அப்சல், தீவிரவாதம், மாறி வரும் போர் முறை




இவைகள் மாற்றுப்பார்வையே, இந்த மாற்றுப்பார்வையே முற்றிலும் சரியானது என்று தீர்ப்பு வழங்கும் நீதிபதியாக இருப்பதைவிட இங்கே பதிவு செய்ய வேண்டிய அவசியமிருப்பதாக கருதியதாலேயே இந்த பதிவு.

இந்திய நாடாளுமன்றத்தை தாக்கியதற்கு உதவிய அப்சலை தூக்கில் போடுமாறும் அது நியாயமனதுமே என்று இங்கே பலரும் சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் மேலே உள்ளபடங்களில் இருப்பவர்கள் அப்சலின் தூக்கை எதிர்த்து ஆர்பாட்டம் செய்கின்றனர், அவர்களும் இந்தியர்கள் என்று தானே சொல்லப்படுகிறார்கள், தாக்கப்பட்ட பாராளுமன்றம் அவர்களுக்கும் உரிமையானது தானே பிறகேன் அவர்கள் அப்சலின் தூக்கை எதிர்க்கின்றார்கள், தெருவில் இறங்குகின்றனர், இங்கே பலருக்கும் உள்ள அந்த உணர்ச்சி அவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது? எது அவர்களை தெருவில் இறங்க வைத்துள்ளது?


மேலே படத்தில் இருப்பவர் யார் தெரிகின்றதா? இவர் பெயர் சப்ரஜித் சிங், இவர் 1989ல் பாக்கிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு தொடர்புடையவர் என்று பாக்கிஸ்தானில் வழக்கு நடந்து தூக்கு தண்டனையை எதிர் நோக்கியிருப்பவர், இவருக்காக இந்தியாவும், இந்திய தூதரும் அவரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய பாக்கிஸ்தானிடம் கோரிக்கை விடுத்தது, பாக்கிஸ்தான் அதிபர் முஷாரப் அவர் "ரா"வை சேர்ந்தவர் என்றும் அவருக்கு குண்டுவெடிப்புகளோடு தொடர்புள்ளது என பாக்கிஸ்தான் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் கூறிவிட்டார். இவர் ஆடுமேய்க்கும்போது தவறுதலாக சென்றவர் என்றது இந்திய தரப்பு, ஆனாலும் இந்திய மக்களும், அரசாங்கமும் அவரது தூக்கை தடைசெய்ய எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொண்டது.

இன்று வடகொரியாவின் அணு ஆயுத சோதனையை எதிர்க்கும் இந்தியாவில் புத்தர் சிரித்த அணுஆயுத சோதனையும் நடந்தது.

இவையெல்லாம் சொல்ல காரணம் சரிகளும் தவறுகளும், ஆளுக்கு ஆள் மாறுபடுகின்றது, செய்பவர்களை பொறுத்து மாறுகின்றது, செய்தது யார், பார்ப்பவர் யார் என்பதை பொறுத்து மாறுகின்றது.

"சிக்காடிலோ" என்ற தொடர்கொலைகாரன் செய்த கொலைகளுக்கு க்ராவ்சென்கோ என்பவரின் மீது குற்றம் சாட்டி தூக்கிலிட்டு பின் அதை செய்தது சிக்காடிலோ என்று அறியவந்த போது செய்த தவறை திருத்திகொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது, கிலானியில் ஆரம்பித்து விஞ்ஞானி நம்பிநாராயணன் ஜோடிக்கப்பட்ட வழக்கு வரை பலவற்றிலும் ஒரு வேளை தூக்களிக்கப்பட்டிருந்தால் தவறுகள் திருத்திக்கொள்ளப்பட வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம்.

"ஒரு நாள் காலை சி.ஐ.டி. போலீஸ் சூபரிடென்ட் மிஸ்டர் நியூமேன் என்னிடம் வந்தார், நாங்கள் சொல்கின்ற மாதிரி வாக்கு மூலம் தராவிட்டால் காகோரி வழக்கில் என்னை சேர்த்து தசராவில் குண்டு வழக்கில் சிக்கவைக்கப் போவதாக மிரட்டினார். போதுமான சாட்சியத்துடன் தூக்கில் போடுவேன் என்றார், அப்போது எனக்கு விபரம் அதிகம் தெரியாதென்றாலும் கூட போலீஸ் நினைத்தால் எதையும் செய்ய முடியுமென கருதினேன்" - இதை சொன்னவர் பகத்சிங்( நூல் - நான் ஏன் நாத்திகன் ஆனேன்?)

பொதுவாக யாரையுமே தூக்கில் போடக்கூடாது என்ற கருத்தாக்கத்தை வலியுறுத்துபவர்கள், தவறுதலாக தூக்கிலிடப்படுதல், சோடிக்கப்பட்ட வழக்கு, அப்சல் நாடாளுமன்ற தாக்குதலில் அவருடைய தொடர்பென்ன இப்படியெல்லாம் பலரும் பேசுவதால் இதை தொடாமல் நேரடியாக அடுத்த நிலைக்கு சென்றேன், சரியும் தவறும் செய்பவர்களை பொறுத்தும் பார்ப்பவர்களை பொறுத்தும் அமையும் என்பதை வலியுறுத்தவே அப்படியான ஒரு பதிவு.

வெகுசன ஊடகங்களைப்போலவே வலைப்பதிவுகளிலும் பல இடங்களில் இந்திய தேச பக்தி பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் எத்தனை தூரம் இந்திய தேசியம் நசுக்கும் தேசிய இனங்கள் பற்றி பேச இயலும் என தெரியவில்லை, வடகிழக்கு மாநிலங்களில் நேற்றுதான் இராணுவ சட்டம் திரும்பபெறப்பட்டுள்ளது, சப்பையான மூக்கும், இடுங்கிய கண்களும் உள்ள மங்கோலிய இனமான அந்த வடகிழக்கு மாநில மக்கள் எந்த விதத்தில் இந்தியாவுடன் எந்த இயல்பான கலாச்சார, மொழி, மத பண்பாட்டு முறையில் இணைக்கப்பட்டனர் என்ற கேள்விக்கு நம்மால் விடைசொல்வதென்பது கடினமானதே, வெகுசன ஊடகங்களால் மறைக்கப்பட்டிருந்தாலும் அங்கே தனி அரசாங்கமே நடந்து கொண்டிருப்பதும், அங்கே வரிவசூலில் ஆரம்பித்து ஒரு அங்கீகரிக்கப்படாத அரசாங்கமே நடந்து வந்திருக்கின்றது, அந்த பிரதமருடன்(அப்படி அவர்கள் அழைத்துகொள்கின்றனர்) ஜப்பானில் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பேச்சுவார்த்தைகளை நடத்தினர். ( தமிழ்நாட்டில் இருந்து லாரிகளில் அங்கு போகும் ஆட்களை கேட்டால் வரிவசூல் பற்றி சொல்வார்கள். அவர்களை பாராட்ட அல்ல இந்த தகவல் .யதார்த்தத்தை சொல்லவே)

காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா நிச்சயமாக வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை என்பது தெளிவானதே, காஷ்மீர் பிரச்சினை பற்றிய அலசல் தமிழ்சசி அவர்களால் கிட்டத்தட்ட முழுவதுமாக அலசப்பட்டுள்ளது அதன் சுட்டிகள் இங்கே.

சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை

காஷ்மீரின் விடுதலை

காஷ்மீர் பிரச்சினை என்றாலே அதை உடனடியாக இசுலாமிய அடிப்படை பயங்கரவாத செயல்களோடு இணைத்து காஷ்மீர் பிரச்சினை பற்றி பேசுபவர்கள் இசுலாமிய அடிப்படை வாதிகளுக்கு ஆதரவு தருவது போன்ற அய்யோக்கியத்தனமான பொய் பிரச்சாரத்தை செய்து வரும் இந்திய வெகுசன ஊடகங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் இங்கே வலைப்பதிவிலும் காஷ்மீர் பிரச்சினை பற்றி பேசும்போது இசுலாமிய அடிப்படைவாத அல்கொய்தா அமைப்புகள் செய்த படுகொலைகளின் படத்தை போட்டு பேசுவது காஷ்மீர் பற்றி பேசுபவர்களின் மீது இசுலாமிய அடிப்படைவாத ஆதரவாளர்கள் என்பது போன்ற மாயத்தை ஏற்படுத்த முயல்வது அவர்களின் நேர்மையின்மையையே அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது என கருத வாய்ப்புள்ளது, இந்து மத கவசத்தை அணிந்திருக்கும் என்னை போன்றவர்களுக்கே இப்படியான நிலை என்னும் போது இந்த பிரச்சினையில் இசுலாமிய வலைப்பதிவாளர்கள் எந்த அளவிற்கு பேச இயலும் என்பது சந்தேகமே.

முன்பிருந்த போர்முறைகளில் பெரும்பாலும் கூட்டம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த பக்கமே வெற்றி என்ற நிலை இருந்தது, மாறி வரும் போர் உத்திகள், வெடிகுண்டுகள் எல்லாம் இன்று எத்தனை பெரிய நாட்டையும் சிறு குழுக்கள் அந்த நாட்டின் நிம்மதியை இழக்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, இலங்கை இராணுவத்தின் அளவில் பாதி கூட இல்லாத விடுதலைபுலிகளை இலங்கை அரசு வெற்றி கொள்ள இயலாத நிலை, கார் குண்டுவெடிப்புகள், தற்கொலை குண்டு வெடிப்புகள் என இன்று ஏதேனும் ஒரு முறையில் நாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன, பாதிக்கப்படும் இனக்குழுக்கள் அது பயங்கரவாதத்தாலோ, அரச பயங்கரவாதத்தாலோ எதுவானாலும் இன்றைய நிலையில் அந்த இனக்குழுக்கள் அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களுக்கு பெருமளவில் சேதத்தை உருவாக்க இயலும் என்பதே தற்போது நாம் உலகில் பார்த்துக்கொண்டிருப்பது, அறிவிக்கப்பட்டது தான் போர் என்றில்லை, எல்லாமே போர்தான் இது குழுக்களுக்கு மட்டுமல்ல நாடுகளுக்கும் பொறுந்தும், இப்போது போர் முறை மாறிவிட்டதால் சிறிய சிறிய நாடுகள் கூட பெரும் சேதத்தை எதிரிக்கு விளைவிக்கலாம், சில ஆண்டுகளுக்கு முன் பாக்கிஸ்த்தானுடம் போர் அபாயம் ஏற்பட்டு நீங்கியதே, ஏன் இந்தியாவில் போரை ஆரம்பிக்க இயலவில்லை, ஏன் தயங்கினார்கள், அணு ஆயுதப்போரின் அபாயம் வரை சென்றது ஆனால் போர் நடக்கவில்லை, போர் ஆரம்பித்தால் இந்தியாவினால் பாக்கிஸ்தானுக்கு ஏற்படும் அழிவிற்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் இங்கேயும் ஏற்படும் அது தான் காரணம், பாக்கிஸ்தானின் அணு ஆயுத பலம் அது மேலும் ஒரு முறை இந்தியாவிடம் போரில் அடிபடுவதிலிருந்து தப்பித்தது...


இயல்பாக எழும் சில கேள்விகளும் விவகாரத்திற்காகவே எழுப்பப்பட்ட சில கேள்விகளையும் பார்க்கலாம்.

உம்ம வீட்டில் யாரேனும் இம்மாதிரி நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டால் இப்படியான மாற்றுபார்வை பற்றி பேச இயலுமா என்ற கேள்வி எழும் போது நேர்மையான பதில் "இப்படியாக பேச முடியாது" என்பதுவே, உம்ம வீட்டில் அரச பயங்கரவாதம் நடந்திருந்தால் அப்போதும் தேசபக்தி பெருக்கெடுத்து ஓடுமா என்ற கேள்வியும் எழுவது நியாயமானதாகவே இருக்கலாம், பயங்கரவாதமோ, அரச பயங்கரவாதமோ நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் தான் அதன் எதிர்வினைகள் ஆற்ற வேண்டும் மற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள் என்பதற்கு எந்த காலத்திலும் ஆதாரமில்லை, 12வயதில் நேரடியாக பாதிக்கப்படாத ஆனால் ஜாலியன் வாலாபாக் படுகொலைகளை பார்த்த பகத்சிங்கின் பங்கு சுதந்திரப்போராட்டத்தில் எத்தனை தூரம் இருந்தது என்பது நாம் அறிந்ததே, வலைப்பதிவாளர் ராஜ்வனஜ் கோயமுத்தூர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் நேரடியாக பெரும் பாதிப்பில்லையென்றாலும் வெகுண்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்தது என நிறைய இருக்கின்றது.

கற்பழிக்காத இராணுவமென்று உலகில் எதுவுமேயில்லை, தீவிரவாதிகளை பிடிக்க போகும்போது அத்துமீறல்கள் நடக்கத்தான் செய்யும், பாருங்கள் காஷ்மீரில் கூட இராணுவம் இப்படி பாதிக்கப்பட்டவர்களை தத்தெடுத்துள்ளது இப்படியான ஒரு பின்னூட்டம் வீசப்பட்டது, எப்படி இப்படி ஒரு சாக்கு நம்மால் சொல்ல முடிகின்றது? அரசாங்க, இராணுவ அத்து மீறல்களுக்கு அந்த அரசை உருவாக்கியவர்களுக்கும், இராணுவத்திற்கு சம்பளம் கொடுக்கும் அந்த நாட்டின் குடிமக்களுக்கும் எந்த பொறுப்பும் இல்லையா? எந்த மக்களை எந்த தேசத்தை எந்த அரசை காப்பதற்காக பயங்கரவாதத்தை எதிர்கொள்பவர்கள் அந்த மக்களின் மீது தம் கோபத்தை காண்பிக்க மாட்டார்களா?

அன்னிய தலையீடு பற்றி பேசும்போது சமீபத்தில் கொல்லப்பட்ட பாக்கிஸ்தானிலிருந்து பலுசிஸ்தானை தனி நாடாக்க கோரிய பழங்குடி தலைவர் புட்கா அவர்களிடம் இந்தியா உங்களுக்கு உதவுவதாக சொல்கிறார்களே என்று எழும்பிய கேள்விக்கு பதிலாக பாக்கிஸ்தானிலிருந்து விடுதலை பெற நாங்கள் எந்த சைத்தானிடமிருந்து வேண்டுமானாலும் உதவி பெறுவோம் என்றார், இந்திய சுதந்திரத்திற்காக ஹிட்லரின் உதவியை நாடிய சென்பகராமன், ஜப்பான் துணையை கொண்டு அமைக்கப்பட்ட நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் எல்லாம் நினைவுக்கு வருகின்றது.

காஷ்மீர் மக்கள் தேர்தலில் பங்கெடுக்கின்றார்களே என்பவர்களுக்கு இந்தியா சுதந்திரம் பெறும் முன் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ், முஸ்லீம் லீக், நீதிக்கட்சி என பல தரப்பட்ட கட்சிகளும் தேர்தலில் பங்கெடுத்ததை நினைவு படுத்த விரும்புகின்றேன்.

சில ஆண்டுகளுக்கு முன் வரை இந்திய ஊடகங்கள் சொல்வது மட்டுமே நமக்கு செய்தியாக இருந்தன, இன்றைய இணைய உலகில் செய்திகளை தெரிந்து கொள்வதற்கு எந்த கட்டுப்பாடுமில்லை, பாக்கிஸ்தான் செய்தி தாளை கூட இணையத்தில் படிக்கலாம், எல்லா நாட்டு செய்திகளையும் படிக்கலாம், அதை முழுவதுமாக நம்பவேண்டுமென்பதில்லை, குறைந்த பட்சம் என்ன நடக்கிறதென்றாவது தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய நிலையில் எல்லா இனக் குழுக்களுக்கும் அவரவர்களுக்கான நியாயமான உரிமைகளையும் பங்கையும் கொடுத்தால் மட்டுமே நிம்மதியாக நாட்டு மக்கள் உறங்கும் நிலை, அடக்குமுறைக்கு ஆளாகும்,ஒடுக்கப்படும், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இனக்குழுக்கள் இன்றைய சூழலில் எளிதாக மற்ற மக்களின் நிம்மதியை கெடுக்கும் நிலைப்பாடு உள்ளது.

References:
http://www.hindu.com/2005/09/15/stories/2005091506231200.htm
http://www.paktribune.com/news/index.shtml?116707

வலையுலக அரசியலில் கணக்கு தீர்க்கும் முகமாக ராமதாஸ் சட்டகத்தில் அடைக்க முயன்றவர்களில் ஆரம்பித்து மூடிக்கொண்டிரு என்று கூறியவர்கள் வரை என் மீது தனிமனித தாக்குதல் நடத்தியவர்களுக்கு இந்த பதிவு எழுத ஆரம்பிக்கும் முன் பதில் சொல்ல வேண்டுமென்ற மனநிலை இருந்தது, ஆனால் அது தற்போது இல்லை என்பதால் அந்த தனிமனித தாக்குதல்கலை புறந்தள்ளி செல்கிறேன்.

நாடாளுமன்ற தாக்குதலும் தூக்கு தண்டனையும்

நாடாளுமன்றத்தை தாக்கி அதில் வெடிகுண்டு வீசியவர்கள் நாட்டின் இறையாண்மைக்கு ஊறுவிளவிக்க முயற்சித்தார்கள் என்பது உண்மை, இந்த நாட்டில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் ஒரு பதட்டத்தை உருவாக்கினார்கள் என்பது உண்மையே, ஆனால் இதையும் சுதந்திர போராட்டம் என்பார்கள், இப்படி பட்ட தீவிரவாதிகளை தூக்கிலிடுவதே சரியானதாக இருக்கும், இதை சுதந்திர போராட்டமாக உருவகித்து பேசுபவர்கள் அவர்கள் கொலை செய்யும்போதும், குண்டு வைக்கும்போதும் அது தேசிய இனங்களின் எழுச்சி, உரிமைக்குரல் என்பார்கள். ( இவர்கள் வீட்டில் எல்லாம் அவர்கள் குண்டு வைக்கப் போவதில்லை . ஏனெனில் இவர்கள் திருட்டுத்தனமாக வீடு கட்டியிருப்பது அரசால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என அறிவிக்கப்பட்ட பகுதியில் அல்லவா?)

மரண தண்டனை ஒரு சமூகத்தில் ஏன் தேவைப்படுகிறது? அரசுக்கு ஒரு மனிதனை கொல்லும் உரிமை உண்டா?

மரண தண்டனை ஒட்டுமொத்தமாக தேவை அல்லது தேவை இல்லை என்ற நிலைப்பாடு தான் உண்மையான பொதுப்புத்தி. ஒரு சமூகத்தில் மரண தண்டனை தேவையா, தேவை இல்லையா என்பது அந்தந்த சமூகம் ,சூழ்நிலை, அது எதிர்நோக்கும் பிரச்சனைகள் ஆகியவற்றை பொறுத்தே அமைய முடியும்.


இப்படி அரசுக்கும், மக்களுக்கும் அச்சுறுத்தும் தீவிரவாதிகளுக்கு மரணதண்டனை தருவது சரியானதாகவே இருக்கும், இப்படி பட்ட தீவிரவாதிகளை தூக்கில் போடாமால் விட்டால் பிறகு எப்படியாவது அவர்கள் விடுதலையாகிவிட்டால் அப்புறம் அந்த தீவிரவாதி மறுபடி குண்டு வைப்பது, படை திரட்டுவது என காரியங்களில் ஈடுபடுவான் . இவர்கள் "தேசிய இனங்களின் எழுச்சி" என அதை வர்ணித்து பூரித்து, புளகாங்கிதமடைந்து கைதட்டுவார்கள்.

(சிவப்பு வரிகள் உதவிக்கு நன்றி செல்வன்)

முகமது அப்சலுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை பற்றிய கருத்துஇல்லைங்க, நாடாளுமன்றத்திற்குள் குண்டுவீசியதற்காக 1930ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் நாள் அளிக்கப்பட்ட தீர்ப்பில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையின் போது பலரும் இப்படி எழுதியிருக்கலாம், பேசியிருக்கலாம், நினைத்திருக்கலாம்

பிற்சேர்க்கை

வழக்கமாக பொதுவாக எல்லா பிரச்சினைகளிலும் தலையை சுற்றி மூக்கை தொடும் என் பதிவுகள் இந்த முறை சட்டென்று bulls eyeல் அடித்துவிட்டது என நினைக்கின்றேன்.

