மகஇக ஏஜென்ட் மருதையன் எத்தனை முறை சிறை சென்றிருக்கிறார்?

மகஇக பொதுத்தளத்தில் யாருக்கும் தெரியுமோ என்னமோ ஆனால் இணையத்தில் வாய்கிழிய பேசும் இயக்கம், பெரியார் திக காரர்கள் மகஇக வோடு சோடி போட்டுக்கொண்டு சுற்றினார்கள், மகஇகவின் பார்ப்பன தலைமை சாயம் வெளுத்ததோ என்னமோ இப்போது முறைத்துக்கொண்டு திரிகின்றார்கள்...

எல்லோரையும் நோண்டு நொங்கெடுக்கும் புனித(?!)மான மகஇக வின் நிரந்தர பொதுச்செயலாளர் மருதையன் அவர்களின் மீது ஒரு சந்தேகம், எந்த மகஇக தோழர்களாவது தீர்த்துவைத்தால் தன்யனாவேன்...

சாதாரண பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் அவரில் ஆரம்பித்து நெடுமாறன், வைகோ, சுப.வீ, கொளத்தூர் மணி என்று நீளுகிற பட்டியல் தமிழர் விடுதலைப்படை மாறன், தமிழர் மீட்சிப்படை முத்துக்குமார் என பெரும் பட்டியல்... அடடே இதென்ன பட்டியல் என்கிறீர்களா? ஆம் இவர்களெல்லாம் பொதுவாழ்வில் அது பத்திரிக்கையாகவோ, அரசியலாகவோ, ஆயுதப்போராட்டமாகவோ என அரசையும் அதிகாரத்தையும் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக எதிர்த்து போராடியவர்கள் (உடனே மகஇக தோழர்கள் இவன் இது செய்தான் அவன் அது செய்தான் என்றெல்லாம் பட்டியல் போடவேண்டாம், இவர்கள் அனைவரும் நான் புனிதர்கள் என்று சொல்லவில்லை), இதற்காக இவர்கள் மீது தடா பொடா என ஏகப்பட்ட வழக்குகள், அந்த வழக்குகளுக்காக மாதக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் சிறையினுள் இருந்தவர்கள்... இன்னமும் ஏகப்பட்ட வழக்குகள் இவர்கள் மீது உள்ளன...

எதற்கெடுத்தாலும் நாங்கள் தான் காவல்துறையின் கடும் அடுக்குமுறையை சந்திக்கிறோம் என்று காவல்துறை தங்களின் க(ன்)ணை தங்கள் பிடறியின் மீது வைத்திருப்பதாக பீலா விட்டுக்கொண்டிருக்கும் மகஇக (இங்கே குறிப்பது மகஇக வின் அடிமட்ட தொண்டர்களையோ அல்லது இடை மட்ட பொறுப்பாளர்களையோ அல்ல அவர்கள் பாவம் பலியாடுகள், மகஇக வின் தலைமையை குறிப்பிடுகிறேன்)

நான் மேலே குறிப்பிட்டவர்களை போல ஏதேனும் மகஇக மருதையன் மீது அரசாங்கத்திற்கு எதிராக போராடி அதனால் சிறைக்குள் மாதக்கணக்கில் ஆண்டுகணக்கில் இருந்திருக்கிறாரா?

1.தோழர் மருதையன் எத்தனை முறை சிறை சென்றுள்ளார்?( ரிலையன்ஸ் போராட்டத்தில் மதியம் அரெஸ்ட் ஆகி மாலை ரிலீஸ் ஆன கதை போன்றல்ல)

2. மருதையன் மீது என்னென வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன?

3. தடா, பொடா, குண்டாஸ், மிசா என்ற வழக்குகள் ஏதேனும் அவர் மீது இருந்தனவா? அல்லது இருக்கின்றனவா? அப்படியெனில் எத்தனை மாதம் உள்ளே இருந்தார்?

