சுகுணா, அ.மார்க்ஸ்... கேளுங்கள் கற்பழிப்பே ஒடுக்குமுறையின் உச்சகட்ட சாட்சி...

கற்பழிப்பு என்பது காம வெறியால் மட்டுமே நடைபெறுகிறதா? காம வெறி மட்டுமே கற்பழிப்பை நடத்துகிறதா? 50-60-70 வயது பெண்களிடம் என்ன காமத்தை பெறப்போகிறார்கள் கற்பழிப்பாளர்கள்?

கற்பழிப்பினால் காமம் தீருமா?காமமே கற்பழிப்பின் ஒற்றை காரணமெனில் ரோட்டில் ஒரு பெண் கூட நடமாட முடியாது, எவ்வளவு காமவெறி இருந்தாலும் அந்த காமத்தை கற்பழிப்பு அளவுக்கு கொண்டு செல்வது உட்சபட்ச ஆதிக்க அதிகாரம் மட்டுமே.

முற்போக்காளர்கள்/பெண்ணியவாதிகள் கற்பழிப்பு என்ற வார்த்தையை நான் பயன்படுத்துவதற்கு மன்னிக்கவும், இன்றைய ஆணாதிக்க சூழலில் வன்புணர்வு என்ற வார்த்தை கண் முன் நிறுத்தும் கொடூரத்தைவிட கற்பழிப்பு என்ற வார்த்தை அந்த நிகழ்வை விளக்குவது அதிகம். எனவே தான் கொடூரத்தை விளக்க வேண்டிய இடத்தில் இந்த வார்த்தையை போட வேண்டியுள்ளது.

ஒடுக்குமுறைகள் நடைபெறும் எல்லா இடங்களிலும் கற்பழிப்பு நடைபெறும் என்று பொருள் அல்ல, ஆனால் கற்பழிப்பு நடை பெறும் எல்லா இடங்களிலும் உச்சபட்ச அதிகார ஆளுமை அதன் மூலம் உச்சபட்ச ஒடுக்குமுறை நடைபெறுகிறது என்று பொருள். மண்ணின் மீதான உரிமையை அறிவிக்க கொடி நாட்டுவது போல உட்சபட்ச ஆதிக்க அதிகார ஆளுமையை அறிவிக்க செய்வதே அந்த மண்ணின் பெண்களின் மீதான கற்பழிப்பும்.

ஆணாதிக்க சமுதாயத்தில் மண்ணின் மீதான ஆதிக்கத்தையும் அதன் குறியீடாக பெண்ணையும் பாதுகாப்பதே பெரும் கடமையாக உள்ளது, அதற்காக பல மாதிரியான உத்திகளை கடைபிடிப்பார்கள், ஆதிக்கத்தின் குறியீடாக பெண்ணை கவருவது அமைவதால் எதிரி மண்னை பிடித்துவிட்டால் ராஜபுத்திர பெண்கள் கூட்டமாக தீயிட்டு தற்கொலை செய்துகொள்ளுதல் என இருந்தது இதன் மூலம் பெண்ணை தொடும் உட்ச பட்ச அதிகாரத்தை எதிரியின் ஆளுமையை அவர்கள் அழிக்கிறார்கள்.

"பாப்பத்தியோடு படுத்தால் பாவம்" என்று வாய்வழியாக தலைமுறையாக பரப்பப்பட்டிருக்கும் கருத்தாக்கத்தை கேள்விப்படிராதவர்கள் அரிது, இதுவும் கூட பார்ப்பன பெண்களை எவ்விதமாகவும் பிற சாதியினர் தொடக்கூடாது அதன் மூலம் பார்ப்பனர்கள் மீதான மற்றவர்கள் ஆதிக்கம் செய்யாமலிக்கும் குறியீடு பாதுகாக்கப்படுகிறது. இதெல்லாமே தம் மீதான ஆதிக்கத்தை எதிர்ப்பதையும் அதிகாரத்தை எதிர்ப்பதையும் பெண்களை பாதுகாப்பதன் மூலமான குறியீடாக வைத்துள்ளார்கள். கற்பழிப்பு என்றல்ல காதல் மூலமாகவும் பெண்களை வேறு சாதி/இனம்/மதம்/மொழி ஆட்கள் தொடுவதை தம் மீதான ஆக்கிரமிப்பாகவும் அதிகாரமாகவும் பார்ப்பதால் நடைபெறுவதே "ஹானர்" கொலைகள்.

