இந்தியாவிடமிருந்து சுதந்திரம் வாங்கிய 50 கிராமங்கள்!


ராணுவத்தை அனுப்பி, சொந்த தேசத்து மக்கள்மீதே கொலைவெறித் தாக்குதல் நடத்தும் கொடூரம் ஈழத்தில் நடந்தபோது அதைக் கண்டித்த, கொதித்தெழுந்த மனிதாபிமானிகள் பலர் இப்போது மேற்கு வங்காளத்தில் நடப்பது என்ன என்பதை குறைந்தபட்சம் தெரிந்துகொள்ளக்கூட விரும்பவில்லை. ‘அது மாவோயிஸ்ட் வன்முறை...’ அவ்வளவுதான்! வழக்கம்போல் இந்த இங்கிலீஷ் மீடியா, போர்க்களத்தில் நின்று செய்தி சேகரிப்பது போல சாகசத்தனங்களில் ஈடுபட்டிருக்கிறது. ஏதோ எல்லையில் இந்திய ராணுவமும் பாகிஸ்தான் ராணுவமும் சண்டையிடுவதை வர்ணிப்பது போல் இருக்கிறது அவர்களின் செய்கைகள். லால்கர் என்ற நடுத்தரமான நகரில் இருக்கும் ஆள்நடமாட்டமில்லாத ஒரு போலீஸ் ஸ்டேஷனைப் பிடித்ததும், பரபரப்பான ஃபிளாஷ் நியூஸ்! ஏதோ போரில் சீன வீரர்களை துரத்திவிட்டு சீனப் பெரும்சுவரைக் கைப்பற்றியது போன்ற கூக்குரல்கள்! மாநில முதல்வர் உடனடியாக போலீசுக்கும் துணை ராணுவப் படைக்கும் வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார். இந்த ஆரவாரங்களுக்கு நடுவே சந்தாலி பழங்குடியினரின் கூக்குரல்கள் யார் காதுகளிலும் விழவில்லை...

மேலும் படியுங்கள் இங்கே அழுத்தி

0 பின்னூட்டங்கள்: