தினமலரில் வெளியான வாசகர்கடிதத்திற்கான மறுப்பு

நான் இங்கு எந்தத்திருமணமுறையையும் விமர்சிக்கவில்லை,
அது எனது எண்ணமும் இல்லை,
என்னை பொறுத்தவரை அவரவர்கள் நம்பிக்கை அவரவர்களுக்கு,
ஆதலால் சமூக வாழ்வுக்கு குந்தகம் விளைவிக்காதவரை
அவர்களின் நம்பிக்கையை விமர்சனம் செய்வது தவறு என்கிற நம்பிக்கை உள்ளவன்,
எனவே இக்கட்டுரை யாரையும் புண்படுத்தும் நோக்கில எழுதவில்லை,
சில உள்ளக்குமுறல்களைத்தான் எடுத்துரைத்துள்ளேன்.

இது உங்கள் இடம் என்றொரு பகுதி தினமலரில்,

இது மக்கள் குரலை ஒலிப்பதற்கு பதில்
தொடர்ந்து சில அரசியல் கட்சிகளயும், சிலரின் நம்பிக்கைகளையும் விமர்சிக்குமிடமாக உள்ளது.

இன்று தினமலரின் இது உங்கள் இடம் பகுதியில் "யார் பேசுவது சுயமரியாதைப்பற்றி" என்ற தலைப்பில் எழுதிய ஒரு வாசகர் சுயமரியாதைத்திருமணம் மற்றும் புலால் உண்பவர்களை விமர்சித்துள்ளார்
சுட்டி இதோ http://www.dinamalar.com/2005june06/ithu.asp
சுயமரியாதை திருமணம் பற்றி சொல்ல வந்ததைப்பற்றி சரியாக சொல்லாமல் யாரையோ கேவலப்படுத்த நினைத்து சுயமரியாதைத்திருமணம் செய்பவர்களையும், அசைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களையும் கேவலப்படுத்தும் விதத்தில் எழுதியுள்ளார்.

அந்த வாசகரின் கடிதத்திலிருந்து சில வரிகளும் அதற்கான என் மறுப்புகளும் இங்கே

// இந்துக்களின் ஒவ்வொரு சடங்கு சம்பிரதாய விஷயங்களுக்கும் ஒரு பொருள் உண்டு,//

அது என்ன பொருள்?

சதி, விதவைகளை மொட்டையடித்தால்,
தீட்டான(?!) பெண்கள் வீட்டை விட்டு தள்ளியிருக்கவேண்டும்,
வேலைக்கு செல்லும் பெண்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள்,
ஒவ்வொரு சடங்கிலும்,சம்பிரதாயத்திலும் பெண்ணடிமத்தனம்,
ஒரு சிலரைக்காப்பாற்றும் அக்கரை,
இன்னும் பல, இப்படியாக எத்தனை எத்தனை மூடநம்பிக்கைகள்



//சைவ சாப்பாட்டிற்கு பதிலாக மனிதரை தவிர, மற்ற உயிர்களை எல்லாம் கறியாக்கி படையல்...//

ஒவ்வெருவருக்கும் ஒரு உணவுமுறைபழக்கம்,
அதைப்பழித்திருப்பது நிச்சயமாக தவறு,
இரத்தமும் சதையுமாக இருந்தால் தான் அது உயிரா?
நீங்கள் உணவுக்காக, நெற்பயிர்களையும்,
மற்ற தாவரங்களையும் கொலை செய்யவில்லையா?
இதெல்லாம் உயிர் எனத்தெரியவில்லையா?
(சைவ உணவு பழக்கமுடையவர்களின் மீதான விமர்சனமாக இதை வைக்கவில்லை, அந்த வாசகரின் தவறான புரிதலுக்கான எதிர் வினையாகத்தான் வைக்கின்றேன்)

மனுதர்மம்,பெண் அடிமை அது இது என்று
மனிதர்களை கொன்று கறியாக்கி தின்பதைவிட
இது எவ்வளவோ மேல்.

//இப்படி இந்து திருமண சடங்குமுறைகளுக்கு அவமரியாதை செய்து
திருமணம் செய்வது தான் சுயமரியாதையென்றால்,
அப்படிபட்ட திருமணம் மூலம் மணமக்களுக்கு
பிறக்கும் குழந்தைகள் உதாரண புருஷர்களாக இருப்பாரா? உதவாக்கரைகளாக இருப்பாரா?//

பிறப்புக்கும் உதாரண புருஷனாவதற்கும் என்ன சம்மந்தம்??
இன்னும் எத்தனை நாள்தான் பிறப்பால் உயர்வு தாழ்வு பேசுவார் இவர் போன்றவர்கள்?