தருமி அய்யா இந்த பதிவை நீக்க கூறினார், அவருக்கு பதிலாக "எதிர்வினை பதிவுகள் எல்லாம் வந்துவிட்டதால் எந்த அளவிற்கு இது சாத்தியம் என தெரியவில்லை, இந்தியதேசிய சட்டப்படி (கருத்து சுதந்திரத்திற்கு) இந்த பதிவி தவறென்றால் உடனடியாக இந்த பதிவை நீக்குகிறேன். "

அப்சலை இந்தியனாக அணுகுவதற்கும் காஷ்மீரியாக அணுகுவதற்கும் வித்தியாசங்கள் உள்ளன.

பகத்சிங்கை இந்தியனாக அணுகுவதற்கும் ஆங்கிலேய அரசின் குடிமகனாக அணுகுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

அதை சுட்டி காட்டுதலே இந்த பதிவு, அடுத்த சில நாட்களுக்கு அனேகமாக திரித்தல், கொளுத்தல் எல்லாம் சேர்த்து பொதுமாத்து எனக்காக இருக்கும், யாராவது கருத்து சுதந்திர காவலர்கள் என்னை காப்பாற்றினால் தான் உண்டு என நினைக்கின்றேன், கடைசியாக விளக்கம் தர தயாராக உள்ளேன், ஆனால் நடுவில் திரிக்கப்பட்டு, துப்பப்படும் எச்சில்களுக்கு அல்ல.

RSS - பிரச்சினை உள்ளவர்களுக்கு

இது சரியான தீர்வா என்று தெரியவில்லை, என்னளவில் இது வேலை செய்கின்றது.
--------------------------------------
பிரச்சினை என்னவென்றால் XML க்கு ஒவ்வாத & # 3 ; இதன் ஒவ்வொரு எழுத்திற்கும் இடவெளி விட்டுள்ளேன், இது உங்கள் பதிவில் இடைவெளியில்லாமல் இருக்கும் இதை கண்டுபிடித்து உங்கள் பதிவிலிருந்து நீக்கினால் வேலை செய்யும், இதை நீக்க Edit Html ஐ சுட்டி அதிலிருந்து செல்லுங்கள் ,பிரச்சினைக்குறிய அந்த எழுத்துகளை கீழுள்ள படத்தில் வட்டமிட்டுள்ளேன்.

---------------------------------------
உதாரணமாக இது ரோசாவந்த்தின் பதிவில் "வசையும்" "தேசத்துரோகி" என்ற இரு வார்த்தைகளின் நடுவில் வருகின்றது, இதை நீக்கினால் RSS பிரச்சினை இல்லாமல் வேலைசெய்யும் என கருதுகின்றேன்
-------------------
பொதுபுத்தியுடன் எதையும் உரையாட முடியாது. இந்தவிஷயத்தில் விநோதம் என்னவென்றால், அஃப்சலின் தூக்குதண்டனைக்கு எதிராக வலைப்பதிவுகளில் கருத்து சொல்ல வந்த சில இஸ்லாமியர்கள் கூட, இந்த பொது புத்தியிலிருந்து விலகிஎதையும் சொல்லமுடியவில்லை என்பதுதான். நரேந்திர மோடியையும் தூக்கில் போடவேண்டியதுதானே என்பதற்கு மேல் அவர்களிடமும் வேறு வாதங்கள் இல்லை. வேறு யாரிடமிருந்தும்எந்த வகை குரலும் ஒலித்ததாக எனக்கு கேட்கவில்லை. <br /> <br /> <br /> <br />வழக்கம் போல மிக முட்டாள்தனமான, மிக கயமைத்தனமான ஒரு வாதம் முன்வைக்கப் படுகிறது. அஃப்சலின் தூக்கு தண்டனையை எதிர்ப்பவர்கள் விளம்பரத்திற்காகவும், சுய ஆதாயத்திற்காகவும் அதை செய்வதாக சொல்வது; இன்று இருக்கும் தேசியம் சார்ந்த ஜுரத்தின் இடையில், இந்திய பாராளுமன்றத்தை தாக்கியதாக தீர்ப்பளிக்கப் பட்ட நபருக்கு ஆதாரவாக குரல் கொடுத்தால், வசையும் தேசத்துரோகி பட்டமும்

பழைய ஞாபகம் மற்றும் முன்னெச்சரிக்கை

"முறைப்படி தேர்தல் நடந்தால் அதிமுக அமோக வெற்றிபெறும்" என்று அதிமுக பொதுச்செயலாளர் பேட்டியளித்துள்ளார், சென்ற உள்ளாட்சி தேர்தலில் ரவுடிகளை வைத்து அதிமுக நடத்திய கூத்துகள் ஞாபகம் வந்து விட்டது போல, ஒரு வேளை தோற்றுவிட்டால் அதான் இப்போதே முன்னெச்சரிக்கையாக முறைப்படி தேர்தல் நடக்கவில்லை என்று சொல்லிவிடலாமே... ஹா ஹா...

தினமலர் சுட்டி

விஜயகாந்த்தும் 28 இலட்சமும்

தேர்தல் முடிந்தவுடன் எழுத நினைத்த பதிவு நாளாகிவிட்டது, தமிழகத்தில் எத்தனை சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகள் இருக்கிறது என்று மக்களுக்கு தெரியுமோ இல்லையோ பத்திரிக்கைகள் புண்ணியத்தில் விஜயகாந்த் கட்சி எவ்வளவு வாக்குகள் வாங்கியது என்றால் சட்டென்று சொல்வார்கள் 28 இலட்சமென்று, அவர் கட்சி வாங்கிய வாக்குகள் 8.32%, அதாவது நூற்றுக்கு எட்டு வாக்காளர்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள், பொதுவாக சதவீதத்தில் பேசும் நம் பத்திரிக்கைகளுக்கு என்ன ஆனது வாக்கு எண்ணிக்கை கணக்கில் பேசுகின்றனர், ஏன் வேறு யாருமே இதற்கு முன் முதல் தேர்தலில் 8% வாக்குகள் பெறவில்லையா? என்றெல்லாம் கேட்டால் பத்திரிக்கைகள் விஜயகாந்த்தை வைத்து செய்யும் அரசியல் தெரியும்.

சில புள்ளிவிபரங்களோடு இந்த கட்டுரை உள்ளது, முழுதும் படிக்க முடியாதவர்கள் பதிவின் கடைசியில் சில கேள்விகள் உள்ளன, அதை மட்டுமாவது படிக்க வேண்டுகிறேன்.

இந்த தேர்தலின் போது இருந்த சூழல் முதலில் கணக்கிலெடுத்தால் பொதுமக்கள் மத்தியில் அதிமுக அரசின் மீது 1996ல் இருந்தது போன்ற மிகப்பெரும் எதிர்ப்பெதுவும் இல்லை, அதே சமயம் 1991 போல திமுக மீதான எதிர்ப்பு (ராஜீவ் காந்தி கொலை அனுதாப அலை) எதுவும் இல்லை, பொதுவாக தமிழக தேர்தல்கள் யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்பதை விட யார் தேர்ந்தெடுக்கப்பட கூடாது என்பதுவே வெற்றி தோல்வியை முடிவு செய்யும், 1996 தேர்தலில் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்படக் கூடாது அதனால் ஜெயலலிதா எதிர்ப்பு அலையில் வாக்குகள் சிதறக்கூடாது என்றே திமுகவிற்கு முன்னெப்போதும் வாக்களிக்காதவர்கள் கூட திமுகவிற்கு வாக்களித்தனர், இது பாமக, மதிமுக போன்ற கட்சிகளையும் பாதித்தது, ஆனால் தேர்தல் அலையின் போது தோல்வியின் பக்கத்தில் இருக்கும் கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்குகளே அவர்களின் உண்மையான வாக்கு வங்கி பலம், இந்த தேர்தலில் அது மாதிரியான அலை ஏதும் இல்லாததால் மக்களிடம் யார் வரக்கூடாது என்ற எந்த கட்டாயமும் இல்லாததால் அவர்களின் விருப்பம் போல வாக்குகள் விழுந்தன, அப்படி திமுக, அதிமுக இருவரும் வேண்டாமென விஜயகாந்த் பக்கம் சென்றவர்கள் அதிகம், அதிமுக மீது 1996ல் இருந்த வெறுப்போ, திமுக மீது 1991ல் இருந்த வெறுப்போ இந்த தேர்தலில் இருந்திருந்தால் விஜயகாந்த்க்கு விழுந்த வாக்குகள் குறைந்திருக்கும்.

2006 சட்டமன்ற தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 70.82% வாக்குபதிவு இருந்தது, 2001 சட்டமன்ற தேர்தலில் வாக்குபதிவு 59.07%, முந்தைய தேர்தலைவிட 11.75% கூடுதல் வாக்கு பதிவு. மூன்று கோடியே முப்பது இலட்சத்து அய்யாயிரத்து நானூற்று தொன்னூற்றிரண்டு (3,30,05,492) பதிவான வாக்குகளில் விஜயகாந்த் பெற்றது வெறும் 28 இலட்சம் வாக்குகள்.

முந்தைய தேர்தலைவிட கிட்டத்தட்ட அரை கோடி(49,57,415) வாக்காளார்கள் அதிகம் வாக்களித்திருந்த போதிலும் விஜயகாந்த் பெற்றது வெறும் 28 இலட்சம் வாக்குகள், அவரால் புதிதாக வாக்களித்தவர்களின் வாக்கை முழுமையாக பெற்றிருந்தாலும் கூட 50 இலட்சம் வாக்குகள் பெற்றிருப்பார், ஆனால் அதைக்கூட ஒரு முதல்வர் வேட்பாளரால் சாதிக்க முடியவில்லை.


பாமகவிற்கு கிட்டத்தட்ட இதே போன்றதொரு சூழல் நிலவியது 1989 பாராளுமன்ற தேர்தலில்(1991,96 தேர்தல்களில் அலை வீசியது, 2001,2006 தேர்தல்களில் கூட்டணி இருந்ததால் அவைகளை இந்த ஆய்வில் கணக்கில் எடுக்க வில்லை) , மதிமுகவிற்கு 2001 தேர்தலில் இந்த சூழ்நிலை நிலவியது.

1989 பாராளுமன்ற தேர்தல் புள்ளி விபரம்

பதிவான வாக்குகள் 2,67,63,788
செல்லத்தக்க வாக்குகள் 2,63,99,730
செல்லாத வாக்குகள் 3,64,058

இதில் பாமக பெற்ற வாக்குகள் 7.06% (15,61,371) 33 இடங்களில் போட்டியிட்டது (32 தமிழகம், 1 பாண்டிச்சேரி)

போட்டியிட்ட இடங்களில் மொத்த வாக்கு 7.06%
1991 ராஜீவ்காந்தி கொலை அனுதாப அலையிலும் போட்டியிட்ட இடங்களில் மொத்த வாக்கு 7.00% (1 இடம் வெற்றி, 29 இடங்களில் பிணைத்தொகை திரும்ப கிடைத்தது)
1996 ஜெயலலிதா எதிர்ப்பு அலையிலும் போட்டியிட்ட இடங்களில் மொத்த வா 7.61% வாக்குகளும் பெற்றது. (4 இடங்களில் வெற்றி, 17 இடங்களில் பிணைத்தொகை திரும்ப கிடைத்தது)

மாநிலம் முழுவதற்கும் மொத்தமாக போட்டியிடாத இடங்களுக்கும் சேர்த்து (தமிழகம் 5.82% + பாண்டிச்சேரி 6.63%)

2006 தேர்தல் புள்ளி விபரம்

பதிவான வாக்குகள் 3,30,05,492
செல்லத்தக்க வாக்குகள் 3,29,91,555
செல்லாத வாக்குகள் 5,828

போட்டியிட்ட இடங்களில் விஜயகாந்த் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 8.45%
1989ல் பாமக பெற்றதை விட வெறும் 1.39% கூடுதலாக பெற்றுள்ளது.
1989ல் பாமக பெற்றதை விட வெறும் 0.84% கூடுதலாக பெற்றுள்ளது.
1இடத்தில் அதுவும் விஜயகாந்த் மட்டும் வெற்றி, 9 இடங்களில் மட்டுமே விஜயகாந்த் கட்சி பிணைத்தொகை திரும்ப பெற்றுள்ளது
223 இடங்களில் விஜயகாந்த் கட்சி பிணைத்தொகையை இழந்துள்ளது.

வடமாவட்டங்களில் மட்டுமே செல்வாக்குள்ள ஒரு கட்சி (33 பாராளுமன்ற தொகுதிகள் என்றால் மாநிலத்தில் 85% இடங்களில் போட்டியிட்டுள்ளது) பெற்ற வாக்குகளைவிட மாநிலம் முழுவதும் செல்வாக்குள்ளதாக நம்பவைக்கப்படும் ஒரு கட்சி பெற்ற அதிக வாக்குகள் வெறும் 1.39%, பத்திரிக்கைகள் போடும் கணக்கில் பார்த்தால் கூட இன்றைக்கு கூடுதலாக வாக்கு பதிவையும் சேர்த்தால் கிட்டத்தட்ட இருபது இலட்சம் வாக்குகள் வந்து சேரும், ஆனாலும் இன்று பத்திரிக்கைகள் விஜயகாந்த் பெற்ற வாக்கு சதவீதத்தை சொல்லாமல் 28 இலட்சம் 28 இலட்சம் என ஏதோ ஒரு இமாலய சாதனை போல் பிம்பம் ஏற்படுத்த முயல்வது தெளிவாகத் தெரிகின்றது. மேலும் 232 தொகுதிகளில் போட்டியிட்ட விஜயகாந்த் கட்சி 223 தொகுதிகளில் பிணைத்தொகையை பறி கொடுத்துள்ளது, வெறும் 9 தொகுதிகளில் மட்டுமே பிணைத்தொகை மீள கிடைத்துள்ளது. ஆனால் பாமக 1991,96 தேர்தல்களில் முறையே 29, 17 இடங்களில் பிணைத்தொகையை மீளப்பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட இதே நிலைதான் மதிமுக வுடன் விஜயகாந்த் கட்சியை ஒப்பிட்டு நோக்கும் போதும், தமிழகத்தில் நான்காம், ஐந்தாம் இடத்திலிருக்கும் பாமக, மதிமுக கட்சிகளைவிட பெரிய அளவில் தேர்தலில் எந்த சாதனையும் செய்யாத விஜயகாந்திற்கு கொடுக்கப்படும் அதீத விளம்பர பிம்பமும் விஜயகாந்த்தை பத்திரிக்கைகள் தூக்கிவிட முயற்சிப்பதன் உள்நோக்கத்தையும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

இப்போது என் முன் இருக்கும் கேள்விகள்

1) வெறும் 8.45% பலமுள்ள விஜயகாந்த்தை எப்படி அவரைப்போல மூன்று பங்கு பலமுள்ள ஜெயலலிதா, கருணாநிதியோடு போட்டியாளராக காண்பிக்கின்றார்கள்?


2) காங்கிரசின் வாக்கு பலம் எந்த நிலையிலும் 10% குறைந்ததில்லை என்னும் போது எந்த கணக்கை வைத்து விஜயகாந்த்தை மூன்றாவது பெரிய கட்சி என்கிறார்கள்?


3) திரைப்பட பிரபல செல்வாக்கினால் ஆந்திராவில் கட்சி ஆரம்பித்த என்.டி.ராமராவ் சில மாதங்களிலேயே ஆட்சியை பிடித்தார், இங்கே தமிழகத்தில் எம்.ஜி.ஆரும் ஆட்சியை பிடித்தார், இப்படி எதுவுமே இல்லாமல் வெறும் 8% வாக்குகள் பெற்றவரை பத்திரிக்கைகள் சாதனையாளராக காண்பிப்பதின் உள் நோக்கமென்ன?


4) கூட்டணி இல்லாமல் பிறகட்சிகளை போட்டியிட அறைகூவல் விடும் விஜயகாந்த்துக்கு எல்லோரும் தனித்தனியாக போட்டியிட்டால் வட மாவட்டங்களில் 1,2,3 இடங்களை திமுக, அதிமுக, பாமகவும் தென்மாவட்டங்களில் அதிமுக, திமுக, காங்கிரசும், மேற்கு மாவட்டங்களில் திமுக,அதிமுக, மதிமுக வும் பங்கிட்டுக்கொள்ளும் என தெரியாதா? டெல்டா மாவட்டங்களில் கம்யூனிஸ்ட்களும், சில தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள், புதியதமிழகமும் பங்கிட்டுக்கொண்டால் ஒற்றை இலக்க தொகுதிகளில் கூட மூன்றாம் இடம் கூட கிடைக்காது என்பது விஜயகாந்த்துக்கும் பத்திரிக்கைகளுக்கும் தெரியாதா?


5)முந்தைய தேர்தலைவிட கிட்டத்தட்ட அரை கோடி(49,57,415) வாக்காளார்கள் அதிகம் வாக்களித்திருந்த போதிலும் விஜயகாந்த் பெற்றது வெறும் 28 இலட்சம் வாக்குகள், அவரால் புதிதாக வாக்களித்தவர்களின் வாக்கை முழுமையாக பெற்றிருந்தாலும் கூட 50 இலட்சம் வாக்குகள் பெற்றிருப்பார், ஆனால் அதைக்கூட ஒரு முதல்வர் வேட்பாளரால் சாதிக்க முடியவில்லை என்னும் போது பத்திரிக்கைகள் எப்படி அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துகின்றன?


6) சில நாட்களுக்கு முன் நடைபெற்ற புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் காரைக்கால் நகராட்சி தலைவராக தேமுதிக கட்சியின் பிரபாவதி வெற்றி பெற்றார், இதை பத்திரிக்கைகள் மிகப்பெரிதாக பேசின இது தொடர்பாக முதல்வர் கருணாநிதியிடம் பத்திரிக்கைகள் கேள்வி கேட்ட போது முதல்வர் கூறினார் பிரபாவதி காங்கிரசில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் தான் தேமுதிகவில் போட்டியிட்டார் என்றார், இதற்கு தேமுதிகவின் வெற்றியை சிறுமை படுத்திவிட்டார் என்று கடும் கண்டனம் தெரிவித்தார், அதே பிராபாவதி விகடனுக்கு அளித்த பேட்டி கீழே, அதில் தான் செய்த சமுதாயப்பணிதான் இந்த பதவியில் அமர்த்தியிருக்கின்றது என கூறியுள்ளார், இப்போது விஜயகாந்த் என்ன செய்யப்போகிறார் விஜயகாந்த், பிரபாவதியை கட்சியை விட்டு நீக்குவாரா?




7)சென்ற ஆண்டு புதிதாக கட்சி ஆரம்பித்தவுடன் அந்த கட்சியை தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்ய முயன்றபோது ஏகப்பட்ட குழப்பம், சரியாக விதிகளை கடைபிடிக்கவில்லை என்று, இப்போது 8.32% வாக்குகள் பெற்று மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்து "முரசு" சின்னத்தை தக்க வைக்க வாய்ப்பிருந்தும் சரியாக தேர்தல் ஆணையத்திடம் கொண்டு சென்று தேவையான நடைமுறைகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக, தன் கட்சியின் வெற்றியை, அங்கீகாரத்தை கூட பதிவு செய்யாமல் இருந்துவிட்டு இப்போது திமுகவின் சதியால் முரசு சின்னம் கிடைக்கவில்லை என்று பொய் பிரச்சாரம் வேறு, தன் சொந்த கட்சியின் எதிர்காலத்தின் முக்கியமான விடயத்திலேயே அலட்சியமாக இருந்தவர் முதல்வரானால் என்ன நிர்வாகத்திறமையோடு இருப்பார்?


8) பத்திரிக்கைகள் இழந்து போன தங்கள் சமூகத்தின் 'ராஜரிஷி' பட்டத்தை ரஜினியிடம் முயற்சித்து பின் வீணாகி இப்போது விஜயகாந்த்தை கொண்டு மீட்கலாம் என நினைப்பது தான் இத்தனை தூரம் தூக்கிபிடிக்க காரணமோ?



