமிழ் இலக்கியங்கள் பற்றிய பெரியாரின் விமர்சனங்கள், மணியம்மையை திருமணம் செய்து கொண்ட விடயம், ஆகஸ்ட்டு 15ஐ கருப்பு தினம் என கூறியது என பெரியார் மீது வைக்கப்படும் பல

விமர்சனங்களுக்கு இந்த படத்தில் பதில் கிடைத்துள்ளது, அறிஞர் அண்ணா, கலைஞர், தி.க. தலைவர் வீரமணி, எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர் போன்றோர் இடம் பெறும் காட்சிகள் வெகு சிலவே.

தொடக்க காட்சிகளில் சத்யராஜே தெரிந்தார், வசன உச்சரிப்பும் அப்படியே, கோட்டை கழற்றி போட்டுவிட்டு கதராடை உடுத்தி வரும் அந்த காட்சி நிச்சயம் என்னை பரவசப்படுத்தியது, அதிலிருந்து சத்யராஜ் ஆளையே காணவில்லை, படம் முழுக்க பெரியார் தான்... ஓரிரு இடங்களில் வசன உச்சரிப்பு சத்யாராஜை நினைவுக்கு கொண்டுவந்தாலும் பெரியாரே ஆதிக்கம் செய்தார்.

இடஒதுக்கீடு
இடஒதுக்கீட்டின் தந்தையாக இருந்திருக்கிறார் பெரியார், அன்று அவர் ஆரம்பித்த போராட்டம் இதோ இன்று வரை நடந்து கொண்டிருக்கின்றது, ராஜாஜி அவர்களிடம் சிறையில் பெரியார் உரையாடும் காட்சியில் இடஒதுக்கீட்டிற்கு காந்திஜி ஒத்துக்கொள்வது இருக்கட்டும், நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா என்று முகத்தை ஆழமாக பார்த்து கேட்கும்போது அதற்கு ராஜாஜியின் தாழ்ந்த பார்வையே இராஜாஜியின் எண்ண ஓட்டத்தை வசனங்கள் ஏதுமின்றி தெரிவித்து விடுகின்றது, இடஒதுக்கீடு ஏதோ சும்மா வந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட இன்றைய தலைமுறைகளுக்கு அதன் நெடிய போராட்ட வரலாறு இதனால் தெரியவரும்.

பெரியாரின் சமரசம்
சமூக, அரசியலில் சமரசமற்று இருப்பது அதனால் எந்த இழப்பையும் ஏற்பது என்பது என்னால் ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு விடயம், ஆனால் எதை சமரசம் செய்வது என்பதில் ஒரு தெளிவு வேண்டும், பெரியார் சமரசமே செய்து கொள்ளாதவர் என்ற எண்ணம் எனக்கு ஏற்கனவே இருந்தது, ஆனால் திரைப்படத்தில் கம்யூனிசம் பற்றிய எழுத்துகளால் பெரியார் கட்சியும் பத்திரிக்கையும் பிரிட்டிஷ் காரர்களால் முடக்கப்படும் என்ற நிலை வந்தபோது கம்யூனிச பொருளாதார கொள்கை முக்கியம், ஆனால் அதை விட முக்கியம் சாதி ஒழிப்பு, அதனால் கொஞ்ச காலம் கம்யூனிசத்தை தள்ளி வைப்போம் என்று தன் முதற் குறிக்கோளை எதற்காகவும் இழக்காமல் இருக்க சமரசம் செய்து கொண்டார் என்ற காட்சியமைப்பு பெரியார் பற்றிய சமரசம் தொடர்பான என் எண்ணத்தை மாற்றியது.

பெரியாரின் கணிப்புகள்
காந்திஜியிடம் மேல்சாதி மக்களின் வாழ்வாதார மனுதர்ம கொள்கைகளை மாற்ற முயன்றால் உங்களையே உயிரோடு விட்டு வைக்க மாட்டார்கள் என்று எச்சரிப்பதும், அனைவரும் அர்ச்சகர் சட்டம் 25 ஆண்டுகளுக்கு முன் முதல்வர் கருணாநிதியினால் கொண்டு வரப்பட்டபோது கோர்ட் குறுக்கே வரும் பார்த்துக்கொள் என்று எச்சரிப்பதும் பெரியார் எந்த அளவிற்கு இந்த சமூகத்தின் அவலத்தை புரிந்து கொண்டுள்ளார் என்று நன்றாக தெரிகின்றது.

படத்தில் சாதியம் மற்றும் கடவுள் மீதான விமர்சனங்கள் நகைச்சுவையாக நக்கலாக சொல்லப்பட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதால் படம் ஒரு ஆர்ட் பிலிம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல் கொண்டு செல்கிறது.

