தெலுங்கு வருணாசிரம அரசுக்கு காவல் காக்கும் திராவிடம் தமிழர்களின அரசை இகழ்கிறதே

தமிழர்கள் வரலாற்றிலேயே மிக மோசமான காலம் எது என்றால் திராவிட தெலுங்கு பாளையக்கார கும்பல்களின் அராஜக ஆட்சி நடத்திய கால கட்டம் தான்.

சங்க கால தமிழர்கள் ஆட்சியாக இருந்தாலும், அதன்பின் வந்த களப்பிரர்கள் ஆட்சி என்றாலும் அதன் பிறகான பல்லவர் ஆட்சி, பிற்கால சோழர்கள் ஆட்சி, பாண்டியர்கள் ஆட்சி என அனைத்தும் மைய ஆட்சி அதன் பின்பான படிநிலை குறுநில மன்னர்கள், அதன் கீழ் மண்டலங்கள், ஊராட்சிவரை ஒரு அமைப்பு, ஒரு சிஸ்டம் இருந்துள்ளது, வரிவிதிப்புகள் தண்டனைகள் என அனைத்தும் ஒரு அமைப்பாக சிஸ்டமாக இருந்தது, இதில் கட்டிடகலை, போர், நீர்வளம், மருத்துவம், கலை இலக்கியம் என அனைத்தும் செழித்து வளர்ந்தது, என்று தமிழர்களின் ஆட்சி போய் திராவிட தெலுங்கு கும்பல்களின் ஆட்சி வந்ததோ அப்போதிருந்தே தமிழர்கள் அறிவு திட்டமிட்டு அழிக்கப்பட்டது, அதிலும் பாளையக்காரர்கள் என்ற பெயரில் தெலுங்கு கும்பல் ஆட்சி செய்த போது சிறு சிறு பகுதிகளை கொண்டு எந்த விதமான ஒரு அரசு அமைப்புக்குள்ளும் உட்படாமல் ஒரு சிஸ்டமே இல்லாமல் பொறுக்கித்தனமான ஆட்சி நடந்து மக்களை கொடூரமாக நடத்தி விரும்பிய பெண்களை தூக்கிப்போட்டுக்கொண்டு போய் கெடுத்து (நாட்டார் கதைகளில் மிகப்பல ஜமீன்கள் பெண்களை தூக்கியதால் பெண்ணை கொலை செய்த கதைகள், பெண் ஜமீனை கொலை செய்த கதைகள், பெண் தற்கொலை செய்து கொண்ட கதைகள்) காட்டாட்சி செய்தனர் தெலுங்கு திராவிட கும்பல்கள்.

வருணாசிரமத்தை காக்கவே உருவாக்கப்பட்ட மனுதர்ம ஆட்சி நடத்திய இந்து மத(பார்ப்பன) ஆட்சியான விஜயநகர அரசுகளையும் அதன் வழி தமிழகத்தை பல நூறு ஆண்டுகள் சுரண்டிய தெலுங்கு நாயக்க ஆட்சிகள், நாட்டை கூறு போட்டு பாளையக்காரர்கள் என்ற பெயரில் மக்களை கொள்ளையடித்த தெலுங்கர்களை பற்றி ஒருவார்த்தை கூட பேசாத இதே திராவிட புருடாக்கள் தான் தமிழ் மாமன்னர்களை கொச்சை படுத்துகிறார்கள்

இதில் தமிழ் மாமன்னர்களை பற்றி மிக மோசமாக பேசி பேசி நானும் கூட திராவிட மாயையில் சில ஆண்டுகளுக்கு முன் எம் முன்னோர்கள் என்னத்தை கண்டுபிடித்தார்கள் என்று கேட்டிருக்கிறேன், அவன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டிடம் நிற்கிறது, கடலில் நீரோட்டத்தில் வழி கண்டு நாகப்பட்டினத்திலிருந்து மலாக்காவிற்குள் கப்பல்களில் நுழைந்திருக்கிறான், ஒரே நேரத்தில் துறைமுகங்களில் நுழைந்து தாக்கி சீனாவுக்கான வியாபர பாதையான பட்டு பாதையை  கட்டுப்படுத்தி தெற்காசியாவை 250 ஆண்டுகள் ஆண்டிருக்கிறான், இன்றைக்கு சிக்ஸ் சிக்மா வைத்துக்கொண்டு ஒரு சேஞ்ச் ரெக்வெஸ்ட்டுக்கு 4 முறை ரீ பேஸ்லைன் செய்யும் காலத்தில் ஒற்றை பாறையில் கோயில்கள் செதுக்கியுள்ளான் ஒரே ஒரு தவறு கூட இல்லாமல், இவ்வளவு அறிவையும் அழித்து மறைத்து எங்களையே எம்ம முன்னோர்கள் என்னத்தை கண்டுபிடித்தார்கள் என்று கேட்க வைத்தது திராவிடம்.

திராவிடமாயையை ஒழிக்க வேண்டும், தமிழகத்தில் தெலுங்கு திராவிட கும்பல்களின் அரசியல் அழிவில் தான் தமிழர்களின் வரலாறும், அதிகாரமும் மீண்டு வரும்.

0 பின்னூட்டங்கள்: