புரட்சி நாளை காலை எட்டரை மணிக்கு வருது


ஊரே பரபரப்பாக இருக்கின்றது, எந்த பக்கம் திரும்பினாலும் புரட்சி பற்றிதான் பேச்சே, தினசரி, வார மாத பத்திரிக்கையில் எல்லாம் புரட்சி வருவதை பற்றி தான் பேச்சே புரட்சியை ஆதரித்தும் எதிர்த்தும் வாத பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றது...

ஆமா "சுதந்திரம்" வந்து எல்லாத்தையும் புடுங்கிடுச்சி, மீதியை புரட்சி வந்து தாம் புடுங்கப்போவுது சலித்துக்கொண்டார் டீக்கடை பாய்


சுதந்திரம் வந்து என்ன புரட்சி வந்து என்ன? எல்லாம் பணம் இருக்கிறவனுக்கு தாம்பா, நம்மளை மாதிரி ஏழைபாழைங்களுக்கு உழைச்சாதான் அரை வயிறு தின்னலாம், போப்பா போயி வேலையைப்பாருங்கப்பா கும்பலாக புரட்சி வருவதை பற்றி பேசிக்கொண்டிருந்த சிவப்பு சட்டை போட்ட "போர்ட்டர்" தோழர்களை விரட்டிக்கொண்டிருந்தார் ஹெ.எம்.எஸ் கோபால்


அரசியல் தலைவர்களிலும் கூட புரட்சியை ஆதரித்தும் எதிர்த்தும் அறிக்கைகள் விடப்பட்டுக்கொண்டிருந்தது


புரட்சி வருவதை யாராலும் தடுக்க முடியாது - திமுக தலைவர் உதயநிதி அறிவிப்பு

புரட்சியை ஆதரித்தால் தமிழ்நாடு உருப்படாது, புரட்சியை எதிர்த்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி அறிக்கை

புரட்சியை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை, - மாதிமுக(மாறன் திமுக) தலைவர்

நாங்கள் வித்தியாசமானவர்கள், மதுரைக்கு வடக்கே புரட்சிக்கு ஆதரவும் மதுரைக்கே தெற்கே எதிர்ப்பும் தெரிவிப்போம் மதுரையில் ஆதரவோ எதிர்ப்போ செய்யமாட்டோம், இளைய புரட்சி கலைஞர் பிரபாகரன் தலைமையை ஏற்கும் வரை நான் தேமுதிக வின் தலைமை பொறுப்பில் இருப்பேன், இளைய புரட்சி கலைஞர் பிரபாகரன் அவர்கள் தலைமை ஏற்கும் நாளுக்காக காத்திருக்கிறோம், அதன் பின் ஒரு தொண்டனாக தேமுதிகவில் தொடருவேன் - தேமுதிக தலைவர்(பொறுப்பு) சுதீஷ் பரபரப்பு பேட்டி


புரட்சி பற்றி முடிவு செய்ய புரட்சித்தலைவியின் ஆணைக்காக காத்திருக்கின்றோம், புரட்சி தலைவி கனவில் வந்து ஆணையிட தயாராக இன்றிலிருந்து புரட்சி வரும் நாள் வரை தூங்கப்போகிறோம், புரட்சி தலைவர் நாமம் வாழ்க, புரட்சி தலைவி புகழ் ஓங்குக - அதிமுக பொதுச்செயலாளர் ஏகாம்பரம் பேட்டி

புரட்சி உழைக்கும் மக்களை சுரண்டும் பொறுக்கிகளின் கொண்டாட்டம், உழைக்கும் மக்களை உடனடி பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் செயலே புரட்சி இதோ வருது புரட்சி அதோ வருது என்கிற நாடகம், புரட்சி வருது வருது என்று இத்தனை நாட்களாக மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள் புரட்சியை ஆதரிக்கும் தரகு முதலாளிகள் - தோழர் கிச்சா என்கிற கிருஷ்ண மூர்த்தி அய்யங்கார் - ம க இ க செயலாளர் - புதிய ஜனநாயகம் பத்திரிக்கையில் வெளியிட்ட அறிக்கை தோழர் "தீவிர அசுரனின்" வலைப்பதிவில்...


கரகம், காவடி மேள தாளங்களோடு பீர் விஸ்கி கைகளோடு புரட்சியை வரவேற்க ஊர் எல்லையிலேயே காத்திருந்தார்கள் இளைஞர்கள்....

"ஏம்பா கி.பி. 2000த்துலயே ஒரு புரட்சி வந்து ஊத்திக்கிச்சாமே தெரியுமா?"

