பதிவுலகில் வினவு என்கிற அரசியல் ரவுடிகளை நாட்டாமை செய்ய அனுமதிக்காதீர்கள்

எக்காரணம் கொண்டும் சந்தனமுல்லைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக எழுப்பப்படும் குரல்களை எக்காரணம் கொண்டும் பலவீனப்படுத்தவோ அல்லது மையப்பிரச்சினையிலிருந்து வேறுபகுதிக்கு பிரச்சினை திரும்ப கூடாது என்றுமே வினவுவின் சில செயல்பாடுகள் குறித்து எமக்கு கருத்துவேற்றுமை இருந்தாலும் பொறுமை காத்து அடுத்தவாரத்திற்க்கு அதைப்பற்றி விவாதிக்கலாம் என தள்ளிவைத்திருந்தேன்.

சந்தனமுல்லைக்கு நீதி வழங்குகின்றோம் பேர்வழி என்று வினவு நாட்டாமைகள் சொம்பை தூக்கிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பதிவுலகை ஆக்கிரமிக்க முயற்சித்து பதிவுலகை தம் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயல்கின்றார்களோ என்கிற சந்தேகம் உண்டு...

இங்கே வலையுலகில் மிகதைரியமாக கருணாநிதியையும், ஜெயலலிதாவையும், ராமதாஸையும், திருமாவையும் இன்னபிறரையும் கடுமையாக விமர்சிக்க இயலுகிறது என்றால் விமர்சிப்பவர்கள் வீராதி வீரர்கள், புரட்சிகர சூரர்கள் என்று பொருள் அல்ல, இவர்களெல்லாம் நம் பக்கம் பார்வையை திருப்பவில்லை அல்லது கண்டுகொள்ளவில்லை என்று பொருள். அமைச்சர் ஆ.ராசாவும் வலைப்பதிவு வைத்திருக்கிறார், எஸ்.வீ.சேகரும் வலைப்பதிவு வைத்திருக்கிறார், அதற்காக அவர்கள் நம்மை போன்ற பதிவர்கள் ஆகிவிடுவார்களா? ரேடான் டிவியும் தான் வலைப்பதிவு வைத்திருக்கிறார்கள்... இவர்கள் எல்லாம் அரசியல்வாதிகள், தொழில்காரர்கள் தங்கள் வலைப்பதிவுகளில் தங்கள் அரசியலையும் தொழிலையும் வளர்க்க பயன்படுத்துகிறார்கள்.

வினவு யார்? வலைப்பதிவரா? ம.க.இ.க.வா? குழுப்பதிவா? குழுப்பதிவென்றால் அதை ஆரம்பித்தவர் யார்? ஏன் ராஜ்வனஜ்,தியாகு போன்ற முகம் காட்டிய தோழர்களாக இல்லாமல் முகம் காட்டாத அசுரன்,அரைடிக்கெட்டு இன்னும் என்னென்னமோ பெயரில் வருகிறார்கள்? வலைப்பதிவில் அரசியல் உண்டு, ஆனால் வலைப்பதிவே அரசியலுக்காக என்றில்லை...

நான் ம.க.இ.க வை விமர்சிக்கும்போது எனக்கு வந்த மிரட்டல் போன்களுக்கு நியாயம் கேட்க யாரிடம் போவது? தியாகுவிற்க்கு வந்த மிரட்டல்களுக்கு எங்கே போவது? வினவிடமா? பதிவுலகில் இன்று வெறும் மிரட்டல்களோடு நிற்கும் இந்த வினவு கும்பல் நாளை மகஇக வை விமர்சித்து எழுதுபவர்களுக்கு வேறுவிதமான தொல்லை தந்தால் என்ன செய்வது? ஒருவேளை ஒருவேளை தான் சொல்கிறேன் ம.க.இ.க வை எதிர்கொள்ளும் அளவிற்க்கு ஆற்றலுடைய கட்டப்பஞ்சாயத்து ஆட்களையோ அல்லது வினவு கும்பலையும் விட அதிகமான பலமுள்ள விடுதலைசிறுத்தைகள்,பாமக,திமுக,அதிமுக கட்சிகளின் ஆட்களையோ முடிந்தால் அழைத்துக்கொண்டு பேசப்போகலாமா?

அப்போ இப்போதிருக்கும் பதிவுலக சுதந்திரம் என்ன ஆகும்? வேண்டாம் இந்த வினவு அரசியல் ரவுடி கும்பலை நாட்டாமை செய்ய அனுமதித்தால் ஒட்டகம் கூடாரத்தில் புகுந்த கதையாகிவிடும்...

இன்னும் லீனாமணிமேகலை பற்றி வினவின் ரவுடித்தனம், சந்தனமுல்லையையும் விட மூர்க்கமாக சித்திரவதைகளை அனுபவித்த போலி பிரச்சினையின் போது கள்ள மெளனம் காத்த வினவு கும்பல், அப்போது அது தொடர்பாக ஒரு தோழரிடம் கேட்டபோது நானும் கேட்டேன் தோழர் இது பற்றி எழுதினால் உலகில்வேறு பிரச்சினையே இல்லையா என்பது மாதிரி ஆகிவிடும் அதனால் வேண்டாம் என்றார்கள் என கூறியது, மேலும் விரிவாக பலவிடயங்களை அடுத்த வாரத்திற்க்கு வைத்திருந்தேன் ஆனால் தற்போது அதையெல்லாம் எழுத நேரமின்றி பதிவு போடும் நிலை.

