தவறவிடக்கூடாத அற்புதமான இரண்டு இணைய சிறுகதைகள்

இணைய எழுத்துகள் தரம் வேறெந்த எழுத்துகளும் குறைந்தது அல்ல என்பதை நிரூபிக்கம் பல எழுத்துகள் இங்கே உள்ளன, இணையத்தில் சிறுகதை கவிதைகள் என்றால் தெரித்து ஓடும் நிலை உள்ளது, இயல்பாகவே சிறுகதைகள் மேல் ஓரளவிற்க்கு ஆர்வம் உள்ளவன் என்பதால் இணையத்தில் கண்ணில் படும் சிறுகதைகளை படிக்காமல் விடுவதில்லை, பல சிறுகதைகள் பழைய விகடன் குமுதம் டெம்ப்ளேட் கதைகளாக இருப்பதும், பயிற்ச்சி இல்லாததால் ஏற்படும் சலிப்பூட்டும் நடைகளும், ஜெண்டில்மேன் கதைக்கருக்கள், அரதப்பழசான கதைக்கருக்கள் படிக்க கொஞ்சம் சிரமத்தை தந்தாலும் நல்ல கதை சிக்கிவிடாதா என்று படிப்பது உண்டு.

முதல் 4 வரியிலேயே கதையை மேலே படிக்கலாமா வேண்டாம என்ற முடிவுக்கு வாசகன் வந்துவிடுவான், அந்த 4 வரியை தாண்டி வந்துவிட்டாலும் சிறுகதை ஒரு 20-20 கிரிக்கெட் ஆட்டம் போன்றது கடைசி வரை விறுவிறுப்பாக செல்ல வேண்டும்...

வேறு எந்த எழுத்துக்களுக்கும் குறைவில்லாத இணையத்தில் வெளியான இரண்டு இணைய சிறுகதைகளை இங்கே பகிர விரும்புகிறேன்...

தெய்வநாயகி என்றொரு ஆட்டக்காரி - மோகன் தாஸ் எழுதிய இந்த சிறுகதையானது "ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு" என்று ஆரம்பமாகும் கதை ஒரு பையனின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கும்,அப்படியே அங்கீகாரத்துக்காக ஏங்கும் சேர்த்துக்கொண்டு வாழவைக்கப்படும் பெண்ணின் உணர்வு, முதல் தாரத்தின் அதிகாரம் கையை விட்டு போகாமல் இருக்க செய்யும் முயற்சிகள் வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் காலிப்பெருங்காய டப்பா பேச்சுகள், என்னடா உங்க சித்தி ராத்திரியில் உங்க நைனாவிற்காக டிரெஸ்ஸே போடாம டான்ஸ் ஆடுவாங்களாமே நீ பார்த்திருக்கிறியா என்று கேட்கும் ஊர் ஆட்கள் என ஒரு திரைப்படத்தை நம் மனக்கண் முன் ஓட்டிவிடுகிறார்.... என் வாழ்க்கையில் படித்த சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக நிச்சயம் இது இருக்கும்...

வேட்டையாடு! விளையாடு!!!- விசை என்ற வலைப்பதிவில் எழுதப்பட்ட சிறுகதை முகமூடி சிறுகதை போட்டியில் வெற்றிபெற்ற இந்த கதையானது வேந்தர் விலாடிமிர் வீழ்ந்தார்! வேந்தர் வேலன் வாழ்க!! என்ற ஆரம்பமாகும் இது விஸ்வநாத் ஆனந்த் மற்றும் காஸ்ப்ரோவை நினைவு படுத்தினாலும் நிறைய செஸ் பற்றிய டெக்னிக்கல் தகவல்கள் இருப்பது போல தோன்றினாலும் கதை சர சர வென வேகமாக செல்லுகிறது, மேலும் படக்காட்சிகளாக கதை விரிகின்றது, கதையின் கடைசி பத்தியில் ஒரு சஸ்பென்ஸ்ம் உடைகிறது... இந்த கதையை எழுதியவர் தற்போது பதிவுகள் எழுதவில்லை போலும், அவரோட வலைப்பதிவுகளில் தற்போது புதுப்பிக்கப்படுவதில்லை...

இந்த இரண்டு சிறுகதைகளையுமே அவசர அடியாக படிப்பதைவிட நிதானமாக படித்து ருசிக்கலாம்...

2 பின்னூட்டங்கள்:

said...

பகிர்விற்கு நன்றி!

said...

இரண்டும் அருமையான கதைகள். அதிலும் அந்த சதுரங்க கதை மிக மிக அருமை.