மக்களின் வயிற்றில் மண் அள்ளி போட்ட அதிமுக,பாமக, மதிமுக

இடைத்தேர்தல் என்றாலே சாதாரணமாகவே கொஞ்சம் கூடுதல் கவனிப்பு இருக்கும், திருமங்கலம் இடைத்தேர்தலும் அதைத் தொடர்ந்து நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலிலும் மக்களுக்கு செம நோட்டு கவனிப்பு நடந்தது.

இந்த நேரத்தில் ஐந்து சட்டமன்ற இடைத்தேர்தல்கள் வரப்போகின்றது என்றதும் நாக்கில் எச்சில் ஊற மக்கள் காத்திருந்த நேரத்தில் அதில் மண் அள்ளி போடுகிற மாதிரி அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக சொல்ல அ.தி.மு.க.வை தொடர்ந்து பா.ம.க. ம.தி.மு.க.வும் தேர்தலை புறக்கணிக்கிறது!

ஆளில்லாத மைதானத்துல ஓடி ஓடி கோல் போட திமுகவும் என்ன கேணையா... இந்த இடைத்தேர்தலில் நோட்டு கவனிப்பு குறையுமா? பார்க்கலாம்...

1 பின்னூட்டங்கள்:

said...

விசயகாந்த் என்ன முடிவு எடுக்குறாராம்?