பிரச்சினையில் தொடர்புடையவர்கள் என்ன செய்வது என்று முடிவு செய்துகொள்ளட்டும், இல்லையென்றால் காவல்துறையை அணுகட்டும், அதைவிடுத்து கட்டப்பஞ்சாயத்துகளுக்கு அனுமதிப்பது பதிவுலகிற்க்கு பெரும் கேடு விளைவிக்கும் என்று அச்சப்படுகிறேன்...

இது தொடர்பாக இண்ஸ்டண்ட் குற்றச்சாட்டாக சாதிவெறியன், ஆணாதிக்க திமிர் என்றெல்லாம் பட்டம் கொடுக்க வேண்டாம் வேறு ஏதேனும் புதுசாக கொடுக்கவும்

பிற்சேர்க்கை
-----------
சந்தனமுல்லை அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடுவதில் பங்கு வகித்த வினவுவின் நடவடிக்கைகளை சந்தனமுல்லை விசயத்தில் நிச்சயம் நான் ஆதரிக்கிறேன்... இந்த பிரச்சினையை நான் வேறு திசையில் திருப்ப கூடாது என்பதால் இன்னும் ஒரு வாரம் காத்திருக்கிறேன்... அடுத்த வாரம் வினவு ஆணாதிக்கம் பற்றி பேச இருக்கும் தகுதிகள், லீனா மணிமேகலையிடம் மகஇக கும்பல் நடந்துகொண்ட ரவுடித்தனம், வலையுலகிலிருந்து பல்வேறு பெண்பதிவர்களை விரட்டியடித்த போலி பிரச்சினையின் போது திருட்டு மவுனம் காத்த வினவு கும்பல் பற்றியெல்லாம் விரிவாக பேசுவோம்...

53 பின்னூட்டங்கள்:

said...

+ போட்டாச்சு

said...

தோழர் குழலி, இந்த விஷயத்தில் உங்களுடன் உடன்படுகிறேன்

said...

//அப்போ இப்போதிருக்கும் பதிவுலக சுதந்திரம் என்ன ஆகும்? வேண்டாம் இந்த வினவு அரசியல் ரவுடி கும்பலை நாட்டாமை செய்ய அனுமதித்தால் ஒட்டகம் கூடாரத்தில் புகுந்த கதையாகிவிடும்...//

உடன்படுகிறேன். லீனாவிசயத்தில் இவர்கள் மன்னிப்பு கேட்காதவரையில் இவர்கள் செய்வது வெறும் நாட்டமை தனம் என்பது தவிர்த்து வேறென்றும் சொல்வதற்கில்லை.

said...

//இது தொடர்பாக இண்ஸ்டண்ட் குற்றச்சாட்டாக சாதிவெறியன், ஆணாதிக்க திமிர் என்றெல்லாம் பட்டம் கொடுக்க வேண்டாம் வேறு ஏதேனும் புதுசாக கொடுக்கவும்//

சிங்கப்பூர் சீமான் குழலி வாழ்க.
:)

said...

உயிர்மையில் கருத்துசுதந்திரம் என்னும் கெட்ட வார்த்தை என்று ஒரு கட்டுரை அதில் காலச்சுவடு கண்ணன் பற்றி எழுதும்போது எழுத்தாளர்கள் உலகம் வேறு உலகம் என்பார்... அது போல பதிவுலகில் வினவு குரூப் ஆதிக்கம் செலுத்தி நாட்டாமை காண்பித்தால் நாளை மகஇக கடந்தகாலங்களில் வீடு புகுந்து அடித்தவர்கள் கூட ஆதிக்கம் செலுத்த வர முயல்வார்கள்... அப்புறம் அவர்களை ஆதிக்கம் செலுத்த இன்னும் அதிகார பலம் உள்ளவர்கள் என பதிவுலகம் வேறு கட்டத்துக்கு போய்விடும்... ப்ளீஸ் வேண்டாம் இந்த பதிவுலகம் சில பலவீனங்களோடும் பல பலங்களோடும் இயங்கிக்கொண்டுள்ளது அதை சுத்தமாக நாசம் செய்துவிடாதீர்கள்...

said...

ஆணாதிக்க வாதி குழலி,
தனக்காக மட்டுமே சிந்திப்பவர் குழலி
சுயநலவாதி குழலி

இதெல்லாம் உங்களுக்கு விரைவில் கிடைக்கப் போகும் பட்டங்கள்.

said...

http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=2900

said...

லீனா விசயத்தை விடுங்க, இப்ப போற போக்குல மங்களூர் சிவா பேற சொன்னானுங்களே, அதுக்கு அவரு எத்தன பதிவ போட்டாரு? ஒரு பதிலும் சொல்லலைல இன்னும்?