இந்த உள்ளாட்சி தேர்தலில் ஒரு கோடியே தொன்னூறு இலட்சம் நகர்புறவாக்களர்களும், இரண்டு கோடியே அறுபத்தியெட்டு இலட்சம் கிராமப்புற வாக்காளர்களும் உள்ளனர், நகர் புற வாக்காளர்களுக்கு ஆளுக்கு ஒரு ஓட்டும் , கிராமப்புறத்தில் ஆளுக்கு நான்கு ஓட்டு (பஞ்சாயத்து உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர்) களும் ஆக மொத்தம் (2.68X4 = 10.72 கோடி) மொத்தத்தில் கிட்டத்தட்ட 12.68 கோடி வாக்குகள், இதில் விஜயகாந்த் ஒரு இலட்சம் வேட்பாளர்கள் நிறுத்தியுள்ளார், ஆளுக்கு 50வாக்குகள் என மொத்தம் 50 இலட்சம் வாக்குகள் பெற்றால் கூட "இரட்டிப்பானது விஜயகாந்த் பலம்" என பத்திரிக்கைகள் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை வசதியாக மொத்தம் 12.68 கோடி வாக்குகள் என்பதை மறைத்துவிட்டு.

References:

http://www.eci.gov.in/StatisticalReports/LS_1989/Vol_I_LS_89.pdf
http://www.eci.gov.in/SR_KeyHighLights/SE_1991/StatisticalReport_Tamil_Nadu91.pdf
http://www.eci.gov.in/SR_KeyHighLights/SE_1996/StatisticalReport_TN96.pdf
http://www.eci.gov.in/SR_KeyHighLights/SE_2001/Stat_Rep_TN_2001.pdf
http://www.eci.gov.in/SR_KeyHighLights/SE_2006/StatReport_TN_2006.pdf
http://www.vikatan.com/jv/2006/oct/04102006/jv0304.asp
சன் தொலைக்காட்சி (அக்டோபர் 04, 2008 இரவு 8.00 மணி செய்திகள்)

டாடா, மாறன்,ஜீவஜோதி க.சு. காவாலித்தனம்

மறந்து போகவில்லை தேர்தல் 2006ம் அதில் அரசியல்வாதிகள் எடுத்த நிலையும், பத்திரிக்கைகள் எடுத்த நிலையும், தேர்தலின் நெருக்கத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி
பத்திரிக்கைகள் டாடாவை மிரட்டினார் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் என்று எழுதினார்கள், வைகோவும் இதை ஊர் ஊராக எடுத்துக்கொண்டு போய் பேசினார், அதை தயாநிதி
மாறன் மறுத்தார், நட்டஈடு கேட்டு வழக்கும் தொடர்ந்தார், தேர்தலும் முடிந்துவிட்டது, வாக்குப்பதிவுக்கு முன்பு வரை பத்திரிக்கைகளில் வழக்கம் போல(?!) வாசகர் கடிதமென்ன, அலசல் என்ன என்று கருத்து சுதந்திரத்தையும், பத்திரிக்கை சுதந்திரத்தையும் காத்தார்கள், சரி டாடாவை மிரட்டியது உண்மையா? பொய்யா? என ஒன்றும் புரியாமல் சனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிக்கைகளை நம்பி ஏற்கனவே திமுகவுக்கு வாக்களிக்க நினைத்தவர்கள் சிலர் திமுகவிற்கு ஓட்டுப்போடாமல் போயிருப்பார்கள்.

டாடாவை(யே?!)மிரட்டியதாக கூறிய பத்திரிக்கைகள் அதன் பிறகு இதை கண்டுகொள்ளவேயில்லை சரி இன்னும் அவர்களுக்கு அவகாசம் தேவைப்படலாம் என காத்திருந்தேன், தேர்தல் முடிந்து நூறு நாட்களும் ஆன பின்பும் இன்னமும் பத்திரிக்கைகள் தயாநிதி மாறன் டாடாவை(யே!) மிரட்டியதை நிரூபிக்கவில்லை, சரி நிரூபிக்கவில்லையே அதற்கான மன்னிப்பையாவது கேட்டார்களா என்றால் அதுவும் இல்லை, பத்திரிக்கைகளின் சுதந்திரம், கருத்து சுதந்திரம் எல்லா எழவும் சரிதான், ஆனால் தேர்தலுக்கு வெகுசில நாட்களே இருக்கும்போது டாடாவை(யே?!) மிரட்டியதாக பத்திரிக்கைகள் எழுதியதும் தேர்தல் முடிந்த பின் இன்னமும் அது தொடர்பான எந்த அறிவிப்பும் செய்யாமல் இருப்பதால் இந்த பத்திரிக்கைகளின் நோக்கத்தை சந்தேகிக்க வேண்டியுள்ளது, திமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற ஆசையில் character assassination செய்தார்கள் என சந்தேகிக்காமல் இருக்க முயவில்லை.

சிங்கப்பூரில் சில மாதங்களுக்கு முன் நடந்த தேர்தலில் ஒரு உறுப்பினர் மீது கணக்கு வழக்கு பிரச்சினையை எதிர் கட்சியினர் எழுப்பினார்கள், அதற்கு மூத்த அமைச்சர் "ஹோ சோ டாங்" அவர்கள் வாக்குப்பதிவிற்கு முன் இந்த சர்ச்சையை தொடர்புடையவர்கள் தீர்த்துக்கொள்ளுங்கள் தேர்தல் சமயத்தில் இப்படி எழுப்பப்படும் பிரச்சினைகள் வாக்குப்பதிவில் எதிரொலிக்கும் என்றார், இங்கோ தேர்தல் முடிந்து நூறு நாட்களுக்கு மேல் ஆகியும் பத்திரிக்கைகள் எதையும் நிருபிக்கவில்லை, அது மட்டுமல்ல அந்த குற்றசாட்டு பற்றி எந்த விவாதமும், அலசலும், வாசகர்கடிதங்களும் இல்லை, இதிலிருந்து தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் அதன் செய்திகளை வைத்து பரப்பிய மற்ற பத்திரிக்கைகள் செய்தவைகள் கருத்து சுதந்திரம் எனலாமா?, பத்திரிக்கைகள் நினைத்தால் யார் மீதும் தேர்தலுக்கு முன் சேறு இறைத்துவிட்டு அதன் பின் ஒன்றும் நடவாதது போல் இருக்கலாம், இது கருத்து சுதந்திர காவாலித்தனமில்லையா? இதனால் தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணிக்கும். தயாநிதி மாறனுக்கும் ஏற்பட்ட இழப்பிற்கு யார் பொறுப்பு?

ஜீவஜோதி திருமணம் சமீபத்தில் நடைபெற்றது, அது தொடர்பான கட்டுரைகளில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலின் பேட்டி தவறாமல் இருந்தது, எல்லாவற்றிலும் என்னோட தொலைபேசினார் ஜீவஜோதி, என்னிடம் திருமணத்திற்கு அனுமதி பெற்றார், ஜீவஜோதிக்கு செட்டில்மென்ட் கொடுத்தார்கள், ஜீவஜோதிக்கு அண்ணாச்'சீ' சீர் செய்தார் என ஏகப்பட்ட கருத்து சுதந்திரங்கள், ஜீவஜோதி பற்றி எப்போதுமே ஒரு சந்தேகத்தை அண்ணாச்'சீ' பத்திரிக்கைகளில் கிளப்பிவிட்டுக்கொண்டிருந்தார், ஆனால் திருமணத்திற்கு பலத்த பாதுகாப்பு, ஜீவஜோதி ராஜகோபாலுக்கு தண்டனை வாங்கித்தர தொடக்கத்திலிருந்தே தீவிரமாக இருந்ததெல்லாம் பார்க்கும்போது அண்ணாச்'சீ' திட்டமிட்டு ஜீவஜோதி மீது சந்தேகம் வரவைத்துள்ளார் என கருத இடமுள்ளது, இடஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டத்தின் கவர் ஸ்டோரி கட்டுரையில் இடஒதுக்கீட்டு ஆதரவாளர்களின் கருத்தை கேட்டு போடாத பத்திரிக்கை சுதந்திரம் அண்ணாச்'சீ' யிடம் ஜீவஜோதி திருமணத்திற்கு 'பெட்டி' செய்தி வாங்கி போடுகின்ற அளவில் இருக்குது கருத்து சுதந்திரம், இதெல்லாம் கருத்து சுதந்திரமா? இல்லை கருத்து சுதந்திர காவாலித்தனமா?



என்ன எழவு அது ஆங்... டிஸ்கி

நான் பத்திரிக்கை, கருத்து சுதந்திரத்துக்கு எதிரியல்ல ஆனால் தேர்தலுக்கு வெகு சில நாட்களுக்கு முன் கிளப்பப்படுகின்ற பிறகு அது தொடர்பாக பேசாததைத் தான் காவாலித்தனம் என்கிறேன்

க.சு.கா(கருத்து சுதந்திர காவலாளி) மூஞ்சியில் கரி

போன வருசம் இந்த கருத்து சொதந்திர காவலாளிங்க தொல்லை தாங்க முடியலை, ஆளுக்காளு கருத்து சொதந்திர காவலாளிங்க ஆயி ஒரே இம்சை, சரி எழவு இருந்துட்டு போகுதுனா இவிங்க யாருக்குடே கருத்து சொதந்திரத்தை காக்குறாங்கனு பார்த்தா முக்காவாசி சினிமாகாரங்களாவே இருக்கு, சரி எழவு ஏதோ ஒன்னு இருந்துட்டு போகட்டும், போன வருசம் அய்யா சினிமாக்காரவங்களே உங்க படத்து தலைப்பை தமிழ்ல வைங்க, எழவு சொன்னாலும் சொல்லலைனாலும் சினிமா வயசு வித்தியாசமில்லாம எல்லார்கிட்டயும் போய் சேருது, அதனால கொஞ்சம் பொறுப்போட இருங்கனு சொன்னாங்க முதல்ல, இது என்ன எழவு சொல்லி தெரிய வேண்டுமா?

ஆனா அது அவிங்களுக்கு தெரியலை அதனால தமிழ்பாதுகாப்பு இயக்கம் தொல்.திருமா, மருத்துவர் இராமதாசு எல்லாம் சொன்னாங்க, அப்பாலிக்கா கெளம்புனாங்க பாருங்க க.சு.கா ங்க(கருத்து சுதந்திர காவலாளிங்க), நீங்க சொல்றது தப்பு என்ன படத்துக்கு என்ன பெயர் வைக்கனும்னு அவங்களுக்கு தெரியும் (சரி ராசா அப்போ த.பா.இ., திருமா, இராமதாசு கருத்து சுதந்திரப்படி அவங்க சொன்னாங்க, அது அவங்க கருத்து சுதந்திரம் இல்லியா)

அட அது கூட பரவாயில்ல இன்னும் சில க.சு.காங்க கெளம்பினாங்க, இன்னாடா வெசயம்னா படத்துக்கு பொருத்தமா பேர் வக்கிறாங்களாம், அந்த படத்துக்கு அந்த பேர் தான் பொருத்தமாம், இல்லினா படம் ஊத்திக்குமாம், இத்தியாதி இத்தியாதினாங்க....

இப்பாலிக்கா இவிங்க மூஞ்சியில தான் கரி பூசுனாங்க, அப்போ பல இங்கிலிபிசு தலப்பு படத்துக்கு பொருத்தமானது, அத மாத்தக்கூடாது, பேருந்துனு சொன்னா யாருக்கு புரியும், 'பஸ்' னு சொன்னா எல்லாருக்கும் புரியும், வலைப்பதிவுல கூட ஏதோ ஒரு க.சு.காவலாளி "மும்பை எக்ஸ்பிரஸ்" ங்கறதை "மும்பை எக்ஸ்பிரசு" னு மாத்திட்டானு நக்கல் உட்டாரு, "BF" படத்தை "அஆ"னு மாத்துனதுக்கு நக்கல் உட்டாங்க

இவிங்களுக்கு வச்சாங்க ஆப்பு, தமிழ்ல பெயர் வைத்தால் கேளிக்கை வரி ரத்து அப்படினு முதல்வர் கருணாநிதி சொன்ன பிறகு "Something Something உனக்கும் எனக்கும்" படத்து பெயர் "ஏதோ ஏதோ உனக்கும் எனக்கும்"அப்படினு மாறிடுச்சி, "எம்டன் - மகன்" படத்து பெயர் "எம்-மகன்" ஆயிடுச்சி, இதெல்லாம் "சம்திங் சம்திங்", "எம்டன் - மகன்" ங்கிற பெயர்களை நன்றாக விளம்பரம் செய்துட்டு, படமும் வெளிவந்து பிறகு மாத்துனாங்க, அப்பாலிக்கா "ஜில்லுனு ஒரு காதல்" என்னடானா "சில்லுனு ஒரு காதல்" ஆயிடுச்சி, "காட்ஃபாதர்"னு ஒரு படம் எடுக்குறாங்களாம் அது பெயர் கூட தமிழ்பெயர்ல மாத்திட்டாங்களாம், இப்போ அப்படியே கொஞ்சம் பின்னால போனா நம்ம க.சு.காவலாளிங்க என்ன சொன்னாங்க இந்த ஆளுங்களுக்கு ஆதரவா, இப்போ இந்த ஆளுங்க என்ன செய்திருக்காங்க, படத்துக்கு பெயர் பொறுத்தம், பேருந்துனு சொன்னா புரியுமா பஸ்னு சொன்னா புரியும் இத்தியாதி, இத்தியாதி எல்லாம் டுபாக்கூர், இவிங்களுக்கு பணம் கிடைக்குமாங்கறது தான் வெசயமே, இப்போ படத்துக்கு பெயரே வைக்க கூடாது, 1,2 னு எண்கள் அதான் நெம்பர் மட்டும் தான் வைக்கனும், வைத்தால் பாதி செலவை அரசாங்கம் ஏத்துக்கும்னு சொல்லுங்க, ஒடனே அதையும் செய்வாங்க.

வரிவிலக்கு கொடுத்தால் தமிழ் பெயர் வைக்கிறாய் என்றால் அது கருத்தளவில் தமிழ் பெயர் வைப்பது சரி என்றும் அதனால் அந்த படத்தின் வியாபாரத்திற்கு பாதிப்பு இல்லை என்று தானே பொருள், இதைத்தானேயா அன்று தமிழ் பாதுகாப்பு இயக்கம், திரு.தொல்.திருமா, மருத்துவர் இராமதாசு எல்லாம் சொன்னாங்க, அன்று படத்தின் பெயர் நன்றாக விளம்பரம் செய்தாகிவிட்டது, பேருந்துனா புரியுமா, "ஸ்" க்கு பதில் "சு" போட்டுக்கலாமா இத்தியாதி இத்தியாதி எல்லாம் கதறியவர்கள், இப்போது படம் வெளிவந்த பின்பு படத்தின் தலைப்பை
மாற்றியிருக்கிறார்கள் "ஜில்" என்பது "சில்" ஆகிவிட்டது, ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்ட "காட்ஃபாதர்" படத்தின் பெயர் மாறிவிட்டது இதெல்லாம் க.சு.காவலாளிகளின் மூஞ்சியில் பூசப்பட்ட கரி தானே....

அன்று தமிழில் தலைப்பு வைக்க சொல்லி வலியுறுத்தியபோது என்னென்ன காரணங்களையெல்லாம் சொல்லி முடியாது என்று சொன்னதோ அதே காரணங்கள் இன்றும் இருந்த போதும் அதையெல்லாம் விலக்கிவிட்டு இன்று வரிவிலக்கிற்காக படம் வெளியான பிறகும் கூட பெயர் மாற்றுகிறார்கள் என்றால் அன்று அவர்கள் தமிழில் பெயர் வைக்காததற்கு என்ன காரணம்? இன்று பணத்திற்காக மாற்றுபவர்கள் தமிழுக்காக ஏன் மாற்றக்கூடாது.

இதற்கெல்லாம் வரி விலக்கு தந்துகொண்டிருந்தால் பிறகு குப்பைத்தொட்டியில் சரியாக குப்பையை கொட்டினால் ஊக்கத்தொகை, திருடாமல் இருக்க ஊக்கத்தொகை, சரியான வருமான கணக்கை சமர்பித்தால் நூறு விழுக்காடு வருமான வரிவிலக்கு(நூறு விழுக்காடு வருமான வரிவிலக்குனா எதுக்கு வருமான வரி கணக்கு காண்பிக்க வேண்டும்...) என்றெல்லாம் செய்ய வேண்டும், இதற்கு பதில் கர்நாடகத்தில் நேரடி மொழி மாற்று படங்களுக்கு 100% கூடுதல் வரி விதிப்பது போல தமிழில் படத்தின் பெயர் இல்லையென்றால் 100% கூடுதல் வரி என்று செய்திருக்கலாம், ஆனால் இதற்கும் உடனடியாக க.சு.காவலாளிங்க கிளம்பியிருப்பார்கள், கோடி கோடியாக சம்பாதிக்கும் திரைப்படகாரர்களுக்கு மேலும் வருமானம் பெற்று தருவதற்கு.

வீங்கும் இந்தியா

சராசரி என்பது ஒரு வினோதமான சொல், ஒருவன் தன் ஒரு காலை நெருப்பிலும் மற்றொரு காலை உறைபனியின் உள்ளும் வைத்திருந்தாலும் அவன் சராசரியாக சரியான வெப்ப சூழலில் இருக்கிறான் என்பார்கள் சராசரி ஆட்கள்.

13-08-2006 தமிழ்முரசு இதழில் (இது சிங்கை தமிழ்முரசுங்க, நச்சுனு இருக்கு தமிழ்முரசு அல்ல இது) வெளிவந்த ஒரு கட்டுரையின் தலைப்பு "இந்தியாவின் வளர்ச்சிக்கு இரு தடைகள்" அதிலிருந்து சில பத்திகள்

மேலோட்டமாக பார்த்தால் இந்தியாவின் வருங்காலம் ஒளிமயமாகத்தோன்றும்,
......... ............ ........... .......
......... ............ ........... .......
இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி உலகின் வேறெந்த நாடுகளையும் விடத் துரிதமாக இருக்கிறது, புதிய நம்பிக்கை பெற்ற தொழில்கள் சிறகடித்து பறந்து விரிகின்றன.
......... ............ ........... .......
......... ............ ........... .......
......... ............ ........... .......
ஆனால் கூர்ந்து கவனித்தால் இந்தியா எதிர்நோக்கும் பிரச்சினைகளின் ஆழமும் சிக்கலும் உங்களை நிலை குலையச் செய்யும்.

பல சாதனைகளைப் படைத்திருந்தாலும் இந்தியாவில் வறுமை வேரூன்றி நிலைக்கிறது, சுமார் 260 மில்லியன் (26 கோடி) மக்கள் தினமும் ஒரு டாலருக்கு (1$) குறைவான பணத்தில் வாழ்கிறார்கள்.

இப்படியே கல்வி, சுகாதாரம் என அந்த புள்ளிவிவரம் நீள்கிறது...

கடைசியக அந்த கட்டுரை இப்படி முடிந்திருக்கும்

இந்தியாவில் சில பகுதிகளில் மெக்சிகோ நாட்டுக்கு நிகரான வாழ்க்கைத் தரம் நிலவுகிறது, வேறு சில பகுதிகளிலோ ஆப்ரிக்க துணைக் கண்டத்தை போல வறுமையில் உழல்கின்றன.

இதை நான் இந்தியா வீங்குகிறது என சொல்லாமல் இந்தியா வளர்கிறது என்றா சொல்லமுடியும்? இந்த வீக்கத்திற்கு நான் எப்படி மகிழ முடியும்.

சென்ற ஆண்டு கம்யூனிசம் எனது பார்வையில் ஒரு பதிவு எழுதியிருந்தேன், அதன் மீள் பதிவு மற்றும் சில விடயங்களும் இங்கே...


கம்யூனிசத்தை பற்றி எழுதும் அளவிற்கு கம்யூனிச கொள்கைகளை அதிகம் படித்தவன் இல்லை நான். எனவே இது எனது பார்வை மட்டுமே

சமீபத்தில் சிங்கப்பூரில் ஸ்ட்ரைட் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரையும் கிட்டத்தட்ட அதே சமயத்தில் எமக்கு வந்த ஒரு புள்ளிவிவர மின்மடலும் இந்த பதிவெழுத தூண்டியவை.

