சாகரனுக்கு அஞ்சலி

தேன்கூடு திரட்டியை உருவாக்கியவரும் நமது சக வலைப்பதிவாளருமான சாகரன் கல்யாண் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள், அவரது குடும்பம் இந்த இழப்பை தாங்குவது மிக கடினம் என்ற போதிலும் அவரின் குடும்பத்திற்கு என் அனுதாபங்கள்.

சென்னையில் லக்கிலுக்கை சந்தித்தபோது அவர் சாகரனுடன் பேசியதையும் சாகரனைப்பற்றியும் கூறியுள்ளார், மேலும் ஒருமுறை லக்கிலுக்குடன் ஜிசாட்டில் பேசிக்கொண்டோம், அப்போது லக்கியிடம் சாகரனுடம் பேசவேண்டுமென்று கூறியிருந்தேன், இது தவிர சாகரனுடன் நேரடி தொடர்போ மின்மடல் தொடர்போ இருந்ததில்லை, இனியும் இருக்காது என்று நினைக்கும் போது மிக வருத்தமாக உள்ளது.

0 பின்னூட்டங்கள்: