பட்டையை கிளப்பும் பாமக அரசியல் பரட்டை அரசியலா?

திமுக ஆட்சிக்கு வந்தால் ஐந்து ஆண்டுகளுக்கு அதிமுக எலி வலையில் புகுந்து கொள்ளும், அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுக எலி வலையினுள் புகுந்து கொள்ளும், அம்மாவுக்கு ஒரு பிரச்சினை என்றாலோ அய்யாவை தூக்கி உள்ளே வைத்தாலோ மட்டுமே ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் என்று தூள் பறக்கும், மற்ற நேரங்களில் திமுக ஆட்சியில் அதிமுக என்று ஒன்று இருப்பதோ அதிமுக ஆட்சியில் திமுக என்று ஒன்று இருப்பதோ பெரும்பாலும் தெரியவே வருவதில்லை.

தற்போது நடந்துவரும் திமுக ஆட்சிகாலத்தில் வழக்கம் போல அதிமுக எலி வலையினுள் புகுந்து கொள்ள தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருந்தது பாமகவும் விஜயகாந்த்தும் மட்டுமே....

ஏகோபித்த கர கோச ஊடக வெளிச்சத்தில் உலா வந்த மாற்றத்தை தருவேன் என்று வந்த விஜயகாந்த்தோ அற்புதமான ஒரு மாற்றத்தை உருவாக்கினார், தமிழகத்தில் இப்போதும் தனிப்பட்ட முறையில் வலுவான கட்சிகள் பட்டியலில் ஒரு சிறிய வித்தியாசத்தில் அதிமுக திமுகவை விட முன்னால் உள்ளது, ஆனால் அந்த கட்சியின் தலைவியோ அல்லது வலுவான திமுக வின் தலைவர்களின் வீட்டிலோ வருமானவரி முதல் இன்ன பிற எத்தனையோ சோதனைகள் நடந்த போதும் எந்த தொண்டனும் கூடிவந்தோ கூட்டி வந்தோ அதிகாரிகளை கேரோ செய்வதோ வழிமறித்ததோ நடந்ததில்லை, ஆனால் விஜயகாந்த் வீட்டில் வருமாணவரி சோதனைக்கு வந்த அதிகாரிகள் மறிக்கப்பட்டதும் கேரோ செய்ததும் வீட்டின் முன் தொண்டர்கள் கூடியது அல்லது கூட்டப்பட்டதும் நடந்தது, அதன் பின் அதை அப்படியே அட்டர் காப்பி அடித்து செல்வி.ஜெயலலிதா வீட்டில் வருமானவரி சோதனை என்றவுடன் ஆயிரக்கணக்கான தொண்டர் படைகளுடன் செங்கோட்டையன்களும் ஜெயக்குமார்களும் வீட்டையும் கட்சி அலுவலகத்தையும் பாதுகாத்தனர், ஆகா நல்ல மாற்றத்தை உருவாக்கிவிட்டார் விஜயகாந்த், இனி தமிழகத்தின் எந்த அரசியல் தலைவன் வீட்டிலும் வருமான வரிசோதனையோ எந்த சோதனையுமோ போடமுடியாத மாற்றத்தை உருவாக்கினார் விஜயகாந்த்.

விஜயகாந்த்தின் சத்தங்களும் குரல்களும் பெரும்பாலும் அவரது திருமண மண்டபத்தை சுற்றியே வந்தது, காரைக்குடி குரூப்ல கூப்டாங்க, தஞ்சாவூர் குரூப்ல கூப்டாங்க, என்ற அளவிற்கு என்னை கூட்டணிக்கு கூப்பிட்டாங்க மிரட்டினாங்க என்ற அளவிலேயே நின்று போனது அவரது சத்தங்கள்....

சென்ற ஆட்சியிலும் சரி இந்த ஆட்சியிலும் சரி மக்கள் போராட்டங்கள் ஓரளவிற்கு கம்யூனிஸ்ட் மற்றும் பாமக கட்சியினரால் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன(தேவைக்கதிகமாக எதிர்வினை புரியப்பட்ட குஷ்பு பிரச்சினை தவிர்த்த மற்றவைகள் மக்கள் பிரச்சினைகளை மையமாக வைத்தே இருந்தன) , சென்ற ஆட்சியின் தான் தோன்றித்தனமான தலைமை இருந்ததும், மேலும் ஆட்சிக்கு எந்த விதத்திலும் நெருக்கடி கொடுக்க முடியாத சட்டமன்ற பெரும்பாண்மை அதிமுக விற்கு இருந்ததுமான சூழலையும் ஒப்பு நோக்க வேண்டும்.

இந்த ஆட்சி ஆரம்பத்திலிருந்தே அதிமுக அம்மாவிற்கு பிரச்சினை என்றால் மட்டுமே வெளிவருவோம் என்று பதுங்கிகொண்ட நிலையில், காங்கிரஸ் கமுக்கமாக இருக்க தோழமைகட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக செயல்பட ஆரம்பித்தது பாமக. துனை நகரம் திட்டம், விமான நிலைய விரிவாக்கம் என்பதில் ஆரம்பித்து பாலாற்றில் அணைகட்டுவது தொடர்பாக அரசை எச்சரித்தும் பயனின்றி ஆந்திர அரசு கட்டும் அணைப்பற்றி சட்டமன்றத்திலேயே அது துடுப்பணை தடுப்பணை என்று சால்ஜாப்பு சொன்னார் அமைச்சர் துரை முருகன், நேரடியாக அணைகட்டும் இடத்திற்கே சென்று பாமக ஆர்பாட்டங்கள் செய்ய ஆந்திர அரசின் காவல்துறை மட்டுமின்றி அந்த ஊர் மக்களிடமும் உதைபட்டு வந்தனர் பாமகவினர், அதன் பின்பே இது தொடர்பாக கொஞ்சம் போல தீவிர நடவடிக்க எடுக்க ஆரம்பித்தது திமுக அரசு.

தனியார் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளை கொண்டிருக்கும் பெற்றோர்கள் சற்றேனும் மூச்சு விடும்படி நடந்திருக்கின்ற விடயம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை தாண்டி அதிகமகா கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சட்ரிக்கைகள், இப்பிரச்சினையை முதலில் பாமக இராமதாசு அவர்கள் கிளப்பியபோது சும்மா அதிகமாக வசூலிக்கின்றார்கள் என்று சொன்னால் போதாது ஆதாரம் வேண்டும், யாருமே புகார் கொடுக்கவில்லையே எனவே ஒன்றும் செய்ய முடியாது என்று எல்லாம் கிட்டத்தட்ட தனியார்கல்லூரிகளின் சங்க செயலாளர் போன்று பேசிய முதல்வர் அவர்கள் அதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான காழ்ப்புணர்சியே இப்படியான போராட்டத்தை பாமக நடத்துகிறது என்று காரணமெல்லாம் சொன்ன முதல்வர் தற்போது முதல்வருக்கு அமைச்சர் பொன்முடியின் மீது என்ன காழ்ப்புணர்வோ அல்லது அமைச்சர் பொன்முடியை நாடுகடத்த முடியவில்லையே என்று முதல்வருக்கு ஏதேனும் ஏக்கமோ தெரியவில்லை, அரசாங்கமே நான்கு குழுக்கள் அமைத்து பல கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து பல கல்லூரிகளில் சோதனை நடத்தும் குழுக்களெல்லாம் இப்போது இந்த அரசாங்கம் அமைத்துள்ளது, இதுவும் கூட பாமக ஸ்டைலில் நேரடியாக களத்தில் இறங்குவோம் கைப்பேசி எண் கொடுத்து கல்லூரியில் அதிக கட்டணம் வசூலித்தால் கைப்பேசி எண்ணுக்கு தெரிவியுங்கள் பாமக அந்த கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து போராடுவோம் என்று கிட்டத்தட்ட மிரட்டிய பின்பே குழுக்கள் அமைப்பது, புகார்களை பெறுவது, சோதனை என்றெல்லாம் அரசாங்கம் இறங்கியுள்ளது.