"ஆமாம் நானும் கேள்விப்பட்டேன், நெட்ல கூட அது டீட்டெய்ல்ஸ் தேடினேன், 2000ல புரட்சி வந்ததுன்னு தகவல் இருக்கு ஆனா அதுக்கு மேல வேற ஒண்ணும் தகவல் இல்லை"

"ரொம்ப வருசம் கழிச்சி இந்த புரட்சி வந்திருக்கு, ஏற்கனவே சுதந்திரம் ஊத்திக்கிச்சி, இந்த புரட்சியும் ஊத்திக்கிச்சினா அவ்ளோதான் நம்ம கனவெல்லாம் வீணாயிடும்"

ஏய் புரட்சி வந்துருச்சி புரட்சி வந்துருச்சி, கத்திக்கொண்டே அந்த காரை நோக்கி ஓடினார்கள் இளைஞர்கள்....

தாரை தப்பட்டை முழங்க காரை சுற்றி சுற்றி வந்தார்கள்...

முகத்தை தொங்க போட்டபடி இறங்கினார் ....

எல்லோரிடமும் அப்போது ஒரே கேள்வி தான் புரட்சி வந்துருச்சா?? ஒரு வேளை முதலாளி புரட்சி வராம இருக்க சதி செய்துட்டாரா?, அவருக்கு புரட்சி வருவதில் விருப்பமேயில்லை, அவர் பையன் தான் புரட்சி வரவைக்க ஆர்வமாக இருந்தார்...

"அண்ணே புரட்சி வந்துருச்சா? "

"அட என்னப்பா திடீர்னு கூட 50 லட்சம் கூட குடுத்தாதான் புரட்சியை கொடுப்பேன்னு சொல்றானுங்க, அதான் பணம் பொறட்டிக்கிட்டு போக வந்துருக்கேன், பயப்படாதிங்க நாளைக்கு காலையில எட்டரை மணிக்குள்ள புரட்சி வந்துடும்"

புரட்சி - சென்ற மாதம் தான் அறுபதாம் கல்யாணம் செய்த சூப்பர் ஸ்டார் "விஜய்" - பழம் பெரும் நடிகை ஸ்ரேயாவின் பேத்தி சுரேயா நடிக்க 200 கோடி ரூபாய் செலவில் தயாரான தமிழ் திரைப்படம்


பின்குறிப்பு:
இது ஒரு மீள்பதிவு

11 பின்னூட்டங்கள்:

said...

வினவு தளத்தில் புரட்சியைப் பற்றி என்ன பேசீருப்பாங்கன்னும் சேர்த்திருந்தால் நல்லா இருந்திருக்கும்...
:P

said...

சுவராசியமான, நல்ல கற்பனை...

said...

முன்னால் ஓடியது கார்க்கியின் பேரனாக இருக்கலாம்!

said...

ha..ha..ha... Nallarukku Nanba :)

said...

//புரட்சி தலைவி கனவில் வந்து ஆணையிட // :)



அன்புடன்
சிங்கை நாதன்

said...

//வினவு தளத்தில் புரட்சியைப் பற்றி என்ன பேசீருப்பாங்கன்னும் சேர்த்திருந்தால் நல்லா இருந்திருக்கும்...
:P
//
வினவு தளத்தில் எல்லோரையும் திட்டிக்கொண்டிருந்திருப்பார்கள் ஆனால் விமர்சனம் என்பார்கள் ஆனால் பெண்ணிய அடிமைத்தன கவிதையில் மார்க்சின் ஆண்குறி என்றால் இவர்களுக்கு வெடைச்சிக்கும்...
//முன்னால் ஓடியது கார்க்கியின் பேரனாக இருக்கலாம்
//
:-)))))

said...

அருமை

said...

வினவுக்கு அநீதி இழைக்கிறீர்கள். பார்ப்பனீய சதியால் புரட்சிக்கு ஆபத்து என்ற ரேஞ்சில் எழுதினால்தான் அவர் திங்கறது ஜீரணமாகும்னு தெரியாம இது என்ன சிறுபிள்ளைத்தனமான பேச்சு. அப்படியெல்லாம் பேசப்படாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//வினவுக்கு அநீதி இழைக்கிறீர்கள். பார்ப்பனீய சதியால் புரட்சிக்கு ஆபத்து என்ற ரேஞ்சில் எழுதினால்தான் அவர் திங்கறது ஜீரணமாகும்னு தெரியாம இது என்ன சிறுபிள்ளைத்தனமான பேச்சு. அப்படியெல்லாம் பேசப்படாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
//
டோண்டு சார் நீங்க இப்படி கிண்டல் அடிக்கிற அளவுக்கு அவங்க உங்களுடைய கொள்கைகளுக்கு ஆபத்தானவங்க இல்லை, அவங்களே உங்க ஆளுங்க தான்... என்ன நீங்க நேரடியா செய்யறதை வினவு மகஇக காரர்கள் மறைமுகமாக செய்கிறார்கள்... வினவு மகஇக கும்பலை திட்டாதீங்க... அவங்களும் உங்க ஆளுங்க தான்

said...

குழலித் தாத்தா அப்பவும் இப்படித்தான் ப்ளாக் எழுதிட்டிருப்பாரா இல்லை சன்யாசம் வாங்கியிருப்பாரா?

said...

I apologise, but, in my opinion, you are mistaken. I can defend the position. Write to me in PM, we will communicate.