அந்த மண்ணை ஆக்கிரமிக்க அந்த அதிகாரத்தை கைப்பற்ற விரும்புபவர்கள் அந்த மண்ணை ஆக்கிரமித்து அந்த பெண்களை கற்பழிப்பதன் மூலம் அந்த மண்ணின் அதிகாரமும் ஆளுமையும் எங்களுடையது என்று அறிவிக்கிறார்கள். அதனாலேயே வயது வித்தியாசமெல்லாம் கற்பழிப்புகளுக்கு இருப்பதில்லை. அதனால் தான் கோத்தபாய ராஜபக்சேவால் தமிழ் ஆண்களை வெட்டி கடலில் போடுங்கள் பெண்களை உங்களுக்கு விருந்தாக்கிக்கொள்ளுங்கள் என சொன்னான்.

ஒரு சிங்க கூட்டத்தின் (வயதான)தலைவனை இன்னொரு (இளம்)சிங்கம் தலைமை பொறுப்பிற்காக சண்டையிட்டு அடித்து வீழ்த்தினால் முதலில் வெற்றிபெற்ற சிங்கம் செய்வது அந்த பழைய தலைவனின் மனைவிகளான கிழ பெண் சிங்கங்களை வரிசையாக உட்காரவைத்து புணருகிறேன் என இரண்டு குத்து குத்திவிட்டு போகும், அதன் பின்னே தனக்கான புதிய இளம் பெண் சிங்கங்களை தேர்ந்தெடுக்கும். கிழசிங்கங்களை பின்னால் குத்தியது புணர்ச்சிக்காக அல்ல, தன்னுடைய ஆளுமையை, தன் உட்சபட்ச அதிகாரத்தை தெரிவிக்கவே இப்படி செய்தது.

எந்த ஒரு பிரச்சினையென்றாலும் பெண்கள் கற்பழிக்கப்படுவது இதனால் தான், காவிரி பிரச்சினையில் தமிழ் ஆண்களை கொலை செய்தும் போதாதென்று கன்னட வெறியர்களால் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டதுவும் இங்கே கன்னடர்களான நாங்கள் தான் ஆதிக்கம் செலுத்துவோம், உச்சநீதிமன்றத்தின் ஆதிக்கம் இங்கே இல்லை என நிரூபிக்க செய்யப்பட்டது. முசல்மான்களின் குறிகளை வெட்டுவோம் பீவிகளின் இறுகிய யோனிகளை பிளப்போம் என்றெல்லாம் கோஷமெழுப்பி குஜராத் இந்து மதவெறியர்கள் செய்தது காமத்துக்காக மட்டுமல்ல, தங்களின் அதிகாரத்தின் குறியீடாகவும் முஸ்லீம்களின் மீதாக அதிகபட்ச ஒடுக்குமுறையாலுமே நடந்தன அந்த கற்பழிப்புகள்

இந்திய அமைதி(?)படை ஈழத்தில் வயதான தமிழ்பெண்களை கற்பழித்ததும் இங்கே நாங்கள் தான் உட்ச அதிகாரம் படைத்தவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என சொலவதற்கே. சிங்கள இராணுவ கூலிபடையினர் தமிழர்களின் மீதான தம் அதிகாரத்தை காண்பிக்கவே போரிட்டு இறந்த பெண் புலிகளின் உடல்களை நிர்வாண படுத்தி அதை படம் எடுத்து ரசித்ததும், தமிழ்பெண்களின் மீதான கற்பழிப்பை நடத்துவதும்.

திருடர்கள் கற்பழிப்பதும் இப்படியான ஒன்றே, ஆளில்லாத நாளில் கன்னம் வைத்து பூட்டை உடைத்து கொள்ளையடித்து போவது ஒருவகை...அவர்கள் பொருளை மட்டுமே திருடுகிறார்கள், ஆனால் ஒரு வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து கணவன்,மகனை அடித்து கட்டி வைத்து பின் மனைவி மற்றும் மகளை கற்பழித்ததுவும் மிகவும் கொடூரமானது, அதற்க்கு காமம் மட்டும் தான் காரணமென்றால் அந்த வீட்டில் கொள்ளையடித்த பணத்தை வைத்து வேறு எங்காவது அந்த காமத்தை அவர்கள் வாங்கியிருக்கலாம், ஆனால் அன்றைய இரவில் அந்த வீட்டின் உட்சபட்ச ஆளுமையையும் அதிகாரத்தையும் அந்த கொள்ளையர்கள் கையில் எடுத்துக்கொண்டார்கள் அதனால் அந்த வீட்டினரின் மீதான ஒடுக்குமுறையை பொருட்களை கொள்ளையடிப்பதன் மூலம் மட்டுமின்றி கற்பழிப்பின் ஊடாகவும் நடத்தினார்கள்.

வெள்ளைக்கார டூரிஸ்ட் பெண்களை கற்பழிக்கும் இந்தியர்களுக்கும் இதே மாதிரியான காரணம் தான்...

கற்பழிப்பு என்பது உட்சபட்ச ஒடுக்கு முறையின் கொடூரமான சாட்சி, ஒரு இடத்தில் கற்பழிப்பு நடந்தால் அந்த இடத்தில் உட்ச பட்ச ஒடுக்குமுறை நடக்கிறது என்று அர்த்தம், அது தவிர வேறு எந்த வியாக்கியானமும் சாட்சியும் அங்கு நடைபெறும் உட்ச பட்ச ஒடுக்குமுறையை அறிவிக்க தேவையேயில்லை.


அ.மார்க்ஸ் இன் அரைலூசு பேட்டி என்ற என் முந்தைய பதிவில் "மட்டகளப்புகாரர்கள் என்பதற்காக யாழ் அல்லது வன்னி பிரதேச ஆட்கள் மட்டக்களப்பு பெண்களை கற்பழித்தார்களா? ஆனால் தமிழன் என்பதற்காக சிங்கள வெறியர்கள் தமிழ் பெண்களை கற்பழிக்கிறார்களே??" என்ற என் கேள்விக்கு ஆக மொத்தம் "கற்பழிப்பு"தான் உங்களுக்கு ஒடுக்குமுறைக்கான அளவுகோலா? பார்ப்பனர்கள் யாரும் தலித் பெண்களைக் 'கற்பழிக்கவில்லை". எனவே பார்ப்பனர்கள் தலித்துகள் நண்பர்கள் என்று கூட ஒரு சூத்திரம் போடலாமே! என்று கேட்டிருந்தார்... சுகுணா திவாகர்.

சுகுணா திவாகருக்கும் அதற்கு ஆமாம் போட்ட சஞ்சய்க்கும் சிங்கள-தமிழ் இன முரண்களுக்கும் தமிழ்-தமிழ் பிரதேச முரண்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் அரை லூசுத்தனமாக உளறும் அ.மார்க்ஸ்க்கும் இக்கட்டுரை சில பதில்களை சொல்லியிருக்கலாம்.

9 பின்னூட்டங்கள்:

said...

//அந்த மண்ணை ஆக்கிரமிக்க அந்த அதிகாரத்தை கைப்பற்ற விரும்புபவர்கள் அந்த மண்ணை ஆக்கிரமித்து அந்த பெண்களை கற்பழிப்பதன் மூலம் அந்த மண்ணின் அதிகாரமும் ஆளுமையும் எங்களுடையது என்று அறிவிக்கிறார்கள். //

உண்மை தான்.

சிறுதொண்டமாதேவி சம்பவத்தையும் சிறிது விளாவாரியாக எடுத்தாண்டிருக்கலாம்.

//அதனாலேயே வயது வித்தியாசமெல்லாம் கற்பழிப்புகளுக்கு இருப்பதில்லை. //

ஆமாம் அந்த வன்னிய ஆண்டைகளின் வயது 15- 20. பாதிப்படைந்த பெண்களின் வயது அந்த காடைகளின் அம்மா வயது.

said...