4. மகஇக அடிமட்ட தொண்டர்களையே போலிஸ் ஜட்டியோடு அடிப்பதாக பீலா விடும் மகஇக வினர் மருதையன் அது மாதிரி எத்தனை முறை பரேடு வாங்கியிருக்கிறார்?

இந்த கேள்வியை சுத்தி சுத்தி சிலரிடம் விசாரித்தேன்... ம் பதில் கிடைக்கவில்லை, அது தான் இப்போது பதிவில் கேட்கிறேன்... ஒரு வேளை மருதையன் மீது பெரிய வழக்குகள் ஏதுமில்லை, உள்ளேயெல்லாம் போனதில்லை, ஜட்டியோடு அடிவாங்குவதெல்லாம் மகஇக தொண்டர்கள் மட்டும் தானென்றால் மருதையனின் புரட்சி யாரின் தயவில் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்...

26 பின்னூட்டங்கள்:

PRINCENRSAMA said...

மருதையரின் புர்ச்ச்சீ நடவடிக்கை என்னவென்பதை நமது இணைய நண்பர்கள் உணரட்டும்!

குழலி தொடருங்கள்!!

குழலி / Kuzhali said...

மாவீரன் முத்துக்குமார் மரண ஊர்வலத்தில் பேனர் பிடித்த மகஇக காரர்கள் ஈழ விடுதலை பற்றி முன்பு ஒரு முறை நடந்த விவாதம் இங்கே...

பிணங்கள் புரட்சி செய்யாது - தமிழீழம் - மகஇக நிலைப்பாடு

http://kuzhali.blogspot.com/2007/07/blog-post_13.html

மாம்போ No.8 said...

அதானே சாவ பத்தி பேசனுமின்னா ஒருத்தன் கொரஞ்சது 50 தடவையாவது செத்திருக்க வேணாமா :-)

Anonymous said...

ம க இ க வை நடத்த நாலு சிவப்பு சட்டை, ரெண்டு காமிரா, ஒரு கார்டூனிஸ்ட் , ரெண்டு கம்ப்யூட்டர் இருந்தா போதும். எங்க எது நடந்தாலும் போய நின்று போட்டோ எடுப்பதை தவிர என்ன செய்ய போகிறார்கள் ?

குழலி / Kuzhali said...

//மாம்போ No.8 said...
அதானே சாவ பத்தி பேசனுமின்னா ஒருத்தன் கொரஞ்சது 50 தடவையாவது செத்திருக்க வேணாமா :-)
//
அண்ணே நோக்கு கேள்வி புரியலையா? சும்மாவே அரசாங்கத்துக்கு எதிரா பேசினா சப்பை ஆளிலிருந்து பெரிய ஆள் வரை உள்ளே வைத்து சுலுக்கெடுக்கும் அரசாங்கம் நம்ம தோலர் மருதையனை மட்டும் கேஸ் எதுவும் இல்லாமல் விட்டு வைத்திருக்கும் மர்மம் என்ன? அல்லது தோலர் மருதைய்யனே ---- (please fill up the blanks)

குழலி / Kuzhali said...

// PRINCENRSAMA said...
மருதையரின் புர்ச்ச்சீ நடவடிக்கை என்னவென்பதை நமது இணைய நண்பர்கள் உணரட்டும்!
//
கேள்வியை போட்டிருக்கோம், தோழர்கள் பாருங்க செக்சன் செக்சனா விலாவாரியா தேதியோட இடத்தோட எங்கெங்கே லாம் உள்ள இருந்தார்னு சொல்ல போறாங்க....

பாவம் மகஇக அடிமட்ட தொண்டர்கள்

குழலி / Kuzhali said...

ஹைய்யா.... கொஞ்ச நாளா மாடரேசன் இல்லாம திறந்து வைத்திருந்த பின்னூட்டப்பெட்டியை பதிவை போட்டுவிட்டு உடனே மாடரேசனையும் போட்டேன்....