பாமகவும் மருத்துவர் இராமதாசும் நடத்தும் போராட்டங்களை சில கட்சிகள் தங்களை வளர்த்துக்கொள்ளவேண்டுமென்று போராட்டங்களை தூண்டுகிறார்கள் என்று பேசும் முதல்வர் எந்த கட்சியாக இருந்தாலும் ஒரு பிரச்சினையென்றால் அந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்த்து தங்களை வளர்த்துக்கொள்வதில் என்ன தவறு? இந்தி திணிப்பு எதிர்ப்பும் மொழிப்போராட்டமும் முடிந்த பின் என்ன திமுகவை கலைத்துவிட்டார்களா என்ன? அல்லது திமுக இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக போராடியதால் கிடைத்த ஆதரவு எதுவும் திமுகவிற்கு வேண்டாமென்று சொல்லிவிட்டார்களா? இல்லையே பின் ஏன் பாமக மீது மட்டும் இந்த விமர்சனம்? வெளியூர் அண்ணாச்சிகளுக்காக இரிலையன்சை எதிர்ப்பதும், உள்ளூர் அண்ணாச்சிகளுக்காக டாட்டாவை எதிர்ப்பது என்று இந்த போராட்டங்களுக்கு காரணம் கூறலாம், அண்ணாச்சிகளின் தயவைத் தெற்கே வளர்த்துக் கொள்ள இந்த தந்திரம் என்று சொன்னாலும் இந்த எதிர்ப்பில் இறங்குவதில் என்ன தவறு?

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்துவதும் அதன் வழியாக கட்சி வளர்ப்பதிலும் என்ன தவறு? அல்லது இப்படி பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடி கட்சி வளர்த்த வரலாறு தமிழகத்திலே இல்லையா என்ன?

அட கட்டிங்கிற்கு தான் பா இப்படியெல்லாம் போராடுகிறார்கள், அட ர்செண்ட்டேஜ்க்காகத்தான் பா போராடுகிறார்கள் என பச்சையாக பாமகவின் போராட்டங்கள் மீது எச்சில் துப்புபவர்கள் கமுக்கமாக இருக்கும் காங்கிரசும், கம்முன்னு இருக்கும் காம்ரேட்டுகளும், அமுக்கி வாசிக்கும் அதிமுகவும் அமைதியாக இருப்பதற்கு கட்டிங்கும் பர்செண்ட்டேஜூம் சரியாக கிடைத்துவிட்டது தான் காரணம் என்பார்களோ? இப்படியாக கொச்சை படுத்துவதென்றால் எந்த கட்சியின், எந்த தனிமனிதரின், எந்த சமூகத்தின், எந்த அமைப்பின் எந்த போராட்டங்களையும் கொச்சைப்படுத்தலாம்.

டாடா மினரல் ஆலை வந்தால் தென்மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும் என்று பேசிக்கொண்டிருப்பவர்கள் ஒரு முறை கடலூர் சிப்காட் வளாகத்தை பார்த்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன், 20 ஆண்டுகளுக்கு முன் சிப்காட்டிற்காக கிட்டத்தட்ட 17 கிலோமீட்டர் நீளம் வரை விளை நிலங்களையும் மானவாரி நிலங்களையும் அரசாங்கம் கையகப்படுத்திய போது கொடுக்கப்பட்ட உறுதி மொழிகளும் இன்னும் 10 ஆண்டுகளில் கடலூரில் வேலை இல்லாத பேச்சே இருக்காது என்று நீட்டி முழங்கியவர்களின் குரல்கள் இன்னும் என்னுள் ஒலித்துக்கொண்டிருக்கின்றது, சிறு குறு விவசாயிகள் நிலத்தை கொடுத்துவிட்டே கிடைத்த காசை இரண்டே ஆண்டுகளில் அழித்துவிட்டு அதே சிப்காட்டில் கூலித்தொழிலாளிகளாக சென்று அந்த இரசாயன ஆலைகளில் கடைநிலை வேலைகள் செய்துவிட்டு (மேல்மட்ட வேலைகள் முழுக்க வெளியூர் ஆட்கள், கடைசி சில வருடங்களில் கீழ்நிலை வேலைகளுக்கும் கூட குஜராத்திலிருந்து குடும்பம் குடும்பமாக வந்து வேலை செய்தார்கள்) சிறு நிலக்கிழார்களாக இருந்தவர்கள் கூலிகளாக வேலை செய்து இராசயன ஆலைகளால் மண், நீர், காற்று என அத்தனையும் மாசுபட்டு 17 அடி ஆழத்தில் கிடைத்த நீர் இப்போது 100 அடிக்கு கீழே போனாலும் கிடைக்கவில்லை என்பதால் ஆலைகளை மூடிவிட்டு செல்ல இப்போது மண் நீர் காற்று உடல்நலம் என அத்தனையும் கெட்டுப்போய் கூலி வேலையும் இல்லாமல் நிற்கும் அவலநிலை கடலூர் சிப்காட்டால்....

மாறன் சகோதரர்கள் கள்ள சாராயம் காய்ச்சியோ சூதாட்ட கிளப் நடத்தியோ பணம் சம்பாதித்துக்கொண்டில்லை அதை அவர்கள் செய்துகொண்டிருந்தால் இன்னேரம் அரசாங்கம் மாறன் சகோதரர்களுக்கு போட்டியாக கள்ளசாராம் காய்ச்சிக்கொண்டோ சூதாட்ட கிளப் நடத்தவோ ஆரம்பித்திருக்கும், கலைஞர் டிவி நடத்தும் அளவிற்கு பணமும் பலமும் இருக்கும் கலைஞர் குடும்பத்தால் கேபிள் இணைப்பு வழங்கும் நிறுவனம் நடத்துமளவிற்கு பணமோ பலமோ இல்லையோ என்னவோ அரசாங்கம் கேபிள் இணைப்பு வழங்கும் நிறுவனம் நடத்த முனைகிறது, நல்லவேளையாக கேபிள் இணப்பு, தொலைக்காட்சி நடத்துதல் என்று மாறன் சகோதரர்கள் நிறுத்திகொண்டதால் அரசாங்கம் கேபிள் இணைப்பு வழங்கும் நிறுவனம் நடத்துவதோடு நிறுத்திக்கொள்கிறது.