//ஒடுக்குமுறைகள் நடைபெறும் எல்லா இடங்களிலும் கற்பழிப்பு நடைபெறும் என்று பொருள் அல்ல, ஆனால் கற்பழிப்பு நடை பெறும் எல்லா இடங்களிலும் உச்சபட்ச அதிகார ஆளுமை அதன் மூலம் உச்சபட்ச ஒடுக்குமுறை நடைபெறுகிறது என்று பொருள். மண்ணின் மீதான உரிமையை அறிவிக்க கொடி நாட்டுவது போல உட்சபட்ச ஆதிக்க அதிகார ஆளுமையை அறிவிக்க செய்வதே அந்த மண்ணின் பெண்களின் மீதான கற்பழிப்பும்.//

மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.

said...

//சிறுதொண்டமாதேவி சம்பவத்தையும் சிறிது விளாவாரியாக எடுத்தாண்டிருக்கலாம். //

இந்த பிரச்சினை பற்றி தெரியாது... கொஞ்சம் நீ இங்கேயே விரிவாக போட்டிருந்தால் பதிவாக இருந்திருக்கும்...

இந்த பதிவை போட்டுவிட்டு கடைக்கு சென்று திரும்பி வரும் வரை இந்த பதிவை பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன், கண்ணகி-முருகேசன் கொலையை நினைத்து எழுதினேன் எத்தனையோ கொடுமைகளை எழுதியிருக்கோம் ஆனால் ஒரு இடத்தில் கூட பிற்படுத்தப்பட்டவர்கள் தலித் கள் மீது நிகழ்த்திய கற்பழிப்பு பற்றி சொல்லவில்லையே என்று நினைத்துக்கொண்டே வந்தேன் (ஒரு வேளை இது தான் சாதி புத்தி என்பதோ?).. வந்து மெயிலை திறந்தால் உன் பின்னூட்டம்... :-(

said...

மட்டக்களப்புக்கரர், வன்னிக் காரர் வன்புணர்ந்தது என்ன கதை இது? இத சோபா குரூப் தவிர்ந்த எந்த ஈழத் தமிழனும் நம்ப மாட்டான். யோவ் குழலி, அ.மார்க்ஸ், சுகுணா திவகார் எல்லாம் ஒரு மனுஷங்கன்னு தனிப் பதிவு போட்டு விளக்கம் வேறயா?
நீனு சொன்னா எல்லாம் நம்ப மாடங்க அவங்க. ஈழத்துல இருந்து பிள்ளையான், முரளிதரன், இல்ல நம்ம ஸ்டாலினும், பிரான்சு ஞானம்,
சோபா செக்தி, கற்சுறா, பாறை நெத்தலி, மலைத்திமிங்கலம், சுகன், குகன் போன்ற வெறும் உண்மையையே பேசும் உத்தமர்கள்
வந்து சான்றிதழோட கருத்துச் சொன்னாத் தான் நம்புவாங்க!

அவன் கொடுத்த அரலூசு பேட்டிக்கு அங்கேயே பதில் கட்டுரை வந்திருக்கு.

said...

///நீனு சொன்னா எல்லாம் நம்ப மாடங்க அவங்க. ஈழத்துல இருந்து பிள்ளையான், முரளிதரன், இல்ல நம்ம ஸ்டாலினும், பிரான்சு ஞானம்,
சோபா செக்தி, கற்சுறா, பாறை நெத்தலி, மலைத்திமிங்கலம், சுகன், குகன் போன்ற வெறும் உண்மையையே பேசும் உத்தமர்கள்
வந்து சான்றிதழோட கருத்துச் சொன்னாத் தான் நம்புவாங்க!///

அட இந்த அனானி ரொம்ப விவரம் தெரிஞ்சவரா இருக்காரே! பிரான்சில் இருக்கும் ஞானத்தையெல்லாம்
தெரிந்திருக்கிறது.

வழக்கம் போல் சுகுணா சஞ்சய் அறியாமையில் குழலியை மட்டப்படுத்த முயற்ச்சித்திருக்கிறார்கள். குறிப்பாக சஞ்சய்க்கு .... மார்க்ஸ் இலங்கை அரசின் கைக்கூலிதான்யா. சாட்சிகளேளாடு விவாதிக்க முடியும் என்னால் விரும்புபவர்கள் சொந்த பேரோடு வரலாம்.