ஸ்ட்ரைட் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த புள்ளிவிவரம் கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்கா,சிங்கப்பூர்,இந்தியா மற்றும் சில நாடுகளின் தனி நபர் சராசரி வருமானம், கடைசி 5% மக்களின் சராசரி வருமானம், முதல் 5% மக்களின் சராசரி வருமானம் பற்றிய ஒரு விவரம்.


அதில் புலப்படும் உண்மையென்னவெனில் ஆண்டு தோறும் எல்லா நாட்டு மக்களின் தனி நபர் சராசரி வருமானம் உயர்ந்து கொண்டே செல்கின்றது, அதே சமயத்தில் கடைசி 5% மக்களின் சராசரி ஆண்டு வருமானம் குறைந்து கொண்டே வருகின்றது. முதல் 5% மக்களின் சராசரி ஆண்டு வருமானம் மிக அதிக அளவில் அதிகரிக்கின்றது.

மற்றவர்கள் 1$ சம்பாதிக்கும் பொழுது முதல் 5% இருப்பவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் சம்பாதித்தது 27$, தற்போதைய நிலை மற்றவர்கள் 1$ சம்பாதிக்கும் நேரத்தில் இவர்கள் சம்பாதிப்பது 200$, அமெரிக்காவில் முதல் 0.12%ல் இருப்பவர்கள் மற்றவர்கள் 1$ சம்பாதிக்கும் போது சில ஆண்டுகளுக்கு முன் அவர்கள் சம்பாதித்தது 200$ தற்போது 17,000$

இவைகள் சொல்லும் செய்தி என்னவெனில் உலகளாவிய அளவில் பணக்காரம் மேலும் பணக்காரன் ஆகின்றான், ஏழை மேலும் ஏழையாகின்றான். நாளுக்கு நாள் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

'கம்யூனிசம் சரியானது, கம்யூனிஸ்ட்கள் தவறானவர்கள்' என்பது அடிக்கடி கேள்வி பட்ட ஒரு சொலவடை, அது பெரும்பாலும் உண்மையாகவே இருக்கின்றது. நம்மால் கம்யூனிசம் என்றால் தொழிற்சங்கங்கள், ரஷ்யா, சீனாவைத் தாண்டி அதற்கு வெளியில் யோசிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். அல்லது யோசிக்க வேண்டாமென இருக்கின்றோம்.

கம்யூனிசம் நான், எனது என்ற தளத்தில் இயங்காமல் நாம்,நமது என்ற தளத்தில் இயங்குகின்றது. முன்னேற்றம் என்பது தனி நபர் முன்னேற்றம் என்று இயங்காமல் கூட்டு முன்னேற்றம் என்று இயங்குகின்றது. இதன் பொருள் தனியாக முன்னேறும் ஒருவனை பின்னோக்கி இழுப்பதல்ல, கூட்டாக அனைவரும் முன்னேறுவது, தனி முன்னேற்றம் என்ற நிலை வரும்போது பொறாமை, தான் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் மற்றவர்களின் முன்னேற்றத்தில் மண் அள்ளிப்போடுவது, அலுவலகங்களில் நடைபெறும் கூஜா தூக்குதல், ஜால்ரா அடித்தல், காக்கா பிடித்தல் என்று இது எல்லாவிதமான அசிங்கமான முகங்களையும், உத்திகளையும் கடைபிடிக்கின்றது.

முதலாளித்துவத்தில் பெரும் பொருள் ஈட்ட வேண்டும், இலாபக்குறியீடு வருடா வருடம் ஏற வேண்டுமென்ற நோக்கில் மனிதாபிமானமற்ற, அன்எதிக்கல் முறைகளையெல்லாம் கையாள்கின்றனர், அவுட்சோர்சிங் என்ற முறையிலே இன்று பல வேலைகள் வெளிநாட்டிற்கு குறிப்பாக இந்தியாவிற்கு அனுப்பப்படுகின்றன, அதனால் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெருகுவதும் என்னைப்போன்ற பலர் நல்ல சம்பளம் பெறுவதும் நடைபெறுகின்றது, அவுட்சோர்சிங் செய்பவர்களின் நோக்கம் நல்ல இலாபம் ஈட்டுவது மட்டுமே, இந்தியாவைவிட குறைந்த செலவில் யாரேனும் செய்து தர தயாராக இருந்தால் இந்தியாவை விட்டு அங்கே சென்றுவிடுவர், ஆனால் இந்த அவுட்சோர்சிங் முறையால் வேலையிழந்த அந்த நாட்டுக்காரர்களின் நிலை என்ன?? அந்த நிறுவனத்தின் இலாபக்குறியீடு ஏறிக்கொண்டே செல்லும் அதனால் ஒரு சில பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள், ஆனால் தொழிலாளிகள் நிலை ஒரு பெரிய ? இது தான் முதலாளித்துவத்தின் கோர முகம்.

கம்யூனிசம் இந்த இடத்தில் வெறும் இலாப நோக்கை மட்டும் பார்ப்பதில்லை. சமூக பொறுப்போடும் மனிதாபிமானத்தோடும் செயல்படுகின்றது இரஷ்யாவில் கம்யூனிசம் இருந்த போது ஏழை பணக்காரர்களுக்கிடையேயான இடைவெளி குறைவாக இருந்தது ஆனால் இன்றைய நிலை??, கம்யூனிசமே பரவாயில்லை என்ற நிலை அங்கே, கம்யூனிசம் இருந்த போது கிடைந்த அடிப்படை தேவைகள் வசதிகள் கூட அங்கே தற்போது பெரும்பாலான மக்களுக்கு கிடைப்பதில்லை, விளைவு இன்று வளைகுடா நாடுகளின் கேளிக்கை விடுதிகள் சில இரஷ்ய பெண்களால் நிரம்பி கிடக்கின்றன,பாலியல் தொழில் கொடிகட்டி பறக்கின்றன.

இரஷ்யா சிதறுண்டதும், அங்கே கம்யூனிசம் தோல்வி அடைந்ததும் கம்யூனிசத்தின் தோல்வி என்பதல்ல, அது கம்யூனிசத்தின் வெற்றிதான், சில/பல சமயங்களில் எளிதாக கிடைக்கும்போதும் அனுபவிக்கும் போதும் அதன் பெருமை தெரியாது, வேறொன்றிற்கு ஆசைப்பட்டு அதை இழந்து உள்ளதும் போனதடா நொள்ளக் கண்ணா என்றிருக்கும்போது தான் அதன் பெருமை தெரியும், அந்த நிலைதான் இன்று இரஷ்யாவின் நிலை. இது ஒரு வகையில் கம்யூனிசத்தின் வெற்றிதான்.

கம்யூனிசம் பற்றி பேசும் போது வைக்கப்படும் சில வறட்டு வாதங்கள்

1. கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள்

2. வலுத்தவன் வாழ்வான் கோட்பாடு

1. கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர்களுக்கு கிடைக்கும் அதிகாரங்கள்

எல்லோரும் சமம் என்ற இடத்திலே பொலிட் பீரோ உறுப்பினர்களுக்கு உள்ள அதிகாரம் மற்றவர்களுக்கு இல்லையே என்று வைக்கப்படும் மொக்கை வாதம் மிக நகைப்புக்குறியது

என் குடும்பத்தில் என் அண்ணன், அக்காள், என் தாய், தந்தைக்கு இருக்கும் அதிகாரங்கள் எனக்கு இருக்காது என்பது உண்மை, அது அவர்களுடைய அனுபவத்தாலும் உரிமையாலும் எனக்காக உழைப்பதாலும் நான் அவர்களுக்கு தர வேண்டியது என் கடமை.

எனக்காக உழைக்கும், நான் தேர்ந்தெடுத்த முதல்வர், என் நேரத்தைவிட அதிக மதிப்புடைய அவர் நேரத்தை சேமிக்கும் நோக்கிலும் பாதுகாப்பு மற்றும் இன்ன பல காரணங்களுக்காகவும் (இதற்கெல்லாம் அவர்களுக்கு தகுதி உண்டா என்பது வேறு விடயம்) தரப்படும் சலுகைகளும் அதிகாரங்களையும் குறை சொல்வது என்பதை எப்படி விவரிப்பது என்றே எனக்கு புரியவில்லை.

2. வலுத்தவன் வாழ்வான் கோட்பாடு

நாமெல்லாம் மனித சமுதாயம் தானே? விலங்கினம் இல்லையே? வலுத்தவன் வாழ்வானென்றால் பின் எதற்கு காவல்துறை, பின் எதற்கு சட்டம், நீதி, இராணுவமெல்லாம்.

வலுத்தவன் வாழ்வானென்ற நீதி விலங்கினத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் ஒரு நாகரீகமான, மனித சமுதாயத்திற்கு இது சரியா?

வலுத்தவன் வாழ்வானென்றால் ஒரு பத்து ரூபாய் வைத்துக்கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் என்னால் இறங்கமுடியுமா? சென்னையில் என்னை விட உடல் பலத்தில், அரசியல் பலத்தில், ஆள் பலத்தில், பண பலத்தில் அதிகம் உள்ளவர்கள் இல்லையா?

வலுத்தவன் எது வேண்டுமானாலும் செய்வானென்றால் வீட்டுப்பெண்கள் சாலையிலே நடமாடமுடியுமா?? அல்லது நாம் தான் சுதந்திரமாக இருக்க முடியுமா?

நாமெல்லாம் மனித சமுதாயத்தில் இருக்கின்றோம், விலங்கினத்திலிருந்து இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியடைந்து மனிதனாக மாறிவிட்டோம், உடல் வலுவை மட்டும் நான் குறிக்கவில்லை, பொருளாதார வலிமையயும் சேர்த்து தான், எனவே அந்த காலத்திலேயே இருக்காதீர்கள்.

உலகாலாவிய அளவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகமாகிக்கொண்டே போவது நல்லதற்கல்ல, முதலாளித்துவத்தின் சைடு எபெக்ட் தற்போதுதான் சிறிது சிறிதாக வெளிவர ஆரம்பித்துள்ளது, இது முழுதாக வெளிப்படும் போது உலகலாவிய அளவில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்படும், அந்நிலையில் சிற் சில மாற்றங்களோடு கம்யூனிசம் பரந்து பட்டு இருக்கும்.

உயர் சாதி க்ரீமிலேயரே தயாரா?

உயர் சாதியிலிருந்து க்ரீமி லேயரை ஆரம்பிப்போம்

1994 அரசு பொறியியல் கல்லூரியில் ஓராண்டிற்கான கல்விக்கட்டணம் ரூ.2500, இன்றும் கூட ரூ.17,000 கட்டணம், ஆனால் 1994லேயே ஒரு பொறியாளரை உருவாக்க அரசாங்கம் செய்யும் செலவாக எங்களுக்கு ஒரு கூட்டத்தில் சொல்லப்பட்டது இரண்டு இலட்சம், அன்று ஒரு மருத்துவ படிப்புக்கு அரசாங்கம் செலவு செய்வதாக சொல்லப்பட்ட தொகை ரூபாய் ஐந்து இலட்சம், ஆனால் கல்விக்கட்டணம் க்ரீமிலேயர், க்ரீமி இல்லாத லேயர் என எல்லோருக்குமே ரூ.2500 அப்போது, இப்போது ரூ.17,000 இரண்டு இலட்சம் படிப்புக்கு மொத்தம் மாணவர் செலுத்தியது ரூ.10,000. மட்டுமே.

இடஒதுக்கீடு இன்னும் இரண்டாம் தலைமுறையை எட்டாத நிலையில் (இது தொடர்பான என்னுடைய முந்தைய பதிவு இடஒதுக்கீடு தலைமுறை தலைமுறையாகவா?)இப்போதே க்ரீமிலேயருக்காக அழும் ஆட்கள் முதலில் க்ரீமிலேயரை உயர்சாதியிலிருந்து ஆரம்பிப்போம், ஒரு 5 அல்லது 10 ஆண்டுகள் பரிசோதனை அளவில் செயல்படுத்தலாம், பிறகு மற்றவர்களுக்கும் அதை செயல்படுத்தலாம், இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயருக்காக அழும் ஆட்களின் முரண்பாடு என்னவென்றால் இவர்கள் இடஒதுக்கீடே வேண்டாமென்பவர்கள்.

க்ரீமிலேயர் தொடர்பான ஆலோசனைகள்

1. க்ரீமிலேயருக்கு அரசு நிதியில் நடைபெறும் அல்லது அரசாங்க நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இடம் இல்லை, அவர்கள் வேண்டுமெனில் தனியார், சுயநிதிக்கல்லூரிகளில் படித்துக்கொள்ளட்டும்.

2. அப்படியே அரசு கல்வி நிறுவனங்களில் சேர்ந்தாலும் க்ரீமிலேயர் கட்டணங்களுக்கு அரசு மானியம் எதுவும் தரப்படக்கூடாது, அவர்களுக்கான முழுக்கல்வி செலவையும் அவர்களே ஏற்கவேண்டும், அதாவது ஒரு மருத்துவ படிப்புக்கு அரசாங்கம் பத்து இலட்சம் செலவு செய்கிறதென்றால் பத்து இலட்சமும் க்ரீமிலேயர் மாணவர்களிடமிருந்தே வசூலிக்கப்படவேண்டும். க்ரீமிலேயருக்கு ஏன் மானியங்கள் ?

க்ரீமிலேயருக்கு எப்படி அரசு ரேசன் கடை அரிசி தேவையில்லையோ அதே போல அரசாங்க கல்வி கூடங்களிலும் அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களிலும் மட்டும் எதற்கு இவர்களுக்கு படிக்க இடம் தரவேண்டும்?

இடஒதுக்கீட்டில் கிரீமிலேயரை விலக்கும்போது எப்படி அதன் கீழுள்ளவர்கள் பயன்பெறுவார்கள் என்று சொல்லப்படுகின்றதோ அதே போல உயர்சாதியில் க்ரீமிலேயரை அரசு கல்வி நிறுவனங்களில் இடமளிக்காமல் இருந்தால் பணமில்லாத ஏழை உயர்சாதி மாணவர்கள் எளிதாக இந்த கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவார்களே....

இதை பரிசோதனை முறையில் உயர்சாதியிலிருந்து ஆரம்பிப்போம், பிறகு அதை மற்ற சாதிகளுக்கும் விரிவுபடுத்தலாம்.

உயர் சாதி க்ரீமிலேயரே தயாரா?, உயர் சாதி க்ரீமிலேயரே நீங்கள் தயாரா சொல்லுங்கள்.

பிற்சேர்க்கை:

ஏன் இந்த க்ரீமிலேயரை உயர்சாதியிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமென்பதற்கான என் பதில்


தினமலர் செய்தியில் பொறியியல் படிப்பில் காலியாக உள்ள 16,440 இடங்களில் பெரும்பாலும் MBC, SC, ST யாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

http://www.annauniv.edu/tnea06/rama21.doc

CATEGORY OC BC MBC SC ST
ANNA UNIVERSITY 0 0 0 0 0
GOVT. & GOVT AIDED 0 0 0 0 1
SELF FINANCING 2839 4757 3804 4569 434

இலட்சக்கணக்கில் பணத்தை அழுது படிக்க வேண்டிய சுயநிதிக்கல்லூரிகளில் மட்டும் தான் இடம் நிரம்பாமல் உள்ளது,

31% OC யில் 2839 இடங்கள் மட்டுமே காலி ஆனால் 30% BC யில் 4757 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 70% அதிக காலியிடங்கள்)

20% MBC யிலோ 3804 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 107% அதிக காலியிடங்கள்)

18% SC யிலோ 4569 இடங்கள் காலி, (OCயை விட கிட்டத்தட்ட 177% அதிக காலியிடங்கள்)

இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் காலியிடங்கள் MBCயைவிட அதிகம்.

வர்ணாசிரம அடுக்கு முறை ஏற்படுத்திய ஏழ்மைக்கு இந்த புள்ளிவிபரம் ஒரு உதாரணம்.

அதாவது குறைந்த கட்டணத்தில் அரசு கல்லூரிகள் இடமில்லையென்றாலும் OCயில் பணம் கொடுத்து சுயநிதிக்கல்லூரிகளில் படிக்கும் சக்தி மற்ற அனைத்து பிரிவினரையும் விட அதிகம், அதனால் தான் இதை முதலில் OCயில் ஆரம்பித்தால் உயர்சாதி ஏழை மாணவர்களுக்கு பயன்படும் அல்லவா.

உயர்சாதி க்ரீமிலேயர் பற்றி ஞானியின் கருத்து...

http://www.keetru.com/dheemtharikida/sep06/gnani_5.html
2. இட ஒதுக்கீடு பெற்றுள்ள சாதிகளில் வசதி படைத்த மேட்டுக்குடியினரே (கிரீமி லேயர்) அதிக இடங்களைச் சுருட்டிக்கொள்வதைப் பற்றி எல்லாரும் மழுப்புவது ஏன்?

அரசியல், கல்வி, தொழில் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், துளியும் பண பலம் இல்லாதவர்களைவிட, ஓரளவேனும் பண பலம் உள்ளவர்கள் தான் முதலில் நுழையவும், நுழைந்த பின் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடியும் என்பதும், வசதி யற்றவர்கள் முண்டியடித்து, முட்டி மோதித்தான் தங்கள் இடத்தைப் பிடிக்க முடியும் என்பதும்தான் நீண்ட காலமாக சமூகத்தின் நிலை. ராஜாஜி, பெரியார், நேரு என்று அரசியலில் பெரும் தாக் கத்தை 20&ம் நூற்றாண்டில் ஏற்படுத்திய பலர், வசதியான பின்னணியில் இருந்து வந்தவர்கள்தான். அவர்களுடைய சமூக அக்கறைகள் தெளிவாக இருந்ததனால் தான், அவர்களைப் பின்பற்றி வந்த வசதியற்றவர்களான சத்தியமூர்த்தி, காமராஜர், அண்ணா போன்றவர்கள் தங்களுக்குரிய இடத்தைப் பெற முடிந்தது. சமூகப் பார்வையில் தெளிவும், தனக்குச் சமமான கூர்மையும் உடைய ஏங்கல்ஸ் போன்ற பணக்கார நண்பர் இருந்திரா விட்டால், வசதி குறைந்தவரான கார்ல் மார்க்ஸ் இன்னும் அதிக சிரமப்பட்டு இருப்பார்.

எனவே, இட ஒதுக்கீட்டிலும், அந்தந்த சாதியில் ஓரளவு வசதியுள்ளவர்களே முதல்கட்டத்தில் உயர் கல்வி வரை வர முடியும். அப்படி வருபவர்களில் அக்கறை உள்ளவர்கள்தான் மற்றவர்களை அரசி யல் படுத்தித் திரட்ட முடியும். அந்த நிலைக்கு வருவதற்கு அந்தந்த சாதி ஏழைகள் முதலில் அடிப்படைக் கல்விக் கான வசதியைப் பெற்றாக வேண்டும்.

தவிர, இட ஒதுக்கீடு என்பது பொருளா தார ஏற்றத் தாழ்வைச் சரி செய்ய வந்த திட்டம் அல்ல. சாதிகளிடையே ஏற்றத் தாழ்வைச் சரி செய்யவும், எல்லாச் சாதிகளுக்கும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொடுக்கவும் மட்டுமே ஏற்படுத்தப்பட்ட திட்டம். வறுமை ஒழிப்புக்கும் வர்க்க சமத்துவத்துக்கும் வேறு திட்டங் களைத்தான் நாம் உருவாக்க வேண்டும்.

இட ஒதுக்கீட்டில் அந்தந்த சாதிக்கான இடங்களில் முதல் தலைமுறையாகப் படிப்போர், ஏழைகளுக்கு முன்னுரிமை தருவது சரிதான். ஆனால், அதை ரிசர்வேஷன் இடங்களில் மட்டும் செய்வது சரியாகாது. ஓப்பன் கோட்டாவிலும் அதே போல ஏழைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.சமையல்கார பிராமணர், சவுண்டி பிராமணர், டிரைவர் முதலியார் ஆகியோரின் குழந்தைகளுக்கு முன்னு ரிமை தர, மூன்று தலைமுறையாக வக்கீல்களாக இருக்கும் அய்யர்களும், ஆடிட்டர்களாக இருக்கும் அய்யங் கார்களும், டாக்டர்களாக இருக்கும் முதலியார்களும் முன்வருவார்களானால், மற்ற சாதிகளிடமும் இது குறித்து நாம் விவாதிக்கலாம்.

