மெளனசாட்சி


உலகத்தின்
பெருந்துயரக்காரன்
யதேச்சையாக எதிர்பட்டான்

உலர்ந்து
பிளந்திருந்த உதடுகளில்
உட்கார்ந்திருந்தது
விரக்தியும் பரிதவிப்பும்...



கடைசி ஈரத்தையும்
தொலைத்துவிட்டு
கடுந்தீயாய்
விழிகளில்
கனன்று தெறித்தது கங்கு...

கண்முன்னாலேயே
மொத்தத்தையும்
வாரிகொடுத்த ஈழக்கோபம்...
உக்கிரச் சிரிப்பாகி
ஊர் மேல் விழுந்தது!

"நாசமாப் போவீங்கடா"வென‌
அடிவயிற்று வலி இழுத்து
முகம் சிலுப்பி
தூற்றிய சாபம்
கடைசி டத் துளி விஷமாய்
நெஞ்சறுக்க....
குற்றவுணர்வில்
கட்டிக்கொள்கிறேன்
என் குழந்தைகளை...!

நானும்
வேடிக்கை பார்த்தவர்களில்
ஒருவன்!

-‍‍
இரா.சரவணன்
ஜூனியர் விகடன்

1 பின்னூட்டங்கள்:

said...

ஐயோ! ன்னு கதறி அழ வெச்சுட்டானுக...