தமிழிசை - விகடன் தலையங்கம்

27-12-2006 வெளியான ஆனந்த விகடன் இதழின் தலையங்கம் தமிழிசை பற்றி எழுதப்பட்டுள்ளது, டிசம்பர் மேடைகளில் தமிழ்ப் பாட்டு 'துக்கடா' தான்!
என்று ஆதங்கத்தோடு வெறும் தலையங்கம் எழுதுவதோடு விகடன் நின்றுவிடாமல் தமிழிசை பற்றிய செய்திகளுக்கும் விமர்சனங்களுக்கும் டிசம்பர் மாத கச்சேரிகளுக்கு பக்கம் பக்கமாக இடம் ஒதுக்கி நிகழ்ச்சி விமர்சனங்கள், கர்நாடக சங்கீத பாடகர் பாடகிகளின் பேட்டிகள் , நிகழ்ச்சி நிரல்கள் போன்றவற்றை வெளியிடுவது போல தமிழிசைக்கும், தமிழிசை கலைஞர்களுக்கும் விகடன் செய்யவேண்டும், விகடன் தருமா தமிழிசைக்கு இடம்? காத்திருக்கிறோம் தமிழிசை தலையங்கத்தோடு நிற்கிறதா? உள் பக்கங்களிலும் செல்கிறதா என்று, விகடனின் இந்த தலையங்கத்திற்கு முதலில் நன்றி


தமிழிசையை முன்னிறுத்திக் கச்சேரிகள் நடக்க வேண்டும் என உருக்கமாக வேண்டுகோள் வைத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

காலகாலமாகக் காற்றில் கலந்துவரும் ஆதங்கக் குரல் இது. ஆனாலும், டிசம்பர் மேடைகளில் தமிழ்ப் பாட்டு 'துக்கடா'தான்!

வயிற்றுப் பசிக்கு வழியில்லாதவர்கள் வேறு வீட்டில் கையேந்தலாம். அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமல்லவா நம் தமிழ்!

தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திருவெம்பாவை தராத மயக்கத்தை வேறு எந்த மொழிப் பாடல் தந்துவிடும்? சங்க காலம் தொட்டு சுப்ரமணிய பாரதி காலம் வரை... தெய்வ பக்திப் பாடல் தொடங்கி தேச பக்திப் பாடல் வரை... ஊனுக்கும் உயிருக்கும் இன்பம் சேர்க்கும் பாடல் வரிகளுக்கா பஞ்சம்?

பல்லவி, அனு பல்லவி, சரணம் என்ற கட்டுக்கோப்பான மேடைக் கச்சேரி வடிவத்தின் முன்னோடியான முத்துத்தாண்டவர் பாடல்களை எங்கே தொலைத்தோம்? "ஆடிக் கொண்டார் & அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ" என்ற அவரது பாடலைக் கேட்டால் ஆடாத தலையும் இருக்க முடியுமா, என்ன?

மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர், ஊத்துக்காடு வேங்கட சுப்பையர், பாபநாசம் சிவன் ஆகியோரின் வார்த்தை மகுடிகளை எடுத்து ஊதினால் மயங்காத இதயம் எது?

தமிழ் விளக்கை சுடர்விடச் செய்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை, குணங்குடி மஸ்தான் சாகிபு, பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் பாடல்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாமே..!

இசை தாகம் கொண்ட எவருக்கும் மொழிகளைத் தாண்டிய நாட்டம் இருப்பது இயல்புதான். ஆனால், மண்ணின் மொழியாம் தமிழைத் தள்ளி வைத்தால் நிஜமான தாகம் எப்படித் தணியும்?

சிந்தனை செய் மனமே..!

சிங்கப்பூரில் பொங்குதமிழ்ப் பண்ணிசை விழா

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழில் இசையை நடுவில் வைத்து அழகு பார்த்தது தமிழ், ஆனால் இன்று தமிழர்களிடத்திலே இசையில் தமிழில்லாமல் வேற்று மொழிகள் ஆக்கிரமித்து விட்டன, இந்த நிலையை மாற்றி 'ஆதி' இசையான தமிழிசை மீண்டும் புத்துயிர் பெற்று வருவதற்கு முக்கிய காரணம் மருத்துவர் இராமதாசு அவர்கள் நிறுவனராக இருக்கும் "பொங்குதமிழ்ப் பண்ணிசை மன்றம்" சார்பில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழிசை விழாக்கள். இவ்விழாக்கள் தமிழகமெங்கும் மற்றும் இந்தியாவின் பெரு நகரங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது, கடல் கடந்து வெளிநாடுகளில் முதன் முதலாக சிங்கப்பூரில் இயேசு பிறந்த நன்னாளாம் கிறிஸ்த்துமஸ் தினமான டிசம்பர் 25 அன்று மாலை காலாங் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

கடந்த சில நாட்களாக சிங்கப்பூர் தமிழ் நாளேடான "தமிழ் முரசு"விலும் சிங்கப்பூர் வானொலியிலும் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன, மாலை ஆறு மணி சில நிமிடங்களில் மருத்துவர் இராமதாசு இந் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அரங்கினுள் நுழைந்தார், ஆதி இசையாம் தமிழிசை மழையில் நனைய வான் மழையும் வந்து சேர்ந்ததால் தமிழிசை நிகழ்ச்சி ஆரம்பிக்க சிறிது நேரமானது, கவிஞரும் எழுத்தாளருமான பிச்சினிக்காடு இளங்கோ அவர்களும் அவரோடு இணைந்து சிங்கப்பூர் வானொலி சேவை ஒலி 96.8ன் அறிவிப்பாளர் திருமதி மீனாட்சி சபாபதி அவர்களும் இந் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.

கவிஞர் இனியதாசனின் தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடலோடு விழா இனிதாக ஆரம்பித்தது, திருமதி.மீனாட்சி சபாபதி அவர்கள் தமிழிசை பற்றிய பல தகவல்களோடும் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ இன்றைக்கு கர்நாடக சங்கீதத்தில் உள்ள கீர்த்தனைகளுக்கு முன்னோடியாக தேவாரப்பாடல்கள் அமைந்தன என்றும், ராகங்கள் என்று அழைக்கப்படுபனவையெல்லாம் தமிழிசையிலே முன்பே இருந்தவை என்றும் அவைகள் யாழ்,பண்,பாலை என்றழைக்கப்பட்டன, இரண்டாம் நூற்றாண்டில் அரும்பாலை என்று கோவலன் வாசித்ததுன் இன்று சங்கராபரணம் என்று வழங்கப்படுகிறது என்றும் மேலும் பல தமிழிசை பற்றிய தகவல்களோடு நிகழ்ச்சியை சுவையோடும் பொருளோடும் தொகுத்து வழங்கினார்கள்.

பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் தலைவர் திரு.ஜே.வி.கண்ணன் அவர்களின் தொடக்க உரையை தொடர்ந்து தேவார இசைமணி பழனி சண்முகசுந்தர தேசிகர் மற்றும் தேவார இசைமணி கரூர் சுவாமிநாதன் அவர்களின் மூவர் தேவாரம், திருவாசகப்பாடல்கள் அரங்கிலுள்ளோர் உள்ளம் உருகப் பாடினார்கள்.





திருமதி டி.கே.கலா திருவருட்பா பாடல்களையும் பாரதியார் பாடல்களையும் அரங்கம் ரசிக்க பலத்த கைதட்டல்களோடு பாடினார்.









சித்தர் பாடல்களில் உள்ள அறிவியல், திருமூலத்தில் சொல்லப்பட்டிருக்கும் யோகாசனக்கலை பற்றிய பல அரிய தகவல்களோடு பண்ணிசைப்பாணர் மா.கோடிலிங்கம் அவர்கள் திவ்யபிரபந்தம், சித்தர் பாடல்கள், குனங்குடி மஸ்தான் பாடல்களை பாடினார், "ஆடு பாம்பே" பாடல் பலத்த ஆரவாரத்தை ஏற்படுத்தியது.



தமிழிசையில் ஆய்வு செய்திருக்கும், லால்குடி ஜெயராமன் அவர்களின் மாணவியுமான திருமதி.சங்கரி கிருஷ்ணன் அவர்கள் மும்மூர்த்திகளின் முன் மூர்த்திகளான முத்துத்தாண்டவர், அருணாச்சலக் கவிராயர் மற்றும் கோபாலகிருஷ்ண பாரதியார் கீர்த்தனைகள் பாடினார்

பெரும்பாண நங்கை பட்டம் பெற்றவரும், திருச்சி காவேரி நுண்கலை கல்லூரியின் முதல்வருமான அருட்சகோதரி மார்கரெட் பாஸ்டின் குழுவினர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை மற்றும் வீரமாமுனிவர் பாடல்களை பாடினார்

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக மக்கள் இசையான நாட்டுப்புற இசையை பாடினார் இசையில் முனைவர் பட்டம் பெற்ற திரு.மதுரை சந்திரன், இவரின் பாடல்கள் அரங்கத்தில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது, கிராமிய காதல் பாடல்கள், காசு பணம் பற்றிய பாடல்களோடு "கத்திரிக்காய்க்கு குடை பிடிக்க கத்துக்கொடுத்தது யாரு" என்று தொடங்கும் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாடல்களும், நம் நெஞ்சில் நீங்க துயராக இருக்கும் கும்பகோணம் பள்ளி எரிந்தது மற்றும் இயற்கை பேரிடரான சுனாமி சோகத்தையும் பற்றிய பாடல்கள் நெஞ்சைப்பிழிய வைத்தன.

நிகழ்ச்சியின் இறுதி கட்டமாக தலைவர்களின் உரை அமைந்தது, பொங்குதமிழ்ப் பண்ணிசை மணிமன்றத்தின் பொதுச்செயலாளர் வரவேற்புரை வழங்கினார், அவரைத்தொடர்ந்து திரு.ஜே.வி.கண்ணன், திரு.எஸ்.எம்.ஃபாருக், திரு.எஸ்.குலாம், பேராசிரியர் திருமிகு.திண்ணப்பன், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்தியத்தொடர்வண்டித்துறை முன்னாள் அமைச்சர் திருமிகு.ஆ.கி.மூர்த்தி மற்றும் திருமிகு.கணேஷ் கண்ணன் ஆகியோர் உரையாற்றினார்.

இறுதியாக பொங்குதமிழ்ப் பண்ணிசை மன்றத்தின் நிறுவனரும் விழாவின் சிறப்பு விருந்தினருமான மருத்துவர் இராமதாசு அவர்கள் சிறப்புரையாற்றினார், இயேசு பிரான் அவதரித்த நன்னாள் வாழ்த்து கூறி தன் உரையை ஆரம்பித்தார்,தமிழிசையின் தற்போதைய நிலை அதன் பெருமைகளை மீட்டெடுக்கும் செயல்பாடுகள் பற்றி விரிவாக தம் பேச்சில்

பல்வேறு இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் அனைவருக்கும் அவரவர்கள் உரிமையை கொடுத்து அவரவர்கள் மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் நல் அரசாக இருக்கும் சிங்கப்பூர் அரசை மக்கள் அரசு என்று பாராட்டினார்.

இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பொக்கிஷங்களை உள்ளடக்கிய தேவாரம் திருவாசகம் பாடல்கள் இன்றைய இளைஞர்களை சென்று சேராததற்கு காரணம் நம்முடைய பெரியவர்கள் அதை நம் இளைஞர்களுக்கு படிப்பிக்காததுவேயாகும் அதனால் வரும் தலைமுறைக்கு உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு இவைகளை கற்றுக்கொடுங்கள், அவர்களுக்கு இந்த பண்ணிசையை சேர்ப்பியுங்கள் என்றார்.

6 வயதிலிருந்து ஏன் 4 வயதிலிருந்து பண்ணிசையை தமிழிசையை குழந்தைகளுக்கு படிப்பியுங்கள், 6 வயதிலிருந்து +2 வரை தமிழிசை ஒரு கட்டாயப்பாடமாக வைக்கப்பட வேண்டும் அதற்கு நூறு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டுமென்று கூறினார். ஐரோப்பா மற்றும் கனடாவில்உள்ள ஈழத்தமிழர்கள் சனி, ஞாயிறுகளிலே தமிழ்ப்பண்ணிசையை அவர்களே பள்ளிக்கூடங்கள் வைத்து பயிற்றுவிக்கின்றனர், அதனாலேயே ஈழத்தமிழர்களுக்கு இதில் மிக்க ஆர்வம் இருக்கின்றது, இதே போல் இங்கிருக்கும் தமிழர்களும் செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ்ப்பண்ணிசையை இங்கே அறிமுகப்படுத்தியதற்கு காரணம் இங்கே யார் யாரோ வந்து இசை என்ற பெயரிலே ஆடியிருப்பார்கள், பாடியிருப்பார்கள் அதனால் இப்படியான இசையை அறிமுகப்படுத்த விரும்பினோம்.

தமிழகத்திலிருக்கும் இளைஞர்களிடம் இன்று இயல் என்றால் திரைப்பட வசனங்கள், இசை என்றால் திரைப்பட இசை, நாடகமென்றால் திரைப்படங்கள், ஓவியமென்றால் திரைப்பட விளம்பர சுவரொட்டிகள், கலாச்சாரம், வாழ்க்கை நெறி எல்லாமே திரைப்படங்கள் தான் என்ற நிலை இருக்கின்றது, எதிர்கால தமிழகத்தை உயர்த்தி பிடிக்க வேண்டிய இளைஞர்கள், பொக்கிசமாக இருக்க வேண்டிய இளைஞர்கள் திரைப்பட மோகத்தில் எங்கோ தறிகெட்டுப்போய் கொண்டிருக்கின்றார்கள், இந்த நிலை மாற வேண்டும், இளைஞர்கள் நல்வழிப்பட வேண்டுமென்று தொடர்ந்து கூறிவருகின்றோம், பொங்குதமிழ் அறக்கட்டளையின் ஒரு அங்கமாக பொங்குதமிழ் பண்ணிசை மணி மன்றம் அமைத்து மற்றவர்களிடமிருந்து தமிழிசையை மீட்டுக்கொண்டிருக்கின்றோம், தமிழகத்திலே சென்னையிலே 150 சபாக்கள் உள்ளன, ஆனால் அங்கேயெல்லாம் தெலுங்கு பாடல்களும் வடமொழிப்பாடல்களும் பாடப்படுகின்றன, தமிழ் பாடல்கள் வெறும் துக்கடாவாக பாடப்படுகின்றன, அந்த நிலை மாற வேண்டுமென்றார், பண்ணிசை ஆய்வுகள் பற்றிய கருத்துகள் ஒரு நாள் அல்லது அரை நாள் வரும் காலங்களில் பட்டறையாக நடத்தப்படுமென்றார். பிறப்பிலிருந்து இறப்புவரை நம்மோடு இருக்கும் தமிழிசை அழிந்து வருவதற்கு இன்றைய திரைப்படங்களே முக்கிய காரணமாக இருக்கின்றன, இதிலிருந்து தமிழிசையை மீட்டெடுக்கின்றோம் என்றார், மக்களின் மனங்களை பண்படுத்த வேண்டும், திரைப்படத்தின் தாக்கம் இல்லாமல் மக்களுக்காக மக்கள் தொலைக்காட்சியை நடத்தி வருகின்றோம், மேலும் நல்ல தமிழிற்கு தமிழோசை பத்திரிக்கையை நடத்தி வருகின்றோம் என்று பேசினார், தமிழிசை விழாவை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் நன்றி கூறி தம் உரையை முடித்தார்.

மேலும் படங்கள் இந்த சுட்டியில்

இது தொடர்பான பிற சுட்டிகள்

கோவிக்கண்ணன் சிங்கப்பூரில் பொங்குதமிழ் பண்ணிசை பெருவிழா

தமிழ் இசைக்காக சிங்கப்பூர் வரும் மருத்துவர் இராமதாசு

ஹரிகரனின் (ட)தமிழி(ளி)(லி)சை வாங்கலியோ சாமி

தமிழ் இசைக்காக சிங்கப்பூர் வரும் மருத்துவர் இராமதாசு

இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழ்களில் நாடகத்தை இன்றைய தொலைக்காட்சி, திரைப்பட வியாபார, கலாச்சார சீரழிவுகளிடம் காவு கொடுத்துவிட்டு இருக்கிறோம், இசையையோ கர்நாடக சங்கீதத்திடமும், டிசம்பர் மாத கச்சேரி கான சபைகளிடமும் பறி கொடுத்துவிட்டு அங்கே புரியாத மொழிகள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்க நாமோ அய்யோ தமிழில் பாடுங்கள் என்று கெஞ்சி, கதறிக்கொண்டிருந்தோம், அது தான் துக்கடா பாடுகிறோமே அது போதாதா என்று திமிரெடுக்க பேசிக்கொண்டிருக்கின்றார்கள் அந்த கும்பல். இசையில் தமிழின் இடம் தமிழகத்திலேயே துக்கடாவாகிப்போனது.

தமிழ் மண்ணின் இசை போராட்டங்களுக்கான இசை, வலியோர் தம்மை எதிர்த்து போராடும் சக்தியை அளிக்கும் இசை, ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தூண்டும் இசை, பறை முழக்கம் எழுப்பிவிடும் போராட்ட சக்தி வேறெந்த தோல்கருவிக்கு இருக்கின்றது? கொம்பு முழக்கம் ஏற்படுத்தும் உணர்சி கொதிப்பு வெறெந்த கருவிக்கு இருக்கின்றது? போராட்டங்களே வாழ்க்கையாகிப்போன எம் மக்களின் இசையும் இப்போது போராடிக்கொண்டிருக்கின்றது ஆதிக்க சக்திகளோடு.