சாராயாத்தை அட சீமசரக்குதாங்க அந்த குடியை அரசாங்கமே ஊற்றிக்கொடுக்க ஆளெடுத்து நடத்துகிறது, கேளிக்கை கேபிள் இணைப்புகளை அரசாங்கம் நடத்துகிறது ஆனால் ஒரு மினரல் ஆலையை தென்மாவட்ட மக்களுக்கு ஏகத்திற்கும் வேலைவாய்ப்பையும் நன்மையையும் விளைவிக்க போவதாக சொல்லப்படும் ஒரு ஆலையை அரசாங்கம் நடத்த முடியவில்லையோ டாடா வந்து நடத்தப்போகிறதாம்? சில ஆயிரம் கோடி கொட்டி இலவச தொலைக்காட்சி வழங்கும் அரசால் ஓராயிரம் கோடி போட்டு இந்த ஆலையை நடத்த முடியலையோ?இதை எதிர்த்தால் கட்சி வளர்க்க பிரச்சினைகளை பயன்படுத்துகிறார்கள் என பாமக மீது பாய்கின்றனர் அப்போ என்ன அரசாங்கம் சாராயம் ஊற்றி கொடுப்பதையும் மாறன் சகோதரர்களின் தொழிலை மட்டுப்படுத்தும் தொழில்களையும் மட்டும் தான் அரசாங்கம் செய்யுமா? பாமக பிரச்சினைகளில் தலையிட்டு கட்சியை வளர்த்துக்கொள்ளுமளவிற்கு அரசாங்கம் ஏனப்பா பிரச்சினைகளை உருவாக்குகிறது அல்லது பிரச்சினைகளை பாமக வந்து தலையிட்டு அவர்கள் கட்சியை வளர்த்துக்கொள்ளும் அளவிற்கு பிரச்சினைகளில் ஏன் அலட்சியமாக இருக்கின்றது?

அரசாங்கமே நடத்தும், எ.எல்.சி. கார்ப்பரேஷனால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் பலருக்கு பணம் கிடைக்காமல், நிலம் கொடுத்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்பதும் பலருக்கு கிட்டாமல் போக 90 களில் டி.ஜி.எம்(டெப்புடி ஜெனரல் மேனேஜர் - என்.எல்.சிஅதிகாரவர்க்கத்தின் பவர் செண்ட்டர்கள்)கள் கேரோ செய்யப்பட்டு அலுவலகங்களில் முற்றுகையிடப்பட்டு மற்றும் பல பாமக ஸ்டைல் போராட்டங்களினால் பணமும் வேலையும் பலருக்கு கிடைத்தது, ஆனால் அதற்கான காலம் 30 ஆண்டுகளுக்கும் மேல், இப்போது கூட ஜெயங்கொண்டத்தில் நிலமெடுக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பிரச்சினைகள் ஆகின்றன (பின்ன இதற்கு பணமும் வேலையும் கிடைக்க இன்னொரு 30 ஆண்டுகள் யார் காத்திருப்பது) அரசாங்கம் நடத்தும் நிறுவனத்திலேயே இந்த நிலை என்றால் தனியார் நடத்தும் நிறுவனத்தில் எந்த அளவிற்கு நிவாரணமும் மற்றவைகளும் கிடைக்கும்? டாடா ஆலை தொடர்பாக நிறைய கேள்விகள் இருக்கின்றன, அதை வேறொரு சமயத்தில் எழுதலாம்.

நான் தலையிட்டதால் துணை நகரம் நிறுத்தப்பட்டது, நான் தலையிட்டதால் இது ஆனது, அது ஆனது என்று மருத்துவர் இராமதாசு சொல்கிறாராம், ஒவ்வொரு பிரச்சினைகளின் போதும் அவர்கள் தலையிட்டதால் என்ன வெற்றி கிடைத்தது என்பதை சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள், அரசாங்கமே அதன் சாதனைகளை அரசு விளம்பரங்கள் மூலம் செய்து கொண்டு தானே இருக்கின்றன, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் வெற்றிக்கு இன்றுவரை உரிமை கொண்டாடுகிறது திமுக, சுதந்திரம் பெற்று தந்ததற்கு காங்கிரஸ் உரிமை கொண்டாடுகிறது, அந்தந்த ஊர்களில் ஆலை வந்ததற்கும் ரோடு போட்டதற்கும் காரைக்குடி தண்ணீர் பிரச்சினை தொடர்பாக பழ.கருப்பையா அவர்களுமாக பிரச்சினைகளில் அவரவர்களின் வெற்றியை சொல்லிக்கொள்வது என்ன புதுசா? இராமதாசு மட்டும் 16 வயதினிலே பரட்ட சொல்வது போல "இது எப்படியிருக்கு" என்று சொல்கிறார் என விமர்சனம்.

கூட்டணியில் இருந்து கொண்டே விமர்சிக்கலாமா? இது சூழ்ச்சி அரசியல் என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது, சூழ்ச்சி அரசியலா அல்லது இராச தந்திர அரசியலா என்று சொல்வது ஆளைப்பொறுத்து பலருக்கும் மாறும், சிலர் செய்தால் சூழ்ச்சியரசியல், அதையே வேறு சிலர் செய்தால் இராசதந்திர அரசியல் சரி அதை விடுங்க.

தமிழகத்திலே கூட்டணி நிலை கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்படுத்தும், நடப்பது கூட்டணி கட்சி அல்ல, கூட்டணி கட்சிகளின் ஆதரவால் நடக்கும் திமுகவின் தனியாட்சி, அரசாங்கத்தின் இரண்டு ரூபாய் அரிசி திட்டமாக இருந்தாலும் வேறு நல்ல திட்டங்களுக்கும் கிடைக்கும் ஆதரவு திமுகவிற்கு மட்டுமே, அதில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு இல்லை, அரசு அதிகாரத்திலும் பங்கு இல்லை, ஆனால் மக்கள் பாதிப்படையும் பிரச்சினைகளால் ஏற்படும் கெட்ட பெயர் திமுகவிற்கு மட்டுமல்ல கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்தே, மக்கள் மன்றத்தில் செல்லும்போது அன்னைக்கு திமுக தான் காரணம் நாங்கள் அல்ல என்றால் அன்னைக்கு நீங்களும் தானே திமுகவோடு வாயை மூடிக்கொண்டு இருந்தீர்கள் என்பார்கள். அதே எதிர்கட்சியாக இருந்தால் வாயை திறக்காமல் இருந்தால் கூட அரசாங்கத்தின் கெட்ட பெயர்களுக்கு பங்காளிகளாக மாட்டார்கள், எனவே எதிர்கட்சியாக இருப்பதை விட தனியாட்சி நடத்தும் கட்சிக்கு கூட்டணி கட்சியாக இருப்பது மிகவும் சங்கடமானது, எதிர்கட்சியாக இருக்கும் போது அரசை விமர்சிப்பதை விட ஆளும் கட்சிக்கு கூட்டணிகட்சியாக இருக்கும் போது அரசின் பிரச்சினைக்குறிய மக்கள் விரோத செயல்பாடுகளை கடுமையாக எதிர்க்க வேண்டும். அந்த நிலைதான் பாமகவிற்கு இப்போது.

பாமக என்றால் முன்பு சிலருக்கு எப்போதும் எரியும், அவர்களுக்கு பாமக மட்டுமல்ல, திமுக என்றாலும் எரியும் அவர்களை விட்டுத்தள்ளுங்க, இப்போது பாமக மற்றும் மருத்துவர் இராமதாசு விசயத்தில் முதல்வரின் பதட்டத்தையும், மற்ற சிலரின் பதட்டமும் பாமக எதை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கின்றது என்பதை நன்றாகவே காட்டுகின்றது.

தொடர்புடைய சுட்டி: இராமதாசின் பரட்டை அரசியல்!

25 பின்னூட்டங்கள்:

said...

parattai, paththa vechchittiye....

said...