சிவா வீட்ல பொண்ணுங்க இல்லையா? அவர் குடும்ப பொண்ணுங்க இத படிச்சுட்டு எவ்ளோ கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்கன்னு யோசிச்சாங்களா?
சந்தன முல்லைக்காக போராடுவதில் இவர்களுக்கு இருக்கும் நியாயம் சிவா வீட்டுப் பெண்கள் விசயத்தில் ஏன் வரலை?

இது இருவரின் தனிப்பட்ட பிரச்சனை. சந்தன முல்லை அவரது கணவர் எழுதிய பதிவை கூட புறக்கணித்துவிட்டார். அவர் தான் முடிவெடுப்பேன் என்று சொல்லும் அளவுக்கு மிகத் தெளிவுடன் இருக்காங்க. பின்ன ஏன் இன்னும் இவங்க பின்பாட்டு? நர்சிம் & சந்தமுல்லை விவாகரத்தை விடுங்கள். அது அவர்கள் இருவரும் பேசி முடிவெடுக்கட்டும். அதில் இனி நுழைய யாருக்கும் இடமில்லை.

இப்ப இவரு பதிவுல லதானந்த், அபி அப்பா , மங்களூர் சிவா இவர்கள் பெயரை சொன்னது எந்த அடிப்படையில் என சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள். சொல்லமல் சும்ம அவங்க க்ரூப்புல இருக்கவங்க எல்லாம் ஆளுக்கு ஒரு பதிவு போட்டுக்கிட்டே இருக்கதுல அர்தமில்ல.

பாவம் செய்யாதவன் கல்லெறியட்டும், அட்லீஸ்ட் செஞ்ச பாவத்துக்கு பிராயசித்தம் செஞ்சுட்டாவது கல்ல எடுக்கட்டும்.

said...

Do you think this is the freedom?Anybody can write anything? Atleast we some censor in the blog?
Thanks
Sangamithra

said...

அற்புதம் தலீவா.. சின்ன பதிவானாலும் அழகா சுருக்கமா சொல்லிட்டிங்க.. உங்களோடு முற்றிலும் உடன்படுகிறேன்..

said...

போற போக்குல, யாரையாச்சும் அது பண்ணாங்க இது பண்ணாங்கன்னு 4 காட்டு காட்டனும் தல.. அதான் இப்போ ட்ரெண்ட்.. ஆதாரம் கேட்டா, அவங்களுக்கு சேதாரம் ஆய்டும்னு எஸ்கேப் ஆய்டனும்..

said...

சரி, வினவு செய்ய வேண்டாம். நம்ம உண்மை தமிழனே பண்ணட்டுமுன்னே சொல்லியாச்சே. சீக்கிரம் தீர்ப்ப எழுத சொல்லுங்கப்பா.

தாவு தீர்ந்து போகுது.

பிரச்சினைக்குறியவங்களே முடிச்சுக்கட்டுமுன்னா, வலிமையில்லாதவன் பாதிக்கப்பட்டவனா இருந்தா என்ன பண்ணுறது?

said...

முல்லை பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்துக்கொள்ளவேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

பதிவை பற்றி வேறு கருத்தில்லை.

said...

வெல்டன் பிரதர்..

தோள் கொடுக்க வந்த தோழருக்கு எனது பணிவான நன்றிகள்..!

said...

//பிரச்சினையில் தொடர்புடையவர்கள் என்ன செய்வது என்று முடிவு செய்துகொள்ளட்டும், இல்லையென்றால் காவல்துறையை அணுகட்டும், அதைவிடுத்து கட்டப்பஞ்சாயத்துகளுக்கு அனுமதிப்பது பதிவுலகிற்க்கு பெரும் கேடு விளைவிக்கும் என்று அச்சப்படுகிறேன்...//--சரியா சொன்னீக குழலி...

முதலில் வினவு சொன்னது:///இதற்குள் நர்சிம் மன்னிப்பு கேட்டார் என்றால் என்ன செய்வது? பாலியல் வன்முறை செய்யும் குற்றவாளிகள் மன்னிப்பு கேட்டால் சட்டமும், நீதியும் கணக்கில் கொள்ளாது. நாமும் கொள்ள வேண்டியதில்லை.///
///தேவை நமது தண்டனை///

நர்சிம் பண்ணிய தவறுக்கு வினவு கொடுக்க நினைத்த ஆக பெரிய தண்டனையே,அவரை தமிழ்மணத்திலிருந்தும் தமிழிஸ்லிருந்தும் தூக்க வேண்டும் என்பதுதான். இப்போது அவர் தாமாகவே 'இனிமேல் எழுதவே போவதில்லை' என்று தனக்குத்தானே அதை விட பெரிய தண்டனையும் கொடுத்து கொண்டிருக்கிறார். ஆக, வினவின் ஆசை நிறைவேறிவிட்டது.


இப்போது வினவு சொல்கிறது: ///இது வினவின் நாட்டாமைத்தனம் அல்ல, நாகரிகமாக பிரச்சினையைக் கையாள்வதற்கு ஒரு ஆலோசனை மட்டுமே. இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை உண்மைத்தமிழனே முன்நின்று செய்யட்டும். நாங்கள் ஓரமாக நின்று கொள்கிறோம்.

எழுத்தில் கம்பீரமாக உலவும் ஆணாதிக்கவாதிகள் தமது முகத்தைக் காட்டுவதற்கு வெட்கப்படத் தேவையில்லையே! என்றைக்கு வைத்துக் கொள்ளலாம், எங்கு வைத்துக் கொள்ளலாம் சொல்லுங்கள்.

சும்மா வெக்கப்படாதீங்க சார்! வாங்க!///

இனியும் வந்து.. சந்திச்சு... என்ன செய்ய? எங்களுக்கு இன்னும் 'வினவு' முகம் எப்படி இருக்கும் என்றே தெரியாதே...???!!!

(அதுவும் நாட்டாமை போட்டுக்கொடுத்த கோட்டில் ரோடுபோட மட்டும் உண்மைத்தமிழனா? ஏன் அவருக்கு தாமாகவே கோடுபோட தெரியாதா?)

அதுக்குத்தான் செம நெகடிவ் ஓட்டு மழை அங்கெ பொத்துக்கிட்டு ஊத்துது போலிருக்கு....

said...

///இந்த விஷயத்தில் உங்களுடன் உடன்படுகிறேன்//

mee too

said...

//இது தொடர்பாக இண்ஸ்டண்ட் குற்றச்சாட்டாக சாதிவெறியன், ஆணாதிக்க திமிர் என்றெல்லாம் பட்டம் கொடுக்க வேண்டாம் வேறு ஏதேனும் புதுசாக கொடுக்கவும்//

என்னக் கொடுமைடா இது? கூட்டணின்னு தீர்மானம் போட்டதுமே அவங்களாட்டமே மாறிட்டாங்கடா இவிங்களும்.. கேட்டு கேட்டு வாங்கறாங்க பாராட்ட.. :))

said...

இப்போதைய,பதிவுலக சூழலில் மூன்றாம் தரப்பின் நாட்டாமை வேலைக்கு ஆகாது!

பிரச்சனைகளை தூண்டி விடுபவர்களும்,திசை திருப்புகிறவர்களும் நிறைவாக இருக்கிறார்கள், காண முடிகிறது.

said...

ஜோசப் தம்பி என்ன பீதிய கிளப்புறிய...!
:)

said...

உண்மையிலேயே சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் அண்ணா...

வினவு குழுவினர் ரொம்பவே வரம்பு மீறி சென்றதுடன் பல குற்றசாட்டுகளை ஆதாரமின்றி வைத்துள்ளனர்..

said...

குழலி உங்க கருத்துக்கு முமுவதும் உடன்படுகிறேன்.. அவர்கள் தளத்தை படிப்பதை நிறுத்தினாலே போதும் அவர்களை நிராகரிக்க.. எத்தனை பேர் செய்வாங்க இதை?

said...

மிக்க நன்றி.

'வினவு' பூனைக்கு யாராவது மணி கட்டியாக வேண்டும் - அதை செய்யும் உங்களுக்கு நன்றி.

said...

வினவுவில் எதிர் கருத்து சொன்னா பின்னுட்டத்தில் வினவு வரமாட்டான் புதுசு புதுசா பெயரில் அனானியா திட்டுவான்


நேர்மையில்லாத சல்லிபயல்

said...

vinavu is more like professional bloggers and they should go away from tamilmanam and tamilish. They should not get involved in "growing tamil bloggers" affairs.

Let them be like "charu" or "jeyamohan" or idlyvadai. Why do they want to get involved in silly issue when it is not one person writing as "vinavu"?

I dont see a good reason for them to get aggregated by tamilmanam or tamilish or suggesting what tamilmanam should do when a blogger makes a mistake!

said...

இடுகையை முற்றிலுமாக வழிமொழிகிறேன்....

said...

.....


நாங்கள் ம.க.இ.க வின் அதிகாரபூர்வதளம் அல்ல என்று சொல்லிக்கொண்டு , லீனாவிற்கு "ம.க.இ.க" செய்ததை ஆதரித்தும் அதைவிட ஒருபடி மேலே போய் கேவலமான பின்னூட்டங்களை அனுமதித்தும் அசிங்கப்படுத்தினார்கள் வினவு குழுவினர். :-(((


**

பெண்களுக்கு எதிரான பாலியல் குறித்தான வன்முறைக்கு எதிராக அறைகூவல் விடும் சந்தனமுல்லையோ இப்படிச் சொல்கிறார்.

//சந்தனமுல்லை...
இனி யாரும் பெண் பதிவர்களை கிண்டலடிக்க இந்த ஒரு வழியை எடுக்க மாட்டார்கள் என்பது இதற்கு கிடைத்த வெற்றி. அதற்கு வினவுக்கும் மற்ற தோழர்களுக்கும் நன்றி! ....