ஆண்மீகத்திற்கு தேவாரம், திருவாசகம், திருவருட்பா, திவ்யபிரபந்தம், மனதை மயக்கும் காவடிச்சிந்து, காதல், வீரம், வாழ்க்கை, போராட்டம் என நாட்டுப்புறப்பாடல்கள், பாரதி, பாரதிதாசனின் சமூக பாடல்கள் என அத்தனையும் இருக்கும் எம் தமிழை துக்கடாவாக்கி வைத்திருக்கும் டிசம்பர் கச்சேரி கும்பலிடமிருந்து மீட்டெடுக்கும் போராட்டம் இப்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்திலே மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் நிறுவிய "பொங்கு தமிழ் பண்ணிசை மணி மன்றம்" சார்பில் தமிழிசை விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன, துக்கடாவாகிப்போன எம் மண்ணின் இசை மீட்கப்பட்டுக்கொண்டிருகின்றது, வழக்கம்போல புரியாமல் தலையாட்டும் டிசம்பர் மாத கச்சேரி கான சபைகளுக்கு பக்கம் பக்கமாக ஒதுக்கும் பத்திரிக்கைகள் தமிழிசை விழாக்களுக்கு துக்கடா இடமே தருகின்றன, இதையெல்லாம் மீறித்தான் தமிழிசை விழாக்கள் இன்று மக்களின் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் நிறுவிய "பொங்கு தமிழ் பண்ணிசை மணி மன்றம்" சார்பில் இந்தியாவிற்கு வெளியே முதன்முறையாக சிங்கப்பூரில் பண்ணிசைப்பெருவிழா நடைபெறவிருக்கின்றது, டிசம்பர் மாதம் 25ம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் காலாங் அரங்கில் நடைபெறும் பண்ணிசைப்பெருவிழாவில் மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

சிங்கப்பூரின் இன்றைய தமிழ்முரசு இதழிலிருந்து விழாவை பற்றிய குறிப்புகள்
தமிழகத்துக்கு வெளியே பொங்குதமிழ்ப் பண்ணிசை மணி மன்றத்தின் பண்ணிசை பெருவிழா வெளிநாட்டில் சிங்கப்பூரில் நடை பெறுவது இதுவே முதல் முறை.நிகழ்ச்சியைப் பற்றி கருத்துரைத்த பிச்சினிக்காடு இளங்கோ, "தமிழ் இசையை முதன்மைப்படுத்துவதே நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். தொன்மைமிகு தமிழ் இசைதான் இன்றைய கர்நாடக இசைக்கு அடிப்படை" என்றார்.

தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம், திருவருட்பா போன்ற பாடல்கள் தமிழிசையில் பாடப்படும், கேட்போரை மயங்கவைக்கும் காவடிச்சிந்து பாடல்கள் அன்றைய நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக இருக்கும். பாரதி, பாரதிதாசன் பாடல்களை திரைப்படப்பாடகி டி.கே.கலா பாடுகிறார், மக்கள் வாழ்க்கையோடு இணைந்த நாட்டுப்புறப் பாடல்களை வைகை பிரபா குழுவினர் பாடுகின்றார்கள். வீரமாமுனிவர் பாடல்கள், குணங்குடி மஸ்தான் மெய்ஞானபாடல்கள் மூலம் திரு இராஜா முகம்மது மெய்மறக்கச் செய்வார். தமிழிசைக்கு முழுக்க முழுக்க தமிழ் இசைக் கருவிகள் பயன்படுத்தப்படும்.

இதுவரை சிங்கப்பூரில் நடைபெறாத புதுமையான இசை நிகழ்ச்சியாகவும் இந் நிகழ்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரின் இன்டர்நேஷனல் மீடியா கன்சல்டன்சி என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் தமிழ் இசை நிகழ்ச்சியில் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பல பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் என்று அந்நிறு வனத்தின் நிகழ்ச்சி நிர்வாகி திரு டேவிட் மார்ட்டின் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச் சீட்டு களுக்கு இன்டர்நேஷனல் மீடியா கன்சல் டன்சி( 6377 1980), புளூ டைமண்ட் உண வகம், கோமள விலாஸ் அல்லது சங்கம் டெக்ஸ்டைல்சுடன் தொடர்பு கொள்ளலாம்.

மருத்துவர் அய்யா இராமதாசுவுடன் மேலும் 15 சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

டிசம்பர் மாத கச்சேரி கும்பலிடமிருந்து தமிழிசையை மீட்டெடுக்கும் மருத்துவர் அய்யா இராமதாசு கலாச்சார சீரழிவு தொலைக்காட்சிகள், திரைப்படங்களிடமிருந்து நாடகத்தமிழையும் மீட்டெடுக்கும் விதமாக "மக்கள் தொலைக்காட்சி"யை உருவாக்கி நடத்திக்கொண்டிருக்கின்றார், மருத்துவர் அய்யா இராமதாசின் தமிழ்ப்பணியும் அடிமைபட்டுப்போன தமிழை மீட்டெடுக்கும் களப்போராட்டமும் வெற்றி முகம் காண ஆரம்பித்துள்ளது, மருத்துவர் அய்யா இராமதாசுவின் இப்பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகின்றேன்.

நேரம் : மாலை 6.00 மணி
நாள் : திங்கள் 25 டிசம்பர் 2006
இடம் : காலாங் அரங்கம், சிங்கப்பூர்

தமிழ் இசைக்காக சிங்கப்பூர் வரும் மருத்துவர் இராமதாசு

இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழ்களில் நாடகத்தை இன்றைய தொலைக்காட்சி, திரைப்பட வியாபார, கலாச்சார சீரழிவுகளிடம் காவு கொடுத்துவிட்டு இருக்கிறோம், இசையையோ கர்நாடக சங்கீதத்திடமும், டிசம்பர் மாத கச்சேரி கான சபைகளிடமும் பறி கொடுத்துவிட்டு அங்கே புரியாத மொழிகள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்க நாமோ அய்யோ தமிழில் பாடுங்கள் என்று கெஞ்சி, கதறிக்கொண்டிருந்தோம், அது தான் துக்கடா பாடுகிறோமே அது போதாதா என்று திமிரெடுக்க பேசிக்கொண்டிருக்கின்றார்கள் அந்த கும்பல். இசையில் தமிழின் இடம் தமிழகத்திலேயே துக்கடாவாகிப்போனது.

தமிழ் மண்ணின் இசை போராட்டங்களுக்கான இசை, வலியோர் தம்மை எதிர்த்து போராடும் சக்தியை அளிக்கும் இசை, ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தூண்டும் இசை, பறை முழக்கம் எழுப்பிவிடும் போராட்ட சக்தி வேறெந்த தோல்கருவிக்கு இருக்கின்றது? கொம்பு முழக்கம் ஏற்படுத்தும் உணர்சி கொதிப்பு வெறெந்த கருவிக்கு இருக்கின்றது? போராட்டங்களே வாழ்க்கையாகிப்போன எம் மக்களின் இசையும் இப்போது போராடிக்கொண்டிருக்கின்றது ஆதிக்க சக்திகளோடு.

ஆண்மீகத்திற்கு தேவாரம், திருவாசகம், திருவருட்பா, திவ்யபிரபந்தம், மனதை மயக்கும் காவடிச்சிந்து, காதல், வீரம், வாழ்க்கை, போராட்டம் என நாட்டுப்புறப்பாடல்கள், பாரதி, பாரதிதாசனின் சமூக பாடல்கள் என அத்தனையும் இருக்கும் எம் தமிழை துக்கடாவாக்கி வைத்திருக்கும் டிசம்பர் கச்சேரி கும்பலிடமிருந்து மீட்டெடுக்கும் போராட்டம் இப்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்திலே மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் நிறுவிய "பொங்கு தமிழ் பண்ணிசை மணி மன்றம்" சார்பில் தமிழிசை விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன, துக்கடாவாகிப்போன எம் மண்ணின் இசை மீட்கப்பட்டுக்கொண்டிருகின்றது, வழக்கம்போல புரியாமல் தலையாட்டும் டிசம்பர் மாத கச்சேரி கான சபைகளுக்கு பக்கம் பக்கமாக ஒதுக்கும் பத்திரிக்கைகள் தமிழிசை விழாக்களுக்கு துக்கடா இடமே தருகின்றன, இதையெல்லாம் மீறித்தான் தமிழிசை விழாக்கள் இன்று மக்களின் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் நிறுவிய "பொங்கு தமிழ் பண்ணிசை மணி மன்றம்" சார்பில் இந்தியாவிற்கு வெளியே முதன்முறையாக சிங்கப்பூரில் பண்ணிசைப்பெருவிழா நடைபெறவிருக்கின்றது, டிசம்பர் மாதம் 25ம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் காலாங் அரங்கில் நடைபெறும் பண்ணிசைப்பெருவிழாவில் மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

சிங்கப்பூரின் இன்றைய தமிழ்முரசு இதழிலிருந்து விழாவை பற்றிய குறிப்புகள்
தமிழகத்துக்கு வெளியே பொங்குதமிழ்ப் பண்ணிசை மணி மன்றத்தின் பண்ணிசை பெருவிழா வெளிநாட்டில் சிங்கப்பூரில் நடை பெறுவது இதுவே முதல் முறை.நிகழ்ச்சியைப் பற்றி கருத்துரைத்த பிச்சினிக்காடு இளங்கோ, "தமிழ் இசையை முதன்மைப்படுத்துவதே நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். தொன்மைமிகு தமிழ் இசைதான் இன்றைய கர்நாடக இசைக்கு அடிப்படை" என்றார்.

தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம், திருவருட்பா போன்ற பாடல்கள் தமிழிசையில் பாடப்படும், கேட்போரை மயங்கவைக்கும் காவடிச்சிந்து பாடல்கள் அன்றைய நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக இருக்கும். பாரதி, பாரதிதாசன் பாடல்களை திரைப்படப்பாடகி டி.கே.கலா பாடுகிறார், மக்கள் வாழ்க்கையோடு இணைந்த நாட்டுப்புறப் பாடல்களை வைகை பிரபா குழுவினர் பாடுகின்றார்கள். வீரமாமுனிவர் பாடல்கள், குணங்குடி மஸ்தான் மெய்ஞானபாடல்கள் மூலம் திரு இராஜா முகம்மது மெய்மறக்கச் செய்வார். தமிழிசைக்கு முழுக்க முழுக்க தமிழ் இசைக் கருவிகள் பயன்படுத்தப்படும்.

இதுவரை சிங்கப்பூரில் நடைபெறாத புதுமையான இசை நிகழ்ச்சியாகவும் இந் நிகழ்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரின் இன்டர்நேஷனல் மீடியா கன்சல்டன்சி என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் தமிழ் இசை நிகழ்ச்சியில் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பல பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் என்று அந்நிறு வனத்தின் நிகழ்ச்சி நிர்வாகி திரு டேவிட் மார்ட்டின் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச் சீட்டு களுக்கு இன்டர்நேஷனல் மீடியா கன்சல் டன்சி( 6377 1980), புளூ டைமண்ட் உண வகம், கோமள விலாஸ் அல்லது சங்கம் டெக்ஸ்டைல்சுடன் தொடர்பு கொள்ளலாம்.

மருத்துவர் அய்யா இராமதாசுவுடன் மேலும் 15 சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

டிசம்பர் மாத கச்சேரி கும்பலிடமிருந்து தமிழிசையை மீட்டெடுக்கும் மருத்துவர் அய்யா இராமதாசு கலாச்சார சீரழிவு தொலைக்காட்சிகள், திரைப்படங்களிடமிருந்து நாடகத்தமிழையும் மீட்டெடுக்கும் விதமாக "மக்கள் தொலைக்காட்சி"யை உருவாக்கி நடத்திக்கொண்டிருக்கின்றார், மருத்துவர் அய்யா இராமதாசின் தமிழ்ப்பணியும் அடிமைபட்டுப்போன தமிழை மீட்டெடுக்கும் களப்போராட்டமும் வெற்றி முகம் காண ஆரம்பித்துள்ளது, மருத்துவர் அய்யா இராமதாசுவின் இப்பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகின்றேன்.

நேரம் : மாலை 6.00 மணி
நாள் : திங்கள் 25 டிசம்பர் 2006
இடம் : காலாங் அரங்கம், சிங்கப்பூர்

கருத்தடை டாட் காம்

பொதுவாகவே பாமரனின் எழுத்தில் நக்கல் நையாண்டி கொஞ்சம் விளையாடும்.... தங்களுடைய ஆதிக்கத்தை தக்கவைக்க எந்த அளவிற்கும் செல்வார்கள் என்பதை சமீபத்திய தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் வெளியிட்ட புள்ளிவிபரத்தை பற்றி விழிப்புணர்வு இதழில் எழுதியுள்ளார் பாமரன், கீற்று இணையதளத்தில் வெளிவந்துள்ள இந்த கட்டுரை உங்களின் பார்வைக்கு.

"பொதுவாக புளுகுகளை இப்படிப் பிரிக்கலாம். ஒன்று : அண்டப்புளுகு. அடுத்து ஆகாசப்புளுகு. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி மாபெரும் புளுகு ஒன்றும் இருக்கிறது. அதுதான் புள்ளிவிவரப் புளுகு."
- காட்கோ வாலிஸ்

மொத்தத்தில் ஒரு இனமே கூட்டம் கூட்டமாக செத்துப் போயிற்றா அல்லது காணாமல் போயிற்றா என்கிற பெரும் குழப்பத்தைத் தோற்றுவிக்கிறது ஒரு புள்ளி விவரம். பல கணித மேதைகளையே விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகின்ற ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டிருக்கிறது தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் அதாவது---

இதை ஒவ்வொரு முறையும் தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் என நீட்டி முழக்க இயலாது. ஆகையால் இனி அது தே.மா.க.க என்று அழைக்கக்கடவதாக. அப்படி என்னதான் புள்ளி விவரத்தைச் சொல்லித் தொலைத்தது அது? என நீங்கள் அவசரப்படுவது புரிகிறது. ஆனால் தே.மா.க.க. கணக்குப்படி ஒன்று நீங்கள் சொந்த செலவில் செத்துப் போனவராக இருக்க வேண்டும் அல்லது எங்காவது தொலைந்து போயிருக்க வேண்டும்.

அதாவது நீங்கள் பிற்படுத்தப்பட்டவர் என்றால்....

ஆம் இந்த ஒரு மாதிரியான கணக்கெடுப்பின் மூலம் அப்புள்ளி விவரம் சொல்வது இதுதான் :

இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை வெறும் 41 சதவீதமோ 31 சதவீதமோ எதுவாயிருந்தால் என்ன?

கிடைப்பது கிடைத்தால் சரி என எவராவது தேமே என்று இருந்தால் வந்தது வம்பு என்ற அர்த்தம்.

ஏனென்றால் இந்தப் புள்ளி விவரம் வெளிவந்திருக்கும் நேரம் அப்படி. நேரம் என்றதும் எந்த ஜோசியக்காரனையும் தேடிக் கொண்டு ஓட வேண்டியதில்லை. சமீப காலமாக உச்ச நீதிமன்றம் உதிர்த்து வரும் முத்துக்களைக் கூர்ந்து கவனித்தால் போதும்.

தே.மா.க.க வின் இந்தக் கண்டுபிடிப்பு வெளிவந்திருக்கும் நேரம் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு அளிப்பதா கூடாதா?

அளிப்பதாக இருந்தால் அந்த 27 ஐயும் 9+9+9 என்று மூன்றாண்டுகளுக்கு பிரித்து அளிக்கலாமா?

அல்லது

3+3+3+3+3+3+3+3+3 என்று ஒன்பதாண்டுகளுக்கு ஜவ்வாய் இழுத்து பிரித்துக் கொடுக்கலாமா?

பிரித்துக் கொடுப்பதற்குள் இருக்கின்ற அரசின் ஆயுள் காலம் முடிந்து விடாதா?

ஒரு வேளை முடிந்து தொலைத்தால் வருகின்ற அரசாவது பிற்படுத்தப்பட்டோருக்கு சரியான விதத்தில் ஆப்பு வைக்கும் அரசாக அமையுமா?

என்று உச்ச நீதி மன்றம் தன் உச்சிக் குடுமியை உசுப்பிக் கொண்டிருக்கிற நேரம் இது.

1931 கணக்கெடுப்பின்படி பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 52 சதவீதம். ஆக இந்தக் கணக்கை முன் வைத்தே 70% இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என்றது காக காலேல்கர் கமிட்டி. 52 சதவீத மக்கள் தொகைக்கு 70% கிடைக்காவிட்டால் போகிறது. ஆனால் கிடைப்பதே 27 சதவீதம்தானே என்று எவரும் அங்கலாய்த்து விடக் கூடாதே என்பதற்காகத்தான் தே.மா.க.க.வின் இந்தப் புதிய கணக்கெடுப்பு இதன்படி பார்த்தால் இருப்பதற்கும் வந்திருக்கிறது ஆப்பு என்பது தான் உள்ளார்த்தம். 52க்கு 27சதவீதம் ஒதுக்கீடு என்றால்... இப்புதிய கண்டுபிடிப்பின்படி 41 சதவீதம்தான் பிற்படுத்தப்பட்டவர்கள் என்கிறபோது கிடைக்கவேண்டியது கூடுமா? குறையுமா? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.

கடைசியாகக் கணக்கெடுத்தது 1931ல். அதுவும் வெள்ளையர்களது ஆட்சிக் காலத்தில், நல்ல வேளையாக சுதந்திர இந்தியாவில் கணக்கெடுப்பு நடக்காதது ஒரு விதத்தில் நல்லதுதான். ஆக நமது கேள்விகளெல்லாம் இதுதான்.

1931ல் 52 சதவீதமாக இருந்த பிற்படுத்தப்பட்டோர் 2005இல் 41 சதவீதமாகக் குறைந்தது எப்படி...?

விவசாயிகளின் ஒட்டு மொத்தத் தற்கொலைகள் மாதிரி பிற்படுத்தப்பட்டோர் எங்காவது கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொண்டார்களா?