கருணா இலங்கையில் இருந்து ஓடிவந்தாலும் டக்களசு வந்தாலும் இந்த ஞானம் வீட்டில் தான் கிடப்பார்கள். இது பிரான்ஸ் தமிழர்களுக்கு தெரிந்த சங்கதி. இந்த ஞானத்தின் கூட்டத்துடன் தான் பிரான்சுக்கு வந்தால் மார்க்சு நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு நாளு காலில் திரிகிறார். இந்த ஞானத்தின் பொண்டாட்டி பெண்கள் சந்திப்பு ஒழுங்குப்படுத்தும் பெண்ணீய தீவிரவாதி.

அப்பறம் என்னது குழலி கற்பா? பெண்ணீயம் பேசும் தமிழ பெண்களிடமா? ஒரு சிலரை தவீர்த்து கூட்டுக்கலவி, பெண்ணோடு பெண் கலவி ரேஞ்சில் ஐரோப்பிய தமிழ்பெண்களின் புரட்சி போய்க்கிட்டிருக்கு நீங்க வேற.

said...

தல, அதுல என் பின்னூட்டம் நல்லா பாருங்க. கற்பழிப்பு தான் ஒடுக்குமுறைக்கு சாட்சி என்பது போல் நீங்கள் எழுதி இருந்ததை சுகுணா மறுத்தார். அது தான் நான் சரி என்றேன். மற்றபடி ஈழத்தில் ஒடுக்குமுறையே இல்லை என்று யாரும் சொல்லவில்லை.

ஒடுக்கு முறையின் உச்சகட்டம் கற்பழிப்பு தான் என்றால் அதை நாம் முதலில் தமிழகத்தில் தான் எதிர்த்துப் போராட வேண்டும்.

ஸ்ஸ்ஸபாஆஆ.. ஒரு ரிப்பீட்டேய் போட்டது ஒரு குற்றமா..? :))

தல, எங்க அந்த சிங்கக் கதையை சொல்லாம விட்ருவீங்களோன்னு பீல் பண்ணிட்டே படிச்சேன். நல்ல வேளை என் ஆசை வீண் போகலை. :))

said...

தமிழச்சி அக்கா, குழலி என் நெருங்கிய நண்பர். அவரை மட்டப் படுத்த வேண்டிய அவசியம் எதும் எனக்கில்லை. சஞ்சய்காந்தி என்பது தான் என் சொந்தப் பெயர். என் ப்ரொஃபைலில் விலாசமே இருக்கு. மேலும் விவரங்களுக்கு ஓசை செல்லா அண்ணாவை அணுகலாம். :) அதனால் நான் உங்களிடம் கேட்கலாம் என நினைக்கிறேன்.

மார்க்ஸ் இலங்கை அரசின் கைக்கூலி என்று எந்த ஆதாரத்தை வைத்து சொல்கிறீர்கள்?

said...

//மார்க்ஸ் இலங்கை அரசின் கைக்கூலி என்று எந்த ஆதாரத்தை வைத்து சொல்கிறீர்கள்?//

http://thesamnet.co.uk/?p=2105

http://thesamnet.co.uk/?p=2152

இந்த இரு கட்டுரைகளையும் இந்த தளத்தில் இருப்பதால் இந்த தளம் யோக்கியமானது என்று நினைத்து விடாதீர்கள். கருணா பிள்ளையான் பிரிவின் எதிரொளி பிரான்ஸ் வரையில் எதிரொளிக்குதாக்கும். முன்பு தோழா தோழா என்றிருந்தவர்கள் இன்று இரு குருப்பாக பிரிந்து போய் காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்குதுங்க.

000

நம்ப மார்க்ஸ் மாமா பற்றி

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=482

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=468


இப்போதைக்கு இதை படிங்க. இதிலிருந்து சந்தேகங்களை கேளுங்க சஞ்சய் (காந்தி)

said...

சும்மா நச்சுன்னு தலைப்பு வெச்சு கூட பதிவு ஹிட் ஆவ மாட்டேங்குதே குழலி. நம்பளையெல்லாம் இந்த தமிழ் வலையுலகம் சுத்தமா மறந்து போச்சே.