இதையெல்லாம் மீறியும் பாலியல் ரீதியாக வருங்காலத்தில் ஏதேனும் ஒரு பெண் பதிவரை யாரேனும் காயப்படுத்தினால், அப்போது கண்டிப்பாக வினவு தோழர்கள் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் உறுதுணையாக இருப்பேன். //



பெண்களுக்கு எதிரான வன்முறைக்கான அறச்சீற்றத்தில் , சந்தனமுல்லை எந்த தார்மீக அடிப்படையில் வினவை முன்னிருத்துகிறார் என்று தெரியவில்லை. உண்மையிலேயே இவர்கள் இப்படி ப‌க்கச் சார்பு இல்லாமல் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

*********

இப்போது மற்ற பெண் பதிவர்கள் யாரும் நேரிடையான குரல் எழுப்பவில்லை என்று சொல்கிறார்

// சந்தனமுல்லை...
அனைவரும் சாட்டில் தனிப்பட்ட விதத்தில் என்னிடம் அனுதாபத்தை தெரிவிக்கிறார்களே தவிர ஒருவரும் வெளிப்படையாக குரல் எழுப்பவில்லை. ...சக பெண்பதிவர்களிடமிருந்து ஒரு அலையாக வரவில்லையே //


ம.க.இ.க செய்ததை ஆதரிக்கும் வினவு என்னும் பதிவர் குழுவை எந்தப் பெண்பதிவரும் அலையாக எதிர்த்ததாகவும் தெரியவில்லையே.

***

தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் அறச்சீற்றம் மட்டும் கட்டப்பஞ்சாயத்தா?

**

இன்னும் என்னால் நம்பமுடியாமல் இருப்பது ருத்ரன் சொன்னதுதான். :-((((

//
ருத்ரன்...
http://rudhrantamil.blogspot.com/2010/01/blog-post_18.html?showComment=1264068863397#c6678334614574208605

லீனா எனக்கு நேரிடயாகப் பரிச்சயமில்லாத ஒரு பெண்.
அவருக்காக வாக்களது வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
//

:-((((

அறியாத பெண்கள் என்பதற்காக ஒரு கண்டனம் கூட சொல்லமுடியாதா ? என்ன கொடுமை இது?‌

செய்திகள் நமக்கு தெரியாத பட்சத்தில் நாம் ஒன்றும் செய்ய முடியாது. உலகில் நடக்கும் எல்லாப் பிரச்சனைக்கும் நாம் கேள்வி /ஆதரவு/விமர்சனம் செய்ய முடியாது. ஆனால் கண் முன்னே தெரிய வரும்போது சின்ன வருத்தமாவது சொல்லலாம்

.
FYI:
ஈராக், கம்யூனசம் கலந்த‌ யோனிக் கவிதைக்கு நாங்கள்தான் அத்தாரிட்டி.
http://kalvetu.blogspot.com/2010/04/blog-post_27.html

.

தெரிந்தவர்கள் வேண்டப்பட்டவர்கள் என்பதைத்தாண்டி பொதுவான அறச்சீற்றம் தெரியவில்லை.

சந்தனமுல்லை பாதிக்கப்பட்டவர் போராடுவது அவரின் உரிமை. அவருக்கு உதவி செய்பவர்கள் யாரையும் ஏற்பது / முன்னிருத்துவது அவரின் உரிமை. ஆனால் ஏற்கனவே (லீனா Vs‍ ம.க.இ. க) வியசத்தில் பெண்களின் பாலியல் ரீதியான அவதூறுக்கு ஆதரவாய் இருக்கும் ஒரு குழுவின் நம்கபத்தன்மை கேள்விக்குறியாகிறது.

said...

//நான் ம.க.இ.க வை விமர்சிக்கும்போது எனக்கு வந்த மிரட்டல் போன்களுக்கு நியாயம் கேட்க யாரிடம் போவது? தியாகுவிற்க்கு வந்த மிரட்டல்களுக்கு எங்கே போவது? வினவிடமா? பதிவுலகில் இன்று வெறும் மிரட்டல்களோடு நிற்கும் இந்த வினவு கும்பல் நாளை மகஇக வை விமர்சித்து எழுதுபவர்களுக்கு வேறுவிதமான தொல்லை தந்தால் என்ன செய்வது? ஒருவேளை ஒருவேளை தான் சொல்கிறேன் ம.க.இ.க வை எதிர்கொள்ளும் அளவிற்க்கு ஆற்றலுடைய கட்டப்பஞ்சாயத்து ஆட்களையோ அல்லது வினவு கும்பலையும் விட அதிகமான பலமுள்ள விடுதலைசிறுத்தைகள்,பாமக,திமுக,அதிமுக கட்சிகளின் ஆட்களையோ முடிந்தால் அழைத்துக்கொண்டு பேசப்போகலாமா?//
...
//பிரச்சினையில் தொடர்புடையவர்கள் என்ன செய்வது என்று முடிவு செய்துகொள்ளட்டும், இல்லையென்றால் காவல்துறையை அணுகட்டும், அதைவிடுத்து கட்டப்பஞ்சாயத்துகளுக்கு அனுமதிப்பது பதிவுலகிற்க்கு பெரும் கேடு விளைவிக்கும் என்று அச்சப்படுகிறேன்...

