ஆரிய பூச்சாண்டி காட்டி தமிழர்களை ஏமாற்றும் திராவிட புரட்டுகளை அறிந்து கொள்வோம்.

ஆரிய பூச்சாண்டி காட்டி தமிழர்களை ஏமாற்றும் திராவிட புரட்டுகளை அறிந்து கொள்வோம்.

வீரமணி என்கிற ஜால்ரா மணி அவர்கள் தமிழ் மாமன்னன் ராசேந்திர சோழன் மீதும் சோழ அரசர்கள் மீதும் புழுதி வாரி இறைத்து அவர்கள் புகழுக்கு களங்கம் விளைவிக்குமாறு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

முதலில் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், ஒழுக்கம், நெறிகள், சரி தவறுகள், உயர் கோட்பாடுகள் என்பது அந்த காலகட்டத்துக்கும் வேறுபட்டது, அன்று ஒழுக்கமாகவும் உயர் கொள்கையாகவும் கருதப்பட்டது இன்று தவறாக கருதப்படலாம், இன்று ஒழுக்க நெறியாக உயர் கொள்கையாக கருதப்படுவது நாளை தவறக கருதப்படலாம், இந்த அறிவு எதுவும் இன்றி ஜால்ரா மணி அவர்கள் இன்றைய கோட்பாடுகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுடன் இணைத்துள்ளார்.

பல வரலாற்று தகவல்களை திரித்து வெட்டி ஒட்டி அது அம்மன்னனுக்கு களங்கம் விளைவிக்குமாறு அறிக்கையில் சேர்த்திருந்தார், இது திராவிட கும்பல்களுக்கே கைவந்த கலை, அதில் முக்கியமான ஒன்று சோழ மாமன்னன் ராசேந்திரன்  பார்ப்பனர்களுக்கு நிலங்களை தானமாக கொடுத்து அவைகளுக்கு வரிவிலக்கு செய்திருந்தான்(ர்) என்பதும் பார்ப்பனர்களுக்கு மாமன்னர்கள் காவல் காத்து வருணாசிரமத்தை காத்தார்கள் என்றும் கூறியுள்ளார்.

ஒரு அரசன் எந்த மதத்தை சார்ந்திருந்தாலும் அவன் அனைத்து மதங்களுக்கும் பொதுவானதாகவே செயல்பட வேண்டும், பெரியாரையே எடுத்துக்கொண்டாலும் கூட அவர் அவர் இந்து சமயத்தை கடவுளை விமர்சித்திருந்தாலும் அவர் கோவில்களுக்கு அறங்காவலராக இருந்துள்ளார்.

தமிழ்நாட்டுச் செப்பேடுகள் தொகுதி - 1 என்ற நூலில் இருந்து இந்த தகவல்களை அளித்துள்ளேன். சோழர் செப்பேடுகள் பக்கம் 280 ல் இருந்து பக்கம் 363 வரை 83 பக்கங்கள் உள்ளன, அதில் நான் பக்கம் 280ல் இருந்து 296 வரை 17 பக்கங்கள் மட்டுமே படித்துள்ளேன், அதிலே சைவ வைணவ வேதியர்கள்(பார்ப்பனர்கள்) மட்டுமின்றி பெளத்த, சமண மற்றும் நாட்டார் கள் வரை பலருக்கும் நிலங்களும் வரிவிலக்குகளும் சோழ மன்னர்கள் அளித்துள்ளனர்.

அன்பில் பகுதியை சேர்ந்த‌அனிருத்த பிரம்மராயன் என்று ஒரு முக்கியமான பார்ப்பன மந்திரி ராஜராஜசோழனுக்கு இருந்துள்ளார், ராஜராஜசோழனிடம் இருந்த பல்வேறு மந்திரிகளுள் இருந்த ஒரே பார்ப்பன மந்திரி அனிருத்த பிரம்மராயன், இவர் அரசனிடம் முறையாக விண்ணப்பித்து நிலங்களை தானமாக பெற்று அந்த செப்பேடு அன்பில் பகுதியில் வீடு கடைக்கால் தோண்டும் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது, இந்த செப்பேட்டை போல இன்னும் பல செப்பேடுகள் இருக்கலாம், அவைகள் எல்லாம் கிடைக்காமல் உள்ளது, அதில் பல்வேறு இறையிலி நிலங்கள் குறித்த தகவல்கள் இருக்கும், ஆனால் புரட்டு திராவிடம் அனிருத்த பிரம்மராயன் ஊரில் கிடைத்த செப்பேட்டை வைத்து சதிராடுகிறது, என்றாலும் மேலும் பல இடங்களில் கிடைத்த செப்பேடுகள் சோழர்கள் பல்வேறு சமயத்தவருக்கும் அளித்த தானங்கள் கிடைத்துள்ளன, சோழர்கள் சமன, பெளத்த பள்ளிகளுக்கு கொடுத்த தானங்கள் குறித்து சொல்லாமல் பார்ப்பனர்களுக்கு அளித்ததை மட்டும் அறிக்கையில் சொல்லி சோழர்களை பார்ப்பன கைக்கூலிகள் போல் காட்டியுள்ளர் ஜால்ரா மணி.

மேலும் தமிழ் மொழியை மதிக்காதவர்கள் என்பது போன்ற பிரச்சாரத்தை திராவிட இயக்கங்கள் சோழர்கள் மீது சுமத்துகின்றன, தான விவரங்கள் தமிழ் பகுதியில் தான் உள்ளன, தமிழே அலுவல் மொழியாக இருந்துள்ளது, மெய்கீர்த்தனைகள் அரசர்  வம்ச விவரங்கள் தான் வட மொழியில் இருந்துள்ளன, அவைகளே தமிழிலும் இருந்துள்ளன‌

இந்த நூலில் வெறும் 17 பக்கங்களிலேயே பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்கு இவ்வளவு தானங்கள் வழங்கிய தகவல்கள் இருக்கும் போது இன்னும் மீதியுள்ளா 67 பக்கங்களிலும் கிடைக்காத ஆயிரக்கணக்கான செப்பேடுகளிலும் எவ்வளவு இருக்கும்.

ஆரிய பூச்சாண்டி காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள் திராவிட பூச்சாண்டிகள் என்பதற்கு ஜால்ரா மணியின் அறிக்கையைவிடவும் சான்று எதுவும் வேண்டுமா?

ஒரே படமாகவும் இணைத்துள்ளேன், தனித்தனியாக படிக்க ஏதுவாகவும் இணைத்துள்ளேன்.











முந்தைய பதிவு
---------------------------
மலம் அள்ளும் கொடூரத்தையும் தேவதாசி வழக்கத்தையும் தமிழகத்துக்கு இறக்குமதி செய்ததே வந்தேறி திராவிடர்கள் தான்
https://www.facebook.com/photo.php?fbid=10205002166004006&set=a.1674151063785.90834.1537700703&type=1&theater

0 பின்னூட்டங்கள்: