தினமலரில் வெளியான வாசகர்கடிதத்திற்கான மறுப்பு

நான் இங்கு எந்தத்திருமணமுறையையும் விமர்சிக்கவில்லை,
அது எனது எண்ணமும் இல்லை,
என்னை பொறுத்தவரை அவரவர்கள் நம்பிக்கை அவரவர்களுக்கு,
ஆதலால் சமூக வாழ்வுக்கு குந்தகம் விளைவிக்காதவரை
அவர்களின் நம்பிக்கையை விமர்சனம் செய்வது தவறு என்கிற நம்பிக்கை உள்ளவன்,
எனவே இக்கட்டுரை யாரையும் புண்படுத்தும் நோக்கில எழுதவில்லை,
சில உள்ளக்குமுறல்களைத்தான் எடுத்துரைத்துள்ளேன்.

இது உங்கள் இடம் என்றொரு பகுதி தினமலரில்,

இது மக்கள் குரலை ஒலிப்பதற்கு பதில்
தொடர்ந்து சில அரசியல் கட்சிகளயும், சிலரின் நம்பிக்கைகளையும் விமர்சிக்குமிடமாக உள்ளது.

இன்று தினமலரின் இது உங்கள் இடம் பகுதியில் "யார் பேசுவது சுயமரியாதைப்பற்றி" என்ற தலைப்பில் எழுதிய ஒரு வாசகர் சுயமரியாதைத்திருமணம் மற்றும் புலால் உண்பவர்களை விமர்சித்துள்ளார்
சுட்டி இதோ http://www.dinamalar.com/2005june06/ithu.asp
சுயமரியாதை திருமணம் பற்றி சொல்ல வந்ததைப்பற்றி சரியாக சொல்லாமல் யாரையோ கேவலப்படுத்த நினைத்து சுயமரியாதைத்திருமணம் செய்பவர்களையும், அசைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களையும் கேவலப்படுத்தும் விதத்தில் எழுதியுள்ளார்.

அந்த வாசகரின் கடிதத்திலிருந்து சில வரிகளும் அதற்கான என் மறுப்புகளும் இங்கே

// இந்துக்களின் ஒவ்வொரு சடங்கு சம்பிரதாய விஷயங்களுக்கும் ஒரு பொருள் உண்டு,//

அது என்ன பொருள்?

சதி, விதவைகளை மொட்டையடித்தால்,
தீட்டான(?!) பெண்கள் வீட்டை விட்டு தள்ளியிருக்கவேண்டும்,
வேலைக்கு செல்லும் பெண்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள்,
ஒவ்வொரு சடங்கிலும்,சம்பிரதாயத்திலும் பெணடிமத்தனம்,
ஒரு சிலரைக்காப்பாற்றும் அக்கரை,
இன்னும் பல, இப்படியாக எத்தனை எத்தனை மூடநம்பிக்கைகள்



//சைவ சாப்பாட்டிற்கு பதிலாக மனிதரை தவிர, மற்ற உயிர்களை எல்லாம் கறியாக்கி படையல்...//

ஒவ்வெருவருக்கும் ஒரு உணவுமுறைபழக்கம்,
அதைப்பழித்திருப்பது நிச்சயமாக தவறு,
இரத்தமும் சதையுமாக இருந்தால் தான் அது உயிரா?
நீங்கள் உணவுக்காக, நெற்பயிர்களையும்,
மற்ற தாவரங்களையும் கொலை செய்யவில்லையா?
இதெல்லாம் உயிர் எனத்தெரியவில்லையா?
(சைவ உணவு பழக்கமுடையவர்களின் மீதான விமர்சனமாக இதை வைக்கவில்லை, அந்த வாசகரின் தவறான புரிதலுக்கான எதிர் வினையாகத்தான் வைக்கின்றேன்)

மனுதர்மம்,பெண் அடிமை அது இது என்று
மனிதர்களை கொன்று கறியாக்கி தின்பதைவிட
இது எவ்வளவோ மேல்.

//இப்படி இந்து திருமண சடங்குமுறைகளுக்கு அவமரியாதை செய்து
திருமணம் செய்வது தான் சுயமரியாதையென்றால்,
அப்படிபட்ட திருமணம் மூலம் மணமக்களுக்கு
பிறக்கும் குழந்தைகள் உதாரண புருஷர்களாக இருப்பாரா? உதவாக்கரைகளாக இருப்பாரா?//

பிறப்புக்கும் உதாரண புருஷனாவதற்கும் என்ன சம்மந்தம்??
இன்னும் எத்தனை நாள்தான் பிறப்பால் உயர்வு தாழ்வு பேசுவார் இவர் போன்றவர்கள்?