குவார்ட்டர் கோவிந்தனுக்கு கவிஞன் காந்துவாயன் பதில்

குவார்ட்டர் கோவிந்தன், குழலி மீது வழக்கு போடப்போவதாக சொல்லியிருந்தார், அது தொடர்பாக ஆயா செஞ்ச பாயா புகழ் கவிஞன் கோந்துவாயனின் அறிக்கை.

குவார்ட்டர் கோவிந்தன், குழலி அவர்கள் மீது வழக்கு போடப்போவதாக சொல்லியிருந்தார், அதற்கு குவார்ட்டர் கோவிந்தனென்ன அவன் அப்பன் ஆறு ஆஃப் ஆறுமுகம் வந்தாலும் சரி தாத்தன் புல் புண்ணியகோடி வந்தாலும் சரி தயாராகவே இருக்கிறார், "குவார்ட்டர்" என்ற அடை மொழி எப்படி வந்தது தெரியுமா? நீங்களெல்லாம் கோவிந்தன் குவார்ட்டர் குடிப்பார் அதனால் குவார்ட்டர் கோவிந்தன் என்று பட்டம் வந்தது என நினைக்கிறீர்களா அது தவறு.

கோவிந்தனின் நண்பர்கள் சரக்கு அடித்து கொண்டிருக்கும் போது கோவிந்தனிடம் குவார்ட்டர் வாங்கிவர சொல்லி அனுப்பினார்கள், இந்த கோவிந்தன டாஸ்மாக் கடையில் போய் பெரிய புத்திசாலியாக 250மி.லி. பிராந்தி கொடுங்கனு கேட்டார் டாஸ்மார்க்கில் அம்மையாரின் புண்ணியத்தில் சரக்கு ஊத்திகொடுத்துக்கொண்டிருந்த புள்ளியியலில் முதுகலை படித்த பட்டதாரி

மண்டை காய்ந்து போய் 250மி.லி. சரக்கெல்லாம் இங்கே கிடையாது என திருப்பி அனுப்பிவிட்டார், நண்பர்களிடம் திரும்பிய கோவிந்தன் குவார்ட்டர் இல்லையாம் என்று சொல்ல, டாஸ்மாக்கில் குவார்ட்டர் இல்லையா? மிடாஸ்மிடாஸ்(MIDAS - M ஃபார் மன்னார்குடி, I ஃபார் இளவரசி, D ஃபார் தினகரன், A ஃபார் ஆல் அதான் எல்லோருக்கும் பின்னால யாரு S - S
ஃபார் சசிகலா) போலி சரக்காவது இருக்குமே எப்பவும்னு கொதித்து போய் கேட்க அங்கே உம்ம 250 மிலி கதையை சொல்ல அன்றிலிருந்து 'குவார்ட்டர்' கோவிந்தன் ஆனவன் தானே நீ

சரி அம்மையார் ஆட்சியில் தான் கேட்டால் கஞ்சா கேஸ் போட்டு உள்ளே போடுவாங்கனு பயந்த, இப்பவும் புள்ளியியல் முதுகலை பட்டதாரிகள் ஊத்திகொடுக்கிறார்களே இப்போது எந்த வழக்கிற்கு பயந்து கொண்டு வாயைத்திறக்காமல் இருக்கிறாய்?

உன் அப்பன் ஆஃப் ஆறுமுகம் கதை தெரியாத எங்களுக்கு, ஆஃப் பாயில் சாப்பிட ஆறுகிலோமீட்டர் நடந்து வந்ததால் தானே ஆஃப் ஆறுமுகம்னு பேரு, உன் தாத்தன் புல் புண்ணியகோடி கதை தெரியாதா, முதல்ல அது full புண்ணியகோடி யில்ல, pull புண்ணியகோடி, ஒரு நாள் கதவில் எழுதியிருந்த PULL என்பதை பார்த்து அண்ணே புல்லுனு இங்கே போட்டிருக்கு ஆனா புல்லே இல்லையே மாடு தின்னுருக்குமோனு கேட்டதாலேயே உன் தாத்தன் பெயர் புல் புண்ணியகோடி, இதெல்லாம் எமக்கு தெரியாததா? புரியாததா?

குவார்ட்டர் அடிக்கும் குடிமகன்களுக்காக என்ன செய்தாய் நீ, முன்னாடி எல்லாம் ஒயின்ஷாப் ஓனருங்க போலிசரக்கு விப்பாங்க, நடு நடுவுல நாலு கேசு நல்ல சரக்கும் கிடைக்கும், மிடாஸ் வந்ததிலிருந்து முழுக்க முழுக்க போலிசரக்கு தானாம், அதற்காக நீ என்ன செய்தாய்? போலிசரக்கை குடித்துவிட்டு சீன் செய்து கொண்டிருந்தாய், சரி அதைவிட என்ன சமூக அக்கறை உண்ணிடம் இருந்தது, ஏதோ தமிழ்நாட்டில் இருந்த பல ரவுடிகள் தம் ரவுடிப்பட்டாளத்தோடு ஒயின்ஷாப் நடத்தி தமக்கென ஒரு தொழில் செய்து நல்ல படியாக வாழ்ந்து கொண்டிருந்தனர், ஆனால் கவர்மெண்ட்டே சரக்கு விக்க ஆரம்பித்தவுடன் இந்த ரவுடிகள் நேர்மையாக தொழில் செய்ய வழியில்லாமல் ஆள்கடத்தல், வழிப்பறி கொள்ளையடிக்கின்றார்களாமே அதைப்பற்றி ஏதேனும் யோசித்தாயா?

ஆ... ஊ... என்றால் கலகக்காரனாம் கலகக்காரன், கலகக்காரனுக்கு அர்த்தம் தெரியுமா? உன் கலகத்தால் குடிகாரர்களுக்கு என்ன நன்மை, ஊரெல்லாம் குடிக்காதே குடிக்காதேனு சொல்லிக்கொண்டிருக்கும் டாக்டர் ராமதாஸ் தோட்டத்தில் வைத்து தண்ணியடிக்கிறார் என பொய் சொல்லி அவர் பெயரை கெடுக்க முயற்சி செய்தாயா? நீ... சரி விஜய்மல்லையா சரக்கு கிடைக்காமல் சீ... சீ.... இந்த சரக்கு புளிக்கும் என நீயே பேட்டரி செல் போட்டு ஊறவைத்து இந்த வார சரக்கார், இந்த வார சல்பேட்டா என்று என்றாவது சொல்லியிருக்கியா? உன்னோட இந்த வார சரக்காரையும் இந்த வார சல்பேட்டாவையும் யாரு கவனிக்கிறாங்கன்றது முக்கியமில்லை, கேட்டா ஏய்.... ஏய்... அந்த ஆஸ்கார் விருதை எப்படி செலக்ட் செய்றாங்கனு அறிவுப்பூர்வமா(அப்படினு நீயே நெனச்சிக்கிறது) கேள்வி கேட்டு கலகம் செய்தாயா? இப்படி ஒரு எழவுமில்லை பிறகென்ன நீ கலகக்காரன்? சரி அதுவும் இல்லை பேசாப்பொருளை பேசத்துணிந்தவர்கள் பார்ப்பனீயத்திற்கும் பாப்பாத்திக்கும் வித்தியாசம் தெரியாமலே "கல்லூரியில் பாப்பாத்தியை டாவடித்தான். இன்டர்நெட்டில் பார்ப்பனியத்தை எதிர்க்கிறான்.", என்று எழுதியதைப்போல என்றாவது ஏதாவது எழுதினியா?

பாவம் பேசாப்பொருளை பேசத்துணிந்தவருக்கு கோவில்களில் நூறு சதவீத இடஒதுக்கீட்டை உறுதிபடுத்த உச்ச நீதிமன்றம் போனதை போல, இரண்டாயிரமாண்டு இடஒதுக்கீட்டை போலவே "தேன்கூடு போட்டியிலும் இடஒதுக்கீடு தேவை என்றார் பேராசிரியர்." என்று தேன்கூடு போட்டியிலெல்லாம் இடஒதுக்கீட்டை எதிர்பார்க்கிறார் அது போல ஏதாவது எழுதியிருக்கிறாயா? பிறகெப்படி நீ கலகக்கரன்?


குவாட்டர் அடித்தா
குப்புற விழுந்தாய்
குவாட்டர் கோவிந்தா
நீ
குவாட்டர் அடித்தா
குப்புற விழுந்தாய்
குவாட்டர் கோவிந்தா

குவாட்டர் சரக்கு
எத்தனை மில்லி
தெரியுமா கோவிந்தா
உனக்கு
குவாட்டர் சரக்கு
எத்தனை மில்லி
தெரியுமா கோவிந்தா

கட்டிங் அடிச்சா
கதறுவியே கோவிந்தா
டாஸ்மாக் கட்டிங்குக்கே
நீ
கோவிந்தாஆஆஆ
கோவிந்தாஆஆஆஆ...

டாஸ்மாக் கட்டிங்குக்கே
நீ
கோவிந்தாஆஆஆ
கோவிந்தாஆஆஆஆ...

எந்த சரக்கு அடிச்சா
கோவிந்தா உனக்கு
பாப்பாத்திக்கும்
பார்ப்பனீயத்துக்கும்
வித்தியாசம் தெரியும்
கோவிந்தா

எந்த சரக்கு அடிச்சா
கோவிந்தா உனக்கு
பாப்பாத்திக்கும்
பார்ப்பனீயத்துக்கும்
வித்தியாசம் தெரியும்
கோவிந்தா

யாரும்
பாத்துட்டு போனாலும்
பாக்காம போனாலும்
இந்த வார சரக்கர்
நீதான்

யாரும்
குடிச்சிட்டு போனாலும்
குடிக்காம போனாலும்
இந்த வார சல்பேட்டா
நீதான் கோவிந்தா

ஏன்னா நீ தான்
என் சப்போட்டு
கோவிந்தா

ஏன்னா நீ தான்
என் சப்போட்டு
கோவிந்தா

சல்பேட்டா உனக்கு
சப்போட்டா கோவிந்தா

சொல்றேன் கேட்டுக்கோ அன்றும் சரி இன்றும் சரி நீ குவார்ட்டர் அடித்ததே இல்லை, குவார்ட்டர் அடிக்காமலே சீன் செய்து கொண்டிருக்கிறாய், அதை சொன்ன குழலியின் மீது வழக்கா போடப்போகிறாய், போடு போடு, எத்தனை வழக்கு வந்தாலும் சந்திக்க தயார் என குழலியின் சார்பில் கவிஞன் கோந்துவாயன் தெரிவிக்கின்றான்.

தமிழா நீ புழுவா? மனிதனா?

"தமிழா நீ புழுவா? மனிதனா?" என்ற கட்டுரை "செய்தி மடல்" இதழில் வெளிவந்துள்ளது, இந்த கட்டுரை எழுதியவரை தேர்தல் நேரத்தில் வலைப்பதிவர்களுக்கு வேறு மாதிரி அறிமுகப்படுத்தியிருந்தார் ரஜினியின் தீவிர ரசிகரான திரு.ரஜினி'ராம்கி', ஆம் அவர்தான் பாமகவின் சட்டமன்ற உறுப்பினர் திரு. வேல்முருகன், சட்டமன்ற நடப்பு பற்றி சில வாரங்கள் குமுதத்தில்(என்று நினைக்கின்றேன்)சுவையாக எழுதியவர், எழுத்தில் ஈடுபாடுடையவரென்றாலும் நிறைய எழுதாமைக்கு அவருடைய மற்ற பணிகளுக்கிடையில் எழுத்தில் நிறைய நேரம் செலவழிக்க இயலாத நிலை என நான் கருதுகிறேன், கீற்று இணையதளத்தில் கட்டுரையின் சுட்டி இனி அவரின் கட்டுரை கீழே

ஆறு ஆண்டுகளுக்கு முன் - 4-6-2000 நாளிட்ட கல்கி இதழொன்று என் கைக்குக் கிடைத்தது. சிவபக்தர் ஆறுமுகசாமியை நேரில் சந்தித்து, அவருக்குத் தொடர்புடைய சுற்றுப்புறக் கிராமங்களிலும் விசாரித்து, ஒரு செய்திக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. சிவபக்தர் ஆறுமுகசாமியைப் பற்றி கல்கி எழுதுமளவிற்கு என்ன நடந்தது?
சிதம்பரம் சிவாலயத்தில், இறைவன் முன் சிவபக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம் பாடல்களைப் பாடிச் சாந்திபெற விரும்பினார் சிவபக்தர் ஆறுமுகசாமி.

ஆலயத்துள் நுழைந்து பாடத் தொடங்கியதுமே எதிர்பாராத தாக்குதல், சில குண்டர்கள் சூழ்ந்து இழுத்துப் போட்டு மிதித்து அடித்து நொறுக்குகிறார்கள். தாக்கியவர்கள் அனைவரும் நீறுபூத்த நெற்றியுடன் காணப்படுகிறார்கள். தீட்சிதர்களாம். தீட்சிதர்கள் என்றால் தீட்சை தருகிறவர் என்று பொருள் இருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டேன்.

தீட்சை என்றால் என்ன? தோழர் சின்னக்குத்தூசியிடம் கேட்டேன். ஒரு மாணவன் அல்லது சீடன் முழுத் தகுதி பெற்றிருக்கிறான் என்று சான்று - அங்கீகாரம் - ஏற்று அளிப்பதுதான் 'தீட்சை' என்றார் சின்னக்குத்தூசி.

"அப்படியானால் தீட்சிதர்?"

"அறிவை அங்கீகரிப்பவர் என்று பொருள் இல்லை. தீட்சைக்கும் தீட்சிதருக்கும் சம்பந்தமே இல்லை. தீட்சிதர் என்போர் ஒரு சாதிப் பிரிவினர் அவ்வளவுதான். அரைகுறையாய் என் தொலைபேசி உரையாடலைக் கேட்ட ஒருவர் போகிற போக்கில் சொன்னார்: "போக்கிரிகள், ரௌடிகள் என்று புரிந்து கொள்ளலாம் ஐயா!" சிவபக்தர் ஆறுமுகசாமியைச் சிதம்பரத்தில் தாக்கியவர்கள் மீது கொண்ட சினமேறிய விளக்கம் அது என்று புரிந்தது.
ஆறுமுகசாமியின் கதையை கல்கியில் மறுபடியும் படித்தேன். அதில் ஆறுமுகசாமியின் ஒவ்வொரு சொல்லும் இதயத்தை உலுக்கியது.

ஆறுமுகசாமி சொல்கிறார்: சிதம்பரம் கோயில் 'அம்பலத்தில்' தமிழில் பாடுவது என்பது தீட்சிதராலும் முடியாது என்பதால் - "நாமே ஒரு சிவாலயம் கட்டி தேவாரம் இசைப்பது என்ற முடிவோடு எனது கிராமத்திலேயே (குமுடி மூலை) பசுபதீஸ்வரர் ஆலயம் கட்டி ஒரு கால பூஜை செய்து வந்தேன். ஆனாலும் மனசுக்குள் புழுக்கம்... 'எனது அம்பலத்தில் வந்து பாடாமல் ஏன் முடங்கி விட்டாய்? என் ஆலயத்திற்கு வா... எத்தனை சோதனை வந்தாலும் தயங்காதே' என்று பரம்பொருள் என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பது போல இருந்தது. எனவே எனது நண்பர்களோடு, கடலூர் மாவட்ட நீதிபதி சிங்காரவேலுவைச் சந்தித்து, அம்பலத்தில் நின்று தேவாரம் இசைத்தபடி இறைவனை தரிசிக்க அனுமதி கேட்டேன். அவர் இரண்டு அதிகாரிகளையே உடன் அனுப்பி எங்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்தார்.

"அந்த அதிகாரிகள் முன்னிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மூன்றாம் தேதி அம்பலத்தில் பாடினேன். மறுநாள் அதிகாரிகள் இன்றி பாடச் சென்றபோது என் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார்கள்! அதன்பிறகு அதே மாதம் 18 ஆம் தேதி சிதம்பரம் நகர காவல்துறையின் பாதுகாப்புடன் சபையில் பாடினேன். மறுநாள் 19 ஆம் தேதி பாடியபோது பத்துக்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் கீழ்த்தரமான வார்த்தைகளைக் கூறி, ஜாதியின் பெயரையும் சொல்லி என்னைக் கீழே பிடித்துத் தள்ளி விட்டனர். இறையன்பர்கள் சிலர் அருகில் இருந்ததால், என்னைக் காப்பாற்றி அழைத்து வந்தார்கள். அதன் பிறகு நான் மானசரோவர் யாத்திரை சென்று விட் டேன்.

"மறுபடியும் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த மே மாதம் எட்டாம் தேதி, காலை பத்து மணிக்கு அம்பலத்தில் தொண்டர்களுடன் தேவாரம் இசைக்கப் போனேன். அம்பலம் ஏறி ஆறு வரிகள்தான் பாடினேன்... சுப்ரமண்ய தீட்சிதர் என்பவர் அங்கிருந்த பிற தீட்சிதர்களையும் அழைத்துக் கொண்டு, என்னை மிகக் கேவலமாகத் திட்டியபடி 'இவனை அடிச்சு தள்ளுங்க' என்று சத்தம் போட்டதும், என்னை அம்பலத்தில் இருந்து கீழே தள்ளி எல்லோரும் இடுப்பு, கழுத்து, வயிறு பகுதிகளில் மிதித்தார்கள். நிலைமை மோசமானதை அடுத்து உடன் இருந்தவர்கள் என்னை மருத்துவமனையில் சேர்த்தார்கள். காவல் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனாலும், இதுவரை யாரையும் ஒரு வார்த்தைகூட விசாரிக்கவில்லை.

ஆனால் என் உடம்பில் உயிர் இருக்கும் வரை அம்பலத்தில் திருவாசகம் இசைத்து தில்லை திருத்தலத்தில் இருக்கும் தீண்டாமைப் பேயை விரட்டப் பாடுபடப் போகிறேன் என்கிறார் ஆறுமுகசாமி. இந்த ஆறுமுகசாமி யார், எப்படிப்பட்டவர் என்பதை அறிய அவரது குமுடிமூலை கிராமத்திற்குச் சென்றோம்.

"காடா இருந்த ஊருக்கு பஸ் வசதி, பள்ளிக்கூடம், மருத்துவமனை கொண்டு வந்தது உட்பட, அதிகாரிகளைப் போய்க் கேட்டுப் பல வசதிகள் செஞ்சு கொடுத்திருக்கார். மூணு கிராமங்கள்ல கோயில் கட்டிக் கொடுத்திருக்கார். கொஞ்சம்கூட சுயநலம் இல்லாதவர். அவரும் பல வருஷமா போராடித்தான் பார்க்கறாரு. ஆனா, தொடர்ந்து அவருக்கு அடியும் உதையும் அவமானமும்தான் சிதம்பரம் கோயிலில் கிடைக்குது" என்கிறார் குமுடி மூலை கிராமவாசியான சௌந்தர்ராஜன்.

சிதம்பரம் நகர காவல் நிலையத்தை அணுகினோம். தீட்சிதர்கள், ஆறுமுகசாமி என்ற இரண்டு பெயர்களைக் கேட்டதும், எஸ்.ஐ. எல்லா விவரமும் தருவார் என்று கூறிவிட்டு இன்ஸ்பெக்டர் குப்புசாமி அவசரகதியில் ஜீப் ஏறி மறைந்தே போனார். கடந்த எட்டாம் தேதி ஆறுமுகசாமி தாக்கப்படக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் சுப்ரமண்ய தீட்சிதர் என்ன சொல்கிறார்?

"அம்பலத்துல நின்னு பாடறதுக்குன்னுதான் நாங்க இருக்கோமே... இங்கே எதுக்கு ஆறுமுகசாமி...? அம்பலத்துக்குக் கீழே நின்று பாடினா பகவான் ஏத்துக்க மாட்டாரா? ஆறுகால பூஜை நேரம் போக பக்தர்கள் யாரு வேணும்னாலும் சன்னதியில் - அம்பலம் தவிர எங்க வேணுமானாலும் நின்னு பாடிக்கலாம். இதுக்கு நாங்க தடை சொல்றதில்லே! எங்க உரிமையைப் பறிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். இவ்விஷயத்தில் ஜாதி ஒரு பொருட்டே அல்ல!" என்று அடித்துச் சொல்கிறார்.