குழலி,
தேவையான நேரத்தில் உரையாடலைத் தொடங்கி உள்ளீர்கள். நன்றி !
****

சந்தனமுல்லை Vs நர்சிம்
லீனா Vs ம.க.இ.க


இரண்டும் அடிப்படையில் பெண்ணை பாலியல் ரீதியாக கொச்சப்படுத்திய நிகழ்வுகளே.

கொச்சைப்படுத்த நேர்ந்தமைக்கான காரணமாக இவர்கள் சொல்வது...

லீனா -> கம்யூனிசக் கவிதை
-> ம.க.இ.க வின் பாலியல் அவதூறு.


// http://www.lumpini.in/ethiraadal-003.html
ம.க.இ.க. பெண்கள் அணியினர் எழுப்பிய புரட்சிகர முழக்கங்களுக்கு ஒரு ‘சாம்பிள்’ : (என்னையும் சுகுமாரனையும் பார்த்து) ''போங்கடா, போய் லீனா கிட்ட படுத்துக்குங்கடா.’’ //


சந்தனமுல்லை -> பகடி/ மற்றும் பின்னூட்டம் ->நர்சிமின் பாலியல் புனைவு

***

said...

//பிரச்சினைக்குறியவங்களே முடிச்சுக்கட்டுமுன்னா, வலிமையில்லாதவன் பாதிக்கப்பட்டவனா இருந்தா என்ன பண்ணுறது?
//
நர்சிம் ஒன்றும் அமைச்சரின் மகனுமல்ல சந்தனமுல்லை ஒன்றும் மூக்கை சிந்தி மூலையில் உட்காரும் பெண்ணும் இல்லை... தன் கணவனையே மிஸ்டர் கொஞ்சம் எட்டி நில்லு என் பிரச்சினை நான் பார்த்துக்கறேன் என்பவர் வினவு சொம்பு தூக்கிகள் முல்லை எப்படி நர்சிம்மை தண்டிக்கனும் என்று ஐடியா கொடுக்கிறானுங்களாம்....

said...

சரியான கருத்து குழலி. சமுக பயமிருக்கும் என்பதாலே இவர்கள் இந்த மாதிரி எழுதுகிறார்கள். சில பைத்தியங்களும் இவர்களுக்கு துனை. காசு கேட்கும் போது சிலர் ஜாதி பார்ப்பதில்லை. திருப்பி கேட்கும்போது எல்லா மசுரும் நினைவுக்கு வருகிறது.கூலிக்கு மாரடிக்கும் நபர்கள்..சில சமயம் தார்மீகம் பேசுவதை கேட்கும் போது சிரிப்பு வருகிறது.மங்களூர் சிவாவுக்கு வந்ததை போல்........

said...

தன்னுடன் தோளோடு தோள் நிற்கும் முகிலிடமே, தானே தன் பிரச்சனையை பார்த்துக் கொள்வதாக தைரியமாக சொன்ன சந்தனமுல்லை, சிவராமனிடமும் வினவு கும்பலிடமும் அதை சொல்லாதது வருத்தமான விஷயம்.

said...

+1
பின்னூட்ட‌ங்க‌ளை தொட‌ர‌...

said...

நான் தெரியாத்தனமா இதுக்கு ப்ளஸ் ஓட்டு போட்டுட்டேன்... மன்னிச்சுக்குங்க..

இந்தப் பதிவுக்கு என்னுடைய கண்டனங்கள்... (ஏன்னு கேக்கப்டாது..)..

|| செந்தழல் ரவி said...
முல்லை பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்துக்கொள்ளவேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ||

ஏனுங்க ப்ரதர்... இந்தப் பிரச்சனைல நானும் சம்மந்தப்பட்டிருக்கேன்னு சொன்னீங்க... தனிப்பட்ட முறையில் சந்திக்கிறப்போ எனக்கும் சொல்லுங்னா... நான் டிக்கெட் புக் பண்ணனும்...

said...

Fair and neat sir. Thank you.

said...

சம்பந்தப்பட்டவர்கள் சந்தித்து பேசி தீர்த்துக்கொள்ளட்டும். வினவு எதற்கு இடையில்??
குழலி உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்.

said...

ஆணாதிக்கத்தை மட்டுமே திட்ட வேண்டுமா?? அப்போ இந்த பிரச்சனையில் பொறுக்கி மற்றும் பல வார்த்தைகளை உபயோகப்படுத்திய இவர்களின் ஆதிக்கத்தை யார் கேட்பது??
இவங்க தளங்களில் இடம்பெறும் பின்னூட்ட தாக்குதல்களை விட மிகக்குறைவான வன்புணர்ச்சியே பதிவுலகில் காணப்படுகிறது.

said...

இப்டிப் பண்ணுங்க, அப்டி பண்ணுங்க ன்னு சொல்றது எல்லாமே நாட்டாமைத்தனம் தான்... அப்டிப் பாத்தா நீங்களும் இங்க ஐடியா குடுக்கிறேன் அவங்க உள்ள வந்த சுதந்திரம் போயிரும் நு நாட்டாமை பண்றீங்க. உங்களுக்கு ஒரு விஷயம் புடிச்சா புடிச்சிருக்கு ன்னு சொல்லுங்க, புடிக்கலையா புடிக்கல...நரசிம் மாதிரி யாரும் அசிங்கமா எழுதினா கண்டனத்தை சொல்லுங்க...பாதிக்கப்பட்டவங்களுக்கு ஆறுதல் சொல்லுங்க...