டாஸ்மார்க் விவகாரம் - சரி
மணல் கொள்ளை - சரி
உயர் கல்வி - சரி

துணை நகரம் - சரியா?
விமான நிலைய எதிர்ப்பு - சரியா?
கடைசியாக சாவியை பிடுங்குங்கள் என்று கூறுவது சரியா. அதுவும் தனக்கு சொந்தமான இடத்தை மீட்க வரும் அரசாங்க நிறுவனத்தினை எதிர்க்க சொல்வது சரியா?

அதிமுகவின் ஓட்டுக்களை பிரித்து விஜயகாந்த் ஒரு குறிப்பிடும் சக்தியாக கிளம்பி உள்ளார் என்பது உண்மை. தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக அது வளர்ந்து வருவதை கண்டுதான் மருத்துவர் இப்படி நடந்து கொள்கின்றார் என்று நம்புகின்றேன். தினமும் பரபரப்பாக பத்திரிக்கையில் அவரின் பெயர் வெளிவந்தால் மக்களிடையே அவர் கட்சியின் புகழ் ஓங்கும் என்று நினைத்து செயல்படுவதாக எனக்கு தெரிகின்றது.

கட்சி வளர்ச்சிக்காக போராடும் மருத்துவர் ஏன் மத்திய அரசை எதிர்த்து போராட்டங்களை நடத்துவதில்லை? சேலம் கோட்டத்திற்காக போராட்டம் நடத்தலாம். காவிரி மற்றும் பாலாறுக்காக போராட்டம் நடத்தலாம். காங்கிரஸ் கட்சி நாட்டை கெடுத்து வருகின்றது என பேட்டி அளிக்கலாம். ஏன் செய்யவில்லை?

said...

தினமும் அரசை எதிர்க்கும் மருத்துவர் சத்தம் போடாமல் கோ.க.மணியை விட்டு கலைஞரிடம் அவ்வப்போது சமாதானம் பேசுவதும் கட்சியை வளர்க்கும் செயல்தானோ?

said...

பா.ம.க இப்போது மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து செல்வது நல்ல விஷயம் தான்...

ஆனால் எதுக்கெடுத்தாலும் எதிர்ப்பும் சலிப்பூட்டுகிறது...

துணைநகரம் திட்டத்தை எடுத்துக்கொள்ளுங்களேன்...டெல்லிக்கு பக்கத்தில் குர்காவ், நோய்டா போன்ற துணை நகரங்கள் எப்படி அட்டகாசமானதாக உருவாகியுள்ளது பாருங்கள்...அதனால் பொருளாதார முன்னேற்றமா அல்லது பின்னேன்றமா என்று சொல்லுங்கள்...பிறகு ஏன் மருத்துவர் அதை எதிர்க்கிறார் என்ற விளக்கமும் சொல்லுங்கள்...

மணல் அள்ளும் பிரச்சினையில் போராடுவது மிகவும் சரியானது...ஆனால் கட்டிடம் கட்டவேண்டும் என்றால் மணல் தேவைதானே...அதை எங்கே கடலில் போய் அள்ளுவதா ? இல்லை மண்ணை குழைத்து காங்கிரீட் போடுவதா ?

நாடு இண்ப்ராஸ்ட்ரக்சரில், தொலைதொடர்பில் முன்னேறவேண்டுமா இல்லை குடிசைக்குள் விளக்கை வைத்துக்கொண்டு இன்னும் ஐம்பதாண்டுகளுக்கு உட்கார்ந்திருக்கவேண்டுமா ?

அதை விடுங்க...அடுத்ததாக விஜயகாந்த் பற்றி நீங்கள் சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியாது...அம்புட்டும் பொறாமை...( நன்பர் என்றால் கமண்ட் அடிக்காம விட்ருவமா) மதுரை இடைத்தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக கிட்டத்தட்ட இருபதாயிரம் ஓட்டுக்களை அள்ளினாரே கேப்டன்..மக்கள் ஏதோ ஒரு மாற்றத்தை விரும்புவதாக தெரிகிறது...கேப்டனுக்கு தனிப்பட்ட வாக்கு வங்கியும் உருவாகிவிட்டதாக தெரிகிறது...

இனிமே சரிப்பட்டு வராதுங்க..பேசாம டாக்டர் அய்யாவை அம்மையாரிடம் (அல்லது ஏகாம்பரத்திடம்) கூட்டணி வைக்க சொல்லுங்க...இப்போது கவிழப்போகும் மத்திய அரசு தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம்..டெஸ்டிங் செய்வோம்..கூட்டணி ஒர்க்கவுட் ஆகுதா பார்ப்போம்...பெரிய சைஸ் பொக்கே கிடைக்கும் இடம் போயஸ் கார்டன் வரும் வழியில் உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரி அருகில்...(சரியா ? போனமுறை கூட அங்கே தான் வாங்கினார் இல்லையா ? )

அப்புறம் ஒரு விஷயம்...கடைசி பேரா காமெடி செய்துட்டனே என்று அதை மட்டும் வைத்து பதில் சொல்லவேண்டாம்...முதலில் சொன்னதுக்கு பதிலை எதிர்பார்க்கிறேன்..

said...

///கட்சி வளர்ச்சிக்காக போராடும் மருத்துவர் ஏன் மத்திய அரசை எதிர்த்து போராட்டங்களை நடத்துவதில்லை? சேலம் கோட்டத்திற்காக போராட்டம் நடத்தலாம். காவிரி மற்றும் பாலாறுக்காக போராட்டம் நடத்தலாம். காங்கிரஸ் கட்சி நாட்டை கெடுத்து வருகின்றது என பேட்டி அளிக்கலாம். ஏன் செய்யவில்லை? ///

யோவ் அருண்மொழி...குட் ஷாட்...

நானும் இதையே தான் பின்னூட்டமா போட்டேன்...பார்த்தால் நீரும் இதையே டிட்டோ அடித்தமாதிரி ( ஆனால் எனக்கு முன்னாலயே) பின்னூட்டமா போட்டிருக்கீர்...சேம் பிஞ்ச்...!!!

said...

//துணை நகரம் - சரியா?//
நீங்கள் துணை நகரம் சரியா என்கிறீர்கள்? நயணம் என்ன சொல்கிறார் என்றால் //துணை நகரத்தில் கை வைத்தார். அதில் எனக்கு வருத்தமும் இல்லை - மகிழ்ச்சியும் இல்லை.// என்கிறார் இந்த சரி தவறு எல்லாம் ஆளுக்கு ஆள் மாறும், அரசாங்கம் கையகப்படுத்தும் இடத்தில் என் வீடோ நிலமோ இருந்திருந்தால் துணை நகரம் சரியா? தவறா? என்றெல்லாம் கேட்டிருக்கமாட்டேன்... தவறு என்று அடித்து சொல்லியிருப்பேன்... என்.எல்.சியில் அரசாங்கம் கையகப்படுத்தி 30 ஆண்டுகளுக்கு பின்பே பலருக்கும் பணம் கிடத்த வரலாறெல்லாம் இருக்கிறதே...

//விமான நிலைய எதிர்ப்பு - சரியா?//
துணை நகரத்திற்கான பதிலே இதற்கும்...மேலே உள்ள பதிலே சரியாக இருக்கும்

//கடைசியாக சாவியை பிடுங்குங்கள் என்று கூறுவது சரியா.
//
10% மக்களே நிலத்தை அரசாங்கத்திடம் விற்றிருக்கும் நிலையில் மிச்சம் இன்னும் 90% மக்கள் இடத்தை அரசாங்கத்திடம் அளிக்காத நிலையில் புல்டோசர் எடுத்துக்கொண்டு இடிக்க வந்தால் புல்டோசர் சாவியை பிடுங்குவோமா? அல்லது முதல்வர் அலுவலகத்துக்கு மனுபோட்டுக்கொண்டிருப்போமா? இன்னும் அரசாங்கத்திடம் உங்கள் வீட்டை கையளிக்காத நிலையில் புல்டோசரோடு இடிக்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் புல்டோசர் சாவியை பிடுங்குவீர்களா? முதல்வர் செல்லுக்கு மனு போடுவீர்களா?

said...