(52-41=11) இந்த 11 சதவீத மக்கள் எங்காவது ஒட்டுமொத்தமாகத் தொலைந்து போனார்களா....?

ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுகிறதே என்கிற விரக்தியில் அவர்கள் வந்த கைபர் போலன் கணவாய் வழியாக இவர்கள் எவனாவது வெளியேறிவிட்டார்களா...?

சரி இந்த சர்வே - சப்வே எல்லாம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும்தானா....?

பிற சாதியினரின் கணக்கை யார் முஷாரப்பா வந்து எடுப்பார்....?

கணிப்பொறியின் ஒரு சுவிட்சைத் தட்டினாலேயே கண்ணிமைக்கும் நேரத்தில் கடலில் விழக்கூடிய ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் இந்தியர்களுக்கு இதில் மட்டும் என்ன சிக்கல்...?

ஆனால் அப்படியும் எடுத்தார்கள் ஒரு கணக்கை. இன்றல்ல 1961ல் தலித் மக்களது கணக்கை. அந்தக் கணக்கும் 45 ஆண்டுகளுக்கு முன்னமே 25 சதம் என்று காட்டியது. ஆனால் இன்றுவரை தலித் மக்களுக்கு கிடைத்துவரும் ஒதுக்கீடோ வெறும் 22.5%...

இந்த 22.5 சதவீதத்தையும் எந்த லட்சணத்தில் நிரப்புகிறார்கள் என்பது தெரிந்தவர்கள் இந்த நாடு கடலில் மூழ்கட்டும் என்று மனதார வாழ்த்துவார்கள்.

ஆக இன்றுவரை இந்த சுதந்திர இந்தியாவில் ஆகா ஓகோ என்று ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும்தான். அதனால் அவர்களுக்கு மட்டும் இந்தக் கணக்கெடுப்பு மற்றவர்களெல்லாம் பாவம் மடிப்பிச்சை ஏந்தித்தான் வயிறு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் பார்த்து ஏதாவது அவர்களுக்குக் கூட்டி கொடுத்தால்தான் அவர்கள் வாழ்க்கையில் விடிவு பிறக்கும். என்ன செய்ய...?

இதே தே.ம.க.க.வின் 1999 கணக்கெடுப்பு பிற்படுத்தப்பட்டோர் 35.8% என்கிறது. 1999 இல் இந்தக் கணக்கெடுப்பைக் கண்டுணர்ந்த பிற்படுத்தப்பட்டவர்கள் கருக்கலைப்பு செய்யாமல் பெற்றெடுத்ததன் விளைவு 41%மாக எண்ணிக்கை உயர்ந்ததுதான்.

ஆக ஐந்து வருடத்தில் ஐந்து சதவீத வளர்ச்சியைக் காட்டிய இம்மக்கள் 1931லிருந்து 1999 வரை இப்படி ஏடாகூடமான கருத்தடையைக் கடைப்பிடித்திருக்கக் கூடாதுதான்.

சரி எப்படித்தான் கண்டெடுத்தார்கள் இந்தப் புள்ளிவிவரங்களை என்று கேட்டால் குழப்பத்தில் தே.மு.தி.க.வையும் மிஞ்சிவிடும் போலிருக்கிறது இந்த தே.மா.க.க

79306 நகர்ப்புற வீடுகளிலும்

45377 கிராமப்புற வீடுகளிலும்

இந்த சர்வே நடத்தினோம் என்பவர்களிடம் சர்வே சரி....

எந்த நாட்டில்....

எந்த மாநிலத்தில்....

எந்த நகரத்தில்....

எந்த கிராமத்தில்....

நடத்தினீர்கள்? என்றால் பதிலாக வெறும் காத்துதாங்க வருது.

தங்களது அகண்டபாரதக் கனவில் பிரிக்கப்படாததற்கு முன்பிருந்த இந்தியப் பகுதிகளில் ஏதேனும் நடத்தியிருப்பார்களோ இந்தக் கணக்கெடுப்பை?

வாய்ப்பில்லை.

ஒருவேளை இந்தக் கணக்கெடுத்த மகான்கள் முன்னொரு காலத்தில் ஆடு, மாடு மேய்த்துத் திரிந்த தங்களது பூர்வீக மத்திய ஆசியாவின் கணக்கைத்தான் தவறுதலாக மாற்றிச் சொல்லிவிட்டார்களோ என்னவோ....?
யாமறியோம் பராபரமே.

காட்கோ வாலிஸ்... பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்பெயின் தேசத்தில் வாழ்ந்த புள்ளியியல் நிபுணர் என்று சொன்னால் நீங்களும் நம்பத்தான் போகிறீர்கள். ஆனால் உண்மையில் இந்த காட்கோ வாலிஸ் யாரென்பது எனக்கும் தெரியாது என்பதுதான் உண்மை.

நன்றி
கீற்று

சிலைகளுக்கு வலிப்பதில்லை ஆனால்...

சில நாட்களுக்கு முன் நடை பெற்ற அம்பேத்கார் சிலை உடைப்பு பற்றியும் அதை தொடர்ந்து எழுந்த கலவரங்களும் வலைப்பதிவில் பெரிதான விவாதத்தை ஏற்படுத்தவில்லை, வெகு சில பதிவுகள் மட்டுமே அதைப்பற்றி வெளிவந்தன, இது வழக்கம் போல வெறும் இன்னொரு சிலை உடைப்பு என்றளவிலேயே இங்குள்ள மக்களால் எடுத்துக்கொள்ளப்பட்டதோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது, ஆனால் இது வெறும் இன்னொரு சிலை உடைப்பு அல்ல, சமூகம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்த/செய்கின்ற அநீதிகளுக்கு கொடுக்கும் விலை, இந்த சமூக அமைப்பு மாறதவரை இந்த மாதிரியான விலைகளை நாம் கொடுத்துக்கொண்டே இருப்போம், இது கலவரமல்ல, இது ஒரு எதிர் கலவரம், சமூகம் தொடுத்த தாக்குதலுக்கு ஒரு சிறிய பதிலடி, பொதுவாக இது மாதிரியான நிகழ்ச்சிகளின் போது வெகுசன ஊடகங்கள் மிக மேலோட்டமான ஒரு செய்தியையும் கட்டுரையையும் அளிக்கும், ஆனால் ஜீனியர் விகடனில் ஜென்ராம் அவர்கள் எழுதிய கட்டுரை ஒரு புதிய கோணத்தை மக்களுக்கு எடுத்து சென்றிருக்கும், அந்த கட்டுரையின் சில கருத்துகளில் எனக்கு மாறுபாடு இருந்தாலும் அந்த கட்டுரையை இங்கே பதிவிடுகின்றேன், ஜீனியர்விகடனில் வெளியாகும் ஜென்ராமின் கட்டுரைகள் மிக ஆழ்ந்த சிந்தனைகளோடும் பிரச்சினையின் உண்மையான காரணங்களையும் பேசுகின்றது. ஜென்ராம் நமது சக வலைப்பதிவாளரான ஸ்டேஷன் பெஞ்ச் ராம்கி அவர்களுக்கு வாழ்த்துகள்.

வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட கப்பலில் ஒரு சிறிய தீப்பொறி விழுந்தாலே போதும்; கப்பல் எரிந்து சாம்பலாகிவிடும். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சில தலித் இளைஞர் களின் மனநிலையும் கிட்டத்தட்ட அந்தக் கப்பலின் நிலையில் இருந்திருக்கிறது. அதனால்தான் உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் கான்பூரில் உள்ள அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட செய்தி வந்தவுடன், மகாராஷ்டிர மாநிலத்தின் பல நகரங்களில் வன்முறை வெடித்திருக்கிறது. இரண்டு ரயில்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. ஏராளமான பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கும்பலைக் கலைப்பதற்கு காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலியாகியிருக்கிறார்கள்.


"ஒரு சிலைக்கு ஏற்படுத்தப்படுகின்ற சேதம் பெரும் வன்முறைக்குக் காரணமாகலாமா? பெரும் கலவரத்துக்குக் காரணமாகும் அளவுக்கு சிலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா?" &நகர்ப்புறத்தில் இருக்கும் பெரும்பாலான படித்த, நடுத்தர மக்களின் கேள்வி இதுவாகத் தான் இருக்கிறது. "தேர்தல் வந்துவிட்டால் பகுத்தறிவு, சமதர்மம், தர்க்க நியாயம் என்ற அனைத்துப் பண்புகளும் காற்றில் கரைந்து காணாமல் போய்விடுகிறது... மக்களுக்கு முக்கியமில்லாத ஒரு பிரச்னையை மிகவும் அவசியமான ஒரு பிரச்னையாகப் பெரிதாக்கி, கொந்தளிக்கும் நிலையை அரசியல்வாதிகள் உருவாக்கி விடுகிறார்கள்" என்ற கருத்தும் அவர்களிடம் பரவலாக உள்ளது. இந்த எண்ணம் தற்போது ஊடகங்கள் மூலமாக சாதாரண மக்களிடத்திலும் படிப் படியாக வேகமாகப் பரவி வருகிறது. இதில் உண்மை இல்லை என்று எப்படி முழுமையாக உதறித் தள்ளிவிட முடியாதோ அதேபோல் இந்தக் கருத்தை முழுமையாக அப்படியே ஏற்றுக் கொள்வதும் இயலாது.

முதலில் சிலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியைப் பலர் முன்வைக்கிறார்கள். சோவியத் யூனியன் சிதறும்போது ஆங்காங்கே இருந்த லெனின் சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இராக்கில் பாக்தாத் நகரம் அமெரிக்க ஆங்கில கூட்டுப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன், சில இராக்கியர்கள் சதாம் உசேனின் சிலையை அகற்றினார்கள். ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலையைத் தாலிபான்கள் தகர்த்தார்கள். ‘பண்பாட்டுப் புரட்சி’ என்ற பெயரில் காந்தி சிலைகளுக்கு இடதுசாரி தீவிரவாதிகள் குண்டு வைத்தனர்.

சென்னையில் ஓர் ஆட்சியில் அகற்றப்பட்ட கண்ணகி சிலை, அடுத்த ஆட்சியில் மீண்டும் நிறுவப்பட்டது. தாங்கள் வணங்கும் தெய்வங்களின் சிலைகள் சிலருக்கு முக்கியம். அதேபோல சில வரலாற்று நாயகர்களின் சிலைகள் வேறு சிலருக்கு முக்கியம். ஏனெனில், தாங்கள் மானத்துடனும் மரியாதையுடனும் வாழ்வதற்கான அடித்தளத்தை இந்தத் தலைவர்கள்தான் போராட்டங்களின் மூலமாகப் பெற்றுத் தந்தார்கள் என்று மக்கள் அவர்களைப் போற்றுகிறார்கள்.

சிலைகளுக்குச் சேதம் ஏற்பட்டால் கலவரம் வெடிக்கிறது. எனவே சிலைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் காவல்துறை பாதுகாக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் ஏராளமான சிலைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது காவல்துறைக்கு கடினமான செயல் என்பதால், சிலைகளை எல்லாம் ஊருக்கு வெளியே ஒரு பொதுவான இடத்தில் வைக்கலாம் என்று சிலர் யோசனை சொல்கிறார்கள். ஆனால், இவர்கள் வாழ்ந்து மறைந்த அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களுடைய சிலைகளுக்கு மட்டுமே இத்தகைய பரிந்துரையை வழங்குகிறார்கள். அனைத்து மத கடவுள்களின் சிலைகளையோ அல்லது வழிபாட்டுத் தலங்களையோ ஊருக்கு வெளியே ஒரு பொதுவான இடத்தில் கட்டி பாதுகாப்பளிக்கலாம் என்று இவர்கள் பேசுவதில்லை.

கான்பூரில் சேதப்படுத்தப்பட்ட சிலைக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் ஏன் கலவரம் நடக்கிறது? தொழில்துறையில் வளர்ச்சி பெற்ற இந்திய மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரம் என்றழைக் கப்படும் மும்பை, இந்த மாநிலத்தின் தலைநகர். அதிக அளவிலான முதலீடும், தொழில் வளர்ச்சியும், அதிசய உலகங்களும் இந்த மாநிலத்தில் உள்ளன. இருந்தும் இங்கு அவ்வப்போது நிகழும் வன்செயல்கள் இதுபோன்ற வளர்ச்சியைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. இந்த மாநிலத்தில் உள்ள தலித் மக்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நன்றாக அறிந்து கொள்கிறார்கள். சட்டங்கள் எத்தனை வந்தாலும் நடைமுறையில் இன்னும் தாங்கள் மற்றவர்களுடன் சமமாக நடத்தப்படவில்லை என்ற புரிதல் அவர்களுக்கு இருக்கிறது. இந்த அறிவு அவர்களிடம் அடக்கப்பட்ட கோபமாக எப்போதும் கனன்று கொண்டே இருக்கிறது.

கடந்த 2006-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று மகராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவியான சுனிதா பாபுராவ் என்ற பெண்மணியால் அவரது கிராமத்தில் தேசியக் கொடியை ஏற்ற முடியவில்லை. இவர் பிறப்பால் தலித் என்பதே இதற்குக் காரணம். இப்படி ஏற்கெனவே சமூகரீதியாக பல பிரச்னைகளைச் சந்தித்து வரும் தலித் இளைஞர்களிடம், அரசாங்கத்தின் செயலற்ற தன்மை அல்லது அரசாங்கத்தின் ஒருபக்க சார்பு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயல்பான கோபத்தை ஜனநாயகரீதியில் பிரதிபலிப்பதற்கு தலித் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் அரசியல் தலைமை தவறுகிறது. மற்ற அரசியல் கட்சிகளைப் போலவே தலித் அரசியல் கட்சித் தலைமையிலும் சுயநலமும் சந்தர்ப்பவாதமும் தலைதூக்கியுள்ளன. இதன் காரணமாக தலித் இயக்கம் பல குழுக்களாகப் பிரிந்து நிற்கின்றன. வழிகாட்டுவதற்கு சரியான தலைமை இல்லாத நிலையில், இளைஞர்கள் தங்கள் கோபத்துக்கு வடிகாலாக வன்செயல்களில் இறங்குகிறார்கள்.

மகாராஷ்டிர மாநிலத்தின் நகரங்களில் நடந்தவை மட்டுமே வன்முறை அல்ல. கான்பூரில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதும் ஒரு வன்செயலே. எவ்வளவுதான் நியாயமான காரணங்கள் இருந்தாலும் வன்முறையை ஒரு வழிமுறையாக நாகரிக சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாது. நியாயமில்லாத நிலைப்பாட்டில் இருப்பவர்களே முதன்முதலில் வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள். ஒரு சக மனிதனை ஆயுதத்தால் தாக்குவது மட்டுமே வன்முறை அல்ல; அவனை சாதி, மதம், மொழி, இனம், பொருளாதார நிலை போன்ற எந்தக் காரணம் கொண்டும் வெறுப்பதும் வன்முறைதான். அப்படி மனதளவில்கூட வன்முறை எண்ணம் இல்லாமல் இருப்பதே அஹிம்சை தத்துவத்தின் உயிர்நாடி.

மக்கள், சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதை எந்த அரசாங்கமும் அரசமைப்புச் சட்டமும் ஆதரிப்பதில்லை. மிகுந்த நம்பிக்கையோடு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளில் சிலர்கூட ஆளுவோருடன் அணி சேர்ந்து நிற்கும்போது, அவர்களது கவனத்தைத் தங்கள் பிரச்னைகளின் பக்கம் இழுப்பதற்கு வன்முறையைத் தவிர வேறு வழியில்லை என்று கருதி விடுகிறார்கள். ஒருவேளை, வன்முறை மூலம் சமூகத்தில் நீதி நிலைநாட்டப் பட்டாலும் அது அநீதியான முறையில் கிடைத்த நீதியாகவே கருதப்படும். வன்செயலும் கலவரமும் அராஜகமும் யாரால் நிகழ்த்தப்பட்டாலும் அவை கண்டிக்கத்தக்கவையே. ஏனெனில், ஒரு சமூகத்துக்கு வன்முறையால் கிடைக்கும் நன்மை தற்காலிகமானது; ஆனால், அதனால் சமூகத்துக்கு இழைக்கப்படும் தீங்கோ நிரந்தரமானது!

செல்போன் விற்கும் கைப்புள்ள - 1



சங்கத்து சிங்கமெல்லாம் கைப்புள்ள தலைமையில் சங்கத்தில் ஒன்று கூடுகின்றனர்.

சங்கத்து சிங்கம் 1: தல என்ன தல கூப்புட்டிங்க, சொல்லு தல ரெண்டுல ஒண்ணு பாத்துடுவோம்

கைப்புள்ள: யேய் யேய் என்ன என்ன இப்போ ஓவரா சலும்புற, தல நான் இருக்கன்ல, ஏன் வாலு ஆடுது?

ச.சி. 1:(சசினு படிச்சிப்புடாதிங்கப்பு, சங்கத்து சிங்கத்தத தான் சுருக்கி ச.சி. அப்புடினு சொல்றோம், நல்லா பாருங்கப்பு "ச"க்கும் "சி"க்கும் நடுவுல புள்ளிவச்சிருக்கு) ஸாரி தல, தல நீயே சொல்லு தல

கைப்புள்ள: ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா, முடியலைடா இந்த சங்கத்தை வச்சிக்கிட்டு மாரடிக்க முடியலை, இப்போலாம் நாம காட்டுற படத்தையும் எவனும் பாக்க மாட்டேங்குறானங்க, அதான் நம்ம சங்கத்து சிங்கங்க ஒங்களை நம்பி ஒங்களை நம்பி

ச.சி.2: எங்களை நம்பி கட்சி ஆரம்பிக்கப்போறிங்களா?