இந்த சீர்திருத்தம் மண்ணாங்கட்டி எல்லாம் எதுக்கு? நான் சும்மா ஜாலியா எழுத வந்தேன்..நீங்களும் அப்டித்தானா அப்டியே எழுதுங்க..வினவு எழுதுவது பாதிக்கப்பட்டவங்க சம்மதத்தோடு, அந்தப் பெண்ணே சொல்லிருக்கு இந்த விசயத்தில் வினவின் செயல்பாடுகள் எனக்கு ஆற்தல் அளிக்கிரதுன்னு..பின்ன எதுக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் இதப்பத்தியே பேசணும் (என்னையும் சேர்த்துதான்)..

அந்தப்பொன்னே சொல்லிட்டாங்க நான் பாத்துக்கிறேன் இதன்னு....இந்தப் பிரச்சனையைப் பத்தி பதிவு எழுதுறவன் எல்லாமே ஒரு சுயநலத்தோடு தான் எழுதுறாங்க...இத விட்டுட்டு வேற எதாவது எழுதுங்கப்பா...

said...

//சிவராமனிடமும் வினவு கும்பலிடமும் அதை சொல்லாதது வருத்தமான விஷயம்.//

+1

அபி அப்பா மற்றும் சிவா போன்றோர் விசயத்துக்கு ஆதாரம் இல்லாவிடில், அவர்கள் கோர்ட்டுக்கு செல்லவேண்டும் இவர்கள் மேல் வழக்கு தொடுக்க,.

said...

சரியான கருத்து....

said...

//SanjaiGandhi™ said...
தன்னுடன் தோளோடு தோள் நிற்கும் முகிலிடமே, தானே தன் பிரச்சனையை பார்த்துக் கொள்வதாக தைரியமாக சொன்ன சந்தனமுல்லை, சிவராமனிடமும் வினவு கும்பலிடமும் அதை சொல்லாதது வருத்தமான விஷயம்.
//

ரிபீட்டே.
"ஒரு ஆணாய் ஆத்திரப்பட்டேன், கணவனாய் கொதித்தேன், தந்தையாய் அழுதேன்" என்று தனக்கு இணையாக மன உளைச்சலுக்கு ஆளாகிய கணவரை, தந்தையை 'நீ வாய மூடிகிட்டு இரு. நான் பாத்துக்கறேன்' என்கிறார். சம்பந்தமில்லாத இன்னொரு மூன்றாம் மனிதருக்கும், ஒரு அரசியல் குழுவுக்கும் தனக்காக பேசும் உரிமையை அளிக்கிறார். சூப்பர் பெண்ணியம்.

said...

இது..இது சரியான அலசல்...

இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள் தனிப்பட்ட முறையில் பேசி தீர்த்துக்கொள்ளட்டும்..

said...

உண்மையில் பிரச்னைக்கு உதவுபவர்களாகயிருந்தால் எனக்கும் வினவு உதவியிருக்கலாம். ஆனால் அவர்களின் நோக்கம் உதவுவதாக வந்து பதிவுலகையே ஆக்கிரமிப்பது தான்

said...

பிரச்சனை என்னன்னு தெரியாட்டியும் நீங்க சொல்லறது கரெக்ட், தனி மனித நாட்டமை எங்கயும் வேலைக்கு ஆகாது.

said...

மேலே தோழர் கல்வெட்டு என்கிற பலூன்மாமாவின் கேள்விகளோடு ஒத்து போகிறேன்.

said...

மேலும் குழலி

மக இகவில் இருந்து எனக்கு எந்த மிரட்டலும் வரவில்லை என்பதை பதிவு செய்கிறேன்

said...

//தியாகு said...
மேலும் குழலி

மக இகவில் இருந்து எனக்கு எந்த மிரட்டலும் வரவில்லை என்பதை பதிவு செய்கிறேன்
//
நல்லது திருத்திவிடுகிறேன்... தங்களுக்கு மிரட்டல் வந்ததாக உங்கள் பதிவில் படித்ததாக நினைவு! அது யார் செய்தது?

said...

இந்த பிரச்சினையை நான் வேறு திசையில் திருப்ப கூடாது என்பதால் இன்னும் ஒரு வாரம் காத்திருக்கிறேன்... அடுத்த வாரம் வினவு ஆணாதிக்கம் பற்றி பேச இருக்கும் தகுதிகள், லீனா மணிமேகலையிடம் நடந்துகொண்ட ரவுடித்தனம், வலையுலகிலிருந்து பல்வேறு பெண்பதிவர்களை விரட்டியடித்த போலி பிரச்சினையின் போது திருட்டு மவுனம் காத்த வினவு கும்பல் பற்றியெல்லாம் விரிவாக பேசுவோம்...

said...

வினவு, மகஇக போன்ற போலிகளை வேறு எங்கும் பார்க்க முடியாது. ஒன்னாம் நெம்பர் பிராடு பசங்க

said...