//வேதபாராயணத்திற்கு பதிலாக அரசியல் விமர்சங்கள்;
இல்லறம் பற்றி பேச வேண்டிய இடத்தில் இரட்டை அர்த்த வசனங்கள்//

இந்த வாசகர் எத்தனை சுயமரியாதைத்திருமணத்தில்
கலந்து கொண்டுள்ளார்,
எந்த சுய மரியாதை திருமணங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் பேசப்படுகின்றது என சொல்ல முடியுமா?

சுயமரியாதைத்திருமணங்களில் இரட்டை அர்த்தமுடைய பேச்சுகள் பேசப்படுகின்றன என்று கூறுவதால் சடங்குமுறைத்திருமணங்களின் போது ஓதப்படும் சில சமஸ்கிருத மந்திரங்களும்
அதன் விளக்கங்களும் கீழே இடம் பெறும்

"ஸ்த்ரீனாஞ்ச பதிதேவானாம்
தஷ்ஸ்ருஹா அனுகூலதா தத்பந்துஹீ
அனுமுருத்யஸ்யஸ்ஸ நித்யம் தத்வத தாரணம்
சம்மார்ஜன அனுரே பாப்யாம்
க்ரஹ மண்டல வர்த்தனாஹி ஆதமானும்
பூஷ்ஹேஸ்யதா?"

இதன் விளக்கம்
கைப்பிடித்த நொடியிலிருந்து அவன்தான் உணக்கு தெய்வம்
அவனைவிட்டு வெளியே நீ எங்கும் போகக்கூடாது,
வென்னீர்போடு,கால்பிடி,கைபிடி... தூங்கினால் விசிறிவிடு
இப்படி செய்வதால் தான் அவன் மூளையில் குடியேற முடியும்

இது பெண்ணடிமை போற்றுவது இல்லையா??

இந்த கட்டுரையில் இதற்கு மேல் சில பாலுறவு சம்பந்தப்பட்ட வார்த்தைகள் இடம் பெறும், படிக்க விருப்பமில்லாதவர்கள் தயவு செய்து இதற்கு மேல் படிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

"தாம்பூஷன் சிவதாமம் ஏவயஸ்வ
யஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ
யான ஊரு உஷதி விஸ்ரயாதை
யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்..."

அப்படி என்ன சொல்கிறது இந்த மந்த்ரம்?
நான் அவளை கட்டிப்பிடிப்பேன்.
அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை
சரியாக பொருந்த செய்யுமாறு...
தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்

"விஷ்ணுர் யோனி கர்ப்பயது
தொஷ்டா ரூபாணி பீசமிது
ஆசிஞ்சாது ப்ரஜபதி
தாதா கர்ப்பந்தாது..."

இதன் அர்த்தம் பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்படிருக்கின்றது,

யோனி,மத்யமம்,உபஸ்தம் என மூன்றாக பிரிக்கப்படிருக்கும் இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கின்றது.

அதாவது விஷ்ணு,தொஷ்டா,தாதா ஆகிய தேவதைகள் இம் மூன்று பாகங்களிலும் உட்கார்ந்திருக்கிறார்கள்,

இவர்கள்தான்(?!) ஆணும் பெண்ணும் தேகசம்பந்தம் கொள்ளும் போது எல்லாம் சரியாக நடக்கின்றதா என்பதை கண்காணிக்கிறார்கள்

இதெல்லாம் இரட்டை அர்த்தம் அல்ல, ஒரே அர்த்தம் தான்

இந்த மாதிரியான மந்திரங்கள் புனிதமான திருமணச்சடங்குகளில் ஓதப்பட வேண்டும் என்று எண்ணுகின்றாரா?


தினமலர் இது போன்ற வாசகர்களின் கடிதத்தை வெளியிடுவது, தினமலரின் மீதான கொஞ்சம் மிச்சமிருக்கும் மரியதையும் போய்விடுகின்றது.

சுட்டிக்கு நன்றி - தினமலர்,

மந்த்ரங்கள் மற்றும் அதன் விளக்கங்கள் உதவிக்கு

நன்றி - நக்கீரன் மற்றும் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர்

1 பின்னூட்டங்கள்:

said...

You too குழலி?!