கைப்புள்ள: அஹ்ஹ்ஹா அஹ்ஹா, நீ ஒருத்தனே போதும் டா, என்னிய குளோஸ் பண்றதுக்கு என்னிய குளோஸ் பண்றதுக்கு

ச.சி.1 : அப்போ வேற என்னதான் தல, சீக்கிரம் சொல்லுங்க

கைப்புள்ள: சங்கத்து சிங்கங்க ஒங்களை நம்பி செல்போன் கடைவைச்சி பிசுனஸ் பண்ணப்போறேன் டா பிசுனசு

ச.சி.2: சூப்பர் தல, சூப்பர், ஆமா எனக்கு ஒரு சந்தேகம்

கைப்புள்ள: சொல்றா சொல்றா சொல்றா

ச.சி.2: தல ஏற்கனவே நம்மூர்ல 4 செல்போன் கடை இருக்கு, ஒருத்தரு கேமரா செல்போனை விக்குறாரு, ஒருத்தரு கேமராவோட வீடியோவும் சேத்து விக்குறாரு, இன்னொருத்தரு ரேடியோ செல்போன் விக்குறாரு, ஒரு அக்கா வெறும் சொல்போனை விக்குது, நீங்க எப்புடி தல விக்கப்போறிங்க

கைப்புள்ள: வாடா என் வென்று தல இதை கூட யோசிக்காம இருப்பனா? இப்போ கேமரா செல்போனு வெல அதிகம், வீடியோ செல்போனு வெலையும் அதிகம், வெயிட்டும் அதிகம், ரேடியோ செல்போனு ரேடியோ கேக்குறவங்க மட்டும்தேன் வாங்குறாங்க, இந்த அக்கா விக்குதே செல்போனு அதுல ரிஜப்சன் ரொம்ப கம்மி, அது மட்டுமில்லை, அந்த கேமரா செல்போன்காரனை புடிக்காதவங்கள்ளாம் இந்த அக்கா கடைக்கு தான் வருவாங்க.

ச.சி.1: சரி தல அது இருக்கட்டும் நம்ம செல்போனை எப்படி விக்கப்போறோம், எல்லாருமே ஏதோ ஒரு குருப்பை கவர் பண்ணிட்டாங்களே, நீங்க என்ன பண்ணப்போறிங்க

கைப்புள்ள: செல்போன் எதுக்கு? எதுக்கு?

ச.சி.1:எதுக்கு தல

கைப்புள்ள: ஹைய்யோ ஹைய்யோ, இது கூட தெரியலையா, செல்போன் பேசுறதுக்கு.

ச.சி.2(மனதினுள்): ஆகா தலைக்கு ஏறிடுச்சி டோய், இனி பிச்சி ஒளறப்போவுது.

கைப்புள்ள: ஹேய் என்ன என்ன லுக்கு

ச.சி.2: ஒண்ணுமில்லை தல நீங்க சொல்லுங்க

கைப்பு: ஆங்.... அது....அந்த செல்போன் விக்குற எதுலயுமே ரிஜப்ஷன் சரியில்லை, எல்லா செல்போனும் வெயிட்டு அதிகம், வெலையும் அதிகம்.

ச.சி.1: தல சூப்பர் தல

கைப்பு: இப்போ நாம மத்த செல்போனை விட வெயிட்டு கம்மியா, நல்ல ரிஜப்ஷன் வர்றமாதிரி, வெலையும் கம்மியா செல்போன் விக்கப்போறோம். எப்புடி நம்ம ஐடியா?

ச.சி.2: தல சூப்பர் தல, ஆனா அப்புடி ஒரு செல்போன் வச்சிருக்கியா தல

கைப்பு: அது எவன்கிட்ட இருக்கு, அரைலோடு செங்கக்கட்டி தான் இருக்கு

ச.சி.1: தல செல்போனு இல்லைனா எப்புடி தல விப்ப

கைப்பு: சும்மா அப்புடி சொல்லி செங்கக்கட்டிய வித்துட்டா அப்புறம் 50 வருசத்துக்கு எவனும் நம்ம கடையை உட்டு வேற கடையில வாங்கமாட்டான்.

ச.சி.2: சூப்பர் தல சூப்பர், தல இப்புடி கலக்குறிங்களே, எல்லாம் அண்ணி ஐடியா தானே?

கைப்பு: டாய் யார்ராவன், நீ என்ன கட்டதொரை ஆளா? ஒனக்கும் கட்டம் சரியில்லை சொல்லிப்புட்டேன், ஆமாம், "வாழ்க்கையில எல்லா வகையிலும் துணையா நிக்கற மனைவிக்கிட்ட ஐடியா கேட்காம வேற ஒருத்தர் கிட்ட எப்படி ஐடியா கேட்க முடியும்? இதுக்காக ஒரு வைப்பாட்டியை ஏற்பாடு பண்ணி ஐடியாகேட்க முடியுமா இல்ல வேற பொண்ணுங்க கிட்ட ஐடியா கேட்க முடியுமா?..."

கைப்பு சொல்லி முடிக்கும் முன் கைப்பு மூஞ்சியில மேல இருந்து இரண்டு அழுகிய தக்காளி வீசப்பட்டது, கொஞ்சம் ஆளுங்க கோபத்தோடு கத்த


கைப்பு: ஏய் ஏய் யாரு அது மேல இருந்து எம்மேல தக்காளி எறியறது? ஹேய் ஹேய் வேணாம் அழுதுடுவேன், நான் சொன்னா மட்டும் எல்லாம் கோவப்படுறிங்க, நம்ம கேப்டன் விஜயகாந்த்தும் இதைத்தானே சொன்னாரு

கேப்டன் விஜயகாந்த் பெயரை சொன்னவுடன் கூட்டம் அமைதியாக.

கைப்பு: (மனதினுள் ஆங் கேப்டன் பேரை சொன்னாதான்பா அடங்குறாங்க) ராஸ்கல்ஸ் என்ன இது சின்னபுள்ளத்தனாமா? மேல எறிஞ்சிக்கிட்டு, அதை கையில குடுங்க சூசு வச்சி குடிக்கிறேன், இல்ல சட்னி அரைச்சு சாப்புடறேன்,

(கூட்டம் அமைதியானதை பார்த்து கேப்டன்ங்கற பெயரை தானும் வைத்துக்கொள்ளனும்னு கைப்புவுக்கு ஆசை வந்துடுச்சி.)

கைப்பு: என் சங்கத்து சிங்கங்களா, இனிமே என்னை தல தலனு கூப்புடாதிங்க, சிலுக்குவார்பட்டி கிட்டிப்புள்ளு டீம் கேப்டனா இருந்ததால எல்லாருமென்னை கேப்டன் கேப்டன்னு கூப்புடுங்க

ச.சி.1: சரி தல, ஸாரி ஸாரி, சரி கேப்டன்.

கைப்பு என்கிற கேப்டன்: அஹ்ஹா அஹ்ஹா, நாளைக்கு எல்லாம் மதுர மார்க்கெட்டுக்கு வந்துடுங்க, அங்கே தான் நம்ம கடையை ஆரம்பிக்கறோம்.....

பின்குறிப்பு:
மக்களே நாளைக்கும் மறக்காம இங்க வந்துடுங்க, நம்ம கேப்டன் கைப்பு செல்போன் விக்கபோறது நேரடி கவரேஜ் பாக்கலாம்

பொய் சொல்லும் விஜயகாந்த், பாராட்டும் இட்லிவடை

இட்லிவடை பதிவில் விஜயகாந்த் பத்திரிக்கைகளுக்கு அளித்திருந்த பேட்டியை படித்தேன்.

அதில் ஒரு கேள்வி பதில்.

கே:- உங்கள் திருமண மண்டபம் இடிப்பு பற்றி நீங்கள் கட்சி தொடங்கும் முன்பே தகவல் சொல்லி விட்டதாக டி.ஆர்.பாலு கூறி விட்டரே?

ப:- அது தவறான தகவல். நான் கட்சி தொடங்கும் முன்பு கூறி இருந்தால் கலைஞரையே நான் பார்த்து இருப்பேன். டி.ஆர்.பாலு சொல்வது பொய்.என் திருமண மண்டபத்தில் எந்த அளவு இடிப்பு ஏற்படும் என்று முறையாக கேட்டும் இதுவரை பதில் சொல்லவில்லை.

கேப்டன்(?!) விஜயகாந்த் செப்டம்பர் 19, 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கினார், அதற்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பே நெடுஞ்சாலை விரிவாக்க பணித்தொடர்பாக அவரது மண்டபமும் அதனோடு சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்களும் இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன் பிறகு 2005 மே மாதத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியுடன் விஜயகாந்த் ஒரு சந்திப்பு நடத்தினார், இது தொடர்பாக மே 30, 2005 அன்று இரண்டு காந்த்களும் இரண்டு மண்டபங்களும் என்று ஒரு பதிவெழுதியிருந்தே.

அதிலிருந்து சில வரிகள் (நினைவில் கொள்ளுங்கள் கீழ் கண்ட வரிகள் எழுதப்பட்டது மே-30, 2005)


நெடுஞ்சாலைத்துறை மண்டபத்தை கையகப்படுத்தும்போது இடிக்கும் போது ஒரு பெரிய
மறியல் போராட்டம் நடத்தி மிக அட்டகாசமான ஒரு ஓப்பனிங்கோடு அரசியலுக்கு
வந்திருக்கலாம், தவறவிட்டுவிட்டீர்களே விஜி.



கட்சி தொடங்கியது செப்டம்பர் 14, 2005 மேற்கண்ட பதிவு எழுதப்பட்டது மே 30, 2005, மண்டபம் இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு கலைஞருடன் சந்திப்பு மே 2005ல் நடந்துள்ளது.

ஆனால் இப்படி கூசாமல் ஒரு பொய்யை சொல்லியுள்ளார் விஜயகாந்த், இப்படிபட்ட பதில்களை பாராட்டி இட்லிவடை நல்ல பதில்கள், நிச்சயம் இவர் வரவேண்டும் என்று நினைக்கிறேன் என்று சான்றிதழ் வேறு வழங்கியுள்ளார். பாவம் இட்லிவடை ஒலகம் அறியாத(?!) புள்ளையா இருக்கார்.

சிறுவர் போர்னோகிராபி

நீண்டு போன நேற்றைய இரவில் டிஸ்கவரி சேனலில் நம்மோடு பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் உயிரினங்களைப் பற்றிய படங்களை பார்த்துக்கொண்டிருந்தபோது சட்டென்று அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒரு அதில் வந்த ஒரு விளம்பரம்,அது சிறுவர் போர்னோகிராபி பற்றிய விளம்பரம். அதில் சில புள்ளிவிபரங்கள்.

* கடந்த பத்து ஆண்டுகளில் சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் இணையத்தில் 1,500% அதிகரித்துள்ளது.

* இன்றைய அளவில் ஒரு இலட்சம் சிறுவர் போர்னோகிராபி தளங்கள் இணையத்தில் உள்ளன, வருங்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும்.

* சிறுவர் போர்னோகிராபி தளங்களில் ஒரு நாளைக்கு இருபதாயிரம் சிறுவர்கள் வரை காண்பிக்கப்படுகின்றனர்.

* ஒவ்வொரு வாரமும் நான்கு முதல் ஐந்து வரையான புதிய சிறுவர்கள் வருகின்றனர்.

* The victims keep getting younger

* அத்துமீறல்கள் மேலும் மேலும் மோசமடைகின்றன.

* சிறுவர் போர்னோகிராபியில் பயன்படுத்தப்படுபவர்களின் சராசரி வயது ஒன்பது

* மூன்று வயதிற்கு குறைந்த குழந்தைகளும் இதில் பாதிக்கப்படுகின்றனர்.

* ஆன்லைன் சிறுவர் போர்னோகிராபி ஒரு மல்ட்டி பில்லியின் டாலர் வியாபாரம், இது ஆன்லைன் இசை விற்பனையை விட பல மடங்கு அதிகம்.

இந்த விளம்பரத்தில் உங்களின் பணம் எங்களுக்கு தேவையில்லை, உங்களது ஆதரவே எங்களுக்கு தேவை என்று கோரிக்கை வைக்கின்றனர்.

நம் ஆதரவை காண்பிக்க lightamillioncandles.com என்ற இணையதளம் சென்று ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்.

விளம்பரப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இட்லிவடை கருத்து கணிப்பு முடிவுகள்

கள்ள ஓட்டு, இலவசத்துக்கு ஓட்டு, காசுக்கு ஓட்டு, வன்முறை ஓட்டு, சாதி ஓட்டு, அந்த சாதிக்கு எதிர் ஓட்டு, கட்சி ஓட்டு, அந்த கட்சிக்கு எதிர் ஓட்டு, கூட்டணி ஓட்டு, சொந்தக்காரங்க ஓட்டு, தெரிஞ்சவங்க ஓட்டு, புடிச்ச ஆளுக்கு ஓட்டு, புடிக்காத ஆளுக்கு எதிர் ஓட்டு இந்த ஓட்டெல்லாம் அரசியல் கட்சிகள் பங்கு பெறும் படிக்காத சிந்திக்காத மக்களுக்குத்தான் என்று நம்புவோம், படித்த, பண்பான, உலக அரசியலையே அலசிப்போடும் சிந்தனை செல்வங்கள் நிறைந்த வலைப்பதிவுலகில், இங்கே "மனசாட்சி" ஓட்டு மட்டும் தான்னு சொல்லத்துடிக்குது மனசு.

இட்லிவடை வலைப்பதிவை பற்றிய கருத்து கணிப்பில் இட்லிவடையின் பதிவு சூப்பர் பதிவு என்று 45% வாக்குகள் விழுந்துள்ளன, அதாவது பதிவான 272 வாக்குகளில் 123 வாக்குகள் இட்லிவடையின் வலைப்பதிவு சூப்பர் என வாக்களித்துள்ளனர். அவருக்கு எம் மனமார்ந்த வாழ்த்துகள்.... மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

வாக்கு விவரங்களை இந்த சுட்டியில் காணலாம்



இந்த கருத்துக்கணிப்பிற்கு இவ்வளவு பேர் ஆர்வமாக வந்து வாக்களித்தமைக்கு நன்றி, இந்த ஆதரவு மேலும் மேலும் இது போன்ற வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்கிற ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

உங்களின் பேராதரவிற்கு நன்றி.... எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வாக்குப்பதிவிற்கு தன் மேலான ஆதரவையும் அளித்து, விளம்பரமும் அளித்த வலைப்பதிவர் இட்லிவடைக்கு என் மேலான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இட்லிவடை பற்றிய கருத்து கணிப்பு

எல்லாவற்றை பற்றியும் கருத்து கணிப்பு நடத்தும் இட்லிவடை வலைப்பதிவைப் பற்றி ஒரு கருத்து கணிப்பு.

கருத்து சுதந்திரப்படி இதை நான் செய்தாலும் (நாங்கெல்லாம் கருத்து சுதந்திர காவலாளிங்கோங்க) இட்லிவடையின் தனி(அல்லது கூட்டு)மனித சுதந்திரத்தையும் மதிக்கின்றேன், இட்லிவடை இதை நீக்க கோரினால் பதிவு நீக்கப்படும்.

எத்தனை வாக்குகள் பதிவானது, எவ்வளவு வாக்குகள் எதெதற்கு என்பதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை, கள்ள ஓட்டு போடுவது அவரவர்கள் திறமை, நல்ல ஓட்டு போடுவது அவரவர்கள் விருப்பம், எல்லாம் வெளிப்படை.

வலது பக்கத்தில் இருக்கு பாருங்க கருத்து கணிப்பு பட்டை, அதிலே போடுங்க உங்கள் ஓட்டை.

பின்குறிப்பு:
நாளை (01-12-2006) சிங்கப்பூர் நேரம்(SGT) நள்ளிரவு 12 மணி வரை வாக்குபதிவு நடைபெறும், அதன் பிறகு வாக்குப்பெட்டி மூடப்படும்.

இது ரொம்ப முக்கியம்

தமிழகத்தின் முதல் மூன்று அரசியல் பத்திரிக்கைகளில் வந்த செய்தி...

29-11-2006 ஜீனியர் விகடனின் அட்டைப்படம்




அதே இதழில் ஸ்பெசல் என்ற பகுதியில்




இன்னொரு முக்கியமான இதழான குமுதம் ரிப்போர்ட்டரின் அட்டை



கவர் ஸ்டோரி என்று எழுதப்பட்டது


இன்னொரு முக்கிய பத்திரிக்கையான நக்கீரனின் அட்டைப்படம்


வெளங்கிடும்.......

பெரியார் படத்திற்கு சில யோசனைகள் - இட்லிவடையை தொடர்ந்து

இட்லிவடை பெரியார் படத்திற்கு என சில யோசனைகள் கொடுத்த துக்ளக்கிலிருந்து எடுத்து போட்டுள்ளார், அதில் போட்ட பின்னூட்டம் சற்று பெரிதாகிவிட்டது, அதனால் பதிவாகவும் இங்கே...