//வேதபாராயணத்திற்கு பதிலாக அரசியல் விமர்சங்கள்;
இல்லறம் பற்றி பேச வேண்டிய இடத்தில் இரட்டை அர்த்த வசனங்கள்//

இந்த வாசகர் எத்தனை சுயமரியாதைத்திருமணத்தில்
கலந்து கொண்டுள்ளார்,
எந்த சுய மரியாதை திருமணங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் பேசப்படுகின்றது என சொல்ல முடியுமா?

சுயமரியாதைத்திருமணங்களில் இரட்டை அர்த்தமுடைய பேச்சுகள் பேசப்படுகின்றன என்ற தவறான் தவலை தருகின்றார்

சடங்குமுறைத்திருமணங்களின் போது ஓதப்படும் சில சமஸ்கிருத மந்திரங்களும்
அதன் விளக்கங்களும் கீழே இடம் பெறும்

"ஸ்த்ரீனாஞ்ச பதிதேவானாம்
தஷ்ஸ்ருஹா அனுகூலதா தத்பந்துஹீ
அனுமுருத்யஸ்யஸ்ஸ நித்யம் தத்வத தாரணம்
சம்மார்ஜன அனுரே பாப்யாம்
க்ரஹ மண்டல வர்த்தனாஹி ஆதமானும்
பூஷ்ஹேஸ்யதா?"

இதன் விளக்கம்
கைப்பிடித்த நொடியிலிருந்து அவன்தான் உணக்கு தெய்வம்
அவனைவிட்டு வெளியே நீ எங்கும் போகக்கூடாது,
வென்னீர்போடு,கால்பிடி,கைபிடி... தூங்கினால் விசிறிவிடு
இப்படி செய்வதால் தான் அவன் மூளையில் குடியேற முடியும்

இது பெண்ணடிமை போற்றுவது இல்லையா??

இந்த கட்டுரையில் இதற்கு மேல் சில பாலுறவு சம்பந்தப்பட்ட வார்த்தைகள் இடம் பெறும், படிக்க விருப்பமில்லாதவர்கள் தயவு செய்து இதற்கு மேல் படிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

"தாம்பூஷன் சிவதாமம் ஏவயஸ்வ
யஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ
யான ஊரு உஷதி விஸ்ரயாதை
யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்..."

அப்படி என்ன சொல்கிறது இந்த மந்த்ரம்?
நான் அவளை கட்டிப்பிடிப்பேன்.
அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை
சரியாக பொருந்த செய்யுமாறு...
தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்

"விஷ்ணுர் யோனி கர்ப்பயது
தொஷ்டா ரூபாணி பீசமிது
ஆசிஞ்சாது ப்ரஜபதி
தாதா கர்ப்பந்தாது..."

இதன் அர்த்தம் பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்படிருக்கின்றது,

யோனி,மத்யமம்,உபஸ்தம் என மூன்றாக பிரிக்கப்படிருக்கும் இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கின்றது.

அதாவது விஷ்ணு,தொஷ்டா,தாதா ஆகிய தேவதைகள் இம் மூன்று பாகங்களிலும் உட்கார்ந்திருக்கிறார்கள்,

இவர்கள்தான்(?!) ஆணும் பெண்ணும் தேகசம்பந்தம் கொள்ளும் போது எல்லாம் சரியாக நடக்கின்றதா என்பதை கண்காணிக்கிறார்கள்

இதெல்லாம் இரட்டை அர்த்தம் அல்ல, ஒரே அர்த்தம் தான்

இந்த மாதிரியான மந்திரங்கள் புனிதமான திருமணச்சடங்குகளில் ஓதப்பட வேண்டும் என்று எண்ணுகின்றாரா?


தினமலர் இது போன்ற வாசகர்களின் கடிதத்தை வெளியிடுவது, தினமலரின் மீதான கொஞ்சம் மிச்சமிருக்கும் மரியதையும் போய்விடுகின்றது.

சுட்டிக்கு நன்றி - தினமலர்,

மந்த்ரங்கள் மற்றும் அதன் விளக்கங்கள் உதவிக்கு

நன்றி - நக்கீரன் மற்றும் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர்

10 பின்னூட்டங்கள்:

said...

தெருப்பாடகன் said...
தினமலரில் வெளியான அந்த வாசகர் கடிதம் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று, குழலி நீங்கள் அரிப்பு, சொறி என்றெழுதியதை எதிர்பார்க்கவில்லை, உங்களது பதிவுகளை தொடர்ந்து படித்துவருபவன், விமர்சிப்பதை கூட மரியாதையோடு விமர்சிப்பவர் நீங்கள், நீங்கள் இப்படி எழுதலாமா?

9:01 PM


நாடோடி said...
குழலி:

உங்கள் கோபம் நியாயமானதே. அதற்காக தரக்குறைவாகப் பேச வேண்டிய அவசியம் இல்லை.

9:36 PM


மாயவரத்தான் said...
You too குழலி?!

9:38 PM

said...

பின்னூட்டமிட்ட தெருப்பாடகன், நாடோடி மற்றும் மாயவர்த்தானிற்கு நன்றி, அந்த தினமலர் வாசகரின் நோக்கம் கருணாநிதியை விமர்சிப்பதாக் இருந்தால் விமர்சிக்கட்டும், அதற்காக சுயமரியாதைத்திருமணங்கள், புலால் உண்ணும் பழக்கம், மற்றும் பிறப்பால் குழந்தைகளின் உயர்வு தாழ்வு பேசியது எம்மை சற்று உணர்ச்சிவயப்பட செய்தது, முன்பு பதிவு செய்த இதே கட்டுரையிலிருந்து அரிப்பு,சொறி,சிங்கம் என்பதையெல்லாம் எடுத்துவிட்டு மீண்டும் பதிவு செய்துள்ளேன்

said...

நல்லது குழலி... மோசமான வார்த்தைகளை நீக்கியத்ற்கு..!

அது சரி.. அந்த வாசகர் தான் கேணத் தனமாக ஏதோ உளரிக் கொட்டியிருக்கிறார் என்பதற்காக நீங்களும் அப்படியேவா?

உங்களுக்கு அவர் மேல் கோபம் வந்தால் அட்வரையோ அல்லது அவரது கருத்தையோ திட்ட வேன்டியது தானே? வேத மந்திரங்கள் ஓதி சடங்கு சம்பிரதாயங்களுடன் திருமணம் செய்பவர்களது மனதை நீங்கள் மட்டும் புண்படுத்தலாமா? அவருக்கும் உங்களுக்கும் அப்புறம் என்ன வித்தியாசம்?! ஒருவேளை விரைவில் நடக்க விருக்கும் உங்களது திருமணம் சுயமரியாதை திருமணமோ?!

said...

//வேத மந்திரங்கள் ஓதி சடங்கு சம்பிரதாயங்களுடன் திருமணம் செய்பவர்களது மனதை நீங்கள் மட்டும் புண்படுத்தலாமா//

மன்னிக்கவும், நான் இங்கு திருமணங்களில் ஓதப்படும் சில மந்திரங்களையும் அதன் அர்த்தங்களையும் தான் கூறினேன் அது கூட அந்த வாசகர் சுயமரியாதைத்திருமணங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் பேசப்படுகின்றன என்று கூறியதாலும், வேதம் முழங்காமல் நடைபெறும் திருமணங்களின் மூலம் பிறக்கும் குழந்தைகளைக்கூட குறை சொன்னதாலும் தான் அந்த மந்திரங்களையும் அதன் அர்த்தங்களையும் விவரித்தேன், எந்த இடத்திலும் நான் வேத முறைத்திருமணம் கூடாது என கூறவில்லையே, அந்த திருமணம் செய்பவர்களின் நம்பிக்கையை நான் விமர்சிக்கவில்லையே, அவரவர்கள் நம்பிக்கை அவரவர்களுக்கு, சமுதாயத்தை அவர்கள் நம்பிக்கை பாதிக்காத வரை நாம் அதை விமர்சிக்கத்தேவையில்லை

said...

திருமணங்களில் ஓதப்படும் மந்திரங்களின் அர்த்தம் ஒருவருக்கும் தெரியாது என்பதால் அது இன்னுமும் பிழைத்துக் கொண்டிருக்கிறது. அதன் முழு அர்த்தமும் தெரிந்தால் அதை அறிவுள்ள எவரும் இந்த காலத்தில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது என்னவோ நிதர்சனமான உண்மை.

அந்த வாசகர் கடித அன்பனுக்கு எதை எழுத வேண்டும் என்று தெரியாமல் எதையோ எழுதி பினாத்தியிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. அது மட்டுமில்லாமல் அனைத்துலக அசைவ உணவு மக்களுக்காக என் கண்டனத்தை அவருக்கு தெரிவிக்கிறேன்.