/துணைநகரம் திட்டத்தை எடுத்துக்கொள்ளுங்களேன்...டெல்லிக்கு பக்கத்தில் குர்காவ், நோய்டா போன்ற துணை நகரங்கள் எப்படி அட்டகாசமானதாக உருவாகியுள்ளது பாருங்கள்...அதனால் பொருளாதார முன்னேற்றமா அல்லது பின்னேன்றமா என்று சொல்லுங்கள்...பிறகு ஏன் மருத்துவர் அதை எதிர்க்கிறார் என்ற விளக்கமும் சொல்லுங்கள்...//

ரவி முதலில் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள், துணை நகரத்திட்டம் என்ற கான்செப்ட்டை பாமக எதிர்க்கவில்லை, நொய்டா போன்ற துணை நகரங்கள் டெல்லி புற நகரிலா இருக்கிறது, 100 கிமீ தள்ளி தானே இருக்கின்றது, அதையே தான் பாமகவும் சொல்கிறது சென்னையை ஒட்டி சென்னை புற நகரில் துணை நகரத்திட்டம் அமைப்பதை விட 100 கிமீ தள்ளி அமையுங்கள் சரியான சாலைவசதியுடன் என்று, இது எப்படி சாத்தியம் என கருத்தரங்கு நடத்தி ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளது....அரசிடம்.... துணை நகரம் என கான்செப்ட்டிற்கு எதிரியல்ல பாமக....

said...

சேலம் கோட்ட பிரச்சினையில் யாரை எதிர்த்து போராடுவது? அதன் துணை அமைச்சரே பாமக தானே இருக்கின்றது, அமைச்சகத்தினுள் போராடிக்கொண்டு தானே இருக்கின்றார்கள்..... தமிழக அமைச்சரின் கையில் துறை இருக்கும்போதே இம்புட்டு கஷ்டம்...

said...

//தினமும் அரசை எதிர்க்கும் மருத்துவர் சத்தம் போடாமல் கோ.க.மணியை விட்டு கலைஞரிடம் அவ்வப்போது சமாதானம் பேசுவதும் கட்சியை வளர்க்கும் செயல்தானோ? //
இது விதண்டாவாதம் அப்படியே திருப்பி கேட்கிறேன் தினமும் இராமதாசை பற்றி புலம்பும் கலைஞர் கோ.க.மணியுடன் பேசுகிறாரே அதன் ரகசியம் என்ன? திமுக அரசின் செயல்பாடுகள் மீது விமர்சனம் வைத்திருக்கிறேன் விவாதம் அப்படி போனால் நன்றாக இருக்கும் இப்படியான அபத்தமான கேள்விகள் கேட்பதைவிட...

said...

குழலி,
நீண்ட நாட்களுக்கு பின் விரிவான பதிவோடு வந்திருக்கீங்க.

கட்சியை வளர்ப்பதற்கு மக்கள் பிரச்சனையில் குரல் கொடுக்கும் உரிமை பற்றி நீங்கள் சொன்னதெல்லாம் சரி தான் .ஆனால் நாளை அம்மாவுக்கு பொக்கே கொடுத்து சகோதரியாக ஏற்றுக்கொண்டு ,ஒரு வேளை மருத்துவர் புண்ணியத்தில் அம்மா ஆட்சி மீண்டும் மலரும் என்றே வைத்துக்கொள்வோம் .கலைஞராவது மருத்துவர் சொல்வதை குறைந்த பட்சம் காது கொடுத்து கேட்கிறார் .அவர் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு தற்காலிகமாகவேனும் ஒரு சில அறிவிப்புகளை திருப்பப் பெற்றிருக்கிறார் . அம்மாவாக இருந்தால் நிலமை என்ன ? நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை .நடக்கட்டும் ..நடக்கட்டும் ..கலைஞர்-ன்னா மட்டும் எல்லோரும் மிரட்ட வேண்டியது ..அம்மா -விடம் மட்டும் வழிய வேண்டியது.கம்யூனிஸ்டுகளே அப்படி இருக்கும் போது மருத்துவர் அய்யாவை சொல்லி என்ன பிரயோஜனம்.

said...

//இப்படியாக கொச்சை படுத்துவதென்றால் எந்த கட்சியின், எந்த தனிமனிதரின், எந்த சமூகத்தின், எந்த அமைப்பின் எந்த போராட்டங்களையும் கொச்சைப்படுத்தலாம்//

Rightunganna

said...

குழலி,
நீண்ட நாட்களுக்கு பின் விரிவான பதிவோடு வந்திருக்கீங்க.

கட்சியை வளர்ப்பதற்கு மக்கள் பிரச்சனையில் குரல் கொடுக்கும் உரிமை பற்றி நீங்கள் சொன்னதெல்லாம் சரி தான் .ஆனால் நாளை அம்மாவுக்கு பொக்கே கொடுத்து சகோதரியாக ஏற்றுக்கொண்டு ,ஒரு வேளை மருத்துவர் புண்ணியத்தில் அம்மா ஆட்சி மீண்டும் மலரும் என்றே வைத்துக்கொள்வோம் .கலைஞராவது மருத்துவர் சொல்வதை குறைந்த பட்சம் காது கொடுத்து கேட்கிறார் .அவர் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு தற்காலிகமாகவேனும் ஒரு சில அறிவிப்புகளை திருப்பப் பெற்றிருக்கிறார் . அம்மாவாக இருந்தால் நிலமை என்ன ? நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை .நடக்கட்டும் ..நடக்கட்டும் ..கலைஞர்-ன்னா மட்டும் எல்லோரும் மிரட்ட வேண்டியது ..அம்மா -விடம் மட்டும் வழிய வேண்டியது.கம்யூணிஸ்டுகளே அப்படி இருக்கு போது மருத்துவர் ஐயாவை சொல்லி பிரயோஜனமில்லை

said...

///கட்சி வளர்ச்சிக்காக போராடும் மருத்துவர் ஏன் மத்திய அரசை எதிர்த்து போராட்டங்களை நடத்துவதில்லை? சேலம் கோட்டத்திற்காக போராட்டம் நடத்தலாம். காவிரி மற்றும் பாலாறுக்காக போராட்டம் நடத்தலாம். காங்கிரஸ் கட்சி நாட்டை கெடுத்து வருகின்றது என பேட்டி அளிக்கலாம். ஏன் செய்யவில்லை? ///

என்ன சின்னபுள்ள தனமால்ல இருக்கு உங்க கேள்வி. . . . . .

மத்திய அமைச்சராக அன்புமனி இருக்காரு அதனால மத்திய அரசை குறை சொல்லவில்லை. . . .

தமிழ்நாட்ல அவங்க ஆட்சிக்கு ஆதரவு தான கொடுக்குறாங்க. . . .

said...

இதையும் படியுங்களேன்

said...

டாக்டர் கலைஞர்: பரதேசி அரசியல் நடத்தும் பா.ம.க.