இட்லிவடை இவ்வளவு தூரம் பெரியார் பட இயக்குனருக்கு எடுத்துகொடுத்துள்ளீர் என் பங்குக்கு நானும் எடுத்து தருகிறேன், இப்படியெல்லாம் காட்டுமிராண்டி மொழி என தமிழை திட்டிய பெரியார் அறிமுகப்படுத்தியது தான் இன்றைய தமிழ் அச்செழுத்து சீர்திருத்தம், தமிழ் என்ற இந்த காட்டுமிராண்டிகளின் மொழியில் அச்செழுத்து சீர்திருத்தத்தை பெரியார் அறிமுகப்படுத்துவதற்கு முன் "லை" இப்படி இருந்ததல்ல, அது எப்படி இருந்தது என்றால் பாலச்சந்தரின் "வானமே எல்லை" சுவரொட்டியையோ பழைய துக்ளக், கல்கியையோ பார்க்கவும்(கடந்த சில ஆண்டுகளாகத்தான் இவர்களும் பெரியார் உருவாக்கிய தமிழ் அச்செழுத்து சீர்த்திருத்தத்தை ஏற்றுகொண்டார்கள் என நினைக்கின்றேன்), பெரியார் கூற்றுப்படி நல்ல விடயங்களுக்காகவும் அச்சு நவீனத்துவத்துக்குமான மாற்றத்தை மொழியில் ஏற்காதவர்களின் மொழி காட்டுமிராண்டிகளின் மொழி "வானமே எல்லை" படம் வெளிவந்தபோது இந்த கூற்றுப்படி பாலச்சந்தர் காட்டுமிராண்டி, துக்ளக்கும் கல்கியும் நீண்ட நாட்களுக்கு இதை ஏற்காததால் அவர்களும் அவர்கள் எழுதிய தமிழும் காட்டுமிராண்டி, இதே மாதிரி நீங்கள் ஒரு பதிவிட்டபோதும் நான் இதே மாதிரி பெரியாரின் அச்செழுத்து சீர்திருத்தத்தை எழுதியிருந்தேன், உங்கள் பதிவின் செய்தி சேவையினால் அதை தேடி கண்டுபிடிக்கமுடியவில்லை, இந்த பதிவை குறித்து வைக்க வேண்டும், மீண்டும் இதே மாதிரி நீங்கள் பதிவிடுவீர் அப்போது எனக்கு CTL-C , CTL-V செய்தால் போதுமானதாக இருக்கும், புதிதாக தட்டச்ச தேவையில்லை...

பார்ப்பனீயம் ஊடுறுவிய, அதைஉள்வாங்கிய ஒரு சமூகத்தின் மொழி வெளிப்பாடு பெரியார் சொன்னது போலத்தான் இருக்கும், திருக்குறளுக்கு பிந்தைய காலகட்டத்தில் வெளியான தமிழிலக்கிய நூல்களில் பெரும்பாலானவை போர் பரணிகளும், அரசர்களுக்கு தட்டிய ஜால்ராக்களும், சைவ,வைணவ மதமென்று பார்ப்பனியத்துக்கு கூஜா தூக்கிய படைப்புகளாகவும் தானிருந்தன, பார்ப்பனீயம் ஊடுறுவிய, அதைஉள்வாங்கிய ஒரு சமூகத்தின் மொழி வெளிப்பாடு பிறகெப்படி இருக்கும்? அப்படித்தானிருக்கும்.? பார்ப்பனிய அதிகாரத்துவத்தை எதிர்க்கும் பெரியாரின் குரல் இப்படி தான் இருக்கும், கருத்தளவில் இப்படி எதிர்த்த இதே பெரியார் இதே தமிழ் மொழி நவீனத்துவமடையவேண்டுமென்று அச்செழுத்து சீர்திருத்தம் செய்திருக்கிறாரென்றால் அவர் தமிழ் மொழியை கேவலமாக நினைத்தவரா என்பது புரியும்...

அது சரி தமிழ் என்றால் பலர் உணர்ச்சிவயப்படவும் சிலர் எரிச்சலடையவும் காரணமென்ன?

தமிழ்- முகமூடி, குழலி பதிவுகளை முன்வைத்து என்ற பதிவில் எழுத்தாளர் மாலன் சொல்லியிருப்பதிலிருந்து சில வரிகள் கீழே...

மிகை உணர்ச்சிகளை நீக்கிவிட்டு வரலாற்றுக் கண் கொண்டு பார்த்தால், இரண்டு விஷயங்களை விளங்கிக் கொள்ள முடியும்:

1.தமிழ் அறிவு என்பது ஒரு சமநிலைச் சமூகத்திற்கான (egalitarian society) விழைவை நோக்கி இட்டுச் செல்லும் ஒன்று
2.தமிழ் உணர்வு என்பது அதிகாரத்திற்கெதிரான, குறிப்பாக -வலியார் சிலர் எளியோர் தமை வதை செய்குவதை- போர்க் குணத்தை அளிப்பது. (anti -establishment)

கம்பன், பாரதி, பாரதிதாசன், ஜீவா ஆகியோரிடம் காணப்படும் அதிகார எதிர்ப்பு நிலைகளுக்கும் ஒரு முக்கிய காரணியாக தமிழுணர்வு இருந்திருக்கிறது.

தமிழுக்கு ஐம்பெரும் காப்பியங்களைத் தந்த சமண பெளத்த சமயங்கள், ஒரு வித சமநிலைச் சமூகத்தை விரும்பின. நிறுவனமாக்கப்பட்ட அமைப்புக்கள் மூலம் கல்வி வழங்கல், வைதீக சமயங்கள் பெண்களுக்கு அளித்திருந்ததைவிட சற்று மேம்பட்ட நிலையை அளித்தல் இவை அவற்றின் இந்த விழைவுகளுக்கு உதாரணங்கள். ஆனால் அவை தங்களது தமிழ் ஆர்வத்தை உணர்வு நிலையில் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அறிவார்ந்த நிலையிலேயே வெளிப்படுத்திக் கொண்டன. தமிழர்களிடையே இந்த சமயங்கள் பெரும் செல்வாக்குப் பெற இயலாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.

அரசியல் வரலாற்றின் வெளிச்சத்தில் பார்த்தால், களப்பிரர்களுக்கு எதிராக சைவர்களும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக பார்ப்பனர்களும், பார்ப்பனர்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும், இன்று பிற்பட்டோருக்கு எதிராகத் தாழ்த்தப்பட்டவர்களும் எழுப்பும் கலக்க்குரலின் அடையாளமாகத் தமிழ் உணர்வு இருந்து வருகிறது.


அதுசரி இப்போது புரிந்திருக்குமே தமிழென்றால் சிலருக்கு உணர்ச்சிப்பெருக்கும், சிலருக்கு வயிற்றெரிச்சலும் உருவாவதன் காரணம்.

சரி இந்த பின்னூட்டத்தினால் ஏதோ நீர் புரிந்துகொள்வீரென்ற நம்பிக்கையெல்லாம் எனக்கு இல்லை, ஏனென்றால் இதே மாதிரி ஏற்கனவே ஒரு பதிவிலும் சொன்னது தானே இது, ஆனாலும் ஏன் எழுதுகிறேனென்றால் உம் மாதிரியான ஆட்கள் தொடர்ந்து இயங்கும் போது (எதற்கு எதிராக இயங்குகிறீர்கள் என்பது சொல்ல தேவையில்லை) எம் மாதிரியான ஆட்களும் தொடர்ந்து இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

பின்குறிப்பு:துக்ளக் 'சோ' எழுத அதை எடுத்து பதிவில் போடும் இட்லிவடை போன்றோர்களின் இது மாதிரியான சேவை நிச்சயம் தேவை, இப்படியெல்லாம் அவர்கள் கூறவில்லையென்றால் இந்த பதிவிற்கு வேலையில்லாமல் போயிருக்கும், பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னது மட்டுமே தெரிந்திருப்பவர்களுக்கு இந்த பதிவின் மூலம் ஒரு சிலருக்காவது பெரியாரின் தமிழ் அச்செழுத்து சீர்திருத்தம் பற்றிய தகவல்கள் தெரியவந்தால் அதற்கு முழு காரணம் 'சோ' மற்றும் இட்லிவடை....

இட்லிவடை தேவை உமது சேவை

பிற்சேர்க்கை


"லை" என்று எழுதியதால் தமிழ் எப்படி வளர்ந்தது என்று விளங்கவில்லை. என்று பின்னூட்டத்தில் கேட்டு பெரியாரை பற்றியும் அவரின் சேவையை பற்றியும் மேலும் அறியும் ஆர்வமுடன் முத்துக்குமரன் வினவியதிற்கான பதிலை பதிவிலும் சேர்க்கிறேன்.

மேலே உள்ள படம் "வானமே எல்லை" திரைப்படத்தின் விளம்பரப்படம் இருக்கும், அதில் "லை" என்ற எழுத்தை பாருங்கள் "ல"க்கு மேலே ஒரு சுழி, இரண்டையும் ஒரு 'S' சேர்த்திருக்கும், இப்படி லை,னை,ரை வரிசை எழுத்துக்களும் முன்பு புழக்கத்தில் இருந்தன.

,
அதே போல அருணாச்சலம் படத்தின் பெயரை அந்த "ணா"க்கு பதில் 'ண'க்கு கீழே ஒரு படகு மாதிரி வந்திருக்கும், இப்படியான எழுத்துக்கள் தமிழ் மொழி அச்சில் பயன்படுத்த மிகவும் சிரமமாக இருந்தது.

இது மாதிரியான எழுத்துக்களுக்கு கால் போட்டதாலும் முன்புறத்தில் கொம்பு போட்டதாலும் சில எழுத்துக்களை மீண்டும் வெவ்வேறு எழுத்துக்களை குறிக்க பயன்படுத்தலாம், இது தான் பெரியார் அறிமுகப்படுத்திய அச்செழுத்து சீர்திருத்தம், இதற்கு பின்பு அச்சில் தமிழ் எளிமையானது.

இட்லிவடையின் சேவை போலவே முத்துக்குமரன் புராணத்தின் சேவையும் எங்களுக்கு மிக்கத் தேவை.

நன்றி

வலைப்பதிவர் சந்திப்பும் பக்க விளைவுகளும்



வலைப்பதிவர்கள் மாநாடு நடத்தி கலந்து கொண்டு, ஆக்கப்பூர்வமான செயல்கள் செய்து இப்போது வருத்தத்தில் இருப்பவர்களுக்கு மேலே உள்ள படம்.


வேறு சிலருக்கு கீழே உள்ள படம்.







தமிழ்மணத்தில் கிண்டல்களை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு ரசிக்க மாட்டேங்கிறாங்க, தொட்டாசினுங்கிங்க என்ற புலம்பல், கருத்து, எட்செட்ரா, எட்செட்ரா எல்லாம் இரண்டு நாட்களாக ஆங்காங்கே வருகின்றது(அதற்கு முன்பு அவ்வப்போது வருவது உண்டு, எவ்வெப்போதுனெல்லாம் கேட்கக்கூடாது அக்காங், எங்களுக்கு பெரச்சினைனா வரும் அவ்ளோதான்...) எனவே சம்பந்தப்பட்டவர்கள் மேலே உள்ள ஜெலுசிஸ் விசயத்தை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு மேற்கண்ட புலம்பலை தவறு என்று நிரூபிக்க வேண்டுகின்றேன்.

நகைச்சுவையில் பல வகை உண்டு. மேற்கண்டது எந்த வகையில் வருகின்றது என்பதை பாஸ்டன் பாலாவின் இந்த பதிவில் படித்துவிட்டு சொல்லுங்க :-)

வர்ரட்டா... சீ யூ... பை...

பாப்பாபட்டி, கீரிப்பட்டி சமத்துவப் பெரியார்

உள்ளாட்சி தேர்தல் நெருங்கிய நேரத்தில் ஒரு அச்சம் மேலோங்கியது, சுழற்சி முறையில் தலித் மற்றும் பெண்கள் தொகுதி ஒதுக்கீடு பத்து ஆண்டுகளுக்கு மட்டுமே, அதன் பின் அந்த தொகுதி பொதுத்தொகுதியாக மாற்றப்படும், ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் போன்ற பஞ்சாயத்துகள் தலித்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும் தேர்தல் நடப்பதும் உடனே தலைவர் ராஜினாமா செய்வதுமாக நாடகம் நடந்து கொண்டிருந்தது, பத்தாண்டுகளுக்கு பிறகு இந்த கிராம ஊராட்சிகள் பொதுத்தொகுதியாக்கப்பட்டால் ஆதிக்க சாதி வெறி வெற்றிபெற்றது போலாகும், மேலும் இது மாதிரியான ஆதிக்க சாதி வெறி மேலும் பல கிராமங்களில் தொடரும் என்ற அச்சமே அது, ஒரு முறை கிராமத்தின் வேட்பாளராக முன்மொழியப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்ற தலித் பதவியேற்று சில நாட்களில் அந்த கிராமத்தில் ஏற்பட்ட மின் அழுத்தத்தினால் சில வீடுகளில் இருந்த தொலைக்காட்சி பெட்டிகள் சேதமடைய "அய்யோ அவரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள், சாமி குத்தமாயிடுச்சி" என்று குரல்கள் எழுந்து ராஜினாமா நாடகமும் நடந்தேறியதாக பத்திரிக்கைகளில் படித்தேன், ஆனால் இந்த தொகுதிகளை பொதுத்தொகுதியாக்கமல் முதல்வர் கருணாநிதி மீண்டும் தலித் தொகுதியாகவே தொடர உத்தரவிட்டார், இது தொடர்பான என் நன்றியை பாப்பாபட்டி, கீரிப்பட்டி - முதல்வர் கலைஞருக்கு நன்றி என்ற பதிவில் தெரிவித்திருந்தேன்.

இந்த முறை தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் ஊராட்சி தலைவர்கள் பதவியில் தொடரவைக்க அரசு கடும் முயற்சி எடுத்ததை ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம், குறிப்பாக இந்த தேர்தலுக்கு தடையாக இருந்த பலரையும் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தடைகளை நீக்கி தேர்தல் சுமுகமாக நடைபெற வைத்தது மாவட்ட நிர்வாகம் , முதல்வர் கருணாநிதி இந்த தேர்தலில் அதிக கவனம் செலுத்தியதும் ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம்.

இந்த தலித் ஊராட்சி தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது, இவர்களை சென்றவாரம் சென்னைக்கு அழைத்து "சமத்துவ பெருவிழா" என்று ஒரு பாராட்டுவிழாவும் நடந்தது, இதை வெறும் சாதாரண விழாவாக எண்ணமுடியாது, இந்த விழா சொல்லும் செய்தி இப்படியான பாப்பாப்படி, கீரிப்பட்டிகள் இனி தமிழகத்தில் உருவாக முடியாது, அப்படி உருவாக்க முயற்சித்தால் அதை அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்காது என்று கூறும் விழாவாக எடுத்துக்கொள்ளலாம்.



இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமா அவர்களால் முதல்வர் கருணாநிதிக்கு "சமத்துவப் பெரியார்" என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

இந்த உள்ளாட்சி தேர்தலில் தலித் தொகுதியாக மாற்றப்பட்ட திருச்சி திருவெரும்பூர் அருகிலுள்ள கூத்தப்பார் என்ற ஊராட்சியில் தலித்களால் மனுத்தாக்கலே செய்யமுடியவில்லை, வரும் டிசம்பர் மாதத்தில் நடக்கப்போகும் உள்ளாட்சி இடைத் தேர்தல் சுமுகமாக நடைபெற வேண்டுமென்பதற்கான எச்சரிக்கையாக இந்த விழா உதவும் என நம்புகிறேன்.

ஆதிக்க சாதி வெறிக்கு எதிரான இந்த வெற்றிக்கு காரணமான முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு மீண்டும் என் நன்றியை தெரிவிக்கின்றேன்.

மக்களின் ஆதிக்க சாதி வெறி மனம் மாறி இந்த தேர்தல் நடந்திருந்தால் முழு மகிழ்ச்சியடைந்திருக்கலாம், அரசாங்கத்தின் அழுத்தத்தினாலே நடந்திருக்கும் இந்த மாற்றம் முழு மகிழ்ச்சியை தரவில்லையென்றாலும் மக்களின் ஆதிக்க சாதி வெறி மன மாற்றத்திற்கு இன்னும் எத்தனை ஆண்டுகளாகுமோ?

பின்குறிப்பு:
இந்த நான்கு ஊராட்சிகளும் ஏற்கனவே பத்து ஆண்டுகள் தலித் தொகுதிகளாக இருந்தன, ஆதலால் இப்பொழுதே இவைகளை மீண்டும் பொதுதொகுதிகளாக மாற்ற வேண்டும், தலித் தொகுதிகளாக அவை தொடரக்கூடாது என்று என்று சில மனுக்கள் நீதிமன்றங்களிலே தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது, இந்த நான்கு தொகுதிகளும் பொதுத்தொகுதிகள் ஆக்கப்பட்டால் வேறு எந்த நான்கு தொகுதிகள் தலித்களுக்கு ஒதுக்கப்படும் எண்று அரசாங்கத்திடம் நீதிமன்றம் கேட்டுள்ளது, பத்து ஆண்டுகளாக தலித்கள் இந்த ஊராட்சியின் தலைவராக செயல்பட முடியத போது அதற்காக நீதிமன்றம் செல்லாதவர்கள் இப்போது நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியுள்ளார்கள், இவர்களின் ஆதிக்க சாதிவெறி மனம் மாறுமா?

தமிழ்மணத்தில் சன்,ஜெயா செய்திகள்

லக்கிலுக்கின் உள்ளாட்சித் தேர்தல் - கண்டனப் பொதுக்கூட்டம் மற்றும் பத்ரியின் உள்ளாட்சித் தேர்தல் பொதுக்கூட்டம் பதிவை படிக்கும் போது சில இடங்களில் சன் மற்றும் ஜெயா செய்திகள் பார்ப்பது போல இருந்தது....லக்கியும் பத்ரியும் இப்படி சொல்வதற்காக என் மீது வருத்தம் வந்தாலும் வரலாம், ஆனால் பதிவுகளை படிக்கும் போது இப்படியானதொரு எண்ணம் எனக்கு வந்ததை மறுப்பதற்கில்லை.

பத்ரியின் பதிவிலிருந்து

பார்வையாளர்கள் பலதரப்பட்டனராக இருந்தனர். "மிடில் கிளாஸ் மைலாப்பூர் மாமாக்கள் கூட்டம்" என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. மதிமுகவின் வைகோ, பாஜக இல.கணேசன் இருவரும் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தனர். வைகோவின் தொண்டர்கள் பெரிய அளவில் இருந்தனர். வேறு சில அரசியல் தலைவர்களும் வந்திருந்தனர் என்று நினைக்கிறேன்.