வியாபார மண்டிக்கு பெரியாரின் தந்தை வரும் போது அனைவரும் "நமஸ்காரம்" சொல்லி மிகுந்த மரியாதை கொடுப்பதும், அதன் பின் மண்டிக்கு வந்து முனிசிபல் கவுன்சிலராகவும் மரியாதைக்குறியவராகவும் இருக்கும்

பெரியாரின் தந்தையை பெயர் சொல்லி அழைத்து அடா புடா என்று மரியாதையில்லாமல் பேசும் ஒரு உயர்சாதி முனிசிபல் கிளார்க்கை பற்றி பெரியார் கணக்கரிடம் அய்யா முனிசிபல் கவுன்சிலர் ஆனாலும் ஏனிந்த கிளார்க் இப்படி மரியாதை இல்லாமல் பேசுகிறார் என்று கேட்க அதற்கு கணக்கர் அவர்கள் சாதியில் உசந்தவர்கள் நம்மிடம் எத்தனை பணம் பதவி இருந்தாலும் நம்மால் அவர்களைப்போல ஆக முடியாது என்று சொல்வதும் படக்காட்சிக்காக அமைக்கப்பட்டதாகவே தோன்றுகிறது, இவைகளை சிறு வயதிலிருந்தே பெரியார் பார்த்திருப்பார் , அதன் காரணங்களையும் அப்போதிருந்தே அறிந்திருப்பார் அப்படியிருந்தும் திடீரென பெரியார் இந்த கேள்வியை கேட்பதும் அதற்கு பதில் சொல்வதும் திரைப்படங்களை பார்ப்பவர்களுக்கு அப்போதிருந்த சூழ்நிலை புரிய வேண்டுமென்ற காரணமே இருந்திருக்கலாம்.

சட சடவென்று காலங்கள் மாறுவது பெரியாரின் தாடி வளர்வதை வைத்து புரிந்து கொள்ள முயன்றாலும் மின்னல் வேகத்தில் காலங்கள் மாறுவது படம் பார்த்துக்கொண்டிருப்பவர்களின் இழை லேசாக தடைபடுகின்றது. ஆனாலும் தொண்ணூற்றுஐந்தாண்டு கால வாழ்க்கையை சில சில சம்பவங்கள் மூலமாக காட்டும் போது இது ஏற்படக்கூடும், படம் கோர்வையாக காட்சி அமைப்புகள் பெரிதும் அறுபடாமல் காண்பித்திருக்க எடிட்டர் லெனினின் கத்திரி நன்றாகவே வேலை செய்திருக்கின்றது.

படத்தில் குறிப்பிடத்தகுந்த மற்றொரு விடயம் ஒளிப்பதிவு, காலத்தை பிரித்து காட்டும் ஒளியமைப்பு ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சானை ஒளிஓவியர் என்று சொல்லுவதற்கு பொருள் சேர்க்கின்றது.

என்ன தான் படத்தின் முடிவு நாம் அறிந்ததாகவே இருந்தாலும் படத்தில் பெரியாரின் இறப்பு சற்று கலங்க வைக்கிறது.

படத்தில் அத்தனை நடிகர்களும் நன்றாகவே நடித்துள்ளனர்... கடவுளே நீ கல்லா பாடல் நன்றாக மனதில் பதிந்து முணுமுணுக்க வைக்கிறது, 'ஓ ரசிக சீமானே' பாடலை நினைவு படுத்தும் ரகசியா பாடல் கேட்கும் படியாக
இருக்கின்றது, மற்ற பாடல்கள் சட்டென்று மனதில் பதியவில்லை.

பெரியார், அண்ணா முரண்பாடுகள், பெரியாருக்கு வாக்கு அரசியல் மீதிருந்த கோபம், அரசியல்வாதிகள் மீதிருந்த விமர்சனம் அத்தனையும் நேர்மையாக காண்பிக்கப்பட்டிருக்கின்றது

தமிழகத்தின் அத்தனை கட்சிகளுக்கும் பெரியாரே ஆதாரமாக இருந்திருக்கிறார்... தமிழகத்தில் பெரியாரின் தாக்கம் இன்னும் சில நூற்றாண்டுகளுக்காவது நிச்சயம் இருக்கும்.

கடவுள் எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பு என்ற புட்டியில் அடைத்து இன்றைய தலைமுறைக்கு ஊடகங்கள் காண்பித்திருக்கும் பெரியார் பற்றிய உண்மையான புரிதலை இந்த படம் ஏற்படுத்தும், பெரியாரை இந்த இரு கோணங்கள் தவிர்த்து மேலும் அறிந்து கொள்ள எத்தனித்தாலே போதும் மிச்சத்தை அதாவது அவர்களை உள்ளிழுப்பதை பெரியாரே பார்த்துக்கொள்வார், இந்த பெரியார் படம் இன்றைய தலைமுறையில் இன்னும் எத்தனையோ பேரை உள்ளிழுக்கப்போகிறது


தி.க. தலைவர் அய்யா வீரமணி அவர்களிடம் சில மாதங்களுக்கு முன் உரையாடிக்கொண்டிருந்த போது பெரியார் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படும்போது சிதைக்கப்பட்டுவிடுமோ என்று என் கவலையை கூறினேன், அதற்கு இல்லை, நிச்சயம் அப்படியிருக்காது, நம்மிடம் பல விசயங்களை ஆலோசிக்கின்றனர், தகவல்கள் பெறுகின்றனர், படம் கண்டிப்பாக நன்றாக இருக்கும் வெளிவந்த பின் பாருங்கள் என்றார், படம் முடிந்த பின் வீரமணி அய்யா அவர்கள் கூறியதை நினைத்துக்கொண்டேன்.... அத்தனை அற்புதமாக வந்திருக்கின்றது படம்.

இயக்குனர் ஞானசேகரனுக்கும் மற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்

பெரியார் ஒரு உணர்ச்சி காவியப் பதிவு....