பாலுமகேந்திரா - கறுத்த நாயகிகளின் காதலன், நானும் கூட...

பாலுமகேந்திராவின் நாயகிகள் ஷோபா வில் ஆரம்பித்து அர்ச்சனா, சரிதா, மெளனிகா, ஈஸ்வரிராவ், ரோகினி, பிரியாமணி வரை அத்தனை நாயகிகளையும் எனக்கும் மிகவும் பிடிக்கும். கறுத்த பெண்களின் மீதான ஈர்ப்பும் அதிகம். இந்த விசயத்தில் பாலுமகேந்திராவின் கண்களும் என் கண்களும் ஒன்றே.

பாலு மகேந்திரா என்றால் எனக்கு எதையும் விட அழியாத கோலங்களும், வண்ண வண்ண பூக்களும், ராமன் அப்துல்லாவுமே எனக்கு நினைவுக்கு வரும், இந்த மூன்று படங்களுமே பாலுமகேந்திராவின் தோல்வி படங்கள் என்றாலும் எனக்கு நெருக்கமான படங்கள்.

ஷோபா என்னை சுற்றி சுற்றி பறந்து என் மேல் அமர்ந்த வண்ணத்துப்பூச்சி என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார், மெளனிகா என்ற இன்னொரு வண்ணத்துப்பூச்சி சுற்றி வந்தபோது அதை விரட்டி விடாமல் விட்டுவிட்டாரே இந்த மனுசன் என்றும் தோன்றியது, வலிகள் என்னவோ எப்போதும் வண்ணத்துப்பூச்சிகளுக்கு தான்.

In the end, only three things matter:

how much you loved,
how gently you lived,
and how gracefully you let go of things not meant for you.

பாலுமகேந்திரா சில வண்ணத்துப்பூச்சிகளை விரட்டிவிட்டிருக்கலாம் அவைகள் அவர் மீது உட்கார ஆசைப்பட்டிருந்தாலும்.