இவர்கள் என்ன செய்துவிட்டார்கள்?

இவர்கள் என்ன செய்துவிட்டார்கள் என தினமலர் இந்த குதி குதிக்கின்றது?!

காவல்துறை வேறு இதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிறது!!!

இங்கே படமெடுக்க யார் அனுமதித்தது?

Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com

இது தான் தினமலரின் இன்வேஸ்டிகேட் ஜர்னலிசம் போல...


எதுக்கும் ஒரு சிரிப்பு குறியீடு போட்டுக்கொள்கின்றேன் தர்ம அடியிலிருந்து தப்பித்துக்கொள்ள
:-)

நன்றி
தினமலர்
http://www.dinamalar.com/2005sep26/imp7.asp

13 பின்னூட்டங்கள்:

ENNAR said...

ஐயகோ இதை நான் படிக்காமல் பார்த்தேன் வெளிநாடு என நினைத்துப்பார்த்தால் கண்ணகி பிறந்த நம்நாட்டின் தலைநகரிலா?
வெட்கம் பின் குஷ்பு சொன்னதில் என்ன தப்பு

என்னார்

Unknown said...

நாம எல்லோரும் வாழ்க்கைய எப்படி வாழணும்ன்னு தெரியாம இருக்கோம், அவங்க வாழ்ந்துகிட்டு இருக்காங்க.

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பெரூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊமூச்சு தான் விட முடியுது.

பிகு: இந்த மறுமொழி நகைச்சுவைக்கு மட்டுமே, இதனை பிடித்துக்கொண்டு யாரும் என்னை அடிக்க வராதீர்கள்

குழலி / Kuzhali said...

கேவிஆர், நானே காதுல புகை விட்டுக்கொண்டு இருக்கின்றேன் நீங்க வேற எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகின்றீர்... :-))

பிகு: இந்த மறுமொழி நகைச்சுவைக்கு மட்டுமே, இதனை பிடித்துக்கொண்டு யாரும் என்னை அடிக்க வராதீர்கள்

Anonymous said...

அய்யே பேஷன் சோவாமே! உவ்வே ! என்று சொல்லிக்கொண்டே
பேஷன் ஷோ படங்களை தலைப்பு செய்தியாக வெளியிடும்
நல்ல பத்திரிகை.

வீ. எம் said...

//ennar said
பின் குஷ்பு சொன்னதில்
என்ன தப்பு//


அப்போ?
தங்கர் சொன்னதிலும் எந்த தவறும் இல்லைத்தானே?? அப்புறம் ஏன் குஷ்பு தையா தக்கானு குதிச்சுனு என்னார் அவர்களே?

குழலி / Kuzhali said...

வாங்க வீ.எம். எப்படி இருக்கிங்க, 6 பதிவு போட்டுள்ளேன்.... இன்னும் ஒரு வாரத்திற்கு வனவாசம் போகப்போகின்றேன், அதான் மொத்தமா போட்டாச்சி....

நன்றி

Ganesh Gopalasubramanian said...

எனக்கு கண்ணு தெரியலைங்க

தெருத்தொண்டன் said...

குழலி,
இவர்கள் 25 ஆம் தேதி மாலை செய்ததை அவர்கள் 26 ஆம் தேதி காலை செய்திருக்கிறார்கள். இந்துக் கலாச்சாரமும் தமிழ்க் கலாச்சாரமும் வர்த்தகத்துக்காக சங்கமிக்கும் இடம் எது என்பதை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

http://www.tamilmurasu.in/2005/sep/25/10.pdf

Anonymous said...

//ஒரு வாரத்திற்கு வனவாசம் போகப்போகின்றேன்..//-kuzhali said.

வனவாசம் போயி இந்தமாரி என்ஞாய் பண்ணப்போறீரு! அவ்ளோதானே!!

Anonymous said...

உங்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிட்ட்து.
http://www.dinamalar.com/2005sep28/tn36.asp

Anonymous said...

http://thatstamil.indiainfo.com/news/2005/09/28/hotel.html

ஆண், பெண் ஊழியர்கள் சிறிய மேலாடையுடன் மௌத் கிஸ் அடிப்பது, பெண்கள் கட்டிப் பிடித்துக் கொண்டு மது குடிப்பது உள்பட எல்லை மீறிய படங்கள் அதில் அடக்கம். அதில் பிரசுரிக்கத்தக்க வகையில் இருந்த குறைந்த ஆபாசப் படங்களை மட்டும் பத்திரிக்கைகள் வெளியிட்டன. இதில் இடம் பெற்றிருந்தவர்களில் பெரும்பாலோனார் வட இந்தியர் பெண், ஆண்களே.

இந் நிலையில் இந்தப் பார்ட்டியை நடத்தப்பட்ட ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜஸ்ட் டிரஸ்ட் என்ற அமைப்பைச் சேர்ந்த ஜெபராஜ் என்பவர் போலீசில் புகார் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து அந்த ஹோட்டலின் மதுபான, உணவுப் பிரிவின் இணை மேலாளர் வினோத் பாபு (35), வரவேற்பாளர் ஹிலாஸ் (22) ஆகியோரை நேற்றிரவில் கைது செய்தனர்.

ஆபாச பார்ட்டி நடத்தியது, லைசென்ஸ் இல்லாமல் பார் நடத்தி மதுபானம் வினியோகித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் அந்த ஹோட்டல் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மயிலாப்பூர் துணை கமிஷ்னர் கலியமூர்த்தி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இருவரும் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளன.

Anonymous said...

ingu pirpOkku comment pOtta ennarum arasuvum kugaivaasigal. kaalathirkErpa maaraadha loosu ulagathil irukkiraargal.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

அது என்ன பெண் குடிப்பதை இவ்வளவு மெனக்கெட்டு எழுதுகிறார்கள்..அப்ப ஆண் மட்டும் குடிக்கலாம் என்பது பண்பாடா..bar எல்லாம் பொது இடம் கிடையாது..அங்கு பூந்து இது மாதிரி படம் எடுத்து பரபரப்பு இதழியல் நடத்துவது தான் அநாகரிகம்..தொப்புள் தெரிய நடிகை படம் போட்டு பிழைப்பு நடத்தும் இந்த விடயங்களை குறித்து எழுதுவதற்கு தார்மீக யோக்கியதை கிடையாது