இந்த பதிவில் இப்படி

"ஆமாம்..பச்சோந்திங்க...நாங்க மட்டும் தான், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பிஜேபி அப்படின்னு மாத்தி மாத்தி வச்சிக்குவோம்.."

ஒரு பின்னூட்டம் போட்டேன்..அதை வெளியிடவில்லை...
அதனால் இங்கு போடுகிறேன்.. நீங்களாவது வெளியிடுங்கள்...

said...

ராமுவின் ஆக்கபூர்வமான எதிர்கட்சி அடையாளம் திமுக'வை இம்சை செய்வதைவிட இருக்குற சீட்டை காப்பாற்றிக்கொள்ளும் பம்மாத்து தான். ஒரு பக்கம் வெற்றிகாந்த் வலுவான போட்டியை முன்னிறுத்த, சவுண்ட் வுட்டாதான் மக்களுக்கு நாம இருக்கிறது தெரியும் என்ற நிலையில் ராம்ஸ் கூவுகிறார்.

அடிப்படை1: வரும் தேர்தலில் அதிமுக அல்லது திமுக'விடம் யார் அதிக சீட்டுக்களை பிடிப்பது என்பதே இரண்டாம்நிலை கட்சிகளின் கவலை. கொடுத்த இடங்களை கோட்டைவிட்டு இப்போது கூப்பாடு போட்டு என்ன பிரயோசனம்.

அடிப்படை2: சன் குழுமம் தாத்தாவால் கைகழுவப்பட்ட பின்பு ராம்ஸ் சத்தம் அதிகமாக இருக்கின்றது. ராம்ஸின் பக்கபலமாக கலாவும், தயாவும் கரன்சிகளை கைமாற்றி திமுக'வின் இமேஜை டேமாஜ் பண்ணும் மேட்டரை... யார்வேண்டுமானாலும் மறக்கலாம் ஆனால் குழலி நீங்க எப்படி மறக்கலாம்... (என்னடா இது கத சொல்ல ஆரம்பிக்ரப்போ இங்கதான இருந்தாரு... அவ்வ்வ்வ்வ்)

said...

//10% மக்களே நிலத்தை அரசாங்கத்திடம் விற்றிருக்கும் நிலையில் மிச்சம் இன்னும் 90% மக்கள் இடத்தை அரசாங்கத்திடம் அளிக்காத நிலையில் புல்டோசர் எடுத்துக்கொண்டு இடிக்க வந்தால் புல்டோசர் சாவியை பிடுங்குவோமா? //

இதற்கு ஆதாரம் இருக்கின்றதா?

எல்லா போராட்டங்களும் சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. அது இங்கே பிரச்சனை இல்லை. எதற்கு எடுத்தாலும் சும்மா நானும் ஒரு பெரிய கட்சி/தலைவர் என்று சவுண்ட் விட்டுக்கொண்டு இருப்பது சரியல்ல என்று சொல்ல வருகின்றேன். போராட்டத்தையாவது தொடர்ந்து நடத்துகின்றார்களா என்றால் இல்லை என்றே கூறுவேன். ரிலையன்ஸ் விவகாரத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கின்றது?

//இது விதண்டாவாதம் அப்படியே திருப்பி கேட்கிறேன் தினமும் இராமதாசை பற்றி புலம்பும் கலைஞர் கோ.க.மணியுடன் பேசுகிறாரே அதன் ரகசியம் என்ன?//

இது விதண்டாவாதம் அல்ல. தொடர் போராட்டம் நடத்தும் ஒரு கட்சியின் நிறுவனர் தன் கட்சி தலைவரை அடிக்கடி முதல்வரை சந்திக்க அனுப்புவது ஏன் என்றுதான் கேட்கின்றேன். விதண்டாவாதம் செய்ய நினைத்தால், அதற்கு வேறு கேள்விகள் நிறைய இருக்கின்றன.

said...

குழலி

இப்பதிவை 'சொந்த செலவில் சூனியம்' என்று நீங்கள் குறிச்சொல் கொடுத்து வகைபடுத்தி இருக்கலாம் :-)))))))

said...

//குழலி

இப்பதிவை 'சொந்த செலவில் சூனியம்' என்று நீங்கள் குறிச்சொல் கொடுத்து வகைபடுத்தி இருக்கலாம் :-)))))))
//
புரிகின்றது என்ன சொல்கின்றீர்கள் என்று, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா :-)

said...

////குழலி

இப்பதிவை 'சொந்த செலவில் சூனியம்' என்று நீங்கள் குறிச்சொல் கொடுத்து வகைபடுத்தி இருக்கலாம் :-)))))))
//
புரிகின்றது என்ன சொல்கின்றீர்கள் என்று, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா :-)//

யோவ் தல, என்னா நெக்கலா?
நானும் ரெம்ப நாளைக்கப்புறம் வேடிக்க பாக்க ஸ்கூல் கிரவுண்டு பக்கம் ஒதுங்கனா இதெல்லாம் சாதா"ரணம்"னு ஒதுங்கறீங்க..செல்லாது செல்லாது...
ஒத்துக்க மாட்டோம்...நல்லா அடிச்சி ஆடுங்க நாங்க வேடிக்கை பாக்கறோம்.

ஒரே ஒரு மேட்டரு...அகில இந்திய அளவுல ரீஜினல் கட்சிகள் கோலோச்சற நேரத்துல மாநில அளவில் கோலோச்சுவது சாதி சார்ந்த கட்சிகள் தான். பாமகவின் ஆரம்பம் சாதி சார்ந்ததாக இருந்தாலும் அதன் வளர்ச்சி சாதியை பின்னிறுத்தியதனாலேயே துவண்டது.
இன்னுமொரு கேள்வி இராமதாசுவை மட்டும் கேள்வி கேட்கும் நடுநிலைவியாதிகள் மற்றும் உடன்பிறப்புக்கள் சற்றே தம் குண்டியைக் கழுவிவிட்டு பிறர் குண்டியில் குச்சி சொருகுவது பற்றி பேசலாம்.

இராமதாசு பொட்டி வாங்கினானா இல்லையா என்பதல்ல இங்கு விடயம்...எங்கூட இருந்தா எங்கூட தான் இருக்கனும் எனக்கு ஜால்ரா போட்டுக்கிட்டு...உங்கள கேள்வி கேட்ட செந்தழல் ரவி அவர் கேள்விலேயே பதில் இருக்கிறது என்பதை வசமாக மறந்து விட்டார் என்பது வேடிக்கை தான்.

அபார்ட் ஃப்ரம் திஸ்...நான் என்ன நினைக்கிறேன்னா...கலைஞரே ராதாசுக்கு பொட்டி கொடுத்து எதிர்க்கட்சிக்காரனுங்க கத்தினானுங்கனா ப்ரஸ் எல்லாம் அவனுங்க பேரை தான் மொத பக்கத்துல போடுவானுங்க அத்தால நீ என்னா பன்னு சொம்மா கத்துறா மாதிரி கத்து நானும் உனுக்கு பதில் சொல்றா மாதிரி சொல்றேன். தலைப்புச் செய்தில நீயும் நானும் மட்டும் தான் இருப்போம் மத்த அல்லைக்கைங்க எல்லாம் அப்பீட்டு ஆய்டும்னு இராசதந்திரம் பண்ணி தான் பண்றதா அறிவாலயத்து கோட்டான் ஒன்னு சொல்லிச்சு.

அத்தோட குடும்ப மேட்டருல தலியிட்ட கோல்டுமுடி காரருக்கு ஆப்பு வெக்கத்தான் இப்போதிய ரெய்டு மற்றும் அவரது தலைமையிலான கருத்தறியும் குழு நாடகமும்னும் இன்னொரு கோட்டான் சொல்லுது...