லக்கிலுக்கின் பதிவிலிருந்து

பாரதிய வித்யா பவன் அரங்கினுள் நுழைந்ததுமே "தாம்ப்ராஸ்" மீட்டிங்குக்கு வந்துவிட்டோமோ அல்லது துக்ளக் ஆண்டு விழாவுக்கு வந்துவிட்டோமோ என்று சந்தேகம் ஏற்பட்டது. Audience அந்த ரேஞ்சில் இருந்தார்கள். பார்வையாளர்களில் நிறைய பேர் ரிட்டையர்டு கேசுகள். வெள்ளை முடியுடன் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை அணிந்து கையில் வாக்கிங் ஸ்டிக்குடன் வந்திருந்தார்கள். நெற்றியில் பட்டை அடித்த கோஷ்டியும், நாமம் போட்ட கோஷ்டியும் அதிகமாகத் தெரிந்தது.

ஜெயா மற்றும் சன் செய்திகள் பார்த்த மாதிரி இருக்கின்றதா? லக்கிலுக்கிற்கு ஏற்கனவே திமுக முத்திரை இருக்கின்றது, அதே சமயம் பத்ரியின் 2006 உள்ளாட்சி தேர்தல் வன்முறை தொடர்பான பதிவுகளையும் அவரின் பின்னூட்டங்களையும் படித்த போது அவர் ஒரு திசையில் சற்று சாய்ந்துள்ளதாகவே என்னளவில் தோன்றுகின்றது.

இந்த கூட்டம் தொடர்பான பத்திரிக்கை செய்தியையோ அல்லது இந்த இரு வலைப்பதிவர்களின் பதிவுகளை தவிர மற்ற வலைப்பதிவர்கள் பதிவை இன்னும் படிக்கவில்லை.

இந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டிருந்தால் கூட்டத்தில் நான் கேட்க நினைத்த கேள்விகள் இங்கே



1. மாநில தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இத்தேர்தல் நடக்காமல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நடக்க வேண்டுமென்று குறிப்பிடுவது கொஞ்சமே கொஞ்சம் மீதியிருக்கும் மாநில அதிகாரங்களையும் பறிப்பது போலாகாதா, மாநில தேர்தல் ஆணையும் தவறு செய்கிறது என்பதற்காக அதன் அதிகாரத்தை பிடுங்கி மத்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்தால் மத்திய தேர்தல் ஆணையமும் அதையே செய்தால் அதன் அதிகாரத்தை பிடுங்கி எதனிடம் அளிப்பது? இன்றைய மத்தியதேர்தல் அதிகாரிகள் பக்க சார்பில்லாமல் இருக்கிறார்கள், வருங்காலத்தில் பக்க சார்புள்ள அதிகாரங்கள் வந்தால் என்ன செய்யமுடியும்? அதற்கு பதிலாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் குறுக்கீடற்ற அதிகாரங்கள் வழங்கப்படுதல் வேண்டும் என்கிறேன் நான்.


2. மேயர், மற்றும் உள்ளாட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு நேரடி தேர்தல்முறை வந்தால் வன்முறை குறையும் என்பது எப்படி சாத்தியம், 2001ல் மேயர் தேர்வுக்கு நேரடி தேர்தல் முறை இருந்தும் சென்னை மாநகராட்சி தேர்தலில் வன்முறை நடந்ததே.

3. மேயர், மற்றும் உள்ளாட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு நேரடி தேர்தல்முறையின் மிகப்பெரிய குறைபாடாக உள்ளாட்சி மன்றத்தலைவர் ஒரு கட்சியாகவும் மற்றைய பெரும்பாலான உறுப்பினர்கள் பிற கட்சிகளாகவும் இருந்த நிலையில் நிறைய உள்ளாட்சி மன்றங்களில் எந்த ஆக்கப்பூர்வமான வேலையும் நடைபெறவில்லையே, கிட்டத்தட்ட எல்லா தீர்மாணங்களும் உள்ளாட்சி மன்றங்களில் தோற்கடிக்கப்படனவே, இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய என்ன ஆலோசனை கூறுகின்றீர்கள்

4. மேயர் மற்றும் உள்ளாட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு நேரடி முறையில் தேர்ந்தெடுப்பது போலவே முதல்வர், பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் தேர்வு முறையும் நேரடி முறைக்க மாற்ற பரிந்துரைப்பீர்களா?

5. இது மாதிரியான ஒரு கூட்டம் 2001 உள்ளாட்சி தேர்தல் வன்முறையை கண்டித்து நடந்ததா? எனக்கு தெரிந்து நடக்கவில்லை...

கடைசி மற்றும் முக்கியமான கேள்வி

6. இந்த மாதிரியான தேர்தல் வன்முறையில் மக்களின் பங்கு என்ன? 2001ல் இப்படியான ஒரு தேர்தல் வன்முறை நடந்திருந்த போதும் மீண்டும் அது மாதிரியான தேர்தல் வன்முறை செய்ய எப்படி ஆளும் கட்சிக்கு தைரியம் வந்தது? ஒரு வேளை மக்களின் மறதி தான் இதற்கான காரணமோ? இந்த மாதிரியான வன்முறைகளுக்கு மக்கள் எப்படியான எதிர்வினையை காட்ட வேண்டும்? ஒரு வேளை 2001 தேர்தல் வன்முறையின் போதே இப்படியானதொரு கூட்டம் நடத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தால் 2006ல் இந்த ரீ-ப்ளே நடக்காமல் இருந்திருக்குமோ?

குழலியும் குசும்பனும் ஒன்றே

தமிழ்சசி, தமிழ்பார் என்பதில் இருவருடையதும் தமிழ் தமிழ் என்று ஆரம்பிப்பதால் இவர்கள் இருவரும் ஒன்றே என்ற லாஜிக்படி 'கு'ழலியும் 'கு'சும்பனும் ஒன்றே, இருவரின் பெயரும் 'கு' வன்னாவில் ஆரம்பிக்கிறது, இருவருடைய IPயும் எண்களாகவே இருக்கிறது மேலும் IP எண்களுக்கு இடையில் புள்ளி வேறு இருக்கின்றது, ஆகவே குசும்பனும் குழலியும் ஒன்றுதான் ஒன்றுதான் ஒன்றே தான்.

ஆப்படிச்சி கவுந்து போன இமேஜை எப்படியெல்லாம் தூக்கி நிறுத்த வேண்டியிருக்குது, ஒரே கல்லுல மூனு மாங்கா, இப்போ சரக்கு சப்ளைக்காரரும், வீரக்காரரும் ஏதோ ஆபாசமாக எழுதிய மாதிரி பேர் வாங்கிடுவாங்க, இவரையும் போட்டு தள்ளிய மாதிரி ஆனது, நடுநிலை முகமூடி கிழிந்து தொங்கிக்கொண்டிருப்பவர்கள் உஷாராக பின்னூட்டமளிக்கவும்.

கொலசாமிகளா இன்னைக்கி படையல் இங்கே.... என்சாய்.....

திமுக, பாமக வடமாவட்ட அரசியல்-2

திமுக, பாமக வடமாவட்ட அரசியல் என்ற சென்ற பதிவின் தொடர்ச்சி இங்கே...

சென்ற பதிவில் கூட்டணியில் பாமக, விடுதலை சிறுத்தைகளுக்கான அழுத்தம் பற்றி கூறியிருந்தேன், அந்த அழுத்தமென்னவென்றால் திமுகவிற்கு பாமகவை வெற்றிபெறவைப்பதைவிட பாமகவிற்கு திமுகவை வெற்றிபெற வைக்க வேண்டிய கட்டாயம் நிறைய உள்ளது, உதாரணத்திற்கு கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியில் பாமக போட்டியிட்டது அதை சுற்றியுள்ள நெல்லிக்குப்பம், கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளிலெல்லாம் திமுக போட்டியிட்டது, பண்ருட்டியில் பாமக தோல்வியுற்றால் அது பாமகவின் தோல்வியாக மட்டுமே கருதப்படும், பண்ருட்டியில் பாமக தோல்வியுற்றால் கூட்டணி கட்சியான திமுகவின் பலம் கேள்விக்குள்ளாக்கப்படாது, ஆனால் நெல்லிக்குப்பம், கடலூர், குறிஞ்சிப்பாடி போன்ற தொகுதிகளில் திமுக தோல்வியுற்றால் அதை திமுகவின் பலம் குறைந்ததாகவோ, முழுக்க முழுக்க திமுகவின் தோல்வியாகவோ பார்க்கப்படாது, ஆனால் பாமக கூட்டணி வைத்தும் தோல்வியுற்றால் அந்த தோல்வியின் பெரும் பங்கு பாமகவை வந்து சேரும், அதனால் அடுத்த தேர்தல்களில் பாமகவின் bargaining power குறைந்துவிடும், இதே நிலை தான் விடுதலை சிறுத்தைகள் அமைப்பிற்கும், கடந்த தேர்தலில் தொல்.திருமா அவர்களின் பேட்டியை பார்த்தால் தெரிந்திருக்கும், நமது பலம் நமது கூட்டணி கட்சிகள் வெற்றிபெறுவதில் தான் இருக்கிறது, எனவே அதற்கு எந்த தொய்வும் வராமல் விடுதலை சிறுத்தைகள் பாடுபடவேண்டுமென்றார், சொந்த கட்சி தோற்றால் அவர்களின் சொந்த தோல்வி, அதில் திமுக, அதிமுகவிற்கு பங்குள்ளதாக சொல்லப்படாது, ஆனால் கூட்டணி கட்சிகள் தோல்வியுற்றால் அப்போதும் பாமக, விடுதலைசிறுத்தைகளின் பலம் குறைந்துவிட்டதாக சொல்லப்படும், இதனாலேயே கூட்டணியில் பாமக, விடுதலை சிறுத்தைகளுக்கு திமுக, அதிமுகவை விட அழுத்தம் அதிகம்.

திமுகவின் பலமும் பலவீனமும் அதன் மாவட்ட அளவிலான தலைவர்களே, அதாவது மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள செல்வாக்கான திமுக பிரமுகர்கள், வீரபாண்டி ஆறுமுகத்தை தாண்டி திமுகவின் தலைமையால் சேலம் மாவட்டத்தில் எந்த முடிவும் எடுக்க இயலாது, கோ.சி.மணி, துரைமுருகன், பிச்சாண்டி, ஐ.பெரியசாமி என ஒரு பெரிய பட்டியல் உண்டு, இவர்களின் மீது தலைமையால் பெரிய அளவில் எதையும் திணிக்க இயலாது, உதாரணமாக சரத்குமார் 1999ல் திமுக வேட்பாளராக மாவட்ட செயலாளரின் எதிர்ப்பையும் மீறி தலைமையால் அறிவிக்கப்பட்டார் ஆனால் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார், இதற்கு திமுகவினரின் உள்ளடி வேலையே என்று நேரடியாகவே குற்றம் சாட்டினார் சரத்குமார், அதைத் தொடர்ந்து சரத்குமாரை மேல்சபை உறுப்பினராக ஆக்கியது திமுக தலைமை, ஆனால் உள்ளடி வேலை செய்தவர்கள் மீது தலைமை பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அல்லது எடுக்க முடியவில்லை.

வடமாவட்டங்களில் பாமக அரசியலில் எதிர்கொள்வது இந்த தலைவர்களையும் அவர்களுடைய ஆதரவாளர்களையும் தான், உதாரணத்திற்கு திண்டிவனம், விழுப்புரம் பகுதியில் பொன்முடியை எதிர்த்து தீவிர அரசியல் செய்வது பாமக, வேலூர், தர்மபுரியில் எல்லாம் திமுக பாமக மோதல்கள் அதிகளவில் இருந்தாலும் சேலம் மாவட்டத்தில் மட்டும் பெரிய அளவிலான மோதல் இல்லாததற்கு காரணம் வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் பாமகவினருக்கும் உள்ள புரிந்துணர்வுகள், சேலம் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை பாமக-திமுக கூட்டணி கைப்பற்றியதும் உள்ளடி வேலைகள் ஏதும் இல்லாததே.

கூட்டணியில் பாமகவிற்கான அழுத்தம் அதிகம் என்பதால் திமுகவை எதிர்த்து உள்ளடி வேலைகள் குறைவாக இருந்த போதும் பாமக கூட்டணி கட்சியை எதிர்த்து மாவட்ட திமுக ஏன் உள்ளடிகளில் இறங்கவேண்டுமென்று பார்த்தால் அதில் ஒரு முக்கியமான விடயம் அடங்கியுள்ளது, ஒரு முறை ஒரு தொகுதி பாமகவிடம் சென்று அவர்களும் அதை வென்று விட்டால் அடுத்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்தாலும் அதிமுக கூட்டணிக்கு சென்றாலும் பாமகவினர் சிட்டிங் தொகுதி என்று கூறி அதே தொகுதியை மீண்டும் மீண்டும் கேட்பார்கள், அந்த தொகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக பாமக வின் கை ஓங்கும், இப்படியாக பல தொகுதிகள் வடமாவட்டங்களில் உள்ளன, தொடர்ந்து பண்ருட்டி, விருத்தாசலம், ஆண்டிமடம், வந்தவாசி, திண்டிவனம், எடப்பாடி, தாராமங்கலம் என பல தொகுதிகளை அடையாளம் காணலாம், மாவட்ட திமுகவினர்கள் சிலரை பொறுத்தவரை கூட்டணிக்கட்சிக்கு தொகுதி என்றான பின் அது எப்படியும் திமுகவிற்கு இல்லை, அதனால் அது அதிமுகவிற்கு செல்வதும் பாமகவிற்கு செல்வதும் அவர்களை பொறுத்தவரை பெரிய விடயமில்லை, ஆனால் அந்த தொகுதியில் பாமக வென்றுவிட்டால் மீண்டும் அதே கூட்டணியானாலும் அதிமுக கூட்டணியானாலும் அதே தொகுதியை கேட்பார்கள், இதனால் அவர்களின் உள்ளூர் அரசியலுக்கு சவாலாக பாமக ஆட்கள் இருப்பார்கள் என்பதே, உதாரணமாக இன்றைக்கு பண்ருட்டி உள்ளூர் அரசியலில் பாமக வேல்முருகனை தவிர்க்க முடியாது, கூட்டணியில் இருந்தாலும் இவர் தோற்றிருந்தால் அடுத்த முறை இதே தொகுதியை கேட்பதற்கு பாமக தயங்கும், ஆனால் இதே தொகுதியில் தொடர்ந்து சில முறைகள் வெற்றிபெற்றுள்ளதால் வருங்காலத்திலும் எந்த கூட்டணியென்றாலும் பண்ருட்டி தொகுதியை பாமக கேட்கும், இது மாதிரியான காரணங்களே திமுகவின் உள்ளடிகளுக்கு காரணம்.

இப்படியான உள்ளடிகள் அதிமுக-பாமக கூட்டணியில் பெரும்பாலும் ஏன் ஏற்படுவதில்லை என்றால் அதிமுகவை பொறுத்தவரை இது மாதிரியான வலுவான தலைவர்கள் மாவட்ட அளவில் இல்லாமலிருப்பது, மேலும் அதிமுகவை பொறுத்தவரை உள்ளூர் அரசியலில் பாமகவினர் அச்சுருத்தலாக இருப்பதில்லை(ராசிபுரம், திண்டிவனம், சிதம்பரம் போன்ற ஒரு சில இடங்களை தவிர), மேலும் பாமகவின் வளர்ச்சி அதிமுகவை பெரும்பாலும் பாதிப்பதில்லை, அதிமுக தலைமையின் மீதிருக்கும் அதிகபட்ச பயம் எல்லாவற்றிற்கும் மேலாக அதிமுக தொண்டர்களிடம் திமுக எதிர்ப்பு என்பது இரத்தத்திலேயே ஊறியது, அதனால் கூட்டணிகட்சி போட்டியிட்டாலும் அதிமுகவினரை பொறுத்தவரை திமுகவினர் வெற்றிபெறக்கூடாது என்று வெறியோடு இயங்குவது, இவைகளே கீழ்மட்ட அளவில் பாமக-அதிமுக கூட்டணியினர் உறுத்தல்கள் இல்லாமல் இணைந்து செயல்பட முடிகின்றது.

மேல்மட்டத்தில் திமுக-பாமக தலைமையின் கருத்தியல்கள், கொள்கைகள் பெரும்பாலும் ஒத்திருப்பது, மேல்மட்டத்தில் இந்த கூட்டணி இயல்பாக தெரிந்தாலும் மாவட்ட, உள்ளூர் அரசியலில் மேற்கூறிய காரணங்களால் மாவட்ட அளவிலான தலைவர்கள், தொண்டர்கள் இணைந்து செயல்படும்போது நிறைய உறுத்தல்கள் உள்ளன, இதுவே "திமுகவில் கலைஞர் அன்பழகன் தவிர மற்றவர்கள் சரியில்லை, அதிமுகவில் ஜெயலலிதா, சசிகலா தவிர மற்றவர்கள் நல்லவர்கள், கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக உயிரை கொடுத்து வேலைசெய்வார்கள் " என்று மருத்தவர் இராமதாசின் வார்த்தைகளாக பேட்டியில் வெளிவந்தது.

திமுக-பாமக தலைமைகள் இந்த கூட்டணி உடைபடாமல் தடுக்க வேண்டுமெனில் செய்யவேண்டியவைகள், மருத்துவர் இராமதாசின் ஆக்ரோசமான வார்த்தைகளுக்கான காரணங்களாக நான் நினைப்பது அடுத்த பதிவில்

திமுக, பாமக வடமாவட்ட அரசியல்

கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட திமுக-பாமக கூட்டணி நான்கு தொடர் தேர்தலுக்கு(ஐந்தாண்டுகளுக்கு) பிறகு அதே உள்ளாட்சி தேர்தலால் விரிசல் ஏற்பட்டுள்ளது, இந்த விரிசல் பற்றி வெகுசன அரசியல் பத்திரிக்கைகள் எழுதுவதைப் போல ஒரு பக்கத்தில் அடக்கினால் சரியான புரிதலை தருமா என்ற சந்தேகத்தில் சற்று விரிவாக எழுத முயற்சித்துள்ளேன்.