அதற்குமேல் நாம் கேட்ட எதையும் அவரோ, தற்போது தலைமை தீட்சிதராக இருக்கும் கனகசபை தீட்சிதரோ காதில் போட்டுக் கொள்ளத் தயாராக இல்லை. இவையெல்லாம் கல்கி எழுதியவைதாம். (இந்தச் செய்தியை வெளியிட்டதற்காகக் கல்கியைப் பாராட்டுகிறோம். எப்படி வெளியிட்டது என்று வியக்கிறோம்.)

இது நடந்து ஆறு ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டன. இந்த ஆண்டிலும் - 2006 ஜூலை மாதத்திலும், அதே ஆறுமுகசாமி அதே ஆலயத்தில் அதே ஆசையில் அதே தமிழில் இறைவனைப் பாட வருகிறார். இம்முறையும்,
அதே ஆறுமுகசாமி அதே ஆலயத்தில் அதே ரௌடிகளால் அதே மாதிரித் தாக்கப்படுகிறார். காலம் மாறியிருக்கிறது. ஆனால், ஆறுமுகசாமியின் தேவாரத் தமிழ்க் கனவும் அரங்கேறவில்லை. தீட்சிதர்களின் தமிழ் விரோதப் போக்கும் குறையவில்லை!

நந்தனை எரித்த நெருப்பு இன்னும் சிதம்பரம் தீட்சிதர்களின் நெஞ்சில் அணையவில்லை. உயிரே எரிந்தாலும் எம் உணர்வு அடங்காது என்பது போல் புதிய புதிய நந்தன்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். சாத்திரம், சம்பிரதாயம், ஆகமவிதி என்று அறிவுக்குப் புறம்பான காரணங்களைக் கூறி தமிழ்நாட்டில், தமிழர்கள் எழுப்பிய கோயிலில், 'தென்னாடு (தமிழ்நாடு) உடைய சிவனே' என்று போற்றப்படும் கடவுளை, தமிழில் பாடி வணங்கக் கூடாது என்று ஒரு கூட்டம் தடுக்கிறது. அதைக் காவல் துறையும் ஏற்றுக் கொள்கிறது. நீதித்துறையும் ஒப்புக் கொள்கிறது. எவனை வணங்கத் தமிழெடுத்துச் சென்றாரோ, அந்தச் சிவனும் இந்த அக்கிரகாரத்து அக்கிரமங்களைக் கண்டு கொள்வதில்லை.

சம்பிரதாயம், ஆகமம் என்கிற சங்கதிகளெல்லாம் வசதிபடைத்த மனிதர்கள் உருவாக்கிக் கொண்ட பாதுகாப்பான ஏற்பாடுகள்தாம். நிரந்தரமான, மாற்றக் கூடாத விதி என்று எதுவும் கிடையாது. அடிமைகள் எஜமானருக்குமுன் பணிவாக நடக்க வேண்டும் என்பதும் சம்பிரதாயம்தான். ஆண்டான் அடிமை என்கிற சமூக அமைப்பே கூடாது என்று புதிய சிந்தனை எழும்போது சம்பிரதாயங்கள் சமாதிகளாகி விடுகின்றன. மன்னர்களின் மணிமுடிகள் நொறுங்குகின்றன. முதலாளித்துவம் முடிசூடிக் கொள்கிறது. சகல சம்பிரதாயங்களுடனும் குடைநிழலில் குஞ்சரம் ஊர்ந்த நேபாள மன்னன் மக்கள் எழுச்சிக்கு முன் காணாமல் போனான். நடைமுறையிலுள்ள சமூக ஏற்பாட்டால் நன்மையடைகிறவர்களே சம்பிரதாயங்களில், சட்டங்களில் மாறுதலே கூடாது என்கிறார்கள்.
கூடாது என்று எத்தனை கூச்சல்கள் எழுந்தாலும் அரசியல் சாசனங்கள்கூட காலங்கள் தோறும் தேவைக்கு ஏற்ப மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன.

அரசியல் சாசனங்கள் மாற்றப்படலாம்; ஆலய சம்பிரதாயங்கள் மாற்றக் கூடாதவை. ஏனென்றால், அவை ஆண்டவனால் அளிக்கப்பட்டவை என்று, ஆச்சாரியார்களும், மதகுருமார்களும் விரிவுரை செய்யக் கூடும்.
ஆண்டவனே மனிதனின் படைப்புத்தான் என்கிற சிந்தனைகள் மலர்கிற காலத்தில் ஆண்டவனைச் சொல்லி யாரும் ஏமாற்ற முடியாது.


ஆண்டவனைத் துணைக்கழைப்போருக்கு ஒரு கேள்வி:

"ஆண்டவன்தான் எனது அம்பலத்தில் வந்து பாடாமல் ஏன் முடங்கி விட்டாய்? வா, வந்து பாடு என்று எனக்கு ஆணையிட்டான்" என்று சிவபக்தர் ஆறுமுகசாமி சொல்லும்போது தீட்சிதர்கள் அதை ஏற்க மறுப்பது ஏன்? இங்கே - சிதம்பரத்தில் - ஆண்டவன் கட்டளையை விட ஆரிய விருப்பமே மேலானது என்று ஒவ்வொரு தீட்சிதனும் நம்புகிறான்.

பிரபஞ்சம் இயற்கைக்குக் கட்டுப்பட்டது. இயற்கை கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர். மந்திரம் பிராமணனுக்குக் கட்டுப்பட்டது. ஆதலினால் பிராமணன் அனைத்தையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்றவன் என்று உரிமை பாராட்டுகிறான். ஆறுமுகசாமி போன்ற சிவனடியார்களோ, 'நீ மந்திரம், கடவுள், இயற்கை, பிரபஞ்சம் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் உரிமை பெற்றிருக்கலாம்; ஆனால், எம் தமிழைக் கட்டுப்படுத்த யாரடா நீ?' என்று பொங்கி எழுகிறார்கள். இறைவழிபாட்டில் இடைத்தரகர்களான அர்ச்சகர், தீட்சிதர்களின் சனாதன தர்மங்கள் முக்கியமா, பக்தனின் உணர்வு முக்கியமா? - கேட்கிறார்கள் ஆறுமுகசாமிகள்.

வேடன் கண்ணப்பனின் கதை என்ன? சிவபெருமானின் விக்கிரகத்தில் கண்ணிலிருந்து இரத்தம் வழிவதைக் கண்டு துடிக்கிறான் கண்ணப்பன். தன் கண்களைப் பறித்து சிவனுக்குப் பொருத்துகிறான். எப்படி? தன் கண்களைப் பறித்துக் கொண்ட பின் சிவனின் கண்ணிருக்கும் இடத்தைப் பார்க்க முடியாது என்பதால், அந்த இடத்தில் தனது கால்விரலால் மிதித்து அடையாளம் ஏற்படுத்திக் கொண்டுதான் சிவனுக்கு 'கண் ஆபரேஷன்' செய்கிறான்.

ஆசாரம் காக்க நினைக்கும் யாருக்கும் கண்ணப்பனின் உணர்வு ஆசாரக் கேடானது. இறைவனின் கண்ணருகே காலால் மிதிக்கலாமா? மிதித்தவனை மிதிக்காமல் விடலாமா என்று தோன்றும். பக்தனின் பக்தியை மெச்சும் யாரும் இறைவனின் துயரத்தைப் போக்குவதற்காகத் தன்னையே குருடாக்கிக் கொண்ட கண்ணப்பனின் உணர்வு கண்டு மெய்சிலிர்த்துக் கசிந்துருகுவார். இறைவனுக்காகத் தன் கண்களையே பறித்துக் கொடுத்த பக்தனின் உணர்வு போற்றத் தகுந்ததா? இறைவனைக் காலால் மிதித்துவிட்டான் பாவி என்று கத்தும் தீட்சிதரின் ஆசார சீலம் போற்றத் தகுந்ததா?

அறிவியல் நோக்கில் கண்ணப்பன் ஓர் அசடன்; தீட்சிதர் ஒரு கயவன். பக்தி என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட உளவியல் சிக்கல் என்பதால், இங்கே 'ஆன்மீக அளவுகோலின்படி' உணர்வு வெற்றி பெறுகிறது; ஆசாரம் அர்த்தமற்றதாகி விடுகிறது. தீண்டாமையும் உடன்கட்டை ஏறுதலும்கூட மதவாதிக்குப் புனிதமான ஆசாரங்களே!
புதைகுழியில் சிக்கித் தவிக்கும் தீட்சிதரைப் புலையன் கைபிடித்துத் தூக்குகிறான்; ஆசாரம் கெட்டு விட்டதே என்று புலையனைத் தண்டிப்பதா? தீட்சிதரைத் தண்டிப்பதா?


ஆசாரம் காப்பதற்காக சிதம்பரத்திலே ஒரு தீட்சிதர் செத்தால் அவருடைய மனைவியையும் அதே சிதையில் போட்டுக் கொளுத்தலாமா? வேதம் ஓதுதலையும் யாகம் வளர்த்தலையும் விட்டுவிட்டு, மருத்துவராய், நீதிபதியாய், பொறிஞராய், முதல்வராய், பிரதமராய்த் தொழில் செய்து பிழைப்பது பிராமண தர்மத்துக்கு விரோதமானதல்லவா? புனித ஆசாரங்களுக்கு எதிரான பாவமல்லவா? இவ்வாறு தர்மத்தைத் தொலைத்து ஆசாரம் கெட்ட 'பிராமணக் கழிசடைகளை' சிதம்பரம் தீட்சிதர்கள் செருப்பால் அடிப்பார்களா?

அப்படிச் செய்வார்களானால், ஆசார சீலர்களான தீட்சிதர்கள் ஆறுமுகசாமியை 'அம்பலத்தில்' நுழையாதே என்று தடுப்பதுகூட, 'தர்மப்படி' சரி யென்று ஒப்புக் கொள்ளலாம். இந்த அடிப்படை 'நாணயம்'கூட இல்லாத தீட்சிதர்கள் எந்த முகாந்தரத்தைச் சொல்லி, ஆறுமுகசாமிகளைத் தடுக்கிறார்கள்? நீதிமன்றத்தின்மூலம் தடையுத்தரவு பெறுகிறார்கள்? அதற்கு எந்த நீதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது? சிதம்பரம் அம்பலத்தில் ஏறாதே; தமிழில் பாடாதே என்பதை இறைவனே ஏற்க மாட்டான். நீதிபதி ஏற்றது எப்படி?

சிதம்பரத்தில் ஆசாரமும் காப்பாற்றப்படவில்லை; அறிவியல் பார்வையும் காப்பாற்றப்படவில்லை; அரசியல் சாசன விதிமுறைகளும் காப்பாற்றப்படவில்லை. ஆசாரம் கெட்ட தீட்சிதர்கள் தாங்களும் கெட்டு, சட்டத்தையும் வளைக்கிறார்கள். ஆறுமுகசாமிக்கும் தீட்சிதர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தின் அடிமுடியை அலசி ஆய்ந்தால் தெரியும் உண்மை இது தான்: தமிழன் தீண்டத்தகாதவன்; தமிழ்மொழி 'நீசபாஷை' என்கிற அக்கிரகாரத்து வக்கிரத்துக்கும், தமிழைப் பழித்தோர்க்குச் சங்காரம் நிசம் என்று சங்கே முழங்கெனும் மான உணர்ச்சிக்குமான 'பரம்பரை யுத்தமே' சிதம்பரத்தில் நடக்கிறது!

தமிழா நீ புழுவா, பூச்சியா? 'ஆம்' என்றால், நாசமாய்ப்போ! மனிதன் என்றால் எழு; உன்மீது பூசப்பட்ட களங்கத்தைக் கழுவு!

கடவுள் சிலையும் பெரியார் சிலையும்

ஏற்கனவே திராவிட தமிழர்கள் வலைப்பதிவில் வெளியான பதிவு, இங்கே மீண்டும் மீள்பதிவாக... ம்.. இன்னும் எத்தனை முறை மீள்பதிவு செய்ய வேண்டுமோ தெரியவில்லை, ஏனெனில் பெரியார் அவர்கள் சிலைகள், நினைவு நாள் கொண்டாடுதல் பற்றி என்ன சொன்னார் என்று தெரியாமலேயே உளறித்தள்ளும் சிலர் அவர்களும் உளறி எல்லோரையும் குழப்பும் வரை இவைகள் மீள்பதிவாக வந்து கொண்டேயிருக்கும்....

பிள்ளையார் சிலையை உடைத்த பெரியாருக்கு சிலையா! கடவுள் படங்களை வீசி எறிந்தவருக்கே உருவப்படங்களா? நினைவு நாளா? உருவப்படங்கள் நினைவு நாட்கள் பற்றி பெரியார் பேசியது இங்கே தரப்பட்டுள்ளது

இந்த கட்டுரை கீற்று இணைய தளத்திலிருந்து எடுத்து இங்கே தரப்பட்டுள்ளது, கீற்று இணையதளத்திற்கு நன்றி

நினைவுநாள் - படத்திறப்பு ஏன்?


எத்தனையோ பேர் சாகிறார்கள். ஏதோ இரண்டொருவர்கட்குத்தான் நாம் நினைவு நாள் கொண்டாடுகிறோம். செத்துப் போனவர்களின் பணத்தை உத்தேசித்தோ, படிப்பை உத்தேசித்தோ, அதிகாரம், பட்டம், பதவி, அறிவு, சாமர்த்தியம் முதவியவைகளைப் பற்றியோ நாம் எவருக்கும் நினைவு நாள் கொண்டாடுவதில்லை. இவைகள் காரணமாக நாம் எவரையும் போற்றுவதுமில்லை; துதிப்பதுமில்லை.

பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால், ரிசர்வ் பாங்கியைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைப்ரரியைத் தான் மதிக்க வேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் 'என்சைக்ளோபீடியா' ரேடியோ முதலியவைகளை மதிக்க வேண்டும். இப்படி அனேகவற்றை - உயிரில்லாதவைகளிலும் காணலாம். ஆதலால், நாம் மதிப்பது, பேசுவது, நினைவுறுவது என்பவையெல்லாம் இவைகளை உத்தேசித்தல்ல.

மற்றெதற்காக என்றால், மனிதர்களாக - மனிதத்தன்மை உடையவர்களாக இருந்து, மறைந்த மனிதர்களுக்காக இரங்கி, அவர்களது மனிதத் தன்மையை எடுத்துக் கூறி, மற்றவர்களையும் மனிதர்களாக ஆக்குங்கள் என்பதற்காகவேயாகும்.

அப்படியானால், செத்துப் போன மற்றவர்களும், இப்போது இருக்கும் மக்கள் எல்லோரும் மனிதர்கள் அல்லவா என்று கேட்பீர்கள். அவர்களையெல்லாம் மனிதர்கள் என்று சொல்லுகின்றோமே ஒழிய, மற்ற ஜீவபிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் பேதம் காணக்கூடிய தன்மையுடைய மனிதர்கள் என்று சொல்லுவதற்குரியவர்களாக மாட்டார்கள். பேதம் என்றால் உருவ பேதம் அல்ல. நடப்பிலும்! நடப்பால் ஏற்படும் பயனிலும் உள்ள பேதமேயாகும்.

உலகிலுள்ள எல்லா ஜீவ பிராணிகளுக்கும் - மனிதர்கள் என்பவர்கள் உட்பட, உருவத்தில் பேதம் இருந்தாலும், குணத்தில் பேதம் இருந்தாலும் நடப்பும் பயனும் அனேகமாய் ஒன்றுதான்.

அரசர்களை மதிக்கிறோமா? பெரிய மனிதர்களை, ஆழ்வார்களை மதிக்கிறோமா? அல்லது தெய்வங்கள் என்பவர்களையாவது மதிக்கிறோமா? மடாதிபதிகள் அல்லது மகான்கள் அல்லது ஆச்சாரியார்களை மதிக்கிறோமா? இவர்களை எல்லாம் அவரவர்களிடத்தில் சம்பந்தமும், தனிப்பட்ட நலமும் பெறுகிறவர்கள் தான் மதிப்பார்கள்; மற்றவர்கள் ஏன் மதிப்பார்கள்?

ஏன் என்றால், வியாபாரம் செய்து இலாபம் சம்பாதிப்பவனை யார், எதற்காக மதிப்பார்கள்? ஓட்டல்காரன், 'அன்னதான பிரபு' ஆவானா? சம்பள உபாத்தியாயர், 'குருநாதன்' ஆவானா? தாசி, 'காதலி' யாவாளா? என்பது போல்தான் தன் தன் நலத்துக்கு - தன் தன் பொறுப்புக்காகக் காரியம் செய்யும் எவனுடைய காரியமும் - எப்படிப்பட்டதாயினும், அது சாதாரண ஜீவ சுபாவமே ஒழிய போற்றக்கூடியதாகாது. அப்படியல்லாத தன்மை, செய்கை, வாழ்க்கை கொண்ட மனிதர்கள் -அதாவது தன்னைப் பற்றிய கவலை இல்லாமல் பிறருக்கு என்று தன்னை ஒப்படைத்துத் தொண்டாற்றுகிறவன் மதிக்கப்பட்டே தீருவான். அத் தொண்டால் பாதகமடையும் தனிப்பட்டவர்கள், தனிப்பட்ட வகுப்புக்கள், கும்பல்கள் அவனை மதிக்காமல் இருக்கலாம்; அவமதிக்கலாம்; அது பொதுவாய் மதிக்காததாகாது.

ஆகவே, நாம் நினைவு நாள் கொண்டாடும் மக்களை, உண்மையான மனிதர்களாய்க் கருதி, அவர்களது மனிதத் தன்மையை மதித்து, மற்றவர்களும் அந்தத் தன்மைக்கு வரவேண்டுமென்கிற ஆசைக்காக, எடுத்துக்காட்டுக்காக, பிரச்சாரத்திற்காகக் கொண்டாடுகிறோம்.

('குடிஅரசு' 14-4-1945)

நாம் உருவப்படத் திறப்பு விழா நடத்துவது என்பது பூசை செய்யவோ, தேங்காய், பழம் ஆராதனை செய்து, விழுந்து கும்பிட்டுப் பக்தி செய்து, நமக்கு வேண்டியதைக் கோரிப் பிரார்த்தனை செய்யவோ, நாம் செய்த - செய்யும் பாவத்தை மன்னிக்கும்படி கேட்கவோ அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அப்படிப்பட்ட சக்தி இருப்பதாகக் கருதிக்கூட நாம் எந்தப் படத்திறப்பு விழாவும் செய்வதில்லை. மற்றும், எப்படிப்பட்ட படத்திற்கும் பூசை செய்யும்படியோ, கோவில்களிலோ தேர், இரதம், விமானம், சப்பரம் ஆகியவைகளிலோ வைத்து ஊர்வலம் ஆராதனை செய்யும்படி காலித்தனம் செய்வதற்கோ அல்ல.

ஆனால் மற்றெதற்கு என்றால், மனித சமூக நலனுக்கு - சுயநலமில்லாமலும், மற்றவர்களிடமும் எவ்விதக் கூலியோ, புகழோ, பிரயோஜனமோ பெறாமலும், தன் முயற்சியால், தன் பொருளால், தன் பொறுப்பென்று கருதித் தொண்டாற்றி வந்த பெரியார்களின் குணாதிசயங்களையும் தொண்டையும் எடுத்துச் சொல்வதன் மூலம், மற்றும் பலரும் அக்காரியத்தைப் பின்பற்ற வேண்டும் - பின்பற்ற மாட்டார்களா என்பதற்காகவேதான். மனித சமூக நலனுக்குப் பிரதிப் பிரயோஜனம், கூலி இல்லாமல் மக்கள் பாடுபட வேண்டும் என்கின்ற மேலான குணத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு ஒரு சாதனமாகவேதான் இக்காரியத்தைச் செய்கிறோம்.