என்ன எழவோ எந்த பாடுங்க அடிச்சிக்கினா எனக்கென்ன...நீங்க நல்லா அடிச்சி ஆடுங்க...வேடிக்க பாக்க நாங்க இருக்கோம்

பை பை :))

said...

/////ஒரே ஒரு மேட்டரு...அகில இந்திய அளவுல ரீஜினல் கட்சிகள் கோலோச்சற நேரத்துல மாநில அளவில் கோலோச்சுவது சாதி சார்ந்த கட்சிகள் தான். பாமகவின் ஆரம்பம் சாதி சார்ந்ததாக இருந்தாலும் அதன் வளர்ச்சி சாதியை பின்னிறுத்தியதனாலேயே துவண்டது.
இன்னுமொரு கேள்வி இராமதாசுவை மட்டும் கேள்வி கேட்கும் நடுநிலைவியாதிகள் மற்றும் உடன்பிறப்புக்கள் சற்றே தம் குண்டியைக் கழுவிவிட்டு பிறர் குண்டியில் குச்சி சொருகுவது பற்றி பேசலாம். /////

யோவ் பொட்டி, பின்னவீனத்துவம் இல்லாம பேசவே முடியாதா ?


///இராமதாசு பொட்டி வாங்கினானா இல்லையா என்பதல்ல இங்கு விடயம்...எங்கூட இருந்தா எங்கூட தான் இருக்கனும் எனக்கு ஜால்ரா போட்டுக்கிட்டு...உங்கள கேள்வி கேட்ட செந்தழல் ரவி அவர் கேள்விலேயே பதில் இருக்கிறது என்பதை வசமாக மறந்து விட்டார் என்பது வேடிக்கை தான்.///

அது ஏன் குழலிக்கு தெரியாம போச்சு ? சொன்னாத்தானே தெரியும் ?...அது என்ன வசதியா மறக்கறது ? அப்ப வசதி இல்லைன்னா நியாபகம் இருக்குமா ? "சொந்தசெலவுல சூனியம்"
மாதிரி ஒரு செண்டன்ஸ் கிடைக்க கூடாது, எல்லா இடத்துலயும் பயன்படுத்திருவிங்களே...

பொட்டீக்கடை...இருடி இரு...இன்னும் ஒருவாரத்துல கொரியா வறேன்...அப்புறம் ஓட்டுறேன் ஒருநாளைக்கு மூனு தியேட்டர்...அப்போ என்னோட மொக்கையை பாத்து நீயே நொந்து நூடுல்ஸாவனும்...

said...

//
திமுக ஆட்சிக்கு வந்தால் ஐந்து ஆண்டுகளுக்கு அதிமுக எலி வலையில் புகுந்து கொள்ளும், அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுக எலி வலையினுள் புகுந்து கொள்ளும், அம்மாவுக்கு ஒரு பிரச்சினை என்றாலோ அய்யாவை தூக்கி உள்ளே வைத்தாலோ மட்டுமே ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் என்று தூள் பறக்கும், மற்ற நேரங்களில் திமுக ஆட்சியில் அதிமுக என்று ஒன்று இருப்பதோ அதிமுக ஆட்சியில் திமுக என்று ஒன்று இருப்பதோ பெரும்பாலும் தெரியவே வருவதில்லை
//

நண்பர் குழலி,

அரசியல் கட்டுரைகள் நிறைய எழுதும் நீங்கள்
எப்படி இவ்வளவு தவறாக எழுதினீர்கள் என்று வியந்து
போனேன்.

தி.மு.க ஆட்சியில் இருந்தால்
அம்மையார் அரசியலைக் கொஞ்சம் குறைத்துவிட்டு
யாகம் வேள்வி என்று போய்விடுவது உண்மை.

ஆனால், தி.மு.க ஆளுங்கட்சியாக இல்லாதபொழுது
ஒரு நல்ல எதிர்க்கட்சியாக செயல்பட்டே இருந்திருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால், அம்மையார் ஆட்சியில்
இருந்தால் பேராயம், பா.ம.க, தி.க என்ற இவர்கள்
எல்லாம் அவருக்கு கவரி வீசிக் கொண்டு நிற்பார்கள்.

தி.மு.க மட்டுமே எதிர்க்கட்சிப் பணி செய்யும்.

ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் எதிர்க்கட்சிப் பணி
என்ற பெயரில் முகவரி இல்லாத கட்சிகளுக்குக் கூட
முகவரி கிடைத்து விடுவது என்னவோ உண்மைதான்.
(பா.ம.கவை முகவரி இல்லாதவர்கள் என்று சொல்லவில்லை)

//
இனி தமிழகத்தின் எந்த அரசியல் தலைவன் வீட்டிலும் வருமான வரிசோதனையோ எந்த சோதனையுமோ போடமுடியாத மாற்றத்தை உருவாக்கினார் விஜயகாந்த்.
//

உண்மையில் விசயகாந்த்தின் செயல் பாராட்டுக் குரியதுதானா
என்று மறுபரிசீலனை செய்யவும்.

//
கட்டிங்கும் பர்செண்ட்டேஜூம் சரியாக கிடைத்துவிட்டது தான் காரணம் என்பார்களோ? இப்படியாக கொச்சை படுத்துவதென்றால் எந்த கட்சியின், எந்த தனிமனிதரின், எந்த சமூகத்தின், எந்த அமைப்பின் எந்த போராட்டங்களையும் கொச்சைப்படுத்தலாம்.
//

பொதுவாக சிலர் என்ன சொல்கிறார்கள் என்றால்,
"எதிலும் அதிகம் எதிர்பார்ப்பது பா.ம.க - தொகுதி உடன்பாடு
உள்பட." தனது தகுதிக்கு மேலும் ஆசை கொண்ட கட்சியாகவே
பா.ம.க பார்க்கப் படுகிறது என்பது பொதுவான கருத்து.

//
டாடா மினரல் ஆலை வந்தால் தென்மாவட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும் என்று பேசிக்கொண்டிருப்பவர்கள் ஒரு முறை கடலூர் சிப்காட் வளாகத்தை பார்த்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன்,
//

ஐயா, சிப்காட் விதயத்தில் கோளாறு இருக்குமானால்
அது களையப்படவேண்டும். குறைந்தது இனிமேல் அதுமாதிரி
வெறெங்கும் நடவாத மாதிரி பார்த்துக் கொள்ளவேண்டும்.
கோளாறுகளையும் கோணங்கித்தனங்களையும் வைத்துக் கொண்டு
அரசாங்கத்தின் எந்த ஒரு திட்டமும் வெற்றியடைந்து'
மக்களுக்குப் பயனளிக்காது.

டாட்டா தொழிற்சாலை வரும்போது, சிப்காட் போன்ற
இடங்களில் ஏற்பட்ட பட்டறிவைக்கொண்டு பா.ம.க
உள்பட்ட எதிர்க்கட்சிகள் அந்த நிலை டாட்டாவினால்
வந்துவிடக்கூடாது என்பதற்காக அந்தக் குறைகள்
ஏற்படுகின்றனவா என்று பார்த்து அதட்டினால்
அது பயனுள்ளதாக இருக்கும்.

அதைவிட்டு விட்டு, காட்டுத்தனமான எதிர்ப்புகளை
அரசியல் கட்சிகள் செய்யும்போது எரிச்சல்தான் வருகிறது.