வடமாவட்ட அரசியலை தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு திமுக-பாமக கூட்டணி தொடர்ந்து நான்கு தேர்தல்களுக்கு தாங்கியதே ஆச்சரியகரமான விடயம் என்பார்கள், ஏனெனில் வடமாவட்ட அரசியல் அப்படியானது, தேர்தல் அலைகளையும் அசாதாரண சூழல்களையும் விடுத்து பார்த்தால் பொதுவாக வடமாவட்டங்கள் 1990க்கு முன் திமுகவை தேர்தல்களில் ஏமாற்றியதில்லை, எம்ஜிஆர் அவர்கள் திமுகவை பிளந்து அதிமுகவை உருவாக்கிய போது தென்மாவட்டங்களில் திமுக பாதிக்கப்பட்டு நிறைய இழப்பை சந்தித்த போதும் வடமாவட்டங்களில் திமுக பலமாகவே இருந்தது, இதற்கு முக்கிய காரணம் திமுகவிற்கு பலமான வாக்கு வங்கியாக இருந்த வன்னியர் சமுதாயம், அதே சமயம் தலித்களின் வாக்குகள் பெருமளவிற்கு அதிமுகவிற்கு சென்று கொண்டிருந்தது, காங்கிரசுக்கு வன்னியர்களிடமும் தலித்களிடமும் ஆதரவு இருந்தாலும் பல மாவட்ட அளவிலான தலைவர்கள் இவ்விரு சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இல்லை, ஆனால் 1984ல் வன்னியர் சங்கம் வடமாவட்டங்களில் ஒரு பலம்மிக்கதான எழுச்சி ஏற்பட்ட போது கிராம அளவில் திமுகவில் இருந்த பலர் வன்னியர் சங்கத்திற்கு நிறைய வேலை செய்தார்கள், 1987ல் வன்னியர் சங்கத்தின் சாலைமறியல் போராட்டத்தின் போதும் அதன் முன்பும் பிறகும் வடமாவட்டங்களில் திமுகவும் வன்னியர் சங்கமும் பல இடங்களில் மோதிக்கொண்டன, பொதுவாக ஒரு அமைப்போ கட்சியோ வலுவாக உருவாகும் போது அந்த அமைப்பும் ஆளுங்கட்சியும் தான் மோதிக்கொள்ளும், ஆனால் வடமாவட்டங்களில் அந்த காலகட்டத்தில் நடந்ததோ வன்னியர் சங்கமும் அந்த நேரத்தில் எதிர்கட்சியாக இருந்த திமுகவும் பல இடங்களில் மோதிக்கொண்டன.

பாமக என்ற அரசியல் கட்சி 1989ல் உருவாகி சில மாதங்களிலேயே 1989ல் நாடாளுமன்ற தேர்தலையும் சந்தித்தது, சென்னையிலிருந்து தஞ்சை வரை எப்போதுமே திமுகவின் கோட்டையாக இருக்கும், தஞ்சைக்கு தெற்கே கொஞ்சம் கொஞ்சமாக திமுகவிற்கு வலுகுறைந்து வந்து மதுரைக்கு தெற்கே அதிமுக பலமானதாக இருக்கும் 1989 நாடாளுமன்ற தேர்தலில் மொத்த தமிழகத்திலும் திமுக ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை என்றபோதும் முதல் தேர்தலிலேயே பாமக 7%வாக்குகள் வாங்கியதும் வாக்குவித்தியாசம் அதிமுக-காங்கிரஸ் கூட்டணிக்கும் திமுகவிற்கும் இடையே வடமாவட்டங்களில் பல இடங்களில் ஒரு இலட்சத்திற்கும் மேல் இருந்ததற்கு காரணம் பெரும்பாலும் திமுகவிற்கும், கொஞ்சம் காங்கிரசுக்கும் வாக்களித்து வந்த வன்னிய சமுதாயத்தில் பலர் பாமகவிற்கு வாக்களித்தது, திமுகவின் பலமான வாக்குவங்கியாக இருந்த சமுதாயத்தின் வாக்குகளை எப்போது பாமக பிரித்ததோ அப்போதே ஆரம்பமாகிவிட்டது இரண்டு கட்சிகளுக்குமான போட்டி, அன்றிலிருந்து இன்றுவரை வடமாவட்டங்களில் திமுகவை மிதித்துதான் பாமக வளரமுடியும், பாமகவை மிதித்துதான் திமுக இருக்க முடியும் என்ற நிலை, வன்னிய சமுதாயத்தின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டவுடனேயே திமுகவிற்கு வடமாவட்டங்களில் முதலியார்(உடையார்) சமூகத்தின் ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தது( திமுகவின் ஏ.ஜி.சம்பத் கை இறங்கி பொன்முடி கை விழுப்புரம் மாவட்டத்தில் ஓங்கியது இந்த நேரத்தில் தான்), பாமக திமுகவின் வாக்கு வங்கியில் மட்டும் கைவைக்கவில்லை, காங்கிரசிலும் கைவைத்தது, தமிழகம் முழுவதும் ஓரளவிற்கு செல்வாக்காக பெரும்பாலும் எல்லா இடத்திலும் மூன்றாமிடத்தில் இருந்த காங்கிரஸ் பாமகவின் தோற்றத்திற்கு பின் வடமாவட்டங்களில் மூன்றாவது இடத்தை பாமகவிடம் இழந்தது, அதனால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பக்கபலமாக இருந்த ரெட்டியார் சமூகத்தினரும் திமுக பக்கம் சாய ஆரம்பித்தனர், இப்படியாக தொடர்ந்து திமுக வடமாவட்டங்களில் முதலிடத்தில் இருந்தாலும் அதன் வாக்கு வங்கிக்கு கடுமையான சரிவு ஏற்பட்டது முழுதும் சரியாகவில்லை, அதிமுகவிற்கும் இலேசான சரிவிருந்தாலும் அது வெளித்தெரியுமளவிற்கு பாதிப்பில்லை.

சென்ற ஆண்டு மே மாதத்தில் நான் எழுதிய மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல்-2 என்ற பதிவிலிருந்து சிலவரிகளை இங்கே தருகிறேன்.

பாமக உருவானதால் பாதிக்கப்பட்ட கட்சிகள் திமுகவும், காங்கிரசும் தான். வன்னியர்களின் வாக்கு வங்கி திமுகவிடமும்,காங்கிரசிடமும் இருந்தது, ஆனால் பாமக கிட்டத்தட்ட மொத்தமாக அந்த வாக்குவங்கியை தன் பக்கம் திருப்பிக்கொண்டது திமுகவிற்கு அந்த கோபம் இன்னும் இருக்கின்றது, அதுவும் இல்லாமல் இட ஒதுக்கீட்டில் உயிரை கொடுத்து போராடியது வன்னிய இனம் ஆனால் இன்னும் 108 சாதியையும் பட்டியலில் இனைத்தது திமுக அரசாங்கம் அந்த கோபமும் கருணாநிதி அவர்கள் ராசதந்திரமாக நினைத்துக்கொண்டு 1996 தேர்தலிலே செய்த கூட்டணி துரோகமும் இன்றைக்கும் கூட திமுக பாமக விடையே chemistry work out ஆகாமல் இருக்கிறது. திமுக வை எதிர்க்கும் போது பாமகவினர் காட்டும் ஆவேசம், அதிமுக வை எதிர்க்கும் போது காட்டுவதைவிட பல மடங்கு அதிகம்.

2006 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் பதிவுகள் எழுதியிருந்தேன், அப்போது ஒரு அனானி கேட்டார் திமுக-பாமக கூட்டணி தேர்தலில் தோற்றால் என்ன காரணம் சொல்வீர்கள் என்றார், அப்போது பதிலளித்திருந்தேன் திமுக-பாமகவிடம் மேல்மட்ட அளவில் இருக்கும் ஒற்றுமை கீழ்மட்டங்களில் இல்லாததும் உள்ளடி வேலைகளும் தானென்று.

ஏன் திமுக-பாமக கூட்டணியில் மட்டும் இந்த உள்ளடி, இது ஏன் அதிமுக-பாமக கூட்டணியில் இல்லை என்பவர்களுக்கு இந்த உள்ளடி விடுதலை சிறுத்தைகள் - அதிமுக கூட்டணியின் போது நடக்கும், அது தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் நடந்ததும் கூட.

இந்த உள்ளடிகளில் ஏன் பாமகவும், விடுதலைசிறுத்தைகளும் அதிகம் பாதிக்கப்படுகிறது?

பாமக-விடுதலை சிறுத்தைகளுக்கு கூட்டணியில் உள்ள தேர்தல் அழுத்தம் பற்றிய சில அலசல்கள், பாமக திமுக நேரடியாக மோதும் உள்ளூர் அரசியல், சட்டமன்ற உள்ளாட்சி தேர்தல்களில் நடந்த சில உள்ளடிகள்,திமுகவில் கலைஞர் அன்பழகன் தவிர மற்றவர்கள் எல்லாம் மோசம், அதிமுகவில் ஜெயலலிதா, சசிகலா தவிர மற்றவங்கல்லாம் நல்லவங்க, அதிமுக தொண்டன் கூட்டணிக்காக உயிரைக்கொடுத்து வேலை செய்வான் என்று மருத்துவர் இராமதாசு சொன்னதன் பின்னனி, திமுக மாவட்டசெயலாளர்கள் மீதான பாமகவின் விமர்சனங்கள் பற்றிய அலசல்கள் வரும் பதிவுகளில்.

http://www.eci.gov.in/StatisticalReports/LS_1989/Vol_I_LS_89.pdf

பல்லாண்டு வாழ்க



உன் இருப்பே
சிலருக்கு எரிச்சல்

நீ இருக்கவேண்டும்
சிலரின் எரிச்சலுக்காகவேனும்

பில்லி சூனியம் வைத்து
கொல்லமுடிந்திருந்தால்
கொன்றிருப்பார்கள்
உன்னை!

சத்ருநாச யாகம் செய்து
கொல்லமுடிந்திருந்தால்
கொன்றிருப்பார்கள்
உன்னை!

அதிகாரம் கையிலிருந்திருந்தால்
அடித்தே
கொன்றிருப்பார்கள்
உன்னை!

எதுவுமே பலிக்கவில்லை
பாவம்
எண்ணுகிறார்கள் நீ
சாகவேண்டுமென

நீ சாகவேண்டுமென
நினைப்பவர்கள் சிலர்
நீ வாழவேண்டுமென
நினைப்பவர்களோ
சில கோடி

உன் இருப்பே
சிலருக்கு எரிச்சல்

அதற்காகவே
நீ
வாழ்க பல்லாண்டு

பின்குறிப்பு:
மனவிகார பின்னூட்டங்கள் வெளியிடப்படாது, அதற்கு வேறு இடம் பார்க்கவும்

முட்டை ரவி இன்னுமொரு என்கவுண்டர்

என்கவுண்டர்கள் நடந்தன, என்கவுண்டர்கள் நடக்கின்றன, என்கவுண்டர்கள் நடக்கும், ஆனால் ரவுடிகள் பிறந்து இறந்து கொண்டேயிருப்பார்கள், இறந்து பிறந்து கொண்டே இருப்பார்கள், எந்த என்கவுண்டர்களும் ரவுடிகளின் பிறப்பை தடுப்பதில்லை.

முட்டை ரவி, திருச்சி வட்டாரத்தை அதிரவைத்த ரவுடி, சமீபத்தில் காவல்துறையின் துப்பாக்கி குண்டுகள் முட்டை ரவி கதையை முடித்தன, வழக்கம்போல கதை, திரைக்கதை வசனங்கள், ஒவ்வொருமுறை ஏதேனும் ஒரு ரவுடி சுட்டுக்கொல்லப்படும் போது 'ஸ்ப்ப்பா' ஒழிந்தான் என்று சொல்லிவிட்டு மிச்சமிருக்கும் 'ஸ்ப்ப்பாவை' அடுத்த ரவுடிக்கு மிச்சம் வைத்துவிட்டு நாமும் நம் வேலையை பார்க்கிறோம்.

சொல்லித்தான் அடிக்கிறார்கள், திருச்சி டி.ஐ.ஜி. பேட்டியை சில வாரங்களுக்கு முன் படித்தபோதே துப்பாக்கியை துடைத்துவிட்டார்கள் என்றே தோன்றியது, முட்டை ரவியின் வீரபிரதாபங்கள் தொடர்ந்து பத்திரிக்கைகளில் வந்தபோதே அடுத்தது முட்டை ரவிதான் என்ற சந்தேகம் தோன்றியது, சென்ற ஆண்டு இதே மாதிரி தொடர்ந்து தாம்பரத்தை சேர்ந்த 'சின்ன' என்று ஆரம்பிக்கும் ஒரு ரவுடியின் பிரதாபங்கள் பற்றி பத்திரிக்கைகளில் சில வாரங்கள் வந்தது, கடைசியாக அந்த ரவுடியின் என்கவுண்டர் சேதியோடு முடிந்து போனது.

அடே திரும்பி பார்த்தால் லண்டன் தெருகளிலும் ரவுடிகளாம். ஜீவியில் சொல்லியிருக்கிறார்கள்.



தமிழ்திரைப்படங்கள் ரவுடிகளையும் தாதாக்களையும் நாயகர்களாக சித்தரிப்பதும், பத்திரிக்கைகள் ரவுடிகளைப்பற்றி உயர்வாக தொடர்கள் எழுதுவதும் (எ.கா. லிங்கம் பற்றிய ஜீ.வி. தொடர்) போன்றவைகள் மேலும் மேலும் பள்ளி, கல்லூரி வயதில் ரவுடிகளாகவும் தாதாக்களாகவும் தூண்டுகோலாகின்றன, சிந்திக்க இயலாத பதின்ம வயதில் எல்லோருக்குமே ஏதோ ஒரு கணம் இப்படியான எண்ணங்கள் வந்திருக்கும், 'தளபதி' படம் பார்த்து கடலூரை கண்ட்ரோல் செய்யவேண்டுமென்று பேசியவர்களில் ஒருவனுக்கு சரியான நண்பர்கள், நல்ல பெற்றோர்கள் வழிகாட்டுதலில் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற இன்னொருவன் இது எதுவும் வாய்க்காமல் கடலூரை கண்ட்ரோல் செய்கிறேன் என்று வாழ்நாளை வீணாக்கிக் கொண்டுள்ளான்.

புதுப்பேட்டை மாதிரியான படங்கள் ரவுடியிசத்தின் கொடூரத்தை காண்பித்து தாதாக்கள் பற்றிய கனவை தகர்க்கின்றது, ஆனால் இது மாதிரியான படங்கள் அரிதினும் அரிதாகவே அமைகின்றன, தளபதி தேவா சூர்யாவும், வேலுநாயக்கனும், ரெட் டும் இன்னும் அரிதார ரவுடிகள் எத்தனை எத்தனை குடியை கெடுத்தனவோ? முட்டைரவிக்கள் சுட்டுத்தள்ளப்படும் போது ஒழிந்தான் என்று மகிழ்ந்து கொண்டும் நம்ம வீட்டு பையன் ரவுடி ஆவதை விரும்பவில்லை என்றாலும் தாதா ரவுடிப்படங்களென்றால் மினிமம் கியாரண்டி வெற்றியை தருகிறோமே, அரிதார ரவுடிகளுக்கு பணம் தான் முக்கியம் ஆதலால் அவர்கள் இதை விட்டு வெளிவரமாட்டார்கள் ஆனால் நமக்கு நம் பிள்ளைகள் முக்கியமில்லையா? இன்னமும் அரிதார ரவுடிகளுக்கு வாழ்வளிக்க வேண்டுமா?

அடுத்ததாக ஜீவியில் இன்னுமொரு செய்தி, 'தமிழ்த்தாய் கேபிள் விஷன்' நிர்வாகியான யுவராஜ் சேனல்போட்டி காரணமாக பொய் வழக்கில் கைது செய்யப்பட்டதான குற்றச்சாட்டை மாவட்ட எஸ்.பி.துரைக்குமாரிடம் ஜீவி கேட்டபோது அவர் சொன்ன பதிலை பாருங்கள்.


மேலிடத்தின் பிரஷர் என்றால் வேறு வழக்கில் கூட உள்ளே தள்ளலாம், என்று ஒரு பத்திரிக்கையிலே கூறுகிறார், அதையும் இந்த பத்திரிக்கைகள் எந்த ஒரு சின்ன கண்டனமும் தெரிவிக்காமல் பத்திரிக்கையில் போடுகின்றன. பகத்சிங் காலத்திலிருந்து இன்று வரை காவல்துறை மட்டும் மாறவேயில்லை.

இன்று முட்டை ரவி சுடப்பட்ட என்கவுண்டர்களை ரவுடிகள் என்று நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம், ஒரு அரசாங்கம் ஒரு ரவுடியை அழிக்க முறையற்ற வழியில் துப்பாக்கி எடுப்பதை சந்தோசமாக ஒழிந்தான் என்று சொல்லலாம், அதற்கு ஆயிரம் நியாயங்கள் கற்பிக்கலாம், சரிதான் எனலாம்.

ரவுடிகளை சரியான முறையில் கைது செய்யமுடியததை, சரியான முறையில் வழக்கு நடத்தமுடியாததை, சரியான முறையில் தண்டனை வாங்கித்தரமுடியாததை, சரியான சிறை தண்டனை சூழல் அமைக்க முடியாததை எல்லாம் கண்டிக்க முடியாது அதனால் அரசு துப்பாக்கி தூக்குவதையும் கண்டிக்க முடியாது எனலாம், ஆனால் நியாயமான போராட்டங்களையும் கூட அடக்க போலீஸ் ஸ்டேசன் என்றால் என்ன என்றே தெரியதவர்களுக்கும் கூட நள்ளிரவு கைதுகளை அரசாங்கத்தால் உணர வைக்க முடிந்தது, பத்திரிக்கையாளனை பொடாவில் போட முடிந்தது, போராட்டத்தை அடக்க சாதிக்கலவரத்தை தூண்டமுடிந்தது.