//விரட்டியடித்த போலி பிரச்சினையின் போது திருட்டு மவுனம் காத்த வினவு கும்பல் பற்றியெல்லாம் விரிவாக பேசுவோம்...//

வினவு அண்ட் கம்பேனியில் இருந்து எதிர்வினை பதிவு வரும் ஓயமாட்டேன் என்கிற உங்கள் உறுதி எனக்கு புடிச்சிருக்கு.

:)

said...

இந்த விஷயத்தில் உங்களுடன் உடன்படுகிறேன்

said...

arasiyalil avarkaludaiya ma.ka.i.ka.
naattaamai sellupadiyaakavillai. ippa pathivulakirkku vanthu vittaarkal avarkalukku yaaraiyaavathu naattaamai seyya vendum avvalavuthan.

said...

உங்கள் பதிவுக்கு பலம் சேர்க்க எனது பதிவையும் இங்கு இணைக்கிறேன்.
வினவின் விஷமப் பட்டியல்கள்
உண்மைகள் ஊர்க்கு தெரியட்டும்.

said...

//SanjaiGandhi™ said...
தன்னுடன் தோளோடு தோள் நிற்கும் முகிலிடமே, தானே தன் பிரச்சனையை பார்த்துக் கொள்வதாக தைரியமாக சொன்ன சந்தனமுல்லை, சிவராமனிடமும் வினவு கும்பலிடமும் அதை சொல்லாதது வருத்தமான விஷயம்.
//

ரிபீட்டே.
"ஒரு ஆணாய் ஆத்திரப்பட்டேன், கணவனாய் கொதித்தேன், தந்தையாய் அழுதேன்" என்று தனக்கு இணையாக மன உளைச்சலுக்கு ஆளாகிய கணவரை, தந்தையை 'நீ வாய மூடிகிட்டு இரு. நான் பாத்துக்கறேன்' என்கிறார். சம்பந்தமில்லாத இன்னொரு மூன்றாம் மனிதருக்கும், ஒரு அரசியல் குழுவுக்கும் தனக்காக பேசும் உரிமையை அளிக்கிறார். சூப்பர் பெண்ணியம்.

ரிபீட்டே.ரிபீட்டே.ரிபீட்டே.ரிபீட்டே.ரிபீட்டே.ரிபீட்டே.ரிபீட்டே.ரிபீட்டே.ரிபீட்டே.ரிபீட்டே.ரிபீட்டே.ரிபீட்டே.ரிபீட்டே.ரிபீட்டே.ரிபீட்டே.ரிபீட்டே.ரிபீட்டே.ரிபீட்டே.

said...

இது வினவுவில் (p://www.vinavu.com/2010/01/06/leena/) வெளியாகியிருக்கும் பின்னூட்டம். கடந்த ஒருவாரமாக ஆணாதிக்கத்தைக் கண்டித்துக்கொண்டிருக்கும் பதிவர் உலகம் இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்களா? வினவுமீது அவ்வளவு பயமா?சந்தனமுல்லை என்ற சக பதிவருக்காகத் திரண்ட பதிவுலகம் லீனா விசயத்தில் வாய்மூடி இருப்பதின் லாஜிக் என்ன?


தமிழ்வாணனின் கல்கண்டு
படித்திருக்கிறேன்
லேனாவின் சொற்கண்டு துடித்திருக்கிறேன்
லீனாவின் பெண்குறியைப் பார்த்தேன்
ஒரு பெண்குறிக்குள்
இத்தனை பெருச்சாளிகளா?
பாவம் லேனா!
லீனாவின் இருகால் விரிய
வெப்சைட் பக்கம் தேவையா?
உள்ளறையின் ஒர் தரைவிரிப்பு போதுமே!
லீனாவுக்கு என்னதொரு பேராசை
உலக சரித்திரத்தை எல்லாம்
ஒரு குறிக்குள் அடக்க
உலகின் ஆண்களை எல்லாம்
இரு கால் விரிப்புக்குள் முடக்க
லீனா
பெண் இனமே வெட்கப்படும்
உன் பேனாப்புழை கண்டு துக்கப்படும்.
பிரபலமாக
உனது புழை மயிர்தானா கிடைத்தது?
வேறு எந்தத் துறையிலுமே
சாதிக்கமுடியாத கோழைபோலும்
எனவேதான்
எதை எதையோ விரிக்கிறாய்
எதை தையோ பிடுங்குகிறாய்
பிடுங்கி பிடுங்கி சக்தியை விரயம் செய்யாதே
சேவிங் செய்
இந்தக் கணினிக் காலத்திலும்
இன்னுமா பிடுங்கிக் கொண்டிருக்கிறாய்?
கற்காலத்துக் காட்டுமிராண்டியாய்
உன் பெண்டு பிள்ளைகள் பேரப்பிள்ளைகளாவது
உனக்கதை சொல்லித் தரட்டும்
சேவிங் செய் பயிராவது வளரட்டும்
காலம் உன் கரும்புள்ளிகளை
வார்த்தை வடுக்களை அழிக்கட்டும்.

-கவிஞர்.தணிகை