உதாரணமாக, கிரீஸ் தேசத்துச் சாக்ரடீஸ் என்பவர் - எந்தக் காரியத்தையும் அறிவால் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்று சொன்னதற்காக விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார். கவுதம் புத்தர் என்பவர் - ஆரியப் புரட்டுகளை எதிர்த்ததற்காக எவ்வளவோ கஷ்டப்பட்டார். இயேசு கிறித்து விக்கிரக ஆராதனை, கோவில் பூசை முதலியவைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ததற்காகச் சித்ரவதை செய்து கொல்லப்பட்டார் முகமது நபி அனேக மூடப்பழக்க வழக்கங்களையும் பல தெய்வ உணர்ச்சியையும் பெண் கொடுமையையும் எதிர்த்துப் பல நல்ல கொள்கைகளைப் பிரச்சாரம் செய்ததற்காகப் பல முறை சங்கடப்படுத்தப்பட்டார். அப்படிப்பட்டவர்களும் மற்றும் அது போன்ற பல புதிய அபிப்பிராயம் சொன்னவர்களும் அவர்களது ஆயுள் காலத்தில் இதுபோல் எவ்வளவு துன்பப்படுத்தப்பட்டு, எவ்வளவு கஷ்டப்படுத்தப்பட்டு, எவ்வளவு தொல்லைப்படுத்தப் பட்டு இருந்தாலும் இன்று அவர்கள் கோடானுகோடி மக்களால் அவர்களது அபிப்பிராயங்களோடு மதிக்கப்படுகிறார்கள்; கோடிக்கணக்கான பேர்களால் பின்பற்றப்படுகிறார்கள்.

அது போலவே தான், நாங்களும் இன்று எங்கள் அபிப்பிராயங்கள் எவ்வளவுதான் வெறுக்கப்பட்ட போதிலும், பாமர மக்களாலும், சுயநலச் சூழ்ச்சிக்காரர்களாலும் எவ்வளவுதான் வெறுக்கப்பட்டுத் தொல்லைகள் விளைவிக்கப்பட்டு அல்லல்பட்டாலும், பிற்காலத்தில் எங்கள் தொண்டு மக்களுக்கு மிக்க பயன் தரக்கூடியதாயும் பாராட்டக்கூடியதாயும், மக்களை ஞானவழியில் நடத்தக் கூடியதாயும் இருக்கும் என்கின்ற நம்பிக்கை யுடையவர்களாகவே இருக்கிறோம். இல்லாவிட்டால் இவ்வளவு தொல்லைகளுடன் எங்களுக்கு எவ்விதத்திலும் சுயநலமற்ற இந்தத் தொண்டைப் பெரும்பான்மையான மக்களுடைய இவ்வளவு வெறுப்பிற்கிடையில் துணிந்து ஆற்ற முனைந்திருக்க மாட்டோம்.

நாங்கள் பாமர மக்களால் வெறுக்கப்படுவதினாலேயே எங்கள் தொண்டின் மேன்மையை உணருகிறோம். பாமர மக்கள் மதித்துப் பக்தி செலுத்திப் புகழும்படியாக நடந்து கொண்டவர்களுடைய எப்படிப்பட்ட தொண்டும், அபிப்பிராயமும் அவர்களது வாழ்நாளுக்குப்பின் பயன்பட்டதாக எங்களுக்கு ஆதாரமே கிடைக்கவில்லை. அப்படிப்பட்டவர்களால் மனித சமூகம் திருத்தப்பாடு அடைந்ததாக எவ்வித ருசுவும் இதுவரை கிடைத்ததில்லை.

நாமறிய ஒரு காலத்தில் திலகர் புகழப்பட்டார்; பெசண்ட் அம்மையார் புகழப்பட்டார்; காந்தியும் புகழ்ப்படுகிறார். சரித்திரத்தில் எத்தனையோ ஆச்சாரியார்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சுவாமிமார்கள் எனப்பட்ட எத்தனையோ பேர் புகழப்பட்டதாகவும் பார்க்கிறோம். இவர்களில் பலர் 'தெய்வீகம்' கற்பிக்கப்பட்டார்கள்; பலர் தெய்வங்களாகவும் கருதப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களெல்லாம் ஒரு காதொடிந்த ஊசியளவு பயன் மக்களுக்கு ஏற்படுகிறதா? ஏற்பட்டதா? ஏற்படும் என்கின்ற குறியாவது காணப்படுகின்றதா? இவர்கள் எல்லாம் புராணங்களுக்குப் புதிய உரை எழுதுகிற உரையாசிரியர்கள் போல் தோன்றி, பாமரர்களுடைய பக்திக்கும் பூசைக்கும் ஆளாகி, முட்டாள் தனத்துடனும் அல்லது பாமர மக்களை ஏமாற்றிப் பொய்ப் புகழ் பெற்று வருகிறோம் என்கின்ற உணர்ச்சியுடனும் தானே செத்தார்கள் - சாகின்றார்கள் - சாகப்போகின்றார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறதே தவிர, கண்கண்ட பயன் என்ன என்று பாருங்கள்!

இன்று உண்மையில் மனித சமூகத்திற்கு ஏதாவது புதிய மாறுதல் உணர்ச்சி அல்லது புரட்சிகரமான சுதந்திரம், விடுதலை, சமத்துவம், சுயமரியாதை என்பதான உணர்ச்சி தோன்றி இருக்குமானால் - அவை அனைத்தும் ஒரு காலத்திலோ நேற்றோ இன்றோ -கல்லடிபட்டு, கொல்லப்பட்டு, கையடிபட்டு, தொல்லைப்பட்டு உயிர் துறந்த, உயிர் வாழ்கின்ற - வெறுக்கப்பட்ட மக்களாலே தான் என்பது ஆராய்ந்து பார்க்கின்ற எவருக்கும் சுலபத்தில் புலப்படும்.

அப்பேர்ப்பட்டவர்கள் எல்லாம் மக்களின் தன்மை உயர வேண்டுமென்று கருதித் தொண்டாற்றியவர்களே ஒழிய, மக்கள் தங்களைப் போற்றிப் புகழ்ந்து பூசிக்க வேண்டுமென்று கருதியவர்கள் அல்லர். ஆதலால் அப்பெரியவர்களை ஞாபகப்படுத்தி - அவர்களின் தன்மையை மற்ற மக்கள் உணர்ந்து, அம்மாதிரியான உள்ளம் பெற்று சமூகத்துக்குத் தொண்டாற்ற முற்படவேண்டும் என்பதற்காகவே அவர்களது உருவப் படத் திறப்பு விழாக்கள் என்ற பெயர் வைத்து இவற்றை எடுத்துக் கொள்கிறோம்.

('குடிஅரசு' 10-1-1948)

பாப்பாபட்டி, கீரிப்பட்டி - முதல்வர் கலைஞருக்கு நன்றி

சன் தொலைக்காட்சியின் செய்திகளில் சாதிவெறியின் முக்கிய இருப்பிடமாகவும் தமிழகத்தின் அவமான சின்னமாகவும் உள்ள பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் மற்றுமொரு ஊராட்சியும் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது போலவே தலித்களுக்கே மீண்டும் ஒதுக்கப்படுகின்றது, சில நாட்களுக்கு முன் இந்த தொகுதிகள் சுழற்சி முறையில் பொதுத்தொகுதியாக மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்ததாக நினைவு, ஆனால் அப்படி அந்த தொகுதிகளை பொதுத்தொகுதியாக சுழற்சி முறையில் மாற்ற இடமிருந்தாலும் அப்படி மாற்றினால் ஏற்கனவே இழைக்கப்பட்டிருக்கும் அநீதியோடு சேந்து அது மாபெரும் சமூக அநீதியாகவிடும் மேலும் இது ஆதிக்க சாதிவெறிக்கு அடிபணிவது போலாகும், ஆதலால் மீண்டும் அந்த பஞ்சாயத்து தொகுதிகளுக்கு தலித்கள் மட்டுமே போட்டியிடும்படியான ஒதுக்கீடு செய்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நன்றி...

இதே போன்று இந்த தொகுதிகளில் அமைதியான முறையில் தேர்ந்தல் நடந்து ஒரு தலித் பஞ்சாயத்து தலைவராக எந்த வித அச்சுறுத்தலும் இல்லாமல் நல்ல முறையில் பணியாற்ற தமிழக அரசு முனைந்து செயல்படவேண்டும், ஆதிக்க சாதிவெறியர்களின் கொட்டம் அழிய வேண்டும்.

இதை காங்கிரஸ், பாமக மற்றும் அனைத்து கட்சிகளும் வரவேற்றுள்ளன, அதிமுகவின் நிலை இதில் எப்படி என்று சன் செய்திகளில் சொல்லப்படவில்லை...

O.C - Open Competition OR Other Castes

சிவபாலன் அவர்கள் வெளியிட்டிருந்த ஐ.ஏ,ஸ், ஐ.பி.எஸ். தேர்வுகளில் மாபெரும் அநீதி... என்ற பதிவில் அய்யா டோண்டு ஒரு பின்னூட்டமிட்டிருந்தார், அவர்களுக்கு தெரியாதது அல்ல, அதனால் நிச்சயம் இந்த விளக்கம் அவருக்கானது அல்ல, ஆனால் அவர் ஒரு குழப்பி குழப்பி விட்டு சென்றிருக்கும் போது அதை பார்த்து மற்றவர்களும் குழம்பக்கூடாது அல்லவா அதனால் தான்....

தமிழக அரசில் இட ஒதுக்கீடு மொத்தம் 69% அதில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18%, மிகப்பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20%, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30% பழங்குடியினருக்கு 1% மற்றவர்களுக்கு 31%, இதில் அனைவரும் அடங்குவர்.

அதாவது பிற்படுத்தவப்படவர்கள் 69 இடங்களில் நிச்சயம் 30 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும், டோண்டு அய்யா சொல்வது போல 100 இடங்களில் 30 இடங்கள் அல்ல...

இப்போது தரவரிசை கீழ்கண்டவாறு இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

1 - இதர வகுப்பினர்
2 - இதர வகுப்பினர்
3 - தாழ்த்தப்பட்டவர்
4 - பிற்படுத்தப்பட்டவர்
5 - மிகப்பிற்படுதப்பட்டவர்
6 - இதர வகுப்பினர்
7 - பிற்படுத்தப்பட்டவர்
8 - இதர வகுப்பினர்
9 - பிற்படுத்தப்பட்டவர்
10 - மிகப்பிற்படுத்தப்பட்டவர்

11 - பிற்படுத்தப்பட்டவர்
12 - இதர வகுப்பினர்
13 - இதர வகுப்பினர்
14 - பிற்படுத்தப்பட்டவர்
15 - மிகப்பிற்படுத்தப்பட்டவர்
16 - தாழ்த்தப்பட்டவர்
17 - மிகப்பிற்படுத்தப்பட்டவர்
18 - பிற்படுத்தப்பட்டவர்
19 - பிற்படுத்தப்பட்டவர்
20 - இதர வகுப்பினர்

21 - தாழ்த்தப்பட்டவர்
22 - பிற்படுத்தப்பட்டவர்
23 - இதர வகுப்பினர்
24 - மிகப்பிற்படுத்தப்பட்டவர்
25 - தாழ்த்தப்பட்டவர்
26 - இதர வகுப்பினர்
27 - மிகப்பிற்படுத்தப்பட்டவர்
28 - பிற்படுத்தப்பட்டவர்
29 - தாழ்த்தப்பட்டவர்
30 - பிற்படுத்தப்பட்டவர்

பட்டியல் எண்ணிக்கை - 30

(O.C) இ.வ. - 9
(B.C) பி.வ. - 10
(M,B.C) மி.பி.வ. - 6
(S.C) தா.வ - 6

இடங்களின் எண்ணிக்கை - 20
O.C 31% 6 இடங்கள்
B.C 30% 6 இடங்கள்
M.B.C 20% 4 இடங்கள்
S.C/S.T 18+1% 4 இடங்கள்

கிண்டி பொறியியல் கல்லூரியில் மொத்தமே 10 இடங்கள் தான் மீதமுள்ள 10 இடங்கள் மற்ற பொறியியல் கல்லூரிக்கு எனக்கொள்வோம்

இட ஒதுக்கீட்டில் எல்லா பொறியியல் கல்லூரிக்கும் (20 இடங்களில் )சேர்த்து இடஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படும் இடங்கள் 14, பொது ஒதுக்கீடு 6

இதன் படி முதல் 6இடங்கள் (OC-3,B.C-1,M.B.C-1,S.C.-1) மற்ற இடங்கள் இடஒதுக்கீட்டில் வரும் மொத்தமாக பார்த்தால்

இடங்களின் எண்ணிக்கை - 20

O.C 31% 6 இடங்கள் (OC-3,B.C-1,M.B.C-1,S.C.-1) F.C - 3

B.C 30% 6 இடங்கள் 6+1(O.C) = 7

M.B.C 20% 4 இடங்கள் 4+1(O.C) = 5

S.C/S.T 18+1% 4 இடங்கள் 4+1(O.C) = 5

இது வரை எல்லாம் சரிதான் ஆனால் இனிமேல் சொல்லப்போகும் கணக்கு தான் O.C (Open Competition) என்பதை Other Castes என்று மாற்றப்போவது.

பொறியியல் கல்லூரிகள் கிண்டி பொறியியல் கல்லூரி தரத்தில் முதலிடம், எனவே அதற்கு விருப்பப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகம்

இதே கிண்டி பொறியியல் கல்லூரியில் பொது இடங்கள் 3, இடஒதுக்கீட்டில் 7 இடங்கள்

கீழ்கண்ட பட்டியியலில் முதல் மூன்று பேருக்கு (O.C.-2, S.C-1) பொதுப்பட்டியியலில் கிண்டி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கும்

1 - இதர வகுப்பினர்
2 - இதர வகுப்பினர்
3 - தாழ்த்தப்பட்டவர்
4 - பிற்படுத்தப்பட்டவர்
5 - மிகப்பிற்படுதப்பட்டவர்
6 - இதர வகுப்பினர்
7 - பிற்படுத்தப்பட்டவர்
8 - இதர வகுப்பினர்
9 - பிற்படுத்தப்பட்டவர்
10 - மிகப்பிற்படுத்தப்பட்டவர்

நான்காவதாக வந்தவர் பிற்படுத்தப்பட்டவர்
எல்லா கல்லூரிகளுக்கும் சேர்த்து உள்ள 20 பொறியியல் இடங்களில் பொதுப்பிரிவில் வருவார், ஆனால் அவர் கிண்டி பொறியியல் கல்லூரிக்கு விருப்பப்படுகிறார் என்றால் அவர் பொதுப்பிரிவிலிருந்து விலகி பிற்படுத்தப்பட்ட பட்டியியலில் சேர்வார், அவர் பொதுப்பிரிவில் நான்காவது ஆனால் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியியலில் முதல் இடம், 5வதாக வந்த மிகப்பிற்படுத்தப்பட்டவர் கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர முனைவார் அப்போது அவரும் பொதுப்பட்டியியலில் இருந்து விலகி மிகப்பிற்படுத்தப்பட்டியியலில் சேர்வார், இப்போது 6ஆக இருக்கும் இதரவகுப்பினர் பொதுப்பட்டியலில் 4ம் இடத்த்ற்கு செல்வார்... 7வதாக இருக்கும் பிற்படுத்தப்பட்டவர் கிண்டிபொறியியல் கல்லூரிக்காக பிற்படுத்தப்பட்டியலில் சேர்வார்...

இப்படி கிண்டி கல்லூரிக்காக போடப்பட்டியலில்



தற்போது 6ம் இடத்திலிருக்கும் ஒரு O.C. 4ம் இடத்திற்கு வருகிறார், அடுத்து 8ம் இடத்திலிருக்கும் ஒரு O.C. 5ம் இடத்திற்கு வருகிறார், சட்டப்படி பொதுப்பிரிவில் முதல் 6 ரேங்க் உள்ளவர்களுக்கு மட்டுமே இடம், 8ம் இடத்திலிருக்கும் பொதுப்பிரிவை சேர்ந்த அவருக்கு பொறியியலில் இடம் இல்லை, ஆனால் அவருக்கு முந்தைய தரமான மாணவர்கள் கிண்டி கல்லூரிக்காக இடஒதுக்கீட்டிற்கு போனதால் 8ம் இடத்திலிருக்கும் O.C. க்கு இடம் கிடைக்கின்றது அதற்கு கீழுள்ள கல்லூரியில் இடம் கிடைக்கின்றது.

இப்போது கிண்டி கல்லூரியிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் O.C.க்கு ஒரு இடம் மட்டுமே என்றாள் 3ம் இடத்திலிருக்கும் S.C.மாணவர் கம்ப்யூட்டர் சயின்ஸ்க்காக S.C. இடஒதுக்கீட்டில் நுழைவார் அப்போது அந்த மூன்றாமிடமும் பொதுப்பிரிவில் காலியாகும், அப்போது 6ம் இடத்திலிருந்து 4க்கு வந்த O.C. மாணவர் இப்போது 3ம் இடத்துக்கு வருவார், அவர் மூன்றாமிடமென்றால் கிண்டி கல்லூரியில் பொதுப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவராகிவிடுவார்...



ஆக இப்போது கிண்டி பொறியியல் கல்லூரியில் பொதுப்பிரிவில் வந்த மூவருமே O.C (OTHER CASTES) ஆனால் அந்த மூன்றாவது ஆளின் ரேங்க் 6....

இப்படியாக முன்னேறி முன்னேறி கடைசியில் பொதுப்பிரிவில் 3 F.Cகள் இருக்க வேண்டியதற்கு பதில் 6 F.C. கள் இருப்பார்கள்

இடங்களின் எண்ணிக்கை - 20,

பட்டியல் கீழ் கண்டவாறு இருக்க வேண்டும்


ஆனால் இருப்பதோ இப்படி கீழ்கண்டவாறு


பொதுப்பிரிவில் 3 FC மாணவர்களுக்கு பதில் 6 FC மாணவர்கள் நுழைகின்றனர், FC மாணவர்களுக்கு கிடைக்கும் மற்றைய 3 இடங்களும் அவர்களை விட தரமான மற்ற பிரிவு மாணவர்கள் இடஒதுக்கீடு பிரிவிற்கு தள்ளியதால் கிடைத்த இடங்கள்

இப்படி பார்த்தால் இடஒதுக்கீடே சுத்தமாக இல்லையென்றாலும் முதல் 20 இடங்களில் உள்ள 7 எஃப்.சி. மாணவர்களுக்கு இடம் கிடைக்கும், இட ஒதுக்கீடு 69% இருந்தாலும் கூட 6 எஃப்.சி. மாணவர்களுக்கு இடம் கிடைத்துவிடுகின்றது, இது தான் நிலவரம்.

மொத்தமாக பொறியியல் கல்லூரி தரப்பட்டியல் தயாரித்து பொறியியல் (அல்லது எந்த படிப்பாயினும் ) இடங்கள் முதல் 31% இடங்கள் எந்த ஒதுக்கீடும் பார்க்காமல் எடுத்து அவர்கள் அனைவரும் பொதுப்பிரிவு என கணக்கெடுத்து, அதன் பிறகு S.C., B.C, M.B.C, தரப்பட்டியல் படி கல்லூரி / துறை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் இட ஒதுக்கீட்டின் பலன் முழுமையாக சென்றடையும், இல்லையென்றால் O.C. என்பது Open Competion ஆக இல்லாமல் Other Castes ஆகத்தான் இருக்கும், இப்போது இப்படித் தான் இருக்கின்றது.

இதையே தான் UPSC IAS,IPS,IFS வரிசைக்காக செய்கிறது என கருதுகிறேன், அதனால் தான் எவ்வளவு தானென்றாலும் இடஒதுக்கீட்டு சதவீதத்தை தாண்டி வெற்றிபெருபவர்களின் எண்ணிக்கை அமைவதில்லை.