நான் செய்தது சரிதானென்று வெறிபிடிச்சி பின்னூட்டம் போட்டவருக்கு நன்றி... பல நேரங்களில் என் கணிப்பு தவறுவதில்லை

மாம்போ No.8 said...

அண்ணை ஒன்னு பண்ணு, நேரே ஐகோர்டுக்கு போயி ஏதாவது போண்டா வக்கீல பாத்து காச கொடுத்து எத்தன கேசு இருக்குன்னு கணக்கு பாரு..

உனக்கு பதில் சொல்ல எவனாவது ஒரு கேணை ம.க.இ.க தொன்டன் வந்தா நான் ஏன் கம்பீட்டர் மானிடர்ல முட்டிக்க வேண்டீதுதான்..

கேக்குறாங்க பாரு டீடெய்லு..

தமிழ்மணி said...

பதிவுக்கு நன்றி

குழலி / Kuzhali said...

//உனக்கு பதில் சொல்ல எவனாவது ஒரு கேணை ம.க.இ.க தொன்டன் வந்தா நான் ஏன் கம்பீட்டர் மானிடர்ல முட்டிக்க வேண்டீதுதான்..

கேக்குறாங்க பாரு டீடெய்லு..
//
அய் மாம்போ நெ.8 இந்த ம க இ க மருதையன் நெசமாவே பொரட்சியாளரா? அல்லது அரசாங்கமே உருவாக்கின ஏஜெண்ட்டான்னு தெரிஞ்சிக்க தான் இந்த கேள்வியே!

குழலி / Kuzhali said...

//தமிழ்மணி said...
பதிவுக்கு நன்றி
//
அய் வந்துட்டிங்களா? நெனச்சேன் கண்டிப்பா நீங்க வருவிங்கன்னு, கம்யூனிஸ்ட்னு சொல்லிக்கிறவனுங்களை திட்டினா தான் நம்ம பக்கம் எட்டி பார்ப்பிங்களா தமிழ்மணி

குழலி / Kuzhali said...

மாம்போ No.8 ... நோ நோ சைடு டிராக்கிங், ஒன்லி ஸ்ட்ரெய்ட் ட்ராக் மருதையன் மேட்டர் தான்... சைடு டிராக்கில் வண்டியை ஓட்டி மெயின் டிராக்கை காலி செய்யறது தானே உங்களுக்கு கை வந்த கலை...

பொரட்சியாளர் மருதையன் என்ன பொரட்சி செய்துருக்கார்னு பார்க்கலாம்

Pot"tea" kadai said...

எச்சூஸ்மி அதான் நாங்க தமில் கலாச்சாரத்தை இயல் இசை கூத்து என முக்கலைகள் (நோ நோ நாட் முலைகள்) வழியா வளத்துகிட்டு வரோமில்ல...அப்புறம் என்ன சிறுபிள்ள மாதிரி கேள்வி கேட்டுகிட்டு...ஸ்டுப்பிட்! கம்மூனிஸ்டுகள்(னு சொல்லிக்கிற பாடுகள்) ஒன்னு திமுகவுக்கு எடுபிடி இல்ல அதிமுகவுக்கு எடுபிடி இதுக்கே டயம் பத்தல...இதுல எப்பிடி நாங்க புரச்சீ செய்ரது...டாமிட்

Anonymous said...

எல்லா பயலும் சரக்கடிக்க போயிருப்பாய்ங்க. ரூம் போட்டு யோசிச்சு நாளைக்கு பதில் சொல்லுவாய்ங்க

களப்பிரர் - jp said...

//போலித் தமிழ் தேசியவாத அரசியலும் ஒரு ஏகாதிபத்திய எடுபிடி அரசியலே! // என்ற பதிவை திறந்தால், அது அழிக்கப்பட்டு விட்டது. தயவு செய்து யாரேனும் அனுப்பவும்.

//“தேர்தல் பாதை………. திருடர் பாதை! “//

அவர் சொன்னது அவர் கட்சிக்கும் சேர்த்து தானுங்க. அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப நிரந்தர பொது செயலாளர்னு டென்சன் ஆக்குறீங்க !!