//நீங்கள் உணவுக்காக, நெற்பயிர்களையும்,
மற்ற தாவரங்களையும் கொலை செய்யவில்லையா?//

குழலி, இதுக்கு ஒரு கான்சப்ட் இருக்கு. உயிர் என்பது தாவரத்துக்கும், விலங்குக்கும்,மனிதனுக்கு ஒன்று தான் என்றாலும் தாவரங்கள் காய்,கனிகளை கொடுத்தும் உயிருடன் தாவரங்கள் வாழும் என்பதால் மரக்கறி உண்பது தப்பாகாது என்ற லாஜிக் உண்டு.

அப்புறம்,

//மனுதர்மம்,பெண் அடிமை அது இது என்று
மனிதர்களை கொன்று கறியாக்கி தின்பதைவிட
இது எவ்வளவோ மேல்.//

இது சூப்பர்.

said...

//நீங்கள் உணவுக்காக, நெற்பயிர்களையும்,
மற்ற தாவரங்களையும் கொலை செய்யவில்லையா?//

"குழலி, இதுக்கு ஒரு கான்சப்ட் இருக்கு. உயிர் என்பது தாவரத்துக்கும், விலங்குக்கும்,மனிதனுக்கு ஒன்று தான் என்றாலும் தாவரங்கள் காய்,கனிகளை கொடுத்தும் உயிருடன் தாவரங்கள் வாழும் என்பதால் மரக்கறி உண்பது தப்பாகாது என்ற லாஜிக் உண்டு."

நீங்கள் சொல்லும் தர்க்கம் காய்கறிகளுக்கு ஏற்புடையதாயினும். பயிர் வகைக்கு சரிவராது. நெல் "அறு"வடை செய்ய நெற்பயிரை கொல்ல வேண்டியுள்ளது. அத்துடன் பூச்சிகொல்லி மூலம் நெற்பயிரை பாதிக்கும் பூச்சி வகைகளையும் கொல்லவேண்டியுள்ளது. ஆகையால் சைவ உணவு உண்போரும் கொன்றுதான் உண்கிறார்கள்.

said...

அனானிமஸ், கொன்னா பாவம் தின்னா போச்சுன்னு வசதிக்காக இன்னொரு கான்சப்ட்டும் வச்சிருக்காங்க

said...

//அதை மாயவரத்தானும் எடுத்து தன் பதிவில் போடுவார், குழ்லியும், நானும் விமர்சிப்போம்//

விசிதா.. ஜோக் அடிக்கிறீங்களாக்கும்?! சகிக்கலை!

said...

குழலி ,
1008 விஷயங்கள் சொல்லி தூங்கறவனை எழுப்பலாம்... தூங்கற மாதிரி நடிக்கிரவனை எழுப்ப முடியாது ... இந்த வாசகர் அப்படி தான் .. ! விடுங்க !!

நல்ல பதிவு !!

வீ .எம்

said...

யாரோ ஒரு வாசகர் தினமலரில் கண்டதையும் உளறினார் என்பதற்காக, குழலி ("இக்கட்டுரை யாரையும் புண்படுத்தும் நோக்கில எழுதவில்லை" என்று கூறிக்கொண்டே!) வைதீக திருமண சடங்குகள் குறித்த நம்பிக்கைகளை , அவ்வாசகரை விடவும் மோசமாக விமர்சனம் செய்து, எள்ளி நகையாடி, பலரை புண்படுத்தியுள்ளார். எதிர்ப்பை தெரிவிப்பது அவரது உரிமை என்றாலும், குழலியிடம் இதை எதிர்பார்க்கவில்லை.

//அதை மாயவரத்தானும் எடுத்து தன் பதிவில் போடுவார், குழ்லியும், நானும் விமர்சிப்போம், அன்புடன் பாலா சூப்பர் மாயவரத்தான் என்று பின்னூட்டமிடுவார்//

http://karikaalan.blogspot.com/2005/06/blog-post.html#c111851618085640289 பார்க்கவும் !

நீங்களாக என்னைப்பற்றி ஏதோ (தவறாக!) கற்பனை செய்து கொண்டு, தங்களை அறிவுஜீவியாக எண்ணிக் கொண்டு, முடிந்த அளவுக்கு பல இடங்களில் (உங்கள் பதிவிலும்) உளறி வருகிறீர்கள் !!! இதை நிறுத்திக் கொண்டால் நல்லது. என் கருத்துக்களுக்கு 'மட்டும்' எதிர்வினை இடுங்கள். நான் கருத்து தெரிவிக்காத இடங்களில் என் பெயரை இழுக்க வேண்டாமே! If you want to get nasty, pl. understand that others too could get nastier.

உங்களைப் போன்றவரிடம் தர்க்கம் செய்வதை விட பல உபயோகமான வேலைகள் எனக்கு உள்ளன. உங்களுக்கும் இருக்கலாம் !!! நன்றி !