//
அரசாங்கமே நடத்தும், எ.எல்.சி. கார்ப்பரேஷனால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் பலருக்கு பணம் கிடைக்காமல்
//

//
ஒரு முறை கடலூர் சிப்காட் வளாகத்தை பார்த்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன்,

//

//
சாராயாத்தை அட சீமசரக்குதாங்க அந்த குடியை அரசாங்கமே ஊற்றிக்கொடுக்க ஆளெடுத்து நடத்துகிறது, கேளிக்கை கேபிள் இணைப்புகளை அரசாங்கம் நடத்துகிறது ஆனால் ஒரு மினரல் ஆலையை தென்மாவட்ட மக்களுக்கு ஏகத்திற்கும் வேலைவாய்ப்பையும் நன்மையையும் விளைவிக்க போவதாக சொல்லப்படும் ஒரு ஆலையை அரசாங்கம் நடத்த முடியவில்லையோ டாடா வந்து நடத்தப்போகிறதாம்? சில ஆயிரம் கோடி கொட்டி இலவச தொலைக்காட்சி வழங்கும் அரசால் ஓராயிரம் கோடி போட்டு இந்த ஆலையை நடத்த முடியலையோ?இதை எதிர்த்தால் கட்சி வளர்க்க பிரச்சினைகளை பயன்படுத்துகிறார்கள் என பாமக மீது பாய்கின்றனர் அப்போ
//

இங்குதாங்க பா.ம.கவின் குழப்பும் அரசியல் அப்படியே
தெரிகிறது. நீங்களே இந்த எடுத்துக்காட்டை கொடுத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

சிப்காட்டும், எ.எல்.சியும் அரசாங்கம் நடத்தியவை.
இது இரண்டுமே மக்களுக்குப் பல பாதகங்களை ஏற்படுத்தியவை.
அப்புறம் ஏன், செஞ்சா அரசாங்கம் செய்யட்டும் ஆனா
டாட்டா செய்யக் கூடாது என்கிறார்கள் பா.ம.கவினர்.

நீங்கள் கொடுத்திருக்கும் தகவலைப் பார்க்கும் போது
அரசாங்கமே நிறைய தவறுகளை செய்திருக்கிறது தெரிகிறது.
பின்னர் ஏன் அந்த அரசாங்கத்தையே செய்யச் சொல்கிறது பா,ம,க?

சிப்காட்டிலும், எ,எல்.சியிலும் நிகழ்ந்து தவறுகள்
டாட்டாவில் நடக்காமல் இருக்கிறதா என்று பார்த்து
அதனைச் சரி செய்யவும், எதிர்க்கவும் செய்தால்
அது பா.ம.கவின் அறிவார்ந்த செயலாகக் கருதலாம்.

அதை விட்டு விட்டு, மறித்து நிற்பது தவறு; அரசாங்கமே நடத்தலாமே என்று சொல்வது திசை திருப்பல்.

//
மக்கள் மன்றத்தில் செல்லும்போது அன்னைக்கு திமுக தான் காரணம் நாங்கள் அல்ல என்றால் அன்னைக்கு நீங்களும் தானே திமுகவோடு வாயை மூடிக்கொண்டு இருந்தீர்கள் என்பார்கள்.

//

:-))) ஆமாங்க,,,, பா.ம.க வின் கோட்டையான
திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற இடங்களில்
இருந்தெல்லாம் வந்து தைலாபுரத்தை முற்றுகை இட்டாலும்
இடுவார்கள் :-)))

//
பாமக எதை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கின்றது என்பதை நன்றாகவே காட்டுகின்றது.
//

இவ்வளவு தெளிவா நீங்க எழுதியிருக்கீங்க. இந்த வரிகளுக்கு
மேலே எழுதினவை எல்லாம் ஒரு சமாளிப்பாகத் தெரிந்தாலும்
இறுதியில் எல்லோரும் சொல்வதைத்தான் அதாவது
"தன்னல சூழ்ச்சி கலந்த கோழை அரசியல்" என்பதைத்தான் நீங்களும் எழுதியிருக்கிறீர்கள்.

முன்னேறட்டும் வாழ்த்துகள்! ஆனால் அது
தமிழ்நாட்டின் நலன்கள் சிலவற்றை காவு கொடுத்துவிடாமல்
நடக்கட்டும்.

நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்

said...

//ஆனால், தி.மு.க ஆளுங்கட்சியாக இல்லாதபொழுது
ஒரு நல்ல எதிர்க்கட்சியாக செயல்பட்டே இருந்திருக்கிறது.//
அய்யா 91-96 மற்றும் 2001-2006ல் திமுக எதிர்கட்சியாக செயல்பட்ட இலட்சணத்தை நன்றாக பார்த்ததாலேயே சொல்கிறேன், அதற்கு முன்பு அது செயல்பட்ட விதம் பற்றி எமக்கு தெரியவில்லை... கலைஞர் கைதுக்கு போராடிய அளவிற்கு வேறு எதற்கும் அவர்கள் போராடி கிழிக்கவில்லை, 91-96லும் 2001-2006ல் அவர்கள் என்ன எதிர்கட்சியாக செயல்பட்டார்கள் என்று பட்டியலிட்டால் தெரிந்து கொள்வேன், இன்னும் விரிவாகவே எழுதலாம், மத மாற்ற தடைசட்டம், ஆடு கோழி பலியிட தடை இவைகளில் சிறு இயக்கங்களான பெரியார் திக, மகஇக போன்றவைகள் எழுப்பிய குரலை கூட திமுக எழுப்பவில்லை, அரசு ஊழியர்களின் மீதான தாக்குதலுக்கு (இதற்கு முக்கிய காரணமே அரசு ஊழியர்கள் பெரும்பாலும் திமுக ஆதரவாளர்கள் என கருதப்பட்டதே) எதிர்கட்சியாக திமுக பொத்திக்கொண்டு தான் இருந்தது, நளினி சிதம்பரம் அவர்கள் நடத்திய சட்டப்போராட்டம் அளவிற்கு கூட திமுக ஒன்றும் செய்யவில்லை.....

திமுகவானாலும் அதிமுக வானாலும் ஆட்சி இருக்கும்போது மட்டுமே செயல்படுகிறார்கள் மற்ற நேரங்களில் அமுக்கியே வாசிக்கிறார்கள் என்ற என் கருத்தில் இப்போதும் மாற்றமில்லை

மற்றைய விடயங்களுக்கும் விரைவில் பதில் தருகிறேன்

நன்றி

said...

indru pala porattangal nadathi, nal thorum seithi thalgalil thanathu peyarai pathithu varum maruthuvar ramados, thannai thamil kavalaraga, kalachara kavalaraga kattikollum ramadoss yen inrum thanthu jathi sangathodu thodarbu kondu ullar, thanathu katchiyel matral sathiyinar yethanai perukku avar idam koduthu ullar, avar nadathum poratangalai parkkum pothu, verum vilambaram mattumthan therigirathu....unmayana akkarai illai...sathan vedham oduvathu pol ullathu.....from udaya

said...

மிகவும் நன்று! உங்களிடமிருந்து மேலும் அதிகமாக இதைப்போன்ற பதிவுகளை எதிர்நோக்குகிறோம்.

இவன்.
முரளிதீர தொண்டைமான் (வீர வன்னியன்)

Please join here and share your thoughts also:
vanniyamurasu.blogspot.com/
facebook.com/group.php?gid=441779975421
facebook.com/group.php?gid=108914565834208