இந்திய சுதந்திரம் - பெரியார்

கீற்று.காம் இணையதளத்திலிருந்து பெரியார் பேசுகிறார் பகுதியிலிருந்து எடுத்தளிக்கப்பட்டுள்ளது. (நன்றி கீற்று.காம்)

இந்திய நாட்டில், பெரும்பாலும் உலகத்தின் வேறு எங்கும் இல்லாததும், மனிதத்தன்மைக்கும் நியாயத்துக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாததுமான கொடுமைகள் பல இருந்து வந்தாலும் - அவற்றுள் அவசரமாய்த் தீர்க்கப்பட வேண்டியதும், இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் அல்லரென்பதையும், மனிதத் தன்மையும் நாகரிகமுடையவுமான சமூகம் எனவும் உலகத்தாரால் மதிக்கப்பட வேண்டியதற்குச் செய்ய வேண்டியதும் - மற்றும் உலகத்திலுள்ள பெரும்பான்மையான நாட்டார்களைப்போலவே அன்னிய நாட்டினர்களின் உதவியின்றித் தங்கள் நாட்டைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், ஆட்சி நிர்வாகம் செய்யவும் தகுதியுடையவர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானாலும் - முதலாவதாய்ச் செய்யப்பட வேண்டிய காரியம் இரண்டு உண்டு என்று உறுதியாய்க் கூறுவோம்.

அவைகளில் முதலாவது எதுவென்றால், இந்திய மக்களிலேயே பலகோடி ஜனசங்கியை உள்ள பல சமூகங்களைப் பிறவியிலேயே தீண்டாதவர்கள் என்று கற்பித்து, அவர்களைப் பகுத்தறிவற்ற மிருகங்களிலும் கேவலமாகவும், உணர்ச்சியற்ற பூச்சி புழுக்களிலும் இழிவாகவும் நடத்துவதை ஒழிக்க வேண்டியதாகும்.

இரண்டாவதானது எதுவென்றால், பொதுவாக இந்தியப் பெண்கள் சமூகத்தையே அடியோடு, பிறவியில் சுதந்திரத்திற்கு அருகதையற்றவர்கள் என்றும், ஆண்களுக்கு அடிமையாக இருக்கக் கடவுளாலேயே சிருஷ்டிக்கப் பட்டவர்கள் என்றும் கற்பித்து, அவர்களை நகரும் பிணங்களாக நடத்துவதை ஒழிக்க வேண்டியதாகும். ஆகவே, மேற்கண்ட இந்த இரண்டு காரியங்களும் - எந்தக் காரணத்தை முன்னிட்டும் - இந்தியாவில் இனி அரை நிமிடம்கூட இருக்கவிடக் கூடாதவைகளாகும்.

இந்தக் காரணத்தாலேதான், நாம் மேற்கண்ட இரண்டு கொடுமைகளும் அழிக்கப்படாமல் - இந்தியாவுக்குப் பூரண சுதந்திரம் கேட்பதோ, இந்தியாவின் பாதுகாப்பையும் ஆட்சி நிர்வாகத்தையும் இந்திய மக்கள் “நாங்களே பார்த்துக் கொள்ளுகிறோம்” என்று சொல்லுவதோ, மற்றும் இந்தியாவுக்கு அன்னியருடைய சம்பந்தமே சிறிதும் வேண்டாம் என்று சொல்லுவதோ - ஆகிய காரியங்கள் முடியாதென்றும், அவை சுத்த அறியாமைத்தனமான தென்றும், இல்லாவிட்டால் - சுயநல சூழ்ச்சியே கொண்ட நாணயத் தவறான காரியமாகுமென்றும் சொல்லி வருகிறோம் என்பதோடு - இப்படிச் சொல்லும் விஷயத்தில் நமக்குப் பயமோ, சந்தேகமோ கிடையாது என்றும் சொல்லுவோம். ஆதலால்தான், இவ்வித முட்டாள்தனமானதும், சூழ்ச்சியானதுமான முயற்சிகளை நாம் எதிர்க்க வேண்டியவர்களா யிருக்கின்றோம்.

தீண்டாமை என்னும் விஷயத்திலிருக்கும் கொடுமையும் மூடத்தனமும் மூர்க்கத்தனமும் யோசித்துப் பார்த்தால், அதை மன்னிக்கவோ, அலட்சியமாய்க் கருதவோ, ‘நாளை பார்த்துக் கொள்ளலாம்; இப்போது அதற்கென்ன அவசியம், அவசரம்’ என்று காலந் தள்ளவோ சிறிதும் மனம் இடம் தருவதில்லை. ஒருவன், அதாவது பிறரைத் தீண்டாதார் எனக் கருதிக் கொடுமைப்படுத்துகின்றவர்களை அத்தீண்டாதார்களுக்கு இருக்கும் உண்மையான கஷ்டத்தை உணரச் செய்ய வேண்டுமானால், இப்போதைய வெள்ளைக்கார அரசாங்கத்தின் கீழ் அனுபவிக்கும் கொடுமைகள் போதாது என்றும், சிறிதும் சுதந்திரமும் சமத்துவமும் அற்றதும், சதா இராணுவச் சட்டம் அமலில் இருப்பதுமான ஏதாவது ஒரு கொடுங்கோல் ஆட்சி இருந்தால் தான், இம்மாதிரி கொடுமைப்படுத்துகின்ற மக்களுக்கு உணர்ச்சி வந்து, புத்தி வருமென்றும் நமக்குச் சிற்சில சமயங்களில் தோன்றுவதுமுண்டு.

ஆனால், இந்தியாவை இம்மாதிரி மூர்க்கத்தனமும் நாணயக் குறைவும் மாத்திரம் சூழ்ந்து கொண்டிருக்காமல், மூடத்தனமும் சேர்ந்து கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதால், இன்னமும் எவ்வளவு இழிவும், கொடுமையும் ஏற்பட்டாலும் இம்மாதிரியான மக்களுக்கு உண்மையான துன்பத்தை உணரத்தக்க நிலைமை வருவது கஷ்டமாக இருக்கும். என்றாலும், இந்நிலை மாறுதலடையக் கூடும் என்ற உறுதியை உண்டாக்கத்தக்க நம்பிக்கை கொள்வதற்கு இடமில்லாமல் போகவில்லை.

இனி, பெண்கள் விஷயத்தில் அவர்களுடைய சுதந்திரத்தையும் உணர்ச்சியையும் கட்டிப் போட்டிருக்கும் கொடுமையானது - இது போலவே, இந்தியர்களுக்குச் சுதந்திர உணர்ச்சியே இல்லை என்பதைக் காட்டவும், அவர்கள் அடிமைகளின் குழந்தைகள் என்பதை ஒப்புக்கொள்ளவும் ஆதாரமானதென்றுதான் சொல்லவேண்டும்.

எப்படியெனில், இவ்விரண்டைப் பற்றி இந்திய விடுதலைவாதிகள், சுதந்திரவாதிகள், சுயேச்சைவாதிகள், தேசியவாதிகள், மக்கள் நல உரிமைவாதிகள் என்கின்ற கூட்டத்தார்களுக்குச் சிறிதும் உண்மையான கவலை இல்லாவிட்டாலும், மேற்கண்ட கூட்டத்தார்களில் 100-க்கு 90 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் சுயநலங் கொண்ட நாணயமற்றவர்களாகவே காணப்படினும் - இவர்களது முயற்சி இல்லாமலும் சிலசமயங்களில் மேற்கண்ட சுயநல சூழ்ச்சிவாதிகளின் எதிர்ப்பிற்கும், இடைஞ்சலுக்கும் இடையிலும் வேறு ஒரு வழியில் கொடுமைகள் அனுபவிக்கும் மேற்கண்ட இரு வகையாருக்கும் விமோசனம் ஏற்படுவதற்கு அறிகுறிகள் ஆங்காங்கு காணப்படுகின்றதைப் பார்க்கச் சிறிது மகிழ்ச்சி அடைகின்றோம்.

('பகுத்தறிவு’ - 1938)

-----------------------------
நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மேலும் மேலும் நம்பிக்கையிழக்க வைக்கின்றன, நீதிமன்றங்கள் மனுநீதிமன்றங்களாக செயல்படுகின்றன, இன்றோ சட்டத்தின் முன்னும் எல்லோரும் சமமல்ல, தெய்வத்தின் முன்னும் எல்லோரும் சமமல்ல ஆனால் வெள்ளையனின் முன் எல்லோருமே அடிமைகள் தான் என்ற சம உரிமையாவது ஆகஸ்ட்-15,1947க்கு முன் கிடைத்தது, இப்போது அதற்கும் வழியில்லை, சட்டத்தின் முன்னும் தெய்வத்தின் முன்னும் கூட எல்லோரும் சமமில்லாத போது இந்த சுதந்திரம் எதற்காக? யாருக்காக? யாருக்கோ கிடைத்த சுதந்திரத்தை எப்படி கொண்டாட முடிகிறது?

ஆளுக்கொரு நீதி இங்கே, சாதிக்கொரு நீதி இங்கே, தொடர்புடைய சுட்டிகளும் இங்கே

நீதி வேண்டுமா? பேருந்தை கொளுத்து, கலவரம் செய்....
இந்தியாவின் புனித பசு

நீதி வேண்டுமா? பேருந்தை கொளுத்து, கலவரம் செய்....

இவர் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை விதித்தால் மீண்டும் மூன்று மாணவிகளை உயிருடன் கொளுத்தும் அபாயமிருப்பதாலும் கலவரம் வெடிக்கும் என்பதாலும் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்கிறோம், மேலும் இவர்கள் மீது எந்த தண்டனை வழங்கினாலும் கலவரம் வெடிக்கும் என்பதால் இவர்கள் எவ்வளவு சொத்து சேர்த்தாலும் கண்டு கொள்ள வேண்டாம்.

பாலியல் உணர்ச்சி என்பது இயற்கையானது. உங்கள் உடையால் தூண்டப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் ஓரிருமுறை கையை பிடித்து இழுத்தபோது நீங்கள் கத்தி கூச்சல் போட்டிருக்கிறீர்கள். கூச்சல் போடுவது என்பது குற்றம் சாட்டப்பட்டவரின் கோபத்தை மேலும் கிளறக்கூடும் என்பதை அறிந்தும் நீங்கள் மௌனமாகவில்லை. ஆக உங்கள் மீதான பாலியல் பலாத்காரத்துக்கு உங்கள் கூச்சலே முக்கிய காரணம் என்பது கனம் நீதிபதிகளின் முடிவு. when rape is inevitable, lie back and enjoy என்ற பொன்மொழியை உங்களுக்கு இந்த கோர்ட் இலவசமாக வழங்குகிறது. முடியாது எனும்பட்சத்தில் தற்கொலை செய்து கொள்வது தப்பில்லை என்ற கோட்பாட்டை கோடு காண்பிக்க இந்த கோர்ட் விரும்புகிறது.(நன்றி முகமூடி புனுகு பூசாத நீதிபத்திகள் )


இப்படியான தீர்ப்புகள் நீதிமன்றங்களால் வழங்கப்பட்டால் தயவு செய்து யாரும் அதிர்ச்சியடையாதீர்கள், நிச்சயம் யாரும் அதிர்ச்சியும் அடையமாட்டீர்கள், ஆகஸ்ட் 7-ம் தேதி இது மாதிரியான ஒரு வரலாற்று தீர்ப்பு சிதம்பரம் முன்சீப் கோர்ட்டில் வழங்கப்பட்டது. (மொத்தம் மூன்று தீர்ப்புகள் இந்த பதிவில், மூன்றையும் படியுங்கள்)

தீர்ப்பு -1

சிதம்பரம் நடராசர் கோவிலில் சிற்றம்பலத்தில் தேவாரம் பாட கிளம்பிய ஆறுமுகச்சாமியை எதிர்த்து நீதிமன்றம் சென்றது தீட்சிதர் தரப்பு, அப்போது நீதிபதி ஆறுமுகச்சாமி சிற்றம்பலத்தில் பாட இடைக்காலத் தடை விதித்தார், கடந்த 7ம் தேதி அந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது, அந்த தீர்ப்பில் கூறப்பட்டதாவது

1.ஆறுமுகச்சாமி சிற்சபையில் ஏறிப்பாடுவதால் நிச்சயம் கலவரம் ஏற்படும்,

2.அதன் மூலம் தீட்சிதர்களுக்கு அளவிட முடியாத இழப்பும் நஷ்டமும் ஏற்படும்,

3. கோவிலின் புனிதத்தன்மை கெட்டுவிடும்.

எனவே ஆறுமுகச்சாமியும் மற்றவர்களும் சிற்றம்பலத்தில் பாட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை முற்றிருதி ஆக்குவதாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. (தகவல் உதவி: ஜீனியர் விகடன்)

சட்டத்தின் முன்பே அனைவரும் சமம் என்றால் தெய்வத்தின் முன் ஏன் எல்லோரும் சமம்மல்ல?, இந்த தீர்ப்பு அரசியலமைப்புக்கு எதிரானது. ஆறுமுகச்சாமி சிற்றம்பலத்தில் பாடுவதால் கலவரம் ஏற்படும் என நீதிமன்றம் கருதுகிறது, ஆறுமுகச்சாமி பாடினால் யார் கலவரம் ஏற்படுத்துவார்கள்? திமுக, பாமக, கம்யூனிஸ்ட், மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் போன்றவர்கள் ஆறுமுகச்சாமிக்கு ஆதரவானவர்கள் தானே, அவர்கள் ஆறுமுகச்சாமிக்கு சாதகமாக தீர்ப்பு இருந்தால் எப்படி கலவரம் ஏற்படுத்துவார்கள், எனவே எதிர்தரப்பு தானே கலவரம் செய்ய முனையும், சரி எதிர் தரப்பென்றால் தீட்சிதர் ஆதரவாளர்கள் தானே, அவர்களால் எப்படி தீட்சிதர்களுக்கு அளவிடமுடியாத இழப்பும் நஷ்டமும் ஏற்படும்?

இந்த இடத்தில் ஒரு நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பையும், விமர்சனத்தையும் சுட்டிகாட்ட விரும்புகின்றேன், வீரப்பன் கர்னாடக திரைப்பட நடிகர் ராஜ்குமாரை பணயக்கைதியாக வைத்துக்கொண்டிருந்த நேரத்தில் பெங்களூர், மைசூர் மற்றும் சில மாவட்டங்களில் கடும் பதட்டம் ஏற்பட்டிருந்தது, ராஜ்குமாருக்கு ஏதேனுமென்றால் தமிழர்களுக்கெதிரான பெரும் கலவரம் வெடிக்க கூடிய சூழல், ராஜ்குமார் கொல்லப்பட்டார் என்று கிளம்பும் ஒரு வதந்தி பொறி கூட மாபெரும் வன்முறைய ஆரம்பிக்கும் நிலமை அது, அந்த நேரத்தில் நான் பெங்களூரில் வேலை செய்து கொண்டிருந்தேன், பதட்டத்தின் நிலவரத்தை நேரிலேயே அனுபவித்திருக்கின்றேன், வீரப்பனின் பல கோரிக்கைகளில் ஒன்றாக தமிழ் தீவிரவாதிகள் என்று அறியப்பட்ட 5 பேரை அரசாங்கம் விடுதலை செய்ய கோரிக்கை வைத்தார், அப்போது இவர்கள் விடுதலை செய்யப்படவில்லையென்றால் ராஜ்குமாரை கொலைசெய்துவிடுவதாக வீரப்பன் மிரட்டினார், அது தொடர்பான ஒரு வழக்கில் நீதிபதிகளிடம் தமிழக, கர்னாடக அரசுகள் கலவர சூழல் உள்ளது சிறு பொறியும் பெரும் கலவரத்தை உருவாக்கிவிடும், எனவே இந்த ஐவரின் மீதான வழக்குகளை திரும்பப்பெற்று ராஜ்குமாரை வீரப்பனிடமிருந்து மீட்போம் என்ற போது நீதிமன்றம் கடும் கண்டனத்தை இரண்டு மாநில அரசுகளிடம் தெரிவித்தது,

உங்களால் கலவரத்தை கட்டுபடுத்த இயலவில்லையென்றால் ராஜினாமா செய்யுங்கள், அரசை கலைக்கலாம், கலவரம் நடக்கும் என்பதற்காகவெல்லாம் எந்த வழக்கையும் திரும்ப பெறக்கூடாது என்றனர் நீதிபதிகள்.

ஆறுமுகச்சாமி சிற்றம்பலத்தில் பாடுவதால் கலவரம் ஏற்படும் சூழல் என்றால் அந்த கலவரத்திற்கு யார் காரணமாக இருப்பார்கள் என்று அறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும், அது முடியாதென்றால் அந்த அரசை கலைக்க பரிந்துரை செய்யலாமல்லவா நீதிமன்றம், ஒவ்வொரு நொடியும் கலவரத்திற்கும், உயிருக்கு பயந்து வெளியே செல்லாமல் கிடைத்ததை தின்று நாட்கள் தள்ளும் சூழல் பெங்களூரில் ஏற்பட்ட போது இருந்ததைவிட கலவர சூழலா நிலவுகிறது? ஆனால் கலவரம் ஏற்படும் என்ற காரணம் கூறி ஒரு அநீதியை சிதம்பரத்தில் அரங்கேற்றியுள்ளது நீதிமன்றம்.

கோவிலின் புனிதம் கெட்டுவிடும் என்றால் என்ன அர்த்தம், அவர்களுக்கு புனிதம் என்றால் நமக்கு அது தீண்டாமை என்பதாகத்தானே அர்த்தம்? என்று நான் இந்த பதிவில் கேட்டதை போல பொங்கியுள்ளார் மனித உரிமை பாதுகாப்பு மன்றத்தின் கடலூர் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜீ.

ஆறுமுகச்சாமி சிற்றம்பலத்தில் பாடுவதால் கலவரம் ஏற்படுமென்று காரணம் கூறி அவரை பாட அனுமதிக்காத நீதிமன்றம், ஆறுமுகச்சாமியை சிற்றம்பலத்தில் பாடவிடவில்லை என்பதால் நாற்பது பேருந்துகளை கொளுத்தி, கலவரம் செய்தால் நீதிமன்றம் ஆறுமுகச்சாமியை பாட அனுமதிக்குமா?(தலைப்பை கொண்டுவந்தாயிற்று இந்த பத்தியில்) இதைத்தான் இந்த தீர்ப்பின் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறதா நீதிமன்றம்.

இந்த பிரச்சினைக்காக சட்டமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் திரு.வேல்முருகன் குரல் எழுப்பியுள்ளார்.






தீர்ப்பு -2


இந்தியாவின் புனித பசு நீதிமன்றங்கள் தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் போது நடந்து கொண்டதற்கும், ஆதிக்க உயர் சாதி வெறி பிடித்து இடஒதுக்கீட்டை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்த எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு வேலை செய்யாத நாட்களுக்கு சம்பளம் வழங்க சொல்லி நடந்து கொண்ட முறைகள் (முழு விபரம் இங்கே) இருக்கும் போது மீண்டும் ஒரு தீர்ப்பு, தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு சம்பளம் வழங்க வேண்டாமாம் என தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, வேலை நிறுத்த காலத்திற்கு வேலை இல்லை, சம்பளம் இல்லை (No Work, No Pay) என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கத்தேவையில்லை என்று தீர்பள்ளித்துள்ளது, தீர்ப்பு விபரம் இன்றைய தினமலரில், இந்த எழவு No Work, No Pay என்ற அடிப்படை வேலை நிறுத்தம் செய்து நோயாளிகளை கொன்ற உயர் ஆதிக்க சாதி வெறி கொண்ட எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு வேலை செய்யாத நாட்களுக்கு சம்பளம் வழங்க சொன்னபோது .யிர் பிடுங்க சென்றிருந்ததா?

தீர்ப்பு -3

யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்ததாக செய்தி.நெட் வலைப்பதிவில் கண்டு பின் டைம்ஸ் ஆஃப் இன்டியாவிலும் படித்த போது சட்டத்தின் முன்னும் தெய்வத்தின் முன்னும் அனைவரும் சமம் என்பது எத்தனை பெரிய பொய்யாக உள்ளது.


நியாயங்களும், நீதிகளும், உரிமைகளும், சம உரிமையும் நேர் வழியிலும், அறவழியிலும் கிடைக்காத போதே வன்முறையால் அவைகளை அடைய முனைகிறார்கள் என்பது வரலாறு

சமூகம் அதன் தவறுகளை அவ்வப்போது சரி செய்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் அதன் ஒவ்வொரு தவறுக்கும் என்றேனும் மிகப் பெரிய விலையை தர நேரிடும்.

நன்றி: ஜீனியர் விகடன் படங்கள் உதவி