தமிழ்மணி said...

நீங்க எதிர்பார்த்துகிட்டு இருப்பீங்கன்னு தெரியும் குழலி. உங்கள் எதிர்பார்ப்பை வீணாக்கலாமா?

:-))))

குழலி / Kuzhali said...

என்னங்க மருதையன் கலை இலக்கிய கழக தோலர்கள் யாரையும் காணாமே?

கனவு said...

உன்னையெல்லாம் ஒரு ஆளா மதிச்சு பதில் சொல்லனும்னு எங்களுக்கு அவசியம் இல்லை.

போ போய் பாமாக, மருத்துவன் இராமதாசு பற்றி எழுதி பொழப்பை ஓட்டு

ஏகலைவன் said...

மருத்துவன் இராமதாசு எந்தெந்த செயிலிலே எவ்ளோ வருஷம் இருந்தாரு குழலி. முதல்லே அவனவன் பின்புறம் சுத்தமா இருக்கான்னு பாருங்கய்யா. அடுத்தவன் கழுவலே. நாறுதுன்னு சொல்ல வந்துட்டீங்க. ஒரு பொறுக்கி அரசியல் கட்சிக்கு மாமா வேலை பார்ப்பவர்கள் அல்ல மகஇக தோழர்கள்.

குழலி / Kuzhali said...

//
ஏகலைவன் said...
மருத்துவன் இராமதாசு எந்தெந்த செயிலிலே எவ்ளோ வருஷம் இருந்தாரு குழலி.
//
ஏகலைவன் தோலர், மொதல்ல டென்சன் ஆகறைதை குறைங்க, நான் ஒரு கேள்வி கேட்டேன் அதுக்கு பதில் சொல்லுங்கன்னா மருத்துவன் மண்ணாங்கட்டின்னு பேசிக்கிட்டு... அடே அது தானே உங்க வழக்கம், மருத்துவர் எப்புடிவேணா இருந்துட்டு போகட்டும், உங்க பாஷையில அவர்தான் ஓட்டரசியல் வாதி, பிழைப்புவாதி ஏமாற்றுவதி ஆனா உங்க தோலர் மருதையன் என்ன வா(ந்)தி அது தான் கேள்வி

//முதல்லே அவனவன் பின்புறம் சுத்தமா இருக்கான்னு பாருங்கய்யா. அடுத்தவன் கழுவலே. நாறுதுன்னு சொல்ல வந்துட்டீங்க.//
ஹி ஹி ஊருக்கெல்லாம் யோக்கியம் எடுக்கும் உங்க யோக்கியதை கொஞ்சம் தெரிஞ்சிக்க தான்...

// ஒரு பொறுக்கி அரசியல் கட்சிக்கு மாமா வேலை பார்ப்பவர்கள் அல்ல மகஇக தோழர்கள்.
//
நானும் மகஇக தோழர்களை பற்றி ஒன்றும் சொல்லவில்லை, பாவம் அப்பாவிகள் அவர்கள்,

உங்கள் தலைமை தோலர் மருதையன் எந்த உளவு நிறுவனத்துக்கு மாமா வேலை பார்க்கிறார் என்பதை எல்லோரும் அறிந்து கொள்ள தான் கேள்வியே...

குழலி / Kuzhali said...

அப்புறம் ஏகலைவன், ஒரே நேரத்துல சொந்த பெயரிலும் அனானியாவும் பின்னூட்டம் போடும்போது கொஞ்சம் டைம் விடனும், இல்லைன்னா பாருங்க இப்புடிதான் ஆகும்... feejet ல ஒரே இடம் தான் காட்டுது ஆனா 2 பின்னூட்டம் ஒன்னு அனானியா ஒன்னு சொந்த பேர்ல... "செய்வதை திருந்த செய்"

Unknown said...

//அப்புறம் ஏகலைவன், ஒரே நேரத்துல சொந்த பெயரிலும் அனானியாவும் பின்னூட்டம் போடும்போது கொஞ்சம் டைம் விடனும், இல்லைன்னா பாருங்க இப்புடிதான் ஆகும்... feejet ல ஒரே இடம் தான் காட்டுது ஆனா 2 பின்னூட்டம் ஒன்னு அனானியா ஒன்னு சொந்த பேர்ல... "செய்வதை திருந்த செய்"
//

:-)

Anonymous said...

ஒருபுறம் 'தன்னார்வ நிறுவனங்கள் ஏகாதிபத்திய கைக்கூலிகள்' என்று புத்தகம் போட்டு தமிழக உழைக்கும் மக்களிடம் காசு கறந்து கொண்டு, இன்னொரு புறம தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியரான கலையரசனோடு இணைந்து கொண்டும், வினவு - ம.க.இ.க கும்பல் நடத்தும் புரட்சி சூர்ப்பரோ சூப்பர்.. இதனை அம்பலப்படுத்திய ஒரே காரணத்திறகாக ம.க.இ.கவின் பிரான்ஸ் முகவரான இரயாகரன் மூலமாக 'இனியொரு' இணையத்தின் மீது தாக்குதல் நடத்துவது அதனினும் சூப்பர். ச்சீ இதுவும் ஒரு பிழைப்பா?

http://inioru.com/?p=7440

Anonymous said...

They had fought many cases.In 1991 they were the ones who bore the brunt after ADMK came to power.
Whether it is struggle in Srirangam on entering the temple
or agitations in Madras Makaika had been facing the ire of police and cases.They dont publicise these.Veeramani protests at Memorial Hall at 11 a.m and is back to office by evening.It is not
so in their case.

Anonymous said...

கொள்கையோடு மோதமுடியாத போது இப்படித்தான் தனிநபர் தாக்குதலில் இறங்குவீர்கள் போல. சாராயம் காய்ச்சுறவன் கூடத்தான் பலமுறை ஜெயிலுக்குப் போறான். அவன் என்ன புர்ர்ர்ரட்சியாளனா? உனக்கு தைரியம் இருந்தால் மகஇகவின் அரசியலுடன் மோதப்பார்.

குழலி / Kuzhali said...

//கொள்கையோடு மோதமுடியாத போது இப்படித்தான் தனிநபர் தாக்குதலில் இறங்குவீர்கள் போல
//
அது சரி உங்க மகஇக குரூப்புதான் இறங்கும், நான் இந்த பதிவில் கேட்கிற சிம்ப்பிள்கேள்விக்கு பதில் சொல்லுங்க...

// சாராயம் காய்ச்சுறவன் கூடத்தான் பலமுறை ஜெயிலுக்குப் போறான். அவன் என்ன புர்ர்ர்ரட்சியாளனா?
//
ஜெயிலிக்கு போறனவெல்லாம் பொரட்சியாளன் அல்ல, ஆனால் எல்லா பொரட்சியாளர்களும் ஜெயிலுக்கு போனவர்களே, ஆனா உங்க பார்வையில் சப்பை ஆளு நக்கீரன் கோபால், சமரசவாதிகள் கொளத்தூர் மணி, டுபாக்கூர் நெடுமாறனெல்லாம் தடா பொடால உள்ள போயி வந்துருக்காங்க... ஆனா உங்க பொரட்ட்ட்ட்சியாளர் மருதைய்யன் என்கிற வல்லபேசன் அய்யரை மட்டும் பொடா,தடா என எந்த கிடாவும் முட்டமாட்டேங்குதே அதன் ரகசியம் என்னவோ? ரா ரா ரா சரசுக்கு ரா ரா வோ?

//உனக்கு தைரியம் இருந்தால் மகஇகவின் அரசியலுடன் மோதப்பார்.
//
ங்கொய்யால அதைத்தானே செய்துக்கொண்டிருக்கேன்....