நமக்கு பிடிக்காதவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக அரசாங்க அத்துமீறல்களை நாம் கைதட்டி வரவேற்றால், அரசாங்கத்திற்கு பிடிக்காத அரசாங்கத்தால் சமாளிக்க முடியாத நபர்களின் நியாயமான பிரச்சினைகளுக்காக போராடுபவர்களை நோக்கி(அது நீங்களாக கூட இருக்கலாம்) அதே முறையற்ற அரசாங்க அத்து மீறல்கள் திரும்பும்போது நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.

விஜயகாந்த், இனி ஊடகங்கள்

மதுரை இடைத்தேர்தலும் உள்ளாட்சி தேர்தலும் சிலருக்கு கடும் அதிர்ச்சியை அளித்திருக்க கூடும், எந்தெந்த கட்சி வாக்கு வங்கிகளுக்கு உலை வைக்கும் என பத்திரிக்கைகள் எழுதிய செய்திகள் பொய்யாகி இன்று அதிமுகவின் வாக்கு வங்கிக்கு உலைவைத்திருக்கிறது விஜயகாந்த் கட்சி, வெறுமனே மதுரை இடைத்தேர்தலை வைத்து விஜயகாந்த் அதிமுக வாக்கு வங்கியை கபளீகரம் செய்துவிட்டார் என்று சொல்ல இயலாது, மதுரை விஜயகாந்தின் சொந்த ஊர் மற்றும் பொதுவாகவே நகரங்களில் புனித பிம்ப வாக்காளர்கள் அதிகம், இருந்த போதிலும் உள்ளாட்சி தேர்தலையும் வைத்து பார்க்கும் போது விஜயகாந்த் கட்சி அதிகம் வேட்டு வைத்தது அதிமுக வாக்கு வங்கிக்கே.

பத்திரிக்கைகள் விஜயகாந்தினால் நடக்க வேண்டும் என்று நினைத்தது.

1. பாமக, விடுதலை சிறுத்தைகளின் வாக்கு வங்கியில் பெரும்பாதிப்பு ஏற்படுத்துவார்

2. அதிமுக, ஜெயா எதிர்ப்பு வாக்குகள் திமுக விற்கு செல்லாமல் விஜயகாந்த்துக்கு செல்லும், எனவே ஜெயா எதிர்ப்பு வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த திமுகவிற்கு பாதிப்பு ஏற்படும்

3. திமுக, அதிமுக இரு கட்சிகளின் மீதும் வெறுப்பு கொண்டவர்கள் விஜயகாந்த்துக்கு வாக்களிப்பார்கள்.

4. விஜயகாந்தை புனித பிம்பமாக உருவகப்படுத்துவதன் மூலம், ஜெயா ஊழலுக்கு கலைஞர் பரவாயில்லை என்பவர்களின் வாக்குகளை உள்ளிழுக்க முடியும்.

5. படித்தவர்கள் விஜயகாந்திற்கு வாக்களிப்பார்கள், இப்போதைக்கு பெரும்பாலான படித்தவர்கள் வாக்கு திமுகவிற்கு விழுகின்றது.

ஆக மொத்தத்தில் எப்படியும் திமுகவின் வாக்கு வங்கிக்கு உலை வைக்கும் விஜயகாந்த் கட்சி என்று நம்பியிருந்தனர்.

ஆனால் நடந்தது என்ன?

1. பாமக, விடுதலை சிறுத்தைகளின் வாக்கு வங்கியில் எந்த பாதிப்பும் இல்லை, ஏனெனில் இன்றைய நிலையில் தமிழகத்தில் இருக்கும் கலக கட்சிகள் என்றால் இவை இரண்டும் தான், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட இந்த இரு கட்சிகளோடு பார்க்கும் போது பொது மக்கள் பார்வையில் கலக கட்சிகளாக இல்லை, பொதுவாக கலக கட்சிகளில் வெகு சனங்களின் பங்களிப்பு இருக்காது அல்லது மிகக்குறைவாகவே இருக்கும், அவை முழுக்க முழுக்க கட்சி சார்ந்தவர்களினாலேயே இயங்கும், இருக்கும், அதனாலேயே இந்த இரு கட்சிகளின் வளர்ச்சியும் குறைவாக இருக்கும், தேய்வும் குறைவாகவே இருக்கும், விஜயகாந்த் முழுக்க முழுக்க புனித பிம்பமாக உருவகப்படுத்தப்பட்டவர், ஆனால் பாமக, விடுதலை சிறுத்தை ஆதரவாளர்கள் புனித பிம்பங்களுக்கு மயங்குபவர்கள் என்றால் அவர்கள் முதலில் பாமக, விசி ஆதரவாளர்களாகவே இருந்திருக்க மாட்டார்கள்.

2. ஜெயா எதிர்ப்பு வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கு பதிலாக, திமுக, கலைஞர் எதிர்ப்பு வாக்குகளை இதுவரை மொத்தமாக அறுவடை செய்துவந்த அதிமுகவின் அறுவடையில் பங்கு போட்டுக்கொண்டார் விஜயகாந்த்.

3. திமுக, அதிமுக இரு கட்சிகளின் மீதும் வெறுப்பு கொண்டவர்கள் விஜயகாந்த்துக்கு வாக்களித்தனர்.

4. படித்தவர்கள் வாக்குகளை விஜயகாந்த் குறிப்பிட்ட அளவு திருப்பியிருக்கிறார் என்றாலும் விஜயகாந்த் எப்படி தான் சொல்வதை செய்யப்போகிறார், இடஒதுக்கீடு, மொழி சார்ந்த விடயங்களில் கள்ள மவுனம் சாதிக்கிறார்(இந்த கள்ள மவுனத்தினாலேயே சில படித்தவர்கள் விஜயகாந்தை ஆதரிக்கிறார்கள்), என்ன வித்தியாசம் காண்பிக்கிறார் விஜயகாந்த் என எண்ணி பார்த்தால் அவர்களின் வாக்குகள் விஜயகாந்திற்கு விழுமா என்பது சந்தேகமே?

எப்படியாயினும் இடைத்தேர்தல், மற்றும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஒன்றை மட்டும் தெளிவு படுத்துகின்றன, விஜயகாந்து கிண்டிய அல்வா திமுக, விசி, பாமகவிற்கு அல்ல, அது அதிமுகவிற்கு என்பது.

பத்திரிக்கைகள் விஜயகாந்த் மீது ஏற்படுத்தி வந்த புனித பிம்ப உருவாக்கத்தை தொடருவார்களா? பாமக, திமுக, விசி வாக்கு வங்கிகளுக்கு விஜயகாந்த் உலை வைத்திருந்தால் நிச்சயம் இதை தொடருவார்கள், ஆனால் விஜயகாந்த் அதிமுக வாக்கு வங்கியில் கை வைத்ததினால் இதை தொடருவார்களா? விஜயகாந்த் VS ஜெயலலிதா என்பதான ஒரு நிலையை உருவாக்க நினைத்திருந்தார்கள், ஆனால் இந்த இருவர்கள் மோதலில் தனிப்பெரும் கட்சியாக அறுவடை செய்யபோவது திமுக என தெரியும் போதும் விஜயகாந்த்தை தூக்கிவிடுவார்களா பத்திரிக்கைகள்?


உள்ளாட்சி தேர்தலிலும் 4176 நகராட்சி வார்டுகளில் வெறும் 100 வார்டுகளையும், 7789 பேரூராட்சி வார்டுகளில் வெறும் 107 வார்டுகளையும் 589 மாவட்ட பஞ்சாயத்தில் வெறும் 13ம் 318 மாநகராட்சி வார்டுகளில் வெறும் 16 வார்டுகளை மட்டுமே பெற்றுள்ளார், விஜயகாந்த் கட்சி நகரங்களில் பெற்ற வெற்றி கூட பேரூராட்சிகளிலும் கிராமங்களிலும் பெறவில்லை, எனவே அதிமுக வாக்கு வங்கியில் பெரும் சேதம் விளைவித்துள்ளாரா என்பது போகப்போகத்தான் தெரியும் ஆனால் நகரங்களில் அதிமுக வாக்கு வங்கிக்கு நிச்சய சேதத்தை உருவாக்கியுள்ளார் விஜயகாந்த்.

1989க்கு பிறகு அனைத்து பத்திரிக்கைகளிலும் அட்டைப்படங்களிலும் ஜெயலலிதா தான், அவர் முதல்வராகும் வரை இது தொடர்ந்தது, இன்றும் அதையே விஜயகாந்துக்கு செய்கின்றன விகடனும் குமுதமும், இதனால் பாதிக்கப்படப்போவது ஜெயலலிதா, இதனால் ஆதாயம் அடைவது திமுக என்றானால் இனி செய்வார்களா?

விஜயகாந்தும் ஜெயலலிதாவும் ஒரே அணியில் இருக்க செய்ய சிலர் முனைவார்கள், ஆனால் கூட்டணி என்பது விஜயகாந்த்தை பொறுத்தவரை தற்கொலை முயற்சி என்பது அவருக்கு தெரிந்திருக்கலாம், திமுக, அதிமுக இருவரும் வேண்டாமென்பவர்களே அவரின் பலம், எங்கேயாவது கூட்டணி என்று சாய்ந்தால் விஜயகாந்த்க்கு கணிசமான வாக்கு சரிவு ஏற்படும். ஆதலால் கூட்டணி முயற்சி எத்தனை தூரம் என்பது சந்தேகமே

இனி அச்சு ஊடகங்கள் விஜயகாந்தின் புனித பிம்பத்தை உடைக்கும் முயற்சிகளில் இறங்கும் வாய்ப்பிருக்கிறது, உடனடியாக இல்லையென்றாலும் இவரும் மற்றவர்களைப்போலத்தான், இவர் கட்சியின் கு.ப.கிருஷ்ணன் போன்ற முன்னாள்களின் முகங்களை போட்டு இவர்களை வைத்துக்கொண்டா ஊழலை ஒழிக்கப்போகிறார், ஓட்டுக்கு பணம் கொடுத்த விஜயகாந்த் கட்சியினர், கட்சியில் குடும்பத்தின் தலையீடு, நாயக்கர் சாதி(விஜயகாந்தின் சாதி) ஆட்கள் கட்சியின் 14 மாவட்ட செயலாளர்களாக இருப்பது, இதுவரை தமிழ்முரசு நிருபர்கள் விஜயகாந்திடம் இடஒதுக்கீட்டில் உங்கள் நிலைஎன்ன என்று கேள்வியெழுப்பினார்கள், இனி அந்த வேலையை மற்ற பத்திரிக்கைகளும் எடுத்துக்கொள்ளும், தேர்தல் தோல்வியால் கொலைசெய்த விஜயகாந்த் கட்சியினர், மன்றத்தில் தொடக்கத்தில் இருந்து உழைத்தோம், கட்சியில் இடம் தரவில்லை என பேட்டியளிக்கப்போகும் மன்றத்து ஆட்கள் என அத்தனையையும் நோண்டியெடுத்து அடுத்த தேர்தலுக்கு முன் விஜயகாந்தின் புனித பிம்பத்தை உடைப்பார்கள், ஏனெனில் விஜயகாந்தினால் ஏற்படும் ஜெயலலிதாவின் சரிவை அவர்களால் தாங்க இயலாது BLOOD IS THICKER THAN WATER

ஜெயா தொலைக்காட்சி என்ன செய்யுமென்றால் இனி கலைஞரையோ திமுகவையோ விஜயகாந்த் எத்தனை தான் விமர்சித்தாலும் அதை காண்பிக்கவே காண்பிக்காது, இனி விஜயகாந்த் முகம் ஜெயா தொலைக்காட்சியில் தெரிய வாய்ப்பில்லை

இதுவரை விஜயகாந்த் முகத்தையோ செய்தியையோ காண்பிக்காத சன் டிவி என்ன செய்யுமென்றால் இனி ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் மாறி மாறி விமர்சிப்பதை காண்பிக்கும், இனி அடிக்கடி விஜயகாந்த்தை சன் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.( கலைஞர் திமுக எதிர்ப்பு வாக்குகளைப்போலவே ஜெயலலிதா எதிர்ப்பு வாக்குகளும் உள்ளது அதை இது வரை அறுவடை செய்தது திமுக, ஆனால் வருங்காலத்தில் இதில் விஜயகாந்த் பங்கு போடலாம்)

அனேகமாக அரசியலில் விஜயகாந்தின் தேனிலவு காலம் முடிந்து விட்டது எனலாம், அடுத்த தேர்தலுக்கு இன்னும் மூன்றாண்டுகள் உள்ளன, அதுவரை உள்ளாட்சி தேர்தலிலும் கூட பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில், வாக்களிக்க மட்டுமே வரும் படித்த ஆதரவாளர்கள், மற்ற கட்சிகளில் அரசியல் வாழ்விழந்தவர்களுக்கு புகலிடம் அளித்துள்ள விஜயகாந்த் அதிகாரம் கையில் இல்லாமல் இவர்களை சமாளிக்கப்போவது, அதிமுகவின் எதிர்ப்பு, பத்திரிக்கைகள் எடுக்கப்போகும் நிலை, வருமானம் எதுவுமில்லாமல் கட்சி நடத்த தேவைப்படும் பணம், இவை அத்தனையும் சமாளித்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்த சட்டமன்ற தேர்தல் வரை தாக்கு பிடித்தால் விஜயகாந்த் நிச்சயம் தமிழக அரசியலில் ஒரு இடத்தை பிடிப்பார், இப்போதைக்கு வைகோவை காலி செய்துவிட்டார் என்பது மட்டும் உண்மை.

தீபாவளி தீபாவளியாம்




இந்த ஆண்டும் சிங்கப்பூர் குட்டி இந்தியா பகுதி வழக்கம் போல தீபாவளிக்காக அலங்கரிக்கப்ப்ட்டிருந்தன, சென்ற ஆண்டு அலங்காரம் பற்றிய கட்டுரை இங்கே, சென்ற ஆண்டு அலங்காரம் வெள்ளையானை, இந்த ஆண்டு தோகை விரித்த மயில். சனியிலிருந்து செவ்வாய் வரை நான்கு நாட்கள் விடுமுறை, தீபாவளியன்று காலையிலிருந்தே வந்து கொண்டிருந்து தீபாவளி வாழ்த்து குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்காமல் தொலைபேசியில் வந்த சில தீபாவளி வாழ்த்து செய்திகளுக்கு மறுவாழ்த்து சிலருக்கு சொல்லி, சிலருக்கு சொல்லாமல் என ஒரே தத்துவ சொதப்பல்.


பல மொழிகளில் வாழ்த்துகள்









பொதுவாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிங்கப்பூரின் புலாவுபின் தீவிற்கு சென்று இயற்கையை ரசிப்பது வழக்கம், அன்றும் புலாவுபினுக்கு ஊர் நண்பர்களோடு கிளம்பினோம், புலாவுபின் தீவு காங்கிரீட் கோபுரங்கள் இல்லாத, இயற்கையாக காட்டு பகுதி மாதிரியான ஒரு பழைய சிங்கப்பூரை கண் முன் நிறுத்தும், மோட்டார் படகில் அந்த தீவிற்கு செல்லவேண்டும், அந்த தீவில் மிதிவண்டியை வாடகைக்கு எடுத்து சுற்றி வருவார்கள், மற்றவர்கள் மிதிவண்டி வாடகைக்கு எடுத்தபோது நான் மட்டும் நீங்கள் செல்லுங்கள் என்றேன், என் குட்டி பூர்ஷ்வா வாழ்க்கைக்கு கொடுத்த விலை கடந்த சில வருடங்களாக இருக்கும் என் முதுகுவலி, தினம் வாடகைக்காரில் உடன் வேலை செய்பவருடன் அலுவலகம் சென்று வந்தேன், சில மாதங்களுக்கு முன் Peak hour sur charge ஒரு சிங்கப்பூர் வெள்ளியிலிருந்து இரண்டாக உயர்த்தப்பட்டது, தினம் பயண செலவு இரண்டு வெள்ளி கூடுதலானது, சரி இனி மிதி வண்டியில் செல்வோம், வீட்டிலிருந்து ஒன்னரை கிலோமீட்டர் தூரம் தானே என்று அன்றே ஒரு புது மிதிவண்டி வாங்கி ஒரு நாள் மட்டுமே ஓட்டி விட்டு வந்து சேர்ந்தபோது மறு நாள் அலுவலகம் செல்லமுடியாத அளவிற்கு முதுகுவலி, இது மூன்றாம் மாதம் பிசியோதெரபிக்கு சென்று கொண்டிருக்கின்றேன், மருத்துவத்திற்கு இப்போது செலவழித்த பணம் இந்த ஆண்டு முழுமைக்கும் நான் வாடகை காரிலேயே அலுவலகம் சென்றிருக்கலாம், அதனால் மீண்டும் முதுகுவலியை மோசமாக்க விரும்பாமல் நண்பர்களை மட்டும் மிதிவண்டியில் சுற்றிவர நான் தீவினுள் நடக்க ஆரம்பித்தேன்.

சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர், பலர் மிதிவண்டியில் சுற்றி வந்தனர், சிலர் மிதிவண்டியை நிறுத்தி காதல் செய்து கொண்டிருந்தனர், மேலும் நடந்து வர, இருவர் அடித்த மப்பில் பாதையோரமாகவே சாய்ந்து கிடக்க அவர்களை எழுப்பும் முயற்சியில் மேலும் இருவரென, நால்வரும் தமிழ்கூறும் நல்லுலகை சேர்ந்தவர்கள்.

சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு மீண்டும் படகை பிடித்து நகரினுள் நுழைந்தோம். மேலும் படங்கள் இங்கே